Everything posted by ஏராளன்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
தொடர் தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? சென்னைக்கு என்ன சிக்கல்? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மாற்றங்களுடன் இந்த சீசனை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது. பவர் ப்ளேயின் முதல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட், அடுத்த 2 ஓவர்களில் ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் என 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ளே ஆஃப் செல்ல லக்னோ என்ன செய்ய வேண்டும்? இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் சென்னை அணி 4-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியமானதாக மாறியிருக்கின்றன. அதே நேரத்தில் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசிவரை இழுத்து வந்ததால், லக்னோவின் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. சென்னை அணியையும் விட 0.094 என்ற அளவில் மிகக்குறைவாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் லக்னோ அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் ஆடினால்தான், ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல தகுதிப்படுத்த முடியும். லக்னோ அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களில் வெல்வது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிக்கலில்லாமல் உறுதி செய்யும். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா? மும்பை அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு அருகே உள்ளது.. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.272 என்று மோசமாக இருக்கிறது. இன்னும் கைவசம் 4 போட்டிகள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று செல்வது கடினம்தான். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணியைப்போல், ப்ளே ஆஃப் சுற்று என்பது வெறும் கணிதத்தின் அடிப்படையில்தானேத் தவிர செயல்பாட்டளவில் சாத்தி இல்லாத செயலாகும். ஏனென்றால், மும்பை இந்தியன்ஸுக்கும், ஆர்சிபிக்கும் இன்னும் 4ஆட்டங்களே மீதம் உள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றால்கூட தலா 8 புள்ளிகள்தான் பெற முடியும் ஏற்கெனவே இருக்கும் 6 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள்வரை பெற்று அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகளும் தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் போகும். ஒருவேளை 14 புள்ளிகள் பெற்ற அணிகள் 4-ஆவது இடத்துக்கு போட்டியிட்டால், ஆர்சிபி, மும்பை அணிகளின் நிகர ரன்ரேட் மிக அதிகமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமானால்தான் மும்பை, ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும். இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ஸ்டாய்னிஸ் மந்தமாகத்தான் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி இரு போட்டிகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். இந்த சீசனில் பேட்டிங் சராசரியாக 40 வைத்திருக்கும் ஸ்டாய்னிஸ் 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாக வைத்துள்ளார், பந்துவீச்சில் இதுவரை 10 போட்டிகளில் 12 ஓவர்கள் மட்டுமே வீசிய ஸ்டாய்னிஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த சீசனில் ஏற்கெனவே சதம் அடித்துவிட்ட ஸ்டாய்னிஸ் இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்பை தவறவிட்ட லக்னோ சேஸிங்கின்போது கேப்டன் ராகுலும், ஸ்டாய்னிஸும்தான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என்று கூறலாம். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி முதல்பந்திலேயே துஷாரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அதன்பின் 3வது வீரராக களமிறங்கிய ஸ்டாய்னிஸ், ராகுலுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்போலத்தான் விளையாட வேண்டியதிருந்தது ஆனால், சூழலுக்கு ஏற்றார்போல் பேட்செய்த ஸ்டாய்னிஸ், பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி கோட்ஸீ வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ராகுலும் அவ்வப்பபோது பவுண்டரிகள் அடிக்க பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்தது. ராகுல் 5 ரன்கள் சேர்த்திருந்த ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த முறை பாண்டியா பந்துவீச்சில் ராகுல்(28) அடித்தஷாட்டை நபி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 2வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்,ராகுல் கூட்டணி 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். முதல் 50 ரன்களை 5.2 ஓவர்களை எட்டிய லக்னோ அணி அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 8ஓவர்கள் எடுத்துக்கொண்டது, அதாவது 48பந்துகளை எடுத்துக் கொண்டது. தொடக்கத்தில் 10 ரன்ரேட்டில் சென்ற லக்னோ அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன்சேர்க்கும் வேகம் குறைந்து 6 ரன்ரேட்டாகச் சரிந்தது. நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, பும்ரா, பாண்டியா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா பேட்டிலிருந்து ரன்கள் செல்வது கடினமாக இருந்தது. இருப்பினும் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES தீபக் ஹூடா 18 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்-பாண்டியா கூட்டணி 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷுடன் சேர்ந்தார் இரு பெரிய ஹிட்டர்களும் அணியை விரைவாக வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாய்னிஸ் 62 ரன்களில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில்2 சிக்ஸர், 7பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய டர்னர்(5), பதோனி(6) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 115 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வழக்கமாக அதிரடியாக சிக்ஸர்கள், பவுண்டரிகளை அடிக்கும் நிகோலஸ் பூரன் நிதானமாக ஆடி ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்தார். பூரன் 14 ரன்களுடனும், குர்னல் பாண்டியா ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். லக்னோ அணி முதல் 50 ரன்களை விரைவாக எடுத்துவிட்டு அடுத்த 95 ரன்களை மிகவும் மந்தமாகச் சேர்த்ததுதான் அதனால் நிகர ரன்ரேட்டைஉயர்த்தமுடியாமல் இருக்கிறது. 95 ரன்களைச் சேர்க்க லக்னோ அணி 14 ஓவர்களை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த மந்தமான பேட்டிங்தான் லக்னோவின் குறைவான நிகர ரன்ரேட்டுக்கு காரணமாகும். முதல் 50 ரன்களைச் சேர்த்ததுபோல் விரைவாக இலக்கை எட்டி குறைந்த ஓவர்களில் வென்றிருந்தால், லக்னோ அணி 2வது இடத்துக்கு முன்னேறியிருக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஸ்டாய்னிஸ் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்து லக்னோவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஸ்டாய்னிஸ் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் அடித்த 62 ரன்கள் சேர்த்து லக்னோ வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பு செய்தார். பந்துவீச்சிலும், ஸ்டாய்னிஸ் மீது நம்பிக்கை வைத்து தொடக்கத்திலேயே கேப்டன் ராகுல் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ஸ்டாய்னிஸ் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆபத்தான பேட்டர் சூர்யகுமார் யாதவ்(10) விக்கெட்டை வீழ்த்தினார். 3 ஓவர்கள் வீசிய ஸ்டாய்னிஸ் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் சரிவு மும்பை அணியைக் காப்பாற்றியது கீழ் வரிசை பேட்டர்கள் நேகல் வதேரா(46), டிம் டேவிட்(35) கடைசி நேரத்தில் ஆடிய கேமியோதான். இருவரும் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு பேட் செய்யாமல் இருந்திருந்தால் 120 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். லக்னோவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட விக்கெட் பேட்டர்கள் பேட் செய்ய கடினமாக இருந்தது. மும்பை அணி கூடுதலாக 30 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டத்தை வென்றிருக்கக்கூடும். மும்பையின் தொடக்க வரிசை பேட்டர்கள் பவர்ப்ளே ஓவருக்குள் பெவிலியன் திரும்பினர். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி அடித்த பவுண்டரிகளைவிட இழந்த விக்கெட்டுகள்தான் அதிகம். 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி, 4 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(4) ரன்னில் மோசின்கான் வீசிய 2வது ஓவரில் ஆட்டமிழக்க, சூர்யகுமார்(10) ரன்னில் ஸ்டாய்னிஸ் வீசிய 3வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்துஇருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் (0) ஆகிய இருவரும் நவீன் உல்ஹக் வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது. இஷான் கிஷன், நேகல் வதேராவுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்து ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணி 10 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் இஷான் 32 ரன்கள் சேர்த்தநிலையில் யாதவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். நேஹல் வதேரா மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 35 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் மும்பை பேட்டர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மயங்க் யாதவ் மீண்டும் காயமா? இந்த சீசனில் கண்டுபிடிக்கப்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர், மணிக்கு 156 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீண்டுவந்து நேற்று விளையாடினார். 3 ஓவர்கள் சிறப்பாகப் பந்துவீசிய மயங்க் யாதவ், 4வது ஓவரின் முதல் பந்தில் நபியை கிளீன் போல்டாக்கினார். ஆனால், வயிற்றுப்பகுதியில் மீண்டும் வலி எடுக்கவே மயங்க் யாதவ் பெவிலியன் திரும்பினார், அவரின் ஓவரை நவீன் உல்ஹக் பந்துவீசி நிறைவு செய்தார். மயங்க் யாதவ் குறித்து பயிற்சியாளர் ஜஸ்டின்லாங்கர் கூறுகையில் “ மயங்க் ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் முன்கூட்டியே அவரை அழைத்துவந்துவிட்டோம். மயங்க் உடல்நிலையில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. முன்னெச்சரிக்கையாக மயங்க் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிதாக அவருக்கு பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன சொல்கிறார் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேக்குள் இழந்தபின் மீண்டு வரமுடியவில்லை. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பிற அணிகள் பெரிய ஸ்கோரை அடித்துவருவதால் பேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கூற முடியாது. விக்கெட் நன்றாக இருந்தது, பந்தை பார்த்து அடிக்க முடிந்தது. ஆனால் தவறான ஷாட்களை ஆடினோம். களத்துக்குள் இறங்கிவிட்டால் சில நேரங்களில் தோற்கலாம், வெற்றி பெறலாம், ஆனால் போராட வேண்டும் என்று நம்பக்கூடியவன். இந்த ஆட்டம் கடினமானதுதான். ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். வதேரா சிறப்பாக பேட் செய்தார், கடந்த சீசனிலும் வதேரா சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் வதேராவுக்குவாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வருவதைப் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3gq141p06qo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
'அந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை' - பிபிசி காஸா செய்தியாளரின் நேரடி அனுபவம் படக்குறிப்பு,அட்னான், பல வாரங்கள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், அட்னான் அல்-புர்ஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏறக்குறைய மூன்று மாதங்களாக, அட்னான் அல்-புர்ஷ் காஸாவிலிருந்து போரைப் பற்றிய செய்திகளை அளித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் வாழ்ந்து, ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, தனது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர் போராடியிருக்கிறார். பிபிசி அரபு நிருபர்கள், போரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போது தாங்கள் எதிர்கொண்ட திகிலூட்டும் தருணங்களைப் பகிர்ந்துள்ளனர். காஸாவில் ஒரு செய்தியாளராக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்டதை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அட்னான் அல்-புர்ஷ். 'குடும்பத்துடன் தெருவில் உறங்கினோம்' படக்குறிப்பு,அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்க முடிவு செய்திருந்த குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தெருவில் உறங்கினர் குடும்பத்துடன் அனைவரும் சாலையில் தூங்கிய தருணம் தான், கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று. தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் தெருவில் கடும் குளிரில் என் மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிராதரவாக நின்றேன். எனது 19 வயது இரட்டைப் பிள்ளைகளான ஜக்கியா மற்றும் படூல் அவர்களின் 14 வயது சகோதரி யும்னாவுடன் நடைபாதையில் தூங்கினர். எனது எட்டு வயது மகன் முகமது மற்றும் ஐந்து வயது இளைய மகள் ரஸான் அவர்களின் தாய் ஜைனப் உடன் உறங்கினர். பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (செஞ்சிலுவைச் சங்கம்) தலைமையகத்திற்கு வெளியே நாங்கள் ஓய்வெடுக்க முயன்ற போது, இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. நாங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கட்டிடத்தின் மீது குண்டு வீசப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் அன்றே எங்களிடம் கூறினார். நான் அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் எனது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர். படக்குறிப்பு,பிபிசி குழுவானது கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை அருகே கூடாரத்தில் இருந்து வேலை செய்தது. 'குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி' நாங்கள் அனைவரும் செஞ்சிலுவை தலைமையகத்தில் சந்தித்தோம், அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நானும் என் சகோதரனும் இரவு முழுவதும் அட்டைப் பெட்டிகளில் அமர்ந்து என்ன செய்வது என்று விவாதித்தோம். வடக்கு காஸாவில் இருந்த அனைவரையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டதால், அக்டோபர் 13 அன்று எனது குடும்பம் ஜபாலியா நகரத்தை விட்டு வெளியேறியது. எங்களது வீடு மற்றும் பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினோம். ஆனால் இப்போது எந்த இடத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் செல்லச் சொன்னதோ, அதே இடத்தில் குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பித்தோம். இந்த நேரத்தில் எதையும் தெளிவாகச் சிந்திப்பது மிகவும் கடினம். நான் கோபமாகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனது குடும்பத்தை ஏன் என்னால் பாதுகாக்க முடியவில்லை? என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. ஒருவழியாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஒரு கூடாரத்தில் பிபிசி குழுவுடன் நான் தங்கியிருந்த போது, எனது குடும்பம் மத்திய காஸாவில் உள்ள நுசைரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்கள். சில நாட்களுக்கு ஒருமுறை என் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வேன். இணையம் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் பலமுறை துண்டிக்கப்பட்டதால் அவர்களோடு தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒருமுறை நான்கைந்து நாட்களுக்கு என் குடும்பத்துடன் பேச முடியாத நிலை இருந்தது. படக்குறிப்பு,அட்னான், தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நாளில் நேரலையில் அழுதார். ‘நேரடி ஒளிபரப்பின் போது அழுதேன்’ கான் யூனிஸின் பிபிசி குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்து வந்தது. சில நேரங்களில் உணவு இருந்தாலும், கழிப்பறை இல்லாததால் மீதம் இருவேளை சாப்பிட மாட்டோம். இதற்கிடையில், எனது நண்பரும் அல் ஜசீரா பணியகத்தின் தலைவருமான வயேல் டாடோ இந்தப் போருக்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்தார். அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, சிறு மகன், ஏழு வயது மகள் மற்றும் ஒரு வயது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்க ‘முடிந்தவரை எச்சரிக்கையாக’ இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் , 'ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக' இஸ்ரேல் கூறியது. 