Everything posted by நியாயம்
-
பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு
பாடசாலைகளில் உள்ள கட்டடங்கள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களையும் நீக்கிவிடவேண்டும். அத்திவாரம் போட்டார், திரைநீக்கம் செய்தார், திறந்து வைத்தார், அடிக்கல் நாட்டினார் இவர் அவர் என பாடசாலைகளில் உள்ள கல்வெட்டுக்கள், நினைவு பதிவுகளையும் நீக்கம் செய்வார்களா?
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?
பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியம் சார்பானவர்களின் எண்ணிக்கை குறைவது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நல்ல விடயம் தானே? இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி உலகத்திற்கு ஒரு செய்தியை கூறியதுபோல் வரப்போகும் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற ஆசனங்களை இழந்து உலகத்திற்கு மேலும் பல செய்திகளை இடித்துரைப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
உங்கள் தகவல்களுக்கு ஆதாரம் உள்ளதா?
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?
மியூசிகல் செயார் விளையாட்டு; ஒரு கதிரையை தூக்கியாச்சு. அடுத்த கட்டம் யார் யார் அவுட்? எழும்பி நிற்க போகின்றார்கள்? சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் சிறப்பாக செயற்படுகின்றார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
இனி சுமந்திரன் ஐயாவின் அடுத்த அறிக்கை வரும்வரை இதற்குள் நின்று கும்மி அடிக்க வேண்டியதுதான்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
ஓதியது சாத்தன் ஆயினும் உரைக்கப்பட்ட வேதம் உண்மை போல் உள்ளதே? பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும்போது இதை உறுதிப்படுத்தலாம்.
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
இஸ்ரேல் தாக்குகின்றது என்பது தவறான கருத்து. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குகின்றன என்பதே யதார்த்தம். அமெரிக்கா இல்லை எனில் இந்த தாக்குதல் இப்படி நடைபெற முடியாது.
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
இந்திய சொல் கேட்கும் கூட்டத்தை.. யார்? நீங்கள்? களையெடுக்கிறது? 😁
-
யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பல தடைகளை ஜே வி பி விதித்தது. இந்திய பொருட்களை விற்பதற்கு கடைக்காரர் பயந்த ஒரு காலம் உள்ளது. ஆனால் அப்போதைய ஜே வி பி தலைமையின் கடும்போக்கு கால ஓட்டத்தில் நீர்ந்துபோய் மென்போக்காளர்களாக மாறி உள்ளார்கள் என நினைக்கின்றேன்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
மக்களை கவனித்தால் அவர்களை உங்கள் சார்பாக ஈர்க்க முடியும். ஆனால் எத்தனை பேரை உங்களால் கவனிக்க முடியும். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முடியுமா? நான் ஆட்டோ ஒன்றில் ஒரு அலுவலாக சென்றசமயம் ஓட்டுனருடன் நாட்டு நிலவரம் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் ஒரு முன்னாள் போலிஸ் கமாண்டோ. சிறப்புப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் அநுர குமா வெற்றி பெறுவார் என கூறினார். அநுர குமாரவிற்கு இயல்பான ஆதரவு கிடைத்தது. நாமல் போன்றோர் ஆட்களுக்கு வாகனம் விட்டு ஏற்றி இறக்கி, உணவு, இதர வசதிகள் கொடுத்து கவனித்து, காசும் கொடுத்து கூட்டங்களுக்கு கூப்பிடப்படுவதாய் சொன்னார். இல்லாவிட்டால் அவர்கள் கூட்டங்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்கள் என கூறினார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அது சிங்களம், தமிழ், முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பது இல்லை. நாட்டு நிலவரம் அப்படி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு. தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁 விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.
-
இன மதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றி - அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து
இன, மத பேதத்தை தூண்டாமல் ஆட்சி செய்த இலங்கை ஜனாதிபதி எனும் பெயரை அனுரகுமார எடுப்பாரா?
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் தேர்தல் முடிபுகள் எல்லாவற்றுக்கும் இருபத்து இரண்டாம் திகதி விளக்கம் தருவார் என்று @வாலி கூறி உள்ளார். சபையோர் அமைதிகாக்க வேண்டப்படுகின்றனர்.
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி இருக்கிறது?
இன்னும் பல தகவல்கள் உள்ளன. அவ்வப்போது அறியத்தருகின்றேன். 😁
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் பகுதிகளில் வாக்குப்பதிவு எப்படி இருக்கிறது?
வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படலாம்?
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
பொது வேட்பாளருக்கு யாழ் கருத்துக்களத்திலேயே ஏகோபித்த வரவேற்பு இல்லை. யாழ் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்கள்/ஆசான்கள்/பேராசிரியர்களை ஒரு காவாலிக்கூட்டம் நக்கிகள்/துரோகிகள் என வளாகத்தில் சுவரொட்டி அடிப்பது பற்றி பப்பாவில்ஏற்றப்பட்டுள்ள மேன்மை பொருந்திய பொது வேட்பாளர் அரியேந்திரன் என்ன கருத்து கூறுகின்றார் என அறிய ஆவல்.
