Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன் SayanolipavanNovember 10, 2024 ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல. அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது. அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள். அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம். அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார். இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்... இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார். அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார். அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார் https://www.battinews.com/2024/11/blog-post_739.html
  2. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்; சுயேட்சை குழு 4 அறிவிப்பு! தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். மன்னாரில் இன்று (08) மதியம் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பாராளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும் என்பதை கடந்த சில நாட்களாக நான் அறிந்து கொண்டேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சக்திகள் நிறைய பணத்தை கொட்டியுள்ளார்கள். அந்த அடிப்படையில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய நான் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். தான் போட்டியிட இருந்த சுயேட்சை குழு மாற்றத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை நான் இனம் கண்டு கொண்டமையினால் அவர்களுக்கு என்னால் எந்த துரோகமும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த சுயேட்சை குழுவில் இருந்து வெளியேறினேன். மேலும் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்காது சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311923
  3. தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வடமாகாணத்துக்கு பயணித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறாக தமிழர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ஹரிணி, ஜனாதிபதியின் ஆலோசகர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் வடக்குக்குச் விஜயமாகி பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, ஜனாதிபதி அநுர வடக்கில் இன்று தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தின் பாசையூர் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் ஜனாதிபதியின் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதியாக அநுர பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்குக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/தேர்தல்_பரப்புரைக்காக_ஜனாதிபதி_வடக்குக்கு_பயணம்
  4. ரவிராஜின் நினைவேந்தல் adminNovember 10, 2024 சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2024/208152/
  5. தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்? நிலாந்தன். adminNovember 10, 2024 பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் தேதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் தேசியம், சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதில் நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை. அதுபோலவே சுமந்திரனின் பிரச்சாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.மேலும் அவருடைய பிரச்சார காணொளிகளில் அவர் “அறிவார்த்த தமிழ் தேசியத்தின் குரல்” என்று அழைக்கப்படுகிறார். அறிவார்ந்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன? அதுபோலவே மான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் மணிவண்ணன் “நவீன தமிழ்த் தேசியம்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். நவீன தமிழ் தேசியம் என்றால் என்ன? சுமந்திரன் அந்தக் காணொளியில் கேட்பதுபோல,பிபிசி தமிழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல,தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வாக்காளப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பல வேட்பாளர்களுக்கே பதில் தெரியாது. ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு கருநிலை அரசை நிர்வகித்து அது தோற்கடிக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளின் பின்னரும் தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா? தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பொருத்தமான விடையைக் கூறுவார்கள்? அவர்களுக்கு பொருத்தமான விடை தெரிந்திருந்தால் தமிழரசியல் இப்போதுள்ள சீரழிவான நிலைக்கு வந்திருக்காது. எனவே முதலில் நாங்கள் ஒரு தெளிவிற்கு வருவோம்.தேசம், தேசியம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாகப் பார்க்கலாம். தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் தேசமாக வனைகின்றன. முதலாவது பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம் அல்லது சனம். மூன்றாவது பொதுவான மொழி. நாலாவது பொதுவான பண்பாடு. ஐந்தாவது பொதுவான பொருளாதாரம். இந்த ஐந்தையும் விட ஆறாவதாக ஒரு விடயமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளும் ஒரு மக்கள் கூட்டத்தை தற்காப்பு உணர்வோடு தேசமாகத் திரட்டுகின்றன. எனவே இப்பொழுது தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். தேசியவாத அரசியல் என்பது அல்லது தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான். அதாவது அதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், ஒரு மக்கள் கூட்டத்தை உருகிப் பிணைந்த பெருந் திரளாகத் திரட்டுவது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியாவது மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லை. இதற்கு முதற்பொறுப்பு தமிழரசுக் கட்சிதான். ஏனெனில் உள்ளதில் பெரிய கட்சி அது. வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பரந்த கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி. கடந்த15 ஆண்டுகளாக தமிழ் மிதவாத அரசியலின் பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த கட்சி. எனவே கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதற்கு அக்கட்சி தான் முதல் பொறுப்பு. தமிழ்த் தேசிய வரலாற்றில் உருவாகிய,பெரிய கூட்டாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவதற்கு காரணம், தமிழரசுக் கட்சிதான். கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை படிப்படியாக அகற்றும் ஒரு போக்கின் விளைவாக இப்பொழுது தமிழரசு கட்சி தானும் இரண்டாகி,பலவாகி நிற்கிறது. அடுத்தது, தமிழ்த் தேசிய முன்னணி. தேசியவாத அரசியல் என்பதனை தூய்மை வாதமாக சித்திரித்து, தனது அரசியல் எதிரிகளை துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்துவதன்மூலம் அந்தக் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தேசத்தை