Everything posted by Kapithan
-
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
@alvayan அட அப்பிரண்டீசுகளா ! 🤦🏼♂️ மேலே கொடுக்கப்பட்டது ஒரு ஆய்வுக் கட்டுரை. அதைச் செய்தது ஆய்வாளர்கள். கட்டுரையை இணைத்தது ஏராளன், கட்டுரைக்கான மூலத்தை இணைத்தது கப்பித்தான். அம்புட்டுதே. ஆய்வுக் கட்டுரை பிழையென்றால் அதை நிறுவுங்கள். அதை விடுத்து அம்பை நோவதால் ஒரு பயனும் இல்லை.
-
தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
மீரா, திரு பிரபாகரனின் கூற்றை அவர்தான் கூறினார் என்று கூறுவதற்கும் நான் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றுவதற்கும் என்ன தொடர்பு? இது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வேலை. திரு பிரபாகரன் அவர்களின் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியதை திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியதாக தாங்கள் கூறியபோது அந்த வழுவை உங்களின் ஒரு தவறான புரிதல் என்பதாக மட்டுமே பார்த்தேன். ஆனால் பத்திரிகையாளர் மாநாட்டில் திரு பாலசிங்கம் அவர்கள் ஆலோசகராகச் செயற்பட்டு அதன் அடிப்படையில் திரு பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனையின் ஒரு தொடரை (திரையில் பார்த்த பின்னரும்) திரு அன்ரன் பாலசிங்கத்தின் கூற்றாகத் தாங்கள் கூறுவது ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதுடன் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வீம்புக்கு நிற்கிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
https://www.cell.com/iscience/pdf/S2589-0042(23)01874-6.pdf Reconstructing the population history of the Sinhalese, the mmajor ethnic group in Sri Lanka Highlights Higher West Eurasian genetic component in Srı Laṅka than South India A strong gene flow beyond the boundary of ethnicity and language in Srı Laṅka Traces of common roots of Sinhala with Maratha Singh et al., iScience 26, 107797 October 20, 2023 a 2023 The Authors. https://doi.org/10.1016/ j.isci.2023.107797 iScience ll OPEN ACCESS Ar ticle Reconstructing the population history of the Sinhalese, the major ethnic group in Sri Lanka SUMMARY The Sinhalese are the major ethnic group in Srı Laṅka, inhabiting nearly the whole length and breadth of the island. They speak an Indo-European language of the Indo-Iranian branch, which is held to originate in northwestern India, going back to at least the fifth century BC. Previous genetic studies on low-resolution markers failed to infer the genomic history of the Sinhalese population. Therefore, we have performed a high-resolution fine-grained genetic study of the Sinhalese population and, in the broader context, we at- tempted to reconstruct the genetic history of Srı Laṅka. Our allele-frequency-based analysis showed a tight cluster of Sinhalese and Tamil populations, suggesting strong gene flow beyond the boundary of ethnicity and language. Interestingly, the haplotype-based analysis preserved a trace of the North Indian affiliation to the Sinhalese population. Overall, in the South Asian context, Srı Laṅkan ethnic group
-
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்
எனக்கு I science ன் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் வந்துவிட்டது. 🤣
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இந்தியா மீதான ஈழத் தமிழரின் வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் செயற்பாடாக இது இருக்கப்போகிறது. Inferiority complex ஆல் பீடிக்கப்பட்டு, வர்ணாசிரம வேறுபாட்டால் நிரம்பி, தற்பெருமை தலைக்கேறி, ஜெய்சங்கர் போன்ற குறைகுடங்களால் ஆட்டம் போடும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், ஈழத் தமிழரின் இந்தியா மீதான வெறுப்பைக் கண்டு கொள்ள சாந்தனின் மரணம் ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது இருக்கிறது. இலங்கையில் உள்ள எந்த ஒரு இனமும் (சில RSS பதர்களைத் தவிர) இந்தியாவை நம்பாது என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்டுகொள்ளும். அது என்ன முன்னாள் போராளி? ஆளாளுக்கு கற்பனைக் குதிரைகளைத் தட்டி விடுகிறார்கள்,.😏
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
100% ✅
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
மறைந்த திரு சாந்தன் அவர்களுக்கு ஈழத் தமிழரால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குச் சொல்லும்/சொல்லப்போகும் செய்தி என்ன?
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
காந்தி ஒரு சோதனைக் கூடம் 🤣
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
விசுகருக்கு தொப்பி அளவு போல,.... கோபம் வருகிறது? 😀 (யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை ) என மேலே குறிப்பிட்டிருப்பதை விசுகர் கவனிக்கவில்லையோ? ReeCha வின் முதலீட்டில் உங்களுக்கு பிடித்த விடயம் என்ன?
