Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் கைவிட்டுவிடவில்லை; தமிழ்த்தேசிய ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்து நின்றதன் விளைவே தேர்தல் முடிவுகள் - சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாதத்துக்கொரு கேள்வி - பதில் பகுதியில் 'தமிழ்த்தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?' என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழீழம் பெறமுடியாமல் போய்விடுமா என்று பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் 'தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்' எனப் பதிலளித்தாராம். அதேபோன்று தமிழ்த்தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த்தேசியம். அது அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத்தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள். ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் பிரதேசங்களில் மாத்திரம் ஏன் இந்தப் பாகுபாடு எனும் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்களை தமிழ்த்தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது. தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய சிந்தனையை ஏளனம் செய்து, கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயிருக்கிறார். இருப்பினும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வட , கிழக்கில் அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றிருப்பதே உங்களது கேள்விக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும். கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த்தேசியத்துடன் தான் இருக்கிறார்கள். இருப்பினும் பல சுயேட்சைக்குழுக்களின் தோற்றம் மற்றும் பல வருடகால அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம்கொடுக்காமை போன்றவற்றால் அவர்கள் செய்வதறியாது பிரிந்துநின்று வாக்களித்திருக்கிறார்கள். அதேவேளை தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளின் மொத்தத்தொகையைப் பார்த்தால், தமிழ்த்தேசியத்துக்கான எமது மக்களின் ஆதரவு குறையவில்லை என்ற விடயமே புலனாகிறது. ஆகவே தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை. அதேவேளை ஐ.நா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை ஒன்றின்கீழ் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த்தேசம் என்பதை எந்தவொரு இலங்கை அரசாங்கமும் ஏற்காதவரை, வட, கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199513
  2. க.பொ.த. உயர்தர பரீட்சை திங்கள் ஆரம்பம்! (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு மையங்களை நிறுவுதல், பரீட்சை மையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. உயர்தரப் பரீட்சை அட்டவணை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஒரு மாற்றம், தேசிய தேர்வு நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாதாரண தர பரீட்சையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தற்போது உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி, பின்னர் மீண்டும் திட்டமிடுவது பரவலான தளவாடச் சிக்கல்களை உருவாக்கும் மற்றும் இலங்கையின் கல்வி முறையின் சுமூகமான செயல்பாட்டை பாதிக்கும். இந்தக் காரணிகளின் அடிப்படையில், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/199485
  3. விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார். அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196310
  4. 23 NOV, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் ரணராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவரது நியமனத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகர் தனது சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீன தூதுவர் தனது சந்திப்பில் வெளிவிவகாரச் செயலாளருக்கு வாழ்த்தியுள்ளதோடு, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல், இரு நாடுகளுக்கு இடையே நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்குதல் மற்றும் பொதுவான அக்கறையுள்ள பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பும் ஆழமான கருத்துக்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சீன தூதுவர் புதிய சபாநாயகர் அசோக ரன்வாலாவைச் சந்தித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இருநாட்டு சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பரிமாற்றங்களை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199490
  5. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மாதிவெலயில் உள்ள வீட்டுத் தொகுதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகள் தேவைப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற நிர்வாகம் முன்னர் அறிவித்தல் விடுத்திருந்தது. பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தில் வீடுகளைக் கொண்டவர்கள், இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம். https://tamil.adaderana.lk/news.php?nid=196307