திரட்டத் தவறிவிட்டது. சிறிய கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்துவது; போலீசாரோடு, புலனாய்வுத் துறையோடு மோதுவது; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களைத் தத்தெடுப்பது; போன்றவற்றின்மூலம் அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் கட்டமைக்கப் பார்க்கின்றது. தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் காட்டிக் கொள்வதே அடிப்படைத் தவறு. ஆயுதப் போராட்டம் வேறு,மிதவாத அரசியல் வேறு. இரண்டாவது தவறு, தங்களைப் புனிதர்களாக காட்டுவதற்காக தமது அரசியல் எதிரிகளை சாத்தான்களாக துரோகிகளாக சித்தரிப்பது. மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் யாரும் தங்களை தியாகிகள் ஆக்கிவிட முடியாது. மாறாக, முன்னுதாரணம் மிக்க தியாகங்களைச் செய்வதன் மூலம் தான் யாரும் தங்களைத் தியாகிகள் ஆக்கலாம். அரசியல் களத்தை தியாகி எதிர் துரோகி என்று பிரிப்பது தேசத்தை திரட்டுவதற்கு உதவாது. தேசம் என்பது ஒரு சமூகத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றினதும் திரட்சி தான். நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாருடையதும் திரட்சி தான். முன்னணியின் கடந்த 15 ஆண்டுகால அரசியல் என்பது தேசத்தைத் திரட்டுவது அல்ல. தேசத்தை சிதறடிப்பதுதான். அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சிக்குள்ளே உடைவு ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியைப் போலவே அவர்களும் தோல்விகளில் இருந்து எதையுமே கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றாக எழுவது என்பது தேசத்தைச் சிதறடிக்கும் அரசியலுக்கு எதிராக தேசத்தைத் திரட்டும் அரசியல்தான். அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி. இப்பொழுது அது சங்கு கூட்டணி. தொடக்கத்திலிருந்து தன் சொந்தப் பலத்தை நம்பாத ஒரு கூட்டு அது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு சொல்லை முன்னொட்டுவதன் மூலம் தன்னை மெய்யான கூட்டமைப்பாக காட்ட அவர்கள் முயன்றார்கள். கட்சிப் பெயருக்குத்தான் வாக்கு விழும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுபோலவே ஜனாதிபதி தேர்தலில் கட்டி எழுப்பப்பட்ட சங்குச் சின்னத்தைக் கைப்பற்றியதின்மூலம் பொது வேட்பாளருக்கு கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு மடை மாற்றலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர், இடையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை தம் வசப்படுத்துவதன் மூலம் வாக்குகளைக் கவரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது ஒரு தேர்தல் உத்தி மட்டுமே. எல்லா தேர்தல் உத்திகளும் தேசத்தை திரட்டுவன அல்ல. எனினும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தைத் திரட்டும் கோஷத்தின் கீழ் இந்த கூட்டு பொதுக் கட்டமைப்புக்குள் ஓர் அங்கமாக இருந்தது. பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஒரு பொதுக் கோரிக்கையாகிய தேசத்தை திரட்டும் கோரிக்கைக்காக உழைத்த கட்சிகள் இந்த கூட்டுக்குள் உண்டு. ஆனால் அந்த உழைப்பின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட சங்கு சின்னத்தை கைப்பற்றும் விடயத்தில் அவர்கள் தேசத் திரட்சியா?அல்லது கட்சி அரசியலா?அல்லது தேர்தல் வெற்றியா?என்று முடிவெடுக்க வேண்டி வந்த பொழுது, இக்கூட்டானது கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் வெற்றிக்கு முன்னுரிமை வழங்கியது. எனவே தேசத் திரட்சிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியிருக்கும். அடுத்தது மான் கட்சி. இக்கட்சியும் பொது வேட்பாளரை முன் நிறுத்திய பொதுக் கட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தது. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து அனேகமாக ஒதுங்கிவிட்டார். கட்சியின் முதன்மை வேட்பாளராகக் காணப்படும் மணிவண்ணன் தன்னுடைய தாய்க் கட்சியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து எங்கே துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார் என்பதனை இனி நிரூபிக்க வேண்டியிருக்கும். மற்றவை சுயேச்சைகள். இம்முறை தேர்தலில் அதிகம் சுயேச்சைகள் தோன்றக் காரணமே பிரதான கட்சிகளின் தோல்விதான். பிரதான கட்சிகளில் இருந்து வெளிவந்த ஒரு பகுதியினர் சுயேச்சையாக நிற்கிறார்கள். பிரதான கட்சிகளால் உள்வாங்கப்படாதவர்களும் சுயேச்சையாக நிற்கின்றார்கள். தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக யாராவது தங்களை வந்து மீட்க மாட்டார்களா என்று காத்திருக்கும் தமிழ் கூட்டு உளவியல் காரணமாக திடீரென்று பிரபல்யம் ஆகிய அர்ஜுனாவை போன்றவர்களும் சுயேச்சையாக நிற்கிறார்கள். யார் எதற்காக நின்றாலும் சுயேச்சைகள் அதிகரிப்பதற்கு காரணம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசத்தைத் திரட்டது தவறியமைதான். எனவே இம்முறை தேர்தல் களம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதை என்று சொன்னால், தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளுமே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயத்தில் தோல்வி அடைந்துவிட்டன என்பதைத்தான். இந்த அடிப்படையில் பார்த்தல்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்ற வெற்றி அரிதானது. அது ஒரு மிகப்பெரிய வெற்றி இல்லைத்தான். ஆனாலும் அடிப்படை வெற்றி. அந்த முயற்சியில் ஈடுபட்ட கருத்துருவாக்கிகளை “பத்தி எழுத்தாளர்கள்” என்று சிறுமைப்படுத்தியது ஒரு பகுதி. தமிழில் பத்தி எழுத்தாளர் என்ற வார்த்தை அதிகம் அவமதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் அது. அதாவது தேசத்தைத் திரட்ட முற்பட்ட குற்றத்துக்காக அதில் முன்னணியில் நின்றவர்களை சிறுமைப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சுமந்திரன் பொது வேட்பாளரை ஒரு கேலிக்கூத்து என்று சொன்னார். கஜேந்திரன் இந்த முயற்சியில் நீங்கள் வென்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். முடியுமென்றால் ஒரு பொது வேட்பாளர் நிறுத்திக் காட்டுங்கள் என்று ரணில் சவால் விட்டார். பொது வேட்பாளர் முழுத் தீவுக்கும் பொதுவான நாசமாக முடியும் என்று சஜித் எச்சரித்தார். அது ஆண்டிகள் கூடிக் கட்டும் மடம் என்றும் ஆபத்தான விஷப் பரீட்சை என்றும் எழுதினார்கள். அதாவது,தென்னிலங்கையில் உள்ள கட்சிகளும் பொது வேட்பாளரை ஆபத்தாகப் பார்த்தன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு அதனை விரோதமாகப் பார்த்தன. தேசத் திரட்சிக்கு எதிரான ஊடகவியலாளர் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தமது சொந்த மக்களைத் தோற்கடிப்பதற்காக உழைத்தார்கள். ஆனாலும் பொது வேட்பாளர் அடிப்படை வெற்றியைப் பெற்றார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியல்வாதி பெற்ற ஆகப்பெரிய வாக்குகளை