Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி Published By: Digital Desk 3 19 Oct, 2025 | 11:41 AM இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ இராஜதந்திர விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி சூரிய நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று சனிக்கிமை (18) இரவு கட்டுநாயக்கா,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாககலாநிதி ஹரிணி சூரிய கடந்த 16 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இதன்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் . இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக புது டெல்லியிலுள்ள NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த NDTV உலக மாநாட்டில் கலாநிதி ஹரிணி சூரிய முக்கிய உரையை நிகழ்த்தினார். https://www.virakesari.lk/article/228126
  2. இந்தியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து 19 Oct, 2025 | 07:24 PM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.ஹீதர் நைட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.அத்துடன் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்டுடன் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் ஹீதர் நைட் இட்டார்.நைட்டை விட அமி ஜோன்ஸ் 56 ஓட்டங்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 38 ஓட்டங்களையும் டமி போமன்ட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்படும். இந்தியா வெற்றிபெற்றால் இரண்டு அணிகளும் அடுத்த போட்டிகளின் முடிவு வரை காத்திருக்க வேண்டிவரும்.இந்தியா இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுவிட்டன. https://www.virakesari.lk/article/228162
  3. ஆஸ்திரேலியா Vs இந்தியா: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி - தோல்விக்கான முக்கிய காரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி மாற்றப்பட்ட 131 என்ற இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது ஆஸ்திரேலியா. பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு முதல் போட்டி. சொற்ப ரன்களில் அவுட்டான கில், ரோஹித் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கில் 10 ரன்களும், ரோஹித் 8 ரன்களும் சேர்த்தனர். ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா இருவரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். முதல் பந்திலேயே தன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோஹித், சில பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தார். மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் இருவரின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவரால் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹேசல்வுட் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாத ரோஹித், இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முந்தைய பந்துகளை வெளியே வீசிக்கொண்டிருந்த ஹேசல்வுட், நான்காவது பந்தை கொஞ்சம் பின்னால் பிட்ச் செய்ததோடு மட்டுமல்லாமல், லைனையும் சற்று உள்ளே கொண்டுவந்தார். ஹேசல்வுட்டின் வழக்கமான பௌன்ஸ் ரோஹித்துக்கு அதிர்ச்சியளித்தது. அவர் தன்னுடைய பேட்டை விலக்க முடியாமல் போக, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிந்த மேட் ரென்ஷா கையில் தஞ்சமடைந்தது. 14 பந்துகளை சந்தித்த ரோஹித் 8 ரன்கள் எடுத்தார். கோலி டக்-அவுட் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 8 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார் விராட் கோலி. ரோஹித்துக்கு அடுத்து களமிறங்கிய கோலியாலும் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. முதல் 7 பந்துகளிலும் ரன் எடுக்க முடியாத அவர், எட்டாவது பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே நன்கு சென்றது. அதைத் துரத்திச் சென்று கோலி அடிக்க, பாயின்ட் திசையில் நின்றிருந்த கூப்பர் கானலி பாய்ந்து கேட்ச் செய்தார். 8 பந்துகளை சந்தித்து ரன்னே எடுக்க முடியாமல் வெளியேறினார் விராட் கோலி. இரண்டு சீனியர் வீரர்கள் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்த இந்திய அணிக்கு 9வது ஓவரில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நாதன் எல்லிஸ் வீசிய முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார் புதிய கேப்டன் ஷுப்மன் கில். அவர் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் அவுட் ஆக, 45/4 என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி. மழையால் பாதித்த ஆட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது. பெர்த் நகரில் மழை அடிக்கடி ஆட்டத்தை பாதித்தது. அதனால் போட்டி அடிக்கடி நிறுத்தப்படுவதும், மீண்டும் தொடங்குவதும், மீண்டும் நிறுத்தப்படுவதுமாகவே சென்றது. இதனால் ஓவர்களும் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆரம்ப கட்ட தடைகளுக்குப் பின் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டம், மேலும் தொடர்ந்த மழையில் கடைசியில் 26 ஓவர் ஆட்டமாக மாறியது. மழை ஒருபக்கம் தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்கள். சரியான இடத்தில் பந்துவீசி ரன் எடுப்பதை கடினமாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், கேப்டன் மிட்செல் மார்ஷ் எடுத்த சில முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தன. உதாரணமாக, 12வது ஓவரில் ஏற்பட்ட மழை தடங்கலுக்குப் பிறகே ஆட்டம் 35 ஓவர் கொண்டதாக மாறிவிட்டது. அதனால் ஒரு பௌலர் அதிகபட்சமாக 7 ஓவர்கள் தான் பந்துவீச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் ஸ்பெல்லில் ஓரேயடியாக 6 ஓவர்கள் பந்துவீசியிருந்த ஹேசல்வுட்டை 14வது ஓவரும் எடுத்து வந்தார் மார்ஷ். அதுவே இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட்டின் கடைசி ஓவராக அமைந்திருக்கும். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயரைக் குறிவைத்து, அவர் விக்கெட்டை எடுக்க மிகவும் தைரியமான அந்த முடிவை எடுத்தார். அதற்குப் பலனாக அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசல்வுட். அதேவேகத்தில் மிட்செல் ஸ்டார்க்கையும் விடாமல் பயன்படுத்தினார் அவர். தடுமாறிக்கொண்டிருந்த இந்திய பேட்டர்களை தன்னுடைய பௌலர்கள் மூலம் மேலும் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார். மிகவும் அட்டாகிங் கேப்டன்சியாகக் கருதப்பட்டாலும், ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து அவர் செய்த செயலுக்கு தொடர்ந்து பலன் கிடைத்தது. வல்லுநர்களும் அவருடைய முடிவுகளை வெகுவாகப் பாராட்டினார்கள். ராகுல் - அக்‌ஷர் பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் சேர்த்தார். அந்த 4 விக்கெட்டுகள் வேகமாக போனதால், ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல், அக்‌ஷர் பட்டேல் இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே அடித்தார்கள். போட்டி 26 ஓவர்களாகக் குறைந்த பின்னர், ரன் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடித்து ஆடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, 31 ரன்கள் எடுத்திருந்த அக்‌ஷர் பட்டேல் மேத்யூ கூனமென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கே.எல்.ராகுல் மற்றும் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடித்த சில பௌண்டரிகளால் இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன் அறிமுக போட்டியில் ஆடிய நித்திஷ் குமார் ரெட்டி 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட், கூனமென், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலக்கு மாற்றம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிஎல்எஸ் முறைப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. 26 ஓவர்களில் 131 என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எப்போதுமே சவால் கொடுப்பவரான டிராவிஸ் ஹெட்டை இரண்டாவது ஓவரிலேயே வெளியேற்றி நம்பிக்கை கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. மேத்யூ ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தைக் காட்டினார். ஷார்ட் வெளியேறியதும் மார்ஷ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஜாஷ் ஃபிலிப். அவருக்கு அடுத்து வந்த அறிமுக வீரர் ரென்ஷாவும் எளிதாக பேட்டிங் செய்து ரன் சேர்த்தார். இந்திய தரப்பில் அவர்களுக்கு பெரிய சவால்களைக் கொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் ஆட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ் 48 ரன்கள் விளாசினார். இந்திய பௌலர்களில் மொஹம்மது சிராஜ், அக்‌ஷர் பட்டேல் இருவரும் மட்டுமே ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசினார்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கினார்கள். அதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் 21.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடனும், ரென்ஷா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய பௌலர்களில் அர்ஷ்தீப், அக்‌ஷர், வாஷிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் அசத்திய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கேப்டன் கில் பேசியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்றார் கேப்டன் கில். தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில், "ஆஸ்திரேலியாவில் ஆடுவது எப்போதுமே கடினமானது. பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழக்கும்போது நீங்கள் எப்போதுமே பின்தங்கிவிடுவீர்கள். இந்தப் போட்டியில் சில சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன, சில படிப்பினைகளும் கிடைத்திருக்கின்றன. 26 ஓவர்களில் 130 ரன்களை டிஃபண்ட் செய்யும்போது ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்று கூறினார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் அக்டோபர் 23ம் தேதி நடக்கிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygkjnezz9o
  4. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன? 1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும். அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. 2. புதிய கேப்டன் ஷுப்மன் கில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும். மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில். ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்‌ஷர் படேல், "ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது" என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம். 3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார். 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும். குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம். பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம். இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும். 4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும். 5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது. இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும். தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly4g8jzwqgo
  5. "dry fruits (உலர் பழங்கள்) - நல்லதா? என்னென்ன சத்துக்கள் உள்ளன? யார் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? "Dry fruits - are they good? What nutrients are present and how much? Who can eat? Who should not eat? How much can we eat?" | Dr Arunkumar அண்ணை, இரத்தச் சக்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் 1 பேரீச்சம்பழம் உண்பது பிரச்சனை இருக்காது.
  6. AI Overview யூக்ளிட் தொலைநோக்கி என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் ஏவிய ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும். இது பிரபஞ்சத்தின் இருண்ட பொருள் (dark matter) மற்றும் இருண்ட ஆற்றல் (dark energy) பற்றி ஆய்வு செய்ய, பேரண்டத்தின் முடுக்கத்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் பில்லியன் கணக்கான அண்டங்களை ஆய்வு செய்யவும், பிரபஞ்சத்தின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நோக்கம்: இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலைப் புரிந்துகொள்ளுதல். செயல்பாடு: பேரண்டத்தின் முடுக்கத்தை துல்லியமாக அளவிடுதல். உருவாக்கம்: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் யூக்ளிட் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. ஏவுதல்: ஜூலை 1, 2023 அன்று ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆய்வுப் பணி: ஆறு ஆண்டு பயணத்தின் போது வானத்தின் ஒரு பெரிய பகுதியை கண்காணித்து, 36% பகுதியை ஆய்வு செய்யும். சாதனைகள்: பிரபஞ்சத்தின் 3D வரைபடத்தை உருவாக்கியுள்ளது, மேலும் பல கேலக்ஸிகளை படம் பிடித்துள்ளது. Euclid's first deep dive into the Universe The European Space Agency’s Euclid space telescope mission has scouted out the three areas in the sky where it will eventually provide the deepest observations of its mission. In just one week of observations, with one scan of each region so far, Euclid already spotted 26 million galaxies. The farthest of those are up to 10.5 billion light-years away. In the coming years, Euclid will pass over these three regions tens of times, capturing many more faraway galaxies, making these fields truly ‘deep’ by the end of the nominal mission in 2030. The first glimpse of 63 square degrees of the sky, the equivalent area of more than 300 times the full Moon, already gives an impressive preview of the scale of Euclid’s grand cosmic atlas when the mission is complete. This atlas will cover one-third of the entire sky – 14 000 square degrees – in this high-quality detail. Explore the three deep field previews in ESASky: Euclid Deep Field South: https://sky.esa.int/esasky/?hide_welc... Euclid Deep Field Fornax: https://sky.esa.int/esasky/?target=20... Euclid Deep Field North: https://sky.esa.int/esasky/?target=20... Read more: https://www.esa.int/Science_Explorati...
