Everything posted by ஏராளன்
-
மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேர் கைது!
26 JUN, 2024 | 10:09 AM திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். இதில் 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் . https://www.virakesari.lk/article/186990
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
றோலர் மூலமான மீன்பிடிக்கு தடை செய்யப்பட்ட லைலா வலை என்ற வலையை பயன்படுத்தி ஆழங்குறைந்த பாக்குநீரிணைக் கடலின் அடி மடி வரை வழித்துத் துடைப்பதால் மீன் குஞ்சுகளில் இருந்து பவளப்பாறைகள் வரை அழிக்கப்படுகின்றது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அதெண்டா உண்மைதான். அண்ணை இலங்கையிலும் மதுப்பிரியர்கள் அதிகமாகி இருக்கினம். கசிப்பு மக்கள் குடியிருப்பிற்குள் தனி வீடுகளில் காய்ச்சி விக்கிறாங்கள்!
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
Kallakurichi: ‘Hospital-ல என் கண்ணு முன்னாடியே..’ கள்ளச்சாராயம் அருந்தி பிழைத்தவர்கள் கூறியது என்ன? கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பேசினோம். கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சையின் மூலம் மீண்ட அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
-
நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்த சீன விண்கலம் - என்ன இருக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன விண்கலம் செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் & ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி செய்தியாளர்கள் 59 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ளது. கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த முக்கிய கேள்விகளுக்கு இந்த மாதிரிகள் பதிலளிக்கக் கூடும் என்பதால் விஞ்ஞானிகள் Chang'e-6 மாதிரிகளை ஆய்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் நிலவின் ஆராயப்படாத தொலைதூரப் பக்கத்தில் கால் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. பூமியிலிருந்து அதன் தூரம் மற்றும் அதன் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, நிலவின் தொலைதூரப் பகுதிகளை அணுகுவது தொழில்நுட்ப ரீதியாக கடினமானது. அதன் நிலப்பரப்பு, பல பெரிய பள்ளங்கள் மற்றும் சில சமதளப் பகுதிகளை உள்ளடக்கியது. விஞ்ஞானிகள் இந்த ஆராயப்படாத நிலவின் பரப்பு மீது ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம், அதில் பனியின் தடயங்கள் இருக்கலாம், அப்படி பனியின் தடயம் கிடைத்தால் அதன் மூலம் தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் இருப்பை ஆய்வு செய்ய முடியும் என்று கருதுகின்றனர். சீனா `சாங்கே 6’ விண்வெளி திட்டம் மூலம் நிலவுக்கான தனது பயணங்களில் மேலும் ஒரு அடி முன்னேறி அதன் போட்டியாளரான அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். `சாங்கே 6’ விண்கலம் மங்கோலியன் பாலைவனத்தில் தரையிறங்கியவுடன், அதிகாரிகள் சீனக் கொடியை பெருமையுடன் உயர்த்தும் காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சீன அதிபர் ஷி ஜின்பிங் `சாங்கே 6’ மிஷனின் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதிபர் ஷி ஜின்பிங், "மனித குலத்திற்கு பயனளிப்பதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கும் ஆழமான விண்வெளி ஆய்வைத் தொடர முடியும். பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்ப்பதில் புதிய உயரங்களை எட்ட முடியும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சீன விண்கலம் `சாங்கே 6’, மே மாத தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்டது/ சில வாரங்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் பணி 53 நாட்கள் நீடித்தது. சீன தொலைக்காட்சியான சிசிடிவி கூற்றுபடி, விண்கலம் சேகரித்த மாதிரிகள் ஆய்வுக்காக பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படும். இது சீனாவின் ஆறாவது நிலவுப் பயணமாகும். நிலவின் மறுபக்கத்தை ஆராயும் இரண்டாவது பயணமாகும். சீன புராணங்களில் சந்திர தெய்வமாக கருதப்படும் ``சாங்கே’’ (Chang'e) நினைவாக இந்த ஆய்வுக்கு Chang'e என்று பெயரிடப்பட்டது. பட மூலாதாரம்,CGTN படக்குறிப்பு,சீன விண்கலம் தரையிறங்கும் காட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆய்வில் ஒரு டிரில்லர் மற்றும் ஒரு ரோபோவைப் பயன்படுத்தி நிலவின் நிலப்பரப்பில் இருந்து மண் மற்றும் பாறைகளை சீன விண்கலம் தோண்டி எடுத்தது. பின்னர் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதன் பின்னர் சீனக் கொடியை நிலவின் மறுபக்கத்தில் நட்டது. சீனா கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டையும் முந்தும் முயற்சியில் அதன் விண்வெளி ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு குழுவை நிலவுக்கு அனுப்புவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பின்னர் நிலவின் தென் துருவத்தில் ஒரு தளத்தை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அடுத்த விண்வெளிப் பந்தயம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது மட்டுமல்ல, நிலவின் வளங்களை உரிமை கோரவும் கட்டுப்படுத்தவும் நாடுகளுக்குள் போட்டி நடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cjkk30v7djlo
-
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு நன்றி - ஸ்டெல்லா அசஞ்சே Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 12:27 PM விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான ஜூலியன் அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு அவரின் மனைவி ஸ்டெல்லா நன்றியை தெரிவித்துள்ளார். உங்கள் பேராதரவு குறித்து நாங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக உள்ளோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக அவரின் விடுதலைக்காக நீங்கள் அணிதிரண்டிருக்கின்றீர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கின்றீர்கள் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் பிறந்த சட்டத்தரணியான ஸ்டெல்லா 2015 முதல் அசஞ்சேயுடன் உறவில் உள்ளார். ஸ்டெல்லா அசஞ்சேயின் சட்டகுழுவில் இணைந்தவேளை இருவரும் முதலில் சந்தித்தனர். அசஞ்சே சிறையில் இருந்தவேளை இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதேவேளை தனது மகனின் மிக நீண்டகால சட்டபோராட்டம் முடிவிற்கு வருவது குறித்து ஜூலியன் அசஞ்சேயின் தாயார் கிறிஸ்டின் அசஞ்சே நன்றியை தெரிவித்துள்ளார். எனது மகனின் சோதனைகள் இறுதியாக முடிவிற்கு வந்தது குறித்து நான் நன்றியுடையவளாகயிருக்கின்றேன். இது அமைதியான இராஜதந்திர முயற்சிகளின் ஆற்றலையும் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பலர் எனது மகனின் சூழ்நிலையை தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை முன்னிறுத்த பயன்படுத்தியுள்ளனர். எனவே ஜூலியனின் நலனிற்கு முதலிடம் கொடுத்த கண்ணிற்கு தெரியாத கடின உழைப்பாளிகளிற்கு நான் நன்றி உடையவனாகயுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகனிற்காக பரப்புரை செய்தமைக்காக அசஞ்சேயின் தந்தை ஜோன்சிப்டன் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186923
-
ஐ. நா.வின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
25 JUN, 2024 | 05:27 PM ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதன்போது கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கிடையே கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதிகரித்திருக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ,தொடரும் கைதுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186964
-
இரணைமடு குளத்திலும் தடைசெய்யப்பட்ட இழுவை வலை தொழிலால் நன்னீர் மீனவர்கள் பாதிப்பு!