அவர் பெற்றார். கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்ஷத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளைக் கடந்து தேசத்தைத் திரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சிக்குக் கிடைத்த அடிப்படை வெற்றி அது. மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்தால் அவ்வாறு வாக்குகளைத் திரட்ட முடியும் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. கட்சிகளின் போதாமை காரணமாகத்தான் மக்கள் அமைப்பொன்று கட்சிகளோடு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிவந்தது. எனவே கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. இப்பொழுது,மீண்டும் கட்சிகள் தேசத்தைத் திரட்டுவதில் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளன என்பதனை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களம் காணப்படுகிறது. அதாவது தேசியம் என்றால் என்ன ? தேசியவாத அரசியல் என்றால் என்ன? என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளத் தவறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை மீண்டும் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களம் இது. எனினும்,தமிழ்த் தேசிய அரங்கில் ஒரு கட்சி ஏகபோகத்தை மேலும் உடைத்துக்கொண்டு பல தரப்புக்கள் மேலெழுமாக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே. https://www.nillanthan.com/6966/
  6. தலைமுறைகள் தாண்டி தொடர்ந்த முகம் – டெல்லி கணேஷ் christopherNov 10, 2024 12:49PM டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவுல இப்படி ஒரு நடிகரை பார்த்ததில்லை என்று சொல்கிற அளவுக்கு தனித்துவமானவர். திரைக்கு முன்னும் பின்னும் பல லட்சம் ரசிகர்கள் வாஞ்சையோடு உற்றுநோக்குகிற ஒரு மனிதர். இவரது இயற்பெயர் கணேசன். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வல்லநாட்டில் பிறந்தவர் கணேசன். ஒரு சகோதரி, ஒரு சகோதரன், சிற்றன்னை பிள்ளைகள் என்று கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவர். கிராமத்து வாழ்வுக்குரிய குறும்புகளும் சேட்டைகளும் நிரம்பியது அவரது பால்யம். பள்ளிப்படிப்புக்குப் பிறகு கல்லூரியில் சேர விரும்பிய கணேசன், குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார். பதின்ம வயதுகளில் பிழைப்பு தேடி தொடங்கியது கணேசனின் முதல் பயணம். மதுரையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்தபோது, விமானப்படை தேர்வு குறித்த அழைப்பைக் கண்டார். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர், 1964இல் விமானப்படையில் சேர்ந்தார். டெல்லி தொடங்கி நாட்டின் எல்லைப்பகுதிகளில் சேவையாற்றும் பணி. போர்க்காலச் சூழலை நேரில் கண்ட அனுபவம். அனைத்துமாகச் சேர்ந்து, கணேசனின் மனதில் சில கேள்விகளை எழுப்பியது. வாழ்வு குறித்த பார்வையும் மாறியது. அந்த காலகட்டத்தில், போரில் காயமடைந்த வீரர்களுக்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளே அதற்கான மருந்தாக அமைந்தது. நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய கணேசன், ஒருகட்டத்தில் விமானப்படையில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த முகமாக மாறினார். டெல்லியிலுள்ள தென்னிந்திய நாடக சபை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பத்தாண்டு கால விமானப்படை வாழ்க்கை போதுமென்று தோன்றியபோது, சென்னை திரும்புவதே கணேசனின் எண்ணமாக இருந்தது. 1974இல் சென்னை திரும்பிய கணேசன், காத்தாடி ராமமூர்த்தி உட்பட அப்போதிருந்த நாடக கலைஞர்களின் குழுக்களில் இணைந்து நடித்தார். அதன் வழியே தனக்கென்று அபிமானத்தையும் பெற்றார். அப்படி நடித்த ஒரு நன்னாளில், இயக்குனர் கே.பாலச்சந்தரின் பார்வையில் விழுந்தார் கணேசன். அதன் விளைவாக, அவர் இயக்கிய ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் முருகன் என்ற பாத்திரத்தில் நடித்தார். அதன் தொடர்ச்சியாக, ‘ஏர்ஃபோர்ஸ்’ கணேசன் என்ற பெயர் டெல்லி கணேஷ் என்றானது. நாடகம், சினிமா என்று இரட்டைச்சவாரி கண்ட டெல்லி கணேஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதை அடுத்தடுத்து வந்த ஜெயபாரதியின் ‘குடிசை’, துரையின் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ போன்ற படங்கள் தெரியப்படுத்தின. அதன் அடுத்தகட்டமாக, துரையின் ‘பசி’ படத்தில் நடித்து தீவிர சினிமா ரசிகர்களுக்குப் பிரியமானார். ‘பொல்லாதவன்’ படத்தில் ரஜினிகாந்தோடு மல்லுக்கட்டும் பாத்திரத்தில் நடித்தபிறகு அனைவருக்கும் தெரிந்தவராக மாறினார். ‘எங்கம்மா மகாராணி’ போன்ற சில படங்களில் நாயகனாக நடித்தபோதும், எந்தப் பாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருந்தார் டெல்லி கணேஷ். அதனால், இளம் வயதிலேயே மிகச்சிறந்த குணசித்திர நடிகர் என்ற பெயரைப் பெற்றார். ராஜ பார்வை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், சிவப்பு சூரியன், டவுரி கல்யாணம் என்று தொடர்ந்து மேலேறியது அவரது கிராஃப். அச்சமில்லை அச்சமில்லை, கல்யாண அகதிகள் என்று தொடர்ந்து பாலச்சந்தரின் படங்களில் இடம்பிடித்த டெல்லி கணேஷுக்கு ஒரு மகுடமாக அமைந்த படம் ‘சிந்து பைரவி’. அதில் மிருதங்க வித்வானாக தோன்றி, ரசிகர்களின் கண்களில் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தார். இன்னொரு பக்கம், விசுவின் குடும்பச் சித்திரங்கள் பலவற்றில் டெல்லி கணேஷின் பங்களிப்பு ஒரு அங்கமாக அமைந்தது. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் டெல்லி கணேஷ் தோன்றிய காட்சிகள் மிகக்குறைவு. ஆனால், அப்படி அவர் நடித்த காட்சிகள் அனைத்திலும் வீரியம் அதிகம். அதனை இன்றும் நாம் உணரலாம். புன்னகை மன்னன் படத்தில் கமலின் தந்தையாக டெல்லி கணேஷ் நடித்த பாத்திரம் அருவெருப்பை ஊட்டக்கூடியது. பின்னர் ‘நாயகன்’ படத்தில் அவரோடு தோன்றிய பாத்திரம் நம்மை நெகிழ்வூட்டியது. தொண்ணூறுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என்று பல நாயகர்கள், நாயகிகளோடு டெல்லி கணேஷ் நடித்த படங்கள் இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இருக்கின்றன. நடிக்க வந்த மிகச்சில ஆண்டுகளிலேயே நாயகன், நாயகியின் தந்தையாகத் தோன்றியவர், சில படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்திருக்கிறார். ருத்ரா, பட்டத்து ராணி, ஜாதி மல்லி என்று ஒரேநேரத்தில் அவர் நடித்த பாத்திரங்களில் ‘வெரைட்டி’ தெரியும். மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பொற்காலம், ஆஹா, பொன்மனம், காதலா காதலா, தொடரும், பூவெல்லாம் கேட்டுப்பார் என்று டெல்லி கணேஷ் நடிப்புக்கு உதாரணம் காட்டப் பெரும்பட்டியலே உண்டு. 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம், விஷால், விமல் என்று அடுத்த தலைமுறை நடிகர்களோடும் கைகோர்த்தார் டெல்லி கணேஷ். தீயா வேலை செய்யணும் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பாபநாசம், இரும்புத்திரை போன்ற படங்களில் 2கே கிட்ஸ்களுக்கும் தெரிந்த முகமாகத் திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். தொலைக்காட்சி தொடர்களைப் பொறுத்தவரை எத்தனையோ ஆயிரம் எபிசோடுகள் கண்டிருக்கிறார். இவை தவிர தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள், விளம்பரப்படங்கள் என்று அனைத்திலும் சகலகலா வல்லவனாக திகழ்ந்தார். தனக்கு முந்தைய தலைமுறை தொடங்கி அடுத்தடுத்த தலைமுறைகளைக் கடந்து இன்றும் எல்லோருக்கும் தெரிந்த கலைஞனாகத் திகழ்வது சாதாரண விஷயமில்லை. நடிப்புத்திறமையோடு உலகம் குறித்த நல்லதொரு பார்வையும் சக மனிதர்கள் மீதான நேசிப்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படிப் பார்த்தால், கடிகார முள்ளின் நகர்வைப் போல முழுவட்டமான வாழ்வொன்றைக் கண்டவர் டெல்லி கணேஷ். அந்த நிறைவாழ்வு மங்காத நிலவொளியாய் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். https://minnambalam.com/cinema/a-face-that-has-continued-across-generations-delhi-ganesh/ நெல்லை கணேசன் ’டெல்லி கணேஷ்’ ஆக மாறியது எப்படி? christopherNov 10, 2024 10:40AM தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என்ற எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று (நவம்பர் 9) இரவு காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கணேசன் என்ற தனது பெயர் டெல்லி கணேஷ் ஆக மாறியது எப்படி என்று அவர் அளித்த பேட்டி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாலச்சந்தர். என்னிடம் அவர், சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக்கொள் என்று கூறினார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அந்த நேரத்தில் பாலச்சந்தர் என்னிடம் ‘நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என்றார். நானும் அவர் சொன்னவாறு பெயரை மாற்றிவிட்டேன். மேலும் என்னுடைய நிஜ பெயர் கணேசன் தான்’ என்று கூறியுள்ளார். டெல்லி கணேஷ் என்ற பெயரின் காரணமாக அவரை பலரும் டெல்லியை சேர்ந்தவர் என்றே கருதுகின்றனர். உண்மையில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த வல்லநாடு கிராமத்தில் இவர் பிறந்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரரான டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அப்போது நடிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து, பின்னர் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/cinema/how-did-nellai-ganesan-become-delhi-ganesh/
  7. ஆமாம். கஜேந்திரகுமார் போய் சவுண்டு கொடுக்கத்தான் முடிந்தது! ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தின் மூலம் செயலில் இறங்குவார்கள். மக்கள் தேர்தலில் சவுண்டு கொடுப்பவர்களுக்கா அல்லது செயல்வீரர்களுக்கா வாக்களிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்😄
  8. நமக்காக நாம் என்பதை Dr சிறீ பவானந்தராஜா நிரூபித்துள்ளார். ——— நான் போலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டதன் பெயரில் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிகமாக வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் https://www.facebook.com/share/1DgY8VzRdL/?mibextid=WC7FNe
  9. தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அகதி வாழ்வு, நீங்காத அலைச்சல், அடையாளத் துயர், கதை, மொழி, அரசியல் ஆகிய உயிர்நிலைகளில் ஷோபா சக்தியின் செயல்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அது நிலங்களைத் தாண்டி தன் அலைக்கழிப்பை இலக்கியத்தின் மூலம் முற்றளித்து, யுத்தத்தின் ரத்த சாட்சியாக தன்னை முன்னிறுத்தும் கலை நேர்மையின் பாங்கு உடையது. சமகால அரசியலும் இலக்கிய அழகியலிலும் காலத்தின் உண்மையுணர்வை அலைச்சலின் மொழியால் நிழல் படிமமாக புனைவில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதனால், சின்னஞ்சிறிய தீவுகளில் இருந்து உலகளாவிய அடையாளம் கொண்ட சுய வாழ்வின் மீதுள்ள நெருக்கடியை எந்த ஒப்பனைகளும் இன்றி புனைவுகளில் நம்மால் சந்திக்க முடிகிறது. சமூகத்தின் கூட்டுப் உணர்வான மௌனத்தின் அவல ஆழங்களை அனுபவப் பகிர்வாக முன்வைக்கும் ஷோபா சக்தி அவர்களின் புனைவுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறோம். கொரில்லா, பாக்ஸ் கதைகள், இச்சா, ம், ஸலாம் அலைக் ஆகிய புதினங்களையும் தமிழின் மிக முக்கியச் சிறுகதைகள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதித் தந்திருக்கிறார். பதிப்பாசிரியராக சில அவசியமான படைப்புகளை வெளியீட்டும் வருகிறார். தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), கவிஞர் பாலைநிலவன்(2023) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இணைந்து விருது பெரும் ஆசிரியரின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் அச்சிடப்பட்டு ஆயிரம் இளம் வாசிப்பு மனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் படைப்பு நேர்மையுடன் வாழ்வின் பரிணாமங்களை எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களுக்கு சென்றடைவதில் அகநிறைவு கொள்கிறோம். ~ நன்றியுடன், தன்னறம் நூல்வெளி https://www.jeyamohan.in/208120/
  10. இலகுவான விடயத்திற்கு ஆயிரத்தெட்டு விஞ்ஞான விளக்கங்கள்!😂🤣 மேலாடை இல்லாமல் போகவேண்டும் என்று ஆகம விதி ஒன்றும் கிடையாது. பல நூறாண்டுகளுக்கு முன்னர் ஆண்களின் உடை என்பது, வேட்டி மேலே ஒரு சால்வை மட்டுமே! கோயிலுக்குள் போகும்போது சாமிக்கு மரியாதையாக சால்வையை இடுப்பில் கட்டிக்கொண்டனர்! இதை பழக்கமாகவும், வழக்கமாகவும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஆண்டாண்டாக கடைப்பிடிக்கின்றனர். அப்படியே குளிர்நிறைந்த மேற்குநாடுகளுக்கும் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் குளிரான இமயமலையில் மேலாடை இல்லாமல் சாமி தரிசனம் பார்க்கப்போனால் விரைவில் கைலாசம் போகலாம்😁
  11. உண்மையான சைவர் என்றால் உடனே ஷேர் பண்ணுங்க😂🤣 இப்படி முன்னோர் எல்லார் மூடர்கள் அல்ல என்று ஸூடோசயன்ஸ் எழுதுவதில் விண்ணர்கள் பலர் இருக்கின்றார்கள்🤪
  12. தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள்! தமிழ் சிவில் சமூக அமையம்! Tamil Civil Society Forum 07.11.2024 பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? (14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு) ஜனாதிபதித் தேர்தல் 2024ம் என்.பி.பி எனும் தேசிய மக்கள் சக்தியும் அதன் மூலாதாரமான ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை சிறீலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அவற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டினதோ வேட்பாளரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதே வழக்கம். ஆனால் இம்முறை, ஜேவிபியின் பிடியிலுள்ள கூட்டு முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜேவிபியின் தலைவருமான திரு அனுர குமார திசாநாயக்கவைச் சிங்கள மக்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். இது தமிழ் மக்கள் சிலரின் மத்தியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களை இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்ளும் ஜேவிபி, அதற்கு முரணாக சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தமது நடைமுறை அரசியலாகக் கொண்டவர்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள். ஜேவிபி ஆரம்பம் முதலே தமிழ் மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை சிறீலங்காவின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கான முகவர்கள் எனத் தமது உறுப்பினர்களுக்குப் போதித்து வருபவர்கள். ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றவர்கள். பின்னர் 1990களில் தேர்தல் அரசியலில் காலடி வைத்தது. அதன் பின்பும் தமிழ் மக்கள் மீதான போர் உட்பட இன அழிப்பு செயற்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவும் பங்களிப்பும் வழங்கி வருகின்றது. சிறீலங்கா அரசு மற்றும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கிடையில் அரிதாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடப்பட்ட இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அனைத்துக்கும் எதிராக சிங்கள மக்களிடையே எதிர்ப்பலைகளை உருவாக்கி வந்துள்ளது. ஜேவிபி தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் இணைப்பைப் பிரித்தது. சுனாமிப் புனர்வாழ்வுச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு எதிராகவும் வன்னியில் அதன் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிராகவும் நீதிமன்றம் வரை சென்று அக்கட்டமைப்பையும் இல்லாமலாக்கியது. சிறீலங்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவு சிறீலங்கா 2022ல் பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான அனைத்துத் தேவைகளுக்கும் நீண்ட வரிசைகளில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. ஆயினும் பல அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலைமை நிலவியது. சிங்கள தேசத்துடன் வலிந்து பிணைக்கப்பட்டுள்ளதால் தமிழர்களும் இந்தப் பொருளாதார நெருக்கடியில் தவிர்க்கவியலாதவாறு சிக்கித் தவித்தனர். ஏற்பட்ட நெருக்கடிகளால் விரக்தியடைந்த சிங்கள மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளிலிறங்கினர். கட்சிகள் குறிப்பாக,ஜேவிபியின் தே.ம.சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்றனவும்; அரசியல் விழிப்புணர்வும் ஆர்வமும் கொண்ட தன்னார்வ அமைப்புகளும் தொழிற் சங்கங்களும் செயற்பாட்டாளர்களும் சிங்கள மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவர்களில் சிலரின் நோக்கம் அரகலயவின் வேகத்தை (momentum), தமது நலன்களுக்காக கையகப்படுத்துவது. இதனூடாக தமது தேர்தல் நலன்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் ‘இதுவரை ஆட்சியில் இருந்த சகல அரசியல்வாதிகளின் ஊழல்களால் மட்டும்தான் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டுள்ளது’ என்ற கருத்தை தேசிய மக்கள் சக்தி சிங்கள மக்கள் மத்தியில் நம்பக் கூடிய வகையில் உருவாக்கியது. பொருளாதாரப் பேரழிவின் உண்மையான காரணங்கள் சிங்கள பௌத்த பேரினவாதம் தீவு முழுமையையும் சிங்கள பௌத்த மக்களுக்கு வாக்களிக்கப்பட்டது என நம்புகின்றது. இப்பேரினவாதச் சிந்தனைக்கு அமைய இத்தீவின் யதார்த்தமான பல்லினத் தன்மையை மறுப்பதுடன் ஏனைய தேசிய இனங்களின் இருப்பையும் நியாயமான உரிமைகளையும் மறுதலித்து இன அழிப்பைப் புரிகின்றது. ஆட்சிகள் மாறிய போதும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின்படியே சிறீலங்காவின் சகல துறைகளும் கடந்த எண்பது வருடங்களாக இயங்கி வருகின்றன. இன அழிப்பு நோக்கில் ஆட்சியை நடாத்தியமையால் பாரிய நிதி விரயம்,பொருளாதார மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளின் இழப்பு,அதனால் அரசியல் மற்றும் நிதித் தேவைகளுக்காக நட்டத்தில் விற்கப்பட்ட தேசிய வளங்கள். அவற்றுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கவே கூடாது என்ற ஓர்மத்தில் 30 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்திய ஆயுதப்போருக்காக பெருமளவு வளங்கள் விரயமாக்கப்பட்டதுடன் பாரிய அழிவுகளும்,பாரிய மனித வள இழப்புகளும் (இறப்புகள்,அங்கவீனம்,வெளியேற்றம்) ஏற்பட்டன. இவற்றின் திரட்டிய விளைவாக பொருளாதாரம் பேரழிவுக்குட்பட்டது. இவ்வாறு பேரினவாதத்தால் அபாயகரமான அளவில் நலிவடைந்து வந்த பொருளாதாரத்திற்கு பேரினவாத மயமாக்கப்பட்ட நிர்வாகத்தின் இலஞ்சமும் ஊழலும் அதன் விளைவான வினைத் திறனின்மையும் மேலதிக சுமைகளாயின. ஆனாலும் இலஞ்சம்,ஊழல் வினைத் திறனின்மை என்பன பேரினவாதக் கதையாடல்களின் மூலம் சிங்கள மக்களிடமிருந்து மூடி மறைக்கப்பட்டது. அவர்களும் பேரினவாதக் கவர்ச்சியினால் கவனம் செலுத்தாதிருந்தனர். பொருளாதார வீழ்ச்சியின் மீட்பர்களாக நம்பப்படும் தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரழிவுக்கு காரணம் ஊழலும் இலஞ்சமும் மட்டுமே என நம்பும் சிங்கள மக்கள் அதற்கு காரணமானதென தாம் நம்பும் பழைய அரசியற் தலைவர்களாலோ அவர்களது கட்சிகளாலோ பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தம்மை மீட்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை ஆட்சியில் அமர்ந்திராததும்,அதனால் ஊழற் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிராததும்,அரகலயவில் போராட்டக்காரர்களுடன் தோள் கொடுத்து நின்றதுமான தே.ம.சக்தியைப் பாரம்பரியத் தலைமைகளுக்கான மாற்றாகவும் பொருளாதாரப் பேரழிவின் மீட்பர்களாகவும் ஜேவிபி முன்னிறுத்தியது. சிங்கள மக்களுள் கணிசமானோர் இதை நம்பிக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துமுள்ளனர். அரகலயவில் வேறு பல கட்சிகளும் தனி நபர்களும் உழைத்திருந்தாலும்,அரகலயவின் மொத்த விளைச்சலையும் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகத்தை முன்வைத்து ஜேவிபி கையகப்படுத்திக் கொண்டது. தே.ம.சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியும் பொதுத் தேர்தலும் தேசிய மக்கள் சக்தியினூடாக ஜே.வி.பி ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக் கொண்டதும் சூட்டோடு சூடாகப் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பாகத் திரண்ட சிங்கள மக்களின் ஆதரவையும் ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரின் கட்சி என்பதால் உருவாகக் கூடிய சாதகமான நிலையையும் பயன்படுத்தவும் தமது ஆட்சியின் பலவீனங்கள்,வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை அம்பலமாவதற்கான காலத்தை வழங்காமலும் தேர்தலைச் சந்திக்க விரும்பி தே.ம.