Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது; பி குழுவில் அரை இறுதிக்கு நான்கு அணிகளும் போட்டி Published By: VISHNU 25 FEB, 2025 | 08:58 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த பி குழுவுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக நாணய சுழற்சி நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய இப் போட்டி மழை காரணமாக கைவிடப்படுவதாக மாலை 5.30 மணிக்கு உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டது. இப் போட்டி கைவிடப்பட்டதால் இக் குழுவிலிருந்து நான்கு அணிகளும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறந்த வண்ணம் இருக்கிறது. ஏ குழுவில் இருந்து இந்தியாவும் நியூஸிலாந்தும் ஏற்கனவே அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுவிட்டன. பி குழுவில் இன்றைய போட்டி கைவிடப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவும் 3 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தலா ஒரு தோல்வியுடன் முறையே 3ஆம், 4ஆம் இடங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் லாகூரில் நாளை மோதவுள்ளன. அப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு சற்று அதிகரிப்பதுடன் தோல்வி அடையும் அணி முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிவரும். இதேவேளை, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் தங்களது கடைசிப் போட்டிகளில் முறையே இங்கிலாந்தையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்டால் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும், தோல்வி அடைந்தால் புள்ளிகளும் நிகர ஓட்ட வேகமும் அரை இறுதிக்கு செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும். ஏ குழுவில் இந்தியாவும் நியூஸிலாந்தும் தலா 2 வெற்றிகளுடன் அணிகள் நிலையில் 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. https://www.virakesari.lk/article/207690
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2025, 02:25 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய ( 26/02/2025) நாளிதழ்கள், இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. உணவு, சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததாகக் கூறி ஓமனில் இருந்து படகில் தப்பி வந்த தமிழ்நாடு மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பே மீன்பிடித் துறைமுகத்தின் அருகே கடல்பரப்பில் செயிண்ட் மேரீஸ் தீவு உள்ளது. இந்த தீவுப்பகுதியில் ஓமன் நாட்டுப்படகு டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும். இதனைப் பார்த்த உள்ளூர் மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. கடலோர காவல்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, இவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பிராங்கிளின் மோசஸ் (50), டெரோஸ் அல்போன்சோ (38), மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த ராபின்ஸ்டன் (50) என்பது தெரிய வந்ததாகவும். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி அவர்களின் ஓமன் நாட்டு உரிமையாளர் மூன்று பேருக்கும் சம்பளம் மற்றும் உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும், மூன்று பேரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கி வைத்துக் கொண்டு திரும்ப கொடுக்காமல் மிரட்டியும் வந்தாகவும் மீனவர்கள் தெரிவித்ததாக தினத்தந்தி செய்தி கூறுகிறது. "இதனால் மூன்று மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக சென்ற போது உரிமையாளரின் படகுடன் ஓமனில் இருந்து கடல் மார்க்கமாகவே தப்பி வந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடல் வழியாக பயணித்த அவர்கள் இந்தியக் கடல் பகுதியை அடைந்துள்ளனர். கார்வாரைக் கடந்து மல்பே அருகே செயின்ட் மேரீஸ் தீவுப் பகுதியில் வந்த போது படகில் டீசல் தீர்ந்துள்ளது. இதனால் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது" என தினத்தந்தி செய்தி குறிப்பிடுகிறது. "கடலோர காவல்படையினர் ஓமன் நாட்டுப்படகை பறிமுதல் செய்ததோடு, பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டுப் படகில் எல்லையைத் தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து மூன்று மீனவர்களையும் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்." எனவும் தினத்தந்தி கூறியுள்ளது. செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா? முதல்வர் மருந்தகத்தில் மருந்துகளின் விலை எவ்வளவு குறைவு? எப்படிப்பட்ட மருந்துகள் இங்கு கிடைக்கும்? போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்ட கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி டி ஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்ததாக கூறும் அந்த செய்தியில், "சோமநாதசுவாமி கோயிலுக்கு நிலத்தை குத்தகைக்கு விட ரூ.3.19 லட்சம் மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் ரூ.5.12 லட்சம் வாடகையாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதனால் கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று டி ஆர் ரமேஷ் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என் ஆர் ஆர் அருண் நடராஜன், கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவது என 2022-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அப்போது என்ன வழிகாட்டி மதிப்பீடு இருந்ததோ அதன் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்றியமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வரும் அக்டோபரில் வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும் என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் இந்த முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்25 பிப்ரவரி 2025 காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 சாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் ஆணையம் பரிந்துரை பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளிகளில் சாதி உணர்வை ஒழிப்பதற்காகவும், மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வை வளர்ப்பதற்காகவும் தமிழ்நாடு போலீஸ் ஆணையம், மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 5வது போலீஸ் ஆணையம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள அந்த செய்தியில்," அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாதி பாகுபாடு நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகல்வித்துறை நுட்பமாக செயல்பட வேண்டும். இத்தகைய பிரச்னை இருக்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாதி பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தொலைதூரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்களை சரியான திசையில் வழி நடத்துவதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது" என போலீஸ் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. "அரசுப் பள்ளிகளில் சாதியுடன் தொடர்புடைய வண்ணப்பட்டைகளை மாணவர்களும், ரிப்பன்களை மாணவிகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளை அல்லது கறுப்பு நிற ரிப்பன்களையே சீருடைகளில் அனுமதிக்கலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு, சக மாணவர்களை துன்புறுத்துபவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்" என்ற பரிந்துரைகளையும் போலீஸ் ஆணையம் வழங்கியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இந்த 5 வது போலீஸ் ஆணையம் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் உள்ளடக்கியது. வருவாய், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். பள்ளிகள் மட்டுமல்லாது சாதி ரீதியாக ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க கிராம வாரியான நடவடிக்கைகளை எடுக்க போலீஸ் ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழின் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?4 மணி நேரங்களுக்கு முன்னர் பூமியை நெருங்கிய பிரமாண்ட விண்கல் நிலவின் மீது மோதுமா?நாசா புதிய தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை: பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்கி தர கோரிக்கை பட மூலாதாரம்,FACEBOOK/KATHIRAVEELU SHANMUGAM KUGATHASAN இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமை குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் குகதாசன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க புதிய திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.குகதாசன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwynp1dkyxxo
  3. அண்ணை, திரு அப்துல் ஹமீட் அவர்களின் உரையில் 3 - 4 நிமிடங்களை அவதானித்துப் பாருங்கள்.
  4. Germany-ல் திடீரென தீவிர வலதுசாரிகளுக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது ஏன்? யார் இந்த AfD Party? கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் அடுத்த சான்சிலர் ஆக உள்ளார். 28.6% வாக்குகளுடன், பழமைவாத கட்சியான CDU நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அதேசமயம் தீவிர வலதுசாரியான ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி கட்சியும் தற்போது மிகப்பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் ஒரு தீவிர வலதுசாரி கட்சி அடைந்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
  5. தெலுங்கானா சுரங்க விபத்து: 72 மணி நேரம் கடந்தும் சிக்கியவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் 25 FEB, 2025 | 05:13 PM தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 72 மணிநேரமாக நீண்டுவரும் நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்களை தொடர்பு கொள்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன. தெலுங்கானாமாநிலம் நாகர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளின்படி எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் நாகர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கூறுகையில் “சுரங்கத்துக்குள்ளே சிக்கியிருப்பவகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். தண்ணீரை வெளியேற்றி மீட்புக்குழுவினர் முன்னேறியுள்ளனர். ஆனால் கடைசி 40 மற்றும் 50 மீட்டர் வரை எங்களால் செல்லமுடியவில்லை. தற்போது ஜிஎஸ்ஐஇ என்சிஆர்ஐ நிபுணர்களின் ஆலேசானையைப் பெற்று வருகின்றோம். எல்அண்ட்டி நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.” என்று தெரிவித்தார். இந்நிலையில் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு தொழிலாலர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெலங்கானா புறப்பட்டுள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் என போலீஸ் அதிகாரிகளுடன் தெலங்கானா கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் சில்கியாரா சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் இந்த மீட்பு பணியிலும் நேற்று இணைந்துள்ளனர். உள்ளே இருக்கும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்பு செயல்திட்டம் வகுக்கப்படும்.” என்று எலிவலை தொழிலாளர்களில் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே உள்ளே சிக்கியிருப்பவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207661
