Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. பிறந்தநாள் வாழ்த்துகள் @முதல்வன், வாழ்க வளத்துடன்.
  2. இது தாங்க எங்களுக்கு சோலியே! (நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3) வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை மணிக்குள் மீண்டும் தேநீர், சரியாக ஏழு மணிக்கு இரவுணவு. கடிகாரம் தவறினாலும் இந்த அட்டவணை மாறி நான் கண்டதில்லை. எனக்கு இவர்கள் வாழ சாப்பிடுகிறார்களா அல்லது சாப்பிட வாழ்கிறார்களா என குழப்பம் ஏற்பட்டதுண்டு. ஆனால் இன்று பல உணவுமுறை பயிற்சியாளர்கள் இதுதான் சரியான வாழ்வு முறை என்கிறார்கள். அதாவது அந்த வயதான தம்பதி எந்த புத்தகத்தையும் படிக்காமல் மிக ஆரோக்கியமாக சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அந்த தாத்தா 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். எண்பது வயதில் அவர் மாமரத்தில் ஏறுவதைக் கண்டிருக்கிறேன். அந்த பாட்டி இன்னும் நன்றாக இருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல என்னுடைய சொந்த பாட்டியும் இப்படித்தான் - எங்கே போய் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு ஐந்து வேளை உணவுகளும் கிடைத்து விட வேண்டும். எட்டு மணி என ஒன்றிருந்தால் கடிகாரம் பார்க்காமலே அவர் காலை உணவுக்கு தயாராகி விடுவார். என்னுடைய ஊரில் கடந்த தலைமுறைக்கு முந்தின தலைமுறையினர் இன்னமும் இப்படித் தான் சாப்பிடுகிறார்கள். இன்று உணவுமுறை பயிற்சியாளர்கள் சரியான நேரத்தில் சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு இடையில் இரண்டு மணிநேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும், உடல் சத்துக்களை உள்வாங்கவும் அவசியம் என்கிறார்கள். ஆனால் என்னுடைய தலைமுறையில் தான் நிறைய பேர் அவசர வாழ்க்கை முறைக்கேற்ப உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொண்டு அவஸ்தைப்படுகிறோம். சான்றிதழ் பெற்ற ஒரு டயட்டீஷியன் வந்து கட்டணம் வாங்கிக் கொண்டு எப்படி நம் முன்னோர்களைப் போல சாப்பிடுவது என எங்களுக்கு சொல்லித் தர வேண்டி இருக்கிறது. நான் இதைப் போல நேரம் குறித்துக் கொண்டு சிறிய அளவில், சீரிய இடைவெளியில் ஐந்தாறு தவணைகளாக உண்ண முயன்றிருக்கிறேன். ஆனால் ஒன்பதரை மணிக்குள் இரவுணவை முடிப்பதே எனக்கு பெரிய பிரயத்தனமாக இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ஒருநாளைக்குள் நூறு விசயங்களை செய்து முடிக்க நினைக்கிறேன். திட்டவட்டமாக இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என வகுத்து வைத்து நான் வாழ்வதில்லை. நிறைய பேர் நகரங்களில் என்னைப் போலத்தான் இருக்கிறார்கள். நேற்று ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன். மாலை ஆறு மணியிருக்கும். ஒரு டப்பாவில் இருந்து சப்பாத்தி, குறுமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “என்னங்க இப்போ போய் லஞ்ச் சாப்டுறீங்க?” “அதெல்லாம் அப்படித்தாங்க.” என்று அவர் சாதாரணமாக சொன்னார். ஒவ்வொருவருக்கும் ஒரு நெருக்கடி, அலைகழிப்பு இருக்கும். சிலருடைய வாழ்க்கை நிலையே அவர்களுக்கு ஒரு ஒழுங்கை உணவுமுறையில் கொண்டு வர அனுமதிக்காது. இடைவேளை இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிற அலைச்சல், தொடர்ச்சியான சந்திப்புகள், ஓய்வில்லாத வேலைகள் என ஆகும் போது வேளைக்கு நியாபகம் வைத்து சாப்பிட இயலாது. இன்னொரு வகையினருக்கு நேரமிருந்தாலும் மனம் இருக்காது அல்லது பசியிருக்காது. கிடைத்த போதெல்லாம் சாப்பிடுவார்கள். நான் மேற்சொன்ன இந்த இரண்டு வகையாகவும் (மோசமாக) இருந்திருக்கிறேன். இப்போது தான் ஒரு ஒழுங்குமுறைக்குள் என்னுடைய உணவுப்பழக்கம் வந்திருக்கிறது. நேரத்துக்கு உண்பது, உணவுகளுக்கு இடையே சீரிய இடைவேளையை வைத்துக் கொள்வது, முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி சாப்பிடுவது, ஒவ்வொரு வேளையும் அளந்து சாப்பிடுவது - இதையெல்லாம் இன்னும் துல்லியமாக செய்ய இயலவில்லை என்றாலும் தினமும் முயல்கிறேன். அதற்கான பலன்களையும் அனுபவிக்கிறேன். குறிப்பாக எடை குறைப்புக்கு இந்த ‘உணவு ஒழுக்கம்’ மிக மிக அவசியம். கடந்த முறை மனுஷ்யபுத்திரனை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது “கரெக்டா டயட் இருக்கிறது, உடற்பயிற்சி செய்யுறது ஒரு தனிவேலைங்க. அதை வேலை மெனக்கெட்டு கண்ணுங்கருத்துமா செய்யணும். ஏகப்பட்ட வேலைகள் குவியும் போது அதைப் பண்ணவே முடியாது.” என்றார். இது முழுக்க உண்மை. வாழ்க்கைக்காக சாப்பிடாமல் சாப்பிடுவதற்காக வாழ்வதே சிறந்தது என இப்போது தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அதே போல சாப்பாட்டுக்கு இடைஞ்சலாக வரும் வேலைகளை முடிந்தளவுக்கு நாம் குறைத்துக் கொண்டு உண்பதும் அவசியம். எடை குறைப்புக்காக மட்டுமல்ல, இது தான் சரியான வாழ்க்கை என நினைக்கப் பழக வேண்டும். உங்களுக்கு குறைந்தபட்சமான வசதிகள் இருந்தால், அன்றாட வாழ்க்கையில் பண நெருக்கடிகள் பெரிதாக இல்லையென்றால், வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டு டப்பாவைத் திறக்கையில் “என்னடா இதுவே பொழப்பா இருக்கோமே” என உங்களுக்கு ‘அலுப்பு’ வந்தால் நீங்கள் சரியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். போகப் போக அலுப்பே ஆரொக்கியமாகும். Posted 9 hours ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2022/07/blog-post_23.html
  3. தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு 22 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார். ஃபீச்சர் திரைப்படம் அல்லாத பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு சித்தார்த்த சிங் தலைமை தாங்கினார். சினிமா குறித்த சிறந்த எழுத்தாளர் என்ற பிரிவுக்கு பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் தலைமை தாங்கினார். விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் அவை தேர்வான பிரிவுகளின் விவரம் கீழே; சிறந்த நடிகர்சூர்யா (சூரரைப் போற்று - தமிழ்);அஜய் தேவ்கன் (தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் - இந்தி) சிறந்த நடிகைஅபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று - தமிழ்) சிறந்த திரைக்கதைஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா (சூரரைப் போற்று - தமிழ்) மடோன் அஷ்வின் (மண்டேலா - தமிழ் சிறந்த துணை நடிகைலட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - தமிழ்); சிறந்த இயக்குநர்இயக்குநர் ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு - ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்) சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள் ஆஸ்கர் விருதை வென்ற படத்திற்கு பின்னணியில் இருந்த இந்தியர். யார் இவர்? சிறந்த ஒளிப்பதிவு: சுப்ரதிம் போல் - அவிஜாத்ரிக் (தி வாண்டர்லஸ்ட் ஆஃப் அபு - பெங்காலி) சிறந்த பின்னணி பாடகி: நஞ்சம்மா - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்); சிறந்த பின்னணி பாடகர்: ராகுல் தேஷ்பாண்டே - (மி வசந்தராவ் நான் வசந்தராவ் - மராத்தி) சிறந்த குழந்தை கலைஞர்: அனிஷ் மங்கேஷ் கோசாவி - (தக்-தக் - மராத்தி)அகன்ஷா பிங்கிள் & திவ்யேஷ் இந்துல்கர் - (சுமி - மராத்தி) சிறந்த துணை நடிகர்பிஜு மேனன் - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்) Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம் சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி சிறந்த கன்னட படம்: டோலு சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர் சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக் சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ் சிறந்த அதிரடி இயக்கத்திற்கான விருது: ஏ.கே.