Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22881
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. கனடா ஐயா பலாலி சுடலையில் செய்த செயல் | புலம்பெயர் உறவுகளால் உருவாகிய அழகிய சுடலை | யாழ்ப்பாணம்
  2. விண்வெளியில் மின் உற்பத்தி செய்து வீடுகளுக்கு விநியோகிக்க முயற்சி | BBC Click Tamil EP 179
  3. ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 05:16 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பெரு முயற்சியுடன் செயற்படும் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நடவடிக்கை நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.19) நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் தொடர்பாக நீதி அமைச்சரினால் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் ஊழல் மோசடி இடம்பெறுவதை தடுப்பதற்காக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால் ஆலோசனை மற்றும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தை அடிப்படையாகக்கொண்டு புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன உட்பட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அது தற்போது அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சின் செயலாளர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுன் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன உட்பட அதிகாரிகள் மற்றும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பு, இலங்கை தொழில்சார் நிபுணர்களின் சங்கம், டிரான்ஸ்பெரன்சி இன்டர்நஷ்னல் நிறுவனம் மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள், நீதி அமைச்சின் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைபு திணைக்களம், ஊழல் மோசடி குற்றச்செயல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/143571
  4. இலங்கை - இந்தியாவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம் By T. SARANYA 19 DEC, 2022 | 04:55 PM (எம்.மனோசித்ரா) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் பின்னர் குறித்த கப்பல் சேவைகள் விஸ்தரிக்கப்படும். அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும் என்பதோடு , பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/143568
  5. ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம் By T. SARANYA 19 DEC, 2022 | 04:17 PM (எம்.மனோசித்ரா) இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கான போராட்டங்களில் சூரிய சக்தி, காற்று சக்தி மற்றும் நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் 'கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் , பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு சூரிய, காற்று, நீர் உள்ளிட்ட பசுமை முதலீடுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.' என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/143563
  6. பெண்ணின் கருப்பைக்கு மாற்றாக செயற்கை கருப்பை கருவி; விஞ்ஞானிகள் சொல்வது என்ன? | Artificial Womb பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன... அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில், மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
  7. மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர்,க.சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி... அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார். ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார். “நான் இப்போது ஓய்வுபெறப் போவதில்லை. உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். சாம்பியனாக இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்,” என்று உலக கோப்பையை வென்ற பிறகு தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ்8 மணி நேரங்களுக்கு முன்னர் ஊக்கமும் வேகமும் குறையாத மெஸ்ஸி 2006ஆம் ஆண்டில் நடந்தது தான் மெஸ்ஸியின் முதல் உலகக்கோப்பை. அதில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் அவர் களமிறக்கப்பட்டார். அந்த நேரத்தில், மாரடோனாவின் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, சத்தமாகக் கொண்டாடி வரவேற்றார். அந்த நிமிடத்தில் அவருடைய முகத்தில், தன் மகனே களத்தில் இறங்கியதைப் போல் அவ்வளவு பெருமை. 74வது நிமிடத்தில் களமிறங்கிய மெஸ்ஸி, தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே முதல் கோலை அடித்தார். கூடவே, கோல் வாய்ப்பு ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மாரடோனா கடைசியாக 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது பார்வையாளராக மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்தார். அப்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா தோற்கடிக்கப்பட்டது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 அதைப் பார்த்தவரின் கண்களில் தெரிந்த கவலையை இன்றளவும் மறக்க முடியாது. ஒருவேளை நேற்றும் அதே இடத்தில் நின்று, மாரடோனா மெஸ்ஸியின் ஆட்டத்தை, அவரைத் தூக்கியதைப் போலவே கோப்பையோடு மெஸ்ஸியை ரசிகர்கள் சுமந்ததைப் பார்த்திருந்தால், என்ன சொல்லியிருப்பார், எப்படி உணர்ந்திருப்பார்! 2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா போட்டிகள் தொடங்கியபோது, செய்தியாளர்களிடையே பேசிய மெஸ்ஸி, “இது என்னுடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். என்னுடைய பெருங்கனவை அடைவதற்கான கடைசி வாய்ப்பு. நான் உடல் மற்றும் மனதளவில் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். நாங்கள் மற்ற உலகக்கோப்பை போட்டிகளின்போது இருந்ததைவிட இப்போது சிறந்த ஃபார்மில் வந்துள்ளோமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், தேசிய அணி என்ற பதட்டமோ முடிவுகளைப் பற்றிய கவலையோ இல்லாமல், நன்கு விரும்பி ஆடுவதற்கு கோபா அமெரிக்க கோப்பை வழிவகுத்துள்ளது,” என்று பேசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010 உலகக்கோப்பக போட்டியின்போது மெஸ்ஸியும் மாரடோனாவும் அதைத் தொடர்ந்து விளையாடிய முதல் போட்டியிலேயே சௌதி அரேபியாவிடம் தோல்வி. அதைத் தவிர்த்து, அடுத்தடுத்து வந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி விடாது அவர்களைப் பின் தொடர்ந்தது. மெஸ்ஸி இந்தத் தொடரில் மட்டும் ஏழு கோல்களை அடித்துள்ளார். அதில், இறுதிப்போட்டியில் மட்டுமே இரண்டு கோல்கள். இதற்காக, அவர் கிட்டத்தட்ட மூன்று முறை தோல்வியை நெருங்கி மீண்டு வர வேண்டியிருந்தது. 80வது நிமிடத்தில் தொடங்கிய பிரான்ஸ் அணிக்கான எம்பாப்பேவின் இடி போன்ற கோல்களைத் தொடர்ந்து மீண்டும் அவர் கூடுதல் நேரத்தின்போது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்து ஊக்கப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மீண்டும் எம்பாப்பே மற்றுமொரு கோல் அடித்து சமன் செய்தார். ஆனால், இறுதி வரை அவருடைய தாக்குதல் ஆட்டமும் குறையவில்லை, அணிக்கு அவரளித்த ஊக்கமும் குறையவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மெஸ்ஸியின் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த உலகக்கோப்பை இப்படி மூன்று முறை தோல்வியின் விளிம்புக்குச் சென்று, மீண்ட பிறகே இந்த வெற்றியை அவரால் சுவைக்க முடிந்தது. மெஸ்ஸி செய்த சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது. அணியாக செய்த சாதனைகள் 8 முறை ஸ்பானிய கால்பந்து கோப்பையான பிச்சிச்சி கோப்பையை வென்றுள்ளார் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் வென்றுள்ளார் 10 முறை ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகா கோப்பையை வென்றுள்ளார். ஏழு முறை கோபா டெல் ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஐரோப்பிய சூப்பர் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளார் ஸ்பானிய சூப்பர் கோப்பையை 8 முறை வென்றுள்ளார் கோபா அமெரிக்கா கோப்பையை ஒருமுறை வென்றுள்ளார் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார் Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 தனிப்பட்ட சாதனைகள் ஏழு முறை