  6. வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன. பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்கள் இங்கு சட்டவிரோதமாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும் குறித்த இடத்தில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன. இது தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் மேற்படி இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் புதையல் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நாள் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2ஆவது நாளான நேற்று நடந்த அகழ்வுப் பணியின் போது பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மதியம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, குறித்த கல்லை அகற்றியும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்தது. எனினும், இது தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்து மேலதிகமாக இன்றைய நாளையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, மூன்றாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி தொடங்கியது. பாரிய கல்லை அகற்ற முடியாத பின்னணியில் அதை வெட்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கல் துண்டுகளாக நொறுக்கப்பட்டன. அதன்படி, புதையல் அல்லது தொல்பொருள் மதிப்பு எதுவும் கிடைக்காததால், அங்கு கூடியிருந்த அனைத்து அரச அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி இன்று மாலை 4 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் காரணங்களை அறிக்கையிட்டு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு திரண்டிருந்த மக்களும் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=196305
  7. 7 கோடி ரூபா கொள்ளையர்கள் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள் மினுவாங்கொடை பகுதியில் ஏழரை கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 18ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கியின் சாரதி ஒருவர், வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் போது, 7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். குறித்த பணத்தில் 3 கோடிக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கம்பஹா பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான துஷார இந்திக சொய்சா எனவும், மற்றைய சந்தேக நபர் 40 வயதான உடுகம்பலை பிரதேசத்தை சேர்ந்த சமன் ரணசிங்க எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் இருவரும் மூன்றரை கோடி ரூபாவை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளதுடன், குறித்த நபர் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் இருவரும் குருநாகல் மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல CCTV காட்சிகளை சோதனை செய்ததில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் நடத்திய விசாரணையில் இருவரும் அங்கிருந்து வாடகை காரில் நாகதீபத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குருநாகல், கணேவத்த பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் வீதியில் காத்திருந்த ஒருவரிடமிருந்து தமக்கு அழைப்பு வரவிருப்பதாக தெரிவித்து கையடக்க தொலைபேசி ஒன்றை 10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளனர். இது தொடர்பான CCTV காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நாகதீப கோவிலுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டவிட்டு, யாழ்ப்பாணம் நகருக்குத் திரும்பியதும் கடற்படைச் சிப்பாய்கள் குழுவுடன் உரையாடிய போதிலும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் ஒரு இலட்சத்து 50,000 ரூபாவை வாடகை வாகனத்திற்கு செலுத்தியுள்ளனர். பின்னர், சம்பந்தப்பட்ட காரின் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் இருவரைப் பற்றி கேட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளார். பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சந்தேகத்திற்கு இடமான இருவரையும் பொலிஸார் தேடுவதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் செல்லும் CCTV காட்சியும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=196308
  8. 23 NOV, 2024 | 05:47 PM இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் எந்த எந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம், திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199509
  9. 23 NOV, 2024 | 07:32 PM மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தினால் முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 200 குடும்பங்களை சேர்ந்த 774 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். 107 குடும்பங்களை சேர்ந்த 351 பேர் பாதுகாப்பான 3 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் க.திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்தனர். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/199504
  10. வலுவான நிலையில் இந்தியா: ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை தகர்த்த ஜெய்ஸ்வால் - ராகுல் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் - ராகுல் இணை எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை சற்று ஓங்கியுள்ளது. அனுபவம் குறைந்த வீரர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கியிருக்கிறது இந்திய அணி என்று விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடியை ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி அளித்துள்ளது. முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் 2வது நாளான இன்று 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டைக் கூட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் சாய்க்க முடியவில்லை. பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழும் பெர்த் ஆடுகளத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை நெருங்கியுள்ளார். அவருக்கு துணையாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார். ராணாவை சீண்டிய ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. அலெக்ஸ் கேரே 