Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18319
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. தற்போதைய காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆவது பெரும் பாடாக உள்ளது. இந்தநிலையில், இந்தியா-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், “நாங்கள் விவசாயம் செய்வதால் எங்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், இதுவரை திருமணம் ஆகாமல் உள்ளோம். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து, சுமார் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று, எங்களுக்கு மணப்பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபட்டோம்” என தெரிவித்துள்ளனர் . மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள், திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/281233
  2. காசா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்: ஜோ பைடன் காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை அல்-ஷிபா. இந்த மருத்துவமனையில் காயம் அடைந்தோர், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது. மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார். https://thinakkural.lk/article/281188
  3. மருத்துவமனையுடன் தொடர்புடைய சுரங்கம்: ஆதார வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசு, மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள், ஹமாஸ் போன்றவை இந்த குற்றச்சாட்டை மறுத்தன. ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து பதுங்கியுள்ள நிலையில், பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து கூறி வந்த நிலையில், காசாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கபாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்ததற்கான ஆதாரமாக 6 நிமிட வீடியோ ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் ஒரு சுரங்கபாதையின் வழியை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். இந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது என அவர் விளக்குகிறார். இதுபோன்றுதான் அல்-ஷிபா மருத்துவமனையிலும் உள்ளது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து வருகிறது. https://thinakkural.lk/article/281190
  4. கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  5. Published By: RAJEEBAN 14 NOV, 2023 | 10:27 AM கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது வட இங்கையின் போர்நடந்த பகுதியில் நீர்வழங்கல் பணிக்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனிதப் புதைகுழி ஒன்றினை கடந்த 2023 யூன் 29 அன்று கண்டுபிடித்தார்கள். 1990கள் முதல் இப்பகுதியில் பல இராணுவ முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் உடனடியாகவே முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு தகவல்தெரிவித்தார்கள். நீதிமன்றம் அப்பகுதியை பூட்டிவைத்ததுடன் அகழ்வுப்பணிக்கும் உத்தரவிட்டது. யூலை 6ஆம் திகதிஆரம்பிக்கப்பட்ட முதலாம்கட்ட அகழ்வுப்பணியின்போது சீரற்ற முறையில் போடப்பட்டிருந்த 17 பெண்களதும் ஒரு ஆணினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இப்புதைகுழிகளில் மீட்கப்பட்ட சீருடைகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளை ஒத்தவையாக இருந்தன. அத்துடன் பிளாஸ்டிக் மற்றும் கம்பிகளும் மீட்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 12ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமற்போனவர்களின் குடும்பங்கள் நடைபெற்றுவரும் அகழ்வுப்பணிகளுக்கு 'சர்வதேசமேற்பார்வை வேண்டுமென்று' கோரிக்கை விடுத்தனர். கடந்த யூலை 29ம் திகதிஇ புதைகுழிக்கு நீதிகோரி சிறிலங்காவின் வடக்கிலும் கிழக்கிலும் கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. பல தசாப்த்தங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த பல விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது சடலங்கள் எனத் தோன்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதானது சிறிலங்காவிலும்புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பெரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமாற்று நீதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றசிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதி வழங்கும் நிலையில் இராணுவம் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே இப்புதைகுழி அகழ்வுப்பணி மாறியுள்ளது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. itjf அண்மையில் வெளியிட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று சிறிலங்காவில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் பெரும் பிரச்சினைகள் நிறைந்திருந்தன என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பானதே இச்சிறுஅறிக்கை. தற்போதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவின் பாரிய மனிதப் புதைகுழிகளை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுநர்களுக்கு உதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே இது வெளியிடப்படுகின்றது. போர் நடந்த சிறிலங்காவின் வடக்குப் பகுதியிலுள்ள முல்லைத்தீவுக்கு அருகிலுள்ள கொக்குத்தொடுவாயிலுள்ள மனிதப் புதைகுழியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போர் வீரர்களது மனித எச்சங்கள் இவ்வாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியிலேயேஇக்குறிப்பு வெளிவருகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வெளியீட்டிலுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு கொக்குத்தொடுவாய் புதைகுழி எந்தக் காலப்பகுதியைச்சேர்ந்தது என்பது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது. இப்புதைகுழியின் காலப்பகுதியைத் தீர்மானிப்பதுகளத்திலுள்ள தடயவில் மற்றும் இதர வல்லுனர்களையே சாரும். இதர தொடர்புபட்ட தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு அல்லது சில கோட்பாடுகளை நிராகரித்துவிடுவதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய தகவல்களையே இவ்வெளியீட்டில்என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. சுவிற்சர்லாந்து நோர்வே பிரான்ஸ் சிறிலங்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் வசிக்கும் முன்னாள் ஆண் பெண்போராளிகள் 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையாகக்கொண்டே இதிலுள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நேர்காணப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளின் சிறுத்தைப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, தலைமைச் செயலகம், அரசியல்துறை, நிதித்துறை, சாள்ஸ் அன்ரனி படையணி, ராதா படையணி மற்றும் கடற்புலிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1995 யூலையில் கொக்குத்தொடுவாயிலிருந்த சிறிலங்கா இராணுவ முகாம்கள்மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்த தாக்குதலில் பங்கு பற்றி உயிர்தப்பிய ஒருவரும் உள்ளடங்குவார். 1990களின் நடுப்பகுதியில் உடலங்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளின் உடலங்களை நேரில் பார்த்ததாக முன்னாள் ஆண் போராளி ஒருவரும் பெண் போராளி ஒருவரும் கூறினர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஆண் பெண் இருபாலாரது உடலங்களது பால் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டிருந்தாக அவர்கள் விபரித்தார்கள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. போரிலிருந்து தப்பி தற்போது வெளிநாடுகளில் அல்லது சிறிலங்காவிற்குள் வாழும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் தங்களது கடந்த காலத்தின் இவ்விபரங்கள் பற்றி உரையாடுவதால் நிச்சயமாக பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்பதை இவ்வறிக்கை ஏற்றுக்கொள்கின்றது. வெளிநாடுகளில் வசிப்பவர்களில் பலர் தங்கள் பாதுகாப்புத் தொடர்பாக அச்சம் கொண்டதுடன் தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டாம் என்றே விரும்பினார்கள் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும். எனினும் முன்னாள் போராளிகளது சடலங்களை அடையாளம் காண்பதற்கு உதவுவதற்கும் முடிந்தால் சில குடும்ப உறுப்பினர்களின் தேடுதலுக்கு முடிவு கட்டவும் இவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இவ்வாறான பெறுமதியான தகவல்கள் எவ்வளவு முக்கியமாவை என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. தங்களுக்குத் தெரிந்த விடயங்களை எங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்வந்த முன்னாள் போராளிகளுக்கு எங்களது பெருநன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். சில சந்தர்ப்பங்களில் தற்போது சிதைக்கப்பட்டுள்ள கடந்த கால உலகத்தினையும் இறந்து போன தங்கள் தோழர்களது நினைவுகளையும் மீட்டுப்பார்ப்பது சிலருக்கு கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் சிறிலங்காவிலுள்ள சமூகங்களுக்கு தம்மால் உதவக்கூடும் மற்றும் நீதிக்கானபோராட்டத்தில் தம்மாலான பங்களிப்பினை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும உடனடியாக உதவ முன்வந்தார்கள் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு விடுதலைப் புலிகளின் அடையாளப்படுத்தல் முறைகள் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும்போது தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்களால் 8-12 பக்க சுயவிபரத்திரட்டல் எடுக்கப்படும். இவ்விபரங்கள் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி உறுதிப்படுத்தப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும்போது அனைவருக்கும் இயக்கப்பெயர் வழங்கப்படும். அமைப்பில் இருக்கும்போது அவர்கள் தங்கள் சொந்தப் பெயரைப் பயன்படுத்தமாட்டார்கள். பல பேராளிகளுக்கு ஒரே பெயர் இருக்கும் அதனால் அவர்களை அடையாளப்படுத்துவதற்கு அவர்களது தகட்டு இலக்கங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும். அவர்கள் அடிப்படைப் பயிற்சி நிறைவின்போது புதிய உறுப்பினர்களுக்கு தகடும் குப்பியும் வழங்கப்படும். அவர்களது சொந்தப் பெயர்களும் தனிப்பட்ட விபரங்களும் தலைமைச் செயலகத்திலேயே வைக்கப்பட்டிருக்கும் வேறு எவரும் அவ்விபரங்களைப் பார்க்க முடியாது. தகடுகள் விடுதலைப் புலிப் போராளிகளிடம் ஒரே இலக்கத்தைக் கொண்ட 3 தகடுகள் இருக்கும் - ஒன்று கழுத்தில் அணிவார்கள், இது அனைவருக்கும் கட்டாயமானது. அத்துடன் சண்டைக்குச் செல்லும் போராளிகளுக்காக ஒன்று இடுப்பிலும் (நீண்டதும் குறுகியதாகவும் இருக்கும்) மூன்றாவது மணிக்கட்டில் கட்டுவதற்காக மெல்லிய நீண்ட தகடும் அணிவார்கள். சண்டையின்போது உடல் சிதைவடைந்தால் அவற்றை அடையாளம் காண்பதற்கு வசதியாகவே கையிலும் இடுப்பிலும் தகடு அணியப்பட்டது. பொதுவாகவே இத்தகடுகள் கறுப்பு நிற நூலில் தொங்கவிடப்படும் - ஆனால் சிலர் குறிப்பாக புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் சங்கிலியில் அணிவார்கள். கழுத்துத் தகட்டில் ஒரு துளையும் மற்றைய இரண்டிலும் இரு துளைகளும் இருக்கும். இம்மூன்று தகடுகளிலும் ஒரே இலக்கமே இருக்கும். பெரும்பாலான நேரங்களில் போராளி ஒருவருடைய குருதி வகை அவருடைய இலக்கத் தகட்டில் பதியப்பட்டிருக்கும். காலப்போக்கில் படையணிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் விடுதலைப் புலிகளிள் படையணிகளின் தகட்டு இலக்கங்களுக்கு வழங்கப்பட்ட முதல் எழுத்துக்கள் காலப்போக்கில்மாற்றமடைந்தன. 1992 காலப்பகுதியில் வன்னி மாவட்ட இராணுவப் பிரிவு என்றும் எழுத்தினைப் பயன்படுத்திய அதேவேளையில் மன்னார் மாவட்டப் படையணிக்கு ஊ வழங்கப்பட்டிருந்தது. 1991-1995 வரை யாழ்ப்பாண மாவட்ட மகளிர் படையணி எ என்னும் இலக்கத்தைப் பயன்படுத்தியது. 1995 இன் பின்னர்இப்படையணி மாலதி படையணி மற்றும் சோதிய படையணியாக மாற்றப்பட்டது. 2002இல் சமாதான முயற்சிகள் தொடங்கிய பின்னர் விடுதலைப் புலிகள் தங்களது இராணுவக் கட்டமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள். முகமாலையில் வடபோர்முனைக் கட்டளைப்பணியகத்தையும் வவுனியா புளியங்குளத்தில் தெற்கு கட்டளைப் பணியகத்தையும் ஆரம்பித்தார்கள். வடபோர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதியாக கேணல். தீபன் நியமிக்கப்பட்டார். இவர் ஆரம்பத்தில் வன்னி மாவட்டப் படையணியில் இருந்தார். இவர்கள் வன்னி மாவட்டம் பயன்படுத்திய எழுத்தையே தொடர்ந்தும் பயன்படுத்தினார்கள். 