Everything posted by nedukkalapoovan
-
அயோத்தி இராமர் கோயிலுக்கு செல்லும் நாமல்!
ஹிந்தியாவுக்கு ராமர் கோவிலுக்கு போறாங்க. சொறீலங்காவில்.. சிவாலயத்தை இடிக்கிறாங்க. என்ன ஒரு நடிப்பு.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்ப்பாணத்திற்கு எல்லாரும் வருவினம். ஏனெனில்.. அங்கு பணப்புழக்கம் அதிகம். இல்லாவிட்டால்.. சர்வதேச வர்த்தகக் கண்காட்சி.. உட்பட பல யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க.. என்ன மூல காரணம்..??! அதேபோல்.. போதைப்பொருட்களும்.. மதுபானமும் வந்து குவிகிறது. காரணம்.. மீண்டும் யாழில் பணப்புழக்கம் அதிகம். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பணம் அதிகம். அதை வறுக.. எல்லாரும் வருவினம். யாழுக்கான சொகுசு பஸ் சேவையை சிங்களவர்கள் தமிழர்களை விட திறம்பட நடத்தி.. ஒரு பஸ்ஸுக்கு இப்ப 10 பஸ் விடுகிறார்கள்.
-
குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - வடக்கு ஆளுநரிடம் நெதர்லாந்தின் துணைத்தூதுவர் தெரிவிப்பு
நீங்க ஒன்டும் புடுங்க வேண்டாம். தண்ணீரை வடிக்கட்டும் இயந்திரத்தின் விலைக்கு மானியம் கொடுத்தால் போது.. குடாநாட்டின் தண்ணீர் பிரச்சனையை அங்குள்ள மக்களே தீர்த்து வைப்பர். ஏனெனில்.. 20 லீட்டர் வடிக்கட்டிய நீர் யாழ்ப்பாணத்தில் 100 ரூபா. ஆனால்.. சுப்பர் மார்க்கெட்டில்.. ஒரு லீட்டர் தண்ணி பாட்டல்.. 180 ரூபா. ஆக... குடாநாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பது டக்கிளஸ் கும்பலுக்கான அரசியல். ரோட்டு போடுறது.. காணி விடுவிக்கிறது.. கடலட்டை பிடிக்கிறது.. மணல் அள்ளுவது.. மீன்பிடி.. இப்படி எல்லாமே டக்கிளசிற்கான கமிசனுக்குரிய அரசியலாகிவிட்டது. அந்த வகையில் தான்.. யாழ் குடாநாட்டில் தண்ணீர் பிரச்சனை என்பதும்.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
வாழைக்காய் மலிவு மரவள்ளிக்கிழங்கு மலிவு உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு கீரை மலிவு வல்லாரை பிடி 80 ரூபா தான். வாழைப் பூ மலிவு. போஞ்சி மலிவு. தங்காளி வாங்கக் கூடிய விலை தான். இதரை வாழைப்பழம் மலிவு. ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா) பப்பாளிப் பழம்- 200 ரூபா. இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது.. எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???! மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும். (இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.) யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும்.
-
தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
வேடிக்கை என்னவென்றால்.. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கிய கடனுக்கு வட்டியும் வாடிக்கையாளர்களிடம் இருந்தே அறவிடப்படுவது தான். ஆக.. வாடிக்கையாளர்களின் நிதியில்.. இயக்க வைக்கப்படும் ஒரு அரச ஸ்தாபனமாகவே இலங்கை மின்சார சபை இருக்குது. அதற்கென்று ஒரு தெளிவான செயற்திட்ட நடைமுறை இருக்கா என்பது கேள்விக்குறியே. இதுவே வாடிக்கையாளர்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்கப்படக் காரணம்.
