Everything posted by nedukkalapoovan
- 20240304_143056.jpg
-
சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக தான் குறிப்பாக ஜெயலலிதா அம்மையார் எழுவர் விடுதலைக்கு தீர்மானம் இயற்றி விடுதலையும் செய்தவர். அப்புறம்.. கருணாநிதி கும்பல்.. சோனியா குதூகலக்காதல்.. எல்லாம் ஒன்றாச் சேர்ந்து மத்திய அரசினூடாக செல்லாதாக்கி.. மீண்டும் வழக்கை வேறு திசைக்கு மாற்றி உள்ள போட்டு.. இவர்கள் விடுதலையை கால நீட்டிப்புச் செய்து கொண்டே போயினர்.
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
அண்மையில் பிரான்சில் இருந்து ஒருத்தர் நயினாதீவு கும்பாபிசேகத்தன்று தன் மகளின் திருமண நிகழ்வினை முன்னுறுத்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வேட்டியும் சேலையும் இலவசமாக.. கொடுத்தாராம். 23 கோடி செலவு. ஓசி வேட்டிக்கும் சேலைக்கும் அலையுற அளவுக்கு எங்கட தாயக மக்கள் இல்லை... சில வருமானம் குறைந்த மக்கள் கூட தரமானதை கொடுத்தால் தான் வாங்குவினம். அது வரவேற்கப்படனும். ஆனால்... குறிக்கட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் ஓடும் பயணிகள் படகுகளில் கைவைச்சுப் பிடிக்க முடியாத அளவுக்கு கறள். ஆணி எல்லாம் கிளம்பி வெளில நிற்குது. ஆண்கள் பெண்கள் என்று அடசி குப்பை தொட்டி கொண்டு போற மாதிரி கொண்டு போறாங்கள் ஆக்களை. இந்த 23 கோடியை வைச்சு இரண்டு தரமான சர்வதேச சந்தையில்.. பிரான்சில் இல்லாத பயணிகள் படகுளா.. வாங்கி.. ஓட்டிறவனின் வயித்திலும் அடிக்காமல்.. ஒரு 20% வருமானத்தை பாரமரிப்பு செலவுக்கு வங்கியில போடு மாதாமாதம்.. மிச்சத்தை நீங்க எடுங்க என்றால்.. சேவை சிறப்பாக நடக்குதோ இல்லையோ என்று பாருங்கள். அங்கால சொறீலங்கா நேவி செகுசுப் படகுகளில் வருகினம்.. போகினம். அவைக்கு மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம். வரி கட்டிற சனம் கறள் ஆணி குத்தி ஏற்பு வலி வந்து கிடக்கப் போகுதுகள். சேவையில் உள்ள எல்லாப் படகுகளும் மீள் அமைக்கப்படனும்.. நவீன வசதிகளுடன். அதையாவது செய்யுறாங்களா இல்லை. டக்கிளஸ் வாக்கை வாங்கிறான்.. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பற்றி அவனுக்கு ஒரு சிந்தனையும் இல்லை. என்ன வாற வெற்றிடங்களுக்கு காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாததுகளை போட்டு போலிப் பெயர் வாங்கிக்கிறான். அந்த வகையில்.. லெபரா பாஸ்கியின் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பாராட்டுதல் வேண்டும். அதன் வெற்றிக்குப் பின்னால்.. அவர் சந்தித்த சர்ச்சைகளும் பல.
-
சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?
பிடிபடும் வரை ஆகோ ஓகோ என்று வாங்கி பாக்கெட்டில் போட்டிட்டு.. போதைவஸ்து மாபியா.. தி மு க வை தமிழகத்தில் இருந்தே விரட்டாமல்..போதையை கட்டுப்படுத்த முடியாது. இதில சொறீலங்காவுக்கு பாலம் வேற. எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை. அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.
-
சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!
மனிதம் உள்ளவைக்கு இதனை வாசிக்கும் போது கண்ணீர் வரும். என்ன இந்த உலகம் இப்போ அதிக சுயநல மனிதப் பிசாசுகளால் ஆளப்படும் நிலைக்கு மக்களே கொண்டு வந்து விட்டிருப்பது தான் பரிதாபமாகிவிட்டது. கண்ணீரஞ்சலி.
-
இலங்கையில் நீதி செத்துவிட்டது என்றவர்கள் உட்கட்சி பிரச்சினைக்காக நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் - டக்ளஸ்
இவருக்கு சொறீலங்கா நீதித்துறை மீது அதீத நம்பிக்கையுள்ளது. ஏனெனில் வடக்கில் தன் இஸ்டத்துக்கு பிடிச்சாக்களை.. அனுராதபுரத்தில் மகேஸ்வரி அக்காச்சியை வைச்சு எடுத்துவிடும் பல மில்லியன்கள் புரண்ட பிசினஸ்.. ஞாபகத்தில் இருந்து அகலுமான என்ன.
