Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. LIVE 8th Match, Group A, New York, June 05, 2024, ICC Men's T20 World Cup Ireland (11/20 ov) 49/7 India India chose to field. Current RR: 4.45 • Last 5 ov (RR): 23/5 (4.60) Live Forecast:IRE 74 ஐபிஎல் பார்த்துவிட்டு உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்ப்போர் இந்த பந்துவீச்சாளர்களா இவ்வளவு பயங்கரமாகப் போடுகிறார்கள் என வியக்கப் போகினம்!
  2. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள்! 05 JUN, 2024 | 07:16 PM உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு இன்று புதன்கிழமை (05) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் சுற்றாடல் சார் கண்காட்சி இதன்போது நடைபெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக 'நலம் மிகுந்த நாடு' எனும் கருப்பொருளுக்கு அமைவான கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து பாடல், கலை கலாசார நிகழ்வுகளும் சுற்றாடல் சார்பான உரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டன. இன்றைய நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி, மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/185403
  3. 05 JUN, 2024 | 07:17 PM ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc - Andre Franche) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை இன்று புதன்கிழமை (05) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி), மாகாண காணி ஆணையாளர், யாழ். பிராந்திய பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் என பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம், கல்வி, விவசாயம், தொழிற்துறை ஊக்குவிப்பு, காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றும் பணி, மீள்குடியேற்றம், இயற்கை வளங்கள், முதலீட்டுத் திட்டங்கள், முன்னுரிமைபடுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள், பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் அதிகம் தேவைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அவர்களுக்கான உள்ளூர், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும், நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் கூறினார். அத்துடன் புலம்பெயர் உறவுகள், வடக்கிலுள்ள தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் உறவுகளால் வடக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என குறிப்பிட்ட ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச், முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன், சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார். வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளும்போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை எனவும் அவர் இதன்போது வினவினார். மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் எனவும் ஆளுநர் கூறினார். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் செயற்படும் சர்வதேச அமைப்புகள் வடக்கில் இதுவரையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஆளுநர், அனைத்து துறைகளுக்குமான அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185402
  4. சில பெண்களுக்குப் பிறப்பிலேயே கருப்பையும் கருமுட்டைகளும் இல்லாமலிருக்கும். சிலருக்குக் கருமுட்டை சரியாக உற்பத்தி ஆகாததால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும் கருமுட்டை உற்பத்தி சீராக இருக்காது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது. சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது. ஆண் விந்துவில் போதிய உயிரணுக்கள் இல்லாமை, இருக்கும் உயிர் அணுக்களும் போதிய சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல், பெண்ணின் உடலில் எழும் எதிர்ப்புச் சக்தி ஆணின் விந்தணுக்களைச் செயலிழக்கச் செய்தல்,விரையில் அடிபடுதல், விரையில் ரத்தக் கட்டி, விரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ஆணுக்கு உயிர் அணுக்களில் எதிர்ப்பு சக்தி உண்டாகி இதனால் கரு தங்காது. அப்படியே கரு உருவானாலும் கருப்பையில் பதிந்து வளராமல் போகலாம். அப்படியே வளர்ந்தாலும் சில சமயம் அது உயிரற்ற கருவாகவும் இருக்க வாய்ப்புண்டு. கருப்பை வாயில் சுரக்கும் திரவத்திலும், கருமுட்டை இருக்கக்கூடிய திரவத்திலும் கூட இந்த எதிர்ப்பு சக்தி உண்டு. இதனை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து முறியடித்து விடலாம். தற்போது சோதனைக் குழாய் முறையில் கரு, கருப்பையில் பதிந்து வளர்வது 20 முதல் 30 சதவிகிதமாக உள்ளது. பெரும்பாலும் ஆண் குழந்தைகள் கரு நிலையிலேயே சிதைந்து விடுவதாலும், பிறந்தபிறகு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு காரணமாக இறந்து விடுவதாலும் ஆண்குழந்தைகள் பிறப்புக் குறையக் காரணமாகிறது. பெண் குழந்தைகளுக்கு எதையும் தாங்கும் சக்தி கருவிலேயே உருவாகிவிடுகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் வரை இயற்கைக் கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம். அதன் பின்னும் குழந்தைப் பேறில்லாவிட்டால் மருத்துவரை அணுகலாம். இதுவரை பெண்களுக்குக் குறைபாடு இருந்ததால் சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி அதைக் கருப்பையில் செலுத்திக் குழந்தைகள் உருவாக்கப்பட்டன. இப்போது ஆணில் உயிர் அணுவில் அசைவோ, சுறுசுறுப்போ இல்லாவிட்டாலும் இண்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் முறை மூலம் பெண்ணின் கரு முட்டையை ஒரு நுண்ணிய ஊசியினால் பிடித்து மற்றொரு மெல்லிய கண்ணாடி ஊசியின் மூலம் வீரியம் இல்லாத உயிர் அணுவை எடுத்துப் பெண் முட்டையினுள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகின்றது. பிறந்த உடனேயே ஆண்குழந்தைக்கு விரைக்கொட்டை கீழே இறங்காமல் இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் அறுவை சிகிச்சை செய்து அதைச் சரியான நிலையில் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிரந்தர மலட்டுத்தன்மை ஏற்படும். இதேபோல் விந்து உற்பத்தி இல்லாவிட்டாலும் இம்மருத்துவ முறைகளால் பயன் இல்லை. இடுப்பு அழற்சி நோய், பிறப்புறுப்பு நோய்கள், நார்த்திசுக் கட்டிகளால் ஏற்படும் ஃபைப்ராய்டு எனப்படும் புற்றுநோய், நீர்த்திசுக் கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாற்றம், கருப்பை நீக்கம், எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையைப் பாதிக்கும் பிரச்சனை. இவற்றாலும் கர்ப்பம் தரிப்பது சிரமம். இதனால் தவறான திசு வலி ஏற்பட்டுக் கருவுறுதல் சிரமமாகும். எண்டோமெட்ரியோஸில் ஏற்பட்டால் கருப்பையின் உட்புறம் வளரவேண்டிய திசுக்கள் கருப்பையின் வெளியே, பின்னால், குடல்கள், சிறுநீர்ப்பை, இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள், ஃபலோபியன் குழாய்களில் வளரும். இதனால் திசுக்கள் தடித்தல் உடைதல் ஏற்பட்டு அதிக இரத்தப் போக்கு ஏற்படும். ஆனால் சிக்கிய திசுக்கள் வெளியேறாமல் அந்தப் பகுதியை எரிச்சலடையச் செய்து இறுதியில் வடுக்களுக்கு வழிவகுக்கும். இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படும். எண்டோமெட்ரியோஸிஸால் வலி மிகுதல், உடலுறவின் போது வலி, மாதவிடாயின் போது மற்றும் இடைப்பட்ட காலத்திலும் இரத்தப் போக்கு, மனச்சோர்வு, தூங்க இயலாமை, பாலியல் ஆசை குறைதல், மலட்டுத்தன்மை, குமட்டல், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் மூட்டுவலி ஆகியன உண்டாகின்றன. இதற்கு வலி மருந்துகள், பேட்ச்கள் மற்றும் பிறப்புறுப்பு வளையங்கள் போன்ற ஹார்மோன் சிகிச்சைகள், ப்ரோஜெஸ்டின் – ஒன்லி மாத்திரைகள் மற்றும் டானசோல், செயற்கை ஸ்டீராய்டு ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன. பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதால் அவை மாதாதிர சுழற்சியை நிறுத்திவிடும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த நோயைக் கண்டறியவும் கூடுதல் திசுக்களை அகற்றவும் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகின்றது. மயோமெக்டோமி என்பது கருப்பையின் ஆரோக்கியமான திசுக்களை வெளியே எடுக்காமல் நார்த்திசுக் கட்டிகளை அகற்ற மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை. மயோமெக்டோமிக்குப் பிறகும் பெண்கள் கர்ப்பம் தரிக்க முடியும். மயோலிசிஸ் என்பது நார்த்திசுக்கட்டிகளில் ஒரு ஊசி செருகப்பட்டு லேப்ராஸ்கோபி மூலம் வழிநடத்தப்படுகிறது. மின்சாரம் அல்லது முடக்கம் மூலம் நார்த்திசுக்கட்டிகள் அழிக்கப்படுகின்றன. கருப்பை நார்த்திசுக்கட்டி எம்போலைசேஷன் (UFE) என்பது நார்த்திசுக் கட்டிக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களில் ஜெல் துகள்களைச் செலுத்தி இரத்த விநியோகத்தைத் தடுக்கப் பயன்படுகின்றது. இதனால் நார்த்திசுக் கட்டி சுருங்கும். நார்த்திசுக் கட்டிகள் கொண்ட பெண்களும் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் பிரசவத்தின் போது சிசேரியன் மூலம் குழந்தைப் பிறக்கும் அபாயம் மற்றவர்களை விட ஆறுமடங்கு அதிகம், நஞ்சுக் கொடி சீர்குலைவு, யோனி சரிவரத் திறக்காமை, பிரசவத்துக்கு முன் நஞ்சுக்கொடி கருப்பையின் சுவரில் இருந்து உடைந்து விடுவது, இது நிகழும்போது கருவுக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருத்தல், குறைப்பிரசவம், போன்றவை நிகழலாம். ஹிஸ்டரோசல் பிங்கோகிராம் என்பது பெண்களின் கருவுறாமைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் ஒரு இமேஜிங் செயல்முறை. கருப்பையில் செலுத்தப்படும் கதிரியக்கச் சாயத்தைப் பயன்படுத்தி எக்ஸ்ரே மூலம் காட்சிப்படுத்தப்படும் முறையாகும். பெண்களில் கருவுறாமை என்பது ஹார்மோன், உருவக் கட்டமைப்பு மற்றும் தம்பதிகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள் சார்ந்ததாகும். கோல்போஸ்கோபி என்பது கருப்பை வாய், பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்புக்குழாய் ஆகியவற்றை உருப்பெருக்கிக் கருவி மூலம் ஆய்வு செய்யப் பயன்படுகின்றது. டி&சி என்பது டைலேஷன் மற்றும் க்யூரேட்டேஜ் என்பது கருப்பை வாயை விரிவுபடுத்துவதையும், கருப்பைப் புறணியின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதையும் மேலும் கருப்பையின் உட்பக்கத்தை உரசித் தேய்த்தல் மற்றும் துருவித் தூய்மையாக்குவதையும் குறிக்கின்றது. ஆரம்பகால கருக்கலைப்பு மற்றும் கருப்பையில் எஞ்சி இருக்கும் திசுக்களை அகற்ற இது பயன்படுகிறது. மேற்கண்ட சோதனைகள் மூலம் கருத்தரிக்காமைக்கான காரணங்களைக் கண்டறித்து சிகிச்சை மேற்கொண்டால் அனைவருக்குமே கருத்தரிக்கும் வாய்ப்பு உருவாகும். http://honeylaksh.blogspot.com/2024/06/17.html