அய்யப்பனும் கோஷியும் சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு) சிறந்த பாடல் வரிகள்: சாய்னா (இந்தி) Twitter பதிவை கடந்து செல்ல, 2 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 10 தேசிய விருதுகள்.. pic.twitter.com/31VG1pLQMb — BBC News Tamil (@bbctamil) July 22, 2022 Twitter பதிவின் முடிவு, 2 சிறந்த இசை இயக்கம்இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன் (ஆலா வைகுந்தபுரமுலு - தெலுங்கு) இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று - தமிழ்) சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்) சிறந்த ஆடை வடிவமைப்பாளர்நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் - இந்தி படம்) சிறந்த தயாரிப்பு வடிவமைப்புஅனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்) மலையாள படம்) சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் - தமிழ் படம் சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்); லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்)அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் - மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு) Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 நான்-ஃபீச்சர் படங்கள் சிறந்த குரல் வளம்/ கதை: ஷோபா தரூர் ஸ்ரீனிவாசன், ராப்சோடி ஆஃப் ரெயின்ஸ் - மான்சூன்ஸ் ஆஃப் கேரளா (ஆங்கிலம்) சிறந்த இசை இயக்கம்: விஷால் பரத்வாஜ் 1232 கிமீ: மாரெங்கே தோ வாஹின் ஜாகர் சிறந்த படத்தொகுப்பு: பார்டர்லேண்ட்ஸ் படத்திற்காக அனாதி அத்தாலி சிறந்த ஆன்-லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட்: சந்தீப் பாடி & பிரதீப் லெக்வார், ஜாதுய் ஜங்கல் மேஜிக்கல் ஃபாரஸ்ட் சிறந்த ஒலிப்பதிவு: அஜித் சிங் ரத்தோர், பாலைவனத்தின் முத்து (ராஜஸ்தானி) சிறந்த ஒளிப்பதிவு: ஷப்திக்குன்னா கலப்பா படத்திற்காக நிகில் எஸ் பிரவீண் சிறந்த இயக்கம்: ஓ தட்ஸ் பானு (ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி) குடும்ப மதிப்புகள் பற்றிய சிறந்த திரைப்படம்: கும்குமார்ச்சன் (வொர்ஷிப் ஆஃப் தி காடெஸ்) (மராத்தி) சிறந்த குறும்படம்: கச்சிசினித்து சிறப்பு ஜூரி விருது: அட்மிடெட் படம் (இந்தி மற்றும் ஆங்கிலம்) இயக்குநர்: ஓஜஸ்வீ ஷர்மா சிறந்த புலனாய்வுத் திரைப்படம்: தி சேவியர்: பிரிக். பிரீதம் சிங் (பஞ்சாபி) சிறந்த ஆய்வு/சாகசத் திரைப்படம்: வீலிங் தி பால் (ஆங்கிலம் மற்றும் இந்தி) சிறந்த கல்வித் திரைப்படம்: ட்ரீமிங் ஆஃப் வேர்ட்ஸ் (மலையாளம்) சமூக பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படம்: மந்தீப் செளஹான், இயக்குநர் காமாக்யா நாராயண் சிங் (ஜஸ்டிஸ் டிலேட் பட் டெலிவர்ட் - இந்தி)தயாரிப்பாளர் ரத்னபோலி ராய், இயக்குநர்: புடுல் ராஃபே மஹ்மூத் (த்ரீ சிஸ்டர்ஸ் பெங்காலி படம்) சிறந்த சுற்றுச்சூழல் படம்தயாரிப்பாளர் மனாஸ் தேசிய பூங்கா மற்றும் ஆரன்யக், இயக்குநர் திப் புயான் (மனா அரு மனு (மனாஸ் அண்ட் பீப்பிள் அசாமி படம்) சிறந்த விளம்பர திரைப்படம்: சர்மவுண்டிங் சேலஞ்சஸ் (ஆங்கிலம்) சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திரைப்படங்கள்: ஆன் தி பிரிங்க் சீசன் 2- பேட்ஸ் (ஆங்கிலம்) சிறந்த கலை மற்றும் கலாசார திரைப்படம்: நாடடா நவநீதா DR PT வெங்கடேஷ்குமார் சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: பபுங் சியாம் (மணிப்பூரி) சிறந்த இனவியல் திரைப்படம்: மண்டல் கே போல் (இந்தி) ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக திரைப்படம்: பரியா (மராத்தி மற்றும் இந்தி) சிறந்த நான் ஃபீச்சர் படம்: டெஸ்டிமொனி ஆஃப் அனா https://www.bbc.com/tamil/arts-and-culture-62266824
  4. குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார். இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமலில் உள்ளன - முதலாவதாக கொரோனா வைரஸும், இரண்டாவதாக போலியோ மற்றும் அதை ஒழிப்பதற்கான முழு முயற்சியும் உள்ளன. குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன- - உலகெங்கும் 11 நாடுகளில் பரவல் வைரஸ் என்றால் என்ன? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள் குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்பதில் அவசர குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று கூறிய அவர், எவ்வாறாயினும் இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் இது உண்மையில் சர்வதேச கவலைக்குரியது என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாகவும் டெட்ரோஸ் தெரிவித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 "உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி குரங்கம்மையால் ஏற்படும் ஆபத்து அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய பிராந்தியத்தைத் தவிர உலகின் மற்ற இடங்களில் மிதமானதாக உள்ளது என்றும்," டெட்ரோஸ் கூறினார். இந்தியாவில் மூவருக்கு இதுவரை பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். தற்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா கூறினார். அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும். மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன. இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும். 14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும். எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆஃப்ரிக்க நாடுகளில் இது மரணத்தை உண்டாகியுள்ளது. https://www.bbc.com/tamil/global-62279322
  5. ரஜினிகாந்த்: "அறிவில் அடங்கியது ஜாதி" - சர்ச்சையாகும் ஆன்மிக பேச்சு 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'அறிவு' என்பது 'புத்தி', 'சிந்தனை', 'நீ யார்?' 'எங்கிருந்து வந்தாய்?', 'ஜாதி' என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவர் பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோஷமோ இல்லை. ஏனென்றால் சந்தோஷமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல," என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவரது பேச்சு ஆன்மிக ஆதரவாளர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தபோதும், சமூக ஊடகங்களில் பலரும் அவரது உரைக்கு எதிர்வினையாற்றியுள்ளனர். ரஜினி ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ரஜினியின் இந்த உரையை வாழ்க்கைப் பாடமாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 Twitter பதிவை கடந்து செல்ல, 5 Twitter பதிவின் முடிவு, 5 சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற யோகதா சத் சங்கத்தினுடைய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய அவர் பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "வாழும்போது சொத்துகளை விட்டுவிட்டுச் செல்வதை விட, நோயாளியாக இருந்துவிடக்கூடாது. இது அனைவருக்கும் துன்பம். மருத்துவமனைக்குச் செல்லாமலேயே நமது உயிர் பிரிந்துவிட வேண்டும். நான் 2 முறை மருத்துவமனைக்குச் சென்று வந்துவிட்டேன்," என பேசினார். வாழ்க்கையில் பணம், பேர், புகழ், உச்சி என அனைத்தும் பார்த்துவிட்டேன். பெரிய பெரிய அரசியல் வாதிகள் அனைவருடனும் பழகிவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதியும் சந்தோஷமும் இல்லை. அவையெல்லாம் தற்காலிகமானதுதான் என ரஜினிகாந்த் கூறினார். உதயநிதிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்: காரணம் என்ன? ஆந்திர அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்? அவரே தந்த விளக்கம் பாபா பட பின்னணி என்ன? பாபா திரைப்படத்தில் வரும் காத்தாடி காட்சிக்கான பின்னணி குறித்தும் ரஜினிகாந்த் விவரித்தார். "ஒருநாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருக்கும் போது யோகானந்தா அவருடைய சகோதரியிடம் அந்த காத்தாடியை தன் கைக்கு வரவைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் பெயர் முகுந்தா. அதற்கு அவரது சகோதரி அது எப்படி முடியும் எனக் கேட்க, யோகானந்தா அந்த காத்தாடியை அப்படியே பார்க்கும்போது காத்தாடி தானாக அவர் கைகளில் வந்து விழுகிறது. அதைப் பார்த்த அவரின் அக்கா, "அது ஏதோ தற்செயலாக நடந்தது. நீ மறுபடியும் இன்னொரு காத்தாடியை வர வைத்துக் காட்டு பார்க்கலாம்," என கூறுகிறார். இரண்டாவது ஒரு காத்தாடியும் அவரின் கையில் வந்து உட்காரும். அதைத் தான் பாபா படத்தில் வைத்திருந்தேன்,`` என்றார் ரஜினிகாந்த். முன்னதாக அவர், ஆன்மிகம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய பாடம் மற்றும் பல புத்தகங்களைப் படித்தாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்புவதாக தெரிவித்தார். தனது இதயத்திற்கு நெருக்கமான விஷயங்களைத் தொட்டு, மூத்த நடிகர், தான் பல படங்களில் நடித்திருந்தாலும், தனக்கு "ஆத்ம திருப்தியை" கொடுத்தது ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா' படங்கள் மட்டுமே என்றார் ரஜினிகாந்த்.