Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். ஒரு பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.
  2. அமெரிக்க உளவு துறை மிக பலவீனமாக இருக்க வேண்டும். ஏனேனில் 20 வயது பையன் திட்டமிட்டு தனியே சுட்டிருக்கிறார். அல்லது அடுத்த ஜனாதிபதியாகாமல் நீதிமன்றம், வழக்குகள் போட்டு ட்ரம்மை உள்ளே போடமுடியாததால் கொலை முயற்சி எனும் தெரிவை எடுத்து இருக்கலாம். வேறு தெரிவுகள்???
  3. பையன் சொல்வது போல் 3 ம் இடத்துக்கான போட்டி நடாத்தப்படுவதில்லை ( யூரோ கோப்பையில்)
  4. சாவகச்சேரி விவகாரம் தொடர்பில் வைத்தியர் ஒருவரின் பதிவு
  5. https://www.caclubindia.com/assets/thomas-crooks/ சுட்டவர் 20 வயது Thomas Matthew Crooks https://www.caclubindia.com/assets/thomas-crooks/
  6. சுட்டவர் வெளியில் இருந்து சுட்டுள்ளார்.
  7. இல்லை. சுட்டவரும் இன்னுமொருவரும் இறந்துள்ளனர். இன்னுமொருவர் உயிருக்காக போராடிய வண்ணம் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
  8. மக்களில் ஒருவர் கைத்துப்பாக்கியோடு உள்ளே மக்களோடு மக்களாக இருந்து சுட்டுள்ளார்.
  9. இந்திய ஆதரவாளர்கள் சம்பந்தரை விமர்சிக்கலாமா? பிரித்தானிய பிரெஞ்சுத் தேர்தலும் வலதுசாரிகளும்....
  10. கான் ஜூனிஸ் பகுதியில் இள்ரேலிய அரச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76. நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளார்கள்.
  11. திராவிட, பி ஜேபி , சீமான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்
  12. வீட்டுச் சின்னம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது சரியான முடிவு எடுப்போம் - ஜனா
  13. பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்
  14. வைத்தியத் துறையில் மாபியாக்களை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? | பத்திரிகையாளா் நிக்சன் செவ்வி
  15. Ramanan Santhirasegaramoorthy புகழ் Fame என்பது "இராஜ போதை" என்று சொல்வார்கள். அதாவது உலகில் உள்ள எந்த விதமான போதைப் பொருட்காளலும் தர முடியாத அதி உச்ச போதையினை தரக் கூடியது 'புகழ்' . தன்னைச் சுற்றிய உலகின் போற்றுதலுக்குரியவராக இருக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் எம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை தொடர்சியாக எடுத்து வருகின்றோம். மற்றவர்கள் எம்மை நல்லவர்கள் வல்லவர்கள் நாலும் தெரிந்தவர்கள் என்று கொண்டாட வேண்டும் என்பதற்கான சிறு முயற்சிகளையாவது நாம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்த புகழ் போதையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்படுவது, தன்னை உயர்வாக காண்பிக்கும் நோக்கில் மற்றவர்களை இழிவு செய்ய முற்படுவது தான் இன்று சிக்கல்களுக்கு காரணமாக மாறியுள்ளது. ஏனைய போதைகளாக மதுபாவனை, போதை மருந்து பாவனை போன்றவை சுய வதைகளாக Self Torture இருக்கும் அதனை உட்கொள்கின்றவர்களுக்கு தான் அதன் நேரடிப் பாதிப்புகள் ஏற்றபடும். அடுத்த நிலையில் அவர்களை சார்ந்த குடும்பங்கள் பாதிக்கப்படும். இந்த புகழ் போதை என்பது சமூகப் பேரழிவுகளை Social Disaster ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கின்றது. இந்த புகழ் போதை கால காலமாக மனிதர்களோடு கூடவே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நடைபெற்ற போர்களிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போர்களின் பின்னணியிலும் இந்த புகழ் போதைக்கு அடிமையானவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இப்போது தோன்றியுள்ள "சமூக வலைத்தளப் புரட்சி" Social Media Revolutionஎன்பது சாதாரணமானவர்களையும் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமக்கு புகழ் வரவேண்டும் என்பதற்காக