20 வருடங்களாக எனக்கு நன்கு பரிச்சயமான எனது நண்பர் அழும் காட்சிகளைப் பார்த்தேன். அவர் மத்திய காஸாவில் தனது குழந்தைகளின் மூடிய உடல்களைத் தழுவியவாறு கண்ணீருடன் இருந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இருக்க விரும்பினேன். எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் மரணச் செய்திகள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தியும் வந்தது. அன்று நான் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அழுதேன். நான் இரவில் அடிக்கடி கண்விழிப்பேன், என் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருக்கும். நண்பர் வயேல் அழுத காட்சிகள் என் மனதை விட்டு நீங்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் காஸாவில் நடந்த பல மோதல்களை நான் செய்திகளாக விவரித்துள்ளேன் ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். படக்குறிப்பு,இஸ்ரேல் எச்சரித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. ரேஷன் கடைகள் மீது தாக்குதல் அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு எழுந்தேன், என் குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். நான் மேல்தளத்திற்கு சென்று பார்த்தேன், இஸ்ரேலில் இருந்து காஸா மீது ராக்கெட்டுகள் ஏவப்படுவதைக் கண்டேன். ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும், இந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது. 250 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர், எனவே இஸ்ரேலின் பதிலடி நாங்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 34,000 பேர் இறந்துள்ளனர், ஆனால் போர் தொடர்கிறது. இன்னும் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியிருந்ததால், ஜபாலியாவில் உள்ள ஒரு சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றேன். என்னைப் போலவே பொருட்களை வாங்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். நான் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பத்து நிமிடங்களில் அந்த பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெரிய ரேஷன் கடைகளும் இடிந்து நாசமாயின. இந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியின் கேள்விகளுக்கு இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 'எனது வீடு முற்றிலும் சேதமடைந்தது' படக்குறிப்பு,கான் யூனிஸில் இருந்த பிபிசி குழு உறுப்பினர்கள் இந்த நிலையில் தான் வாழ வேண்டியிருந்தது. போர் முழுவதும், ஹமாஸ் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், மேலும் ஹமாஸ் தளங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ளன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ‘ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்படியே உள்ளன,’ என்றும் அது கூறியுள்ளது. போருக்கு முன்பு, ஜபாலியா ஒரு அழகான, அமைதியான நகரமாக இருந்தது. நான் அங்குதான் பிறந்தேன், என் குடும்பத்துடன் எளிமையான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன். எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தன. இந்த நகரத்தின் கிழக்கே எனக்கு பண்ணைகள் இருந்தன, அங்கு நான் ஆலிவ், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு மரங்களை என் கைகளால் நட்டேன். அது மிகவும் அமைதியான இடம், மாலையில் வேலை முடிந்ததும் அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். கான் யூனிஸ் செல்ல வடக்கு காஸாவை விட்டு வெளியேற முடிவு செய்த நாள், நான் காஸா நகரில் இருந்த எனது வீட்டையும் பிபிசி அலுவலகத்தையும் விட்டு வெளியேறினேன், அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு காரில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், நானும் எனது குடும்பத்தினரும், சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு நோக்கிய ஒரு சாலையில் நடந்தும், சில வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தெற்கு காஸாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் இருபுறமும் குண்டுவெடிப்புகள் நடந்தன. பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. வழியில், என் குழந்தைகள் என்னிடம் கேட்டார்கள், "நாம் எங்கே போகிறோம்? நாளைக்கு மீண்டும் வருவோமா?” நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எனது புகைப்பட ஆல்பத்தை என்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதில் எனது குழந்தைப் பருவம், பெற்றோர், மனைவி மற்றும் எனது நிச்சயதார்த்தப் புகைப்படமும் இருந்தது. என் தந்தைக்கு சொந்தமான புத்தகங்களை என்னுடன் கொண்டு வந்திருக்கலாம். எனது தந்தை அரபு மொழி ஆசிரியர். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய புத்தகங்களை நான் வைத்திருந்தேன். பின்னர் எனது வீடு முற்றாக இடிந்து கிடப்பதை எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். எனது வயல்கள், பண்ணைகள் எரிக்கப்பட்டன. காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல்கள் படக்குறிப்பு,அல் ஜசீரா பணியகத்தின் தலைவர் வயேல் டாடோ இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார். அந்த பயங்கரமான பயணத்திற்கு பிறகு தான், ஓர் இரவு ரெட் கிரசண்ட் தலைமையகத்திற்கு வெளியே தெருவில் உறங்கினோம். பின்னர் நான் கான் யூனிஸில் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்தேன். என் குடும்பம் அப்போது நுசைரத்தில் இருந்தது. அவர்களைப் பிரிந்து இருந்தது எனக்கு உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாட்கள் பல உணர்வுகளுடன் போராடினேன். பின்னர் இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதாகவும், தெற்கை மத்திய மற்றும் வடக்கு காஸாவிலிருந்து பிரிப்பதே அதன் நோக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. நானோ என் குடும்பமோ கொல்லப்படுவோம், இனி ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று பயந்தேன். முதல் முறையாக நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன். அது எந்த நாள் என்று கூட நினைவில்லை. வேலையை நிறுத்திவிட்டு என் குடும்பத்திடம் செல்ல நினைத்தேன். இறந்தால் ஒன்றாகவே இறக்க விரும்பினேன். இறுதியாக டிசம்பர் 11 அன்று, நான் ஒரு சக ஊழியருடன் நுசைரத்துக்குப் புறப்பட்டேன். நான் அவ்விடத்தை அடைந்ததும், என் குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் மகன் ரசான் என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். எப்படியோ குடும்பத்துடன் ரஃபாவை அடைந்தோம். பிபிசி குழுவும் ரஃபாவை அடைந்தது, நாங்கள் அங்கிருந்து பணியைத் தொடர்ந்தோம். டிசம்பர் பிற்பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்- IDF) சுமார் 80 உடல்களை காஸாவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நான் செய்தியில் தெரிவித்தேன். அவர்களில் யாரேனும் இஸ்ரேலிய பணயக்கைதிகளா என்பதை ஆய்வு செய்ய அந்த உடல்கள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஐ.டி.எப் கூறியது. ரஃபாவில் உள்ள ஒரு கல்லறைக்குள் ஒரு பெரிய லாரி நுழைந்தது. கொள்கலனை திறந்ததும் துர்நாற்றம் எங்கும் பரவியது. கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த மக்கள் மணல் நிலத்தில் ஒரு வெகுஜன புதைகுழியைத் தோண்டி நீல பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட உடல்களின் எச்சங்களை புதைத்தனர். இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அது எவ்வளவு பயங்கரமானது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. பட மூலாதாரம்,ADNAN EL-BURSH படக்குறிப்பு,போருக்கு முன்னர் அட்னானும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த வீடு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது பின்னர் ஜனவரியில், பல உடல்கள் கொண்டு வரப்பட்டபோது நான் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்தேன். அதில் அல் ஜசீரா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் வயேலின் மூத்த மகன் ஹம்சாவின் சடலமும் இருந்தது. ஆனால் இதைப் பற்றி வயேலுக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? அவருக்கு ஏற்கனவே மோசமான ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது, இதை அவரிடம் சொல்ல முடியாது என்று தோன்றியது. எனது சக ஊழியர்களில் ஒருவர் வயேலின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார். ஹம்சாவும் அவரது வீடியோகிராபர் முஸ்தபா துரையாவும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதற்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் ‘காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள்' என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. அவர்களது குடும்பமும் அல் ஜசீராவும் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரிக்கின்றன. அவர்கள் இரண்டு பேரும் ஐ.