2009 பெப்ரவரி மார்ச்சின் பின்னர் விடுதலைப் புலிகளால் தங்களது தகட்டினை உலோகத்தில் தயாரிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் லமினேட் செய்யப்பட்ட கடதாசித் தகடுகளையே புதிய போராளிகளுக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அத்துடன் 2009 மே இல் போர் முடிவடைந்த நிலையில் கடைசியாக எதுவரை தகடுகள் வழங்குவதை நிறுத்திக்கொண்டார்கள் என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை. இலக்கம் வழங்குதல் சில இலக்கத் தகடுகளில் தமிழ் முன்னெழுத்துக்குப் பதிலாக பூச்சியம் எண் (0) காணப்படுவதுடன் அதற்குப் பின்னர் போராளிகளின் உறுப்பினர் எண்கள் உள்ளன. ஒவ்வொரு படையணிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 0: 1-5000 வரையான இலக்கங்கள் இம்ரான் பாண்டியன் படையணிக்கும், 0: 5000-6000 வரையான எண்கள் தலைமைச் செயலகத்திற்கும், 0: 6000 - 9000 வரையான எண்கள் அரசியல்துறைக்கும் வழங்கப்பட்டிருந்தன. 2002 ஆம் ஆண்டில் இம்ரான் பாண்டியன் படையணி மூன்று அலகுகளாகப் பிரிக்கப்பட்டனது: இம்ரான் பாண்டியன் படையணி, ராதா படையணி, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவையே அவையாகும். ராதா படையணிக்கும் 0:0001 - 5000 வரையான இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 4 தகட்டு இலக்கம் அவர் எப்போது விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார் என்பதை சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் ஒவ்வொரு பிரிவுகளிலும் அவர்களது சேவைக்காலத்தில் வரிசையிலேயே தகட்டு இலக்கங்கள் வழங்கப்படும். விடுதலைப் புலிகள் மரணமடைந்த அல்லது இயக்கத்தை விட்டு விலகிச்சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கங்களை மீளவும் பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. படையணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கங்கள் முடிவடைந்ததும் அவை மீளவும் பயன்படுத்தப்பட்டன என சிலர் கூறுகின்றார்கள். அத்துடன் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தகட்டு இலக்கங்கள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அவர்களது மீள் ஒழுங்குபடுத்தல் நடைபெற்றபோது ஒருவர் மரணமடைந்து அல்லது இதர பிரிவுகளுக்கு மாற்றலாகிச் சென்றிருந்ததால் இயக்கத்தில் இணைந்த கால வரிசையில் அவ்விலக்கங்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டன. 4 முன் எழுத்தானது தமிழ் எழுத்தில்லாமல் பூச்சியமாக இருப்பதைப் பார்க்கவும். 8 போர்முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் தங்களது தகட்டு இலக்கத்தைப் படையினர் கேட்டுப் பதிவுசெய்தார்கள் என்றும் தாம் தங்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட தகட்டு இலக்கத்தையே தாம் வழங்கியதாகவும் தெரிவித்தார்கள். https://www.virakesari.lk/article/169231
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 நவம்பர் 2023, 03:35 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் முன்பு எல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள் தான், ஆனால் இப்போது “இருக்கு, ஆனா இல்லை” என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது. ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை எழுந்த உடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். மற்றொன்று, ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதை கண்டறியும் OGTT (Oral Glucose Tolerant Test)எனப்படும் பரிசோதனை ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலை எது வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும் போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதே போன்று OGTT பரிசோதனை செய்யும் போது, 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், சர்க்கரை நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவுகள் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். “வெறும் வயிற்றில் எடுத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கல்லீரல் சீராக செயல்படவில்லை என்று அர்த்தம். இரண்டாவது பரிசோதனையில் சர்க்கரை அதிகமாக இருந்தால், தசைகளில் சர்க்கரை சேர்கிறது என அர்த்தம். இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே சர்க்கரை நோயாக மாறும்” என்கிறார் மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் ஏற்படும் சிக்கல்கள் சர்க்கரை நோயினாலே ஆபத்து, சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் எந்த பாதிப்பும் இல்லை என கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் உடலில் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் விளக்குகின்றனர். “உங்கள் சர்க்கரை அளவுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்புகள் ஏற்படலாம்” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் தலைவர் தர்மராஜன் கூறுகிறார். “சர்க்கரை நோய் இருந்தால், ரெடினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்வதற்கு முன்னாலேயே ஏற்படலாம்.” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயாளியாக மாறுவதை தவிர்க்க முடியுமா? சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே சர்க்கரை நோயாளிகாக மாறக் கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியது. இதில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வில் பங்கேற்ற மோகன் டயபடீஸ் மையத்தின் தலைவர் வி.மோகன் கூறுகையில், “சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து சர்க்கரை நோயாளியாக இந்தியர்கள் மிக விரைவில் மாறிவிடுவார்கள். மேற்கு நாடுகளில் ஒருவர் எட்டு முதல் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும். இந்தியர்கள் மாவுச் சத்து அதிகம் கொண்ட வெள்ளை அரிசி சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில மரபியல் காரணங்களும் இருக்கலாம்” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரீ டயபடிக்- அறிகுறிகள் இருக்காது சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதை கண்டறிவதே சவால். “முழு உடல் பரிசோதனை போன்ற சோதனைகளின் போது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருப்பது தெரியவரலாம். அறிகுறிகள் இல்லை என்றால், எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று சிலர் அபத்தமாக பேசி வருகின்றனர். எவ்வளவு விரைவில் சர்க்கரைக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்” என்கிறார் மருத்துவர் மோகன். இளைஞர்களிடம் ப்ரீ டயபடிக் நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES சர்க்கரை நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை. “20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கரை நோய் வயதானவர்களிலேயே அதிகம் காணப்பட்டது. ஆனால் இன்று 20 வயது இளைஞர்கள் சில சமயம், அதற்கும் இளையவர்களிடமும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்கும் முந்தைய நிலை ப்ரீ டயபடிக், எனவே இது பொதுவாக இளைஞர்களிடமே காணப்படுகிறது” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு பிரிவு தலைவர் தர்மராஜன். சமீப கால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா என கண்டறிய முடியும். “உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா? உங்களுக்கு என்ன வயது?- இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றை சுற்றி அளந்து பாருங்கள், ஆண்களுக்கு 90செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்” என்கிறார் மருத்துவர் மோகன். உணவுக் கட்டுப்பாடு சர்க்கரைக்கு முந்தைய நிலை என்பது சர்க்கரை நோய் ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கு கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்லாமல் தவிர்ப்பது மட்டுமல்ல, சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்கு திரும்பவும் கூடும். “மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும், அதே நேரம், உடல் எடையை கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் மோகன். பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டு சர்க்கரை மாற்று அல்ல வெள்ளை சர்க்கரை, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என தெரிந்தவர்கள், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். “ வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து “என்கிறார் மருத்துவர் தர்மராஜன். உடல் பருமன் பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் பருமன் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் பருமன் அதிகமாக இருந்தால், அது முழுவதும் கொழுப்பு சத்து என்றும் அது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் 35.1 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.6 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. “பெண்கள் வீட்டு வேலை செய்வதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்யும் வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்” என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crgpdrxwgq4o
  7. Published By: DIGITAL DESK 3 14 NOV, 2023 | 09:46 AM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் நிலவும் மோசமான வானிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது. குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/169229
  8. இந்தியாவுக்கு மட்டும் பிரத்யேக பந்து கொடுக்கப்படுகிறதா? - உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் ஆட்டங்களிலும் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல், தொடர் வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. உள்நாட்டில் நடக்கும் போட்டித் தொடர், ரசிகர்களின் ஆதரவு, ஆடுகளம், மைதானம் குறித்த நல்ல புரிதல் ஆகியவை இந்திய அணிக்கு இயல்பாகவே சாதகமான காரணிகளாக அமைந்துவிட்டன. அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் 7 முதல் 8 வீரர்கள் வரை உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். இதுதான் கோப்பையை வெல்ல சரியான தருணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வறண்டு கிடக்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இந்திய அணியின் வெற்றி பற்றி சந்தேகங்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரலாகத் தென்படுகின்றன. அவற்றில் ஒன்று இந்தியாவின் பந்துவீச்சு பற்றியது. எப்போதும் இல்லாத வலிமையான பந்துவீச்சு இந்திய அணி பேட்டிங்கில் எப்போதும் வலிமையானது என்பது ஏற்றக்கொள்ளக் கூடியது. ஆனால், இந்த முறை இந்திய அணியின் பந்துவீச்சும் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கலக்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிரணி பேட்டர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் பந்துவீசுகிறார்கள். பேட்டர்கள் சில நேரங்களில் சொதப்பினாலும், அணியை பந்துவீச்சு மூலம் பந்துவீச்சாளர்கள் தூக்கி நிறுத்திவிடுகிறார்கள். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா இருவர் மட்டுமே அணியில் இருந்தாலும், இருவருமே அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறார்கள். பந்துவீச்சுப் பிரிவில் இதற்குமுன் இல்லாத வகையில் வலிமையோடு இந்திய அணி இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்களும், விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், இந்திய அணி தொடர் வெற்றிகள் பெறுவதில் திடீரென பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஜா சந்தேகத்தை கிளப்பியிருந்தார். அதிலும் இலங்கை அணியை 55 ரன்களில் சுருட்டியதைப் பார்த்தபின் ஹசன் ராஸா வலுவான சந்தேகத்தை ஐசிசி மீது எழுப்பினார். பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் ஒரு சேனலுக்கு ஹசன் ராஸா அளித்த பேட்டியில், “இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட பந்தை பரிசோதிக்க வேண்டும். இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகின, சீமிங் ஆகின. ஷமி, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு ஆலன் டொனால்ட், நிடினி பந்துவீச்சு போல் இருந்தது. மும்பை ஆட்டத்தில் ஷமி வீசிய பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகியது குறித்து மேத்யூஸ் கூட வியப்புத் தெரிவித்திருந்தார்," என்றார். மேலும், "இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஐசிசி அல்லது பிசிசிஐ 2-வது இன்னிங்ஸில் வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து அல்லது அதிகமாக ஸ்விங் ஆகும் பந்துகளைக் கொடுத்து உதவி செய்துள்ளதாக நினைக்கிறேன், 3-வது நடுவரும் இந்திய அணிக்கு உதவி வருவதாக நினைக்கிறேன்," என்றார் ராஸா. "ஆதலால், இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் பந்து நன்றாக ஸ்விங் ஆவதற்காக கூடுதலாக பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்,” என சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார். பந்துகள் குறித்து வாசிம் அக்ரம் கூறியது என்ன? ஆனால், ஹசன் ராஸாவின் சந்தேகத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் ஒரு பதிலடி கொடுத்திருந்தார். அவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணியின் வெற்றி குறித்து சிலர் சந்தேகம் கொண்டு அளித்த பேட்டிகளை நான் பார்த்தேன், நகைச்சுவையாக இருந்தது. இதுபோன்றவர்கள், உலகின் முன் தங்களையும் அவமானப்படுத்துவதோடு, பாகிஸ்தானையும் அசிங்கப்படுத்துகிறார்கள்," என்றிருந்தார். மேலும், "பந்தைத் தேர்வு செய்யும் முறை என்பது எளிதானது. 