19, ஸ்டார்க் 6 ரன்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அலெக்ஸ் கேரே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் சேர்ந்தார். பும்ரா, ஹர்ஷித் ராணா வீசிய பந்துகள் பிட்சில் பட்டு பேட்ஸ்மேனை நோக்கி எகிறி, சீறிப்பாய்ந்தன. இதனால் ஒரு கட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. “உன்னைவிட நான் வேகமாக பந்துவீசுவேன். பார்க்கத்தானே போகிறாய்” என்று ராணாவை வம்புக்கு இழுத்தார் மிட்செல் ஸ்டார்க். ஆனால், ராணா எந்தவித பதிலும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஸ்டார்க் நிதானமாக ஆடி 26 ரன்களைச் சேர்த்து, ஆஸ்திரேலிய அணியை 100 ரன்களைக் கடக்க உதவி செய்தார். நேதன் லயன் 5 ரன்கள் சேர்த்தநி லையில் ராணா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்டார்க் 26 ரன்னில் ராணாவிடமே விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்றைய ஆட்டத்தில் ராணாவுக்கும், ஸ்டார்க்கிற்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. 2வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 1981ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆகி இருந்தது. அதேநேரத்தில், பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் 1985 ஆம் ஆண்டுக்குப்பின், மூன்றாவது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 2016-ல் ஹோபர்ட்டில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 85 ரன்களிலும், 2010ம் ஆண்டில் மெல்போர்னில் இங்கிலாந்து அணியிடம் 98 ரன்களுக்கும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சுருண்டது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். டாப்-6 பேட்டர்கள் நிலை ஆஸ்திரேலிய அணியின் டாப்-6 பேட்டர்கள் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 37 ரன்கள்தான் சேர்த்தனர். கடந்த 1978-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய டாப்-6 பேட்டர்கள் 22 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் இப்போதுதான் டாப்-6 பேட்டர்கள் குறைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளனர். கபில்தேவ் சாதனையை சமன் செய்த பும்ரா இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கேப்டன் பும்ரா டெஸ்ட் அரங்கில் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்துக்கு வெளியே 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். 30 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் பந்துவீச்சு பெர்த் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாகும். 2007-ஆம் ஆண்டில் மெல்போர்ன் டெஸ்டின்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இந்திய அணிக்கு பந்துவீச்சாளர் கேப்டனாக இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES நங்கூரமிட்ட ஜெய்ஸ்வால், ராகுல் முதன் இன்னிங்சில் கிடைத்த 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ராகுல், ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை மிகவும் கவனமாக பந்துகளை எதிர்கொண்டனர். குறிப்பாக ஜெய்ஸ்வால், கிரீஸுக்கு உள்ளே நின்றே பந்துகளைச் சந்தித்ததால், எளிதாக பேக்ஃபுட் செய்து ஆட முடிந்தது. புதிய பந்தில் ஹேசல்வுட்டும், ஸ்டார்க்கும் ஆவேசமாகப் பந்துவீசியும் அதை ஜெய்ஸ்வால் லாவகமாக எதிர்கொண்டார். அவர் தேவையற்ற பந்துகளை தொடாமல் அப்படியே விக்கெட் கீப்பரிடம் விட்டுவிடவும் செய்தார். எந்த பந்தையும் வலுக்கட்டாயமாக அடிக்காமல், பந்து செல்லும் போக்கிலேயே தட்டிவிட்டு ஜெய்ஸ்வால் ரன் சேர்த்தார். சில நேரங்களில் கம்மின்ஸ் வீசிய பந்துகளை அப்பர்கட் ஷாட், ஸ்டார்க் பந்துவீச்சில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஜெய்ஸ்வால் ஷாட் அடித்து பவுண்டரி அடித்தார். ராகுல் 124 பந்துகளில் அரைசதமும், ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி நங்கூரமிட்டனர். 2-வது செஷனில் ராகுல், ஜெய்ஸ்வால் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது, இதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்களும் சோர்வடையத் தொடங்கினர். நேதன் லயன், டிராவிஸ் ஹெட் என சுழற்பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தினார். அவர்களின் ஓவர்களில் ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார், சில பவுண்டரிகளையும் அவர் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறல் பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுதான் ஓங்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ராகுல் சிதைத்துவிட்டனர். முதல் இன்னிங்ஸில் ராகுல்,ஜெய்ஸ்வாலை எளிதாக ஆட்டமிழக்கச் செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், ஸ்ட்ராக், கம்மின்ஸ் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் பலவிதமான வித்தைகள் செய்தும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. பெர்த் டெஸ்ட் இரண்டாவது நாள் முடிந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் கைதான் ஓங்கி இருக்கிறது. கூக்கபுரா பந்தில் விரைவாக விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்று கருதி, ஜெய்ஸ்வாலும், ராகுலும் ரன் சேர்ப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் நீண்ட நேரம் களத்தில் நிற்கவும், விக்கெட்டை நிலைப்படுத்தவும் கவனம் செலுத்தினர். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று முற்றிலும் தோல்வி அடைந்து, சோர்வடைந்தனர். அவர்கள் சோர்வடைந்த நேரத்தைப் பயன்படுத்தி ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 218 ரன் முன்னிலை இருவரின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 38 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சாதனை 20 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பின் அரைசதம் அடித்துள்ளனர். கடைசியாக 1986்-ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடியாக களமிறங்கி இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அதன்பின் எந்த இந்த தொடக்க ஜோடியும் அரைசதம் அடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்குப்பின் இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் அடித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx287emzngmo
