Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18737
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. 1 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்ததுறை அதுிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி, கடந்த நான்கு மாதங்களாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன் நாக்பூரில் பணியற்றி வந்ததும் தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அங்கீத் திவாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது உள்ள வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 51 லட்சம் கேட்டுள்ளதாகவும், அதில் ஒரு தவணையாக ரூ 20 லட்சம் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறியுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், நவம்பர் 31 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த அரசு அதிகாரியிடம் கொடுத்து அனுப்பி, அங்கீத் திவாரியிடம் கொடுக்க வைத்ததாகவும், அந்த பணத்தை அங்கீத் திவாரி பெற்றுக்கொண்டு செல்லும்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொடங்கிய சோதனை, சனிக்கிழமை காலை 7 மணியளவில் நிறைவடைந்தது. படக்குறிப்பு, அங்கீத் திவாரி விரட்டிப் பிடிக்கப்பட்டது எப்படி? ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே அங்கீத்தை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரைப் பார்த்ததும், பை-பாஸ் சாலையில் இருந்து 'சர்வீஸ்' சாலையில் வாகனத்தை திருப்பி தப்ப முயன்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். தப்ப முயன்ற அங்கீத் திவாரியை விரட்டிப்பிடித்து, முதலில் அவரை அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி, அவர் லஞ்சமாக பெற்று வந்த ரூ.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அங்கீத் திவாரி, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா இல்லத்தில் ஆஜர் படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். படக்குறிப்பு, இடையபட்டியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அங்கீத் திவாரி லஞ்சம் வாங்கியது எப்படி? திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரின் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அந்த அறிக்கையின்படி, புகார் கொடுத்துள்ள அரசு மருத்துவருக்கு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வாட்ஸ் அப்-ல் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் அமலாக்கத்துறை அதிகாரி என்றும், மறுநாள் காலை விசாரணைக்காக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். விசாரணைக்கு சென்ற அரசு மருத்துவர் மீது 2018 லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்த உத்தரவு வந்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 3 கோடி ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் மருத்துவர் தனது புகாரில் கூறியுள்ளார். ஆனால், தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும், தான் சட்டத்திற்கு உட்பட்டே பணி செய்வதாக கூறியதனை அடுத்து, அப்போது ஹர்திக் என வாட்ஸ் அப்-ல் அறியப்பட்ட அங்கீத் திவகாரி, தனது உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு, ரூ 51 லட்சம் வேண்டும் எனவும், அதனை நவம்பர் 1 ஆம் தேதி தயாராக வைத்திருக்குமாறு கூறியுள்ளார். பின், அக்டோபர் 31 ஆம் தேதி இரவு, மருத்துவரை தொடர்புகொண்ட அங்கீத் திவாரி, பணம் தயாராக உள்ளதா எனக்கேட்டள்ளார். பணம் தயார் என மருத்துவர் கூறியவுடன், மறுநாள் காலை அழைப்பதாக அங்கீத் திவாரி கூறியுள்ளார். மறுநாளான நவம்பர் 1 ஆம் தேதி காலை 7.17 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, நத்தம் வழியாக மதுரைக்கு வருமாறும், வழியில் பணத்தினை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அதன்படி, மருத்துவர் நத்தம் தாண்டி, நத்தத்திலிருந்து மதுரைக்கு நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் 7.46 மணிக்கு அழைத்த அங்கீத் திவாரி, மருத்துவரின் காரினை பார்த்துவிட்டதாகவும், காரினை நிறுத்துமாறும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், மருத்துவரின் காரின் முன்பக்கம் வந்து தனது காரினை நிறுத்திய அங்கீத் திவாரி, தான் கேட்ட லஞ்சப்பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா என மருத்துவரிடம் கேட்டுள்ளார். அப்போது, மருத்துவர் தான் 20 லட்சம் ரூபாய் மட்டும்தான் கொண்டு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு வர் தனது மேல் அதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும், மருத்துவர் மீதான புகாரினை அவர் முடித்து மேல் அதிகாரிகளுக்கு அக்டோபர் 30 ஆம் தேதியே அனுப்பிவிட்டதாகவும், அங்கு அந்த கோப்புகள் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மீதப்பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அங்கீத் திவாரி, அப்போது மருத்துவரிடம் இருந்த ரூ 20 லட்சத்தை கையில் பெறாமல், காரின் டிக்கியை திறந்து, அங்கே வைக்கச் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவரின் வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவு செய்துள்ளார். மீதப்பணத்தை கேட்டு தொடர்சியாக அழைப்பு வந்ததால், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார் மருத்துவர். அதன்அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மறுநாள் காலை, அங்கீத் திவாரியை கையும் களவுமாகப் பிடித்தனர். அமலாக்க துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தினர். முதலில் அனுமதி மறுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பேச்சு வார்த்தைக்குப்பின் சோதனைக்கு அனுமதித்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியின் அறையில் விடிய விடிய சோதனை செய்த அதிகாரிகள், அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சோதனை நடைபெறும்போதே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தக்கூடும் என்பதால், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை இரவு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 'அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பாஜக தலைவர் அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பிரதமர் மோதியின் ஆட்சியில் ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய்விட்டன எனக் குற்றம்சாட்டினார். “இதுபோல வசூலாகும் லஞ்சப்பணம் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும். அதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்து செய்துள்ளனர். இது அவசியமான நடவடிக்கை,” என பதிவிட்டுள்ளார். மேலும், “மோதி ஆட்சியில் ஊழல் முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிவிட்டுள்ளன,” என பதிவிட்டிருந்தார். அமலாக்கத்துறை அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்ப முயன்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி. “தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிடச் சென்றுள்ளனர். அப்படி குற்றம்சாட்டப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி தவறு செய்யவில்லை என்றால், அவர் ஏன் போலீசாரைப் பார்த்தும் ஓட வேண்டும். நான் குற்றம்செய்யவில்லை எனக் கூறியிருக்கலாமே,” எனக் கேள்வி எழுப்பினார். அதேவேளையில், தவறு யார் செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. “லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். பட மூலாதாரம்,DVAC மத்திய அரசு அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்யலாமா? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கான கையேட்டில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான நடைமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான முறைகேடு, ஊழில் உள்ளிட்ட புகார்களை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,தான் விசாரிக்க முடியும். ஆனால், அதுவே, மத்திய அரசு அதிகாரி மீது லஞ்சம் தொடர்பான புகாராக இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான கால அவகாசம் இல்லாதபோது, லஞ்ச ஒழிப்பத்துறையினரே நடவடிக்கையை தொடரலாம. அந்த நடவடிக்கை, லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்யலாம். இந்த கைது நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c3g22n5kzxlo
  2. இரண்டு அணியும் பி ரீமை அனுப்பிற்று சர்வதேசப் போட்டியாமெல்லே!
  3. மிக்ஜம் புயல்: தமிழ்நாட்டை நெருங்கும் புயல், கரையைக் கடக்கும் தேதி மாற்றம் - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,IMD 30 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது? தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் புகுதியால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் ஒன்றாம் தேதி காலை ஐந்தரை மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பட மூலாதாரம்,IMD இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் என்றும் டிசம்பர் 3-ஆம் தேதி இது புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு இந்தப் புயல், டிசம்பர் 4-ஆம் தேதியன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை வந்தடையும். பிறகு இந்தப் புயல் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டியே நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டனத்திற்கும் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னத்தின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 3, 4 தேதிகளில் தீவிர கன மழை எச்சரிக்கை இந்தப் புயலின் காரணமாக, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60கி.மீ முதல் 70கி.மீ வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது. புயலாக மாறியபின் என்ன பெயர் வைக்கப்படும்? இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது. இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo
  4. 01 DEC, 2023 | 05:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கில் உள்ள அரச தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கு அமைச்சுக்களில் பிரிவுகள் உருவாக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு பெரும்தொகை சம்பளம்,வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. அபிவிருத்திகளிலும் வேறுப்பாடுகள் இருக்கும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார ரீதியில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முக்கியமானது கைத்தொழில்துறை.ஆனால் எமது நாட்டில் இறக்குமதிப் பொருட்களையே நம்புவதால் கைத்தொழில்துறை ஆரோக்கியமான நிலையில் இல்லை. அதனால் கைத்தொழித்துறை வீழ்ச்சியடைந்து செல்கின்றது. தென்பகுதியிலுள்ள கைத்தொழில் துறைகளில் மட்டும் அமைச்சர்கள் அதிக அக்கறை எடுத்து முன்னேற்றுகின்றனர். எனவே விடயத்துடன் சமபந்தப்பட்ட அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணவீர மற்றும் சாமர சம்பத் ஆகியோர் வடக்கு மாகாணம் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமான கைத்தொழில் துறைகள் இருந்தன. இப்போது அனைத்தும் செயலிழந்துள்ளன. குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலையிலிருந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, நீர்வேலி கண்ணாடித்தொழிற்சாலை என்று அலுமினியத்திலிருந்து தேங்காய் எண்ணெய்த் தொழிற்சாலை, ஓட்டுத்தொழிற்சாலை வரை பல தொழிற்சாலைகள் இருந்தன. ஆனால் இன்று இவை இல்லை. வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் முடிந்த 14 வருடங்களாகி விட்டபோதும் இவ்வாறான தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த வித நடவடிக்கைகளையும் காண முடியவில்லை. இது ஓரவஞ்சனை காட்டப்படுகிறது . உப்பளம் தொழிற்சாலை மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க நாம் பலமுறை கேட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இவற்றை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைவாய்ப்பு அவசியம். இவற்றுக்கு அரசிடம் நிதி இல்லை என்றால் முதலிடுவதற்கு வடக்கு,கிழக்கில் உள்ள பலர் தயாராகவுள்ளனர். ஆனால் இதுதொடர்பில் அரசிற்கு அக்கறை இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அரச தொழிற்சாலைகள் இல்லை ஆனால் அதன் தலைமையகங்கள் மட்டும் உள்ளன. அமைச்சுகளிலும் அதற்கான பிரிவு உள்ளது. உதாரணமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இல்லை. ஆனால் அதன் தலைமையகம் உள்ளது. பரந்தன் இரசாயன தொழிற்சாலை நிலையும் அதுதான் தொழிற்சாலையில்லை .ஆனால் அதற்கு அமைச்சில் ஒரு பிரிவு உள்ளது. ஒரு தலைவர் இருக்கின்றார் . அவருக்கான வாகனம் வழங்கப்படுகின்றது. வடக்கு,கிழக்கில் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது என்ற பெயரில் அரசியல் ரீதியாக தலைவர் நியமிக்கப்படுகின்றார். ஆளணி உள்ளது. அவர்களுக்கு சம்பளம், வாகன வசதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொழிற்சாலைகளும் இல்லை. அவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளும் இல்லை. இதனால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகின்றது. அதிலும் வடக்கு, கிழக்கு என்ற பெயரில் வீணடிக்கப்படுகின்றது. இதேவேளை இவ்வாறான அரச தொழிற்சாலைகளை மீண்டும் வடக்கு,கிழக்கில் தொடங்காமல் இருக்க இவர்களுக்கு வேறுதரப்புக்களினால் பெருமளவு பணம் வழங்கப்படுவதாகவும் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை இல்லது செய்ய வேண்டுமானால் மீண்டும் அந்த தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலீட்டாளர்கள் தேவை தேவை என்றால் அவர்களை வழங்க நாம் தயார். அவ்வாறு ஆரம்பிக்கப்போவதில்லை என்றால் அவற்றுக்காக அமைச்சுக்களில் உள்ள அலுவலகங்களை மூடிவிட்டு அதன் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு அந்த பணத்தை வேறு நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/170745
  5. ஆஸ்திரேலிய வீரர்கள் 'தண்ணி' காட்டியபோது இந்திய வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் ஆகியோரின் கட்டுக்கோப்பான சுழற்பந்துவீச்சு, ரிங்கு சிங்கின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக வென்றது. ராய்பூரில் நேற்று நடந்த 4-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. இதன் மூலம்5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று டி20 தொடரை சூர்யகுமார் தலைமை முதல்முறையாக கைப்பற்றியது. இந்த நம்பிக்கையுடன் வரும் 10ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று நம்பலாம். நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுழற்பந்து வீச்சுக்கான வெற்றி இந்த ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த 175 ரன்கள் என்ற ஸ்கோர் எளிதாக சேஸிங் செய்யக்கூடியது என்றாலும், இந்திய அணியின் பிஷ்னோய், அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சுக்கு முன் ஆஸ்திரேலிய பேட்டர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அக்ஸர், பிஷ்னோய் இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடுப்பகுதி ஓவர்களில் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்டை இழுத்துப்பிடித்து பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர். அதிலும் டிராவிஸ் ஹெட் தொடக்கத்தில் தீபக் சஹர் பந்துவீச்சை துவைத்து எடுத்த நிலையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நினைவுக்கு வந்தது. ஆனால், அடுத்த ஓவரில் அக்ஸர் படேல் வீசிய பந்தில் ஹெட் ஆட்டமிழந்தபின்புதான் ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. மெக்டார்மார்ட், ஹார்டி என நடுவரிசை பேட்டர்களின் விக்கெட்டுகளையும் அக்ஸர் எடுத்துக் கொடுத்து ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியில் தள்ளினார். ரவி பிஷ்னோய் தனது லெக் ஸ்பின் மூலம் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். தொடக்கத்திலேயே பிலிப் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த பிஸ்னோய்க்கு அடுத்து விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணி தனது 175 ரன்களை டிபெண்ட் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பிஸ்னோய், அக்ஸர் படேல் மட்டும்தான். இவர்கள் வீசிய 8 ஓவர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தலைவலியாக மாறி ரன்ரேட்டையும் குறைத்தது, விக்கெட்டுகளையும் இழக்கச் செய்து தோல்விக் குழியில் தள்ளியது. பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் கேப்டன்சி எப்படி? சூர்யகுமார் யாதவ் எவ்வாறு அணியை வழிநடத்தப் போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், முதலிரு ஆட்டங்களில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் மூலம் பெரிய ஸ்கோரை அடித்து வெற்றியை சூர்யகுமார் தலைமைக்கு எளிதாக்கினர். ஆனால், 3-வது ஆட்டத்தில் மேக்ஸ்வெலின் ஆட்டம் இந்திய அணியை சுயபரிசோதனைக்கு ஆளாக்கியது. இந்த ஆட்டத்தில் 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கிய சூர்யகுமார், அருமையாக பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்தார். ஆஸ்திரேலிய பேட்டர்கள் பெரிய ஷாட்களை அடிக்கத் தொடங்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியபோது, தொடர்ந்து நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்து, கடந்த போட்டிகளில் செய்த தவறை சூர்யகுமார் திருத்திக்கொண்டார். 5 தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணிக்கு 5 தொடக்க ஆட்டக்காரர்கள் கிடைத்துள்ளனர். இவர்களை எப்படிஅடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்தியஅ ணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. யாஹஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகிய 5 தொடக்க வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ரோஹித் சர்மா, கில் ஏற்கெனவே அணியில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மற்ற 3 பேரையும் எவ்வாறு சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கு தயார் செய்யப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. ஆடுகளம் பேட்டர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காதது என்பதால், அதைப் புரிந்து கொண்டு ரிங்கு சிங் மட்டுமே ஓரளவுக்கு அதிரடியாக பேட் செய்தார். இந்த ஆட்டத்தில் ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா இருவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே 150 கடந்திருந்தது. மற்ற இந்திய பேட்டர்கள் யாரும் ஸ்ட்ரைக் உயரும்வகையில் பேட் செய்ய முடியவில்லை. குறிப்பாக கெய்க்வாட், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஆகியோர் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட்டிங் இருந்தது. ஜெய்ஸ்வால் வழக்கம்போல் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் பவர்ப்ளேவுக்கு அடுத்து அவரால் தனது ஆட்டத்தை நீட்டிக்க முடியாதது ஏமாற்றமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES அனுபவமில்லாத ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிலிய அணியில் உலகக் கோப்பையில் ஆடிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் தவிர அனைத்து வீரர்களும் புதியவர்கள்தான், அனுபவம் இல்லாதவர்கள்தான். இந்தியாவில் உள்ள ஸ்லோ-பிட்சுகளில் பந்துவீசியும், பேட் செய்தும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் வெற்றி இந்திய அணிக்கு எளிதாகியது. மேக்ஸ்வெல், வார்னர், கம்மின்ஸ், ஹேசல்வுட், போன்ற டி20 ஸ்பெசலிஸ்ட்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா களமிறங்கியது வலுவில்லாத அணியாகவே காணப்பட்டது. இந்த டி20 தொடரும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பெரிய அனுபவமாகவும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயிற்சிப் பட்டறையாகவும் இருக்கும். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மேக்ஸ்வெல், ரிச்சார்ட்ஸன், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்குப் பதிலாக கிரிஸ் கிரீன், மெக்டார்மார்ட், வார்ஷிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக ரித்தேஷ் ஷர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக தீபக் சஹரும்,திலக் வர்மாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸும் சேர்க்கப்பட்டிருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பவர்ப்ளேக்கு மேல் தாங்காத ஜெய்ஸ்வால் இந்திய அணியில் வழக்கம் போல் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ஹார்டி வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் எந்த ரன்னும் அடிக்க முடியாததையடுத்து, மெய்டன் ஓவராக மாறியது. ஜெய்ஸ்வாலின் பலம் தெரிந்து ஆப்சை, மிட்ஆப், மிட்விக்கெட், கவர் திசையில் வலுவாக பீல்டிங் நிறுத்தியதால் ரன் ஏதும் கிடைக்கவில்லை. பெஹரன்டார்ப் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட ஜெய்ஸ்வால் 11 ரன்கள் வார்ஷூஸ் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் ரன்ரேட்டை உயர்த்தினார். 