4-வது நடுவர் 12 பந்துகள் நிறைந்த பெட்டியுடன் மைதானம் வருவார். எந்த அணி டாஸ் வென்றதோ அந்த அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தால், இரு பந்துகளை கள நடுவர்கள், 3-வது நடுவர் முன் கேப்டன் தேர்ந்தெடுப்பார்," என்றார் அக்ரம். "கள நடுவர் ஒரு பந்தை வலது பையிலும், மற்றொரு பந்தை இடது பையிலும் வைத்துக் கொள்வார். மற்ற பந்துகளை 4-வது நடுவர் எடுத்துச் சென்றுவிடுவார். இதுபோன்று 2-வது இன்னிங்ஸில் பந்துவீசும் அணியின் கேப்டனும் இரு புதிய பந்துகளைத் தேர்ந்தெடுப்பார், அதைக் களநடுவரிடம் காண்பிப்பார். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களுக்காக வித்தியாசமான பந்து அளித்து ஐசிசி உதவுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியி்ட்டது யார் எனத் தெரியவில்லை,” எனத் தெரிவித்திருந்தார். உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளை உலகின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்துவரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் சந்தேகம் எழுப்பியிருப்பது சமூகவலைத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால், அடிப்படையில் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு எத்தனை பந்துகள்? டி20 போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிக்கும் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பந்துவீசும் முனைக்கும் ஒவ்வொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆக மொத்தம் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 4 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகிறது என ஐசிசி தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு ஐசிசி கொண்டுவந்த திருத்த விதிகளின்படி, சர்வதேச ஒருநாள் போட்டியில், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 பந்துகள் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்தது. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஒரு பந்தை மட்டும் பயன்படுத்தும்போது, வெள்ளைப் பந்து விரைவில் தேய்ந்து, தோல் பகுதியில் தையல்கள் கிழிய வாய்ப்புள்ளது. அதன் நிறம் குறைந்து, புற்களின் கரைபடிந்துவிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதை சரி செய்யவே ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரு பந்துகளை ஐசிசி அறிமுகம் செய்தது. அதாவது 25 ஓவர்களுக்கு ஒரு பந்துவீதம் கேப்டன் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இரு பந்துகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை பந்துவீசும் அணி முடிவு செய்யலாம். ஒவ்வொரு பந்தையும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பாலிஷ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் நன்றாக தேய்ந்த பந்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வசதியாகவும், பளபளப்பாக இருக்கும் பந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசவும் கேப்டன் முடிவு செய்யலாம். வெள்ளைப் பந்துகள் தொடக்கத்தில் கடினமாக இருக்கும், சிவப்புப் பந்துகளைவிட அதிகமாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டவை. ஆனால், 5 ஓவர்களுக்குப்பின், பந்தின் தன்மை மாறி, அதன் கடினத்தன்மை குறையத் தொடங்கும், ஸ்விங் ஆவதும் குறையும். அதன்பின் புற்கள், தரையில் பந்து படும்போது அதன் நிறம் குறைந்து, தரம் குறையத் தொடங்கும். இதனால், அந்தப் பந்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது என்று ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் 35 முதல் 36 ஓவர்கள் என்று அளவுகோல் வைத்திருந்தனர். அந்த ஓவர்கள் வந்தபின், பந்தை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அதன் தேய்மானத்துக்கு ஏற்றார்போல் வேறு பந்தை நடுவர்கள் வழங்குவார்கள். 2011-ஆம் ஆண்டு ஐசிசி புதிய விதியைக் கொண்டுவந்தபின் ஒரு இன்னிங்ஸ்கிற்கு 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியின்போது பந்து தொலைந்துவிட்டால் என்ன செய்வார்கள்? கிரிக்கெட் போட்டியின்போது, பேட்டர் அடிக்கும் ஷாட்டில் பந்து அரங்கில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் விழுந்து கண்டுபிடிக்க முடியாமல், தொலைந்து போகலாம். இல்லாவிட்டால், அரங்கிற்கு வெளியே பந்து அடிக்கப்பட்டால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். அவ்வாறு பந்து தொலைந்து, கண்டுபிடிக்க முடியாமல் போனால், நடுவர்கள் உடனடியாக புதிய பந்தை பரிந்துரைக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக எந்த ஓவரில் பந்து தொலைந்திருக்கிறதோ அந்த ஓவர்கள்வரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு, தேய்ந்த பந்தைத்தான் நடுவர்கள் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட ஓவர்கள்வரை பயன்படுத்தப்பட்ட பந்துகள் வரிசையாக பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியிலிருந்து பந்தைத் தேர்ந்தெடுத்து பந்துவீசும் அணியிடம் வழங்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES பந்து தொலைந்து போகாமல் பந்து மாற்றப்படலாம். அவ்வாறு பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவு செய்வார்கள். பந்து அதன் உருவத்திலிருந்து மாறுபட்டாலோ அல்லது விளையாடுவதற்கான தகுதியை இழந்துவிட்டாலோ பந்துவீச்சாளர் அல்லது பந்துவீசும் அணியின் கேப்டன் நடுவரிடம் முறையிடலாம். அந்த முறையீட்டுக்குப்பின் கள நடுவர்கள் இருவரும் சேர்ந்து ஐசிசி கிரிக்கெட் பால் விதி 4.5-இன் கீழ் பந்தை ஆய்வு செய்வார்கள். பந்தை அளவீடு செய்வதற்கு 'கேஜ் ஸ்கேல் ரிங்' என்ற கருவி இருக்கிறது. அதைக் கொண்டு பந்தின் சுற்றளவு, உருவம் ஆகியவற்றை அளவிட்டு அதன் தன்மையைக் கண்டறிவார்கள். பந்து அதிகமாகத் தேய்ந்து உருவத்தை இழந்திருந்தாலோ அல்லது கிழிந்து தையல் பிரிந்திருந்தாலோ பந்தை மாற்றப் பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பந்து மாற்றப்படும் சூழலில் நடுவர்கள் இருவரும் பேட்டர்களிடமும், கேப்டனிடமும் முறைப்படி தெரிவிக்க வேண்டும். பந்தை மாற்றுவதற்கு முன், பந்து விளையாடுவதற்கான தகுதியை இழந்துவிட்டது, எடையிழந்து, உருவமிழந்துவிட்டது என்பதை உறுதி செய்தபின்புதான் மாற்ற வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. பந்தை ஆய்வு செய்ய தனியாக 'பால் கேஜ்' என்ற வளையம் இருக்கிறது. அந்த வளையம் மூலம் பந்தின் அளவைப் பரிசோதிப்பார்கள். அதாவது ஒரு வளையம் பந்தின் சுற்றளவைவிட பெரிதாகவும், மற்றொரு வளையம் பந்தின் சுற்றளவைவிட சற்று சிறிதாகவும் இருக்கும். இந்த பெரிய வளையத்துக்குள் பந்து எளிதாகச் சென்றாலோ அல்லது குறைந்தபட்ச சுற்றளவுள்ள வளையத்துக்குள் பந்து செல்லாமல் இருந்தாலோ பந்து அதன் உருவத்தில் மாறியுள்ளது என்று நடுவர்கள் முடிவு செய்யலாம். இந்த நிலை வந்துவிட்டால் பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவெடுப்பார்கள். ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகள் மாற்றப்படும் முறை குறித்து எம்.ஆர்.எஃப் துணை பந்துவீச்சுப் பயிற்சியாளரும், டி.என்.பி.எல் லீக்கில் பால்சே திருச்சி அணியின் பந்துவீச்சுப்பயிற்சியாளராகவும் இருக்கும் எட்வார்ட் கென்னடி பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிவப்பு பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டபோது இருந்த பந்துகளின் தரம் இப்போது இல்லை, கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவும் பொழுதுபோக்கு அம்சத்துடனும் கொண்டு செல்வது, ஆகியவற்றுக்காக இரு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தேய்ந்த பந்தை மாற்றும்போது குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன," என்றார். மேலும் பேசிய அவர், "2 புதிய பந்துகள் வந்தபின் பந்து தேய்ந்துவிட்டது, கிழிந்துவிட்டது என்று பந்துவீசும் அணி குறை சொல்ல முடியாது. பந்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் பந்துவீசும் கேப்டனே முடிவு செய்வதால், பந்தை இடையில் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை,” எனத் தெரிவித்தார். 50 ஓவர்கள்வரை கூட பந்தை மாற்றாமல் வீசலாம் இரண்டு பந்துகள் பயன்படுத்தும் முறைக்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்து பயன்படுத்தப்பட்ட முறை குறித்து எட்வார்ட் கென்னடி பேசுகையில், “ 2011-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகளில் 36 முதல் 37 ஓவர்கள்வரை ஒரு பந்து வீசப்படும். அதன்பின், தேவைப்பட்டால் நடுவர்கள் ஆய்வுக்குப்பின், மீதமுள்ள 12 அல்லது 13 ஓவர்களுக்கு வேறு தேய்ந்த பந்து பயன்படுத்தப்படும்," என்றார். "அதிலும் பந்துவீசும் அணியின் கேப்டன், பந்துவீச்சாளர் பந்து தேய்ந்துவிட்டது, வடிவத்தை இழந்துவிட்டது என்று புகார் செய்தால்தான் பந்து மாற்றப்படும். அவ்வாறு புகார் செய்தால் இரு நடுவர்களும் பந்தை ஆய்வு செய்து, அதை அளவீடு மூலம் பந்தின் தரத்தை உறுதி செய்தபின்புதான், வேறு பந்து பயன்படுத்தப்படும்," என்றார். அதேபோல், ஒருவேளை பந்துவீச்சாளர் அல்லது பந்துவீசும் அணி பந்து குறித்து எந்தப் புகாரும் நடுவரிடம் தெரிவிக்காமல் இருந்தால் 50 ஓவர்கள்கூட ஒரே பந்தை பயன்படுத்தலாம், என்றார் கென்னடி. "பந்துவீச்சாளர் புகார் அளித்தால் மட்டுமே பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் பரிசீலிப்பார்கள். பேட்ஸ்மேன் வந்து பந்தை மாற்றுங்கள் என்று கூற அதிகாரம் இல்லை. ஒரே பந்தை 50 ஓவர்கள்வரை பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை. 36 ஓவர்களுக்குப்பின் பந்தை மாற்ற வேண்டும் எனும் ஐசிசி விதி ஏதும் இல்லை, கட்டாயம் ஏதும் இல்லை,” எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் வீரர் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து எட்வார்ட் கென்னடி கூறுகையில், “பாகிஸ்தான் வீரர் கூறும் குற்றச்சாட்டு போன்று கிரிக்கெட்டில் நடக்க வாய்ப்பு ஒருபோதும் கிடையாது. இது ஐசிசி நடத்தும் சர்வதேசப் போட்டி, இந்திய அணி பந்தை தேர்ந்தெடுத்து கொண்டுவர முடியாது," என்றார். "ஐசிசிதான் பந்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருகிறது. இதில் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக செயல்படுவது என்பது கற்பனையான வாதம். கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலில் இதுபோன்ற குற்றச்சாட்டு அபத்தமானது. இதுபோன்று இந்திய அணிக்கு மட்டும் சாதகமாக வித்தியாசமான பந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு வாய்ப்பு கிடையாது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c8087e0k45wo
  9. Published By: NANTHINI 13 NOV, 2023 | 03:58 PM காலநிலை மாற்றம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐ.நா சபை இன்று (13) தெரிவித்துள்ளது. அதன்படி, உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் காரணமாக தெற்காசியாவில் மில்லியன்கணக்கான சிறுவர்கள் குடிப்பதற்கு போதுமான நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் துபாயில் நடைபெற்ற UN COP28 காலநிலை மாநாட்டில் 'வாழும் கிரகத்தை பாதுகாக்க' எனும் தொனிப்பொருளில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பு (யுனிசெப் - UNICEF) தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், "பாதுகாப்பான நீரானது மனிதனின் அடிப்படை உரிமையாகும்" என தெற்காசியாவுக்கான யுனிசெப் அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கடந்த ஆண்டு மற்ற பிராந்தியங்களை விடவும் தெற்காசிய பிராந்தியத்தில் 45 மில்லியன் சிறுவர்கள் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினர். எனினும், தொடர்ச்சியாக நிலவும் இந்த நீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் யுனிசெப் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் விளைவாக, 2030ஆம் ஆண்டுக்குள் நீர் பற்றாக்குறை பிரச்சினை பாதியாக குறைந்துவிடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் 130 மில்லியன் சிறுவர்கள் மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தை நோக்கிய நிலையில் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/169182