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
நீங்க மேற்குலக சார்ப்பு ராஜதந்திரம் மட்டுமே வேர்க் அவுட் ஆகும் என்று கனவு கண்டதன் விளைவு இது. நீங்கள் ஹிந்தியாவையும்.. மேற்கையும் தாஜா பண்ணுவதால் மட்டும்.. எதையாவது பெறலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால்.. உங்களை விட சிங்களவன் இவர்களை நன்கு தாஜா பண்ண கற்றிருக்கிறான். தமிழர்கள் சார்ப்பில் வலுவான உள்ளூர்.. சர்வதேச ராஜதந்திர அணுகுமுறைகள் இன்றி.. யாரையும் இலகுவில் தமிழர்கள் சார்ப்பாக முடியாது. சீனாவை.. ரஷ்சியாவை ஒதுக்கி வைப்பதோ.. இலத்தீன் அமெரிக்காவை விட்டு வைப்பதோ.. ஆபிரிக்காவை கண்டும் காணாமலும் விடுவதோ.. மத்திய கிழக்கை.. கணக்கே எடுப்பதில்லையோ.. தென்கிழக்காசியா பற்றி அக்கறை இன்மை.. இப்படி.. பல படிநிலைகளில்.. தமிழர்களிடம்.. தமிழ் அரசியல்வாதிகளிடமும் ராஜதந்திர அணுகுமுறைகள்.. ராஜீய உறவுகளை பேணுதல் இல்லை. வெறுமனவே.. மேற்கையும்.. ஹிந்தியாவையும்.. நம்பிக் கொண்டு.. வாய் பார்த்திருந்தால்.. இப்படித்தான் அங்கலாய்க்க நேரிடும். தமிழர்கள் சார்ப்பில்.. சார்ப்பான முடிவெடுக்க மேற்கிற்கோ.. ஹிந்தியாவுக்கு.. அழுத்தம் கொடுக்கக் கூடிய சர்வதேச ராஜதந்திர நடைமுறைகள் அணுகுமுறைகள் எதுவும் தமிழர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அது 2009 தோடு காலி.
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
மகிந்த பற்றியும் இப்படி ஒரு கற்பனை இருந்தது. அவரை சந்தித்து சில பேச்சுக்களிலும் ஈடுபட்டார். இறுதியில் எல்லாம் புஸ்வாணம் தான். ஐயாவுக்கு சிங்கள தேசத்தின் அரசியல் சற்றும் புரியவில்லை.. அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்.
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
மகிந்த கும்பல்.. ரணில் கும்பல்.. (சஜித் யை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதினமில்லை..) க்கு மாற்றீடாக ஜே வி பி வந்தால்.. என்ன என்று சிந்திக்கும் நிலை இலங்கை மக்களிடம் பரவலாக காண முடிகிறது. அந்த வகையில்.. ஹிந்தியா.. இவரை அழைச்சிருக்கலாம்.
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
ஒரு பக்கம் கஞ்சா செய்கை. ஏற்றுமதி. இன்னொரு பக்கம் போதைவஸ்து ஒழிப்பு.. கைது. என்னடா பண்ணுறீங்க. சும்மா.. ஊதிப் பெருத்த இராணுவத்தையும் பொலிஸையும் வைச்சு.. எப்படி சமாளிக்கும்.. வறிய சொறீலங்கா..??!
-
யாழில் தரிசு நிலத்தில் அறுவடை!
இம்முறை தீவகம் உட்பட வடக்கில் நல்ல நெல் விளைச்சலை காண முடிகிறது. பரவலாக மக்கள் தரிசாக கிடந்த விளை நிலங்களில் எல்லாம் நெல் போட்டிருக்கிறார்கள். விளைச்சலும் நல்லா இருக்குது.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