5-ஆவது ஓவரே ஆஸ்திரேலிய அணியின் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் கிரிஸ் கிரீன் வீசினார். கிரீன் ஓவரை வெளுத்துவாங்கிய ஜெய்ஸ்வால் பாயின்ட் திசையில் பவுண்டரியும், மிட்விக்கெட்டில் சிக்ஸரும் என 14ரன்கள் சேர்த்தார். ஹார்டி வீசிய 6-வது ஓவரின் ஜெய்ஸ்வால் தூக்கி அடிக்க மிட்ஆன் திசையில் மெக்டார்மார்ட்டிடம் கேட்சாகியது. ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்ரேயாஸ், சூர்யகுமார் ஏமாற்றம் அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். தன்வீர் சங்கா வீசிய 7-வது ஓவரில் லாங்-ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்டு கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யகுமார் ஒரு ரன் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. திணறிய கெய்க்வாட் 4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் இணைந்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சுக்கு கெய்க்வாட் தடுமாறியது நன்றாகத் தெரிந்தது. கிரீன் வீசிய 11-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 12-வது ஓவரை மேத்யூ ஷார்ட் வீசினார். வார்ஷூஸ் 13வது ஓவரை வீசினார். ஏற்கெனவே இவரின் ஓவரை ஜெய்ஸ்வால் குறிவைத்தநிலையில் கெய்க்வாட், ரிங்கு சிங் வெளுத்து வாங்கினர். கெய்க்வாட் மிட்ஆன் திசையில் பவுண்டரி அடிக்க, ரிங்கு சிங் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி14ரன்கள் சேர்த்தனர். 14-வது தன்வீர் சங்கா வீசினார். முதல் பந்தைச் சந்தித்த கெய்க்வாட் ஷார்ட் தேர்ட் திசையில் பவுண்டரி விளாசி, 2வது பந்தையும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முற்பட்டார். ஆனால், தேர்டு மேன் திசையில் வார்ஷூயஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், கெய்க்வாட் கூட்டணி 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து ஜிதேஷ் ஷர்மா களமிறங்கி, ரிங்குசிங்குடன் சேர்ந்தார். கிரீன் வீசிய 15-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2-வது பந்தில் ஸ்வீப்ஷாட்டில் ஜிதேஷ் ஷர்மா மிட்விக்கெட் திசையில் சிக்ஸரும், 4-வது பந்தில் லாங்-ஆன் திசையில் ஒரு சிக்ஸரும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES தண்ணி காட்டிய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள் கிரீன் தனது சுழற்பந்துவீச்சு வேகத்தை குறைக்காமல் 90 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசினார். இதனால் பேட்டரின் பேட்டருக்கு நேராக பந்துவந்ததால் வெளுத்து வாங்கினார். சிறிது வேகத்தை கிரீன் குறைத்து 80 கி.மீக்குள் வீசினால் நிச்சயமாக பெரிய ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்திருக்கும். 15-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை தன்வீர் சங்கா அற்புதமாக வீசினார், எந்தப் பந்தையும் பெரிய ஷாட்களுக்கு இந்திய பேட்டர்களைச் செல்லவிடாமல் தண்ணிகாட்டினார். இதனால் 16-வது ஓவரில் இந்திய அணி வெறும் 5 ரன்களே சேர்த்தது. 17-வது ஓவரை ஆரோன் ஹார்டி வீசினார். ஏற்கெனவே தொடக்கத்தில் சிறப்பாக வீசிய ஹார்டி இந்த ஓவரையும் கட்டுக்கோப்பாக வீசி இந்திய பேட்டர்களை திணறடிக்க முயன்றார். ஆனால், பொறுமையிழந்த ரிங்கு சிங், ஸ்குயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி விளாச, கடைசிப்பந்தில், ஜிதேஷ் ஷர்மா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெத் ஓவர்களில் இந்தியா பேட்டிங் மோசம் பெஹரன்டார்ப் 18-வது ஓவரை வீசினார். முதல் பந்தை ரிங்கு சிங் ஸ்வீப் ஆட முயன்றபோது, பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றது. 2வது பந்தை லெக் திசையில் ரிங்கு பவுண்டரி்க்கு விரட்டி 14 ரன்களை இருவரும் சேர்த்தனர். வார்ஷஸ் வீசிய 19-வது ஓவரை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்டார். 2வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி அடித்த ஜிதேஷ், 4-வது பந்தை தூக்கி அடிக்க 34 ரன்னில் லாங்-ஆன் திசையில் டிராவிஸ் ஹெட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு அக்ஸர் படேல்வந்து ரிங்குவுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் லாங்-ஆன் திசையில் ஷாட் அடிக்கமுற்பட்ட, அக்ஸர் படேல் தன்வீர் சங்காவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய வார்ஷஸ் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அருமையான டெத் ஓவராக மாற்றினார். 6-வது விக்கெட்டுக்கு தீபக் சஹர் களமிறங்கினார். கடைசி ஓவரை பெஹரன்டார்ப் வீச முதல் பந்தில் கால்காப்பில் வாங்கிய ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார். 3-வது பந்தில் தீபக் சஹர் லாங்ஆன் திசையில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். கடைசிப் பந்தில் ரவி பிஸ்னோய் ரன் எடுக்க முற்பட்டு 4 ரன்கள் சேர்த்தநிலையில் ரன் அவுட் ஆகினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ரன்களுக்கு 5 விக்கெட் 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி கடைசி 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 167 ரன்கள்வரை 4 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்த இந்திய அணி 179 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்களில் 79 ரன்களைச் சேர்த்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரோன் ஹார்டி, ஹெரன்டார்ப், தன்வீர் சங்கா 3 பேருமே சிறப்பாக, கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இந்த மூவருமே இந்திய அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுகப்பிடித்தனர். டிராவிஸ் அதிரடி ஆட்டம் 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் ஆட்டத்தைத் தொடங்கினர். தீபக் சஹர் வீசிய முதல் ஓவரில் திணறிய ஹெட், பிலிப் பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தனர். முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் பிலிப் ஒருபவுண்டரியும், ஹெட் ஒருபவுண்டரியும் என 11 ரன்கள் சேர்த்தனர். தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரை டிராவிஸ் ஹெட் வெளுத்து வாங்கினார். 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசி சஹருக்கு நெருக்கடி கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிஷ்னோய், அக்ஸர் கலக்கல் 4-வது ஓவரை வீச பிஸ்னோய் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பிலிப் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து மெக்டர்மார்ட் களமிறங்கினார். இந்த ஓவரில் பிஸ்னோய் நெருக்கடி அளிக்கும் விதத்தில் பந்துவீச ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 5-வது ஓவரை வீச அக்ஸர் படேல் வந்தார். அஸ்கர் ஓவருக்கு தொடக்கத்திலிருந்து திணறிய டிராவிஸ் ஹெட், ஸ்வீப் ஷாட்டில் முகேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆரோன் ஹார்டே களமிறங்கினார். இந்த ஓவரில் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது. 7-வது ஓவரை அக்ஸர் வீசினார். 2-வது பந்தில் க்ளீன் போல்டாகி ஹார்டே 8ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரிலும் அக்ஸர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு ஓவர்களில் பிஸ்னோய், படேல் இருவரும் சேர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி அளித்தனர். அடுத்து டிம் டேவிட், மெக்டார்மார்ட் ஜோடி சேர்ந்தனர்.ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஓவரை இருவரும் நிதானமாக கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் சேர்த்தது. 60 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட் உயர்ந்து கொண்டே வந்ததால், பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்க வேண்டிய நிர்பந்தம் மெக்டார்மார்ட், டேவிட்டுக்கு ஏற்பட்டது. 12-வது ஓவரை அக்ஸர் படேல் வீசினார். முதல் பந்தில் மெக்டார்மார்ட் பவுண்டரி அடிக்க, 2வது பந்தையும் அக்ராஸ் லைனில் பவுண்டரி அடிக்க முயன்று க்ளீன் போல்டாகினார். மெக்டார்மார்ட் 19 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேத்யூ ஷார்ட் களமிறங்கினார். 12-வது ஓவரை கட்டுக்கோப்பாக அக்ஸர் படேல் வீசியதால், ஆஸ்திரேலிய அணிக்கு 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 48 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரன் சேர்க்க திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஒரு ரன் மட்டுமே எடுத்தனர். முகேஷ் குமார் வீசிய 14வது ஓவரை குறிவைத்த மேத்யூ ஷார்ட் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் சேர்த்தார். தீபக் சஹர் வீசிய 15-வது ஓவரை குறிவைத்த ஷார்ட் ஒரு சிக்ஸர் விளாசி 3வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை டேவிட்டிடம் கொடுத்தார். 4-வது பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்க, ஜெய்ஸ்வால் கேட்ச் பிடிக்கவே 19 ரன்னில் டேவிட் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES திணறிய ஆஸ்திரேலிய பேட்டர்கள் 30 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார், மேத்யூஷார்ட், வேட் இருவரும் இந்த ஓவரை குறிவைத்தனர், இதில் முகேஷ் குமார் நோபால் வீசவே, சிக்ஸர் உள்பட 14ரன்கள் சேர்த்தனர். 24 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை தீபக் சஹர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஹர் ஸ்லோ பவுன்ஸராக வீசவே, மேத்யூ ஷார்ட் தூக்கி அடிக்கவே டீப் மிட்விக்கெட்டில் ஜெய்ஸ்வாலிடம் கேட்சானது. ஷார்ட்22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்ஷஸ் களமிறங்கி, கேப்டன் மேத்யூ வேட்டிடம் சேர்ந்தார். 18 பந்துகளில் ஆஸ்திரேலிய வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் சேர்க்க முடிந்தது. 12 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை முகேஷ் குமார் கட்டுக்கோப்பாக வீசியதால், 9 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்த்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் பந்துவீச்சில் மேத்யூ வேட் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 20ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணித் தரப்பில் அக்ஸர் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும், பிஸ்னோய்ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் கூறியது என்ன? வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவு பேசும்போது, “டாஸ் தவிர மற்ற அனைத்தும் நாங்கள் நினைத்தபடியே நடந்தன” என்று கூறிச் சிரித்தார். “வெற்றி பெரும் ஊக்கமாக இருந்தது, குறிப்பாக சிறுவர்கள் குணம் காட்டிய விதம். எல்லோரும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதைத்தான் நான் அவர்களிடம் சொன்னேன். பயப்படாமல் இருங்கள், உங்கள் விளையாட்டை விளையாடுங்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஸ்டம்ப்களில் யார்க்கர்களை வீசுவது என்ற எங்களின் திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அங்கிருந்து தொடங்குவோம். அது நடக்கவில்லை என்றால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினேன்.” என்றார் சூர்ய குமார். https://www.bbc.com/tamil/articles/cx91114qyrxo