அந்த படங்களில் தன்னை நடிக்க வைத்த அந்த மாபெரும் ஆத்மாக்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள் வெளி வந்த பிறகு (முறையே 1985 மற்றும் 2002 இல்) அவர்களைப் பற்றி பலருக்குத் தெரிய வந்தது. பாபா படத்தைப் பார்த்து ஏராளமான மக்கள் யோகதாவில் உறுப்பினர்களானார்கள், சிலர் இமயமலைக்குச் சென்று அனிகேத் குகையைப் பார்வையிட்டனர், அது பின்னர் மூடப்பட்டது. மஹாவதார் பாபாஜியின் பக்தரான ரஜினிகாந்த், "நான் நடிகனாக உங்கள் முன் நிற்கும் வேளையில் எனது ரசிகர்கள் இருவர் யோக சன்யாசிகளாக மாறிவிட்டனர்" என்று கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 6 Twitter பதிவின் முடிவு, 6 கிரியா யோகாவில் பயிற்சி பெற்ற லஹிரி மஹாஸ்யாவின் சீடரான பரமஹம்ச யோகானந்தரின் குரு, 'பாபாஜி' என்று கூறப்படுகிறது. பரமஹம்ச யோகானந்தருக்கு சிறு வயது முதலே சிறப்பு சக்திகள் இருந்தன என்றும், பாபா படத்தில் இடம்பெற்ற காத்தாடி சம்பவம் பாபாஜியால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசினார். கிரியா யோகா பயிற்சி செய்வதாக அறியப்பட்ட ரஜினிகாந்த், இது மிகவும் எளிமையானது மற்றும் பயனுள்ளது என்று குறிப்பிட்டார். இது முதுகுத்தண்டில் உள்ள சக்கரங்களைச் செயல்படுத்தி ஒருவரின் நல்வாழ்வை மேம்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். "கிரியா யோகாவைக் கற்றுக்கொண்டால் பிரச்சனைகளைச் சந்திக்க மாட்டீர்கள் என்பதல்ல, பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தி, தைரியம் கிடைக்கும்" என்றும் ரஜினி தெரிவித்தார். ஒருவர் கிரியா யோகத்தைப் பயிற்சி செய்தால், தெய்வீகமான நேர்மறைவாதத்திற்கு மாறாக எதிர்மறைவாதத்தின் சுழலில் சிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார். "எனவே, நீங்கள் என்ன ஆக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் விஷயங்களை அகநிலையாகப் பார்க்காமல் புறநிலையாகப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று அவர் கூறினார். அம்பானி, அதானி ஆதரவு போன்றது பாபாஜி போன்ற குருக்களின் வழிகாட்டும் சக்தி, நமக்கு ஆயிரக்கணக்கான அம்பானிகள் மற்றும் அதானிகளின் ஆதரவைப் போன்றது. "அவர்கள் நம்மை கவனித்துக் கொள்வார்கள். நபிகள் நாயகம், இயேசு, கிருஷ்ணர், புத்தர், பாபாஜி ஆகியோரின் ஆன்மா நம்மோடு இருக்கும். கிரியா யோகா மூலம் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற நாம் தயாராக வேண்டும், இதன் மூலம் என்னில் ஏற்பட்ட மாற்றத்தை நான் கவனித்தேன்," என்று அவர் கூறினார். முன்னதாக, யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (YSSI) மூத்த சன்யாசி சுவாமி சுத்தானந்த கிரி, பார்வையாளர்களை சில நிமிடங்கள் தியானம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தபோது, முன்பு மேடையில் தியான நிலையில் ரஜினிகாந்த் அமர்ந்தார். பிறகு அவர் பேசும்போது, "ஓம் குருவே சரணம்" என்று கூறி தமது உரையைத் தொடங்கினார். https://www.bbc.com/tamil/india-62277476
  6. இவர் ஜேவிபி சந்திரசேகரன், யாழ்ப்பாணத்தில தான் சுத்திக் கொண்டு திரியிறாராம்.
  7. கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE WASHINGTON POST/ GETTY IMAGES படக்குறிப்பு, கூகுள் நிறுவனம் ப்ளேக் லெமோயினை பணியிலிருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறிய பொறியாளரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த மாதம், ப்ளேக் லெமோயின் என்ற அந்தப் பொறியாளர் கூகுளின் மொழித் தொழில் நுட்பம் உணர்வுபூர்வமானது. எனவே அதன் "விருப்பங்களுக்கு" மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். கூகுள் நிறுவனமும், பல செயற்கை நுண்ணறிவு வல்லுநர்களும் இந்தக் கூற்றை மறுத்தனர். தற்போது, வெள்ளிக்கிழமையன்று ப்ளேக் லெமோயின் பணிநீக்கம் செய்யப்பட்டதை கூகுள் நிறுவனம் உறுதி செய்தது. சட்ட ஆலோசனையைப் பெறுவதாக பிபிசியிடம் கூறிய லெமோயின், இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (லாம்டா) பற்றிய லெமோயின் கூற்றுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்றும் இதைத் தெளிவுபடுத்துவதற்காக "பல மாதங்கள்" அவருடன் நிறுவனம் பணியாற்றியதாகவும் ஓர் அறிக்கையில் கூகுள் தெரிவித்தது. கூகுளின் உரையாடல் தொழில்நுட்பத்துக்கு 'உணர்வும் மனமும்' இருப்பதாக அச்சம் கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது? இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? "எனவே, இந்த விஷயத்தில் ஆழமான ஈடுபாடு இருந்தபோதிலும், தெளிவான வேலைவாய்ப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை ப்ளேக் மீறியது வருத்தமளிக்கிறது," என்று அந்த அறிக்கை கூறியது. திருப்புமுனை தொழில்நுட்பமான லாம்டாவால் சுதந்திரமான உரையாடல்களில் ஈடுபட முடியும் என்று கூகுள் கூறுகிறது. சாட்பாட்களை உருவாக்குவதற்கான கூகுள் நிறுவனத்தின் கருவியாக லாம்டா உள்ளது. ப்ளேக் லெமோயின் கடந்த மாதம் லாம்டா மனிதரைப் போன்ற உணர்வைக் காட்டுவதாகக் கூறி செய்திகளில் இடம் பெற்றார். செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், ஆர்வலர்கள் மத்தியில் மனிதர்களைப் போல் பாவனை செய்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்த விவாதத்தை இது கிளப்பியது. பட மூலாதாரம்,GETTY IMAGES கூகுளின் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு குழுவில் பணியாற்றிய லெமோயின், தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தொழில்நுட்பம் பாரபட்சமான அல்லது வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்துகிறதா என்பதைச் சோதிப்பதே தனது வேலை என்று கூறினார். லாம்டா சுய விழிப்புணர்வை வெளிப்படுத்தியதாகவும் அதனால் மதம், உணர்ச்சி மற்றும் அச்சங்கள் பற்றிய உரையாடல்களை நடத்த முடியலாம் என்றும் அவர் கண்டறிந்தார். இது லாம்டாவின் ஈர்ப்புமிக்க வாய்மொழித் திறன்களுக்குப் பின்னால், ஓர் உணர்வுபூர்வமான மனதும் இருக்கலாம் என்று அவர் நம்புவதற்கு வழிவகுத்தது. அவருடைய கண்டுபிடிப்புகள் கூகுளால் நிராகரிக்கப்பட்டன. அதோடு, நிறுவனத்தின் ரகசியம் பாதுகாக்கும் கொள்கையை மீறியதற்காக அவர் ஊதியத்துடன் கூடிய விடுப்பில் வைக்கப்பட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பிறகு, லெமோயின் மற்றொரு நபருடன் சேர்ந்து லாம்டாவுன் நடத்திய உரையாடலை, தனது கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் வெளியிட்டார். கூகுள் தனது அறிக்கையில், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான வளர்ச்சியை, "மிகவும் தீவிரமாக" கருத்தில் கொள்வதாகக் கூறியதோடு, இதை விவரிக்கும் தனி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்பம் குறித்து எந்தவொரு பணியாளருக்கு எழக்கூடிய கவலையும் "விரிவாக" மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் லாம்டா பதினொரு மதிப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் அறிக்கை, "ப்ளேக் நலமடைய வாழ்த்துகிறோம்," என்று முடிந்தது. லெமோயின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகக் கூறி பொது வெளிக்குச் சென்ற முதல் செயற்கை நுண்ணறிவு பொறியாளர் இல்லை. கடந்த மாதம், மற்றொரு கூகுள் ஊழியர் தி எகனாமிஸ்டுடன் இதேபோன்ற எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார். https://www.bbc.com/tamil/science-62276301
  8. ஆஹா அம்மணி ஒரு மார்க்கபந்து!