  6. படக்குறிப்பு, முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் 2008ஆம் ஆண்டில் இரு நாடுகள் தீர்வை முன்வைத்தார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, பிபிசி சர்வதேச செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் இப்போது உங்களுக்கு முன்மொழிவதைப் போல, அடுத்த 50 ஆண்டுகளில் எந்தவொரு இஸ்ரேலிய தலைவரும் உங்களுக்கு முன்மொழிவதை நீங்கள் காண முடியாது." "கையெழுத்திடுங்கள்! கையெழுத்திடுவதன் மூலம் வரலாற்றை மாற்றுவோம்!" அது 2008ஆம் ஆண்டு. அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரக்கூடும் என்று தான் நம்பிய ஓர் ஒப்பந்தத்தை ஏற்குமாறு பாலத்தீன தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இன்று சாத்தியமற்றதாகத் தோன்றும், இரு நாடுகள் எனும் தீர்வை முன்வைப்பதாக அந்த ஒப்பந்தம் இருந்தது. அது செயல்படுத்தப்பட்டிருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 94 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளில் ஒரு பாலத்தீன நாடு உருவாகியிருக்கும். ஒல்மெர்ட் வரைந்த அந்த வரைபடம் தற்போது கிட்டத்தட்ட ஒரு கற்பனை நிலையை அடைந்துள்ளது. அந்த வரைபடம் குறித்துக் கடந்த ஆண்டுகளில் பல்வேறு விளக்கங்கள் வெளியாகியிருந்தாலும், அதை அவர் இப்போது வரை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியதில்லை. படக்குறிப்பு, அருகருகே இஸ்ரேலிய மற்றும் பாலத்தீனிய அரசுகள் உள்ள தனது இரு நாடுகள் தீர்வுக்கான ஒல்மெர்ட்டின் வரைபடம் ஆவணப்படத் தயாரிப்பாளர் நார்மா பெர்சியின், சமீபத்திய தொடரான "இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்கள்: அக்டோபர் 7க்கான பாதை" திங்கள்கிழமை முதல் ஐப்ளேயரில் (iPlayer) கிடைக்கிறது. இதில், 2008 செப்டம்பர் 16ஆம் தேதி ஜெருசலேமில் நடந்த சந்திப்பில் மஹ்மூத் அப்பாஸுக்கு காட்டியதாக அவர் கூறும் வரைபடத்தை ஒல்மெர்ட் முதல் முறையாக வெளிப்படுத்துகிறார். "இந்த வரைபடத்தை நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை" என்று அதில் கூறுகிறார். மேற்குக் கரையின் 4.9 சதவீத பிரதேசத்தை இஸ்ரேலுடன் இணைக்க ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டம் இந்த வரைபடத்தில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்: 2 குழந்தைகள் உள்பட பணயக் கைதிகளின் உடல்களை அனுப்பிய ஹமாஸ், துக்கத்தில் மூழ்கிய மக்கள் இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்? காஸாவில் டிரம்ப் செய்ய நினைப்பது என்ன? காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும் வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை கடந்த 1990களின் இறுதி காலத்திலிருந்து முன்மொழியப்பட்ட முந்தைய திட்டங்களைப் போலவே, ஒல்மெர்ட்டின் திட்டத்திலும் முக்கிய யூதக் குடியேற்றப் பகுதியும் இணைந்திருக்கும். அதற்குப் பதிலாக, மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியின் ஓரங்களில் உள்ள இஸ்ரேலிய பகுதியை, இஸ்ரேல் விட்டுக்கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட் கூறினார். இரண்டு பாலத்தீன பிரதேசங்களும் ஒரு சுரங்கப்பாதை அல்லது நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்படும். இதுவும் முன்பே விவாதிக்கப்பட்ட ஒரு யோசனையாகும். சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? - யாருக்கு பலன்?24 பிப்ரவரி 2025 ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது?24 பிப்ரவரி 2025 ஆவணப்படத்தில், இதற்கு பாலத்தீன தலைவர் தெரிவித்த பதிலை நினைவு கூர்ந்தார் ஒல்மெர்ட். "பிரதமர் அவர்களே, இது மிகவும் தீவிரமானது. மிக, மிக, மிகத் தீவிரமானது" என்று அந்த பாலத்தீனத் தலைவர் கூறியதை நினைவுகூர்ந்தார் ஒல்மெர்ட். முன்மொழிந்த திட்டமும் தீர்வும் என்ன? முக்கியமாக, ஒல்மெர்ட் முன்மொழிந்த திட்டத்தில் ஜெருசலேமை சுற்றியுள்ள நுணுக்கமான பிரச்னைக்கான ஒரு தீர்வும் அடங்கியிருந்தது. இரு தரப்பும் நகரத்தின் சில பகுதிகளைத் தங்களது தலைநகரமாக அறிவிக்கக் கூடும். அதே நேரத்தில், பழைய நகரம், அதன் புனித தலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் உட்பட 'புனித பகுதி'யின் நிர்வாகம், இஸ்ரேல், பாலத்தீனம், சௌதி அரேபியா, ஜோர்டான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பொறுப்பாளர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்படும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வரைபடம் யூத குடியேற்றங்களுக்குப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். மேலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், மேற்குக் கரை மற்றும் ஜோர்டான் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த பல்வேறு குடியிருப்புகள் அகற்றப்பட்டிருக்கும். முந்தைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷாரோன், 2005ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான யூத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியபோது, இஸ்ரேல் வலதுசாரி தரப்பினரால் இதுவொரு தேசியத் துயரமாகக் கருதப்பட்டது. மேற்குக் கரையின் பெரும்பகுதியை வெளியேற்றுவது மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது. பல்லாயிரக்கணக்கான குடியேறிகளை இடம் மாற்றும்போது, வன்முறை அபாயமும் அதிகம். ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் அப்படியான ஒரு சிக்கல் எழவில்லை. அவர்களது சந்திப்பின் முடிவில், பாலத்தீன தலைவர் கையெழுத்திடும் வரை வரைபடத்தின் நகலை மஹ்மூத் அப்பாஸிடம் ஒப்படைக்க ஒல்மெர்ட் மறுத்துவிட்டார். ஆனால் தனது நிபுணர்களிடம் அந்த வரைபடத்தைக் காட்டி, அதிலுள்ள முன்மொழிவை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி, மஹ்மூத் அப்பாஸ் அதை நிராகரித்துவிட்டார். இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவதென்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் கும்பமேளா: சாதுக்களின் தங்குமிடம், திரிவேணி சங்கமம் எப்படி இருக்கிறது? புகைப்படத் தொகுப்பு24 பிப்ரவரி 2025 திட்டத்தைத் தொடர முடியாதது ஏன்? ஆகையால், அடுத்த நாள் வரைபட நிபுணர்களுடன் சந்திக்க இருவரும் ஒப்புக்கொண்டதாக ஒல்மெர்ட் தெரிவித்தார். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை முன்னெடுக்கத் தயாராவதைப் போல் உணர்ந்தவாறு, அன்று நாங்கள் பிரிந்தோம்," என்று ஒல்மர்ட் கூறினார். ஆனால் அதன் பிறகு வரைபட நிபுணர்களுடனான அந்தச் சந்திப்பு நடக்கவே இல்லை. அன்றிரவு அவர்கள் ஜெருசலேமில் இருந்து புறப்பட்டபோது காரில் இருந்த சூழல் குறித்து அதிபர் மஹ்மூத் அப்பாஸின் தலைமை அதிகாரி ரஃபிக் ஹுசைனி நினைவுகூர்ந்தார். "நிச்சயமாக, நாங்கள் சிரித்தோம்," என்று அவர் ஆவணப் படத்தில் கூறுகிறார். இந்தத் திட்டம், இனி தொடர முடியாத நிலைக்கு வந்துவிட்டதாக பாலத்தீனர்கள் நம்பினர். மறுபுறம், தனக்குத் தொடர்பில்லாத ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருந்ததோடு, தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக ஒல்மெர்ட் அறிவித்திருந்தார். ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்5 மணி நேரங்களுக்கு முன்னர் தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,AFP "ஒல்மெர்ட் எவ்வளவு நல்லவர் என்றாலும், அவர் ஒரு அதிகாரமற்ற தலைவர் என்பதில் சந்தேகமில்லை," என்று கூறிய ஹுசைனி, "அதனால், இந்தத் திட்டத்தை எந்தவிதத்திலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது" என்றும் தெரிவித்தார். காஸாவின் சூழலும் சிக்கலாக இருந்தது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருந்து மாதக்கணக்கில் நடந்த ராக்கெட் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டிசம்பர் இறுதியில் ஆபரேஷன் காஸ்ட் லீட் எனப்படும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உத்தரவிட்டார் ஒல்மெர்ட். இதன் விளைவாக மூன்று வாரங்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஆனால், அப்பாஸ் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தால் "மிகவும் புத்திசாலித்தனமான முடிவாக" இருந்திருக்கும் என்கிறார் ஒல்மெர்ட். ஏனெனில், எதிர்காலத்தில் எந்தவொரு இஸ்ரேல் பிரதமரும் அதை ரத்து செய்ய முயன்றால், இதன் "தோல்விக்கு இஸ்ரேல்தான் காரணம்" என்று அப்பாஸ் உலகுக்குத் தெரிவித்திருக்கலாம்" என்றும் கூறுகிறார். படக்குறிப்பு, பாலத்தீன தலைவரின் தலைமை அதிகாரி ரஃபிக் ஹுசைனி, ஒல்மெர்ட்டை 'அதிகாரமற்ற தலைவர்' என்று வர்ணித்தார். பின்னர், பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேல் தேர்தல்கள் நடைபெற்றன. பாலத்தீன அரசுரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த லிகுட் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரானார். பிறகு, ஒல்மெர்ட்டின் திட்டமும் வரைபடமும் செயல்படுத்தப்படவில்லை. முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட், அப்பாஸின் பதிலுக்காக இப்போதும் காத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவரது திட்டமும் இஸ்ரேல்-பாலத்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் போன பல்வேறு திட்டங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது. கடந்த 1973ஆம் ஆண்டில், முன்னாள் இஸ்ரேலிய ராஜதந்திரி அப்பா எபான், "பாலத்தீனர்கள் வாய்ப்புகளைத் தவறவிடுவதில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு, இந்தச் சொற்றொடரை இஸ்ரேலிய அதிகாரிகள் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 1993ஆம் ஆண்டு இரு தரப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து பிரச்னை இன்னும் சிக்கலாக மாறியது. வெள்ளை மாளிகை தோட்டத்தில் யிட்ஸாக் ரபீன் மற்றும் யாசர் அராஃபத் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியதன் மூலம் தொடங்கிய அமைதி முயற்சி, சில நேரங்களில் உண்மையாகவே நம்பிக்கை அளித்தாலும், அதற்கிடையில் பெரும் துயரங்களும் நிகழ்ந்தன. இறுதியில், அது தோல்வியில்தான் முடிந்தது. அதற்கான காரணங்கள் மிகவும் சிக்கலானவை என்பதோடு அதற்கான பொறுப்பைப் பல்வேறு தரப்பினரும் ஏற்க வேண்டும். உண்மையில், சூழ்நிலையும் ஒருபோதும் சரியாக அமையவில்லை. கேரளா: இஸ்லாமிய பெண் பனியுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்: பைலேட்டரல் நிமோனியா பாதிப்பு யாருக்கு வரும்? அறிகுறி, சிகிச்சைகள் என்ன?24 பிப்ரவரி 2025 நான், 24 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக அமையாத இந்தச் சூழலை நேரில் கண்டேன். 2001ஆம் ஆண்டு ஜனவரியில், எகிப்திய ஓய்வு நகரமான தபாவில், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் ஓர் ஒப்பந்தத்திற்கான வடிவத்தைக் கண்டறிந்தார்கள். பாலத்தீன பிரதிநிதி ஒருவர், ஒரு காகிதத்தில் மேலோட்டமான வரைபடம் ஒன்றை வரைந்து, சாத்தியமான பாலத்தீன அரசின் தோராயமான தோற்றத்தை அவர்கள் முதன்முறையாக பார்ப்பதாக என்னிடம் கூறினார்கள். ஆனால் மேற்குக் கரை மற்றும் காஸா தெருக்களில் வன்முறை வெடித்ததால் பேச்சுவார்த்தைகள் பலனற்றதாகி விட்டன. இந்த வன்முறையானது முந்தைய செப்டம்பரில் தொடங்கிய "இன்டிபாடா" எனப்படும் இரண்டாவது பாலத்தீன எழுச்சியின் ஒரு பகுதியாகும். மீண்டும், இஸ்ரேல் ஒரு அரசியல் மாற்றத்தின் மையத்தில் இருந்தது. பிரதமர் எகுட் பராக் ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஏரியல் ஷாரோன் அவரை எளிதாகத் தோற்கடித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒல்மெர்ட் உருவாக்கிய வரைபடத்தைப் போலவே, காகிதத்தில் வரையப்பட்ட அந்த வரைபடமும், அது என்ன தீர்வை முன்வைத்திருக்கும் என்பதை வெளிப்படுத்தியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1d430dngywo
  7. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம் Published By: VISHNU 25 FEB, 2025 | 07:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது தினமாக இடம்பெற்றது. காலை 10 மணி முதல் இடம்பெற்ற விவாதத்தின் போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பாக விமர்சன ரீதியாகவும் ஆக்கபூர்வமான வகையிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாலை 6.10 மணி அளவில் விவாதம் முடிவுக்கு வந்த நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா கயந்த கருணாதிலக்க வாக்கெடுப்பை கோரினார். அதன் பிரகாரம் வாக்கெடுப்புக்கு செல்லுமாறு சபாநாயகர் கோரியதை அடுத்து கோரம் மணி ஒலிக்கப்பட்டு,வாக்கெடுப்பு இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது. அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 109 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 46 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இந்த வாக்கெடுப்பில் சுயாதீன உறுப்பினர் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை. அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சியில் இருக்கும் 159 பேரில் 154 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். அமைச்சர் விஜித்த ஹேரத் வெளிநாடு சென்றுள்ளதால் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. வரவு செலவு திட்த்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டாமன் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ரவி கருணாநாயக்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, நாமல் ராஜபக்ஷ் தலைமையிலான ஸ்ரீலங்கா பாெதுஜன பெரமுன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/207687