  7. 18 Oct, 2025 | 04:11 PM "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228077
  8. அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து, பிளேன்டீயை உறிஞ்சி குடிக்கிறான். அதன் சுவை அவனுக்கு ஏதோ செய்ய அம்மாவிடம் திரும்பி. “அம்மாவோ.. தேத்தண்ணி கசப்பா இருக்ககும்மா.பால் டீ தாங்க..” ”அட போடா தம்பி.. பால் டீக்கு நான் எங்க போவேன்.. அப்பா ஸ்டோருலாதான் வேலை செய்யிது. … என்னத்துக்கு பிரயோஜம்.. ஒரு நாளாவது நல்ல தேத்தண்ணி குடிச்சிருப்பமா.” பச்ச தண்ணியில் முகப் கழுவிய குளிர் நடுக்கத்தில். கட்டியிருந்த சாரத்தில் முகத்தை துவட்டிக் கொண்டு அவள் கையில் இருந்த தேத்தண்ணிய வாங்கி குடித்தவன். முகம் கோணம் மாறியவனாக வாசலில் சென்று துப்பிவிட்டு. கெட்ட வார்த்தையில் தேத்தண்ணிய திட்டினான்.. “ராஜி..ஓய் ராஜி. அட என்னாப்பா செய்ற.. டைம் போச்சி..ஓடியா..போகலாம். “ செல்வராஜை அழைத்தப்படி பெருமாள் வாசலில் நிற்கிறான். ”ஏய் தேத்தண்ணி கொஞ்சம் ஊத்துப்புள்ள.” செல்வராஜ் பெருமாளை ஏக்கமாக பார்த்தவன். “ஆத்தா அய்யாவுக்கு அந்த தண்ணிய ஊத்து..” என்று நக்கலாக சொல்கிறான். அவள் சிரிப்பை அடக்க முடியாது மீதமாக இருந்த சாயத்தை பிளாஸ்டிக் ஜொக்கில் ஊற்றி பெருமாளிடம் தந்தவள்.. “மச்சான்.. குடிச்சிப்புட்டு ராங்கி பேச கூடாது-‘ பெருமாள் முகம் மாறும் என்ற எண்ணத்தில் அவர்கள் பார்க்க, ”த்து?” என்று துப்பிவிட்டு அவன் அவர்களை முறைக்க. அவள் உடனே, “இந்த மொறப்பு எல்லாம் ஒண்ணும் ஆகது மச்சான்…ஏமச்சான்… உனக்கு ஒரு பிடி தேயிலை துாளை கொண்டு வந்து தர துப்பில்ல. ஸ்டோரு பெக்டறியிலதான் வேலை ஆனால் சொணைய குடிச்சி குடிச்சி சொறனையே இல்லாம போயிருச்சி.” “நாம நட்டு நாம நம்ம பிள்ளளைகளை போல காத்து பார்த்து நட்ட தேயிலை நமக்கு சொந்தமில்லலை- அட்டை கடியில வேகாத வெயிலில மழையில நாம காலத்திற்கும் கஸ்டம் பட்டாலும் கடசியில நமக்கு அந்த கழிச்சி கட்டின சொணையதான் குடிக்கனும்.. தலைவரு மாறுக இதெல்லாம் கேட்க மாட்டாங்க… போ மச்சான் சாகுறதுக்குள்ள ஒரு நாளாவது நல்ல தேயிலை துாள்ள தேதண்ணி குடிச்சிடனும்.” செல்வராஜிம் பெருமாளும் அவள் உண்மையாகவே பேசுகிறாள் என்ற ஆதங்கத்தை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த பார்வையில் ஏதோவொன்று இருந்தது. இந்த தேயிலை ஆலையின் சத்தம் அவனுக்கு பழகி போயிருந்தது. ஆனாலும் இன்று அந்த ஆலையின் சத்தங்களை விட அவன் உள் மனதில் மனைவியின் ஆதங்கமான வார்த்தையின் சத்தம் அவனை சதா நேரமும் சங்கடமாக மாற்றியது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் இந்த தேயிலை ஆலையின் தொழிலாளியாக இருக்கிறான். இதுவரை ஒரு நாள் கூட ஒரு பிடி தேயிலை அவன் அங்கே இருந்து திருடினது இல்லை, அவனுக்குள் ஏதோவொரு அறம் அவனை அப்படி செய்ய தூண்டியது இல்லை. அவன் அதைப்பற்றி யோசிப்பது கூட இல்லை. “மச்சான் என்ன யோசிக்கிற. நாம அந்த பெக்டறியில ஒரு பிடி தேயிலை துாளை எடுக்கிறது திருட்டு இல்ல மச்சான்.. கீலோ கிலோ அய்யா மாறுக திடுடுறாங்க… ஆனால் நாம கொஞ்சோண்டு எடுக்கறது குத்தம் இல்ல. அது நமக்கு உள்ள உரிமை மச்சான்..” பெருமாள் சாக்கு மலையயை கடந்து வரும் போது சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. எப்படியோ அவன் மனது ஒரு தீர்மானத்திற்கு வந்தது. ஆனாலும் அவனுக்குள் உள்ள ஒருவன் வேண்டாம், இதேல்லாம் நல்லது இல்லை. நேர்மையா இருந்திட்டு போயிருனும் தம்பி. தனது தகப்பன் பேசும் நீதி கதைகளை நினைத்து கொண்டான் அவன். அதிகாலையின் குளிரான வேளையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக படுத்திருக்கிறார்கள். அருகில் சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவள் சிணுங்கும் குரலில்.. “மச்சான்….” “ம்..” ”லேபர் டஷ்ட்டுனா என்னா மச்சான்..?” ”சொணதான் டஷ்ட்டு தேயிலை.. கழிவுதான் அது..” ”நாம குடிக்கும் டீ. கழிவுதான்..” ”நமக்கெல்லாம் தொறமாறு குடிக்கிற தேயிலை கிடைக்காதா.. நாம என்ன நாக்கு செத்த ஜென்மங்களா.. எப்ப மச்சான் நாமளும் அது மாதிரியான தேத்தண்ணியை குடிப்போம்..” என அவனது காதுகளில் முணுமுணுக்கிறான்.. வெறித்த பார்வையோடு மோட்டுவளையை பார்த்து அவன் படுத்திருக்கிறான். இருண்ட திரையில் கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. மெல்லிய காலை பொழுது கதவின் ஊடாக வீட்டுக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிறது. மெல்ல முன்பு நகர்ந்து வாசலின் ஊடாக அப்படியே தேயிலை தோட்டம் நிரம்பி ததும்பும் மலைவெளியில் பரவுகிறது. மஞ்சு மூட்டங்கள் தூரத்து சிகரங்களில் தழுவ, அப்படியே அந்த அதிகாலை நேரத்து மலைப் பிராந்தியத்தை மெல்ல வலம் வருகிறது. தொலைவில் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட அந்த தேயிலை தயாரிப்பு ஆலை அமைந்திருப்பது தெரிகிறது. அப்படியே வெண்பனியின் ஊடாக குளிர் கொட்டி கிடக்கின்றது, வெண்மை பரவுகிறது வாசல் சுதவை திறந்து கொண்டு செல்வராஜ் வெளியில் வருகிறான். தூக்க கலக்கத்தில் வெளியே வரும் அவனது மனதில் ஏதோவொரு விரக்தி தெரிகிறது. வீட்டுக்கு முன்புறம் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை எடுத்து வாயை கொப்பளித்து, முகத்தை கழுவி ஆசுவாசமடைகிறான்.. அப்படியே தோளில் போட்டிருந்த புதிய துண்டால் முகத்தை துடைத்தபடியே அண்ணாந்து வானத்தை பார்க்கிறான். அருகில் மரங்களின் ஊடாக பாயும் வெளிச்சம் அவனது முகத்தில் ஒளி கோடுகள் தீட்டுகிறது. அவன் அண்ணாந்து பார்க்கையில் வானத்தில் மேகங்கள் அலைகின்றன.காலை நேர வெளிச்ச ரேகைகள் அப்படியே மஞ்சள் நிறத்தில் ஒளிர்கின்றன. லயத்தின் ரேடியோ சத்தம் பேச்சி சத்தம், காலை நேர பரப்பரப்பு தெரிகிறது. இன்றைய பொழுதாவது நல்லபடியா விடியனும் என மனதுக்குள் முணுமுணுத்தபடியே வாசலை நோக்கி திரும்பி நடக்கிறான். இதற்கிடையில் வீட்டுக்குள்ளிருந்து அன்பரசு படியிலிருந்து இறங்கி வலப்புறமாக ஓடுகிறான். வீட்டின் அழுக்கு படிந்த மங்கிய நிறம் கொண்ட சன்னலில் இருந்து அடுப்பின் புகை ஒரு பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல வெளியே பரவுகிறது. ஏக்க பெருமூச்சை விட்டபடியே அப்படியே அக்காடவென வாசலில் வந்து அமர்கிறான். அவன் லேசாக வலது புறம் திரும்ப, அங்கே சிறுவன் விட்டிலோ அல்லது வண்ணத்துப்பூச்சியோ எதுவோ பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் மறுபடியும் மகன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைக்க திரும்புகையில் அவள் வந்து பிளாஸ்டிக் ஜொக்கில் கருப்பு தேனீரை கொண்டு வந்து வைக்கிறாள். “டேய் அன்பரசு இங்க வா.” என சிறுவனை அழைத்தபடியே மீண்டும் உள்ளே சென்று மறைந்து விடுகிறாள். அவன் அந்த தேநீரை வெறித்து பார்க்கிறான். அவன் நினைவு மெல்ல தேநீரை நோக்கி குவிகிறது. காலையில் அவனது காதுகளில் கிசுகிசுத்த எப்ப மச்சான் நல்ல தேத்தண்ணிய நாம குடிக்க போறோம்– என்ற அவளது குரல் எதிரொலிக்கிறது. அவன் தேநீரை எடுத்து பருகியதும், அதை மீண்டும் மனதுக்குள்ள சொல்லியபடியே அடுத்த வாய் பருகுகிறான். சிறுவனும் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடுகிறான். படியில் குடித்து முடித்த காலி ஜொக்கை வைக்கிறான்…அப்படியே அந்த மஞ்சல் நிற ஜொக்கை பார்த்தப்படி உட்காந்திருக்கிறான். அரையின் இருட்டிலிருந்து டப்பென்ற ஓசையுடன் பெட்டி மூடிகிறது… சிறுவன் கையில் எதையோ எடுத்துக் கொண்டு வெளியில் ஓடுகிறான். அவனது கையில் மறைத்து வைத்திருக்கும் டொபி காகிதத்தால் தனது ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு அப்படியே சுற்றி சுற்றி பார்க்கிறான்…சிவப்பு வண்ணத்தில் அந்த தேயிலை தோட்டமும், மலை பிராந்தியமும், வீடும், கட்டிடங்களும் சுழன்று சுழன்று வருகின்றன அன்பரசு கையில் உள்ள டொபி தாள்கள் அடர் பிரவுண் நிற திரையாக மாற்றி மாற்றி மெல்ல பின்னோக்கி நகர்கிறது. சாராய போத்தலில் ஊற்றப்பட்ட கருப்பு தேநீர் அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கிறது. சாராய போத்தல் இப்போது அன்பரசு பார்வையில் நீல வண்ணமாக தெரிகிறது. அன்பரசை அந்த தோற்ற மாற்றம் ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்கின்றது, செல்வராஜ் சட்டையை சரி செய்த படி மாட்டுகிறான். அவள் கண்ணாடியை பார்த்து தனது முகத்தை சரி செய்து கொள்கிறாள்…தலைக்கு போடும் முக்காட்டு துணியை எடுத்துக் கொள்கிறாள். அவனும் சாரத்தை மடித்து கலுசன் தெரியும் வகையில் கட்டிக் கொள்கிறான். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை வெயில் மெல்ல ஏறிக் கொண்டிருக்கிறது. அந்த கருப்பு தேநீர் ஊற்றப்பட்ட சாராய போத்தலை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் கிளம்புகின்றனர். இருவரும் வெளியில் வந்து கதவை பூட்டப் போகும் நேரத்தில் சிறுவன் இருவரையும் இடித்துக் கொண்டு உளளே ஓடிப் போகிறான். பெட்டியை திறந்து சில பொருட்களை எடுத்து தனது கால்சட்டை மற்றும் சட்டை பைகளுக்குள் திணித்துக் கொள்கிறான். அன்பரசு மற்றொரு டொபி காகிதத்தால் பார்த்தபடியே நடந்து செல்கிறான. முற்றிலும் மாறுபட்ட வண்ணத்தில் அந்த மலை பிராந்தியம் ஒளிர்கிறது. செடிகள், மரங்கள் அனைத்தும் முற்றிலும் வேறு வண்ணத்தில் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள அனைத்துமே மாறுபட்ட வண்ணத்தில் தெரிகின்றன. அது மெல்ல மெல்ல ஊஞ்சாலாடியபடியே அந்த காட்சி செல்கிறது. அன்பரசின் பார்வையில் அது ஒரு சினிமா திரை போவே உள்ளது. அன்பரசு கடந்த இரண்டு நாட்களாகவே பாடசாலை போவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அவன் வீட்டில் இருக்கட்டும் என்று அம்மாவும் சரி என்று சொல்லி விட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவன் எப்போதும் தேயிலை மலையில் அப்பா வேலை செய்யும் டீ பெக்டறி பக்கம்தான் விளையாடுவான். இன்று அவன் தனியாகதான் விளையாட வேண்டும். கூட்டாளிகள் எல்லாம் ஸ்கூல் போய்விட்டர்கள். செல்வராஜிக்கு இருப்பது ஒரே மகன் இவன் மட்டுமே. அன்பரசு தான் வழமையாக விளையாடும் சைக்கிள் ரிம்மை விறகு காம்ராவில் இருந்து எடுத்துக் கொண்டான். அவர்கள் மூவரும் ஒற்றையடி பாதையில் நடந்து தார்ரோட்டில் நடக்க தொடங்கினார்கள். அன்பரசின் சைக்கிள் ரிம் சத்தம் மலைப்பகுதியில் ஒலிக்க தொடங்கியது. அவன் உற்சாகமாக சைக்கிளை செலுத்தினான். அந்த சத்தம் அவனுக்குள் கிளர்ச்சியை தந்தது. வெயில் நன்றாக ஏறிவிட்ட பொழுதில் தேயிலை தோட்டத்தின் மலைச் சரிவுகளில் மேடும் பள்ளமுமாக வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளில் இரண்டு பேரும் நடக்கிறார்கள். அவர்களை அன்பரசு பின் தொடர்கிறான் சைக்கிள் ரிம்முடன்.. அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு இழுக்க மாட்டாத குறையாக வெறுக் வெறுக் கென அந்த பிராந்தியத்தை வெற்று கால்களால் கடந்து கொண்டிருக்கின்றனர்., பாதை பிரியும் ஓரிடத்தில் நிற்கிறது. இருவரும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் இடமும் வலமுமாக பிரிந்து நடக்கிறார்கள். தேயிலை தயாரிப்பு ஆலையை நோக்கி அவன் நடக்கிறான். அவனுடன் அன்பரசும் கூடவே செல்கிறான். கொழுந்து பறிக்கும் மலைச் சரிவை நோக்கி அவள் நடக்கிறாள். செல்வராஜ் பெக்டறி வாசலில் காலலுக்கு நிற்கும் சிவாவிடம் அன்பரசை பார்க்க சொல்லி விட்டு உள்ளே செல்கிறான். அன்பரசு தேயிலை கழிவுகள் கொட்டப்படும் சொணை உள்ள பகுதியில் வண்டியை ஓட்டி விளையாடுகிறான்.