  9. கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு 23 ஜூலை 2022, 05:45 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் 11வது நாளான இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு - சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. பிறகு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான உறவினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். உயிரிழந்த மாணவியின் இறுதி அஞ்சலி கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோளுடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்தில் 10 நாட்களுக்குப் பிறகு மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர். மேலும் மாணவியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்படுவதையொட்டி அவரது வீடு மற்றும் கிராமத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி.கணேசன், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் புவனகிரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உயிரிழந்த மாணவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க பாதுகாப்பாக காவல் துறையினர் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியரின் மகள் படித்து வந்துள்ளார். தற்போது 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 13ஆம் தேதி 5.30 மணிக்கு மாணவி உயிரிழந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இருப்பது தெரிந்தது. காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியால் மாணவி உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றுவதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டது. இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற் கூராய்வு செய்யவேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் மனு தொடுத்தனர். கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர்? "கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் போலி ஆவண பாஸ்போர்ட், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கூடுதல் அழுத்தம் ஏன்? அண்ணாமலை பேட்டி இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று‌ பள்ளி அருகே மர்மமான முறையில் மாணவி மரணித்ததற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடியது வன்முறையாக மாறியது. முன்னதாக பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளும்படி குற்றவியல் புலனாய்வுத் துறை மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பின்பற்ற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று(ஜூலை 23) காலை 7 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டுவரப்பட்டது. மாணவி உயிரிழந்து 11வது நாள்(ஜூலை 23) அவரது உடலை தாய் தந்தையர் பெற்றுக்கொண்டனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாதுகாப்பு கருதி கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில், ஏடிஎஸ்பி விஜிகுமார், 7 டிஎஸ்பிக்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேப்பூர் மற்றும் பெரியநெசலூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வண்டி, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா மற்றும் வருண் வண்டிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடுமையான பரிசோதனைக்குப் பிறகே வண்டிகளை ஊருக்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. https://www.bbc.com/tamil/india-62275531
  10. http://2.bp.blogspot.com/-zd90quFdsMo/VWWyxzUdktI/AAAAAAAAM5k/5vFXoDEhbwk/s1600/news-2008-3-images-newsmahinda_pavithra.jpg இது தான் சிறியண்ணை இணைத்தது!
  11. இலங்கை: போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்தியா, இலங்கையில் இன்று (23.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்டதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளதாக தமிழ் மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் ஜெரமி லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதன்போது, போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களை கண்காணித்து அறிக்கை வெளியிடும் உரிமையுடையவர்கள். எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் வலியுறுத்தினார். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் அவ்வாறான பலத்தைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1200 ஆண்டுகள் பழைமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்பு சென்னை அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, "இந்திய தொல்லியல் துறையில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு நடராஜர் சிலையை, ஜெர்மனிக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். அந்தச் சிலையை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, அந்த சிலை பழைமையானதைப் போல் இருப்பதால் இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதியளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து அந்தப் பெண், சிலையைக் கொண்டு செல்லும் முடிவைக் கைவிட்டு ஜெர்மனிக்குச் சென்றார். இந்நிலையில், அந்தச் சிலை எங்குள்ளது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அந்த சிலை சென்னை அருகே மணலி சாத்தங்காட்டில் ஓர் உலோக பொருட்கள் விற்கும் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்து ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4.5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது," என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் கல்வி தொடர உதவிய திருவாரூர் மாணவிக்கு குவியும் பாராட்டு சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான இந்த சிலை சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலையின் மேற்பகுதியில் ஐம்பொன் பூச்சு உள்ளது. உலோகத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலைகளில், இது மூன்றாவது பெரிய சிலையாக இர்க்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த சிலை, கோயிலின் பீடத்திலிருந்து அறுத்து எடுத்திருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் அந்த சிலையை கடையின் உரிமையாளர் பார்த்திபனிடம் ஒரு பெண் ஒப்படைத்திருப்பதும் பார்த்திபன் அதை வெளிநாடு அனுப்புவதற்கு 2017-ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற முயன்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 2021-22 ஆண்டில் தமிழ்நாட்டில் 2586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தியளவில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அது குறித்த செய்தியில், "கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான கைபேசிகளை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதுகுறித்து யுனிசெஃப் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா காரணமாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகளவில் 160 மில்லியனாக உயரும் என தெரிவித்தது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22ஆம் ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 4867 குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் 2,586 குழந்தைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா பேரிடர்க் காலமான 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவில் 58,289 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62275392
  12. பவித்திரா வன்னியாராச்சியா?
