Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: VISHNU 01 MAR, 2025 | 02:44 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த அரசாங்க காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதங்கள் கடந்துள்ளபோதும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து செல்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பாரிய முயற்சி மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை கடந்த 24 வருடங்களாக குறிப்பிட்ட ஒரு நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. எந்த கேள்வி கோரலும் இல்லாமலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் கடந்த வருடம் மே மாதம் இலத்திரணியல் கடவுச்சீட்டு கொண்டுவர அப்போதைய அரசாங்கம் கேள்விக்கோரல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதில் 8மாதங்களில் 5மில்லியன் கடவுச்சீட்டு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்கிறது. என்றாலும் குறித்த நிறுவனம் 5மில்லியன் கடவுச்சீட்டுக்களையும் 2025 ஜுன் மாதத்திலேயே வழங்க முடியும் என தெரிவித்திருந்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள காலப்பகுதியில் 71/2 இலட்சம் வழங்க முடியும் என குறித்த நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் அமைச்சரவையி்ன் அனுமதியுடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை காலமும் கடவுச்சீட்டு ஒன்றுக்கு அரசாங்கத்துக்கு 1926 ரூபாவே செலவாகியது.அதேநேரம் இதற்கு முன்னர் இருந்த நிறுவனமே கடவுச்சீட்டில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய பக்கத்தை தயாரித்து வருகிறது. அதற்காக அரசாங்கம் 1.45 டொலர் வழங்குகிறது. கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு புதிய நிறுவனத்துக்கு 4.97 டொலரை வழங்குகிறது.அப்படியானால் எமது கடவுச்சீட்டு தயாரிப்பை இரண்டு கம்பனிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் அரசாங்கம் 53 சதம் டொலரை மேலதிகமாக செலுத்தி வருகிறது. அதாவது 7அரை இலட்சம் கடவுச்சீட்டுகளுக்கு அரசாங்கம் மேலதிகமாக 3இலட்சத்தி 97ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டி இருக்கிறது. அதாவது 1190 இலட்சம் அரசாங்கத்துக்கு நட்டமாகிறது. அத்துடன் ஆரம்ப காலத்தில் சிவப்பு நிர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நாங்கள் 20ஆயிரம் ரூபா செலுத்தி வந்தோம். அதில்64 பக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நீல நிரத்தில் விநியோகிக்கப்படும் புதிய கடவுச்சீட்டில் 48 பக்கங்களே இருக்கின்றன. 16 பக்கங்கள் குறைவு. அதற்கும் மக்கள் 20ஆயிரம் ரூபா செலுத்த வேண்டி இருக்கிறது. அதன் பிரகாரம் எமது மக்கள் புதிய கடவுச்சீட்டுக்காக 6697ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சினைக்கும் அரசாங்கத்தினால் தீர்க்க முடியாமல் இருக்கிறது. இந்தியாவில் கடவுச்சீட்டு ஒன்றை விநியோகிக்க 13,560 ரூபா பா அறவிடப்படுகிறது. அதில் 60 பக்கங்கள் இருக்கின்றன. பங்களாதேஷில் இலத்திரணியல் கடவுச்சீட்டே விநியோகிக்கப்படுகின்றன. அதில் 65 பக்கங்கள் இருக்கின்றன. 10 வருடம் செல்லுபடி காலம். 3,885 ரூபா அறவிடப்படுகிறது. பாகிஸ்தானில் 12ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. 100 பக்கங்கள் இருக்கின்றன. 5 வருட செல்லுபடியான காலம் இருக்கிறது. ஒருநாள் சேவைக்கே இவ்வாறு அறவிடப்படுகிறது. எமது கடவுச்சீடே வெளிநாடுகளில் எமது நாட்டின் கெளரவம் தங்கியிருக்கிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் 30 மற்றும் 31ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களில் எழுத்து பிழை இருக்கிறது. இதனைக்கூட அவதானிக்காமல் இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டிருக்கிறது. பழைய கடவுச்சீட்டில் முதலாம் பக்கத்தில் பாதுகாப்பு இலக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது அச்சிடப்படும்போதே அந்த இலக்கம் அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் அந்த பாதுகாப்பு இலக்கம் கடவுச்சீட்டின் தனிப்பட்ட தகவல் அடங்கி இருக்கும் பக்கத்திலேயே இருக்கிறது. அதனால் குறித்த பக்கத்தை மாற்றியமைத்து யாருக்கு வேண்டுமானாலும் மோசடிகளில் ஈடுபட இடமிருக்கிறது. இது பாரிய பிரச்சினை. இதுதொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால், அரசாங்கத்துக்கு இந்த கடவுச்சீட்டுக்களை நீக்க வேண்டிவரும். இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் புதிய கடவுச்சீட்டில் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கம்தான் இந்தனை மேற்கொண்டாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5மாதமாகியும் இந்த தவறிகளை கண்டறிந்து திருத்த முடியாமல் போயிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/207963
  2. ஜனாதிபதி அநுரவின் வெளிநாட்டுப்பயண செலவுக்குறைப்பை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மஹிந்தவின் செலவினத்தை பேசுவதில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Published By: VISHNU 01 MAR, 2025 | 02:38 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்காக ஜனாதிபதி செயலகம் விமானச்சீட்டு உட்பட இதர தேவைகளுக்காக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவு செய்தது. சீனா, துபாய் ஆகிய நாடுகளுக்காக 5 இலட்சத்து 8,8571 ரூபா செலவிப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டுக்கான செலவுகளை அந்நாடுகளே பொறுப்பெற்றன. ஜனாதிபதியின் செலவு குறைப்பே கேள்விக்குள்ளாக்குபவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் 3,572 மில்லியன் ரூபாவை கேள்விக்குள்ளாக்கவில்லை என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணம் பற்றி தற்போது பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நான்காண்டு பதவி காலத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலகம் செலவழித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரையில் 1.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி எவ்வாறு குறைந்த விலையில் மூன்று நாடுகளுக்கு சென்றார், விமானத்தில் தொங்கிக் கொண்டு சென்றாரா என்று ஒருசிலர் கேள்விக்கேட்கிறார்கள். ஆனால் 3,572 மில்லியன் ரூபாய் செலவழித்த மஹிந்த ராஜபக்ஷ பற்றி எவரும் கேள்வியெழுப்பவில்லை. ஏனெனில் அனைவரும் நண்பர்களே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு முதலாவதாக அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார். விமான பயணச்சீட்டு உட்பட இதர செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகம் மொத்தமாக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளது. அதேபோல் ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றார். விமானபயணச் சீட்டுக்கான செலவை சீன அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 3 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவை செலவழித்தது. அதேபோல் இந்த மாதம் துபாய்க்கு சென்றிருந்தார். அதற்கான விமான பயணச்சீட்டுக்கான செலவை துபாய் அரசாங்கம் ஏற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 2 இலட்சத்து 97,791 ரூபாவையே செலவு செய்தது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களை போன்று குடும்ப உறுப்பினர்களுடனும், பரிவாரங்களுடனும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. இவ்வாறான விஜயத்தின் போது நாள் கொடுப்பனவு என்றதொரு தொகை கிடைக்கப்பெறும். சீன விஜயத்தின்போது கிடைக்கப்பெற்ற 2,055 டொலரையும், துபாய் விஜயத்தின் போது கிடைக்கப்பெற்ற 960 டொலரையும் ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கிடைக்கப்பெற்ற நாள் கொடுப்பனவு டொலரை ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைத்தாரா என்பதை தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆராய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து, அட்டைப்பூச்சிகளை போன்று வாழ்ந்தவர்கள் ஜனாதிபதியின் செலவு குறைப்புக்களை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இவர்களின் அரசியல் கலாசாரம் அவ்வாறானதே என்றார். https://www.virakesari.lk/article/207962
  3. நீதிமன்றக் கட்டமைப்புக்குள் 11,31,818 வழக்குகள் நிலுவையில்; நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அவதானம் Published By: VISHNU 01 MAR, 2025 | 02:33 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வழக்கு விசாரணைகளை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிபதிகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்றிட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை நீதிபதிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாவது பாராளுமன்றத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதல் தடவையாக அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் பாரிய காலதாமதம் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் பிரிவுகளிலிருந்து கிடைக்கும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவில் 70 அரச சட்டத்தரணிகளே இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், ஒதுக்கப்பட்ட வழக்குகளைக் கையாள ஒரு அரசாங்க சட்டத்தரணி பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் இருக்கவேண்டும் என்றும், சேவை மூப்பு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகம் மற்றும் காலதாமதம் தொடர்பில் சில காலங்களாகப்பேசப்பட்டு வருவதாகவும், திணைக்களத்தில் உள்ள சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். https://www.virakesari.lk/article/207961
  4. தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மார்ச் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், பி பிரிவில் ஆஸ்திரேலியா தவிர, அரையிறுதிக்கு முன்னேறும் இன்னொரு அணி எது என்பதற்கான கோதாவில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபையில் நடக்கின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும் எந்த அணி முதலிடம் பெறுவது என்பதில் இன்னும் போட்டி நீடிக்கிறது. பி பிரிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. அதேசமயம், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா ஆட்டத்தின் முடிவில்தான் தெரியும். ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முழுமையாக நடந்திருந்தால் உறுதியான நிலை கிடைத்திருக்கும். ஆனால், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி தரப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால், தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியும் 3 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட்டில் தென் ஆப்ரிக்க அணியைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது. ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - என்ன நடந்தது? இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? லாகூரில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேரத்திருந்த போது மழை குறுக்கிட்டது. டிராவிஸ் ஹெட் 59 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நீண்ட நேரமாகியும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை நின்றபின் போட்டியை நடத்தும் சாத்தியங்கள் குறித்து நடுவர்கள் பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர். ஆனால், மைதானத்தில் மழைநீர் வடியவில்லை என்பதால், ஆட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, போட்டி ரத்து கைவிடப்படுவதாக போட்டி நடுவர் அறிவித்தார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு என்ன வாய்ப்பு? தென் ஆப்ரிக்க அணிக்கு பி பிரிவில் இங்கிலாந்து அணியுடன் கடைசி லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா 3 புள்ளிகளுடன் 2.140 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், 5 புள்ளிகளுடன் அரையிறுதியை உறுதி செய்வதுடன் பி பிரிவில் முதலிடத்தையும் தென் ஆப்ரிக்கா பிடிக்கும். தோல்வி அடைந்தாலும் மோசமான தோல்வியாக இல்லாமல் இருந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கு உண்டு. ஒருவேளை இங்கிலாந்து - தென்ஆப்ரிக்க ஆட்டமும் மழையால் ரத்தானால், தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளிகள் மற்றும் வலுவான நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி முன்னேறும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானுக்கு நூலிழை வாய்ப்பு பி பிரிவில் 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி -0.99 நிகர ரன்ரேட்டுடன் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல வேண்டுமானால், அது இங்கிலாந்து அணியின் கரங்களில்தான் இருக்கிறது. அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 301 ரன்களை சேஸிங் செய்யும் போது, 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் தென் ஆப்ரிக்க அணி நிர்ணயிக்கும் 300 ரன்கள் இலக்கை 12 ஓவர்களுக்குள் சேஸிங் செய்ய வேண்டும். இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது?25 பிப்ரவரி 2025 சச்சின் சாதனை தகர்ந்தது: ஷோயிப் அக்தர் வார்த்தைகளை நிஜமாக்கிய 'சேஸிங் மாஸ்டர்'24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆகவே, ஏதேனும் ஆச்சர்யம் நிகழ்ந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது தற்போதைய நிலை. இல்லாவிட்டால் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏ பிரிவைப் பொருத்தவரை, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டன. எனினும், அந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்குப் பிறகு ஏ பிரிவில் எந்த அணி முதலிடம் என்பது தெரியவரும் . அதன் பிறகே, அரையிறுதியில் எந்த அணி, எந்த அணியுடன் மோதும் என்ற விவரம் தெரியவரும். https://www.bbc.com/tamil/articles/c5y0ll3xye7o
  5. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க Published By: VISHNU 01 MAR, 2025 | 04:16 AM புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார். அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நபரொருவருக்கு பக்கச் சார்பான இராணுவத்திற்கு பதிலாக நாட்டுக்கு சார்பான இராணுவம் ஒன்றை உருவாக்கவும் தொழில்சார்பு தன்மையை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு துறையின் கட்மைப்பின் மீதான நம்பிகையின் அடிப்படையிலேயே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கயீனத்தின் பாதாளம் வரையில் சென்றுள்ள இந்த நாட்டை மீண்டும் ஒழுக்கத்தை நோக்கி கொண்டுச் செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்க்கட்சியின் கனவு தற்போது முற்றுப்பெற்றுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடியிருப்பதாக காண்பித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் எதிர்கட்சி தற்போது இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார். இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு அதனை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு துறையினரின் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படைக்கு அவசியமான ஊர்திகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், விமானப்டைக்கும் பொலிஸூக்கும் தலா 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய இம்முறை வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/207964
  6. யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைரோஸ்லாவா பெட்ஸா மற்றும் டேனியல் விட்டென்பர்க் பதவி, பிபிசி யுக்ரேனியன், ஓவல் மாளிகை 1 மார்ச் 2025, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது. யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே திட்டமிடப்பட்டிருந்த வழக்கமான சம்பிரதாயங்களையும் சுமார் அரை மணி நேர கண்ணியமான பேச்சையும் கண்டோம். ஜெலன்ஸ்கி டிரம்பிற்கு யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வழங்கினார். ஜெலன்ஸ்கியின் உடையை டிரம்ப் பாராட்டினார். இதுவரை, எல்லாமே இராஜ தந்திர ரீதியில் அமைதியாக நகர்ந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியது. அன்பான தொனி கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும், கோபம் கொப்பளிக்கும் கண்களையும், எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன. கோல்டன் கார்டு விசா: கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா? டிரம்ப் முன்மொழிவது என்ன? தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன? சிரியா: பஷர்-அல்-அசத் வீழ்ச்சிக்கு பிறகும் குர்து மக்கள் தொடர்ந்து போரிடுவது ஏன்? உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது பதற்றம் அதிகரித்தது. எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார். ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். டிரம்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுததினார். Play video, "யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்!", கால அளவு 1,24 01:24 காணொளிக் குறிப்பு,யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்! அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர். "நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை," என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார். "நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை." என்றார் டிரம்ப். "நான் விளையாடவில்லை," ஜெலன்ஸ்கி பதிலளித்தார். "நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார் ஜெலன்ஸ்கி. "நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்," என்று டிரம்ப் பதிலளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது." என்றார் டிரம்ப். "இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை" என்று வான்ஸ் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது. இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர். "வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியாது," என்று ஒருவர் என்னிடம் கூறினார். செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு குழப்பம் ஏற்பட்டது. திட்டமிடப்பட்டபடி, செய்தியாளர் சந்திப்பு நடக்குமா அல்லது அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே கனிம வளங்கள் தொடர்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது குறித்து உடனடி கேள்விகள் எழுந்தன. சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?27 பிப்ரவரி 2025 ஆப்கானிஸ்தான்: 90,000 கேமராக்கள் மூலம் காபூல் மக்களைக் கண்காணிக்கும் தாலிபன்கள்28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் ஜெலன்ஸ்கி "அமைதிக்குத் தயாராக இருக்கும் போது திரும்பி வரலாம்" என்று பதிவிட்டார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. ஜெலன்ஸ்கி வெளியே வந்து, அங்கே காத்திருந்த ஒரு எஸ்.யூ.வி. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவரது தூதர் அவரை பின்தொடர்ந்தார். உலகம் ஒரு அசாதாரண தருணத்தை ஜீரணிக்கத் தொடங்கியிருந்த போது அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். முழு வீச்சிலான ஒரு வாக்குவாதம் நடந்துவிட்ட போதிலும், விரைவிலோ அல்லது சற்று கால தாமதமாகவோ ஒரு கனிம ஒப்பந்தத்திற்கான சாத்தியம் இருக்கவே செய்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஜெலன்ஸ்கியின் இந்த அமெரிக்க வருகை முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக நினைவுகூரப்படும். டிரம்ப் - ஸெலன்ஸ்கி சந்திப்பு: யுக்ரேன் அதிபர் மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்கிய டிரம்ப்28 பிப்ரவரி 2025 உயிரை பணயம் வைத்து இந்தியா வந்து இவர்கள் சிறுநீரகங்களை விற்பது ஏன்?28 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை உலகம் நேரடியாகவே கண்டது. அவை கடினமானவை, உணர்ச்சிப்பூர்வமானவை மற்றும் பதற்றமானவை. இது இரு தரப்பினருக்குமே கடினமான பேச்சுவார்த்தை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஜெலன்ஸ்கி பரிசளித்த யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் பெல்ட் நிச்சயமாக அங்கிருந்த பதற்றமான சூழலை மாற்றவில்லை. வெள்ளை மாளிகையில் நடந்த இந்த நேரடி மோதலுக்குப் பிறகு, யுக்ரேன் போருக்கும், ஜெலன்ஸ்கியின் சொந்த எதிர்காலத்திற்கும் இது என்ன அர்த்தம் தருகிறது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. https://www.bbc.com/tamil/articles/cwygnn10xq2o
  7. 28 FEB, 2025 | 09:53 PM நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லையெனவும், எரிபொருள் போக்குவரத்து செயற்பாடுகள் வழமையான முறையில் இடம்பெறுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தலைவர் குறிப்பிட்டார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207955
  8. படக்குறிப்பு,அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை நீர்நிலைகளில் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பி.எஃப்.ஏ.எஸ் எனப்படும் நிரந்தர ரசாயனங்கள், அனுமதிக்கத்தக்க அளவைவிட அதிகளவில் இருப்பதாக, சென்னை ஐஐடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆய்வறிக்கை ஒன்றை சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நீர்நிலைகளின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த ரசாயனங்கள் குறிப்பிடத்தக்க அளவு இல்லை என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. ஐஐடி நிறுவனம் தன் ஆய்வில் இத்தகைய ரசாயனங்கள் புற்றுநோய் வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள நிலையில், அந்த ஆய்வை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. ஆனால், இந்த ஆய்வை மேற்கொண்ட ஐஐடி ஆய்வுக்குழுவில் ஒருவரான பேராசிரியர் இந்துமதி பிபிசி தமிழிடம் பேசியபோது, "நாங்கள் எந்தெந்த இடங்களில் ஆய்வை மேற்கொண்டோமோ அதே இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே சரியாக இருக்கும்" என்றார். நீர்நிலைகளில் பி.எஃப்.ஏ.எஸ் மாசுபாடு இருப்பதாகக் கூறும் ஐஐடி ஆய்வு முடிவுகளை மறுத்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம், அதே நேரம் இரும்பு, ஃப்ளோரைடு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன். குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி? பாலைவன பூமியில் 850 அடி ஆழத்தில் இருந்து வெடித்துக் கிளம்பிய நீரூற்று - வேத, புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியா? அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன? பி.எஃப்.ஏ.எஸ் என்பது என்ன? பாலிஃப்ளோரோல்கைல் சப்ஸ்டன்சஸ் (polyfluoroalkyl substances) என்பதன் சுருக்கமே பி.எஃப்.ஏ.எஸ் . கரிம ரசாயனங்களை இது உள்ளடக்கியுள்ளது. இந்த ரசாயனம், நீரில் எளிதில் உடையாது, அழியாது என்பதால், 'நிரந்தர ரசாயனங்கள்' (Forever Chemicals) என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரசாயனம் நீரில் எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை நிர்ணயிப்பதற்கான தர நிர்ணய அளவீடு இந்தியாவில் இல்லை. "பி.எஃப்.ஏ.எஸ்-ஐ பொறுத்தவரை இந்தியாவில் அதற்கான தர நிர்ணயம் இல்லை. அமெரிக்கா அல்லது உலக சுகாதார மையம் என்ன வகுத்துள்ளதோ அதைத்தான் பின்பற்ற வேண்டியுள்ளது," என்கிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பிரபாகரன் வீரஅரசு. இந்த ரசாயனங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நான்-ஸ்டிக் பாத்திரங்கள், சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், ரெயின்கோட், உணவு பேக்கேஜிங் செய்வதற்கான பொருட்கள், ஏரோஸ்பேஸ், வாகனம், கட்டுமானம் மின் உபகரணங்கள் போன்ற துறைகளின் உற்பத்திகள் ஆகியவற்றில் இந்த ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. "இந்த ரசாயனங்கள், பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளுடன் நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரிலும் கண்டறியப்பட்டுள்ளன" என்று ஐஐடி ஆய்வு கூறுகிறது. ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா - டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன?25 பிப்ரவரி 2025 கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,MADRAS IIT படக்குறிப்பு,சென்னை ஐஐடியின் இந்த ஆய்வு கடந்தாண்டு ஏப்ரலில் வெளியானது ஆய்வில் தெரியவந்தது என்ன? சென்னை ஐஐடி, சென்னை நீர்நிலைகளில் நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை கடந்தாண்டு ஏப்ரல் மாதம், என்விரான்மென்டல் சயின்சஸ் யூரோப் ' எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியானது. சென்னையின் முக்கிய நீர்நிலைகளான அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் மாதிரிகளை எடுத்து ஐஐடி சோதித்தது. இதுதவிர, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பெருங்குடி குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள நீர் மாதிரிகளையும் பரிசோதித்தது. அந்த மாதிரிகளில், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் மிக அதிகமாக இருப்பதாக தெரியவந்தது என ஐஐடி குறிப்பிட்டுள்ளது. நெல்லை சிறப்பு ரயில்கள் ரத்து: ரயில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா? ரயில்வே துறை சொல்வது என்ன?25 பிப்ரவரி 2025 செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா?25 பிப்ரவரி 2025 சுகாதார பாதிப்புகள் இந்த ரசாயனங்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பேசிய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர், "இதனால், சரும நோய்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிராங்கடீஸ், சளி, இருமல், வீசிங் உள்ளிட்டவை ஏற்படலாம். எந்த ரசாயனமாக இருந்தாலும் நீண்ட காலத்துக்கு நுகரும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிரந்தரமான ரசாயனங்கள் இவை. ஃபுளோரோ கலந்திருக்கும் எந்த ரசாயனமாக இருந்தாலும் சரும நோய் முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும். பிசிஓடி, ஹார்மோன் பிரச்னைகளை பெண்களுக்கு ஏற்படுத்தும்" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது என்ன? சென்னையின் நீர்நிலைகளில் குறிப்பிடத்தக்க அளவு பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்தது. அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் 30 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அளவிடத்தக்க அளவை விட குறைவாகவே அந்த ரசாயனங்கள் இருப்பதாக வாரியம் (Below Limit of Quantification) தெரிவித்துள்ளது. எனினும், சில பகுதிகளில், இரும்பு மற்றும் ஃபுளோரைடு ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இருங்காட்டுகோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 டிரம்பின் முடிவுகள் அமெரிக்கா - அரபு நாடுகளுக்கு இடையே இந்தியாவை சிக்க வைத்துவிட்டதா?25 பிப்ரவரி 2025 தண்ணீரில் இருக்கக்கூடிய இத்தகைய ரசாயனங்கள் குறித்து பேசிய 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீர அரசு, "அடிப்படையான சில ரசாயனங்களின் அளவுகளை மட்டுமே பரிசோதிப்பார்கள். கன உலோகங்களை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ய மாட்டார்கள். எனவே, இத்தகைய பரிசோதனைகளை வைத்து குடிநீர் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. இந்த ரசாயனங்கள் குறைவான அளவில் இருந்தாலும் பிரச்னைதான்" என்றார். பி.எஃப்.ஏ.எஸ் போன்ற ரசாயனங்கள் வீட்டு உபயோக பொருட்களில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்தே அவை அதிகம் கலப்பதாக கூறுகிறார் அவர். "தொழிற்சாலைகளில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை ஆய்வுக்கு சென்றாலும் இணையம் வாயிலாகவும் கண்காணித்தாலும் விதி மீறல்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பாக சேமித்து வைக்காதது, மழை காலங்களில் திறந்துவிடுவது போன்றவை நீர்நிலைகளில் அவை கலப்பதற்கான காரணங்களாக உள்ளன." என்கிறார், பிரபாகரன். பட மூலாதாரம்,PRABHA PK/FACEBOOK படக்குறிப்பு,பாதுகாப்பாக சேமித்து வைக்காதது, மழை காலங்களில் திறந்துவிடுவது போன்றவை முக்கிய காரணங்கள் என்கிறார், பிரபாகரன் இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணன், "எந்தவொரு கழிவும் நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தொழிற்சாலைகள் Zero liquid discharge முறை மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், கழிவுகளை அவர்களின் ஆலைகளிலேயே வைத்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம்" என தெரிவித்தார். வீடுகளிலிருந்து உருவாகும் கழிவுநீரை தடுத்து அதை சுத்திகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐஐடி மேற்கொண்ட ஆய்வில் சில இடங்களில் குறைவான செறிவுடன் ரசாயனங்கள் இருக்கலாம் என்றும் இரண்டுக்குமான முடிவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கும் என்றும் கூறினார். எனினும், தாங்கள் ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார், ஐஐடி பேராசிரியர் இந்துமதி. "எந்தெந்த இடங்களில் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்தது என்பது தெரியவில்லை. நாங்கள் மாதிரிகளை எடுத்த இடங்களை பரிசோதித்து ஒப்பிட்டார்களா என்பது தெரியவில்லை. ஒரேமாதிரியான ஆய்வு முறைமைகள், அதிஉயர் உபகரணங்களை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே சரியான தரவுகள் கிடைக்கும். மற்ற கருவிகள், குறைந்தளவிலான அளவீடுகளை காட்டாது, அதிகமாக உள்ளவற்றை மட்டும்தான் காண்பிக்கும். அவற்றை, அளவிட முடியாத அளவில் இருப்பதாகக் காட்டிவிடும்" என்றார். இதற்கு பதிலளித்த கண்ணன், "அதி உயர் கருவிகளையே நாங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினோம். வருங்காலத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஒரே இடங்களில் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9q4jjxdj9do
  9. ஆஜராகும் சீமான்; வளசரவாக்கத்தில் குவிந்த நாதக-வினர்... 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்க திட்டம் வளசரவாக்கம் காவல் நிலையம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் தாக்கல் செய்த பாலியல் புகார் வழக்கில், சீமானிடம் விசாரணை நடத்துமாறு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டின் கேட்டில் போலீஸார் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பின்னர், அந்த நோட்டீஸ் கிழிக்கப்பட்ட விவகாரம் பிரச்சனையானது. அதில், சீமான் வீட்டின் பாதுகாவலரை போலீஸார் காரில் ஏற்றிச் சென்றனர். சீமான் அதைத்தொடர்ந்து, தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``அந்தப் பெண் பாலியல் புகார் அளித்தால் குற்றம் செய்ததாகிவிடுமா? உதவி வேண்டும் எனக் கேட்டதால் அந்தப் பெண்ணுக்கு 50,000 ரூபாய் கொடுக்க சொன்னேன். அதைத்தாண்டி அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கூறினார். பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை வந்திறங்கினார். சென்னை வந்ததும், வடபழனி தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்ததும், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக மாலை 7:30 மணியளவில் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து காரில் புறப்பட்டார். மறுபக்கம், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் குவிந்த நாம் தமிழர் கட்சியினரை தடுக்கும் வண்ணம், காவல் நிலையத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், சீமான் ஆஜரான பிறகு விசாரணையில் அவரிடம் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இன்று நள்ளிரவு தாண்டி விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமானின் மனைவியும் வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.vikatan.com/government-and-politics/seeman-in-valasaravakkam-police-station-for-actress-complaint-case-investigation
  10. Published By: RAJEEBAN 28 FEB, 2025 | 11:36 AM cbs news அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தளர்த்தியுள்ளார். வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர். அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல் இழக்கச்செய்துள்ளது. மேலும் டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு திரும்பியுள்ளார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் சமீபத்தில் தனது முதலாவது வெளிநாட்டுபயணத்தினை மேற்கொண்டவேளை ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின் ஆபிரிக்காவிற்கான கட்டளைத் தலைமையின் சிரேஸ்ட அதிகாரிகளை சந்தித்தார், அவ்வேளை வான்வழித்தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினரை பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆவணத்தில் அவர் கைசாத்திட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் வான்தாக்குதல்கள் அமெரிக்காவின் விசேட படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளது நெகிழ்ச்சி தன்மையை வழங்கியுள்ளது, என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், யாரை இலக்குவைப்பது என தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை தளபதிகளிற்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் தங்கள் பெயர் விபரங்களை வெளியிடாமல் அமெரிக்க அதிகாரிகள் இதனை சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர். ஜோபைடனின் யுத்தகால கொள்கைள் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தின் கொள்கைகளே என அதிகாரியொருவர் தெரிவித்தார். பைடனின் ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத அமைப்புகளின் சிரேஸ்ட தலைவர்களை இலக்குவைத்தே தாக்குதல் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/207892
  11. இலங்கையில் கைதான இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்! 28 FEB, 2025 | 04:39 PM எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில் அனைத்து மீனவர்களும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகு அரசுடைமையாக்கப்பட்டு வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து படகுகளையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அந்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை கைதிகளாக தண்டனை அனுபவித்து வருவதோடு, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். “மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உண்ணாவிரத போராட்டம் இரவு பகலாக நடைபெறும் எனவும் மத்திய அரசு படகையும் மீனவர்களையும் விடுதலை செய்வதாக உறுதியளித்தால் மட்டுமே இந்த போராட்டம் கைவிடப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். தங்கச்சி மடத்தில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கச்சிமடம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207917
  12. செம்மணியில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே! - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு 28 FEB, 2025 | 04:10 PM யாழ். செம்மணியில் மீட்கப்பட்டவை எச்சங்கள் தொடர்பான வழக்கு இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (28) இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அத்துடன், 2 அடி ஆழத்துக்கு கீழேதான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வினை தொடர வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இந்த ஆய்வினை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார். இவற்றை கருத்தில் கொண்ட நீதவான், முதற்கட்ட ஆய்வானது ஸ்கேன் மூலம் செய்யப்படும் என்றும் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் நடைபெறும் எனவும் காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207911
  13. சீமான் வீட்டில் நடந்ததே வேற? சம்மன் விவகாரத்தின் பின்னணி.. ரகசியம் உடைக்கும் ராஜாராம்! Seeman | NTK அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருக்கலாம் என கூறுகிறார். காவலாளிகள் கைத்துப்பாக்கி அனுமதியோடு இருந்தால் சம்பளம் கூடவாம்!