டி.எஃப் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ட்ரோன்களை இயக்கியதாக ஐ.டி.எப் கூறுகிறது, ஆனால் வாஷிங்டன் போஸ்ட் விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அந்த நாளில் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.’ என்று கூறுகிறது. 'இந்த உணவு எனக்கு விஷமாகத் தெரிகிறது' படக்குறிப்பு,அட்னான் மற்றும் பிபிசி குழு இறுதியாக பிப்ரவரியில் காஸாவை விட்டு வெளியேறியது. ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஐ.டி.எப், "எந்தவொரு பத்திரிகையாளரையும் நாங்கள் வேண்டுமென்றே குறிவைத்ததில்லை. ஊடகவியலாளர்கள் உட்பட எந்தவொரு பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச ஆபத்து மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்'” என்று கூறுகிறது. இறுதியாக பிபிசி குழுவின் குடும்பத்தினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாங்களும் எகிப்திய அதிகாரிகளின் உதவியுடன் ரஃபாவை விட்டு வெளியேற முடிந்தது. நான் இதை எழுதும்போது, கத்தாரில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஜபாலியாவில் உள்ள மக்கள், எப்படியாவது தங்கள் விலங்குகளுக்கு தீவனம் அளிக்க புல் பறித்து அதை அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதேசமயம் இங்கே நான் ஹோட்டலில் சுத்தமான உணவுடன் அமர்ந்திருக்கிறேன். என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியவில்லை, இந்த உணவு முழுவதும் விஷம் நிரம்பியுள்ளது போல நான் உணர்கிறேன். https://www.bbc.com/tamil/articles/cglveyprz50o
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட் Published By: VISHNU 30 APR, 2024 | 07:50 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர். தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார். இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர். விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. ஏனைய குழாம்கள் இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன. தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி. இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ். https://www.virakesari.lk/article/182362
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
இந்தியாவில் தயாராகும் 2 மசாலாப் பொடிகளில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனமா? அமெரிக்க உணவுத்துறை ஆய்வு பட மூலாதாரம்,GETTY IMAGES 22 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக,`அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்’ ஆய்வு நடத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் எம்டிஹெச் (MDH) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று மசாலாப் பொடிகள் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் ஒரு மசாலாப் பொடியின் விற்பனையை ஹாங்காங் தடை செய்தது. இந்த மசாலாப் பொருட்களில் அதிக அளவு எத்திலின் ஆக்சைடு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர, எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. கடந்த காலங்களில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுகையில், எவரெஸ்ட் நிறுவனம் தனது தயாரிப்புகள் உடல்நலனில் எந்த தீங்கையும் ஏற்படுத்தாதது, பாதுகாப்பானது என்று கூறியது. எம்டிஹெச் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) செய்தித் தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், "இந்த ஆய்வு அறிக்கைகள் பற்றி FDA-வுக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் குழம்பு மசாலா கலவையில் அதிக அளவு புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு இருக்கும் காரணத்தால் சிங்கப்பூர் அரசு நிர்வாகத்தால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த வார தொடக்கத்தில், மசாலா ஏற்றுமதிக்கான அரசு ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய மசாலா வாரியம் (the Spices Board of India), ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகக் கூறியது. அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தரம் குறித்த சிக்கல்கள் ஏற்பட மூல காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் இணையதளங்களும் சனிக்கிழமை இயக்கத்தில் இல்லை. எத்திலீன் ஆக்சைடு என்பது தொழில் துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது மசாலாப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) இந்த ரசாயனம் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகிறது. 2018 ஆம் ஆண்டில், EPA "எத்திலின் ஆக்சைடு பெண்களுக்கு லிம்பாய்டு புற்றுநோயையும் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என சான்றுகள் கூறுகின்றன" என்று கூறியது. தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களை பிபிசி தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கக்கூடும் என்ற அச்சத்தைத் தொடர்ந்து MDH தயாரிப்புகளை அமெரிக்கா தடை செய்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள். சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன? சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. "எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன? எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது. இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள் இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும். சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல. சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு வடகிழக்கு லண்டனில் (london) உள்ள ஹைனால்ட்டில் (Hainault) மர்ம நபரினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று (30.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 36 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை துர்லோ கார்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வாகனம் செலுத்தப்பட்டு, மக்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனரீதியில் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://tamilwin.com/article/swordsmanship-in-london-13-years-old-boy-dead-1714482803
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
தகுதி பெறாவிட்டாலும் பலஸ்தீன போட்டியாளர்கள் பலர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்ற அழைக்கப்படுவர் - சர்வதேச ஒலிம்பிக்குழு தலைவர் Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 03:29 PM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு பலஸ்தீன போட்டியாளர்கள் தகுதி பெறாவிட்டாலும், அவர்களில் சிலருக்கு போட்டிகளில் பங்குபற்ற வருமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அழைப்பு விடுக்கவுள்ளது என அதன் தலைவர் தோமஸ் பெச் தெரிவித்துள்ளார். ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில் சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச் இது தொடர்பாக கூறுகையில், ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்வேறு விளையாட்டுக்களின் தகுதி காண் போட்டிகள் நடைபெற்று வருகின்றன எனக் கூறினார். “எனினும், பலஸ்தீன போட்டியாளர்கள் எவரும் போட்டிகளில் பங்குபற்றுதற்கு தகுதி பெறாவிட்டாலும் தகுதியான போட்டியாளர்கள் இல்லாத ஏனைய தேசிய ஒலிம்பிக் குழுக்களைப் போன்று பலஸ்தீனமும் அழைப்புகள் மூலம் பயனடைவதில் நாம் தெளிவாக உறுதிபூண்டுள்ளோம்” என தோமஸ் பெச் கூறினார். 