சக்தி பொதுத் தேர்தலை உடனடியாக அறிவித்தது. தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு கடந்த எண்பது வருடங்களாக சிறீலங்கா அரசினதும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களதும் மூலாதார இயக்கு கொள்கையாக (Basic driving principle) இருப்பது சிங்கள பௌத்த மேலாண்மைக்கான அவாவே. இதற்காகவே அரசும் ஆட்சியாளர்களும் தமிழ் இன அழிப்பை பிரதான வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளனர். அரசானது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு குடியேற்றங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பினைத் தொடர்கிறது. தமிழ் மக்களின் மொழி,கல்வி,பண்பாடு,வரலாறு,பொருளாதாரம்,இயற்கைச் சூழல் மற்றும் வளங்களை சிதைக்கிறது. தமிழர்களை கொல்லுதல்,சித்திரவதை செய்தல்,காணாமற் போகச் செய்தல்,பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் தனி மனிதர்களினதும் குடும்பங்களினதும் வாழ்க்கையை சீரழித்தல் என தமிழ் மக்களின் இருப்பைச் சவாலுக்கு உட்படுத்துகிறது. அதீத இராணுவப் பிரசன்னம்,தமிழர்களையும் பிரதேசங்களையும் திட்டமிட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் புறக்கணிப்பது,தமிழ் மக்களின் நலன்களுக்குப் பாதகமான அபிவிருத்திகளை (மன்னார் காற்றாலை,கடலட்டைப் பண்ணை போன்றன) மட்டும் தமிழ் நிலங்களில் பலவந்தமாக நிறைவேற்றுவது,திட்டமிட்ட போதைவஸ்துப் பரவலாக்கம் என தம்மாலியன்ற அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை எப்போதும் தொடர்கின்றது. இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு சிங்கள அரசும் தமிழ் அழிப்பு வேலைத் திட்டங்கள் எதையும் கைவிட்டதில்லை. அதற்கேற்றவாறு ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழ் இன அழிப்புத் தொடர்வதற்கு ஏற்றவகையில் அரச இயந்திரம் சிங்கள பௌத்த பேரினவாத இயந்திரமாக வலிமையாகக் கட்டமைக்கப்பட்டும் உள்ளது. தற்காப்புக் கவசமாக தமிழ்த் தேசியமும் தீர்வாக தேசிய அபிலாசைகளும் தமிழ் மக்கள் இன அழிப்பிலிருந்து தமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காகத் தமக்கு உரித்தான தேசிய அடையாளங்களையும் தேசிய உரிமைக் கோரிக்கைகளையும் தமக்கான தற்காப்புக் கவசமாக முன்னிறுத்தினர். இன அழிப்பின் விளைவாக விழிப்படைந்த தமிழ் மக்கள் தனியான மொழி,உரித்தான தாயகம்,தனித்துவமான வரலாறு மற்றும் பண்பாடு,பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளமையின் அடிப்படையில் தாம் ஒரு தனியான தேசிய இனம் என்ற உரிமையைக் கோரி எழுச்சியுற்றனர். இன அழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறையாக தேசிய இனம் என்பதால் தமக்கு உரித்தாகும் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சிக்கான அரசியல் முறைமை ஒன்றைத் தீர்வாகக் கோரிப் போராடத் தொடங்கினர். இன்றுவரை தமிழ் மக்கள் எப்போதும் தமிழ்த் தேசிய அடையாளத்தையும் தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் விட்டு விலகியதில்லை. அதுவே தமிழ் மக்களின் இருப்புக்கான போராட்டத்தின் ஆதாரமாக,அடிநாதமாக,இயக்கு சக்தியாக உள்ளது. சிறீலங்காவின் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித் தன்மையானது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கே எப்போதும் ஊழியம் செய்யும் என்பதனாலும் அதன் ஒரு அங்கமான 13ம் திருத்தத்தின் மூலமான மாகாண சபை முறைமை தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான வலிமை கொண்டதல்ல என்பதனாலும் எமக்கான அரசியற் தீர்வில் இவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை எனத் தமிழ் மக்கள் மீள மீள வலியுறுத்தி வருவதற்கும் இதுவே காரணமாகும். சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மத்தியில் இன அழிப்பின் விளைவாகத் தோன்றிய நாம் இன அழிப்புக்கு உள்ளாகின்றோம் என்ற விழிப்புணர்வையும்,தமிழ்த் தேசிய அடையாள அரசியலின் வளர்ச்சியையும்,தமிழ் மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் கண்டு அஞ்சுகின்றது. இந்த விழிப்புணர்வு தமது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு அபாயமானதென அரசு கருதுகின்றது. தமிழ் மக்களின் விழிப்புணர்வை அற்றுப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காக மூளைச் சலவை செய்யும் பல வேலைத் திட்டங்களை பல்வேறு வழிமுறைகளூடாக அரசு முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும் இன்றுவரை இடம்பெற்ற பொதுத் தேர்தல்களின் போதெல்லாம் தமிழ் மக்கள் தமது ஒற்றைக் கொள்கையான தமிழ்த் தேசியத்தின்பால் அணி திரண்டு வாக்களிப்தே வழமை. ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி,பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி,பின்னர் 1989 பொதுத் தேர்தலில் வெளிச்ச வீட்டுச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஈழப்புரட்சி அமைப்பு,நீண்ட இடைவெளியின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆசியுடன் கூட்டாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,இன்று பல்வேறு தரப்புகளாகச் சிதறியுள்ளபோதும் தமிழ்த்தேசியத்தை தமது கொள்கை எனக் கூறும் முன்னாள் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகள் என,தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியாக நிற்பவர்கள் என தாம் நம்புபவர்களுக்கே இதுவரை வாக்களித்து வருகின்றார்கள். தேர்தல் தொடர்பாக முடிவு செய்வதில் தமிழ் மக்கள் மத்தியில் தடுமாற்றம்??? பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இதுவரை கட்டிக் காத்த தமிழ்த் தேசிய அடையாளம் மற்றும் அபிலாசைகள் பற்றிக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் காட்ட பல்வேறு சக்திகள் தீவிரமாக முயற்சிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் வெளிப்படுத்தியுள்ள கணிசமான மாற்றம்,ஊழலை ஒழிப்பதன் மூலம் நாட்டைச் சுபீட்சமடையச் செய்வோம் என்ற கோசம் மற்றும் வழமையான அனைவரும் சமம்,அனைவருக்கும் அபிவிருத்தி போன்ற கோசங்களை முன்வைக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரங்களால் சிலர் தடுமாறுகின்றார்கள். 