பெருமைமிக்க பேலோன் டோர் விருதை வென்றுள்ளார் ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகாவில் 7 முறை சிறந்த வீரராகியுள்ளார். லா லிகாவில் ஏழு முறை சிறந்த ஃபார்வார்ட் ஆட்டக்காரராகியுள்ளார் 2005ஆம் ஆண்டில் கோல்டன் பாய் விருது வென்றுள்ளார் ஆறு முறை ஐரோப்பிய கோல்டன் ஷூ வென்றுள்ளார் 2009ஆம் ஆண்டில் ஃபிஃபா வழங்கும் உலகளாவிய சிறந்த வீரர் பட்டம் வென்றார் நான்கு முறை உலகக் கோப்பையில் கோல்டன் பால் வென்றுள்ளார் நான்கு முறை ஓன்ஸே டோர் விருதை வென்றுள்ளார் இப்படி, அவருடைய வெற்றிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் இப்போது உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பும் சேர்ந்துள்ளது. அது ஒன்றுதான் அவருடைய கால்பந்து வாழ்க்கையில் கிடைக்காமல் இருந்தது. அதையும் சாதித்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெஸ்ஸியை மக்கள் உணர்ந்த தருணம் இவையனைத்தும் தொடங்கியது, மெஸ்ஸியின் 13வது வயதில். அர்ஜென்டினா உலகக்கோப்பையை கடைசியாக வென்ற 1986ஆம் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில் பிறந்த அந்த இளம் வீரன், பார்சிலோனாவுக்காக விளையாட ஸ்பெயினுக்கு சென்றார். ஒரு சராசரி இரும்புத் தொழிற்சாலை ஊழியரின் மகனாக இருந்த ஒரு சிறுவன், உலகம் போற்றும் கால்பந்து நாயகனாக மாறிய பாதை அங்குதான் தொடங்கியது. அவருடைய குடும்பம் அப்போதுதான் பார்சிலோனாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். அவர் 14 வயதுக்குக் கீழ் பிரிவில் பார்சிலோனா அணிக்காக விளையாடத் தொடங்கியிருந்தார். அந்த அணியின் ஜூனியர் அணியில் அவர் 14 போட்டிகளில் 21 கோல்களை அடித்தார். அதைத் தொடர்ந்து 16 வயதில் அடுத்தகட்ட அணிக்கு முன்னேறினார். 2005ஆம் ஆண்டில் 17 வயதிலேயே, பார்சிலோனா அணிக்கான அதிகாரபூர்வ ப்ளேயராக, கோல் ஸ்கோரராக ஸ்பானிய லா லிகா போட்டிகளில் அறியப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெறும் 5 அடி 7 அங்குலம், 67 கிலோவே இருந்த அந்த இளைஞர், அவ்வளவு வலிமையானவராக, வேகமானவராக, களத்தில் தடுக்கக் கடினமானவராக இருந்தது, உலகளாவிய அணிகளின் கவனத்தை ஈர்த்தது. மெஸ்ஸி இடது கால் ஆட்டக்காரர். அவரால், திறன்மிக்க பாஸ்களை வேகமாகச் செய்ய முடிந்தது. எதிரணி விரர்களுக்கு நடுவே மிகவும் வேகமாக பந்தை திரெடிங் செய்து, எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல முடிந்தது. அதை எதிரணிகளின் தடுப்பாட்ட வியூகத்தை உடைக்க பார்சிலோனா பயன்படுத்திக் கொண்டது. 2005ஆம் ஆண்டில் அவருக்கு ஸ்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே பார்சிலோனா அணி ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது. அடுத்தடுத்து அவருடைய ஆட்டம் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. பழைய மெஸ்ஸி இன்னும் மாறவில்லை 2007ஆம் ஆண்டில், கோபா டெல் ரே போட்டியில் பார்சிலோனாவும் ஜெடாஃபீயும் மோதின. அந்த ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், தனது 19 வயதில் மெஸ்ஸி அடித்த கோல் அவரைப் பற்றி கால்பந்து ரசிகர்களுக்கு உணர்த்தியது. மைதானத்தின் நடுவில் அவருடைய கால்களுக்குக் கிடைத்த பந்தை, இடது காலில் டிரிப்பிள் செய்துகொண்டே, எதிரணியின் ஆறு வீரர்களைக் கடந்து சென்று கோல் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக லீக் 1 போட்டியில் மெஸ்ஸி ஆடியபோது... 1986 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிராக மாரடோனா அடித்த பிரபலமான கோலை அவர் அதன் மூலம் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார். 2006ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை பார்சிலோனா வென்ற பிறகு, அடுத்த இரண்டே ஆண்டுகளில் மெஸ்ஸி உலகளவில் மிகவும் பேசப்படக்கூடிய, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கால்பந்து வீரராக வளர்ந்தார். அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையே யார் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி இருந்துகொண்டேயிருந்தது. நெதர்லாந்துடனான போட்டியில், டச்சு வீரரான வௌட் வேகோர்ஸ்ட்டை பெனால்டி ஷூட் அவுட்டின்போது மெஸ்ஸி போபோ எனத் திட்டினார். ‘போபோ’ என்றால் முட்டாள் என்று அர்த்தம். வேகோர்ஸ்டும் நெதர்லாந்தின் பயிற்சியாளரும் அவர்களை மரியாதையாக நடத்தவில்லை என்று மெஸ்ஸி குற்றம் சாட்டினார். “விளையாட்டு என்பது எதிரணியைச் சீண்டிவிடுவதோ, தவறாகப் பேசுவதோ இல்லை. அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். நான் அனைவரையும் மதித்து நடந்துகொள்வேன். அப்படித்தான் என்னிடமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்,” என்று அதுகுறித்து தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது அர்ஜென்டினாவில் குழந்தைகளிடையே பயன்படுத்தக்கூடிய வார்த்தை. அநேகமாக அவர் பார்சிலோனாவுக்கு வரும் முன்பாக, தனது 12 வயதில் பயன்படுத்தியிருக்கலாம். அந்த மெஸ்ஸியை இப்போது நாம் மீண்டும் பார்க்கிறோம். குணத்தில் மட்டுமில்லை, ஆட்டத்திலும் அதே பதின்பருவ மெஸ்ஸி தான் ஆடியிருப்பதைப் போல் இந்தத் தொடர் இருந்தது. அவருடைய கையில் தங்கக் கோப்பை இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது முதல் அவருடைய கனவாக இருந்த கோப்பை அவர் கைகளில் இருந்தது. அவருடைய ஆதரவாளர்கள், அவரே சிறந்த கால்பந்து வீரர் என்ற வாக்குவாதத்தில் முதல் வாதமாக வைக்கப்போவது இனி இந்தக் கோப்பையைத்தான். அதற்கு எதிர்வாதம் வைப்பது, எதிரில் இருப்போருக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒப்பீடுகள் காலத்திற்கு ஏற்ப மாறலாம். ஆனால், பிலி, மாரடோனா போன்றோரின் வரிசையில் மெஸ்ஸியும் இப்போது இணைந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த இறுதிப்போட்டியில் அவர் இரண்டு கோல்களை அடித்தார். கிலியன் எம்பாப்பே, மூன்று கோல்களை அடித்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் செய்துவிடாத ஒரு சாதனை அது. அதுபோக, இருமுறை கூடுதல் நேரம், பெனால்டி ஷூட் அவுட் என்று பலவற்றையும் தாண்டி, மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகே அவரால் அந்தக் கோப்பையின் உச்சியில் தன் உதடுகளால் முத்திரை பதிக்க முடிந்தது. அங்கு அவர் வாழ்வில் தவறிக் கொண்டேயிருந்த பரிசை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். https://www.bbc.com/tamil/articles/c0x70y4667do
  8. கத்தார் கால்பந்து மோகம்: பிரான்ஸ், அர்ஜென்டினா ஜெர்சியில் கேரள மணமக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,மெரில் செபஸ்டியன் பதவி,பிபிசி செய்திகளுக்காக இருந்துகேரள மாநிலம் கொச்சியில் இருந்து… ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கேரளாவில் மணமேடையில் பிரான்ஸ், அர்ஜென்டினா கால்பந்து அணிகளின் ஜெர்சி அணிந்த மணமக்கள் கிரிக்கெட் மோகம் நிறைந்த இந்தியாவில் கால்பந்து மீது கொண்ட காதலால் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகின்றனர். அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக் கிழமையன்று கேரளாவில் எங்கு நோக்கினும் போட்டியை நேரலையில் காண்பதற்கான முனைப்பே தென்பட்டது. கேரளாவில் ஆங்காங்கே பெரிய திரையில் இறுதிப்போட்டி நேரலை செய்யப்பட்டது. வீதிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் தேசியக் கொடிகள் கம்பீரமாக பறக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரிய திரைகளின் முன் போட்டியைக் காண திரண்டனர். 1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் - வியப்பூட்டும் வரலாறு5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் மறக்க முடியாத தருணங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆனால், கால்பந்து மீது கொண்ட காதலால் ஒரு திருமண ஜோடி செய்த காரியம் அவர்களை தனித்து அடையாளம் காட்டுவதாக அமைந்தது. சச்சின் – ஆதிரா ஜோடியின் திருமண நாள் சரியாக இறுதிப்போட்டி நடந்த ஞாயிறன்று அமைந்தது. பெரும்பாலான விஷயங்களில் ஒத்துப் போய்விட்ட அவர்கள், இறுதிப் போட்டியில் யாருக்கு ஆதரவு என்பதிலும் சமரசம் செய்ய விரும்பவில்லை. அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகராக சச்சின் இருக்க, மணமகள் ஆதிராவோ பிரான்ஸ் அணியின் தீவிர ரசிகையாக திகழ்ந்தார். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கத்தாரின் லுசைல் மைதானத்தில் மோதிய ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கொச்சியில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். மணமக்களுக்கான பாரம்பரிய உடை மற்றும் ஆபரணங்களுக்கு மேலே இருவருமே தங்களது மனம் கவர்ந்த கால்பந்து நாயகர்களின் பத்தாம் நம்பர் பொறித்த ஜெர்சிக்களை அணிந்து கொண்டனர். பிரான்சின் இளம் நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே பெயர், எண் பொறித்த ஜெர்சியை ஆதிராவும், அர்ஜென்டினா வீரர் ஜெர்சியின் பெயர், எண் பொறித்த ஜெர்சியை சச்சினும் அணிந்திருந்தனர். மண விழாவுக்குப் பிறகு வரவேற்பு, மண விருந்தை முடித்துக் கொண்டு, உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண 206 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரத்தில் உள்ள சச்சினின் வீட்டிற்கு இருவரும் விரைந்ததாக மலையாள மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகக்கோப்பையை வென்ற களிப்பில் மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்று, உலகக்கோப்பையை தன் கைகளில் ஏந்த வேண்டும் என்ற 35 வயது கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் கனவை நனவாக்கியது. மெஸ்ஸி ரசிகர்களை பெருமளவில் கொண்ட கேரளாவில் அர்ஜென்டினாவின் வெற்றியை ஞாயிற்றுக் கிழமை இரவு முதலே பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதால், திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இலவசமாக பிரியாணி வழங்கினார். கால்பந்து மீது கேரளா கொண்டுள்ள காதல் கடந்த மாதம் பிஃபா வரையிலும் எட்டியது. கேரளாவில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கால்பந்து ஜாம்பவான்களின் பிரமாண்ட கட் அவுட்களின் புகைப்படங்களை பிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் தனக்கு வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களைப் பார்த்து, அதற்காக கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c3g8e5m86zro
  9. ஐஸ் போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? ஐஸ் போதைப்பொருளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் . ஐஸ் போதைக்கு அடிமையானவர்களிடம் பசி படிப்படியாக குறைவதால், உடல் பலவீனமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பல்வேறு நோய்களுக்கு அவர்கள் இலக்காவது பொதுவான பண்பு. இதன் காரணமாக அவர்களின் உடல் மற்றும் மனவலிமை பலவீனமடைவதோடு கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்தார். மற்ற போதை மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஐஸ் போதைக்கு அடிமையாதல் அதிகம் என்றும், ஐஸ் மருந்துகளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என்றும் அவர் கூறினார். கடத்தல்காரர்கள் பலர் ஐஸ் போதைப்பொருள்களை பொய் கூறி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அறியமுடிகிறது ஞாபக சக்தி அதிகரிக்கும் படிக்கும்போது தூக்கம் வராது என பொய்களை பரப்பி வருகின்றனர். இவை அப்பட்டமான பொய்களாகும். மேலும் ஐஸ் மருந்துகளை உபயோகிப்பதால் நினைவாற்றல் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. https://thinakkural.lk/article/228815
  10. புதுவையில் திமுகவின் தொய்வு எப்படித் தொடங்கியது? மீண்டும் அது முன்னிலை பெறுமா ? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN / V. NARAYANASAMY FACEBOOK புதுச்சேரியில் பலமுறை ஆளும் கட்சியாகவும், காங்கிரசுக்கு பிரதான போட்டியாளராகவும் இருந்துவந்த திமுக சிறிது சிறிதாக புதுச்சேரியின் அதிகாரப் போட்டிக்கான உரையாடலில் இருந்து காணாமல் போயிருந்தது. புதுவை அரசியல் பரபரப்பான புதிய திசையில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் திமுக சோம்பல் முறித்துக்கொள்ளுமா? அதன் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு கோராத காங்கிரசுக்கு, புதுவையில் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து ஈடு செய்துவந்த திமுக, அதே அணுகுமுறையை நீண்ட காலம் கடைபிடித்த நிலையில் அந்தக் கட்சி யூனியன் பிரதேசத்தில் தொய்வை சந்திக்கத் தொடங்கியது. ஆனால், காங்கிரசுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டு இரண்டு போட்டி முகாம்கள் உருவானது, பிறகு புதுவையில் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கு பாஜக முனைப்பு காட்டியது என்று அரசியல் வேறுவிதமாக நகரத் தொடங்கிய நிலையில், ஆட்சிக்கான முனைப்பில்லாத ஒரு கட்சிக்கு அரசியல் பொருத்தமே இல்லாமல் போகும் அபாயம் உருவானது. இந்நிலையில்தான் ஒரு திருமண விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய ஒரு பேச்சு மந்தகதியில் போய்க் கொண்டிருந்த புதுவை அரசியலின் இரண்டு முகாம்களிலும் இரண்டு விதமான சலசலப்புகளை உண்டாக்கியது. ஒருபுறம், முதல்வர் ரங்கசாமி பொம்மையாக செயல்படுகிறார், ஆளுநரே அதிகாரம் செலுத்துகிறார் என்று கூறியதன் மூலம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் சிறுமைப்படுவது குறித்துப் பேசியாகவேண்டிய நெருக்கடி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்பட்டது. புதுவைக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவே இல்லை, அதிகாரிகள் மதிப்பதில்லை என்று ரங்கசாமி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னொரு புறம் புதுவையில் திமுக ஆட்சி வரும் என்பதாக மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டது, எதிர்க்கட்சி முகாமான திமுக – காங்கிரஸ் முகாமுக்குள்ளும் கூட்டணியின் தலைமை இனி யார் என்ற கேள்விக்கான விதையைத் தூவியது. புதுச்சேரி அரசியல்: ஸ்டாலின் செய்த விமர்சனம், எதிர்வினை ஆற்றிய தமிழிசை - என்ன நடந்தது?12 டிசம்பர் 2022 புதுச்சேரியில் யார் ஆட்சியை நடத்துகிறார்கள்? முதல்வர் ரங்கசாமி பொம்மையாக இருக்கிறாரா?18 டிசம்பர் 2022 "அநாகரிகமாக விமர்சித்தால் கடும் நடவடிக்கை" - எச்சரிக்கும் தமிழிசை செளந்தரராஜன்5 டிசம்பர் 2022 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 1969, 1980, 1990, மற்றும் 1996 என நான்கு முறை திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் – திமுக கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் திமுக பெற்ற இடங்கள் 6, காங்கிரஸ் பெற்ற இடங்கள் வெறும் 2 மட்டுமே. அதிலும் குறிப்பாக, தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது கடும் போட்டிக்குப் பிறகு அதிக இடங்களைப் பெற்றுப் போட்டியிட்டது காங்கிரஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுக்குப் பிறகு 6 இடங்கள் பெற்ற திமுக பிரதான எதிர்க்கட்சியாக உருவானது. அடுத்த ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கூட்டணிக்குத் தலைமை காங்கிரசா, திமுகவா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தலைமையில் திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்ற முனைப்புனுடன் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக வளர்ச்சியும் வீழ்ச்சியும் புதுச்சேரியின் சட்டமன்ற வரலாறு 1963ல் தொடங்கியது. அப்போது இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தனர். அப்போது இந்த இரண்டு கட்சிகளுமே முதன்மையான அரசியல் கட்சிகளாக இருந்தன. ஆனால் 1967ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக புதுச்சேரியிலும் புதுவேகத்தில் வளர்ந்தது. 1969ல் ஆட்சியையும் கைப்பற்றியது. அதன் பிறகு திமுக மீண்டும் 1980 மற்றும் 1990ல் வெற்றிபெற்றது. 1993ஆம் ஆண்டு திமுக பிளவுபட்டு மதிமுக உதயமானது. அந்த சமயத்தில் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மாநில பொறுப்பாளராகவும் சட்டமன்ற திமுக குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது கட்சியின் யூனியன் பிரதேச அமைப்பாளராக முன்னாள் முதல்வர் டி.ராமசந்திரன் இருந்தார். ஆனால், கட்சிக்குள் ராமச்சந்திரன் செல்வாக்கு சரிந்து 1994ல் அவர் அதிமுக சென்றார். முதலில் மதிமுக பிளவு, பிறகு ராமச்சந்திரன் மூலம் இன்னொரு பிளவு என்று அடுத்தடுத்து புதுவை பிரதேச திமுக இரண்டு பிளவுகளை சந்தித்தது. அப்போது ஜானகிராமன் திமுகவின் யூனியன் பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தொகுதி வாரியாக கட்சி வளர்ச்சிப் பணியை மேற்கொண்டார். 