  8. பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் லோஃப்டஸ் பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பண்டைய எகிப்தில் மம்மி ஆக்கப்பட்ட உடல்கள், 5,000 ஆண்டுகளாக சர்கோபாகஸ் எனப்படும் கல்லால் ஆன சவப்பெட்டியில் இன்னும் நல்ல வாசனையுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற 9 மம்மிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவற்றிலிருந்து வந்த வாசனையின் விதத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் வாசனையை கண்டறிந்தனர். இந்த வாசனையை, வேதியியல் ரீதியாக மீண்டும் உருவாக்கினால், மற்றவர்களும் இந்த மம்மிகளின் வாசனையை அனுபவிக்கலாம் என்றும் உள்ளே இருக்கும் உடல்கள் எப்போது அழுக ஆரம்பிக்கும் என்பதை அறிய இது உதவும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். "மம்மி ஆக்கப்பட்ட உடல்களை முகர்ந்து பார்த்த அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆதலால் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் இதேபோன்ற வாசனையை மீண்டும் உருவாக்கி வருகிறோம்", என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சிசிலியா பெம்பிப்ரே பிபிசியிடம் தெரிவித்தார். பிரான்சில் பிரிட்டிஷார் பிடியில் இருந்து தப்ப, கப்பலில் இருந்து கடலில் குதித்த சாவர்க்கர் - என்ன நடந்தது? நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதியது ஏன்? அருண் ஷோரி புது தகவல் தாந்தியா தோபே: சப்பாத்தி மூலம் புரட்சி செய்தியைப் பரப்பிய கிளர்ச்சியாளர் - ஆங்கிலேயர்களை திணற வைத்தது எப்படி? வரலாற்று செயல்முறை உடல்களை மம்மியாக மாற்றும் செயல்முறையின் போது, பண்டைய எகிப்தியர்கள் அந்த உடலை நல்ல மணம் மிக்க பொருட்களால் நிரப்புவர். இறந்த பிறகு மறுமைக்குள் நுழைய ஆன்மாவைத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கிய பகுதியாக இதனை அவர்கள் செய்துவந்தனர். இதனால், அரசர்கள் மற்றும் பிற பிரபுக்களின் உடல்களை வாசனை தரும் எண்ணெய்கள், மெழுகுகள் மற்றும் தைலம் ஆகியவற்றால் நிரப்பினர். "திரைப்படங்களிலும் புத்தகங்களிலும், மம்மி செய்யப்பட்ட உடல்களை முகர்ந்து பார்ப்பவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும்", என்று பெம்பிப்ரே கூறினார். "இந்த மம்மிகளிலிருந்து வந்த மணம் எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்." சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? - யாருக்கு பலன்?24 பிப்ரவரி 2025 ஜெர்மனி தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி வெற்றி - ஈலோன் மஸ்க் ஆதரித்த கட்சி என்ன ஆனது?24 பிப்ரவரி 2025 அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி இதழில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்ட ஆசிரியர்கள், கல்லால் ஆன அந்த சவப்பெட்டிக்குள் இருக்கும் மம்மிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு அந்த வாசனையை பெற வேண்டியிருந்தது. லண்டன் பல்கலைக் கழக கல்லூரி மற்றும் ஸ்லோவேனியாவில் உள்ள லுப்லஜானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு சிறிய குழாயை அந்த சவப்பெட்டிக்குள் செருகி இந்த செயல்பாட்டை செய்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களால் எந்த உடல் மாதிரிகளையும் எடுக்காமல் வாசனையை மட்டும் எடுக்க முடிந்தது. இந்த விஞ்ஞானிகள் எப்போதும் புதிய தகவல்களைக் கண்டறிய எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வழிகளைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள் என்று பெம்பிப்ரே விளக்கினார். பட மூலாதாரம்,AP அருங்காட்சியகங்களில் இறந்தவர்களின் உடல்களை (மம்மிகளை) முகர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள், பண்டைய எகிப்தையும் உடல்களை பாதுகாக்கும் அவர்களது செயல்முறையையும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அனுபவிக்க முடியும். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மேற்பார்வையாளரான ஆலி லூக்ஸ், வாசனையின் அரசியல் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். மம்மிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு "உண்மையிலேயே புதுமையான" வழி இது என்று விவரித்தார். "உங்கள் மூக்கைப் பயன்படுத்துவது ஒரு வலுவான உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான எதிர்வினையை உருவாக்குகிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "[பண்டைய எகிப்தில்] சமூக, மத மற்றும் தனிப்பட்ட நடைமுறைகளுக்கு வாசனைகள் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் மேலும் கூறினார். ஏபி செய்தி முகமையிடம் பேசிய ஆய்வுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான மதிஜா ஸ்ட்ரிச், ஒரு 'மம்மி' எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தது என்பதைக் கூட வாசனைகள் குறிக்கலாம் என்று கூறினார். "இந்த அணுகுமுறை அருங்காட்சியக சேகரிப்புகளுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவதென்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 'புதிய குடிமக்கள்' சந்திக்கும் பிரச்னைகள் என்ன? பிபிசி கள ஆய்வு8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அருங்காட்சியக பார்வையாளர்களுக்கு மம்மிகள் பற்றிய புதிய உணர்வுப்பூர்வமான பார்வையை வழங்குவதோடு, இந்த கண்டுபிடிப்பு மம்மிகளைப் பாதுகாப்பவர்களுக்கு ஒரு சாத்தியமான திருப்புமுனையையும் அளிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் வாயு குரோமடோகிராபி எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்கோபாகஸுக்குள் இருக்கும் பல்வேறு நாற்றங்களைப் பிரித்து, பின்னர் அவற்றை ஒன்றிணைந்து நறுமணத்தை உருவாக்குகின்றனர். எம்பாமிங் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் விலங்கு கொழுப்புகளின் சிதைவுடன் தொடர்புடைய நாற்றங்களை அவர்கள் கண்டறிந்தனர், இது உடல் சிதைவடையத் தொடங்கியுள்ளதைக் குறிக்கலாம். இதன் மூலம், உடல்களை பாதுகாத்து வைப்பதற்கு சிறந்த வழியைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சி கட்டுரை கூறுகிறது. "இந்த சேகரிப்பை கவனித்துக் கொள்ளும் பாதுகாவலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் [ஏனெனில்] இது எதிர்கால சந்ததியினரை சென்றடைவதை நாங்கள் உறுதி செய்ய முடியும்," என்று பெம்பிப்ரே கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0kgvevxlpzo
  9. 25 FEB, 2025 | 07:45 PM இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) வருகை தந்திருந்தார். அமைச்சருக்கும், பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டாலும் மீனவர் பிரச்சினை குறித்த விரிவாக கலந்துரையாடப்பட்டன. இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார். இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறும்போது, ஆம், மனிதாபிமான முறையிலேயே அணுகுகின்றோம், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார். அதேபோல பெரும்பாலான மீனவர்கள் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தால் திரும்பி செல்கின்றனர் எனவும், ஒரு சிலரே அத்துமீறுகின்றனர் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழகத்திலுள்ள பணபலம் படைத்த முதலாளிமார், அரசியல்வாதிகள் மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்த முற்படுகின்றனர் எனவும், தமது வாழ்வாதாரம் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக்கின்றனர் எனவும், வடக்கு மீனவர்களின் நிலை பற்றி சிந்திப்பதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை வடக்கு மீனவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கியது. அதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மதித்து, நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு தமது தரப்புக்கு உள்ள விடயத்தையும் அமைச்சர் மேற்படி சந்திப்பின்போது எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். https://www.virakesari.lk/article/207682
  10. அறிவியல் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணற்ற அறிவியல் பொருட்கள் மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகப்படுத்தப்படுகிறது. நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் செல்போனை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையையாற்றும் செல்போன்கள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்த செல்போன்களால் ஆபத்தும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. அந்த வகையில், செல்போனை தினசரி எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஜாமா நெட்வொர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ’ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்’ என எச்சரித்துள்ளது. மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315420
  11. கடும் குளிர் கொட்டும் மழையில் வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசருக்காக மக்கள் பிரார்த்தனை Published By: RAJEEBAN 25 FEB, 2025 | 02:06 PM cbs news உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் குணமடையவேண்டும் என வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடும் குளிரின் மத்தியிலும்நூற்றுக்கணக்கானவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலைகுறித்து கவலை வெளியிட்டதுடன் அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையும் வெளியிட்டனர். கத்தோலிக்க திருச்சபையை புதிய பாதையில் செலுத்தும் அவரது முயற்சிகளிற்காக அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர். மழைநாளில் கடும் குளிரின் மத்தியில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனைகளிற்கு வத்திக்கானின்; தலைமை தாங்கினார். வத்திக்கான் பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து முன்னைய நாட்களை விட நம்பிக்கை அளிக்ககூடிய செய்தியை வெளியிட்ட போதிலும்,இருப்பினும் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் காணப்பட்டவர்களின் மனோநிலை பெரும்பாலும் சோகமானதாகவே காணப்பட்டது.அங்கு காணப்பட்ட 4000க்கும் அதிகமானவர்கள் தாங்கள் பாப்பரசரின் இறுதிநாட்களிற்காகவே ரோமிற்கு செல்லவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர். பாப்பரசர் துன்புறுவதை பார்ப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கர்தினால் பியட்டிரோ பரோலின் தெரிவித்தார்.அதேவேளை கிறிஸ்தவ திருச்சபைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்கற்றுக்கொடுத்த விடயங்களிற்கு நன்றிதெரிவிப்பதற்காக அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தங்கள் சமூகத்தினர்அங்குவந்துள்ளனா என மெக்சிக்கோவை சேர்ந்த என மெக்சிக்கோவை சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்தார். பலமொழிகளை பேசுபவர்கள் அங்கு திரண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் ஆறுதல் என கர்தினால் அஞ்சலோ பக்னாசோ தெரிவித்தார். ஆராதனை ஆரம்பமாவதற்கு முன்னர் குடைகளுடன் வந்த சிக்காக்கோவை சேர்ந்த கத்தோலிக்க சுற்றுலாப்பயணிகள் சென்பீட்டர்சில் நாளாந்த ஆராதனைகளில் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்ததுடன் மீண்டும் வருவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டனர். பாப்பரசரின் பிரான்சிஸின் இறுதி நாட்களிற்காக ரோமில் இருப்போம் என்பது ஏனைய பலரை போல தங்களுக்கும் தாங்கமுடியாத விடயமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நாள்; நேரம் குறித்து எவருக்கும் எதுவும் தெரியாது எனினும் இது வரலாற்றுதருணம் என எட்வேர்ட் பேர்ஜெக் என்பவர் தெரிவித்தார். பெருவை சேர்ந்த ஹட்சுமி வில்லானுவேவாவும் அதே உணர்வை வெளிப்படுத்தினார்.பரிசுத்த பாப்பரசர் ஜோன் போலை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர் ஆனால் பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பாப்பரசர் என்பதால் நெருக்கமாக உணர்ந்ததாக தெரிவித்தார். நாங்கள் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்யவந்தேன் அவர் விரைவில் குணமடைவார்,அவர் சமாதானத்தின் செய்தியை பகிர்ந்துகொள்ளும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். குடியேற்றவாசிகள் குறித்து பாப்பரசர் வெளிப்படுத்திய கருணையை அவர் பாராட்டினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசருக்காகதாங்கள் பிரார்த்திப்பதாக கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/207620
  12. Published By: DIGITAL DESK 2 25 FEB, 2025 | 03:52 PM கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொழுநோய் தொடர்பில் இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால் முன்நெடுக்கப்பட்டுள்ளன. தேசிய தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழமை (25) மட்டக்களப்பு நகரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடைபெற்றது. கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் பிரதான வீதிகளூடாக மட்டக்களப்பு நகரை சென்று பின்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை வந்தடைந்தது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பணிப்பாளர் வைத்தியர் சு.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜயன் வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர் பாடசாலை மாணவிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் தொழு நோயைத் தடுக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/207633