2009ன் பின் நடந்த பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகக் காட்டி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்களால் தமிழர் தாயகத்திற்கு எந்த விதமான பாரிய அபிவிருத்தியையும் கொண்டு வர முடியாமல் உள்ளமைக்கு அப்பிரதிநிதிகளது திறமையின்மையே காரணம் என்று பரப்பப்படும் யதாரத்தமற்ற கருத்துகளை நம்புவதாலும் இதுவரை காலமும் தேசியத்திற்கான வாக்கைப் பெற்று வென்றவர்கள் சிலரது ஒழுக்கமற்ற,தமிழ்த் தேசியத்திற்குப் பிறழ்வான நடத்தைகளாலும் தமிழ்த்தேசியத்திற்கான கட்சிகள் என நம்பப்படும் கட்சிகளினுள் அதிகரித்து வரும் பிளவுகளாலும் சிலர் விரக்தியுற்றுள்ளமையால் தடுமாறுகின்றார்கள். இன்னும் சிலரோ தமது நண்பர்,உறவினர் தேர்தலில் நிற்கிறார் நேரில் வந்து வாக்குக் கேட்டுவிட்டார் என்பதற்காக முடிவெடுப்பதில் தடுமாறுகின்றார்கள். இவர்களே இத்தனை காலமாக தியாகங்களால் கட்டிக் காத்துவந்த தமிழ்த் தேசியத்தைத் காப்பதற்காக வழமைபோல் வாக்களிப்பதா அல்லது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வாக்களிப்பதா எனக் குழம்பி நிற்கின்றனர். புற்றீசல் போல முளைத்துள்ள சுயேட்சைக் குழுக்கள் 2009ன் பின் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் அரசால் பெரும் எண்ணிக்கையில் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்படுவது வழமையாகிவிட்டது. இம்முறை இக் குழுக்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களுள் பலர் வழமைபோல் தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் அரசால் களமிறக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்கள் இதுவரை தமிழருக்கோ தமிழ்த் தேசிய அரசியலுக்கோ எந்த வகையிலான பங்களிப்பையும் நல்காதவர்கள் அல்லது எதிரிகள்,ஆனால் தேர்தலில் வென்று தமிழ்த் தேசியத்தைத் தாமே காக்கப் போவதாக சிலரும் இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைக்காத அபிவிருத்திகளையெல்லாம் தாம் பெற்றுத் தரப் போவதாக சிலரும் கூறி வாக்குக் கேட்கின்றனர். வேறு சிலர் சில சமூகப் பணிகளைச் செய்ததனாலும் நிவாரணங்களைக் கொடுத்ததனாலும் சமூக ஊடகங்களில் பிரபல்யமாக உள்ளதாக நம்புவதாலும் தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியும் என அப்பாவித்தனமாக நம்பி,தமக்கெனத் தனியான சுயேட்சைக் குழுக்களை உருவாக்கிக் களமிறங்கியுள்ளவர்கள். சிலர் புலம்பெயர் தமிழரின் நிதியைக் கையாடுவதற்கான ஒரு வழியெனவும் இன்னும் சிலர் புகலிடக் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பிரகாசமாக்குவதற்காகவும் சுயேட்சைக் குழுக்களாகக் களமிறங்கியுள்ளனர். இவர்கள் பலர் தனிப்பட்ட தமது நண்பர்கள்,பாடசாலைச் சமூகத்தவர்கள்;,உறவினர்கள்,ஊரவர்,ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் எல்லோருமே தமிழ்த் தேசிய அபிலாசைகளையெல்லாம் கைவிட்டுவிட்டுத் தமக்கு வாக்களிப்பர் என நம்புகின்றனர். சிறிய அளவில் தோன்றியுள்ள தடுமாற்றத்தை விரிவாக்குவதற்கான சதி தமிழ் மக்கள் சிலரிடையே தோன்றியுள்ள இந்தத் தடுமாற்றத்தால் தமிழ் இன அழிப்புச் சக்திகளும் இவர்களின் கைக்கூலிகளும் அதிகார அடிவருடிகளும் ஊக்கம் பெற்றுள்ளனர். ஏற்கனவே தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம் செய்வதற்காக மூளைச் சலவை செய்துவரும் இச்சக்திகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியும்,சிறிய அளவில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இத்தடுமாற்றத்தை மேலும் பரவலாக்குவதற்காகப் பல்வேறு சதி நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றனர். இதற்காகப் பலநூறு சமூக வலைத் தளங்களும் பிரச்சாரகர்களும் புதிதாக உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயத்தில் தே.ம.சக்தியின் திட்டம் தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம்,தமிழ் வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற நோக்கங்களிற்கு மேலதிகமாக தே.ம.சக்தி தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள சிறிய குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி,தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து ஒரு சில ஆசனங்களையாவது பெற்றுத் தமது பாராளுமன்றப் பெரும்பான்மையையும் உறுதிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தே.ம.சக்தி,இதுவரை தமிழ்த் தேசியத்திற்காகவோ மக்களுக்காகவோ சிறு துரும்பைத்தானும் நகர்த்தியிராத,எமது சமூகத்தில் சிறிய அளவில் மட்டும் அறியப்பட்ட,சலன புத்தியுள்ளவர்கள் சிலரை ஊழலற்றவர்கள் என்ற போலி அடையாளமிட்டுத் தமது வேட்பாளர்களாகத் தமிழர் தாயகமெங்கும் களமிறக்கியுள்ளது. இவர்களுள் யாராவது துர்லபமாக வெற்றிபெற்றாற்கூட அவர்களால் தமிழர்கள் மேலான இன அழிப்புத்துன்பங்களுக்கு தீர்வெதையும் பெற்றுத் தர முடியாது,திட்டமிட்டு இன அழிப்பு நோக்கங்களுக்காக தடுக்கப்பட்டுள் பாரிய அபிவிருத்திகளையும் இம்மண்ணிற்கு கொண்டுவர முடியாது. மாறாக எப்போதும் இணக்க அரசியல் பேசுபவர்கள் செய்வதைப் போல தமது தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் அரசு இவர்களது ஆள்கள் சிலருக்கு சில தனிப்பட்ட சலுகைகளை இவர்க;டாக வழங்கி இவர்களுக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க உதவி செய்வது மூலம் தமிழ்த் தேசியத்துக்கான வாக்கு வங்கியைச் சிதறடிக்கும். இவர்களுக்கு வளங்கப்படும் வாக்கு அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் நன்றிக்கடனாக தமது எஜமானர்களின் தமிழ் இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்வதற்கு உதவுபவர்களாகவும்,அவர்களது பாவங்களுக்கு வெள்ளையடிப்பவர்களாகவும் இவர்கள் செயற்படுவர். தே.ம.சக்தி வேட்பாளர்களிற் சிலர் தமது எஜமானர்களால் தமக்கு வழங்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் நீக்கப் பணிகளை ஏற்கனவே செய்யவும் தொடங்கி விட்டனர். இற்றைவரை ஜேவிபியோ அல்லது அதன் இன்னொரு வடிவமான தேசிய மக்கள் சக்தியோ தமது பேரினவாத நிலைப்பாடுகளைக் கைவிட்டதாகவோ,அவை இறந்த காலமெனவோ அறிவிக்கவில்லை. தமது பேரினவாத நிலைப்பாடு தவறென்று ஒப்புக் கொள்ளவோ அதற்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவோ இல்லை. காலங்காலமாகச் சிறீலங்கா அரசுகள் தொடர்ந்து புரிந்து வருகின்ற தமிழ் இன அழிப்பை நிறுத்துவோம் எனவோ அவற்றாலேற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வைத் தருவோம் எனவோ கூறவில்லை. ஆகக் குறைந்தது இங்கு ஒரு இனப்பிரச்சினையுள்ளது,அதற்கு ஒரு அரசியற் தீர்வு தேவை என்றுகூட வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால்,கடந்த ஜனாதிபதி தேர்தலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய தற்போதைய ஜனாதிபதி,பதவிக்கு வந்ததும் அதைத் தொடரவுள்ளதாக அறிவித்ததும் அவரின் மூத்த கட்சித் தோழர்கள் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு தேவையில்லை எனக் கூறியதும் வரப்போகும் ஆபத்தை முன்னறிவிக்கின்றது. ஆக,தே.ம.சக்தியும் முன்னர் ஆட்சியிலிருந்த சிங்கள ஆட்சியாளர்கள் நுனி நாக்கால் கூறும் “அனைவரும் சமம்,அனைத்து இனங்களுக்கும் சம உரிமை,அனைவரும் சிறீலங்கர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவோம்,அனைவருக்கும் அபிவிருத்தி கிடைக்கச் செய்வோம்” போன்ற வழமையான கோசங்களைத் தவிர புதிதாக எதையும் தமிழ் மக்களை நோக்கி இன்றுவரை தே.ம.