-
சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி
பார்வதி அம்மாவை கொன்றார் கருணாநிதி. சாந்தனை கொன்றார் ஸ்ராலின். எப்பவுமோ அவை சொக்கத்தங்கம் பக்கம் தான்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
சாந்தன் தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில்.. தண்டனைகளின் பின்.. ஹிந்திய உச்சநீதிமன்றத்தால் முற்றாக விடுவிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர். அதற்கு முன் அவர் ஒரு சக மனிதர். தமிழகத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பில் சந்தேகம் இருக்கிறது. ஹிந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் வெள்ளையும் சுள்ளையுமா அமைச்சர் பதவியோடு சொறீலங்காவில் வாழும் போது.. மேலும்.. சாந்தனை முன்னாள் போராளி என்பதோ.. ராஜீவ் மரணம் குறித்தோ.. தமிழ் தேசியக் கட்சிகளின் சிலவற்றின் உண்மை முகம் குறித்தோ இங்கு பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சாந்தனுடன் கூட இருந்தோரே.. சாந்தனுக்கு அஞ்சலி.. கவலை தெரிவிச்சினமோ தெரியவில்லை. குறிப்பாக பேரளிவாளனின் அம்மா. கனடாவில் ஹிந்தியாவுக்கு வேண்டாத சீக்கிரியரின் மரணத்திற்கு கனடா கொதித்த அளவுக்கு ஹிந்தியாவால்.. ஹிந்திய புலனாய்வுப்பிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாந்தனின் மரணத்திற்கு நீதி விசாரணைக்கு.. ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை. நீர்கொழும்பு வைத்தியசாலை பிரதேச பரிசோதனை அறிக்கை உண்மையாக வெளிவருமா..???!
-
யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
சைக்கிள் ஓடினம் சரி.. எவ்வளவு காசு எப்படி வசூல் பண்ணினம்..??! வெளிநாட்டில் இருந்து போய் உள்ளுர் மக்களிடம் வசூல் பண்ணினமா.. இல்லை உதவி செய்யுறம் என்பதற்கு விளம்பரமா..??! இல்லை ஆல் இன் ஒன்னா. உண்டியல் குலுக்கினதாகவும் தெரியல்ல. போஸ் கொடுக்கிறது தான் தெரியுது. என்ன சைக்கிளில் சொறீலங்கா ரூர். அமேசிங்.
-
சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று
தமிழகத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் பலியிடப்பட்ட ஈழத்தமிழர் சாந்தனுக்கு கண்ணீரஞ்சலி. அன்று பார்வதி அம்மா.. கட்டுமரம் கருணாநிதி ஆட்சியில். இன்று சாந்தன்.. கட்டுமரம் மகன்.. ஸ்ராலின் ஆட்சியில்.
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
அதென்ன 1.5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு..? ஆம்.. தொழில்புரட்சிக்கு முன்னைய காலத்தை விட அதன் பின் அமைந்த காலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தால்.. முக்கியமாக கரியமிலை வாயு எனப்படும் காபனீரொக்சைட் (முக்கியமாக சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியேறுவது) அளவு அதிகரிப்பால்.. பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பானது 1.5 பாசை செல்சியஸை தாண்டினால்.. அதன் விளைவு பூமியில் மீள முடியாத அளவுக்கு போகலாம் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அப்போ.. அந்த 1.5 பாகை செல்சியஸ் இப்ப அதிகரிச்சிட்டுதா..? ஆம். 2023 இல் இது பதிவு செய்யப்பட்டிருக்குது. ஆனால்.. இந்த அதிகரிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை எனி வரும் கால கணிப்புக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கடந்த.. 120,000 ஆண்டு கால பூமியின் வரலாற்றில் 2023இல் தான் ஓர் ஆண்டுக்கான சராசரி பூமியின் வெப்பநிலை இந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது. சரி இதனால் நமக்கென்ன..?! நமக்கு பல பிரச்சனைகள் வரும். பூமியில் வரட்சி அளவு அதிகரிக்கும். உணவு பயிர்களின் உற்பத்தி குறையும். நுளம்பு போன்ற நோய் பரப்பு பூச்சிகளின் பரவல் எல்லை அதிகரிக்கும்.. புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.. கடல் மட்டம் இருப்பை விட அதிகரிக்கும்.. துருவ பனியின் உருகும் வேகம் அதிகரிக்கும்.. பஞ்சம் பட்டினி..நோய் தாக்கங்கள் அதிகரிக்கும்.. கடல்வாழ் உயிரினங்கள் அழிவுகளை சந்திக்கும்.. தரைவாழ் உயிரினங்களிலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும்.. இந்த நிலை தொடர்ந்தால்.. பூமி தரிசாவது நிச்சயம் ஓர் நாள் விரைந்து நிகழும். அது மனிதனால்.. ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதேன்.. இவ்வளவு காலமும் இருக்க இப்பதான் இந்தப் பிரச்சனை வருகுது..?! இது புதிய பிரச்சனை அல்ல. ஏலவே எச்சரிக்கப்பட்ட ஓர் விடயம் தான். வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும்.. தங்களின் பொருண்மிய ஆதாயங்களை முன்னிலைப்படுத்தினவே தவிர.. பூமியை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்வதில்.. ஆராய்ந்து செயற்படுவதில்.. கூடிய அக்கறை செய்யாமையே இந்த விளைவு இவ்வளவு துரிதமாக வரக் காரணம். ஏலவே 2100 இல் இந்த நிலை வரும் என்று கூறப்பட்டு.. பின் 2040 என்றான போதும்.. அது 2023 இலே அடையப்பட்டிருப்பது.. தொழில்புரட்சிக்குப் பின்னான நாடுகளின் செயற்பாடுகளில் பூமியை பற்றிய அக்கறையின்மை குறைந்ததே காரணம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?! இது நாடுகளின் பிரச்சனை என்று பொதுவாக பார்க்கப்பட்டாலும்.. வாழ்ந்த வாழும்..ஒவ்வொரு மனிதனதும் பங்களிப்போடு உருவான பிரச்சனை. எனவே காபன் வெளியீட்டு அளவை குறைப்பதன் மூலம்.. குறிப்பாக பச்சைவீட்டு வாயுங்கள்.. (கரியமிலை வாயு.. மீதேன் வாயு.. உட்பட்ட மேலும் சில வாயுங்கள்) வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம்.. பூமி இந்த பச்சை வீட்டு விளைவில் இருந்து மீள்கிறதா என்று நோக்கலாம். குறிப்பாக கோவிட் காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்டு முடக்கங்களால்.. சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தாலும்.. கோவிட் முடக்க தளர்வின் பின்.. மீண்டும் நிலை மோசமாகியுள்ளது. நான் இதை எப்படி குறைக்க உதவிறது..?! பல வழிகளில் உதவலாம். குறிப்பாக சுவட்டு எரிபொருள் பாவனையை குறைப்பதன் மூலம்.. வெளியிடப்படும் மாசு வாயுங்கள் உள்ளடங்க.. கரியமிலை வாயுவின் அளவை குறைக்கலாம். இதற்கு சுவட்டு எரிபொருள் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். பொதுப்போக்கு வரத்துப் பாவனையை கூட்டலாம். குறுகிய பயணங்களை நேரத்திட்டமிடலுடன் கால் நடையாகவோ.. துவிச்சக்கர வண்டி மூலமோ மேற்கொள்ளலாம். மீதேன் வெளியேற்றத்தைக் குறைக்கதக்க வழிமுறைகளை அல்லது காபன் மீள் கைப்பற்றல் பொறிமுறைகளை.. அல்லது காபன் சமநிலை செய்முறைகளை பின்பற்றலாம். அதென்ன காபன் மீள் கைப்பற்றல்.. காபன் சமநிலை..??! சுவட்டு எரிபொருட்கள் பன்னெடுங்காலத்துக்கு முன் வளிமண்டல கரியமிலைவாயுவை கொண்டான.. காபன்பெறுதிகளால் உருவாகி.. பூமிக்குள் புதைந்து போன உக்கல்களால் உருவான ஒன்று. அதனால் கரியமிலை வாயுவின் அளவு வளிமண்டலத்தில் படிப்படியாக குறைந்து.. . உயிரினங்கள் தொடர்ந்து.. வாழக் கூடிய வெப்பநிலையுடன் கூடிய சூழல் பூமியில் உருவானது. அதுபோக.. பூமியின் பெருமளவிலான கரியமிலைவாயு கடலோடு கலந்து கிடக்கிறது. மேலும்.. பூமி வாழ் தாவரங்களும்.. கரியமிலை வாயுவை உள்வாங்கி நமக்கு சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை (ஒக்சிசன்) தருகின்றன. ஆக.. வளிமண்டலத்துக்குள் மேலதிமாக விடப்பட்ட கரியமிலை வாயுவை மீள் கைப்பற்றுவதன் மூலம்.. குறிப்பாக தாவரங்களை பயன்படுத்தி.. அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் அதுவா நடக்குது. காடழிப்பு.. வேலி அழிப்பு.. காணிகளில் உள்ள தாவரங்கள் அழிப்பு.. என்று தாவரங்கள் வெட்டி அழிக்கப்படும் அளவுக்கு அவை மீள் உருவாக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி.. காபன் சமநிலை செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக.. நீங்கள் (ஒரு தனி மனிதன்) ஒரு நாளைக்கு பூமியில் சேர்க்கும் 400 கிராம் காபன்சார் வாயுக்களை குறிப்பாக கரியமிலை வாயு.. மீதேன்.. இதனை மீள அகத்துறிஞ்சக் கூடிய பயிர்களை வளர்த்து.. அந்தப் பயிர்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவை பெறுவதும்.. மீண்டும்.. அந்த உணவின் வழி வெளியேறும் காபன் அளவை மீளக் கைப்பற்றி.. அதாவது பயிர்களை வளர்த்து.. அதனை மீண்டும் உணவாக்குவது.. இப்படி சுழற்சி முறையில் செய்துவரின்.. உங்களால்.. வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் நிகர