  5. யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது - தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை கோருகின்றனர் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 05:21 PM 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினர் தங்களின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோபொலிட்டன்பொலிஸார்வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விவகாரம்தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இரண்டாவது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகின்றது. இந்த குற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தரபாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிஸ் தளபதி டொமினிக் மேர்பி இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய பாரதூரமான சம்பவங்களை போல இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இந்த சம்பவம் குறித்து தகவல்கள் உள்ளவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும் அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்களை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம் நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. இந்த விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித்தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர், குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் - பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் பிணையின் கீழ் உள்ளார் இது 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். 2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது எனவும் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார், விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/185396
  6. Published By: DIGITAL DESK 7 05 JUN, 2024 | 06:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை நாட்டுக்கோ பிள்ளைகளுக்கோ பயனற்றது. பொருத்தமற்ற கல்வி முறைமையினால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது : கொவிட் தொற்று பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வித்துறை இன்று வரை வழமைக்கு திரும்பவில்லை. இந்த காலப்பகுதியில் பொதுப் பரீட்சைகளை நடத்த முடியாமல் போனது. கற்றல் நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியாமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது. இதனால் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கல்வித்துறையில் ஆசிரியர்கள் முதலானோரின் சம்பளம் தொடர்பான முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். இந்நிலையில், நடைமுறை கல்வி முறைமை தற்போதைய பிள்ளைகளுக்கு பொருத்தமானதாகவும் இல்லை. இந்த முறைமையால் நாட்டுக்கோ, பிள்ளைகளுக்கோ, உலகத்துக்கோ எந்தப் பிரயோசனமும் இல்லை. பொருத்தமான சிறந்த கல்வி முறை இருக்குமானால், நாட்டின் பிள்ளைகள் இந்தளவுக்கு பிரச்சினைகளை எதிர்நோக்கமாட்டார்கள். உளவியல் ரீதியில் இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் மற்றைய நாடுகளில் எப்படி கல்வி முறைமை உள்ளது என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. 10 வயது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் என்று கூறி எந்தளவுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. சிறந்த பாடசாலைக்கு மாணவர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையே இது. கிராமிய பாடசாலைகளில் வசதிகள் இருந்தால் ஏன் இந்த நிலைமை ஏற்படப்போகிறது? வளங்கள் பகிரப்படுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் கிடைக்காத பாடசாலைகளும் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/185395
  7. தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் - தியாகராஜா நிரோஷ் 05 JUN, 2024 | 05:27 PM போராட்ட பயணப்பாதையில் இனத்துக்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தியாகி பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவுநாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபூணுகின்றோம். "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 05 ஜூன் 1975ஆம் ஆண்டு சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் இச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இன விடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகிறது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூருகிறது. அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழியிலான அணுகுமுறைகள் பயனற்றுப்போன சூழ்நிலையில், அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப் போராட்ட வீரனாகவே பொன்.சிவகுமாரன் செயற்பட்டார். பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப் போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகிறது. தமிழ் மாணவர்களுக்கு எதிராக திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்துக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம்" என்றார். https://www.virakesari.lk/article/185389
  8. என்னக்கா நீங்களும் சொல்லேல, @suvy அண்ணையும் சொல்லேல! பாப்பம் வேறு சாத்திரிமார்😊 ஏதும் அறியத்தருவினமோ என்று!