25 JUN, 2024 | 08:53 PM கிளிநொச்சி இரணைமடு குளத்தில் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்த சிலர் சட்டவிரோத தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றமையால் பெரும்பாலான ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சுமார் 50 மீனவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக ஏனைய மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். நீரியியல் வள திணைக்களம் குறித்த தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்தும் அதனையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள். தொடர்ந்தும் சிலர் இவ்வாறு தடை செய்யப்பட்ட தொழில் ஈடுப்பட்டால் ஏனைய தொழிலாளர்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவார்கள் எனவும் கவலை தெரிவித்துள்ளனர். இரணைமடு குளத்தை நம்பி 152 குடும்பங்கள் தங்களது வாழ்வாதார தொழிலாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர். எனவே இது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்ததாகவும் எனவே தடை செய்யப்பட்ட தொழிலை மீனவர்கள் மேற்கொள்ளும் இடத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை உட்படுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/186962
-
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு
Published By: VISHNU 25 JUN, 2024 | 07:10 PM யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் செவ்வாய்க்கிழைமை (25) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாகப் பயணிக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளைத் தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் அவர்கள் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார். சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் எனப் பலரும் கலந்துச் சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/186973
-
எழுத்தாளர் அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு - டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் - பின்னணி என்ன?
அருந்ததிராயிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளபெறவேண்டும் - 200க்கும் மேற்பட்ட இந்திய கல்விமான்கள் பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 11:27 AM எழுத்தாளர் அருந்ததி ராயிற்கு எதிராக வழக்குதொடருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெறவேண்டும் என 200க்கும் இந்திய கல்விமான்களும் பத்திரிகையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய அரசாங்கம் கடந்த வாரம் நாட்டின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அருந்ததி ராயிற்க்கு எதிராக வழக்கு தொடர்வதற் கு அனுமதிவழங்கியிருந்தது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம், எங்கள் நாடு தொடர்பான எந்த விடயம் குறித்தும் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசாங்கத்திற்கும் நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளிற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என கல்விமான்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர்வது என்ற முடிவை நியாயப்படுத்த முடியாது என இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள வரலாற்று பேராசிரியர் அஜய் டன்டேகர் தெரிவித்துள்ளார். அருந்ததி ராயின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசமைப்பு உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள அவர் இந்தியா ஒரு அரசமைப்பு ஜனநாயகம் என தெரிவித்துள்ளார். அருந்ததி ராயிற்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் அமைப்பொன்றும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது, புதுடில்லி பெங்களுரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அருந்ததி ராயிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை கடந்த வாரம புதுடில்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா வழங்கியிருந்தார். 2010 இல் கருத்தரங்கொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காகவே அருந்ததி ராயிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு புதுடில்லி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். காஸ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாகயிருந்ததில்லை என அருந்ததி ராய் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/186914
-
21,000 பாலஸ்தீனிய குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்!
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. 4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, மோதலில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காசா பகுதியில் அதிகளவான இஸ்ரேலிய குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/304516
-
செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பால புகைப்படம்
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 01:22 PM விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டுள்ளது. ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறன. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீற்றர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது. பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன. https://www.virakesari.lk/article/186930
-
முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு!
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/304478
-
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள் விடுமுறையை அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம். இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்குப் போதுமான வருமானமின்றி நாம் ஒவ்வொருவரும் கடனாளிகளாக மாறியுள்ளோம். இந்நிலையில் தருவதாக உறுதியளித்த வேதனத்தையாவது தருமாறு இந்த அரசிடம் கேட்கிறோம். நீண்டகாலமாக மாணவர்களின் நலன்களிலும், அவர்களின் கல்வியிலும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாதவகையில் எமது அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செய்துவரும் சேவைக்கு மதிப்பளித்து, சம்பள அதிகரிப்பை வழங்குமாறு நாளை புதன்கிழமை (26) நடைபெறும் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் அனைவரும் கலந்துகொள்வோம். இது ஒவ்வொரு அதிபர், ஆசிரியரினதும் தனிப்பட்ட நியாயமான கோரிக்கை. இதனை நாம் அனைவரும் ஒருமித்து, ஒன்றுபட்டு அரசிற்கு எடுத்துரைப்போம் – என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304535
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது. எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது. வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது. வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது. இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு? முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 ரன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும். இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27-ஆம் தேதி 88% மழைக்கும் 18% இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும். கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. மழையின் குறுக்கீட்டால் டி.எல்.எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 119 ரன்கள் சேர்க்க வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. குரூப்-1 பிரிவில் அரையிறுதிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் 2-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்றொரு அணிக்கு அரையிறுதிக் கதவை திறக்கும் வகையில் இருந்தது. ஆனால், இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராகப் பதவி ஏற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட்டுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ இருந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் ரஷித் கான் ‘நம்பமுடியவில்லை, சாதனைதான்’ வெற்றிக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், உலகக் கோப்பை அரையிறுதி செல்வது தங்களுக்குக் கனவாக இருந்தது என்றார். “அந்த நோக்கில்தான் போட்டித் தொடரைத் தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை நியூசிலாந்தை வென்றதும் உறுதியானது. இப்போதும் நம்பமுடியவில்லை. நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார். நான் ஒரு பார்ட்டியில் அவரைச் சந்தித்தபோது, உங்கள் கணிப்பைப் பொய்யாக்கி தலைகுனிவை ஏற்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தேன்,” என்றார். மேலும், “130 ரன்கள் சேர்த்தாலே இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோர். ஆனால் எங்களால் 115 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. வங்கதேசம் எங்களுக்குக் கடினமான சவால் அளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும், அதனால் எங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கினோம். எங்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினோம். ஒவ்வொரு வீரரும் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்,” என்றார். “புதிய பந்தில் பரூக்கியும், நவீனும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். குல்புதீன் நயீப் எடுத்தவிக்கெட் எங்களுக்கு அந்த நேரத்தில் விலைமதிப்பில்லாதது. நாங்கள் தாய்தேசம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. அரையிறுதி என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரையிறுதி வரை வந்திருந்தோம். இப்போது உலகக் கோப்பையில் வந்திருப்பது எங்களைப் பொருத்தவரை சாதனைதான். எங்கள் தேசத்துக்கு திரும்பும் அந்த நாளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தெளிவான மனநிலை, திட்டமிடலுடன் அரையிறுதிப் போட்டிக்குச் செல்வோம், அந்த தருணத்தை அனுபவிப்போம்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,டி20 உலகக் கோப்பை படக்குறிப்பு,பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது ஆட்டநாயனுக்கு போட்டி ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டநாயகன் விருது நவீன் உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டது. பேட்டிங்கில் ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆப்கானிஸ்தானை கவுரவமான ஸ்கோரைப் பெற உதவியது. இருப்பினும் முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்திய நவீனுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பவர்ப்ளே ஓவரில் மூன்றாவது ஓவரிலேயே நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சால் கேப்டன் ஷான்டோ, சஹிப் அல் ஹசன் இருவரின் விக்கெட்டையும், கடைசி நேரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது விக்கெட்டையும் வீழ்த்தி வங்கதேச அணியை நெருக்கடியில் சிக்கவைத்தமைக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நம்பிக்கையளிக்கும் ஜோடி ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை வழக்கம்போல் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ்-இப்ராஹிம் ஜாத்ரன் நல்ல தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன் சேர்க்க திணறிய ஆப்கானிஸ்தான், பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது ரஷித் கானின் 3 சிக்ஸர்கள் அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்களும், ஜாத்ரன் 18 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 10 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். ரஷித்கானின் 3 சிக்ஸர்களால்தான் ஆப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்து கவுரவமான ஸ்கோரைப் பெற்றது. இல்லாவிட்டால், 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது. பந்துகள் தாழ்வாகவும், மெதுவாகவும் பேட்டர்களை நோக்கி வந்ததால் பேட் செய்யவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் கடினமாக இருந்தது. அதிலும் பந்து தேய்ந்தபின் பெரிய ஷாட்டை அடித்தாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி செல்வது கடினமாக இருந்தது. வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகளை இழந்த வங்கேதசம் 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது. பரூக்கி வீசிய 2-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் டக்அவுட் ஆகினார். நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஷான்டோ (5), அனுபவ பேட்டர் சஹிப் அல்ஹசன் (0) விக்கெட்டை இழந்தனர். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. 4வது ஓவர் வீசப்பட்டபோது மழைக் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது ரஷித் கான் மாயஜாலம் மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தைக் கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை ரஷித்கான் நெருக்கடியில் தள்ளினார். ரஷித்கான் பந்துவீச்சில் 10 ரன்னில் சவுமியா சர்க்கார் போல்டாகினார், ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் ஹிர்தாய் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் மெகமதுல்லா (6), ரிஷாத் ஹூசைன் கிளீன் போல்டாகி ஒரே ஓவரில் இருவரும் வெளியேறினர். 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோல்வியில் பிடியில் சிக்கியது. 11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது டிஎல்எல் விதிப்படி ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு வங்கதேசத்துக்கு இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 80 ரன்களை வங்கதேசம் சேர்த்துவிட்டதால், 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது லிட்டன் தாஸ் போராட்டம் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 15-வது ஓவரில் தன்சிம் ஹசன் விக்கெட்டை குல்புதீன் நயீப் எடுக்கவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. குல்புதீன் வீசிய 17-வது ஓவரில் லிட்டன் தாஸ் 4 ரன்கள் சேர்த்தார். 12 பந்துகளில் வங்கதேசம் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை நவீன் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் தஸ்கின் அகமது தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜில் போல்டாகியது. வங்கேதசம் 9-வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அடுத்து களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான், நவீன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி அவுட் ஆகவே, ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டித்தழுவி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். குர்பாஸ் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின மிகக் குறைவான ஸ்கோரை அடித்தபோதிலும் வலுவான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்சு மூலம் வங்கதேசத்தைச் சுருட்டி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதி சென்றது. ரஷித்கான் நடுப்பகுதி ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், நவீன் உல்ஹக் பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. லிட்டன் தாஸ் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போராடியும் கடைசிவரை அவருக்கு ஒத்துழைக்க வீரர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் வெற்றி வங்கதேச மக்களின் இதயத்தை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது, என்றே சொல்லவேண்டும். https://www.bbc.com/tamil/articles/crggkdrp4kro
-
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க நீதித்துறையிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஜூலியன் அசாஞ்ச் இனியும் சிறையில் இருக்க மாட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ண்ட் டெபுஸ்மேன் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது. இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிட்டன் சிறையில் இருந்த அசாஞ்ச், அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தார். பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகம், அசாஞ்ச் அமெரிக்க காவலில் இனியும் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளது. நீதித்துறை அளித்துள்ள கடிதத்தின்படி, அசாஞ்ச் ஆஸ்திரேலியா திரும்புவார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1,901 நாட்கள் கழித்தநிலையில், திங்கட்கிழமை அங்கிருந்து அவர் வெளியேறியதாக, எக்ஸ் சமூக ஊடகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “அவர் பின்னர் மதியத்தில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து பிரிட்டனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவார்,” என விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோவில், நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஜூலியன் அசாஞ்ச், விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் காரில் சென்றார். இந்த வீடியோவை பிபிசி-யால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. பட மூலாதாரம்,REUTERS ஆஸ்திரேலியா கூறியது என்ன? அசாஞ்ச்-இன் ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே, “இது நனவாக பல ஆண்டுகளாக அணிதிரண்டவர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார். தன் குற்றங்களை ஒப்புகொள்வதாக ஜூலியன் செய்துகொண்ட ஒப்பந்தம், ஜூன் 26, புதன் கிழமையன்று வடக்கு மரியானா தீவுகளில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பசிபிக் தீவான வடக்கு மரியானா, ஹவாய் அல்லது வட அமெரிக்காவில் (Continental US) உள்ள கூட்டாட்சி நீதிமன்றங்களை விட ஆஸ்திரேலியாவுக்கு சிறிது அருகில் உள்ளது. ஆஸ்திரேலியா அரசின் செய்தித்தொடர்பாளர், “இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதாக,” கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. சி.