Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️
  2. வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁 இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?.. ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.
  3. தமிழரசுக்கட்சி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஐ பி சி கருதும்பரிந்துரை செய்யும் வேட்பாளர்கள் யார்?
  4. இவர்களின் சின்னமாக சிங் சக்: தாளம் எப்படி? பொருந்துமா?
  5. பாடசாலைகளில் உள்ள கட்டடங்கள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களையும் நீக்கிவிடவேண்டும். அத்திவாரம் போட்டார், திரைநீக்கம் செய்தார், திறந்து வைத்தார், அடிக்கல் நாட்டினார் இவர் அவர் என பாடசாலைகளில் உள்ள கல்வெட்டுக்கள், நினைவு பதிவுகளையும் நீக்கம் செய்வார்களா?
  6. பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசியம் சார்பானவர்களின் எண்ணிக்கை குறைவது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நல்ல விடயம் தானே? இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி உலகத்திற்கு ஒரு செய்தியை கூறியதுபோல் வரப்போகும் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற ஆசனங்களை இழந்து உலகத்திற்கு மேலும் பல செய்திகளை இடித்துரைப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
  7. மியூசிகல் செயார் விளையாட்டு; ஒரு கதிரையை தூக்கியாச்சு. அடுத்த கட்டம் யார் யார் அவுட்? எழும்பி நிற்க போகின்றார்கள்? சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் சிறப்பாக செயற்படுகின்றார்கள்.
  8. இனி சுமந்திரன் ஐயாவின் அடுத்த அறிக்கை வரும்வரை இதற்குள் நின்று கும்மி அடிக்க வேண்டியதுதான்.
  9. ஓதியது சாத்தன் ஆயினும் உரைக்கப்பட்ட வேதம் உண்மை போல் உள்ளதே? பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும்போது இதை உறுதிப்படுத்தலாம்.
  10. இஸ்ரேல் தாக்குகின்றது என்பது தவறான கருத்து. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குகின்றன என்பதே யதார்த்தம். அமெரிக்கா இல்லை எனில் இந்த தாக்குதல் இப்படி நடைபெற முடியாது.
  11. இந்திய சொல் கேட்கும் கூட்டத்தை.. யார்? நீங்கள்? களையெடுக்கிறது? 😁
  12. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பல தடைகளை ஜே வி பி விதித்தது. இந்திய பொருட்களை விற்பதற்கு கடைக்காரர் பயந்த ஒரு காலம் உள்ளது. ஆனால் அப்போதைய ஜே வி பி தலைமையின் கடும்போக்கு கால ஓட்டத்தில் நீர்ந்துபோய் மென்போக்காளர்களாக மாறி உள்ளார்கள் என நினைக்கின்றேன்.
  13. மக்களை கவனித்தால் அவர்களை உங்கள் சார்பாக ஈர்க்க முடியும். ஆனால் எத்தனை பேரை உங்களால் கவனிக்க முடியும். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முடியுமா? நான் ஆட்டோ ஒன்றில் ஒரு அலுவலாக சென்றசமயம் ஓட்டுனருடன் நாட்டு நிலவரம் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் ஒரு முன்னாள் போலிஸ் கமாண்டோ. சிறப்புப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் அநுர குமா வெற்றி பெறுவார் என கூறினார். அநுர குமாரவிற்கு இயல்பான ஆதரவு கிடைத்தது. நாமல் போன்றோர் ஆட்களுக்கு வாகனம் விட்டு ஏற்றி இறக்கி, உணவு, இதர வசதிகள் கொடுத்து கவனித்து, காசும் கொடுத்து கூட்டங்களுக்கு கூப்பிடப்படுவதாய் சொன்னார். இல்லாவிட்டால் அவர்கள் கூட்டங்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்கள் என கூறினார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அது சிங்களம், தமிழ், முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பது இல்லை. நாட்டு நிலவரம் அப்படி.
  14. பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு. தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁 விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.
