Everything posted by putthan
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
குமார் குணரெட்ணம் தெமிளு...என்ன தான் சிறிலங்கன் எண்டு புலம்பினாலும் இந்த விடயத்தில் அனுராவும் விட்டு கொடுக்க மாட்டார் உடனே இனவாதம் பேசி ஆட்சியை தக்க வைப்பார்... சைனாக்காரன் நேரடியாக பருத்திதுறையில் இறக்க பார்க்கிறான் போல...
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால்
சுற்றி சுற்றி இன அடையாளங்களை இல்லாமல் பண்ணுவதிலயே எல்லாரும் குறியாக இருக்கின்றனர்...
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
இந்தியாவிலிருந்து பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்ய கூடாது என போரடியவர்கள் ஜெ.வி.பி யினர் அவர்களிடமே போய் இறக்குமதி செய் எண்டு கேட்கினம்....
-
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை-உலமா கட்சித்தலைவர்
மத தலைவர்கள் அரசியல் கருத்து பேசுவதை தடை செய்ய வேணும்.... மச்சான் அணுரா பார்த்து செய்யப்பா
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !
இவர் விளையாடிய துருப்பு சீட்டை ..இவருக்கே பாவித்தாலும் பாவிக்கலாம்
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
இதுக்கு தான் அனுரா தரப்பு மீண்டும் மீண்டும் இனக்கலவரம்/நல்லிணக்கம் என புலம் பிக் கொண்டிருக்கினம் போல தெரிகின்றது ....பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்களை இளைஞர்களையும் கைது செய்தமை(மாவீரர் நிகழ்வின் பொழுது)அதை யூ டியுப் அடிப்பொடிகள் பிரச்சாரம் செய்தமை... தனியார் துறை எங்களுக்கு பிடிக்காத வாசகம் ....உலகில் உள்ள துறைகளில் எங்களுக்கு பிடிக்காத துறை தனியார் துறை ...அமெரிக்ககாரன் அனுராவின்ட பொறுத்த இடத்தில கை வைச்சிட்டான் போல
-
யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
பெயர் தெரியாத திருடன் போல ஊடகம் பெயரை போடலாமே
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
மன்னிப்பு கேட்டா அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை..சிங்கள புத்திஜீவிகள்/மற்றும் ஜெ.வி.பி அரசியல்வாதிகள் யாழ் நூலக எரிப்பை பற்றி ,மேடைக்கு மேடை.வீட்டுக்கு வீடு பேச தாயார் ஆனால் இனக்கலவரங்கள்,மற்றும் இனவிடுதலைக்காக போராடியவர்களின் உயிர் இழப்பை பற்றி பேச தயார் இல்லை ..அதை பகிரங்கமாக கூறவும் மாட்டார்கள் ...சில சமயம் தமிழ் இனத்தை முற்றாக அந்த மண்ணில் இருந்து துடைத்தெரிந்த பின்பு ,மீண்டும் தமிழ் இனம் அந்த மண்ணில்(வடக்கு கிழக்கில்) உயிர்ப்புடன் செயல் படாத நிலை ஏற்பட்ட பின்பு சிங்கள ஜனதாவின் முன்றாம் நாங்காம் தலை முறை சிங்களத்தில் மன்னிப்பு கேட்பார்கள் ....அதை அடையாளங்களை தொலைத்த தமிழர்கள் சிங்கள மொழியில் புரிந்து கொள்வார்கள்.... வெளிநாடுகளின் பூர்வீக குடிகளிடம் ஆக்கிரமிப்பாளர்களின் தற்போதைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்பது போல...
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
கவனம் லண்டனில் உள்ள ஒர் யூ டியுப் அடிப்பொடி (சிங்கள அடியான்) க்கு தெரிந்தால் எங்களை வறுத்தெடுத்து விடுவார்....
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
நான் போய் அவருக்கு விளங்கப்படுத்துவதா ஓ ஒ நோ நோ ...😅
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
அதென்றால் உண்மை தான் ...இப்பவே துறவின் அறிகுறிகள் இயற்கையாகவே வர தொடங்கிவிட்டது ..முக்கிய குறிப்பு (துறவு விருப்பம் இல்லை என்றாலும் இயறகை விடாது....)கடந்து போக வேண்டிய நிலை
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
அதுதான் அவருக்கு மொழிபற்று பிச்சுகொண்டு வந்திருக்குது போல....அதன் விளைவு லட்சகணக்கில் இனிய இன்னுயிர்கள் பலியாகியிருக்கின்றன...