  11. வடக்கில் இடர்களை எதிர்கொள்ள தயார்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று(22.11.2024) இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடர் நிலைமை அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லையாயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும். பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் - செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்கவேண்டும். சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்டரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின் காவல்துறையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதேநேரம், பல இடங்களில் வாய்க்கால்களுக்குள், வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுதான் வழி. பல தடவைகள் விழிப்புணர்வுகளை செயற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரப் பணிப்பாளரின் கோரிக்கை அத்துடன், இடர் நிலைமையின் போது தீவகத்திலுள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ளவேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதாரப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக் கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்வரும் இடர் நிலைமைகளின் போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/ready-to-face-the-dangers-in-the-north-1732345613
  12. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது : புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில் நாணய நிதிய அதிகாரிகள் மகிழ்ச்சி! 23 NOV, 2024 | 02:24 PM இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதி அளித்ததன் பின்னர், இலங்கைக்கு 4ஆம் கட்டமாக 254 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்படும் எனவும் இன்றைய தினம் (23) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் கட்ட மீளாய்வு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டத்தின் இலக்குகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமைவது அவசியம் என இந்த கலந்துரையாடலின்போது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதேவேளை, விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்றிட்டத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதில் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாடு தமது நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் நாணய நிதிய அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளமை முக்கிய விடயமாகிறது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/199475
  13. ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் ஆலோசனை 23 NOV, 2024 | 12:46 PM (துரைநாயகம் சஞ்சீவன்) நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். நேற்றைய தினம் (22) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் - ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் பொலிஸார் வழங்கியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸார் உட்பட முப்படையினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இது ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. இந்த விடயம் அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கூட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மறுத்திருந்தார்கள். தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை அதிகூடிய வாக்குகளை வழங்கியுள்ளமையானது மீண்டும் தமிழர் தேசம் ஜனநாயக ரீதியில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், புதிதாக ஆட்சியை அமைத்திருக்கின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகள் ஏதும் விதிக்காது எமது உரிமைகளை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், மாவீரர் நாள் நினைவேந்தல் தினத்தை காரணம் காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக நிதி சேகரித்து வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி உதவி செய்ய விரும்புவோர் வெளிப்படையான எமது கணக்கிலக்கத்துக்கு உதவி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199478
  14. எல்லோரிடம் இருந்து எச்சரிக்கைகள் வருகின்றன. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராவோம். 1) உலர் உணவு 2) தற்காலிக ஒளியமைப்பு(விளக்கு, மெழுகுதிரி) 3) நுளம்புவிரட்டி 4) போர்வை, பாய், மாற்று உடைகள் 5) உயர்ந்த முறிந்து வீடுகள் மேல் விழ வாய்ப்புள்ள மரக்கிளைகளை வெட்டிவிடுதல் மேலும் இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள உங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளை பினபற்றவும்.
  15. STUMPS India (57 ov) 150 & 172/0 Australia 104 Day 2 - India lead by 218 runs. Current RR: 3.01 • Last 10 ov (RR): 46/0 (4.60)
  16. (நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும். 17 வயதின்கீழ் இலங்கை குழாம் கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த https://www.virakesari.lk/article/199461