  6. 02 DEC, 2023 | 06:51 AM நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக திருகோணமலையிலிருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சக்திமிக்க தாழ்அமுக்கமாக மாற்றமடைவதுடன் நாளையளவில் மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையும். இந்த சூறாவளியானது இலங்கையின் வட கரையை அண்மித்ததாக வடமேற்குத் திசையினூடாக எதிர்வரும் 5 ஆம் திகதியளவில் இந்தியாவின் தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையினால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே இக் கடல் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். காலி தொடக்கம் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்பாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/170769
  7. பட மூலாதாரம்,INSTAGRAM/@SRINITHYANANDA 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு நித்யானந்தா பற்றிய அறிமுகம் தேவையில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தா தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட தேடியும் கிடைக்காத ஒரு நாடான 'கைலாசா'வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக பாராகுவே நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பராகுவே விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சின் தலைமைப் பணியாளர் அர்னால்டோ சாமோரோ இந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த அறிக்கையில், கைலாசாவுடன் வெளியுறவை மேற்கொள்ள பாராகுவே அரசாங்கம் மிகவும் விருப்பத்தோடு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் அந்த அறிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளில் கைலாசாவை ஒரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாடாக அனுமதிப்பதை பாராகுவே ஆதரிக்கிறது," என்றும் அவர் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,INSTAGRAM/@SRINITHYANANDA அக்டோபர் 16, 2023 தேதியிட்ட அந்த அறிக்கையில், “இரண்டு கோடி இந்துக்களின் மத மற்றும் ஆன்மீகத் தேவைகளுக்கு சேவை செய்ய நிறுவப்பட்ட அறிவொளி பெற்ற இந்து நாகரிகத்தின் தேசம்தான் கைலாசா," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராகுவேவின் உள்ளூர் வானொலியான ஏபிசி கார்டினல் இந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரி சமோரோவை நேர்காணல் செய்தபோது, கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்றே தனக்கு தெரியாது என அவர் ஒப்புக்கொண்டார். மேலும், "கைலாசாவைச் சேர்ந்தவர்கள் பராகுவேக்கு உதவ தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் விவசாயத்துறைக்கு பல உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கள் உதவியை வழங்க வந்தனர். நாங்கள் அவர்களுக்குச் செவிசாய்த்தோம் அவ்வளவுதான் நடந்தது," என்று அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியைக் கேட்டதும், வேளாண்மை மற்றும் கால்நடை அமைச்சகம் கூறுகையில், "சம்பந்தப்பட்ட அறிக்கையை அதிகாரப்பூர்வ ஆவணமாகக் கருத முடியாது. ஏனெனில் அதற்கான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை,” என தெரிவிக்கப்பட்டது. சாமோரோ 'எந்த அனுமதியும் இல்லாமல்' செயல்பட்டதாகவும், அவ்வாறு செய்வதற்கான 'அதிகாரம்' அவரிடம் இல்லை என்றும் அமைச்சகம் கூறியது. பட மூலாதாரம்,INSTAGRAM/@SRINITHYANANDA ஐ.நா.விற்குள் கைலாசாவின் பிரதிநிதிகள் ஊடுருவியது எப்படி? கைலாசாவின் பிரதிநிதிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஐ.நா. அமைப்பின் இரண்டு விவாத அமர்வுகளில் பங்கேற்றனர். ஐ.நா.வின் இரண்டு அமைப்புகளில் ஒரு கற்பனை நாடான கைலாசா பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தங்களது கூட்டங்களில் கைலாசாவின் பிரதிநிதிகள் பேசியதை நீக்க வேண்டிய சூழலுக்கு ஐ.நா தள்ளப்பட்டது. ஐ.நா.வில் கைலாசா பங்கேற்றது இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பிப்ரவரி 22 அன்று ஏற்பாடு செய்திருந்த ஐ.நா நிகழ்வுதான் கைலாசாவின் பிரதிநிதிகள் ஊடுருவிய முதல் சம்பவம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவால் (CESCR) ஏற்பாடு செய்யப்பட்ட நிலையான வளர்ச்சி பற்றிய விவாதத்தில் கைலாசாவின் தூதர்களாகக் கூறப்படும் நபர்கள் பங்கேற்றனர். இரண்டாவது அமர்வு பற்றிய ஐ.நா இணையதளத்தில் உள்ள காணொளியில், பங்கேற்பாளர்கள் கேள்விகளைக் கேட்க அழைக்கும் போது, விஜயப்ரியா நித்யானந்தா என்ற பெண் 'கைலாசத்தின் நிரந்தர அமெரிக்கத் தூதர்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பூர்வீக உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி பற்றி கேட்க விரும்புவதாக அந்தக் கூட்டத்தில் அவர் கூறினார். பட மூலாதாரம்,SCREENSHOT/UNITED NATIONS அந்தப் பெண் கைலாசவை 'இந்து மதத்தின் உச்சபட்ச தலைவரான' நித்யானந்தா நிறுவிய 'இந்துக்களுக்கான முதல் இறையாண்மை அரசு' என்று விவரித்தார். அதன் குடிமக்கள் அனைவருக்கும் உணவு, வீடு மற்றும் சுகாதாரம் போன்ற தேவைகளை இலவசமாக வழங்கியதால், கைலாசா நாடு 'நிலையான வளர்ச்சியில் வெற்றியடைந்துள்ளது' என்றும் அவர் கூறினார். கைலாசாவின் தூதுவர் என்று அழைக்கப்படும் அந்தப் பெண் நித்யானந்தா மற்றும் கைலாச மக்களுக்கு எதிரான 'துன்புறுத்தலை நிறுத்த' நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் ஊடக அதிகாரியான விவியன் குவோக் கூறுகையில், இந்த வகையான கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் என்றும் ஆர்வமுள்ள எந்த நபரும் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்தார். ஐ.நா 193 உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இருந்தாலும், சில நேரங்களில் சொந்தமாக தங்களுக்கென நாடு இல்லாத சிலரையும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் ஐ.நா அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு பாலத்தீனத்தின் சில பகுதியைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது போல. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் நெறிமுறைகளின் கண்டிப்புத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வாக கைலாசா பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்வு பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கைலாசத்தை வழிநடத்தும் இந்த நித்யானந்தா யார்? பரமஹம்ச நித்யானந்தா அல்லது வெறுமனே நித்யானந்தா என்றும் அழைக்கப்படும் நித்யானந்த பரமசிவத்திற்கு 45 வயதாகிறது. அவர் தனது ஆசிரமத்தை 2003-இல் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு அருகிலுள்ள பிடதி என்ற நகரத்தில் நிறுவினார். சிறிது காலத்திற்குப் பிறகு, அது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் லைஃப் ப்லிஸ் (Life Bliss) அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு கிளையைத் திறந்தது. 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்ததாக நித்யானந்தா மீது அவரது சீடர் ஒருவர் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது 2018-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளைக் கடத்தி அடைத்து வைத்ததாக மற்றொரு புகார் போலீஸில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் 2019-இல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். அவர் எப்படி அல்லது எங்கு தப்பினார் என்பது அப்போது தெளிவாகத் தெரியவில்லை. அதே ஆண்டில் அவர் ஈக்வடார் கடற்கரையில் ஒரு தீவை வாங்கியதாகவும், இந்துக் கடவுளான சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் இமயமலையில் உள்ள ஒரு மலையின் பெயரான கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை நிறுவியதாகவும் நித்யானந்தாவே கூறினார். ஆனால், அப்போது நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்தது. மேலும், நித்யானந்தாவிற்கு தாங்கள் அடைக்கலம் தரவில்லை என்றும் தங்களது அரசு அவருக்கு உதவவில்லை என்றும் ஈக்வடார் அரசு தெரிவித்தது. தங்களுக்கென்று ஒரு கொடி, அரசியலமைப்பு, மத்திய வங்கி, பாஸ்போர்ட் மற்றும் தேசிய சின்னம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கைலாசா கூறுகிறது. நித்யானந்தா 2019 முதல் பொது வெளியில் தோன்றவில்லை, இருப்பினும் அவரது பிரசங்கங்களின் வீடியோக்கள் அவ்வப்போது அவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இரண்டு கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் நித்யானந்தாவின் இங்கிலாந்து பிரதிநிதி 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடந்த ஒரு கவர்ச்சியான தீபாவளி விருந்தில்' கலந்துகொண்டதாக கார்டியன் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டது. https://www.bbc.com/tamil/articles/c88dd4x3g16o