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
எந்த கல்வெட்டு ஆதாரமும் இல்லை .....ஆனால் எனது புலனாய்வு ஆராச்சி படி அவர் தமிழராக இருக்க வாய்ப்பு உண்டு...😅 சொந்த மண்ணில்/சொந்த இனத்தில் உதித்த பலரை புறந்தள்ளி வந்துள்ளோம் ,புறந்தளிக்கொண்டும் இருக்கின்றோம்... உதாரணத்திற்கு கண்ணகி வழிபாட்டை புறக்கணித்து பல அம்மன் வழிபாட்டை உள்வாங்கி கொண்டிருக்கின்றோம் ...கண்ணகி வழிபாடு என்று வரும் பொழுது அங்கு பெளத்தம் தமிழனின் அடையாளமாக வருகின்றது ....ஆனால் இன்று பூஜை வழிபாடாக மாறி அர்ச்சனை என ஒர் சாதியினர் மட்டும் கடவுள் உடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள் நம்மவர்கள் ... மற்றையது யோக சுவாமிகளை எடுத்து கொள்ளுங்கள் அவரைப்பற்றி தெரிந்த இளவயதினர் புலத்திலுமில்லை ,தாயகத்திலும் இல்லை....ஆனால் புட்டபத்திசாய்பாபா,சீரடி சாய்பாபா போன்றோரை தெரியாத புலம் பெயர் இளசுகள்,தாயக இளசுகள் இருக்க மாட்டார்கள் ... 😅என்னுடைய பழைய கிறசுக்கும் அந்த பெயர் அதற்காக நான் துறவியே
-
அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்
பிறகென்ன ...புலம்பெயர்ஸ் செய்யும் பொழுது ஏன் சிறிலங்கன் செய்யக்கூடாது...எல்லாத்தையும் புலம் பெயர்ஸ் உடன் போட்டி போட்டு செய்பவர்கள் இதையும் செய்யலாம்
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
👍
-
அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்
ஒரு சின்ன அறிவுரை.. அந்த காலத்தில் ஊரில் கடை வைத்திருப்பவர்கள் கடையின் பின்பக்கம் சமையல் செய்து சாப்பிடுவார்கள் பின் இரவு நேரங்களில் கடையினுள் உறங்குவார்கள் இதனால் அவர்களுக்கு பல நன்மைகள் உண்டானது ..இரவு நேரத்தில் செக்யூரிட்டி ,வீட்டு வாடகை கொடுக்க தேவையில்லை .... அதுபோல நீங்களும் கீழே அலுவலகம் மேல உங்கன்ட வீட்டை அமைத்து கொஸ்ட் கட்டிங் செய்யலாம்
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
அது சரி ...புத்தருக்கு இங்கிலிசு தெரியுமே உலகத்தின் அரைவாசி பேரை தன்ட காலில் விழபண்ணியுள்ளார்....... 21 ஆம் நூற்றாண்டின் அவதாரம் ...ஜனாதிபதி பதவி ஏற்கும் பொழுது அவரின் தலையில் ஒர் ஒளிவட்டம் வந்து சுழன்று கொண்டிருந்தது அதை எந்த யூ டியுப்காரரும் படம் எடுக்க முடியவில்லை ...பல அதிரடி முயற்சிகளை எடுத்தும் அவர்களால் படம் பிடிக்க முடியவில்லை
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
தில்லாலங்கடி கில்லாடிகள் நாங்கள் ...அனுரா ஆட்சியின் காலத்தில் சிறிலங்கன் என்ற வகையில் முப்படைகளின் தளபதிகளில் ஒருவர் தமிழர் ,ஒருவர் முஸ்லீம் ,ஒருவர் சிங்களவ்ர் ....பொலிஸ்மாதிபர் பறங்கியர் ....(மலே ,தெலுங்க இனத்தவர்களுக்கு பிறிகேட் தளபதி கொடுக்கப்படும் இப்ப சிறிலங்காவில புதுசு புதுசா இனங்கள் வருகின்றது எல்லாத்தயும் அரவணத்து செல்லும் அணுராவுக்கு நன்றிகள்) சிறிலங்கா படைகளில் 17% தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள் இதில் 5 % டமிழ் பெண்கள் ....மாவீரர் தினத்தில் சில சமயம் மரியாதை செலுத்த இவர்களையும் அனுமதிப்பார்கள் ...சிங்களவ்ன் ரொம்ப் நல்லவன்டா
