Jump to content

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1319
  • Joined

  • Days Won

    4

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. அதை விட டபிள் றிபிள்.. சவுத்கோல் ஹைஸ் பக்கம் போனா கவுன்சிலே றோட்டில லைட் எல்லாம் கட்டி தீபாவளி கொண்டாடும்.. என்னடா குஜராத்தில நிக்கிறமா எண்டு நினைப்பு வரும்..
  2. ஆட்டுபவர்கள் யாரென்று தெரியாமலா அருணா ஆடியவர்.. அருணா ஒன்றும் விரல் சூப்பும் பேபி அல்ல.. அவருக்கு யார் யார் தன்னை தொடர்புகொண்டார்கள் என்னவெல்லாம் சொல்லி தன்னை இப்படி சொல்லவைத்தார்கள் என்று எல்லாம் தெரியும்.. தலைவர் குடும்பத்துக்கு களங்கம் வரவிடக்குடாது என்று உளமார அவர் நினைத்தால் அவர் ஒரு அறிக்கையிலையே அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி இந்த ஆட்டுவிப்பவர்களின் கதையை முடிக்கலாம்.. பத்து நாள் வாயையும் சூ** யும் மூடி பொறுத்திருந்து இப்ப சேரமான் துள்ளுவதன் காரணம் அருணா அக்கா யாரையும் காட்டிகுடுக்க மாட்டா எண்டு கன்பார்ம் பண்ண வெயிட் பண்ணி உறுதியாக தெரிந்தபின் ஆடுது அந்த ஆடு..
  3. அவர் எப்படியாவது இருந்திட்டுப்போகட்டும்.. அவர் என்ன தான் தான் பிரபாகரன் அல்லது துவாரக என் பின்னால் வாருங்கள் என்று சொல்லாதவரை அவர் எவராகவாவது இருந்திட்டு போகட்டும்.. அவரிடம் இருந்து எமக்கு தேவை அவர் அப்பாவின் டி.என்.ஏ.. அதை அவர் தர தயார் என்று சொல்லிவிட்டார்.. இப்ப உங்களுக்கு துவாரகா வாற என்று சொன்னவர்கள் மூலம் அவரின் ஒரு தலைமுடியை வாங்கி பொதுவெளியில் கொடுங்கள்.. தமிழ் ஒலிக்கு துவாராக வீடியோ வாங்கி கொடுத்தவர்களால் முடியையும் வாங்கி கொடுக்க முடியும் பாதுகாப்பு பிரச்சினை இல்லாமல்..
  4. எனக்கும் இதுதான் தோன்றியது இந்த நாவல் வெளிவந்த அந்த காலப்பகுதியிலேயே எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இருக்கவில்லை.. பாலியல் வல்லுறவு செய்த யாரையும் புலிகள் மன்னித்ததில்லை.. அது எந்தப்பெரிய *யிர் ஆக இருந்தாலும்.. அப்படி ஒருவேளை திருமணம் நடந்திருந்தாலும் பாலியல் வல்லுறவு பண்ணியவருக்கு வெடிவைக்க ரெடியான நேரத்தில் அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண் காலில் விழுந்து சுடாதையுங்கோ நான் இனி யாரையும் கட்டுவதை விரும்பவில்லை இவன் தான் எனக்கு இதை தந்தவன் அதனால் இவனையே கட்டி வையுங்கள் என்று பெற்றோரும் மன்றாடி இருந்தால் இப்படி நடக்க சான்ஸ் இருக்கு.. மற்றும்படி நெவர்.. அப்படி வெடி விழப்போற நேரத்தில் பெண்ணினதும் பெண் வீட்டாருனதும் வேண்டுதலில் கலியாணத்துக்கு ஓகே சொல்லி அந்த பெண்ணையே திருமணம் செய்து உயிர் தப்பி பிள்ளைகுட்டிகளோடு வாழும் ஒருவரை எனக்கு தெரியும்.. ஆனால் அவர் போராளி அல்ல.. பொது ஆள்.. இயக்கத்தில் லவ்பண்ணியவர்கள் உடல் உறவு வைத்திருக்கிறார்கள்.. அது இருவரும் விரும்பியே.. அதற்கு இருவருக்கும் பல மாதங்கள் பனிஸ்மெண்டும் பங்கரில் செய்திருக்கிறார்கள்..பிற்காலத்தில் இறங்கி வந்து இயக்கமே லவ் பண்ணியவர்களை சேவை மூப்பின் அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதி கொடுத்தது ஊர் அறிந்ததே.. ஆனால் பாலியல் வல்லுறவு செய்தவனை பெண்ணின் வேண்டுதல் இல்லாமல் இயக்கமே வில்லங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தது என்பது கொஞ்சம் ஓவர்..