  13. 2-வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் 25 FEB, 2025 | 03:08 PM ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண கோரி போராட்டம் நடத்தப்படுகிறது. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்று (பிப் 25) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 22-ஆம் தேதி, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த மீனவர்களை மார்ச் 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அனைத்து தரப்பு மீனவர்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் அறிவித்தனர். இதனால், சுமார் 600-க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் ரூ. 6 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையினரின் இத்தகையை செயல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர் சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207627
  14. னகராசா சரவணன் இன்றைய நவீன யுகத்திலும் மலசலகூடம், நீர்,மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்கள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதில் இலங்கையின் சில பகுதி மக்களும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்துவரும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலமீன் மடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்களே இந்த அவல வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய இந்த பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை எவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை வீடீயோ எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தங்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அப்பிரதேச பெண்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டுநகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலைமீன்மடு மீனவ கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டபோதும், சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டதுடன், சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த மீனவர் கிராமத்தில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோது அங்கு ஓலைக் குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர். இருந்தபோதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாதால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழ்ந்துவரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரச காணிகளை 5 ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர் வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பலர் அத்துமீறி ஏக்கர் கணக்கில் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழை மக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம் கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாநகர எல்லைக்குள் இன்றுவரை மலசல கூடம், குடிநீர், மின்சாம் இன்றி வாழ்ந்துவரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகிறார்கள்? https://thinakkural.lk/article/315426
  15. 25 FEB, 2025 | 03:24 PM முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207632
  16. Published By: VISHNU 25 FEB, 2025 | 02:35 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம். தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல, ஆனால் எமது பிரபாகரனை பயங்கரவாதி என்பீர்கள் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கு ஏதோ பெரிதாக ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றீர்கள். யாழ் நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.0076வீதமாகும். பிச்சைபோடுவதுபோன்று யாழ் நூலகத்திற்கு ஒதுக்கியுள்ளீர்கள். பரவாயில்லை அடுத்ததைப் பார்ப்போம், வடக்கு வீதிகள் அபிவிருத்திக்கென 5000 மில்லியன் ரூபாவையோ, ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.38 வீதம். இதுவும் ஒரு பிச்சை, தமிழனுக்கு நீங்கள் போட்ட பிச்சை, அதையும் விடுவோம். வடக்கு கிழக்கில் 35 ஆண்டுகள் பெரும் போர் இடம்பெற்றது. இந்தப் போரில் நான் உட்பட எனது உறவுகள் வீடுகளை இழந்தனர்.. ஆனால் வடக்கு, கிழக்கில் வீடுகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒ துக்கீட்டில் 0.01 வீதம் எமது வீடுகளை இடித்து எமது காணிகளைப் பிடித்து எங்களில் 45000 பேரை கொலை செய்துவிட்டு நீங்கள் எங்களுக்கு போடும் பிச்சை இது. இன்னொரு விடயத்தையும் கூறுகின்றேன். வட்டுவாகல் பாலம் அமைக்க 1000 மில்லியன் ரூபா தந்துள்ளதாக கதைக்கிறார்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.076 வீதமாகும். இந்தப் பிச்சைக்கும் நன்றி. அத்துடன் சுகாதாரத்துறையிலாவது எங்களுக்கு ஏதாவது பிச்சை போட்டுள்ளீர்களா என்று பார்த்தால் மொத்தமாக 382 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு வடக்கிற்கு நீங்கள் தந்திருப்பது 0.66 வீதமாகும். உங்கள் பிச்சை எந்தளவுக்கு உள்ளது என்பதனை இதில் பார்த்துக்கொள்ளுங்கள். கிழக்கிற்கு நீங்கள் போட்டுள்ள பிச்சை 0.8 வீதமேயாகும். தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எனது சகோதர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். முடிந்தால் நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் உங்களுக்கு பில்லியன் , ரில்லியன் கணக்கான பணத்தை கொண்டுவருகின்றோம். நாங்கள் உங்களுக்கு பிச்சை போடுகின்றோம். சீனாவிடமும் இந்தியாவிடமும் நீங்கள் பிச்சை எடுத்துவிட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுவீர்கள். ஜனாதிபதி வந்து நாங்கள் வடக்கிற்கு பெரும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று கூறுவாராம். இது பிச்சையிலும் பிச்சை. எடுப்பானாம் ஆண்டி பிச்சை. அதற்கு பிறகு போடுவானாம் ஒரு பிச்சை. இது ஒரு கேவலமான செயல் என்றே குறிப்பிடுகிறேன். யாழ்ப்பாணத்தில் இண்டஸ்ரியல் பார்க் நிர்மாணிக்க போகின்றார்களாம்.. 3 இடங்களிலாம். அதில் 300 இருக்கின்றதாம். கைத்தொழில்துறைக்கு நீங்கள் மொத்தமாக ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம். கே.கே.எஸ்.ஸை நாங்கள் கட்டுவோம். தமிழன் கட்டுகின்றான் கே.கே.எஸ்.ஸை. முடிந்தால் கே.கே.எஸ்.ஸை எங்களிடம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு சீமெந்து தருகின்றோம். வடக்கு- கிழக்கிலிருந்து நான் உங்களுக்கு எல்லாம் தந்தோம் . ஆனால் நீங்கள் எமது உத்திரங்களை எடுத்துவிட்டு இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகின்றீர்கள். இந்தப் பிச்சைதான் உங்களின் பட்ஜெட். அதற்காகத்தான் நாம் வாக்களித்தோம். எனது தமிழ் மண் பிழையாகப்போட்ட 3 பேருக்கான வாக்குகளினால் பத்திரிகை வாசிக்கத்தெரியாதவர்கள் வந்துள்ளார்கள். ஏனெனில் 13 இல் அநுரகுமார திசாநாயக்க எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று எமது மக்கள் வைத்த நம்பிக்கை கொண்டார்கள். நான் சிங்களர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இங்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். ஆளும் தரப்புக்கும், எதிர்கட்சிக்குமான சண்டையில் நாங்கள் தான் அவதிப்படுகின்றோம். யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தை கொண்டுபோய் மோதி உடைத்துள்ளார். இந்நிலையில் அரசு அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மில்லியன் ரூபாவில் 35 மில்லியன் ரூபாவை எடுக்கப்போகின்றாராம். அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா? அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார். ஆனால் நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை இருந்தால் பட்டியல் தாருங்கள் என்று கேட்கிறார். கேவலம். கேவலம், எமது தீவகத்தில் குடிப்பதற்கு நீரின்றி எமது சமூகம் இறந்து கொண்டிருக்கின்றது . ஆனால் தெற்கிற்கு 61234 மில்லியனை நீர் வழங்கலுக்கு ஒதுக்கியுள்ளீர்கள். அதனை விட மேலதிகமாகவும் 20000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால் வடக்கிற்கு தண்ணீர் இல்லை. உங்களுக்கு எமது மக்களின் வலிகள் தெரியாது. தலதா குண்டு வைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல. பிரபாகரன் பயங்கரவாதி. இதுதான் உங்கள் சிந்தனை. அதற்கு காரணம் நாங்கள் தமிழர்கள் கிளீன் ஸ்ரீலங்கா செயலணியில் ஒரு தமிழன், முஸ்லிம் இருக்கின்றார்களா?. இல்லை இதுதான் உங்கள் நல்லிணக்கம். இவற்றை சொன்னால் நாங்கள் மோசமானவர்கள். அரசாங்கத்துடன் டீல் வைத்துக் கொள்ளும் தமிழ் பிரதிநிதிகள் நல்லவர்கள் என்பார்கள் என்று அரசாங்கத்தை கடுமையாக சாடினார். https://www.virakesari.lk/article/207582
  17. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்; உயர்ஸ்தானிகரின் தொடக்க உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படவில்லை Published By: VISHNU 25 FEB, 2025 | 02:03 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (22) ஆரம்பமான நிலையில், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தொடக்க உரையில் இலங்கை குறித்து விசேடமாக எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் குறிப்பாக எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இருப்பினும் விசேடமாக இஸ்ரேல் - பலஸ்தீன மோதலால் மக்கள் மிகமோசமான துயரத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலினால் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஹமால் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்தும் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் நிலைவரம், உலகளாவிய ரீதியில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள், காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உலகநாடுகள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பொதுவான விடயங்கள் குறித்து வோல்கர் டேர்க் அவரது உரையில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், செவ்வாய்க்கிழமை (25) ஜெனிவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இலங்கை தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207581
  18. பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்துடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியது; பாகிஸ்தானும் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேற்றம் Published By: VISHNU 25 FEB, 2025 | 12:05 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஏ குழுவுக்கான 4ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டி முடிவுடன் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் அரை இறுதிக்கு முன்னேறியதுடன் வரவேற்பு நாடனான பாகிஸ்தானுடன் பங்களாதேஷும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன. பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் மைக்கல் ப்றேஸ்வெல் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ரச்சின் ரவிந்த்ரா குவித்த சதமும் நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. வில் யங் (9), கேன் வில்லியம்சன் (5) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (15 - 2 விக்.) இந் நிலையில் டெவன் கொன்வே (30), ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தொடர்ந்து ரச்சின் ரவிந்த்ரா, டொம் லெதம் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர். ரச்சின் ரவிந்த்ரா 105 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 6 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சதம் குவிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். ரவிந்த்ராவைத் தொடர்ந்து டொம் லெதம் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார். (214 - 5 விக்.) அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட 23 ஓட்டங்களை க்லென் பிலிப்ஸ் (21 ஆ.இ), மைக்கல் ப்றேஸ்வெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. முன் வரிசையிலும் மத்திய வரிசையிலும் ஆறு வீரர்கள் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறந்த பங்களிப்பு பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது. தன்ஸித் ஹசன் (24), அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தன்ஸித் ஹசன் ஆட்டம் இழந்ததுடன் சீரான இடைவெளியில் மெஹிதி ஹசன் மிராஸ் (13), தௌஹித் ரிதோய் (7), முஷ்பிக்குர் ரஹிம் (2) மஹ்முதுல்லா (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். இதனிடையே தௌஹித் ரிதோயுடன் 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்ளையும் ஜாக்கர் அலியுடன் 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் பகிர்ந்த ஷன்டோ 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஜாக்கர் அலி 45 ஓட்டங்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 10 ஓட்டங்களையும் பெற்றனர். ஜாக்கர் அலி 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மத்துடன் 35 ஓட்டங்களைப் பகிர்ந்தார். பந்துவீச்சில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மைக்கல் ப்றேஸ்வெல் https://www.virakesari.lk/article/207578
