ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தரம் 6 இற்கு விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்
Everything posted by ஏராளன்
-
டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
டெல்லி விபத்து | 3 தொழிலாளிகள் உடல் மீட்பு; மழை தொடர்பான உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு 29 JUN, 2024 | 12:22 PM புதுடெல்லி: தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு (டிஎஸ்எஃப்) அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுகுறித்து டிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறும்போது, “கட்டுமானப் பணியிடத்தில் நடந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் இருவர் சந்தோஷ் குமார் யாதவர் (19) மற்றும் சந்தோஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. மூன்றாமவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இடிபாடுகளை அகற்ற கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டுமான குழிகளில் இருந்த மழைநீரை அகற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன இடிபாடுகளில் இன்னும் யாரவது சிக்கியிருக்கிறார்களா என்று அறிய தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், காவல் அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர். இவை தவிர, பருவ மழைத் தொடங்கி உள்ள டெல்லியில் கடந்த 88 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஜூன் மாதத்தில் அதிக மழை பொழிந்த நிலையில் மழைத் தொடர்பான விபத்துக்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து கார் ஓட்டுநர், ரோகினி பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 39 வயது ஆண் ஒருவர், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி 3 பேர் அடங்குவர். டெல்லி கனமழை: கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில்228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1936-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்துள்ளது. 88 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மழை சாதனை அளவாகப் பார்க்கப்படுகிறது. 1936-ம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததே இதுவரை அதிகபட்ச மழை அளவாக உள்ளது. மழை காரணமாக டெல்லி-என்சிஆர் (டெல்லி-தேசிய தலைநகர மண்டலப் பகுதிகள்) பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/187243
-
ரஷ்ய செய்மதி சிதறியதால் விண்வெளி ஓடங்களில் அடைக்கலம் புகுந்த சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள்
29 JUN, 2024 | 12:05 PM (ஆர்.சேதுராமன்) ரஷ்யாவின் செய்மதியொன்று துண்டுகளாக உடைந்து சிதறியதால், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, விண்வெளி ஓடங்களுக்குள் புகுந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என அமெரிக்க விண்வெளி முகவரகங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி ரஷ்ய செய்மதி ஏற்கெனவே செயலிழந்திருந்தது எனவும், கடந்த புதன்கிழமை அது 100க்கும் அதிகமான துண்டுகளாக உடைந்ததாகவும் அமெரிக்க விண்வெளி கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. RESURS-P1 எனும் இச்செய்மதி செயலிழந்துவிட்டதாக 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்மதியே இவ்வாறு உடைந்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விண்வெளியில் பூமியின் தாழ்வட்டப் பாதையை கண்காணித்து வரும் அமெரிக்க நிறுவனமான லியோலேப்ஸின் பேச்சாளர் இது தொடர்பாக கூறுகையில், மேற்படி சம்பவத்தினால் உருவான குறைந்தபட்சம் 180 பொருட்களை இந்நிறுவனம் பின்தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இச்செய்மதி உடைந்தமை குறித்து அறிவிக்கப்பட்டவுடன், விண்வெளியில் பூமியை வலம் வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளவர்கள், விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ள விண்கலங்களுக்குள் நுழைந்துகொண்டனர் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி ஜூன் 26ஆம் திகதி இரவு 8.45 மணியளவில் விண்வெளி நிலையத்தில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக தத்தமது விண்வெளி ஓடங்களுக்குள் செல்லுமாறு நாசா அறிவுறுத்தியது. சுமார் ஒரு மணித்தியாலத்தில் அனைத்தும் சரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு திரும்பினர் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுனிதா வில்லியம்ஸ் உட்பட பலர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர். இதேவேளை, மேற்படி செய்மதி வெடிப்புச் சம்பவத்தினால் ஏனைய செய்மதிகளுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அமெரிக்க விண்வெளி படை தெரிவித்துள்ளது. 1985ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி கட்டளைப் பணியகம் (US Space Command) முதன்முதலில் ஸ்தாபிக்கப்பட்டு 2002ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. எனினும், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, இக்கட்டளைப் பணியகம் மீண்டும் 2019 ஆகஸ்ட்டில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இக்கட்டளைப் பணியகம் உள்ளது. விண்வெளியில் வலம்வரும் சிதைவுகளையும் இது ஆராய்ந்து வருகிறது. மேற்படி செய்மதியை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரொஸ்கொஸ்மோஸ் இயக்கி வந்தது. இச்செய்மதி உடைந்து சிதறியமை தொடர்பான அமெரிக்க விண்வெளி கட்டளைப் பணியகத்தின் தகவல் குறித்து ரஷ்ய ரொஸ்கொஸ்மோஸ் உடனடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை. ரஷ்யா தனது செயலிழந்த செய்மதிகளில் ஒன்றை 2021ஆம் ஆண்டில் தரையிலிருந்து இயக்கப்படும் செய்மதி எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்கியதால் ஆயிரக்கணக்கான சிதைவுகளை விண்வெளியில் உருவாக்கியது. இந்நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187240
-
மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரல்
மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீற்றர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா – இலங்கைக்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான வசதிகள் இலகுவாக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். மன்னார் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக அறிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304796
-
மன்னார் - மடு வீதியில் விபத்து : ஒருவர் பலி, மற்றொருவர் காயம்!
29 JUN, 2024 | 10:48 AM மன்னார் - மடு பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்துக்குள்ளானதில் 35 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் - மன்னார் பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/187235
-
கண்ணிவெடி அகற்ற ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா நன்கொடை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கையை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி இதன்போது தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் 215.605 மில்லியன் சதுரமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார். 23.23 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/304789
-
ஆமணக்கு விதைகளை உண்ட 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - மன்னாரில் சம்பவம்!
29 JUN, 2024 | 10:33 AM மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (28) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய 8 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணை எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து சக மாணவர்களுடன் அதை உட்கொண்ட நிலையிலே குறித்த மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த 8 மாணவர்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது . https://www.virakesari.lk/article/187230
-
இணைய மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது
இணைய நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 30 சீன பிரஜைகள் கைது ! 29 JUN, 2024 | 10:30 AM இணையம் ஊடாக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். இதேவேளை, இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை (28) வரை 137 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187228
-
அபராதம் மூலம் 3 மில்லியன் ரூபா வருமானம்!
ரயில்வே சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 3 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் ரயில்வே பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதில் அதிகமான தொகை பயணச்சீட்டின்றி பயணித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயணச் சீட்டின்றி பயணித்த 658 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களினூடாக மாத்திரம் 20 இலட்சத்து 25 ஆயிரத்து 826 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தக் காலப்பகுதியில் குறைந்த வகுப்புகளுக்கான பயணச் சீட்டைப் பெற்று முன்னிலை வகுப்புகளில் பயணித்த 299 பேருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனூடாக மாத்திரம் 9 இலட்சத்து 33 ஆயிரத்து 702 ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/304772
-
இலங்கையின் வங்குரோத்து நிலை குறித்து அறிவிக்கும் பொறுப்பு சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனங்களுடையதல்ல - எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்
Published By: VISHNU 28 JUN, 2024 | 10:19 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் மீள் செலுத்துகைத் திறன் மேம்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்பதையே வெளிப்படுத்தும். மாறாக வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதா இல்லையா என்பதை அறிவிக்க மாட்டா. எதிர்க்கட்சிகள் இதனை தெரிந்து கொண்டு விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று வெளியுறவுகள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஏப்ரல் 12ஆம் திகதி எம்மால் சர்வதேச கடனில் ஒரு தொகையை மீள செலுத்த முடியாது என்று அறிவித்தோம். இலங்கை அரசாங்கமே இதனை அறிவித்தது. மாறாக வெளிநாட்டு நிதித்தரப்படுத்தல் நிறுவனங்கள் அல்ல. அதே போன்று இலங்கை அந்த நிலைமையிலிருந்து மீண்டுள்ளதா இல்லையா என்பதையும் நாமே அறிவிப்போம். சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் மீள்செலுத்தல் திறன் எந்த மட்டத்தில் உள்ளது என்பதையே வெளிப்படுத்தும். மக்கள் மத்தியில் போலியான கருத்துக்களை பரப்பும் எதிர்க்கட்சிகள் இதனை புரிந்து கொண்டு, அதன் பின்னர் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதால் எமக்கு 17 பில்லியன் டொலர் இலாபம் கிடைத்துள்ளது. இதனை எமது பொருளாதாரத்திற்கு பாரிய பலமாகும். எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தம் எதிர்வரும் 2ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது மாத்திரமின்றி 2 மற்றும் 3ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது அரசாங்க தரப்பில் முழுமையான விளக்கம் வழங்கப்படும். அப்போது எதிர்க்கட்சிகளால் கூறப்படும் பொய்கள் அனைத்தும் அம்பலமாகும் என்றார். https://www.virakesari.lk/article/187219
-
கிராமங்களில் சாதிப் பெயர்களை மாற்ற கேரள அரசு உத்தரவு – தமிழகத்தில் மாற்றப்படாமல் இருப்பது ஏன்?