1996ல் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று, திமுக தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக சரிவுக்குக் காரணம் என்ன ? படக்குறிப்பு, ஜெவிஎஸ்.ஆர்.ராமலிங்கம் புதுச்சேரியில் திமுக எதனால் சரியத் தொடங்கியது என்பது குறித்து திமுகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஜெவிஎஸ்.ஆர்.ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், "புதுச்சேரியில் எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் - திமுக ஆகிய இரண்டும் தங்கள் தலைமைகளின் கட்டளைப்படி, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தன. பிரதான போட்டியாளர்களான இரண்டு கட்சிகளுமே கூட்டாளிகளாக மாறின. தமிழ்நாட்டில் திமுக தலைமை வகித்தது. புதுவையில் காங்கிரஸ் தலைமை தாங்க, திமுக அடுத்த நிலைக்கு சென்றது. அப்போதுதான் திமுகவின் வீழ்ச்சி தொடங்கியது. பின்னர், 2006 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உறுதியானதால், திமுக தொண்டர்கள் சோர்வடையத் தொடங்கினர். தொடர்ச்சியாக 2006, 2011, 2016 என அடுத்தடுத்த தேர்தல்களிலும் கூட்டணியில் திமுக இரண்டாம் நிலைக் கூட்டாளியானது. இதனால், திமுகவுக்கு புதியவர்களை ஈர்க்க முடியாமல் போனது. இதனால் திமுக தொண்டர்கள் மேலும் சோர்வடைய ஆரம்பித்தனர். இதனால்தான் திமுக வளர்ச்சி குறையத் தொடங்கியது," என்றார் அவர். தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி திமுக-வின் வடக்கு, தெற்கு, காரைக்கால் மாவட்ட அமைப்பாளர்கள் சரியாக கூட்டணி பேசியிருந்தால் 12 இடங்களைக் கைப்பற்றி இருக்கலாம். அது தவறியதால் 6 இடங்கள்தான் கிடைத்தது. ஏறக்குறைய 12 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் சூழல் இருந்தும் சரியான முறையில் இடம் மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யாததால், வெற்றி என்பது 6 தொகுதிகளாகச் சுருங்கி விட்டது. ஒற்றுமை இல்லாததால் தன்னுடைய வளர்ச்சியை திமுக தானே குறைந்துகொண்டது," என்கிறார் ராமலிங்கம். திமுக மீண்டு வர முடியுமா ? "திமுக மீண்டும் வளர்ச்சி பெறவேண்டுமானால் பெரும்பான்மை சாதிகளுக்கு கட்சியினுடைய தலைமை பதவிகளை அளிக்க திமுக தலைமை முன்வரவேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை வன்னியர்கள், மீனவர்கள், தலித்கள் என மூன்று பெரும் சாதிகள் உள்ளன. இந்த சமூகங்களை சேர்ந்த மக்களுக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை. தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் வளர்ச்சி என்பது அவர்கள் பெரும்பான்மை சமூகங்களுக்கு மதிப்பு அளித்ததால் ஏற்பட்டது. திமுகவில் அதுபோன்ற சூழ்நிலை ஏற்படாதவரையில், கட்சியின் வளர்ச்சி கேள்விக் குறியாகத்தான் இருக்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது வரை சிறப்பான ஒரு கூட்டணியாகவே உள்ளது. ஆனால் புரிதல் இல்லாமல், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டி நிலவுவதால், இரண்டு கட்சிகளின் தலைமையும் இந்தப் பிரச்னையைப் பேசி சீர் செய்யவேண்டும்," என்று கூறுகிறார் திமுக மூத்த உறுப்பினரான ராமலிங்கம். படக்குறிப்பு, திமுக எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு யார் தலைமை ? "காங்கிரஸ் 2 எம்.எல்.ஏ.க்களும், திமுக 6 எம்.எல்.ஏ.க்களும் பெற்றிருப்பதாக பிரித்துச் சொல்ல முடியாது. இந்த 8 எம்.எல்.ஏ.க்களுமே கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள்தான். இவர்கள் தனித்தனியே போட்டியிட்டு வெல்லவில்லை. எனவே, சீட் யாருக்கு என்பதை தலைமை முடிவு செய்யும்," என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கூறுகிறார். "புதுச்சேரியில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் வேலை செய்து வருகின்றனர். அதற்கேற்ப தொகுதிவாரியாக ஆட்களை நியமிக்கும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நமது இடத்தை திமுக பிடித்து விடுமோ என்ற அச்சம் காங்கிரசுக்கு உள்ளது. இதனாலேயே காங்கிரஸ் கட்சியினர் எங்கள் தலைமையிலேயே கூட்டணியும் ஆட்சியும் இருக்கும் என்று கூறி வருகின்றனர். இரண்டு கட்சிகளிலுமே அந்த கட்சியின் மத்திய தலைமையே முடிவுகளை எடுக்கின்றன என்று தெரிகிறது. இருவரும் பிரிந்தால் அவர்கள் இருவருக்குமே நல்லதில்லை. வரும் தேர்தலில் இருவரும் சரிசமமாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி செய்யலாம் என்ற முடிவை எடுப்பார்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக பிரிந்து செயல்பட்டால், பாஜக ஆட்சிக்கு அவர்களே வழி வகுப்பதாக இருக்கும்," என்று கூறுகிறார் அரசியல் ஆர்வலர் அருள்தாசன். https://www.bbc.com/tamil/articles/c6p8yw924gxo
  11. கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் அர்ஜென்டினா வீரர்கள். 4 மணி நேரங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணியை வென்று கோப்பையைத் தனதாக்கியது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் இந்த வெற்றியைச் சிலாகித்துக் கொண்டாடி வருகின்றனர். உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ்6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் மறக்க முடியாத தருணங்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் ஒருமாத காலம் நடந்து நேற்று முடிவுக்கு வந்துள்ள இந்த விளையாட்டு திருவிழாவானது மக்களுக்கான பொழுதுபோக்கு என்பதைக் கடந்து கோடிகளில் பணம் புரளும் ஒரு வணிகமும் ஆகும். பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டுவரும் இந்த பரிசுத்தொகையானது இவ்வருடம் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகக்கோப்பையை மெஸ்ஸி கைகளில் ஏந்திய தருணம். கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும். இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தொடரில் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்த குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் முறையே 27 மில்லியன் மற்றும் 25 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாகப் பெறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இவை மட்டுமல்லாமல், ஐந்து முதல் எட்டாம் இடம் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 17 மில்லியன் அமெரிக்க டாலரும், ஒன்பதாவது முதல் பதினாறாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 13 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கப்படும். பதினேழாவது இடம் முதல் முப்பத்திரண்டாவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி ரூபாய்) வழங்கப்படுகின்றன. கூடுதலாக, ஒவ்வொரு தகுதி பெற்ற அணியும் போட்டிக்கு முன்னதாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலரை தயாரிப்பு செலவுகளுக்காகப் பெறுகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது. மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்18 டிசம்பர் 2022 அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 மெஸ்ஸி அதிர்ந்தது முதல் ரொனால்டோ அழுதது வரை கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 சம்பவம்18 டிசம்பர் 2022 ஆடவருக்கான கால்பந்து உலகக் கோப்பை பரிசுத்தொகை ஒருபுறம் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருந்தாலும், மகளிர் கால்பந்துக்கான பரிசுத்தொகையிலோ வணிகத்திலோ இதே அளவு வளர்ச்சி இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே. 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் மொத்தம் 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது. 2022 கத்தார் உலகக்கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இது சுமார் ஏழு மடங்கு குறைவு. 2019ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகை 30 மில்லியன் டாலர் மட்டுமே இருந்த நிலையில், 2023 உலகக்கோப்பையில் இது 60 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9e1zl95dk8o
  12. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது வாழ்த்துகள் பையா, வாழ்க வளத்துடன்.