அங்கே தேயிலை ஆலையில் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட தேயிலை சொண மலை போல கொட்டப்பபட்டு கிடக்கிறது. அதன் நறுமனம் சுகமாக இருக்கின்றது. அதன் ஈரகசிவு தரையில் வழிந்து போனதன் அடையாளங்கள் அங்கே தெரிகின்றது. பயங்கர சத்தத்துடன் தேயிலை தயாரிப்பு கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் பரபரவென வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். லாரியில் வந்து கொழுந்துகள் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்கப்படுகின்றன…உலர வைக்கப்படுகின்றன. வகை பிரிக்கப்படுகிறது. தனித்தனியாக அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றின் ஊடாக அவன் வேலை செய்து கொண்டே பக்கவாட்டில் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்துக் கொள்கிறான். மிகவும் உயரிய ரக தேயிலை தயாரிக்கும் அந்த எந்திரம் ஒடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து வரும் இசை லயமிக்க ஒலியும், வாசனையும் அப்படியே அவனை மெய் மறக்கச் செய்கின்றன.. அதையே வெறித்து பார்க்கிறான். திடீரென அலறல் சத்தம் கேட்கிறது.. சத்தம் கேட்ட திசையை நோக்கி தொழிலாளர்கள் அனைவரும் ஓடுகின்றனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவனும் ஓடுகிறான். அங்கே கையில் ரத்தம் சொட்ட சொட்ட சக தொழிலாளி வலியால் துடித்தபடி நிற்கிறான். ஆனால் கொழுந்து ஏற்றும் லொறி அவசர நேரத்தில் இல்லாத போது. அவன் வாசலில் தேயிலை பெட்டிகளை கொழும்புக்கு ஏற்றும் சிங்கள டைவர்கள் பரபரப்பாக நிற்க. செல்வராஜ் முறைப்பாக டிமேக்கரை பார்த்துவிட்டு காயம் பட்டவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடுகிறான் — ஆனால் வேறு வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தால் அங்கு ஓரமாக நிற்கும் சிவாவின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவன் காயப்பட்டவனுடன் செல்கிறான்.. வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் வேர்க்க விறுவிறுக்க செல்வராஜ் ஆட்டோவை செலுத்துகிறான். விரல்கள் துண்டிக்கப்பட்ட ரத்த கறை படிந்த கையின் மீது மருந்து தடவி வெள்ளை நிற பாண்டேஜ் கட்டப்படுகிறது. அங்கு ஆஸ்பத்திரியில் டாக்டர் இவர்களை இரக்கத்துடன் பார்த்தபடி சிகிச்சை அளிக்கிறார். இவ்வளவு லேட்டாவாவே வருவீங்க. என கண்டிக்கும் குரலில் இனிமையாக கேட்கிறார். இருவரும் உறைந்த மவுனத்துடன் நிற்கின்றனர். தரையில் ரத்தம் சிந்திய இடத்தை சிப்பந்தி ஒருவன் துடைக்கிறான் தொலைவில் மலையில் தூரத்து சரிவுகளில் அவள் உள்பட பலர் கொழுந்துகளை பறித்து தங்களது முதுகுப்புறம் தொங்கவிட்டுள்ள கூடையில் போட்டப்படி இருக்கின்றனர். தங்களுக்குள் பேசியபடியும், பாடியபடியும் வேலையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. அவள் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். அவளும் சக பெண்களும் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது யாரோ ஒருவர் பார்த்து வேலை பாருங்கள், பயங்கரமா அட்டைப் பூச்சி இருக்கு என்று எச்சரிக்கின்றனர். ஆமா அக்கா என்று இவள் பதில் அளிக்கும் போதே யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. அனைவரும் போய் பார்க்கிறார்கள்.. அவளை மறைவாகக் கொண்டு சென்று அட்டையை எடுத்து போடுகிறார்கள். கொழுந்து இலைகளின் மீது ரத்தம் படிகிறது. அதை ஏதோ ஒரு கை பறித்து கூடைக்குள் போடுகிறது. அவன் உள்பட சக பணியாளர்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதும் அவன் அந்த உயரிய தேயிலை எந்திரத்தை வெறித்து பார்க்கிறான். லாரிகளில் கொழுந்து இலைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். ஒரு தேயிலையில் உறைந்த ரத்தம் இருக்கிறது.-கொட்டிய தேயிலைகளை அள்ளி தேயிலை அரைக்க மூடைகளில் கொண்டு செல்கிறார்கள். எந்திரத்தின் அருகே அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ரத்த கறை படிந்த அந்த தேயிலை அவளை கடந்து எந்திரத்துக்குள் செல்கிறது. அதை அவன் கவனிக்க வில்லை. சுற்று முற்றும் பார்த்தபடியே மெல்ல உயரிய தேயிலை ரக எந்திரத்தை நோக்கி மீண்டும் அவன் நடக்கிறான். யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு இரு கைகளாலும் தேயிலையை அள்ளிக் கொண்டு சட்டையின் கை மடிப்புகளில் மறைக்க முயற்சிக்கிறான். அப்போது யாரோ வரும் சத்தம் கேட்கவே கையை உதறிக் கொண்டு அங்கிருந்து சற்று நகர்ந்து வேறு திசையில் திரும்ப முயலும் போது எதிரில் டிமேக்கர் அய்யா வந்து நிற்கிறான். அய்யாவை கண்டதும் இவனுக்கு வேர்த்து கொட்டுகிறது. அவனை கண்டதும் அய்யாவின் முகம் கடுகடுப்பாக மாறுகிறது. பயங்கரமாக கெட்ட சொற்களால் அவனை ஏசுகிறான். அங்கே மற்றவர்கள் கூடி விடுகின்றனர். இன்னொரு தரம் இப்படி செஞ்ச போலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டுகிறாள். அனைவரும் அவளை கூடி கேலியும் இரக்கமுமாக பார்க்கின்றனர். அவன் அப்படியே அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறான். அவள் வேகமாக மலைப் பாதைகளில் நடந்து வருகிறாள், அப்படியே வெறித்து பார்த்தவளாக நடந்து வந்தவள் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்து வெறித்து பார்க்கிறாள். பின்னர் குலுங்கி குலுங்கி அழுகிறாள். இயற்கை அப்படியே அசைவற்று அவளை நோக்குகிறது. பின்னர் சற்றெக்கெல்லாம் ஆசுவாசமடைந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள். மதுபானக்கடையிலிருந்து வெளியில் தள்ளாடியபடியே வெளியில் வருகிறான் அவன். “டேய்..எங்களுக்கெல்லாம் நல்ல டீ குடிக்க வக்கில்லையாடா.. நாங்களும் மனுசங்கதானடா.” என்றபடியே… ஏதேதோ புலம்புகிறான்…அப்படியே சாலையின் ஓரத்தில் போதையில் சரிந்து விழுகிறான், அப்போது உயரிய தேயிலை ரகங்களை ஏற்றிக் கொண்டு நகரங்களுக்கு விரையும் லாரிகள் அவனை கடந்து செல்கின்றன.. மூன்று பேரும் படுக்கையில் படுத்து கிடக்கின்றனர். அவள் இடது புறமும், இவன் வலது புறமும் நடுவில் மோட்டு வளையை பார்த்தபடி சிறுவனும் படுத்து கிடக்கின்றனர். சிறுவன் தனக்கு தானே ஏதோ பேசிய படியும், கதை சொல்லிய படியும் தூங்க முயற்சிக்கிறான். காட்சியில் இருள் பரவுகிறது. இருட்டில் கதவு தடதடவென தட்டப்படும் ஓசை கேட்கிறது.” மச்சான்.. வெளியில் வாய்யா…ஒரு செமத்தியான விருந்து… யோவ் மச்சான்…”இவன் தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று கதவை திறக்கிறான். அப்படியே வெளிச்ச வெள்ளம் வீட்டுக்குள் பாய்கிறது. வெளியிலிருந்து தேவதூதன் போல தோன்றச் செய்யும் வகையில் அந்த வெளிச்ச வெள்ளத்தின் ஊடாக அவனது சக பணியாளன் வருகிறான்.. இவனை கையை பிடித்துக் கொண்டு இழுத்து செல்லாத குறையாக அழைத்து செல்ல முயல்கிறான். சட்டையை அணிந்ததும், அணியாததுமாக அவனுடன் கிளம்பி செல்கிறான். அந்த மலை பிராந்தியமே மிகவும் அற்புதமாக ஜொலிக்கிறது. நாம் இத்தனை நாளாக பார்க்கும் மலை தானா இது என்பது போல அதிசயமாக அதை பார்க்கிறான்…வந்தவன் அங்கிருந்து அவனை அங்குள்ள துரையின் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். மேலாளர் மாளிகை அப்படியே பங்களா போல ஜொலிக்கிறது. உயர் ரக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மிகவும் நளினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு விருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. சீருடை அணிந்த நட்சத்திர பணியாளர்கள் அனைவருக்கும் மிகவும் பணிவாக விருந்து பரிமாறுகின்றனர். அந்த உயரிய ரசு தேநீருக்காக இவன் ஆவலுடன் காத்திருக்கிறான். அவளை நோக்கி தேவதைகள் போல வரும் அவர்கள் மிகுந்த வேலைப்பாடு கொண்ட கண்ணாடி கோப்பையில் தேநீரை ஊற்றுகின்றனர். திராட்சை ரசத்தை நினைவு கூறும் விதமாக அதனை வியந்து பார்த்தபடியே எடுத்து பருகுகிறான். வீடு திரும்பும் வழியில் பறவைகள் ஆனந்த ஒலி எழுப்புகின்றன. மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மலை முகடுகளை மேகங்கள் முத்தமிடுகின்றன. ஓடை இசையோடு சலசலத்து ஓடுகிறது. இவனது கையில் மேலாளர் கொடுத்த பையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான துணிகள், பரிசு பொருள்கள் கனக்கின்றன. அவளது நடையில் உற்சாக துள்ளல் மிளிர்கிறது. அணில் தாவி ஓடி மரத்தின் மீது ஏறி இவனை பார்க்கிறது. வெட்டுக்கிளிகள் கிறீச்சிடுகின்றன. அவன், அவள், சிறுவன் 3 பேரும் சிறிய டூர் செல்கின்றனர். வெளிப்புறத்தில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, உயரிய உணவுகளை சாப்பிடுகின்றனர். அருகில் விலையுயர்ந்த பொம்மைகளை, சிறு வண்டிகளை வைத்துக் கொண்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்பின் சிவந்த ஒளியில் அவளது முகம் ரத்தினமாய் ஜொலிக்கிறது. ஒரு வகை வசீகரம் அவளது முகத்தில் தெரிகிறது. மெல்ல அவனது கை வந்து அவளது தோளை அழுத்துகிறது. அவள் விரகத்தில் புன்முறுவலித்தபடியே நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். தொலைவில் புத்தாடை அணிந்த சிறுவன் மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.. அவனது வீடு அப்படியே மிகவும் கலை ரசனையுடன் வண்ணப்பூச்சில் ஜொலிக்கிறது. ஜன்னல்களில், சுவரில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வீட்டின் முற்றம் மிகவும் சுத்தமானதாக உள்ளது. தண்ணீர் தொட்டி வெள்ளை வண்ணம் பூசப்பட்டு புதிதாக மிளிர்கிறது. வீட்டின் மீது ஓட்டு கூரையின் மீது அமர்ந்து அதை சரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது திரும்பி அவளை காதலுடன் பார்த்தபடியே பணியில் ஈடுபட்டிருக்கிறான்… அவ்வாறு ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு கையை ஓட்டின் மீது வைக்கப் போக, தடுமாறி மேலிருந்து தடால்புடாலென் கீழே விழுகிறான். சடசடவென சத்தம் கேட்கிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. அவன் கண்டது எல்லாம் கனவு என்று ஏற்றுக்கொள்ள வெகு நேரம் அவனுக்கு தேவைப்படுகிறது. வியர்த்து விறுவிறுத்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்கிறான். அவனை சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. திக் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருக்கிறான். கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. எழுந்து சென்று கதவை திறக்கிறான். உன்னை தொரை பங்களாவில் பைப் ரிப்பேர் பார்க்க வரச் சொன்னார் என்கிறான் வந்தவன். முன்பு அவனை விருந்து அழைத்துச் செல்ல வந்த அவனே தற்போதும் வந்திருக்கிறான். இவன் திரும்பி பார்க்கிறான். சற்றே விழித்த நிலையில் அவளும், அரைகுறை உறக்கத்தில் சிறுவனும் படுக்கையில் புரண்டு கொண்டு இருக்கிறார்கள். சட்டையை அணிந்தபடியே அவனுடன் சேர்ந்து அந்த வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் நடந்து செல்கிறார்கள். மேலாளரின் வீட்டின் பின்புறம் மழை நீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபடியே அந்த வீட்டை நோட்டமிடுகிறான். அந்த வீட்டம்மாள் உயரிய தேநீரை அவரது கணவரான மேலாளருக்கு ஊற்றி கொடுக்கிறாள். அவர் முன் புற அறையில் உள்ள மேஜையின் மீது வைத்து விட்டு கணக்கு வழக்குகளை பார்த்தபடியே தேநீரை உறிஞ்சி குடிக்கிறார். அந்த ஒலி அவனை தொந்தரவு செய்கிறது. குழாயை டம்டம்மென்று போட்டு அடிக்கிறான். ணங்ணங் என்ற அந்த ஒலி அந்த பிராந்தியம் முழுவதும் சுழல்கிறது. சத்தம் தாங்காமல் முகத்தை சுளித்துக் கொண்டே மேலாளர் தேநீரை பருகுகிறார். இடையில் எழுந்து வந்து இவனை முறைத்து பார்த்து விட்டு செல்கிறார், அப்போது எங்கிருந்தோ வந்த டிமேக்கர் அய்யா, மேலாளர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். இதை கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு மேலாளர் அங்கிருந்து ஓடுகிறார். சத்தம் கேட்டு எட்டி பார்த்த இவன் வாசலுக்கு வந்து முன் அறையை பார்க்கிறான். அங்கே மேஜையில் மேலாளர் பாதி குடித்த தேநீர் கண்ணாடி குவளையில் தளும்பிக் கொண்டிருக்கிறது. இவனது மனம் ஊசலாட்டத்தில் ஆடுகிறது. மெல்ல அந்த கண்ணாடி குவளையை நோக்கி செல்கிறான். அந்த பாதி நிரம்பிய தேநீர் குவளையை நோக்கி குவிகிறது. மெல்ல அருகில் சென்று அதை எடுத்து குடித்து விடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அதை பார்த்தபடியே திக் பிரமை பிடித்தவன் போல நிற்கிறான். அப்போது அந்த அம்மாளின் குரல் கேட்கிறது. சட்டென சுயநினைவு வந்தவனாக தனது கையில் இருக்கும் எச்சில் கோப்பையை அருவருப்புடன் பார்க்கிறான். ஒரு கணம் முகம் அப்படியே சுருங்கி கருத்துவிடுகிறது. கோப்பையை டக்கென மேஜையில் வைத்து விட்டு, அந்த மாளிகையை பார்க்கிறான். மாளிகை பேய் மாளிகை போல இருண்டு தெரிகிறது. அவமானத்தால் குன்றி வெளியே வருகிறான். வானம் கருத்து அந்த மாளிகையின் மேற்புறத்தில் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன. அப்படியே திடும்மென இடியும் மின்னலும் வெட்டி சரிகின்றன. சற்றைக்கெல்லாம் மழை வெடித்து கிளம்புகிறது. அப்படியே இறுகிய அவமானமுற்ற மனதுடன் மழையில் நனைந்தபடியே மலைப்பாதைகளில் விறுவிறுவென நடந்தபடியே வீட்டை நோக்கி நடக்கிறான். மழை விடாமல் பெய்கிறது. இவன் வீட்டை நெருங்கும் வேளையில், பக்கத்து வீட்டிலிருந்து தேயிலை இரவல் வாங்கிக் கொண்டு மழையில் மெலிதாக நனைந்தபடியே அவள் வீட்டுக்கு வருகிறாள். இவன் அப்படியே இறுக்கமான முகத்துடன் வாசலில் அமர்ந்து மழையை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் இவனை விநோதமாக பார்த்தபடியே வீட்டுக்குள் செல்கிறாள். அடுப்பில் தேநீர் தயாராகும் ஒலி கேட்கிறது. தலையை துவட்டுவதற்காக லுங்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு போகிறாள் அவனருகில் கிடக்கும் லுங்கியுடன் தலையை துவட்டாமலேயே அவன் வெறித்து பார்த்தபடியே இன்னும் இருக்கிறான். அவள் வழக்கம் போல தேனீரை தயாரித்து கொண்டு வந்து வாசல் படியில் வைக்கிறாள். இவனை ஒருமாதிரி பார்த்து விட்டு மீண்டும் போய் விடுகிறாள். கருப்பு தேநீரை வெறித்து பார்த்தபடியே அதை எடுத்து ஒரு மிடறு பருக முயற்சிக்கிறான். முகம் மாற்றம் அடைந்து தூவென.. துப்புகிறான்.. குவளையை ஆத்திரத்தோடு தூர வீசி எறிகிறான். அவனது உறைந்த முகத்தில் கோபம் இயலாமை தெரிகிறது. மறுநாளும் மேலாளரின் வீட்டில் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளான். என்ன செல்வராஜ்.. வேல எல்லாம் முழுசா முடிஞ்சிருச்சா என்று கேட்டபடியே மேலாளர் வீட்டுக்குள் சென்று தனது மனைவியிடம் ஏதோ கிசுகிசுக்கிறார். சிறிது நேரத்தில், யேய் செல்வம் இங்க வா.. இந்த தேத்தண்ணிய குடிச்சுட்டு வேலய பாருல, இது சாதாரண டீ இல்லல..