6 முதல் 8 பலஸ்தீன போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் பங்குபற்றுவர் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். காஸா மோதல் ஆரம்பமான முதல் நாளிலிருந்து, வீர வீராங்கனைகள் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் பயிற்சிகளை தொடர்வதற்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு பல்வேறு வழிகளில் உதவியுள்ளது எனவும் அவர் கூறினார். ஒலிம்பிக்கில் உலகளாவிய பங்குபற்றுதலை ஊக்குவிப்பதற்காக, தகுதியான போட்டியாளர்கள் போதியளவில் இல்லாத தேசிய ஒலிம்பிக் சங்கங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக்குழு விசேட அழைப்பு விடுப்பது வழக்கம். சர்வதேச ஒலிம்பிக்குழு, தேசிய ஒலிம்பிக் சங்கங்கள், சர்வதேச விளையாட்டுச் சம்மேளனங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் 'முத்தரப்பு குழுவினால்' விசேட அழைப்புக்குரிய போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். 1976 ஆம் ஆண்டு பலஸ்தீன தேசிய ஒலிம்பிக் குழு உருவாக்கப்பட்டது. 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் முதல் தடவையாக பலஸ்தீனம் சார்பில் போட்டியாளர் ஒருவர் பங்குபற்றினார். அதிகபட்சமாக ரியோ 2016 ஒலிம்பிக்கில் 2 பெண்கள் உட்பட 6 பலஸ்தீன போட்டியாளர்கள் பங்குபற்றினர். 2021 இல் நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் 2 பெண்கள் உட்பட 5 பலஸ்தீன போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, உக்ரேன் மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்யாவை ஒருவிதமாகவும், காஸா யுத்தம் தொடர்பாக இஸ்ரேலை வேறுவிதமாகவும் சர்வதேச ஒலிம்பிக்குழு கையாள்கிறது என்ற கருத்தை தோமஸ் பெச் நிராகரித்தார். https://www.virakesari.lk/article/182243
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஐ.சி.சி. ஆடவர் ரி - 20 உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்த முதல் நாடு நியூஸிலாந்து 29 APR, 2024 | 02:48 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி-20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு நியூஸிலாந்து முதலாவது நாடாக தனது உலகக் கிண்ண குழாத்தை இன்று (29) அறிவித்தது. அனுபிவம் வாய்ந்தவரும் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து குழாத்தில் அதிரடி ஆட்டக்காரர் டெவன் கொன்வேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபற்றுவதைத் தவிர்த்த டெவன் கொன்வே முன்வரிசை வீரராக அணியில் இடம்பெறுகிறார். எவ்வாறாயினும், வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே அணியில் இடம்பெறவில்லை. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சைக்குள்ளானதாலேயே அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கய்ல் ஜெமிசனும் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை. பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் அனுபவசாலிகளுமான டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் குழாத்தில் இடம்பெறுவதுடன் சௌதீ தனது 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளார். ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இளம் அதிரடி வீரர் ரச்சின் ரவிந்த்ரா, மூத்த வீரர் மெட் ஹென்றி ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182234
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் - அமெரிக்கா 30 APR, 2024 | 12:35 PM சிஎன்என் காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது. எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை. 2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம், அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182315
-
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல் - ஐவர் காயம்
30 APR, 2024 | 04:12 PM லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார். காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன், அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும் பார்த்தேன். பத்து 15 நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182342
-
இன்றைய வானிலை
கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்! Published By: DIGITAL DESK 3 30 APR, 2024 | 04:17 PM இன்று மாலை புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை (29) பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக மாத்தளை இரத்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை உயிரிழந்துள்ளனர். இதேவேளை, முல்லைத்தீவு துணுக்காய் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182344
-
யாழ்ப்பாணத்தில் சீல் வைக்கப்பட்ட 3 உணவகங்கள்
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன. வழக்கு தாக்கல் இதனையடுத்து 3 உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன. https://tamilwin.com/article/3-sealed-restaurants-in-jaffna-1714466164
-
போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!
30 APR, 2024 | 05:29 PM போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார். குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பணம்செய்கையில், மெய்யுறுதிப்படுத்தப்படாத முகநூல் நிகழ்நிலைக் கணக்கினை பயன்படுத்துபவரது ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், குறித்த முகநூல் கணக்கு பயன்படுத்தப்படும் அமைவிடம் அவற்றோடு தொடர்புடைய ஏனைய நிகழ்வுகள் பற்றிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும், போன்ற விண்ணப்பங்களை முன்வைத்ததோடு முகநூல் நிறுவனத்திடமிருந்தும், டயலொக் நிறுவனத்திடமிருந்தும் மேற்குறித்த விடயங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை உடனடியாக பெறுவது தொடர்பாகவும் அவற்றை உடனடியாக கௌரவ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பது தொடர்பாகவும் தேவையானதும், அவசியமானதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு 01இல் செயற்படுகின்ற குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணணிக் குற்றங்கள் விசாரணைப் பகுதியின் சமூக ஊடகப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடுவதற்கான கட்டளையினை பிறப்பிப்பிக்குமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த விண்ணப்பங்களை ஏற்ற மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார். திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இவ்வாறான வழக்கு தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/182355
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்னாடக மாநிலட் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் மாமாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவுசெய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை ஐ.ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார். 2000-க்கும் மேற்பட்ட போட்டோ வீடியோ காட்சிகள் கர்நாடக முதல்வர் கே சித்தராமையா தெரிவித்தார், கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறினார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன. "இந்தப் பென்-டிரைவ்கள் பேருந்து இருக்கைகளிலும், பேருந்து நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டன," என்று ஓர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். "இந்தப் பென்-டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட ஃபைல்கள் இருந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, இவை வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் 'வீடியோக்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது' இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். "சில வீடியோக்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "ஒரு பெண் 'தயவுசெய்து வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்' என்று கெஞ்சுகிறாள். அதைப் பார்த்தாலே பதறுகிறது," என்று அவர் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28), ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார். "நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெ.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார். "அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களில் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது தந்தை இந்தக் கூற்றை மறுத்து விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் பயந்து ஓட மாட்டோம். நாங்கள் இங்கேயே இருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இத்தகைய கொடூரமான செயலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்` எப்படி விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது) பா.ஜ.க மீது எழும் கேள்வி "நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேட்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்தே" பா.ஜ.க கூட்டணி ஏன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் நிறுத்தியது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதியை கேள்வி கேட்டு ஒரு கர்நாடக மாநில அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்த வீடியோக்கள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைமையிடம் தெரிவித்ததாக `தி இந்து` நாளிதழின் செய்தியைத் தொடர்ந்து இந்தலக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க-வின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்.டி.டி.வி செய்தி சேனலிடம், "ஒரு கட்சியாக எங்களுக்கும் இந்த வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விசாரணையைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை," என்று கூறினார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும், முன்னாள் கர்னாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி, திங்கள்கிழமை, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவையும் `சமூகத்திற்கு அவமானம்` என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “[எங்கள்] குடும்பத்தைக் குறை கூறாதீர்கள். எச்.டி. ரேவண்ணாவும் அவரது குடும்பத்தினரும் தனியாக உள்ளனர். அவரது செயல்களை நான் கண்காணிப்பதில்லை," என்றார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கட்சித் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்தார். இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க-வை சேர்த்தோ தனித்தனியாகவோ குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாதிக்கலாம். இது `வெட்கக்கேடான விஷயம்` என்று பா.ஜ.க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், தற்போதைய நிலவரத்தப் பார்த்தால், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இந்தப் புயலில் இருந்து வெளியேறும் என்று தெரிகிறது. இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக கர்நாடகாவில் மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியும். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் இருந்து இந்த வீடியோக்களின்மீது தடை ஆணை பெற்றார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் பா.ஜ.க தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணா அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் கூட்டணியில் இருந்து வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கோரியிருந்தார். ஆனால், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டவுடன், யாரை வேட்பாளராக நிறுத்துவது, எ எனுஇநும் முடிவை கூட்டணி கட்சிக்கே விட்டுவிட வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுமைப் பேராசிரியர் நாராயணா பிபிசி ஹிந்தியிடம், "இந்தச் சம்பவம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில், ஓட்டுப்பதிவு நடந்த போது, ஹசன் நகரில் மட்டுமே, வீடியோ அடங்கிய பென்-டிரைவ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மீதமுள்ள 14 இடங்களில் பெண்களின் வாக்குகளை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தால், அது பாஜகவுக்கு தார்மீக சவால் அளிக்கும்," என்றார். அரசியல் விமர்சகர் உமாபதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவே கவுடா உயிருடன் இருக்கும் வரை, தனது கட்சியை உடைய விடமாட்டார், என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cer382232kyo
-
மூச்சை இழுக்கும்போது பெண்ணின் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் சென்ற மூக்குத்தி - என்ன ஆனது?
படக்குறிப்பு,நுரையீரலில் சிக்கிக்கொண்ட மூக்குத்தி திருகு. கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு மூச்சை இழுக்கும்போது தற்செயலாக அவரது மூக்குத்தி திருகு மூக்கு வழியாக உடலுக்குள் சென்றுவிட்டது. அப்போது அவர் அதைக் குறித்து அதிகம் கவலைப்படவில்லை. காரணம் திருகு வயிற்றுக்குள் சென்றுவிட்டது, எனவே தன் செரிமான அமைப்பு வழியாக அது வெளியே சென்றுவிடும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலுக்குள் சென்றுவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது? இந்தியாவில் உள்ள பெரும்பாலான திருமணமான இந்து பெண்களைப் போலவே, 35 வயதான வர்ஷாவும் ‘16-17 ஆண்டுகளுக்கு முன்பு’, அதாவது திருமணமானதிலிருந்து மூக்குத்தி அணிந்திருந்தார். திருமணத்தின் அடையாளமாக மூக்குத்தி கருதப்படுகிறது. "அப்போது திருகு அவிழ்ந்திருந்தது எனக்குத் தெரியவில்லை" என்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் அவர் பிபிசியிடம் கூறினார். "நான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். ஆழமாக மூச்சை உள்ளிழுத்தபோது திருகு உள்ளே சென்றுவிட்டது. அது என் மூச்சுக் காற்றுப்பாதைக்குள் சென்றது எனக்குத் தெரியாது. அது என் வயிற்றுக்குள் சென்றுவிட்டது என்று நான் நினைத்தேன்" என்று இரண்டு டீனேஜ் பையன்களின் தாயான வர்ஷா கூறினார். கடந்த மாதம் வர்ஷாவின் நுரையீரலில் இருந்து இந்த திருகை அகற்றிய, மெடிகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் தேப்ராஜ் ஜஷ், இந்த சம்பவத்தை "மிகவும் அரிதானது" என்று விவரித்தார். கடந்த பத்தாண்டுகளில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் மட்டுமே இந்திய ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. "சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது வெற்றிலை, நுரையீரலுக்குள் சிக்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் சிறு குழந்தைகள் அல்லது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே நடக்கும். முப்பதுகளில் இருக்கும் பெண் நோயாளி ஒரு விதிவிலக்கு," என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு,திருமணமானதில் இருந்து 16-17 ஆண்டுகளாக மூக்குத்தியை அணிந்திருந்தார் வர்ஷா. ‘தொடர் இருமல், மூச்சுத் திணறல், நிமோனியா’ திருகு உள்ளே இழுத்து, ஒரு மாதத்திற்குப் பிறகுதான வர்ஷாவின் உண்மையான பிரச்னை தெரிய வந்தது. தொடர் இருமல், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா அறிகுறிகளுடன் அவர் மருத்துவரிடம் சென்றார். மூக்கில் முன்பு ஏற்பட்ட காயம் காரணமாகவே மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் நினைத்தார். மருந்துகள் பலனளிக்காததால் நுரையீரல் நிபுணரை அவர் அணுகினார். அவரது நுரையீரலில் ஒரு பொருள் இருப்பதை சிடி ஸ்கேன் சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மார்பு எக்ஸ்ரே அது என்ன என்பதைக் காட்டியது. நுரையீரல் நிபுணர் ஃபோர்செப்ஸ் மற்றும் ஒரு சிறிய கேமரா கொண்ட ஃபைபர் ஆப்டிக் ப்ரோன்கோஸ்கோப்பை அவரது காற்றுப்பாதைக்குள் அனுப்பினார். ஆனால் ‘கூர்மையான பளபளக்கும் பொருளை’ அந்த கருவியால் பிடிக்கமுடியாதால் அதனால் திருகை வெளியே இழுக்க முடியவில்லை. பின்னர் அந்த மருத்துவர் வர்ஷாவை டாக்டர் ஜஷ் இடம் பரிந்துரைத்தார். "நாங்கள் முதலில் நோயாளிக்கு கவுன்சலிங் செய்ய வேண்டியிருந்தது. முதல் செயல்முறைக்கு பிறகு உடனே இரண்டாவது செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டார். ஆனால் ஒரு வெளிப்பொருளை ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலேயே மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அவருக்கு விளக்கினோம்.” அவருடைய உடல் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவரது நிமோனியா மோசமாகிவிடும் என்றும் நாங்கள் அவரிடம் சொன்னோம்," என்று டாக்டர் ஜஷ் கூறினார். படக்குறிப்பு,வர்ஷாவின் நுரையீரலில் உலோகப் பொருள் இருப்பதை எக்ஸ்ரே காட்டியது. அவரது நுரையீரலின் ஒரு பகுதியைத் துண்டிக்கும் அறுவை