பி.எஸ் ஊடகம் அசாஞ்ச்சின் வழக்கறிஞர் ரிச்சர்ட் மில்லரை தொடர்புகொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள அவருடைய வழக்கறிஞரையும் பிபிசி தொடர்புகொண்டது. ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். அசாஞ்ச்-க்கு எதிரான விசாரணையைக் கைவிடுமாறு ஆஸ்திரேலியாவின் கோரிக்கையைத் தான் பரிசீலித்துவருவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த மாதமே, தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக புதிதாக அசாஞ்ச் மேல்முறையீடு செய்யலாம் என, பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, தன் மீதான விசாரணை எப்படி நடைபெறும் மற்றும் தன்னுடைய பேச்சு சுதந்திரம் மீறப்படுமா என்பது குறித்து அமெரிக்கா அளித்துள்ள உத்தரவாதங்களை அவர் சவால் விடுக்க அனுமதித்தது. இந்த உத்தரவையடுத்து, அசாஞ்ச்-இன் மனைவி ஸ்டெல்லா, செய்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசும்போதும் பைடன் நிர்வாகம் “இந்த அவமானகரமான விசாரணையிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்,” என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்டெல்லா அசாஞ்சே மற்ற குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடைபெற்ற போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ராணுவ ஆவணங்கள் மற்றும் ராஜதந்திர செய்திகளை வெளியிட்டதற்காக, உளவுச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகளில் அசாஞ்ச்-ஐ விசாரிக்கவே அமெரிக்க வழக்கறிஞர்கள் முதலில் விரும்பினர். சுமார் ஒரு கோடி ஆவணங்களை வெளியிட்டதாக 2006-இல் அசாஞ்ச் நிறுவிய விக்கி லீக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து பின்னர், “அமெரிக்க வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மீது பெரியளவில் நடைபெற்ற சமரசம்,” என அமெரிக்க அரசு கூறியது. கடந்த 2010-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ராய்ட்டர் செய்தி முகமையின் நிருபர்கள் இரண்டு பேர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இராக் மக்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது. அசாஞ்ச்சின் அதிகம் அறியப்பட்ட கூட்டாளியான அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளரான செல்ஸீ மேன்னிங்-க்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதையடுத்து 2017-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா அவருடைய தண்டனையை குறைத்தார். அசாஞ்ச் மீது சுவீடனில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். சுவீடனில் உள்ள இந்த வழக்கு தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வழிவகுக்கும் என்பதால், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தஞ்சம் புகுந்தார். புகார் அளிக்கப்பட்டதிலிருந்து அதிக காலமானதாகக் கூறி, 2019-ஆம் ஆண்டில் அந்த வழக்கை ஸ்வீடன் நீதித்துறை கைவிட்டது. ஆனால், ஜூலியன் அசாஞ்ச்-ஐ லண்டன் அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர் நீதிமன்றத்தில் சரணடையாததால் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டார். நீண்ட கால சட்டப் போராட்டமாக இருந்தாலும், அவர் பொதுவெளியில் மிக அரிதாகவே காணப்பட்டார். பல ஆண்டுகளாக அவருடைய உடல்நிலை மோசமானதாகவும் சிறையில் 2021-ஆம் ஆண்டில் அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. https://www.bbc.com/tamil/articles/c4nngz23d4ro
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
வங்காளம், ஆஸி.யை வெளியேற்றி ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கான் 25 JUN, 2024 | 11:27 AM (நெவில் அன்தனி) சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான கடைசியும் தீர்மானம் மிக்கதுமான பங்களாதேஷுக்கு எதிரான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 8 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் முதல் தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது. ஆரம்ப வீரர் லிட்டன் தாஸ் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது. இந்த வெற்றியை அடுத்து 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதியில் தென் ஆபிர்க்காவை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது. அதே தினத்தன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியில் ரஹ்மானுல்லா குர்பாஸின் சிறப்பான துடுப்பாட்டம் அணித் தலைவர் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் பதிவு செய்த 4 விக்கெட் குவியல்கள் என்பன பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்காவது தடவையாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (10), ரஹ்மானுல்லா குர்பாஸ் (43) ஆகிய இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். கடைசி 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதில் அணித் தலைவர் ராஷித் கான் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸ் நிறைவடைந்ததும் சிறு மழைத்துளி படர்ந்தது. ஆனால், ஆட்டம் தாமதிக்கவில்லை. 13 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெற்றால் அல்லது 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால் பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் 3.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது.. சுமார் 30 நிமிடங்களின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானபோது வெற்றி இலக்கு 116 ஓட்டங்களாகவே இருந்தது. எனினும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 11.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 2 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 114 ஓட்டங்களாக திருத்தப்பட்டது. 18ஆவது ஓவரில் மழை மீண்டும் பெய்ததால் 3ஆவது தடவையாக ஆட்டம் சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 3 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது. இறுதியில் 7 பந்துகள் மீதம் இருக்க ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அவரை விட தௌஹித் ரிதோய் (14), சௌமியா சர்க்கார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ரஷித் கான் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நவீன் உல் ஹக் https://www.virakesari.lk/article/186911
-
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிணை – சிறையிலிருந்து வெளியேறினார். Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 08:11 AM விக்கிலிக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான அசஞ்சேயிற்கு பிணைவழங்கப்பட்டுள்ளது அவர் லண்டனின் பெல்மார்ச் உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் அவர் ஸ்டான்செட் விமானநிலையத்தில் விமானத்தில் ஏறும் படங்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பசுபிக்கில் உள்ள மரியனா தீவில் உள்ள சமஸ்டிநீதிமன்றில் அசஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராவார் .அவர் தேசபாதுகாப்புதகவலை சட்டவிரோதமாக பெறுவதற்கும் பரப்புவதற்கும்சதி செய்த உளவுத்துறை குற்றச்சாட்டில் குற்றத்தை ஏற்றுக்கொள்வார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் அவர் தனது நாடான அவுஸ்திரேலியா திரும்புவார். https://www.virakesari.lk/article/186896
-
இலங்கை: இறுதிக்கட்டப் போரில் பல லட்சம் தமிழர்களின் உயிரை காத்த பாலம் இன்று எப்படி இருக்கிறது?