  10. ஷமி, சிராஜ், பும்ரா: தட்டையான இந்திய ஆடுகளங்களில் மூவரும் 'பந்தை ஸ்விங் செய்யும்' ரகசியம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி, பிபிசி நியூஸ் 5 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் முகமது ஷமி: மூன்று போட்டிகள், 14 விக்கெட்டுகள். இரண்டு போட்டிகளில் 5-5 விக்கெட்டுகள். ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 45 விக்கெட்களுடன் 44 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானின் சாதனையை முறியடித்தார். ஜஸ்பிரித் பும்ரா: ஏழு போட்டிகள், 15 விக்கெட்டுகள் மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களின் சராசரி வெறும் 3.72 ஆக உள்ளது. முகமது சிராஜ்: ஏழு போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர்கள் தான் இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் மூன்று பேர். இது 2023 உலகக்கோப்பை போட்டியில் எதிரணிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. இவர்களுடைய வலிமை தற்போதைய வீரர்கள் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்படுகிறது. தற்போது ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், இதுவரை வெற்றி பெற்று வரும் முகமது ஷமிக்கு மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதல் மாற்றமாக முகமது ஷமி பந்துவீச்சில் மூன்றாவது இடத்தில் வருகிறார். பந்துவீச்சு பலத்தில் போட்டிக்குப் போட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பந்து வீச்சில் இந்திய அணி தொடர்ந்து சாதித்து வருவது பேசுபொருளாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் பிபிசியிடம் பேசியபோது, "இதுவரை பும்ராவின் புல்லட் பந்துகளை ஒரு முனையிலிருந்தும், சிராஜின் வேகத்தை மறுமுனையிலிருந்தும் விளையாடிய பேட்ஸ்மேனை பற்றி யோசித்துப் பாருங்கள். இப்போது அவர் ஷமியை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறார்," என்றார். “கேப்டனாக இருக்க இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறந்த பேட்ஸ்மென்களை தொடர்ந்து மிகச் சிறந்த பயிற்சியிலேயே வைத்திருப்பேன். இது இந்தியாவின் வெற்றிகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாக உள்ளது,” என்று அவர் கூறினார். ஏற்கெனவே வலுவான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற இந்திய அணி தற்போது வேகப்பந்து வீச்சிலும் சிறந்து விளங்குகிறது எனக் கருதப்படும் நிலையில், பந்து வீச்சின் பலத்தில் போட்டிக்குப் போட்டியாக வெற்றி பெறுகிறதா என்ற விவாதம் கடந்த ஓராண்டாக வலுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த பந்துவீச்சின் காரணமாக எதிரணியில் பேட்டிங் செய்பவர் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. வியாழன் அன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஷமி, பும்ரா, சிராஜ் மூவரும் இலங்கையின் இன்னிங்ஸை அழித்த விதம், இந்த வேகப்பந்து வீச்சு நிச்சயம் எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்ற வாதத்துக்கு வலு சேர்த்துள்ளது. அதாவது, இந்த உலகக்கோப்பையைப் பற்றி மட்டும் பேசினால், இந்த மூவரும் இணைந்து ஏழு போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், “இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இந்த மூவரையும்விட சிறப்பாக இருந்ததாக நான் நினைக்கவில்லை,” என்று ஒப்புக்கொண்டார். மேலும், "எனது விளையாட்டு அனுபவத்தில், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருந்தனர். நிச்சயமாக ஜாகீர் கான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் தற்போது ஷமி, பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய மூவரும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். மேலும் இரண்டு நல்ல சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதரவுடன், இந்தியாவின் ஆல்ரவுண்ட். பந்துவீச்சு ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபிக்கிறது." பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, வலுவான பேட்டிங் என்ற பெருமைக்கு இடையே பந்து வீச்சிலும் இந்திய அணி சிறந்துவிளங்குகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டிய வாசிம் அக்ரம் இந்த இந்திய வேகப்பந்து வீச்சின் காரணமாக எதிரணி பேட்ஸ்மேன்கள் இரு நிலைகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். முதலாவதாக, இவர்கள் மூவரும் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். இரண்டாவதாக தட்டையான ஆடுகளங்களில்கூட, அவர்கள் மூவரும் விக்கெட்டின் இருபுறமும் ஸ்விங் செய்கிறார்கள். வரலாற்று ரீதியாக, இந்த இரண்டு விஷயங்களுக்கும் இந்திய பந்துவீச்சு ஆபத்தானதாகக் கருதப்படவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றிய பயம் மற்ற அணியினரிடையே தோன்றத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம், ஒரு தொலைக்காட்சியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அப்போது, "அவர்களது வெற்றியின் ரகசியம் என்னவென்றால், அவர்கள் பந்தின் மையப்பகுதி மீது பிடிப்பு வைத்திருப்பதுதான்," என்றார் அவர். பந்து குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வேகப்பந்து வீச்சின் காரணமாக எதிரணி பேட்ஸ்மேன்கள் இரு நிலைகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று அழைக்கப்படும் அக்ரம் தொடர்ந்து பேசியபோது, “கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் இந்திய பந்துவீச்சாளர்களைத் தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற அணி பந்துவீச்சாளர்களால் ஏன் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை என்ற விவாதம் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் பந்து சேதமடைந்திருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் அடிப்படையற்றது என்று நான் கருதுகிறேன். இந்த பந்துவீச்சாளர்கள் தங்கள் விளையாட்டில் கடினமாக உழைத்து, காலப்போக்கில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்ற வாதத்தை முன்வைத்தார். இதே விவாதத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பேசுகையில், "மூன்று பந்துவீச்சாளர்களும் தங்கள் மணிக்கட்டு மற்றும் விரல்களைப் பயன்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மணிக்கட்டில் இருந்து பந்தை விடுவிக்கும்போது, அது முழுமையாக மெதுவான இயக்கத்தில் உள்ளது. பந்து மெதுவாகப் பயணிப்பதாகத் தோன்றினாலும், அதன் வேகம் மிகவும் கொடியதாக இருக்கிறது," எனத் தனது கருத்தை முன்வைத்தார். இந்திய அணிக்கு இதற்கு முன்பு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்று கூறுவது தவறு. தனது விளையாட்டு வாழ்க்கையின் உச்சத்தில், கபில் தேவ் பந்தை அபாரமாக ஸ்விங் செய்யும் வீரராகத் திகழ்ந்தார். ஜாகீர் கான், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். இனி தற்காப்பு ஆட்டம் கிடையாது, தாக்குதல் ஆட்டம்தான்! பட மூலாதாரம்,GETTY IMAGES இர்ஃபான் பதான், அஜித் அகர்கர், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஸ்ரீசாந்த், ஆஷிஷ் நெஹ்ரா, உமேஷ் யாதவ் தவிர, நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். இந்திய அணியில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிக்க வந்துள்ளதால் இந்தப் போக்கு தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், இப்போது இந்திய வேகப்பந்து வீச்சு தற்காப்புத் தன்மையைக் காட்டவில்லை. அதாவது, எதிரணியை ரன் எடுக்கவிடாமல் தடுப்பது முதல் இலக்கு அல்ல. விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மூத்த கிரிக்கெட் ஆய்வாளர் ஆனந்த் வாசு பேசியபோது, "இந்திய ஆடுகளங்களில் விளையாடி மூவரும் சிறந்த முறையில் முன்னேறியிருந்தாலும், அவர்கள் இனி ஆடுகளத்தை மட்டுமே சார்ந்திருக்க மாட்டார்கள்," என்று ஒப்புக்கொள்கிறார். அவர் பேசுகையில், "இதுவரை இந்த மூன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்கள் பந்தை ஸ்டம்பில் சரியான இடத்தை நோக்கி வீசுவதால், பேட்ஸ்மேன்கள் அதைத் தங்கள் உடலுக்கு நெருக்கமாக அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிப்படையாக, அவுட் ஆகும் ஆபத்தும் அப்போதுதான் அதிகரிக்கிறது. அதனால், அவர்கள் அடிக்கடி தங்கள் விக்கெட்டுகளை இழக்கும் நிலையும் தொடர்கிறது," என்றார். https://www.bbc.com/tamil/articles/c97314g08exo
  11. இஸ்ரேல் தாக்குதல் - அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று தாதிமார் பலி Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 01:53 PM அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று மருத்துவ தாதிமார் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு அருகில் விமானக்குண்டுவீச்சும் மோதல்களும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவலை ஐநா வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் ஒக்சிசன் உற்பத்தி நிலையம் இருதயசத்திரசிகிச்சை பிரிவு தண்ணீர் தொட்டிகள் உட்பட முக்கியமான கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் மர்வன் அபு சடா பெரும் பொய் என நிராகரித்துள்ளார். நாங்கள் பொதுமக்கள் நான் மருத்துவர் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் நோயாளிகள் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/169177
  12. பத்தாயிரம் போதாது – இலங்கை ஆசிரியர் சங்கம் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/281132
  13. இஸ்ரேல் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் - தென்னாசிய பல்கலைகழக மாணவர் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 11:36 AM இஸ்ரேல் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாசிய நாடுகளின் பல்கலைகழக மாணவர்கள் சங்கங்கள் எதிர்ப்பதற்கும் சுதந்திரமாகயிருப்பதற்கும் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும் பாலஸ்தீனியர்களுக்கு உள்ள உரிமையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. இலங்கை இந்தியா உட்பட தென்னாசியநாடுகளை சேர்ந்த பல்கலைகழகமாணவர் அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளன. இலங்கையின் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் சங்கம் அனைத்து பல்கலைகழக பிக்குமார்கள் சம்மேளனம் புரட்சிகர மாணவர்கள் சங்கம் ஆகியன இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன-இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தன்மையை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டித்துள்ளனர் என தெரிவித்துள்ள மாணவர் அமைப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள ஏகாதிபத்ய எதிர்ப்பு அமைதியை விரும்பும் மக்கள் ஒன்றிணையவேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளன. பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தையும் அவர்களின் சகாக்களையும் எதிர்க்க முன்வருமாறும் பாலஸ்தீனியர்களை பாதுகாக்க முன்வருமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ள தென்னாசிய மாணவர் அமைப்புகள் பாலஸ்தீனிய மக்களிற்குஎதிரான சியோனிஸ்ட்களின் இனப்படுகொலையால் 12000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் காசாவில் நிலவரத்தை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களையும் அது இலக்குவைக்கின்றது என தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/169172
  14. காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த 37 குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 07:04 AM காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அவலம் தொடர்கின்றது. புதிதாக பிறந்த மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது என பிபிசிக்கு தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். புதிதாக பிறந்த குழந்தைகளிற்கான தீவிரகிசிச்சை பிரிவில் மின்சாரம் செயல் இழந்துள்ளதால் 37 குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.இந்த குழந்தைகளை இருதயசத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைகளின் படங்களை மருத்துவமனை வட்டாரங்கள் பிபிசிக்கு அனுப்பிவைத்துள்ளன. இந்த குழந்தைகள் அனைவரையும் இழக்கப்போகின்றோம் என அஞ்சுகின்றேன் என சத்திரகிசிச்சை பிரிவின் தலைவரான வைத்தியர் மர்வன் அபு சடா தெரிவித்துள்ளார். இதேவேளை காசாவின் பிரதான மருத்துவமனையில் நிலைமை மிகமோசமானதாக ஆபத்தானதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் முற்றுமுழுதாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது உணவும் தண்ணீரும் இல்லாத நிலை காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையை சுற்றி தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகங்களையும் குண்டுவீச்சினையும் செவிமடுக்க முடிவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அல்ஸிபா தற்போது ஒரு மருத்துவமனையாக இயங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/169148
