ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
Everything posted by ஏராளன்
-
பயங்கரவாதச் தடைச் சட்டத்தை நீக்குக; புதிய சட்டங்கள், மாற்று ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை - யாழ். சட்டத்தரணிகள் சங்கம்
22 MAY, 2025 | 01:48 PM (எம்.நியூட்டன்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவுள்ளது என்றும், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என்றும் அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்காக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஒன்றுகூடி கலந்துரையாடி இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தது. அதன்படி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று மாற்றுச் சட்டங்கள் அல்லது புதிய சட்டங்கள் அவசியம் இல்லை என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்காமல், தற்போது காணப்படும் குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைக்குக் கீழான ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த விடயங்களை அணுகலாம் என்றும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215399
-
உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி கைது
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 01:22 PM சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. “சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு சமூக ஊடகங்கள் வழியாக பல பொருத்தமற்ற செய்திகள் அனுப்பப்பட்டன. முறைப்பாட்டை தொடர்ந்து, நாங்கள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து, வழக்குக் கோப்பை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்தோம். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 345 இன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் எங்களுக்கு அறிவுறுத்தினார், இது கைதுக்கு வழிவகுத்தது,” என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நேற்றையதினம் சிலாபம் தலைமை நீதவான் எஸ். மகேந்திரராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டு ரூ. 500,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215384
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூரில் திட்டமிட்டு நடக்கும் சதி..! அசைவ உணவகத்தின் பின்னணி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது ஒரு சதித்திட்டமாக இருக்கலாம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் ஒரு பல்தேசிய கம்பனியின் அசைவ உணவகம் எந்தவித அனுமதியும் இன்றி திறக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் மாட்டிறைச்சியும் விற்கப்படுகின்றது. ஒரு ஆலய சூழலுக்குள் அசைவ உணவகம் இருக்க கூடாது என்பது எமது அடிப்படை பண்பாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்துக்களினதும் தமிழர்களினதும் ஒரு தேசிய அடையாளமாக நல்லூர் ஆலயம் உள்ள நிலையில், அதற்கு முன்னால் இவ்வாறு அசைவ உணவகம் திறக்கப்பட்டிருப்பது இனவாதத்தை தூண்டும் ஒரு சதித்திட்டமாகவே புலப்படுகின்றது” எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், https://tamilwin.com/article/nallur-barista-cafe-issue-1747908112#google_vignette
-
கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள் வெள்ளவத்தை - ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரான இந்த அரசியல்வாதி, 6 மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பி, அதை ஒழித்து வைக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணிடம் இந்த ஆயுதத்தை கொண்டு வந்து ஒப்படைத்த முன்னாள் அமைச்சரின் சமையல்காரரை கைது செய்வதற்காக நேற்று மாலை ஒரு சிறப்பு பொலிஸ் குழு அவிசாவளை பகுதிக்கு சென்றிருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளில் இந்த முன்னாள் அமைச்சர் ஹெவ்லொக் வீட்டுத்தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது. பையில் T-56 துப்பாக்கி இருப்பது தெரியாமல் ஆயுதம் அடங்கிய பையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்தப் பை 6 மாதங்களாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தது, நேற்று முன்தினம், அந்தப் பெண்ணின் மகன்களில் ஒருவர் அந்தப் பையை சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்தப் பெண் பையையும் துப்பாக்கியையும் தனது காரின் பின்புறத்தில் விட்டுச் சென்றிருந்தார். இந்த நேரத்தில்தான் வீட்டுத்தொகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆயுதத்தை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் வெள்ளவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள் வந்து ஆயுதத்தை ஆய்வு செய்தபோது, அது நவீன T-56 துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதற்கமைய, இந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த 68 வயதுப் பெண்ணும் மற்றொரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரபல அரசியல்வாதி அந்தப் பெண், அந்தப் பையை முன்னாள் அமைச்சரின் சமையல்காரர்களில் ஒருவர் தன்னிடம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட உள்ளார். வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியல்வாதியின் தந்தையும் ஒரு பலம்வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார். இந்த ஆயுதம் ஏன் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது, அந்த ஆயுதத்தால் என்ன குற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://tamilwin.com/article/t-56-belongs-to-a-slfp-former-minister-1747880928
-
ஹமாசை முற்றாக அழித்தல்; இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்
22 MAY, 2025 | 02:52 PM PELED ARBELI பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்றவற்றின் கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிபுணருமான மொசே எலாட் பயங்கரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அழிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாரிவ் உடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார். பயங்கரவாத அமைப்புகளை அழிப்பது உண்மையிலேயே சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச அனுபவங்களை பயன்படுத்தியுள்ள அவர் மேற்குலக நாடுகள் விவாதிக்க தயாராகயிருக்கும் ஒரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அமைப்புகளை முற்றாக செயல் இழக்க செய்ய முடியுமா? முழுமையான வெற்றி சாத்தியமா என்ற சர்வதேச விவாதம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, பாலஸ்தீன ஜிகாத் போன்றவற்றின் சூழமைவில் பெருமளவிற்கு தீர்வுகாணப்பட்டதாக காணப்படுகின்றது. காசா மக்களை பட்டினிபோடுதல், தென்லெபனான் கிராமங்களை அழித்தல், இஸ்ரேலின் ஒவ்வொரு தடையையும் மனிதாபிமான நெருக்கடி என முத்திரை குத்துதல், போன்றவற்றால் இஸ்ரேல் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், இஸ்ரேல் முழுமையான இராணுவ வெற்றியை பெறுவதற்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவரது வார்த்தைகளில் 'நாங்கள் நேர்மையாக பேசுவோம், உலகம் இஸ்ரேல் முழுமையான வெற்றியை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது" பல்வேறு வழிகளில் மிகவும் திறமையாக அழிக்கப்பட்ட நான்கு பயங்கரவாத அமைப்புகளை அவர் வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டினார். இராணுவ மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அழிக்கப்பட்ட ஜாரிஸ்ட் ரஸ்யாவின் பிளக் ஹன்ட்ரட்ஸ், பெருவின் சைனிங் பாத் 1990களில் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டது, தானாகவே முன்வந்து கலைந்துபோன ஜேர்மனியின் செம்படை அரசியல் அமைப்பாக மாறி சின்பெய்னுடன் இணைந்த ஐரிஸ் விடுதலை இராணுவம். எலாட் ஐந்தாவது அதிகம் விவாதிக்கப்படாத உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்தது. தென்னாசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுத அச்சுறுத்தலாக விளங்கிய அமைப்பு. வெற்றியின் விரிவான தன்மை, மற்றும் அதனை சாத்தியமாக்க பயன்படுத்தப்பட்ட தீவிரமான, பெரும்பாலும் தார்மீக ரீதியிலான நடவடிக்கை காரணமாக இலங்கை அனுபவம் விதிவிலக்கானது என அவர் விவரித்தார். இலங்கையின் வடக்கு கிழக்கில் சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்குவதற்காக அந்த அமைப்பு 26 வருடங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த குழு அதிநவீன இராணுவதிறன்களை வளர்த்துக்கொண்டது, தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது, அவர்களில் சிலர் பெண்கள் சிறுவர்கள். 2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதை கைவிட்டு விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுத்தது. இலங்கை தமிழ் புலிகளை தோற்கடித்தது எப்படி? இது இஸ்ரேலிற்கு ஏன் முக்கியமானது? 2006க்கும் 2009க்கும் இடையில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. இராணுவத்தை கணிசமான அளவு விரிவுபடுத்தவும், மேம்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், ஆயிரக்கணக்கான புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வளஙகள் ஒதுக்கப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பல முனைகளில் இராணுவநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, எதிரியின் பகுதிகளிற்குள் ஊடுருவி விசேட படைப்பிரிவுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதற்கு சமாந்திரமாக விடுதலைப்புலிகளிற்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. புலம்பெயர்ந்தவர்களின் நிதி சேகரிப்பை இலக்குவைத்தது. குறிப்பாக கனடா, பிரிட்டன், ஸ்கன்டினேவியன் நாடுகளில் விடுதலைப்புலிகளை உத்தியோகபூர்வதாக பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு பல மேற்குலக நாடுகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் அந்த அமைப்பின் ஆதரவு கட்டமைப்புகள் பலவற்றை மூடியது. உளவியல் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் இடையில் அதிருப்தியை அதிகரிப்பதற்காக தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒற்றர்களாக தகவல் வழங்குபவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆனால் இந்த நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கவில்லை என்கின்றார் எலாட். இறுதி அடி என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் வழிமுறை மூலம் சாத்தியமானது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், பலர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஆனால் கடும் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் கொல்லப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் மருத்துவமனைகளை இலக்குவைப்பது பொதுமக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியது, தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல்போனது போன்ற இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகளை ஆவணப்படுத்தியுள்ளன. தமிழ் புலிகள் வெறுமனே பின்வாங்கச்செய்யப்படவில்லை. அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்கின்றார் எலாட். அவர்களிடமிருந்த பகுதி மீள கைப்பற்றப்பட்டது, தலைமைத்துவம் அழிக்கப்பட்டது, 2009ம் ஆண்டின் பின்னர் மீள எழுச்சி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தவில்லை. 2011 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மதிப்பீடுகள் குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் நடந்த சண்டையின் இறுதி மாதங்களில் 40000 முதல் 70000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகள் போராளிகள் என்று வலியுறுத்துகிறது. மனிதாபிமான அமைப்புகள் மோதல் வலயங்களிற்குள் மண்டலங்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் வாயடைக்கப்பட்டதாகவும் அல்லது நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தார்மீக மற்றும் சட்ட மதிப்பீடுகள் சிக்கலாகின. பொதுமக்களின் இறப்புகளின் அளவு மோதலின் முடிவில் மிகவும் பிரச்சினைக்குரிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. சர்வதேச மௌனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் அவை வெறுமனே நிராகரிக்கப்பட்டன. இதனால் அரசாங்கம் சில விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இதனை பயங்கரவாத அமைப்பொன்று முற்றாக அழிக்கப்பட்ட மிகவும் வழமைக்கு மாறான தருணம் என தெரிவித்தார். ஆனால், பெரும் மனிதாபிமான விலை காரணமாக அது சர்ச்சையில் சிக்குண்டது. நீதியை விட புவிசார் அரசியலே மேற்குலகின் பதிலை தீர்மானித்தது என்கின்றார் அவர் செப்டம்பர் 11க்கு பின்னர் இலங்கை தனது நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக முன்னிறுத்தியதால் பல நாடுகள் அதற்கு ஆதரவாகயிருந்தன. அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களின் முயற்சிகள் குறைந்த வெற்றியையே அடைந்தன. கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே மிதமான தடைகளை விதித்தன, அல்லது உதவியை நிறுத்தி வைத்தன. விரிவான சர்வதேச விசாரணை எதுவும் பின்பற்றப்படவில்லை. இலங்கையும் மோதலை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக வெற்றிகரமாக சித்தரித்தது, அதன் நடவடிக்கைகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும் இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்ல என்றும் வாதிட்டது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கை சோர்வை எதிர்கொண்ட மேற்கத்திய நாடுகள் மோதலை விட கட்டுப்படுத்தலையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தன. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடமும் சீனாவுடனான வளர்ந்து வரும் உறவுகளும் மேற்கத்திய அரசாங்கங்களை உண்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்கலாம். https://www.virakesari.lk/article/215402