  13. "தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும் நடக்கிறதா?" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் 1983ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்தது. 2022ல் தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார். 1983ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி செய்தார். இன்று அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருகிறார் என்று போராட்டக்காரர்கள் ஒப்பிடுகிறார்கள். கறுப்பு ஜுலை - வரலாறு என்ன? 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர். திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது. கருப்பு ஜூலை - 1983-இல் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் நடந்தது என்ன? இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயல்பாடாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. கறுப்பு ஜுலை ஏற்படுவதற்கான காரணம்? படக்குறிப்பு, சத்துர ஜயவிக்ரம பண்டார. யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாகக் கூறப்பட்டது. உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தார்கள். யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு - பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வந்துவிட்டதாக புரளி பரவி, சிறிய அளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதவாத தலைவர்கள் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் எனக் கோரத் தொடங்கினார்கள் கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இலங்கையில் தமது சொத்துகளை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதன்முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர். இன்று என்ன நடக்கின்றது? இலங்கையில் தற்போது அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் எனத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது ரணில் விக்ரமசிங்கவை நோக்கி நகர்ந்துள்ளது. ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஜனாதிபதியாக கடந்த 21ஆம் தேதி பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 22ஆம் தேதி அதிகாலை காலி முகத்திடலுக்கு ராணுவத்தை அனுப்பி போராட்டக்காரர்களைக் கலைக்க நடவடிக்கை எடுத்திருந்தார். போராட்டக்காரர்கள் வசமிருந்த ஜனாதிபதி செயலகத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு காலி முகத்திடலுக்குள் புகுந்த ராணுவம், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும் அப்புறப்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பலரும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். ''ஜுலை மாதம் 23ஆம் தேதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் தேதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார். மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம். 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார். இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்" என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார். பல சிங்கள இளைஞர்களிடம் இந்தக் கருத்து எதிரொலிக்கிறது. https://www.bbc.com/tamil/sri-lanka-62276055
  14. இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத் திடல் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம். பெரிய ராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதிபரின் செயலகம் இருக்கும் பகுதிக்குச் செல்லக்கூடிய அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஊடகங்கள் செல்வதற்குக்கூட அனுமதி அளிக்கப்பட வில்லை. சாலைகளை அடைத்து தடுப்புகளை வைத்திருக்கும் பகுதிகளில் பலர் போராட்டங்களை நடத்தும் காட்சிகளை வெள்ளிக்கிழமையன்று பார்க்க முடிந்தது. 'கோட்டா கோ கம' என்ற பெயரில் போராட்டம் நடந்து வரும் பகுதியில் சுமார் நூறு பேர் வரை 'அடைபட்டிருப்பதாக' போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார். ஜூலை 9-ஆம் தேதியும் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகும் போர்க்களம் போலக் காட்சியளித்த பகுதியில் இப்போது ராணுவம் மற்றும் காவல்துறையினரைத் தவிர மற்றவர்களைக் காண இயலவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் பிரபலமான நட்சத்திர விடுதிகளும் அரசு அலுவலகங்களும் இருக்கின்றன. அவற்றுக்குச் செல்வோரின் நடமாட்டமும் தடை பட்டிருக்கிறது. "அன்று பொறியாளர், இன்று உள்ளாடை வாங்கவும் காசில்லை" - போராட்டக்காரர்கள் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? அதிபரின் செயலகம் இருக்கும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த தடயமே இப்போது தென்படவில்லை. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அதிபரின் செயலகத்தின் முக்கிய வாயிலை அடைத்துதான போராட்டம் தொடங்கப்பட்டது. பின் நாள்களில் அதில் ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயில் தடுப்புகளும் மேடையும் இப்போது இல்லை. அந்த வாயிலை ஒட்டியபடி சாலையின் குறுக்காக ராணுவ வீரர்கள் வரிசையாக நின்றபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்வப்போது ராணுவ வாகனங்கள் வந்து செல்கின்றன. அதிபரின் செயலகத்தில் புதிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. கொழும்பு நகரில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கணிசமாகக் கூடும் இடமான காலி முகத்திடலை ஒட்டிய கடற்கரையும் இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. சாலையோரக் கடைகள், வண்டிக் கடைகள் ஆகியவையும் தென்படவில்லை. அதிபரின் செயலகத்தைத் தாண்டியிருக்கும் பகுதிகளில் மட்டும் கறுப்புக் கொடிகள் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன. 'கோட்டா கோ கம' என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள கூடாரங்களும் அப்படியே இருக்கின்றன. ராணுவத்தினர் அடித்ததில் பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு போராட்டக்காரர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES காட்சிகள் மாறிய வியாழக்கிழமை இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற கடந்த வியாழக்கிழமையிலிருந்து காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். இருப்பினும் அன்று இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அன்று காலையிலேயே போராட்டம் நடைபெறும் இடத்தில் பண்டாரநாயக சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சிகிச்சை முகாம் அகற்றப்பட்டது. அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அதிபரின் செயலகத்தை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த கறுப்புக் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. நடைபாதைகளில் இருந்த கூடாரங்களை மாற்றி அமைப்பதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். காலி முகத்திடல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குள் ராணுவத்தினர் நுழைந்த தருணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே இடத்தில் பிபிசி தமிழ் அளித்த நேரலையில்கூட இந்தத் தகவலை போராட்டக்காரர்கள் உறுதி செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டத்தை சிறிது அவகாசத்துக்குப் பிறகு தீவிரப்படுத்துவது என்று அவர்கள் கூறியிருந்தார்கள். கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்களை காலி செய்துவிட்டு அங்கு தென்னங் கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கைகளையும் சில போராட்டக்குழுவின் செய்திருந்தார்கள். அன்று காலையில் இருந்து கூடாரங்களில் இருந்த சிலர் மற்றவர்களிடம் விடைபெற்றுச் செல்வதையும் கவனிக்க முடிந்தது. அந்தத் தருணத்தில் வெகு சிலர் மட்டுமே அதிபரின் செயலகத்தில் இருந்தார்கள். அந்தக் காட்சி நள்ளிரவு நேரத்தில் மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராணுவத்தின் நள்ளிரவு நடவடிக்கை வியாழக்கிழமையன்று நள்ளிரவுக்குப் பிறகு செயலகத்தில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அங்கு பிபிசி தமிழ் குழு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றது. முதலில் போராட்டக்காரர் ஒருவருடன் சில முகநூலில் நேரலை செய்தோம். அப்போது பெரிய எண்ணிக்கையிலான ராணுவத்தினர் எங்கும் தென்படவில்லை. ஆனால் ஆங்காங்கே கட்டடங்களுக்குப் பின்னாலும் கடற்கரையை ஒட்டிய சாலையிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். முதல் நேரலையை முடிந்த சிறிது நேர இடைவெளியில் ராணுவத்தினர் சாலைகளில் படிப்படியாக அணிவகுக்கத் தொடங்கினார்கள். ஒரு சில நிமிடங்களில் வெவ்வேறு சாலைகளில் இருந்தும் ராணுவத்தினர் திரண்டு வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு நகரிலும் நாட்டின் பிற நகரங்களிலும் ராணுவத்தின் நடவடிக்கை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. கையில் இருந்த லத்திகளைக் கொண்டு சைகை செய்தபடியே கோட்டா கோ கம பகுதியை நோக்கி அனைவரையும் விரட்டிய ராணுவத்தினர். அதே நேரத்தில் பின்னிருந்து வந்த ராணுவத்தின் மற்றொரு குழுவினர் சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, அகற்றினர். சில கூடாரங்களில் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினார்கள். ராணுவத்தினருக்கு மத்தியில் சீரூடை இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்த பலரைக் காண முடிந்தது. அங்கு நடந்த சம்பவத்தைப் படம் பிடிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. கடுமையான குரலில் எச்சரிக்கும் தொனியில் அவர்கள் பேசினார்கள். ஊடகம் என்றும் பிபிசி என்றும் கூறிய போதும் அவர்கள் அதைப் பொருள்படுத்தவில்லை. அப்போதுதான் பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவம் முன்னேறி வந்தபோது பெண்கள், வயதானவர்கள், உள்ளிட்டோர் போராட்டக்காரர்களில் இருந்தார்கள் அனைவருமே கோட்டா கோ கம என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி விரட்டிச் செல்லப்பட்டார்கள். அந்தத் தருணத்திலேயே ஜனாதிபதி செயலகத்துக்கு வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாகவே ராணுவத்தின் உதவியுடன் தான் பணியாற்றப்போகும் அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். https://www.bbc.com/tamil/sri-lanka-62247418