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁
-
யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி
"யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்? தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
-
காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்!
சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்? சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது. இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
ஒரு தரப்பு கெட்டித்தனமாகவும், சாகசமாகவும், புத்திசாதுர்யமாகவும் வர்ணித்தும், புகழ்ந்தும், மெய்ச்சிலிர்த்தும் கொள்கின்றது. மேற்கத்தைய ஊடகங்கள் சீ. என். என் உட்பட இந்த தாக்குதலை கண்டித்ததாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் இஸ்ரேல் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை. உலகம் மிகவும் சிக்கலானதும் கோரமானதும் அவலமானதுமான ஒரு கட்டத்தினுள் உள்ளது. பலரும் சமூக ஊடக வலைப்பின்னல்கள், மிந்திரையினுள் கட்டுண்டு, மண்டை கழுவப்பட்டு உள்ளதால் அறிவுக்கண்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள். எமது காலத்திலேயே தொழில்நுட்பம், விஞ்ஞானம் தொடக்கம் சமூகவியல், அரசியல், போரியல் வரை முக்கியமான பலவித மாற்றங்களை நாங்கள் நேரடியாக காண்கின்றோம். எமது காலத்தின் பின், இன்னும் ஒரு 50 வருடங்களின் பின் உலகம் எப்படி அமையும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினமாக உள்ளது. அந்த காலத்தில் மனிதாபிமானம், நேர்மை, மனிதநேயம் கிஞ்சித்துக்கும் காணப்படுமா என்பதே கேள்விக்குறி. எல்லாமே வியாபார கொடுக்கல் வாங்கல்களாகவும், டீல்களாகவும், வர்த்தக மயமாகவும் மாற்றப்படலாம். நாம் பழைய உலகில் வாழ்ந்தபடியால் புதிய உலக மாற்றங்கள், நியதிகளை ஜீரணிக்கமுடியாது உள்ளது. ஆனால், எமைத்தொடரும் சந்ததிகளுக்கு புதிய உலக ஒழுங்கே வாழ்க்கை என்பதால் அவர்கள் அனைத்தையும் முகம் கொடுத்து வாழ்வார்கள் என நினைக்கின்றேன். 😟 புதிய சிந்தனைகள், உத்திகளை எல்லா தரப்புமே கையாளக்கூடும். ஒருவர் செய்ததை, ஒரு அணுகுமுறையை இன்னொருவர் நகல் எடுப்பதற்கு இந்த சமூக ஊடக/இணைய/செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதிக சிரமம் இராது. யார் இந்த தாக்குதலை மேற்கொண்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கப்போகின்றது.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நாங்கள் கடல் எல்லை தாண்டி இந்தியாவுக்கு ஓடியதை மறந்துவிட்டோம் போல. வெளிநாட்டுக்கு வந்த பலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக சென்று பின் தூரதேசம் சென்றார்கள். இங்கே உள்ள பல கருத்துக்களை/வாதங்களை பார்த்தால் இலங்கை அகதிகள் விடயத்தை இந்தியா எப்படி கையாண்டாலும் நியாயம் கேட்கும் அருகதை எமக்கு இல்லை போல. ஏன் என்றால் சட்டவிரோதமாக புகுந்தவர்கள் எப்படி பொதுவான செளகரியத்தை/மரியாதையை எதிர்பார்க்கலாம்?
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள்! ஓம் சாந்தி! 🙏
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
முதலில் அந்த 12 பக்கங்கள் அடங்கிய பத்திரியை இணையுங்கள். உள்ளடக்கத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்வோம். உள்ளே நடுப்பக்கத்தில் சஜித் தேர்தல் பிரச்சாரம் படம் போட்டு உள்ளதோ என்னவோ. 😁 தவிர, சுமந்திரன் ஐயா ஆங்கில புலமை உடையவர். உள்ளே ஆங்கிலத்திலும் இரண்டு பத்தி காணப்பட வாய்ப்பு உள்ளது. 😁 யார் என்ன சொன்னாலும் ஐயாவுக்கு மனதில் எவ்வளவு வைராக்கியம். எவ்வளவு செல்ப் கொன்பிடன்ஸ். அதை பாராட்ட வேண்டும். 😁 பாடசாலை சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், வகுப்பு பிரிவுகள் இடையே சமூக ஊடக குழுமங்களில் உள்ள நிர்வாக முத்திரைகளுக்கு போட்டியிட்டு அடிபடும் இந்த காலத்தில் தனது அரசியல் எதிர்காலத்தின் ஸ்திரத்தன்மைக்கு சுமந்திரன் ஐயா எடுக்கும் முயற்சிகளை குறை சொல்வதற்கு இல்லை. நாட்டில் உள்ள மற்றைய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்து அரசியல் செய்கின்றார்கள் என நம்புகின்றேன்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பற்றி பல புதிய தகவல்கள் கூறப்படுகின்றன. போகுற போக்கை பார்த்தால் இதன் பின்னால் உள்ளவர் செலன்ஸ்கியோ என்று முடியப்போகுதோ? ஆக மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதைதானோ.