Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றேன் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 03:36 PM இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாராவின் முகத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவரை தேடி வந்த காலப்பகுதியில் “ஜாஃப்னா சுரேஷ்” என்பவருக்கு தக்ஷி என்ற பெண் அறிமுகமானதாகவும், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. தக்ஷி என்ற பெண்ணுக்கு பெரிதளவு சிங்கள மொழி தெரியாததால் அவருக்கு எதுவும் கூறாமல் அவரை நேபாளத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனையடுத்து இஷாரா செவ்வந்தி கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்த இடத்தை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/228205
  2. டிரம்புக்கு எதிரான 'நோ கிங்ஸ்' போராட்டம் - அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சனிக்கிழமை நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கட்டுரை தகவல் ஆண்டனி ஜுர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற "நோ கிங்ஸ்" போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்க இடதுசாரிகளுக்கு தேசிய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் இந்தப் போராட்டங்கள் ஜனநாயக கட்சியினர், தாராளவாதிகள் மற்றும் டிரம்ப் எதிர்ப்பு குடியரசு கட்சிக்காரர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்தனர். போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? சனிக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டங்களில் சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற பெருநகரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. ஜூன் மாதம் நடைபெற்ற "நோ கிங்ஸ்" பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சியது. குடியரசு கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த சில ஆளுநர்களும் தங்களின் மாகாணங்களில் வன்முறை ஏற்படலாம் எனக் கருதி காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் இந்த பெருந்திரளான பேரணி வன்முறையாக அல்லாமல் கொண்டாட்டமாக அமைந்தன. நியூயார்க் நகரில் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை, வாஷிங்டனில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். பட மூலாதாரம், LightRocket via Getty Images படக்குறிப்பு, தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. "இந்த நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற எந்தப் போராட்டத்தையும் விட அதிக அளவிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நாம் சுதந்திரமானவர்கள், நம்மை யாரும் ஆள முடியாது, நமது அரசு விற்பனைக்கு கிடையாது என்பதை அமெரிக்க மக்கள் உரக்கச் சொல்கிறார்கள்." என்று வாஷிங்டன் பேரணியில் கலந்து கொண்ட கனக்டிகட் செனடர் கிறிஸ் மர்ஃபி தனது உரையில் தெரிவித்தார். நோ கிங்ஸ் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் அபிகெய்ல் ஜேக்சன், "யார் கவலைப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்தார். டிரம்ப் கிரீடம் அணிந்து ஜெட் விமானத்தை ஒட்டியபடி போராட்டக்காரர்கள் மீது மனித கழிவுகளைக் கொட்டுவதைப் போல அந்த காணொளி அமைந்துள்ளது. இந்தப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை குடியரசுக் கட்சியினர் குறைத்துப் பேசி வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் கருத்துக் கணிப்பில் சரிந்து வரும் டிரம்புக்கான ஆதரவும் ஜனநாயக கட்சி கடந்த தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஜனநாயக கட்சியின் நிலை என்ன? கருத்துக் கணிப்புகளில் மூன்றில் ஒருவர் மட்டுமே ஜனநாயக கட்சியை சாதகமாகப் பார்க்கின்றனர், கடந்த சில தசாப்தங்களில் இது மிகவும் குறைவே. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் எவ்வாறு டிரம்புக்கு வலுவான எதிர்ப்பை வழங்க முடியும் ஜனநாயக கட்சிக்காரர்களும் குழம்பிப் போய் உள்ளனர். தாராளவாதிகள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் தீவிரமான குடியேற்ற கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரசாங்க நிதி ரத்து, வெளியுறவு கொள்கை, அமெரிக்க நகரங்களில் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்புவது மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவது போன்றவைகளுக்காக எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜனநாயக கட்சி தலைவர்களும் விமர்சிக்கப்பட்டனர். "நாங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம், அதனால் வெளிப்படையாக பேசவில்லை. நாங்கள் அனைவரையும் தாக்கிப் பேச வேண்டும் என நினைப்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அது எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது." என போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்தார். தற்போது நான்காவது வாரத்தை நெருங்கியுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை ஜனநாயக கட்சிக்காரர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மத்திய அரசின் செலவீனங்களுக்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். . ஏனெனில், இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாக இருக்கும் வருமானம் குறைந்த அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளுக்கு தீர்வுகாண இருதரப்பு ஒப்பந்தம் இல்லாமல் காலநீட்டிப்பு வழங்க மறுத்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் சிறுபான்மையில் இருந்தாலும் சில செனட் நாடாளுமன்ற விதிகளின்படி அவர்களுக்கு இன்னும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. மக்கள் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியையே குற்றம்சாட்டி வருகின்றனர். யாருக்கு அழுத்தம் ஆனால் இந்த உத்தியில் சில சவால்களும் உள்ளன. நிர்வாக முடக்கத்தால் ஜனநாயக கட்சியினருக்கு ஏற்படும் பிரச்னைகள் இனிவரும் வாரங்களில் அதிகரிக்கவே செய்யும். பல மத்திய அரசு பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வருமானம் குறைந்தவர்களுக்கான உணவு திட்டத்திற்கான நிதியுதவியும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. அமெரிக்க நீதித்துறையும் தங்களின் வேலைகளை குறைத்துக் கொண்டுள்ளது. இந்த முடக்கத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து மத்திய அரசு பணியாளர்களை பணிநீக்கம் செய்வது மற்றும் செலவுகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் செனட்டில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழியைக் கண்டடைய வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை நிறைவேற்றுவது அவர்களுக்கும் கடினமாக இருக்கும். "நாங்கள் டிரம்புடன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த வாரமே அவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை ரத்து செய்வதையும் பொது சுகாதார நிதிகளை ரத்து செய்வார். அதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை." என வெர்ஜினியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் செனடரான டிம் கெய்ன் என்பிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால் அதை மாற்றவே கூடாது என்கிற ரீதியிலான ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்காவில் மத்திய அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது சில மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. மாகாணங்கள் சட்டசபை மற்றும் ஆளுநருக்கான தேர்தல்கள், "நோ கிங்ஸ்" போராட்டத்தில் வெளிப்பட்ட டிரம்ப் எதிர்ப்பு மனநிலை ஜனநாயக கட்சியினருக்கு தேர்தல் வெற்றியாக மாறுகிறதா என்பதற்கான முன்னோட்டத்தை வழங்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜினியா மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் வென்றார். இந்த மாகாணம் அதற்கு முந்தைய அதிபர் தேர்தலில் இடதுசாரி சார்பு கொண்டதாக இருந்தது. இங்கு குடியரசு கட்சியின் வெற்றி அப்போதைய அதிபர் ஜோ பைடன் மீதான அதிருப்தியின் ஆரம்பக்கட்ட வெளிப்பாடாக இருந்தது. இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிகெய்ல் ஸ்பான்பெர்கர், கருத்துக்கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளரை விட முன்னணியில் இருக்கிறார். கடந்த அதிபர் தேர்தலில் நியூ ஜெர்சி மாகாணத்தில் 6% வித்தியாசத்திலே டிரம்ப் தோற்றார். ஆனால் இந்த வித்தியாசம் 2020-இல் பைடன் (16%) மற்றும் 2016-இல் ஹிலாரி க்ளிண்டன் (14%) போட்டியிட்ட போது இருந்த நிலையிலிருந்து கணிசமாக குறைந்துள்ளது. இங்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளுநர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. நியூ ஜெர்சியில் நடைபெற்ற நோ கிங்ஸ் பேரணியில் பேசிய ஜனநாயக கட்சியின் தேசிய குழு தலைவர் கென் மார்டின், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வர இருக்கின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். "இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது ஒரு விஷயம், ஆனால் போட்டியிட்டு சில அதிகாரத்தை திரும்பப் பெறுவது இன்னொரு விஷயம்." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்கள், இடதுசாரி வாக்காளர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க டிரம்புக்கு எதிரான மனநிலை மட்டும் போதுமா என்பதற்கான பரிசோதனையாக இருக்கும். இவை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கான சிறிய முன்னோட்டம் மட்டுமே, அந்த தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எந்தக் கட்சி கட்டுப்படுத்தப்போகிறது என்பதை தீர்மானிக்கும். இடைக்கால தேர்தல்கள் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் செயல்பாடு மீதான மதிப்பீட்டையும் ஜனநாயக கட்சியினருக்கு வழங்கும். சனிக்கிழமை போராட்டங்களின் செய்தி என்பது டிரம்பிற்கு எதிராக ஒருங்கிணைவதாகவே இருந்தது. இந்தச் சூழலில் ஜனநாயக கட்சியினர் ஆட்சிக்கு வந்து என்ன செய்வார்கள் என்பது பற்றி அக்கறை குறைவாகவே இருக்கிறது. எனினும் ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸின் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் பயணங்களிலும், பைடன் நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலத்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் இடையூறு ஏற்படுகிறது. திருநர் உரிமை உள்ளிட்ட சமூக கொள்கைகளை தவிர்த்துவிட்டு பொருளாதார பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான திட்டங்களுக்கும் இடதுசாரி தரப்பிலிருந்தே கண்டனங்கள் எழுகின்றன. மெய்ன், மாசசூசெட்ஸ், கலிஃபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளம் வேட்பாளர்களும் மத்திய கொள்கை கொண்டவர்களுக்கு எதிராக தாராளவாதிகளும் நிறுத்தப்படலாம், இந்தப் போட்டிகள் ஆற்ற முடியாத பழைய அரசியல் காயங்களை உடனடியாக ஏற்படுத்தலாம். அத்தகைய சூழலில் கட்சி எதிர்கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க பேரணிகள் மட்டும் போதாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8g5z1rxr7o
  3. ஆஆஆஆ இது என்ன கொடுமை?! ஆரோ இவங்களுக்கு உசுப்பேத்தி விடுகிறார்கள்!
  4. Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 02:26 PM இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்றிரவு (20) தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/228215
  5. பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine கட்டுரை தகவல் ஜேமி டச்சார்ம் 20 அக்டோபர் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது. முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார். 2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் (Biomedical Engineering) துறையில் பிஹெச்டி மாணவியாக இருந்த ஸு, அறுவை சிகிச்சை (invasive surgery) இல்லாமல் நோயுற்ற திசுக்களை அழிப்பதற்கான வழியைக் கண்டறிய முயன்றார். அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளைப் (அல்ட்ராசவுண்ட்) பயன்படுத்தி திசுக்களை இயந்திர ரீதியாக உடைக்கும் ஆய்வில் அவர் இறங்கினார். தனது கோட்பாட்டைப் பன்றியின் இதயங்கள் மீது பரிசோதித்து வந்தார். அல்ட்ராசவுண்ட் மனித காதுகளுக்குக் கேட்கக் கூடியது அல்ல. ஆனால், ஸு தனது பரிசோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஒலி பெருக்கியைப் பயன்படுத்தியதால், அவர் ஆய்வகத்தைப் பகிர்ந்துகொண்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் சத்தம் குறித்துக் குறை கூறத் தொடங்கினர். எனவே, தனது சகாக்களுக்குச் செவி சாய்த்து, அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் வீதத்தை (rate of ultrasound pulses) ஒலி அளவை மனித காது கேட்கும் வரம்புக்கு வெளியே கொண்டு செல்லும் அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்தார். அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு விநாடியில் ஏற்படும் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது (இது ஒவ்வொரு துடிப்பின் நீளத்தையும் ஒரு மைக்ரோ விநாடிக்குக் குறைத்தது). அவர் முன்பு முயற்சித்த அணுகுமுறையை விட உயிருள்ள திசுக்களில் மிகவும் பயனுள்ளதாகவும் அது இருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே, அல்ட்ராசவுண்ட் செலுத்தப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் பன்றியின் இதயத் திசுவில் ஒரு துளை தோன்றியது. "நான் கனவு காண்பதாக நினைத்தேன்," என்று தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவப் பொறியியல் பேராசிரியராக இருக்கும் ஸு கூறுகிறார். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு வரும் பல அணுகுமுறைகளில் ஒன்றாக ஹிஸ்டோட்ரிப்சி (histotripsy) என்று இருக்கிறது. இது, அறுவை சிகிச்சை இல்லாமல், ஒலி அலைகள் மூலம் புற்றுநோய் கட்டிகளை நீக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, ஒவ்வொரு விநாடிக்கும் உற்பத்தி செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் துடிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கருவியைத் திசுக்களை அழிப்பதில் சிறப்பாகச் செயல்பட வைத்தது. ஹிஸ்டோட்ரிப்சி, கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அக்டோபர் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, ஸுவின் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க அமைக்கப்பட்ட ஹிஸ்டோசோனிக்ஸ் (HistoSonics) என்ற நிறுவனம் நிதியளித்த ஒரு சிறிய ஆய்வில், இந்த அணுகுமுறை 95% கல்லீரல் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராகத் தொழில்நுட்ப ரீதியான வெற்றியை அடைந்தது. வயிற்று வலி முதல் உள் ரத்தப்போக்கு வரை பக்க விளைவுகள் சாத்தியம் என்றாலும், சிக்கல்கள் அரிதானவை என்றும், இந்த முறை பொதுவாகப் பாதுகாப்பானது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கடந்த ஜூன் மாதம், ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன்தான் ஹிஸ்டோட்ரிப்சியை அங்கீகரித்த முதல் நாடானது. புதுமையான சாதனங்களுக்கான அணுகல் பாதை (Innovative Devices Access Pathway) முன்னோடித் திட்டத்தின்படி, தேசிய சுகாதார சேவையின் (NHS) கீழ் இந்தச் சிகிச்சை கிடைக்கப் பெறுகிறது. இது புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், புற்றுநோய் (metastatic disease) பரவலைக் கட்டுப்படுத்தவும், பிற புற்றுநோய் சிகிச்சைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் செய்யப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் எப்படி வேலை செய்கிறது? பலருக்கு, "அல்ட்ராசவுண்ட்" என்ற வார்த்தை உடனடியாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் சோனோகிராம் படங்களை நினைவுபடுத்துகிறது. சோனோகிராம் போன்ற ஒரு மருத்துவப் படத்தை உருவாக்க, ஒரு கையடக்கக் கருவி (transducer) அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. அவை உள்ளே உள்ள திசுக்களில் இருந்து எதிரொலிக்கும். திரும்ப வரும் அலைகளைக் கருவியில் உள்ள ஒரு சென்சார் எடுத்துக்கொள்கிறது. அதன் செயல்பாடுகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது. அவை பின்னர் தோலின் அடியில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஒரு படத்தைப் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சையில், அல்ட்ராசவுண்ட் அலைகள் ஒரு கட்டியின் ஒரு சிறிய பகுதியில் குவிக்கப்பட்டு அதை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவை நுட்பமான "நுண் குமிழிகளை" (microbubbles) உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றன, அவ்வாறு செய்யும்போது புற்றுநோய் கட்டியின் திசுக்களை உடைக்கின்றன. கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஹிஸ்டோட்ரிப்சி சாதனங்கள் அல்ட்ராசவுண்ட் அலைகளை சுமார் இரண்டுக்கு நான்கு மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு குவிய மண்டலத்திற்குள் (focal zone) அனுப்புகின்றன – "அடிப்படையில், உங்கள் வண்ணம் தீட்டும் பேனாவின் நுனி போன்றது," என்று ஸு கூறுகிறார். பின்னர், சரியான பகுதியை இலக்கு வைக்க ஒரு ரோபோ கை (robotic arm) வழிகாட்டுகிறது. அல்ட்ராசவுண்ட் ஒலி விரைவான துடிப்புகளாக வழங்கப்படுகிறது. இந்தத் துடிப்புகள் நுட்பமான "நுண் குமிழிகளை" உருவாக்குகின்றன, அவை மைக்ரோ விநாடிகளில் விரிவடைந்து, பின்னர் சுருங்குகின்றனர். அவ்வாறு செய்யும்போது கட்டியின் திசுக்களை அவை உடைக்கின்றன. இதனால் பின்னர் நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு எஞ்சியவற்றைச் சுத்தம் செய்ய முடிகிறது. இந்த முழு செயல்முறையும் வேகமானது, நச்சுத்தன்மையற்றது மற்றும் அறுவை சிகிச்சை அற்றது. பொதுவாக நோயாளிகள் அன்றே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று ஸு கூறுகிறார். சரியான சிகிச்சையின் நேரம் மாறுபடும் என்றாலும், ஹிஸ்டோசோனிக்ஸ் படி, பெரும்பாலான நடைமுறைகள் ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகின்றன. புற்றுநோய் கட்டிகள் பெரும்பாலும் ஒரே முறையில் அழிக்கப்பட்டு விடுகின்றன, இருப்பினும் பல அல்லது பெரிய கட்டிகள் உள்ள நோயாளிகளுக்குப் பல சுற்றுகள் தேவைப்படலாம். ஹிஸ்டோட்ரிப்சியின் நன்மைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன. சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் வருமா என்பதற்கு நீண்ட காலத் தரவு இன்னும் வலுவாக இல்லை. புற்றுநோய் கட்டிகள் உடலுக்குள் உடையும்போது வேறிடங்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை ஹிஸ்டோட்ரிப்சி ஏற்படுத்தக் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கவலை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்தக் கவலை இதுவரை விலங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, உருவாக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஆற்றலின் அளவைச் தேவைக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம், ஹிஸ்டோட்ரிப்சி கருவி எவ்வளவு திசு பாதிக்கப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த முடியும். ஹிஸ்டோட்ரிப்சி எல்லா புற்றுநோய்களுக்கும் எதிராகச் செயல்படாமல் போகலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புகள் அல்ட்ராசவுண்ட் அதன் இலக்கை அடைவதைத் தடுக்கலாம், இதனால் சில இடங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது. நுரையீரல்கள் போன்ற வாயு நிரம்பிய உறுப்புகளில் ஹிஸ்டோட்ரிப்சியைப் பயன்படுத்துவது அபாயகரமானதாக இருக்கலாம், இதனால் அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்குச் சேதம் ஏற்படலாம். அல்ட்ராசவுண்ட் மூலம் புற்றுநோயை 'எரித்தல்' புற்றுநோய் சிகிச்சையில் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தும் முதல் சிகிச்சை ஹிஸ்டோட்ரிப்சி அல்ல. அதிக-தீவிரமாக குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (High-intensity Focused Ultrasound - HIFU), ஒரு பழமையான தொழில்நுட்பம் ஆகும். இதுவும் கட்டிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படலாம். குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டியின் மீது செலுத்தப்பட்டு வெப்பத்தை உருவாக்குகிறது. இது அடிப்படையில் திசுக்களை "எரிக்கிறது" (cooks), என்று அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அல்ட்ராசவுண்ட் புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சை மையத்தின் இணை இயக்குநரான ரிச்சர்ட் பிரைஸ் கூறுகிறார். "நீங்கள் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை எடுத்து, வெயில் நாளில் ஒரு உலர்ந்த இலை மீது பிடித்தால், நீங்கள் இலையை எரிய வைக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். HIFU அடிப்படையில் புற்றுநோய் திசுக்களில் அதே காரியத்தைச் செய்கிறது, ஆனால் ஒலி ஆற்றலைப் பயன்படுத்துகிறது. புற்றுநோயியல் துறையில், HIFU அநேகமாக புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழியாக அறியப்படுகிறது. 2025 ஆய்வின்படி, இந்தச் சிகிச்சையும் அறுவை சிகிச்சையைப் போலவே கிட்டத்தட்ட சமமான செயல்திறன் கொண்டது. நோயாளிகள் விழித்தவுடன் வலி மற்றும் சிறுநீர் தொடர்பான சில பக்க விளைவுகளை அனுபவிக்கலாம், ஆனால் அறுவை சிகிச்சை போன்ற தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை விட இது பொதுவாக வேகமாக இருக்கும். சிகிச்சையின் போது நோயாளிகள் நகர்வதைத் தவிர்க்கவும், அருகிலுள்ள உறுப்புகள் அல்லது திசுக்களுக்குத் தற்செயலான சேதத்தைத் தடுக்கவும், ஹிஸ்டோட்ரிப்சி மற்றும் HIFU சிகிச்சை இரண்டும் பொதுவாக பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகின்றன. ஆனால், ஹிஸ்டோட்ரிப்சி, HIFU ஆல் உருவாக்கப்படும் வெப்பத்தை உருவாக்குவதில்லை. இந்த வெப்பம் அருகில் உள்ள ஆரோக்கியமான திசுக்களைச் சேதப்படுத்தலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, HIFU என்பது புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு அல்ட்ராசவுண்டை பயன்படுத்தும் நிறுவப்பட்ட நடைமுறையாகும், இந்த நடைமுறை திசுக்களைச் சூடாக்குவதை நம்பியுள்ளது. அல்ட்ராசவுண்ட் மற்றும் பிற மருந்துகள் மற்றப் புற்றுநோய் சிகிச்சைகளுடன் இணைப்பதன் மூலமும் அல்ட்ராசவுண்டின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய ஆய்வு, ரத்த ஓட்டத்தில் நுண் குமிழிகளைச் செலுத்தி, அல்ட்ராசவுண்ட் மூலம் தூண்டுவது ரத்த-மூளைத் தடையை (blood-brain barrier) தற்காலிகமாகத் திறக்க முடியும் என்று தெரிவிக்கிறது. இந்தத் தடை பொதுவாக ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுகள் மூளைக்குள் நுழைந்து சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சையின் போது அதை வேண்டுமென்றே திறப்பது, மருந்துகள் அவை தாக்க வேண்டிய புற்றுநோய் கட்டிகளைச் சென்றடைய அனுமதிக்கும். கனடாவின் சன்னிப்ரூக் சுகாதார அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானியான தீபா சர்மா, அந்த நன்மைகள் மூளைப் புற்றுநோயுடன் நின்றுவிடவில்லை என்று கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண் குமிழிகளின் கலவையை அவர் பல புற்றுநோய் வகைகளில் ஆய்வு செய்துள்ளார். இது மருந்து விநியோகத்தை பரவலாக மேம்படுத்தும் என்று அவர் கண்டறிந்துள்ளார். "கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துகிறது, ஆனால் இது பல நீண்ட காலப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது," என்று சர்மா கூறுகிறார். அல்ட்ராசவுண்ட் தூண்டப்பட்ட நுண் குமிழிகளின் உதவியால் கதிர்வீச்சு சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடிந்தால், அதே சிகிச்சைப் பலன்களை பெற குறைந்த கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்த முடியும். இதனால் பேரழிவுகரமான பக்க விளைவுகளையும் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கோட்பாட்டளவில் நம்பலாம். அல்ட்ராசவுண்ட் நோயெதிர்ப்பு சிகிச்சைக்கும் (immunotherapy) ஒரு நல்ல இணையாகத் தோன்றுகிறது. இந்தச் சிகிச்சை அணுகுமுறை, மறைந்து இருக்கும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதில் கவனம் செலுத்துகிறது. குவிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட், புற்றுநோய் கட்டிகளைச் சூடாக்கிச் சேதப்படுத்தும் போது, இந்தத் திசுக்களை நோயெதிர்ப்பு மண்டலத்திற்குக் கூடுதலாகக் தெரியும்படி செய்கிறது என்று அல்ட்ராசவுண்டை நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் பிரைஸ் கூறுகிறார். அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் புற்றுநோய்க்கு எதிராக இந்த இணை சிறப்பாக செயல்பட முடியுமா என்பதைக் கண்டறிவது எதிர்கால ஆராய்ச்சிக்கான ஒரு திசையாக இருக்கும். புற்றுநோய் உடல் முழுவதும் பரவும் போது, ஒரே ஒரு கட்டியை மட்டும் அகற்றுவது போதாது. எனவே, மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். மருத்துவர்கள் அல்ட்ராசவுண்டைப் பயன்படுத்தி ஒரு கட்டியை உடைப்பதால், அதன் பண்புகளை நோயெதிர்ப்பு அமைப்பு அறியும். இதன் மூலம், உடலின் மற்ற இடங்களில் உள்ள புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஒரு அமைப்பு அளவிலான தாக்குதலை நோயெதிர்ப்பு அமைப்பு தொடங்குவதற்கு வழிவகுப்பதுதான் உச்சமாக இருக்கும் என்று பிரைஸ் கூறுகிறார். இது இன்னும் எந்த வகையான சோதனைகளிலும் பரிசோதிக்கப்படவில்லை, ஆனால் கோட்பாட்டளவில், "ஒரே ஒரு கட்டிக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் 10, 15, 20 கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்," என்று பிரைஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine படக்குறிப்பு, ஹிஸ்டோட்ரிப்சி டிரான்ஸ்யூசர் தலைப்பகுதி, திசுக்களை உடைக்கக்கூடிய நுண்ணிய குமிழிக் கூட்டத்தை (tiny cloud of bubbles) உருவாக்குகிறது அல்ட்ராசவுண்ட் மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை குறித்த சோதனைகள் இன்னும் ஒப்பீட்டளவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று பிரைஸ் எச்சரிக்கிறார். இந்த இணைந்த அணுகுமுறை சிகிச்சையை எப்போது அல்லது எப்படி மாற்றும் என்பதை அறிய மேலும் பல ஆராய்ச்சிகள் தேவை. அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற பயனுள்ள ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகளை மாற்றுவதை அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புற்றுநோயியலில் அல்ட்ராசவுண்ட் அணுகுமுறை ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது. அல்ட்ராசவுண்ட் புற்றுநோய்க்கு ஒரு "அற்புதமான குணம் அளிப்பது" அல்ல, என்று ஸு கூறுகிறார். எந்தவொரு மருத்துவ சிகிச்சையைப் போலவே, இதற்கும் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டும் சத்தத்தில் இருந்து விடுவித்ததைப் போலவே, அவரது கண்டுபிடிப்பும் – மற்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் – வரும் ஆண்டுகளில் நோயாளிகளின் தேவையற்ற துன்பத்தைத் தவிர்க்க உதவும் என்று ஸு நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy7e6p4ykl8o
  6. Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 09:36 AM போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவேண்டும். சிறுவர்களை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். சிறுவர்களுக்கு தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் இருந்தார்கள். இன்றும் விபத்துக்களால் பெற்றோர்களை இழந்து அநாதரவான நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றார்கள். எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களி;ன் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம் சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை இந்த நாட்டுக்குத் தேவையான நற்பிரஜையாக உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/228179
  7. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது ஆண்டு நினைவேந்தல் யாழில்! Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 10:39 AM படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) யாழ் . ஊடக அமையத்தில் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் படத்திற்கு குரலற்றவர்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர். தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்த நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228187
  8. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, லூவா அருங்காட்சியகம் கட்டுரை தகவல் இயன் ஐக்மேன் ரேசல் ஹாகன் 20 அக்டோபர் 2025, 04:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் சினிமா பாணியில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர். சினிமா பாணியில் நடந்தேறியுள்ள இந்த கொள்ளை பிரான்ஸையே உலுக்கியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் தற்போது வரை நடந்தது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருடர்கள் பால்கனி வழியாக அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். கொள்ளை எப்படி நடந்தது? ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர். வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது. இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொள்ளையர்கள் பயன்படுத்திய ஏணி அருங்காட்சியகத்தில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்ததைத் தொடர்ந்து பணியாளர்கள் நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு படைகளை அழைத்தனர் என கலாச்சாரத் துறை அறிக்கை மூலம் கூறியுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட குழுவினர் அவர்கள் வந்த வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற போது அருங்காட்சியக ஊழியரின் தலையீட்டால் தடுக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஃப்1 செய்தி ஊடகத்திடம் பேசிய கலாச்சாரத் துறை அமைச்சர் ரச்சிதா, "கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள், கொள்ளையர்கள் அமைதியாக வந்து நகைகள் இருந்த காட்சி பெட்டிகளை உடைக்க ஆரம்பித்ததைக் காட்டுகின்றன" எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை, "வன்முறை இல்லாமல் இந்த கொள்ளை நடத்தப்பட்டுள்ளது." என தாடி தெரிவித்தார். கொள்ளையர்கள் மிகவும் "அனுபவம் வாய்ந்தவர்கள்" போல தெரிந்ததாக கூறும் அவர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல வேண்டும் என்கிற மிகவும் தெளிவான திட்டத்தோடு வந்துள்ளனர் என்றார். காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சி அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், "இந்தச் சம்பவம் மிகமிக வேகமாக நடைபெற்றது, வெறும் ஏழே நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்தார். அருங்காட்சியகம் காலி செய்யப்பட்ட போது "மிகவும் பதற்றம்" நிறைந்து காணப்பட்டதாக கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தின் நுழைவுவாயில் மெட்டல் கதவுகளைக் கொண்டு மூடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திருடப்பட்ட நகைகள் எவை? அருங்காட்சியகத்திலிருந்து கிரீடங்கள், நெக்லஸ், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உள்ளிட்ட எட்டு பொருட்கள் திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நகைகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னர்கள் வசம் இருந்தவை. திருடு போன நகைகளின் பட்டியலை பிரான்ஸ் கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது, அவை மூன்றாம் நெப்போலியனின் மனைவியும் அரசியுமான யூஜினிக்குச் சொந்தமான கிரீடமும் அணிகலன் அரசர் மேரி லூயிசிற்கு சொந்தமான மரகத நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி மரகத காதணிகள் அரசி மேரி அமீலி மற்றும் ஹார்டென்சுக்கு சொந்தமான நெக்லஸ், கிரீடம் மற்றும் ஒற்றைக் காதணி "ரெலிகுவரி ப்ரூச்" என அழைக்கப்படும் நகை இந்த நகைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வைரங்களும் இதர விலை மதிக்க முடியாத ரத்தின கற்களும் இடம்பெற்றுள்ளன. அரசி யூஜினின் கிரீடம் உட்பட இரண்டு பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகே கிடந்தன. அவை தப்பிச் செல்லும்போது தவறவிடப்பட்டிருக்கலாம். அந்த நகைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். திருடப்பட்ட நகைகள் "விலைமதிக்க முடியாதவை" மற்றும் "அளவிட முடியாத பாரம்பரிய மதிப்பை" கொண்டவை எனக் குறிப்பிட்டார் நுனெஸ். முன்னர் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதா? 1911-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருங்காட்சியக பணியாளர் ஒருவர் மோனாலிசா ஓவியத்தை சுவரிலிருந்து அகற்றி அவர் அணிந்திருந்த கோட்டிற்கு அடியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது மோனாலிசா ஓவியம் பிரபலமாகியிருக்கவில்லை. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஓவியம் மீட்கப்பட்டது. லியோனார்டோ டவின்சியின் இந்த ஓவியம் இத்தாலிக்குச் சொந்தமானது என நம்பியதால் அதனை திருடியதாக அருங்காட்சியக பணியாளர் ஒப்புக்கொண்டார். தற்போது மோனாலிசா ஓவியத்தை யாரும் திருட முயற்சிப்பதில்லை. அருங்காட்சியத்தில் உள்ளதிலேயே மிகவும் பிரபலமான மோனாலிசா ஓவியம் மிகவும் பாதுகாக்கப்பட்ட கண்ணாடி அறையில் இருக்கிறது. 1998-ஆம் ஆண்டு கமில் கோரோட் வரைந்த 19-ஆம் நூற்றாண்டு ஓவியமான 'லே செமின் தி செவ்ரே' திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் பிறகு அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது. சமீபத்தில் பிரெஞ்சு அருங்காட்சியகங்களைக் குறிவைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மாதம் லிமோஜஸில் உள்ள அட்ரியன் துபோச் அருங்காட்சியகத்தில் நுழைந்த திருடர்கள் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள பீங்கான் பொருட்களை திருடிச் சென்றனர். 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பாரிசில் உள்ள காக்னாக்-ஜே அருங்காட்சியகத்திலிருந்து "மிகவும் வரலாற்று மற்றும் பாரம்பரிய மதிப்புள்ள" ஏழு பொருட்களை திருடப்பட்டது. அவற்றில் ஐந்து பொருட்கள் சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டன. அதே மாதம் புர்கண்டியில் உள்ள ஹிரோன் அருங்காட்சியகத்தில் நுழைந்த ஆயுதமேந்திய திருடர்கள் பல மில்லியன் பவுண்ட்கள் மதிப்புள்ள 20-ஆம் நூற்றாண்டு கலைப் பொருட்களை திருடிச் சென்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ydvg38dvzo
  9. இந்தியாவை 4 ஓட்டங்களால் வென்று உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து 20 Oct, 2025 | 01:20 AM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, அரை இறுதியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறதி வாப்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்யில் இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்த போதிலும் அநாவசியமான அடி தெரிவுகளால் தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்ததால் இங்கிலாந்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. ஹீதர் நைட் குவித்த சதமும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தை வெற்றிபெறச்செய்தன. 289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பவர் ப்ளேயில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறு அழுத்தத்தை எதிர்கொண்டது. ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். ஹார்மன் ப்ரீத் கோர் 70 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்று தவறான ஆட்டத் தெரிவின்மூலம் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து களம் விட்டகன்றார். அவர் 8 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (8), திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். தீப்தி ஷர்மா 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் இந்தியாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு கலைந்துபோனது. ஆமன்ஜோத் கோர் 18 ஓட்டங்களுடனும் ஸ்நேஹ் ராணா 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது. டமி போமன்ட் (22), அமி ஜோன்ஸ் (56) ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து ஹீதர் நைட், அணித் தலைவி நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். நெட் சிவர் - ப்ரன்ட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹீதர் நைட் 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. சார்ளி டீன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஹீதர் நைட். https://www.virakesari.lk/article/228164
  10. பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்ப் உருவிலான பலூன்களை போராட்டக்காரர்கள் எடுத்து வந்தனர். 19 அக்டோபர் 2025, 07:15 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், "மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்," மற்றும் "அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல," என்கிற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பி வழிந்தனர். போராட்டங்களுக்கு முன்பு அதில் ஈடுபடுவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பேரணிகள் 'அமெரிக்க வெறுப்பு பேரணிகள்' எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் சனிக்கிழமை பேரணிகள் அமைதியாக நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். "நோ கிங்ஸ் (மன்னர்கள் இல்லை)" என்கிற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் அடிப்படை கொள்கை என்பது அஹிம்சை தான் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சாத்தியமான மோதல்களை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது. நியூயார்க் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மேளதாளங்களுக்கு மத்தியில் "இது தான் ஜனநாயகம் போல் இருக்கிறது" என முழக்கங்களை எழுப்பி வந்தனர். வானத்தில் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பறந்த நிலையில் காவல்துறையினர் சாலையோரமாக நின்றிருந்தனர். நகரின் ஐந்து பகுதிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமைதியான முறையில் போராட ஒருங்கிணைந்திருந்ததாகவும் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. டைம்ஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார். பட மூலாதாரம், Stephani Spindel/VIEWpress படக்குறிப்பு, டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் "ஃபாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வைக்" கண்டு கோபமும் கவலையும் அடைந்ததால் நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பகுதி நேர எழுத்தாளரும் ஆசிரியருமான பெத் ஜாஸ்லோஃப் தெரிவித்தார். "நியூயார்க் நகரைப் பற்றி நான் மிகவும் அக்கறைப்படுகிறேன். இங்கு பலருடன் இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது." என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC படக்குறிப்பு, நியூயார்கில் நடைபெற்ற போராட்டத்தில் எழுத்தாளர் பெத் ஜாஸ்லோஃப் கலந்து கொண்டிருந்தார். ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்றதிலிருந்து அதிபருக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளார் டிரம்ப், மத்திய அரசாங்கத்தின் அங்கங்களை நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தி கலைப்பது மற்றும் மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களில் படைகளை குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தனது அரசியல் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தன்னை சர்வாதிகாரி அல்லது ஃபாசிஸ்ட் என அழைப்பதை நகைப்பிற்குரியது எனக் கூறும் டிரம்ப் நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீண்டும் கட்டமைக்க தனது நடவடிக்கைகள் அவசியமானது எனத் தெரிவிக்கிறார். ஆனால் டிரம்ப் அரசின் சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்தானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இத்தாலியில் பிறந்து வளர்ந்தவரும் நியூஜெர்சிவாசியுமான 68 வயதான மின்னணு பொறியாளர் மாசிமோ மாஸ்கோலி போராட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த நூற்றாண்டில் அவரின் சொந்த நாடு (இத்தாலி) சென்ற பாதையில் அமெரிக்காவும் செல்வதால் கவலையடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். "முசோலினியின் ராணுவத்தை உதறித்தள்ளி புரட்சி இயக்கத்தில் சேர்ந்த இத்தாலிய ஹீரோவின் உறவினர் நான். அவர் ஃபாசிஸ்டுகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 80 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஃபாசிசத்தைக் காண்பேன் என நான் நினைத்திருக்கவில்லை." என மாஸ்கோலி தெரிவித்தார். பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC படக்குறிப்பு, நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்ட இத்தாலிய அமெரிக்கரான மாசிமோ மாஸ்கோலி அமெரிக்காவில் ஃபாசிசம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்தார். டிரம்பின் நடவடிக்கைகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கைது செய்வது மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டை ரத்து செய்வது கவலையளிப்பதாக மாஸ்கோலி தெரிவிக்கிறார். "நாம் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்க முடியாது, நாம் அரசாங்கத்தை நம்பியிருக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தை நம்பியிருக்க முடியாது. அரசு, நிர்வாகம், நீதித்துறை என அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே தான் நாங்கள் போராடுகிறோம்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். " செனட் சிறுபான்மை பிரிவு தலைவரும் நியூயார்க் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான சுக் ஷூமரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். "அமெரிக்காவில் சர்வாதிகாரிகள் கிடையாது, டிரம்ப் நமது ஜனநாயகத்தை அழிக்க நாம் அனுமதிக்கமாட்டோம்," என ஷுமர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் "சுகாதாரத் துறை நெருக்கடியை சரி செய்யுங்கள்" என்கிற பதாகையுடன் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். வெர்மாண்டைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் வாஷிங்டனில் தலைமை உரையாற்றினார். "நாங்கள் அமெரிக்காவை வெறுப்பதால் இங்கு வரவில்லை, அமெரிக்காவை நேசிப்பதால் தான் இங்கு வந்துள்ளோம்," என தனது உரையில் குறிப்பிட்டார். வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' வாசகம் பொறிக்கப்பட்டிருந்த தொப்பி அணிந்த ஒருவரை பிபிசி கண்டது. ஒரு வேலையாக நகரத்துக்கு வந்த அவர், போராட்டத்தைக் காணலாம் என முடிவு செய்திருக்கிறார். தனது பெயரைக் கூற மறுத்த அவர் தனக்கு ஒன்றும் புரியவில்லையென்றும் மக்கள் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒரு பெண் அவருக்கு எதிராக அவதூறான கோஷத்தை எழுப்பினார். இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெறவில்லை. ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணிகள் நடைபெற்றன. லண்டனிலும் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர். கனடாவின் டொராண்டோ நகரிலும் அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது "கனடாவிலிருந்து கையை எடுங்கள்" என்கிற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். பட மூலாதாரம், Wiktor Szymanowicz/Future Publishing via Getty Images படக்குறிப்பு, லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே நடைபெற்ற போராட்டம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள நேர்காணலில் டிரம்ப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பற்றி பேச இருக்கிறார். "மன்னரா! இவை அனைத்தும் நாடகமே. என்னை மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. நான் மன்னர் கிடையாது." என நேர்காணலின் முன்னோட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார். கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் பேரணிக்கு முன்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "படையினரை வெளியேற்ற வேண்டும். அது அமைதியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கு சந்தேகம் உள்ளது." எனத் தெரிவித்தார். அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பொறுப்பில் உள்ள குடியரசு கட்சியின் ஆளுநர்கள் போராட்டங்களுக்கு முன்பாக தேசிய படைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபாட், ஆஸ்டின் பகுதியில் ஆன்டிஃபா போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேசிய படைகள் தேவைப்படும் எனக் கூறி அவர்களை அழைத்துள்ளார் இந்த நகர்வை, மாகாணத்தின் மூத்த ஜனநாயக கட்சி தலைவர் ஜீன் வூ உள்ளிட்ட பலரும் நிராகரித்துள்ளனர். "அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆயுதமேந்திர ராணுவ வீரர்களை அனுப்புவது என்பதை மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே செய்வார்கள் - கிரேக் அபாட் தானும் சர்வாதிகாரிகளில் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார்." எனத் தெரிவித்தார். வெர்ஜீனியா மாகாணத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கிளென் யங்கின்னும் தேசிய படைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் போராட்டத்தின்போது படைகள் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டம் வாஷிங்டனில் டிரம்பின் கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் போராட்டம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை, சில உள்ளூர் காவல்துறையினர் மட்டும் இருந்தனர். வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் "நான் தான் ஆன்டிஃபா" எனக் கூறும் பதாகையை வைத்திருந்தார். 76 வயதான சுக் எப்ஸ் அது மிகவும் அர்த்தம் பொதிந்த பதம் என்றார். அதன் அர்த்தம், "அமைதி, சுகாதார காப்பீடு, வாழ்வதற்கான ஊதியம், வாழ்வாதாரம், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதரிக்கிறேன்," என்பது தான் எனத் தெரிவித்தார். "டிரம்ப் அனைவரையும் தூண்டிவிடுகிறார், அல்லது தூண்டிவிட முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்கவில்லை," என அவர் தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் விவகாரத்தில் அமெரிக்கர்களின் ஆதரவு பிளவுபட்டுள்ளது. ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிரம்பின் நடவடிக்கைகளை 40% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும் 58% பேர் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஆதரவு அதிகமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது இருந்ததைவிட (47% ஆதரவு) தற்போது குறைவாகவே உள்ளது. ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதிபர்களுக்கான ஆதரவு குறைவது இயல்பான ஒன்று தான். ராய்ட்டர்ஸ்/இப்சாஸின்படி 2021 ஜனவரியில் ஜோ பைடன் அதிபரானபோது 55% ஆதரவு இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம், இந்த ஆதரவு 46% ஆக சரிந்தது. கூடுதல் செய்தி சேகரிப்பு அனா ஃபாகய் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77zjyy2gkxo
  11. Published By: Digital Desk 1 19 Oct, 2025 | 02:56 PM இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் சூழல் மையங்கொள்வதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகிலும் இந்த மாற்றம் நிகழ்வதாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் போக்கு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான வருண ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையடல் ஒன்றின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில், ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சியின் செயல்திறன் மிகவும் முக்கியமானது. ஆனால் எதிர்காலத்தில் கட்சி அரசியல் தோல்வியடைந்து, தனிநபர்களைச் சுற்றியே அரசியல் தீர்மானிக்கப்படும். இருப்பினும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும். ஆனால் இன்று எதிர்க்கட்சி பலவீனமாகவே உள்ளது. எதிர்க்கட்சியாக பரந்துபட்டுச் செயல்படாமல், சில நபர்கள் மட்டுமே எதிர்க்கட்சியாகச் செயல்படுகின்றனர். உதாரணமாக சாமர சம்பத், தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் உள்ளனர். உத்தேச பொதுக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. இதற்கு நான் இணங்கமாட்டேன் என்று கருதுகின்றனர். அவ்வாறில்லை. ஆவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டால், கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம் என்ன என்ற கேள்வி உள்ளது. பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் அரசியல் நிலப்பரப்பில் மறைந்து போகலாம். இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் 'தனிநபரை சார்ந்த அரசியல் உருவாகி வருகிறது. உலகெங்கிலும் கட்சிக் கட்டமைப்புகளை விட, தனிநபர்களின் ஆளுமை மற்றும் செல்வாக்கைச் சுற்றியே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் ஒரு காலகட்டம் வரும் என்றார். https://www.virakesari.lk/article/228143
  12. நல்ல கேள்வி! பதிலும் நீங்களே சொல்லிவிட்டீங்களே அண்ணை. இந்த திரியை Bookmark செய்து வையுங்கோ அல்லது Notification ல் உங்களை Tag பண்ணி பதில் சொன்னதற்கோ Like பண்ணியதை வைத்தோ குறுக்கு வழியில் வரலாம் என்று நினைக்கிறேன்.
  13. Quantum Computing explained in Tamil | How Quantum Computer Work? explained in Tamil |Karthik's Show This video explains how Quantum Computers works? in Tamil. Quantum Computing explained in Tamil. Quantum Concepts explained for beginners. Super Position explained in Tamil. Quantum Interference explained in Tamil. Quantum Entanglement explained in Tamil. Subscribe to this channel for more such videos. Happy to share that we have launched our website https://www.karthiksshow.com and first course in Tamil will go live on Jan 15, 2023. Our first course will be 'Python Programming for Beginners' - This course is on pre-launch sale now with special discounts. For more details visit our website. To get updates and offers for courses related to Data Science, Data Engineering, Data Analyst and Machine Learning in Tamil, subscribe to our newsletter.
  14. பகிர்விற்கு நன்றி அண்ணை. நாங்கள் எதிர்வளமாகவெல்லோ ஓடுகிறோம்!
  15. Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 01:46 PM வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் உள்ளன. தற்போது குமரிக் கடலுக்கு அண்மித்ததாக நிலவுகின்ற காற்றுச் சுழற்சியின் விளைவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியான மழை கிடைத்து வருகின்றது. அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய மாதிரிக் கணிப்புக்களின் அடிப்படையில் இந்த தாழமுக்கமானது ஒரு புயலாக வலுப்பெற்று அல்லது ஒரு வலுக்குறைந்த புயலாக மாற்றம்பெற்று இந்தியாவின் ஆந்திராவில் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தாழமுக்கத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரடிப் பாதிப்புகள் எவையும் இல்லை. ஆனால், மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன. தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். ஆதலால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் நவம்பர் மாதத்தின் முதலாவது வாரத்திலும் தாழமுக்கம் ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என்றுள்ளது. https://www.virakesari.lk/article/228137
  16. அறிவியல் உலகில் மாபெரும் புரட்சி! 6100 மூளைகள் கொண்ட குவாண்டம் கணினி! அறிவியல் உலகில் மாபெரும் புரட்சி! 6100 மூளைகள் கொண்ட குவாண்டம் கணினி! இனி சாத்தியமில்லாதது எதுவுமில்லை!
  17. Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 12:40 PM ஆர்.ராம் 40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் முடக்கப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தற்போதுகூட, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தனிநபர் தீர்மானத்தின் மூலம் சட்டச் சிக்கலுக்கான தீர்வினைக் காணமுடியும். அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்;கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு அதுவழிவகுக்கும். உதாரணமாக கூறுவதாக இருந்தால் அயர்லாந்தின் வெற்றிகரமான தேர்தல் முன்னெடுப்புக்களால் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பொறுப்புக்கூறல் அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதேவேளை, சிங்கள மொழி ஊடகவியலாளர் சம்பத் தேசப்பிரிய, பெலவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை ஒழிப்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையைப் முன்னெடுப்பதாகவும் அதற்காகவே மாகாணங்களுக்கான தேர்தலைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்ப்புகளை, தவிர்க்கலாம் என்றும் அதன் ஊடாக மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் நடுநிலையாக்க முடியும் என்றும் ஜே.வி.பி. நம்பலாம். ஆனால் உண்மையில் ஆட்சியாளர்களுக்கு உடனடியாக மாகாண தேர்தல் நடத்துவவதானது, தாமதமாக நடப்பதை விடச்சிறந்ததாக இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அக்கட்டமைப்பை ஒழிப்பதானது, தேசிய மக்கள் சக்திக்கு கணிமான செல்வாக்கு இழப்பையே ஏற்படுத்தும். 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காக திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும். ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரை-சுயாட்சி அரசியல் வெளியான மாகாண சபை முறைமையானது, இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தடயத்திற்காகவும் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியே உள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் குறித்த அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு தவறவிட்டதாகத் தெரிகிறது. ஆகவே, தமிழர்களின் நகர்வு டெல்லி மற்றும் கொழும்பை விடுத்து துணைப்பிராந்திய அல்லது அதற்கும் அப்பாலாகச் செல்லும் போது, அநுரகுமாரவால் உருவாக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் அபாயங்கள் வெளிப்படையாகத் தெரியும், அச்சமயத்தில் அதனை மாற்றியமைப்பதற்கான நிலைமை மிகவும் தாமதமாகியதாகவே இருக்கும். மேலும், தற்போதைய நிலையில் மாகாண சபைகள் அரச நிலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், மாகாண சபைகளின் முடக்கம், திருகோணமலையில் இனக்குழுக்களை இடம்பெயரச்செய்வது, பொருளாதார வாழ்வாதாரங்கள் பாதிப்படைச்செய்வது, மன்னாரில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு உள்ளிட்ட விடயங்;கள் குறித்து இன, மத போராட்டங்கள் மாகாண சபைகளில் விவாதத்திற்கு வரவில்லை என்பதைக் குறிக்கிறது. மாகாண சபைகள் தொடர்ந்து 'காணாமல் போனதால்' ஏற்பட்ட வெற்றிடம், தீவு முழுவதும் சமூகங்களின் மீது வெளிநாட்டு மற்றும் உள்ளுர் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான இயலாமையை ஏற்படுத்தியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/228132
  18. பூலோகதேவி அறக்கட்டளை மூலமாக தொல்புரம் மேற்கில் குடிநீர் வழங்குவதற்கு உதவி செய்யப்பட்டது 19/10/2025. செல்வி மகாலிங்கம் நிரோஜினியின் வீட்டிற்கு குடிநீர் தேவைக்காக ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் எமது புலர் அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்டது. அதற்கமைவாக இந்தப்பணிகளை செய்ய 78820ரூபா நிதியுதவி திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் அம்மையார் (திரு S.A.உமாபதி அவர்களின் அம்மா) ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளையினரால் வழங்கப்பட்டது. இது அவர்களுடைய மூன்றாவது உதவி வழங்கும் திட்டமாகும். இப்பணிகளைச் செய்கிற அவர்களுடைய பேரன் குடும்பத்தினர் திரு திருமதி அபிஷேக் திவ்யா தம்பதியினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். ஒளிப்பதிவு திரு இரா சிறிதரன்.
  19. யாழில் முன்பு இணைக்கப்பட்ட திரி. மூன்று வழிகளில் குவாண்டம் கணினியானது நம் உலகத்தை மாற்றக்கூடும் By ச. குப்பன் | February 9, 2025 குவாண்டம் கணிணி இறுதியாக தயாரானதும், இவ்வுலகம் எண்ணிம புயலால் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நாள் ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருப்பது போன்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அது கண்டிப்பாக வரப்போகிறது என்பதுதான், மரபு இயந்திரங்களின் வேலையைப் பன்மடங்கு வேகத்தில் செய்யக்கூடிய இந்த அடுத்த தலைமுறை கணினிகள், நம் உலகின் சில வசதிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிவிடும். 3 மறைகுறியாக்கம் செய்தல் குவாண்டம் கணினியானது மறைகுறியாக்கத்தில் மிகப்பெரிய உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் மறைகுறியாக்கப்பட்ட எதையும் – இது எல்லா தரவும், மிகவும் அதிகமாக உள்ளது. செய்தி என்னவென்றால், எவ்வளவு நல்ல மறைகுறியாக்கமாக இருந்தாலும், இறுதியில், நமக்கு போதுமான நேரம் இருந்தால், brute-force வழிமுறைகளைப் பயன்படுத்தி அதை மறைகுறியாக்க முடியும். குறிமுறைவரிகளைக் கண்டுபிடிக்கும் வரை இவை மறைக் குறியாக்கத்தை மீண்டும் மீண்டும் தாக்கும். குவாண்டம் கணினிகள் மிகவும் மேம்பட்ட வழக்கமான இயந்திரங்களைக் காட்டிலும் பல மடங்கு கணித்திடுகின்ற சக்தியைக் கொண்டிருப்பதால், இந்த செயல்முறையை பெரிதும் துரிதப்படுத்தலாம். மறைகுறியாக்கம் எவ்வாறு நம்முடைய தரவை எப்போதும் பாதுகாக்காது என்பதை நம்முடைய கட்டுரையில் விரிவாகப் பேசுவோம். ஒரு வழக்கமான திறன்மிகு கணினிக்கு பெரும்பாலான வணிக சைபர்களை சிதைக்க பில்லியன் கணக்கான ஆண்டுகள் தேவைப்படும், ஒரு குவாண்டம் கணினி அதை நொடிகளில் செய்ய முடியும். குவாண்டம் கணிணிகள் இணையத்தில் வந்தவுடன், இது இப்போது நமக்குத் தெரிந்த தனியுரிமையின் முடிவைக் குறிக்கிறது அல்லது குறைந்தபட்சம் நமது தற்போதைய தொழில்நுட்பங்களுடன் பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய செய்தியிடல் வரலாறு, நம்முடைய மின்னஞ்சல்கள், சேமிப்பகத்தில் உள்ள எந்தக் கோப்புகளும், காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது அரசாங்கம் போன்ற பிறரால் நாம் வைத்திருக்கும் எந்தப் பதிவுகளையும் படிக்கக்கூடியதாக இருக்கும். பல நிறுவனங்கள் தங்கள் மறைகுறியாக்கத்தை குவாண்டம்-கணினியில் சரிபார்த்திடுகின்ற பணியை செய்யத் தொடங்கியுள்ளன (ஏற்கனவே தந்திரமான கணக்கீடுகளில் இன்னும் சிக்கலான கணிதத்தைச் சேர்ப்பதை உள்ளடக்கிய ஒரு செயல்முறை), ஆனால் அவற்றில் போதுமான அளவு அதைச் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அது எந்தளவுக்கு பலன் தரும் என்ற கேள்வியும் உள்ளது. சிறந்த சூழ்நிலையில் கூட, நாம் தரவைச் சேமிக்கும் முறை தனியுரிமை பற்றிய நமது அனுமானங்கள் மாறப் போகிறது. 2 செயற்கை நுண்ணறிவு அதிக கணிப்பின் சக்தி பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் மற்றொரு பகுதி செயற்கை நுண்ணறிவு ஆகும். ChatGPT போராட்டம் போன்ற பெரிய மொழி மாதிரிகள் இப்போது கணினியின் சக்தியில் உள்ளன: நம்முடைய நிலையான LLM க்கு ஒரு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் combs , பயனரின் வினவலுக்குத் தேவையான தகவலைக் கண்டறியும். குவாண்டம் கணினியில், இந்த செயல்முறை அபரிமிதமாக துரிதப்படுத்தப்படும், இது LLM களை விரைவாக இணைப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது, மேலும் அவைகளில் அதிகமானவை. அது இன்னும் தன்னிடம் உள்ள தரவுகளின் தொகுப்பின் அளவைக் கொண்டு வரப்பட்டாலும், அதைக் கொண்டு அது என்ன செய்ய முடியும் என்பது பாரியஅளவில் விரிவடைந்து, நம்மைப் பெயரிடப்படாத பகுதிக்குள் கொண்டு வரும். செய்யறிவு(AI) ஆய்வின் மற்ற பகுதியான AGI-செயற்கை பொது நுண்ணறிவின் வளர்ச்சியில் இன்னும் குறிப்பிடப்படாத பகுதிகளைக் காணலாம். இது ஒரு மனிதனின் மட்டத்தில் அல்லது இன்னும் சிறப்பாக சிந்திக்கக்கூடிய கணினியாகும். குவாண்டம் கணினிகள் மிகவும் சக்திவாய்ந்தவை, இது உண்மையில் சாத்தியமான ஒன்றாக மாறக்கூடும், மேலும் இந்த நூற்றாண்டில் கூட அறிவியல் புனைகதை எதிர்காலத்தில் வாழ அனுமதிக்கும். 1 காலநிலை மாற்றத்தை எதிர்த்தல் குவாண்டம் கணிணி, நாம் எதிர்கொள்ளும் மற்றொரு பெரிய சவாலைக் கண்டறிய உதவலாம், அதாவது இன்னும் கடுமையான காலநிலை மாற்ற நெருக்கடி. நம்முடைய கோளின் வானிலை அமைப்பு சிக்கலானது சிறந்த நேரங்களில் கணிக்க முடியாதது, நம்முடைய மாதிரிகள் அனைத்தும் சில நேரம் மட்டுமே சிறப்பாக செயல்படுகின்றன. சிறிய மாற்றம் கூட ஒரு knock-on விளைவை ஏற்படுத்தும், இது ஒரு மாதிரியை பயனற்றதாக மாற்றலாம். கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்த வானிலை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இந்த மாதிரிகள் அவற்றின் வரம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. நமது தற்போதைய கணினிகள் நல்ல நீண்ட தூர கணிப்புகளை உருவாக்குவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தரவுகள் அதிகம் உள்ளன – அறிவியல் இதழான Eos இந்த சிக்கலைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் கொண்டுள்ளது. குவாண்டம் கணினிகள், பணிமுடிவுபெறும் வரை இருக்கலாம். அதிக மூலக் கணிப்புப் பணியில் ஈடுபடுத்துவது, இப்போது என்ன நடக்கிறது என்பதைச் சிறப்பாகக் கையாள்வது மட்டுமல்லாமல், நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும் அனுமதிக்கலாம். சிறந்த மாதிரிகள் நிச்சயமாக நிலைமையை மோசமாக்குவதைத் தவிர்க்க உதவும். குவாண்டம் கணிணியானது உலகை பல வழிகளில் மாற்றுவதற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் சிலவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இந்த மூன்று துறைகளும் விரைவான மாற்றத்தைக் காண்பது மட்டுமல்லாமல், நாம் வாழும் முறையை தீவிரமாக மாற்றக்கூடும். இறுதியில், குவாண்டம் கணினியின் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை காலம்தான் பதில்சொல்லும். https://kaniyam.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/
  20. RESULT 20th Match (D/N), Indore, October 19, 2025, ICC Women's World Cup England Women 288/8 India Women (50 ov, T:289) 284/6 ENG Women won by 4 runs
  21. 2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி 16 Oct, 2025 | 08:10 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன. ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன. இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்தே அவை ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளன. இப் பிராந்தியத்திலிருந்து மேலும் ஒரு அணி ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெறும். அல் அமீரத்தில் இன்று நடைபெற்ற சமோஆ உடனான போட்டியில் அமோக வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் சுப்பர் 6 சுற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது. ஓமானும் நேபாளமும் முதலிடத்தில் இருப்பதுடன் அவற்றின் நிலைகளை நிகர ஓட்ட வேகம் வேறுபடுத்துகிறது. ஐக்கிய அரபு இராச்சியம் தனது அடுத்த சுப்பர் 6 சுற்று போட்டியில் ஜப்பானை நாளை எதிர்த்தாடவுள்ளது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் கத்தாரும் பங்குபற்றுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வரவேற்பு நாடுகளாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளும் 2024 உலகக் கிண்ணத்தில் வரவேற்பு நாடுகளை விட முதல் 7 இடங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளும் ஐசிசி ரி20 தரவரிசைப் பிரகாரம் அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் ஐசிசி ரி20 உலகக் கிண்ணம் - 2026இல் நேரடியாக விளையாட தகுதிபெற்றன. தகுதிகாண் சுற்றுகள் மூலம் கனடா (அமெரிக்க வலயம்), இத்தாலி மற்றும் நெதர்லாந்து (ஐரோப்பிய வலயம்), நமிபியா மற்றும் ஸிம்பாப்வே (ஆபிரிக்க வலயம்), நேபாளம் மற்றும் ஓமான் (ஆசிய வலயம்) ஆகியன ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட தகதிபெற்றுள்ளன. கடைசி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/227929
  22. குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்! கலைமதி சிவகுரு நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது. எப்படி செயல்படுகிறது? Superposition – ஒரு க்யூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்கும். இதனால் ஒரே நேரத்தில் பல கணக்கீடுகள் செய்ய இயலும். Entanglement – இரண்டு க்யூபிட்கள் இணைந்தவுடன், ஒன்று மாறினால் இன்னொன்றும் உடனே மாறும். இதனால் தகவல் பரிமாற்றம் வேகமாகும். Quantum Gates – பாரம்பரிய கணினிகளில் “Logic Gates” பயன்படுத்தப்படும். குவாண்டம் கணினிகளில் “Quantum Gates” பயன்படுத்தப்படுகிறது. பயன்பாடுகள் குவாண்டம் கணினியின் சக்தி எதிர்காலத்தில் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்: 1. ரசாயனம் & மருந்து கண்டுபிடிப்பு மூலக்கூறு/புரதங்களின் துல்லியமான எரிசக்தி நிலைகள், வினை பாதைகள், பைண்டிங் ஆஃபினிட்டி ஆகியவற்றை கணிக்கல். செயல்படும் விதம் VQE (Variational Quantum Eigensolver), UCC, QPE (Quantum Phase Estimation) போன்ற அல்காரிதம். பலன்: புதிய மருந்துகளை உருவாக்கும் போது மூலக்கூறு அமைப்புகளை விரைவாக கணக்கிட உதவும். NISQ கால கட்டத்தில் ஹைப்ரிட் (Classical+Quantum) முறைகள் ஆராய்ச்சியில் பயன்படும். 2. ஆப்டிமைசேஷன் (திட்டமிடல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை-செயின்) ரோட்டிங், அட்டவணை அமைப்பு, பவர்-கிரிட் லோடு பாலன்சிங், வானூர்தி/ரயில் ஸ்லாட் ஒதுக்கீடு. செயல்படும் விதம் QAOA (Quantum Approximate Optimization Algorithm), QUBO மேப்பிங், குவாண்டம் அந்நீலிங். பலன்: செலவு/நேரம் குறைப்பு, பெரிய தேடல்-வெளியில் நல்ல தீர்வு வேகமாக. பைலட்-புரூஃப்-ஆஃப்-கான்செப்ட்கள்; உற்பத்தி தர நிலைக்கு வர Error-correction தேவை. 3. குவாண்டம்-சிமுலேஷன் (பொருட்வியல், உயர் ஆற்றல், காலநிலை) காந்தப் பொருட்கள், சூப்பர் கண்டக்டர்கள், திரவ இதிர்புரை (turbulence) போன்ற சிக்கலான அமைப்புகள். செயல்படும் விதம் குவாண்டம் சர்க்கூட் அடிப்படையிலான சிமுலேஷன், Trotterization/Analog simulation. பலன்: புதிய பொருட்கள், அதிக திறன் கொண்ட எரிசக்தி சேமிப்பு. முன்னேற்றம் வேகமாக இருப்பினும் fault-tolerant கணினி கிடைத்தால் வலிமையான ஜம்ப். 4. கோட்பாடு (Cryptography) – தற்போதைய கடவுச்சொல் முறைகளை உடைத்துவிடும் திறன் கொண்டது. அதேசமயம், புதிய பாதுகாப்பான குறியாக்க முறைகளுக்கும் வழி வகுக்கும். 5. செயற்கை நுண்ணறிவு (AI) – மெஷின் லெர்னிங் மற்றும் தரவு பகுப்பாய்வை மிக வேகமாகச் செய்யும். 6. விண்வெளி ஆராய்ச்சி – பெரிய அளவிலான சிக்கலான கணக்குகளை எளிதாகக் கணக்கிட உதவும். 7. சுற்றுச்சூழல் – வானிலை முன்னறிவிப்பு, இயற்கை பேரிடர் கணிப்பு ஆகியவற்றில் துல்லியத்தைக் கூட்டும். சவால்கள்: குவாண்டம் கணினி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சில சவால்கள் உள்ளன. க்யூபிட்களை நிலைத்திருக்கச் செய்வது கடினம் (Quantum Decoherence). இயங்க அதிக குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது (பெரும் அளவிலான “super-cooling”). செலவுகள் மிக அதிகம். எதிர்காலம்: இப்போது Google, IBM, Microsoft, Intel போன்ற பெரிய நிறுவனங்கள் குவாண்டம் கணினியை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஒரு நாள் குவாண்டம் கணினி முழுமையாக வந்துவிட்டால், கணக்கீட்டின் வேகம் கணித்துக்கூட முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் “புதிய யுகம்” தொடங்கும். https://kalkionline.com/science-and-technology/quantum-computing-is-a-new-era-of-computing-technological-revolution
  23. Live 20th Match (D/N), Indore, October 19, 2025, ICC Women's World Cup England Women 288/8 India Women (41.2/50 ov, T:289) 234/4 IND Women need 55 runs in 52 balls. Current RR: 5.66 • Required RR: 6.34 • Last 5 ov (RR): 32/1 (6.40)
  24. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் ஃபெர்குஸ் வால்ஷ் ஆசிரியர், மருத்துவம் 9 மணி நேரங்களுக்கு முன்னர் புற்றுநோயின் ஐம்பதிற்கும் மேற்பட்ட வகைகளை கண்டறிய உதவும் அற்புதமான ரத்தப் பரிசோதனை ஒன்று, நோயறிதலை விரைவுபடுத்த உதவும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் முடிவு, இந்தப் பரிசோதனையால் பல வகையிலான புற்றுநோய்களை அடையாளம் காண முடிந்தது என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டவர்களுக்கு முக்கால்வாசிப் பேருக்கு எந்தவிதமான ஸ்கிரீனிங்கும் இல்லை. பாதிக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டன, அதாவது அவற்றுக்கான சிகிச்சை எளிதானவை மற்றும் குணப்படுத்தக்கூடியவை. அமெரிக்காவின் கிரெயில் மருந்து நிறுவனம் கேலரி சோதனையை வடிவமைத்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 25,000 பேரிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கிட்டத்தட்ட நூறில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. 62% பேருக்கு பின்னர் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. இந்த சோதனை, புற்றுநோய் பரிசோதனைக்கான அணுகுமுறையை "அடிப்படையில் இருந்தே மாற்றக்கூடும்" என தரவுகள் தெரிவிப்பதாக ஓரேகான் ஹெல்த் & சயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு மருத்துவத்தின் இணைப் பேராசிரியரான முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் நிமா நபவிசாதே கூறினார். பல வகையான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது, முழுமையாக குணப்படுத்தவோ அல்லது சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவோ உதவும் என்று அவர் கூறுகிறார். இந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு வந்தவர்களில் 99%க்கும் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் இல்லை என்று இந்த சோதனை சரியாக கண்டறிந்தது. மார்பகம், குடல் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனையுடன் இந்த பரிசோதனையும் இணைந்தபோது, கண்டறியப்பட்ட புற்றுநோய் வகைகளின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்தது. அதிலும் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் முக்கால்வாசி, கருப்பை, கல்லீரல், வயிறு, சிறுநீர்ப்பை மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற இதுவரை எந்தப் பரிசோதனை செயல் திட்டமும் இல்லாதவை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு புற்றுநோயின் மூலத்தை இரத்தப் பரிசோதனை சரியாகக் கண்டறிந்தது. இந்த முடிவுகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் ரத்தப் பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. ஆனால், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளை இந்த ரத்தப் பரிசோதனை குறைக்கிறதா என்பதைக் காட்ட கூடுதல் சான்றுகள் தேவை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் லண்டனில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச் நிறுவனத்தின் மருத்துவப் புற்றுநோய் மரபியல் பேராசிரியர் கிளேர் டர்ன்புல்லின் கருத்துப்படி, "கேலரியின் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல், இறப்பு தொடர்பான விஷயத்தில் நேர்மறையாக உதவுகிறதா என்பதை நிறுவ, இறப்பை இறுதிப் புள்ளியாகக் கொண்ட ஆய்வுகளின் தரவு அவசியம்." 140,000 NHS நோயாளிகளை உள்ளடக்கிய மூன்று ஆண்டு சோதனையின் முடிவுகள், இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். சோதனையின் முடிவுகள் சாதகமாக அமைந்தால், மேலும் பத்து லட்சம் பேருக்கு சோதனைகளை விரிவுபடுத்துவதாக தேசிய சுகாதார சேவை (NHS) முன்பு கூறியிருந்தது. கிரெயிலின் பயோஃபார்மாவின் தலைவர் சர் ஹர்பால் குமார் இதனை "பரிசீலனைக்குரிய சிறப்பான முடிவுகள்" என்று அழைத்தார். பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பேசிய ஹர்பால் குமார், "புற்றுநோயால் ஏற்படும் பெருமளவிலான இறப்புக்குக் காரணம், புற்றுநோய்களை மிகவும் தாமதமாகக் கண்டுபிடிப்பது தான்" என்றார். பல புற்றுநோய்கள் "ஏற்கனவே மிகவும் முற்றிய நிலையில்" இருக்கும் போது கண்டறியப்படுகின்றன. எனவே, "மிகவும் பயனுள்ள மற்றும் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைப் பயன்படுத்த நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, முன்கூட்டியே கண்டறிதலுக்கு மாறுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்று விளக்கினார். "பிரிட்டன் தேசிய ஸ்கிரீனிங் கமிட்டி, ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வதிலும், இந்த சோதனைகளை தேசிய சுகாதார சேவை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்" என்று அவர் மேலும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j80w5g9xyo
  25. 18 Oct, 2025 | 01:39 PM இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது. அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிரந்தரக் குடியிருப்பாளர் என்றும் மஹ்மூத் பொய்கூறி விசா பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் விசா பெறுவதிலும் மோசடி செய்துள்ளார். விசா மோசடி மற்றும் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிக்கச் சதித் திட்டம் தீட்டியதாக மஹ்மூத் கைது செய்யப்பட்டுள்ளார். மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற பெயரிலும், அதே வயதிலும் மற்றொரு நபர் இருப்பதாகவும், அவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/228063

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.