  19. பொலிஸ் காவலின் கீழான கொலைச் சம்பவங்களால் நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு; பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:33 PM (நா.தனுஜா) நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள அண்மைய பொலிஸ்காவலின் கீழான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இச்சம்பவங்கள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் அண்மையில் பதிவான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர பி.மெத்தேகொட மற்றும் செயலாளர் சத்துர ஏ.கல்ஹென ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 19 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்குள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலின் கீழிருந்த சந்தேகநபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு பொலிஸ்காவலின் கீழிருந்த 2 சந்தேநபர்கள் தப்பிக்க முற்பட்டதாகக்கூறி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அன்றைய தினம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள இத்தொடர் சம்பவங்கள் குறித்து நாம் தீவிர கரிசனையடைகின்றோம். சட்டக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கக்கூடிய இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட சட்ட அமுலாக்கப்பிரிவினர் பெரும் அவதானத்துடனும், மிகுந்த பொறுப்புடனும் செயற்படவேண்டியது அவசியமாகும். அதேவேளை கடந்த காலங்களிலும் இதுபோன்ற பொலிஸ்காவலின் கீழான கொலைகள் இடம்பெற்றதுடன், அவை தொடர்பில் முறையான விசாரணைகளோ அல்லது குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். இவ்விடயத்தில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவாக, தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மேலோங்கியிருப்பதாக அரசின்மீது குற்றஞ்சுமத்தும் நிலை தோற்றம்பெற்றுள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய தோல்வி நாட்டின் நீதி நிர்வாகம் கேள்விக்கு உட்படுத்தப்படுவதற்கும், அதன் செயற்திறன் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் வழிகோலியுள்ளது. நீதிக்குப் புறம்பான சட்டவிரோத படுகொலைகள் ஒருபோதும் அதிகரித்துவரும் குற்றச்செயல்களுக்கான தீர்வாக அமையாது. மாறாக அரசு சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாக இயங்குவதன் ஊடாகவே குற்றங்களைக் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட இரண்டாவது சம்பவத்தில் பொலிஸ்காவலின் கீழிருந்த இரண்டு சந்தேநபர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பதில் பொலிஸ்மா அதிபரை வலியுறுத்துவதுடன், இத்தகைய மிகப்பாரதூரமான பொலிஸ்காவலின் கீழான கொலைச்சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பொலிஸ்காவலின் கீழான கொலைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவருவதற்கு, அச்சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். அது சட்டவாட்சியை வலுப்படுத்துவதற்கும், நீதிக்கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும். அதன்படி இச்சம்பவம் தொடர்பான விசாரணை செயன்முறைகளை நாம் உன்னிப்பாகக் கண்காணிக்கவிருப்பதுடன், நாட்டின் சட்ட அமுலாக்க செயன்முறையின் ஊடாக பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/207569
  20. 24 FEB, 2025 | 10:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய மக்களாக இருப்பது பெருந்தோட்ட மக்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். ஆனால் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7322 மில்லியன் ரூபாவை ஒதுக்கிவிட்டு அதனை பெருமையாக பேசி வருகின்றனர். அதில் 3500 மில்லியன் ரூபா வீட்டு திட்டத்துக்காக ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கின்றபோதும் அது இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதேபோன்று ஸ்மாட் வகுப்பறைக்கு 600 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தாலும் அதுவும் இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதுதவிர தோட்ட உட்கட்டமைப்புக்காக அரசாங்கம் 1800 மில்லியன் ஒதுக்கி இருக்கிறது. புதிய கிராம வேலைத்திட்டத்துக்கு என 50 இலட்சம் ரூபா ஒதுக்கி இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். அதாவது நூற்றுக்கு 56வீதம் இந்திய அரசாங்கத்தின் நிதியாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும். அத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் அலையகம் அல்லாத தமிழ் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மலையகத்தின் அரசியல்வாதிகளை குறைசொல்லி வருகின்றனர். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்ட பின்னர் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். நுவரெலியா மாவட்டத்தில் 6 புதிய பிரதேச சபைகளை உருவாக்கி இருக்கிறோம். புதிய பிரதேச செயலகத்தை நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம். அதேபோன்று தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணி பெற்றுக்கொடுக்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொண்டு அதனை நாங்களே ஆரம்பமாக பெற்றுக்கொடுத்தோம். கடந்த அரசாங்க காலத்தில் அது 10பேர்ச்சாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காணிகளில் நாங்கள் தனி வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அவ்வாறு தனி வீடுகளை கட்டி மலையக தமிழ் கிராமமாக பிரகடனப்படுத்த இருந்தோம். மலையக அபிவித்திக்காக தனியான அதிகாரசபையை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் அந்த அதிகாரசபைக்கு 500 இலட்சம் ரூபா மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்ற பெயரை மாற்றி, மலையக மக்கள் தேசிய இனம் என்பதை சர்வதேச ரீதியில் நாங்கள் பிரகடனம் செய்திருக்கிறோம். குடிசன புள்ளிவிபர மதிப்பீட்டிலும் மலைய மக்களின் புள்ளிவிபரங்களை பதிவு செய்யும்போது இந்திய தமிழ் மக்கள் என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை மாற்றியமைத்து மலையக தமிழர் என கொண்டுவந்திருக்கிறோம். நாங்களே அதனை செய்தோம். அரசாங்கம் அதனை முன்னெடுத்திருப்பதையிட்டு சந்தோஷப்படுகிறோம். மேலும் பெருந்தாேட்ட மக்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது இடம்பெறப்போவதில்லை. அவ்வாறு செய்வதாக இருந்தால் தோட்டங்களில் முறை மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் மலையக மக்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என நாங்கள் கேட்பதில்லை. மாறாக அவர்களுக்கு நாங்கள் 7பேர் காணி கொடுத்தோம். அதேபோன்று அரசாங்கம் காணி கொடுக்கப்போகிறதா அல்லது வீடு கட்டிக்கொடுக்கப்போகிறா? அது தனி வீடா, மாடி வீடா என்பதை தெரிவிக்க வேண்டும். அதனை தெரிவிக்காமல் 33 வருடங்களுக்கு முன்னர் மரணித்த ரணசிங்க பிரேமதாச மலையகத்துக்கு வீடு கட்டிக்கொடுக்க தவறியமைக்காக மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவிப்பது குறித்து வெட்கப்படுகிறேன். அரசாங்கம் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் மலையக மக்களின் வீட்டுக்கொள்கை அல்லது காணிக் கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/207573
  21. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொலையின் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விளைவேயாகும். அவர் செய்ததாக அல்லது சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு குற்றச்செயல்கள் ஊடகங்களின் பல்வேறு பிரிவுகளினாலும் சமூக ஊடகங்களினாலும் வெளியிடப்பட்டதேயாகும். அந்த குற்றச்செயல்களில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக அல்லது திரிபுபடுத்தப்பட்டவையாக தோன்றுகின்றன. அவ்வாறு இருந்தாலும், கணேமுல்ல சஞ்சீவவின் கடந்த காலத்தின் எதிர்மறையான அம்சங்கள் தற்போதைய பின்புலத்தில் ஊடகங்களினால் குறைத்து மதிப்பிடக்கூடியவையோ அல்லது கவனிக்காமல் விடப்படக்கூடியவையோ அல்ல. இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியமான ஒரு அரசியல்வாதியைக் கொலை செய்வதற்கு முன்னர் மேற்கொள்ப்பட்ட ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரசியல்வாதி வேறு யாருமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனேயாவார். கொழும்பில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு சஞ்சீவ உட்பட கொழும்பு பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் உதவியை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில பிரிவினர் உதவியை நாடினார்கள் என்ற அடிப்படையில் பொலிசார் அன்று விசாரணைகளை முன்னெடுத்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் தடுப்புக்காவலில் இருந்த பிறகு கணேமுல்ல சஞ்சீவவும் மற்றையவர்களும் அவர்களுக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சுமந்திரன் தொடர்பான விவகாரத்தின் மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. சுமந்திரனுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஊடகப் பிரசாரம் ஒன்றே கணேமுல்ல சஞ்சீவ -- சுமந்திரன் கதையின் மீது கவனம் மீண்டும் திரும்பியதற்கான ஒரு முக்கிய காரணமாகும். நடந்தது இதுதான். 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 2024 தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. குறைக்கப்பட்ட பாதுகாப்பு ஜனாதிபதி அநூரா குமார திசாநாயக்கவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அமைச்சர்களுக்கும் ஏனைய அதிமுக்கிய பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்தது என்பது எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்து இரு பாதுகாப்பு அதிகாரிகளை வழங்கும் நடைமுறையும் நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு நிறுத்தப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது. ஆனால், பொதுப் பாதுகாப்பு அமைச்சு சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் மதிப்பீடு ஒன்றைச் செய்து அதன் பிரகாரம் அவர்கள் ஒவ்வொருக்கும் இரு பொலிஸ் மெய்க்காவலர்களை அனுமதித்தது. முன்னாள் அமைச்சர்கள் ரிறான் அலஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனின் பாதுகாப்புக்கும் இரு அதிகாரிகள் வழங்கப்பட்டனர். தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினான சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சாணக்கியன் விடயத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடொன்றை தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சே தீர்மானத்தை எடுத்தது. தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரான சிறீதரன் தனக்கு பாதுகாப்பைக் கோரியதையடுத்தும் ஜனாதிபதி திசாநாயக்கவுடனான நேரடிச் சந்திப்புக்கு பின்னரும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனக்கு வளங்கப்பட்ட பாதுகாப்பு பிரிவில் இருந்து தன்னுடன் நீணடகாலமாக பணியாற்றிய பொலிஸ் மெய்க்காவலர் நீக்கப்பட்டதை சிறிதரன் ஆட்சேபித்ததாக கூறப்படடது. இலங்கையின் தற்போதைய தமிழ் அரசியல் சுமந்திரனைச் சுற்றிச் சுழல்வதாகவே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ் அரசியல் சுமந்திரனை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் ஒரு விவகாரமாக இருப்பதாக இலங்கை விவகாரங்களை நீண்டகாலமாக அவதானித்துவரும் இந்திய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். அத்தகைய ஒரு பின்புலத்தில், சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பிரச்சினை கிளப்பியிருக்கின்றன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை அலட்சியம் செய்யும் இந்த சக்திகள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுடன் சுமந்திரனுக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் காரணமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று விசமத்தனமான பிரசாரம் ஒன்றை செய்து வருகின்றன. இந்த பிரசாரத்தை எதிர்க்கும் சுமந்திரனின் விசுவாசிகளும் ஆதரவாளர்களும் அரசாங்கம் பாதூகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சுயாதீனமான மதிப்பீடு ஒன்றைச் செய்த பின்னரே அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுமந்திரனை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாறு இருப்பதையும் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள். கணேமுல்ல சஞ்சீவவின் கொலை அவரின் கடந்தகால செயற்பாடுகள் அல்லது தவறான நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனால், சுமந்திரனை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு குறித்து பெருமளவு ஆர்வம் காட்டப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல வாசகர்கள் என்னிடம் விசாரித்தார்கள். இந்த விவகாரம் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் சஞ்சீவவை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நான் அது பற்றி அந்த நேரத்தில் விரிவாக எழுதினேன். அதனால் அன்று என்ன நடந்தது என்பதை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் மீட்டுப்பார்க்க விரும்புகிறேன். இரகசியப் பொலிஸ் விசாரணை கொழும்பு பாதாள உலக உறுப்பினர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் சம்பந்தப்பட்ட மோசடி ஒன்று தொடர்பாக பொலிஸ் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் ஆயுதக்கிடங்குகளை தோண்டி துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் களைமோர் கண்ணி வெடிகளையும் எடுத்து கொழும்பில் உள்ள வன்முறைக் குய்பல்களுக்கு அவற்றை விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்பட்டது. விடுதலை புலிகளுடனான தொடர்பு வெளிச்சத்துக்கு வந்த நிலையில் குற்றவியல் புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவையும் விசாரணைகளுக்குள் சேர்த்துக் கொண்டது. வத்தளையில் இருந்த விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமை இந்த விசாரணைகளில் ஒரு ஆரம்பக்கட்ட முன்னேற்றமாக அமைந்தது. அவரின் பெயர் கணபதி கதிரவேலு. அவர் மீதான தீவிர விசாரணையின் விளைவாக புதிய துப்புக்கள் கிடைத்தன. தமிழரசு கட்சியான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரனை கொழும்பில் வைத்து கொலை செய்வதற்கு சதித்திட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சில விடுதலை புலிகள் உறுப்பினர்கள் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவந்தது. இதற்காக அவர்களன் பாதாள உலகக் கும்பல்களைச் சேர்ந்த சிலரை அணுகினார்கள். உயர்ந்த மாடிக்கட்டிடம் ஒன்றின் பல்கணியில் இருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் சுமந்திரனைக் கொலை செய்வதே நோக்கம். அப்போதுதான் அந்த சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவராக கணேமுல்ல சஞ்சீவவின் பெயரும் வெளியில் வந்தது. முன்னாள் விடுதலை புலிகளுடனும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அந்த இயக்க உறுப்பினர்களுடனும் ஆயுத வியாபாரத்தில் சஞ்சீவ ஈடுபட்டிருந்தார் என்பது அம்பலத்துக்கு வந்தது. முன்னதாக சஞ்சீவ கொந்தராத்துக் கொலைகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் மிரடடிப் பணம் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட போதிலும், அரசியல் கொலைகளில் அவர் சம்பந்தப்பட்டதாக அறிய வரவில்லை. இந்த தகவல் வெளியானபோது கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சஞ்சீவ விளக்கமறியலில் இருந்தார். கணேமுல்ல சஞ்சீவவை கைதுசெய்த குற்றவியல் புலனாய்வு பொலிசார் சுமந்திரனை கொலை செய்வதற்கு சதிசெய்ததாக சந்தேகத்திலும் ஆயுதங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்பனையில் ஈடுபட்டமைக்காகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யத் தொடங்கினர். சஞ்சீவ மீதான விசாரணையின் விளைவாக மேலும் பல பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பன்னிரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 பேரும் கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் லங்கா ஜெயரத்ன ( B/ 6284/ 01/ 19) முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் இருந்த பெயர்களின் பிரகாரம் 11 பேர் சிங்களம் பேசுபவர்கள், 4 பேர் தமிழ் பேசுபவர்கள். 15 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 15 பேரினதும் பெயர்கள் வருமாறு ; 1) இராசலிங்கம் சிவராஜ், 2) கல்யாணகுமார சசிகுமார, 3) ஜி.பி.எம்.பி. கவிந்த பத்திரன, 4) கே.கே.எம்.டி. விஜய சிறிவர்தன, 5) கே.பி.ஐ.ஆர். கருணாநாயக்க பத்திரன, 6) எம்.டி. நிமால் ஹர்ஷன, 7) எம்.கே பிரதீப் தேசப்பிரிய, 8) ஏ. பிரபாகர் விக்கிரமசிக்க, 9) எவ்.எஸ். ஜொனாதன் டட்லிலி, 10) டபிள்யூ. ஜூட் நிரோஷன், 11) டபிள்யூ. சலான் குமார, 12) கணபதி கதிரவேலு, 13) கே. உதேசித்த விதுரங்க, 14) ஆர்.ஏ. அமில நுவான், 15) கணேமுல்ல சஞ்சீவ அல்லது மாலிங்கமுவ சஞ்சீவ என்ற சஞ்சீவ சமரரத்ன. ' பிலாவ ' சித்திரைப் புத்தாண்டுக்கு இரு நாட்கள் முன்னதாக கொழும்பு பிரதம மாஜஸ்திரேட் ஸ்ரீ ராகல (2019 ஆம் ஆண்டின் முற்பகுதிரில் இருந்து) இரு வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த பதினொரு சந்தேக நபர்களையும் விடுதலை செய்தார். அவர்களில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவும் அடங்குவார். சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்துக்காகவும் வேறு குற்றச்சாட்டுக்களின் பேரிலும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறு பத்துப் பேரும விடுதலை செய்யப்பட்டனர். சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்துடன் சேர்த்து, வடக்கில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் கண்ணிவெடிகள், ரி -- 56 ரைபிள்களை தோண்டியெடுத்து அவற்றை கொழும்புக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் கடத்திவந்து பாதாள உலகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்தது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. தடுப்புக்காலில் வைக்கப்பட்டிருந்த 15 சந்தேகநபர்களில் 11 பேருக்கு எதிராக விசாரணைகளைத் தொடருவதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரியப்படுத்தியிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து அவர்களை கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் புத்திக்க ஸ்ரீ ராகல விடுதலை செய்தார். பதினொரு பேருக்கும் எதிராக வழக்குத் தொடுப்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என்று அன்றைய சட்டமா அதிமர் தப்புல டி லிவேரா பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் எதிராக அண்மைய எதிர்காலத்தில் வழக்கைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆனால், மிகுதி நான்கு சந்தேக நபர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்ல. அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், நான் கூறுவது சரியான தகவல் இல்லை என்றால் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். கணேமுல்ல சஞ்சீவவை பொறுத்தவரை, சுமந்திரனுடன் தொடர்பில்லாத வேறு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. கணேமுல்ல சஞ்சீவவும் ஏனைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்ட போதிலும், சமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் தனியான விசாரணையை பயங்கரவாத விசாரணைப் பிரிவு தொடர்ந்து நடத்தியது என்பது கவனிக்கத்தக்கது. தனியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்தன. ஆனால், சஞ்சீவ அந்த விசாரணைகளின் அல்லது வழக்கின் ஒரு அங்கமாக இருக்கவில்லை. சதிமுயற்சி கண்டுபிடிப்பு சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட மேற்குறிப்பிட்ட சதித்திட்டத்தின் விபரங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிசாரே. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அன்றைய பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சல்வா தானே அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து தனது அதிகாரிகளை வழிநடத்தினார். தீவிர விசாரணைக்குப் பிறகு 2016 டிசம்பர் 23 ஆம் திகதி சுமந்திரனுக்கு எதிரான சதி தொடர்பிலான உறுதியான சான்றுகள் பயங்கரவாத விரசாரணைப் பிரிவுக்கு கிடைத்தன. விசாரணைகள் தொடர்ந்தன. கைதுகளும் இடம்பெற்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கண்டறியப்பட்ட தகவலின் பிரகாரம் சுமந்திரனை இலக்கு வைத்து மூன்று தடவைகள் கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களின் விளைவாக அவர்களின் கொலை முயற்சிகள் தோல்விகண்டன. மூன்று சந்தர்ப்பங்களிலுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பி -- 402 சொரணப்பற்று -- தாளையடி வீதியில் சுமந்திரன் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வெடிகருவிகளைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்வதற்கே முயற்சிக்கப்பட்டது. மருதங்கேணிக்கு அவர் போய்வந்து கொண்டிருந்தார். சந்தேகநபர்கள் கைது செய்யப்டும்வரை தனக்கு எதிரான மூன்று கொலை முயற்சிகள் பற்றியும் சுமந்திரனுக்கு எதுவும் தெரியாது. கொழும்பு மேல் நீதிமன்றம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மருதங்கேணி பகுதியில் வைத்து சுமந்திரனை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட சதிமுயற்சி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதல் தடவையாக 2017 ஜனவரியில் விசேட அதிரடிப்படை யின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த சதித்திட்டம் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரமான புலிகள் இயக்க பிரகிருதிகளினால் தீட்டப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேருக்கு (ஒருவர் இல்லாமலேயே) எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ( HC/ 242/ 2018 ) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மருதங்கேணி சதிமுயற்சி என்று கூறப்பட்ட அந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரின் பெயர்கள் வருமாறு ; 1) சோலை குமரன் அல்லது மாஸ்டர் என்ற காராளசிங்கம் குலேந்திரன், 2) கடலன் அல்லது ஜனா என்ற மரியநாயகம் அஜந்தன், 3) வேந்தன் என்ற முருகையா தேவேந்திரன், 4) மதன் அல்லது பரதன் என்ற முருகையா தேவேந்திரன். காந்தன் அல்லது வெற்றி என்ற மகாத்மாஜி அனோஜன் என்பவரே ஐந்தாவது பிரதிவாதி. அவுஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை இடம்பெற்றது. கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஒரு கணிசமான காலமாக வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் சுமந்திரன் சாட்சியமளித்தார். ஒரு சில அவுஸ்திரேலிய வாசிகளும் சாட்சியம் அளித்தனர். விசாரணை மந்தகதியில் நடைபெற்று வருகின்ற போதிலும், வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம். மருதங்கேணி சதிமுயற்சி சுமந்திரனை கொலை செய்வதற்கான இந்த மருதங்கேணி சதி முயற்சிககு புறம்பாக, வேறுபட்ட நேரங்களில் அவரை இலக்கு வைத்து வேறுபல சதி முயற்சிகளையும் பொலிசார் கண்டு பிடித்திருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் வன்முறை நடவடிக்கைகள் ஊடாக இலங்கையில் விடுதலை புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியுமே ஒரு இலக்காக சுமந்தி ரனை " "சம்பந்தப்படுத்துவதாகவே " இருந்திருக்கின்றது. முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கொலைச்சதி முயற்சிகளில், இலக்குகளாக டக்ளஸ் தேவானந்தா அல்லது 'கேணல்' கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனே இலக்குகள் என்று தவறாக கருதப்பட்டது. ஆனால், உண்மையான இலக்கு சுமந்திரனே என்று தெரிந்துகொண்டபோது விசாரணையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வெளிநாடுகளால் வாழும் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் (அவர்களில் பலர் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பெருமளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள்) இலங்கையில் பணக்கஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் போராளிகளுக்கு நிதியுதவியைச் செய்வதன் மூலமாக சுமந்திரனை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக சந்தேகத்தில் பலர் கைதுசெய்யப்பட்டு புலனாய்வாளர்களினால் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்புக்கு புறம்பாக, சுமந்திரனின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களும் வழங்கப்பட்டிருந்தார்கள். அவரைக் கொலை செய்வதற்கான சதிமுயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்தே அவ்வாறு செய்யப்படடது. பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு நம்பகமான உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால், கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் விவகாரத்தை மெத்தனமான முறையில் நோக்கினார்கள் என்பது கவனிக்கத்தக்கது. விசேட அதிரடிப்படை பாதுகாப்பு சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு முதல் தடவையாக 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தான் வழங்கப்பட்டது. 52 நாள் அரசியலயைப்புச் சதியின்போது 2018 நவம்பரில் அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்ட்டது. மீண்டும் அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு 2019 மார்ச்சில் வழங்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பிறகு 2019 நவம்பரில் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. 2020 ஜனவரியில் மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2020 பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது அந்த பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டது. மீண்டும் 2021 பெப்ரவரியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவின் இந்த நடவடிக்கை பலரின் கண்டனத்துக்கு உள்ளானது. ஆனால், மீண்டும் சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எந்தவொரு கட்டத்திலுமே தனக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் தானாக வேண்டுகோள் விடுத்ததில்லை. அவருக்கு பயங்கரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இருந்ததன் காரணத்தால் சிறிசேன -- விக்கிரமசிங்க அரசாங்கமும் கோட்டாபய -- மகிந்த அரசாங்கமுமே விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்கின. அவருக்கு விசேட அதிரடிப்படை ப்துகாப்பை வழங்குவதும் பிறகு விலக்கிக் கொளாவதும் எப்போதுமே முற்றிலும் அரசாங்கத்தின் தீர்மானமாகவே இருந்து வந்திருக்கிறது. சரத் வீரசேகர 2021 ஜனவரியில் கோட்டாபய அரசாங்கத்தின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் சுமந்திரனைச் சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தியை அவருக்கு அனுப்பினார். இருவரும் சந்தித்தபோது அண்மைய அச்சுறுத்தல் மதிப்பீடு பற்றியும் சுமந்திரனின் பாதுகாப்புக்கு கூடுதல் அச்சுறுத்தல் பற்றியும் விரசேகர அறிவித்தார். சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்படவேண்டும் என்று சிலர் ஆர்வப்படுகின்ற ஆர்வப்பட்ட போதிலும் கூட அது அகற்றப்படமாட்டாது என்று அமைச்சர் அவருக்கு உறுதியளித்தார். ஆனால், ஒரு மாதம் கழித்து 2021 பெப்ரவரி முற்பகுதியில் சுமந்திரனின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை முன்னறிவித்தல் எதுவுமின்றி அதே வீரசேகர நீக்கினார். மேலும், சுமந்திரனுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும் அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அகற்றப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார். சுமந்திரன் முக்கிய பங்கு வகித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட " பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை " பாதயாத்திரை கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆத்திரமடைய வைத்திருக்கிறது போன்றே தோன்றியது. அந்த பாதயாத்திரை முடிவடைந்த பிறகு, சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படை பிரிவின் தலைமை அதிகாரி அவரை அணுகி அந்த பாதுகாப்பை மேலும் வழக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்ட காரணத்தால் திரும்பி வருமாறு தனது உயரதிகாரிகள் தனக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார். இந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கம் குறித்து சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரைப் பற்றி விளக்கமளித்து அது அமைதியாக நடத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய சுமந்திரன்," இந்த பாதயாத்திரை முடிவடைந்ததும் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு அகற்றப்பட்டிருக்கிறது" என்று கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்குவது பற்றி தானாக எவரிடமும் முறையிட்டதில்லை என்றும் தனக்கு அச்சுறுத்தில் இருப்பதாகக் கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது என்றும் பாராளுமன்றத்தில் சுமந்திரன் கூறினார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எதற்காக நடத்தப்பட்டது என்பதைப் பற்றி விளக்கிக் கூடிய சுமந்திரன் அது மிகவும் அமைதியான முறையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்." எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பாதயாத்திரை முடிவடைந்த உடனடியாக நீக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவது பற்றி நானாக எவரிடமும் முறையிட்டதில்லை. எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அரசாங்கமே விசேட பாதுகாப்பை வழங்கியது" என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார். மூன்று அவதானங்கள் விபரங்கள் அடங்கிய கோவை ஒன்றை காட்டிப் பேசிய சுமந்திரன் தனக்கு எதிரான முயற்சிகள் குறித்து கொழும்பு மேல்நீதிமன்றத்திலும் பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பான விபரங்கள் அதில் இருப்பதாகவும் சிங்கள பாதாள உலக கும்பலின் உறுப்பினர்கள் உட்பட முப்பதுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும் கூறினார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கம் அறிவித்ததே என்று குறிப்பிட்ட சுமந்திரன் தனக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது என்றால் எதற்காக அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பை விலக்கிக்கொணடது என்று கேள்வியெழுப்பினார். மூன்று அவதானிப்புகளையும் அவர் முன்வைத்தார். முதலாவதாக, தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதற்கு மத்தியிலும் விசேட பாதுகாப்பை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்றால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பாதயாத்திரையில் தான் பங்கேற்றுக் கொண்டதால் அது ஆத்திரம் அடைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, உண்மையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றால், அரசாங்கம் முப்பதுக்கும் அதிகமான அப்பாவி நபர்களை கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிடடார். மூன்றாவதாக, விசேட பாதுகாப்பை நீக்கிய செயல் தனக்கு ஆபத்தை விவைிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சமிக்ஞயைக் காண்பிக்கும் கெடுதியான நோக்கத்தைக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கூறினார். இறுதியாக அவர், " என்க்கு இடர்பாடான எதுவும் ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று அவர் சபையில் கூறினார். இதைத் தொடர்ந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிறல் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தனது உத்தரவின் பேரிலேயே நிக்கப்பட்டதாக 'ஹிரு' தொலைக்காட்சிக்கு கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கொண்ட போதிலும், சமந்திரன் போராட்டம் ஒன்றில் பங்கேற்ற நிலையில், அவருக்கான விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது நீக்கப்பட்டது என்றும் வீரசேகர கூறினார். " சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கக் கூடாது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுவரும் பொலிஸ் பாதகாப்புக்கு சுமந்திரனும் உரித்துடையவர் என்பதால் அது அவருக்கு தொடர்ந்து வழங்கப்படும் " என்று சரத் வீரசேகர குறிப்பிட்டார். சுலபமான இலக்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி கண்டதையடுத்து அவருக்கான பொலிஸ் பாதுகாப்பும் முடிவுக்கு வந்தது. ஆனால், முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான அச்சுறுத்தல் மதிப்பீடு ஒன்றையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் டக்ளஸ் தேவானந்தா ரிறான் அலஸ், பிள்ளையான் போன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சுமந்திரனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் சுமந்திரனுக்கு எதிரான சக்திகள் அவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்த பிரசாரம் சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை இலாலாமல் செய்து அவரை கொலையாளிகளின் இலகுவான இலக்காக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கொடிய திட்டமாகவும் கூட இருக்கலாம். இத்தகைய பின்புலத்திலேயே, கடந்த காலத்தில் சுமந்திரனை கொலை செய்வதற்கான ஒரு சதித்திட்டத்தில் கணேமுல்ல சஞ்சீவவுக்கு இருந்ததாகக் கூறப்படும் ஈடுபாடு தொடர்பில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/207486
  22. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:44 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும். வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம். இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அத்துடன் வரவு செலவுத் திட்டத்துக்கு பல பெயர்களையும் சூட்டுகிறார்கள். மக்களுக்கு பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்கு சூட்டிக் கொள்ளட்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்த தரப்பினரும் புறக்கணிக்கப்படவில்லை. வரவு செலவுத்திட்டத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. புதிய யாப்புருவாக்கம் குறித்து ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அதிகரிக்காமலும், குறைக்காமலும் எவ்வித மாற்றமில்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், பாராளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம், அதற்கு தயாராகவே உள்ளோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய அரசியலமைப்பை சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, புதிய யாப்பினை உருவாக்குவோம். அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு அதிக நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் சம்பளம் 80 சதவீதத்தால் வளர்ச்சிப் பெறும். வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் செயற்படுத்தப்படும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/207547
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 24 பிப்ரவரி 2025, 02:31 GMT "கோலியின் ஃபார்ம் மோசமாகிவிட்டது என்று யார் சொன்னது? ஒரே ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வையுங்கள். கோலியின் ஒட்டுமொத்த ஃபார்மும் கண் முன் வந்து நிற்கும்" இந்த வார்த்தைகளைக் கூறியது வேறு யாருமல்ல, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப்பில் பேசியிருந்தார். நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் கோலி தொடர்ந்து மோசமாக ஆடிவரவே, அவ்வளவுதான் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிட்டது, டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் கதைகள் பறக்கவிடப்பட்டன. அப்போதுதான் கோலி குறித்த தனது அசைக்க முடியாத நம்பிக்கையை ஷோயப் அக்தர் வெளியிட்டார். " நான் எப்போதும் சந்தேகத்துக்குரியவனாக இருந்ததில்லை" என்று விராட் கோலியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதன் மூலம் தன்னுடைய பேட்டிங், ஃபார்ம் குறித்து எப்போதும், யாரும் சந்தேகப்படத் தேவையில்லை எப்போது வெளிப்படுமோ அந்த தேவையை நிறைவேற்றுவேன், என் மீது சந்தேகம் எனக்கு வரும்போது களத்தில் இருக்கமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் சதத்தோடு இந்திய அணி வெற்றி இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா? 