Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை கண்டுபிடிப்பு ஆறு. மெய்யம்மை பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஏழாவது கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் முதல் முறையாக ஒரு விலங்கு உருவ பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்டம் வரை கீழடியில் மட்டுமே நடந்துகொண்டிருந்த பணி ஆறாம் கட்டத்திலிருந்து 2-3 கீ.மீ தொலைவில் உள்ள மற்ற மூன்று தளங்களில்தொடங்கியது. முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் ஏழாவது கட்ட அகழாய்வு பணியில் சமீபத்திய கண்டுபிடிப்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை அகரம் தளத்தில் கிடைத்துள்ளது. அது அகலத்தில் பத்து சென்டிமீட்டருக்கு குறைவாகவும், நான்கு சென்டிமீட்டர் உயரத்தையும் கொண்டதாக இருக்கிறது என்று கூறுகிறார் தொல்லியல் துறை துணை இயக்குனர், கீழடி அகழாய்வின் இயக்குநருமான ஆர். சிவானந்தம். கீழடியில் ஊற்றெடுக்கும் தமிழர் வரலாறு - இதுவரை கிடைத்தவை என்ன? கீழடி: பழங்கால எலும்புக்கூடு மரபணு ஆராய்ச்சிக்கு நிதி இல்லை - யார் காரணம்? இந்த விலங்கு பொம்மையின் கால், தலை மற்றும் வால் பகுதிகள் கிடைக்கவில்லை. அவை கிடைத்தால்தான் அது என்ன விலங்கு என்று கூற இயலும். நான்காம் கட்டப் பணிகளின் போது சுடுமண்ணால் ஆன குதிரையின் முகம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போதுதான் ஒரு விலங்கு உருவ பொம்மை (animal figurine) கிடைத்துள்ளது, என்று கூறுகிறார். பட மூலாதாரம்,TAMILNADU STATE ARCHEOLOGY DEPARTMENT முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது வீட்டு விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் நான்காம் கட்டத்தில் கிடைத்தது. சில எலும்பு மாதிரிகள் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் அவை ஜல்லிக்கட்டு காளைகளின் எலும்புகள் என்று தெரியவந்தது. அகரம் சங்ககால வாசிப்பிடமாகத் திகழ்ந்திருப்பதால், மக்கள் ஜல்லிக்கட்டு காளைகள் இறந்தவுடன் வீட்டின் அருகே புதைத்திருக்கிறார்கள், என்று கூறுகிறார் சிவானந்தம். பட மூலாதாரம்,@TTHENARASU படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். கண்டறியப்பட்ட விலங்கு எலும்புகளில் சுமார் 12 சதவீதம் திமில் உடைய ஜல்லிக்கட்டு காளைகள் உடையது, 40 சதவீதம் மாடு, எருது மற்றும் எருமைகள் உடையது. காட்டுப்பன்றி மற்றும் ஆடுகளின் எலும்புகளில் வெட்டு தடயங்கள் காணப்பட்டதால், அவை அசைவ உணவிற்காக அக்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்க கூடும், என்று சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர ஒரு விலங்கின் எலும்புக்கூடு ஒன்று ஆறாம் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்தது. அது சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அரை டன் எடையுள்ள எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பப்பட்டது போக மற்ற பொருட்கள் அனைத்தும் மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், இரண்டு செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அதிக அளவில் கண்ணாடி, யானை தந்தம் மற்றும் சங்கினால் ஆன வளையல்கள் அடங்கும். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சமீபத்தில் சுடுமண்ணால் ஆன பெண் முகத்தின் படத்தை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். "தமிழ்ப் பொண்ணு" இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள், என்று அவர் அப்பதியில் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/india-57931986
  2. இரண்டு இடத்திலயும் more sharing option காட்டுகிறது, அழுத்தினா உள்ள போகுதில்ல!
  3. மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றிவிட்டது.
  4. நிர்வாகத்தினருக்கு, யாழின் இணையத்தள முகவரி குறிப்பாக திரி ஒன்று தொடர்பான முகவரியை திண்ணையில் இணைக்க முடிவதில்லையே, மிக நீளம் என்று செய்தி வருகிறது. மேலே படத்தில் உள்ளது போல், திரிகளின் முகவரிகளை சுருக்கி இணைக்க வேறு வழிகள் உள்ளதா?
  5. ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?
  6. மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?! கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்கா, வாழ்க வளத்துடன்.
  9. சென்னை விமான நிலைய கூரை போல விழாதா என கேட்க வருகிறார் என நினைக்கிறேன்.
  10. குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாந்த் குழுவினரின் பஜனையை பார்த்து மகிழுங்கள்.
  11. சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
  12. அசோகன் காலத்தில தான் பௌத்தம் பெரு வளர்ச்சி பெற்றதாக வாசித்துள்ளேன். இலங்கை தமிழ்நாடு.
  13. இது அறிமுகம் எல்லோ, தொடருங்கள் அண்ணை. முறுக்கு எப்பிடி வந்தது? மொறுமொறு என்று இருந்ததா? இல்லை புழுக்கொடியல் போல இருந்ததா?
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான், வாழ்க வளத்துடன்.
  15. அசோகன் காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிடவில்லை. சைவ மறுமலர்ச்சியின் போது தமிழ் பௌத்தம் வழக்கொழிந்ததாக வாசித்த நினைவு.
  16. இந்த மாற்று மருத்துவர் சொல்வதில் நியாயம் இருக்குதா? https://www.facebook.com/100011391779585/videos/1576806236042420/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.