  13. பிக் பாஸில் தன் தவறை ஒப்புக் கொண்ட கமல்ஹாசன் பட மூலாதாரம்,VIJAY TV 2 மணி நேரங்களுக்கு முன்னர் "உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்" என, கடந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18) நிகழ்ச்சியில் அவர் திருத்திக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபாரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 6' நிகழ்ச்சியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் போட்டியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அப்போது 'பிக்பாஸ்' வீட்டிலுள்ள போட்டியாளர்களிடம் கடந்த வாரம் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, அவர்கள் வழங்கிய பிழையான பதில்களை அவர் நினைவுபடுத்தி நகைச்சுவையாகப் பேசினார். இதன்போது ஒரு கட்டத்தில், உலகின் பெண் பிரதமர் தொடர்பாக, தான் கடந்த வாரம் தெரிவித்த பிழையான தகவல் பற்றியும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். "எனக்கே கூட பிழைகள் நேரும். அவற்றைச் சுட்டிக் காட்டும் போது மறுத்துப் பேசாமல், உடனடியாக ஒத்துக் கொள்வது சிறப்பு. ஏனென்றால் அது நம்மை மேம்படுத்தும்” என அப்போது கமல் கூறினார். ஒசாமா பின் லேடனின் மகன் உமர் பின்லேடன் தன் அப்பா பற்றி சொன்ன நெகிழ்ச்சித் தகவல் - உண்மைக்கதை 2 டிசம்பர் 2022 துட்டன்காமன்: அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம் - 21ஆம் நூற்றாண்டின் அழியா புதையல்28 நவம்பர் 2022 40,000 பேருடன் காணாமல் போன பாகிஸ்தான் நகரம்26 நவம்பர் 2022 ”இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்று, இந்திரா காந்தியைச் சொல்லி விட்டேன். அதன்பிறகு எனக்கு திருத்தம் சொல்லி பல பேர் செய்தியனுப்பினார்கள். சமூக ஊடகங்களில் நிறையப்பேர் சொன்னார்கள். உலகின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எனக்கு தெரியாமல் போனமைக்கு வயதுதான் காரணம்". "எனக்கு அரசியலில் சின்னப் புரிதல் வரும் நேரத்தில் அந்த வரலாற்றை மறந்துவிட்டேன். என் நாட்டு பிரதமர் பற்றி பேச வேண்டுமென்று, பக்கத்து 'தங்கச்சி' நாட்டை மறந்து விட்டேன். அது ஒரு நினைவுப் பிழைதான்" என்றார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; "நான் செய்த அந்தத் தவறு காரணமாக, சில பெண் தலைவிகள் பற்றி - சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்தன. அடுத்த தலைமுறை என்னைப் போல் இவ்வாறு மறதியில் தவறு செய்யாமலிருக்க அது உதவும்” என்றார். பட மூலாதாரம்,VIJAY TV நடந்த பிழை என்ன? 'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' என, கடந்த வாரம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து, அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பெண் விடுதலை தொடர்பாக பாரதியின் செயற்பாடுகள் குறித்து, அந்த நிகழ்ச்சியில் சிலாகித்த கமல்ஹாசன், ”பாரதி வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் 'சக்கரவர்த்தினி' என்ற ஒரு பத்திரிகையைத் துவங்கி - நடத்தி, அதில் பெண்களைக் கொண்டு எழுத வைத்தார்" என்று கூறியதோடு, "உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்பதை இந்தியாதான் செய்தது” என்றார். ஆனால் கமல்ஹாசன் தெரிவித்த அந்த தகவல் பிழையானது. உலகின் முதல் பெண் பிரதமரைப் பெற்றுக் கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும். இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் சிறப்பையும் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1973இல் இலங்கை பயணம் மேற்கொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க. தெரியவில்லையா? மறந்து விட்டாரா? நடிகர் கமல்ஹாசன் கடந்தவாரம் பேசும் போது இந்திரா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர் இந்திராவை மனதில் வைத்தே அந்தத் தகவலைக் கூறியிருந்தார். இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். அவருக்கும் பின்னர் எந்தவொரு பெண்ணும் இந்தியப் பிரதமர் பதவியை இதுவரை வகிக்கவில்லை. எது எவ்வாறாயினும், 'உலகின் முதல் பெண் பிரதமர் யார்' எனும் தகவலை கமல் பிழையாக கூறினாரா? அல்லது மறந்து தவறாகப் பதிவு செய்தாரா என்பதை அவர் நேற்றைய நிகழ்ச்சியில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/clj3dxwxnywo
  14. உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். முஷ்டிகளை மடக்கி, கை முட்டிகளை உந்தி, அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் காற்றில் பறந்தனர். இறுதியாக அனைத்தும் முடிந்தது. வெற்றி கிடைத்தது. உலகக்கோப்பையைச் சுமக்கும் பாக்கியம் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்துவிட்டது. இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, எனச் சொல்வதைவிட, மெஸ்ஸிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என விவரிப்பது சரியாக இருக்கும். ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில், ஒரு பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்து, அணியினருக்கு உயிர் கொடுத்தார் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே. பிரான்சுக்கு 19 வயதில் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த, 23 வயதான அந்த வீரர் அதோடு நிறுத்திவிடவில்லை. அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றுமொரு கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 75வது நிமிடம் வரை வீறுகொண்டு தாக்கிக் கொண்டிருந்த அர்ஜென்டினா, அதற்குப் பிறகு கொஞ்சம் சாவகாசமாக விளையாடத் தொடங்கியது. ஆனால், கடைசி பத்து நிமிடங்கள் வரையல்ல, கடைசி நொடி வரை தனக்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்று எம்பாப்பே, அந்த இரண்டு கோல்களின் மூலம் எதிரணிக்கு உணர்த்தினார். அவருடைய அனைத்து ஆட்டத்தில் கொஞ்சம் திணறிய எதிரணி, மீண்டும் தங்களுடைய தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி, போராடி வெற்றியைப் பெற்றது. 1986ஆம் ஆண்டு கோப்பையை மாரடோனா வென்றுகொடுத்தபோது, அவர் கோப்பையைச் சுமந்தார். அணியின் வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அதேபோல் மெஸ்ஸி அணிக்கு வெற்றியைப் பரிசளித்து கோப்பையைச் சுமந்தார். அணி வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தாரில் நடந்த உலகக்கோப்பையின் வியத்தகு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து, தங்களது 36 ஆண்டுக்கால கனவை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளார்கள். கடைசியாக மெக்சிகோவில் மாரடோனா கோப்பையைச் சுமந்தபோது ருசித்த மகிழ்ச்சியை, இப்போது மீண்டும் ருசிக்கிறார்கள். பெனால்டி ஷூட் அவுட் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இறுதியாக கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டியில் பந்து கோல் போஸ்டுக்குள் போனபோது, அங்கிருந்த ஒருவராலும் நிலைகொள்ள முடியவில்லை. அளவில்லா மகிழ்ச்சி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது. லுசைல் மைதான அரங்கில், முழுவதும் வெள்ளையும் நீலமும் ஆட்கொண்டிருந்தது. அனைவர் மனதிலும் ஓர் ஆறுதல். மகிழ்ச்சி வெடிப்பில் கத்திக் கொண்டிருந்தனர். 120 நிமிடங்களுக்கு நடந்த இறுதிப்போட்டியில், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என நினைத்த போதெல்லாம், இல்லை நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று, எம்பாப்பே சவால் விட்டுக் கொண்டேயிருந்தார். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்9 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 இறுதியில் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டாக சென்றது. நிகோலஸ் ஒட்டமெண்டி, கொன்சாலோ மோன்டியெல் இருவரும் இரண்டு தருணங்களில் செய்த சிறுபிழை, பிரான்ஸ் அணிக்குச் சாதகமாகவே, ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது. போட்டியின் 80வது நிமிடம் வரை பிரான்ஸ் அணியை ஆட விடவே இல்லை அர்ஜென்டினா. ஆனால், ஒட்டமெண்டியின் பிழையால் கிடைத்த பெனால்டியை எம்பாப்பே கோலாக்கியதும் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த வீரியம் கொஞ்ச நஞ்சமல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் பாதியில் ஏஞ்சல் டி மரியா வெளிப்படுத்திய ஆட்டம், அவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போல் இருந்தது. பிறகு, அடுத்தடுத்து அவர்கள் களமிறக்கிய வீரர்களான கோமன், கிங்ஸ்லி கோமன், இப்ராஹிம் கொனாடே, எட்வர்டோ காமவிங்கா ஆகியோர், ஆட்டத்தின் பாதையையே மாற்றிவிட்டார்கள். மார்கஸ் துரம், யெல்லோ கார்ட் வாங்கினாலும் சரி என்ற நிலையில் இறங்கி ஆடினார். ஆனால், அர்ஜென்டினா அணி முதன்முதலாக மாற்றாக களமிறக்கிய மார்கோஸ் அகுனா, கொஞ்சமும் சளைக்காமல் பிரான்ஸ் அணியின் பலவீனமான இடது பக்கத்திலிருந்து தாக்குதலைத் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து, மெஸ்ஸி, டி பால், ஆல்வாரெஸ் ஆகியோர் கொஞ்சம் விடாது வாய்ப்பை மூர்க்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் பாதியில் டி மரியாவின் பங்களிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். களத்தில் சற்று இடைவெளி விழுந்திருந்த அவரை ஸ்கலோனி ஏன் இறுதிப்போட்டியில் இறக்கினார் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால், “அவரை இதற்காகத்தான் நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்னும் அளவுக்கு இருந்தது டி மரியாவின் அதிரடி. ஆம், அர்ஜென்டினா அணியின் இறுதிக்கோப்பைக்கான துருப்புச்சீட்டாக திகழ்ந்தார் டி மரியா. பெனால்டி மூலம் முதல் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சாகசம் நிரம்பிய இரண்டாவது கோலை தானே அடித்துவிட்டு அவர் மைதானத்தில் துள்ளிக் குதித்தபோது, அவரால் அழாமல் இருக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 120 