'நான் எழுவேன்' - பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2024 விருது பெற்ற மனு பாக்கரின் உத்வேக பயணம் 'கோலியின் ஆட்டத்தில் வியப்பில்லை' ரோஹித் சர்மா நேற்று போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் " நாங்கள் விராட் கோலியின் சதத்தைப் பார்த்து வியப்படையவில்லை. ஏனென்றால் ஓய்வறையில் எங்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் ரிலாக்ஸாக இருங்கள் என விராட் சொல்லிவிட்டார். அதனால் தான் சதம் அடித்துவிட்டார்" என்று தெரிவித்தார். சதத்தின் மூலம் பதில் கோலி சதம் அடிப்பாரா என்று கவலைப்பட்டவர்கள் அல்லது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்த இவரா சேஸிங்கில் உதவப் போகிறார் என கவலைப்பட்டவர்கள், இந்த மெதுவான ஆடுகளத்தில் கோலி சதம் அடிப்பாரா என்று கேள்வி எழுப்பியவர்கள் அனைவருக்கும் கோலி கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து சதத்துடன் இந்திய அணியை வெல்ல வைத்த போது பதிலை அளித்துவிட்டார். கோலி என்பவர் "மாஸ்டர் கிளாஸ் பேட்டர்". கோலியிடம் ஃபார்ம் இல்லை, ஃபார்ம் குறைந்துவிட்டது என்று இதுபோன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்களிடம் கேள்விகளை வைப்பது தவறானது. ஏனென்றால், கோலி போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள், ஏதாவது ஒரு போட்டியில் ஃபயர் ஆகிவிட்டாலே ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, திகைக்க வைத்துவிடுவார்கள். ஆதலால், கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு ஃபார்ம் எப்போதுமே ஒரு பொருட்டல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலியின் கவர் ட்ரைவ் ஷாட் துபாய் ஆடுகளம் மெதுவானது, பந்து நின்றுதான் பேட்டருக்கு அருகே வரும். தொடக்கத்திலேயே ரோஹித் விக்கெட்டை இந்திய அணி இழந்த நிலையில் வெற்றிக்கு 200 ரன்கள் தேவை, 45 ஓவர்கள் மீதமிருக்கிறது என்ற நிலையில்தான் கோலி நேற்று களமிறங்கினார். கோலி சதம் அடிப்பாரா ஆட்டத்தை வெற்றி பெறவைத்துக் கொடுப்பாரா என்ற கேள்விகளுடன், இயல்பான கவர் ட்ரைவ் ஷாட் அடிக்கும் வரை கோலியை முழுமையாக அறியாதவர்கள் சந்தேகத்துடனே பார்த்தார்கள். விராட் கோலியின் "பிராண்ட் ஷாட்" என்று சொல்லப்படும் அந்த கவர் ட்ரைவ் ஷாட்டை அடித்தபோது, அவரின் பேட்டிங் ஆழத்தை அறிந்தவர்கள் கூறியது, இன்று கோலி ஏதோ களத்தில் மாயஜாலம் நிகழ்த்தப் போகிறார், அணியின் வெற்றி மட்டுமல்ல, சதம் அடித்தாலும் வியப்பில்லை என்று எக்ஸ் தளத்திலும், தொலைக்காட்சி வர்ணனையிலும் பேசத் தொடங்கினர். விராட் கோலி கடந்த 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஒரு அரைசதம், ஒரு சதம் என அடித்த போதே இவரின் ஃபார்ம் எங்கும் செல்லவில்லை, தேவைப்படும் போது ஒட்டிக்கொள்ளும் பட்டாம்பூச்சி என்பதை நிரூபித்தார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் ஆட்டங்கள், அரையிறுதி என அனைத்திலும் ஒரு போட்டியில்கூட கோலி சிறப்பாக ஆடவில்லை. கோலியின் ஃபார்ம் குறித்து தெரியாதவர்கள்தான் விமர்சித்து பேசினர். ஆனால், கோலியைப் பற்றி தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பைனலின் போது விராட் கோலி களத்தில் ஆடிய ஆட்டம் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங். அந்த ஒருபோட்டியில் வெளிப்படுத்திய ஆட்டம், அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளித்து சென்றது. 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி23 பிப்ரவரி 2025 ஒரே வாரத்தில் உலகிலும், உள்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டிரம்பின் 19 நடவடிக்கைகள்24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சேஸிங் மாஸ்டர் கோலி ஒருநாள் போட்டியில் சேஸிங்கின் போது அதிகமான ரன்கள் குவித்தவர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் தற்போது விராட் கோலி இருக்கிறார். "சேஸ் மாஸ்டர்" என்று அழைக்கப்படும் கோலி 7979 ரன்கள் சேர்த்துள்ளார் என்று க்ரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2008 முதல் 2025 வரை 165 போட்டிகளில் 158 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள், 40 அரைசதங்களுடன், 7979 ரன்களை கோலி சேஸிங்கில் குவித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் பேட்டிங் சராசரி 64.34 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 93.33 ஆகவும் இருக்கிறது. சேஸிங்கின் போது கோலி 4 முறை மட்டுமே டக்அவுட் ஆகியுள்ளார். ஆக ஒருநாள் போட்டிகளில் கோலி சேர்த்த 14 ஆயிரம் ரன்களில், ஏறக்குறைய 8ஆயிரம் ரன்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை எனும் போது " சேஸ் மாஸ்டர்" என்றுதானே கூற முடியும். 36 வயதான விராட் கோலி, ஒருநாள் போட்டிகள் முதல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் டெஸ்ட் போட்டி வரை சகாப்தத்தையே நடத்தியுள்ளார். 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் விராட் கோலி 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்த சதத்தை நிறைவு செய்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES "தலைதாழ்த்தி உழைப்பேன்" விராட் கோலி நேற்றைய ஆட்டம் முடிந்தபின் பேசுகையில் " நான் சொல்லும் முக்கிய விஷயங்களில் ஒன்று, நான் களத்தில் இருக்கும்போது சிறிது மனச்சோர்வாக உணரும் போதெல்லாம் - நான் பீல்டிங் செய்யும் ஒவ்வொரு பந்திலும் எனது 100% பலத்தையும் வெளிப்படுத்துவேன். என்னுடைய கடின உழைப்புக்கும், மைதானத்தில் என்னுடைய பங்களிப்புக்கும் சில நேரங்களில் வெகுமதி கிடைத்திருக்கிறது. அதனால்தான் கடினமாக உழைக்கும்போது நான் பெருமைப்படுவேன், பீல்டிங் செய்யும்போதும் அசரமாட்டேன். நாம் தலையைத் தாழ்த்தி போதுமான அளவு கடினமாக உழைக்கும்போது, கடவுள் நமக்கு அதற்கேற்ப வெகுமதி அளிப்பார் என்று நான் நினைக்கிறேன், எனவே நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன். இந்த ஆட்டத்தில் என்னுடைய வேலை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. நடுப்பகுதி ஓவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதன்பின் வேகப்பந்துவீச்சாளர்களைக் கையாள வேண்டும். அதனால்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் பெரிதாக நான் ரிஸ்க் எடுக்கவில்லை, அதனால் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். பட மூலாதாரம்,GETTY IMAGES "என் ஸ்டைலில் விளையாடுகிறேன்" சரியான பார்ட்னர்ஷிப் அமையும்வரை ஸ்ட்ரைக்கை மாற்றுவது கடினம்தான், ஆனால் ஸ்ரேயாஸ் போன்ற சிறந்த வீரர் வரும்போது, எளிதாக ஸ்ட்ரைக்கை மாற்றி, ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இந்த ஸ்டைலில்தான் நான் ஒருநாள் போட்டியை விளையாடுகிறேன், என்னுடைய இந்த விளையாட்டால் நான் பெருமைப்படுகிறேன். நானும் மனிதன்தான் வெளியே இருந்து ஏராளமான கருத்துக்கள், சத்தங்கள் என் கவனத்தை திசை திருப்புகின்றன. இருப்பினும் எனக்குரிய இடத்தை தக்கவைக்க நான் முயற்சிக்கிறேன், என்னுடைய சக்தியின் அளவை பராமரிக்கிறேன். நான் என்ன யோசிக்கிறேன், என் எண்ணங்கள், என்னவென்றால், நான் விளையாட்டுகளைச் சுற்றியுள்ள இது போன்ற எதிர்பார்ப்புகள் மற்றும் வெறித்தனங்களுக்குள் நான் எளிதில் சிக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். விராட் கோலியின் சதம் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வித்திட்டது எப்படி?24 பிப்ரவரி 2025 சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா23 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES கவனம், தீர்க்கம், தீர்மானம் விராட் கோலி நேற்று தீர்மானத்தோடுதான் களமிறங்கினார். தொடக்கத்தில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துதான் சுப்மான் கில்லுடன் ஆடினார், அதன்பின் அவருக்குரிய பிராண்ட் கவர் ட்ரைவ் ஷாட்டில் பவுண்டரிகள் சில அடித்தபின்புதான் கோலியின் தீர்மானம் தெரிந்தது. சுழற்பந்துவீச்சில் தான் பலவீனம் எனத் தெரிந்தபின் அதை மிகவும் கவனமாக கோலி கையாண்டார். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது பந்துவீச்சில் 30 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒரு பவுண்டரி உள்பட 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். லெக் ஸ்பின்னில் ஆட்டமிழந்துவிடுவார் என விமர்சிக்கப்பட்ட நிலையில் அதை நேர்த்தியாக கோலி நேற்று கையாண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES சச்சினை முந்தி விராட் கோலி புதிய சாதனை பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து வெற்றியை மட்டும் கோலி பெற்றுத் தரவில்லை அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லையும் எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை மிக விரைவாக எட்டி, சச்சின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி தனது 1000-வது ரன்களில் இருந்து 14 ஆயிரம் ரன்கள் வரை மிக விரைவாக ஸ்கோர் செய்து சச்சினை முந்தியுள்ளார். 14 ஆயிரம் ரன்களை எட்ட சச்சின் 350 இன்னிங்ஸ்களும், சங்ககாரா378 இன்னிங்ஸ்களும் எடுத்துக்கொண்ட நிலையில் கோலி 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 51-வது சதத்தையும் கோலி நேற்று அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தற்போது 58.20 சராசரி வைத்துள்ளார். சச்சின் 44.19, சங்கக்கரா 41.73 மட்டுமே சராசரி வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் விராட் கோலி 14,984 பந்துகளைச் சந்தித்து 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். சச்சினைவிட, சங்ககாராவைவிட குறைவான பந்துகளை கோலி சந்தித்துள்ளார். சச்சின் 16,292 பந்துகளையும், சங்ககாரா 17789 பந்துகளையும் சந்தித்து இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி தனது 175வது இன்னிங்ஸில் 8 ஆயிரம் ரன்களை எட்டினார். அதன்பின் 112 இன்னிங்ஸ்களில் 6ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். கோலி தன்னுடைய 14 ஆயிரம் ரன்களில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேஸிங்கில் மட்டுமே சேர்த்துள்ள போதே அவரின் தீர்க்கம் தெரியவரும். சாம்பியன்ஸ் டிராபி: கோலியின் ஆகச் சிறந்த சதத்தோடு இந்திய அணி வெற்றி - பாகிஸ்தான் வெளியேறுகிறதா?24 பிப்ரவரி 2025 இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?21 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES "கோலி ஃபார்மில் இல்லை என யார் சொன்னது?" பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் நேற்று கோலி குறித்து பேசுகையில் " கோலியின் கடின உழைப்பைப் பார்த்து வியப்படைகிறேன். என்ன மாதிரியாக உழைக்கிறார். கோலி ஃபார்மில் இல்லை என்று உலகமே சொல்கிறது, ஆனால், இங்கு வந்து மிகப்பெரிய போட்டியில் அவரின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அசாத்தியமாக ரன்களையும், சதத்தையும் விளாசியுள்ளார். போட்டியையும் வென்று கொடுத்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். கோலியின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுகள், அவரின் உடற்தகுதிஅற்புதமானது. கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாண்டோம், சிறப்பானவற்றையும் செய்தோம் ஆனால், முடியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவர் எவ்வளவு கடினமான உழைத்துள்ளார் என்பது களத்தில் தெரிந்தது. 36 வயதில் இந்த ஆட்டம் வியப்பானது"என குறிப்பிட்டார். ஆதலால் கோலி போன்ற ஜாம்பவான்களின் ஃபார்ம் குறித்தோ, அவர்களின் பேட்டிங் தரம் குறித்தோ விமர்சிப்பவர்கள், அதை கேள்வியாகக் கேட்பவர்களுக்கு இந்த சதம் பதிலாக அமைந்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y0v2rvgj4o
  24. இன்றைய போட்டியின் பின் அணிகளின் புள்ளிப் பட்டியல்
  25. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வரைக்கும் அதிகரிக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதற்காக நாங்கள் முறையான பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை சபைக்கு தெளிவுபடுத்துமாறு கேட்ட கோரிக்கைக்கு பதிலளித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இந்த சபைக்கு பல தடவைகள் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதேபோன்று ஜனாதிபதியும் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனால் இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் பாரதூரமாகவே பார்க்கிறோம் பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் வரைக்கும் அதிகரிக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதற்காக நாங்கள் முறையான பல நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். இன்னும் எடுத்துவருகிறோம் என்றார். இதுதொடர்பில் அமைச்சரும் ஆளும் கட்சி பிரதமகொறடாவுமான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகையில், இடம்பெற்றுவரும் இந்த சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, நாட்டு மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உச்சமட்டத்தில் கருத்திற்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். திட்டமிட்ட குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதேபோன்று பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனை குழுவில் ஜனாதிபதியும் தெளிவுபடுத்தி இருந்தார். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதால் விசாரணை தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளை குழப்ப முடியாது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்து பொலிஸார், மற்றும் பாதுகாப்பு துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளவும் இருக்கிறோம். அதனால் தேவையான தகவல்களை மாத்திரம் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலதிக தகவல் தேவை என்றால் எதிர்வரும் 28ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது. அப்போது விசாரணைகளுக்கு பாதிப்பு இல்லாத தகவல்களை முன்வைப்போம். அதனால் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுங்கள். விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/207542

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.