  14. INNINGS BREAK 10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy Afghanistan (50 ov) 273 Australia Afghanistan chose to bat Current RR: 5.46 • Last 5 ov (RR): 43/3 (8.60) Win Probability:AFG 36.35% • AUS 63.65%
  15. தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும்? பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால், அப்படி அபாயம் ஏதும் இல்லை என்கிறது பா.ஜ.க. தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக, அமைச்சரவைக் கூட்டங்களுக்குப் பிறகு மூத்த அமைச்சர் ஒருவர், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிப்பார். ஆனால், இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரே செய்தியாளர்களைச் சந்திப்பார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்மொழிக் கொள்கை சர்ச்சை: ஸ்டாலினுக்கு எழுதிய 3 பக்கக் கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? இருமொழி கொள்கை முன்னேற தடையாக இருந்ததா? தமிழ், ஆங்கிலம் படித்து வாழ்வில் சாதித்தவர்கள் கூறுவது என்ன? தமிழ்நாட்டில் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதா? 5 கேள்விகளும் பதில்களும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி எவ்வளவு? பாஜக பட்டியலை நிராகரிக்கும் தமிழ்நாடு அரசின் சரிபார்ப்புக் குழு அதன்படி, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறிப் பேச ஆரம்பித்தார். "தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு 2026ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இவையெல்லாம், மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்யப்படும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார். இப்போது நாடு முழுவதும் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும் என்று கூறிய அவர், "அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்" என்றார். மேலும், "வேறொரு முறையில் கணக்கிட்டால், ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கான (தமிழ்நாட்டிற்கான) பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்," என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்க, மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?27 பிப்ரவரி 2025 தவெக: விஜய் எதிர்பார்ப்பது என்ன? 2026 தேர்தலில் அதிமுக-வுக்கு ஆபத்தா?26 பிப்ரவரி 2025 அரசியல் கட்சிகளுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் பட மூலாதாரம்,@SANSAD_TV படக்குறிப்பு,'இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள்' என செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்குப் பிறகு, இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்படி தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். "தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் பல நியாயமான கோரிக்கைகளைப் பெற இயலவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். Twitter பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு இதையடுத்து இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து யாரும் பேசாத நிலையில், முதலமைச்சர் கபட நாடகம் நடத்துவதாகக் குறிப்பிட்டார். புதன்கிழமையன்று கோயம்புத்தூரில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினார். "தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய மாநிலங்கள் உள்பட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறார்" என்று தனது உரையில் குறிப்பிட்டார் அமித் ஷா. 'தமிழ்நாட்டிற்கு அநீதி' பட மூலாதாரம்,SANSAD.IN படக்குறிப்பு,இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழாவில், "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிப்பதைக் காணவுள்ளோம்" என்று மோதி குறிப்பிட்டார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, எந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார். "மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதிகள் உயரும். இது தொடர்பாக முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அமித் ஷா பதிலளிக்கும்போது, விகிதாச்சார அடிப்படையில்தான் மறு சீரமைப்பு அமையும். தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதிகூடக் குறையாது எனக் கூறியிருக்கிறார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும்போது Pro-rata எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதாச்சார உயர்வு இப்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதா அல்லது இப்போதுள்ள மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டதா என்பதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க குழப்பமாக இருக்கிறது. எங்களுக்கு (தமிழ்நாடு) தொகுதிகளைக் குறைக்காமல், வட மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுத்தாலும் அது அநீதிதான்" என்றார். "எண்ணிக்கையை உயர்த்துவது பிரச்னையல்ல, ஆனால் எதன் அடிப்படையில் என்பதுதான் பிரச்னை. மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது இடங்களின் அடிப்படையிலா?" என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால், இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அப்படியே உயர்த்த வேண்டும் என்றார் ராசா. ஆ.ராசா சுட்டிக்காட்டுவதைப் போல 2026க்குப் பிறகு இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்பதை மத்திய அரசு பல தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் பற்றி அறிவிக்கப்பட்டபோதே, எதிர்காலத்தை மனதில் கொண்டு கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களவை அரங்கில் 888 இருக்கைகளும் மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேர் வரை அமர்ந்து அவை நிகழ்வில் பங்கெடுக்க முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு விழா, 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதைக் காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது," என்று குறிப்பிட்டார். தேநீர் அருந்த ரயிலில் இருந்து இறங்கியவர் 20 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த துயரம் - அதிகாரிகள் மீட்டது எப்படி?27 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு, 84வது திருத்தத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காகப் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை Delimitaion Commission அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும். இதற்கென 1952ஆம் ஆண்டில் Delimitation Commission Act இயற்றப்பட்டது. இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது 489 தொகுதிகள்தான் இருந்தன. 1952இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 494ஆக உயர்ந்தது. அப்போது மக்கள் தொகை 36.1 கோடியாக இருந்தது. இதற்குப் பிறகு, இரண்டாவது முறையாக 1963இல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, தொகுதிகளின் எண்ணிக்கை 522ஆக உயர்த்தப்பட்டது. அந்தத் தருணத்தில் மக்கள் தொகை 43.9 கோடியாக உயர்ந்திருந்தது. இதற்குப் பிறகு 1973இல் மூன்றாவது முறையாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை எண்ணிக்கை, 54.8 கோடி. இதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருத்தப்பட்டது. இந்நிலையில், 1975இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதால், அந்தத் தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளக்கூடாது என இந்தத் திருத்தம் கூறியது. ஏனென்றால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை ஒழுங்காகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2001இல் இந்த 25 ஆண்டு கால வரையறை முடிவுக்கு வந்தது. இதனால் 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது. கடந்த 2000வது ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கொள்கையின்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் எனக் கருதப்பட்டது. ஆகவேதான், அந்த ஆண்டுக்குப் பிறகு, தொகுதி மறுசீரமைப்புச் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம்போல நடந்திருந்தால், 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031ஆம் ஆண்டில்தான் நடந்திருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், அந்தக் கணக்கெடுப்பை 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தி, அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளிலேயே தொகுதிகளை மறுவரையறை செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தொகுதிகளை ஏன் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இப்போது பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரைகூட இருக்கிறது. (கோப்புப் படம்) அரசியலமைப்புச் சட்டத்தின் 81வது பிரிவின் 2வது விதி, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் அந்த மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிறது. ஆகவே, கூடுதல் மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் கூடுதலான எம்.பிக்களை பெற்றிருக்கும். குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, எவ்வளவு பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்பது வரையறுக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 81(1)(b)இன் படி ஒரு மக்களவைத் தொகுதியில் ஐந்து லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், இந்தப் பிரிவு விரைவிலேயே திருத்தப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தத்தின்படி, ஏழரை லட்சம் பேருக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்ற வரையறை நீக்கப்பட்டது. இப்போது பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சம் வரைகூட இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள மல்கஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 31,50,303 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பான 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேரை, அதாவது 48.6 சதவீதம் பேரைக் கொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள் தொகை அடிப்படையில் இடங்களை அதிகரித்தால், இந்த ஐந்து மாநிலங்களிலேயே இந்தியாவின் பாதி மக்களவை இடங்கள் இடம்பெறும். இந்த நிலையில்தான் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்தாலோ, குறைத்தாலோ தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். இது பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும். குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு யாருக்கு இழப்பு, யாருக்கு ஆதாயம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே வரையறுக்கிறது இந்திய நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே வரையறுக்கிறது. இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் 543 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இப்போதைய சூழலில் இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறதா, எவ்வளவு அதிகரிக்கப் போகிறது அல்லது எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டு மாநிலங்களுக்குள் அவை வேறு விதமாகப் பகிர்ந்தளிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை மத்திய அரசு வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆகவே, எவ்வளவு தொகுதிகள் அதிகரிக்கும், எந்த மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் கிடைக்கும் என்பவை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் கிடையாது. ஆனால், சில ஆய்வாளர்கள் இது தொடர்பாகச் சில கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2000களின் துவக்கத்தில் பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஆலிஸ்டர் மெக்மில்லன் இந்த விவகாரம் தொடர்பாக எழுதிய ஒரு கட்டுரையில், மக்களவை இடங்களை அதிகரிக்காமல் 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 தொகுதிகளுக்குப் பதிலாக 32 தொகுதிகளே இருக்கும் எனக் குறிப்பிட்டார். அதேபோல, ஆந்திரா + தெலங்கானாவில் 42க்குப் பதிலாக 39ஆகவும் கேரளாவில் 20க்குப் பதிலாக 17 ஆகவும் கர்நாடகாவில் 28க்குப் பதிலாக 27ஆகவும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றார் அவர். இதற்கு மாறாக, உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 80இல் இருந்து 87 ஆகவும் பிகாரில் 40இல் இருந்து 43 ஆகவும் ராஜஸ்தானில் 25இல் இருந்து 29 ஆகவும் அதிகரிக்கும் என்றார். அதேநேரம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப 647ஆக அதிகரித்தால், உத்தர பிரதேசத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 103 ஆகவும் பிகாரில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 51ஆகவும் ராஜஸ்தானில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 35ஆகவும் உயரும் என்று ஆலிஸ்டர் மெக்மில்லன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆந்திரா - தெலங்கானாவில் தொகுதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயரும். ஆனால், தமிழ்நாடு, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியே நீடிக்கும் என்றார். இப்படி நடந்தாலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையும். பட மூலாதாரம்,SANSAD.IN படக்குறிப்பு,இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் 543 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் இதற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் மிலன் வைஷ்ணவ், ஜாமி ஹின்ட்ஸோன் ஆகியோர் இணைந்து India's Emerging Crisis of Representation என்ற கட்டுரையை எழுதினர். அதில், மக்களவை இடங்களின் எண்ணிக்கை மாறாமல் இருந்தால், 2026இல் தமிழ்நாட்டில் 31 இடங்கள் இருக்குமென்றும் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் சேர்ந்து 34 இடங்களும் கேரளாவில் 12 இடங்களும் இருக்குமெனவும் குறிப்பிட்டனர். அதேவேளையில், இதற்கு மாறாக உத்தர பிரதேசத்தில் 91 இடங்களும் பிகாரில் 50 இடங்களும் ராஜஸ்தானில் 31 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 33 இடங்களும் இருக்குமெனக் குறிப்பிட்டனர். அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்கள் 17 இடங்களை இழக்கும் நிலையில் பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 22 இடங்களைக் கூடுதலாகப் பெறும். மாறாக, மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றபடி இடங்கள் அதிகரிக்கப்பட்டால், இதே விகிதத்தில் இடங்களின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படும். இவர்களது கருத்துப்படி மக்கள் தொகை அடிப்படையில் 2026இல் மக்களவை இடங்களை அதிகரித்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 இடங்களாக உயரும். அப்போது உத்தர பிரதேசத்தில் 143 இடங்களும் பிகாரில் 79 இடங்களும் மத்திய பிரதேசத்தில் 52 இடங்களும் மேற்கு வங்கத்தில் 60 இடங்களும் இருக்கும். தமிழ்நாட்டில், ஆந்திரா - தெலங்கானாவில் 54 இடங்களும் கேரளாவில் 20 இடங்களும் இருக்கும். டீப் ஃபேக்: நெருங்கிப் பழகி ரகசியமாக ஆபாசப் படங்களை வெளியிட்ட நண்பன் - தம்பதி செய்தது என்ன?14 பிப்ரவரி 2025 நாளந்தா பல்கலைக் கழகம் உலகையே மாற்றியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை22 பிப்ரவரி 2025 'தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும்' பட மூலாதாரம்,@DMK_RAJA படக்குறிப்பு,சில மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் செய்தால், அது அந்த மொழியை மட்டும் உயர்த்தும் என்கிறார் ஆ. ராசா இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, "இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டுக்கான இடங்கள் குறையாது என்கிறார். இது என்ன வாதம்? தமிழ்நாட்டுக்கான இடங்களைக் குறைக்காமல் உத்தர பிரதேசத்திற்கான இடங்களை அதிகரித்தால்கூட எங்கள் பிரதிநிதித்துவம் குறையும்" என்றார். மேலும், "மத்திய அரசுதான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தச் சொன்னது. அதனால், ஒரு சமமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கொள்கையைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. ஏனென்றால், மத்திய அரசின் கொள்கையைச் செயல்படுத்தியதால்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்" என்றார். இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம் என்று கூறிய அவர், "இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மொழிவாரி மாநிலங்கள் சரியான வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன. ஒரே ஒரு மொழி மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நாடாளுமன்றம் உருவானால், இந்தியா பல்வேறு மொழி, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டமாக இருக்காது. இந்தியா உடைய ஆரம்பிக்கும். ஏனென்றால், இந்தியாவின் அடிப்படை, மொழி அடிப்படையிலான மாநிலங்கள்தான்" என்று அவர் கூறினார். "சில மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் செய்தால், அது அந்த மொழியை மட்டும் உயர்த்தும். இது பிற மாநிலங்களையும் மொழிகளையும் பாதிக்கும். இது இந்தியாவுக்கு நல்லதல்ல" என்கிறார் ஆ.