  5. ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்.. குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍
  6. குடும்பகாரன் எனக்கென்ன விசரே வீட்டில சாப்படு இருக்க உதுகள மேய.. நானா பாக்கிரன் வாட்ஸ் அப் பேஸ்புக்குன்னு சும்மா சும்மா குருப்புவள்ள அட்பண்ணி வலுக்கட்டாயமா அனுப்புறாங்கள்.. மேற்கொண்டு விசாரணை செய்தால் உண்மை தெரியும்..😂
  7. முதல்ல ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெண்களை ஓவர் அக்டிங் பண்ணாமல் எடுக்க சொல்லுங்கள்..😡😡😡
  8. //இன்னொரு புறம் ஆச்சரியம் தரும் வகையில், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்களில் பலர் இப்போதைய மருத்துவத்துறை வரையறுப்புகளின்படி ஓட்டிசக் கூறுகளைக் கொண்டவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த காலம் ஓட்டிசம் என்ற பதமோ வரையறையோ பிரயோகத்தில் இல்லை. மாறாக அசாதாரணமான மனிதர்களாக அன்று அடையாளப்படுத்தப் பட்டனர். அயன்ஸ்ரைன், நியூட்டன், டார்வின், mad scientist என அழைக்கப்பட்ட நிக்கொலா ரெஸ்லாபோன்றவர்களை இந்தக் கூறுகளின் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாக சில ஆய்வுகள் வகைப்படுத்துகின்றன. இவர்களது சமூகத் தொடர்பாடல் தவிர்ப்பு, மொழிவழி தொடர்பாடல் குறைபாடு, நேராக முகங்கொடுத்து பேச முடியாமை என்ற ஓட்டிச பண்புகள்கொண்டவர்களாக இருந்ததால், இவர்கள் பாடசாலை கல்விமுறைஒழுங்குக்குள்கூட இணைய முடியாமல் அல்லது தொடர்ந்து பயணிக்க முடியாமல் தவித்தனர் என சொல்லப்படுகிறது. தமக்கான தனி உலகில் அவர்கள் வலம் வந்தனர். அதிக IQ இனைக் கொண்டிருந்த அவர்கள் மாபெரும் கண்டுபிடிப்புகளை படைப்பாக்கம் செய்து காட்டிய சாதனையாளராகவும் இருந்திருக்கின்றனர். // நன்றி கிருபன் இணைப்பிற்கு… நானும் ஓட்டிசம் குழந்தைகள் இருவரை கொண்டிருக்கிறேன்.. அவர்கள் இருவரின் நினைவாற்றல் மற்றும் iq வுக்கு முன்னால் சாதாரணகுழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாத நினைவாற்றலை கொண்டிருக்கிறார்கள்.. பாடங்களை நான் விளங்கப்படுத்தி புரியவைப்பதை விட படமாக பார்த்தால் உடனும் புரிந்துவிடுகிறார்கள்.. சிக்கலான பாடங்கள், கணக்கை கூட வாயால் சொல்லி விளங்கப்படுத்துவதை விட எழுதி காட்டினால் உடனும் புரிந்துவிடுகிறார்கள்.. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.. சாதாரண குழந்தைகளிடம் இந்த தன்மை வேறுபாடாக இருக்கிறது.. அவர்கள் பேச ஆரம்பித்தது மிக மிக தாமதாக நாலுவயதுக்கு அப்புறம்தான்.. அப்பொழுதுதான் எமக்கே புரிந்தது அவர்களுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ரம் இருக்கிறது என்று.. பெற்றோரான எம்மைத்தவிர மற்றவர்களால் அவர்கள் ஆட்டிசம் உள்ளவர்கள் என்று அடையாளம் காணமுடியாது.. சாதரண குழந்தைகள் போலவே இருப்பார்கள்.. இலேசில் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. அந்தந்த உடுப்பு அந்தந்த இடத்தில் இருக்கவேண்டும்.. செருப்பு அதன் இடத்தில் இருக்கவேண்டும்.. அந்த ரைமுக்கு சாப்பிடவேணும் தூங்கவேணும்.. இப்படி பல.. மற்ற குழந்தைகளுடன் சேருவதை விட தனிமையிலையே அதிகம் செலவளிக்க விரும்புகின்றனர்.. புதியவர்களுடன் இலகுவில் சேராமாட்டார்கள்.. இந்த நூலை எங்கு வாங்கமுடியும் கிருபன்..?