  9. 05 JUN, 2024 | 04:31 PM பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 1975 ஜூன் 05ஆம் திகதி சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் அச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு, உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில், அச்சிலை மீள எடுத்து, முன்பிருந்த பகுதி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. இந்த சிலையை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் திறந்துவைத்தார். https://www.virakesari.lk/article/185386
  10. அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம் 05 JUN, 2024 | 04:21 PM இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்துள்ளதாவது- இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதானி கிரீன் எனர்ஜி (ஸ்ரீலங்கா) லிமிடெட் மன்னாரில் 250 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் இரண்டு காற்றாலைகளுக்கு தற்காலிக அனுமதியைப் பெற்றது. முக்கியமான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு 2024 மே 6 ம் திகதி அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த விலைக்கும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் தற்போதைய உலகளாவிய விலைக்கும் இடையே பாரிய வித்தியாசம் உள்ளது. மேலும் உலகின் இடம்பெயர்ந்த பறவைகளின் முக்கியமான பாதையான மன்னார் வழித்தடத்தில் காற்றாலை விசையாழிகள் நிறுவப்படுவது சுற்றுச்சூழலுக்கு மீள முடியாத தீங்கு விளைவிப்பதாக சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கரிசனை எழுப்பப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க விடயங்கள் காரணமாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 11 விண்ணப்பங்களை முக்கிய அரச அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ளது. இதில் அமைச்சரவை அலுவலகம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நிதி அமைச்சு நிலையான எரிசக்தி அதிகாரசபை மத்திய சுற்றாடல் அதிகாரசபை இலங்கை மின்சார சபை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகிய அரச நிறுவனங்கள் அவற்றில் உள்ளடங்குகின்றன. இந்த விண்ணப்பங்கள் பின்வருவனவற்றைப் பற்றிய தகவல்களைத் கோருகின்றன: 1. விலைமானுக்கோரல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூர்வத் தன்மை: இலங்கை அரசாங்கம் விலைமானுக்கோரல்களை மேற்கொண்டதா அல்லது முன்மொழிவுகள் பெறப்பட்டதா என்பது குறித்த விவரங்கள். 2. மதிப்பீடு மற்றும் தேர்வு செயன்முறை: மதிப்பீடு மற்றும் தேர்வு செயல்முறையானது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு திட்டத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அடிப்படை நியமங்கள் தெளிவுபடுத்துதல் விலைமானுக்கோரல்களின் மதிப்பீடு மற்றும் விலைமானுக்கோரலில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம்/ நபர் தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் நபர்களை அடையாளம் காண்பது மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டமானது அரசாங்கத்திற்கு-அரசாங்கம் இடையேயான ஏற்பாடா என்பது பற்றி தெளிவுபடுத்துதல். 3. விலை நிர்ணயம் மற்றும் செலவு நன்மைகள்: இலங்கைக்கான எரிசக்தி மற்றும் செலவு நன்மைகளை நிரூபிக்கும் ஆவணங்கள் திட்டத்திற்காக தீர்மானிக்கப்பட்ட அலகு விலை மற்றும் சந்தை விகிதங்களை விட அதிக விலை நிர்ணயம் ஆகியவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். 4. தேவை மற்றும் அபாய மதிப்பீடுகள்: திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தேவைகளின் மதிப்பாய்வு மற்றும் அபாய மதிப்பாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் சாத்தியமான அபாயங்களை தவிர்க்கும் முறைகள். 5. முடிவெடுக்கும் செயன்முறை: கோரப்படாத திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் முன்மொழிவு கோரிக்கைகளுக்கான பதில்கள் மற்றும் முடிவெடுக்கும் செயன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்கள் தகவல்தொடர்புகள் பகுப்பாய்வுகள் மதிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள்ஃகுறிப்புகள் ஆகியவற்றின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதிகள். 6. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பகுப்பாய்வு மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதற்கான முடிவை விவரிக்கும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள். 7. காணி கையகப்படுத்துதல்: மன்னார் மற்றும் பூநகரியில் காணிகளைக் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதா காணிகள் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுகிறதா? கையகப்படுத்த அனுமதிக்கப்பட்ட காணிகளின் அமைவிடம் பரப்பு மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த அத்தாட்சிப் படுத்தப்பட்ட ஆவணங்கள். இந்த தகவல் கோரிக்கைகளில் பலவற்றிற்கு இதுவரை முழுமையான மற்றும் சரியான நேரத்தில் பதில்கள் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகளிடம் மேன்முறையீடு செய்வதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நமது நாட்டின் வளங்களின் பாதுகாவலராகக் கருதப்படும் அரசாங்கம் இந்த முக்கியமான திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் அர்ப்பணிப்புடன் இருக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/185385
  11. நேபாளத்தை 6 விக்கெட்களால் வென்றது நெதர்லாந்து Published By: VISHNU 05 JUN, 2024 | 02:40 AM (நெவில் அன்தனி) டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) மிகவும் இறுக்கமாக நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது. நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே நெதர்லாந்து வெற்றிபெற்றது. அனுபவசாலியான மெக்ஸ் ஓ'தௌத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி அடையச் செய்தார். அவரைவிட விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர். 18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது ஓ'தௌத் கொடுத்த இலகுவான பிடியை நேபாள அணித் தலைவர் பவ்டெல் தவறவிட்டார். அடுத்த ஓவரில் அதிரடியாகக் துடுப்பெடுத்தாடிய ஓ'தௌத், பாஸ் டி லீட் ஆகிய இருவரும் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சோம்பால் காமி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அபினாஷ் பொஹாரா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட காரண் கே.சி. 17 ஓட்டங்களையும் குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை. பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டிம் ப்ரிங்ள் https://www.virakesari.lk/article/185340
  12. மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள் 4 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இறுதி முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்டிஏ* 292 58 என்டிஏ (பாஜக கூட்டணி) seats, 292 58 seats lost since 2019 இந்தியா** 234 149 இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 234 seats, 149 seats gained since 2019 மற்றவை 17 90 மற்றவை 17 seats, 90 seats lost since 2019 2019 உடன் ஒப்பிடும்போது ஏற்பட்டுள்ள மாற்றம் *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி முழு முடிவுகளையும் பார்க்க நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. இந்த 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்என்ன, அடுத்த 2 இடங்களை பெற்ற வேட்பாளர்களின் வாக்குகள் என்ன என்பது குறித்து இங்கே காணலாம். சந்திரபாபு நாயுடு பாஜகவை ஆட்டுவிப்பாரா? தெலுங்கு தேசத்தின் வியூகம் என்ன?7 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்), 7,96,956 இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக), 2,24,801 மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக), 2,23,904 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக), 4,97,333 இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ), 1,58,111 மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக), 1,13,318 படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), 5,16,628 இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக), 2,90,683 மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக), 1,72,491 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக), 4,13,848 இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக), 1,69,159 மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக), 7,20,16 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக), 7,58,611 இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) 2,71,582 மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 2,10,110 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக), 586044 இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக), 364571 மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக), 164931 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக), 563216 இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக), 256657 மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக), 202325 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக), 568692 இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக), 352990 மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக), 117682 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்), 492883 இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக), 300397 மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக), 214125 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ. மணி (திமுக), 432667 இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக), 411367 மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக), 293629 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக), 547379 இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக), 313448 மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக), 156650 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக), 500099 இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக), 291333 மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக), 236571 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக), 477033 இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக), 406330 மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக), 181882 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக), 561589 இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக), 507805 மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி), 73652 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக), 566085 இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக), 495728 மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக), 127139 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக), 462036 இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக), 432924 மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக), 104690 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக), 562339 இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக), 325773 மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ), 82796 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 472739 இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக), 346811 மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக), 185322 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக), 473212 இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக), 232627 மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக), 220230 படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக), 568200 இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக), 450132 மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), 236490 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக), 533377 இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக), 281335 மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக), 223354 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக), 670149 இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக), 226328 மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக), 112503 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்), 534906 இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக), 368090 மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக), 102482 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக), 542213 இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக), 229119 மூன்றாம் இடம்: ராஜேஷ் (நாம் தமிழர் கட்), 107458 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக), 603209 இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக), 214102 மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக), 161866 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), 455053 இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக), 269157 மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக), 205244 படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக), 505084 இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக), 401530 மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக), 168493 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்), 518459 இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக), 247276 மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக), 166437 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), 465044 இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக), 256087 மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி), 131294 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக), 502245 இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக), 182662 மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக), 170613 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), 427677 இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக), 222013 மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக), 195788 பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), 430323 இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக), 220914 மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக), 204804 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக), 571493 இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக), 292668 மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக), 155587 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்), 385256 இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக), 380877 மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக), 166271 படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), 509664 இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை), 342882 மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக), 99780 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக), 540729 இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக), 147991 மூன்றாம் இடம்: விஜயசீலன் எஸ்டிஆர் (தமிழ் மாநில காங்கிர), 122380 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக), 425679 இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக), 229480 மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக), 208825 படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்), 502296 இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக), 336676 மூன்றாம் இடம்: ஜான்சி ராணி எ (அதிமு), 89601 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்), 546248 இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக), 366341 மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக), 52721 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்), 426005 இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக), 289489 மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி), 39603 https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
  13. Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 01:09 PM லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்துள்ளது. இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என லெபனானின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனடியாக பதில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் காயமடைந்தார் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என லெபனானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/185356
  14. அகிலேஷ்: உ.பி.யில் பாஜகவின் ராமர் கோவில் உத்தியை உடைத்த சமாஜ்வாதியின் வியூகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அகிலேஷ் யாதவின் வியூகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன கட்டுரை தகவல் எழுதியவர், ரஜ்னிஷ் குமார் பதவி, பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராக வந்துள்ளன. ஃபைசாபாத் தொகுதியில் இருக்கும் அயோத்தி நகரில் ராமர் கோவிலை முன் வைத்து பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்தது. ஆனால், அந்த தொகுதியில் மூன்று முறை எம்பியாக இருந்த பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் தோற்கடித்திருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தரப் பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது. `400-ஐ தாண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோதி சவால்விட்டு பரப்புரை செய்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் ஆசையாக இருந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஆனால் தேர்தல் முடிவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்திவிட்டது. பாஜக 33 தொகுகளிலும், இந்தியா கூட்டணி 43 தொகுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்எல்டி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதன் விளைவாக பாஜகவால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கு பாஜக 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த முறை உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை. இம்முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 2019 பொதுத் தேர்தலில் உ.பி.யில் பாஜக 63 தொகுதிகளைப் பெற்றிருந்தது. பிஎஸ்பி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும், அப்னா தளம் (சோனேலால்) 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த முறை சாத்தியமாக்க முடியவில்லை. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார். இந்த முறை, காந்தி-நேரு குடும்பத்தின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா அத்தொகுதியில் போட்டியிட்டதால், ஸ்மிருதி இரானியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த முடிவுகள் 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியைத் தோற்கடித்தபோது, 'நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசை ஒரு சாதரண பாஜக தலைவர் அவரது கோட்டையிலேயே தோற்கடித்துவிட்டார்’ என்ற பேச்சுகள் எழுந்தது. இந்த முறை ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக ஒரு சாதாரண வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் பிரதமர் மோதியும் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்த போதிலும், பின்னர் முன்னிலை பெற்றார். ஆனால், இம்முறை வாரணாசியில் மோதி எவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த தேர்தலில் மோதிக்கு வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1,52,513 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியை கைப்பற்றியிருக்கிறார். இருப்பினும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறார் மோதி. 2019 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி வாரணாசியில் சுமார் 4,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முறை பிரதமர் மோதிக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. 2014 இல், மோதி வாரணாசியில் மொத்தம் 5,81,022 வாக்குகளைப் பெற்றார், இது அங்கு மொத்த வாக்குகளில் 56 சதவீதமாக இருந்தது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகள் கிடைத்தது. உத்தரப் பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் களத்தில் இருந்தனர். பிரதமர் மோதி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டனர். ராஜ்நாத் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர். அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் மெயின்புரியில் போட்டியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்துதல் போன்ற பிரச்னைகளை சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் கடுமையாக விமர்சித்தன. இடஒதுக்கீடு பிரச்னையை பற்றி இரு கட்சிகளும் மக்களிடையே பேசியது. இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டின. இதனுடன், இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிவீர் திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் எழுந்த கோபம் போராட்டங்களில் பலமுறை பிரதிபலித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இது யோகிக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்? உ.பி.யில் தொகுதிகளை பாஜக இழந்திருப்பது, பிரதமர் மோதிக்கு மட்டுமின்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கெட்ட செய்தி என, உத்தரப் பிரதேச மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான் தெரிவித்துள்ளார். ஷரத் பிரதான் கூறுகையில், “பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்பார்க்காத வண்ணம் 33 இடங்கள் தான் கிடைத்துள்ளது. இது பிரதமர் மோதி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை மக்கள் நிராகரித்ததை காட்டுகிறது. மோதி பலம் அதிகரித்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சாமானியர்களை எதிர்க்கட்சிகள் நம்ப வைத்தன. இதுவே உபியில் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. அதனால்தான் தலித் வாக்காளர்களும் மாயாவதி கட்சியை விட்டு வெளியேறி இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். பாஜக ஆட்சியில் இருந்தால் இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் என்ற இந்தச் செய்தி தலித்துகள் மத்தியில் ஆழமாகப் போய் சேர்ந்தது. மாயாவதி ஜாதவ் பிரிவை சேர்ந்தவர். ஆனால், ஜாதவ் இன மக்கள் கூட அவருக்கு வாக்களிக்காமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர்.” என்றார். ஷரத் பிரதான் மேலும் கூறுகையில், “உ.பி.யில் பாஜக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்திருப்பது யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்கும். அமித் ஷாவும், நரேந்திர மோதியும் இந்தத் தோல்விக்கு யோகி மீது குற்றம் சாட்டி, அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்க வாய்ப்புகள் உள்ளன. நரேந்திர மோதி உ.பி.யில் தான் அடைந்த உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியுள்ளார். பிரதான் கூறுகையில், "உ.பி.