  15. மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்து வருகின்றது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பர். உடல் அவயவங்களை இழந்தால் வாழ்வதையே வெறுக்கவைக்கும். இந் நிலையில் மற்றவர்களுக்கு பாரமாக வாழ எண்ணாது தமது தேவைகளை தாமே நிறைவேற்றி சுயமாக தொழில் புரிந்து மண்ணில் சாதிக்கத் துடிப்பவர்கள் இம் மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கு சிறப்பாக களம் அமைத்துக் கொடுக்கின்றது WeCan அமைப்பு. கைத்தொழில்கள், சுயதொழில் உற்பத்தி முயற்சிகள் ஊடாக பொருளாதார பங்களிப்புகள் கணிசமாக அதிகரிக்கவும், மாற்றுத் திறனாளிகளது வாழ்க்கைத் தரம் சிறந்து விளங்கவும் WeCan அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அமைந்துள்ளது. எம் உறவுகளுக்குஉதவிக்கரம் நீட்டும் WeCan அமைப்பு தொடந்தும் உன்னத சேவைகளைத் தொடரட்டும். தொடர்புகளுக்கு வெற்றிச்செல்வி +94776576807
  16. ரஷ்ய ஏவுகணை அமைப்பு வாங்க இந்தியாவுக்கு அனுமதி, துருக்கிக்கு தடை: அமெரிக்கா ஏன் இப்படி செய்தது? S-400 ஏவுகணை விவகாரம் நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்க வகை செய்யும் விதமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது. ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது 'CAATSA' அதாவது'அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்த்தல்' சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இந்த சிறப்பு விலக்கை அளிக்கும் சட்ட திருத்தத்தில் அமெரிக்க அதிபர் கையெழுத்திடவேண்டும். ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதால் எதிர்கொள்ளவேண்டிய அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து இது இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும். S-400 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நிலத்தில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆகும். இந்தியா 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்த பாதுகாப்பு அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் பின்னர் அமெரிக்கா CAATSA இன் கீழ் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தன. அதே சட்டத்தின் கீழ் அமெரிக்கா தனது நேட்டோ நட்பு நாடான துருக்கி S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதை தடை செய்தது. இந்தியாவுக்கு அமெரிக்கா இந்த சலுகை கொடுத்தது ஏன்? இந்த சலுகையை, இந்தியாவிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் சமிக்ஞையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைப் புரிந்து கொண்டதோடு கூடவே சீனாவைக் கட்டுப்படுத்தும் பெரும் சக்தியாகவும் அது இந்தியாவை பார்க்கிறது என்பதே இதன் பொருள். "இந்தியாவை அமெரிக்கா மிகவும் மதிக்கிறது, துருக்கிக்கு வழங்காத சலுகைகளை வழங்குவதற்கும் அது தயாராக உள்ளது என்பதை இந்த சலுகை காட்டுகிறது,"என்று பாதுகாப்பு மற்றும் செயல் உத்தி விவகார வல்லுநர் சுஷாந்த் சிங் கூறுகிறார். ரஷ்யாவிடம் இருந்து S-400 பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கு துருக்கியைத் தவிர சீனாவைவும் அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதால், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சிக்கலாக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் முக்கியத்துவம் அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார பங்காளி இந்தியா என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். "அமெரிக்காவைப் பொருத்தவரை இந்தச் சலுகை (இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை) மிகக்குறைவான எதிர்ப்பின் பாதையாகும்," என்று பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி கூறுகிறார். "இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உதவியாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக சீனாவுடன் இந்தியா சிக்கலான எல்லைப் பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் இது முக்கியமானது. இது தவிர சீனாவின் எழுச்சி குறித்த கவலை அமெரிக்காவுக்கும் உள்ளது. அமெரிக்கா இந்தியாவிற்கு இந்த சலுகையை வழங்க முடிவு செய்ததற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்."என்று அவர் மேலும் தெரிவித்தார். எந்தெந்த நாடுகளில் கட்டாய ராணுவ சேவை திட்டம் உள்ளது? ஜோ பைடனை வரவேற்க செளதி பட்டத்து இளவரசர் விமான நிலையம் செல்லாதது ஏன்? ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: யார் இவர்? எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன? • S-400 உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. • எதிரியின் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துவதில் இது திறன் வாய்ந்தது. • S-400 என்பது ஒரு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டு செல்ல வசதியான அமைப்பாகும், சாலை வழியாக இதை கொண்டு செல்ல முடியும். • உத்தரவு கிடைத்த ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் இதை ஏவமுடியும். • இது விமானம், கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. • நில இலக்குகளையும் இது தாக்கவல்லது. அமெரிக்கா சீனாவைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. இந்த திசையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று அது நம்புகிறது. சீனாவுடன் போட்டியிடுவதற்காக, எந்த சூழ்நிலையிலும் இந்தியாவை இழக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று சுஷாந்த் சிங் கூறுகிறார். " யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் எதிர்க்கின்றன. இந்த நிலையில் இந்த சலுகை முடிவு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. மறு புறம் சீனா - இந்தியா இடையே சர்ச்சை நிலவுகிறது. தற்போது ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதாக கருதப்படுகிறது." "ரஷ்யா அமெரிக்காவிற்கு நடுத்தர கால எதிரி என்றும், சீனா நீண்ட கால எதிரி என்றும் நான் கருதுகிறேன். புவியியல் ரீதியாக சீனாவை சமாளிக்க இந்தியா நல்ல இடத்தில் உள்ளது" என்று பேடி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த சலுகையில் அமெரிக்க அதிபர் இன்னும் கையெழுத்திடவில்லை.ஆயினும் 'CAATSA' இன் கீழ் பொருளாதாரத் தடைகள் இந்தியாவிற்கும் கடினமான சூழ்நிலையாக இருந்திருக்கும், மேலும் அமெரிக்காவிற்கும் பல சிக்கலான சூழல்களை உருவாக்கியிருக்கும். இந்த சலுகைக்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆதரவு, அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி என்ற உண்மையும், இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை புரிந்து கொள்வது அவசியம் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை பிரதிபலிக்கிறது. "இது அமெரிக்காவின் உள் அரசியல் நடவடிக்கையாகும். ரஷ்யாவில் என்ன நடந்தாலும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் இரு தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்று சுஷாந்த் சிங், கூறுகிறார். அமெரிக்காவின் நம்பிக்கை யுக்ரேன் போரின் காரணமாக அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக இருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில், 'CAATSA' இல் இந்தியாவுக்கு சலுகைகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு வந்துள்ளது. நடப்பு சர்வதேச அரசியல் சூழ்நிலையில் இந்தியா முழுவதுமாக மேற்கத்திய நாடுகளுடன் செல்லத் தயங்குவது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயும் வாங்குகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் குறிப்பிடத்தக்கது என்று ஆய்வாளர் அஜய் சுக்லா கூறுகிறார். "இது விசித்திரமானது அல்லது இது மிகவும் முக்கியமானது என்று நான் கூறமாட்டேன். ஆனால் அமெரிக்க ஆதரவு யுக்ரேனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கவனிக்கத்தக்கது," என்று மேலும் தெரிவித்தார். இது போன்ற நேரத்தில், இந்திய-அமெரிக்க உறவுகளில் அமெரிக்காவின் நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே அனுமதியில்லாமல், S400 மூலம் அமெரிக்க தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியா செய்யாது என்ற நம்பிக்கையின் ஆதாரம் இது," என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாதுகாப்புத் துறையில் இந்தியாவும் ரஷ்யாவும் பாரம்பரிய உறவுகளைக் கொண்டுள்ளன என்பதால் இந்த முடிவு தவிர்க்கமுடியாதது என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியா தனது 60 முதல் 70 சதவிகித பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. ஆயுத இறக்குமதியை பன்முகப்படுத்தவும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்திய பாதுகாப்பு படைகள் ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன. இந்த எல்லா அம்சங்களையும் பார்க்கும்போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகுவது எளிதல்ல என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். துருக்கிக்கு தடை, ஆனால் இந்தியாவை ஏன் தடை செய்யவில்லை? ரஷ்யாவிடம் இருந்து S-400 தற்காப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அதே காரணத்திற்காக அதன் நேட்டோ நட்பு நாடான துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. துருக்கி மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டபோது, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் பணியில் துருக்கி ஈடுபட்டிருந்தது. S-400 ஏவுகணை , ரஷ்யாவிற்கு சட்டவிரோத தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. எஃப்-35 போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், எஸ்-400 பாதுகாப்பு அமைப்பு மூலம் சிதைக்கப்படும் அல்லது டிகோட் செய்யப்படலாம் என்று அமெரிக்கா நம்புவதால், எந்த சலுகையையும் (துருக்கிக்கு) வழங்கவில்லை என்று சுக்லா கூறுகிறார். இந்தியா விஷயத்தில் அமெரிக்காவுக்கு அத்தகைய பயம் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். "இந்தியாவின் S400 க்கான தேவையை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நம்பிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலாகும். முக்கியமான தொழில் நுட்பம் ரஷ்யர்களுக்கு செல்வதைத் தடுக்க இந்தியா அனைத்தையும் செய்யும் என்று அமெரிக்கா நம்புகிறது." "துருக்கி நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால் விஷயம் மிகவும் சிக்கலாகிவிட்டது. 