  17. 23 NOV, 2024 | 11:02 AM அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். https://www.virakesari.lk/article/199466
  18. மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் கிடையாது - ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்கள் சக்தி தான் பலமிக்கதாகவுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) அமைச்சின் கடமைகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகள் ஆகியோருடன் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடினார். தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பின் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் காணப்பட்டாலும் மக்களின் அதிகாரம் தான் பலமிக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன. இந்த மாற்றம் அவர்களினது எதிர்பார்ப்பு என்பது அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 80 சதவீத ஆணையை எடுத்துக்காட்டுகின்றனது என ஜனாதிபதி குறிப்பிட்டார். தமது அரசாங்கத்துக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. அனைவரும் எதிர்பார்க்கும் இந்த புதிய மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற்றமடைய முடியாது. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அரச சேவை இன்றியமையாததாக காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்த, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/199460
  19. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/199458
  20. (இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அண்மைகாலமாக இவ்வாறு குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள ஆணை அமோகமானது. வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட எம்.ஏ. சுமந்திரனையும் தோற்கடித்துள்ளார்கள். இருப்பினும் ஏனைய பிரிவினைவாதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். வடக்கு மக்கள் வழங்கியுள்ள இனவாதமற்ற ஆணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் உண்டு. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கனடா வாழ் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளன. பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது. வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்துக்கும் உண்டு. நாட்டின் ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட வேண்டும். தேசியத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும். நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய யாப்பு வரைவின் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். வெகுவிரைவில் அவற்றையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/199434
  21. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை - சிவநேசதுரை சந்திரகாந்தன் (எம்.மனோசித்ரா) நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் 2018ஆம் ஆண்டிலேயே புறக்கணித்துவிட்டனர். அதனாலேயே அவ்வாண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. எனவே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நான் சிறைச்சாலையிலிருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னிலையானபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட் தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே சீ.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார். உண்மையில் 2015 இல் நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் 2018இல் நடத்தப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி பெற்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்துவிட்டனர். அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது. எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது. எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும். புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார். https://www.virakesari.lk/article/199425
  22. வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது. நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் இங்கு அகழாய்வு மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. https://tamil.adaderana.lk/news.php?nid=196277
  23. அதானி மோசடி வழக்கில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் - நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜுகல் புரோஹித் பதவி, பிபிசி செய்தியாளர் கௌதம் அதானியின் பெயர் இந்தியாவின் செல்வந்தர்கள் மற்றும் சக்தி வாய்ந்த தொழிலதிபர்களின் பட்டியலில் உள்ளது. அவரும் அவரது கூட்டாளிகள் சிலரும் அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இதுவே மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும். அமெரிக்காவின் நீதித்துறை, அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ஆகிய அந்நாட்டு அரசு அமைப்புகள், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், சட்ட வழிகள் குறித்து ஆராய இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த வியாழனன்று பெரும் சரிவு ஏற்பட்டது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது, இந்த விவகாரம் இதோடு நிற்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இப்போது பல கேள்விகள் நமக்கு முன்னே உள்ளன. அமெரிக்காவில் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடைமுறை என்னவாக இருக்கும்? இந்தக் குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் வணிகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? கெளதம் அதானியும் அவரது கூட்டாளிகளும் சிறைக்குச் செல்லும் சாத்தியகூறு உள்ளதா? அதானி குழுமம் எதிர்காலத்தில் தனது திட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எப்படி நிதி திரட்ட முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள பிபிசி ஹிந்தி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நிபுணர்களிடம் பேசியது. சட்ட செயல்முறை மற்றும் சவால்கள் பிரையன் பீஸ், நியூயார்க்கில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கெளதம் அதானி மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் அளித்த அவர், “பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டம் தீட்டப்பட்டது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெய்ன் ஆகியோர் அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனத்தைத் திரட்ட முயன்றனர். அதனால்தான் அவர்களிடம் இவர்கள் பொய் கூறினார்கள்,” என்றார். ஆனந்த் அஹுஜா அமெரிக்காவில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் கூறினார். "முதலாவதாக, லஞ்சம் பெற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியாவில் உள்ளவர்களின் வாக்குமூலத்தை அமெரிக்க அதிகாரிகள் எப்படிப் பெறுவார்கள்? இதில் இந்தியாவின் சட்டங்களையும் பார்க்க வேண்டும். ஒருவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுவொரு சிக்கலான வழக்காக மாறலாம்," என்று விளக்கினார் ஆனந்த் அஹூஜா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் இருப்பவர்களை, குறிப்பாக அரசு அதிகாரிகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு விசாரிக்க முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். அதோடு, எதிர்காலத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் இதில் பங்கு வகிக்கலாம், ஏனென்றால் சட்டம் என்ன சொல்கிறது என்பதை உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார் அஹூஜா. “இரண்டாவது காரணம், மோசடி வழக்கில் ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதி முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டுமே மோசடியை வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். உதாரணமாக நீங்கள் சில வேலைகளைச் செய்தீர்கள், ஆனால் நீங்கள் அதைத் தவறான நோக்கத்துடன் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும் என்றால் அதை மோசடி எனக் கூறுவது கடினம். அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் இதை நிரூபிக்க முடியுமா என்பதைக் காலம்தான் சொல்லும்,” என்கிறார் ஆனந்த் அஹூஜா. முழு செயல்முறையும் முடிவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அஹுஜா “நீதித்துறையின் முந்தைய வழக்குகளைப் பார்த்தால், வழக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்து விசாரணை முடிவதற்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும்,” என்றார். தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஹெச்பி ரனினா ஒரு மூத்த கார்ப்பரேட் வழக்கறிஞர். “குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இவை நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஜூரி (நடுவர் குழு) குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கருதினால், தண்டனை பெரும்பாலும் அங்குள்ள நீதிபதியைப் பொறுத்து இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார். “அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைப் பொறுத்த வரை அந்த அமைப்பு அபராதம் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும். இருப்பினும் குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அபராதத்தின் அளவு பெரியதாக இருக்கலாம். அந்த அபராதத்தைச் செலுத்துவது அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்றார் அவர். கடந்த 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குற்றம் சாட்டப்பட்டவரை நாடு திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. கௌதம் அதானியை கைது செய்ய அமெரிக்கா கோர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்? “இது அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது. இதில் இரு அரசுகளும் சம்பந்தப்படலாம் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படலாம்,” என்று ரனினா குறிப்பிட்டார். அதானி பிராண்ட் மீது ஏற்படும் தாக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்யா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் அதானி குழுமம் 1.85 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. அதற்கு ஈடாக விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நடத்துவதற்கான ஒப்பந்தம் பெறப்படவிருந்தது. இதுதவிர, 736 மில்லியன் டாலர்களுக்கு மற்றோர் ஒப்பந்தமும் இருந்தது. இதன் கீழ் அங்கு மின்கம்பிகள் அமைக்கும் பணியை அதானி குழுமம் பெற்றிருந்தது. இந்த இரண்டு விவகாரங்களிலும் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ வியாழன்று இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்தபோது அதற்கு ஊழலைக் காரணம் காட்டினார். கென்யாவின் நாடாளுமன்றத்தில் பேசிய ரூட்டோ, "எங்கள் புலனாய்வு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்கள் ஊழல் பற்றிய மறுக்க முடியாத ஆதாரங்கள் மற்றும் நம்பகமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று கூறினார். அதானி குழும நிறுவனங்கள் கென்யாவை போலவே பல நாடுகளில் இயங்குகின்றன அல்லது திட்டங்களைத் தொடங்க முயல்கின்றன. இந்தக் குழுமம் இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளுடனும், வெளிநாடுகளில் உள்ள பல அரசுகளுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இருப்பினும் கென்யாவின் நடவடிக்கை போலவே மற்ற நாடுகளிலும் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வியாழனன்று அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் இதற்கு முன்பு குற்றச்சாட்டுகள் காரணமாகப் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்து பின்னர் ஏறுமுகமாக ஆனதும் நடந்துள்ளது. அம்பரிஷ் பலிகா ஒரு பங்குச் சந்தை நிபுணர் மற்றும் எந்த நிறுவனத்துடனும் தொடர்பு இல்லாதவர். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்கு விலைகள் பெருமளவு சரிந்தன. ஆனால் இந்த முறை பங்கு விலை வீழ்ச்சி அந்த அளவுக்கு இருக்காது என்று தான் நினைப்பதாக அவர் பிபிசி இந்தியிடம் கூறினார். கடந்த 2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் தனது அறிக்கையில் அதானி குழுமத்திற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அந்த வாரத்தில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்தது. “இந்தக் குழுமம் சவால்களை எதிர்கொள்வதில் தன் வழியைக் கண்டுபிடிப்பதில் வெற்றிகரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் இத்தகைய அறிக்கைகள் அதன் பிம்பத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன என்பது உண்மைதான். இதன் காரணமாக குழுமம் நிதி திரட்டுவதில் தாமதத்தை எதிர்கொள்கிறது. இந்த முறை குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தநேரத்தில் ’அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தபோது குழுமம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நிதி திரட்டிக்கொண்டிருந்தது,” என்று பலிகா குறிப்பிட்டார். பிராண்ட் இந்தியாவும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES சந்தோஷ் தேசாய் ஓர் ஆய்வாளர். இந்த சர்ச்சை அதானி குழுமத்தின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அவர் கருதுகிறார். முதலீட்டாளர்கள் பயப்படுவார்கள், எதிர்காலத்தில் அதானி குழுமம் வெளிநாடுகளில் இருந்து 'நிறுவன நிதி' பெறுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அவர் நினைக்கிறார். "அதேநேரம் பொதுமக்கள் அவரைப் பார்க்கும் விதத்தில் இந்த விஷயம் வித்தியாசத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வி. அதானி அரசியல் துருவமுனைப்பின் சின்னமாக மாறிவிட்டார் என்று நான் நினைக்கிறேன். யாருக்கு அதானியை பிடிக்குமோ அவர்கள் தொடர்ந்து அவரை சாம்பியனாகவே பார்ப்பார்கள். அவர் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார் என்று கருதுவார்கள். இந்தக் குழுமத்தைப் பற்றித் தாங்கள் எப்போதுமே சரியாகச் சொன்னதாக அவரைப் பிடிக்காதவர்கள் கூறுவார்கள்," என்று தேசாய் கூறினார். “முதலீட்டாளர்கள் லாபத்தையும் ஸ்திரத்தன்மையையும் விரும்புகிறார்கள். இந்தியா இதை வழங்க முடிந்தால், எந்த நிறுவனம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படாது," என்கிறார் சந்தோஷ் தேசாய். ஆயினும் 'ஒருவர் மற்றவரைச் சுட்டிக்காட்டும் யோக்கியதை’ உள்ள ஒரு உலகில் நாம் வாழ்கிறோமோ என்பதே சந்தேகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர். அவரது கூற்றுப்படி, வணிக உலகில் ஓரளவு அரசியல் ஆதரவு அவசியம் என்ற கருத்தை இந்த விவகாரம் வலுவாக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yrzd2nnl2o
  24. இனவாத, பிரிவினைவாத கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை - விமலுக்கு கனடியத் தமிழர் பேரவை பதில் (நமது நிருபர்) இன, மதவாதக் கருத்துக்களை தெரிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் குமார் இரத்தினம் தெரிவித்துள்ளார். நாம் ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினைவாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்று விமல் வீரவன்ச அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதிக்கு கனடிய தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டியே விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு அண்மையில் எழுதியிருந்த கடிதத்தில் இனவாத பிரிவினை வாத கருத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுடன் நீதி மற்றும் நியாயமான தீர்வுகளை முன்வைத்தே அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் இன, மத வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு சமூகத்தில் இணைந்து வாழ முடியும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக, இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் கருத்துக்கள் மக்களின் உணர்ச்சிகளைக் கையாளவும், சமூகங்களைப் பிளவுபடுத்தவும், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்யவும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இந்த தந்திரோபாயம் காலகாலமாக தவறான புரிதல்களை நிலைநிறுத்தியுள்ளது என்பதோடு அவநம்பிக்கையை வளர்த்து, இலங்கையின் சமூக மற்றும் கலாசார ஒற்றுமைக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்ற சொல்லாடல்கள் பல அரசியல்வாதிகளால் தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அனைவரும் அறிவர். இதுபோன்ற வார்த்தைகள் மக்களின் உணர்வுகளைத்தூண்டி இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி தங்கள் அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளவே பலரால் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துக்களால் எந்த சாதாரண குடிமகனுக்கும் எந்த நன்மையையும் எப்பொழுதும் நேர்ந்ததில்லை. மாறாக சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஆழமாக்கி உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி அர்த்தமுள்ள