ராசா. விமானத்தில் சக பயணி மரணம்: பக்கத்து இருக்கையில் சடலத்தை கிடத்திய விமான நிறுவனம்27 பிப்ரவரி 2025 ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பாஜக சொல்வது என்ன? பட மூலாதாரம்,@NARAYANANTBJP படக்குறிப்பு,தி.மு.க. அரசு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்புகிறது என்கிறார் நாராயணன் திருப்பதி ஆனால், தி.மு.க. அரசு தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க இதுபோன்ற இல்லாத பிரச்னைகளை எழுப்புவதாகச் சொல்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. "முதலில் மொழிப் பிரச்னையை எழுப்பிப் பார்த்தார்கள். அதில் ஏதும் நடக்கவில்லை. அடுத்ததாக இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பகிர்ந்தளித்தால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என பிரதமர் மோதி 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே பேசியிருக்கிறார். அந்தப் பேச்சிலேயே அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டார்" என்கிறார் நாராயணன் திருப்பதி. நாராயணன் திருப்பதி சுட்டிக்காட்டும் பேச்சு, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிஜாமாபாதில் பிரதமர் மோதியால் பேசப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துவதற்காக Jitni aabadi, utna haq (எவ்வளவு மக்கள் வலுவோ அவ்வளவு உரிமை) என்று குறிப்பிட்டார். இதைச் சுட்டிக்காட்டி தெலங்கானாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "நாடு இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உரிமைகள் என்ற காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால் தென் மாநிலங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். தென்னிந்தியா 100 மக்களவை இடங்களை இழக்கும். தென்னிந்தியா இதை ஏற்குமா?" எனக் கேள்வி எழுப்பினார். "ஆகவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள தொகுதிகளை அடிப்படையாக வைத்து, அதே விகிதத்தில்தான் உயர்த்தப்படும். அதைத்தான் உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். ஆனால் தேவையில்லாத அச்சத்தைக் கிளப்புகிறார்கள்" என்கிறார் நாராயணன் திருப்பதி. ஊடகங்களில் வெளிவராத வரைபடம்: பாலத்தீனம் தனி நாட்டுடன் 2008-ல் புதிய தீர்வை முன்வைத்த இஸ்ரேலிய பிரதமர்26 பிப்ரவரி 2025 யுக்ரேனில் உள்ள அரிய கனிமங்களுக்கு அமெரிக்கா குறி வைப்பது ஏன்? அவற்றின் முக்கியத்துவம் என்ன?26 பிப்ரவரி 2025 இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி தனது கட்டுரையில் இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார். இப்போதைக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது என்கிறார் North vs South: India's Great Divide நூலின் ஆசிரியரான ஆர்.எஸ். நீலகண்டன். "தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அப்படியே வைத்திருந்தால், வட மாநிலங்களைப் பார்த்து நீங்கள் செய்த தவறுக்கான பலனை அனுபவியுங்கள் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கும். தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரித்தால், தென் மாநிலங்களின் பிரநிதிதித்துவம் குறையும். ஆகவே, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாது" என்கிறார் நீலகண்டன். மாறாக இந்த விவகாரத்தை வேறு விதமாக அணுகலாம் என்று கூறும் அவர், "மத்திய அரசின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். பெரும்பாலான முடிவுகள் மாநில மட்டத்திலும் பஞ்சாயத்து மட்டத்திலும் எடுக்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கான முக்கியத்துவம் குறையும். இப்போதைய சூழலில் அப்படிச் செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்" என்கிறார். மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநரான கோபால கிருஷ்ணகாந்தி Delimitation fallout needs no political forecasting என்ற தனது கட்டுரையில், ஒரு தீர்வை முன்வைக்கிறார். அதாவது, எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை நிலைபெறும் வரை, தொகுதி எண்ணிக்கையை அதிகரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்குப் பிறகு அதிகரிக்கும்போது, மக்கள் தொகை மட்டுமல்லாமல், வேறு சில கணக்கீடுகளையும் உள்ளடக்கி தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்கிறார் அவர். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி வரையறை செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்வதால், இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg11p08yr0o
  16. பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக பணியாளர் கைது: சீமான் வீட்டின் பாதுகாவலரை இழுத்து சென்றது பொலிஸ் - 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு 28 FEB, 2025 | 01:09 PM சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை இரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்இ 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பாக அனுப்பிய பொலிஸ் அழைப்பாணையில் குறிப்பிட்டபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் கதவில் நேற்று மீண்டும் அழைப்பாணையில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் பிப். 28-ம் திகதி (இன்று) ஆஜராகத் தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் அந்த அழைப்பாணையை கிழித்தெறிந்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன்ராஜேஷ் மற்றும் பொலிஸார் நேற்று பிற்பகல் சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் அமல்ராஜ் பொலிஸாரை வீட்டின் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆவேசமடைந்த காவல் ஆய்வாளர் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. துப்பாக்கி பறிமுதல்: இதையடுத்து அமல்ராஜை பொலிஸார் கைது செய்ய முயன்றதால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் உள்ளிட்ட 3 பொலிஸார் அமல்ராஜின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று காவல் துறை ஜீப்பில் ஏற்றினர். இதற்கிடையில் பாதுகாவலர் அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்மனை கிழித்ததாக சீமானின் உதவியாளர் சுபாகர் என்பவரையும் பொலிஸார் கைது செய்தனர். கயல்விழி முறையீடு: இந்த சம்பவம் நடந்தபோது சீமான் மனைவி கயல்விழி வீட்டிலிருந்து வெளியே வந்து காவல் ஆய்வாளரிடம் மன்னித்து விடுமாறு முறையிட்டார். கைது செய்யப்பட்ட அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாவலர் மற்றும் சீமான் உதவியாளர் தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினர் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமல்ராஜின் மனைவி கூறும்போது “25 ஆண்டுகளாக எனது கணவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தார். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சீமானிடம் பணிபுரிந்து வருகிறார். அவர் பொலிஸாரை தாக்கவில்லை. அவர்கள்தான் எனது கணவரை தாக்கினர். மேலும்இ பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைக்கவே முயன்றார். அவரை கிரிமினல் குற்றவாளி போல இழுத்துச் சென்றது நியாயமா?” என்றார். அரசியல் காரணங்கள்… சீமான் வழக்கறிஞர் ரூபன் செய்தியாளர்களிடம் கூறும்போது “சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் வந்ததால்தான் பாதுகாவலர் துப்பாக்கி வைத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காகத்தான் சீமானுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என்றார். சீமான் வழக்கறிஞர் சங்கர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த கடிதத்தில் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது “உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வெளியூர் நிகழ்ச்சிகளில் சீமான் பங்கேற்றதால்தான் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை” என்றார். https://www.virakesari.lk/article/207899
  17. அண்ணை, சம்மனை கிழித்த பின் கேற்றைத் திறந்து உள்ள போன பொலீஸ் அதிகாரி, சிவில் உடை அதிகாரிகள் சம்மனை வீட்டில் சென்று வழங்கி இருக்கலாம்/கட்சி அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம்! இது பரபரப்பிற்காக அல்லது வேறொன்றை திசைதிருப்ப செய்ததாக இருக்கலாம்.
  18. Arms Act of 1959 allows citizens of India to get Non-Prohibited Bore (NPB) guns. NPB licenses can be issued to anyone of Indian Nationality who can claim a licensee status under the following: Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc. General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians. Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc. Sports Shooting - Those under sports shooting discipline who need guns for sports purposes. Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad. Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons. Eligibility Criteria to get gun license (firearm license) in Tamil Nadu The following are the eligibility criteria for getting gun license in Tamil Nadu. The applicant should not have any past records of any kind of criminal activity. Police will gather a lot of information about the applicant such as asking the people in the surroundings or neighborhood if they see any kind of malicious treatment or if they have seen the person getting involved in fights due to anger or burst out. An interview will be conducted with the applicant to check if the person is mentally or physically ill or not. Documents Required to get gun license (firearm license) in Tamil Nadu The following are the documents required for getting gun license in Tamil Nadu. Two passport size copies of the latest photograph of the applicant (in white background):- to be submitted at the time of appointment Proof of date of birth Proof of identification -Aadhar Card or in case the applicant does not have Aadhar Card, a written declaration to be submitted in the form of an Affidavit along with an alternative identification proof which may include-Passport;Voter identification Card, PAN Card or Identity Card issued to the employees. Residence Proof: In case the applicant does not possess Aadhar Card or Passport, which may include Voter ID Card or Electircity bill or Landline telephone bill or Rent deed or Lease deed or property documents or any other documents to the setisfaction of the Licensing Athority. Firearm training certificate in form S-1 (whenever made applicable by the Central Government by passing a general or special order); Safe use and storage of firearms undertaking in(Form S-2). Self attested copies of the educational and professional qualification certificates from professional category applicants as specified in clause (a) of sub-rule (3) of rule 12 of the Arms Rules, 2016. Medical certificates about mental health and physical fitness in form S-3, issued by a registered MBBS Doctor on prescribed proforma. Self attested copy of the proof of date of birth (e.g. Matriculation certificate or School leaving certificate, Passport etc). in case of protection for destruction of wild animals which do injury to human beings or cattle and damage to crops, permit from the authority empowered under the Wild Life (Protection ) Act, 1972 (53 of 1972). How to apply for a gun license (firearm license) in Tamil Nadu? The applicant should clearly mention the purpose(s) for which the licence is required; such as use, self protection, acquisition, possession, carrying, sport, display, destruction of wild animals which cause injury to human beings or cattle and damage to crops etc. as per the category of licence applied (Form II, III or IV). Instructions for filing gun license (firearm license) Before applying online, keep the scanned copy of every required documents in pdf format (each pdf not exceeding 1 mb) and photograph in JPG format ( each JPG not exceeding 50 KB). After successful online registration of the application, upload the photograph and take the printout of the application. The signed application form along with the required documents are to be submitted in the concerned issuing authority for want of processing. Please note your online registration number for record and future reference. Concealing any material facts and/ or submitting false information will lead to cancellation of such application. Procedure Follow the below steps to apply for gun license in Tamil Nadu. Visit Arms License Online website. https://www.tesz.in/guide/gun-license-firearm-tamil-nadu எனது புரிதலின்படி சுயபாதுகாப்பிற்கு என அனுமதி எடுத்து வைத்திருக்கலாம் என்றுள்ளது போல அண்ணை. எதற்கும் எனக்கு வாசித்து தெளிவுபடுத்துங்கோ.