  9. துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி... // துவாரகாவின் பெயரால் நவம்பர் 27 (2023) அன்று வெளிவந்திருக்கும் வீடியோவில் இருப்பது துவாரகா அல்ல. நான் அறிந்தவரையில், இயக்கப் பணிகளில் இருந்த துவாரகா இறுதிப் போர்க்காலத்திலே தியாகச்சாவு அடைந்துவிட்டார். துவாரகா மற்றும் அவரது அப்பாவின் பெயர்களால் முன்னெடுக்கப்படும் 'மோசடி' நடவடிக்கைகள், கடுமையான கண்டனத்திற்குரியவை. அவை தனியாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை. துவாரகாவின் பெரியப்பாவின் மகன் (கார்த்திக் மனோகரன்) டென்மார்க் நாட்டில் இருக்கிறார். மரபணுப் பரிசோதனை மூலம் உண்மையான துவாரகாவை அடையாளம் காணக்கூடிய பொறிமுறைக்குத் தனது தந்தையும் தானும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். துவாரகா பெயரில் வரக்கூடியவர் யாராயினும், முதலில் மரபணுப் பரிசோதனை மூலம் தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. துவாரகா பெயரில் ஆள் மாறாட்டமும் அரசியல் மோசடியும் செய்யத் துணிபவர்கள், நம்பகத்தன்மை கொண்ட மரபணுப் பரிசோதனைக்கு உடன்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். குளறுபடிகள் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மரபணுப் பரிசோதனை முறைப்படியாக நடக்குமெனில், 'கூட்டுக் களவாணிகள்' அம்பலப்பட்டுவிடுவார்கள். துவாரகாவின் தியாகச்சாவு இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்துவிட்டதையோ அவரது குடும்பத்தினரின் பங்கேற்புடன் இறுதி நிகழ்வுகள் நடந்ததையோ அப்போது வெகு சிலரே அறிந்திருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் எவருமே இறுதிப் போரில் இருந்து தப்பிப்பிழைக்கவில்லை. ஆக, துவாரகாவோ அவரது குடும்பத்தினரோ இப்போது இல்லை இதை எழுதத்தொடங்கிய பின்னர், துவாரகாவை நன்கு அறிந்த, துவாரகாவின் அண்ணனோடு (சாள்ஸ் அன்ரனி) இயக்கப் பணிகளில் இறுதிவரை இருந்த, எனது நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் உரையாடினேன். வெற்றுச் சடங்குகளாகவோ அடையாள அரசியலின் வினைத்திறன் குன்றிய செயற்பாடாகவோ பொருளாதார வளங்களை வீணடிக்கும் கொண்டாட்டங்களாகவோ அஞ்சலி நிகழ்வுகள் அமைந்துவிடக்கூடாது. அஞ்சலி நிகழ்வுகளில், அரசியல் முதிர்ச்சியும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தேசிய ஒருமைப்பாடும் சனநாயகப் பண்புகளும் அவசியமானவை. உயிர்த்தியாகிகளை நினைவுகூர்ந்து அஞ்சலிப்பது, ஒருங்கிணைந்த 'விடுதலை அரசியல்' முன்னெடுப்புகளின் பகுதியாக அமைய வேண்டும். கடந்த காலத்தின் கசடுத்தனங்கள், போலி நம்பிக்கைகள், அடிப்படைவாத நிலைப்பாடுகள், இயக்க முரண்பாடுகள் போன்றவற்றைத் தொடர்ந்து காவியபடி விடுதலை அரசியல் வழியில் ஆரோக்கியமாக முன் நகர முடியாது. // மேலதிக இணைப்பு (2023-12-07) // வி பு தலைவரை நன்கு அறிந்திருக்கிறேன் என்பதால், அவரது உடல் சார்ந்த காட்சிகளைப் பார்க்க முடிந்த காலத்திலேயே அவரது மரணம் சார்ந்த உண்மைகளை என்னளவில் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது. அவர் இருப்பதாக வலிந்து பொய்களை விதைப்பவர்களும் அவற்றை நம்பக்கூடிய சுயசிந்தனை அற்றவர்களும் அவரை