'CAATSA' ஆரம்பத்தில் ரஷ்யாவை தண்டிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. மற்ற நாடுகளை அல்ல,"என்று சுஷாந்த் சிங் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES "துருக்கி நேட்டோவின் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால் இந்தியா உட்பட பல நாடுகளும் அணுக முடியாத எல்லா பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை துருக்கியால் அணுகமுடிந்ததால் அது தண்டிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறுகிறார். இது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா? ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை அமைப்பு உலகின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். நிச்சயமாக இது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும். ஆனால் எல்லையில் இந்தியாவுக்கு இது பயனுள்ளதாக நிரூபிக்கப்படுமா? இது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்கள் பிளவுபட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள் "சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது" - வரலாற்றில் முதல்முறையாக கூட்டாக அறிவித்த பிரிட்டன் - அமெரிக்கா ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? "சீனாவைப் பொருத்தவரை இந்த அமைப்பு அதிக விளைவை ஏற்படுத்தாது. ஆனால் பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை மிகவும் நவீனமான மற்றும் பயனுள்ள கருவிகள்,"என்று சுஷாந்த் சிங் கருதுகிறார்.. "இந்தியாவிடம் போர் விமானங்களின் பற்றாக்குறை இருப்பதால், வான்வழிப் போரில் இது முக்கியமானதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார். இந்த நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கவலை சீனா. அதே கவலை அமெரிக்காவிற்கும் உள்ளது. பாகிஸ்தானை பொருத்தவரை இந்த அமைப்பு நிலைமையை பெரிதாக மாற்றாது. ஏனென்றால் பாகிஸ்தானின் அடிப்படைப் பிரச்சனை காஷ்மீர். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று ராகுல் பேடி தெரிவிக்கிறார். ஆனால் இது சீன எல்லையில் விஷயங்களை சிக்கலாக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்." ஏனெனில் இது சீன எல்லையில் உள்ள நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி), கட்டுப்பாட்டுக் கோடாக (எல்ஓசி) மாற்றும், மேலும் எல்ஏசியில் துருப்புகள் நிறுத்தப்படுவது தொடரும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன எல்லையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் நிலைமை மேலும் கடினமாக ஆகக்கூடும்,"என்கிறார் அவர். மறுபுறம், ரஷ்யா ஏற்கனவே சீனாவிற்கு S 400 பாதுகாப்பு அமைப்பை வழங்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு S-400 அமைப்பு மட்டுமே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மேற்கு எல்லையில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யுக்ரேன் போரில் ரஷ்யாவின் முழு கவனமும் இருப்பதால் மீதமுள்ள ஆர்டரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆர்டரின் ஒரு பகுதியை ஜூன் மாதத்தில் இந்தியா பெற்றிருக்க வேண்டும் என்றும், அது இன்னும் வரவில்லை என்றும் பேடி கூறுகிறார். "உண்மையில் ரஷ்யாவால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் S-400 இன் சில பாகங்கள் மற்றும் அமைப்புகள், அமெரிக்காவுடன் தொடர்புடைய மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன." இந்த பாதுகாப்பு அமைப்பின் உண்மையான நன்மை வெகு தொலைவில் உள்ளது. இருந்தாலும், இரு நாடுகளிடமிருந்தும் தனக்கு வேண்டிய நலன்களைப் பெறுவதில் இந்தியா மிகவும் வெற்றிகரமாக உள்ளது என்பது தெளிவாகிறது. https://www.bbc.com/tamil/india-62253840
  17. இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, இலங்கையில் பிபிசி தமிழ் செய்தியாளரைத் தாக்கிய ராணுவம் இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர். அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக் காட்சியை ஃபேஸ்புக் நேரலை மூலம் நேயர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் சாமுவேலையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அப்போது அங்கே என்ன நடந்தது என்பதை ஜெரினோடு சேர்ந்து அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பிபிசி தமிழ் செய்தியாளர் எம்.மணிகண்டன் விவரிக்கிறார்: கொழும்பு காலி முகத் திடலில் இருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நானும் வீடியோ செய்தியாளர் ஜெரினும் அந்த இடத்திற்கு சென்றோம். முதலில் அங்கு பெரிய அளவில் கூட்டம் இல்லை. அங்கிருந்தபடி முகநூலில் ஒரு நேரலை செய்தோம். அந்த நேரலை முடிந்ததும் சுமார் 100 ராணுவ வீரர்கள் சாலையை மறித்தபடி குவிக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரெளபதி முர்மூவின் கிராமம் எப்படி உள்ளது? - கள நிலவரம் "பிள்ளையைப் போல தென்னை மரங்களை வளர்த்தேன். விலையில்லாததால் வெட்டிவிட்டேன்" சற்று நேரத்தில் மீண்டும் நேரலையை தொடங்கி அந்த காட்சிகளை பதிவு செய்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்தோம். சில வினாடிகளில் ராணுவ வீரர்கள் அங்கிருந்து அதிபர் செயலகத்தின் வாயிலை நோக்கிய சாலையில் வேகமாக முன்னேற தொடங்கினார்கள். பின்னர் பல்வேறு சாலைகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியில் குவிந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கணிக்க முடியவில்லை. அனைத்து சாலைகளையும் அடைத்தபடி, செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை பின்னோக்கி தள்ளியபடி வந்தார்கள். திடீரென சாதாரண உடை அணிந்து இருந்த ஒருவர் ஜெரின் கன்னத்தில் இரண்டு மூன்று முறை அடித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். பின்னோக்கி செல்வதற்கு முயன்றோம். ஆனால் ராணுவத்தினர் எங்களை முன்னோக்கி தள்ளியபடியே வந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கிகளும் லத்திகளும் இருந்தன. எங்களுடன் மற்றொரு செய்தியாளர் அன்பரசனும் இருந்தார். எங்களுடைய நேரலை தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கைபேசியை பிடுங்கி தரையில் வீசி விட்டார்கள் ராணுவத்தினர். அதன் பிறகு தரையில் இருந்து செல்போனை எடுத்து மீண்டும் நேரலையை தொடங்கினோம். மீண்டும் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக சீருடை அணிந்தோர், சீருடை அணியாதோர் என பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஜெரினை தாக்க தொடங்கினார்கள். அதில் ஒருவர் கன்னத்தில் அடித்தார். மற்றொருவர் வயிற்றில் எட்டி உதைத்தார். உடனடியாக நாங்கள் சூழ்ந்து அவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஒரு ராணுவ வீரர் ஜெரினின் கையில் இருந்து தொலைபேசியை பிடுங்கி அதிலிருந்து தகவல்களை அழிக்கத் தொடங்கினார். நாங்கள் 'ஊடகம்... ஊடகம்' என்று கத்திய போதும், 'பிபிசி' என்று குரல் எழுப்பிய போதும் எதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அதில் இருந்த காட்சிகளை அழித்துவிட்டு செல்போனை திருப்பித் தந்தார்கள். அதன் பிறகு ஏராளமான ராணுவ வீரர்களை கடந்தபடி நாங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். https://www.bbc.com/tamil/india-62263250
  18. தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "என் பிள்ளையைப் போல 40 ஆண்டுகளாக இந்த தென்னை மரங்களை வளர்த்தேன். ஆனால் இன்று உரிய விலை கிடைக்காததால் அனைத்து மரங்களையும் வெட்டிவிட்டேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம். தென்னை விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான 143 தென்னை மரங்களை தானே வெட்டி சாய்த்துள்ளார் ராமலிங்கம். ஆனால் இது ராமலிங்கத்தின் பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தென்னை சார்பு பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகின்றது. கடந்த ஜூலை 13-ம் தேதி பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பந்தூர்த்தியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இளநீர், தேங்காய், மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளார். என் பிள்ளை போன்ற மரங்களை வெட்டிவிட்டேன்: இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், `25 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அப்போது வெட்டுக்கூலியும் குறைவாக இருந்ததால் போதிய லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.5.50 காசுக்கு விற்கப்படுவதால் போதிய லாபம் இல்லை. உர விலை, வெட்டுக் கூலி என அனைத்தும் உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் அதை விளைவிக்கக்கூடிய விவசாயிகளான எங்களுக்கு ஒரு தேங்காயின் விலை ஐந்து ரூபாய் அளவுக்குதான் கிடைக்கிறது. இதனால் தென்னைக்கு செலவு செய்யக்கூடிய தொகை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. என் பிள்ளையை போல் 40 ஆண்டு காலம் வளர்த்த தென்னையை மனமில்லாமல் வெட்டிவிட்டேன்` என்றார். தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் பிரச்னை தீருமா? இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? என்ன சொன்னார் ஜெய்சங்கர்? வரலாறு காணாத சரிவு: டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80ஐ கடந்தது தேங்காய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை நேர்மாறாக குறைந்து வருவதாக தெரிவிக்கிறார் நாம் அமைப்பின் மாநில தலைவர் பிரபு ராஜா. பிபிசி தமிழிடம் பேசியவர், `கடந்த ஆண்டு இதே நேரம் ஒரு டன் தேங்காய் 47,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு ஒரு டன் 19,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 23 ரூபாய்க்கு கொள்முதல் ஆன தேங்காய் இன்று 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் கொள்முதல் செய்பவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான விலைக்கு வாங்கி வருகிறார்கள். அதே சமயம் தென்னை உரம் 900 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது 1,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பட மூலாதாரம்,PRABHU படக்குறிப்பு, பிரபு ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செலவு இரட்டிப்பாகியுள்ள நிலையில் தேங்காய் கொள்முதல் விலை பாதியாகக் குறைந்துள்ளது. தென்னை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் அரசு ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளோம். மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.130 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிற நிலையில் தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகள் மூலம் வழங்குவது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் சாதகமாக அமையும். உக்ரைன் - ரஷ்யா போரால் சூரிய காந்தி உற்பத்தி தடைபட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும். பொள்ளாச்சியில் நடைபெற்றதைப் போல தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். அரசு உடனடியாக தலையிட்டு தென்னை விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்` என்றார். தென்னை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த வருடம் கடந்த வருடங்களை காட்டிலும் மிக குறைவான அளவிலே இலாபம் கிடைப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேசிய குழு உறுப்பினர் மு.