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2024 கேரள அரசு அம்மாநிலத்தின் ஊர்கள், தெருக்களில் சாதி அடையாளம் கொண்ட பெயர்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டே இதைச் செய்ததாகக் கூறும் நிலையில், இன்னும் பல கிராமங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன. சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க அரசு இந்தப் பெயர்களை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஊர், தெருக்களில் சாதிப் பெயர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கிராமம், ஊராட்சி மற்றும் தெருக்களில் சாதிப் பெயர்கள் இருப்பதைக் காண முடிகிறது. இந்தப் பெயர்களை மாற்ற வலியுறுத்தி இந்தப் பெயர்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரும், அந்தந்த மாநில உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளனர். ஆனால், இன்று வரை பல இடங்களில் சாதியப் பெயர்கள் நீடிக்கவே செய்கின்றன. இப்படியான நிலையில், கேரள அரசு, அம்மாநிலத்தின் கிராமங்கள், தெருக்களில் உள்ள சாதி அடையாளம் உள்ள பெயர்கள், சாதியைக் குறிப்பிடும் வகையிலான வார்த்தைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சாதிப் பெயர்களை நீக்க கேரள அரசு உத்தரவு கேரள மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் வென்று எம்.பி-யாக தேர்வாகியுள்ளார். அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, "கேரளாவில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில், ‘காலனி, சங்கேதம், ஊரு’ போன்ற பெயர்கள் அகற்றப்படும். இவை அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், சாதியைக் குறிக்கும் வகையிலும் உள்ளது. இவற்றுக்கு மாற்றாக நகர், உன்னதி போன்ற வார்த்தைகளும், வேறு பெயர்களும் சூட்டப்படும்," எனத் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காலனி என்ற சொல் காலனித்துவத்தின் அடையாளம், காலனித்துவ அடிமைத்தனம். மக்களின் சாதியில் பாகுபாடு பார்க்கும் காலனி, ஊரு, மற்றும் இதர சாதியப் பெயர்கள் மாற்றப்படும்," என்று காட்டமாகப் பேசியிருந்தார். இந்த உத்தரவு கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களும் இதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. பட மூலாதாரம்,DILLI BABU தமிழ்நாடு கிராமங்களில் இன்னமும் சாதியப் பெயர்கள் இந்நிலையில், தமிழ்நாட்டில் சாதியப் பெயர்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனவா? தமிழ்நாட்டின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள முயன்றபோது, தமிழ்நாட்டில் சமூக நீதி என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகத் தாம் கருதுவதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் கூறினர். பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு, "காலனி, சேரி, பள்ளம், பதி போன்ற பல பெயர்களில் பட்டியலின, பழங்குடியின மக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கிராமங்களின் பெயர்கள் உள்ளன. அதுதவிர, நேரடியான சாதிப் பெயர்களும் உள்ளன," என்கிறார். இதற்காகச் சில கிராமங்களில் உள்ள பெயர்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பறையப்பட்டிபுதுார் என்ற பெயரில் ஒரு ஊராட்சியே இருக்கிறது. தருமபுரியில் செங்கிலிப்பட்டி, திருப்பத்தூர் மாவட்டத்தில் குறும்பர் வட்டம், குறும்பேரி என பட்டியலின மக்களின் சாதிப் பிரிவுகளின் பெயர்களிலேயே கிராமங்கள் உள்ளன. இதுதான் தமிழ்நாட்டின் நிதர்சனம்," என்கிறார் டில்லி பாபு. இவை எல்லாம் சில எடுத்துக்காட்டுகள்தான் எனவும், தமிழ்நாடு முழுவதிலும் பல கிராமங்களில், தெருக்களில் சாதியப் பெயர்கள் உள்ளதாகவும் வருந்துகிறார் டில்லிபாபு. இந்தப் பெயர்களால் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சாதி மக்கள் மட்டுமின்றி, இதர சாதி மக்களும் கிராமத்தின் பெயரைப் பயன்படுத்தவே தயங்குகிறார்கள் எனவும், இது மக்களுக்கு உளவியல் ரீதியில் மோசமான நிலை எனவும் அவர் தெரிவிக்கிறார். மேலும் தொடர்ந்த டில்லி பாபு, "கேரள அரசு சாதிப் பெயர்களை அகற்றி உத்தரவிட்டது மிகவும் முற்போக்குத்தனமானது. சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு இந்தப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும்," என்கிறார் அவர். ‘வழக்கு தொடுத்தும் தீர்வு இல்லை’ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் இதற்குத் தீர்வு இல்லை என்கிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவகாமி. சமூக சமத்துவப்படை நிறுவனரான அவர், "நிலவியல் ரீதியாக இதர மக்கள் வாழும் பகுதியில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பிரித்து வெகுதூரத்தில் அவர்களைக் குடியமர்த்தியுள்ளனர்,” என்கிறார். "அவ்விடங்களுக்கு காலனி, சேரி, குப்பம், மற்றும் இதர சாதிப் பெயர்களை வைக்கின்றனர். இது இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது. இந்தப் பெயர்கள் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை முதற்கொண்டு பல அரசு ஆவணங்களிலும் உள்ளன," என்கிறார். மேலும், சாதியப் பெயர்களான காலனி, சேரி போன்றவற்றை தமிழ்நாடு அரசு மாற்ற வலியுறுத்தி, 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். அரசின் பார்வைக்குச் சென்றும் இதுவரை தீர்வு இல்லை," என்கிறார் அவர். ‘பழங்குடி என்பதால் வேலை கிடைக்கவில்லை’ உண்மையில் சாதிப் பெயருள்ள கிராமத்தினர் எப்படி உணர்கிறார்கள் என்று சிலரிடம் நாம் பேசினோம். பிபிசி தமிழிடம் பேசிய கோவை, பொள்ளாச்சியை அடுத்த நரிக்கல்பதியைச் சேர்ந்த வெங்கடேஷ், "கோவை மாவட்டத்தில் பதி, பள்ளம் என்றாலே அது பழங்குடியினர் வாழும் பகுதி என அர்த்தம். எனது ஆதார், குடும்ப அட்டை என அனைத்திலும் நரிக்கல்பதி கிராமம் என்ற பெயர் இருக்கிறது," என்றார். மேலும், "நான் பி.காம் படித்துள்ளேன். எங்கள் ஊரில் 120 குடும்பங்கள் இருந்தும் பட்டதாரிகள் வெறும் 15 பேர்தான். நான் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் கணக்கர் வேலை கேட்டுச் சென்றபோது, நான் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் நிராகரிக்கப்பட்டேன்," என்றார் வருத்தத்துடன். "இந்தச் சம்பவத்திலிருந்து, யாராவது எனது ஊரின் பெயரைக் கேட்டால் அருகேயுள்ள காளியாபுரம் கிராமத்தின் பெயரைச் சொல்வேன்," என்கிறார் அவர். தனது அடையாளம் தெரியாமல் இருக்க ஊரின் பெயரை மாற்றிப் பொய் சொல்லும் நிலையில் உள்ளதாகக் கூறும் வெங்கடேஷ், இருப்பினும் அரசு ஆவணத்தில் உள்ளதை மாற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு,ஜெகநாதன் ‘ஊரைச் சொன்னால் சாதியை தெரிந்துகொள்வார்கள்’ திருப்பூர் அவிநாசியை அடுத்த தேவேந்திர நகரில் கடந்த பிப்ரவரியில் தீண்டாமைச் சுவர் அகற்றப்பட்டது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பட்டியலினத்தின் தேவேந்திரகுல வேளாளர் பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங்களாக, தேவேந்திர நகரில் வசிக்கிறோம். நான் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் படித்துள்ளேன். எங்கும் என் கிராமத்தின் பெயரைக்கூட என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் எனது சாதிப் பெயர்தான் என் ஊரின் பெயரிலேயே உள்ளதே. சமூக நீதி பேசும் திமுகவும் சரி, அதிமுகவும் சரி இதுவரை இதற்குத் தீர்வு காணவே இல்லை," என்கிறார். "தீண்டாமைச் சுவரைப் போராடி அகற்றினோம். ஆனால் ஊரின் பெயரை மாற்ற முடியவில்லை, இதுதான் எங்கள் நிலை," என வருந்துகிறார் ஜெகநாதன். ‘சிறு முயற்சிகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்’ ஊர்களில், இடங்களில் இருக்கும் சாதிப் பெயர்களை மாற்றுவது போன்ற முயற்சிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார், எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் சாதியினர், பழங்குடியினர் என்றாலே அவர்கள், மற்ற சாதியினர் வாழும் பொதுவான ஊர் பகுதியில் வாழ முடியாமல் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் பொதுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால்தான்,” என்றார். “வெளியேற்றப்பட்ட அவர்கள் வாழும் பகுதியை, காலனி, சேரி, குப்பம் என சாதியப் பெயர்கள் சூட்டப்பட்டு பாகுபாடு