  8. போர்நிறுத்தம் முடிந்து இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் மீண்டும் துவக்கம் - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏழு நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்து இன்று (வெள்ளி, டிசம்பர் 1) மீண்டும் போர் துவங்கியிருக்கிறது. தெற்கு காஸாவிலிருந்து மக்களை வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியிருக்கிறது. பொர்நிறுத்தம் முறியடிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய ராணுவம் மற்றும் ஹமாஸ் இருதரப்பும் பரஸ்பரக் குற்றம் சாட்டிக்கொள்கின்றன. ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. அதேசமயம் காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் ஏவப்பட்டிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸின் சுகாதார அமைச்சகம், வெள்ளிக்கிழமை 32 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரேல் என்ன சொல்கிறது? வெள்ளிக்கிழமை எக்ஸ் சமூக வலைதளத்தில் இடப்பட்ட ஒரு பதிவில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் மீண்டும் போரைத் துவங்குவதாகத் தெரிவித்திருந்தது. அப்பதிவில், ஹமாஸ் போர்நிறுத்த உடன்பாட்டை மீறிவிட்டதாகவும் அதனால் போர் மீண்டும் துவங்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் மெலதிக பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளவில்லை எனவும், அது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகவும் தெரிவித்தார். “ஹமாஸ் அனைத்து பெண் பணயக்கைதிகளையும் விடுவிக்கவில்லை, மேலும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது,” என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் ஒப்புக்கொண்டபடி அனைத்து பெண் மற்றும் குழந்தைப் பணயக்கைதிகளை விடுவிக்கவில்லை என்று கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து காஸாவிலிருந்து வெளியேறும் பாலத்தீனர்கள் ஹமாஸ் தரப்பு என்ன சொல்கிறது? அதே சமயம், பொர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு நெருக்கமாக இருந்த ஒருவர், பிபிசியிடம், இஸ்ரேல் வடக்கு காஸாவிற்கு வரும் எரிபொருளை முடக்கியதுதான் போர்நிறுத்தம் முறிந்ததற்குக் காரணம் என்று ஹமாஸ் கூறியதாகத் தெரிவித்தார். மேலும், ஹமாஸ் பணயக்கைதிகளாகப் பிடித்த இஸ்ரேலிய ஆண்களை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடன்பாட்டின்படி விடுவிக்க மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொஎருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பப்ட வய்ப்புள்ளது மனிதாபிமானச் சிக்கல் குறித்த அச்சங்கள் போர் மீண்டும் துவங்கப்பட்டது காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மீண்டும் மோசமாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உணவு, தண்ணீர், மற்றும் மருந்துப் பொஎருட்களுக்கான கடுமையான பற்றாக்குறை ஏற்பப்ட வய்ப்புள்ளது. ஏழு நாள் இடைக்காலப் போர்நிறுத்ததால், காஸாவுக்குள் உதவிகளை எடுத்துச் செல்லும் டிரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தது. ஆனால் காஸாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை என்று ஐ.நா. கூறியிருந்தது. https://www.bbc.com/tamil/articles/c9r660p15eqo
  9. 01 DEC, 2023 | 04:52 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்காக சாருஜன் சண்முகநாதன் விளையாடியிருந்தார். விக்கெட்காப்பாளரான இவர் , இடதுகை துடுப்பாட்ட வீரரரும் ஆவார். ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் குழு ஏயில் இலங்கை, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், குழு பீயில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இலங்கை அணி இம்மாதம் 9 ஆம் திகதியன்று ஜப்பான் அணியையும், 11 ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியையும், 13 ஆம் திகதியன்று பங்களா‍ேதேஷ் அணியையும் எதிரத்து விளையாடவுள்ளது. இலங்கை குழாம் விபரம் சினெத் ஜயவர்தன( அணித்தலைவர்) மல்ஷ தருபதி (உப அணித்தலைவர்) , புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத்த, விஷேன் எலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புருபண்டார, தினுக்க தென்னகோன். மேலதிக வீரர்கள் - ஜனித் பெர்னாடோ, சுப்புன் வடுகே. https://www.virakesari.lk/article/170744
  10. 01 DEC, 2023 | 03:30 PM ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2024 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான ஆபிரிக்கப் பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது உகாண்டா அணி. முதலில் துடுப்பெடுத்தாடிய ருவாண்டாவை 65 ரன்களுக்குச் சுருட்டிய உகாண்டா, வெற்றி இலக்கை 8.1 ஓவர்களில் அடைந்தது. ருவாண்டாவை வீழ்த்தியதன் மூலம் உகாண்டா அணி முதன்முறையாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக நமீபிய அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இருந்து 2 ஆவது அணியாக உகாண்டா தகுதி பெற்றுள்ளது. உகாண்டா அணி தகுதி பெற்றதை தொடர்ந்து, சிம்பாப்வே அணியின் கனவு தகர்ந்தது. 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, தனது கடைசி ஆட்டத்தில் கென்ய அணியை வீழ்த்தினாலும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணபோட்டிக்கு தகுதி பெற்ற நமீபியா, உகாண்டா அணிகளிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது. 2019, 2023 ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளுக்குத் தகுதி பெறாத சிம்பாப்வே அணி, தற்போது 2024 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170737
  11. இல்லை அண்ணா. எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்களிடம் வசூல் செய்யலாமோ என்று அரசு சிந்திக்கிறது.
  12. சீனாவில் குழந்தைகளிடம் பரவும் புதிய நோய் - இந்தியாவுக்கு என்ன ஆபத்து? பட மூலாதாரம்,GETTY IMAGES/NATEE127 படக்குறிப்பு, சீனாவில் பரவி வரும் புதிய தொற்று கட்டுரை தகவல் எழுதியவர், சுசிலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கோவிட் தொற்று உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்தது. இந்நிலையில் தற்போது வடசீனப்பகுதியில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா கவலைதரும் விஷயமாக மாறியுள்ளது. சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவிலான நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்களும் தெரிவிக்கின்றன. சீனாவில் கோவிட் தொற்றுக்காக போடப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடு நீக்கம் மற்றும் சமீபத்தில் தொடங்கிய குளிர்காலம் ஆகியவையும் இந்த புதிய சுவாச நோயோடு தொடர்பு கொண்டிருக்கலாம். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், சீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய சுவாசக்கோளாறு தொடர்புடைய பிரச்னை கோவிட் அளவிற்கு அதிகமானதாக இல்லை என்றும், சமீபத்தில் புதிய அல்லது வழக்கத்திற்கு மாறான வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார். சீனாவில் இரண்டாண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொதுக்கட்டுப்பாடு தான் இந்த புதிய வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்க காரணம் என்று கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனரான மரியா வென். இந்த கட்டுப்பாடு குழந்தைகளை குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலில் இருந்து தள்ளி வைத்திருந்ததாக கூறுகிறார் அவர். “பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த இதன் தாக்கத்தையும், தற்போது ஏற்பட்டுள்ள புதிய அலையின் தாக்கத்தையும் ஒப்பிட்டு 2018-2019 காலகட்டத்தில் இருந்தது போல் தற்போது இல்லை என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அவர். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மை ஃபெங், அதிகரித்து வரும் சுவாசக்கோளாறு சார்ந்த பிரச்சனைகள் பல்வேறு வைரஸ்களால் வருவதாகவும், குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா தான் காரணம் என்றும் கூறியுள்ளார். சீனா இந்தியாவின் அண்டை நாடாகும். இது போன்ற சூழலில் இந்திய அரசாங்கமும் இந்த நோய்தாக்குதலை தடுப்பதற்காக அதுகுறித்து ஆய்வை செய்து வருகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆய்வுக்கூட்டம் ஒன்றை சமீபத்தில் நடத்தியது மத்திய சுகாதார அமைச்சகம். நிலையை கையாள இந்திய அரசு தயாராக உள்ளதா? இந்த சுவாசக்கோளாறு நோயை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை தயாரிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் ஒன்றை சமீபத்தில் நடத்தியது மத்திய சுகாதார அமைச்சகம். இதுகுறித்து பிஐபி(PIB) வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தேவையான அளவு முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் தேவையான அளவு மருந்துகள் மற்றும் காய்ச்சல் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்சிஜன், ஆன்டிபயோட்டிக்ஸ், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், சோதனை கருவிகள், ஆக்சிஜன் ப்ளேண்டுகள் வென்டிலேட்டர்கள் மற்றும் இதர அடிப்படை உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் , அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ‘கோவிட்-19 திருத்தப்பட்ட கண்காணிப்பு உத்தியின்’ வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதில் காய்ச்சல் போன்ற நோய் (ILI) மற்றும் கடும் சுவாச நோய்கள் (SRI) ஆகியவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) நுரையீரல் & தீவிர சிகிச்சை மற்றும் தூக்க மருத்துவத்தின் தலைவர் டாக்டர் அனந்த் மோகன் பேசுகையில், உலக சுகாதார நிறுவனம் சீனாவில் இருந்து பெற்ற தகவலில் இருந்து, இது இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் பொதுவான கிருமிகள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார். “இது போன்ற நோய்கள் உயர்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதிக மருத்துவ சோதனையாக இருக்கலாம், ஆனால் இது ஒன்றும் புதிய கிருமி அல்ல” என்று கூறியுள்ளார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இது ஒரு தொற்று மற்றும் பரவும் வகை நோய். சீனாவில் இது குழந்தைகளுக்குள் பரவும் நோயா? மருத்துவர்கள் கருத்துப்படி, இது ஒரு தொற்று மற்றும் பரவும் வகை நோய். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், சுவாசம் தொடர்பான நோய்கள் தொற்றக் கூடியவை. இந்த வைரஸ் அல்லது பாக்டீரியாவின் துளிகள் இருமல், சிரித்தல், தும்மல், பேசுதல் மற்றும் பாடுதல் உள்ளிட்ட வழிகளில் மற்றவர்களுக்கும் தொற்றி கொள்ளும். இதுகுறித்து லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நுரையீரல் & தீவிர சிகிச்சை மருத்துவ துரையின் தலைவர் மருத்துவர் வேத் பிரகாஷ் கூறுகையில், “சீனாவில் கடுமையான பொதுக்கட்டுப்பாடு விலக்கப்பட்டதற்கு பின்பு வந்துள்ள முதல் குளிர்காலம் இதுதான். எனவே அங்கிருக்கும் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “தற்போது சீனாவில் புதிய வைரஸோ அல்லது பாக்டீரியாக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTYIMAGES/KATERYNA/SCIENCE படக்குறிப்பு, நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரு நுண்ணிய நோய்க்கிருமிகள் மைக்கோபிளாஸ்மா, ஆர்எஸ்வி என்றால் என்ன? இது போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் ஒரு நுண்ணிய நோய்க்கிருமிகள் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். “மைக்கோபிளாஸ்மா என்பது ஒரு பாக்டீரிய நோய்க்கிருமி. குறிப்பாக இது அதிகம் குழந்தைகளையே தாக்கும்” என்று கூறுகிறார் மருத்துவர் வேத் பிரகாஷ் RSV என்பது ஆங்கிலத்தில் Respiratory Syncytial Virus என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் வகையாகும். மருத்துவர் அனந்த் மோகன் கூற்றுப்படி, இந்த வைரஸானது மேல் சுவாச பாதை, மூக்கு மற்றும் தொண்டையை பாதித்து சளி, இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்குகிறது. மைக்கோபிளாஸ்மா, ஆர்எஸ்வி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவை மிகவும் பொதுவானவையே மற்றும் தீவிரமானதாக இல்லாதபட்சத்தில் ஆன்டிபையோட்டிக்ஸ் மூலமே இவற்றிற்க்கு சிகிச்சையளிக்கலாம். இதன் அறிகுறிகள் என்ன? இதில் தொண்டை வறட்சி, இருமல், தும்மல், அதிக காய்ச்சல் உள்ளிட்ட பல பொதுவான அறிகுறிகள் காணப்படும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். மருத்துவர்கள் கூற்றுப்படி, சிலநேரங்களில் இது தானாகவே குணமாகிவிடும். இதற்கு அலர்ஜி மருந்துகளும் கூட பரிந்துரைக்கப்படும். ஆனால், நிமோனியா பெறுக தொடங்கிவிட்டால் ஆண்டிபையோட்டிக் மருந்துகள் வழங்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய காய்ச்சலோடு கோவிட்டை தொடர்பு படுத்துவது கடினம் இந்த நோய்க்கும், கோவிட்டுக்கு பிந்தைய உடல்நிலைக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா? தற்போது சீனாவில் பரவி வரும் காய்ச்சலோடு கோவிட்டை தொடர்பு படுத்துவது கடினம் என்று கூறுகிறார் டாக்டர் அனந்த் மோகன். அவரது கூற்றுப்படி, “ கொரோனா தொற்று ஏற்படாதவர்களுக்கு நோயெதிர்ப்பு வளராமல் இருக்க வாய்ப்புள்ளது.” ஆனால் இது வெறும் கருத்து மட்டுமே , கண்டிப்பாக கொரோனா நோயெதிர்ப்பு இதர வைரஸ்கள் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு வழங்கும் என்று அர்த்தமில்லை. இப்போது காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் மற்றும் அதற்கான வழிகாட்டுதல்களும் உள்ளன. எனவே அதையும் கூட எடுத்து கொள்ளலாம். ஆனால், தடுப்பூசியே எப்போதும் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்புவது முட்டாள்தனம் என்றும் டாக்டர் அனந்த் வலியுறுத்துகிறார். அதேசமயம் டாக்டர் வேத் பிரகாஷ் மற்றொன்றையும் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அல்லது கோவிட் கூட தாக்காத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மாறி வரும் வானிலை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் காய்ச்சலுக்கு எதிரான நோயெதிர்ப்பை கொண்டிருக்க மாட்டார்கள். இந்நிலையில் இது போன்ற குறைத்திறன் கொண்ட பாக்டீரியா அல்லது வைரஸ்கள் கூட அவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறிய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாததால், அவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக கூறும் இவர், தடுப்பூசி போடாத அல்லது கோவிட் தொற்று பாதிக்காத பெரியவர்களும் இந்த பட்டியலில் வருவார்கள் என்று கூறுகிறார். அதே சமயம் இது போன்ற தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானிலை மாறும்போதெல்லாம் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு பாதிக்கப்படுகிறது. சுற்றுசூழல் மாசு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மருத்துவர்கள் கூற்றுப்படி, வானிலை மாறும்போதெல்லாம் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு பாதிக்கப்படுகிறது. உடலின் மீதான சுற்றுசூழலின் அதிகப்படியான தாக்கம் நுரையீரல், சுவாசப்பாதை ஆகியவற்றில் தான் எதிரொலிக்கிறது. எனவே அவை தொற்று நோய் உள்ளிட்டவற்றோடு போராட வேண்டியிருக்கிறது. குளிர்காலம் போன்ற வானிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் உடல் தயாராகும் நேரத்தில், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக இது போன்ற வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது இன்ஃப்ளூயன்ஸாக்கள் உடலை தாக்குகிறது. இது அலர்ஜி மற்றும் நிமோனியாவை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழல் மாசுபாடு அதிகரித்தால், பிஎம் 2.5 அல்லது பிஎம் 10 துகள்கள் உடலுக்குள் ஆழமாக சென்று நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள போகிறோம்? முகக்கவசத்தை சிறிது இடைவெளி விட்டு அணிய வேண்டும் என்றும், அதே சமயம் எப்படி அதை தவிர்ப்பது என்றும் கோவிட் சமயத்தில் பல மருத்துவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். கடந்த தசாப்தங்களில் கொடிய நோய்களான இருதய நோய், ஸ்ட்ரோக் அல்லது புற்றுநோய் போன்றவைதான் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த ஐந்து வருடத்தை பற்றி பேச வேண்டுமானால், சுவாசக்கோளாறு நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இது போன்ற சூழ்நிலையில், சுவாசம் தொடர்பான நோய்கள் வருங்காலத்தில் தொற்றுநோயாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இதை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கைகளை செய்து வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், கண்காணிப்பு அமைப்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு உத்தி, மனித வளம் மற்றும் சிறப்பு வசதிகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் அதே நேரத்தில் மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cg6p0733y05o
  13. 01 DEC, 2023 | 09:07 PM மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் ஒழுங்கு செய்தவர்களை குறிவைத்தே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே மோசமான இன அழிப்பு விளைவுகளுக்கு தடை எதுவும் இல்லாமல் தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அரசியல் பாதையில் இருந்து விலகிச் செல்ல செய்து முடிப்பதற்கான முயற்சியாக இடம்பெறுகின்றன. இதனால் பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பனர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக மாவீரர் தின நினைவேந்தலில் ஈடுபட்டு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர், அவரது மகன் உட்பட 10 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 25, 27ஆம் திகதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தினத்தில் மாவீரர்களை நினைவுகூரலாம் என அரசாங்கமே தெரிவித்துவிட்டு வடக்கு, கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிஸார் முயற்சி எடுத்தபோது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவுகூருவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேவேளை விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் நினைவேந்தலை நடத்த முடியும் என கட்டளை வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்துக்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பட்டமாக சிறி லங்காவின் மோசமான சட்டங்களுக்கு ஊடான ஒரு செயற்பாடு. இருப்பினும், இந்த கைதானது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றனவே தவிர சட்ட காரணங்களுக்காக அல்ல என்பது மிக அப்பட்டமாக தெரிகின்றது. அந்த வகையில், நாங்கள் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் சந்தித்து பேசியபோது, அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ரீதியில் மேலதிகமான சட்ட நடவடிக்கை வேண்டும் என்றனர். எனவே பொலிஸ் சட்ட ரீதியாக நடந்துகொள்கின்ற பொலிஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் மக்கள் நியாயமில்லாத சிறிலங்கா பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாமல் நடந்துகொண்ட போதும், அவர்கள் குறிவைக்கப்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியான நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அதேவேளை, நாங்கள் விளங்கிக்கொண்டு இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாமல், இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/170763
  14. Published By: VISHNU 01 DEC, 2023 | 04:54 PM பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேலினால் வெள்ளிக்கிழமை (01.12.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் வாரமும் மாவீரர் நாளும் ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய நிகழ்வாகும். அதனை வடக்கிலும், கிழக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும் வேதனைக்கு மத்தியிலும் அந்நாட்களில் எழுச்சியுடன் ஒன்று கூடி உயிர் கொடையாளர்களுக்கு சுடர் ஏற்றி நினைவஞ்சலி செய்வதோடு நின்று விடாது தமிழர்களின் தேசத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க திடசங்கட்பம் கொள்ளும் நாளும் இதுவாகும். இதனை பாரிய இனப்படுகொலைகளோடு அழிக்க நினைத்தவர்களுக்கு அது தோல்வியே என தற்போது உணர்வதால் இந்நிகழ்வுக்கு எதிரான செயற்பாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வடிவங்களில் கூட்டாக அழிப்பு வேலைகளை நடைமுறைப்படுத்த எதிர் சக்திகள் திட்டமிட்டுள்ளன என்பதை இவ்வருட சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதற்கு வடகிழக்கு தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டாக தமது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். தற்போது நாம் முகம் கொடுக்கும் சிக்கல்களை சிவப்பு சமிக்ஞையாக ஏற்காவிடின் பாரிய விலை கொடுக்கும் நிலை உருவாகும். தமிழர் தேசத்திற்கும், தேசியத்திற்கும் எதிரான சக்திகளிடம் சோரம் போன தமிழர் முகமூடி தரித்த சிலர் மேதகு தலைவரின் மக்களென ஒரு போலியை மேடையேற்றி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. "தலைவர் இருக்கிறார்". "அவர் வருவார்"..."வருவார்..." என கூறி இன்னும் ஒரு தலைமைத்துவம் உருவாகக்கூடாது என நினைத்தவர்கள் தமது முயற்சியின் அடுத்த கட்டமா போலி முகத்தை மேடையேற்றி அவமானப்பட்டுள்ளனர்.இத்தோடு அவர்கள் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஒரு பக்கம் சேனையின் பெயரால் தாயகத்தில் இயங்கும் அமைப்பு ஒன்று மாவீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர்களை அவமானப்படுத்தும் வண்ணம் முகநூலில் பதிவிட்டுள்ளது. அதன் மூலம் புதிய தலைமுறையினரின் மூளையை சலவை செய்து அரசியலில் இருந்து தூரமாக்க முயற்சிக்கின்றனர். உயிர் தியாக வரலாற்றை எம் காலத்திலேயே குழி தோண்டி புதைக்கவும் வழி செய்கின்றனர். அடுத்ததாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதுமான 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க கூட்டமாக காவடி தூக்கி கொடி பிடிக்க இன்னும் ஒரு கூட்டம் பகிரங்கமாகவே எழுந்து நிற்கின்றது. இதனையும் சதியாகவே கொள்ளல் வேண்டும். இவர்கள் தமிழ் மக்கள் பேரவை இயங்கிய காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என ஆவணம் தயாரித்து பௌத்த மகா சங்கத்திடம் தூக்கி சென்றதை மறந்துவிட்டனர் போலும். இவர்களே தமிழ் மக்கள் பேரவைக்கு வீழ்ச்சிக்கும் காரணமானவர்கள் என்பது இப்போது புலனாகின்றது. இது இவ்வாறு இருக்க இலங்கை அரசு மீண்டும் புலி உருவாக்கம் என்பதை கையில் எடுத்து இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வோடு பலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றது. மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மேலும் பலருக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றனர். இதுவும் இளைஞர் மத்தியில் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பயத்தை உருவாக்கும் செயலாகும். நினைவேந்தல் போன்ற நிகழ்வில் இருந்து சுயமாகவே விலகச் செய்வதற்கான வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறலாம். 2009ல் விடுதலை இயக்கத்தை அழிப்பதாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த இலங்கை அரசு தமிழர்களை அரசியல் ரீதியாக படுகொலை செய்வதற்கு பல்வேறு சதிகளை கூட்டு சேர்ந்து தீவிரபடுத்தி உள்ள காலகட்டத்தில் வாழ்கிறோம். இதற்கு எம்மவர்களும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சூழ்ச்சி செய்வதும் பயணிப்பதும் நீண்ட நாட்களாக தொடர்கின்றது. இத்தகையவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதுடன் எமது அடுத்த சந்ததியினரை இச் சூழ்ச்சி வலை நின்று பாதுகாத்து அரசியல் அறம் பிறழாது வாழ்வு போராட்டங்களை பாதுகாப்போடு முன்னெடுக்க வழிகாட்டும் மிகப்பெரிய பொறுப்பு விழிப்புடன் செயல்படும் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது. சுயநல அரசியலையும், சுகபோக அரசியலையும், காவடி தூக்கும் அரசியலையும் புறந்தள்ளி அரசியல் தலைமைத்துவங்கள் கூட்டாக செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். அன்று உயிருக்கு பயந்து ஒரு தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம் என போலி முகத்தோடு உறுதி பூண்ட அரசியல் தலைமைத்துவங்கள் தடம் புரண்டுள்ள இன்றைய நிலையில் தியாகத்தோடு தமிழர்களின் தேசிய அரசியலை முன்னகர்த்த அறம் சார்ந்த அரசியல் செயற்பாட்டை ராஜதந்திரத்தோடு முன்னெடுக்க அரசியல் தலைமைகளுக்கு சமூக அமைப்புக்கள் அனைத்தும் கூட்டாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170728
  15. 01 DEC, 2023 | 05:30 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது. கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது. 2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது. https://www.virakesari.lk/article/170755
  16. 01 DEC, 2023 | 05:22 PM (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில், பிற கைதிகளால் தாக்கப்பட்டே இந்த கைதி மரணமடைந்ததாக இன்று (01) வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து குறித்த நபர் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (28) சுகயீனமுற்றிருந்த காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டதன் பிரகாரம், சடலம் நேற்று (30) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவ்வேளை, குறித்த கைதி மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழக்க நேரிட்டதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டதாகவும், அதனால் அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/170756
  17. இல்லையண்ணா சீனியர் சிட்டிசன் வட்டி வீதம் அதிகரித்ததோடு நிறுத்திவிட்டார்கள். தற்போது வட்டி வீதம் 9-10 வீதமாக குறைத்துவிட்டார்கள்.
  18. இது with holding tax என்று வங்கியால் எடுக்கப்படுகிறது. 1 லட்சம் ரூபா வங்கி வட்டி வரும்போது 5000 ரூபாவைக் கழித்து 95000 ரூபாவை வங்கி தரும்(மீற்றர் வட்டி). இது வருடத்திற்கு நூற்றுக்கு 60 வீதமாக இருக்கும் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட 142000 ரூபாவை வருமானமாக/சம்பளமாகப் பெறும் ஒருவர் இதற்கான வருமான வரியாக 2500 ரூபாவை செலுத்த வேண்டும். வருமானம் கூடகூட வரி விதிப்பும் கூடும்.
  19. 01 DEC, 2023 | 03:00 PM இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான 'அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் 2023' நிகழ்வினை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவஞானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பாலின் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாண்டு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட தகுதியான 321 மாணவர்களுக்கு பாகிஸ்தானின் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன், இலங்கையின் திறமையான 357 மாணவர்கள் ஏற்கனவே இப்புலமைப்பரிசிலின் ஊடாக இளமாணி, முதுமாணி மற்றும் கலாநிதி மட்டத்தில் தமது உயர் கல்வியினை பாகிஸ்தானில் பயின்று வருகின்றனர். மேலும், அடுத்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2024 பெப்ரவரியில் கோரப்படும். இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி உரையாற்றும்போது, பாகிஸ்தான்,-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு காணப்படுவதாகவும், பாகிஸ்தானில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானியர்களின் விசேட விருந்தினர்கள் என்றும், இம்மாணவர்கள் சிறப்பான முறையில் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியினை வெற்றிகரமாக முடித்து, இலங்கைக்கு திரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் பாகிஸ்தானின் தூதுவர்களாக பாகிஸ்தான் கருதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கும் நிகழ்வின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றுகையில், பல்வேறு துறைகளில் அல்லாமா இக்பால் புலமைப்பரிசினை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், இதுபோன்ற பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை வளர்க்க எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் தலைமைப் பணிப்பாளர் ஆயிஷா இக்ராம் தனது உரையில், இப்புலமைப்பரிசிலின் குறிக்கோளானது எவ்வாறு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் பாகிஸ்தானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் உதவியுடன் இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விக் கண்காட்சி நிகழ்ச்சி தொடர்பாகவும் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கூறுகையில், பாகிஸ்தானானது எப்போதும் இலங்கைக்கு தொடர்ந்து உதவும், இரு நட்பு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை பாகிஸ்தான் பாராளுமன்ற சங்கத்தின் தலைவர், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பெளத்த பிக்குகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/170726
  20. பட மூலாதாரம்,ROGER THIBAUT/NCCR PLANETS கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் "சரியான சூரிய குடும்பத்தை" கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பம் எப்படி பல வெடிச்சிதறல்களால் உண்டாகியுள்ளதோ அதுபோல் எந்த மோதலும் வெடிச்சிதறல்களும் இல்லாமல் இந்த “நேர்த்தியான சூரிய குடும்பம்” உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சூரிய குடும்பம் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், ஆறு கிரகங்களைக் கொண்டுள்ளது. 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த சூரிய குடும்பத்தில் உள்ள அந்த ஆறு கிரகங்களின் அளவு மாறாமல் அப்படியே உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் எந்த மோதலும் நிகழாததால், இந்த உலகங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவற்றில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்கு ஏற்றதாக அமைகின்றன. நேச்சர் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பூமி இருக்கக்கூடிய நமது சூரிய குடும்பம் உருவானது ஒரு வன்முறைச் செயல்முறையாகும். கோள்கள் உருவாகும்போது, சில ஒன்றுடன் ஒன்று மோதி, சுற்றுப்பாதையில் தொந்தரவு செய்து, வியாழன் மற்றும் சனி போன்ற ராட்சச கிரகங்களோடு பூமி போன்ற சிறிய கிரகங்கள் இருக்க வேண்டிய சூழல் உருவானது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய சூரிய குடும்பத்திற்கு HD110067 என வானியல் வல்லுநர்கள் பெயரிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கோள்கள் ஒரே அளவில் இருப்பது மட்டுமல்லமால் நமது சொந்த சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை போல் அல்லாமல் இந்த புதிய சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் ஒத்திசைவில் சுழல்கின்றன. உள் கிரகம் நட்சத்திரத்தை மூன்று முறை சுற்றி வர எடுக்கும் நேரத்தில், அடுத்த கிரகம் இரண்டு முறை சுற்றி வருகிறது, மேலும் அந்த அமைப்பில் நான்காவது கிரகத்திற்கு வெளியே செல்கிறது. அங்கிருந்து, கடைசி இரண்டு கோள்களின் சுற்றுப்பாதை வேகத்தின் 4:3 மாதிரியாக மாறுகிறது. இந்த சிக்கலான கிரக நடன அமைப்பு எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்றால், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் அவற்றின் சுற்றுப்பாதை காலங்களுக்கும் பொருத்தமான குறிப்புகள் மற்றும் தாளங்களுடன் ஒரு இசைத் துண்டை உருவாக்கியுள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரஃபேல் லுக், HD110067ஐ "நேர்த்தியான சூரிய குடும்பம்" என்று விவரிக்கிறார். "கோள்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதைப் படிப்பதற்கு இது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் இந்த சூரிய குடும்பம் நாம் செய்த குழப்பமான தொடக்கங்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அது உருவானதில் இருந்து எந்த வித தொந்தரவு இல்லாமல் உள்ளது." என அவர் தெரிவித்தார். வார்விக் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மெரினா லஃபர்கா-மாக்ரோ, இந்த அமைப்பு "அழகான மற்றும் தனித்துவமானது" என்று கூறினார். “இதுவரை யாரும் பார்த்திராத ஒன்றைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த முப்பது ஆண்டுகளில், வானியலாளர்கள் ஆயிரக்கணக்கான சூரிய குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்வதற்கு அவை எதுவும் மிகவும் பொருத்தமானவை அல்ல. கிரகங்களின் ஒரே அளவு மற்றும் அமைப்பின் தொந்தரவு இல்லாத தன்மை ஆகியவை வானியலாளர்கள் விரும்பும் ஒரு விஷயமாகும். ஏனெனில் அவை அவற்றை ஒப்பிடுவதையும் வேறுபடுத்துவதையும் மிகவும் எளிதாக்குகின்றன. அவை எவ்வாறு முதலில் உருவாகின, எப்படி உருவாகின என்பதை புரிந்துகொள்ள இது உதவும். இந்த சூரிய குடும்பத்தில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் உள்ளது. இது கிரகங்களின் வளிமண்டலங்களில் உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவதை எளிதாக்குகிறது. ஆறு புதிய கோள்களையும் வானியலாளர்கள் "சப்-நெப்டியூன்கள்" என்று