இவர் ஒரு தரவுப் பெட்டகம். எல்லாத்தையும் விரல் நுனியில் வைச்சு அடிச்சுத் தள்ளுவார் நம்பிவிடுங்கள் மக்கள். முதலில் மக்களோடு பழகிப் பார்த்து மக்கள் கருத்தறியுங்கள். அதைவிடுத்து.. தேர்வு செய்யப்பட்ட தெரிவுத் தரவு எடுக்கும் நிறுவனங்களின் தேவைக்கு பயன்படுத்தப்படும் தரவுகள் மூலம்.. ஒரு பல்லின சமூக நாட்டின் உண்மை நிலையை வெளிக்கொணர முடியாது. இது ஈழத்தில் இன்று மக்களின் நிலைக்கு உதாரணம் சொல்லலாம். நோர்வே அரசின் நிலைப்பாடு என்பது பரந்துபட்டதாக இருக்கலாம். உதாரணத்துக்கு.. அது உலகெங்கும் இருந்து அகதிகளை உள்வாங்கிறது. ஒரு காலத்தில் நோர்வே இந்தளவுக்கு.. அகதிகளை உங்காங்கும் கொள்கையை கொண்டிருக்கவில்லை. ஆனால். உள்ளக.. நோர்வே மக்களிடம் இதன் தாக்கம் குறித்து அரச கருத்துக் கேட்டதாக இல்லை. அரசின் செயலில் அங்கும் விமர்சனங்கள் உள்ளது. அண்மையில் கூட நோர்வேயில் லண்டன் பப்பில்.. ஒருபால் சேர்க்கையாளர்களின் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டாலும்.. அமைதிப்பூங்காவான நோர்வேக்குள் இஸ்லாமிய பயங்கரவாதம் எப்படி புகுந்தது...??! அது குறிப்பாக.. ஒருபால் சேர்க்கையாளர்களை குறிவைக்க என்ன காரணம்..???! வழமை போல்.. மனநோயாளர் என்று நோர்வே பொலிஸ் காரணம் சொல்லி தப்பி விடும். அதேபோல் தான்.. சில ஆண்டுகளுக்கு முன்.. நோர்வே வரலாற்றில்.. பலரை சுட்டுக்கொன்ற நபரையும் (80 க்கும் அதிக அப்பாவிகளை தேடி தேடி வேட்டையாடிய).. மனநோயாளர் என்று.. நோர்வே பொலிஸ்.. இப்ப.. அதே மக்களின் வரிப்பணத்தில் சகல வசதிகளுடனும் வாழ வைத்துள்ளது. இதில் நோர்வே மக்களுக்கு அதிருப்தி உண்டு. தரவுப் பெட்டகம் இதற்கும்.. தரவு இருப்பதாகச் சொல்லலாம். முதலில் தரவுகளை எங்கிருந்து எடுக்கிறார்.. என்ற உசாத்துணையே இல்லாமல்.. அதன் பக்கச்சார்பின்மை.. நம்பகத்தன்மை.. எல்லாமே கேள்வியாக இருக்கும் நிலையில்.. தான் அடித்து விடுவதே சரி என்பது இவரின் வழமையான பாணி.
- மாதங்களில் நான் மார்கழி.
-
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் - டக்ளஸ் தேவானாந்தா
அவர் குற்றவாளியே அல்ல. குற்றம்சாட்டப்பட்டு சோடிக்கப்பட்டு உள்ளே.. தள்ளப்பட்டவர். இவர் செய்த கொலைகளுக்கு இவரை இவர் சார்ந்த மக்களே.. வாக்குப் போட்டு தெரிவு செய்து சிங்கள ஏஜென்டாக செயற்பட வைச்சிருக்கும் நிலையில்.. இவர் ஒரு அப்பாவியை தன்னும் காப்பாற்ற முடியாமலா.. வழக்கு இவ்வளவு இழுபடுது..??! கருணை மனு போடப்பட்டும்.. இவர் இப்ப தானாம் சட்டமா அதிபரோடு கலந்துரையாடப் போறார்..?? ஏன் இதனை முன்னமே செய்யவில்லை. செய்திருந்தால்.. மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டி வந்திருக்காதே..??! அவர் உண்மையான கொலையாளியாக இருந்திருந்தால்.. ஈபிடிபியே சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களோடு சேர்ந்து அவரை எப்பவோ கடத்தி போட்டுத்தள்ளி இருப்பார்கள். இப்படி வழக்கு கிழக்கு என்று இழுபட்டிருக்க விடமாட்டார்கள். சூளை மேட்டு வழக்கில்.. தான் தண்டனையில் இருந்து தப்பி இருப்பது எப்படின்னு தெரியவில்லைப் போலும்.. ஒரு அப்பாவியின் விடுதலையிலும்.. சுயநல ஆதாய அரசியல். என்ன ஜென்மங்களோ..??!