வைத்துப் பிழைப்பும் இழிவரசியலும் செய்ய முனைவோரும் பெருகியிருக்கும் நிலையில், மறுக்கவே முடியாத துல்லியமான ஆதாரங்களையும் தர்க்க நியாயங்களையும் சுய அனுபவங்களையும் முன்வைத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தி எடுத்துரைக்க வேண்டியுள்ளது. அவரது மரணம் தொடர்பான பல்வேறு தரவுகளையும் ஆவணங்களையும் நீண்டகாலமாகச் சேகரித்துவருகிறேன். கிடைத்திருக்கும் ஆவணங்களைப் பல்வேறு தரவுகளுடன் ஒப்பாய்வு செய்து மேலும் சில மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. இதுவரை யாரும் அறிந்திராத முக்கியமான சில புள்ளிகள் என்னிடம் உள்ளன. வருங்காலத்தில் வாய்ப்புள்ளபோது, வி பு தலைவரின் மரணம் தொடர்பான 'புலனாய்வு ஊடகவியல்' (Investigative Journalism) வகைப்பட்ட விரிவான ஆய்வை அறிக்கையாகவோ வீடியோப் பதிவாகவோ வெளியிட முடியும். ஊடகவியல் அறங்களின் அடிப்படையில் அது அமையும். எதுவும் தப்பாகிவிடக் கூடாது என்பதிற் கவனமாக இருக்கிறேன். இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், காயமடைந்திருந்த நான் தென் இலங்கைப் பகுதிகளில் இராணுவ வைத்தியர்களின் வைத்தியப் பராமரிப்பில் இருக்க நேர்ந்தது. அப்போது சில இந்திய வைத்தியர்களும் இருந்தார்கள். போரின் முடிவில் இராணுவத்தினராற் பதிவுசெய்யப்பட்டிருந்த போர்க்குற்ற ஆவணங்கள் பலவற்றை அப்போது பார்க்க முடிந்தது. இறுதிப் போரில் நான் ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருந்ததை எப்படியோ அறிந்திருந்த சிலர், தாமாகவே முன்வந்து பல்வேறுபட்ட பிரத்தியேகமான அவலக் காட்சிகளைக் கண்பித்தார்கள். அவற்றுள்ளே பிரபாகரனின் உடல் சாந்த காட்சிகளும் அடங்கியிருந்தன. வெவ்வேறு தரப்பினரால் வெவ்வேறு நிலைகளில் அவரது உடல் கையாளப்பட்டிருக்கக்கூடும். இராணுவ வைத்தியர்கள், அவரது தலையில் இருந்து சில பகுதிகளை எதற்காகவோ பிரித்தெடுத்துப் பாதுகாத்திருக்கிறார்கள். அது நடந்த பிறகுதான், வேறு தரப்பினரால் அவரது உடல் திரு. கருணாவுக்கும் திரு. தயாநிதிக்கும் வேறு ஊடகங்களைச் சார்ந்தவர்களுக்கும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. முழு நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை எப்போதாவது வெளிவரக்கூடும். இக் கட்டுரையினை எழுதி முடித்தபின்னர், இறுதிவரை மேல் மட்ட இயக்கப் பணிகளில் இருந்து போரின் முடிவில் இராணுவப் பாதுகாப்பில் இருந்துவிட்டு வந்த 'தம்பி' ஒருவர் என்னுடன் உரையாடினார். (மிக நீண்ட காலமாக என்னை நன்கு அறிந்தவர்.) ஒரு இராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசியில் இருந்து அவர் பார்த்த அந்தரங்கமான வீடியோப் பதிவைக் குறித்து விபரித்தார். அந்தக் கைத்தொலைபேசியின் வகை அவருக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அவரது வாக்குமூலமும் எனது அனுபவங்களும் ஆய்வுகளும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. வி பு தலைவரின் உடல் சார்ந்த மூன்று பிரத்தியேகமான படங்களை, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகர் ஒருவர் எப்படியோ பெற்றிருக்கிறார். முன் அறிமுகம் இல்லாத அவரைப் பல மாதங்களுக்கு முன்னரே தொடர்புகொண்டு உரையாடியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும், வி பு தலைவரின் மரணம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகிவிட்ட துன்பியல் நிகழ்வு. அவரது மரணம், இனி ஒருபோதும் மர்மமாக இருக்க முடியாது. // -அமரதாஸ்.(https://www.facebook.com/amara.thaas) இக் கட்டுரையினை பின்வரும் இணையத்தள இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். https://widevisionstudio.com/archives/3671