  15. இன, மத பேதத்தை தூண்டாமல் ஆட்சி செய்த இலங்கை ஜனாதிபதி எனும் பெயரை அனுரகுமார எடுப்பாரா?
  16. அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் தேர்தல் முடிபுகள் எல்லாவற்றுக்கும் இருபத்து இரண்டாம் திகதி விளக்கம் தருவார் என்று @வாலி கூறி உள்ளார். சபையோர் அமைதிகாக்க வேண்டப்படுகின்றனர்.
  17. வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
  18. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நிலையில் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படலாம்?
  19. பொது வேட்பாளருக்கு யாழ் கருத்துக்களத்திலேயே ஏகோபித்த வரவேற்பு இல்லை. யாழ் பல்கலைக்கழகத்து விரிவுரையாளர்கள்/ஆசான்கள்/பேராசிரியர்களை ஒரு காவாலிக்கூட்டம் நக்கிகள்/துரோகிகள் என வளாகத்தில் சுவரொட்டி அடிப்பது பற்றி பப்பாவில்ஏற்றப்பட்டுள்ள மேன்மை பொருந்திய பொது வேட்பாளர் அரியேந்திரன் என்ன கருத்து கூறுகின்றார் என அறிய ஆவல்.
  20. முதலில் இந்த பதிவை எழுதிய பேஸ்புக் வித்துவான் யார் என்றும், அவர் வெட்டி புடுங்கியவை எவை எனவும் கூறுங்கள். 😁
  21. "யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்? தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
  22. சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்? சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது. இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
  23. ஒரு தரப்பு கெட்டித்தனமாகவும், சாகசமாகவும், புத்திசாதுர்யமாகவும் வர்ணித்தும், புகழ்ந்தும், மெய்ச்சிலிர்த்தும் கொள்கின்றது. மேற்கத்தைய ஊடகங்கள் சீ. என். என் உட்பட இந்த தாக்குதலை கண்டித்ததாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் இஸ்ரேல் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை. உலகம் மிகவும் சிக்கலானதும் கோரமானதும் அவலமானதுமான ஒரு கட்டத்தினுள் உள்ளது. பலரும் சமூக ஊடக வலைப்பின்னல்கள், மிந்திரையினுள் கட்டுண்டு, மண்டை கழுவப்பட்டு உள்ளதால் அறிவுக்கண்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள். எமது காலத்திலேயே தொழில்நுட்பம், விஞ்ஞானம் தொடக்கம் சமூகவியல், அரசியல், போரியல் வரை முக்கியமான பலவித மாற்றங்களை நாங்கள் நேரடியாக காண்கின்றோம். எமது காலத்தின் பின், இன்னும் ஒரு 50 வருடங்களின் பின் உலகம் எப்படி அமையும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினமாக உள்ளது. அந்த காலத்தில் மனிதாபிமானம், நேர்மை, மனிதநேயம் கிஞ்சித்துக்கும் காணப்படுமா என்பதே கேள்விக்குறி. எல்லாமே வியாபார கொடுக்கல் வாங்கல்களாகவும், டீல்களாகவும், வர்த்தக மயமாகவும் மாற்றப்படலாம். நாம் பழைய உலகில் வாழ்ந்தபடியால் புதிய உலக மாற்றங்கள், நியதிகளை ஜீரணிக்கமுடியாது உள்ளது. ஆனால், எமைத்தொடரும் சந்ததிகளுக்கு புதிய உலக ஒழுங்கே வாழ்க்கை என்பதால் அவர்கள் அனைத்தையும் முகம் கொடுத்து வாழ்வார்கள் என நினைக்கின்றேன். 😟 புதிய சிந்தனைகள், உத்திகளை எல்லா தரப்புமே கையாளக்கூடும். ஒருவர் செய்ததை, ஒரு அணுகுமுறையை இன்னொருவர் நகல் எடுப்பதற்கு இந்த சமூக ஊடக/இணைய/செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதிக சிரமம் இராது. யார் இந்த தாக்குதலை மேற்கொண்டாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கப்போகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.