காபன் சார் வாயுக்களின் அளவு பூச்சியமாக இருக்கப் பார்த்துக் கொள்ளலாம். இதனை ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது.. தனிமனிதன் ஒருவன் வெளியிடும் காபன் சார் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைக்கலாம். எப்ப பார்த்தாலும் கார் கார் என்று கொண்டு நிற்கிறாங்களே.. இப்ப மின்சாரக் கார் வந்திட்டு அப்பவும் இந்த பிரச்சனை இருக்கா..?? சுவட்டு எரிபொருளை பாவிக்கும் எல்லாப் பயண முறைகளும்.. பச்சைவீட்டு வாயுக்களின் அளவை அதிகரிக்கும். அது காராக இருக்கலாம்.. விமானமாக இருக்கலாம்.. கப்பலாக இருக்கலாம். எனவே அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்கலாம். ஆம்.. மின்சாரக் கார்கள் வந்துவிட்டன தான். அவற்றால்.. நேரடியாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றமில்லை. ஆனால்.. மின்சாரக் காரை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில்.. அதன் மூலப் பொருள் தொடங்கி முடிவுப் பொருள் வரையான பல செயல்முறைகளில் இன்னும் சுவட்டு எரிபொருள் மின்சக்தியே பயன்பாட்டில் இருக்குது. குறிப்பாக நிலக்கீழ் காபன் சார் வாயுக்களை (காஸ்) எரியூட்டி பெறும் மின்சக்தி. ஆக மின்சாரக் கார்கள்.. வீதியில் புகையை கக்கவில்லை என்றாலும்.. அவை உருவான வழியெங்கும் புகை. இவை எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரனும் என்றால்.. கார்களின் பாவனையை குறைத்து.. மின்சார பொதுப்போக்குவரத்தை அதிகம் பாவிக்க வேண்டும். குறுந்தூரப் பயணங்களை நடந்து சென்று செய்வதன் மூலம்.. இந்த பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். ரஷ்சியாவில் இருந்தான இந்த வாயு சப்பிளை குழாய்களை தான் மேற்கு நாடுகள் உக்ரைனை கொண்டு உடைத்தன. அதனால்.. கூடிய ஆதாயம் அடைந்தது அமெரிக்காவின் சுவட்டு எரிபொருள் கம்பனிகள். அவையே இப்போ.. ஐரோப்பாவுக்கான முக்கிய சப்பிளை முகவர்கள் ஆகிவிட்டனர். உக்ரைன் சனநாயகம்.. ஆக்கிரமிப்பு.. யுத்தம் என்பது வெறும் சாட்டு தான்.. அதன் பின்னணியில் இருப்பது.. அமெரிக்காவின் சுயநலம். இந்த யுத்தத்தை நன்கு திட்டமிட்டு ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா தான். மேலும்.. கூடிய பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா.. சீனா உள்ளிட்ட உலகின் முதன்மை பொருளாதார நாடுகளே முன்னிற்கின்றன. சுழற்சி முறை பயிர்செய்கை உதவுமா..??! ஆம்.. பயிர்களை உற்பத்தி செய்து விளை பொருட்களை ஈட்டிய பின்.. பயிர்க் கழிவுகளை அதே மண்ணில் இட்டு உக்க வைத்து உரமாக்கி மீள் பயிர்செய்கைக்கு அந்த உரமிட்ட வள மண்ணைப் பாவிப்பது.. கூடிய காபன் சமநிலைக்கு உதவும். இதே வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள் கழிவுகளையும் உரமாக்கி தாவரங்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம்.. காபன் மீளக் கைப்பற்றலுக்கும்..காபன் சமநிலை செயற்பாட்டிற்கும்.. நாம் சிறுக என்றாலும் பங்களிக்காலம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது காபன் மீளக் கைப்பற்றல் என்பது பெருமளவில் நிகழ வாய்ப்புண்டு. இது தாவர மீதிகளை எரிப்பதனை விட கூடிய காபன் சமநிலையானது. இவ்வளவும் வாசிச்சாப் பிறகு உங்க மூளைக்கு ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கா.. அதற்கு சுருக்கமாக.. பூமியின் சராசரி வெப்ப அதிகரிப்பு எச்சரிக்கை எல்லை அளவான 1.5 பாகை செல்சியஸை கடந்த ஆண்டில் தாண்டி இருக்குது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னரே நிகழ்ந்துவிட்டது. இது கரியமிலைவாயு போன்ற வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றத்தால் உருவாகும் பூமி வெப்பமுறுதல் என்ற பச்சைவீட்டு விளைவின் வெளிப்பாடாகும். இதில் மனித செயற்பாடுகளே முதன்மை. இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்.. காபன் சார் வாயு வெளியேற்றச் செயற்பாடுகளை குறைப்போம். (சுவட்டு எரிபொருள் பாவனையை குறைக்கும் எல்லாச் செயற்பாடுகளும் இதற்கு உதவும்) காபன் சார் வாயுக்களை மீள் கைப்பறல் செய்யும் செயற்பாடுகளை ஊக்குவிப்போம். (தாவரங்களை குறிப்பாக மீள் காடாகத்தை