  10. மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் வழக்கு நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட மனுவில் கோரிக்கை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பிய நிலையில் குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணை… thanthi tv https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035jiByv1c7NswuBpDn9Jb2zwdgz3SgqHHLsLDNzrAkUi3Zc9hMHfEudhMPC5knWVSl&id=100080946342364T
  11. ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து போனவன் பூரா வெள்ளை.. ஜரோப்பிய கலாச்சாரத்தில் வாழ்ந்தவன்.. பிரித்தானியாவுக்கு கலாச்சார ரீதியில் பெரிய தொந்தரவு இருக்காது பிரித்தானியாவின் கலாச்சாரத்தோடு ஒன்றித்து வாழுவான்.. ஆனால் இது போய் இறங்கி இருக்கிறது பூரா முஸ்லீமும் சங்கியும் கருப்பினத்தவரும்.. அது வேற பிரிக்ஸிற்றை ஆதரித்த வலதுசாரி வெள்ளயளுக்கு வெந்த புண்ணில வேலப்பாய்ச்சினமாதிரி இருக்கும்.. வெளிய சொல்லவும் முடியாது.. வாய மூடி சத்தம் வெளிய வராம அழவேண்டியதுதான்..😂😂😂
  12. ஓம்.. என்ர கடைசி சகோதரம்.. ஊரில SLIATE ல HND எலெக்ரிக் அண்ட் எலெக்ரோனிக், Bsc எலெக்ரிக் அண்ட் எலெக்ரோனிக் என்ஜினியரிங் முடிச்சுட்டு லண்டனுக்கு வாற கனவில இருந்தவர்.. இப்ப மண்ணு விழுந்திட்டு.. அப்பவும் சொன்னான் மூடிட்டு இரு உன் படிப்புக்கு ஊரில நல்ல வேலை பாக்கலாம்.. வயல் காணி பூமி எல்லாம் இருக்கு.. படிக்கேக்கையே நான் சொன்னான் எல்லா சிலவும் போக எண்பதில இருந்து ஒரு லட்சத்துக்குள்ள மிச்சம் வருமெண்டா வெளிநாடு போகாத என் அனுபவத்தில சொல்லுறன்.. மிச்சம் அவ்வளவு வரும் எண்டா ஊர் பெஸ்ட் எண்டு.. HND அரசாங்கத்தில படிச்சது.. Bsc பிறைவேற்றா படிச்சது..HND படிக்கேக்க காற்றாலை மின்சார நிறுவனத்தில் வேலை.. HND முடிய இன்னொரு காற்றாலை நிறுவனத்தில் கூடிய சம்பளதோடு வேலை.. Bsc படிச்சு முடிய சிறிலங்கா ரெகிகொம்மில் வேலை.. போக்குவரத்து செலவுகூட இல்லை.. வாகனம் வீட்ட வந்து ஏற்றிக்கொண்டு போகும்.. வீட்டு வாடகை இல்லை சொந்த வீட்டில் இருந்து வேலைக்கு போவதால்.. A/L பொடியளுக்கு சனி ஞாயிறு zoom இல் கெமிஸ்றி,மற்ஸ் பிறைவேற் வகுப்பு எடுக்கிறவன்.. வயல், தென்னங்காணி வருமானம் வேறு.. நான் சொன்ன அமவுண்ட விட இன்னொரு மடங்கு மிச்சம் புடிக்கிறான்.. வெளிநாட்டில் நான் கூட உழைச்சு அவ்வளவு மிச்சம் புடிச்சது இல்லை.. இப்ப உணர்ந்து முடிவை மாற்றி இருக்கிறார்.. இலங்கை அரச பலகலைக்கழகம் ஒண்டில் MSc படி.. குறைஞ்ச செலவு வேற அரச டிகிறி வேற.. படிச்சு முடிச்சு மேல போய்க்கொண்டே இரு.. வெளிநாடு போய் வீணாப்போகாத எண்டு சொல்லி இருக்கிறன்… உழுற மாடு எங்கயும் உழும்.. (நான் அந்த நேரம் பிரச்சினையில் வந்தவர்களை சொல்லவில்லை.. ஆனால் இப்பவும் பிரச்சினை எண்டு சொல்லுறவையோட பேச ஒண்டும் இல்ல..) அங்கால கனடாவுக்கு விசிற் விசால போனவன் எல்லாம் திரும்பி ஓடுறான்.. மாணவர் விசால போறவங்கள்கூட 40 வீதத்தால சரிஞ்சிருக்காம்.. நாப்பது வீதம் என்பது பெரிய தொகை.. கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு: காரணங்கள் https://news.lankasri.com/article/indian-students-study-in-canada-has-dropped-1701845687#google_vignette அங்கால சுவிஸ் வேற திருப்பி அனுப்புது ஆக்களை சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். https://tamilwin.com/article/sri-lankan-repatriates-denied-refugee-asylum-switz-1701629243
  13. நீங்கள் வேற.. உது நடிப்பு.. போற ரீம் இல்ல.. உப்புடி எத்தின பேர பாத்தாச்சு.. சாகும் வரைக்கும் ஒவ்வொரு சாட்டை சொல்லிகொண்டு இருக்கிற ரீம்.. இப்பிடி கதை சொல்லிக்கொண்டு இருக்கிற ஆக்களை இப்ப எல்லாம் நான் கண்டுக்கிறதில்ல..
  14. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வார்டன்னா அடிக்க அவர் வருவாரு… வதே ஆகணும்.. ஏன்னா அது அவர் தலை விதி..😂
  15. நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்.. யார் ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் தலைவனினதும் போராளிகளினதும் மக்களதும் வாழ்க்கையயும் அதன் பாடுகளையும் போராட்டங்களையும் சுமந்த சிலுவைகளையும் எம் போராட்ட நினைவுகளையும் அடையாளங்களையும் யார் பேசிக்கொண்டிருந்தாலும் காவிக்கொண்டிருந்தாலும் அடுத்த சந்தத்திக்கு கடத்திக்கொண்டிருந்தாலும்… அவர்கள் தமது கட்சி அல்லது அமைப்பு சார் செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க நிதி உதவி என்று கேட்டால் கண்டிப்பாக என்னால் முடிந்த சிறு உதவியையாவது எம்மை நினைவுபடுத்துவதற்கு பிரதிஉபகாரமாக அவர்களை ஊக்குவிக்கும் முகமாக செய்வேன்.. இதை ஒரு ஊக்குவிப்பாக செய்வேன்.. அது அவர்களை மேலும் செயல்பட தூண்டும்.. ஆனால் இதுவரை என்னை யாரும் இந்தியா கட்சிகள் அமைப்புக்கள் நிதி உதவி கேட்டதில்லை.. இனிமேல் யாராவது கேட்டால் அவர்கள் எமக்காக பொதுவெளியில் குரல் கொடுக்கிறார்களா என்று ஆராய்ந்து பாத்து ஆம் எனில் கண்டிப்பாக அவர்களை ஊக்குவித்து ஒரு சிறு நன்கொடை செய்வேன்.. வெள்ளத்தில் தத்தளிப்பவனுக்கு சிறு துரும்பும் பெரிய ஒரு படகே…
  16. அதெல்லாம் முடியாது.. இதெல்லாம் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னமே பலர் கேட்டு களைச்சது.. மோகன் அண்ண யாரிடமும் கடமைப்படமாட்டேன் எண்டு சொல்லிவிட்டார்.. அதுதான் யாழின் மோட்டோவே “ யாமார்க்கும் குடி அல்லோம்” எண்டு போட்டிருக்கிறாரே..
  17. அப்படி ஒண்டும் இல்லை.. கறுப்பு பணம் மற்றும் இலீகல் வழிகளில் பணம் பெறமுடியாது கட்சிக்கு.. அதுகுறித்த வரண்முறைகள்தான்.. இது பிறைவேட் கம்பனிகளுக்கும் பொருந்தும்.. இதற்கும் கட்சிக்கு ஏன் காசு சேர்க்கிறாய் மக்களிடம் அப்படி சேர்க்காதே என்று சொல்வதற்கும் சம்பந்தமில்லை.. லைக்கா குடுத்தது லஞ்சம்.. ரக்ஸ் கட்டாமல் ஏமாற்றிய பணம்.. ரக்ஸ் அரசுக்கு சேரவேண்டிய பொதுச்சொத்து.. கேள்வி வரத்தான் செய்யும்..