பார்க்கப்படுகிறது," என்றார். குடியிருக்கும் பகுதி, தெருவில் நடக்கக்கூடாது என்பதில் துவங்கி, தனி சுடுகாடு என அனைத்திலும் இங்கு சாதிய பாகுபாடு உள்ளதாகக் கூறுகிறார் அவர். பள்ளிகளில் சாதியப் பாகுபாடு களைவது, கிராமம், தெரு பெயர்களை மாற்றுவது போன்ற சிறு முயற்சிகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படும் என்கிறார் கதிர். பட மூலாதாரம்,FACEBOOK/THIRUMAVALAVAN படக்குறிப்பு,தொல். திருமாவளவன் 'தமிழகத்திலும் அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்' நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன், "சாதியப் பெயர்களை அகற்ற வேண்டுமென்ற கேரள அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதை தமிழகத்திலும் அமல்படுத்த தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்," என்றார். படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ‘பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்’ முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு. நம்மிடம் பேசிய வன்னி அரசு, "இது மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக உள்ளதை வலியுறுத்தி, சாதியப் பெயர்களை மாற்ற பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பேருந்துகளிலும், சில கிராமங்களிலும் பெயர்கள் நீக்கப்பட்டன. முழுமையாக சாதியப் பெயர்களை நீக்கி சமூக நீதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார் அவர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன? இதுதொடர்பாக நாம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் விளக்கம் கேட்கப் பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை. இதனால் அத்துறையின் செயலாளர் லட்சுமி பிரியாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. அப்போது பேசிய லட்சுமி பிரியா, "1978-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள தெருக்கள் மற்றும் சாலைகள், கிராமங்களில் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிட்டு, பெயர்களை மாற்றியது. இந்த அரசாணையை இதுவரை இரண்டு முறை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். சாதிப் பெயர்களைக் கண்டறிந்து நீக்கி வருகிறோம்," என்றார். அவரிடம், ‘பறையப்பட்டிபுதுார், சாக்கிலிப்பட்டி போன்ற பெயர்கள் இன்னமும் நிலவுகிறது, ஏன் மாற்றவில்லை?’ என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியதற்கு, "அப்படி குறிப்பிட்டச் சாதியை மையப்படுத்தும் பெயர்கள் கிராமங்களில் இல்லை," என்று மறுப்பு தெரிவித்தார் செயலாளர் லட்சுமி பிரியா. அதுகுறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் சாதியைக் குறிப்பிடும் வகையில் உள்ள பெயர்களை மாற்றி வருகிறோம். அப்படி ஏதேனும் இருந்தால் அது மாற்றப்படும். இதற்கென தனியாக ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுப்போம், மக்கள் மனு கொடுத்தாலும் மாற்றப்படும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cd1rl1dk5eyo
-
இலங்கை வருகிறார் அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்
28 JUN, 2024 | 07:19 PM அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்தின் இலங்கைக்கான விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ரொபர்ட், அரச அதிகாரிகள், நிதித்துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ரொபர்ட் கப்ரோத்தின் விஜயம் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்புறவையும் ஆதரவையும் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பொருளாதாரம், நிதித் துறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் ஆழமான சீர்திருத்தங்கள் இன்றியமையாததாகும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/187214
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
IND vs SA: சூர்யகுமார் மீது குறி, கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் - இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் 2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வரவுள்ளது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென் ஆப்ரிக்கா அதில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளன. ஒருவேளை இந்தத் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், தோல்வி அடையாமல் சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையையும் இந்தியா அல்லது தென் ஆப்ரிக்கா பெறும். இந்திய அணியைப் பொருத்தவரை லீக் சுற்று, சூப்பர்-8 சுற்று என அனைத்திலுமே ஆதிக்கம் செய்து வென்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து அணிகளையும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆதிக்கம் செய்து வென்றது. ஒரு போட்டியைக்கூட நெருக்கமாகச் சென்று இந்திய அணி வெல்லவில்லை. இதிலிருந்தே இந்திய அணி எத்தகைய சரிவிலிருந்தும் எளிதாக மீளும், எந்த அணி மீதும் ஆதிக்கம் செலுத்தும் என அறியலாம். ஆனால், தென் ஆப்ரிக்கா அணி தோல்வி அடையாமல் இறுதிப்போட்டி வரை பயணித்தாலும், சில போட்டிகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் வென்றது. நேபாளம், வங்கதேசம், அணிகளிடம்கூட போராடித்தான் வென்றது. வலிமையான அணியாக இருந்தாலும், எந்த நேரத்தில் சறுக்கும் என்பது அந்த அணிக்கே இன்னும் பிடபடவில்லை. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இதுவரை நேருக்கு நேர் இரு அணிகளும் இதுவரை 26 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14 ஆட்டங்களில் இந்திய அணியும், 11 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. இந்திய அணிக்கு எதிராக டேவிட் மில்லர் 20 போட்டிகளில் 431 ரன்கள் சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா 17 போட்டிகளில் 420 ரன்களும், சூர்யகுமார் 6 போட்டிகளில் 343 ரன்களும் சேர்த்துள்ளனர். பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், புவனேஷ் குமார் சிறப்பாகப் பந்து வீசியிருந்தாலும் இருவரும் தொடரில் இல்லை. குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஜோகன்ஸ்ப்ர்க்கில் 2.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்திருந்தார். கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா 3 போட்டிகளிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. இந்திய அணிக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்? இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி நடத்தும் போட்டியிலும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி 2014 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. 2016, 2022 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி, 2016, 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி என இந்திய அணி கோப்பைக்காகப் போராடி வருகிறது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் தருணத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 12 மாதங்களுக்குக்கு உள்ளாக அடுத்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 10 ஆண்டுகளாக நடந்த உலகக்கோப்பைத் தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டிவரை சென்றும் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத நிலைதான் இந்திய அணிக்கு இருக்கிறது. ஆதலால், இந்தமுறை 10 ஆண்டுக்கால பஞ்சத்தைத் தீர்த்து, கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற தாகத்துடன் இந்திய அணியினர் உள்ளனர். ஆதாலால் இந்திய அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். இந்திய அணியாவது இறுதிப் போட்டிவரை சென்று தோற்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நிலைமை பரிதாபமானது. 1991ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்தது முதல் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் பல ஜாம்பவான்கள் இருந்த காலத்தில்கூட இறுதிப் போட்டிக்குக்குச் செல்லாத நிலையில் இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால், கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறது. ஆதலால் இன்று நடக்கும் 40 ஓவர்களும் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும், இரு அணி வீரர்களுக்கும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் இருக்கின்றன. அதனால் இந்த ஆட்டம் அரையிறுதி போன்று ஒருதரப்பாக அமையாமல், பெரிய ஸ்கோராக, விறுவிறுப்பாக இருத்தல் வேண்டும். ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ளன, இது 9வது ஆட்டம். இந்த மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை குறித்துத் தெரியும். ஆனால், தென் ஆப்ரிக்கா விளையாடியதில்லை. இந்த விக்கெட்டில் நடந்த 7 போட்டிகளில் 3இல் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் அமெரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி எளிதாக சேஸ் செய்துள்ளன. ஒரு போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20.22 சராசரியும், 7.88 எக்கானமியும் வைத்துள்ளனர். ஒரு போட்டியில் மட்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் 109 முதல் 181 ரன்களுக்குள்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி, 4ஆம் எண் கொண்ட விக்கெட்டில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது நமீபியா-ஓமன், ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே ஆட்டம் நடந்த விக்கெட்டாகும். இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சற்று தொலைவாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் ரிசர்வ் நாள் இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றுள்ளது. இந்திய அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்துள்ளது, இதில் 4 முறை எதிரணியே இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 3 முறை டாஸ் வென்று அதில் இருமுறை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுமே பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து பந்துவீச்சில் சுருட்டவே விருப்பம் காட்டக்கூடும். இந்த ஆட்டம் பகலில் நடப்பதால் பனிப்பொழிவுக்கு வாய்ப்பில்லை. சூர்யகுமார் மீது குறி பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை நடுவரிசையில் வெளிப்படுத்தி வருகிறார். நடுப்பகுதியில் ஸ்கோரை திடீரென உயர்த்தி, ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பேக்வார்ட் பாயின்ட் முதல் பேக்வார்ட் ஸ்குயர்லெக் வரை சூர்யகுமார் அனாசயமாக ரன்களை சேர்க்கிறார். வேகப்பந்து, பவுன்ஸரை விரும்பி அடிக்கும் சூர்யகுமார், இதுபோன்ற பந்துவீச்சில் எளிதாக ஸ்கோர் செய்வார். அதிலும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இதற்கு முன் வெளுத்துள்ளார். ரபாடாவுக்கு எதிராக 24 பந்துகளில் 66 ரன்கள், நோர்க்கியாவின் 12 பந்துகளில் 32 ரன்கள், யான்செனின் 5 பந்துகளில் 25 ரன்கள் என சூர்யகுமார் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளார். தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 298 ஸ்ட்ரைக் ரேட்டை அவர் வைத்துள்ளார். ஆதலால் இன்றைய இறுதி ஆட்டத்தில் சூர்யகுமாரை களத்தில் நிலைத்து பேட் செய்யவிடாமல் தடுக்கத் தேவையான உத்திகளை தென் ஆப்ரிக்கா வகுக்கும். ஸ்லோவர் பந்துகளையும் வெளுக்கும் ஸ்கை, 180 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சரியான லென்த்தில், அதிவேகப்பந்துகளுக்கு எதிராக சூர்யகுமார் திணறுகிறார் என்பதால் அதன் மீது தென் ஆப்ரிக்கா கவனம் செலுத்தும். கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் இந்திய அணி எந்த அளவு சுழற்பந்துவீச்சில் வலுவாக இருக்கிறதோ அதேபோன்று தென் ஆப்ரிக்காவும் கேசவ் மகராஜ், சம்ஷி என இரு வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சை எளிதாகs சமாளித்து ரோஹித், கோலி விளையாடி விடுவார்கள். ஆனால் பவர்ப்ளேவில் கேசவ் மகராஜ் பந்துவீச்சை ஆடுவதில் சிரமப்படுவார்கள் என்பதால், பவர்ப்ளேவில் மகராஜை பந்துவீச வைக்கலாம். பவர்ப்ளேவில் 114 பந்துகளை வீசிய மகராஜ் 143 ரன்கள்தான் விட்டுக்கொடுத்துள்ளார், 7.52 எக்கானமி வைத்துள்ளார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கோலி, ரோஹித் இருவருமே ஸ்லோவர் இடதுகை பந்துவீச்சுக்குத் திணறுவார்கள் என்பதால், இருவருக்கு எதிராக கேசவ் கொண்டுவரப்படலாம். கிளாசன், மில்லர் - குல்தீப், ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்க அணியில் சுழற்பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடுவதில் கிளாசன், மில்லர் சிறந்த பேட்டர்கள். இந்திய அணியின் சுழல் மும்மூர்த்திகளான அக்ஸர் படேல், குல்தீப், ஜடேஜா மூவரும் இன்றைய ஆட்டத்தில் முக்கியத் துருப்புச் சீட்டுகள். கிளாசன், மில்லர் இருவருமே சுழற்பந்துவீச்சை எளிதாக விளையாடுவார்கள் என்றாலும், 3 பேரின் பந்துவீச்சும் வேறுபட்டவை என்பதால் சில சிரமங்கள் இருக்கக்கூடும். குறிப்பாக ஜடேஜா பந்துவீச்சில் கிளாசன் பெரிதாக ரன்களை சேர்த்தது இல்லை. ஜடேஜாவின் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே கிளாசன் சேர்த்துள்ளார். குல்தீப் பந்துவீச்சில் மில்லர் 24 பந்துகளில் 24 ரன் சேர்த்து இஇருமுறை விக்கெட்டையும் இழந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டை வீழ்த்துவதில் குல்தீப், ஜடேஜா முக்கியப் பங்கு வகிப்பார்கள். துபேவுக்கு பதிலாக சாம்ஸன் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிரமாதமாக ஆடுவார் எனக் கூறி அணியில் சேர்க்கப்பட்டு 37 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 2 முறை ஆட்டமிழந்துள்ளார். வேகப்பந்துவீச்சில் 62 பந்துகளில் 59 ரன்களை சேர்த்து பெரிய தாக்கத்தை துபே ஏற்படுத்தவில்லை. ஆதலால், இன்றை ஆட்டத்தில் நடுவரிசைக்கு ஸ்திரமான பேட்டர் தேவை என்பதற்காக துபேவுக்கு பதிலாக சாம்ஸனை களமிறக்கலாம் எனத் தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலிருந்து பெஞ்சில் இருக்கும் சாம்ஸனுக்கு இன்று வாய்ப்புக் கிடைக்கலாம். அதேபோல தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர் பார்ட்மேனுக்கு பதிலாக சம்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணிக்கு எதிராக சம்ஷி சிறப்பாக பந்துவீசக் கூடியவர் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார் என்பதால் சம்ஷி களமிறங்கலாம். வேகப்பந்துவீச்சுக்குச் சாதமாக ஆடுகளத்தில் சம்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பார்ட்மேன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் குறிப்பாக யார்க்கர் வீசுவதிலும், நல்ல லென்த்தில் பந்துவீசுவதிலும் சிறந்தவர் என்பதால், அவரை நிராகரிப்பது கடினம். கோலியின் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் கோலியின் ஃபார்ம் இந்தத் தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் கோலியின் பேட்டிங் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், கோலியின் ஆட்டத்தின் மீது கேப்டன் ரோஹித் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், இறுதிப்போட்டி வரை காத்திருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதலால் கோலியின் ஆட்டம் இன்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பைதான் கோலிக்கும், ரோஹித்துக்கும் ஏறக்குறைய கடைசியாக இருக்கக்கூடும். இதில் ஏதாவது தாக்கத்தை இருவருமே ஏற்படுத்த முயல்வார்கள் என்பதால் இருவரின் பேட்டிங் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி(உத்தேச வீரர்கள்) ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா தென் ஆப்ரிக்கா(உத்தேச வீரர்கள்) எய்டன் மார்க்ரம்(கேப்டன்), குயின்டன் டீ காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா, தப்ரியாஸ் சம்ஸி அல்லது பார்ட்மேன் https://www.bbc.com/tamil/articles/cw4y9nyzzj3o
-
இலங்கைக்கு வந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்
Published By: DIGITAL DESK 3 29 JUN, 2024 | 10:50 AM உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) வெள்ளிக்கிழமை (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 ஹெலிகொப்டர் (MI-17 helicopter) ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187234
-
குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
இந்த மனிதரின் கருத்து அந்த மண்ணின் மைந்தனின் கருத்து.