சிகிச்சையைக் கூட தாங்கள் செய்ய வேண்டி வரலாம் என்று வர்ஷாவிடம் கூறியதாக மருத்துவர் ஜஷ் தெரிவித்தார். ஆனால் இது நீண்டகால சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஃபைப்ரோப்டிக் ப்ரான்கோஸ்கோப் முறையை மீண்டும் முயற்சிக்க அவர் முடிவு செய்தார். "வழக்கமான ப்ரான்கோஸ்கோப் கொண்டு ஒரு கூர்மையான பொருளை வெளியே எடுப்பது மிகவும் கடினம். அந்தப் பொருள் அவரது நுரையீரலில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருந்தது, அதைச்சுற்றி திசுக்கள் ஏற்கனவே வளர்ந்திருந்தன.” "நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டி இருந்தது. ஏனெனில் வெளியே இழுக்கும்போது திருகு, மிகவும் குறுகலாக இருக்கும் மூச்சுக் காற்றுப்பாதையுடன் தொடர்பு கொண்டால், அது காயத்தை ஏற்படுத்தலாம். அப்படி நடந்தால் ரத்தபோக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலைமை உருவாகலாம்” என்கிறார் மருத்துவர் ஜஷ். ஆனால் 30 நிமிடங்கள் நீடித்த இந்த செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு வர்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். “அவர் சிகிச்சைக்கு பிந்தைய பரிசோதனைகளுக்காக வந்திருந்தார். அவர் இப்போது நலமாக இருக்கிறார்" என்று மருத்துவர் ஜஷ் கூறினார். மீண்டும் மூக்குத்தி அணியத்தொடங்கி விட்டீர்களா என்று நான் வர்ஷாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார். "மாட்டவே மாட்டேன். இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தில்லை. ஆனால் அது நடந்துவிட்டது. அது மீண்டும் நிகழ்வதை நான் விரும்பவில்லை," என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/c6pylrnq9jmo
-
ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா!
உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அவுஸ்திரேலியா - இலங்கை புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கை 30 APR, 2024 | 01:49 PM கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) குறிப்பிட்டார். கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி அன்று புதிய கூட்டு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததன் மூலம், கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும் ‘Disi Rela’ என இந்நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டு நடவடிக்கையில், அவுஸ்திரேலிய எல்லைப் படையும் (ABF) இலங்கை கடலோர காவல்படை திணைக்களமும் (SLCG) திக்கோவிட்டாவில் இருந்து சிலாபம் வரை ஒரு வார கால வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும். இதன் அறிமுக நிகழ்வில் இத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy) தெரிவிக்கையில் "Disi Rela நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை கோடிட்டுக் காட்டுகிறது" என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்திரேலியா - இலங்கை உறவை தங்க தர நிலைக்கு (Gold Standard) நாம் ஒப்பிடுகிறோம். Disi Rela திட்டம் தொடர்பான இன்றைய அறிவிப்பானது, அதை பிளாட்டினம் நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த திட்டமானது, கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார். ஆட்கடத்தல், மனித கடத்தல் உட்பட ஏனைய கடல்சார் குற்ற வகைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட, அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே செயற்பாட்டு திறன்கள் மற்றும் தகவல்களைப் பகிர்வதை Disi Rela திட்டம் உள்ளடக்கியுள்ளது. இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பூஜித விதான இங்கு கருத்துத் தெரிவிக்கையில், "கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வலுவான சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை Disi Rela வழங்குகிறது." என்றார். “Disi Rela எனும் பெயரின் அர்த்தம் குறிப்பிடுவது போன்று, எமது கடல்சார் பிராந்திய சூழலைக் கண்காணிப்பது அனைவரின் பொறுப்பாகும். வேறு வகையில் கூறுவதானால், அனைத்து மட்டத்திலும் உள்ள இலங்கையர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.” என ரியர் அட்மிரல் பூஜித விதான தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகள் குறித்து 041 750 1400 எனும் பிரத்தியேக உடனடி தொலைபேசி அழைப்பு மூலம் 24 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் முறைப்பாடு செய்யலாம். ரியர் அட்மிரல் Brett Sonter இங்கு மேலும் குறிப்பிடுகையில் “இரு நாடுகளுக்கிடையே காணப்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும் எமக்கு உரித்தான இலக்குகளை அடைவதற்கும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமை கொள்கிறோம். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பதற்கு Disi Rela திட்டம் ஒரு சான்றாகும்” என்றார். https://www.virakesari.lk/article/182321
-
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
விரைவில் 67 நாடுகளுக்கு இலவச விசா! சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு 67 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் மாத்திரம் 121,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும். முதல் நான்கு மாதங்களில் 700,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து தமது யூடியூப் சேனல்கள் மூலம் இலங்கையை விளம்பரப்படுத்தினாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், கண்டி பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கண்டியில் இருந்து எல்ல வரையிலான ஒடிசி ரயிலின் டிக்கெட் கட்டணம் 3000 ரூபாவாக இருந்தாலும், புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுக்கு 8,000 ரூபா போன்ற அதிக விலைக்கு புகையிரத சீட்டை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் 45 சுற்றுலா வலயங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://thinakkural.lk/article/300543
-
இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்
Published By: RAJEEBAN 30 APR, 2024 | 01:02 PM இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது, எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன - பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மின்துண்டிப்பும், எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது. பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன, ஆனால் இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார். நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில் விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182317
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்! நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதேநேரம், பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, 3,527 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. https://thinakkural.lk/article/300582
-
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடல் - இரண்டு வருட சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் பெண்களுடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட இலங்கையர் - இரண்டு வருட சிறைத்தண்டனை Published By: RAJEEBAN 30 APR, 2024 | 12:06 PM அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜெராட் சிசில் வாமதேவன் என்ற 56 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி என தெரிவித்துவந்தார். அது பொய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்த நபர் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி துண்டுதுண்டாக வெட்டிக்கொல்வேன் என அச்சுறுத்தியுள்ளார். ஜனவரி 2018 முதல் 2022 ஜனவரி 22ம் திகதி வரை இவர் 18 பேருடன் இவ்வாறு தொலைபேசியில் உரையாடியுள்ளார். தன்னை சனல் 7 தொலைக்காட்சியின் திறமையாளிகளை தேடும் நபர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களை தொடர்புகொண்டார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சனல் 7 தனக்கும் இந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட வாமதேவன் இழிவான மோசமான பாலியல் ரீதியிலான உரையாடலில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஒருவர் வாமதேவன் தன்னை தொலைபேசியில் அழைக்க தொடங்கியதும் காவல்துறையினரை தொடர்புகொண்டுள்ளார். பாடகியாக வரவிரும்பும் தனது மகளிற்காக தான் தயாரித்த சுயவிபரக்கோவையில் தான் தெரிவித்திருந்த தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி வாமதேவன் தன்னை தொடர்புகொண்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார். 2020 செப்டம்பர் முதல் 2021 ஜனவரி வரை வாமதேவன் அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகளின் முதல் பெயரை பயன்படுத்தி ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டார் தன்னை யார் என்பதை தெரிவிக்கவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182308