முன்னேற்றங்களை தடுக்கின்றது. இனியும் இவ்வாறான கருத்தாடல்களால் மக்களை ஏமாற்ற நினைப்பதை தவிர்த்து முறையான முன்னேற்றகரமான அனைவரையும் உள்ளடக்கிய அரசியலில் ஈடுபடுவதே சிறந்தது என நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம். கனடிய தமிழர் பேரவையினால் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த இனவாத தேசியவாத கருத்துக்களும் இல்லை என்பதையும் அவை நியாயமான, தசாப்தங்களாக தமிழ் மக்களால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வாகவே அமைந்துள்ளது என்பதையும் நிலைநாட்டவிரும்புகின்றோம். உதாரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல்: இந்தச் சட்டம் தமிழ் சமூகங்களுக்கு மட்டுமன்றி சிங்கள தனிநபர்களுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தவறான பயன்பாடு தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கும் வழிவகுத்தது, அதை ரத்து செய்வது அனைவருக்கும் நீதியை நோக்கிய ஒரு அவசியமான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுவித்தல்: பல நபர்கள் விசாரணையின்றி பல ஆண்டுகளாக தடுப்புக்காவலில் உள்ளனர். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் சட்டத்தின் கீழ் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் விடுதலை அவசியமாகும். காணி உரிமைகள்: வடக்கு மற்றும் கிழக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடமே கையளிப்பது என்பது சரியான உரிமையை மீட்டெடுப்பதோடு இடம்பெயர்ந்த குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் உதவும். தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சட்ட ரீதியாக அவர்களிற்கு உரிமையான காணிகளை திரும்பக்கோருதல் அவர்களின் உரிமை என்றே கருதப்பட வேண்டும். கலாசார மற்றும் மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாத்தல்: புனித தளங்கள் மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாப்பது அனைத்து சமூகங்களின் அடையாளத்தை பாதுகாக்க மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கான முக்கியமான செயற்பாடாகும். பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்: 13ஆவது திருத்தம் போன்ற தற்போதைய அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள பிராந்திய நிர்வாகத்திற்காக வாதிடுவது சமமான நிர்வாகத்தை நோக்கிய ஒரு படியாகும் அன்றி அது பிரிவினைவாதம் அல்ல. இங்கு குறிப்பிடப்பட்டவை எவையும் பிரிவினைக்கான அல்லது இனவாதத்திற்கான கோரிக்கைகள் அல்ல. அவை உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்திற்கான அழைப்புகள். ஒரு தேசத்தின் பலம் அதன் அனைத்து குடிமக்களின் கவலைகளையும் நியாயமாக அங்கீகரித்து நிவர்த்தி செய்யும் திறனில் உள்ளது. நியாயமான கோரிக்கைகளை மௌனமாக்குவதற்கும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்கும் பிரிவினைவாத, இனவாத முத்திரைகளும் குற்றச்சாட்டுகளும் பயன்படுத்தப்பட்ட கடந்த காலத்தின் அழிவுகரமான விளையாட்டுகளுக்கு அப்பால் நாம் நகர்வது இன்றியமையாதது. இத்தகைய அணுகுமுறைகள் நீடித்த துன்பத்தையும் தாமதமான முன்னேற்றத்தையும் மட்டுமே தருகின்றன. இனவாதம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் உத்திகள் சமூகத்திற்குள் விரிசல்களை ஆழப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மேலும் இந்த தந்திரோபாயங்களுக்கு அப்பால் செல்ல வேண்டிய நேரம் இது. அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நடைமுறை தீர்வுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இது. https://www.virakesari.lk/article/199457
  25. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும் - நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற ஜனாதிபதி தெரிவிப்பு மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக வெள்ளிக்கிழமை (22) பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் பணிக்குழாம் முன்னிலையில் ஆற்றிய உரையிலேயே இதனைத் தெரிவித்தார். அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பணியாளர்கள் அன்புடன் வரவேற்பளித்தனர். கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு நிதியமைச்சின் அதிகாரிகள் வழங்கிய பங்களிப்பை நன்றியுடன் பாராட்டிய ஜனாதிபதி, எதிர்கால இலக்குகளை அடைவதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசியல் மாற்றங்களின் போது அரச ஊழியர்களை முன்னைய செயற்பாடுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்த வரலாறுகள் உண்டு எனவும் ஆனால் இனிவரும் காலங்களில் அரச ஊழியர்கள் ஆற்றப்போகும் பணியே அவர்களை மதிப்பீடு செய்யும் காரணியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அரச ஊழியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் அநீதி அல்லது தவறுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக முன்னிலையாவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். வருமானம் ஈட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பம் இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டினை மாற்றுவது கடினமானது என்ற போதிலும், தம்மைப் பற்றி ஏதேனும் மோசமான விம்பம் இருக்குமாயின், புதிய அரசாங்கத்தின் கீழ் அந்த அனைத்து அதிகாரிகளும் தம்மைப் பற்றிய விம்பங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஊடகங்களுக்கு முன்பாக அதிகாரிகளை அச்சுறுத்துவது, அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும், சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக ஒன்றுபடுமாறு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199452

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.