-
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
2026இல் விஜய் நாம் தமிழருடன் கூட்டணி அமைக்க திட்டமா? அவரது பேச்சு உணர்த்துவது என்ன? பட மூலாதாரம்,PTI கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், நல்ல தலைவர்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். அவரது இந்தப் பேச்சு தனித்துப் போட்டியிடும் அவரது விருப்பத்தை உணர்த்துகிறதா? நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்று கூறப்படும் நிலையில், இன்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் தெரிவித்த சில கருத்துகள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. விஜய் பேசியது என்ன? சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய விஜய், பொதுவான சில கருத்துகளைப் பேசியதோடு கவனிக்கத்தக்க சில விஷயங்களையும் குறிப்பிட்டுப் பேசினார். "தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு பணி வாய்ப்பாக ஏன் வரக்கூடாது? அப்படி வர வேண்டுமென்பதே என் விருப்பம்." "நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படியுங்கள். ஒரே செய்தியை வெவ்வேறு நாளிதழ்கள் வெவ்வெறு மாதிரி எழுதுவார்கள். எல்லாவற்றையும் பாருங்கள், படியுங்கள். எது உண்மை, எது பொய் என ஆராயுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத் தீமைகள் பற்றியெல்லாம் தெரிய வரும். அதைத் தெரிந்துகொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை நம்பாமல், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதைத் தெரிந்துகொண்டு, நல்ல தலைவர்களைத் தேர்வுசெய்யும் விசாலமான பார்வை வரும்." பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். "சமீப காலத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை, ஆளும் அரசு தவறவிட்டுவிட்டார்கள் என்று பேச வரவில்லை. அதற்கான மேடையும் இதுவல்ல. சில நேரங்களில் நம் வாழ்வை நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பேசியிருக்கிறார் விஜய். இதில் நல்ல தலைவர்கள் தேவை என அவர் குறிப்பிட்டது, ஊடகங்கள் மீதான அவரது விமர்சனம், போதைப் பொருளிலிருந்து காப்பது அரசின் கடமை என்பன போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் கவனிப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளாகியிருக்கின்றன. பட மூலாதாரம்,PTI விஜயின் பேச்சு குறித்து கருத்து கூறிய மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன், "அவரது பேச்சை வைத்துப் பார்த்தால், விஜய் தி.மு.கவுக்கு எதிரான மனநிலை தனக்கு இருப்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதுதவிர, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ராகுல் காந்தி, திருமாவளவன், சீமானுக்கு வாழ்த்து சொன்னவர், தமிழ்நாட்டில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்ற கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சொல்லவில்லை.’’ ’’ஆனால், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என நினைப்பவர், ஆளும் கட்சியை எதிர்த்துத்தான் அரசியல் செய்ய முடியும். இருந்தபோதும், மக்கள் பிரச்னைக்கு அவர் எப்படி, எவ்வளவு தீவிரமாகச் செயல்படுவார் என்பதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானமாகும்," என்கிறார். நாம் தமிழருடன் கூட்டணியா? இதற்கிடையில், தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதைக் கோடிட்டு காட்டும் வகையில் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளிடம் கேட்டால், இதெல்லாம் மிகவும் ஆரம்பக் கட்டம் என்கிறார்கள். "வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகள்தான் தனித்து நிற்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எங்கள் அனுபவம் தேவைப்படலாம். எங்களுக்கும் துடிப்புமிக்க இளைஞர்களின் கூட்டு தேவைப்படுகிறது. ஆகவே, இரு பிரிவினரும் எதார்த்தமாகவே நெருக்கமாக இருக்கிறோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்," என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பொறுப்பாளரான பாக்கியராசன். பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதிமுகவும் அந்தக் கூட்டணியில் ஆர்வம் காட்டக்கூடும் என்கிறார் குபேந்திரன். "விஜய்யின் பிறந்தநாளுக்கு பலத்த வாழ்த்துகளைச் சொல்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. கள்ளக்குறிச்சிக்கு விஜய் சென்றதற்கு வாழ்த்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டும் என்ற தவிப்பில் உள்ள அதிமுகவுக்கு விஜய் நிச்சயம் தேவைப்படுவார்." ஆனால், "அப்படி ஒரு கூட்டணிக்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது தெளிவாகவில்லை. அந்தக் கூட்டணியில் சீமான் இருப்பாரா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்து முதல்வர் யார் என்பதுவரை மூன்று தரப்புமே இறங்கிவர வேண்டியிருக்கும்" என்கிறார் குபேந்திரன். நாம் தமிழர் வட்டாரங்களில் வேறு ஒரு விஷயத்தையும் சொல்கிறார்கள். அதாவது சமீபத்தில் விஜய்யும் சீமானும் சந்தித்துப் பேசியதாகவும் வேறு சிலரையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம் என விஜய் கூறியதாகவும் தேர்தல் நெருக்கத்தில் அதை முடிவு செய்யலாம் என சீமான் கூறியதாகவும் சொல்கின்றனர். பட மூலாதாரம்,NAAM TAMILAR ஆனால், இதற்கெல்லாம் முற்றிலும் மாறான ஒரு கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். "விஜய்யை பொறுத்தவரை தனித்துக் களம் காணவே விரும்புவார். அவர் முதல் முறையாகக் களமிறங்குவதால் தனது வாக்கு வங்கியின் பலத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவார். சீமானை பொறுத்தவரை அவரது வாக்கு வங்கி பத்து சதவீதத்திற்குக் கீழேதான் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதை உயர்த்த மிகுந்த முயற்சியும் காலமும் தேவை. ஆகவே கூட்டணி அமைக்க விரும்புகிறார்," என்று தெரிவிக்கிறார் அவர். மேலும், "வரவிருக்கும் 2026 தேர்தல் களம் தி.மு.கவுக்கு எதிரானது. பா.ஜ.க. இன்னொரு கூட்டணியாக இருக்கும். அந்த இரண்டிலும் சீமான் இடம்பெற முடியாது. எனவே, அதிமுக., விஜய்யுடன் இணைந்து களம் அமைக்க அவர் விரும்பலாம். ஆனால், விஜய் தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகம். தன்னுடைய இன்றைய பேச்சில் விஜய் அதைத்தான் உணர்த்தியிருக்கிறார். அதாவது, நல்ல தலைவர்கள் தேவை என்கிறார். இப்போதுள்ள தலைவர்களை விட்டுவிட்டு, அத்தகைய நல்ல தலைவராக வர அவர் விரும்புகிறார் என்பதைத்தான் அது சுட்டிக்காட்டுகிறது. 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதெல்லாம் தெளிவாகும்," என்கிறார் ஷ்யாம். விஜய் தரப்பைப் பொறுத்தவரை வேறு சில கணக்குகளும் இருக்கின்றன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளின் மொத்த சதவீதம் சற்று குறைந்து, நாம் தமிழர், பாஜக ஆகியவை குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கும் அவர்கள், இரு திராவிடக் கட்சிகளும் இழக்கும் வாக்குகளின் பெரும்பகுதியைப் பெற நினைக்கிறார்கள். இது தவிர, விஜய் களத்தில் இறங்கினால், பட்டியலின, சிறுபான்மையினர் வாக்குகளும் திராவிடக் கட்சிகளிடமிருந்து தங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறார்கள். இதுதவிர, GOAT படம் வெளியான பிறகு, தீவிர அரசியலை விஜய் கையிலெடுப்பதோடு, மாநாடு ஒன்றையும் நடத்தக்கூடும் என்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/ce78d1x97pgo
-
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு
Published By: VISHNU 28 JUN, 2024 | 09:44 PM முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் "இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி - இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது. இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார். இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார். யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது. உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார். அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார். அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும். அவரின் சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். "Old soldiers never die they fade away.In this instance he wont fade away either, so he is still there." என்ற வகையில் எதிர்காலத்தில் அவரிடத்திலிருந்து பெறக்கூடிய சேவையை பெற்றுக்கொள்ள நாட்டுக்கு சந்தர்ப்பம் கிட்டுமென நான் நம்புகிறேன். தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார். அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்." என்றும் தெரிவித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா "படையினரின் அர்ப்பணிப்பின் பலனாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பெருமளவானவர்கள் அங்கவீனமடைந்தனர். அதற்கான கௌரவத்தை அனைத்து இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும் தெரிவிக்கிறேன். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோல் நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்தினர். யுத்தத்தை நிறைவு செய்ய அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென பலரும் கூறினர். நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற வேளையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கவலையுடனேயே இருந்தனர். இருப்பினும் நாம் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால் அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்யப்படாதிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் பின்னர் இந்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தனரா என்பது கேள்விக்குரியாகும்." என்றும் தெரிவித்தார். மகா சங்கத்தினர் தலைமையிலான ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும், தூதுவர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், அனோமா பொன்சேகா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/187221