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
70 க்கு முதல் அப்படித்தான் இருந்தது இப்ப தான் நீங்கள் நினைக்கும் பல்லின சமுகமாக மாறி வருகிறது
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
இப்ப எல்லோரும் எங்கன்ட பழைய ஆட்களின் ஆங்கில புலமையை புகழ்ந்து பேசுகின்றனர் ..இவர்கள் ஒரு காலத்தில் சொன்னார்கள் ...சிங்களவர்களுக்கு தமிழர் மீது வெறுப்பு வருவதற்கு காரணம் தமிழர்கள் பிரித்தானிய ஆட்சிகாலத்தில் (பிரித்தானியாவின் பிரித்தாலும் கொள்கையினால் தான்) அதிகம் படிக்க சந்த்ர்ப்பம் கிடைத்து சிங்களவரை அடிமைபடுத்தினவையள் என்று .... இப்ப சிங்களவனிடம் தமிழன் அடிமைப்பட்டு சொந்த மொழியில முன்னுக்கு வந்தாலும் அவனில பிழை பிடிக்கினம் ...வெளிநாட்டு தூதுவர்களாக ஆங்கிலத்தில் வியாக்கியானம் பேசி என்னத்தை கண்டோம்.... தொழில் தெரிந்தவனுக்கு ஆங்கில புலமை தேவையில்லை... அனுராவுக்கு ஆங்கில புலமை எப்படி?
-
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.
எல்லோரும் இலங்கையரப்பா...பாராளுமன்றில் மூன்று மொழியிலும் சொல்லுறமல்ல ..சம உரிமை கிடைச்சிட்டல்ல..கிழக்கு மாகாணம் பல்லின சமுகம் கொண்ட மாகாணம் அது தமிழ் மாகாணம் அல்ல என சொல்ல தான் இவ்வளவும் நடக்கின்றது ...புது அரசியல் மூன்று வருடங்களுக்கு பின்பு தான் வரும் என சொல்கின்றனர் ..அதுவரை ஆளுனர் ஆட்சியை நடத்தி ...மாகாண சபை ஆட்சிமுறையினால் தமிழ் மக்கள் எந்த வித நன்மையும் அடையவில்லை என கூறி பிரச்சாரம் செய்வார்கள் ... மாகாணசபை தேர்தல் வைக்க மாட்டார்கள் ஆனால் மாகாணசபை தேவையில்லை என்பதற்காக தேர்தல் வைப்பார்கள்...
-
சிவஞானம் சிறீதரன் அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினராகத் தெரிவு
இந்த குடிசை டொழில் ஊடக செய்தி சரி என்றால்..... ஒர் வரவேற்பு ...சிறிதரன் தெரிவு செய்யப்பட்டது மகிழ்ச்சி..சிறப்பு
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
அன்று விளக்குமாற்றினால் யாழில் துரத்தப்பட்ட ஜெ.வி.பியினர் இன்று அதே மக்களின் எஜமானர் ..அவ்ர்களின் காலில் விழுகின்றனர் யாழ் மக்கள்... சிறிலங்காவில் எதுவும் நடக்கும்...கடந்த தேர்தலில் 3 எம்.பிக்களை பெற்ற ஜெ.வி.பி இன்று 159 எம்பி🤔
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
அவருக்கு பவர் இருக்கோ இல்லையோ நம்ம ஊடக குடிசை கைத்தொழில் ஜாம்பவான்கள் ஒருவன் இருந்தால் போதும் ....இல்லாத பவரையும் இருக்கு என விளாசிதள்ள
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அனுரா தரப்பு உடனடியாக தன்னையறியாமல் இப்படி சொன்னார் "உங்களை சுற்றியுள்ளவர்களின் பேச்சை கேட்க வேண்டாம் என்று" அதாவ்து தமிழரசு கட்சியை கேட்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்