  18. அறக்கட்டளை பொதுசேவைக்கு என்று நிதி சேர்ப்பது.. அதை விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.. ஆனால் உலகத்தில் கட்சிக்கு என்று சேர்த்த நிதியை பொதுமக்கள் கேள்விகேக்கலாம் என்று நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.. உலகத்தில் அப்படி ஏதும் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்கு தெரியவில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அறியத்தாருங்கள்.. உதாரணத்துக்கு திமுக கட்சியின் நிதி சம்பந்தமா செயற்குழு அல்லது கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் சண்டை பிடிப்பார்கள்.. அதை எதிர்க்கட்சிகள் கூட கேட்பதில்லை.. சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பார்கள்.. இதுவே மற்றையகட்சிகளுக்கு நிகழ்ந்தாலும் அதன் எதிர்க்கட்சிகளோ பொதுமக்களோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.. இதுவே வெளிநாடுகளில் லிபரல் என்றால் என்ன கென்சர்வேட்டிவ் என்றால் என்ன நடுநிலை நக்கிகள் என்றால் என்ன.. ஏனெனில் கட்சிக்கு என்று சேர்த்த நிதி பொதுச்சொத்து அல்ல.. அது அந்தக்கட்சிக்கு உரியது.. அதை எப்படி செலவளிப்பது என்பதை அந்த கட்சிதான் தீர்மானிக்கும்.. இதுவே திமுக கட்சி அரசு அரசநிதியில் ஆட்டைய போட்டால் ஊரே கேட்கும் ஏனென்றால் அரச நிதி பொதுச்சொத்து.. அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இதை எழுதவில்லை.. உங்கட பிரச்சினை வார்டன்னா அடிக்கனும்..
  19. இயக்கத்துக்கு காசு சேர்க்கும்போது இரண்டு விதமாக சம்பவங்கள் நிகழ்ந்தன.. இயக்கத்துக்கு என்று சொல்லி சேர்த்த காசு இயக்கத்திடமே கொடுக்கப்பட்டது.. இப்படி செய்யப்பட்டதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.. ஏனெனில் இயக்கத்துக்குதான் காசு போகின்றது அதற்குதான் நாமும் கொடுக்கிறோம் என்ற தெளிவுடன் கொடுக்கப்பட்ட காசு அது எதை சொல்லி சேர்க்கப்பட்டதோ எதற்காக மக்களால் கொடுக்கப்பட்டதோ அதை சென்றடைந்தது.. அதனால் இதைப்பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை கேட்கவும் எந்த நியாயமும் இல்லை.. இது கொடுப்பவர்களால் விரும்பி கொடுக்கப்பட்டு அது சேரவேண்டிய இடத்தை போய் சேர்ந்தது.. இரண்டாவது சந்தர்ப்பம் இயக்கத்துக்கு என்று கேட்டு இயக்கத்துக்கு கொடு என்று கொடுக்கப்பட்டு அது இயக்கத்தை சென்றடையாமல் இடையில் உள்ளவர்களால் ஆட்டய போடப்பட்டது.. இதுவே விமர்சனத்துக்கும் கேள்விக்கும் இன்று வரை உள்ளாகி இருக்கிறது.. இதை கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது.. ——- நாம் தமிழர் கட்சிக்கு என்று ஈழத்தமிழர்களிடம் நிதி சேர்க்கப்படுவதாக நான் எங்குமே அறியவுமில்லை கண்ணால் பார்த்ததும் இல்லை நண்பர்கள் உறவினர்கள் என்று யாரும் இதுவரை சொன்னதும் இல்லை.. இங்கு சிலர் சொல்வதுபோல் நிதி சேர்க்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்.. அந்த நிதி நாம் தமிழர் கட்சிக்கு என்று கேட்கப்பட்டு கொடுத்தவரும் சுயநினைவுடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடு என்று கொடுத்து அது நாம் தமிழர் கட்சியை சென்றடைந்தால் அதை இடையில் இருக்கும் யாரும் கேட்க எந்த அருகதையும் இல்லை அதற்கு நாம் தமிழர் கட்சியோ அதன் உறுப்பினர்களோ பதில் சொல்லி நேரம் விரயமாக்கவேண்டிய அவசியமும் இல்லை.. அப்படி நாம் தமிழர் கட்சிக்கு என்று கொடுக்கப்பட்ட காசு அந்த கட்சியை சென்றடையாமல் இடையில் இருப்பவர்களால் ஆட்டையை போடப்பட்டால் கண்டிப்பாக அதை கேட்க அனைவருக்கும் அருகதை உண்டு.. அப்படி நிகழ்ந்த சம்பவங்கள் இருந்தால் எழுதுவதில் நியாயம் உண்டு..