-
ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்
Published By: RAJEEBAN 21 MAY, 2025 | 12:31 PM Revolutionary Existence for human Development -red கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைதொழிற்சாலையொன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளதால் 1461 தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில்இகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைதொழிற்சாலை முன்னறிவித்தல் இன்றி தனது தொழிற்சாலையை மூடியுள்ளது. ஒரே இரவில் 1461 தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கியுள்ளதுடன் நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளது. மே 19ம்திகதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. பலவருடங்களாக அந்த தொழிற்சாலைக்காக தங்களை அர்ப்பணித்த தொழிலாளர்கள் பலர் ஆறு மணிவரை வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் கழித்து 8 மணியளவில் நாளை முதல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்ற தகவல் வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது. எந்த வித முன்கூட்டிய தகவல்களும் இன்றி இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிற்கு அடுத்தவாரம் ஆடைகளை அனுப்பும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் நள்ளிரவு தாண்டியும் வேலைபார்த்துக்கொண்டிருந்தோம் என தெரிவிக்கும் தொழிலாளர்கள், நாங்கள் எதனையும் எதிர்பார்க்கவில்லை வழமை போல மறுநாளும் வேலை தொடரும் என்றே நினைத்திருந்தோம் என தெரிவிக்கின்றனர். என்னிடம் 4000 ருபாய் மாத்திரம் இருந்தது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று 2500 ரூபாய் கடன் வாங்கினேன். நாளைக்கு எனது பிள்ளைகளிற்கு சமைப்பதற்கு கோழி இறைச்சியும் வாங்கினேன். தற்போது எனக்கு வேலை இல்லை. கையில் காசும் இல்லை. செல்வதற்கு இடமும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ள பெண்ணொருவர், நாங்கள் எங்கள் உயிரை கொடுத்து பணிபுரிந்த இந்த நிறுவனம இதனை செய்யும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனகுறிப்பிட்டுள்ளார். இது வெறுமனே தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழத்தல் மாத்திரமல்ல 1400 குடும்பங்கள் திடீரென ஸ்திரதன்மை இழக்கும் நிலை. தொழிலாளர்கள் தாங்கள் முன்கூட்டியே எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கின்றனர். நிறுவனம் இழப்பீடுகள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார, உணர்வுரீதியான தாக்கங்கள் அதனையும் மீறியவையாக காணப்படுகின்றன. எந்த வித முன்கூட்டிய தகவலும் இன்றி தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்துவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ள தொழிலாளர் ஒருவர் இழப்பீடு என்பது சிலநாட்களிற்கே போதுமானது, அதன் பின்னர் என்ன செய்வது, எங்களிற்கு பிள்ளைகள் உள்ளனர் வீட்டு வாடகை கட்டவேண்டும் வேறொரு வேலையை தேட நேரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார். நிறுவனங்கள் சட்டரீதியில் தங்கள் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளலாம் என்றாலும்உரிய முன்னறிவிப்பு வெளிப்படை தன்மையின்றி இதனை செய்வது, மனிதாபிமானமற்றது, ஒழுக்கமற்றது. இந்தவகையான திடீர் பணிநிறுத்தம் குறிப்பாக பெண்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, அவர்களில் பலர் ஏற்கனவே இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் விளிம்புகளில் வாழ்கின்றனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. சுதந்திர வர்த்தகவலயத்தில் தொழிற்சாலை மூடல்கள் நியாயமாகவும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படுபவையாகவும் கண்ணியமாகவும் நடப்பதை உறுதிசெய்ய முதலீட்டு வாரியமும் இலங்கை அரசாங்கமும் விசாரணை செய்து முதலீட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கைகளை வகுக்க வேண்டும். இந்த கடினமான நேரத்தில் மனித மேம்பாட்டுக்கான புரட்சிகர இருப்பு (red) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. எங்கள் உதவி மையம் மூலம் எங்கள் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தகவல் வழிகாட்டுதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். இருப்பினும்இ ஒரு சிறிய இலாப நோக்கற்ற அமைப்பாக red 1461 தொழிலாளர்களின் முழு சமூக மற்றும் மனநலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கவில்லை. எனவே அனைத்து சிவில் சமூக அமைப்புகள் தொழிலாளர் உரிமைகள் குழுக்கள் - தொழிற்சங்கங்கள் மனநல நிபுணர்கள் மற்றும் அரசாங்கம் இந்த நெருக்கடியான தருணத்தில் ஒன்றிணைந்து இந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவசரமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். https://www.virakesari.lk/article/215311
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
பிளே ஆஃப் சுற்றில் மும்பை - ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்; தகர்ந்த டெல்லி அணியின் நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றியை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது. மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று (மே 21) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 63-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் ஆட்டமிழந்தது. 11வது முறை கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பொறுப்பேற்றபின் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி செல்கிறது. ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பிளே ஆஃப் சுற்றில் 4 இடங்கள் யாருக்கு? ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத்தான் தகுதி பெற்றுள்ளன, அதில் முதலிடம் முதல் கடைசி இடம் வரை இன்னும் முடிவாகவில்லை. இதில், மும்பை அணி தவிர மற்ற 3 அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால், அதில் வெற்றி தோல்வியைப் பொருத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்கள் முடிவாகும். மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால் அதில் வென்றால் 18 புள்ளிகளுடன் 1.292 நிகர ரன்ரேட்டுக்கும் அதிகமாக சென்று, 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்கலாம். அதேசமயம், பஞ்சாப் அணி 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட பஞ்சாப் அணி 3வது இடத்தைப் பிடித்துவிடும். அதேபோல, ஆர்சிபி அணியும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று, பஞ்சாபும் ஒரு போட்டியில் வென்றால் 19 புள்ளிகளில் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் முடிவாகும். இல்லாவிட்டால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றால் 2வது இடம் கிடைக்கும். குஜராத் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வென்றால் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று, ஒன்றில் தோற்றால் 20 புள்ளிகள்தான் பெறும். ஆனால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம். ஆர்சிபி ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கும். அப்போது, குஜராத்தின் ஒரு வெற்றியே அந்த அணியை முதலிடத்துக்கு உயர்த்தும். டெல்லி அணியைப் பொருத்தவரை இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றால்கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்கத்தில் முதல் 4 போட்டிகளில் வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கடைசி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது. முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும், அடுத்த 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றதால்தான் டெல்லி அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியவில்லை. அக்ஸர் படேல் கேப்டன்சியில் அற்புதமாக சீசனைத் தொடங்கி, முதல் 6 போட்டிகள் வரை முதலிடத்தில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாகத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீசனின் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்தது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவையும், நிகர ரன்ரேட்டில் பெரிய சரிவையும் ஏற்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. அதேசமயம், மும்பை அணி முதல் போட்டியிலேயே தோற்றாலும், ரோஹித் சர்மா, ரெக்கில்டன், பும்ரா ஆகியோர் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாமல் இருந்து பின்னர் தொடர் வெற்றிகளுடன் மும்பை அணி அற்புதமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள் டெல்லி அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் மும்பையைக் கட்டுப்படுத்தி 18-வது ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம்தான் வைத்திருந்தது. சூர்யகுமார், நமன் திர் இருவரும் கடைசி இரு ஓவர்களில் அடித்த 48 ரன்கள் தான் ஆட்டத்தையே திருப்பிவிட்டது. ஒருவேளை இந்த இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக டெல்லி அணி வீசியிருந்தால், 150 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். இந்த 2 ஓவர்களில்தான் ஆட்டத்தை மட்டுமல்ல வெற்றியையும் சேர்ந்து டெல்லி அணி இழந்தது. 43 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் சிதைத்த பும்ரா, சான்ட்னர் மும்பை அணியின் பந்துவீ்ச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணிக்கு தோல்வியைக் கொடுத்தனர். சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3.2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து, டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினர். சூர்யகுமார் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றியதைப் போல், இருவரின் 5 ஓவர்களும் டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாகியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா சேஸிங்கில் தோல்வியடைந்த டெல்லி 181 ரன்கள் இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. தீபக் சஹர் ஓவரில் டூப்பிளசிஸும், போல்ட் ஓவரில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தபோது பாதி நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அபிஷேக் போரெல் (6), நடுவரிசையில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (6), அசுடோஷ் சர்மா (18) ஆகியோர் ஏமாற்றியது டெல்லி அணியை தோல்விக்கு இழுத்து வந்தது. சமீர் ரிஸ்வி (39), விப்ராஜ் நிகம் (20) ஆகியோர் சேர்த்ததுதான் டெல்லி அணியின் கௌரவமான ஸ்கோராகும். மற்ற வகையில் எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. மும்பை அணி திணறல் மும்பை அணிக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா பெரிய தொடக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால் முஸ்தஃபிசுர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா (5), முகேஷ் கமார் பந்துவீச்சில் ஜேக்ஸ் (21) ரன்னில் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவருக்குள் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. குல்தீப் பந்துவீச்சில் ரெக்கிள்டன் (25) ரன்களில் ஆட்டமிழந்தபோது ஐபிஎல் போட்டிகளில் குல்தீப் 100-வது விக்கெட்டை எட்டினார். விப்ராஜ் நிகம், குல்தீப் இருவரும் சேர்ந்து மும்பை பேட்டர்கள் சூர்யகுமார், திலக் வர்மா திணறவிட்டதால் 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்தது. தடுமாறிய திலக் வர்மா 27 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த கேப்டன் ஹர்திக் 3 ரன்னில் சமீரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி இரு ஓவர்கள் நமன் திர், சூர்யகுமார் இருவரும் தங்களுக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். 18வது ஓவரை முகேஷ் குமார் வீசியபோதுதான் சூர்யகுமார், நமன்திர் அதிரடியாக ஆடி சிக்ஸர் பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சமீரா வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என சூர்யகுமார் விளாச மும்பை அணி 180 ரன்களை எட்டியது. 