எதனையும் செய்வதற்கு தயாரான மக்கள் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது மிக ஆபத்தான திசை நோக்கி எம்மை அழைத்துச் சென்று விடுகின்றது. மிகக் கவனமாக கையாளப்பட வேண்டிய பல விடயங்களுக்கும் கூட இந்த புகழ் போதையில் அடிபட்டு வலுவிழந்து போவதை நாம் அண்மை நாட்களில் அவதானிக்க முடிகின்றது. சாவகச்சேரி மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகளையும் வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் எழுச்சியினை ஏற்படுத்திய மருத்துவர் அர்சுனா அதனை தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட புகழை தக்க வைப்பதற்காக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இயங்குவது அந்த மக்கள் எழுச்சியினை திசை திருப்பி தனிமனித போராட்டமாக அதனை மாற்றி விடும் அபாயத்தை தோற்றுவித்திருப்பதாக பலரும் கருதுகின்றார்கள். உண்மையில் சாவகச்சேரி மருத்துவமனை மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு துறைகளும் ஊழல்களால் நிறைந்து கிடக்கின்றது. இலங்கையின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரே ஊழல் மோசடிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நாடு இலங்கை. அதே நேரம் மருத்துவர் அர்சுனா கூறியது போல 95 சதவீதமான மருத்துவர்கள் மிகவும் அர்பணிப்போடு சேவையாற்றி வருகின்றார்கள் என்ற உண்மையினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக அந்த மோசமான 5 சதவீதமானவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அதிகாரங்களை தம்வசம் வைத்துள்ளார்கள். அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தம்மை தப்பவைப்பதற்கு அவர்கள் முயல்கின்றார்கள். இந்த சந்தரப்பத்தில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் மருத்துவர்களை வெளிப்படுத்துவதற்கு மக்களின் எழுச்சி மிக மிக அவசியமானது. மக்கள் எழுச்சியின் சிறப்பான வெளிப்பாட்டை 2022ம் ஆண்டு இதேபோன்ற ஜூலை மாதம் 9ம் திகதி இலக்கைத் தேசம் சந்தித்தது. பெரும்பான்மை சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்பாய ராஜபக்ச என்ற இலங்கையின் பலம் பொருந்திய தலைவரை நாட்டை விட்டே ஓட வைத்த மக்கள் புரட்சியின் மகத்துவத்தை நாம் மறந்து விட முடியாது. கோட்பாய ராஜபக்சவையே ஓட வைத்த பலம் பொருந்திய மக்கள் சக்திக்கு முன்பாக இந்த மருத்துவ ஊழல் கும்பலால் தாக்குப் பிடிக்க முடியாது. அனால் அதனை மேற்கொள்வதற்கான மக்கள் திரட்சியும் சரியான வழிநடத்தலும் இன்று அவசிமாகின்றது. அதனை மேற்கொள்வதற்கான சமூக அக்கறை கொண்ட தரப்புகள் முன்வரவேண்டும். எல்லாவாற்றையும் "அரச்சுனா ராமநாதன்" பாரத்துக் கொள்ளட்டும் நாம் அவரிகள் பதிவுகளுக்கு Like போட்டு Comment எழுதி Share பண்ணினால் வரலாற்று கடமை முடிந்து விட்டதாக எண்ணுவது தவறு. இந்த எண்ணத்தில் இருக்கின்றவர்களின் ஆதரவை நினைத்து புழகாங்கிதம் அடைந்து மீண்டும் மீண்டும் Live video போட்டு Viral ஆவதை தவிர்த்து மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்ற வழிநடத்தலை வழங்க வேண்டும். சமூக வலைத்தள எழுச்சி என்பது மிக மிக தற்காலிகமானது அடுத்த Hot Topic / Trending வரும் வரைக்குமான வாழ்நாளை Lifespan கொண்டது. இதற்கு அண்மையில் பல உதாரண்களை நாம் காண முடியும். எனவே இந்த 'சமூக ஊடகப் புரட்சியை' தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். அதேநேரம் குறிபிட்ட சில ஊழல் பேர்வழிகைள தண்டிக்கும் போர்வையில் சமூக அக்கறையுடன் தமக்கான நல்ல வசதி வாய்புகளை உதறித் தள்ளி விட்டு எமது மண்ணில் எமது மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கும் அரப்பணிப்பு மிக்க மருத்துவர்களை "சோர்வடையச்" செய்யாமால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தோன்றிய