ஊக்குவிப்போம். மீள் பயிர்செய்கையை வளப்படுத்துவோம்.) இது நமக்காக மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததிக்கும்.. பூமியின் வளமான எதிர்காலத்திற்குமாகும். உசாத்துணை: https://www.bbc.co.uk/news/science-environment-68110310 https://www.bbc.com/future/article/20231130-climate-crisis-the-15c-global-warming-threshold-explained https://www.ipcc.ch/sr15/ https://www.worldometers.info/co2-emissions/co2-emissions-by-country/ https://www.statista.com/chart/28725/cumulative-co2-emissions-per-country-since-1970/ மேலதிக விளக்கப் படங்கள்:- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
நமக்கு விளங்குது உங்கள் தீவிரம். ஆனால் அண்ணா.. நாங்கள் நேரடியாக இந்தத் துறை சாரவில்லை. மருத்துவத்துறை என்பதால்.. பலதையும் அறியும் ஆர்வம் இருக்குது. மின்னஞ்சல்களும் பலதுறை சார்ந்தும் வரும்.- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
டொலர் தானே அண்ணா.. முந்திரிக்கொட்டை கணக்கா.. தான் தான் முதல்ல என்று நிற்குது. அதுதான். 😄- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.- விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
நாங்க கன்றுக்குட்டியை கன்றுக்குட்டி என்கிறம். நீங்கள் இல்ல.. கன்றுக்குட்டி தான் மாடு என்றீங்க. கன்றுக்குட்டியை கன்றுக்குட்டியாக ஏற்றுக் கொண்டு போயிருந்தால்.. இந்த அநாவசிய வெட்டி ஒட்டல்கள் அவசியமில்லை. ஏனெனில்.. இவை ஏலவே மேற்கு சார்பு ஆட்களால் பலவகையாக எழுதப்பட்டு விடப்பட்டவை தான். அவை எப்போதுமே தாங்கள் தான் எல்லாம் முதலில் என்று எழுதித் தள்ளுபவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள். எங்களுக்கு சார்ப்பானவை எல்லாம் பயங்கரவாதம் சார்பானது என்று எழுதுபவர்களின் ஆக்கங்ளை ஒட்டி கன்றுக்குட்டியை மாடு என்று நிறுவ முற்படுவதை.. யாழ் கள வாசகர்கள் நன்கு உணரக் கூடிய பக்குவமானவர்கள். 😄- விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
மேலே சரியான விளக்கம் அளித்த பின்னும்.. தவறான கற்பிதம் என்ற போர்வையில் புலிகளின் தனித்துவங்களை சிறுமைப்படுத்துவதை நாங்களும் அனுமதிக்கப் போவதில்லை. மீண்டும் சொல்கிறேன்.. உக்ரைன் களவெடுத்திருக்கும்.. தற்போதைய ஸ்ரெல்த் வகை வெடிமருந்தேற்றிய அதிவேக சிறிய வகை கடற்கல தாக்குதல்களின் முன்னோடிகள் புலிகளே. அதற்கு முன் நடந்த தாக்குதல்கள் படகுகள் வடிவமைப்புக்களும்.. தாக்குதல் வடிவங்களும் வேறு. முதலில் இதனை தாங்கள் வாசிச்சு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வீரகேசரியின் மேற்படி கட்டுரையில் சொல்லப்பட்டவை எவையும் மிகையாகத் தெரியவில்லை. களத்தில் அவதானித்ததையே வீரகேசரி ஒப்பிட்டுள்ளது. தமக்கு சந்தேகமானதை சந்தேகத்துடனேயே சொல்லியும் உள்ளது. மேலும்.. புலிகளைப் பற்றி எழுதினாலே.. சர்ச்சை.. விசாரணை என்ற சூழல் நிலவும் இன்றைய காலத்தில்.. வீரகேசரிக்கு.. புலிகளை வைச்சு வியாபாரம் செய்வது ஆபத்தாகவே முடியும். ஒருவேளை சுமந்திரன் போல்.. புலிகளால் எனக்கு ஆபத்து என்று அவிச்சால்.. அதற்கு இருக்கும் சொறீலங்கா அரச.. படை ஆதரவு.. நிச்சயம்.. புலிகள் பற்றிய யதார்த்தத்தை.. அவர்களின் திறமைகளை செப்புவதால் வராது.- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
எங்கள் பணியிட வைத்தியசாலை மின்னஞ்சல் வழி வைத்தியசாலையின் எல்லா சேவையாளர்களுடனும் பகிரப்பட்ட மின்னஞ்சல் வழி வந்த செய்தியும் கூட.- உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா
ஒரு காலத்தில் பருப்பு ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்த ஹிந்தியா.. ஆசியாவின்.. சிலிக்கான் வலி கனவில்.. இன்று பருப்புக்கு கையேந்தும் நிலையிலும்.. ஐ ரி ஆக்களை உற்பத்தி செய்து.. அந்நிய நாடுகளுக்கு ஓட விடும் நிலையிலும் நிற்கிறது. நல்ல முன்னேற்றம்.- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS Foundation Trust Tamil Heritage Month is an exciting opportunity to celebrate the invaluable contributions of Tamil Biomedical Scientists and laboratory professionals. Tamil is a Dravidian language that's been around for over 2000 years, spoken in places like Sri Lanka, Southern India, Singapore, and by diaspora Tamils. This month offers a unique occasion to embrace our rich cultural heritage and acknowledge the exceptional work of those who operate at the heart of healthcare. This celebration recognises our past and helps shape a more inclusive and promising future for Biomedical Scientists. Sonia Justinsuthakaran, Biomedical Scientist, Blood Transfusion & Haematology, Charing Cross Hospital Tamil Heritage Month to me is a way to mark the existence of the Tamil language, culture and people. As one of the oldest languages in the world, I think it is important to remember how special our mother-tongue is and to share a little bit of our culture wherever we go. Whether it's with our colleagues at work, our partner or our children, we have to make sure that with a rich culture like Tamil, we have to keep it alive for as long as we can and enable our future to do so too. Alagammai Nachiappan, Biomedical Scientist, Biochemistry, Royal Sussex County Hospital. I work as a Biomedical Scientist in clinical biochemistry at University Hospital Sussex NHS Trust. I am an Indian Tamil who has migrated to the UK and am very pleased to witness Tamil Heritage Month being celebrated at the IBMS. From a young age, I developed a passion for Tamil by reading Thirukural, which describes the art of living sensibly, and poems by Bharathiyar. One of my favourite poems by Bharathiyar is “achamillai achamillai,” which asserts that an individual should not fear under any circumstances. My passion for Tamil has played a key role in my growth and development, contributing to my successful life. Mathumitha Kumareshan, Final year student - Coventry University Tamil Heritage Month holds great meaning for me as it is a moment to celebrate the rich history, culture, resilience, and strength of Tamil communities worldwide. It serves to foster a sense of unity and belonging within the global Tamil diaspora. Moreover, this month allows us to reflect on and appreciate the diverse contributions of Tamils, showcasing the enduring spirit that unites us across borders. https://www.ibms.org/resources/news/tamil-heritage-month-2024/- விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
வீரகேசரியின் ஒப்பீட்டில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை. ஸ்ரெல்த் வகை அதிவேக வெடிமருந்து கடற்கலங்களை களத்தில் வடிவமைத்து வெற்றிகரமாகப் பாவித்த பெருமை புலிகளையே சாரும். அந்த வடிவமைப்பு சிங்களத்தால் போரின் பிற்பாடு விற்கப்பட்டிருக்கலாம். உக்ரைனிடமும் அது போய் சேர்ந்திருக்கும். ஏனெனில்.. தமிழினப் படுகொலையில்.. உக்ரைன் கூட்டுக் கொலையாளிகளில் ஒன்று. நேரடியாக களத்தில் சிங்களப் படைகளோடு நின்ற நாடுகளில் ஒன்று. எங்கள் வரலாற்றை நாமே மறைக்க முற்படும் போது.. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியான். நாம் பாவிக்கும் போது பயங்கரவாதம்.. உக்ரைன் பாவிக்கும் போது.. ஆகோ ஓகோ. எம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து எவரும் வரத்தேவையில்லை. நம்மாக்களே போதும். புலமை வித்துவத்தை காட்டுறன் என்ற போர்வையில் சொந்த இனத்தை சிறுமைப்படுத்திச் சீரழிக்க. அது சோள வரலாறு தொடங்கி புலிகள் வரை இதே தான் கதி.- விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