  20. அருமையான பேட்டி.. என்ன ஒரு நிதானம் தெளிவு.. நல்ல ஒரு உறவு.. he made me cry… இங்கு இப்பவும் வந்தது துவாரகதான் என்று எழுதுபவர்களால் எப்படி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி ஒரு பிடி சோற்றைத்தன்னும் உண்ண முடிகிறது.. அந்த தலைவனும் அவன் குடும்பமும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிருக்கிறார்கள் .. 30 வருடத்துக்கும் மேலாக இந்த இனத்துக்கு ஓயாமல் உழைத்த அந்த குடும்பத்தை இனியாவது நிம்மதியாக உறங்க விடுங்கள்..🙏
  21. உண்மைதான்… எங்கட இனம் ஒண்டு ரெண்டோட நிப்பாடினதாலதான் இண்டைக்கு சிங்களவன் எண்ணிக்கையில் பெருகின் வாக்கரசியலில் நாடு எங்கள் கையை விட்டு போனது.. இதே தமிழினம் பெருகி இருந்தால் எலெக்சனில் ஓட்டமெற்றிக்கா எங்கட தமிழ்கட்சி ஆள் ஜனாதிபதி ஆகி இருக்கும்.. முலீம்கள் போல நாமும் பெருகவேண்டும் புள்ளைகுட்டி நிறைய பெத்து.. நான் அஞ்சாவது பெறுவதாக முடிவெடுத்துள்ளேன் என்பதை இத்தால் சுவி அண்ணையின் மகிழ்ச்சியான தருணத்தில் அறியத்தருகிறேன்.. பிள்ளைகளிடமும் ஒவ்வொருவரும் குறைஞ்சது அய்ந்து பிள்ளைகள் பெறவேண்டும் என்று கண்டிப்புடன் சொல்ல உள்ளேன்.. இந்த நாளில் நீங்களும் குறைந்தது ஜந்தாறு பெறுவதாக உறுதி எடுக்கும்படி தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன் அனைவரையும்....👍
  22. தமிழச்சி தங்கபாண்டியன் முகநூலில் அரசியலுக்கு முன்னமே பலவருடங்களாக இருக்கிறார்.. அவர் எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.. இதுக்குத்தான் நாம் தமிழர் ஈழ ஆதரவாளர்களிடம் சொல்லுறது நீங்கள் தமிழகத்தில் யாரை என்றாலும் ஆதரியுங்கள் ஆனால் அதற்காக அந்த கட்சி தமிழக ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்து எதிர் தரப்பில் இருக்கும் நமது ஆதரவாளர்களை எமக்கு எதிராக திருப்பாதீர்கள் என்று.. திமுகாவில் மட்டுமில்ல பாமக, அதிமுக,விசிக, என்று எல்லா கட்சிகளிலும் லட்சோப லட்சம் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.. உள்ளூர் அரசியலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது அது அந்த மக்களின் லோக்கல் தேவைகளை பொறுத்து அமையும்.. ஆனால் அதை அவர்களின் ஈழ ஆதரவுடன் முடிச்சு போடக்கூடது.. அவர்கள் எம்மை நேசிப்பது அரசியல் தாண்டிய தார்மீக ஆதரவு.. சிங்களவர்கள் எப்படி இந்தியா சீனா பாகிஸ்த்தான ஒரே நேரத்தில் நட்பு சக்திகளாக அரவணைத்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனித்து எம்மை நாம் சீர்படுத்தி உலக அரசியலுக்கு ஏற்றமாதிரி வளர்த்துக்கொள்ளவேண்டும்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.