  19. LIVE 10th Match, Group B (D/N), Lahore, February 28, 2025, ICC Champions Trophy Afghanistan (36.6/50 ov) 186/6 Australia Afghanistan chose to bat Current RR: 5.02 • Last 5 ov (RR): 26/2 (5.20) Live Forecast:AFG 266
  20. 28 FEB, 2025 | 03:21 PM மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முகாமைத்துவம் குறித்த செயல் திட்டத்தை வெளியிடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில், இந்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதற்காக மாத்திரம் நாங்கள் ஒன்றுசேரவில்லை. எதிர்காலத்தில், நம் நாட்டில் சக்திவள மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபை ஆகியவை இலங்கையை நிலையான வலுசக்தி பாவனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னின்று பங்களித்தன. "வலுசக்தி அமைச்சு இந்த "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" என்ற ஐந்தாண்டுகளுக்கான செயல் திட்டத்தை முன்வைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் வலுசக்தியின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அந்த வலுசக்தியை அடையாளம் காணவும், வலுசக்தி பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகள் பற்றிய விரிவான புரிதலை வழங்கவும் வழி ஏற்படும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும். எமது வலுசக்தி தொடர்பான சட்டங்கள் மூன்று முக்கிய வழிகளில் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது, சூரிய சக்தி, காற்றாலை சக்தி மற்றும் நீர் போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்தைப் பயன்படுத்தி, குறைந்த அளவு கார்பன் சூழலுக்கு வெளியேற்றும் வகையில் மலிவு விலையிலும் நம்பகத்தன்மையுடனும் வகையில் வலுசக்தியை வழங்க வேண்டும். இரண்டாவதாக, மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, டிஜிட்டல் மூலோபாயங்கள் போன்ற திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் நவீன முறைகளின் கீழ் எவ்வாறு நம்பகத்தன்மையுடன் வலுசக்தி வடிவங்களைப் பெறுவது என்பது பற்றி மக்களுக்குதெ ளிவூட்டுதல். மூன்றாவது வலுசக்தி துறையில் மாற்றத்திற்கான நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல். இன்று உலகில் பல முன்னேற்றமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன, நவீன உலகத்துடன் வலுவான போட்டித்தன்மையுடன் வலுசக்தி துறையை உருவாக்க அவற்றை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இது வெறுமனே ஒரு திட்டம் மட்டுமல்ல, 5 ஆண்டுகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி. வலுசக்திகளை அடையாளம் காணுதல், அவற்றை அபிவிருத்திசெய்தல், மக்களுக்கு அறிமுகம்செய்தல், அதற்காக செலவிடப்படும் காலம், ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் தேவையான சட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதில் உள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை வெற்றியடையச்செய்ய வேண்டும். மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளைப் பயன்படுத்தி அனைத்து இலங்கையர்களின் வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்." இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, ஜனித் ருவன் கொடித்துவக்கு வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/207898
  21. உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா? 'திமிங்கிலத்தின் வாய்க்குள் இருந்தேன்' - நடுக்கடலில் திமிங்கிலம் விழுங்கிய இவர் தப்பித்தது எப்படி? வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல் ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி? புலிகளைக் கொன்ற கிராம மக்கள் பிப்ரவரி 26ஆம் தேதியன்று தூத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையோரப் பகுதியில் ஒன்று திரண்ட புல்வாரியா கிராம மக்கள் பெண் புலி ஒன்றை அடித்துக் கொன்றனர். "இந்தப் புலிக்கு இரண்டு வயதுதான் ஆகிறது. தாய்ப் புலியிடம் இருந்து பிரிந்து சமீபத்தில்தான் அதற்கான எல்லையை வரையறுக்கத் தொடங்கியிருந்தது. அதற்குள்ளாக, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தப் புலி தாக்கியுள்ளது. அது இரண்டு வயதே நிரம்பிய வளரிளம் பருவத்தைச் சேர்ந்த புலி என்பதால் அளவில் சிறிதாக இருந்தது. ஆகவே, மக்கள் அதை எளிதாகச் சுற்றி வளைத்துள்ளனர்," என்று ரங்கராஜு தெரிவிக்கிறார். இருப்பினும் இந்தச் சம்பவம் அதிகாலையில் நடைபெற்றுள்ளது. எனவே இதில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காட்டுயிர் சட்டத்தின் கீழ் இதில் தொடர்புடைய சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலனியில் மற்றொரு புலி, வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளது. அந்த வாகனத்தை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளர். இறந்த இரண்டு புலிகளுக்கும் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. தாலிபன் அரசு காபூல் மக்களைக் கண்காணிக்க அவர்களிடமே பணம் கேட்டு நிர்பந்திக்கிறதா? உண்மை என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இரண்டு வயதே நிரம்பிய வளரிளம் பருவத்தைச் சேர்ந்த புலி என்பதால், கிராம மக்கள் அதை எளிதில் சூழ்ந்துவிட்டதாகக் கூறுகிறார் தூத்வா புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் டி.ரங்கராஜு தூத்வா பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதிகரித்து வரும் புலிகள் எண்ணிக்கை காரணமாக, மனிதர்கள் - புலிகள் எதிர்கொள்ளல் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இது எதிர்மறையான பின்விளைவை ஏற்படுத்துகிறது. ரங்கராஜு இதுகுறித்துப் பேசும்போது, "தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் புலிகள் அவற்றின் குட்டிகளோடு வலம் வருகின்றன," என்று கூறினார். இந்தப் புதிய புலிகள் காட்டின் எல்லைப் பகுதிகளில் நடமாடுகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை எதிர்கொள்ளும்போது தாக்கக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே நடக்கிறது," என்று கூறினார். காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் காட்டுயிர் ஆய்வுகளுக்கான மையத்தின் (Centre for Wildlife Studies) தரவுகள்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் பதிவாகின்றன. இந்தியாவில், காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் பிரச்னைகளில் அதிகமாகப் பேசப்படுபவை, புலிகள், யானைகள் மற்றும் சிறுத்தைகள். தற்போது 3,500க்கும் அதிகமான புலிகள் உள்ளன. அதோடு, 30,000 யானைகள் மற்றும் 13,874 சிறுத்தைகள் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசின் தரவுகள்படி, 349 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் காட்டுயிர் நிபுணரான முனைவர் யத்வேந்திரா சிங் ஜாலா இதுகுறித்துப் பேசும்போது, "காட்டுயிர் மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளன. பல உயிரினங்கள் முன்பு அழியும் நிலையை எதிர்கொண்ட பகுதிகளிலேயே இப்போது எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன," என்று கூறுகிறார். ஒவ்வோர் ஆண்டும், 35க்கும் மேற்பட்டோர் புலிகள் தாக்கி உயிரிழக்கின்றனர். சிறுத்தைகள் தாக்குவதால் 150 பேரும், காட்டுப் பன்றி தாக்குவதால் 150 பேரும் உயிரிழக்கின்றனர். பாம்புக் கடியால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். மற்றொரு புறம், ஒவ்வோர் ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். டிரம்பின் 'கோல்டு கார்டு' விசா என்றால் என்ன? - கிரீன் கார்டில் இருந்து வேறுபட்டதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?27 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 80 ஆயிரம் காட்டுயிர் - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் பதிவாகின்றன "இது இறப்புகளின் எண்ணிக்கையைப் பற்றியதல்ல. 200 ஆண்டுகளுக்கு முன்பு மனித இறப்புக்கான காரணங்களில் காட்டுயிர்கள் தாக்குவதும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. இன்று, அரிதாக ஆங்காங்கே நடக்கின்றன. அதனால்தான் இத்தகைய செய்திகள் உடனே செய்தியாக்கப்படுகின்றன. உண்மையில் புலிகள் காப்பகத்தில் புலிகள் தாக்கி இறப்பதைக் காட்டிலும் நீங்கள் வாகன விபத்தில் சிக்கி இறப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது," என்று முனைவர் ஜாலா தெரிவித்தார். இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 3,682 புலிகள் உள்ளன. 2018ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 2,967 ஆக இருந்தது. 2014ஆம் ஆண்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2,226. ஆண்டுக்கு 6% என்ற அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. புலிகள் 1,38,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வாழ்ந்து வருகின்றன. அதே பகுதியில் ஆறு கோடி மக்களும் வசித்து வருகின்றனர். பட மூலாதாரம்,RANGARAJAN T DEPUTY DIRECTOR DUDHWA TIGER RESERVE படக்குறிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தற்போது 3,682 புலிகள் உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து புலிகள் வாழும் 20 மாநிலங்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின்போது, புலிகளின் வாழ்விடங்களில் அவற்றுக்குத் தேவையான இரை உயிரினங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன, புலிகளுக்கு வாழ்விடப் போட்டியை விளைவிக்கும் வேறு உயிரினங்கள், வாழ்விடத்தின் தரம் ஆகியவையும் மதிப்பிடப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgzzpz2zrmo
  22. Published By: DIGITAL DESK 3 28 FEB, 2025 | 09:29 AM 1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% - 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். மேலும் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது எனவும், அதற்கு வினைத்திறன் இன்மையே காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திருப்திகரமான அரச சேவையை உருவாக்கி அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2025 வரவு செலவுத் திட்ட பரிந்துரைகளில் முன்வைக்கப்பட்டுள்ள சம்பள மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது. தற்போதும் அரச சேவையில் 30,000 வெற்றிடங்கள் அறியப்பட்டிருப்பதால், அதற்காக ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், அதனால் அரச சேவையின் நடுத்தர பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் முழுமையடையும் என்றும் கூறினார். அபிவிருத்தி என்பது கட்டிடங்கள், பாலங்களை கட்டுவது மாத்திரமல்ல என்றும்,வீழ்ச்சியடைந்திருக்கும் சமூகக் கட்டமைப்பை உயர்த்தி வைக்க வேண்டியது அவசியம் என்றும், அதில் முதன்மைப் பணி மாவட்ட செயலாளர்களை சார்ந்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மேலும், இதன்போது மாவட்டங்களுக்கு அமைவான பிரச்சினைகள் குறித்து அரசாங்க அதிபர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அரச நிருவாக அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார மற்றும் மாவட்டச் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/207880
  23. Published By: VISHNU 28 FEB, 2025 | 01:46 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக குறிப்பிடப்படும். ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஏதும் வெளிவராது. 2016 ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 662.34 இலட்சம் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்த குழுவின் அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 144.56 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவுக்கு 1063 இலட்சம் ரூபாய், ஊழல் எதிர்ப்பு காரியாலயத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு 350 இலட்சடம் ரூபாய், அரசியல் பழிவாங்களுக்கல் தொடர்பான விசாரணை குழுவுக்கு 842 இலட்சம் ரூபாய், சுங்கத் திணைக்களம் மீதான குற்றச்சாட்டை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவுக்கு 318 இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் செலவிடப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை . ஆனால் 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதரமாக விசாரணை செய்து, துரிதமாக அறிக்கை சமர்ப்பித்து நட்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை காட்டிலும் இயலுமான வகையில் அரச செலவுகளை குறைத்து கொண்டுள்ளோம். செலவு குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விடயதானத்தில் இருந்து முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/207875
  24. Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 07:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் இயற்றப்படும். அடுத்த தேர்தல் வரை இது இழுபறியில் இருக்காது வெகுவிரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விடயதானத்துக்கு பொறுப்பற்ற வகையில் பேசுகிறார்கள். விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.இருப்பினும் ஒருசிலர் பொறுப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் குறிப்பிடுகிறோம். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக நீதியரசர் (ஓய்வுநிலை) ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்துச் செல்லப்படமாட்டாது. பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சட்டம் விரைவில் இயற்றப்படும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய சட்டம் இயற்றப்படும். ஆகவே இச்சட்டம் இயற்றப்பட்டவுடன் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். ஆகவே இவ்விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம். பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் இடையில் முரண்பாடு, சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடு என்று எதிர்க்கட்சிகள் இன்றும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் கடும் போட்டி நிலவுவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் அது இன்றுவரை பொய்யாக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/207842
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேஸ்மின் ஃபாக்ஸ்- ஸ்கெல்லி பதவி,‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு முறை கழிக்கப்படும் டைப் 3 அல்லது டைப் 4 என வகைப்படுத்தப்படும் சாஸேஜ் வடிவிலான மலமே சிறந்தது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழிக்கும் மனிதரா, அல்லது கழிவறை செல்வதே அபூர்வமான ஒன்றா? இப்படியாக, ஒவ்வொருவரின் மலம் கழிக்கும் இடைவெளியும் எண்ணிக்கையும் வேறுபடும். அவை உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உணர்த்துவது என்ன? மலத்தின் பின்னால் உள்ள அறிவியலை இங்கு தெரிந்துகொள்வோம். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்? இந்தியாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை அதிகம் பாதிக்கும் 'செகண்ட் இயர் சிண்ட்ரோம்' பற்றி தெரியுமா? குழாய் நீர், போர்வெல் நீர், ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் - எந்த நீரை குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது? தோல் அரிப்பு: சொறிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா? புதிய ஆய்வு கூறுவது என்ன? ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிப்பது சரி? ஒருவர் எத்தனை முறை மலம் கழிக்கிறார் என்பது நபருக்கு நபர் மாறுபடும். நாம் உணவு உண்ணும்போதெல்லாம், பெருங்குடல் சுருங்கி உணவைச் செரிமானப் பாதையில் தள்ளுகிறது. இந்தத் தன்னிச்சையான "கேஸ்ட்ரோ-கோலிக் ரிப்லெக்ஸ்" எனும் விளைவால் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தூண்டும் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் இந்த உந்துதலைக் கட்டுப்படுத்த கற்றுள்ளோம். அதனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது என்பது புதிய நடைமுறையாகிவிட்டிருக்கிறது. "நாம் மலம் கழிக்கக்கூட நேரமின்றி இருக்கிறோம்," என்கிறார் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா மருத்துவமனையில் இரையகக் குடலியலாளரும் (gastroenterologist), பொது மருத்துவருமான மார்டின் வேய்சே. பொதுவாக ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது நல்ல குடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் மலம் கழித்தலைப் பொறுத்தவரை சரியானது எது என்பது கடந்த காலங்களில் தெரியாமல் இருந்தது. ஆனால் முன்னர் செய்யப்பட்ட ஓர் ஆய்வு, ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது முதல் ஒரு நாளைக்கு 24 முறை மலம் கழிப்பது வரை இயல்பானது எனக் கருதலாம் என்றுகூடத் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC ஆனால், பிரிட்டன் பிரிஸ்டல் ராயல் இன்பர்மரி மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் கென் ஹீட்டன் போன்ற விஞ்ஞானிகளின் முன்னோடி ஆய்வுகள் காரணமாக இப்போது நமக்கு அதன் உண்மைத்தன்மை தெரியும். 1980களின் பிற்பகுதியில் கீட்டனும் அவரது சகாக்களும் கிழக்கு பிரிஸ்டல் மக்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர். ஆய்வு முடிவுகள் மலம் கழித்தலில் பல வகைகள் இருப்பதைக் காட்டின. ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழிப்பது பொதுவான பழக்கமாக இருந்தாலும் ஆண்களில் 40 சதவீதம் பேரும், பெண்களில் 33 சதவீதம் பேரும் மட்டுமே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். சிலர் வாரத்திற்கு ஒருமுறைக்கும் குறைவாகவே மலம் கழித்தனர், வேறு சிலர் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தனர். மொத்தத்தில் இயல்பான குடல் செயல்பாடு, மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களிடமே இருந்தது என்றும் மனித இயங்கியலில் இளம் பெண்கள் பாதகமான சூழலை எதிர்கொள்கின்றனர் என்றும் இந்த ஆய்வு முடிவு செய்தது. மலம் தொடர்பான அறிவியலுக்கு ஹீட்டனின் பங்களிப்பு இது ஒன்று மட்டுமல்ல. அதன் பின்னர், 'தி பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல்' என்ற அளவுகோலை வடிவமைக்கவும் அவர் உதவினார். இந்த அளவுகோலும் அதனுடன் வரும் வரைபடங்களும், செரிமானம் தொடர்பான பிரச்னைகளை அடையாளம் காண மருத்துவர்கள் பயன்படுத்தும் வழிகாட்டியாக அமைந்துள்ளன. இந்த அளவுகோலில், "தனி கடலைகள் போலக் கட்டியாக இருக்கும் மலம்" முதல் "நைந்த ஓரங்களைக் கொண்ட பஞ்சு போன்ற கட்டிகள்" வரை பல வகையான மலங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்27 பிப்ரவரி 2025 கோல்டிலாக்ஸ்/கோல்டிலாப்ஸ் நிலை பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,அடிக்கடி மலம் கழிப்பது குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளர்வதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை மலம் கழிப்பது இயல்பானதாகக் கருதப்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இயல்பானதும், ஆரோக்கியமானதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் எவ்வளவு முறை மலம் கழிக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கலாம். ஆனால் நாம் எவ்வளவு முறை மலம் கழிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அது பதிலளிக்கவில்லை. ஒரு மனிதர் மலம் கழிப்பது அவரது ஆரோக்கியத்தின் வலுவான அளவுகோல் என ஆய்வாளர்கள் அதிகமாகக் கண்டறிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு 2023இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அமெரிக்காவில் 14,573 வயது வந்தவர்களின் மலம் கழிக்கும் பழக்கங்களை ஆராய்ந்தது. இதில் அதிகமான நபர்களிடம், வாரத்தில் ஏழு முறை மலம் கழிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. மலம் "ஒரு சாஸேஜ் அல்லது பாம்பு போல மிருதுவாகவும், மென்மையாகவும்" அதிகம் காணப்பட்டது. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், இறப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, ஆய்வில் பங்கேற்றவர்களை ஆய்வாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குக் கண்காணித்து வந்தனர். வாரத்தில் ஏழு நாட்கள் இயல்பான மலம் கழித்தவர்களோடு ஒப்பிடுகையில் வாரத்திற்கு நான்கு முறை மென்மையான மலம் கழிப்பவர்கள் 5 ஆண்டுகளுக்குள் உயிரிழப்பதற்கு 1.78 மடங்கு வாய்ப்பு அதிகம் எனக் கண்டறிந்தனர். அதிக இடைவெளியில் மலம் கழிப்பவர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 2.42 மடங்கு அதிக வாய்ப்பும், இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழப்பதற்கு 2.27 மடங்கு அதிக வாய்ப்பும் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. அமெரிக்காவின் சியாட்டலில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஃபார் சிஸ்டம்ஸ் பயாலஜியில் நுண்ணுயிரியல் வல்லுநரான சான் கிப்பன்ஸ் முன்புள்ள கேள்வி எவ்வளவு மலம் கழிப்பது சரியான அளவு என்பதுதான். 2024இல் கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் 1400 ஆரோக்கியமான வயது வந்தவர்கள் அவர்களின் மலம் கழிக்கும் வழக்கத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். மலச் சிக்கல் உள்ளவர்கள் (வாரத்திற்கு ஓரிரு முறை மட்டும் மலம் கழிப்பவர்கள்), குறைவான இயல்பு (வாரத்திற்கு மூன்று முதல் ஆறு முறை மலம் கழிப்பவர்கள்), அதிக இயல்பு (ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை வரை மலம் கழிப்பவர்கள்) மற்றும் டயாரியா அல்லது பேதி. அதன் பின்னர் மலம் கழிக்கும் இடைவெளிக்கும், குடல் நுண்ணுயிர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 சந்தரா: சமணர்கள் கடைபிடிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விடும் நடைமுறை26 பிப்ரவரி 2025 இதய நோய்க்கும் மலம் கழிப்பதற்குமான தொடர்பு பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,உங்கள் மலத்தைக் கண்காணிப்பது மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டிய மாற்றங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் கழிப்பறைக்கு அதிகமாகச் செல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முறை மலம் கழிப்பவர்களின் குடலில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை கிப்பன்ஸ் கண்டுபிடித்தார். மற்றொரு புறம், ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவர்கள் ரத்தத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அல்சைமர் நோயோடு தொடர்புபடுத்தப்பட்ட நச்சுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது. "மலம் கழித்தலில் அதிக இயல்பு பிரிவில், குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்கள் எனப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் காற்றில்லா