யில் தன்னை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும், இந்துத்துவா முன் யாரும் நிற்க முடியாது என்றும் யோகி நினைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபித்துள்ளது. இந்திய மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதில்லை. ஸ்மிருதி இரானியின் தோல்வி மோதியின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மோதியின் பாணியிலேயே சென்று ஸ்மிருதி இரானியை சரியாக தோற்கடித்துள்ளார் ராகுல் காந்தி. ஸ்மிருதியை தோற்கடிப்பது ராகுலின் நல்ல உத்தி, அதுவும் ஒரு சாதாரண வேட்பாளரை முன்னிறுத்தி! பட மூலாதாரம்,GETTY IMAGES உபி தோல்விக்கு என்ன காரணம்? ஷரத் பிரதான் கூறுகையில், "இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் நமக்கு இரண்டு முக்கிய விஷயங்களை கூறுகிறது. முதல் செய்தி, தலித்துகள் தனது அடிமைகள் அல்லர் என்பது மாயாவதிக்கு தெரிந்திருக்கும். இரண்டாவது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்திருக்கும்" என்றார். அலஹாபாத் தொகுதியில் இருந்து எம்.பி., ஆன ரீட்டா பகுகுணா ஜோஷி யோகியின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர். இந்த முறை அவருக்கு பாஜக தொகுதி கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக, பாஜக மூத்த தலைவர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜ் திரிபாதிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை உ.பி.யில் பாஜகவுக்கு 33 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது ஏன் என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ரீட்டா பகுகுணா ஜோஷி கூறுகையில், "நாங்கள் ஆட்சி அமைப்போம், ஆனால் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் கிடைத்த வெற்றியை இம்முறை பெறப் போவதில்லை. நாங்கள் உ.பி.யில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டோம், ஆனால் வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் விமர்சனமும் எங்கள் முன் வைக்கப்பட்டது. அயோத்தியிலும் கூட நாங்கள் பின்தங்கியுள்ளோம். இந்த முறை ஏன் இப்படி நடந்தது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.” என்றார். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்குமா என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜோஷி பதிலளிக்கையில், "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது, எந்த பாதிப்பும் ஏற்படாது." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன? இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தெளிவான வியூகத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டி வருகின்றனர். இம்முறை, அகிலேஷ் யாதவ், யாதவ் அல்லாத சாதியினருக்கு கூடுதல் கவனம் செலுத்தி தொகுதிகள் ஒதுக்கினார். முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த முறை அகிலேஷ் யாதவ் 62 பேரில் ஐந்து யாதவ் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தினார், அவர்கள் அனைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 2019 இல், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சி 37 தொகுகளில் போட்டியிட்டு 10 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது. 2014 ஆம் ஆண்டில், உ.பி.யில் 78 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது, இதில் மொத்தம் 12 பேர் யாதவ் வேட்பாளர்கள் மற்றும் நான்கு பேர் முலாயம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியர் பங்கஜ் குமார், தொகுதி ஒதுக்கீட்டு வியூகத்திற்காக அகிலேஷ் யாதவை பாராட்டியுள்ளார். பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், “சமாஜ்வாதி கட்சி தொகுதி ஒதுக்கீட்டை மிகச் சிறப்பாக செய்துள்ளது. அயோத்தியில் தலித் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கியது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. அங்கு போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் மூத்த சமாஜ்வாதி உறுப்பினர் ஆவார். அதே போல் பல்லியா தொகுதியில் சனாதன் பாண்டேவுக்கு தொகுதி ஒதுக்கியதும் புத்திசாலித்தனமான முடிவு.” “அகிலேஷ் யாதவ் பிடிஏ ('PDA' or 'Pichde -backward classes or OBCs) என்னும் திட்டத்தை முன்வைத்து அனைத்து சாதியினரும் அதில் சேர்க்கப்பட்டனர், மறுபுறம், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்களைச் செய்தது. பாஜக தொகுதி ஒதுக்கீட்டையும் மிக மோசமான முறையில் செய்தது. தொகுதி ஒதுக்கீடு பற்றி யோகியிடம் ஆலோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். கௌஷாம்பி தொகுதியில், ராஜா பையா தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு தொகுதி ஒதுக்கச் சொன்னார் ஆனால் அமித் ஷா ஒப்புக்கொள்ளவில்லை. அலஹாபாத்தில் நீரஜ் திரிபாதி நிறுத்தப்பட்டார். ஆனால் அவரது தோல்வி தற்போது உறுதியாகி விட்டது. அமித் ஷா டெல்லியில் இருந்து கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்து கொண்டிருந்தது தான் இதற்கு காரணம்” என்று விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மாநில அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும் பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், "யோகியின் ஆலோசனைப்படி தொகுதிகள் வழங்கப்படவில்லை, ஆனால் யோகி மீதும் தவறு உள்ளது. யோகி தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை." "அவர்கள் குஜராத் பாணியில் ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். அதிகார வர்க்கத்தின் பலத்தில் அவர்களின் அரசாங்கம் இயங்குகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை விட காவல்துறையைத்தான் அதிகம் நம்புகிறார்கள். இந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்ஸும் பாஜக சார்பில் இல்லை என்று நினைக்கிறேன். மோதி மிகவும் பலம் மிக்கவர் ஆகி வருகிறார் என்றும் இது தங்களுக்கு நல்லதல்ல என்றும் ஆர்எஸ்எஸ் உணரத் தொடங்கியது.” என்றார். இந்தத் தேர்தலில் மாயாவதி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், இனி அவர் பழைய இடத்தை அடைவது கடினம் என்றும் பேராசிரியர் பங்கஜ் நம்புகிறார். "மாயாவதி இடத்தை சந்திரசேகர் நிரப்பலாம்" என்கிறார் பேராசிரியர் பங்கஜ் குமார். நாகினா தொகுதியில் இருந்து அவர் பெற்ற வெற்றியும் இதையே காட்டுகிறது. தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெறுவதுதான் முக்கியம். உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மோசமான செயல்பாடு, நரேந்திர மோதியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கெடுக்கக்கூடும். மற்றொரு புறம் வட இந்தியாவில் மாநிலக் கட்சிகள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். அமேதி மற்றும் ரேபரேலியிலும் காங்கிரஸ் வலுவாக உருவெடுத்துள்ளது. இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் விருப்பத்திற்கு மாறானது! https://www.bbc.com/tamil/articles/cz77re7lrkpo
  15. மன்னாரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை Published By: DIGITAL DESK 3 05 JUN, 2024 | 03:27 PM சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று புதன்கிழமை (5) காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து மெசிடோ நிறுவனத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை டினோஸா கண்டல் தாவரப் பள்ளி (Dinosha Mangrove Nursery) வழங்கியிருந்தனர். இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன், மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185377
  16. ஐரோப்பா முழுவதும் பயணம் செய்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானியா முழுவதும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ததுடன் கடந்த மே மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிக்கு இடையில் Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தைக் கடந்து சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த சுற்றுலாப் பயணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிக காய்ச்சல், இருமல், தும்மல், கண்களில் நீர் வடிதல் மற்றும் ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு பொதுவாகத் தோன்றும் சரும அழற்சி என்பன தட்டம்மை நோயின் அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் எவரும் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/303172