ஹைகிளாசு..வாழ்க்கை ஒருவாட்டியாவது நீறு குடிச்சிருப்பயாடே குடிச்சுப் பாரு”அப்படியே சொர்க்கத்துக்கு போய்ருவ– அவனது கண்களில் ஆர்வமும், தாகமும் ஒருசேர மின்னுகிறது. வெள்ளை நிற தகர குவளையில் ஊற்றப்பட்ட அந்த கருப்பு தேநீரை பருகுகிறான்— அவனது கண்கள் அப்படியே சந்தோஷத்தில் மலர்கிறது. முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது. வீட்டுக்குள் கால் நீட்டி அமர்ந்திருக்கிறான். அவள் அடுப்பில் ஏதோ வேலையாக இருக்கிறாள்–நிஜமாத்தான்டி சொல்ரேன்..நம்ம புள்ளதாண்ட ஆணை, என்றபடியே அந்த ஆளு என்ன வீட்டுக்குள்ள கூப்பிட்டு அந்த நல்ல டீய கொடுத்தாருடி அவள் எழுந்து வந்து அவனது அருகில் அமர்ந்து கொள்கிறாள் என்னய்யா எப்டிய்யா இருந்துச்சு அந்த தேத்தண்ணீ நம்மத விட ரொம்ப ருசியா இருந்துச்சுய்யா.. சொல்லுய்யா.. என சிணுங்கினாள்.. அது டீ இல்லடி ” அமுதம்.. அதோட பார்த்த நம்ம வீட்டு டீ கழனி தண்ணிய வீட மோசம்.. என்ன செய்ரது கால கிரகம் இல்லாட்டி நாம வாங்கி வந்த வரம்— இதெல்லாம் எப்போ மாறும்னு தெரியல என கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறாள்.. அவளும் அவனது வாடிய முகத்தை கண்டு கவலை கொள்கிறாள்.நம்ம மகனுக்கு அது கிடைக்கும்மாய்யா.. என தனது ஆசையை மறைத்துக் கொண்டு குழந்தையின் பேரை சொல்லி தனது கோரிக்கையை வைக்கிறாள். அவன் ஆயாசத்துடன் பெருமூச்சு விடுகிறான். அப்படியே வெளிவாசலை பார்க்கிறான். காலை நேரம். மூன்று பேரும் கிளம்பி செல்கின்றனர். வழக்கம் போல செல்லும் பாதையில் வளைந்து நெளிந்து நடந்து செல்கின்றனர். இன்றைக்கு உச்சிக்கு வேலைக்கு செல்வதால், அவனுடன் சிறுவனை அழைத்துச் செல்லும்படி சொல்கிறாள். தந்தையும் மகனும் இப்போது இடது புறமாகவும், அவள் வலதுபுறமாகவும் பிரிந்து நடக்கின்றனர். தேயிலை தயாரிக்கும் ஆலை. வளாகத்தில் ஒரு இடத்தை காண்பித்து அங்கேயே விளையாடும்படி சிறுவனிடம் சொல்கிறான். சிறுவனும் புது இடம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக தலையாட்டுகிறான். பரபரவென வேலைகள் நடந்தேறுகின்றன. சிறுவன் தனது லென்சால் அங்குள்ளவற்றவை உருப்பெருக்கி பார்த்து விளையாடிக் கொண்டிருக்கிறான். இம்முறை எப்படியும் உயரிய ரக தேயிலையை திருடி, தனது குழந்தைக்கும், மனைவிக்கும் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விபரீதமாக தோன்றுகிறது. உயர் ரக தேயிலை தயாரிக்கும் எந்திரத்தை பார்த்தபடியும், அவ்வப்போது ஜன்னலின் வழியே சிறுவன் மற்றும் மனைவியை பார்த்தபடியும் வேலையில் ஈடுபடுகிறான். மதிய வேளை. ஆள் அரவமற்ற பொழுது, எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருக்கிறது. மின் வெட்டாக இருக்கலாம். சுற்றும் முற்றும் பார்க்கிறான். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அவன் மெல்ல அடுத்த பகுதிக்கு சென்று, கைகளில் உயரிய ரக தேயிலையை அள்ளி சட்டையின் மடிப்புகளில் மறைத்துக் கொள்கிறான். அங்கே இரு ரகசிய விழிகள் அவனை வேவு பார்க்கின்றன. சற்று நேரத்தில் பணியாளர்கள் அங்கு வரவும், டிமேக்கர் கிளார்க் காவலாளி அனைவரும் அங்கு வருகின்றனர். வேகவேகமாக வந்த அய்யா அனைவரின் முன்பாகவும் அவளை கன்னத்தில் அறைகிறான். அவனது சட்டையை கொத்தாக பிடித்து தரதரவௌ முற்றத்தை நோக்கி இழுத்து வருகிறான். சிறுவன் பயந்தபடியே ஓடி தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டு நடப்பதை பார்க்கிறான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியா சூழல் மாறுகின்றது. தொலைபேசியில் எண்கள் சுழல்கின்றன. ஜீப்பின் ஒலி கேட்கிறது. சரசரவென இரண்டு மூன்று மூட்டைகள் அவனுக்கு அருகில் வந்து அவன் மீதாக வீசி யெறியப்படுகின்றன. தரையில் மண்டியிட்டு அவன் கையெடுத்து கும்பிட்டு இறைஞ்சுகிறான். போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். யார் அதை கண்ணால் பார்த்த சாட்சி என கேட்கின்றனர். அவனை அய்யா வீட்டுக்கு அவனை அய்யா வீட்டுக்கு அழைத்து சென்றவன் முன்னால் வருகிறான். அனைவரின் முன்பாகவும், செல்வராஜின் கை மடிப்பு விரிக்கப்படுகிறது அதிலிருந்து உயரிய ரக தேயிலை தூள் அப்படியே கொட்டி காற்றில் பரவுகிறது. கூட்டத்திலிருந்து விலகி அடர்ந்த நிற சட்டை அணிந்த பெருமாள் வெளியேறி வேகமாக ஓடிச் செல்கிறான். போலீஸார் செல்வராஜையும், அவனது அருகே வீசப்பட்ட தேயிலை மூடைகளையும் ஜீப்பில் ஏற்றுகின்றனர். அவனை சுமந்து கொண்டு ஜீப் கிளம்புகிறது. ஜீப் கிளம்பியதும் அதை துரத்திக் கொண்டு ஓட முயலும் சிறுவனை அங்கிருப்பவர்கள் தடுக்கின்றனர். மலைப்பாதையின் ஊடாக ஜீப் சிவப்பு விளக்குடன் பயணிக்கிறது. தொலைவில் பச்சை கம்பளம் விரித்தது போன்ற தேயிலை செடிகளின் ஊடாக அவள் சாலையை நோக்கி வேகமாக தொலைவில் ஓடி வருகிறாள். பச்சை மலை பிராந்தியத்தின் நடுவில் அந்த தேயிலை தயாரிப்பு ஆலை வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அதன் வளாகத்தில் புள்ளிகளாய் சிலர் திரண்டு நிற்பதும், அந்த சிறுவன் அழுதபடியே கையை நீட்டி அழுவதும், அன்பரசு கால் சட்டை பையில் உள்ள டொபி பேப்பர்கள் பல வண்ணத்தில் அங்கே சிதறி காற்றில் பற்க்கின்றது.அவள் விடாமல் ஓடிக் கொண்டிருப்பதும், மலைச்சாலையில் வளைந்து வளைந்து நெளிந்து செல்லும் ஜீப்பும் என காட்சி அப்படியே மங்கி மறைகிறது – 22.07.2023 மலையகம் 200 – விம்பம் லண்டன் அமைப்பு நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் இடம் பரிசு 30 ஆயிரம் பணபரிசு பெற்ற கதை. மாரி மகேந்திரன் மாரி மகேந்திரன் சினிமா கவிதை மற்றும் சிறுககைகள் புத்தகம் தமிழில் வந்துள்ளது. பிரசன்ன விதானகே திரைப்படத்தில் பனி ஆற்றி உள்ளார். தமிழகத்தில் தமிழ் சினமாவில் உதவி இயக்குனராகவும் பனி ஆற்றியுள்ளார். இவர் தற்போது வசிப்பது பொகவந்தலா என்ற நகரத்தில். காட்சி மொழி என்ற உலக சினிமா இதழ் ஆசிரியர். https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a3/
  9. தென் ஆபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கையின் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் பறியோயுள்ளது Published By: Vishnu 18 Oct, 2025 | 04:44 AM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. மழையினால் தடைப்பட்டு 5 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் ஈட்டிய வெற்றியுடன் மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாயிலை தென் ஆபரிக்கா நெருங்கியுள்ளது. அதேவேளை, இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் அரை இறுதி வாய்ப்பை இலங்கை பெரும்பாலும் இழந்துள்ளது. டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 20 ஓவர்களில் 121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வருட மகளிர் உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா அதன் பின்னர் நான்காவது தொடர்ச்சியான தடவையாக வெற்றி இலக்கை விரட்டிக் கடந்து வெற்றியீட்டியமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் வேகமாக அரைச் சதங்களைக் குவித்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுபடுத்தினர். லோரா வுல்வார்ட் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 60 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ப்றிட்ஸ் 42 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. ஐந்தாவது ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றரிருந்த இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன ஓட்டம் ஒன்றை எடுத்தபோது தென் ஆபிரிக்கா களத்தடுப்பாளர் ஒருவர் எறிந்த பந்து அவரது முழங்காலை தாக்கியது. இதனால் கடும் உபாதைக்குள்ளான விஷ்மிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தூக்குப் படுக்கையில் கிடத்தப்பட்டு வீராங்கனைகள் தங்குமறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சமரி அத்தப்பத்து 11 ஓட்டங்களுடனும் ஹசினி பெரேரா 4 ஓட்டங்களுடனும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுடனும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (63 - 4 வி.) நான்காவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் களம் புகுந்த விஷ்மி குணரட்ன தனது எண்ணிக்கைக்கு மேலும் 22 ஓட்டங்களை சேர்த்து 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். நிலக்ஷிக்கா சில்வா 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மசாபட்டா க்ளாஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகி: லோரா வுல்வார்ட் https://www.virakesari.lk/article/228034
  10. 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது' - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு 18 Oct, 2025 | 11:30 AM ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டது என அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இந்திய அரசிடமிருந்து வரவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி *ஜெலன்ஸ்கியுடன் வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. அவர்கள் (இந்தியா) ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார். உக்ரைனின் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தன. இதனையடுத்து, ரஷ்யா இந்தியாவுக்கு மலிவு விலையில் மசகு எண்ணெய் வழங்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரஷ்யா, இந்தியாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்தது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியும் விதித்திருந்தது. கடந்த 15 ஆம் திகதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் குறித்து இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நடத்தியது எனக்குத் தெரியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். புதிய தகவல்களின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது, இது டிரம்ப்பின் சமீபத்திய கூற்றுக்கு முரணாக உள்ளது. https://www.virakesari.lk/article/228052