படக்குறிப்பு,வட்டுவாகல் பாலம் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2024 இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது, லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்த முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் இன்று உடைந்து வீழும் அபாயத்தில் இருக்கின்றது. இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 50/1 என இலக்கமிடப்பட்டுள்ள இந்த பாலம் (A035) இலக்க வீதியில் அமைந்துள்ளது. 410 மீட்டர் தூரத்தை கொண்டமைந்துள்ள இந்த பாலத்தை புனரமைப்பதற்காக இதற்கு முன்னர் 4,000 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வட்டுவாகல் பாலத்தின் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பாலம் புனரமைக்கப்படாமை குறித்து ஆராயும் விரிவான செய்தி தொகுப்பே இது. வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய நகரங்களை பிரிக்கும் வகையில் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளது. இந்த நந்திக்கடல் களப்பை ஊடறுத்து, முல்லைத்தீவு நகரையும், புதுகுடியிருப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட இந்த பாலமானது, இறுதிக் கட்ட போரின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட்டது. இலங்கையில் நிலைகொண்டிருந்த 30 வருட உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்டது. போரின் இறுதித் தருணத்தின் போது, இலங்கை ராணுவம் இந்த பாலத்திற்கு மறுபுறத்தில், அதாவது முல்லைத்தீவு பக்கத்திலும், விடுதலைப் புலிகள் அமைப்பு பாலத்திற்கு அடுத்த திசையில் அதாவது புதுகுடியிருப்பு பக்கத்திலும் இருந்தவாறே இறுதி போரை எதிர்கொண்டிருந்தனர். புதுகுடியிருப்பு திசையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் பகுதி அமைந்துள்ளது. புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், இந்த வட்டுவாகல் பாலத்தை தாண்டி முல்லைத்தீவு பகுதியில் நிலைக்கொண்டிருந்த ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்திருந்தனர். ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களின் போது, வட்டுவாகல் பாலம் சேதமடைந்தது. அந்த வடுக்களை இன்றும் பாலத்திற்கு அருகில் காண முடிகின்றது. அத்துடன், சுனாமி அனர்த்தத்தின் போதும் இந்த பாலம் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இந்த பாலத்தை அண்மித்த நந்திக்கடல் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அப்போது அறிவித்திருந்தது. இறுதிப் போரின் போது தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தர, பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாலம் உதவியது என இறுதிக் கட்ட போரை சந்தித்த மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர். தமது உயிரை பாதுகாத்த இந்த பாலம் இன்று உடையும் தருவாயில் உள்ளமை கவலையளிப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். வட்டுவாகல் பாலம் இப்போது எப்படி உள்ளது? படக்குறிப்பு,துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பக்கத்தில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு ராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதுகுடியிருப்பு திசையில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதுகாப்பு தளங்களுக்கும் இடையில் சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட ஒரு வாகனம் மாத்திரம் செல்லக்கூடிய அளவை கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறத்திலும் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் இன்றியே பாலம் இன்றும் காணப்படுகின்றது. பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு எல்லை கற்களும் உடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. பாலத்திற்கு இடையில் பல இடங்களில் வெடிப்புக்களை அவதானிக்க முடிவதுடன், பல இடங்களில் பாலம் பெரியளவில் உடைந்துள்ளதையும் காண முடிகின்றது. பாலத்தின் இடையில் உடைந்துள்ள ஓரிரு பகுதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிகமாக செப்பனிட்டுள்ளதையும் காண முடிகின்றது. எனினும், இந்த பாலத்தை முழுமையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் படக்குறிப்பு,செல்லையா யோகேந்திரராசா பாலம் உடைகின்ற இடங்களை மாத்திரம் தற்காலிகமாக செய்கின்ற போதிலும், அந்த இடங்களும் மீண்டும் உடைவதாக வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா தெரிவிக்கின்றார். ''ஒவ்வொரு ஆட்சியில் வருவோரும் ஒவ்வொரு கதையை சொல்கின்றார்கள். நாங்கள் செய்வோம். நாங்கள் செய்வோம் என சொல்லிக் கொண்டு, எங்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த பாலம் செய்யாததற்கு காரணம் அரசாங்கத்தின் பிரச்னை தான். இந்த பாலத்தை தனிப்பட்ட நபரினால் செய்ய முடியாது. இதை அரசாங்கத்தினால் தான் செய்ய முடியும். வாகனமொன்று போனால், பாலம் இடிந்து வீழும் அளவில் தான் இருக்கின்றது. பாலம் உடைகின்ற போது, அரசாங்கம் கற்களை கொண்டு கொட்டுகின்றது. அடுத்த மாதம் அந்த இடம் உடைந்திருக்கும். மீண்டும் அதே மாதிரி கல்லைகொண்டு வந்து போடுவார்கள். நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே இதை தான் செய்கின்றார்கள். " என வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் இது என வட்டுவாகலைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''இந்த பாலம் மிக முக்கியமான ஒரு பாலம். கடைசி யுத்தத்திலும் மக்களை காற்றிய பாலம் இது. அப்படியிருக்கையில், இந்த பாலம் உடைந்து உடைந்து போகின்றது. எந்த அரசாங்கத்திற்கு சொன்னாலும், பாலத்தை செய்வதாக இல்லை. இந்த பாலம் ஒவ்வொரு மாரியிலும் தானாகவே உடைகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை கற்களை போட்டு நிரப்புகின்றார்கள். அரசாங்கம் செய்து தாறேன் என்று சொன்னாலும், அந்த பேச்சுடனேயே அது முடிந்து விடுகின்றது. கடைசி யுத்தத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாலம் இது. இரண்டு இடங்களில் கிபீர் குண்டுகள் தாக்குதலில் உடைந்திருந்தது. கிபீர் தாக்குதலில் நான் நிற்கும் இந்த இடம் கூட பாதிக்கப்பட்டது. கிபீர் தாக்குதலில் சேதமடைந்த கற்கள் தான் இந்த இடத்தில் இருக்கின்றன. யுத்தத்தில் பாலம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் புனரமைக்கப்படாமைக்கு அரசாங்கத்தையே குறைகூறுவோம். நிதி இல்லை என்று கூறுகின்றார்கள்" என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார். வட்டுவாகல் பாலத்தை புனரமைத்துக் கொடுக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,அன்னலிங்கம் நடனலிங்கம் ''2009ம் ஆண்டு மே 17, 18 ஆகிய நாட்களில் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்களுடைய உறவுகளை இழந்த நிலையில், இந்த பாலத்தின் ஊடாக தான் வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பாலத்தின் ஊடாக, மூடை முடிச்சுக்களுடன் சைக்கிள்களை உருட்டிக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தோள் மீது சுமந்துக்கொண்டு வருவது மிகுந்த வேதனையான காட்சியாக தான் இருந்தது. இந்த பாலம் மறக்க முடியாது. இப்படியான பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்." என அவர் குறிப்பிடுகின்றார். வட்டுவாகல் பாலத்தை ஏன் புனரமைக்கவில்லை - அரசாங்கத்தின் பதில் வட்டுவாகல் பாலத்தை புனரமைக்காமல் அரசாங்கம் பின்வாங்கி வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தனவிடம் வினவியது. ''இலங்கையிலுள்ள அனைத்து வீதிகள் மற்றும் பாலங்கள் வெளிநாட்டு கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் மூலமே இலங்கை முழுவதும் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இலங்கையில் யார் அரசாங்கத்தை செய்தாலும், கடந்த 4 தசாப்தங்களிலும் அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்து கொள்ளும் வகையில், அரசாங்கத்திற்கு போதுமான வருமானம் கிடையாது. அதனால், இவை அனைத்தும் கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்குதல், கடன்களுக்கான வட்டியை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அரசாங்கத்திற்கு போதுமான கையிருப்பு இருக்காது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள அனைத்து வீதிகள், பாலங்கள், வேலிகள், மின்சாரம் ஆகியன கடனை பெற்றே அமைக்கப்பட்டுள்ளது பெற்றுக்கொண்ட கடனை நாங்கள் தற்போது செலுத்துவதில்லை. அப்படியென்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட யாரும் எங்களுக்கு பணம் வழங்க மாட்டார்கள். அவ்வாறு கடன் கிடைக்கவில்லை என்றால், பாலங்களை நிர்மாணிக்க முடியாது." என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். ''கடனை பெற்றுக்கொண்டு வீதிகள், பாலங்களை நிர்மாணித்திருக்கின்றோம். கடனை செலுத்தி நிறைவு பெறும் போது தான் வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியும். அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் செலுத்துவதற்கு மாத்திரமே பணம் உள்ளது. வேறு வேலைகளை செய்ய பணம் இல்லை. சிறு சிறு வேலைகளை செய்யலாம்;. பாலங்களை நிர்மாணிக்கும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லை." என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/c99997q20dno