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
இலங்கையில் முதலீடு செய்து அதனூடாக எமது பிடியை ஏற்படுத்த வேண்டும் என நான் கூறி வருவதற்கு எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் இலங்கை அரசின் முகவர். ஆனால் LYCA, BK எனும் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு செய்யும்போது அதைக் கொண்டாடுகிறார்கள். இந்த முரண்பட்ட மனநிலையை என்ன சொல்வது? ஏதேனும் நோயாக இருக்குமோ? 🤨 (யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை )
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
தலைவரின் தாயாருக்கு மருத்துவம் செய்ய மறுத்த இந்தியாவிடம் கருணையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ☹️ காந்தி ஜப்பானிய ஸ்ரைலில் உடையணிந்திருக்கிறார். என்ன விடயம்? ஜப்பானியர் தற்கொலை செய்துகொள்வதற்கும் இப்படி உடையணிவார்கள் 😀 இந்திய காந்தியவாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளது 😀
-
ஈழத்தமிழர்களை இந்தியா மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறதா?
ஈழத்தமிழர்களைஇந்தியா மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறது. இதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா?
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
சட்டம் ஒருபோதும் சாமானியர்களுக்காக பிரயோகிக்கப்படவில்லை. சட்டம் எப்போதும் சாமானியர்கள் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகவும், முடியாத பட்சத்தில் அவர்களை அதே சட்டத்தைக் கொண்டே ஒடுக்குவதற்காகவும் அதிகார வர்க்கத்தால் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வரலாறு. இந்தியா என்றால் துரோகம், துரோகம் என்றால் இந்தியா. இதுதான் உண்மை. 😡
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை
தமிழரசுக் கட்டியினை யாப்பினடைப்படையில், ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சனநாயக அரசியல் நிறுவனமாக, வெற்றிகரமாக இயங்க வைப்பதற்கான அரிதாகக் கிடைத்த ஒரு சந்தர்பம் இது. பயன்படுத்துவார்களா?
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! … கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை!!
RSS, சச்சியர் தோற்றார்கள் போங்கள் 🤣
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இலங்கை வந்தாலோ அல்லது அவர்களை சிறப்பு முகாமிலிருந்து சுதந்திரமாக நடமாட வெளியே விட்டாலோ இந்தியாவின் வண்டாவாளங்கள் எல்லாம் வெளித்தெரிய ஆரம்பிக்கும். எனவே அவர்களை உள்ளே வைத்திருந்து அப்படியே கொல்லுவதுதான் இந்தியாவுக்குள்ள ஒரே தெரிவு. ☹️
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை காலத்தால் அழியாது என்பது உண்மையே. ஆனால் அதை மட்டும் கூறிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்?
- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ராஜீவ் காந்தி படுகொலை: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது என்ன..? ரா.அரவிந்தராஜ் பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு அரசியல் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக, கொலைச் சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணைக்குழுக்களும் விடுதலைப்புலிகளைத் தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன. ராஜீவ் காந்தி ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை. பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:- 2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சின்னச் சின்ன பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரபூர்வமான மிகப்பெரிய ஊடகச் சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டுவந்த புலிகள், முதன்முறையாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர். பிரபாகரன் அந்த ஊடகச் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. (குறிப்பு: சில கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் எனக் கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்: 1). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பது பற்றி..? பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப் பற்றி ஒரு கருத்தைக் கூற முடியாதவர்களாக இருக்கிறோம். 2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப்படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா? பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப் பற்றி நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன் 3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து? ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் `உணர்வுப்பூர்வமான, முக்கிய பிரச்னை’ (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார். தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்தக் கட்டத்தில் இது குறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை. https://www.vikatan.com/amp/story/government-and-politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination சாறி பாஸ்,......... 🤣
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதை எத்தனை காலத்திற்கு கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தாங்கள் என்னைத் துரோகி என்று கூறினால் அது என்னைக் காயப்படுத்தாது. உங்கள் உழைப்பும, நோக்கமும், 2009 ன் பின்னரான வருத்தமும் என்னால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் மற்றவர்கள் என்னைத் துரோகி எனக் கூறினால் அதை நான் எனது கால் தூசுக்குக் கூடப் பொருட்படுத்தப்போவதில்லை. ஒருகணம் யோசித்துப் பாருங்கள், இந்தத் திரியில் மட்டும் எத்தனை பேருக்குத் துரோகி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது? பலன் ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதைக் கூறியது அன்ரன் பாலசிங்கம் அல்ல, தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சகோதரப் படுகொலைகள், துரோகிகள் என்கிற பெயரில் நடைபெற்ற படுகொலைகள் என்றவுடன் தங்களுக்கு விபு க்கள் மட்டுமே நினைவிற்கு வருகிறது என்றால் தாங்கள் 85 களின் பின்னர் பிறந்தவர் என்று அர்த்தம். நீங்கள் சொல்வது உண்மைதான் விசுகர். வெளிநாடுகளிற்கு வந்து பல தசாப்தங்களைக் கடந்தும் நாகரீகமடைந்த சமூகங்களின் மேன்மையான பண்புகளை உள்வாங்காது தற்போதும் கொலைகளை வீம்புக்கு ஆதரிக்கும் மனநிலையில் இருக்கும் பலரின் முகங்களை அடையாளம் காண இந்தத் திரி உதவியது நல்லதே.