அலைக்கு சமூக ஊடகங்கள் மூலமே பதில் வழங்கி தனது கடமையினை நிறைவு செய்த விடலாம் என மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் கொண்ட எதிர்பார்ப்பு மிகத் தவறானது என்பதை அவருடை பதிவில் அவருக்கு கிடைத்து வரும் பின்னூட்டங்களே சான்று. பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தை ஊடகங்களை அழைத்து தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது அவரின் கடமை. சாவகச்சேரி மருத்துமனை நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் யாழ் போதன வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் அல்லது அதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமை மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு இருக்கின்றது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஏனைய மருத்துவர்கள் பிரச்சினைக்குரியவரை வெளியேற்றிவிட்டு தமக்குரியவரை கொண்டு வருவதன் மூலம் தப்பித்து விட முடியாது. தம்மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றால் அவற்றை பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தலாம் இல்லாவிட்டால் அந்த தவறை சரி செய்வதற்கு முயற்சிக்கலாம். " வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல " போகும் பொது நீங்கள் எதனையும் கொண்டு செல்லப் போவதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தெய்வத்திலும் மேலாக மக்களால் போற்றப்படும் மருத்துவத் துறையை அதன் மாண்பு கெடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை நீங்கள் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் சுமக்கப் போகும் மருத்துவ மாபியாவின் குழந்தை என்ற அவப்பெயரை தடுக்க முடியாது. நீங்கள் உழைப்பது உங்கள் எதிர்கால சந்ததியின் நல்வாழ்விற்கு என்று நீங்கள் நம்பினால் அவர்களுக்காக நீங்கள் சேமிக்க வேண்டியது பெரும் தொகைப் பணமல்ல நல்ல பண்புகளை தான் என்பதை அதிகம் படித்த உங்களுக்கு பாமரன் புரிய வைக்க வேண்டியதில்லை. மறுபுறம் ஒருவரை முன்னிறுத்தி 'அவரே' எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மனநிலையில் இருந்து எமது மக்கள் வெளியில் வர வேண்டும். இந்த போராட்டம் என்பது அனைவருக்குமானது என்பதை அனைவரும் கூட்டாக வெளிப்படுத்த வேண்டும். மருத்துவர் அர்ச்சுனா கூறிய பல விடயங்கள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டும், அதே நிலமை ஏனைய மருத்துவமனைகளில் இருந்தால் அவை குறித்தும் பேசப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்களை தமது தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து பெரும் தொகை பணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் முனமையான பெயர் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அரச மருத்துவ மனைகளில் காணப்படும் வளங்களை சரியா பயன்படுத்தாமல் அதற்கு மாற்றீடாக தனியார் நிறுவனங்களை முன்னிறுத்தி அதன் மூலம் இலாபமீட்டும் செயல்பாடுகள் அனைத்தும் சரியான ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளார்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை எமது மண்ணில் நாம் ஏற்படுத்தலாம். 'விடியும் விடியும்... என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே .... முடியாத என்றொன்று கிடையாது பூமியில்.. யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை '
  16. சம்பந்தன் நிம்மதியாக சாகவில்லை | a tribute to R Sampanthan | Sooriyan FM | Viluthugal 0:47 - மனோ கணேசன் 7:48 - சீ. வி. விக்னேஸ்வரன் 16:02 - ரவுஃப் ஹக்கீம் 23:14 - சி. சிறிதரன் 27:24 - பழனி திகாம்பரம் 31:08 - ஜீவன் தொண்டமான் 35:46 - மாவை சேனாதிராஜா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.