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஆஸியை வீழ்த்தி 5-வது முறை அரையிறுதி சென்ற இந்தியா - அதிரடி ஆட்டத்தால் ஈடுகட்டிய ரோகித் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 ஜூன் 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்திய அணியின் வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமைதான் நிச்சயமில்லாமல் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை நடக்கும் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியினர் பிரார்த்தனை செய்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூட வங்கதேசத்தின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், வங்கதேசத்தை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும், ஆஸ்திரேலிய அணி போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். வங்கதேசம் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்லும் என்பதாலேயே வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கரிசனம் காட்டுகிறது. செயின்ட் லூசியாவில் நேற்று (திங்கள், ஜூன் 24) நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்து. இந்திய அணி விதித்த 206 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்திருந்தால், அரையிறுதிக்குச் சென்று இந்தியாவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கும். ஆனால், 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் அதிக அளவு வெற்றிகளைப் பெற்று இலங்கை அணிய பின்னுக்குத் தள்ளி 34 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது. வரும் 27-ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்பது 3-வது முறையாகக் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செயின்ட் லூசியாவின் கிராஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் குவித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ‘மனநிறைவாக இருக்கிறது’ வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் விளையாடியவிதம் தனக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார். “எதிரணியின் மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரியும், அதனால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடிவு செய்தோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோர், இதுபோன்ற ஆடுகளத்தில் காற்றின் வேகத்துக்கு மத்தியில் சேஸ் செய்வது கடினம். இந்தச் சூழலை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம்,” என்றார். மேலும், “ குல்தீப்பின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அவரைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தினோம். அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆனால், குல்தீப் பங்கு அடுத்ததாக பெரிதாக இருக்கும் என நினைத்தேன். அரையிறுதி என்பதால் புதிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், வழக்கம்போல் விளையாடினோம். ஒவ்வொரு வீரரும் சூழலை அறிந்து விளையாடினார்கள், சுதந்திரமாக இருந்தார்கள். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சிறப்பு. பெரிதாக அணியில் மாற்றம் இருக்காது,” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ரோஹித் சர்மாவின் சாதனைகள் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரோஹித் சர்மா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அதனை ஈடுகட்டிவிட்டர். 19 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிவிரைவாக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 6 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 20 பந்துகளிலும், 2012ல் கெய்ரன் பொலார்ட் 20 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தனர். அதை ரோஹித் சர்மா முறியடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய பேட்டர் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 2010-ஆம் ஆண்டில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருப்பவர் பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியாவுக்கு எதிராக கெயில் கேப்டனாக இருந்தபோது 98 ரன்களைப் பதிவு செய்திருந்தார். இதற்கு முன் 2016-இல் லாடர்ஹில்லில் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே ரோகித் சர்மாவின் சிறந்த பேட்டிங்காக இருந்தது. அந்தச் சாதனையை அவரே முறியடித்து, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சாதனை படைத்தார். இந்திய அணி பவர்ப்ளே ஓவர்களை முடிப்பதற்குள் நேற்று ரோகித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளே ஓவர்கள் முடிப்பதற்குள் அரைசதம் அடித்த 4-வது பேட்டர் என்று ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் ஸ்டீபன் மைபுர்க், கேஎல் ராகுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய பேட்டர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பெற்று, யுவராஜ் சிங் சாதனையை ரோகித் முறியடித்தார். யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 203 சிக்ஸர்களை பதிவு செய்தார். டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 150 சிக்ஸர்களுக்கு மேல் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் (173) உள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4,165 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசமின் 4,145 சாதனையைக் கடந்தார். இந்த ஆட்டத்தில் மட்டும் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசியது டி20 உலகக் கோப்பையில் 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2014-இல் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் சேர்ந்து 30 சிக்ஸர்களை அடித்திருந்தன. இந்திய அணி 205 ரன்கள் சேர்த்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்தான். அவர் ஆட்டமிழக்கும்வரை இந்திய அணியின் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் வரை இருந்தது. ரோகித் ஆட்டமிழந்து சென்றபின் துபே (28) சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் முடிந்தவரை சிறந்த பங்களிப்பு செய்தனர். ஸ்டார்க் பந்தை வெளுத்த ரோகித் ஆட்டம் தொடங்கியது முதலே ரோகித் சர்மா அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்தார். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 29 ரன்களை ரோகித் விளாசினார். ஸ்டார்க்கின் சர்வதேசக் கிரிக்கெட்டில் மோசமான ஓவராகவும், டி20 உலகக் கோப்பையிலும் மோசமானதாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வழங்கியதுதான் ஸ்டார்க்கின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதைவிட நேற்றைய பந்துவீச்சு மோசமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார் கோலியின் மோசமான ஃபார்ம் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கண்ணீருடன் மைதானத்தை விட்டு நடந்து சென்றதற்கு பழிதீர்க்கும் விதத்தில், ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது. விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார். ஆனாலும் ரோகித் சர்மாவின் அதிரடியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 5-வது ஓவரில் 19 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்தது. 8.4 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி எட்டியது. 13.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. ரோகித்தின் அதிரடி ஆட்டம் ரோகித் சர்மா அரைசதம் அடித்தபோது, ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அதாவது இந்திய அணியின் ஸ்கோரில் 99% ரோகித் சர்மாவின் அரைசதம்தான். ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய பலமுறை ஸ்டார்க் ஷார்ட் பந்துகளையும், ஸ்விங் செய்யவும் முயற்சித்தார். ஆனால், அனைத்துமே தவறாக முடிந்து, ரோகித் பேட்டிங்கிற்கு இரையானது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 21 முறை ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடினார் இதில் 71 ரன்களைச் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் ஃபிரன்ட்புட் ஷாட்டில் அடிக்கப்பட்டவை. கம்மின்ஸ், ஸ்டாய்னிஷ், ஆடம் ஜம்பா ஓவர்களையும் ரோகித் சர்மா விட்டுவைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் 2முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஓவரில் ரோஹித் சர்மா காலை மடக்கி ஸ்வீப்பில் அடித்த சிக்ஸர் அரங்கின் மேற்கூரையில் விழுந்தது. ஆடம் ஜம்பா ஓவரை பதம்பார்த்த ரோகித் சர்மா 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டாய்னிஷ் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார், ஸ்டாய்னிஷ் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரிகளை ரோகித் வெளுத்தார். குறைந்த ரன்ரேட் ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா 92 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறியநிலையில் இந்தி அணியின் ரன்ரேட் சற்று குறையத் தொடங்கியது. ரோகித் சர்மா 2-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் சேர்ந்து 87 ரன்களும், சூர்யகுமாருடன் சேர்ந்து 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார். 