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் 28 JUN, 2024 | 06:08 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் சந்தேக நபரான மருந்துகள் விநியோக பிரிவின் அதிகாரியொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187206
-
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
பட மூலாதாரம்,PTI 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் இல்லை,” என்றும், “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,” என்றும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். மேலும், போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், சில விஷயங்களிலிருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். விஜய்யின் இப்பேச்சு தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜய் சொன்ன கருத்துகள் பொதுவான வாதமாக இருப்பதாகவும் நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்றும் தி.மு.க-வினர் கூறிவருகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான், இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விஜய் உரையின் சிறப்பம்சங்கள் பட மூலாதாரம்,VIJAY / INSTAGRAM வாழ்க்கையில் நாம் என்னவாக போகிறோம் என்பது குறித்த தெளிவு பலருக்கும் இருக்கலாம். ஆனால், சில மாணவர்களுக்கு எந்த துறையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில் தொய்வு இருக்கலாம். எல்லா துறையும் நல்ல துறைதான், அதில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் 100% உழைப்பை செலுத்தினால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசியுங்கள். பொறியியல், மருத்துவம் மட்டுமே நல்ல படிப்பு இல்லை. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். அரசியலும் ஏன் ஒரு துறையாக வரக்கூடாது? அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா?” என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததையடுத்து, “உங்களின் ஆர்வம் புரிகிறது, இப்போதைக்குப் படியுங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார். மறைமுகமாகவே நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் எனக்கூறிய விஜய், ஒரு செய்தியை பல செய்தித்தாள்கள் எப்படி வெவ்வேறு விதமாக கையாள்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். சமூக ஊடகங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கின்றனர். அதையெல்லாம் படியுங்கள், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னைகள் உள்ளன, சமூகத் தீமைகள் குறித்து உங்களுக்குத் தெரியும். சில கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை கிடைக்கும். அதுதான் சிறந்த அரசியல், என்றார். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களை காப்பாற்றுவது அரசின் கடமை, இப்போது ஆளும் அரசு அதைத் தவற விட்டுவிட்டார்கள் என்பதை நான் பேச வரவில்லை, அதற்கான மேடையும் இதுவல்ல. சில சமயங்களில் அரசாங்கத்தைவிட நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, ‘Say No to Temporary pleasure, Say No to drugs’ என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொன்னார் விஜய். தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நினைத்த மதிப்பெண்களை பெற முடியாதவர்கள் விரக்தி அடைய வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கக் கற்றுக்கொண்டால், தோல்வி நம்மிடம் வருவதற்கு பயப்படும். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல, என்றார். சீமான் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/ நாம் தமிழர் கட்சி படக்குறிப்பு,சீமான் ‘தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்’ என்றும், ‘போதைப் பழக்கம்’ குறித்தும் விஜய் பேசியது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “விஜய் யாரைச் சொல்கிறார் எனத் தெரிந்தால்தான் பதில் சொல்ல முடியும். போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது என விஜய் கூறியிருப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இது பொதுவான குற்றச்சாட்டு. தமிழ்நாடு கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தேசியச் சராசரியைவிட அதிகமாக உள்ளது,” என தெரிவித்தார். மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக விஜய்க்கு வரவேற்பு அளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை-பணக்காரர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் விஜய்க்கு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார். விஜய்யின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய சீமான், விஜய்யை பலரும் எதிர்த்தபோது தான் தொடர்ந்து பல நேரங்களில் அவருக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார். அப்போது, இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டபோது, “எடுத்துக்கொள்ளலாம்,” என சீமான் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c4nge1dkd2xo
-
மாலைத்தீவு ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது!
மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/304756
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளவிருக்கும் ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ - ஏன்?
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது. கடந்த புதன்கிழமை (ஜூன் 26), இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியானது. ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-இல் துவங்கப்பட்டன. மேலும் 2000-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் துவங்கியது. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும், இந்த விண்வெளி நிலையம் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் பூமியை முழுவதுமாகச் சுற்றி வருகிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது. மனிதர்களுக்கு வயதாகும் செயல்முறை முதல், புதிய வகை பொருட்களுக்கான சூத்திரம் வரை பலவிதமான முக்கியத் தலைப்புகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான அறிவியல் சோதனைகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நிலவுக்கு அருகில் விண்வெளி நிலையத்தை உருவாக்க ஐ.எஸ்.எஸ் கூட்டாளிகள் தயாராகி வருகின்றனர் ‘தானே பூமியின் மேல் விழக்கூடும்’ பொறியாளர்களின் கூற்றுப்படி, ஐ.எஸ்.எஸ் ஆய்வகத்தின் கட்டமைப்பு இன்னும் அப்படியே நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்காலத் திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும். எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து, பூமியில் உள்ள மக்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும். "ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் சமயத்தில், அதனை குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் தரையிறக்க நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு அமெரிக்க டி-ஆர்பிட் (US De-orbit) வாகனம் உதவும்," என்று நாசாவின் விண்வெளிச் செயல்பாடுகளுக்கான இயக்குநர் கென் போவர்சாக்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் "இந்த முடிவு நாசாவின் எதிர்கால வணிகத் திட்டங்களை ஆதரிக்கும், பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியின் பகுதியைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது," என்றும் கூறினார். ஐ.எஸ்.எஸ் திட்டத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வழிநடத்துகின்றன. ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் துணைப் பாத்திரங்களை வகிக்கின்றன. ரஷ்யா குறைந்தபட்சம் 2028-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஈடுபடும் என்று கூறினாலும், மேற்கத்திய பங்காளிகள் அனைவரும் 2030-ஆம் ஆண்டு வரை நிலையத்திற்கு நிதியளிக்க உறுதிபூண்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது பசிபிக் கடலில் விழவிருக்கும் விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடியும் போது அதனை அகற்றுவதற்கான (end-of-life disposal) பல்வேறு வழிகளை நாசா இதுவரை ஆய்வு செய்துள்ளது. விண்வெளி நிலையத்தைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அதில் புதிய கூறுகளை இணைத்து எதிர்காலத்திற்கான ஒரு தளமாக ஒருங்கிணைக்கத் திட்டமிட்டது. மற்றொரு யோசனை என்னவென்றால், அதை இயக்க மற்றும் பராமரிக்க ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைசர்வதேச தேர்ந்தெடுத்துப் பொறுப்பை வழங்க வேண்டும். ஆனால் இந்த தீர்வுகள் அனைத்தும் சிக்கலானவை. செலவும் அதிகம். அத்துடன், உரிமை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதில் சட்டரீதியான சவால்களும் உள்ளன. நாசாவோ அல்லது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமோ டி-ஆர்பிட்டிங் இழுவைப் படகு (டக் போட் - tug boat) வடிவமைப்பின் விவரங்களைத் தற்போதுவரை வெளியிடவில்லை. ஆனால் சரியான இடத்தில் மற்றும் சரியான நேரத்தில் வளிமண்டலத்தில் நிலையத்தைப் பாதுகாப்பாக வழிநடத்தி மாற்றுவதற்கு கணிசமான உந்துதல் தேவைப்படும். விண்வெளி தளத்தின் பெரிய நிறை மற்றும் அளவு தோராயமாக ஒரு கால்பந்து ஸ்டேடியத்தின் அளவு இருக்கும். எனவே அதன் சில கட்டமைப்புகள் மற்றும் கூறுகள்பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு, பூமிப்பரப்பினை வந்தடையும். இந்தப் புதிய திட்டத்தின் கருவிகள் ஐ.