நிமிடங்களுக்கு நடந்த அந்தப் போரில் வெற்றியைச் சுவைத்து, அணியின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய சிறிது நேரத்திலேயே அரங்கம் முழுவதும் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி வழிந்தது. நான்கு வாரங்கள், 64 போட்டிகள், 172 கோல்களுக்கு பிறகு கத்தார் உலகக்கோப்பை போட்டி சாகசங்களையும் திருப்புமுனைகளையும் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் ஒருங்கே அளித்து முடிவுக்கு வந்துள்ளது. பிரான்ஸ் அணியின் முதல் 60 நிமிடங்கள் சற்று தடுமாற்றங்களுடன் தான் இருந்தது. முதல் 70 நிமிடங்கள் வரையிலுமே, அங்கு ஆடிக்கொண்டிருப்பது பிரான்ஸ் அணி தானா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களுடைய செயல்பாடு இருந்தது. அது அவர்களுடைய தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறலாம். “நாங்கள் முதல் 60 நிமிடங்களில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அளவுக்கு அதிகமான ஆற்றலோடு இருந்த எதிரணிக்கு ஈடுகொடுக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிலியன் எம்பாப்பே என்ற தனியொரு வீரன் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருந்தார். ஆனால், நாங்கள் மீண்டு வந்தோம். ஆட்டத்தை மிகவும் கடினமான சூழலுக்குத் திசை திருப்பினோம். இந்தப் போட்டி, நிறைய உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்தது. இறுதியில் மிகவும் கடுமையாகத் தோற்றுவிட்டோம்,” எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்ஷாம்ப்ஸ். அவர் கூறியதைப் போலவே, 80, 81வது நிமிடங்களில் இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில், வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய வகையில் இந்த இறுதிப்போட்டியை மாற்றிய தருணம் அது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள் இரண்டாவது கூடுதல் நேரத்தின் இறுதியில் எம்பாப்பே உருவாக்கிய கோல் வாய்ப்பு மூலம், அங்கேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டியது. கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அதைத் தடுத்து காப்பாற்றினார். அங்கு மட்டுமின்றி, அவருடைய செயல்பாடு பெனால்டி ஷூட் அவுட்டிலும் அபாரமாக இருந்தது. அர்ஜென்டினா விடவில்லை. இறுதிவரை அவர்களுடைய அனைத்து திறனையும் செலுத்தினார்கள். இந்த வெற்றி அவர்களுடைய 36 ஆண்டுக்கால கனவு, அதைத் தவறவிட மாட்டோம் என்ற உறுதியை, அணியிலிருந்த ஒவ்வொருவரின் ஆட்டமும் காட்டியது. அதற்கான பரிசுதான் இந்தக் கோப்பை. https://www.bbc.com/tamil/articles/c4ne1qz8n1qo
  15. மெஸ்ஸிக்கு பெனால்ட்டி வாய்ப்பளித்த டெம்பாலே இணையத்தில் தூற்றப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 18 டிசம்பர் 2022, 19:26 GMT புதுப்பிக்கப்பட்டது 18 டிசம்பர் 2022, 19:29 GMT மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களின் கன்னங்கள் நிச்சயம் கண்ணீரால் நனைந்திருக்கும். அவ்வளவு சிறப்பாக தொடங்கிவிட்டு கோப்பையோடு முடிக்காவிட்டால் அர்ஜென்டினாவுக்கு அதைவிட சோகம் வேறு ஏதும் இல்லை. ஆனால் அப்படி நடக்கவிடவில்லை மெஸ்ஸியின் படை. என்ன ஒரு இறுதிப்போட்டி என காண்போரை ஆச்சரியக் கடலில் மூழகடித்துவிட்டது நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்தின் இறுதி யுத்தம். 3 - 3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்த ஆட்டத்தை 4 - 2 கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது அர்ஜென்டினா. தனது கடைசி உலகக்கோப்பை தொடருக்கு 'உலகக்கோப்பை'யுடன் முடிவுரை எழுதியிருக்கிறார் நட்சத்திர நாயகன் மெஸ்ஸி. மெஸ்ஸிக்கு பெனால்டி வாய்ப்பளித்த பிரான்ஸ் வீரர் டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே செய்த மிகப்பெரிய தவறில் இருந்துதான் அர்ஜென்டினாவின் கை ஓங்கத் தொடங்கியது. 23வது நிமிடத்தில் டெம்பாலேவின் தவறால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. அதை அற்புதமாக கோலாக மாற்றினார் மெஸ்ஸி. அர்ஜெண்டினா ஒரு கோல் முன்னிலை வகித்தபோதும் பிரான்ஸிடம் பெரிய எதிர்வினை ஒன்றும் தென்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பிரான்ஸ் மேலாளர் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே தவறிழைத்த டெல்பாலேவையும் கிரைவுடையும் வெளியேற்றி மாற்று வீரர்களை களத்திற்குள் அனுப்பினார். சமூக ஊடகங்களில் தூற்றப்பட்ட டெம்பாலே யார்? Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 80வது நிமிடம் வரை பிரான்ஸ் 2 கோல்கள் பின் தங்கியிருந்தது. ஏறத்தாழ அர்ஜென்டினாவின் வெற்றி உறுதி என்று நம்பிய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கிவிட்டனர். அதே சமயம், பிரான்ஸ் ரசிகர்கள் டெம்பாலேவை கடுமையாக விமர்சித்தனர். 25 வயதான டெம்பாலே மெஸ்ஸியுடன் இணைந்து பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார். தற்போதும் அவர் அந்த அணிக்காக விங்கராக செயல்பட்டு வருகிறார். மெஸ்ஸி பல முறை தனக்கு நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் என டெம்பாலேவே கூறியுள்ளார். இந்த நிலையில் டெம்பாலே மெஸ்ஸி இருவரும் ஒன்றாக உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிரான்ஸ் ரசிகர்கள் கடுமையாக அவரை சாடினர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 அடுத்த GOAT எம்பாப்வேவா? பட மூலாதாரம்,GETTY IMAGES முடியாது என்பதை முடித்துக் காட்டுவதில் கில்லியாகவே செயல்பட்டிருக்கிறார் எம்பாப்வே. 2 நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை பதிவு செய்து அர்ஜெண்டினாவுக்கு மெகா ஷாக் கொடுத்த எம்பாப்வே அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என இறுதி ஆட்டத்தில் மொத்தம் 4 கோல்களை அடித்து ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. வரலாறு படைத்து விடைபெறுகிறார் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இறுதிப்போட்டியே எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என மெஸ்ஸி தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வரலாற்று வெற்றி அவரது ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்திருக்கும். பெனால்டி ஷூட் அவுட் உள்பட இன்றைய ஆட்டத்தில் 3 கோல்களை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பெருமை மெஸ்ஸியை சாரும். இன்னும் எத்தனை உலகக் கோப்பை தொடர்கள் வந்தாலும் பிரான்ஸ் - அர்ஜெண்டினா; மெஸ்ஸி - எம்பாப்வே இடையிலான இந்த இறுதியுத்தம் கால்பந்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். https://www.bbc.com/tamil/articles/c1dg4x0p3d0o
  16. அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையே நடந்த நம்பமுடியாத உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய அனைத்து விவாதங்களும் லியோனெல் மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பேவுக்கு இடையிலான போட்டியாக இருக்குமென்றே கூறப்பட்டது. அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும், நேற்றைய போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா அணியிலிருந்த மற்றொருவரின் பெயரும் பேசுபொருளானது. 120 நிமிடங்களில், 3-3 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. அதைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றியடைந்தது. திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமிகுதி ஆகியவை நிரம்பிய இந்தப் போட்டியில், அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ். அவருக்கு 'கோல்டன் கிளவுஸ்' விருது கிடைத்துள்ளது. அர்ஜென்டினாவின் வீரர்கள் தங்கள் நான்கு முயற்சிகளையும் நிதானமாக கோலாக்கினார்கள். அவர்கள் தங்களுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், மார்ட்டிஎன்ஸ் பிரெஞ்சு ரசிகர்களின் இதயங்களை உடைத்துவிட்டார். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்9 மணி நேரங்களுக்கு முன்னர் அவ்வளவுக்கும் அதை அவர் கூலாக செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது. இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டின்போது, அவர்மீது தான் அதிக அழுத்தம் இருந்தது. சொல்லப் போனால், அவர் கைகளில் தான் அர்ஜென்டினாவுக்கு வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கும் தருணமே இருந்தது. ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிரணி வீரர்கள் ஒவ்வொரு முறை பெனால்டி ஷாட் அடிக்க வந்தபோதும் அவர் ஆடிய ஆட்டம் பிரான்ஸை அச்சுறுத்தியது. எம்பாப்பே போட்டியின் நடுவிலேயே மார்ட்டினெஸுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்திருந்தார். ஆகவே கடைசியிலும் ஷூட் அவுட்டை தொடக்கி வைத்த எம்பாப்பே, அதை கோலாக்கியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. வெற்றிக் கனியை நெருங்க உதவிய மார்ட்டினெஸ் அந்த கோலையும் கூட கைக்கு எட்டும் தூரத்தில், மார்ட்டினெஸின் தடுப்பு முயற்சியின்போது அவர் கைகளில் பட்டு உள்ளே சென்றது. அவர் எடுத்த அந்த முயற்சியே பிரான்ஸ் அணியினரைக் கலங்க வைத்திருக்க வேண்டும். எம்பாப்பே கோல் அடித்திருந்தாலும், அதைத் தடுக்க அவர் எடுத்த முயற்சியிலேயே போட்டியின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிங்ஸ்லி கோமன், ஷாட் அடிக்க வந்தபோது, அவருடைய அமைதியை மார்ட்டினெஸின் கூலான ஆட்டமும் அமைதியான அணுகுமுறையும் குலைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரேலியன் சூயிமென்னி, அடுத்ததாக அவருடைய கோல் வாய்ப்பை எடுக்கச் சென்றபோது, அதையும் தவிடுபொடியாக்கினார் அர்ஜென்டினாவின் அந்த உயரமான கோல் கீப்பர். இந்த இடத்தில், மார்ட்டினெஸின் உடல் அமைப்பும் அவருக்கு நன்றாகவே உதவியது. அவரால் கோல் போஸ்டுக்குள் நன்கு இடதும் புறமும் வேகமாக நகர்ந்து, பெரிதாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் செயல்பட