  11. 18 Oct, 2025 | 03:27 PM இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும், இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை (18) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்காலத் தலைவர்களாக, எதிர்காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும். அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியமாகும். பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள், போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜெயவர்தனா, பிரேமதாச, சந்திரிககா, மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபாய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக தாதாக்கள் என்னும் எதிர் மறைக் கலாசார சட்ட விரோதர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். கோணாகல சுனில், சொத்தி உபாலி, பெத்ததகன சஞ்சீவ, கஜ்ஜா, ஜுலம்பிட்டிய அமரே, சம்பத் மனம்பபேரி, கெகல்பத்ர பத்மே, என்று பல இளைஞர்கள் அரசியல் வாதிகளின் தேவையாளர்களாக இருந்துமுள்ளனர். சட்டவிரோத சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு கொல்லப்பட்டும், தண்டிக்கப்பட்டும் உள்ளனர். பொட்ட நவ்பர் என்னும் குடு தாதா தனது சகாவான குடு தெரோசா என்பவருக்குத் தண்டனைத் தீர்ப்பை அளித்தமைக்காக சரத் அம்பேபிட்டிய என்ற மேல் நீதிமன்ற நீதிபதியை தனது கையாட்கள் மூலமாக தெருவில் சுட்டுக்கொன்ற வரலாறும் உண்டு. மொத்தத்தில் சில அதிகார சக்திகள் அரசியல் வாதிகளால், உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும், பாதாளர்கள் தமது தேவை முடிந்த பின்னர், கைகழுவி விடுகின்றனர்,கொன்றும் விடுகின்றனர். வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் வலைப் பின்னல், பாதாள சூனியச்சக்கரம் என்பவற்றால் வீழ்த்தப்பட்டு சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப்பின்னர், இளவயதிலேயே பலிக்கடாக்கள் ஆகி விடுகின்றனர். பலி கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பதுண்டு. பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள், ஆனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குடு தெரேசா, இசாரா செவ்வந்தி போன்றவர்கள் உதாரணர்களாவர். எனவே, இளைஞர் யுவதிகளை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று அவர்களது எதிர்காலத்தைச் சூனியமாக்கும் அதிகார சக்திகள், அரசியல்வாதிகளையும் சட்டப்பிடியில் இருந்து அரசாங்கம் தப்பவிடக்கூடாது. வளமான நாடு, அழகான வாழ்க்கையை ஏற்படுத்த இதுவும் அவசியமானதாகும் என்றார். https://www.virakesari.lk/article/228070
  12. லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் : ஹமாஸ் தளபதி பலி 18 Oct, 2025 | 11:16 AM லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர் முகமது ஷாஹீன் கொல்லப்பட்டார். இருதரப்பு யுத்த நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் லெபனான் செயல்பாட்டுத்துறைத் தலைவராக (Chief of Operations in Lebanon) முகமது ஷாஹீன் செயல்பட்டு வந்தார். அவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்தது. ஈரானின் நிதியுதவி மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் மக்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காகவே ஷாஹீன் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முகமது ஷாஹீனின் மரணத்தை ஹமாஸ் இயக்கமும் உறுதி செய்ததுடன், அவரைத் தங்கள் ராணுவத் தளபதி என்று குறிப்பிட்டது. லெபனானின் சிடோன் நகரில் முக்கிய வீதி ஒன்றில் சென்ற கார் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு இராணுவ சோதனைச்சாவடி அருகே ஒரு கார் தீப்பிடித்து எரிந்த காணொளியும் வெளியானது. https://www.virakesari.lk/article/228050
  13. கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது Oct 18, 2025 - 05:33 PM - இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் சம்பந்தமாகவும் அமைச்சர் விளக்கமளித்தார். துறைமுகங்களை நவீனமயக்காமல், நவீன மீன்பிடி முறை உள்ளிட்ட நடவடிக்கைகள்மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். அரசியல் பலம் மூலம் காரியங்களை சாதித்தது அந்த காலம். எனவே, கடல் அட்டை பண்ணை நடவடிக்கை உட்பட கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகளின்போது அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார். அத்துடன், எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். அந்த மாபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது. சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும். எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி மீனவ அமைப்புகள் விளிப்பாக இருக்க வேண்டும். தமது தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgw8btx4012zo29n56c5jqbd
  14. கட்டுரை தகவல் பெ.சிவசுப்பிரமணியன் பிபிசி தமிழுக்காக 18 அக்டோபர் 2025, 08:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 186. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு ஐஃஎப்எஸ் அதிகாரி, 2 மாநிலங்களைச் சேர்ந்த 10 வனத்துறை அலுவலர்கள், 31 காவல் துறையினர் உட்பட 123 பேரை வீரப்பன் கொன்றதாக அரசு தரும் புள்ளிவிவரம் கூறுகிறது. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 12 கடத்தல் சம்பவங்களில் 29 பேர் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளனர். பட மூலாதாரம், NAKKHEERAN திரைப்படங்கள், புனைவுகள், தொலைக்காட்சி தொடர்கள், வெப்சீரிஸ் என பல வடிவங்களில் வீரப்பனின் வாழ்க்கை நிகழ்வுகள், விதவிதமாக வர்ணிக்கப்படுகின்றன. வீரப்பன் வாழ்ந்த காலத்தில், அவரை சந்தித்தவர்கள் வெகுசிலரே. அந்த வகையில், 1993 முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலான ஏழாண்டுகளில், பல முறை நான் வீரப்பனைச் சந்தித்து, நேர்காணல் செய்திருக்கிறேன்; காட்டில் அவருடன் 40 நாட்கள் தங்கியிருக்கிறேன். அவருடன் மணிக்கணக்கில் பேசிய அனுபத்தில் இருந்து வீரப்பனின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவு நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். வீரப்பனின் பூர்வீகமும் சந்தனக் கடத்தலில் இறங்கிய பின்னணியும் படக்குறிப்பு, செங்கப்பாடி எனும் கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊர். தமிழக எல்லையோரம் கர்நாடக மாநிலத்திலுள்ள செங்கப்பாடி எனும் கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊர். அந்த கிராமத்தில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வீரப்பன் பிறந்தார். காவிரி ஆற்றங்கரையில் 4 பக்கமும் மலைக்காடுகளால் சூழப்பட்ட கிராமம். மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேட்டை, மீன்பிடித்தலே அங்குள்ள மக்களின் தொழில். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத அந்த கிராமத்தில் பிறந்த வீரப்பன் தலைக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கும் நிலைக்குச் சென்றதன் பின்னணி, எளிதில் விவரிக்க இயலாத அளவுக்கு மிக விரிவானது. "எனக்கும், வீரப்பனுக்கும் ஒரே வயது. நாங்கள் பள்ளிக்கூடமே போனதில்லை. கோவணம் கட்டிக்கொண்டு, கூலிக்கு மாடு மேய்ப்போம். வீரப்பனின் அப்பா கூசன் (எ) முனுசாமி சிகாரி வேட்டைக்காரர். மாடு மேய்க்கும் போது, வீரப்பன் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வருவான். துப்பாக்கியை விட உயரம் குறைவாயிருப்பான். 13 வயதிலேயே மான், கேளையாடு, கடத்தி (கடமான்), முசுக்கொந்தி (Nilgiri langur) எல்லாம் வேட்டையாடுவான். 17 வயதிலேயே யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி எடுத்தான்.'' என்கிறார் நல்லுார் மாதையன். வீரப்பனின் நெருங்கிய நண்பரான நல்லூர் மாதையன், வீரப்பன் பின்னால் பலரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்குச் சென்றதாகச் சொல்கிறார். யானைகளை வேட்டையாடிய வீரப்பனை மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு மாற்றியதில், அவருடைய அண்ணன் மாதையனுக்கு பெரும் பங்கு இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். காட்டுயானைகளை சட்டவிரோதமாக வேட்டையாடும் தொழில் போட்டியில் கோட்டையூரைச் சேர்ந்த தங்கவேலு கோஷ்டிக்கும், மாதையன் கோஷ்டிக்கும் ஏற்பட்ட மோதலில், 1978 பிப்ரவரி 12-ஆம் தேதி, கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக கிராமமான சிகரளஹள்ளியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதே வீரப்பன் செய்த முதல் கொலையாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. படக்குறிப்பு, வீரப்பனின் அண்ணன் மாதையன் (நடுவில் இருப்பவர்) பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற கர்நாடகா போலீஸ் ஐ.ஜி. எம்.ஆர்.புஜார், "நான் சாம்ராஜ் நகர் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, ஒரே இடத்தில் நான்கு யானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. நானும், துணை வனப்பாதுகாவலர் (DCF) ஸ்ரீநிவாசும் பல நாள்கள் தூங்காமலே யானை வேட்டைக்காரர்களைப் பற்றி விசாரித்தோம். பல்வேறு யானை வேட்டைக் கும்பலைப் பிடித்து விசாரித்தபோதுதான், இதைச் செய்தது மொளுக்கன் என்கிற வீரப்பன் என்று தெரிந்தது.'' என்கிறார். அதன்பின் 2 ஆண்டுகள் தேடியும் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை என்று கூறும் புஜார், அதற்குத் துணையாக எல்லா வேலைகளையும் வீரப்பனின் அண்ணன் மாதையன் தான் செய்ததாகக் கூறுகிறார். மாதையன் தன் தம்பி வீரப்பனை காட்டுக்குள் வேட்டையாட வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகச் சொல்கிறார் ஓய்வுபெற்ற கர்நாடக வனத்துறை அதிகாரி வாசுதேவ மூர்த்தி. ''அப்போது உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், கொள்ளேகால் பகுதி காவல்துறை, வனத்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகள் பலரும் வீரப்பனுக்கு ஆதரவாயிருந்தனர். வீரப்பனைத் தீவிரமாக நாங்கள் தேடியபோது, மாதையன் என்னைச் சந்தித்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முயன்றான். நான் மறுத்துவிட்டு, வீரப்பனை சரணடையச் சொன்னேன். அதை ஏற்காமல் எங்களுக்கு ஆதரவாக இருந்த பலரையும் வீரப்பன் சுட்டுக்கொல்ல ஆரம்பித்துவிட்டான்.'' என்கிறார் வாசுதேவமூர்த்தி. வீரப்பன் சந்தன மரங்களை கடத்த தொடங்கியது ஏன்? படக்குறிப்பு, வீரப்பன் தங்கை மாரியம்மாள் சர்வதேச அளவில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய தடை ஏற்பட்ட பின்பு, கேரளாவிலுள்ள சந்தன எண்ணெய் ஆலைகளுக்கு சந்தனக்கட்டைகளின் தேவை இருப்பதை அறிந்து சந்தனக்கடத்தல் வேலையில் இறங்கியதாக என்னிடம் வீரப்பன் தெரிவித்துள்ளார். அதற்குப் பின்பே அவருடைய கொலைப்பட்டியலும் வெகுநீளமானது. தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் நான் சேகரித்த தகவல்களின்படி, வீரப்பனால் கொல்லப்பட்டவர்களில் பின்வரும் இவர்கள் முக்கியமானவர்கள். அண்ணன் மாதையன் மீது பொய் வழக்குப் போட்டவர் என்று கருதி குண்டேரிபள்ளம் வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனச்சரகர் சிதம்பரம் என்பவர் வீரப்பனால் கொல்லப்பட்டார். 1989 ஏப்ரல் முதல் தேதி, வனத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த கோட்டையூர் ஐயன்னன் குடும்பத்தினர் 5 பேர் வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேர் கொலைக்குப் பின், தமிழ்நாடு – கர்நாடக வனத்துறை சார்பில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதில் முக்கிய பொறுப்பு வகித்த கர்நாடக வனக்காவலர் மோகனையா 1989 ஆகஸ்ட் 4-ஆம் தேதி வீரப்பனால் கொல்லப்பட்டார். அதே மாதத்தில் 17 ஆம் தேதியன்று சந்தன மரங்களை வெட்டுவதைத் தடுக்க முயன்ற தமிழ்நாடு வனத்துறை ஊழியர்கள் பழனிசாமி, சுப்பிரமணியம் உள்ளிட்ட மூவர் வீரப்பனால் கொல்லப்பட்டனர். வீரப்பனைப் பிடிக்க கர்நாடக காவல்துறை மாதேஸ்வரன்மலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் பத்து பேர் கொண்ட சிறப்புப்படையை அமைத்தது. இந்த சிறப்புப்படையை 1990 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஒகேனக்கல் அருகிலுள்ள மெட்டுக்கல் காட்டில் வீரப்பன் குழு வழிமறித்து தாக்கி, உதவி ஆய்வாளர்கள் தினேஷ், இராமலிங்கம், ஜெகநாதன் உள்ளிட்ட 4 பேரைக் கொன்றது. இதன் பின்பே வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அரசு சிறப்பு அதிரடிப்படையை (STF–Special Task Force) அமைத்தது. காவல்துறைத் தலைவர் திம்மப்பா மடியாள் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்டளை அலுவலராக டிசிஎஃப் ஸ்ரீநிவாஸ் பொறுப்பேற்றார். இதே காலகட்டத்தில் தமிழக அரசு வனக்காவல்படை (Jungle patrol) என்ற அமைப்பை ஏற்படுத்தி காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தலைவராக நியமித்தது. இரு மாநில காவல்துறைகளும் இணைந்து தேடி, சிலுவைக்கல் காட்டுப்பகுதியில் வீரப்பன் குழுவைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தின. வீரப்பன் குழு சிதறியது, 80 டன் சந்தனக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன. வீரப்பன் குழுவில் 24 பேர், ஸ்ரீனிவாஸிடம் சரணடைந்தனர். அவர்களை வைத்து வீரப்பனையும் சரணடைய வைக்க ஸ்ரீனிவாஸ் முயன்றார். "வீரப்பனுக்கு உதவிய மக்களின் ஆதரவைப் பெற பல முயற்சிகளைச் செய்தார். ஊரைவிட்டு சென்றவர்களை ஊருக்கு வரச்செய்தார். வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். ஊர் மாரியம்மன் கோயிலைப் புதுப்பித்தார். வீரப்பன் தங்கை மாரியம்மாளுக்கு உதவிகள் செய்து தன் பொறுப்பில் கண்காணித்தார்." என்று பிபிசியிடம் விளக்கினார் ஓய்வு பெற்ற கர்நாடக வனஅலுவலர் அங்குராஜ். "வீரப்பன் தங்கை மாரியம்மாள், ஸ்ரீநிவாஸ் சார் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டே, வீரப்பனைச் சந்தித்து வந்தார். இதனை தெரிந்து கொண்ட போலீஸ் எஸ்.