உயிரினங்கள் அதிகரிப்பதைக் கண்டோம்," என்கிறார் கிப்பன்ஸ். இந்தக் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களில் ஒன்றான ப்யுடிரேட், உடலில் அழற்சியைக் குறைக்கும் திறன் கொண்டது. இது முக்கியமானது, ஏனென்றால் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு மற்றும் அல்சைமர்ஸ் போன்றவற்றுக்கு நாள்பட்ட அழற்சிதான் தற்போது காரணமாகக் கருதப்படுகிறது." "அதிக அளவு ப்யுடிரேட் இருப்பது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி 'இன்சுலின் ஏற்பு நிலை' அதிகரிக்க உதவுகிறது," என்கிறார் கிப்பன்ஸ். ப்யுடிரேட் குடலில் உள்ள அணுக்களுடன் ஒட்டிக்கொண்டு வயிறு நிறைந்தது போல் உணர வைக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய வைக்கிறது," என்கிறார் அவர். ஒரு நபர் அரிதாக மலம் கழிக்கும்போது, மலம் அவரது குடலில் நீண்ட காலம் தங்கிவிடுவது மலச்சிக்கல் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக நச்சுகள் இருக்க ஒரு காரணம் என்று கிப்பன்ஸ் நம்புகிறார். இதனால் குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்துகள் அனைத்தையும் தின்று அவற்றை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் பிரச்னை என்னவென்றால் நார்ச்சத்து தீர்ந்தவுடன் பாக்டீரியா புரதத்தை உட்கொள்ளத் தொடங்குகின்றன. இது தீங்கு விளைவிக்கும் நச்சுகளை ரத்தத்தில் கலக்கிறது. இந்த நச்சுகள் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியவை. உதாரணமாக பெனிலசிடைல்குளுடாமைன் எனப்படும் நச்சு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஓர் அபாயகரமான காரணியாக உள்ளது. "வளர்சிதை மாற்றத்தில் உருவான இந்தப் பொருள் அதிக அளவில் நீண்ட நாட்கள் உங்கள் ரத்த ஓட்டத்தில் இருந்தால், பெருந்தமனி தடிப்பை அது ஊக்குவிக்கக்கூடும். இது தமனிகளைக் கடினப்படுத்தி இதய அமைப்பைப் பாதிக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ். மருத்துவ நடைமுறைகள் ஒரு நாளைக்கு மூன்று முறை மலம் கழித்தலில் இருந்து வாரத்திற்கு மூன்று முறை மலம் கழிப்பது வரை ஆரோக்கியமானது எனக் கூறினாலும், தமது ஆய்வில் இந்தக் குறைவான இயல்பைக் கொண்ட பிரிவினர் மத்தியிலும்கூட ரத்த ஓட்டத்தில் நச்சுகள் அதிகரித்து இருந்ததாக கிப்பன்ஸ் கூறுகிறார். "எதிர்காலத்தில் இந்த நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா என்கிற தரவுகள் இல்லாததால் உறுதியாகச் சொல்வது கடினம். இருப்பினும், நாம் பார்த்தவரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் முதல் ஒரு நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது, ஆரோக்கியமாக இருப்பதற்குச் சிறந்த பழக்கமாக இருக்கலாம்," என்கிறார் கிப்பன்ஸ். இருப்பினும், எப்போதும் போல, தொடர்பு என்பது காரண, காரியத்திற்குச் சமமாக இருக்காது. மற்ற வழிகளில் ஏற்கெனவே குறைவான ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கக்கூடும். இதைக் கட்டுப்படுத்த கிப்பன்ஸின் ஆய்வில் எந்த நோய் பிரச்னைகளும் இல்லாதவர்களே தேர்வு செய்யப்பட்டனர். தரங்கம்பாடி: 400 ஆண்டுகள் கடந்தும் உறுதியாக நிற்கும் 'டேனிஷ்' கோட்டை எதற்காக கட்டப்பட்டது?26 பிப்ரவரி 2025 5,000 ஆண்டுக்கு முந்தைய மம்மிகளில் வெளிப்பட்ட நறுமணம் - எகிப்தியர் எவ்வாறு தயார் செய்தனர்?26 பிப்ரவரி 2025 குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அடிக்கடி மலம் கழிக்க மக்களுக்கு உதவும். உங்கள் குடலின் ஆரோக்கியத்தைக் கணிக்க ஒரு வழி உங்கள் செரிமானப் பாதையைக் கடக்க உணவு எடுத்துக்கொள்ளும் நேரம். இதை ஆங்கிலத்தில் கட் டிரான்ஸிட் டைம் என்கிறார்கள். பிரகாசமான நிறமுடைய ஸ்வீட்கார்ன் போன்ற உணவை உட்கொண்டு, அதன் பின்னர் அது வெளியே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை நீங்கள் எளிதாக வீட்டிலேயே பரிசோதிக்கலாம். பொதுவாகச் சொல்வதானால், ஒரு நபரின் கட் டிரான்ஸிட் டைம் அதிகரிக்கும்போது அவர் மலம் கழிக்கும் இடைவெளி அதிகரித்து அவர்கள் மலச் சிக்கலால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த 2020இல் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கட் டிரான்சிட் நேரத்தைக் கணக்கிட 863 பேருக்கு நீல நிற மஃபின்களை கொடுத்தனர். இது வெவ்வேறு உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைப் பாதிப்பதை, மரபியல், குடல் நுண்ணுயிர் தொகுப்பு மற்றும் பிற காரணிகள் எப்படி மாற்றுகின்றன என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பபிரெடிக் 1 ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது. இதில் கட் டிரான்ஸ்ட் டைம் என்படும் உணவு செரிமானக் குழாயைக் கடக்கும் நேரம் நபருக்கு நபர் 12 மணிநேரத்தில் இருந்து பல நாட்கள் வரை மாறுபட்டதாகத் தெரிய வந்தது. குறிப்பாக, குறுகிய டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் - அதாவது அடிக்கடி மலம் கழிப்பவர்கள் மத்தியில் - காணப்பட்ட நுண்ணுயிர்கள் அதிக டிரான்ஸிட் டைம் இருந்த நபர்களிடம் இருந்த நுண்ணுயிர்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தன. குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருந்தவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் இருந்ததாகத் தெரிய வந்தது. "அதிக டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிக தீய குடல் பாக்டீரியாக்கள் இருந்ததை நாங்கள் கண்டோம். இவை மோசமான இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்குப் பாதகமானவையாக முன்பு அடையாளம் காணப்பட்டவை," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நுண்ணுயிர் தொகுப்பு விஞ்ஞானியாக இருக்கும் எமிலி லீமிங். பட மூலாதாரம்,GETTY IMAGES இது 58 மணிநேரம் அல்லது அதற்கு மேல் கட் டிரான்ஸிட் நேரம் இருந்தவர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது. இவர்கள் ஒரு வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். குடலில் மலம் அதிக நேரம் இருப்போரிடம் நுண்ணுயிர்களுக்குப் புதிய உணவு கிடைக்காமல் அவை நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்துகளை உண்பதை விடுத்து புரதங்களை உண்ணத் தொடங்குவதாக கிப்பன்ஸ் போலவே லீமிங்கும் கருதுகிறார். இவை உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. குறைவான கட் டிரான்ஸிட் டைம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் தொகுப்பு இருந்ததுடன் விசெரெல் ஃபேட் எனப்படும் உள்ளுறுப்புக் கொழுப்பும் குறைவாக இருந்ததாக லீமிங்கின் ஆய்வில் தெரிய வந்தது. இந்த வகையான கொழுப்பு வயிற்றின் ஆழமான பகுதிகளில் உள்ளுறுப்புகளைச் சுற்றிக் காணப்படுகிறது. இந்த உள்ளுறுப்புக் கொழுப்பு பல இதய நோய்கள், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய சீர்கேடுகளைக் கொண்டு வரலாம் என்பதால் அபாயகரமானது. குறைவான கட் டிரான்ஸிட் இருப்பவர்களிடம் போஸ்ட்பிராண்டியல் ரெஸ்பான்ஸ் எனப்படும் உணவுக்குப் பிந்தைய வினை ஆரோக்கியமானதாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. அதாவது அவர்கள் உணவு எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் லிப்பிட்ஸ் எனப்படும் கொழுமியங்களின் அளவு குறைவாக இருந்தது. இதனால் அவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. மலச் சிக்கல் குறித்தும், நாள்பட்ட நோய்களுடன் அதற்கிருக்கும் தொடர்பு குறித்தும் விஞ்ஞானிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த தகவல்களுடன் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஒத்துப் போகின்றன. யாருக்கேனும் நாள்பட்ட மலச் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு குடல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு ஆதாரம் கலவையாக இருக்கிறது. ஒரே கேள்விக்குப் பதிலளிக்கும் பல ஆய்வு முடிவுகளைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும் மெட்டா அனாலிசிஸ் என்ற முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் மலச் சிக்கல் இருப்பவர்களிடம் குடல் புற்றுநோய் அதிக அளவில் இல்லை எனத் தெரிய வந்தது. "ஆனால் நாங்கள் உடலின் பிற பகுதிகளுடன் தொடர்புகள் இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக பார்க்கின்ஸன் நோய் உள்ளவர்கள் அறிகுறிகள் தெரிவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மலச் சிக்கலால் பாதிக்கப்படலாம்," என்கிறார் லீமிங். இதற்கிடையில் பெருங்குடல் வழியாக மலம் கடத்துவதில் தாமதத்திற்கும், பித்தப்பை கற்களுக்கும் இருக்கும் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார். "அது குடலில் புற்றுநோய்க் கட்டிகளுக்கு முன் தோன்றும் பாலிப்ஸ் உருவாவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவை பின்னர் புற்றுநோயாக மாறலாம்" என்கிறார் அவர். காலநிலை மாற்றம்: ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணுக்கு இரட்டைச் சுமை என்று நிபுணர்கள் எச்சரிப்பது ஏன்?23 பிப்ரவரி 2025 மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் போதைப் பழக்கம், பின்னணியில் இந்திய மருந்து நிறுவனம் - பிபிசி புலனாய்வு21 பிப்ரவரி 2025 உங்கள் மலம் உங்களைப் பற்றிச் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு வாரத்திற்கு எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது நபருக்கு நபர் மாறுபடக்கூடியது. ஆனால், அதைவிட, மலம் கழிக்கும் பழக்கத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பதுதான் முக்கியமானது என்கிறார் லீமிங். நீங்கள் வழக்கமாக மலம் கழிக்கும் பழக்க வழக்கத்தைக் கவனத்தில் கொள்வதால் உங்கள் உடலுக்கு எது இயல்பானது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். "நாம் அனைவரும் நமது மலத்தைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் அடிப்படையில் அது ஓர் இலவச குடல் ஆரோக்கிய பரிசோதனையைப் போன்றது," என்கிறார் லீமிங். "நீங்கள் எப்போதெல்லாம் மலம் கழிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்கள் மலத்தின் நிறம் மற்றும் வடிவமும் கவனிக்கப்படவேண்டும். (பிரிஸ்டல் ஸ்டூல் ஃபார்ம் ஸ்கேல் அளவுகோலில்) டைப் 3 அல்லது டைப் 4, அதாவது வெடிப்புகளுடன் ஒரு சாஸேஜ் அல்லது மிருதுவான சாஸேஜ் வடிவில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்." நிறத்தைப் பொறுத்தவரை, மலத்தில் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தைப் பார்த்தால் அது ரத்தம் இருப்பதைக் குறிக்கிறது. இதற்கு அபாயமில்லாத ஒரு விளக்கம் இருக்கக்கூடும் என்றாலும் இது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே ஒரு மருத்துவரை முடிந்த வரை உடனடியாகப் பார்ப்பது முக்கியமானது. உங்களுக்கு அடிக்கடி பேதி ஏற்பட்டாலோ, திடீரென மலம் கழிக்க வேண்டியிருந்தாலோ, உணவு உட்கொண்ட பின்னர் பிடிப்பு, வயிறு கனத்திருப்பது போன்ற உணர்வு அல்லது வாயுத் தொந்தரவு இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம். இறுதியாக மேலும் இயல்பாக மாற விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய மூன்று எளிதான காரியங்கள் உள்ளன. "எங்களது ஆய்வில் இயல்பான கட்டத்தில் இருந்தவர்கள், அதிகமாகப் பழங்களையும், காய்களையும் உட்கொண்டதுடன், அதிகமாக நீர் அருந்தினர், உடல் ரீதியாக அதிகம் சுறுசுறுப்பாக இருந்தனர்," என்கிறார் கிப்பன்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05mme1pgndo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.