எஸ்.எஸ் விண்வெளி மையச் சுற்றுப்பாதையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இயற்கையாகவே சிதைக்க அனுமதிக்கும். மேலும், கடைசி குழுவினரை வெளியேற்றிய பிறகு, இறுதி டி-ஆர்பிட் திட்டத்தை செயல்படுத்த இழுவைப் படகுக்கு (tug boat) கட்டளையிடப்படும். தேவையற்ற விண்கலங்கள், 'பாயிண்ட் நீமோ’ எனப்படும் பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இடத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இங்கு தான் அவை அழிக்கப்படுகின்றன. 'நீமோ’ என்னும் பெயர், எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னின் '20,000 லீக்ஸ் அண்டர் தி சீ’ புத்தகத்தில் உள்ள புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் மாலுமியின் பெயர் ஆகும். விண்கலங்களுக்கான இந்தக் 'கல்லறை’ அருகிலுள்ள நிலத்திலிருந்து 2,500கி.மீ. தொலைவில் உள்ளது. ஐ.எஸ்.எஸ் விண்ணில் இருந்து வெளிவருவதற்குள் பல தனியார் கூட்டமைப்புகள் வணிக விண்வெளி நிலையங்களைத் துவங்கும் என்று நாசா நம்புகிறது. விண்வெளி அமைப்புகள், சந்திரனைச் சுற்றி வரும் கேட்வே பிளாட்பார்ம் அமைப்பதற்கான திட்டத்தில் தங்கள் முயற்சிகளை மீண்டும் கவனம் செலுத்தும். https://www.bbc.com/tamil/articles/cw5yx9vkwk7o
-
அமெரிக்காவின் 248 வது சுதந்திர தின நிறைவை கொண்டாடிய அமெரிக்கத் தூதரகம்
28 JUN, 2024 | 06:06 PM கோல் ஃபேஸ் ஹொட்டேலில் ஜூன் 27ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் ஏற்பாடு செய்த ஒரு கொண்டாட்ட வைபவத்துடன் அமெரிக்க சுதந்திரத்தின் 248ஆவது ஆண்டு நிறைவை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. புகழ்பெற்ற இலங்கை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக, சிவில் சமூக மற்றும் ஊடகத்துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன், இவ்வைபவத்தின் பிரதம விருந்தினரான சுற்றுலா, காணிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அமெரிக்கத் தூதுவர் வரவேற்றார். நீண்டகாலம் நிலைத்திருக்கும் ஜனநாயக உணர்வையும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வலுவான பங்காண்மையினையும் இவ்வருட அமெரிக்க சுதந்திரக் கொண்டாட்டம் எடுத்துக்காட்டியது. ஜனநாயகம் மற்றும் அதன் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான பங்காண்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங், “இன்றிரவு நாம் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் எமது ஜனநாயகத்தின் பிறப்பையும் கொண்டாடுவது மாத்திரமன்றி, 248 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜனநாயக இலட்சியங்களை நிலைநாட்டுவதற்கான நீடித்த போராட்டம் மற்றும் அதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்பன தொடர்பாகவும் சிந்திக்கிறோம், ஜனநாயகத்தில் அமெரிக்காவின் சோதனை எவ்வாறிருக்கும் என்பது பற்றி அப்போது எதுவும் நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. எமது கொள்கைகள், அபிலாஷைகள் மற்றும் தொலைநோக்கு என்பன தொடர்பான ஒரு துணிச்சலான அறிக்கையுடன் நாம் எமது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினோம். இந்த உண்மைகள் வெளிப்படையானவை என நாங்கள் வெளிப்படுத்துகிறோம். எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை படைத்தவரால் சில மறுக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்வுரிமைகளுள் உயிர் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை மற்றும் மகிழ்ச்சியினை நாடிச் செல்வதற்கான உரிமை என்பனவும் அடங்குகின்றன. இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்து தமக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்ற அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் இந்தப் பிரகடனத்துடன் ஆரம்பித்து அரசியலமைப்பு உருவாக்கத்துடன் முடிவடையவில்லை. ஜனநாயகம் நிலையான ஒரு நிலை அல்ல; அது ஒரு செயல்முறையாகும். அடிப்படைக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புகளை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் செயல்முறையாகும். ஒரு தேசம் ஸ்தாபிக்கப்பட்டதை மட்டும் நாம் இன்றிரவு நினைவுகூரவில்லை. மாறாக எம்மையும் அமெரிக்க-இலங்கை பங்காண்மையினையும் வரையறை செய்யும், நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒற்றுமை உணர்வையும் சுதந்திர உணர்வையும் நாம் நினைவுகூருகிறோம்" என தூதுவர் சங் மேலும் கூறினார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இருதரப்பு உறவுகள் மற்றும் அதை விட அதிக காலமாக காணப்படும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றுடன் இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் பல விடயங்களில் எமக்கிடையே காணப்படும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் மற்றும் நலன்களையும் மேம்படுத்தி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையானது தொடர்ந்து பலமடைகிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், மக்களிடையே தொடர்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கல்வி மற்றும் ஆங்கில மொழியினைக் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடு கடந்த அச்சுறுத்தல்களை முறியடித்தல் போன்ற பரப்புகளில் இலங்கையுடனான பங்காண்மையினைப் பேணுவதில் அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டினை 2024 சுதந்திர தின கொண்டாட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முன்னோக்கிப் பார்க்கையில், எதிர்காலத்தில் இன்னும் பலமான ஒரு அமெரிக்க-இலங்கை உறவை கட்டியெழுப்புவதற்கான ஒரு தொலைநோக்கினை பிரதிபலிக்கும் வகையில் இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் தமது ஒத்துழைப்பை ஆழப்படுத்தவுள்ளன. "American Neighborhood Block Party" எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வானது அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறுவதைப் போன்ற பண்டிகைக் கால கொண்டாட்டத்தினை இங்கே கொழும்பில் மீளுருவாக்கம் செய்தது. இதில் அமெரிக்கா முழுவதும் இடம்பெறும் ஜூலை 4ஆம் திகதிய கொண்டாட்டங்கள் மற்றும் மிகச் சிறந்த அமெரிக்காவுக்குரிய விளையாட்டுக்கள் ஆகியவற்றின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறும் ஒரு பொதுவான விருந்தின் சமூகத்தை மையமாகக் கொண்ட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது விருந்தினர்களை துடிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒழுங்கமைப்பில் ஒன்றிணைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வழங்கியது. இந்த சிறப்பு நிகழ்வின் ஆனந்தம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு சான்றாக, Galle Face Greenஇல் இடம்பெற்ற ஒரு வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் சமூக ஊடகப் பக்கங்களில் எம்மைப் பின்தொடரவும்: முகநூல் https://www.facebook.com/USEmbassyColombo, இன்ஸ்டகிராம் https://www.instagram.com/usembassycolombo, அல்லது ட்விட்டர் https://twitter.com/USEmbSL. அமெரிக்க சுதந்திரத்தின் 248 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங். ஜூலை 4 கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் விருந்தினர்கள். அமெரிக்கக் கொடியினை வைபவ ரீதியாக அமெரிக்கத் தூதுவரிடம் வழங்கும் அமெரிக்க மரைன் படையினர். அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தானதன் 248ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் விருந்தினர்களுடன் உரையாடும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங். https://www.virakesari.lk/article/187201
-
இலங்கையில் பறவைக் காய்ச்சல் தொற்று?
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 04:43 PM பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடையாளம் காணப்பட்ட நபர் வெளிநாட்டை சேர்ந்த ஆண் ஒருவராவார். பிசிஆர் பரிசோதனையில் இன்ப்ளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. அவற்றில் ஒரு விகாரகம் H5N1ஆகும். https://www.virakesari.lk/article/187196
-
மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”அரசாங்கம் சர்வதேச நாடுகளை ஏமாற்றியதைப் போன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகின்ற தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/304753
-
தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா?