18-வது ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறி 180 ரன்களை எட்டியது. நமன் திர் 8 பந்துகளில் 24 ரன்களும், சூர்யகுமார் 73 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூர்யகுமார் கணக்கில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணியில் விப்ராஜ், குல்தீப் வீசிய 8 ஓவர்கள் தான் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து அவர்கள் கைவசம் வைத்திருந்தது. இருவரும் சேர்ந்து 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ், சமீரா இருவரும் கடைசி இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாகினர். முஸ்தபிசுர் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் விப்ராஜ் நிகம் 'பணி எளிதாக இருந்தது' வெற்றிக்குப் பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "உண்மையாகவே நான் யாரிடம் பந்தை வீசி பந்துவீசச் சொன்னேனோ அவர்களிடம் இருந்து பந்துவீச்சில் துல்லியம், கட்டுக்கோப்பு இருந்ததால் என் கேப்டன்சி பணி எளிமையாக இருந்தது. 180 ரன்கள் நல்ல ஸ்கோர்தான் என்றாலும், டெல்லி அணி வலுவாக ஆடியிருந்தால் இது பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். நமன் திர், சூர்யாவும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இல்லாவிட்டால் 160 ரன்களுக்குள்தான் ஸ்கோர் இருக்கும்" எனத் தெரிவித்தார். ஆட்டங்களின் விவரம் இன்றைய ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் இடம்: ஆமதாபாத் நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே நாள் – மே 25 இடம் – ஆமதாபாத் நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள் (12 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள் (12 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள் (12 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள் (13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgegqj5g01no
-
தனித்தீவில் சிறை வைத்து ஒவ்வொரு அசைவையும் கண்காணித்த பிரிட்டன் - நெப்போலியன் என்ன செய்தார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக்கப்பட்டவர் அல்ல. அங்கிருக்கும் கார்ட்டூனிஸ்டுகள் நெப்போலியனைக் கூண்டில் அடைபட்ட விலங்காகக் காட்டினார்கள். பிரிட்டனில் அவரை வைத்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று பொதுவாக ஒரு கருத்து இருந்தது. பிரிட்டன் மண்ணிலோ அல்லது அருகில் உள்ள வேறொரு நாட்டிலோ அவரை வைத்திருந்தால் பின்னாளில் புரட்சிக்கான மையமாக அவர் மாற வாய்ப்பிருந்தது," என்று 'நெப்போலியன் இன் கேரிகேச்சர் 1795-1821' (Napoleon in Caricature 1795 – 1821) என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ஏ எம் ப்ராட்லி. நெப்போலியனை செயின்ட் ஹெலனா தீவுக்கு அனுப்பும் முடிவு உலகின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்த செயின்ட் ஹெலனா தீவுக்கு அவரை அனுப்ப தீர்மானித்தது பிரிட்டன் அரசு. பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த தீவு அது. ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்பில் இருந்து சுமார் 1,200 கி.மீ தூரம் தள்ளி இருந்தது இந்த இடம். "இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள் ஓய்வுக்காக நிறுத்தப்படும் இடமாக செயின்ட் ஹெலனாதீவு இருந்தது. பிரிட்டனின் ராணுவ முகாமைப் போல செயல்பட்ட அந்த பகுதியில் சுமார் 5,000 பேர் வாழ்ந்தனர். அவர்களில் சிலர் மடகாஸ்கரில் இருந்து அழைத்து வரப்பட்ட அடிமைகள். மற்றவர்கள் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான கப்பல்களை பராமரித்து வந்தார்கள்," என்று தனது 'டெரிபிள் எக்ஸைல், தி லாஸ்ட் டேஸ் ஆஃப் நெப்போலியன் ஆன் செயிண்ட்.ஹெலெனா' (Terrible Exile, The last days of Napoleon on St.Helena) புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரையன் அன்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் (ஃப்ரான்சைஸ் ஜோசஃப் சாண்டேமேன் வரைந்த ஓவியம்) நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனா சென்ற 27 பேர் செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார். இதைக் கடுமையாக எதிர்த்த நெப்போலியன், தனக்கு பிரிட்டனிலேயே தங்க அனுமதி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் கூறினார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் தனது கப்பலின் கேபினுக்குச் சென்ற நெப்போலியன் அடுத்த மூன்று நாட்கள் வெளியே வரவில்லை. நான்காம் நாள் பிரிட்டன் அரசுக்குத் தன் எதிர்ப்பை முறையாகக் கடிதம் எழுதித் தெரிவித்தார் நெப்போலியன். 'நெப்போலியன் தி மேன் பிஹைண்ட் தி மித்' (Napoleon the man behind the myth) என்ற தனது புத்தகத்தில், "மொத்தம் 27 பேர் நெப்போலியனுடன் செயின்ட் ஹெலனாவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் கப்பலில் ஏறும்போது நெப்போலியனும், அவரது குழுவினரும் முழுமையாக சோதிக்கப்பட்டனர். நிறைய செல்வம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஏற்கெனவே யூகித்திருந்த நெப்போலியன், அனைவரது இடுப்பில் உள்ள பெல்ட்களுக்குள் தங்க நாணயங்களைக் கட்டி மறைத்து எடுத்துச் சென்றார்," என்று குறிப்பிடுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி. இந்த நீண்ட பயணத்தில் அவர் கடல் பயணத்தின் பல துன்பங்களையும் எதிர்கொண்டார். தனது அறையிலே தங்கி நிறைய வாசித்தார். மாலுமிகளுடன் பேசி தனது ஆங்கிலத்தை மேம்படுத்த முயற்சித்தார். அக்டோபர் 24-ம் தேதி, செயின்ட் ஹெலனா தீவு நெப்போலியனின் கண் முன்னால் விரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் அவர் போர்க்கைதியாக வைக்கப்படுவார் என்று நெப்போலியனிடம், அட்மிரல் லார்ட் கீத், 1815-ம் ஆண்டு ஜுலை 31 அன்று கூறினார் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான உறவு கசந்தது இந்தத் தீவின் பரப்பளவு 122 சதுர கி.மீ. 1502-ஆம் வருடம் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இந்தத் தீவு. 1815-ஆம் ஆண்டு வாக்கில் இங்கே 3395 ஐரோப்பியர்கள், அடிமைகளாக அழைத்துவரப்பட்ட 218 கறுப்பினத்தவர், 489 சீனர்கள், 116 இந்திய மற்றும் மலேசிய நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ராணுவ ஆளுநர் ஒருவர், இந்தத் தீவை ஆட்சி செய்தார். ஒரு சிறிய பிரிட்டிஷ் படை அங்கே நிலை கொண்டிருந்தது. ஆரம்பத்தில் 'தி ப்ரையர்' என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயர்களின் எஸ்டேட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். சில நாட்களுக்குப் பிறகு அவர் லாங்வுட் ஹவுஸுக்கு மாற்றப்பட்டார். "மிகத் தீவிரமான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார் நெப்போலியன். அவர் தோட்டத்துக்குச் சென்றால் கூட பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் உடன் வருவார். இந்தத் தீவின் ஆளுநராக ஹட்சன் லோவ் வந்த பிறகு நெப்போலியனுக்கான கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரித்தன. 1816-ஆம் ஆண்டுக்குள் பிரிட்டன் அரசு தரப்புடனான அவரது உறவு மேலும் மோசமானது," என்று எழுதுகிறார் ப்ரையன் அன்வின். ஆங்கிலேயர்கள், அவருக்காக ஒரு புது வீடு கட்ட ஆரம்பித்தபோது, இனி வாழ்நாள் முழுவதும் செயின்ட் ஹெலனாவில் தான் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் நெப்போலியன். நடை பயிற்சியும் சீட்டு விளையாட்டும் நெப்போலியன் லாங்வுட் ஹவுஸில் வாசிப்பதிலேயே தன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தார். ஐரோப்பாவில் இருந்து வரும் கப்பல்கள் தனக்கான புத்தகங்களைக் கொண்டு வருவதற்காக அவர் காத்திருப்பார். நெப்போலியனின் இரண்டாவது பொழுதுபோக்கு தன்னை சந்திக்க வரும் நபர்களை நல்ல உணவும், ஒயினும் கொடுத்து உபசரிப்பது. "விருந்தோம்பலுக்காக அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட மிக அதிகமாகத்தான் பணம் செலவழிப்பார் நெப்போலியன். அவர் மதுபானத்தை அதிக அளவில் குடிக்கவும் செய்தார், பரிமாறவும் செய்தார். 1816-ஆம் ஆண்டில் மட்டும் 830 மிக விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் உட்பட 3700 ஒயின் பாட்டில்கள் அவருக்கு அனுப்பப்பட்டிருந்தன. குதிரை சவாரி செய்வது அல்லது 'தி ப்ரையர்' தோட்டங்களில் நடப்பது போன்ற நடவடிக்கைகளால் தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார் நெப்போலியன். கேப்டன் பாப்பிள்டன் எப்போதும் அவருடன் இருப்பார். நெப்போலியன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளும் பொறுப்பு அவருடையது. பல மாலை நேரங்களை தனது நண்பர் பால்கம்முடன் சீட்டு விளையாடிக் கழித்தார் நெப்போலியன்." என்று தான் எழுதிய நெப்போலியனின் சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜான் பால் பார்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியனும் அவரது கூட்டாளிகளும் செயின்ட் ஹெலனாவுக்குக் கப்பலில் சென்றபோது 'செயின்ட் ஹெலனாவின் வானிலையும் சூழலும் எனக்குப் பிடிக்கவில்லை' நெப்போலியன் வைக்கப்பட்டிருந்த லாங்வுட் ஹவுஸில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. "அங்கே பெயிண்ட் அடிக்கப்படும் வாசம், தன் உடல்நிலையை மோசமாக்குவதாகக் கூறினார் நெப்போலியன். செயின்ட் ஹெலனாவில் உள்ள வானிலையும், அதன் சூழலும் நெப்போலியனுக்கும், அவரது குழுவினருக்கும் வெறுப்பை வரவழைத்தது," என்று எழுதுகிறார் ஆடம் ஸெமோவ்ஸ்கி. "நெப்போலியனுடன் சென்றிருந்த அதிகாரிகள் அவர் முன்னிலையில் முழு அரச நெறிமுறைகளைப் பின்பற்றினர். பகல் நேரத்தில் பச்சை நிற ஹண்டர் கோட் வகை உடையையோ அல்லது வெள்ளை லினென் துணியில் கோட்டும் பேண்டுமோ அணிந்திருப்பார் நெப்போலியன். இரவு உணவின் போது முழு ராணுவ உடையில் இருப்பார் அவர். அவருடன் இரவு உணவருந்தச் செல்லும் பெண்கள் அரசவை உடைகளையும், நகைகளையும் அணிந்திருந்தனர். உணவுக்குப் பிறகு அவர்கள் சீட்டு விளையாடுவார்கள் அல்லது பேசுவார்கள். இல்லையென்றால் நெப்போலியன் ஏதாவது புத்தகம் வாசிக்க அதை அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்." நெப்போலியனின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது கண்காணிப்பில் இருந்தபோதும் தோட்டவேலை செய்வதை பொழுதுபோக்காகச் செய்தார் நெப்போலியன். இரண்டு சீனத் தொழிலாளிகள் அவருக்கு உதவியாக இருந்தனர். தாவரங்களுக்குத் தனது கைகளாலேயே நீர் ஊற்றுவார் நெப்போலியன். முழுமையாகப் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளியைப் போலவோ, போர்க்கைதியைப் போலவோ நடத்தப்படவில்லை. நடக்கவோ, குதிரை சவாரி செய்யவோ அனுமதிக்கப்பட்டாலும் அதுவும் ஒரு எல்லை வரைதான். அந்த சமயத்திலும் பிரிட்டன் அதிகாரி ஒருவர் அவருடன் இருப்பார். வீட்டுக்குள் இருந்த போதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் ராணுவ வீரர்கள் யாராவது கண்காணித்துக் கொண்டுதான் இருந்தனர். ஒருநாளைக்கு இரண்டு முறை அவர் அங்குதான் இருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரி ஒருவர் வருவார்."இரண்டு கப்பல்கள் எப்போதும் தீவை சுற்றிக் கொண்டே இருந்தன. நெப்போலியனுக்கு எந்த செய்தித்தாள்களும் வழங்கப்படவில்லை. செயின்ட் ஹெலனாவை விட்டு நெப்போலியன் தப்பிக்க நினைத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று தனது டைரியில் எழுதியிருக்கிறார் செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக இருந்த ரியர் அட்மிரல் சர் ஜார்ஜ் காக்பர்ன். ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதை அனுபவிக்கவும் ஆரம்பித்தார் அவர். அங்கு இருந்த பிரிட்டன் அதிகாரிகள் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொண்டார் அவர். அந்தத் தீவுக்கு வரும் அல்லது அந்தத் தீவின் வழியாகச் செல்லும் பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நெப்போலியனை நேரில் பார்க்க முடிவதென்பது அந்தத் தீவின் கவர்ச்சிகளுள் ஒன்றாக இருந்தது. அவர்களுடனும் நெப்போலியனின் பழக்கவழக்கம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அந்தத் தீவில் மோசமான நிலையில் நெப்போலியன் வைக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் செய்தித்தாள்களில் செய்தி பரவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முடிசூடும் உடையில் நெப்போலியன் நெப்போலியனுக்கும் ஆளுநர் லோவுக்குமான தகராறு அட்மிரல் காக்பர்னுக்கு பதிலாக 1816-ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் சர் ஹட்சன் லோவ், செயின்ட் ஹெலனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியனுக்கும், லோவுக்கும் எதிலும் உடன்பாடில்லை. "புதிய ஆளுநர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் லாங்வுட் ஹவுஸுக்கு வந்த போது நெப்போலியன் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அடுத்தநாள் அவரை சந்திப்பதாக செய்தி அனுப்பினார் நெப்போலியன். மறுநாள் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் இருந்தே நெப்போலியனுக்கு லோவைப் பிடிக்கவில்லை. லோவும், நெப்போலியனுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்" என்று எழுதினார் ஆடம் ஸெமோய்ஸ்கி. நெப்போலியனைப் பெரிதும் மதித்த ஆங்கிலேயர் ஒருவர் நெப்போலியனுக்கு இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய புத்தகங்கள் அனுப்பினார். அதைப் பறிமுதல் செய்தார் லோவ். நெப்போலியனின் பயன்பாட்டுக்கு என்று சில பொருட்களை அனுப்பி வைத்தார் அவரது தங்கை பாலின். நெப்போலியனுக்கு இவ்வளவு பொருட்கள் தேவையில்லை என்று சொல்லி அவை அனைத்தையும் நெப்போலியனிடம் சென்று சேரவிடாமல் தடுத்துவிட்டார் லோவ். லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே வலுத்த மோதல் இதற்கிடையே லோவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே இரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. "நெப்போலியன் இந்த சந்திப்புகள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். ஒரு பேரரசர் நிற்கும்போது அவர் முன் அமர்வது வழக்கமில்லை, ஆதலால் லோவும் நின்று கொண்டே இருக்க வேண்டிய சூழல் வந்தது. நெப்போலியனின் செலவுகளைக் குறைக்கச் சொல்லி லோவுக்கு செய்தி வந்தது. இதைப் பற்றி லோவ் நெப்போலியனுடன் பேச விரும்பிய போது, தனது பட்லரிடம் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளும்படி கூறினார் நெப்போலியன்," என்று தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் தாமஸ் ஆப்ரி. 