ஐ. ஷகீல் அகமது, மாரியம்மாளை விசாரணைக்குக் கூப்பிட்டார். இதனால், பயந்து போன மாரியம்மாள் விஷம் குடித்து விட்டார். நான்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்த வீரப்பனின் தம்பி அர்ஜுனன் அதை வீரப்பனிடம் சொல்லவில்லை.'' என்றார் அங்குராஜ். 'நம்பிச்சென்ற அதிகாரியை கொன்ற வீரப்பன்' படக்குறிப்பு, டிசிஎஃப் ஸ்ரீநிவாஸ் வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாஸ் நடவடிக்கையால் வீரப்பனுக்கு ஆதரவான பலரும் மனம் மாறியதை விளக்கிய ஓய்வு பெற்ற கர்நாடகா காவல் அதிகாரி டைகர் அசோக்குமார், வீரப்பனைப் பற்றி தகவல் வந்த பல நேரங்களில் துப்பாக்கியால் சுடக்கூடாது என்று ஸ்ரீனிவாஸ் தடுத்துவிட்டதாகத் தெரிவிக்கிறார். ''வீரப்பனைச் சரணடைய வைக்க அவனது தம்பி அர்ஜூனனை ஸ்ரீனிவாஸ் பிணையில் எடுத்து அனுப்பினார். சரணடைய விரும்புவதாக தம்பியிடம் தூதனுப்பிய வீரப்பன், துப்பாக்கியில்லாமல் காட்டுக்குள் வரவேண்டும் என்றான். வீரப்பனை நம்பிய ஸ்ரீநிவாஸ், எங்களிடம் சொல்லாமலே, துப்பாக்கி இல்லாமல் காட்டுக்குள் போனார். நம்பிச்சென்ற அவரை சுட்டுக் கொன்று, தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய்விட்டான். இதுதான் இரு மாநில காவல்துறை அதிகாரிகளுக்கும் வீரப்பன் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது," என்கிறார். 1991 நவம்பர் 10 அன்று, ஸ்ரீநிவாஸ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக காவல்துறை வீரப்பனை தீவிரமாகத் தேடியது. காடுகளில் வாழ்ந்த பலரை அவர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 1992 மே 20 அன்று, வனப்பகுதியை ஒட்டியிருந்த இராமாபுரம் காவல் நிலையத்தைத் தாக்கி, ஆயுதங்களைக் கைப்பற்ற வீரப்பன் கும்பல் முயன்றது. அதில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர். அதிரடிப்படை தலைவராக இருந்த கர்நாடகா காவல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணாவை யானைத்தந்தம் விற்பனை செய்வதுபோல வீரப்பன் தந்திரமாக காட்டுக்குள் வரவழைத்தான். 1992 ஆகஸ்ட் 14 அன்று ஹரிகிருஷ்ணா, உதவி ஆய்வாளர்கள் ஷகீல் அகமது, பெனகொண்டா உள்ளிட்ட 6 பேரை சுட்டுக்கொன்றார். அதன்பின் தமிழக காட்டுப்பகுதிக்கு இடம் பெயர்ந்த வீரப்பனை தமிழ்நாடு வனக்காவல்படையும் தீவிரமாகத் தேடியது. இந்த நிலையில்,1993 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று, சுரைக்காய் மடுவு பகுதியில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி தமிழ்நாடு காவல்துறை, வனத்துறை, பொது மக்கள் என 22 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்பே தமிழ்நாடு அரசும் ஒரு சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது. 1993 மே 24 அன்று, மாதேஸ்வரன் மலையிலுள்ள ரங்கசாமி ஒட்டு என்ற இடத்தில், ரோந்து சென்ற கர்நாடக அதிரடிப்படை கண்காணிப்பாளர் கோபால் ஹோசூர் மீது தாக்குதல் நடத்திய வீரப்பன் கும்பல், உதவி ஆய்வாளர் உத்தப்பா உள்ளிட்ட ஆறு பேரைக் கொன்று, 5 துப்பாக்கிகளை (SLR) எடுத்துச் சென்றது. இதற்குப் பின், எல்லைக் காவல்படையை உதவிக்கு அழைத்தது கர்நாடகா அரசு. ஏற்கனவே இரு மாநில அரசுகளும் அமைத்திருந்த 1500 வீரர்களுடன் சேர்ந்து வீரப்பனைத் தீவிரமாகத் தேடினர். ஆனாலும், அடர்ந்த அந்த காட்டுப் பகுதியில் வீரப்பன் குழுவினரைப் பிடிப்பது எளிதாக இல்லை. படக்குறிப்பு, வீரப்பனின் தம்பி அர்ஜூனன் சந்தனக்கடத்தலில் இருந்து ஆள் கடத்தலுக்கு மாறிய வீரப்பன் நெருக்கடிகள் அதிகரித்த நிலையில் ஆட்களை கடத்த தொடங்கினார் வீரப்பன். 1994 டிசம்பர் 3 ஆம் தேதி, கோவை மாவட்டம், சிறுமுகை காட்டுப்பகுதியில், தமிழ்நாடு துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) சிதம்பரநாதன் உள்ளிட்ட மூவரை வீரப்பன் கடத்தினார். மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், 26 நாள்களுக்குப் பிறகு, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டனர். 1995 நவம்பர் முதல் நாளன்று, ஈரோடு மாவட்டம், செலம்பூர் அம்மன் கோயில் காட்டுப்பகுதியில் தமிழ்நாடு வன ஊழியர்கள் மூவர் வீரப்பனால் கடத்தப்பட்டனர். 18 நாட்களுக்குப் பிறகு அவர்களை மீட்டது காவல்துறை. 1997 ஜூலை 12 ஆம் தேதியன்று, கர்நாடக வனத்துறை ஊழியர்கள் ஒன்பது பேரை வீரப்பன் கடத்தினார். இருமாநில அரசுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முடிவில், 47 நாள்களுக்கு பின் வீரப்பன் அவர்களை விடுதலை செய்தார். அதே ஆண்டில் அக்டோபர் 9 அன்று, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டிலிருந்து பெங்களூர் வேளாண் ஆய்வுமைய ஆய்வாளர் சத்யவிரத மைத்தி, வன உயிரியல் ஆய்வாளர்கள் சேனானி, கிருபாகர் உள்ளிட்ட 7 பேர் வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டனர். கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டது. 12 நாள்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1998 டிசம்பர் 20 அன்று, ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்துக்கு வந்த வீரப்பன் கும்பல், அங்கிருந்த 6 காவலர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, 8 துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்றது. படக்குறிப்பு, வீரப்பன் மற்றும் குழுவினரை நான் (சிவசுப்பிரமணியன்) சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஆட்கடத்தலின் உச்சமாக 2000-வது ஆண்டு ஜூலை 30 அன்று, கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர், வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டனர். அதுவரை தமிழ்நாடு-கர்நாடக என இரு மாநில மக்களுக்கு மட்டுமே அறிமுகமான வீரப்பன், உலகம் முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது அப்போதுதான். வீரப்பன் முன் வைத்த 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இருமாநில அரசுகளும், பேச்சுவார்த்தை மேற்கொண்டன. 108 நாட்களுக்கு பிறகு ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார். இறுதியாக 2002 ஆகஸ்டு 25 இரவு, கொள்ளேகால் அருகிலுள்ள கமகரே என்ற இடத்தில், பண்ணை வீட்டில் தங்கியிருந்த கர்நாடகா முன்னாள் அமைச்சர் எச்.நாகப்பாவை வீரப்பன் கடத்தினார். கர்நாடக அரசுடன் 106 நாட்கள் பேச்சுவார்த்தை நீடித்தது. ஆனால் செங்கிடி காட்டுப்பகுதியில் நாகப்பா பிணமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வில், நெஞ்சுப்பகுதியில் துளைத்த துப்பாக்கி குண்டுக்கு நாகப்பா பலியானது தெரியவந்தது. ஏராளமான AK 47 தோட்டாக்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. நாகப்பாவை கொன்றது யார் என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. யானை வேட்டை, சந்தனக் கடத்தல், ஆள் கடத்தல், காவல்துறை மீதான தாக்குதல் என கால் நூற்றாண்டு காலம், காட்டுக்குள்ளேயே வலம் வந்த வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் (அக்டோபர் 18) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனாலும், வீரப்பன் இன்றும் கூட இரு மாநில மக்களிடையே பேசுபொருளாகவே இருக்கிறார். (ஆவணங்கள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடக காவல்துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்களுடன் வீரப்பனுடனான என்னுடைய சொந்த அனுபவங்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly92j30drpo
  15. செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தனர். பொலிஸாரின் இந்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgwbcdjm0132o29nuzrdgz3l
  16. சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார் - இந்தியாவில் பிரதமர் ஹரிணி 18 Oct, 2025 | 12:45 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். “நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் இந்த சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. “அறியப்படாதவற்றின் எல்லை: ஆபத்து, தீர்வு, புதுப்பிப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, துரிதமாக மாறிவரும் உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உலகளாவிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் புத்தாக்குனர்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும். பிரதமர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் ஜனநாயக எழுச்சி, பொருளாதார மீட்சி மற்றும் இந்தியாவுடனான கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்தார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கடந்து செல்வதில் பொறுப்பான தலைமைத்துவம், மீளாற்றல் மற்றும் ஒத்துழைப்பு அவசியம். இலங்கை அண்மையில் முகம்கொடுத்த நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கு இலங்கை ஒரு சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான மக்களின் கோரிக்கையின் பேரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றமை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடன் மறுசீரமைப்பு, சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை எடுத்துக் காட்டிய பிரதமர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கையின் நிதி ஒருங்கிணைப்பை அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக அங்கீகரித்துள்ளன. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இது சுமார் 10% ஆகும் - மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையக சமூக உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரது குரல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இலங்கை சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம், அண்டை நாடாக இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் முக்கிய ஆதரவையும், எரிசக்தி, இணைப்பு, கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவின் தொலைநோக்குடன் இணைந்து இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை பெறுமான சங்கிலிகளுடன் இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம். வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் GovPay, e-அடையாள முறைமைகள் (e-identity systems) மற்றும் திறந்த தரவு வாயில்கள் (open data portals) போன்ற முயற்சிகளை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனினும் சட்டங்களால் மட்டும் நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது - பெறுமானங்களும் சமூக நெறிமுறைகளும் அவசியம் என்பதை எமது அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளது. புத்தாக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல், நியாயமான, உள்ளடக்கிய மற்றும் மனிதாபிமான முறைமைகளை வடிவமைக்கும் தார்மீக அம்சமாக பார்க்க வேண்டும். இலங்கையில் ஒரு நல்ல சமூகத்தையும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதற்கும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/228061
  17. அமெரிக்காவின் பலவீனத்தில் குறி வைக்கும் சீனா - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Reuters கட்டுரை தகவல் ஆஸ்மண்ட் சியா பிபிசி செய்தியாளர் 18 அக்டோபர் 2025, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம், சீனாவின் வர்த்தக அமைச்சகம் '2025-ஆம் ஆண்டின் அறிவிப்பு எண். 62' என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. ஆனால் இது வெறும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமல்ல. அமெரிக்காவுடன் சீனா செய்து கொண்டுள்ள வரி ஒப்பந்தத்தையே இது உலுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது. இது அரிய தாதுக்களின் உலகளாவிய விநியோகத்தில், சீனாவின் பிடியை இறுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் இந்தச் செய்தி டொனால்ட் டிரம்பிற்கு நினைவூட்டியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தின் உற்பத்திக்கும் இன்றியமையாததாக இருக்கும் அரிய தாதுக்களை எடுப்பதில் சீனா கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், இனி வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிய அளவிலான அரிய தாதுக்களைக் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூட சீன அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் மற்றும் அவை எதற்காகப் பயன்பட போகின்றன என்பதையும் அறிவிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்குப் பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிப்பதாகவும், முக்கிய மென்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தினார். "இது சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை. அவர்கள் முழு சுதந்திர உலகின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை நோக்கி ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர், நாங்கள் அதை ஏற்கப் போவதில்லை" என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் அரிய தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்கா 'வேண்டுமென்றே தேவையற்ற தவறான புரிதலையும் பீதியையும் தூண்டிவிட்டதாக' வியாழக்கிழமையன்று (அக்டோபர் 16) சீனா கூறியது. "ஏற்றுமதி உரிம விண்ணப்பங்கள் இணக்கமானவையாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்தால், அவை அங்கீகரிக்கப்படும்" என்றும் சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த வாரம், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் ஒன்றுக்கொன்று கப்பல்களுக்கு புதிய துறைமுக வரிகளை விதித்தன. மே மாதத்தில் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகள் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம் மூலம் 'வரிகள் நடைமுறைக்கு வருவது நிறுத்தப்பட்டிருந்தது'. அதன் பிறகு நிலவி வந்த பல மாத அமைதி சமீபத்திய பதற்றங்களால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதியில், டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 'அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்' சீனாவிற்கு மேலாதிக்கத்தை அளிக்கும் என நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க விநியோகச் சங்கிலிகளில் உள்ள பலவீனங்களைக் குறிவைப்பதால், அவை 'வர்த்தக அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும்' என்று ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக விரிவுரையாளர் நவோயிஸ் மெக்டோனாக் கூறினார். "அமெரிக்கா விரும்பிய பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை, இந்த நிகழ்வு உண்மையில் பாதித்துள்ளது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எப்-35 போன்ற போர் விமானங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் மிக முக்கியமானவை. அரிய தாதுக்களின் தேவை சோலார் பேனல்கள், மின்சார கார்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் அவசியம். உதாரணமாக, ஒரு எப்-35 போர் விமானத்திற்கு அதன் ஸ்டெல்த் பூச்சுகள், மோட்டார்கள், ரேடார்கள் மற்றும் பிற கூறுகளுக்கு 400 கிலோவிற்கும் அதிகமான அரிய தாதுக்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார கார் மோட்டார்களில் காந்தங்களுக்குத் தேவையான உலோகங்களின் உலகளாவிய விநியோகத்தில் தோராயமாக 70% சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியிலிருந்து வருகிறது என்று 'நியூலேண்ட் குளோபல் குழுமத்தின்' ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நடாஷா ஜா பாஸ்கர் கூறினார். உலகளாவிய அரிய தாதுக்களை எடுக்கும் திறனில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடுமையாக உழைத்துள்ளது என்று சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கனிம ஆராய்ச்சியாளர் மெரினா ஜாங் கூறினார். "சீனா இந்தத் துறையில் கணிசமான திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அதன் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் குழு, அதன் போட்டியாளர்களை விட பல மடங்கு முன்னேறியுள்ளது." என்கிறார். அரிய தாதுக்களைப் பெறுவதில் சீனாவைச் சார்ந்திருப்பதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்க, அமெரிக்காவும் பிற நாடுகளும் பெருமளவில் முதலீடு செய்து வரும் நிலையில், அந்த இலக்கை அடைவதில் இருந்து அந்நாடுகள் இன்னும் வெகு தொலைவில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் அரிய தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், சீனாவுக்கு சவால் விடும் நாடாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது. ஆனால் அதன் உற்பத்தி உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சியடையாததால், தாதுக்கள் செயலாக்கம் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்ததாக உள்ளது என்று ஜாங் கூறுகிறார். "அமெரிக்காவும் அதன் அனைத்து நட்பு நாடுகளும் அரிய தாதுக்கள் செயலாக்கத்தை தேசிய திட்டமாக மாற்றினாலும், சீனாவின் இடத்தை எட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று நான் கூறுவேன்." என்கிறார். "சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை" புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் சீனா எடுத்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன. அப்போதைய நடவடிக்கைகள் உலகளாவிய விநியோக நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான தொடர் ஒப்பந்தங்கள் அந்த நெருக்கடியை சற்று தளர்த்தின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் சீன அரிய தாதுக்களின் ஏற்றுமதி 30%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக சீனாவின் சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஏற்றுமதி வீழ்ச்சியால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் வருடாந்திர 18.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் அரிய தாதுக்கள் மிகச் சிறிய அளவே பங்களிக்கின்றன என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோபியா கலன்ட்சாகோஸ் கூறினார். சில மதிப்பீடுகள், அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளின் மதிப்பை சீனாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1% க்கும் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன. சீனாவிற்கு அரிய மண் தாதுக்களின் பொருளாதார மதிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், அவற்றின் மூலோபாய மதிப்பு 'மிகப்பெரியது' என்றும், அவை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவிற்கு அதிக செல்வாக்கை அளிக்கின்றன என்றும் கலன்ட்சாகோஸ் கூறுகிறார். சீனாவை 'துரோகி' என்று குற்றம்சாட்டிய போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளார் அமெரிக்காவின் ஸ்காட் பெசென்ட். "சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன், இதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைத் தணிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று பெசென்ட் கூறினார். வியாழக்கிழமை அமெரிக்க தனியார் குழுமமான பிளாக்ஸ்டோனின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேனுடனான சந்திப்பின் போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-உம் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். "இரு தரப்பும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும், வேறுபாடுகளை முறையாகத் தீர்க்க வேண்டும் மற்றும் சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்" என்று வாங் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. பேராசிரியர் கலன்ட்சாகோஸின் கூற்றுப்படி, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்குத் ஏற்ற நடவடிக்கைகளை சீனா சமீபத்தில் எடுத்துள்ளது. அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளைக் குறைப்பதன் மூலம், ஒரு சாதகமான தீர்வைப் பெறும் வகையில் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க, சீனா ஒரு வலுவான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய உத்தியைக் கண்டறிந்துள்ளது என்று பாஸ்கர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவைன் 'நம்ப முடியாது' என்று அமெரிக்க உயர் அதிகாரிகள் ஸ்காட் பெசென்ட் மற்றும் ஜேமிசன் கிரீர் கடுமையாக சாடியுள்ளனர். சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாவோ யாங், 'குறுகிய காலத்திற்கு சீனாவின் கை ஓங்கி உள்ள நிலையில், அமெரிக்காவிடமும் சில மூலோபாய உத்திகள் இருக்கலாம்' என்று நம்புகிறார். அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் சீனாவின் உற்பத்தியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளதால், அமெரிக்கா வரிகளைக் குறைக்க முன்வந்தால், இது சீனாவிற்கு சாதகமாக இருக்கும் என்று பேராசிரியர் ஜியாவோ கூறினார். சீனாவின் பொருளாதாரம் அது தயாரிக்கும் பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தையே சார்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 27% குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. சீனாவின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுக்க, அமெரிக்கா கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் சீனாவை அச்சுறுத்தக்கூடும் என்று பேராசிரியர் மெக்டோனாக் கூறினார். உதாரணமாக, அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் உயர்நிலை குறைக்கடத்திகள் (semiconductor) தேவையை குறிவைத்து, என்விடியாவின் (Nvidia) மிகவும் மேம்பட்ட சிப்களை சீனா வாங்குவதைத் தடுத்துள்ளது. ஆனால் அது குறைந்த அளவிலான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் தொழில்நுட்பத் துறையை குறிவைக்கும் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும், ஆனால் 'அதை முழுமையாக நிறுத்திவிடாது' என்று பேராசிரியர் மெக்டோனா கூறினார். சீனா தனது நீண்டகால இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்கவும் தயாராக உள்ளது என்பதை அதன் சமீபத்திய பொருளாதார உத்தி மூலம் காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். "அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் கீழ் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் சீனாவால் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் சீனா இந்த அரிய தாதுக்கள் விநியோகங்களைத் துண்டித்தால், அது உண்மையில் அனைத்து நாடுகளின் தொழில்துறைகளையும் பாதிக்கும். அதுதான் பெரிய வித்தியாசம்." என்கிறார் பேராசிரியர் மெக்டோனா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkvdn5y7mo
  18. இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர். அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலிங், "நாங்கள் ஒரு படி பின்னோக்கிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பலனாக இப்போது மிகவும் வலிமையான வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5% வளர்ச்சி. இந்த ஆண்டு அது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு அது 3% ஆக மாறுவதற்கான ஆற்றல் உள்ளது. இந்த நேரத்தில் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், அதிக பலன்களைப் பெறுவதற்கு இந்தத் திட்டத்தை மேலும் தொடர்வது முக்கியம். அப்போது வளர்ச்சி வரும். அது தொடர்ந்து நடைபெறும். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்னவென்றால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் பொது நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய பங்கைக் வகிக்கும். அத்துடன், பொது நிறுவனங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பலன்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க இது மிகவும் அவசியம்" என்று கூறினார். https://adaderanatamil.lk/news/cmguydd6m0122qplp7sj20x4o
  19. பட மூலாதாரம், X/@ACBofficials 18 அக்டோபர் 2025, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பக்டிகா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறி அதனைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனுடன், நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளது. மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்." என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று வீரர்கள் தவிர, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர். "வீரர்கள் மீதான மதிப்பு மற்றும் இந்த துயர சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, நவம்பர் மாத இறுதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்" என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நவம்பர் 17 முதல் 29 வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் இரங்கல் மூன்று வீரர்களின் மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை "சோகம்" என்று ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார். "பொதுமக்களைக் குறிவைப்பது முற்றிலும் கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அநீதியான நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகும்." என்று அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக ரஷித் கான் கூறினார். குல்புதீன் நயீப் இந்தத் தாக்குதலை "பாகிஸ்தான் இராணுவத்தின் கொடூர செயல்" என்று கூறினார். "இது நமது மக்கள், பெருமை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஆனால் இது ஆப்கானிஸ்தானின் உணர்வை ஒருபோதும் உடைக்காது." என்று அவர் கூறினார். பிபிசி பஷ்டூ சேவையின் கூற்றுப்படி, முகமது நபி, "இந்தச் சம்பவம் பக்டிகாவிற்கு மட்டுமல்ல, முழு கிரிக்கெட் குடும்பத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் மிகவும் சோகமான சம்பவம். அவர்களது தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என்று கூறினார். பட மூலாதாரம், Chris Hyde-ICC/ICC via Getty தாலிபன் கூறியது என்ன? ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தின் மீது வெள்ளிக்கிழமை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியிருப்பதாக தாலிபன் அதிகாரிகள் கூறியுள்ளனர். தாலிபன் அரசாங்கத்தின் மாகாண அதிகாரி ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் வெள்ளிக்கிழமை, "பக்டிகா மாகாணத்தின் அர்குன் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பாகிஸ்தான் குண்டுவீசித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர்." என்று கூறினார். ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை தொடங்கியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த தாலிபன் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பக்டிகாவில் மூன்று இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்கும்," என்று அவர் கூறினார். போர் நிறுத்த மீறல்கள் அல்லது ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்தும் பாகிஸ்தானிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்தை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தினார். முன்னதாக, தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார். பல மோதல்களுக்குப் பிறகு புதன்கிழமை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. கத்தாரின் மத்தியஸ்தத்தின் கீழ் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c709ee02zdzo
  20. ட்யூட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர் வெற்றியை கொடுக்குமா? - ஊடக விமர்சனம் பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 17 அக்டோபர் 2025, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ட்யூட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின் லவ் டுடூ, டிராகன் படங்களில் கதாநாயகனாக களமிறங்கினார். இந்த 2 படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து வந்துள்ள படம்தான் ட்யூட். இப்படம் கதாநாயகனாக இவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா?இதுவும் வழக்கமான கதையாக உள்ளதா? அல்லது இவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Mythri Movie Makers படத்தின் கதை என்ன? படத்தின் நாயகன், நாயகியானஅகன் மற்றும் குறளரசி, இருவரும் உறவினர்கள். அகனின் மாமன் மகள்தான் குறள். முதலில் குறள் தனது காதலை அகனிடம் கூறும்போது அவர் நிராகரித்துவிடுகிறார். பின் அகனுக்கும் குறள் மீது காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் திருமணம் நடக்கும் வேளையில் குறள் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்ததா? நின்றதா? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாள்வதாக ஊடக விமர்சனம் தெரிவிக்கிறது. படத்தின் ப்ளஸ் என்ன? அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் நிஜ உலக பிரச்னையை நம்பத்தகுந்த முறையில் பேசுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. "இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாளுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது. "இந்த படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட்" என தி இந்து தமிழ் பாராட்டியுள்ளது. "படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் Z தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்." என்கிறது அந்த விமர்சனம். தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில், "ஒரு கமர்சியலான, இளம் ரசிகர்களை கவரும் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக நடிக்கிறார், கத்துகிறார், குதிக்கிறார் என நெகடிவ்வாக சொல்லப்பட்ட விஷயங்களையே இந்த படத்தில் தன்னுடைய பாசிட்டிவாக காட்டியுள்ளார்" என தெரிவித்துள்ளது. "மாஸ் இருந்தாலும் அதே நேரத்தில் படம் அர்த்தமுள்ளதாகவும் கையாளப்பட்டு சமநிலையை பெறுகிறது. சமீபத்தில் ஒரு சில கமர்சியல் படங்களே இதை சரியாக செய்கின்றன." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, பிரதீப் ரங்கநாதன் தனுஷ் + பிரபுதேவாவின் கலவை என விமர்சனம் தெரிவிக்கிறது. நடிகர்களின் நடிப்பு எப்படி உள்ளது? "பிரதீப் ரங்கநாதனின் உடல் மொழிக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது." என தி இந்து தமிழ் விமர்சனம் கூறுகிறது. தினமணி தனது விமர்சனத்தில், "நடிப்போடு சேர்த்து படம் முழுவதும் ஸ்டைலாக வலம் வந்திருக்கிறார் பிரதீப். படம் கேட்கும் ஹீரோவாக தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்" என தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் மமிதா பைஜு. இவரைப் பற்றி தனது விமர்சனத்தில், "திரை முழுவதும் அழகாக வலம் வருகிறார், அழும் காட்சிகளில் சோகமடைய வைக்கிறார், சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் புதுமையாக தெரிகிறார்." என தினமணி குறிப்பிட்டுள்ளது. "மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்." என தி இந்து தமிழ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்தில் மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இவரைப் பற்றி, "நடிப்பிலும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் சிரிக்க வைப்பதுடன் சீரியஸான வில்லனாக ரசிக்கவும் வைக்கிறார்" என தினமணி எழுதியுள்ளது. "படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார்." என தி இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள சிறிய கதாபாத்திரங்களில் வரும் அனைவருமே சரியாக நடித்து படத்திற்கு பலம் சேர்துதுள்ளதாக தினமணி விமர்சனம் கூறுகிறது. பட மூலாதாரம், X/Pradeep Ranganathan படக்குறிப்பு, கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை ரசிக்க வைக்கிறதா? "சாய் அபயங்கரின் இசை படம் முழுவதும் பொருத்திப்போகிறது. பின்னணி இசையும், பாடல்களும் மனதில் நின்றுவிடுகிறது." என்கிறது தினமணி விமர்சனம். தி இந்து தமிழ் நாளிதழ், "ஊரும் ப்ளட் பாடல் படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார்." என விமர்சித்துள்ளது. மற்றபடி, "நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது." என தொழில்நுட்ப குழுவை பாராட்டியுள்ளது. அறிமுக இயக்குநர் "தனது முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். காமெடி படம் எடுப்பதை தனது நோக்கமாக கொண்டிருந்ததால் அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார்." என தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது. மேலும், "முதல் பாதி எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளையை நெருங்கும்போது அரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. இரண்டாம் பாதியில் லேசான சறுக்கலை கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் நிமிர்ந்து நின்று ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது" எனவும் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, இது முற்போக்கான படம் அல்ல என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. படத்தில் குறை? "இந்த கதை களம் கண்டிப்பாக சிலரை முகம் சுழிக்க வைக்கலாம் என்பதை புரிந்து வசனங்களால் அவர்களையும் சேர்த்து சமாதானம் செய்ய முயன்றிருப்பது சிறப்பு" என தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. "இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ 'ரொம்ப நல்லவர்' என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை." என தி இந்து தமிழ் எழுதியுள்ளது. மேலும் "ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்." என தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல "படத்தில் பெண்களுக்கு ஆதரவான வசனங்கள் அதிகம் இருந்தாலும், இப்படம் காட்டிக்கொள்வதைப் போல முற்போக்கான படம் அல்ல." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. "இதயத்தின் வலிகளைப் பற்றிய எந்தப் படமும் சற்று இழுபறியாகத்தான் இருக்கும். அதுவும் ட்யூட், குறிப்பாக இரண்டாம் பாதியில், ஒரு கட்டத்தில் யாராவது ஒரு முடிவெடுங்கள் என்ற உணர்வு ஏற்படும்" என தி இந்து விமர்சனம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4z5el9vpo
  21. Published By: Vishnu 17 Oct, 2025 | 08:37 PM மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர். தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228027
  22. 17 Oct, 2025 | 03:58 PM (எம்.மனோசித்ரா) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர். இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளிலும் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227993
  23. அண்ணை, Chrome, Edge இரண்டிலும் தமிழிலும் வழக்கத்திற்கு மாறாக அகலமாகவும் உள்நுழையும் பகுதி காணப்படுகிறது. நான் உள்நுழைய ஈமெயிலை தட்டச்ச அது தமிழ் எழுத்தாக மாறிக்காண்பிக்கிறது. Firefox சரியாக உள்ளது. எனது browser ஏதும் மாற்றம் செய்யவேண்டுமா?
  24. காட்டு யானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது https://www.youtube.com/shorts/-VRiCxiCoNw ராமில் அடிபடாது காப்பாற்றிய காவலர் யால தேசியப்பூங்காவில் சிறுத்தையிடம் இருந்து மானைக் காத்த முதலை!!
  25. "Bison is the film that scared my mother and wife" - Mari Selvaraj Interview | Dhruv Vikram Directed by Mari Selvaraj, the film stars Dhruv Vikram, Anupama Parameswaran, Ameer, Rajisha Vijayan and Lal. The film is based on the life of Kabaddi player Manathi Ganesan. What did Mari Selvaraj have to say about it? This is a Collective Newsroom release for BBC #MariSelvaraj #Bison #Kabaddi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.