இது புலிகளது வடிவமைப்பு. இது உக்ரைனது. புலிகளை பிரதி செய்த உக்ரைன் Published By: DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM https://www.virakesari.lk/article/137295 ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிமருந்து நிரப்பப்பட்ட அந்தப் படகை, ரஷ்ய கடற்படையினர் பின்னர் நடுக்கடலில் வெடிக்க வைத்து அழித்தனர். இந்தப் படகின் வடிவமைப்பும், பயன்பாட்டு நோக்கமும், கடற்புலிகளின் கரும்புலிப் படகுகளை முன்மாதிரியாவை கொண்டிருந்தது. உக்ரேனின் இந்தப் புதிய ஆயுதம், ரஷ்ய கடற்படையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைக் கடற்படையினருக்கு எதிரான கடற்புலிகள் கையாண்ட போர் உத்திகளை, உக்ரேன் தனக்குரிய பாணியில்- தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையாளத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணம். இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள், பயன்படுத்திய கரும்புலிப் படகுகள் ஆட்களால் இயக்கப்படுவது. பெரும்பாலும் அவை வெளியிணைப்பு இயந்திரங்களைக் கொண்டது. ஆனால் செவஸ்டபோல் துறைமுகம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உக்ரைன் படகு, ஆட்களின்றி பயணம் செய்யக் கூடியது. ‘வோட்டர் ஜெட்’ எனப்படும் ஒற்றை நீருந்து விசை இயந்திரத்தினால் செயற்படக் கூடியது. ஆனாலும், போரின் இறுதிக்கட்டத்தில் உடையார்கட்டுப் பகுதியில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட கடற்புலிகளின் படகு கட்டுமான மையத்தில் இதே வடிவத்தை கொண்ட மற்றும் நீருந்து விசையில் இயங்கும் ஒற்றை இயந்திர படகுகள் வடிவமைப்பு நிலையில் மீட்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட பெரும்பகுதி மூழ்கிய நிலையில், பயணம் செய்யக் கூடியதாக இந்தப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் முனையில், குண்டுத் தலையாக (war head) ஆட்டிலறி குண்டு அல்லது மோட்டார் குண்டு, பொருத்தப்பட்டது. படகில் நிரப்பப்பட்ட வெடிபொருளை வெடிக்கச் செய்வதற்கு அதுவே வெடிப்பு ஊக்கியாக இருந்தது. ஆனால், காங்கேசன்துறை துறைமுகத்தில் கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது மோதிய கரும்புலிப்படகு வெடிக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது குண்டுத் தலை செயலிழந்தால், அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இதன் பின்னர் கடற்புலிகள் தங்களின் கரும்புலிப் படகுகளில் இரண்டு குண்டுத் தலைகளைப் பொருத்தினர். செவஸ்டபோல் துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உக்ரேனின் ஆளில்லா குண்டுப் படகிலும், அதேபோன்று இரண்டு குண்டுத் தலைகளே பொருத்தப்பட்டிருந்தன. கடற் கரும்புலிகளின் படகுகளில் இல்லாத நவீன சோனார் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் அதில் பொருத்தப்பட்டிருந்தன. உக்ரேன் இந்த படகுகளை எப்போது வடிவமைத்தது என்று தெரியவில்லை. ஆனால், இதனை உக்ரேனின் புதிய ஆயுதம் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எனினும், இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே, விடுதலைப் புலிகள் இந்த வகை குண்டுப் படகுகளை கடற்படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் இந்தப் படகுகளை கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தது இத்தாலி தான். இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு, வெடிமருந்து நிரப்பிய படகுகளை இத்தாலி பயன்படுத்தியது. ஆனால் ஜப்பானிய விமானப்படையின் ‘கமிகாசி’ எனப்படும் தற்கொலைப்படை விமானிகளைப் போல, இத்தாலிய கடற்படையினர், செயற்படவில்லை. அவர்கள் ஆறு சிறிய படகுகளில் 330 கிலோ வெடிபொருட்களை நிரப்பி, சுடா குடாவில் (Suda Bay) பிரித்தானிய கடற்படையின் 3 கப்பல்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ‘யோர்க்’ என்ற பிரித்தானிய கடற்படையின் பாரிய போர்க்கப்பலின் மீது இரண்டு படகுகள் மோதி வெடித்தன. மூன்றாவது படகு எண்ணெய் தாங்கி கப்பல் மீது மோதி வெடித்தது. ஏனைய மூன்று படகுகளும், தொழில்நுட்ப காரணங்களாரோ மனித காரணங்களாலோ வெடிக்கவில்லை. இந்த தாக்குதலை நடத்திய இத்தாலிய கடற்படையினர், பிரித்தானிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள், போரில் எதிரியிடம் சிக்கும் மரபைக் கொண்டிராதவர்கள். அவர்கள், கடற்படைக் கப்பலின் மீது மோதி