  17. முதலாவதாக நிலவின் இருண்ட பகுதியில் மண்ணை எடுத்த சீனா! சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Change – 6 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த நிலையில் குறித்த விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு மையம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த விண்கலமானது சேகரிக்கப்பட்ட 2 கிலோ மண் மாதிரியை வெற்றிகரமாக கொண்டுவரும் பணியை செய்து முடித்தால், அவ்வாறு செய்யும் முதல் நாடாக சீனா மாறும். இந்த மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரன், பூமி மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/303169
  18. பிரதமர் பதவியிலிருந்து மோடி ராஜினாமா: 3-வது முறையாக ஜூன் 8-ல் பதவியேற்பு! பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 😎 பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதற்காக இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது அக்கட்சி. இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது. 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். சனிக்கிழமை பதவியேற்பு: இதற்கிடையே, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 😎 மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://thinakkural.lk/article/303197
  19. வாகன புகை பரிசோதனை! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர். இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/303182
  20. 05 JUN, 2024 | 02:20 PM ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் புதன்கிழமை (5) அதிகாலை தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (4) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று, மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் புறப்பட்டு, இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை அடைந்துள்ளனர். தாய், தந்தை, நான்கு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களான இந்த ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185358
  21. பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்: பேராசிரியர் அமரதுங்க 2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தியுள்ளார். பரீட்சை பெறுபேறுகளை இனந்தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “பரீட்சை பெறுபேறுகள் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்திற்கான வழிமுறையாக செயல்படும் தனித்துவமான ஆவணங்கள். குறியீட்டு எண் உட்பட இந்த ஆவணங்களின் நகல்களைப் பகிர்வது சிலவேளை பாதிப்பாக அமையலாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது, உதவித்தொகை பெறுவது போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக பலர் இந்தத் தகவலைத் தவறாகப் பயன்படுத்தலாம். உண்மையான உரிமையாளர்களின் தகவல்கள் பிறரால் மாற்றியமைக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரீட்சை பெறுபேறுகளை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பேராசிரியர் அமரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/303122
  22. இங்கிலாந்து - ஸ்கொட்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது Published By: VISHNU 05 JUN, 2024 | 02:38 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் பார்படோஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் பி குழு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது. மழையினால் தாமதித்து ஆரம்பமானதும் இடையில் தடைப்பட்டு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுமான போட்டியில் ஸ்கொட்லாந்து விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைக் குவித்தது. மழை காரணமாக 52 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸ்கொட்லாந்து 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது மைக்கல் ஜோன்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 10 ஓவர்கள் என மத்தியஸ்தர்களால் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் எஞ்சிய 3.4 ஓவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மேலும் 39 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 90 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. மைக்கல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 45 ஓட்டங்களுடனும் ஜோர்ஜ் மன்சே 31 பந்துகளில் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இதனை அடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 109 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடரப்படாமால் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/185339
  23. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:28 PM (நெவில் அன்தனி) ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார். ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட் கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கால்பந்தாட்ட கழகத்துடன் கிலியான் எம்பாப்பே செய்துகொண்ட 4 வருட ஒப்பந்தம் இந்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி முடிவடைகிறது. எனவே அவர் இலவச இடமாற்றத்தின் அடிப்படையில் ரியல் மெட்றிடில் இணையவுள்ளார். பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விலகி ரியல் மெட்றிட் கழகத்தில் இணையவுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் அவர் வாய்மொழிமூலம் தெரிவித்திருந்தார். ரியல் மெட்றிட் கழகத்துடனான ஒப்பந்தத்தில் இப்போது கைச்சாத்திட்டுள்ள எம்பாப்வே, ஜூலை 1ஆம் திகதிக்குப் பின்னர் அக் கழகத்துடன் இணைந்துகொள்வார். லா லிகா கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வீரர்களுக்கான இடமாற்றக் காலம் ஜூலை 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற எம்பாப்பே, 2017ஆம் ஆண்டு மொனாக்கோ கழகத்திலிருந்து கடன் அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் அணியில் இணைந்தார். எனினும் 2018இலிருந்தே உத்தியோகபூர்வ ஒப்பந்த அடிப்படையில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திதிற்காக விளையாடிவந்தார். அக் கழகத்தில் விளையாட ஆரம்பித்த பின்னர் 256 கோல்களைப் போட்டுள்ள எம்பாப்பே, அக் கழகத்திற்காக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார். ரியல் மெட்றிட் கழகத்தில் 2029வரை 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள எம்பாப்பே, ஒரு பருவ காலத்தில் 15 மில்லியன் யூரோக்களை சம்பாத்திக்கவுள்ளார். அதனைவிட ஊக்கத் தொகையாக 150 மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளார். https://www.virakesari.lk/article/185318
  24. இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக பிடியாணையா? சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை Published By: RAJEEBAN 05 JUN, 2024 | 10:22 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள இஸ்ரேல் சார்பு குடியரசுகட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த சட்டமூலத்தை சனப்பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுகட்சி பெரும்பான்மை பெற்றுள்ள சனப்பிரதிநிதிகள் சபையில் 247 பேர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், 155 பேர் எதிராக வாக்களித்துள்ளனர். இஸ்ரேலை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது சட்டமாக மாற்றப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. செனெட்டில் பெரும்பான்மையை கொண்டுள்ள ஜனநாயக கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிராகரிப்பார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. செனெட்டின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே இந்த சட்டமூலம் சட்டமாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்க்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/185350

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.