அழைக்கிறார்கள். அவை பூமியை விட பெரியவை மற்றும் நெப்டியூன் கிரகத்தை விட சிறியவை (இது பூமியை விட நான்கு மடங்கு அகலமானது). புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு பெரியவை. செப்டம்பரில் மற்றொரு நட்சத்திர அமைப்பில் இருக்கக்கூடிய K2-18b எனப்படும் துணை நெப்டியூன் கிரகம் பூமியில் வாழும் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படும் வாயுவின் குறிப்புகளுடன் கூடிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்ததிலிருந்து புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகரித்துள்ளது. வானியலாளர்கள் இதை உயிர் கையெழுத்து (Bio Signature) என்று அழைக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES நமது சொந்த சூரிய குடும்பத்தில் துணை நெப்டியூன்கள் இல்லை என்றாலும், அவை விண்மீன் மண்டலத்தில் அதிகம் காணப்படும் வகை கிரகமாக கருதப்படுகிறது. இன்னும் வானியலாளர்கள் இந்த உலகங்களைப் பற்றி வியக்கத்தக்க வகையில் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் பாறையா, வாயுவா அல்லது தண்ணீரால் ஆனவையா, அல்லது விமர்சனரீதியாக, அவை உயிர்கள் வாழ்வதற்கான நிலைமைகளை வழங்குகின்றனவா என்பது அவர்களுக்குத் தெரியாது. டாக்டர் லூக்கின் கூறுகையில், இந்த விவரங்களைக் கண்டுபிடிப்பது இந்தத் துறையில் மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார். HD110067ன் கண்டுபிடிப்பு, அந்தக் கேள்விக்கு ஒப்பீட்டளவில் விரைவாக பதிலளிக்க தனது குழுவிற்கு சரியான வாய்ப்பை வழங்குகிறது. "இன்னும் பத்து வருடங்களுக்குள்ளேயே இது குறித்து ஒரு பதில் கிடைக்கும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "எங்களுக்கு கிரகங்கள் தெரியும், அவை எங்கே என்று எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை, ஆனால் அது நடக்கும்." குழுவின் அடுத்த சுற்று அவதானிப்புகளில் துணை-நெப்டியூன்களும் உயிர்கள் வாழ்வதற்கு ஆதரவான சூழலை கொண்டிருப்பதைக் குறிக்கிறது என்றால், அது உயிர்கள் வாழக்கூடிய கிரகங்களின் எண்ணிக்கையை பெரிதும் அதிகரிக்கிறது. எனவே வேறொரு உலகில் வாழ்வதற்கான அறிகுறிகளை விரைவில் கண்டறியும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. ஆறு புதிய துணை நெப்டியூன்களில் ஒன்றில் உயிரி கையொப்பங்களைக் கண்டறிவதற்கான போட்டி இப்போது உள்ளது. மேம்படுத்தப்பட்ட திறன்களைக் கொண்ட புதிய தொலைநோக்கிகளின் பேட்டரி மற்றும் பிற இணையம் வரவிருக்கும் நிலையில், அந்த தருணத்திற்காக நாம் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்று பல வானியலாளர்கள் நம்புகின்றனர். நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட் (TESS) மற்றும் ESA இன் சிறப்பியல்பு ExOPlanet Satellite (Cheops) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த கிரகங்கள் கண்டறியப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cjlp04ex394o
  21. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி 01 DEC, 2023 | 02:58 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதி ரூபா மூன்று மில்லியன் இன்று காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் உயர்கல்விப் புலமைப்பரிசில் (ஐ.சி.சி.ஆர்) பெற்று இந்தியாவில் உயர்கல்வி பெறச் செல்லும் இந்து கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் இருவருக்கான அனுமதிக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பொருளாதார நிலையில் சவாலுக்குட்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேரின் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் சகல பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/170725
  22. Published By: VISHNU 01 DEC, 2023 | 02:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள் (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர். அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும். அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி ஒருவர் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி மாணவி ஒருவரும் மூன்றாம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மாணவனும் பிடித்துள்ளனர். அதேநேரம் 4ஆம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மற்றும் கம்பஹா திருச்சிலுவை மகளிர் வித்தியாலயம் பெற்றுள்ளதுடன் 6ஆம் இடத்தில் 4பேர் இருக்கின்றனர். காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இரண்டுபேர், குருணாகல் மரிய தேவ ஆண்கள் வித்தியாலயம், திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, பத்தாம் இடத்தில் 2பேர் இருக்கின்றனர். அது கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரி ஆகியனவாகும். உயர் கல்வி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 3மாதங்கள் பிற்படுத்தப்பட்டதால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவர தாமதமாகின. என்றாலும் ஆகஸ்ட் மாதம் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 3மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம் இறுதியாக வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்புடைய பீடங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெள்ளிக்கிழமை (01) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னரான காலங்களில் உயர் தர பரீட்சை இடம்பெற்று நீண்ட காலத்துக்கு பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த முறை 6மாதங்களுக்குள் வெட்டுப்புள்ளி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எந்த பீடங்களுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை இணையத்தளம் ஊடாக வெட்டுப்புள்ளியுடன் பார்த்துக்கொள்ள முடியும்.என்றார். https://www.virakesari.lk/article/170723
  23. தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும்புயல் - எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? பட மூலாதாரம்,IMD.GOV.IN 30 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வருவதால், தமிழகத்தில் கன மழை மற்றும் சில இடங்களில் மிக கன மழையும் பெய்யவும் வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. டிசம்பர் 3ம் தேதிவாக்கில் இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வுத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இலங்கை கடல் பகுதியிலும் இதே நேரத்தில் மற்றொரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் ஒரு நாள் தாமதாக புயலாக மாறுகிறது. ஞாயிற்றுகிழமை புயலாக மாறி டிசம்பர் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும். சென்னை-மசூலிப்பட்டினம் அருகே 4ம் தேதி மாலை இது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், வட தமிழக கடலோரத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. வங்கக் கடலில் புயல் உருவாகும் சாதகமான சூழல் உள்ளதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது. சென்னையில் நேற்று இருவர் உயிரிழப்பு சென்னையில் தி.நகர் சுற்றியுள்ள பகுதியில் நேற்று மழை காரணமாக இருவர் உயிரிழந்தனர். தி.நகர் வாணி மகால் அருகே மழைநீரில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் மேற்கு மாம்பலம் பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டே சென்ற நபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது செல்போன் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரும் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு மேலும் குறைப்பு 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்புகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென திறக்கப்பட்ட அதிக அளவிலான நீரே காரணமானது. இந்நிலையில் செம்பரம்பாக்கத்திலிருந்து எவ்வளவு நீர் திறக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் முக்கியமான தகவலாகவே இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு 6000 கன அடி திறக்கப்பட்ட்டது. அதன் பிறகு மழை குறைந்ததன் காரணமாக காலை 11 மணி முதல் 4000 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று முழுவதும் பெரிய மழை இல்லாத காரணத்தினால், இன்று காலை செம்பரம்பாக்கத்துக்கு நீர் வரத்து 1431 கன அடியாக இருக்கிறது. எனவே தற்போது விநாடிக்கு 402 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c80w795ej5xo
  24. ஹமாசின் தாக்குதல் திட்டம் குறித்து ஒரு வருடத்திற்கு முன்னரே தெரிந்திருந்த போதும் அலட்சியம் செய்த இஸ்ரேல் - நியுயோர்க் டைம்ஸ் Published By: RAJEEBAN 01 DEC, 2023 | 12:56 PM ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளமை குறித்து இஸ்ரேலிற்கு ஒருவருட காலத்திற்கு முன்னரே தெரிந்திருந்தது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாசின் தாக்குதல்கள் குறித்த திட்டங்களை ஒரு வருடத்திற்கு முன்னரே இஸ்ரேல் பெற்றுக்கொண்டிருந்தது என மின்னஞ்சல்களையும் விடயங்களை அறிந்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 40 பக்க ஆவணமொன்று குறித்து தகவல் வெளியிட்டுள்ள நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்ட ஆவணம் தாக்குதல் எப்போது இடம்பெறும் என தெரிவிக்கவில்லை, ஆனால் ஹமாஸ் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் குறித்து துல்லியமான தகவல்கள் அந்த ஆவணத்தில் காணப்பட்டன என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அந்த விபரங்களை ஆராய்ந்த இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் ஹமாசினால் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியாது என நிராகரித்தனர் எனவும் நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெரிச்சோ வோல் என்ற அந்த ஆவணம் காசா பள்ளத்தாக்கினை சூழவுள்ள பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட நிலைகளில் இருந்து தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ள நியுயோர்க் டைம்ஸ் ஹமாஸ் இஸ்ரேலின் நிலைகளை கைப்பற்றலாம் தளங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை ஹமாஸ் துல்லியமாக செய்தது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெரிச்சோ வோல் ஆவணம் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தரப்பினர் மத்தியில் பரிமாறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அதனை பார்த்தாரா என்பது தெரியவில்லை என நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/170718
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.