  15. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மூன்று தசாப்தங்களில் வெவ்வேறு காலங்களில் இஸ்ரேலை ஆறு முறை ஆட்சி செய்துள்ளார். 26 நிமிடங்களுக்கு முன்னர் "மிஸ்டர் செக்யூரிட்டி." 1948ல் இஸ்ரேல் என்ற தனிநாடு உருவான பின் அந்நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை இஸ்ரேலில் பலர் இப்படித் தான் அழைக்கிறார்கள் அல்லது இதுவரை அழைத்து வருகிறார்கள். பெஞ்சமின் நெதன்யாகு முதன்முறையாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருடைய முக்கிய நோக்கமாக இருப்பது, இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்றும், இதனால் தான் அவருக்கு இதுபோன்ற ஒரு புனைப்பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பிபிசி முண்டோ ஆலோசித்த பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 7 ஆம் தேதி காஸா பகுதியை ஆளும் பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ், அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி, 1,400 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தது. மேலும், 240 பணயக்கைதிகளைப் பிடித்துச் சென்றது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தாக்குதல் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. இது ஹோலோகாஸ்ட் எனப்படும் நாஜிக்களின் பெரும் இன அழிப்புக்குப் பிந்தைய மிக மோசமான யூதர் படுகொலை என்பதுடன், பொதுமக்கள் மீதான இரத்தக்களரி தாக்குதலும் ஆகும். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, நெதன்யாகு அதற்கான பதிலடியை அறிவித்தார். "இஸ்ரேல் குடிமக்களே, நாங்கள் போரைத் தொடங்கியுள்ளோம். நாங்கள் இதில் வென்று காட்டுவோம்," என்று அவர் கூறினார். அன்றிலிருந்து, காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம், அண்மையில் நாட்களில் தொடங்கிய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களின் காரணமாக - 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட - 11,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. இனச் சுத்திகரிப்பு மற்றும் பாலத்தீன குடிமக்களுக்கு எதிரான தாக்குதலை விமர்சிக்கும் சர்வதேச குரல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது அவரது நீண்ட வாழ்க்கையின் மிகவும் சிக்கலான மாதங்களில் ஒன்றாக இருக்கலாம். இந்த கட்டுரையில், பிபிசி முண்டோ, இஸ்ரேலில் கடந்த மூன்று தசாப்தங்களாக நெதன்யாகு எப்படி மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரமுகரானார் என்பதை உங்களுக்கு விளக்குகிறது. மிஸ்டர் செக்யூரிட்டி என்பது மட்டுமே நெதன்யாகுவுக்கு வழங்கப்பட்டுள்ள புனைப்பெயர் அல்ல. அவர் சிறு வயதில் பயன்படுத்திய "பீபி" (Bibi) என்ற புனைப்பெயரை அவர் இன்னும் பயன்படுத்தும் நிலையில், அவரைப் பின்பற்றுபவர்களிடையே மேலும் பல பெயர்கள் மிகவும் பிரபலமாக உள்ளன - அவர்கள் அவரை "கிங் பீபி" என்றும் அழைக்கிறார்கள். அவர் வெற்றி பெற்ற தேர்தல்களின் எண்ணிக்கையில், ஆறு முறை ஆட்சி செய்த ஒரே இஸ்ரேலிய தலைவர் ஆவார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை 24, 2020 அன்று ஜெருசலேமில் "கிங் பீபி"க்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் பங்கேற்றனர். பெஞ்சமின் நெதன்யாகு டெல் அவிவ் நகரில் 1949-ம் ஆண்டு பிறந்தார், அதாவது இஸ்ரேல் என்ற தனி நாடு நிறுவப்பட்ட அடுத்த ஆண்டு (அவர் அந்நாடு நிறுவப்பட்ட பின்னர் அந்த நாட்டின் முதல் அதிபர் ஆவார்). அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். ஜெருசலேமில் உள்ள பிரிட்டிஷ் செய்தித்தாளான தி கார்டியனின் நிருபர் பெதன் மெக்கெர்னன் பிபிசியிடம் கூறியது போல், "நெதன்யாகு மதச்சார்பற்ற ஆனால் சமூக பழமைவாத சூழலில் வளர்ந்தார். சீயோனிசம் குறித்தும், மிகவும் இளம் நாடான இஸ்ரேல் பற்றி மிகவும் வலுவான சிந்தனைகளுடன் வளர்ந்தார்.” மூன்று சிறுவர்களின் நடுத்தர சகோதரரான நெதன்யாகு, பிலடெல்பியா மற்றும் நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பித்த அவரது தந்தையின் தொழில் காரணமாக இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வளர்ந்தார். இன்றுவரை அவர் ஆங்கிலம் பேசும் போது சரளமாக அமெரிக்க உச்சரிப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பிலடெல்பியாவின் புறநகரில் உள்ள செல்டென்ஹாம் உயர்நிலைப் பள்ளியில் அனைத்து உயர்நிலைக் கல்வியையும் முடித்த பிறகு, 1967 இல், 18 வயதில், அவர் ஐந்தாண்டுகளுக்கு ராணுவ சேவையை முடிக்க இஸ்ரேலுக்குச் சென்றார். அங்கு அவர் உயரடுக்கு சேயரெட் மத்கல் என்ற சிறப்புப் படைகளில் சேர்ந்து பணியாற்றினார். இஸ்ரேலின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, மற்றும் எகிப்துக்கு எதிரான தாக்குதல்களின் போதும் பல நடவடிக்கைகளில் பங்கேற்றார். "எனக்கு மரணத்துடன் பல தொடர்புகள் இருந்தன," என்று அவர் அமெரிக்க பழமைவாத சிந்தனைக் குழுவான ஹூவர் நிறுவனத்திடம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உயரடுக்கு ராணுவப் பிரிவுடனான தனது அனுபவங்களைப் பற்றி கூறியிருக்கிறார். . “சூயஸ் கால்வாயின் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான் தண்ணீரில் மூழ்கி கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். நான் சிரியாவில் இருந்த போது உறைந்து போன நிகழ்வுகளும் இருக்கின்றன. அதேபோல் ஒருமுறை என்னை தேள் கடித்த போது, அதில் இருந்தும் தப்பிவந்துள்ளேன்." தனது ராணுவப் பணியை முடித்த பிறகு (கேப்டன் பதவியுடன்) அவர் 1972 இல் அமெரிக்காவுக்குத் திரும்பி, மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) கட்டிடக்கலை மற்றும் வணிக நிர்வாகப் படிப்புகளைப் படிக்கத் திரும்பினார். அங்கு அவர் சிறந்த மாணவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அதே ஆண்டில் அவர் திருமணம் செய்து கொண்டார். அவர் செய்த மூன்று திருமணங்களில் முதல் திருமண பந்தத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் உள்ளன. ஆனால் ஒரு வருடம் கழித்து, எகிப்தியப் படைகளுக்கு எதிரான யோம் கிப்பர் போரில், 1973 அக்டோபரில், சயரெட் மட்கலுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இஸ்ரேலுக்குத் திரும்புவதற்காக அவர் தனது படிப்பைப் பாதியில் விட்டார். அக்குழுவின் தலைவர்களில் ஒருவர் அவரது மூத்த சகோதரர் யோனாடன் ஆவார். யோனாடன் எல்லோரும் அவரை அழைப்பது போல், அவர் செய்த எல்லாவற்றிலும் தனித்து நிற்கிறார், மேலும் இஸ்ரேலிய பிரதமரின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். எம்ஐடியில் தனது படிப்பை முடித்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக போருக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய அவரது சகோதரரைப் போலல்லாமல், யோனாடன் ராணுவ வாழ்க்கையை எப்போதும் தொடர்ந்தார். மேலும், சயரெட் மட்கலின் தளபதியாகவும் உயர்ந்தார். 1976 ஆம் ஆண்டில், ஏர் பிரான்ஸ் விமானம் பாலத்தீன போராளிகளால் கடத்தப்பட்டு உகாண்டாவில் உள்ள என்டபே விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஒரு துணிச்சலான மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அங்கு அவர்கள் கிட்டத்தட்ட நூறு இஸ்ரேலிய குடிமக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். ஆபரேஷன் என்டெபே (ஆபரேஷன் தண்டர் என்றும் அழைக்கப்படுகிறது) வெற்றிகரமாக நிறைவடைந்தது. அனைத்து கடத்தல்காரர்களும் கொல்லப்பட்டனர் என்பதுடன் பெரும்பாலான பணயக்கைதிகள் - உயிரிழந்த நால்வரைத் தவிர - அனைவரும் மீட்கப்பட்டனர். இத்தாக்குதலில் ஒரே ஒரு இஸ்ரேலிய படைத்தளபதி கொல்லப்பட்டார்: அவர் தான் யோனாடன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலியர்களால் ஹீரோவாகக் கருதப்பட்ட நெதன்யாகுவின் மூத்த சகோதரர் யோனாடன் மரணம் அவரது வாழ்க்கையை மிகவும் பாதித்தது. "நான் மீண்டு வருவேன் என்று எப்போதும் நினைக்கவில்லை. ஆனால் எப்படியாவது எனக்குள் இருந்த உள் வலிமையைக் கண்டேன்" என்று நியூயார்க்கில் உள்ள கலாச்சார மையத்திற்கு வந்த போது நெதன்யாகு தெரிவித்தார். "அசாதாரண கண்ணியத்துடன் அவர்களின் வலியை தாங்கிய என் பெற்றோரின் முன்மாதிரியை நான் பின்பற்றினேன். என்டெப்பில் யோனாடனின் இழப்பைப் பற்றி நான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருந்தது. அது விவரிக்க முடியாத வேதனையின் தருணம்." அவரது சகோதரரின் மரணம் அவரது தொழில் வாழ்க்கையையும் திசை திருப்பியது. மசாசூசெட்ஸில் உள்ள புகழ்பெற்ற பாஸ்டன் ஆலோசனைக் குழுவில் பொருளாதார ஆலோசகராக ஓரிரு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்காக, அமெரிக்காவை விட்டு வெளியேறி, அரசு சாரா அமைப்பான யோனாதன் நெதன்யாகு பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனத்தை வழிநடத்தினார். பயங்கரவாதத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கும், அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த சர்வதேச மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாக அது இருந்தது. உண்மையில், அவர் பயங்கரவாதம் (1981, 1987 மற்றும் 1995 இல்) என்ற தலைப்பில் மூன்று புத்தகங்களையும், உலகில் அமைதி மற்றும் இஸ்ரேலின் நிலை பற்றிய நான்காவது புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். 1980 களின் முற்பகுதியில் அவர் ஜெருசலேமில் உள்ள ஒரு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராகவும் பணியாற்றினார். இந்த நேரத்தில் அவர் இஸ்ரேலிய அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அமைச்சர் மோஷே அரென்ஸ் அவரை வாஷிங்டன் டிசியில் உள்ள தூதரகத்தில் இஸ்ரேல் தூதரகத்தின் துணைத் தலைவராக நியமித்தார். நீண்ட காலத்திற்கு முன்பே அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதரானார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1988 இல், அவர் நிரந்தரமாக இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் வலதுசாரி லிகுட் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், தேசிய நாடாளுமன்றமான நெசெட்டில் பணியாற்றினார். வெறும் ஐந்தே ஆண்டுகளில் - 42 வயதில் - அவர் லிகுட் தலைவர் ஆனார். நெதன்யாகுவின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான டோர் கோல்ட், "பல்வேறு காரணங்களுக்காக அவர் ஒரு விண்கல் அளவுக்கான உயர்வைக் கொண்டிருந்தார்" என்று 2009 இல் பிபிசி ரேடியோ 4 இன் சுயவிவரங்கள் திட்டத்திற்கு விளக்கினார். "அவர் ராணுவப் பின்னணியைக் கொண்டிருந்தார். ஆனால் அதைவிட முக்கியமாக, அவரது ஆங்கிலப் புலமை, அவரது சொற்பொழிவு, தெளிவாகத் தெரிந்தது. நெதன்யாகு ஒரு புத்துணர்ச்சியூட்டும் நபர். அவர் கவர்ச்சிகரமானவர். அவர் அமெரிக்காவில் பிறந்தது போல் ஆங்கிலம் பேசினார். அதுமட்டுமின்றி அவர் அறிவார்ந்த வலிமையும் கொள்கையும் கொண்டவராகவும் விளங்கினார். ஜார்ஜ் பிர்ன்பாம், ஒரு அமெரிக்க சர்வதேச கொள்கை ஆலோசகராக இருந்தார். நெதன்யாகு 1996 இல் பிரதமருக்கான போட்டியில் குதிக்க முதன்முதலில் முடிவு செய்தபோது (இசாக் ராபின் படுகொலையால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தொடர்ந்து) அவரைத் தன்னுடைய தலைமை அதிகாரியாக நியமித்தார். "அவர் எப்போதும் ஒரு இருப்பு மற்றும் கவர்ச்சியைக் கொண்டிருந்தார். அது நம்பமுடியாத அளவிற்கு வலிமையானதாக இருந்ததுடன் முற்றிலும் இயற்கையானது," என்று அவர் அதே நெதன்யாகுவை முன்னிலைப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நெதன்யாகு - இஸ்ரேல் வரலாற்றில் இளைய பிரதமர் - 1996 இல் ஆட்சிக்கு வந்த பிறகு வாஷிங்டனுக்கு தனது முதல் பயணத்தின் போது அவர் உரையாற்றிய காட்சி. அமெரிக்க பாணியிலான அவரது பிரச்சாரம் இஸ்ரேலுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது வெற்றியும் பெற்றது. "இஸ்ரேலில் நடைபெற்று வந்த தேர்தலையே- தேர்தல் நடத்தப்பட்ட விதத்தையே நாங்கள் முற்றிலும் மாற்றியுள்ளோம்" என்று பிர்ன்பாம் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், 47 வயதில் நெதன்யாகு இஸ்ரேல் வரலாற்றில் மிக இளைய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் அவருக்கு முன்பு இருந்த சவால்கள் காரணமாக எளிதான அரசு இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மாறாக, சிக்கலான புள்ளிகளில் ஒன்று, அமெரிக்காவுடன் அது கொண்டிருந்த பயங்கரமான உறவு. அந்த நேரத்தில் அமெரிக்கா பில் கிளின்டனால் நிர்வகிக்கப்பட்டது. அவர் 1994 இல் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஊக்குவிக்க முயன்றார். இது எகிப்துக்குப் பின் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்த நாடாகும். 