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
இது குடியேறி எதிர்ப்பு மனநிலை அல்ல.. குடியேறி.. குடியேறிய நாட்டின் உயர் பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல்... தங்கள்.. தாய் நாட்டில் செய்த அதே கீழ்த்தரமான செயல்களை குடியேறிய நாட்டிலும் அரங்கேற்றும் செயல்களுக்கு எதிரான மனநிலை. செங்கனில் இல்லாத போதும்.. நோர்வே உட்பட ஐரோப்பிய பிரஜைகளை பிரிட்டன் தானியங்கி மூலம் உள்நுழைய அனுமதிக்கும் போது தாராளவாதம் பேசும் நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகள்.. பிரிட்டன் மீது காட்டும் இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்.. செங்கனா..??????! ஓரினச் சேர்க்கை என்பது...இப்போ இயற்கை சார் விடயமாக அன்றி.. புகுத்தப்படும் விடயமா மாறி கனகாலமாயிட்டுது. நீங்கள் இன்னும் உங்கள் பழைய நிலைப்பாட்டில் நின்று தொங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும். அந்தளவு தான் தாங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடந்து செல்வதைத் தவிர.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
கருத்தை முதலில் ஒழுங்காக இணைக்கப்பட்ட செய்தியோடு சேர்த்து வாசிச்சு விளங்கப்பழகனும். அது யாழில் பலருக்கு இல்லை என்பது இங்கு தெளிவாகிறது. நோர்வே.. அமைதிப்பூங்காவாக இருந்த காலம் எப்பவோ மலையேறிட்டுது. அதேபோல் சுவீடனும். இதற்கு முதன்மைக் காரணம் எல்லைகள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு திறந்து விடப்பட்டமை. நோர்வே மக்களே சொல்லினம்.. முன்னர் ஒரு பொருளை வீதியில் போட்டால்.. அது அப்படியே இருக்கும். ஆனால்.. இப்போது கிழக்கு ஐரோப்பியர்கள் வந்த பின்.. போட்ட பொருள் தனக்குத்தான் என்று களவாடிச் சென்று விடுகிறார்கள் என்று. இது நோர்வேயில் மக்களிடம் கதைச்சறிந்த விடயம். அதேபோல்.. மிகவும் கிறிஸ்தவ கலாசாரத்தில் பற்றுள்ள நோர்வே மக்கள் ஒருபால் சேர்க்கை அதிகரிப்பு குறித்தும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் கருத்துக்களில் இவை தொணிக்கும். அதற்கு முதலில் நோர்வே மக்களோடு பழகனும். தமிழ் கடையிலும்.. பாக்கி கடையிலும்.. சமான் வாங்கிறதும்.. சமைக்கிறதும்.. சாப்பிடுறதும்.. பேர்த்டே பார்ட்டி செய்யுறதும்.. ஏதோ வேலைக்கு போறதும்.. வாறதும் என்ற வாழ்க்கையில்.. இவை தெரிய வர வாய்ப்புக் குறைவு. மேலும்.. மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்.. கொலைக்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால்.. நோர்வேயில் உள்ள தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகள்.. அதிகரித்துவரும்.. ஒருபாலினச் சேர்க்கைக்குள் இழுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருப்பதை.. பொதுவாக அவதானிக்கலாம். இதனை நோர்வே மட்டுமல்ல.. பிற மேற்குலக நாடுகளிலும் காணலாம். ஆனால்.. நோர்வேயில்.. இந்தக் கவலை முன்னரை விட இப்போ அதிகரித்திருப்பது தெரிகிறது. அந்த வகையில்.. தான்.. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. என்று சொல்லப்பட்டிருக்கே தவிர.. வேறு எதையும் புனையும் நோக்கம் இங்கில்லை. முதலில் கருத்தை செய்தியோடு சரிவர பொருந்தி படித்து விளங்கத் தெரிய வேண்டும். அதைவிடுத்து வெறுமனவே குற்றம் சாட்டிச் செல்வது பொருத்தமானதல்ல. மேலும் சிலர் அவர்கள் பார்வையை மாற்றத் தயாரில்லை. தாங்கள் நெடுக்ஸை நோக்கி உருவகித்து வைத்திருக்கும்.. விம்பத்திற்கு லைக் வெறுப்பு கருத்து எழுதிச் செல்கிறார்கள். அவர்களின் கருத்தை.. செயல்களைக் கண்டுகொள்வதே இல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில வேளைகளில் வேலை செய்யாது. அந்த வகையில்.. Other Media (you can see it at the right bottom corner of text box where you type your message to post)---> Insert image from URL ---> copy and paste image link address---> click insert into post இப்படி செய்தால் வேலை செய்யும். நான் நினைக்கிறேன் சில ஊடகங்களில் இருந்து நேரடியாக வெட்டி ஒட்ட அனுமதிக்கினம் இல்லை.