15-வது ஓவர் முதல் 18-வது ஓவர் வரை 21 பந்துகளாக இந்திய அணி பவுண்டரிகூட அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது தப்பித்த ஹேசல்வுட் ஆஸ்திரேலிய அணியில் உயிர்தப்பி பந்துவீசியது ஹேசல்வுட் மட்டும்தான். 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். வார்னர் ஏமாற்றம் 206 ரன்கள் எனும் கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலையே வார்னரை (6) வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட், மார்ஷ் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் விதத்தில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. திருப்புமுனையான அக்ஸர் படேல் கேட்ச் குல்தீப் யாதவ் ஓவரில் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்கவே, அதை அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஹெட்-மார்ஷ் இடையிலான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்து மார்ஷ் 37 ரன்களில் வெளியேறினார். அதன்பின் வந்த ஆஸ்திரேலிய பேட்டர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பந்துவீச்சுக்கு திணறினர். மேக்ஸ்வெல் 20 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஹெட் (76) ஸ்டாய்னிஷ் (2), மேத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி 3 ஓவர்களில் 51 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டியிதிருந்தது. ஆனால் கம்மின்ஸ் (11), ஸ்டார்க் (4) ரன்களில் இறுதிவரை போராடியும் முடியாததால் தோல்வி அடைந்தது. https://www.bbc.com/tamil/articles/c1444700qgeo
-
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம்; நிராகரித்தது மேல்முறையீட்டு ஆணையகம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடை-தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம்-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 25 JUN, 2024 | 10:59 AM ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம் என தெரிவித்துள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக தடை செய்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆணையகத்தின் தீர்ப்புதொடர்பாக தமது அடுத்த நகர்வை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய இராச்சியம் தடைசெய்தமைக்கெதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது சட்ட ரீதியிலானநடவடிக்கை இந்த வழக்காகும். நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தால் முதலாவதாக கொண்டு வரப்ட்ட சட்ட நடவடிக்கையின் தீர்ப்பில்இ தமிழீழவிடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக எடுக்கப்பட்டமுறைமையில் தவறு இருந்ததாக கூறிய மேன்முறையீட்டுஆணையகம்இ தடையை ஐக்கிய இராச்சிய உள்துறைஅமைச்சு மீள் பரிசீலனை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்தது. உள்துறை அமைச்சு தடையை மீளவும் தொடர்ந்தது. இவ்வழக்கானது அம்முடிவிற்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கை ஆகும். ஆணைக் குழுவின் தலைவர் இவ் வழக்கானது நெருங்கியதொன்றும் சமநிலையாக இருந்ததென்றும் எனத் தெரிவித்த போதும் உள்துறை அமைச்சின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது. உள்துறை அமைச்சின் தீர்மானத்துக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கையானது தகுதிஅடிப்படையானதொன்றல்ல என ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது சரியானதா என ஆணைக்குவால் கூற முடியாது. ஆயினும் அம் முடிவு தொடர்பாக உள்துறை அமைச்சால் எடுக்கப்பட்ட முறைமையில் எந்தத் தவறும் இல்லை என உறுதிப்படுத்த முடியும் என தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்ஒருவரால் கிளிநொச்சியில் 2020ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பஸ் ஒன்றில் கிளைமோர் கண்ணிவெடியை பொதியில் வைத்து கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட செய்தி சிறிலங்கா அரசாங்க இணையத்தளங்களின் மீது தமிழீழ இணையப் படையால் மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள்பயங்கரவாதத்திற்கு தயாராகின்றார்கள் என்ற நிலைப்பட்டைஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சு எடுத்திருந்தது. சிறிலங்கா செய்திகள் சிறிலங்கா நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. எனினும் அந்த ஆவணங்களை விலக்குவதற்கு தேவையான போதுமான சட்டரீதியிலான குறைபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சிற்கு வழங்கப்பட்ட தகவல் தவறானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவற்றில் ஆறு நாடுகளில் (சிறீலங்கா இந்தியாமலேஷியா ஐக்கிய இராச்சியம் ஐக்கியஅமெரிக்கா கனடா) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தது. மேலும் 27 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 நாடுகள்) தங்களது பொருளாதாரத் தடைப் பட்டியலில் மட்டுமே தமிழீழவிடுதலைப் புலிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டி இருந்தது. உள்துறை அமைச்சால் அத் தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்பதை ஏற்றுக் கொண்ட ஆணையகம்இ அந்தத் தவறுகள் உள்துறைஅமைச்சின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனக் குறிப்பிட்டிருந்தது. இந்தோ-பசுபிக்கை நோக்கி நகரும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கைஇ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது இந்தியா இலங்கையுடனானஇ ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை பாதிக்கும் என்ற வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் ஆலோசனையை உலகளாவியரீதியில் பயங்கரவாதக் குழுக்களிற்கெதிரான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் பின்னணியில் பார்க்கவேண்டும் என ஆணையகம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தனித் தமிழ் நாடொன்றைக் கோருபவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது அரசியலை முன்னெடுத்தலிலும் தமிழீழ இலச்சினையை வெளிப்படுத்துவதிலும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்வாதிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக்கொடிக்கு மிடையேயுள்ள வேறு பாட்டை அங்கீகரித்த ஆணையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் நுட்பமான வேறு பாடுகளை புரிந்து கொள்ள மாட்டார்களெனவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொலிஸாருக்கும். சமூகங்களுக்கும் இடயேயான உரையாடல்கள் எதிர்காலத்தில் பொலிஸாரின் தவறான புரிதல்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழஅரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் வடகிழக்கு சிறீலங்காவில் தமிழ் நாடொன்றை அமைக்கும்சிந்தனையைக் கொண்டிருக்கின்ற போதும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக் கெதிராக உள்துறை அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆணையகம் மேலும்குறிப்பிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ் ராஜ சட்டத்தரணி திருமதி சாந்தி சிவகுமரன் சொலிசிட்டர் போல் ஹெரொன் (பொதுநல சட்ட நிறுவகம்) ஆகியோருக்கு அவர்களது மிகச் சிறப்பான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறலில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோரி நிற்கும். https://www.virakesari.lk/article/186909
-
யாழ்.கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்!
25 JUN, 2024 | 10:58 AM யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த இரண்டு வெதுப்பகங்களும் சுகாதார சீர்கேடாக இயங்கிய வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இந்த இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் நேற்று திங்கட்கிழமை (24) யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். வழக்குகளினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும் மற்றைய வெதுப்பகத்தினை சீர் திருத்துமாறும் உத்தரவிட்டுள்ளதுடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் ஆட்பிணையிலும் விடுவித்துள்ளார். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186907
-
இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி அனுமதி
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 10:13 AM இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், இலங்கையில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186900
-
கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு, திமுக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்துமா?