வெடித்து, சாகும் வகையில்- தங்களின் உத்தியை வடிவமைத்தனர். இத்தாலிக்குப் பின்னர் 1948இல், எகிப்தின் அமீர் பாரூக் என்ற போர்க்கப்பலை இஸ்ரேலியப் படையினர் சிறிய வெடிபொருள் படகு ஒன்றை வெடிக்க வைத்து மூழ்கடித்திருந்தனர். அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளே இந்த போர் உத்தியைக் கையாண்டிருந்தனர். பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு மத்தியில், குறைந்தளவு வசதிகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு தான், விடுதலைப் புலிகள் கரும்புலிப் படகுகளை வடிவமைத்தனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் போர் உத்திகளை, பல நாடுகளின் கடற்படையினர் ஆர்வத்துடன் அறிந்து கொள்வதற்கு முயன்றனர். பல நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இலங்கை கடற்படையினரிடம் இதுபற்றி கேட்டறிந்துள்ளனர். கடற்புலிகளின் படகுகளின் திறன் மற்றும் வடிவமைப்பு குறித்து, அவர்கள் நேரிலும் ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். உக்ரைனிய கடற்படை அதிகாரிகள் அல்லது நிபுணர்களும் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொண்டனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படகுகளின் வடிவமைப்பு மற்றும் உத்திகளைப் பிரதி செய்திருக்கின்றனர் அல்லது அதனை முன்னோடியாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், தங்களின் படகில், நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கு இரண்டு குண்டுத் தலைகளை, படகுடன் சேர்த்தே வடிவமைத்திருக்கிறார்கள். ஆனாலும், அந்தப் படகு இலக்குத் தவறி ரஷ்யப் படைகளிடம் சிக்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், வெடிபொருள் நிரப்பிய படகுகளைப் பயன்படுத்தியவர்கள், யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தான். சவூதி அரேபிய கடற்படைக்கு எதிராக அவர்கள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி அவர்களின் ஆயுத அணிவகுப்பு ஒன்றில் ஆளில்லா வெடிமருந்துப் படகுகளும் இடம்பெற்றிருந்தன. இந்தப் படகுகளிலும் நவீன தொழில்நுட்பம் காணப்படுகிறது. இதனை, வடிவமைத்துக் கொடுத்திருப்பது ஈரான் தான் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஈரான், ஆளில்லா விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. அவற்றை தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைப்புகளில் திருத்தங்களைச் செய்திருக்கிறது. அதுபோவே ஆளில்லா தாக்குதல் படகுகளையும் ஈரான் வடிவமைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வாறான வெடிபொருள் நிரப்பிய படகுகளை கொண்டு தாக்கும் உத்திகளை கையாண்ட, அதில் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்றவையெல்லாம் நாடுகளாகவே இருந்து வருகின்றன. விடுதலைப் புலிகள் மட்டுமே, அதிலிருந்து வேறுபட்டு விளங்குகின்றனர்.- புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
இந்த திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில்.. இலங்கை பிரஜைகள் அல்லாதோரிடம் இலங்கையில் பிறந்தார்கள் என்ற ஒற்றைக்காரணத்தை காட்டி தகவல் திரட்ட சொறீலங்கா அதிகாரிகளுக்கு வளர்ந்த நாட்டு தகவல் பாதுகாப்புச் சட்டங்கள் இடமளிக்காது.- சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்
சூளைமேட்டு படுகொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்கிளசை சொறீலங்கா அரசு எப்படி பாதுகாத்து அமைச்சர் பதவி கொடுத்து.. ஏவலாளியாக வைச்சிருக்குதோ.. அந்தளவுக்கு இல்லை என்றாலும்.. தாயகம் திரும்பும் சாந்தனை சொறீலங்கா அதிகாரிகள் துன்பப்படுத்தாமல்.. அவரை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.- எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
ஹிந்தியாவிடம் அடியும் குத்தும் வாங்கின தமிழர்களே.. ஹிந்தியாவை நட்பு நாடென்று கொண்டிருக்கினம். தற்போதைய ஜே வி பி கூட ஹிந்திய எதிர்ப்பை கைவிட்டிட்டுது. மகிந்தவின் வாலும் முன்னாள் ஜே வி பி ஆளுமான உவர் விமல்.. இன்னும் ஹிந்தியக் கடுப்பில் காலம் கழிக்கிறார். - பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.