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி அன்று லோவ் நெப்போலியனைச் சந்திக்கச் சென்ற போது , லோவை நீ வெறும் கணக்கர்தான், வேறு ஒன்றுமில்லை என்று பொறுமித் தள்ளினார் நெப்போலியன். நெப்போலியனின் வாழ்க்க வரலாற்றை எழுதிய கில்பர்ட் மார்ட்டினோ, "நெப்போலியன் லோவிடம், நீ ஒரு கௌரவமான மனிதன் இல்லை. மற்ற மனிதர்களின் கடிதங்களை ரகசியமாகப் படிக்கும் மனிதன் நீ. நீ ஒரு சாதாரண சிறை அதிகாரிதான், ராணுவ வீரன் இல்லை. என் உடல் வேண்டுமானால் உன் கைகளில் இருக்கலாம். ஆனால் என் ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது என்று கூறினார் நெப்போலியன்" , என்கிறார். இதைக் கேட்டதும் லோவின் முகம் சிவந்தது. அவர் நெப்போலியனிடம், "நீங்கள் ஒரு அபத்தமான மனிதர். உங்கள் முரட்டுத்தனம் பரிதாபகரமானதாக இருக்கிறது," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். அதன் பிறகு, நெப்போலியன் உயிருடன் இருக்கும்வரை அவரைச் சந்திக்க லோவ் செல்லவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,செயின்ட் ஹெலனாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நெப்போலியன் (ஆன் மரியர் வரைந்த ஓவியம்) நெப்போலியனின் உடல்நிலை மோசம் அடைந்தது இதன்பிறகு நெப்போலியனின் மன உறுதி குலைந்து போனது. ஒரே மாதிரியான வாழ்க்கை, மோசமான வானிலை, மோசமான உணவு, வாசல் மற்றும் ஜன்னல் அருகே நிற்கும் காவலர்கள், எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியாக உடல்நலம் சரியில்லாமல் போவது ஆகியவை நெப்போலியனை மோசமாக பாதித்தது. தான் எங்கு செல்ல விரும்பினாலும் அதற்கு லோவ் கட்டுப்பாடுகள் விதித்ததால் நடை பயிற்சி செய்வதையும், குதிரை சவாரி செய்வதையும் நிறுத்திவிட்டார் நெப்போலியன். 1816-ஆம் ஆண்டின் இறுதியில் நெப்போலியனுக்குக் காய்ச்சலும் இருமலும் வந்தது. பல நாட்கள் தன் உடைகளை மாற்றாமலோ அல்லது அறையில் இருந்து வெளிவராமலோ கழித்தார் நெப்போலியன். "நெப்போலியனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போன போது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார் ஆளுநர் லோவ். பின்னர் ஒரு நல்ல ராணுவ அல்லது கடற்படை மருத்துவர் ஒருவரை அனுப்பி வைப்பதாக லோவ் கூறிய போது நெப்போலியன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆளுநருக்காக ஒற்று வேலை பார்ப்பார்கள் என்று அவர் நம்பினார். பின்னர் அவர் ஹெச்எம்எஸ் கான்கொயரர் கப்பலின் டாக்டர் ஜான் ஸ்டோக் தன்னை வந்து பார்க்க அவர் அனுமதித்தார்." 52 வயதில் இறந்து போனார் நெப்போலியன் 1819-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நெப்போலியன் ஹெபடைடிஸ் நோயால் அவதிப்படுவதைக் கண்டுபிடித்தார் டாக்டர் ஸ்டோக். அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த லார்ட் லிவர்பூலுக்கு, இதைப் பற்றி, ஏப்ரல் மாதம் தெரியப்படுத்தினார் ஸ்டோக். ஆனால் நெப்போலியனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை என்று பிரதமரை நம்ப வைத்தார் லோவ். வசந்த காலத்துக்குள் நெப்போலியன் ஒரு மோசமான வியாதியால் தாக்கப்பட்டார். அது ஒருவேளை புற்றுநோயாகவோ அல்லது அல்சரின் காரணமாக ஏற்பட்ட ரத்தப்போக்காகவோ இருக்க வேண்டும். ஏப்ரல் கடைசி வாரத்தில் நெப்போலியன் ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினார். வெளிச்சம் நிறைய இருப்பதால் தனது படுக்கையை வரவேற்பறைக்கு மாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் உடல்நிலை மோசமடைந்த அவர் பலமுறை மயக்கமடைந்தார். 1821-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தனது இறுதி மூச்சை சுவாசித்தார் நெப்போலியன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியனின் மரணம் (ஸ்டீபென் சார்லஸ் டி வரைந்த ஓவியம்) பாரீஸில் மறுஅடக்கம் பின்னாட்களில் அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. "அவர் தலைமுடியில் ஆர்செனிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற கூட்டாளிகளில் ஒருவரான மார்சென், அவரது சில தலைமுடிகளை , ஞாபகார்த்தமாக எடுத்து வைத்திருந்தார். அதைப் பின்னர் அறிவியல் ரீதியாகப் பரிசோதித்த போது, நெப்போலியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டது," என்று நெப்போலியனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார் ஆலன் ஃபாரஸ்ட். தான் இறந்த பிறகு பாரீஸில் புதைக்கப்பட வேண்டும் என்று தனது இறுதிநாட்களில் ஆசை தெரிவித்தார் நெப்போலியன். அப்போதைய பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரை செயின்ட் ஹெலனாவிலேயே புதைக்க முடிவு செய்யப்பட்டது. நெப்போலியனின் அரச பாதுகாவலர்களான 12 வீரர்கள் அவரது உடலைப் புதைப்பதற்காக எடுத்துச் சென்றபோது ஒட்டுமொத்த செயின்ட் ஹெலனா தீவின் மக்களும் இந்தக் காட்சியைக் காண வந்தது. அவரது சவப்பெட்டி நீல வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் மேலே அவரது வாளும், கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தன. அவர் புதைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கழித்து பிரான்ஸ் அரசராக இருந்த லூயி ஃபிலிப் ஆணையின் பேரில், செயின்ட் ஹெலனாவில் இருந்த அவரது கல்லறையில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு , பாரீஸில் முழு அரச மரியாதையுடன் மறுஅடக்கம் செய்யப்பட்டது. -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj702l744do
-
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!
ACC போட்டிகளிலிருந்து விலக BCCI முடிவு செய்ததாக வெளியான செய்தியை BCCI செயலாளர் மறுத்துள்ளார் Published By: DIGITAL DESK 3 21 MAY, 2025 | 02:10 PM (நெவில் அன்தனி) ஆசிய கிரிக்கெட் பேரவையினால் (ACC) ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தியை சபையின் செயலாளர் தேவஜித் சைக்கியா மறுத்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காக ஆசிய கிரிக்கெட் பேரiவியின் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது. ஆனால், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். 'ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிய கிண்ணம் மற்றும் வளர்ந்துவரும் பெண்கள் ஆசிய கிண்ணம் ஆகியவற்றில் பங்குபற்றுவதில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 'இது போன்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை ஆகும். ஏனேனில் ஆசிய கிரிக்கெட் பேரவை நிகழ்வுகள் குறித்து நாங்கள் விவாதிக்கவோ, அது தொடர்பான எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவோ இல்லை. இது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு நாங்கள் எதனையும் எழுதவும் இல்லை. இப்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் மற்றும் தொடரவுள்ள ஆடவர் மற்றும் மகளிருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் விஜயம் தொடர்பிலேயே நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்' என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215324
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
சாம்சங் இந்தியா: முடிவுக்கு வந்த 9 மாத போராட்டம் - 4 கேள்விகளும் பதில்களும் படக்குறிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025 "சாம்சங் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து 346 நாள்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தென்கொரியாவை தவிர எந்த நாட்டிலும் அந்நிறுவனத்துக்கு தொழிற்சங்கம் இல்லை. இந்தியாவில் அதை மாற்றியமைத்துள்ளோம்" எனக் கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துகுமார். ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக மே 19 அன்று, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். பிரச்னை முடிவுக்கு வந்தது எப்படி? தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் இந்தியா ஆலையில் வீட்டு உபயோகப் பொருட்களான தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங்மெஷின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. சுமார் 2000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தில் ஊதிய உயர்வு, தொழிற்சங்கப் பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு கைது சம்பவங்கள், போராட்ட பந்தல் பிரிப்பு, வழக்குகள் என பிரச்னை நீண்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. படக்குறிப்பு,சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது ஒருகட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலையிட்டு இரு தரப்பிலும் சமரச உடன்பாட்டை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்து. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்வதாக சிஐடியு குற்றம் சுமத்தியது. ஒருகட்டத்தில் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்தது. அதேநேரம், இரு தரப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு மாறாக ஊழியர்களை சாம்சங் இந்தியா நிர்வாகம் பழிவாங்குவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 23 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகக் கூறி உணவுப் புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை சாம்சங் இந்தியா தொழிற்சங்கம் (சிஐடியு) முன்னெடுத்தது. இந்நிலையில், சாம்சங் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மே 19 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக, அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,CVGANESAN/X படக்குறிப்பு,சாம்சங் இந்தியா நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் மே 19 அன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சி.வி.கணேசன், சாம்சங் இந்தியா நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். "தொடக்கத்தில் நடந்த போராட்டத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் அமர்ந்து பேசி வாபஸ் பெற வைத்தேன். அது ஒரு காலகட்டம்" எனக் கூறுகிறார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். தற்போது ஊதிய உயர்வு ஒப்பந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறும் சி.வி.கணேசன், "1.4.2025 முதல் 31.3.2028 வரையிலான காலத்துக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் இது. இதற்காக தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் 31 முறை பேசியும் முடிவு எட்டவில்லை" என்கிறார். "இதைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு தொழிற்சாலையிலும் போராட்டம் நடத்தினால் மாநிலத்தில் தொழில் அமைதி என்னவாகும் என்ற எண்ணத்தில் நானே தொழிலாளியாக மாறி நிர்வாகம், தொழிற்சங்கம் என அனைவரையும் வரவழைத்துப் பேசினேன்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "பேச்சுவார்த்தையின்போது, சங்கத்தை பதிவு செய்துவிட்டு சாதித்துவிட்டீர்கள். சம்பளத்தையும் வாங்கி சாதிப்பதன் மூலம் அமைதி கிடைக்கும் என அமைச்சர் கூறினார்" என்கிறார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார், பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாம்சங் பிரச்னை தீர்ந்தால் தான் மாநிலத்தில் ஒட்டுமொத்த தொழில் அமைதியே கிடைத்தது போன்ற ஒரு தோற்றம் அரசுக்குக் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதை சரியான ஒன்றாக பார்த்தோம்" என்றார். "சாம்சங் இந்தியா நிறுவனத்தால் தொழில் அமைதியை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, உள்ளிருப்பு போராட்டம், வெளியிடத்தில் போராட்டம் என நீடித்தது. தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். "ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஊழியருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 42 ஆயிரமாக அதிகரித்திருக்கும். இந்த ஆண்டிலேயே 11 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்" என்கிறார், முத்துகுமார். நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை, சுமார் 16 ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறும் முத்துகுமார், "தொழிலாளர்களும் நிர்வாகமும் சமம் கிடையாது. தீர்மானிக்கும் இடத்தில் நிர்வாகம் உள்ளது. தற்போது, பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார். 23 பேரின் நிலை என்ன? படக்குறிப்பு,தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில் நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. பிப்ரவரி 4 அன்று, சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பாக இயங்கும் தொழிலாளர் குழுவில் சேருமாறு மிரட்டப்படுவதாக சிஐடியு குற்றம் சுமத்தியது. கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்களை, அவர்களுக்குத் தொடர்பில்லாத துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்குவதாகவும் புகார் எழுந்தது. இதற்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா நிர்வாகம், உற்பத்தி தேவைகளின் அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறியது. தங்களை பணியில் இருந்து நீக்குவதற்காக ஒப்பந்த ஊழியர்கள் மூலம் சட்டவிரோத உற்பத்தியில் சாம்சங் இந்தியா ஈடுபடுவதாகக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றையும் ஊழியர்கள் நடத்தினர். இதை அடிப்படையாக வைத்து, பணிநேரத்தில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாகக் கூறி 23 ஊழியர்களை சாம்சங் இந்தியா பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த சாம்சங் இந்தியா, "அனைத்து ஊழியர்களையும் மரியாதையுடன் நடத்துகிறோம். இதற்கு மாறாக கூறப்படும் தகவல்களை நிராகரிக்கிறோம்" எனக் கூறியது. இதன் தொடர்ச்சியாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மார்ச் 5 முதல் போராட்டம் நடைபெற்று வந்தது. இதை சரிசெய்வதற்காக சுமார் 11 முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை. "எங்கள் முன் இரண்டு பிரச்னைகள் உள்ளன. தற்போது ஊதிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்து, 23 ஊழியர்களும் வெளியில் இருந்தால் அது அவர்களுக்கு (சாம்சங் இந்தியா) மிகப்பெரிய தலைவலியாக மாறும். அதை நோக்கி எங்கள் போராட்டங்கள் தொடரும்" எனக் கூறுகிறார் முத்துகுமார். பணியிடை நீக்கம் என்பது பிரதான விவகாரம் அல்ல எனக் கூறும் அவர், "தொழிற்சங்கம் தான் பிரதானம். அதற்குக் காரணமாக இருந்தவர்களை பணியிடை நீக்கம் செய்தனர்" என்றார். இதே கருத்தை வலியுறுத்திய சாம்சங் இந்தியா சிஐடியு சங்கத்தின் கௌரவத் தலைவர் அ.சௌந்திரராஜன், "23 பேர் பணியிடை நீக்கத்தை பெரிய பிரச்னையாக பார்க்கவில்லை. நிறுவனம் இருந்தால் அதில் பழிவாங்கல் நடக்கும். சங்கமா, கோரிக்கையா என்றால் சங்கம் தான் பிரதானமானது" என்றார். அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "23 பேரின் தற்காலிக இடைநீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளோம். அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார். வெற்றி பெற்றது யார்? படக்குறிப்பு,நிர்வாகம் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலை, சுமார் 16 ஆண்டுகளாக நீடித்தது என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துகுமார் (கோப்புப் படம்) "ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை. தொழிற்சங்கத்துடன் எந்தவித உடன்பாடோ, அங்கீகாரமோ கிடையாது என சாம்சங் நிறுவனம் முடிவெடுத்தது. அதை இந்த உடன்பாட்டின் மூலம் மாற்றிக் காட்டியுள்ளோம்" எனக் கூறுகிறார், முத்துகுமார். "சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக அரசு இருந்தது. சாம்சங் செய்வது எல்லாம் சரி என்றால் அரசின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது" எனக் கூறும் முத்துகுமார், "வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், இந்த நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு உடன்பட வேண்டும் என்ற போராட்டத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது" என்கிறார். "இது முக்கியமான முன்னேற்றம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சாம்சங் இந்தியா தொழிற்சங்க கௌரவ தலைவர் அ.சௌந்திரராஜன், "எங்களுடன் பேச மறுத்த நிர்வாகம், தொழிலாளர் நலத்துறையுடன் அமர்ந்து பேசி முடிவுக்கு வந்துள்ளது" என்கிறார். போராட்டம் தொடங்கிய நாள் முதலாக, சிஐடியு முன்வைத்த கோரிக்கைளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்கவில்லை. பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரவே, இதுதொடர்பாக விளக்கம் ஒன்றையும் அந்நிறுவனம் கொடுத்தது. அதில், சட்டவிரோத போராட்டத்தை ஆலையின் உள்புறம் நடத்தி அசாதாரண சூழலை சில தொழிலாளர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறியது. தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்ப வலியுறுத்தியும் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா கூறியிருந்தது. இதுபோன்ற போராட்டங்களால் நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமின்றி ஊழியர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக, சாம்சங் இந்தியா ஊடக தொடர்பாளர் தெரிவித்திருந்தார். "ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, முதலில் கையெழுத்து போட முடியாது என சாம்சங் இந்தியா கூறியது. மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டு சிஐடியு சங்கத்தை விட்டு விலகுமாறு ஊழியர்களை நிர்பந்தம் செய்தது" எனக் கூறுகிறார் முத்துகுமார். கடைசியாக, தொழிலாளர்கள் நீதிமன்றம் செல்லலாம் எனக் கூறிய பிறகு தான் சாம்சங் இந்தியா சற்று இறங்கி வந்தாகக் கூறும் முத்துகுமார், "நீதிமன்றம் சென்றால் சம்பளப் பிரச்னை மட்டுமல்ல, வேலை நேரமும் பிரதான பிரச்னையாக மாறும். ஆகவே, இரு தரப்பிலும் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்" என்கிறார். மீண்டும் போராட்டம் நடக்குமா? சாம்சங் இந்தியா மற்றும் தொழிற்சங்கம் (சிஐடியு) ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முத்துகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சம்பள விகிதம் என்பது பிரதான உரிமை. அதில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. தற்போது தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தியில் நான்காயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் உயர் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறினார். அடுத்த 60 நாள்களுக்குள் 23 பேர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் எனக் கூறிய முத்துகுமார், "மீண்டும் சங்கத்தை ஒழிக்கும் நோக்கில் செயல்பட்டால் சட்டரீதியாகவே போராடுவோம்" என்கிறார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசியபோது, "அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறு நிர்வாகத்திடம் கூறியுள்ளேன். அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிடமும் பேசி கையெழுத்து போட வைத்தேன்" எனக் கூறினார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது குறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பாளரிடம் பிபிசி தமிழ் பேசியது. இதுதொடர்பாக, சாம்சங் இந்தியா அனுப்பியுள்ள பதிலில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் ஊழியர்களின் நலனுக்கு பிரதான முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலத்துக்கான பணிச் சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ளதாக அதன் ஊடக தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள சாம்சங் இந்தியா நிர்வாகம், "நேர்மறையான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பணியிடச் சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளோம்" என்று மட்டும் தெரிவித்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqqj4r5xzo
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 10:59 AM யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை (22) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215375
-
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு
பழைமைவாய்ந்த மன்னார் - புத்தளம் சாலையை மூடுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் - ரிஷாத் பதியுதீன் Published By: VISHNU 22 MAY, 2025 | 02:09 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் 100 வருடம் பழைமைவாய்ந்த மன்னார் புத்தளம் பாதையை மூடிவிடுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சட்டவிராேதமான நடவடிக்கையாகும். இந்த பாதை அம்பாந்தோட்டையிலோ வேறு பிரதேசங்களிலாே இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பாதைையை மூடிவிட உதவி செய்திருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் என் ஜனாதிபதியிடம் அனைத்து கட்சி மாநாட்டின்போது தெரிவித்திருந்தேன். இந்த முறையினால் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்போது பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரே தற்போது இதனை செய்ய முடியாது என தெரிவித்தார். பழைய முறையில் தேர்தலை நடத்த முடியுமான முறையில் திருத்தம் மேற்கொண்டு தேர்தலை நடத்தி இருந்தால், வெற்றிபெறும் கட்சிக்கு உள்ளூராட்சி சபையில் ஆட்சி செய்திருக்க முடிந்திருக்கும். அதேநேரம் பெரும்பான் இல்லாத சபைகளில் ஆட்சியமைக்க தற்போது பாரியளவில் உறுப்பினர்களுக்கு விலை பேசப்படுகிறது. கல்பிட்டியில் உள்ளூராட்சி சபை ஒன்றில் ஆட்சியமைக்க அரசாங்கத்தைச்சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சியில் ஒரு உறுப்பினருக்கு 25இலட்சம் ரூபா பேரம் பேசி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இது நல்லதல்ல. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாங்கள் அந்த மாற்றத்தை மேற்கொள்வோம். அத்துடன் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, பிரதமர் அந்த பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது தெரிவித்திருந்தார்கள். அந்த மக்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த பாதையை முற்றாக மூடிவிடுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக கேள்விப்பட்டேன். 15 வருடங்களுக்கு முன்னர் அந்த பாதையை நாங்கள் திறந்தவிட்டபோது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே நீதிமன்றம் சென்று அந்த வீதியை முடிவிட நடவடிக்கை எடுத்திருந்தது. பிரதேச செயலகமே இந்த வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பாதையை திறந்துவிட இவர்கள் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு வருவதற்கு கலந்துரையாடி வந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் ஒருதலைப்பட்சமாக நீீதிமன்றத்தில் தெரிவித்து, இந்த பாதையை முற்றாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஜனாதிபதி மன்னாருக்கு சென்று, இந்த பாதையை திறந்துவடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு வந்து ஒரு வாரத்துக்குள் நீதிமன்றம் இஇவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.இது பிழையான தீர்ப்பு. 100 வருடம் பழைமைவாந்த பாதை. இந்த வீதி குருணாகலையிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் மூடி இருப்பார்களா? சிறுபான்மை மக்கள் பயன்படுத்தும் வீதி என்றதாலே சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு உடன்பட்டு இந்த பாதையை முற்றாக மூடி இருக்கிறார்கள். அதனால் மக்களின் எதிர்பார்ப்பு முற்றாக வீணாகி இருக்கிறது. ஜனாதிபதியின், பிரதமரின் வாக்கு பொய் பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/215368
-
வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Published By: VISHNU 22 MAY, 2025 | 02:01 AM (நா.தனுஜா) பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். அதனையடுத்து அரசாங்கம் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறித்தது. இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை (23) மு.ப 11.00 - பி.ப 1.00 மணி வரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் இச்சந்திப்பில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் எத்தகைய காரணங்களை முன்வைத்தாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அரசாங்கத்துக்கு உண்மையிலேயே வட, கிழக்கிலுள்ள காணிகளை அபகரிக்கும் நோக்கம் இல்லை எனில், அவர்கள் மக்கள் முகங்கொடுத்துவரும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே விரும்புகிறார்கள் எனின், அதற்கென விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என இச்சந்திப்பின்போது தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215367
-
ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!
"கோல்டன் டோம்"- வான் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க புதிய திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி செய்திகள் 21 மே 2025 எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் "கோல்டன் டோம்" ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பை அமெரிக்கா தேர்வு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தமது பதவிக்காலம் முடியும் போது அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஜனவரியில், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்புக்கான தனது திட்டங்களை அறிவித்தார். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்ற "அதி நவீன" வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக, இந்த திட்டத்துக்கு 25 பில்லியன் டாலர் (18.7 பில்லியன் யூரோ) புதிய பட்ஜெட் மசோதாவில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் எதிர்காலத்தில், இதற்கான மொத்தச் செலவு இதைவிட கணிசமாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எதிரிகளிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களை எதிர்க்கும் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவார் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெனரல் குட்லின் தற்போது விண்வெளிப் படையில் விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராக உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஏழு நாட்களுக்குள், வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உதவும் ஒரு அமைப்புக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இது அமெரிக்கா எதிர்கொள்ளும் "மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களில் ஒன்று" என வெள்ளை மாளிகை தெரிவித்தது. செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், இந்த அமைப்பு நிலம், கடல் மற்றும் விண்வெளி முழுவதும் "அதி நவீன" தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். இதில் விண்வெளி அடிப்படையிலான சென்சார்கள் மற்றும் தடுப்புக் கருவிகளும் அடங்கும் என்றார். மேலும் இந்த அமைப்பில் சேர கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்,அப்போதைய கனட பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் வாஷிங்டனுக்கு பயணம் செய்தபோது, இந்த 'டோம்' திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வமாக இருப்பதாக கூறினார். அது "அர்த்தமுள்ளதாக" இருப்பதாகவும், "தேசிய நலனுக்காக" இருக்கும் என்றும் கூறிய அவர், "பிராந்தியத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கனடா அறிந்திருக்க வேண்டும்" என்றும், ஆர்க்டிக் பகுதிகளில் வரவிருக்கும் அச்சுறுத்தல்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த அமைப்பு "உலகின் மறுபக்கத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ அல்லது விண்வெளியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த அமைப்பு 2011 முதல் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை தடுக்கும் இஸ்ரேலின் இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கோல்டன் டோம் அதை விட பல மடங்கு பெரியது. ஒலியின் வேகத்தை கடந்து இயங்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் விண்வெளியிலிருந்து ஏவுகணை குண்டுகளை வீசக்கூடிய சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்புகள் (ஃபோப்ஸ் என அழைக்கப்படுவது) போன்ற பரவலான அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. "அவை அனைத்தும் வான்வெளியில் இருந்து அகற்றப்படும்," என்று கூறிய டிரம்ப், அதன் "வெற்றி விகிதம் 100% க்கு மிக அருகில் உள்ளது." என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன், அல்லது அவை வானில் பறக்கும் தருணத்தில் என பல்வேறு கட்டங்களில் அவற்றைத் தடுக்கும் திறனை அமெரிக்காவுக்கு அளிப்பதே, கோல்டன் டோம் அமைப்பின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். இந்த அமைப்பின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் ஒரே மைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயன்று, இந்தத் திட்டத்திற்கு ஆரம்பகட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும், மொத்தமாக 175 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆரம்பகட்ட முதலீடான 25 பில்லியன் டாலர் என்பது, வரிகளுக்கான அவரது 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் மசோதாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் (Congressional Budget Office) தெரிவித்துள்ளபடி, அந்த அமைப்பில் விண்வெளி சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் 20 ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு 542 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கிய புதிய ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள் மேம்படவில்லை என்று பென்டகன்(அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை) அதிகாரிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். "உண்மையில், தற்போது முழுமையான அமைப்பு எதுவும் இல்லை," என்று டிரம்ப் செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் கூறினார். "சில வகையான ஏவுகணைகள், சில பாதுகாப்பு அமைப்புகள் மட்டும் தான் உள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பு எதுவும் இல்லை... இதுபோன்ற திட்டம் இதுவரை எப்போதும் இருந்ததில்லை," என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் "அளவிலும் , நுட்பத்திலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவும் ரஷ்யாவும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள "இடைவெளிகளை பயன்படுத்த" புதிய ஏவுகணை அமைப்புகளை தீவிரமாக வடிவமைத்து வருகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyrrd3j25eo
-
தமிழின அழிப்பு நினைவக நிர்மாணம் காலப்பெறுமதி மிக்க செயல் - கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு
Published By: VISHNU 22 MAY, 2025 | 01:58 AM கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த சிறிதரன், இச்சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு தமிழ்மக்கள் சார்பில் தனது நன்றியை வெளிப்படுத்தினார். அதேவேளை ஏற்கனவே கனேடிய பிரதமர் மற்றும் பிரம்டன் நகர மேயருக்கு நன்றியை வெளிப்படுத்தி கடந்த 19 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்த கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் நேரில் கையளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கைத்தீவின் அளவிற் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை 'இனப்படுகொலை' என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழினப் படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில்; திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவுசெய்கிறேன். ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும்; கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது. தங்கள்; மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பரிகார நீதியைக் கோரிநிற்கிற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில், 'இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே' என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதிகேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது. அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணைசெய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215366
-
"சிசுவும், பிளாஸ்டிக்கும்" மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான்
20 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மே17-ம் தேதி கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு கர்ப்பிணி யானை தனது குட்டியுடன் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்க கும்கி யானையை வனத்துறை அழைத்து வந்துள்ளனர். கும்கியை பார்த்ததும் குட்டி யானை நகர்ந்தது. ஆனால், கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உடற்கூராய்வில் உயிரிழந்த பெண் யானையின், வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது என தெரியவந்துள்ளது. உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். மேலும் யானையின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லீரல் கடுமையாக வீங்கி பாதிக்கப்பட்டிருந்தது என வன கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2qqq41e10o
-
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
Published By: VISHNU 21 MAY, 2025 | 09:50 PM வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் புதன்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது…. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது கைதுசெய்துள்ளனர். காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரை நாளையதினம் வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/215362
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் அல் அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர் - பிபிசி 21 MAY, 2025 | 05:05 PM காசாவின் அல் அவ்டா மருத்துவமனை இஸ்ரேலிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார் என பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனை முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளது, வெளியிலிருந்து நோயாளர்களை உள்ளே எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் ஒன்று மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது, டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் கேட்க முடிகின்றது 400-500 மீற்றர் தொலைவில் இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவரின் குரல் துண்டிக்கப்பட்டுவிட்டது என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அனுப்பிசெய்தியில் நான் பாதுகாப்பாகயிருக்கின்றேன், ஆனால் நிலைமை மிக மோசமாக உள்ளது என அல் அவ்டா மருத்துவமனை இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார். தடைகள் காரணமாக மருத்துவ பொருட்கள் போதாமையினால் இந்த மருத்துவமனை இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/215345
-
இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் 300 படகுகள் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன - வர்ணகுலசிங்கம்
21 MAY, 2025 | 04:50 PM அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்டு வந்த NPP 310 படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்துகொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது. பாராளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை. உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும். தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்கு உள்ளவர்களை வழிக்கு கொண்டுவர முடியும். அரசு காணி சவீகரிப்பு தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக்காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீகக் காணிகள் இவை. யுத்தம் மற்றும் வேறு காரணங்களால் மக்கள் குறத்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். பலர் வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் இக்காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கிறோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215340
-
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 21 மே 2025, 16:02 GMT இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும், ஜனாதிபதித் தலைமையில் நடைபெறுகின்ற நிலையில், இம்முறை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெறும் என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண கடந்த 16ம் தேதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். ''2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான கட்டளையிட்ட, இந்த நாட்டில் தற்போது உயர்நிலையிலுள்ள மூன்று மார்ஷல்களும், அதேபோன்று, ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.'' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னணியில், அது தொடர்பில் நாட்டில் மக்கள் மத்தியில் சர்ச்சையாக நிலைமை தோன்றியிருந்தது. இந்த நிகழ்வானது, ஜனாதிபதி தலைமையில் நடைபெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விட ஆரம்பித்திருந்தனர். ''நான் அவரின் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன். அவரது வேலைப்பளுவான வாழ்க்கையில் ஐந்து நிமிடங்களை இந்த நிகழ்விற்காக ஒதுக்கிடுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். அனைத்து ராணுவத்திற்காகவும் வழங்கப்படும் கௌரவமாக நாம் இதனை பார்க்கின்றோம்.'' என இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியல் அட்மிரல் (ஓய்வு பெற்ற) டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறும் என கடந்த 18ம் தேதி ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண மீண்டும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ''ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொள்ளவுள்ளார். அதேபோன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், மூன்று மார்ஷல்களும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்கின்றனர்" என ராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோண குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேசியது என்ன? பட மூலாதாரம்,PMD SRI LANKA இதன்படி, கடந்த 19ம் தேதி நடைபெற்ற ராணுவ வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துக்கொண்டு பேசினார். ''இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எமது படையினர் பெரும்பாலானோர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த பெயர் பலகை நிரம்புவதற்கு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோன்று பெரும்பாலானோர் நிரந்த மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர். இந்த நாடு அவர்களுக்கு எப்போதும் கடன்காரர்கள் தான்." என்று கூறினார் அநுர குமார திஸாநாயக்க. மேலும், "இந்த பெயர் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கின்றதா?, தனது கணவரின் பெயர் இருக்கின்றதா? தனது தந்தையின் பெயர் இருக்கின்றதா? என்பதை விரல் விட்டு தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மாத்திரமா, இல்லை வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகள், தனது கணவரை இழந்தோர் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக்கொண்டு தனது கணவர், பிள்ளைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து பெற்றோருக்கும் தனது பிள்ளை ஒரு இரத்தினக்கல். அதிகாரத்திற்காக வடக்கிலும், தெற்கிலும் தமது பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்திற்காக ஒன்றுமே அறியாதோரின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டனர். தெற்கிலும் சரி, வடக்கிலும் சரி. அவ்வாறே இடம்பெற்றது. அனைத்து படையினரதும் கைகளிலுள்ள துப்பாக்கி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக்கூடாது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். ஜனாதிபதியின் பிரவேசம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்ட கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஜனாதிபதி ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனியார் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ''ஜனாதிபதி முதலில் இருந்தே இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள தீர்மானித்திருந்தார். ஏற்பாடுகள் மாத்திரம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதற்காகவே பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நிகழ்வு நடைபெறுகின்றது என முதலில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்து வெளியிடும் போது ஏற்பட்ட பிரச்னையே இதற்கான காரணம். ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலிலேயே தீர்மானித்திருந்தார்.'' என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,UDAYA GAMMANPILLA FACEBOOK படக்குறிப்பு,பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்து, பின்னர் நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறித்து எதிர்க்கட்சிகள் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, ''விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சத்தினால், ஜனாதிபதி ராணுவ வெற்றி தேசிய நிகழ்வை புறக்கணிக்க தீர்மானித்திருந்தாலும், தேசபற்றாளர்களினால் வெளியிடப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக ஏற்பட்ட கடும் அழுத்தத்தினால் விருப்பமில்லையேனும், ராணுவ வெற்றி நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டி ஏற்பட்டது" என்கிறார். மேலும், "எனினும், ராணுவ வீரர்கள் என்ற சொல்லை பயன்படுத்தாதிருப்பதற்கு ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். ராணுவ வீரர்களை படையினர் என்றே விழித்திருந்தார். அனைத்து ராணுவ வீரர்களும் படையினர் என்ற போதிலும், அனைத்து படையினரும் ராணுவத்தினாராக முடியாது. படையினர் ராணுவ வீரராகுவதற்கு, அவர் போர் களத்தில் போரில் ஈடுபட்டிருக்க வேண்டும். கௌரவத்திற்குரிய ஜனாதிபதி அவர்களே, ராணுவத்தினருக்கு முன்பாக நீங்கள் உண்மையாக பேசியிருக்க வேண்டும். மாறாக இனவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதத்துடன் செயற்படுகளின் புலம்பெயர் தமிழர்களின் முன்னிலையிலேயே இந்த பேச்சை பேசியிருக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதிக்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றோம்" என உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,KAVINDA JAYAWARDANA படக்குறிப்பு,ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ராணுவ வெற்றி நிகழ்விற்கான ஜனாதிபதியின் பிரவேசம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி, காவிந்த ஜயவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். ''விஜித்த ஹேரத் வெளியிட்ட கருத்தில் எங்களுக்கு பிரச்னையொன்று உள்ளது. இந்த நிகழ்விற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ராணுவ வெற்றி விழா கொண்டாட்டம், 2025 மே மாதம் 19ம் தேதி மாலை 16 மணிக்கு என குறிப்பிட்டு, அதில் கௌரவ பிரதி பாதுகாப்பு அமைச்சர் என அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இல்லை. மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவின் தலைமையில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், இந்த அழைப்பிதழை வெளியிட்டது யார் என்ற கேள்வி எழுகின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்புகின்றார். 'தமிழர்களை சமாதானப்படுத்த ஜனாதிபதி செயற்படுகிறார்' பட மூலாதாரம்,WIMAL WEERAWANDSA FACEBOOK படக்குறிப்பு,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச புலம்பெயர் தமிழர்களை சமாதானப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார். ''அவர் இந்த நிகழ்விற்கு வர இருக்கவில்லை. எனினும், அவர் வரவில்லை என்பது முன்பே தெரியவந்தமையினால் சமூகத்திலிருந்து வெளியிடப்பட்ட அழுத்தங்கள் காரணமாக விருப்பமின்றி அவர் வருகைத் தந்தார். அவர் அந்த இடத்தில் நிகழ்த்திய உரையில் என்ன சொல்கின்றார். அதில் உரையில் தடை செய்யப்பட்ட பல சொற்கள் உள்ளன. ராணுவம் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. உயிர் நீத்த படையினர், உயிர் நீத்த படை உறுப்பினர்கள் என்றே கூறுகின்றார். மிகவும் மோசமான செயற்பாடு. வராதிருந்திருந்தால் அதை விட சிறந்ததாக இருந்திருக்கும்" என விமர்சித்துள்ளார் விமல் வீரவங்ச. மேலும், "புலம்பெயர் தமிழர்கள் கோபமடைவார்கள் என்ற அச்சமே அதற்கான காரணம். அந்த அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருந்தார். அடுத்த தடை செய்யப்பட்ட சொல். பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற சொல் எங்கும் இல்லை. எமது ராணுவத்தினர் 30 வருடங்கள் யாருடன் போராடினார்கள். கிளர்ச்சியாளர்களுடனான போராடினார்கள். போருக்காக போராடவில்லை. சமாதானத்திற்காக போராடினார்கள். அப்படியென்றால் பயங்கரவாதிகளும் சமாதானத்திற்காகவே போராடியுள்ளனர். தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது சமாதானத்திற்காக. ஸ்ரீமகா போதியில் இருந்த பக்தர்களை கொலை செய்தது சமாதானத்திற்காக. சமாதானத்திற்காக நன்றாக செய்துள்ளனர். வடக்கிலும், தெற்கிலும், அதிகாரத்திற்காக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறுகின்றார். வடக்கில் கேட்கவில்லை. தெற்கில் எங்கே கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெற்கில் கிளர்ச்சி ஏற்படுத்துவதற்காக தேவை யாருக்கும் கிடையாது.'' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y66ln1neqo
-
மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்
"காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினி" - உலக அரங்கில் அனுதாபத்தை இழக்கிறதா இஸ்ரேல்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உணவுக்காக ஏங்கும் குழந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் அதற்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்காக இஸ்ரேல் பல ஆயுதங்களை வைத்திருந்தது. அந்த ஆயுதங்களில் பலவும் அமெரிக்காவால் வழங்கப்பட்டவை, அல்லது அமெரிக்கா வழங்கிய நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டவை. இந்த நெருக்கடியான நேரத்தில் இஸ்ரேலின் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அதனுடன் நின்றன. 2023 அக்டோபர் 7 அன்று 1,200 பேர் உயிரிழந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு பிற நாடுகள் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தின. பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, ஹமாஸ் 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து, காஸா பகுதிக்குள் இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகின. அந்த படங்கள் உலகளாவிய அளவில் இஸ்ரேலுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தின. ஆனால் இப்போது இஸ்ரேல் மீதான அந்த அனுதாபம் மெல்ல குறைந்து வருவது போல தோன்றுகிறது. குறிப்பாக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை கருத்தில் கொள்ளும்போது, இவ்வாறு கூறலாம். பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கருத்து என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மார்ச் மாதம் போர் நிறுத்தம் முடிவடைந்ததிலிருந்து இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களால் காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மூன்று நாடுகளும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் "புதிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும்" என்று அந்த நாடுகள் கூறுகின்றன. அதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அத்தகைய தாக்குதல்கள் மட்டுமே "ஹமாஸை அழித்து மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும்" என்று கூறுகிறார். 'இதற்குப் பிறகு முழு காஸாவும் இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்' என்று நெதன்யாகு கூறுகிறார். மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டு, போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் சேர்ந்து "காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதை கடுமையாக எதிர்ப்பதாக" கூறியுள்ளன. மேலும் "காஸாவில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு தாங்க முடியாதது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு மூன்று நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. அக்டோபர் 7 அன்று நடந்த "கொடூரமான தாக்குதலைத்" தொடர்ந்து, இஸ்ரேலுக்கு "பயங்கரவாதத்திலிருந்து தனது குடிமக்களைப் பாதுகாக்க உரிமை உண்டு" என்று அவர்கள் நம்பினர், ஆனால் "இப்போது தாக்குதல்களைத் தொடர்வது முற்றிலும் தேவையற்றது" என்று நம்புகின்றனர். "நெதன்யாகு காஸாவிற்கு அனுப்ப அனுமதிக்கும் உணவின் அளவும், அவர் குறைந்தபட்ச தேவையான உணவு என்று அழைக்கும் அளவும் போதுமானதாக இல்லை." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவிற்கு உதவி கிடைக்கவில்லை என்றால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்தார். "அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் முடிந்தவரை பலரைக் காப்பாற்ற விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்- ஐக்கிய நாடுகள் சபை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவில் உணவுக்காக தவிக்கும் மக்கள். பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய டாம் பிளெட்சர், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா வெளியிட்ட கூட்டு அறிக்கையைப் பாராட்டினார். காஸாவுக்குள் அதிகமான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதில் உலக நாடுகள் "எங்களுடன் இணைய வேண்டும்" என்று உலக நாடுகளை ஐ.நா. அழைப்பதாக டாம் பிளெட்சர் கூறினார். திங்களன்று உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற ஐந்து லாரிகள் காஸாவிற்கு வந்ததாக கூறிய பிளெட்சர், அந்த உதவி "கடலில் ஒரு துளி மட்டுமே" என்று விவரித்தார். 10 வார மனிதாபிமான முற்றுகைக்குப் பிறகு, திங்களன்று காஸாவிற்கு "அத்தியாவசியப் பொருட்கள்" கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் அனுமதித்தது. பதிலடி கொடுக்கும் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் புதிய தாக்குதல்களுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவை கடுமையாக சாடியுள்ளார். "ஹமாஸ் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பி, ஆயுதங்களை ஒப்படைத்து, அதன் தலைவர்களை நாடுகடத்த ஒப்புக்கொண்டு, தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் போர் முடிவுக்கு வரக்கூடும்" என்று நெதன்யாகு தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில் எந்த நாடும் இதை விடக் குறைவானதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், இஸ்ரேல் நிச்சயமாக அவ்வாறு செய்யாது என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்ட வாரண்டின் கீழ் நெதன்யாகு தேடப்படுகிறார், ஆனால் அதை "யூத எதிர்ப்பு" என்று நிராகரித்துள்ளார் நெதன்யாகு . காஸா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர நெதன்யாகு கடும் சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தார், ஏனெனில் ஒரு சர்வதேச கணக்கெடுப்பு அங்கு பஞ்சம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான லண்டன் உச்சிமாநாட்டில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை "சர்வதேச சட்டம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. காஸா மக்கள் முழுவதும் ராணுவ பலத்தினால் துன்புறுத்தப்படுகிறார்கள்" என்று விவரித்தார். "மக்கள் மனிதாபிமான உதவிகளைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும், தடையின்றியும் அணுக வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காஸாவிற்குள் அத்தியாவசிய பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே அனுமதிப்பது தொடர்பான நெதன்யாகுவின் முடிவை அவரது கடுமையான தேசியவாத கூட்டணியின் கூட்டாளிகளும் கடுமையாக கண்டித்துள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், "நெதன்யாகுவின் இந்த முடிவு ஹமாஸுக்கு தைரியமும் ஊக்கமும் அளிக்கும். அதே சமயம் நமது பணயக்கைதிகள் சுரங்கங்களில் அழுகிக் கொண்டே இருப்பார்கள்" எனக் கூறினார். 2007ஆம் ஆண்டு பென்-க்விர் இனவெறியை ஊக்குவித்ததாகவும், இஸ்ரேல் ஒரு "பயங்கரவாத" அமைப்பாகக் கருதும் ஒரு தீவிரவாத யூதக் குழுவை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். காஸாவின் சமீபத்திய நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திங்களன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் மட்டுமே காஸாவை அடைந்தன. இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை தொடர்ந்தபோது, திங்களன்று மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஐந்து லாரிகள் மட்டுமே காஸாவுக்குள் நுழைந்தன. அவர்கள் மேற்கொண்ட வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களில் பல இளம் குழந்தைகள் உட்பட ஏராளமான பாலத்தீனப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்தும் அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டதுக்கு எதிரானவர்கள், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா அரசுகள் மிகவும் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறுவார்கள். அவர்களில் பலர் காஸாவில் ஏற்பட்ட மரணம், அழிவு மற்றும் பாலத்தீன பொதுமக்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்த்து பல மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாலத்தீன பிரதேசத்தின் மறுபுறத்தில் உள்ள மேற்குக் கரையில் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் சில நேரங்களில் போர் அரசியலில் ஒரு நிகழ்வு அந்த சூழ்நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகுந்த குறியீட்டு முக்கியத்துவம் பெற்றிருப்பதால், அது அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. மார்ச் 23 அன்று காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 15 துணை மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதும் அத்தகைய ஒரு சம்பவமாக உள்ளது. இரண்டு மாத கால போர் நிறுத்தம் முறிந்த பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது. இஸ்ரேல் மீதான அணுகுமுறை மாறியதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,VIDEO GRAB படக்குறிப்பு,மார்ச் 23 அன்று, காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 துணை மருத்துவர்களும் உதவிப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தத்திற்குப் பிறகு, போர் மீண்டும் தொடங்கிய ஐந்து நாட்கள் கழித்து, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு ஒன்று மருத்துவ வாகனங்களைத் தாக்கியது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களும், குண்டு துளைத்த அவர்களின் வாகனங்களும் மணலில் புதைந்தன. இந்தப் புதைகுழியில் ஒரு சடலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட ஒரு மொபைல் போன் வீடியோ, இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்று பொய்யானது என்பதை நிரூபித்தது. அந்த வாகனங்கள் முகப்பு விளக்குகள் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் "சந்தேகத்திற்கிடமான முறையில்" நகர்ந்ததால், இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று இஸ்ரேல் முன்னர் கூறியது. இந்த வாகனங்கள் நகர்வதற்கு முன்னர், ராணுவத்திற்கு அவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை அல்லது அதற்கு ராணுவத்தால் முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. கொல்லப்பட்ட துணை மருத்துவர்களில் ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், காயமடைந்தவர்களுக்கு உதவி கோரி வாகனங்களின் விளக்குகள் எரிந்திருப்பதைக் காட்டியது. பின்னர், இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கொல்லப்பட்டவர்கள் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டது. அப்போதிருந்து, இஸ்ரேலின் வழக்கமான எதிரிகளிடையே கவலை வேகமாக வளர்ந்துள்ளது மட்டுமல்லாமல், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தலைமையிலான அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, "நெதன்யாகு அரசாங்கம் இந்த கொடூரமான செயல்களை தொடரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை அகற்றாவிட்டால், பதிலுக்கு நாங்கள் இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அந்த அறிக்கை கூறுவது தான் இஸ்ரேலுக்கு இன்னும் முக்கியமான விஷயம். அவை எந்த மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்பதை அந்த அறிக்கை விரிவாகக் கூறவில்லை. இந்த நாடுகள் இஸ்ரேல் மீது சிலவகையான தடைகளை விதிக்க வாய்ப்பு இருக்கலாம். பாலத்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய நகர்வாக இருக்கலாம். ஏனெனில் ஜூன் தொடக்கத்தில் நியூயார்க்கில் சௌதி அரேபியாவுடன் இணைந்து நடைபெற உள்ள ஒரு மாநாட்டில், 148 நாடுகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து பிரிட்டன் பிரான்சுடனும் பேசியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த நாடுகள் ஹமாஸுக்கு வெற்றியைத் தரும் என்று கூறியுள்ளது. ஆனால் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவின் அறிக்கைகளில் வெளிப்படும் தொனி, இஸ்ரேல் அவற்றின் மீது அழுத்தம் செலுத்தும் திறனை இழந்து வருவதைக் காட்டுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpqee374n29o