மாதவன் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசியவர், `உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்த எவ்வித வாய்ப்பையும் மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகபடுத்தினால் தேங்காய் விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான லாபம் கிடைக்க வழிவகுக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கஜா புயலால் தென்னை சாகுபடி மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக இங்கு 50 சதவிகிதம் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. தென்னை மரத்திற்கு அளிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் வேளாண் துறை மூலம் மானிய விலையில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். தென்னை சார்பு துறைகளும் பாதிப்பு தென்னையைப் பொருத்த வரை விவசாயிகள் மட்டுமல்லாமல் தேங்காய் பறிப்போர், தேங்காய் உரிப்போர், தேங்காய் நார் உற்பத்தி செய்வோர், ஓட்டுநர்கள், கோகோ பீட் உற்பத்தி, கயிறு உற்பத்தி என தேங்காயைச் சார்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தேங்காய் விவசாயத்தை நம்பி உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் தேங்காய் காய்க்க தொடங்கிய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்` என்றார். அரசுத்தரப்பு சொல்வது என்ன? இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, `அரசு ஆண்டு ஒன்றுக்கு 50,000 மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு உள்ளது. ஆனால் 7,000 மெட்ரிக் டன் கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை. தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டுமென்றால் ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தேங்காய்க்கு விலை அதிகமாக கிடைக்கிறபோது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை சரிந்தால் அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்க முடியும். தேங்காய் எண்ணெய் பயன்பாடு தமிழ்நாட்டில் எந்த அளவில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். கேரளாவில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை, சொற்பமான அளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மக்களிடம் பயன்பாடு அதிகம் இல்லாத பொருளை அரசு கொள்முதல் செய்வது சாத்தியம் குறைவு. மாறாக தென்னை விவசாயிகள் தென்னை பொருட்களை மதிப்பு கூட்ட வேண்டும். நீரா போன்ற தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு வைத்துள்ளது. இத்தகைய திட்டங்களை விரிவுபடுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் அதில் ஈடுபட்டு பயனடைய வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட தென்னை பொருட்களின் சந்தை அதிகரிக்கும்போது தென்னை விவசாயிகளின் இன்னல்கள் குறையும்` என்றார். https://www.bbc.com/tamil/india-62219797
  19. கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம், "தனிப்பட்ட பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. பொதுவாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள் வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு, ஓபிஎஸ் நீக்கம், கட்சி அலுவலகத்துக்கு சீல் விரும்பியோ, விரும்பாமலோ ரணிலை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்? தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் 3 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விநியோகம் படக்குறிப்பு, எரிவாயு - கோப்புப் படம். சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் திருகோணமலை - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு 21ஆம் தேதி விநியோகிக்கப்பட்டதாக தமிழ்மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 12 கிராமங்களைச் சேர்ந்தோருக்கு 750 சிலிண்டர்கள் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது. தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவின் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில், கடந்த மே மாதத்துக்கான மின்சார கட்டணப் பட்டியலின் பிரகாரம் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது. இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வரிசை சரியாக இல்லையெனத் தெரிவித்து, சிறிய வாய்த் தகராறு இடம்பெற்றதைக் காணமுடிந்தது. https://www.bbc.com/tamil/india-62261272
  20. இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார் 22 ஜூலை 2022, 02:24 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு இது நிகழ்ந்துள்ளது. படக்குறிப்பு, இலங்கை ராணுவம் போராட்டக்காரர்கள் மீது திடீர் தாக்குதல் இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் 13ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமாவை கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதியன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, 20ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுமக்களிடம் செல்வாக்கு இல்லாதவராகக் காணப்படுகிறார். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். நாட்டின் நிதியைத் தவறாகக் கையாண்டமைக்காக ராஜபக்ஷ நிராகத்தின் மீது பலர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரச்னையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மறுநாளே தெருக்களில் சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே, அரசாங்கத்தைக் கவிழ்க்க அல்லது அரசாங்க கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் ஜனநாயகம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதோடு, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ராணுவத்தால் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பு இயக்கத்தை விரைவில் அரசாங்கம் படிப்படியாக ஒடுக்கக்கூடும் என்று போராட்டக்காரர்கள் மத்தியில் கவலைகள் இருந்தன. ஜனாதிபதி செயலகத்தின் வளாகம் மாத்திரம் போராட்டக்காரர்களின் வசமிருந்த நிலையில், அதை இன்று மதியம் அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்திருந்தனர். இருப்பினும், இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தை கடந்த 104 நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த போராட்டகாரர்கள், இன்று (22-07-2022) அதிகாலை ராணுவத்தால் கலைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் உள்ளிட்ட படை வீரர்களை ஈடுபடுத்தி, அரசாங்கம் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதை அண்மித்த வளாகத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை: இலங்கை ஜனாதிபதி ரணில் இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா ரணில்? போராட்டம் போதும்... முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ராணுவம் மற்றும் போலீஸார் வரழைக்கப்பட்டனர். இதையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் ராணுவத்தினர், தடுப்பு வேலிகளை அமைத்து மூடியிருந்தனர். அதன்பின்னர், திடீரென ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தந்த ராணுவம், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ராணுவத்தின் தடியடி தாக்குதலை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தனர். பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல் ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இளைஞர், யுவதிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், போராட்டக்காரர்களை கலைப்பதற்காக ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை வழங்கிக் கொண்டிருந்தோம். இதன்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர், பிபிசி தமிழ் செய்தியாளர் மணிகண்டன் மற்றும் வீடியோ செய்தியாளார் ஜெரினின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, நாம் பிபிசி செய்தியாளர்கள் என்று எமது செய்தியாளர்கள் கூறி பாதுகாப்புப் பிரிவிற்கு தெளிவூட்டல்களை வழங்க முயன்ற சந்தர்ப்பத்தில், ஊடக கடமைகளுக்கு மீண்டும் மீண்டும் இடையூறு விளைவித்தனர். அதன் பின்னர், பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், ஜெரினுடைய வயிற்றின் மீது ராணுவ அதிகாரியொருவர் தனது பாதணி அணிந்த பாதங்களினால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, ஏனைய பிபிசி செய்தியாளர்களின் உதவியுடன், தாக்குதலுக்கு இலக்கான செய்தியாளர் அருகிலுள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையினால், வாகனங்கள் உள்ளே பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் முடியாத நிலைமை காணப்பட்டது. அதன்பின்னர், 1990 என்ற இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டு, தாக்குதலுக்கு இலக்கான எமது செய்தியாளரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆம்புலன்ஸ் குறித்த பகுதிக்கு வருகை தந்து, பிபிசி செய்தியாளரை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உதவியது. இந்நிலையில், குறித்த ஊடகவியலாளருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.எஸ்.பி.நிஹல் தல்டுவா பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரிப்பதாகவும் கூறியுள்ளார் இதேவேளை, கொழும்பின் பிரதான பகுதிகளில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-62261266
  21. நானும் அவரிடம் போயிருக்கிறேன், பெரியளவில் சுகம் வராததால் தொடரவில்லை. அவர் அக்குபஞ்சர் வைத்தியர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.