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…! தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/300586
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலின் புதிய முன்மொழிவுகளை ஹமாஸ் ஆராய்கிறது Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 03:31 PM (சேது) காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான தமது முன்மொழிவுகளுக்கு இஸ்ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதை தாம் ஆராய்ந்து வருவதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அரசியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்கையொன்றில், 'ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்பிய முன்மொழிவுக்கு ஸியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் உத்தியோகபூர்வ பதில் முன்மொழிவு இன்று இந்த இயக்கத்துக்கு கிடைத்துள்ளது. இந்த முன்மொழிவை ஹமாஸ் ஆராயவுள்ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கையளிக்கும்' எனத் தெரிவித்துள்ளார். காஸா போர்நிறுத்தம் தொடர்பான புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக எகிப்திய மத்தியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை இஸ்ரேலை சென்றடைந்த நிலையில், இஸ்ரேலின் பதில் யோசனைகள் ஹமாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எகிப்திய மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளின் நோக்குகளின் இடைவெளியை குறைப்பதில் அவதானிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எகிப்திய புலனாய்வுச் சேவையுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் அல் கஹேரா அலைவரிசை தெரிவித்துள்ளது. காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான புதிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,437 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காஸா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்ட பின்னர், கடத்தப்பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது. கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்பகுதியில் 81 இஸ்ரேலியர்களும் 24 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டதுடன், இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்பட 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். மேற்குக் கரையில்....................................... இதேவேளை, பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்திலுள்ள ஜெனின் நகருக்கு அருகில், பலஸ்தீனர்கள் இருவர் இஸ்ரேலிய படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ காவலரண் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தவர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182239
-
உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்று
Published By: DIGITAL DESK 3 30 APR, 2024 | 08:45 AM (நா.தனுஜா) உடலியல் ரீதியான தண்டனையை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் இன்றாகும். உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 1.3 பில்லியன் சிறுவர்கள் உடலியல் ரீதியான தண்டனைகளால் பல்வேறு விதங்களிலும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக தரவுகள் கூறுகின்றன. இலங்கையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்க்கப்பட்ட பலனைத் தரவில்லை. எனவே இலங்கையில், குறிப்பாக பாடசாலைகளில் உடலியல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படும் போக்கை முற்றாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் வைத்திய கலாநிதி துஷ் விக்ரமநாயக்கவின் தலைமையில் இயங்கிவரும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான நிதியமும் (Stop Child Cruelty Trust) அவரது ஒருங்கிணைப்பில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பும் (Child Protection Alliance) இணைந்து, பல்வேறு துறைகளிலும் பிரபலமான மேலும் 19 பேரை இணைத்துக்கொண்டு 'நோ குட்டி 2.0' (NoGuti 2.0 - சிங்கள சொற்பதமான இது தமிழில் 'அடி வேண்டாம்' எனும் அர்த்தத்தை வழங்கும்) எனும் சமூகவலைத்தள பிரசாரமொன்றை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இன்று (30) வரையான 30 நாட்களுக்கு முன்னெடுத்துவருகின்றன. இப்பிரசாரமானது ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு 'நோ குட்டி' (NoGuti) எனும் பெயரில் சமூகவலைத்தளங்களிலும், அதற்கு அப்பாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முற்றாகத் தடைசெய்யும் விதமாக முன்மொழியப்பட்டுள்ள தண்டனைச்சட்டக்கோவைத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதே இப்பிரசாரத்தின் பிரதான நோக்கமாகும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடந்த 2017 ஆம் ஆண்டு பாடசாலைகளில் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 80 சதவீத மாணவர்கள் உடலியல் ரீதியான தணடனைகளுக்கு உள்ளாவதாகவும், 53 சதவீத மாணவர்கள் உடலியல் சார்ந்த மீறல்களுக்கு உட்படுவதாகவும், 72.5 சதவீத மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முன்மொழியப்பட்ட 18 பரிந்துரைகளில் தற்போதுவரை ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், இது சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் சிறுவர்நல செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு பிள்ளையை சரியாக நெறிப்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் அதற்கென பல நேர்மறையான அணுகுமுறைகள் உள்ளபோது, அப்பிள்ளையின் உடல், உள நலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான அணுகுமுறைகளைக் கையாளவேண்டியதன் அவசியம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://www.virakesari.lk/article/182281
-
விகாராதிபதியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது விவசாயக் காணிகளை பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை
Published By: DIGITAL DESK 7 30 APR, 2024 | 08:40 AM குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/182280
-
யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு - மாகாண காணி ஆணையாளர்
30 APR, 2024 | 09:48 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள், காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் தெரிவித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் 05 வீதத்திற்கும் உட்பட்டதாகவே அரச காணிகள் காணபப்டுகின்றன. சாவகச்சேரி, மருதங்கேணி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரச காணிகள் உள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் காணிகள் விஸ்தீரணம் கொண்டதாக இல்லை என தெரிவித்தார். அதேவேளை முதலீட்டு நடவடிக்கைகளுக்காக அரச காணிகளை வழங்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டுக்கு ஏற்ற காணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக இனம் கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182288
-
சனிக்கிழமையன்று இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
Published By: VISHNU 29 APR, 2024 | 08:44 PM (நா.தனுஜா) ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 4 - 5 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு உத்தேசித்துள்ள அவர், இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர். இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உதவிகள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் ஜப்பானின் ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/182266