-
இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர் - சர்வதேச மாநாட்டில் சுகாதார அமைச்சர்
21 MAY, 2025 | 04:49 PM மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ இதன் காரணமாக இலங்கையின் சுகாதார துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 முதல் 2025 முதல் ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 726 மருத்துவர்கள், 116 மருத்துவ அதிகாரிகள், 2800 மருத்துவ தாதிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ள அமைச்சர், எங்கள் சுகாதார பணியாளர்களை உருவாக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிட்ட பின்னர் நாங்கள் தற்போது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215342
-
மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் - அருட்தந்தை எஸ்.மாக்கஸ்
மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது; இதற்கு மக்கள் ஒருபோதும் துணை நிற்கக்கூடாது - அருட்தந்தை எஸ்.மாக்கஸ் 21 MAY, 2025 | 04:07 PM மன்னார் மாவட்டத்தில் மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களும் முன் நின்று செயற்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ். மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று புதன்கிழமை (21) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மக்களின் எவ்வித அனுமதியுமின்றி கணிய மணல் அகழ்வு நடவடிக்கை மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மக்களின் எதிர்கால பிரச்சினைகளை உள்வாங்காமல், அரச திணைக்களங்களின் ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது, இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு வருகின்ற எந்த நிறுவனங்களுக்கும் மக்கள் எவ்வித உதவிகளையும் வழங்க வேண்டாம். இரண்டு கணிய மணல் அகழ்வு நிறுவனங்களும் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பலரை பணம் கொடுத்து வாங்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களை ஏமாற்றி, மக்களின் வாழ்வாதாரத்துக்காக தாம் கை கொடுப்பதாக கூறி, மக்களே இத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. மேலும், மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி காணியை தமக்கு சொந்தமாக்கிக்கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக போராட முன்வர வேண்டும். மக்கள் இத்திட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதியை வழங்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/215335
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது - இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரி கடும் சீற்றம் Published By: RAJEEBAN 21 MAY, 2025 | 02:03 PM இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது என இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் சாடியுள்ளார். ஒரு நல்லறிவு உள்ள நாடு பொதுமக்களிற்கு எதிராக போர்தொடுக்காது, குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக கொல்லாது, மக்களை மிகப்பெரிய அளவில் இடம்பெயரச்செய்யாது என இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளரும் இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் பிரதி பிரதானியுமான யயிர் கொலான் வானொலி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறவெறிக்காலத்து தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் தமது வரலாறு முழுவதும் படுகொலைகளை துன்புறுத்தல்களை சந்தித்த யூதமக்கள், தற்போது முற்றிலும் மனச்சாட்சிக்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்துக்களிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்து இஸ்ரேலின் வீரமிக்க படைவீரர்களிற்கும், எதிரான மூர்க்கத்தனமான தூண்டுதல் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்தக் கருத்துக்களை "எங்கள் வழக்கமான மற்றும் ரிசர்வ் வீரர்களுக்கு எதிரான மோசமான இரத்தக்களரி அவதூறு" என்று அழைத்தார். அதே நேரத்தில் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கோலன் "தெரிந்தே பொய்களைப் பரப்புகிறார் இஸ்ரேலையும் ஐ.டி.எஃப்-ஐயும் உலகின் பார்வையில் அவதூறு செய்கிறார்" என்று கூறினார். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் எகுட் பராக் கோலனை "ஒரு துணிச்சலான நேரடியான மனிதர்" என்று அழைத்தார். மேலும் அவரது கருத்துக்கள் இஸ்ரேலின் அரசியல் தலைவர்களைக் குறிக்கின்றன வீரர்களை அல்ல என்றும் கூறினார். https://www.virakesari.lk/article/215323
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கே? இந்தியா - பாகிஸ்தான் மோதலில் விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்பு பணியில் இந்திய ராணுவ வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி பதவி, பிபிசி செய்தியாளர் 21 மே 2025, 02:14 GMT இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பத்து நாட்கள் ஆன நிலையில் இன்னும் விடை கிடைக்காத பல வினாக்கள் எஞ்சி நிற்கின்றன. ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இவற்றை 'பயங்கரவாதிகள் மறைந்து இருந்த முகாம்கள்' என்று இந்தியா கூறியது. இதற்குப் பிறகு, எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான், டிரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின் போதும் அதற்குப் பின்னரும், இரு தரப்பினரும் பரஸ்பரம் பலவிதமான கூற்றுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தக் கூற்றுகளில் சில உறுதிப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. இந்த முழு சம்பவத்திலும், பல்வேறு ராணுவ, ராஜ்ஜிய மற்றும் அரசியல் தொடர்பான கேள்விகள் உள்ளன. அவற்றுக்கு இதுவரை நேரடியாக பதில் கிடைக்கவில்லை அல்லது விடையளிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் ராஜ்ஜிய விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் விடை கிடைக்காத வினாக்களுக்கு பதிலை நிபுணர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்வோம். படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நடத்தியது யார்? பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் ஒருவர் காஷ்மீரி, இருவர் பாகிஸ்தானியர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். காவல்துறை கூற்றுப்படி, அனந்த்நாக்கில் வசிக்கும் ஆதில் ஹுசைன் டோகர், ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா பாய் ஆகிய 3 பேரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றிக் குங்குமத்தை அழித்துவிட்டனர், எனவே இந்தியா அவர்களின் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டது. இந்தியா நடத்திய இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார். ஆனால் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. எனவே பிபிசி இந்தக் கேள்வியை ராணுவ பிரிகேடியர் (ஓய்வு) ஜீவன் ராஜ்புரோஹித்திடம் கேட்டது. நமது கேள்விக்கு பதிலளித்த பிரிகேடியர் ராஜ்புரோஹித், "இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பது கடினம், ஏனென்றால் இவர்களுக்கு உள்ளூர் ஆதரவு வலையமைப்பு உள்ளது. இரண்டாவதாக, அவர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து உதவி கிடைக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இணைந்து, இந்தியா பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க, பயங்கரவாதிகளைக் கொல்வது மட்டுமே போதுமானதல்ல. அதை இயக்கும் முழு கட்டமைப்பையும் தகர்க்க வேண்டியது அவசியம்." "இந்த பயங்கரவாதிகளைக் கொல்வதை விட பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் தொடர்பான முழு சித்தாந்தத்தையும் ஒழிப்பது மிக முக்கியமானது. ஒருசில பயங்கரவாதிகளைக் கொல்வதால் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது" என்று அவர் கூறுகிறார். எல்லை தாண்டிய தாக்குதல்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். பிபிசி உட்பட பல ஊடக அமைப்புகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசியுள்ளன. இருப்பினும், அரசு தரப்பில் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இங்கு எழும் கேள்வி என்னவென்றால், எல்லையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் எல்லைப் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டாமா? என்பதுதான். இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராணுவ ஏர் மார்ஷல் (ஓய்வு) திப்தேந்து செளத்ரி, "இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு என சில நிலையான தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் பிரத்யேக நெறிமுறை உள்ளது. காஷ்மீரின் எல்லைப் பகுதியில் மக்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது. ஜம்முவிலும், பஞ்சாபிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது" என்று கூறுகிறார். "எல்லை அருகே வசிக்கும் மக்கள் இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக ஷெல் தாக்குதலை எதிர்கொண்டுள்ள அவர்கள், ஏற்கனவே தயாராக உள்ளனர். பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன, அவசர நிலையை சமாளிக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சைரன் ஒலிக்கும் போதோ அல்லது மின்தடை ஏற்படும்போதோ என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார். "போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் போது அல்லது ராணுவம் நிலைநிறுத்தப்படும் போது மட்டுமே, மக்களை அங்கிருந்து அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் எல்லைப் பகுதிகள் காலி செய்யப்படுகின்றன. அதற்கு போதுமான நேரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது போர்ச்சூழல் இல்லை என்பதால், எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படவில்லை. திடீரென்று ஷெல் தாக்குதல் நடக்கிறது, எனவே எந்தவித முன்னெச்சரிக்கையும் கொடுக்க முடியாது" என்று அவர் விளக்கமாக விடையளிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மையா இல்லை பொய்யா? ஜம்மு காஷ்மீரின் பாம்போர் பகுதியில் பெரிய அளவிலான உலோகத் துண்டு ஒன்று விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக இந்தியா எந்தவொரு தகவலையும் பகிரவில்லை. மறுபுறம், இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தியிடம் கேட்கப்பட்ட போது, "நாம் போர் சூழலில் இருக்கிறோம், இழப்புகளும் அதன் ஒரு பகுதியாகும். தற்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் நமது நோக்கங்களை அடைந்துவிட்டோமா? பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா? அதற்கு பதில் ஆம் என்பதே." என்று பதிலளித்தார். "தற்போது கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. அது எதிரிகளுக்கு சாதகமாக அமையலாம்... இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்... நமது விமானிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்" என்று ஏர் மார்ஷல் பார்தி கூறினார். பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, "அவர்களின் விமானங்கள் நமது எல்லைக்குள் நுழைவதைத் தடுத்துவிட்டோம். அவற்றின் சிதைவுகள் எங்களிடம் இல்லை" என்றார். ஏர் மார்ஷல் செளத்ரியின் கூற்றுப்படி, ஒரு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் போது இழப்புகளை பகிரங்கமாக வெளியிடலாமா வேண்டாமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. "உதாரணத்திற்கு பாலகோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நமது சாதனைகளை பகிரங்கமாக வெளியிட நாங்கள் தயாராக இல்லை. இருந்தபோதிலும் அப்போது வெளியுறவு அமைச்சகம் பகிரங்கமாக தகவல்களை அளித்து வந்தது. பாதுகாப்பு அமைச்சகமும் பின்னர் அதில் இணைந்தது. பாதுகாப்பு அமைச்சகம் களத்திற்குள் வந்த நேரத்தில், நிலைமை மாறியிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் பிடிபட்டார். அதற்குப் பிறகு, உலகின் முழு கவனமும் தடம் மாறிவிட்டதால், பயங்கரவாதத்தை குறிவைக்கும் இந்தியாவின் அடிப்படை நோக்கம் மாறிவிட்டது." "ராணுவத்திற்கு இழப்புகள் ஏற்படும். இது அவர்களின் வேலையின் ஒரு பகுதி. அது எவ்வளவு என்பதோ, எண்ணிக்கையோ முக்கியமானதல்ல. எத்தனை ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது முக்கியமல்ல. நமது அடிப்படை நோக்கத்தில் நாம் வெற்றி பெற்றோமா என்பதுதான் முக்கியமானது. இழப்புகள் இருக்கும், ஆனால் முக்கியமான நோக்கம் எட்டப்பட்டதா என்பதே முக்கியம்" என்று ஏர் மார்ஷல் செளத்ரி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை இந்தியா - அமெரிக்கா ஆலோசனை விவரம் மோதலில் ஈடுபட்டிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை வெளியிட்டார். தனது அரசாங்கத்தின் மத்தியஸ்தம் காரணமாக இரு நாடுகளும் "உடனடியாகவும் முழுமையாகவும் மோதலை நிறுத்த" ஒப்புக்கொண்டதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் கூறினார். மறுபுறம், இந்த சண்டை நிறுத்தம் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) முன்முயற்சியின் பேரில் நடந்ததாக இந்தியா கூறியது. டிரம்பின் கூற்றுகளை இந்தியா மறுக்கவில்லை, அதே நேரத்தில் அவற்றை உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய தூதர் திலீப் சிங்குடன் பிபிசி பேசியது. இது தொடர்பாக பேசிய அவர், "பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. இதற்குப் பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் பேசியிருக்க வேண்டும். சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம், ஆனால் முன்முயற்சி பாகிஸ்தானிடமிருந்து வர வேண்டும் என்று இந்தியா கூறியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு பாகிஸ்தான் தனது டிஜிஎம்ஓவை இந்தியாவின் டிஜிஎம்ஓவைத் தொடர்பு கொள்ள வைத்தது. நமது டிஜிஎம்ஓ சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் சண்டைநிறுத்தம் செயல்படுத்தப்பட்டிருக்கும்" என்று ஊகிக்கிறார். "அமெரிக்காவுடனான உறவை இணக்கமாக வைத்திருப்பது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. பல விஷயங்கள் நெருக்கடியில் உள்ளன. இந்த உறவு அதிபர் டிரம்புடன் மட்டும் நின்றுவிடவில்லை" என்று அவர் கூறுகிறார். எதிர்ப்பும் போர் நிறுத்தமும் சண்டை நிறுத்தம் எவ்வாறு முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த முழுத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகள், சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கை தெளிவாக விளக்குமாறும் கேட்கின்றன. இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டால், அது தொடர்பாக அரசாங்கம் எதிர்க்கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த வினாவிற்கு விடையளிக்கும் திலீப் சிங், "அப்படி எந்தவித நெறிமுறைகளும் இல்லை. இதுபோன்ற அதிமுக்கியமான மற்றும் ராணுவ நடவடிக்கைகளில், அரசாங்கம் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும். எனவே, நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாதவர்களிடமிருந்து ஆலோசனையை பெற முடியாது. நடவடிக்கையின் விவரங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. நடவடிக்கை பற்றிய தகவல்களை வெளிப்படையாக சொல்வது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்" என்று சொல்கிறார். டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்து கல்லூரியின் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் இதுபற்றி கூறுகையில், ராணுவக் கொள்கை விஷயங்களில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்ததற்கான முன்னுதாரணம் எதுவும் இல்லை என்கிறார். "1971 இந்தியா-பாகிஸ்தான் போரை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அப்போதும் போர் உத்தி குறித்து எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. நாடாளுமன்ற அமைப்பில், ராணுவம் தொடர்பான முடிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை, அவை பின்னர்தான் விவாதிக்கப்படுகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "ராணுவம் தொடர்பான முடிவுகளை எடுப்பது ராணுவ உளவுத்துறை தொடர்பான விவரங்களை பெறுபவர்கள் தான். அதேபோல சண்டை நிறுத்தம் தொடர்பான முடிவை எடுப்பதும் அவர்கள் தான். எனவே, எதிர்க்கட்சிகளிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கவோ, கேட்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது" என்று பேராசரியர் அரசியல் நிபுணரும் அரசியல் அறிவியல் பேராசிரியருமான சந்திரசூட் சிங் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04eelkpwwko