1967 போருக்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த காஸா பகுதி மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவாக்க அனுமதிக்கும் நெதன்யாகுவின் முடிவை கிளிண்டன் கடுமையாக விமர்சித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பாலத்தீனர்களுடனான சமாதான முயற்சியின் தோல்விக்கு கிளிண்டன் நேரடியாக அவரைக் குற்றம் சாட்டினார். ஜெருசலேம் போஸ்டின் முன்னாள் அரசியல் நிருபரும், தற்போதைய ஹானெஸ்ட் ரிப்போர்ட்டிங்கின் நிர்வாக இயக்குநருமான இஸ்ரேலிய பத்திரிகையாளர் கில் ஹாஃப்மேனின் கருத்தின் படி, ஜனநாயக அமெரிக்க அரசாங்கங்களுடன் - கிளின்டன் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பராக் ஒபாமா - பழமைவாத இஸ்ரேலிய பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார் என்று தெரியவருகிறது. "பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இது ஒரு வகையான சோகம். ஆனால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்குப் பதிலாக அவர், ஒரு சிறிய நாட்டின் பிரதமராக அமெரிக்காவை எதிர்க்கத் தொடங்கினார். " என்று ஹாஃப்மேன் பிபிசியிடம் கூறினார். 2018-ல் இஸ்ரேலின் தலைநகரை டெல் அவிவில் இருந்து, யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் போற்றப்படும் அந்த வரலாற்று நகரமான ஜெருசலேமுக்கு மாற்றிய நெதன்யாகுவைப் போன்ற ஒரு தலைவர் மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பின்னரே தோன்றமுடியும். அந்த தலைநகரை அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய வருகை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அப்பால் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2013 ஆம் ஆண்டு அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது பராக் ஒபாமா மற்றும் இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸ் ஆகியோருடன் நெதன்யாகு. அந்த முதல் அரசாங்கம் செயல்பட்ட போது, நெதன்யாகு இரண்டு எதிர் சக்திகளால் இழுக்கப்பட்டார். ஒருபுறம், அமெரிக்க அரசாங்கமும் இஸ்ரேலிய இடதுசாரிகளும் 1993 மற்றும் 1995 க்கு இடையில் இசாக் ராபின் மற்றும் பாலத்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஒஸ்லோ சமாதான உடன்படிக்கைகளை அவர் தடுத்ததாக குற்றம் சாட்டினர். மறுபுறம், அவரது வலதுசாரி ஆதரவாளர்கள், யூத மதத்தின் இரண்டாவது புனித நகரமான ஹெப்ரான் நகரத்தின் பெரும்பகுதியை பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டதற்காக அவரை விமர்சித்தனர். அவை அங்கு நிலவிய பதற்றங்கள், அவருடைய அரசாங்கத்தை உலுக்கிய சில ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சேர்ந்து, அவர் மீது மேலும் சுமையை ஏற்றின. 1999 தேர்தலில் நெதன்யாகு, தொழிற்கட்சியைச் சேர்ந்த எகூட் பராக்கால் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அரசியலில் இருந்து விலகி தனியார் துறைக்குத் திரும்ப முடிவு செய்தார். ஆனால் இந்த இடைவெளி ஒரு குறுகிய காலமாக இருந்தது. புதிய லிகுட் தலைவர் ஏரியல் ஷரோன், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அரசுக்குப் பிறகு, பராக்கைத் தொடர்ந்து, நெதன்யாகுவை முதலில் தனது வெளியுறவு அமைச்சராகவும், பின்னர் நிதி அமைச்சராகவும் நியமித்தார். இந்தப் பதவிகளில் நெதன்யாகு தனது அரசு தொடங்கிய பொருளாதார தாராளமயமாக்கல் செயல்முறையை மேலும் ஆழப்படுத்தினார். அதுமட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி இஸ்ரேலை அப்பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியாக மாற்ற அவர் வழிவகுத்தார் எனக்கருதப்படுகிறது. "எங்களுக்கு ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி இருந்தது," என்று அவர் பின்னர் அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தார். "என் மூத்த மகன் என்னிடம் சொன்னான்: “‘டெல் அவிவைப் பாருங்கள், நியூயார்க்கைப் பாருங்கள்... அவர்கள் வைத்திருக்கும் மாபெரும் கட்டடங்களைப் பாருங்கள்... நாம் எப்போதும் அந்த நகரைப் பெறமுடியாது” நான் எனது மகனிடம் சொன்னேன்: '‘உன் தந்தை இப்போது நிதி அமைச்சராக இருக்கிறார். அவரை நம்பு. நாம் அவர்களைப் போல மாறமுடியும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020 இல் இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் நகரின் காட்சி. ஆனால் இஸ்ரேலில் பலர் அவரை "பொருளாதார அதிசயத்தை" அடைந்ததாக பாராட்டி, அவருக்கு மிஸ்டர் எகானமி என புனைப் பெயர் சூட்டினாலும், இஸ்ரேலின் சமூக பாதுகாப்பு வலையை அது அழித்துவிட்டது என்று அதன் விமர்சகர்கள் வாதிடுகின்றனர். அவர் அமைச்சராக இருந்த பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2005ல் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை ஒருதலைப்பட்சமாக திரும்பப்பெறும் ஷரோனின் முடிவை ஏற்காமல் அவர் ராஜினாமா செய்தார். அந்த கருத்து வேறுபாடு ஷரோனை லிகுட்டை விட்டு வெளியேற்றியதால், கடிமா என்ற மையவாதக் கட்சியை உருவாக்கியது. நெதன்யாகு மீண்டும் வலதுசாரி கட்சியின் தலைவரானார். 2009 இல் அவர் மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். மேலும், டேவிட் பென்-குரியனின் முதல் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குப் பிறகு மிக நீண்ட கால அரசாங்கத்தை நடத்தினார். தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற நெதன்யாகு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜூன் 2021 வரை ஆட்சி செய்தார். மேலும் பதவியை இழந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 2022 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆறாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது அவரை இன்றும் அதிகாரத்தில் வைத்திருக்கிறது. அர்ஜென்டினா-இஸ்ரேலிய ஆய்வாளர் கேப்ரியல் பென்-டாஸ்கலின் கூற்றுப்படி, நெதன்யாகுவின் வெற்றியின் ஒரு பகுதிக்கு இஸ்ரேலிய மக்களின் கருத்தியல் சார்புதான் காரணமாகும் எனக்கருதப்படுகிறது. "மதச்சார்பற்ற, இடது அல்லது மைய-இடதுசாரி தத்துவத்தைக் கொண்ட பெரும்பான்மையான இஸ்ரேலிய பத்திரிகைகளைப் போலல்லாமல், இஸ்ரேலின் மக்கள், ஓரளவு பழமைவாத மற்றும் மதம், வலதுசாரி தத்துவத்தைக் கொண்டவர்களுக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள். அதனால்தான் 1977 முதல் இப்போது வரை தேர்தல்களில் இதுபோன்ற முடிவுகள் எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன,” என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார். இந்த கருத்தியல் முன்கணிப்புக்கு, "நெதன்யாகு தன்னிடம் நிறைய கவர்ச்சி இருப்பதாகவும், மக்கள் மற்றும் வாக்காளர்களிடையே எதிரிகளால் தூண்டப்படும் பய உணர்வுகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பது தெரியும்" என்றும் அவர் கூறினார். தனது பங்கிற்கு, “அவர், கடந்த 20, 30 ஆண்டுகளில் அரசியலில் இருந்த அவரது பிம்பத்தில் தனது நிலையை மாற்றியமைக்க முடிந்தது" என்று ஊடகவியலாளர் பெதன் மெக்கெர்னன் நம்புகிறார். "அவர் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக திருப்புவதில் ஒரு கைதேர்ந்தவர். இந்த பிளவு மற்றும் வெற்றி உத்தியின் மூலம் இஸ்ரேலை மிகவும் பழமைவாத மற்றும் வலதுசாரி இடமாகவும் மேலும் ஒருசார்பான இடமாகவும் மாற்ற உதவியது," என்று அவர் கடந்த ஜூலை மாதம் பிபிசி 4 இடம் கூறினார். "இஸ்ரேலுக்கு எதிரான பாரபட்சத்திற்காக ஊடகங்களைக் கண்காணிக்கும்" ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹானஸ்ட் ரிப்போர்டிங்கின் கில் ஹாஃப்மேன் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். "அண்மைக் காலம் வரை, அவர் எப்போதும் தனது வலதுபுறத்தில் ஒரு வலதுசாரிக் கட்சியையும், இடதுசாரிக் கட்சியை இடதுபுறத்திலும் வைத்திருக்க முயன்றார். அதனால் அவர் மையத்தில் இருப்பவராகவும் ஒருவருக்கொருவர் எதிராக எதையும் செய்யமுடியும் என்ற நிலையைத் தக்கவைத்துக்கொண்டார்," என்று அவர் மேலும் பேசுகையில் கூறினார். "நெதன்யாகு அரசியலில் ஒரு மந்திரவாதி" என்று பென்-டாஸ்கல் கூறுகிறார். "அவர் என்ன செய்தார் என்பது தற்காலிக கூட்டணிகளைச் சார்ந்திருந்தது. மேலும், அவர் தனது அரசாங்கத்துக்காக ஒரு நிலையான கூட்டணியை பலப்படுத்தவில்லை அல்லது அவரை மாற்றுவதற்கான ஒரு தலைமையை அவர் வலுப்படுத்தவில்லை. அவர் அரசியல் ரீதியாக அச்சுறுத்தலாகக் கருதும் எவரையும் தாக்கினார்,” என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார். மேற்குக் கரையை ஆளும் பாலத்தீன தேசிய அதிகார சபைக்கும் காஸா பகுதியை ஆளும் ஹமாஸுக்கும் இடையே தலைமைத்துவம் பிரிக்கப்பட்டுள்ள பாலத்தீனர்களுடனான தனது பேச்சுவார்த்தையிலும் அதே தர்க்கத்தைப் பயன்படுத்தியதாக மத்திய கிழக்கு நிபுணர் கருதுகிறார். “பாலத்தீனர்களை பிளவுபடுத்துவதும், ஒருவரையொருவர் மோத வைப்பதும் அவர்களின் கொள்கையாக இருந்து வருகிறது. அது பாலத்தீன அதிகாரத்தை பலவீனப்படுத்தியது என்பதுடன் ஹமாஸை பலவீனப்படுத்தியது என்பதே உண்மை. மேலும், இருவரையும் முரண்பட வைத்தது. ஆனால் அவர் உண்மையில் செய்ததை விட ஹமாஸை பலவீனப்படுத்தியதாக அவர் நினைத்தார். பாலத்தீனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, நெதன்யாகு தனது அரபு அண்டை நாடுகளுடன் சமாதானத்தைத் தேடுவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக மிதவாத சன்னி இஸ்லாமிய அரசுகள் ஆட்சி செய்யும் இடங்களை அவர் இலக்காகக் கொண்டார். அவர்கள் குறைந்தது அக்டோபர் 7 வரை - பாலத்தீனத்துக்கு ஆதரவளிப்பதில் தயக்கத்துடன் தான் இருந்தனர். "நெதன்யாகு அதைப் பயன்படுத்திக் கொண்டார். பாலத்தீன நிகழ்ச்சி நிரலை பூஜ்ஜியமாகக் குறைக்க முயற்சிப்பதே அவரது உத்தியாக இருந்தது." 2020 ஆம் ஆண்டில் "ஆபிரகாம் ஒப்பந்தங்களில்" கையெழுத்திட்டது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுடனான உறவுகளை இயல்பாக்கியது. இருப்பினும் இன்று காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இந்நாடுகள் தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்துகின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடிப்பதற்கு முன்பு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஒரு ஹெவிவெயிட் மற்றும் அந்த நாட்டின் வரலாற்று எதிரியான சௌதி அரேபியாவுடன் ஒரு ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தது. சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த ஒப்பந்தம் தான் பாலத்தீன போராளிக் குழுவினர் முன்னெப்போதும் இல்லாத ஒரு தாக்குதலைத் தூண்டியதாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன் நெதன்யாகு ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஹாஃப்மேனைப் பொறுத்தவரை, பாலத்தீனர்களுடனான பேச்சுவார்த்தைகளில் நெதன்யாகு முன்னேற்றம் காணவில்லை என்றாலும், அவர் கையெழுத்திட முடிந்த ஆபிரகாம் ஒப்பந்தங்கள் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. "இப்போது நாங்கள் பல அரபு நாடுகளுடன் சமாதானமாக இருக்கிறோம். எங்களுக்குள் பொருளாதார தொடர்புகள், விமான சேவைகள் உள்ளன. மேலும் இது இப்பிராந்தியத்திலும் உலகிலும் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “எது எப்படி என்றாலும், நெதன்யாகு தனக்காக விரும்பும் மரபு இஸ்ரேலையும் யூத மக்களையும் இரானின் கைகளின் அழிவிலிருந்து காப்பாற்றிய இஸ்ரேலின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்பதுடன் மற்றொரு இன அழிப்பைத் தடுத்தார்" என ஹாஃப்மேன் கருதினாலும், ஹமாஸ் மீது தாக்குதல் நடத்திய இரத்தக்களரியை ஏற்படுத்தியபின் அவர் தனது அந்தக் கருத்துக்குப் பொருத்தமான நிலையை இழந்தார். அக்டோபர் 7 முதல், பிரதமர் பொது வெளியில் பேசுவது அரிதாகவே காணப்படுகிறது. மேலும் என்ன நடந்தது, பணயக்கைதிகள் விவகாரத்தை அவர் கையாண்ட விதம் மற்றும் காஸா மீதான தாக்குதல் ஆகியவற்றிற்காக பெரும்பாலான சமூகங்களால் அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அக்டோபர் 28 இரவு, அவர் சமூக வலை தளங்களில், "ஹமாஸின் போர் நோக்கங்கள்" என்ற செய்தியை வெளியிட்டார். அதை அவர் சில மணிநேரங்களுக்குப் பிறகு, மறுநாள் காலையில் நீக்கிவிட்டார். அதற்காக மன்னிப்பும் கேட்டார். "அக்டோபர் 7 அன்று நமது வரலாற்றில் ஒரு கருப்பு நாள்" என்று படுகொலை நடந்த சில வாரங்களுக்குப் பிறகு அவர் தொலைக்காட்சி உரையில் கூறினார். "காஸாவுடனான தெற்கு எல்லையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் முழுமையாக ஆராய்வோம். அந்த தோல்வி குறித்து தீர விசாரிக்கப்படும். "நான் உட்பட அனைவரும் பதில் அளிக்க வேண்டும், " என்று அவர் உறுதியளித்தார். இஸ்ரேலிய செய்தித்தாளின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஹாரெட்ஸ் அன்ஷெல் பிஃபெஃபர் , ("பீபி" என்ற சுயசரிதையை எழுதியவர்) பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் பேசிய போது, இஸ்ரேலைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இதுபோன்ற ஒன்றைத் தடுக்கவும் தவறியது தனது தலைமைக்கு எவ்வளவு கறை படிந்துள்ளது என்பதை நெதன்யாகு அறிவார் ," என்றார். தாக்குதல்களுக்கு முன்பே, இஸ்ரேலிய பிரதமர் தனது அரசு நீதித்துறையில் சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயன்றது நாடு முழுவதும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. இதனால் நெதன்யாகு பல சிக்கல்களை எதிர்கொண்டார். இது நிர்வாகக் கிளை மற்றும் சட்டங்களின் முடிவுகளை ரத்து செய்யும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான சீர்திருத்தமாக இருக்கிறது. பென்-டாஸ்கலைப் பொறுத்தவரை, அவரது மையவாத போட்டியாளரான பென்னி காண்ட்ஸுடன் (அவரது முக்கிய எதிரியான யாயர் லாபிட் சேர மறுத்துவிட்டார்) போரை வழிநடத்த ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அவரது முடிவு நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், போர் நீண்ட காலத்துக்கு நடக்கும் என்பதால் தனது அரசியல் விதி நிச்சயமற்றது என்றும் அவர் நம்புகிறார். "இது அவரது அரசியல் வாழ்க்கையை மிகவும் தீவிரமான முறையில் கறைபடுத்துகிறது. மேலும் அவர் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறுகிறார். இருப்பினும், "அரசியல் மந்திரவாதி" அதிகாரத்தில் நீடிக்க வேறு ஏதாவது தந்திரத்தைப் பயன்படுத்தலாம் என்பதையும் யாரும் நிராகரிக்க முடியாது. “நீங்கள் கேள்விப்பட்டிராத காரியங்களை செய்வதில் அவர் வல்லவர். அவர் போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஜெருசலேமில் சௌதி அரேபியாவின் தலைவருடன் சமாதானத்தில் கையெழுத்திடலாம்,” என்று அவர் ஒரு உதாரணம் காட்டுகிறார். "தர்க்கரீதியான விஷயம் என்னவென்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்வார் என்று நாம் நினைக்கமுடியாது. நெதன்யாகுவைப் பொறுத்தவரை, ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவரைப் போல் ஏதாவது செய்யத் துணிவார்," என்று அவர் கூறுகிறார். "ஹமாஸ் தாக்குதல் நெதன்யாகுவின் “மிஸ்டர் செக்யூரிட்டி” என்ற பிம்பத்தை சிதைத்திருந்தாலும், அவருடைய பாரம்பரியம் எந்த அளவிற்கு சேதமடைந்தது என்பதைப் பார்க்க இந்தப் போர் முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்று அவர் பிபிசி முண்டோவிற்கு அளித்த பேட்டியில் முடிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c3g27dkeye4o
  16. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் - ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு Published By: DIGITAL DESK 3 13 NOV, 2023 | 04:39 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார். அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார். https://www.virakesari.lk/article/169211
  17. முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 23 நிமிடங்களுக்கு முன்னர் தீபாவளியை ஒட்டி ஏற்படும் காற்று மாசுபாடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்திருக்கிறது. இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெருநகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு, அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் 7 நாட்கள் பின்பாகவும் ஒலி மாசுபாடும் காற்றுத் தர மாசுபாடும் கண்காணிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கண்காணிக்கப்பட்டு, கிடைத்த முடிவுகளை தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்குப் பிந்தைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், முந்தைய ஆண்டைவிட காற்றுத் தர மாசுபாடு சற்றுக் குறைந்துள்ளது. ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்துள்ளது. சில இடங்களில் குறைந்துள்ளது. தீபாவளி நாளான நவம்பர் 12ஆம் தேதியன்று காலை ஆறு மணி முதல் அடுத்த நாள் காலை ஆறு மணிவரை சென்னை நகரின் ஏழு இடங்களில் காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) கணக்கிடப்பட்டது. பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கணி, சௌகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. கிடைத்த கணக்கீடுகளின்படி, கடந்த ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கு்மபோது இந்த ஆண்டு பெசன்ட் நகரில் மாசுபாடு (207 AQI) மிகக் குறைவாக இருந்தது. சென்னை நகரிலேயே வளசரவாக்கத்தில்தான் மிக மோசமான (365 AQI) அளவாக இருந்தது. பல இடங்களில் மாசுபாடு பாதி அளவுக்குக் குறைந்திருந்தது. சௌகார்பேட்டையில் கடந்த ஆண்டு காற்று மாசுபாடு 786 AQIஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது, 336 AQIஆகக் குறைந்திருந்தது. திருவல்லிக்கேணியில் 503 AQIஆக இருந்தது தற்போது 253 AQIஆகக் குறைந்திருந்தது. பட மூலாதாரம்,TNPCB படக்குறிப்பு, இந்த ஆண்டு வழக்கத்தை விட காற்று மாசு குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. "காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரப்பதத்தின் காரணமாகவும் காற்றின் மிகக் குறைந்த வேகத்தாலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகை வான்வெளியில் கலைவதற்கான சூழ்நிலை அமையவில்லை" என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றுத்தர மாசுபாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் நிலைமை மேம்பட்டிருந்தாலும், தீபாவளியன்று ஏற்பட்ட மாசுபாடு தேசிய அளவில் நிர்ணியிக்கப்பட்ட மாசுபாட்டு அளவைவிட மிகமிக அதிகமாகவே இருந்தது. தேசியத் தரக் குறியீடுகள் AQI 50க்குள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. தற்போது சென்னையில் நிலவிய அளவுகள், மோசம் அல்லது மிக மோசம் என்ற வகைப்பாட்டிற்குள் வருகின்றன. ஒலி மாசுபாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு தீபாவளியோடு ஒப்பிட்டால் சென்னை நகரின் சில இடங்களில் அதிகரித்தே காணப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தியாகராய நகரில் (60.5 டெசிபல்) ஒலி மாசுபாடு குறைவாகவும் வளசரவாக்கத்தில் மிக அதிகமாகவும் (83.6 டெசிபல்) இருந்தது. கடந்த ஆண்டு தீபாவளியோடு ஒப்பிடும்போது பெசன்ட் நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை ஆகிய இடங்களில் நிலைமை மோசமாக இருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது காற்றுத்தர மாசுபாடு குறைவாக இருந்ததற்கு, தமிழ்நாடு அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்தான் காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,TNPCB படக்குறிப்பு, பட்டாசு வெடிப்பதால் ஒலியும் மாசுபடுவது ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இருந்தபோதும், தற்போது ஏற்பட்டிருக்கும் மாசின் அளவே மிக மோசமானதுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். "கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாசுபாடு குறைவு என்றாலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட இது பல மடங்கு அதிகம். சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 - 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது. பட்டாசு வெடிப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இந்தப் பிரச்சனையை இருவிதமாக அணுக வேண்டும் என்கிறார் நுரையீரல் நோய் நிபுணரான டாக்டர் பிரசன்னகுமார் தாமஸ். "முதல்வகையினர் எந்த வித நோயும் இல்லாத ஆரோக்கியமானவர்கள். இவர்களுக்கு ஒரு நாள் ஏற்படக்கூடிய இந்த மாசுபாடு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாசுபாடு இருக்கும் நாட்களில் இவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். இரண்டாவது வகையினர், ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கான தொடர் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் வெளியே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மீறிச் செல்லும்போது என்95 முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும்" என்கிறார் பிரசன்ன குமார் தாமஸ். சென்னை போன்ற நகரங்களில் ஏற்படும் மாசுபாடு, கடல்காற்றின் வருகையால் ஒன்றிரண்டு நாட்களில் நீங்கிவிடும் என்பதால், இந்த ஒன்றிரண்டு நாட்களுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். https://www.bbc.com/tamil/articles/c72d3p1381wo
  18. மயிலத்தமடு மாதவனை விவகாரம் : நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா ? - வேலன் சுவாமிகள் கேள்வி Published By: VISHNU 13 NOV, 2023 | 03:41 PM மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளையை உரிய தரப்பினர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என பொத்துவில் பொலிக்கண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று திங்கட்கிழமை எடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார். இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார். நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்ற நிலையில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடப்பில் கிடக்கிறது. இதனை இழுத்தடிப்பு செய்வதற்காக மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள். எனினும் திங்கட்கிழமை (13) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளை உரிய முறையில் நிறைவேற்றப்படுமாஎன்ற சந்தேகம் எழுவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/169198
  19. Published By: VISHNU 13 NOV, 2023 | 03:16 PM அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்துக்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை மீண்டும் காட்டுக்கு துரத்தி அடித்துள்ளனர். குறித்த கழிவு கொட்டும் இடத்துக்கு வந்த தனியன் யானை வீதிகளில் செல்வோரை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து செயற்பட்ட அதிகாரிகள் யானையை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைளை துரிதமாக முன்னெடுத்தனர். அண்மைக் காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. அத்துடன் யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவதாக இலங்கை காணப்படுகிறது. யானை – மனித மோதலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவற்றை முறையாக அமுல்படுத்தப்படாமை மற்றும் மேற்பார்வை செய்யப்படாமை காரணமாக யானை – மனித மோதலின் இழப்புக்களை குறைப்பது இன்று வரையும் முடியால் உள்ளமை வெளிப்படையாகும். இதனால் குறித்த மோதலினால் யானைகளும் மனிதர்களும் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றனர். எனவே மனிதன் மற்றும் யானைகளை காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு தொடர்ச்சியாக யானை மற்றும் மனித மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும் அவற்றினை நிவர்த்திப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. https://www.virakesari.lk/article/169197
  20. பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் - ரிசி சுனாக் அதிரடி தீர்மானம் Published By: RAJEEBAN13 NOV, 2023 | 04:59 PM பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட்கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள ரிசி சுனாக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார். 2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/169215
  21. சம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன 13 NOV, 2023 | 04:06 PM (எம்.மனோசித்ரா) அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி ஏனைய மக்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும். இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமின்றி நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை விட பொருட்களின் விலைகளைக் குறைப்பது சிறந்ததாகும். அதனை விடுத்து சம்பளத்தை அதிகரிப்பதாயின் அரச உத்தியோகத்தர்களது சம்பளம் மாத்திரமின்றி, தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். சரியாக நோயை இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிப்பதற்கான யோசனையையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். எமது பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றோமே தவிர, பொதுஜன பெரமுன சார்பில் வரவு - செலவு திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும் என்றார். https://www.virakesari.lk/article/169203
  22. நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தெரிவானால் நன்றாக இருக்கும்.