- மாதங்களில் நான் மார்கழி.
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொல்லுற நோர்வே.. ஐரோப்பிய ஒன்றியக் காரர் தானியங்கி ஸ்கான் மூலம் போகலாம்.. என்றப்போ.. பாகிஸ்தானிய.. சோமாலிய.. கிழக்கு ஐரோப்பிய.. மற்றும் உக்ரைன் மாபியாக்களை இறக்கி வைச்சு குசலம் விசாரிச்சால் இப்படித்தான் ஆகும். நோர்வேயில் முன்னரும் தமிழ் குழுச் சண்டை இருந்தது. இது தனிப்பட்ட விவகாரமாக இருக்கலாம். அங்க இப்ப எங்கட ஆக்கள் மத்தியில்.. கேய்.. லெஸ்பியன் கூடிட்டுது. இப்படியான கொலைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.
-
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் அலெக்ஸ் மரணம் - நீதிமன்றத்தின் உத்தரவு
நீதவான் என்ன நீதவான். துரையப்பா பேரப்பிள்ளை சொன்னானில்ல.. சொல்லு.. அது தான் சரி. நாம அப்படித்தான் எடுப்பம். மனித உரிமை கண்காணிப்பகம் கூட.. நமக்கு ஒரு பொருட்டே இல்லை.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
ஏன் கனடா பிரஜா உரிமை பெற்றால் என்ன சாகா வரம் பெற்ற கணக்கா. இந்தக் கனடாக் குடியேறிகளின் அலப்பறை தாங்க முடியல்ல. 🙃
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
கனடா பொலிஸே வாழ்த்திட்டு போயிருக்கு.. இவர் அவைட நிழலில் வாழ்ந்து கொண்டு.. ஓ.. இவருக்கு வாற கமிஷனை பொலிஸ் அடிக்குது போல.... அதுதான் குரைக்கிறார்.
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
கனடா பல விதமான உதவிகளை பல நாடுகளுக்கும் செய்து தான் வருகிறது. தமிழ் அகதிகளை அரவணைத்துக் கொண்டு இன்னொரு பக்கம்.. தமிழினப் படுகொலையின் போதும் அது மறைமுகமாக பங்களித்துள்ளது. அது வேறு விவாதிக்கப்பட வேண்டிய விடயம். ஆமாம்.. அது தான் கனடாவில்.. சட்டரீதியாக்கிட்டாங்கள். சும்மா எல்லாம் அவிழ்த்துவிடக் கூடாது. சொறீலங்காவில் கஞ்சா வளர்க்க அமைச்சர் பரிந்துரைக்க.. சொறீலங்கா பொலிஸ் போதைவஸ்து கடத்திறவனை பிடிக்குதாம். போதைவஸ்து கடத்துவதே பொலிஸ். இதில...???! இவர் என்ன அறிவுரையை வழங்குவார்..??! இனப்படுகொலையின் அங்கமாகவும் ஆக்கிரமிப்பின் அங்கமாகவும் சொறீலங்கா பொலிஸ் இருக்குது. அதனை தவிர்த்து தமிழ் மக்களின் நலன் குறித்து பேச முடியாது. தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமையில் கூட.. பொலிஸ் அதிகாரங்களை தர மறுக்குது சிங்களம். இந்த இடத்தில் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பது.. அதுவும் ஒரு புலம்பெயர் கனடிய தமிழரை கொண்டு வெள்ளையடிப்பது தற்செயலானதல்ல. நன்கு திட்டமிட்ட செயல். தொங்க வேண்டிய இடத்தில் தொங்காமல் விட்டுத்தான்.. எமக்கான நீதி.. உரிமைகளை இழந்து நிற்கிறோம். அதே தவறை திரும்ப திரும்பச் செய்யக் கூடாது. தனிநபர்களின் போலிப் புகழ் தேடலுக்காக. அந்த பல நூறு வட்டங்களும் மாசுபட்ட ஒரு பொலிஸ் என்றால் அது சொறீலங்கா பொலிஸ். நான் சொல்லவில்லை.. ஆண்டு தோறும் வெளிவரும்.. மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் சொல்கின்றன. அவர்களும் தேவை