பட மூலாதாரம்,@VANNIKURAL படக்குறிப்பு,முழு மதுவிலக்கு கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று மாலை (ஜூன் 24, 2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்திலும் இவ்விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி அ.தி.மு.க சார்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 24, 2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி, திங்கள்கிழமை அன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மனு அளித்துள்ளனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தி.மு.க-வுக்கு தர்ம சங்கடம் இந்நிலையில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இது நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆளுநரைச் சந்திப்பது போன்றவை எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், ஆனால் தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கூறியது என்ன? தி.மு.க இதை எப்படிப் பார்க்கிறது? பட மூலாதாரம்,@ALOOR_SHANAVAS படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் திங்கள்கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு' சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை (ஜூன் 24, 2024) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "மதுவிலக்கு பற்றி நாங்கள் புதிதாக பேசவில்லை. பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மதுவிலக்கு குறித்து அதே அவையில் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் அம்பேத்கரின் வாரிசுகள் அதனால் முழு மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்," என்று கூறினார். தமிழ்நாட்டில் மட்டுமே மதுவை தடைசெய்ய சொல்லவில்லை என்றும் தேசிய அளவில் இதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். "சாராயத்தில் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்பதே கிடையாது. எல்லாம் விஷம் தான். இப்படி சாராயத்தை வாங்கி குடிப்பவர்கள் அடித்தட்டு மக்கள். எனவே அனைத்து வகையான சாராயத்தையும் தடை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்," என்று கூறினார். போதைப் பழக்கம் என்பது தேசியப் பிரச்னை என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை மட்டும் பேசாமல், தொலைநோக்குப் பார்வையில் மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். "பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் அணுகுவது போல நாங்கள் இதை அணுகவில்லை. அதே நேரத்தில் தி.மு.க-வுக்கு வக்காலத்தும் வாங்கவில்லை. மதுவிலக்கு கொண்டுவந்தால் ஏற்படும் நிதியிழப்பை மட்டும் தமிழக அரசு பார்க்கக்கூடாது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் மனிதவள இழப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும்," என்றார் திருமாவளவன். இத்தகைய விஷச் சாராய மரணங்கள், இந்தியா முழுவதும் பல்வேறு கட்சிகளின் ஆட்சியின் கீழ் நடந்துள்ளதாகவும், எனவே 'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்றும் அவர் கூறினார். மதுவிலக்கு தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடா? படக்குறிப்பு,'தி.மு.க எதிர்ப்பு' என்ற மனநிலையில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை அணுகக் கூடாது என்று திருமாவளவன் கூறினார் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்தும் நம்மிடம் பேசினார் அக்கட்சியின் மாநிலக் கொள்கைபரப்புத் துணைச் செயலாளர் ஆதிமொழி. "மக்களுக்கான பணி என்பது வேறு, தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம், ஆளுநர் சந்திப்பு என செயல்படுகின்றன. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளோ அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், மதுவிலக்கின் அவசியம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்," என்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு குறித்து தி.மு.க புரிந்துகொள்ளும் என்றும், கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை என்றும் கூறுகிறார் ஆதிமொழி. "நிச்சயம் மதுவிலக்கு சவாலான ஒன்று தான். ஆனால், சாத்தியமில்லாத ஒன்று இல்லை. 2016-இல் அதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கூட தி.மு.க அளித்திருந்தது. டாஸ்மாக் என்பதே 1983-இல் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது தான், பின்னர் அதற்கு 2003-இல் ஏகபோக அதிகாரத்தை அளித்தவர் ஜெயலலிதா. எனவே டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று வலியுறுத்துவது தி.மு.க-விற்கு எதிரான நிலைப்பாடு அல்ல," என்றார். படக்குறிப்பு,2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது ரூ.44,000 கோடி வருமானம் தமிழ்நாடு வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation Limited என்பதன் சுருக்கமே டாஸ்மாக். 1983-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இது தொடங்கப்பட்டது. இது முற்றிலும் அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். மாநிலத்தில் மதுவை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் உரிமை இந்த நிறுவனத்துக்கு மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டில் தனியார்வசம் இருந்த மதுபானச் சில்லறை விற்பனையை கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து மது விற்பனை மூலம் அரசுக்கு வரும் வருமானம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2003-04-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் கிடைத்தது. 2008-2009-ஆம் ஆண்டில் இந்த வருமானம் ரூ.10,000 கோடியைத் தாண்டியது. அடுத்த நான்கே ஆண்டுகளில் (2012-2013) ரூ.20,000 கோடி வருவாயை டாஸ்மாக் நிர்வாகம் எட்டியது. 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.30,000 கோடியைக் கடந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வருமானம் , 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பட மூலாதாரம்,@DRSENTHIL_MDRD படக்குறிப்பு,தி.மு.க-வின் உறுப்பினரும், தருமபுரி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான செந்தில்குமார் தி.மு.க கூறுவது என்ன? இது தொடர்பாக கருத்து தெரிவித்த தி.மு.க-வின் உறுப்பினரும் முன்னாள் எம்.பி-யுமான செந்தில்குமார், "2016 தேர்தலில் மதுவிலக்கை நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது ஒரு அரசியல் கட்சியாக அதுவே எங்களுக்கு சரியான தீர்வாகத் தோன்றியது. ஆனால் ஒரு அரசியல் கட்சியாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும், ஆளும் அரசாக எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன," என்று கூறுகிறார். 2016-ஆம் ஆண்டில் மதுவிலக்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்து உருவாகியிருந்ததை அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பிரதிபலித்தது. தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக மது விலக்கு இருந்தது. பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டுமே மதுவிலக்கைக் கொண்டு வர உறுதியளித்தன. தொடர்ந்து பேசிய செந்தில்குமார், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்று சில கொள்கைகள் உள்ளன. அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உள்ளது. அதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்," என்றும் கூறினார். பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு,வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது 'விடுதலைச் சிறுத்தைகள் மீதான நெருக்கடி' கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான தங்களின் நிலைப்பாடு, எந்த வகையிலும் தோழமைக் கட்சியான தி.மு.க-வை பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான், தேசிய அளவில் மதுவிலக்கு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன். "நிச்சயமாக தி.மு.க-வுக்கு இதுவொரு தர்மசங்கடமான நிலை தான். ஆனால் அதே சமயத்தில் நிர்வாகச் சீர்கேட்டை மட்டும் தான் விடுதலைச் சிறுத்தைகள் கண்டித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை மதுவிலக்கு என்ற பெயரில் தான் முன்னெடுத்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பக்கம் தாங்கள் நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் கூட்டணியிலும் விரிசல் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது," என்கிறார் பிரியன். தொடர்ந்து பேசிய அவர், "இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ளது. வரப்போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. வாக்கு சதவீதம் வேண்டுமானால் பாதிக்கப்படலாம். மற்றபடி தி.மு.க ஆளும் கட்சியாக இடைத்தேர்தலைச் சந்திப்பதால், அதற்கான ஆதாயங்களும் உள்ளன. எனவே தான் தி.மு.க-வும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தங்களுக்கு எதிரானதாக பார்க்கவில்லை," என்கிறார். படக்குறிப்பு,தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது தி.மு.க-வுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது கட்சி தர்மம், கூட்டணி தர்மம் வேங்கைவயல் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்ததாகவும், எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடி அக்கட்சிக்கு ஏற்பட்டதாகவும் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரகு. "தங்களுக்கான வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது, அல்லது பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இதற்கு முன்பும் பலமுறை அடித்தட்டு மக்கள் அல்லது பட்டியிலின மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் நின்றுள்ளது,” என்கிறார். "அதேபோல தி.மு.க-வின் மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட (சி.பி.எம்) பல போராட்டங்களை நடத்தியுள்ளது. கூட்டணி தர்மம் என்பது வேறு. கூட்டணிக்காகத் தங்கள் நிலைப்பாடு அல்லது கொள்கைகளை விட்டுக்கொடுத்தால், கட்சிகள் மக்களின் மனதில் இருந்து மறைந்து விடும். அதற்குச் சிறந்த உதாரணம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகள்," என்கிறார் ரகு. https://www.bbc.com/tamil/articles/c87772lgz5go
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது : இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு! 25 JUN, 2024 | 09:17 AM யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்யச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்திய மீனவர்களை கைதுசெய்ய முயன்ற போது படகிலிருந்து தவறி விழுந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது ஒரு இந்திய மீனவர்களின் படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் 10 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகும் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/186897