  23. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் Live Blog Published By: PRIYATHARSHAN 13 NOV, 2023 | 03:15 PM 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார். உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார். பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு - செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகலருக்கும் ஆங்கிலம் 'திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ? : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் வெற்றியல்ல நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம் : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பூச்சியமாக வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம் - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது - நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் - நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது : நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சற்று நேரத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு - செலவு திட்டமாகும். வரவு - செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/169173
  24. காசாவின் போர் செல்போன்களிலும் இடம்பெறுகின்றது Published By: RAJEEBAN 13 NOV, 2023 | 04:17 PM நியுயோர்க் டைம்ஸ் By Yousur Al-Hlou தமிழில் - ரஜீவன் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் சிக்குண்டுள்ள பாலஸ்தீனியர்களில் செல்போன்களை வைத்துள்ளவர்கள் காசா யுத்தத்தை பதிவு செய்து வெளியிடுகின்றனர் – அவர்கள் ஆங்கில புலமை கொண்டவர்களாக உள்ளனர்- இன்ஸ்டகிராமில் பலரால் பின்தொடரப்படுபவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். இஸ்ரேலும் எகிப்தும் பத்திரிகையாளர்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுத்து அவர்களை தடுத்து வருகின்ற நிலையில், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சினால் ஏற்பட்டுள்ள பேரழிவை தரைதாக்குதல் கதைகளை பதிவு செய்கின்றனர், பகிர்ந்துகொள்கின்றனர். அவர்களின் பதிவுகள் யதார்த்தத்தை உண்மையை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வெளிப்படையாக தெரிவிப்பவையாக காணப்படுகின்றன- மையநீரோட்ட ஊடகங்கள் அவை வெளியிட முடியாத அளவிற்கு பயங்கரமானவை என கருதக்கூடும். அவர்கள் தாங்கள் பதிவு செய்யும் யுத்தத்தின் நடுவில் வாழ்கின்றனர்,குண்டுவீச்சிலிருந்து உயிர்பிழைக்கின்றனர் ,உணவு குடிநீரை பங்கீட்டு முறையில் பெற்றுக்கொள்கின்றனர் மருத்துவமனையில் தஞ்சமடைகின்றனர். அவர்கள் நடுநிலையான பார்வையாளர்கள் இல்லை அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளில் அவர்கள் தங்களை அவ்வாறு காண்பிக்க முயலவில்லை. சிலர் அவர்கள் காசாவை தனது பிடியில் வைத்திருக்கும் ஹமாசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் என தெரிவிக்கின்றனர். ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பதிலடியாக தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் - பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 4500 பேர் சிறுவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ஐநாவின் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுவரையில் 33 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எனினும் பாலஸ்தீனியர்கள் யுத்தத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை தொடர்ந்தும் பதிவு செய்கின்றனர்-அவர்களை மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர். மொட்டாஸ் அசைசா ஒக்டோபர் ஏழாம் திகதி மொட்டாஸ் அசைசா 4 மணியளவில் உறங்கச்சென்றார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் குண்டுவெடிப்புகளின் சத்தத்தை கேட்டு கண்விழித்தார்,தனது வீட்டின் கூரைக்கு சென்று என்னவென்று பார்த்தார் அவரது வீட்டின் மேலாக ரொக்கட்கள் சென்றதை பார்த்தார். அதுவரை எந்த எச்சரிக்கையும் வெளியாகவில்லை வழமையாக யுத்தத்தை அறிவிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அன்று இல்லை ஆனால் இந்த யுத்தம் அவர் உறக்கத்திலிருந்தவேளை ஆரம்பித்தது. காசா இஸ்ரேலை பிரிக்கும் எல்லையை கடந்து சென்ற ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய படையினரையும் சமூகங்களையும் தாக்கினர்.240 பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர் 1400 பேர் கொல்லப்பட்டனர் அதில் அதிகளவு இஸ்ரேலிய இராணுவத்தினரும் உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான முழுமையான யுத்தத்தை ஆரம்பித்தது- அசைசாவும் இரண்டு மில்லியன் மக்களும் காசாவில் குண்டுவீ;ச்சிற்குள் சிக்குப்படும் நிலையை ஏற்படுத்தியது. பல வருட மோதல்களிற்கு பின்னர் வெடிமருந்து கிடங்காக மாறியிருந்தது காசாவில் அவர்கள் சிக்குண்டனர். ஏற்கனவே நான்கு யுத்தங்களை சந்தித்த அசைசா தனது கமராவை எடுத்துக்கொண்டு தன் கண்முன்னால் புதிதாக அவிழ்ந்த உலகிற்குள் நுழைந்தார். ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படையினருடன் இஸ்ரேலிய ஜீப்பில் அசைசாவை கடந்துசென்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் சீருடையில் காணப்பட்டனர் - இஸ்ரேலிய படையினரை பொதுமக்கள் முன்னிலையில் பாலஸ்தீனியர்கள் நிறுத்தியவேளை அவர்கள் கண்களில் அச்சம் தென்பட்டது என்கின்றார் அசைசா. அவர் அதனை பதிவு செய்தார் -அந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார் – அவரை 25000 பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர். நான் அந்த சம்பவத்தை உள்வாங்குவது எப்படி என தெரியாத நிலையிலிருந்தேன் என தெரிவிக்கும் அவர் அந்த ஜீப் எங்களுக்கு பேரழிவை கொண்டு வரப்போகின்றது என நான் அந்த நிமிடம் கருதவில்லை என்கின்றார். அசாசா காசா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் பட்டம்பெற்றவர்- புகைப்படத்துறை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர்.காசாவின் அழகையும் பயங்கரத்தையும் பதிவு செய்து அவர் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். ஆனால் காசா யுத்தம் சமூக ஊடக காலத்தின் யுத்த செய்தியாளராக அவரை மாற்றியிருந்தது. தற்போது அவரை 13 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அவர் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சினை தனது தலைமுறையை போல பதிவு செய்துவருகின்றார்.கண்முன் நடப்பதை அப்படியே பதிவு செய்து அப்படியே தரவேற்றுகின்றார் அவருக்கு ஆங்கில மொழியாற்றல் உள்ளதால் பலர் அவரை பின்தொடர்கின்றனர். நான் ஏனையவர்களை போலவே பதிவிடுகின்றேன் பிரபலங்கள் செய்வது போல நானும் எனது நாளாந்த வாழ்க்கையிலிருந்து பதிவிடுகின்றேன் என்கின்றார் அவர். ஆனால் அவரது வீடியோக்கள் முற்றிலும் வித்தியாசமானவை. ஓக்டோபர் 9 ம் திகதி குண்டுவீச்சிலிருந்து தப்பியவுடன் அவர் கதறியழுதார். அது எனக்குள்ளே இருந்த எதனையே அசைத்துவிட்டது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன் இரண்டு மணிநேரம் அழுதேன் என அவர் குறிப்பிட்டார். ஒக்டோபர் 11ம் திகதி அவர் குண்டுவீச்சில் தனது நெருங்கிய நண்பரை இழந்தார்-அதன் பின்னர் அவரது குடும்ப உறவுகள் கொல்லப்பட்டனர். ஒக்டோபர் 22 ம் திகதி அவர் கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவர்களின் சடலங்களுடன் காணப்பட்டார்.23 ம் திகதிஇடிபாடுகளிற்கு மேலாக நடந்துசென்ற அவர் நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றோம் என தெரிவித்தார். ஆரம்பத்தி;ல் என்ன செய்கின்றேன் என்பதோ என்ன செய்யப்போகின்றேன் என்பதோ தெரியாத நிலையில் நான் காணப்பட்டேன் என தெரிவிக்கும் அவர் நான் நடக்கும் விடயங்களை பதிவிட்டு நாங்கள் இங்கே இருக்கின்றோம் என தெரிவிக்க விரும்பினேன் என குறிப்பிட்டார். அவரது சமூக ஊடக செயற்பாடுகளும் பிரபலமும் அவருக்கு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன,அவர் தான் சந்தித்த அனுபவங்களால் களைப்படைந்துள்ளார், பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றார், தனது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளார் அவர் தனது சகாக்கள் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். விமானகுண்டுவீச்சில் அவர்களின் வீடுகள் எப்படி நொருங்கின தரைமட்டமாகின என்பதை நேரில் பார்த்துள்ளார். நான் எனது நண்பர்களை இடிபாடுகளிற்குள் இருந்து இழுத்தெடுத்தேன் என அவர் தெரிவிக்கின்றார். நேற்று நான் எனது வீட்டில் ஒரு கால் கட்டிலும் ஒரு கால் தரையிலுமாக உறங்கினேன் , நான் அங்கேயே இருக்கவேண்டுமா வெளியேறவேண்டுமா என்பது தெரியாத நிலையிலிருந்தேன், எனது தாயார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார். நான் தற்போது காசாவில் இல்லை என அவர் நவம்பர் நான்காம் திகதி பதிவில் தெரிவித்தார். இஸ்ரேலிய துருப்பினரின் பிடியில் தனது வீடு உள்ளதால் மீண்டும் திரும்பி செல்வது ஆபத்தானது என அவர் தெரிவித்தார். தொடர்ந்தும் யுத்தம் குறித்த தகவல்களை வெளியிடுவதாக தன்னை சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களிற்கு தெரிவித்துள்ள அவர் அதேவேளை தனக்குள்ள மட்டுப்பாடுகளையும் தெரிவித்துள்ளார். நான் சுப்பர்மான் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் சோர்வடைந்து விழப்போகின்றேன் போல உணர்கின்றேன் என கமராவை பார்த்தபடி அவர் தெரிவித்தார். அனைத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஆனால் எனது உயிருக்கு ஆபத்தில்லாமல் அவற்றை பதிவு செய்ய விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/169207
  25. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் ! Published By: DIGITAL DESK 3 13 NOV, 2023 | 11:29 AM 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் இன்று திங்கட்கிழமை (13) காலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/169171
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.