இல்லாத ஊஞ்சலாடினமாக்கும். உங்களுக்கு சொறீலங்கா பொலிஸூக்கு குஞ்சம் கட்ட வேண்டிய தேவை இருக்கலாம். நமக்கில்லை. தெரிகிறது... ஆனால் நிச்சயமா தெரியவில்லை. இதுவே போதும். அறியாமல் செய்கிறாங்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம். அறிந்து செய்தாலும். ஆனால் இதுகள் சொந்த இனத்தின் இத்துனை துயர்களையும் அழிவுகளையும் கண்ட பின்னும்.. சொறீலங்கா பொலிஸில்.. உண்மையான நேர்மையான சர்வதேச தரத்திலான.. மாற்றங்களை கோராமல்.. போலிப் புகழ்ச்சி செய்து.. கேடயம் வாங்கிச் செல்வது எந்த வகையில்.. சொறீலங்கா பொலிஸ் தன் தரத்தை மேம்படுத்த.. தன்னை திருத்திக்க.. தன் தவறுகளுக்கு பொறுப்பேற்று குற்றவாளிகளை தண்டிக்க.. கப்பம் ஏவல் கொள்ளை கொலை..கடத்தலில் கூட்டுப் பங்காளியாக இருப்பதை விட்டொழிக்க தூண்டும்..??! இவை எதுவுமே நிகழாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படுற மாதிரியே தெரியவில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சுமக்கும் ஒரு கொடிய பொலிஸ் சேவைக்கு.. கனடா உதவுவது எந்த வகையில்.. கனடாவின் கொள்கைகளுக்கு அமைவாகும்.. இதை கனடாவிடம் கேட்க வேண்டிய ஒரு நபர்.. சொறீலங்கா பொலிஸூக்கு வெள்ளையடிச்சு கேடயம் வாங்கிச் செல்வதன் நோக்கமென்ன..??! சொறீலங்கா பொலிஸில் உள்ளவர்களில் பலர் குற்றவாளிகள். அவர்களை தண்டிக்காமல்.. நீதியின் முன் நிறுத்தாமல்.. சொறீலங்கா பொலிஸ் உருப்படாது. அதேபோல்.. சொறீலங்கா பொலிஸை அரசியலுக்கு அப்பால் கண்காணிக்கக் கூடிய சுயாதீன அமைப்புக்கள் இன்றி.. சொறீலங்கா பொலிஸ் உருப்பட வாய்ப்பில்லை. மாறாக.. சொறீலங்கா பொலிஸின் கடந்த கால நிகழ்கால குற்றங்களை மறைத்து குற்றவாளிக் குலாமாக இருக்கும் சொறீலங்கா பொலிஸுக்கு வெள்ளையடிப்பதால்.. எந்த மாற்றமும் வராது. அதேபோல்.. தமிழர் பிரதேசங்களில் இருந்து.. இனப்படுகொலையின் அங்கமான சொறீலங்கா பொலிஸ் வெளியேற்றப்பட்டு.. பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழ காவல்துறைக்கு ஒப்பான நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் செயல்திறனும் மிக்க ஒரு காவல்துறையை தமிழர் தரப்பு கட்டியமைப்பது அவசியம். தமிழர் பகுதி வாழ் முஸ்லிம்களும்.. சிங்களவர்களும்.. விகிதாசார அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டும். இதனை கனடாவிடம்.. வலியுறுத்த துரையப்பாவின் எச்சங்கள் தயாராமோ..?!- 'ஆபாசப் படங்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட வேண்டும்' - பெண் ஆபாசப்பட இயக்குநர்
சமூக ஊடகங்கள் எங்கும்.. முழுக்க ஆபாசப் படங்களும்.. தனிநபர் ஆபாசச் சுருள்களும் பெருகிவிட்டன. பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே.. இப்ப சிமாட் போன் வழியாக.. காட்ட வேண்டியவையை காட்டி..பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற.. அவையோ.. சில நிமிடங்களில்.. பல ஆயிரம் பார்வைகளை தாண்ட.. பிரசித்தமுன்னு ஏ ஐ முன்னுக்குத் தள்ளுகின்றன. அதுபோக..