முடிந்தது. மார்ட்டினெஸ் பெனால்டி ஷூட் அவுட் கோல்களை தடுக்கும்போது, ஒரு நடனம் ஆடுவார். அந்த நடனம் ரசிகர்களுக்கு வெற்றிக் களிப்பைக் கொடுக்கும் அதேநேரத்தில், எதிரணிக்கு கலக்கத்தையும் கொடுக்கக்கூடியது. ஏனெனில், அந்த நடனத்தில், “யாராக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன்” என்ற நம்பிக்கை பிரதிபலிக்கும். கோமன், சூயிமென்னி ஆகியோரின் கோல்களை அவர் தடுத்தது, அதுவரை சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு போல் இருந்த அர்ஜென்டினாவின் வெற்றியை, உண்மையாகவே மிக அருகில் கொண்டு சென்றது. அவர்களைத் தொடர்ந்து கோலோ முவானி அடுத்த பெனால்டியை கோல் அடித்திருந்தாலும்கூட, அதற்கு அடுத்ததாக அர்ஜென்டினா தரப்பில் கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டி கோலின் மூலம் அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES அரவணைத்த மெஸ்ஸி இங்கிலாந்தின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜெர்மைன் ஜெனாஸ், “பிரான்ஸ் ஷூட் அவுட்டில் ஷாட் அடிக்க முயன்ற போதெல்லாம், அவர்களுடைய முயற்சியின்மீது மார்ட்டினெஸ் உளரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். “எமிலியானோ மார்ட்டினெஸ், மிகவும் நேர்மறையான நபர். அவர் தமது அணியிடம் சில பெனால்டிகளை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்” என்று கூறினார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி. இந்த இடத்தில் நெதர்லாந்துக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டை நினைவுகூறியாக வேண்டியது அவசியம். அன்றிரவு, காலிறுதிப் போட்டியில் ஷூட் அவுட் வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லௌடாரோ மார்ட்டினெஸ் கடைசியாக வெற்றிக்கான கோலை அடித்தார். அப்போது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக லௌடாரோவை நோக்கி ஓடினார்கள். ஆனால், மெஸ்ஸி மட்டும் வலது பக்கமாக, கோல் போஸ்டை நோக்கி ஓடினார். அங்கு, லுசைல் மைதானத்தின் ஒரு முனையில், டை-பிரேக்கரில் நெதர்லாந்தின் இரண்டு கோல்களை, இடதும் வலதுமாகப் பறந்து பறந்து தடுத்த கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அங்கு தரையில் கிடந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெஸ்ஸி ஓடிச் சென்று அவரைத் தூக்கி அரவணைத்து, தனது பாராட்டுகளையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய பெயர் அன்றே எதிரணிகளின் காதுகளுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இது மெஸ்ஸியின் கனவு. மார்ட்டினெஸின் கனவு. மார்ட்டினெஸை பொறுத்தவரை, இறுதிப்போட்டிக்கான இந்த ஓட்டம் மிகவும் எதார்த்தமானது. ரஷ்யாவில் நடந்த கடைசி தொடரில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாக் அவுட் செய்து வெளியேற்றியது. அப்போதே மார்ட்டினெஸ் தனது சகோதரரிடம் 2022 உலகக் கோப்பையில் நான் இதற்கு பதிலடி கொடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். நேற்று 'கோல்டன் கிளவுஸ்' விருது பெற்றவுடன் அதை வைத்து எமிலியானோ மார்ட்டினெஸ் காட்டிய சைகையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அது மரியாதைக்குறைவான செயல் என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு யார் இந்த எமிலியானோ மார்ட்டினெஸ் 2010ஆம் ஆண்டில், மார்ர்டினெஸுக்கு ஆர்சனலில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு இருந்தது. அப்போது தொடங்கி அவருடைய வாழ்வில் பல தடைகளைத் தகர்த்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES எமிலியானோ மார்ட்டினெஸ், ஜூன் 2021இல் தான் முதன்முதலாக அர்ஜென்டினாவுக்காக விளையாடினார். முந்தைய இரண்டு சீசன்களில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா ஆகிய கிளப்புகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினாவின் வெற்றியில் அவருக்குப் பெரும் பங்குண்டு. 2020ஆம் ஆண்டில், எமிரேட்ஸின் எஃப்.ஏ கோப்பையை ஆர்சனல் அணி வென்றபோது, அவர் கோல் கீப்பராக அணிக்கு அளித்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. 17 வயது இளைஞராக கிளப்பில் சேர்ந்து, அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2021-22 சீசன் தொடங்கவிருந்த நேரத்தில் அவர் ஆஸ்டன் வில்லா அணிக்குச் சென்றார். அங்கு அவர் தனது இடத்திற்காக யாருடனும் சண்டையிடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வகைகளில் தனது திறமையைக் காட்டியவர், அங்கு மிக முக்கிய வீரராகத் திகழ்ந்தார். ஷூட் அவுட்களில் அவர் மிகவும் திறமையாக இருக்க ஒரு காரணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் தொடர்ந்து பெனால்டி ஷாட் அடிக்க வைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பல ஷாட்களை எதிர்கொள்வார். மேலும் 2021 கோபா அமெரிக்கா அவரை ஒரு ஹீரோவாக மாற்றியது. கொலம்பியாவுக்கு எதிரான அரையிறுதி ஷூட் அவுட்டில் மூன்று முறை கோல் முயற்சியைத் தடுத்து, அணியைக் காப்பாற்றினார். அவருடைய நுணுக்கங்கள் இந்த முறையும் அர்ஜென்டினா அணிக்குப் பேருதவி புரிந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c84pz5jq5yzo
  17. மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி நாற்பது நிமிடங்களை ஆக்கிரமித்திருந்தவர் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே. ஒரே பக்கமாகச் சென்று கொண்டிருந்த போட்டியை இழுத்துப் பிடித்து பிரான்ஸின் பக்கம் கொண்டுவந்தவர் அவர். போட்டியை மாற்றுவதற்கு அவருக்கு இரண்டே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன. 80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் ஒரு கோலும், 81-ஆவது நிமிடத்தில் மற்றொரு மின்னல் வேக கோலும் அடித்து பிரான்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்தார். அந்த இரு நிமிடங்களில் 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி, அர்ஜென்டினா அணி ரசிகர்களின் மனங்களில் நினைவுக்கு வந்திருக்கும். அந்தத் தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 மெஸ்ஸி அதிர்ந்தது முதல் ரொனால்டோ அழுதது வரை கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 சம்பவம்18 டிசம்பர் 2022 19 வயது வீரராகக் களமிறங்கினார் எம்பாப்வே. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றியைத் தேடித் தந்தார் எம்ப்பாப்வே. கத்தார் இறுதிப் போட்டியிலும் எம்பாப்பேவை பொறுத்தவரை, இரண்டாவது பாதி ஆட்டம் அப்படித்தான் இருந்தது. கடைசி நொடி வரை எம்பாப்வே பிரான்ஸுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிரான்ஸ் வீரர்களின் விட்டுவிடாத மன உறுதியையும் எம்பாப்பேயின் ஹாட்ரிக் கோல்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு மின்னல் வேகக் கோல் 80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்த எம்பாப்பேக்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எதிர்பாராத வகையில் மெஸ்ஸியிடம் இருந்து பந்தைப் பறித்து பிரான்ஸ் வீரர்கள் அதை கோலை நோக்கிக் கொண்டு வந்தார்கள். பெனால்ட்டி பாக்ஸுக்கு சற்று உள்ளேயிருந்து மிகத் துல்லியமாகவும் அதி வேகமாகவும் கோலுக்குள் அடித்தார் எம்பாப்பே. ஓடியபடியே சாய்ந்த நிலையிலும் அவரது தாக்குதல் மிகவும் வலிமையாக இருந்தது. சுமார் 90 நொடிகள் இடைவெளியில் அவர் அடித்த இரண்டு கோல்களும்தான் பிரான்ஸ் அணி போட்டியில் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன. போட்டியை பெனால்ட்டி ஷூட் அவுட் வரைக்கும் அவர்தான் எடுத்துச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES எம்பாப்பேயின் சாதனைகள் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது. போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்த சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார். போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 23 வயதில் ஜாம்பவான்களை முந்தியவர் 23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13. https://www.bbc.com/tamil/articles/cl4g0zd425eo
  18. உக்ரேன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி : அமெரிக்க சிஐஏ பாராட்டு By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 12:01 PM உக்ரேன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார். உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு சாதகமானவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் பேசும்பொருளானது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கவலைகள் தெரிவித்தன. இந்நிலையில்தான் ரஷ்யா அணு அயுதங்களைப் பயன்படுத்தும் முடிவில் இருந்து மாறியதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி புட்டினிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரேன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷ்யர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் மற்றும் உக்ரேன் போரின் சூழலில் உலகளாவிய பேரழிவைத் தவிர்த்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் போது உக்ரேனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக இந்தியா பலமுறை எச்சரித்துள்ளது. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய ஜனாதிபதியிடம் மோடி தொடர்ந்து வலியுறுத்தினார். இது உலகளாவிய பேரழிவு ஏற்படுவதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும் தங்கள் கவலைகளை எழுப்பியிருந்தனர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நான் கருதுகிறேன் என்று பர்ன்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, ஏனெனில் புட்டின் முன்னதாக அதிகரித்து வரும் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பற்றி எச்சரித்திருந்தார். அணு ஆயுதப் போருக்கு எதிராக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் ரஷ்ய போராடும் என்று புட்டின் எச்சரித்திருந்தார். அமெரிக்க சிஐஏ தலைவரின் கருத்துக்கள் உக்ரேன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மற்றொரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/143502