படக்குறிப்பு,தனது மனைவியுடன் பள்ளி ஆசிரியர் மாணிக்கம். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 ஜூன் 2024 திருமணத்திற்கு பின் மணமகள் மணமகன் வீட்டோடு சென்று வாழும் வழக்கம் இன்று தமிழ்ச் சமூகத்தில் பரவலாக காணப்படும் ஒன்று. ஆனால், தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ஆண்கள் தங்கள் மனைவியின் வீட்டுக்கு சென்று 'வீட்டோடு மாப்பிள்ளையாக' வாழ்கின்றனர். இப்படிப்பட்ட கிராமம் எங்கே இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? தூத்துக்குடி மாநகரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் சுற்று வட்டார தொலைவில் அமைந்துள்ள சிவகளை, செக்காரக்குடி, புதூர், தளவாய்புரம், பொட்டலூரணி, முடிவைத்தானேந்தல், கூட்டுடன்காடு, செட்டியூரணி, வர்த்தகரெட்டிபட்டி, ஏரல், சொக்கலிங்கபுரம், பணகுளம், பாண்டியபுரம், தட்டப்பாறை, ராமச்சந்திரபுரம், உட்பட 16 கிராமங்களில் வாழும் நன்குடி வேளாளர் சமூக மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். யார் இந்த நன்குடி வேளாளர்? நன்குடி வேளாளர் சமூகத்தினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவாகும். தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்றனர். நன்குடி வேளாளர் சமூகத்தினரை சிவகளைப் பிள்ளைமார் எனவும் அழைக்கிறார்கள். பெண்களுக்கு சொத்துரிமை நன்குடி வேளாளர் சமூகத்தில் பெண்களுக்கு எல்லா விசயங்களிலும் சம உரிமை உண்டு. அரசாங்கம் பெண்களுக்கும் சொத்துரிமை தருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'வீடு, நன்செய், புன்செய்' போன்றவை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆண், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் எந்த பாகுபாடும் இல்லை என்றாலும் கூட, பெண் குழந்தைகளே பெற்றோருடன் ஆயுள் முழுவதும் வசிப்பார்கள் என்பதால் இயல்பாகவே, அவர்கள் சற்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்த சமூகத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கப்படி, திருமணத்தன்று மணமகள் வீடு வரும் மணமகன் தொடர்ந்து அங்கேயே தங்கி பெண் வீட்டாரில் ஒருவராக ஆயுள் முழுவதும் இணைந்து விடுவார். மணமகளின் பெற்றோர்களும் அவரை, 'மரு'மகனாக ஏற்றுக் கொள்வதோடு தங்களது முதுமை காலம் வரை மகள் குடும்பத்துடன் வசிப்பார்கள். வித்தியாசமான திருமண சடங்குகள் நன்குடி வேளாளர் சமூகத்தினர் திருமணத்தில் கடைபிடிக்கும் சடங்குகள் வித்தியாசமானவை. பெண் வீட்டாரே மாப்பிளை கேட்டுச் செல்வார்கள். முகூர்த்தப்பட்டு, திருமாங்கல்யம் பெண் வீட்டாரே வாங்கிக்கொள்ர். பரிசப்பட்டு மட்டுமே மணமகன் வீட்டார் கட்டுவர். 'பொன் உருக்குவது' 'முகூர்த்தக்கால் நடுவது' போன்றவையெல்லாம் பெண் வீட்டில் நடைபெறும். திருமண நாளன்று மாப்பிளையை இன்றும் யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவார்கள். பெண்கள் பெருமிதம் வெளியூர் மக்கள் எங்கள் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சர்யப்படுவதாக கூறுகிறார் நன்குடி வேளாளர் சமூகத்தை சேர்ந்த மூதாட்டி முத்தம்மா சேரந்தையன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தலைமுறைதலைமுறையாக நாங்கள் சிவகளை கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தில் பல தலைமுறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் நடைபெறும். மணமகள் இல்லத்தில் தான் திருமணம் நடைபெறும். மணமகன் மறுவீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மருமகள் வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து விடுவார். ஒரு வீட்டில் குலவைச் சத்தம் கேட்கிறது என்றால் அந்த வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையை தொட்டிலில் போடும் போது குலவைச் சத்தம் எழுப்புவோம். உரத்த குலவைச் சத்தமாக இருந்தால் அங்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்" என்கிறார். படக்குறிப்பு,முத்தம்மா சேரந்தையன் மேலும், "அதற்காக ஆண் குழந்தையை விரும்பவில்லை என அர்த்தம் கிடையாது. பெண் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள் என்பதாலோ என்னவோ பெண் பிள்ளைகள் மீது பிரியம் சற்று அதிகம். எங்கள் சமூகத்திற்கு என்று தென்னவன் கிளை, கேளரன் கிளை, திருவெம்பு கிளை, திருமால் கிளை, கன்றெறிந்தான் கிளை, நாராயணன் கிளை, காங்கேயன் கிளை, காளியார் கிளை என 8 பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அதே பிரிவைச் சேர்ந்தவர்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்வதில்லை. மாற்றுக் கிளையைச் சேர்ந்தவர்களுடன் தான் மகனுக்கோ, மகளுக்கோ மணம் முடிப்போம்" என்கிறார் சிவகளையை சேர்ந்த முத்தம்மா சேரந்தையன். "ஆண்களின் சுதந்திரம் பாதிக்கிறது" வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் தனது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார் சிவகளையை சோந்த பள்ளி ஆசிரியர் மாணிக்கம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எங்கள் ஊரில் வசிக்கும் அனைவருமே வீட்டோடு மாப்பிள்ளை தான். எனக்கு வயது 48 ஆகிறது எனக்கு திருமணம் ஆகி 28 ஆண்டுகள் ஆகிறது. "எனது முன்னோர்கள் இந்த வழக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள் அவர்களுக்கு அது ஏதுவாக இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இந்த வீட்டோடு மாப்பிள்ளை வழக்கத்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக நான் உணர்ந்தேன்" என்றார். படக்குறிப்பு,பள்ளி ஆசிரியர் மாணிக்கம் "காரணம் எனது வீட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் எனது மனைவியின் தந்தை அதாவது எனது மாமனார் எடுத்து வந்தார். நான் ஒரு வீட்டிற்கு வாழ சென்றதால் அந்த வீட்டின் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் என்னால் வெகுநாளாக மாற முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்" என்கிறார். "ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எனது மகள் திருமணமாகும் நிலையில் உள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அவர் என்னுடன் கடைசி காலம் வரை வாழ்வார் என்பதை நினைக்கும் போது வீட்டோடு மாப்பிள்ளை என்ற வழக்கம் எனக்கு இப்போது மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது" என கூறுகிறார் பள்ளி ஆசிரியர் மாணிக்கம். 2K கிட்ஸ்-களுக்கு இந்த வழக்கம் எப்படி இருக்கிறது? 'ஆண் நண்பர்கள் கேலி செய்வார்கள், அதே வேளை பெண் நண்பர்கள் எங்கள் கிராமத்தில் பிறக்கவில்லையே என நினைத்து ஏங்குவார்கள்' என்கிறார், சமீபத்தில் திருமணமான சிவகளையை சேர்ந்த வங்கி மேலாளர் சுப்பையா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என்னுடைய சொந்த ஊர் வாழ்வியல் குறித்து என் நண்பர்களுடன் விவாதிக்கும் போது ஆண் நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் பெண் நண்பர்களை பொருத்தவரை, இந்த முறை மிக வித்தியாசமாக இருந்தாலும் 'நாங்கள் உங்கள் கிராமத்தில் பிறக்காமல் போய் விட்டோமே' என மிகுந்த ஏக்கத்துடன் என்னிடம் பல முறை சொல்லியுள்ளனர்" என தெரிவிக்கிறார். படக்குறிப்பு,வங்கி மேலாளர் சுப்பையா மேலும் பேசிய அவர், "அவ்வாறு கூறும் பெண் நண்பர்கள் திருமணம் முடிந்து பெற்றோரை விட்டு கணவன் வீட்டுக்கு செல்வதால் தங்களது அனைத்து சுதந்திரமும் பறிபோவதாக உணர்வதாக தெரிவிக்கின்றனர். முதலில் என்னை கேலி செய்த ஆண் நண்பர்கள் தற்போது எனக்கு திருமணமாகி ஆறு மாத காலம் ஆன நிலையில் என்னுடைய வாழ்வியல் முறையை பார்த்து ஆண்கள் இப்படியும் பெண் வீட்டாரின் சூழலுக்கு ஏற்றாற் போல் வாழ முடியுமா என ஆச்சர்யப்படுகின்றனர். என் தாத்தா, எனது அப்பா, தற்போது நான், அடுத்து வரும் தலைமுறை என அனைவரும் இதே வழக்கத்தை பின்பற்றி தான் வாழ்வோம். எங்கள் கிராமத்தின் வாழ்வியல் என்பது எங்கள் அடையாளம். இதில் தான் எங்களது மகிழ்ச்சியும் கௌரவம் அடங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார் சுப்பையா. https://www.bbc.com/tamil/articles/c6ppprzz16lo
-
இணைய மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 117 பேர் கைது! 28 JUN, 2024 | 03:13 PM நாட்டில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் நீர்கொழும்பு - கொச்சிக்கடை, தலங்கம மற்றும் மடிவெல பிரதேசங்களில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி, தலங்கம - ஹெயினடிகும்புர பகுதியில் உள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 19 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 09 மடிக்கணினிகள் மற்றும் 59 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் . நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை நடத்திய போது, மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 40 கணினிகள், நிதி மோசடிக்குப் பயன்படுத்திய 38 கையடக்கதொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பின்னர், மடிவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும், கொச்சிக்கடை பொருதொட்ட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையச் சூதாட்ட மோசடி இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187164