சமூக வலை தளங்களின் ஊடாக.. இந்த பிசினஸ் இப்ப கொடிகட்டிப் பறப்பதாகக் கேள்வி. என்ன பள்ளிப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தான்.. முன்னர் ஒரு ஏ படம் பார்ப்பதற்கே.. சமூகம் குளறியடிக்கும்.. அதில் நன்மைகளும் உண்டு. அறியா வயதில் தவறான வழியில் செல்வதை தடுப்பதாக அமைந்தாலும்.. இன்று ஒரு பாதுகாப்பும் இல்லை. எல்லாம் கையில் கிடக்குது. போனை வைச்சு என்னத்தை நோட்டுறாய்ங்கன்னு.. யார் கண்காணிக்க முடியும். இப்ப ஆபாசப்படங்களை அவரவர் விருப்பப்படி தானே எடுத்து சமூக வலையில் தரவேற்றினம். இதில.. இவை என்னடான்னா...???! இயன்றவரை.. சமூக வலையில்..நாம் காண நேரிடுபவையை.. எல்லாம் பிளாக் செய்தும் ரிப்போட் செய்தும்.. வருகிறோம். இப்படி.. எல்லாரும் செய்தால் அன்றி.. இதை தடுப்பது இலகு அல்ல. சமூக வலை ஊடகங்கள் குப்பையாகிவிட்டன. இப்ப எல்லாம் ஆன்டிங்க.. சமையல் சமைக்கிறாய்ங்களோ இல்லையோ.. ஆடையை கண்ணாடியா போட்டிட்டு வந்துடுறாய்ங்க. இதில.. கண் பகலாபாத் கிண்டு வதையா கவனிக்கும்..??!🤣- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
2009 க்குப் பின் தமிழர்களுக்கு இதெல்லாம் தனிநபர் வியாபாரமாப் போச்சு. ஆளாளுக்கு சொறீலங்கா சிங்களவனின் காலில் வீழ்ந்து..சரணாகதி அடைவதெல்லாம்.. டிப்ளோமசி.. பாசிட்டிவ் திங்கிங். உங்கட சுமந்திரன் செய்யாததா.. கண்டது என்ன 15 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சம்பந்தர் செய்யாததா.. 50/60 ஆண்டுகள் கடந்து விட்டன. உங்கட சி ரி சி ஈழத்துக்குள் இமாலயத்தை கொண்டு வரப் போட்டினம்.. பிரகடனம் என்னாச்சு.. பிரண்டு போச்சா. அடிப்படையில் எம்மவர்களுக்கு டிப்ளோமசி என்றாலே என்னென்று தெரியாது. எதிரியின் காலில் போய் நேரடியாக வீழ்வதும்.. அவனை பாராட்டி வியாபாரம் வாங்குவதும்.. கேடயம்.. விருது.. பத்திரமும் வாங்குவதென்றால்.. அது டிப்ளோமசி கிடையாது. டிப்பொசிட்.. இன் பின்.. தான். நீங்களும் சில பல ஆங்கிலப் பதங்களை எழுதி இவையை ஏதோ பெரிய வித்துவான்களாக காட்ட நினைக்கிறீர்கள்.. நிச்சயம் சிங்களத்தின் காலில் வீழ்ந்தோ.. முதுகை வருடியோ.. அவனை பாராட்டியோ.. உங்கட டிப்ளோமசி அமையும் என்றால்.. அதனை எத்தனையோ பேர் செய்து முடிச்சிருப்பினம். சிங்களத்திடம் அது சுய சலுகை வாங்கிப் பிழைப்பை ஓட்ட உதவலாமே தவிர.. தமிழ் மக்களுக்கு அணு அளவும் விமோசனம் வராது. இனியும் மக்களிடம்.... உங்களின் சொந்த சுயலாபங்களை இட்டான.. சிங்களவனிடம் சரணாகதி அடைவதை எல்லாம் டிப்ளோமசின்னு சொல்லிக்கிட்டு வராதீர்கள். ஹரி ஆனந்த சங்கரி.. கனடா எம் பி. உலகத்தமிழனத்துக்கு தலைவர் கிடையாது. அவரை மையப்படுத்தி.. தமிழர் உரிமை கோரலும் இல்லை. எனவே.. அவர் மக்களுக்கான.. நேர்மையான வழியில் செல்லும் வரை.. வரவேற்கப்படுவார். எதிரியின் போக்கில் போவதாக மக்கள் உணரும் பட்சத்தில்... மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனந்த சங்கரி எடுத்துக்காட்டு. - கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.