  19. அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 9 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் மெஸ்ஸிக்கும் ரசிகராக இருந்தால் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது உங்கள் இதயத்துடிப்பு ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப் போன்று இருந்திருக்கும். சென்னை ராயபுரத்தில் அகலத் திரையில் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஸ்ஸி ரசிகர், தாம் போட்டியின் இரண்டாம் பாதியில் விக்கித்து அழுது கொண்டிருந்ததாகச் சொன்னார். கத்தாரின் லூசாய்ல் மைதானத்தில் இருந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அர்ஜென்டினா ரசிகர்கள் மாத்திரமல்ல, பிரான்ஸின் அதிபரே மைதானத்தில் சிறுபிள்ளையைப் போலக் குதிப்பதும் பின்னர் சோகத்தில் கலங்குவதுமாக இருப்பதைத் தொலைக்காட்சித் திரையில் காண முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்தார் எம்பாப்பே அர்ஜென்டினாவின் 3 வெற்றிகளும் 2 தோல்விகளும் அர்ஜென்டினா இந்தப் போட்டியில் மூன்று முறை வெற்றி பெற வேண்டியிருந்தது என்றே சொல்லலாம். போட்டியின் பாதியில் இனி தோல்விக்கு வழியில்லை என்றே அர்ஜென்டினா ரசிகர்கள் வந்திருப்பார்கள். ஆனால் இரண்டே நிமிடத்தில் எம்பாப்பே அந்தக் கனவைச் சிதைத்துவிட்டார். அடுத்தாக கூடுதல் நேரம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது மெஸ்ஸி கோல் அடித்ததும் கோப்பை கைக்கு வந்துவிட்டதாகவே அர்ஜென்டினா ரசிகர்கள் கருதியிருப்பார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் கோல் அடித்த அதே எம்ப்பாப்பே மீண்டும் அர்ஜென்டினாவை தோல்வியை நோக்கித் தள்ளிச் சென்றார். கடைசியாக பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. இந்த முறை அர்ஜென்டினாவுக்கு நல்வாய்ப்பாக, எம்பாப்வே போன்று வேறு யாரும் கனவைக் கலைக்க வரவில்லை. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையை கைகளில் ஏந்தும் வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 120 நிமிட ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி இருந்தது? ஆட்ட நேரம் முடிந்து, கூடுதல் நேரமும் முடிந்த பிறகு, இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள். அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே இருந்தது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது. உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார். முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே. அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது. எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது. மற்றொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இரண்டே நிமிடங்களில் ஒட்டுமொத்த போட்டியின் நிலைமையை மாறிப்போனது. பிரான்ஸின் வசம் போட்டி வந்தது. அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் எம்பாப்பே அர்ஜென்டினாவின் கோல் எல்லைக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். அதையும் கோலாக்கி இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES டி மரியாவின் அற்புத ஆட்டம் அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது. ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார். பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். https://www.bbc.com/tamil/articles/c4nk1505d6vo
  20. போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி. முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
  21. சாப்டரின் கொலையாளி பிரையன் தோமசிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி - வெளியானது அதிர்ச்சி தகவல் By RAJEEBAN 19 DEC, 2022 | 11:22 AM வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையாளி என கருதப்படும் நபர் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசிற்கு சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பொரளை கனத்த மயான பகுதியிலிருந்து சாப்டர் கொல்லப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர் என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சாப்டரை கொலை செய்தவர் இந்த குறுஞ்செய்தியை சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசிற்கு அனுப்பியுள்ளார் என கருதப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை விசாரணைகளின் போது சம்பவம் நடந்த அன்று சாப்டரின் கார் நேரடியாக அவரின் வீட்டிலிருந்து கனத்தமயானத்திற்கு வந்தமை தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பில் பல ஆச்சரியமளிக்கும் விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளவர்கள் பல ஆச்சரியமளிக்கும் விடயங்களை வெளியிட்டுள்ளனர். எங்களிற்கு கிடைத்துள்ள பல தகவல்களை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/143501
  22. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள். அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது. உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான். 2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார். மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்17 டிசம்பர் 2022 மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா?17 டிசம்பர் 2022 கோபப்பட்ட மெஸ்ஸி... வைரலான வீடியோ - பின்னணி என்ன?13 டிசம்பர் 2022 முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எமிலியானோ மார்ட்டினெஸ் அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது. எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது. ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார். ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது. அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது. ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார். பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். அர்ஜென்டினாவின் முதல் கோல் 23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது. இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது. மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார். ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது. டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார். அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். டி மரியா அடித்த 2ஆம் கோல் அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார். மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது. அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது. அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள். உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார். பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது. இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. படக்குறிப்பு, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது. இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும். https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo
  23. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள். அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது. உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான். 2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார். மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்17 டிசம்பர் 2022 மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா?17 டிசம்பர் 2022 கோபப்பட்ட மெஸ்ஸி... வைரலான வீடியோ - பின்னணி என்ன?13 டிசம்பர் 2022 முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எமிலியானோ மார்ட்டினெஸ் அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது. எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது. ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார். ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது. அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது. ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார். பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். அர்ஜென்டினாவின் முதல் கோல் 23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது. இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது. மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார். ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது. டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார். அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். டி மரியா அடித்த 2ஆம் கோல் அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார். மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது. அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது. அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள். உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார். பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது. இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. படக்குறிப்பு, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது. இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும். https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.