சக்தி கூறவில்லை. ஆகவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் மக்கள் இம்முறை முன்னரெப்போதையும் விட கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுள் தமிழ்த் தேசிய அபிலாசைகளைக் கட்சிக் கொள்கைகளாகக் கொண்ட,மறைமுகமாகவேனும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத,சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்கிக் கொண்டிராத,மக்களுக்கு கூறுவது போல தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகள் சிலவே உள்ளன. சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்த் தேசியத்தைப்பற்றிப் பேசுவர். தேர்தல் மேடைகளில் மட்டும் சமஷ்டியே தீர்வு,தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பு நடைபெறுகிறது,சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுவர். பின்னர் கதிரைகள் கிடைத்ததும் வேடங்களைக் கலைநத்து ஒற்றையாட்சிக்குட்பட்டும் 13ம் திருத்தத்துக்குள்ளும் தீர்வைத் தேடுபவர்களாகவும்,இன அழிப்பு நடைபெறவில்லை என்றும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் ஒற்றையாட்சிக்கான ஒத்தகருத்துச் சொல்லுக்கு புது வியாக்கியானமளித்தும் அரச ஒத்தோடிகளாக மாறுவர். இத்தகைய வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான தெரிவை அனுபவ அறிவினூடாக செய்யும் போது போட்டியிலுள்ள மிகச் சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அபிலாசைகளுக்கும் எப்போதும் விசுவாசமாகச் செயற்படுபவர்களாக இருப்பர். ஆகவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எமது மக்களை பணிவன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். சிங்கள இனவாதம், சிறீலங்கர் என்ற பொதுத் தேசியவாதம், போலிச் சம உரிமைவாதம், அர்த்தமற்ற பொருளாதார அபிவிருத்திவாதம் என்பவற்றைத் தவிர்த்து தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள் (ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன் இணைப் பேச்சாளர் தமிழ் சிவில் சமூக அமையம் (ஒப்பம்) பொ. ந. சிங்கம் இணைப் பேச்சாளர் தமிழ் சிவில் சமூக அமையம் https://oruvan.com/sri-lanka/2024/11/09/tamil-civil-society-forum
  13. அரியத்தாரின் ஆய்வு… வாட்ஸப்பில் அவர் பதிந்தது! மட்டக்களப்பில் என்ன நடக்கும்..⁉️ மட்டக்களப்பு மாவட்டம் 2024, தேர்தல் பற்றிய ஒரு பார்வை-பா.அரியநேத்திரன். இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்வரும் வியாழக்கிழமை 2024 நவம்பர் 14 காலை 7, மணி தொடக்கம், மாலை 4, மணிவரை தேர்தல் நடைபெறும். இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது, புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11/11/2024, திங்கள் கிழமை நள்ளிரவு 12, மணிவரையும் பிரசாரங்கள் நிறைவுபெறும், தேர்தல் இடம்பெறுவதற்கு முன் 48 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் படி “தேர்தல் அமைதிக்காலம்” என அது அழைக்கப்படும். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களிடம் உள்வாங்கிய கொள்கைகளையும் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்காளர்கள் தீர்மானம் மேற்கொள்ளவதற்காகவே இந்த 48, மணித்தியாலங்களை தேர்தல் அமைதிக்காலம் என அழைப்பதுண்டு. தேர்தல் இடம்பெறுவதற்கு 24, மணித்தியாலங்களு முன்னர் 12/11/2024, நள்ளிரவுடன் வேட்பாளர்களின் பணிமனைகளில் உள்ள வெனர்கள், படங்கள், அலங்காரங்கள் அகற்றப்பட்டு வெறுமையாக அந்த காரியாலயம் இருக்கவேண்டும். 👉🏼புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 2024 நவம்பர் 21,ல் கூடி 225, பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமானம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 🙌🏿மட்டக்களப்பில் 22 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 27, சுயேட்சை குழுக்கள் மொத்தமாக 49, அமைப்புகள் போட்டியிடுகின்றன.. மொத்த வேட்பாளர்கள் 392, பேர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 05, மட்டுமே,04, உறுப்பினர்கள் தெரிவுடன் 01, மேலதிகம் (bonus)ஆசனம். (04+01=05) மொத்த ஆசனங்களாகும். போனஸ் ஆசனம் என்பது அதிகூடிய வாக்கை பெறும் கட்சிக்கு தன்னிச்சையாக அது சென்றுவிடும் உதாரணமாக A, எனும்கட்சி அறுபதாயிரம் 60000 வாக்குகளையும், B, எனும் கட்சி அறுபதாயிரத்து ஒரு 60001, வாக்குகளை பெற்றால் அதாவது ஒருவாக்கை கூட B, என்ற கட்சி மேலதிகமாக பெற்றால் அந்த போனஸ் ஆசனம் B, எனும் கட்சிக்கே 2, ஆசனம் (1+1) வழங்கப்படும்.A,கட்சிக்கு போனஸ் ஆசனம் இல்லை. மட்டக்களப்பில் இம்முறை மூன்று அல்லது நான்கு கட்சிகளில் இருந்து மட்டுமே 05, ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருகட்சியில் இருந்து அல்லது ஐந்து கட்சிகளில் இருந்து 05, ஆசனங்கள் கிடைப்பதில்லை. 02,கட்சிகளில் இருந்தும் இம்முறை மட்டக்களப்பில் 05, ஆசனம் கிடைக்க வாய்புகள் இல்லை(இது 2004, ல் மட்டுமே வரலாற்றில் ஒரு தடவை சாத்தியமானது) எனவே 3, அல்லது 4, கட்சிகளுக்கு மட்டுமே இம்முறை 5, ஆசனங்களை பெற வாய்புகள் உள்ளன…! ஏனைய 45, கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது அது தோல்வியடைந்த கட்சிகளாகவும் அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட (360) பேரும் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படும். இதில் ஏறக்குறைய 35, கட்சிகளுக்கு 5% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற முடியாமல் போகலாம். 👉🏼1,ம் கட்ட வாக்கெண்ணும் பணி தேர்தல் இடம்பெற்ற தினம் (14/11/2024) வியாழக்கிழமை இரவு 09, மணிக்கு ஆரம்பமாகி முதலில் தபால் மூல வாக்கெண்ணும் பணியை தொடர்ந்து ஏனைய வாக்குகளும் எண்ணப்பட்டு பெரும்பாலும நள்ளிரவுக்கு பின்னர் எந்தந்த கட்சிகள் கூடிய வாக்குகளை பெற்றன என்பதும், அதில் ஆசனங்களை பெற்ற கட்சிகளும் வரிசைப்படுத்தப்படும். இது பெரும்பாலும் நள்ளிரவு 12, மணிக்கும் (15/11/2024) அதிகாலை 01, மணிக்கும் இடையில் தெரியவரும். இந்த 01. ம் கட்ட வாக்கெண்ணும்பணி நிறைவடைந்ததும் ஆசனம் பெற்ற(வெற்றியீட்டிய) கட்சிகளும் எந்தக்கட்சி எத்தனை ஆசனம் பெற்றுள்ளது என்ற விபரமும் தெரியவரும், இந்த முடிவு அறிந்ததும் வாக்கெண்ணும் நிலையத்தில்( மட்டக்களப்பு இந்துக்கல்லூரி) இருந்து 18, அல்லது 19, அரசியல் கட்சி வேட்பாளர்களும் 27, சுயேட்சை குழு மொத்தமாக 45, அமைப்புக்களை சேர்ந்த 360, வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றவர்களும் வெளியேறிவிடுவார்கள்.. 👉🏼2, ம் கட்டம் விருப்பு வாக்கெண்ணும்பணி இது ஆசனங்கள் பெற்ற மூன்று அல்லது நான்கு கட்சிகளை சேர்ந்த 32 வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்து காத்திருக்க வேண்டியது, வேட்பாளர்களை பதட்டம் அடைய வைக்கும் ஒரு தருணம் இது… விருப்பு வாக்குகளின் கணிப்பீடு நீண்ட நேரம் செல்லும் பெரும்பாலும் மறு நாள் 15/11/2024, வெள்ளிக்கிழமை முற்பகலில் சிலவேளை கணிப்பீடு செய்வதில் சிக்கல் நிலை எழுந்தால் அன்று மாலைவரையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவுக்கப்படுவது காலதாமதமாகலாம். இதில் கவனிக்க வேண்டியது மாவட்டங்களில் உள்ள நிலையங்களில் வாக்கெண்ணும் பணி நிறைவு செய்தாலும் அந்த முடிவுகளை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்(மாவட்ட அரச அதிபர்) அந்த முடிவுகளையும் உத்தியோக பூர்வமாக அறிவிக்க அதிகாரம் இல்லை அவர் கொழும்பு தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு தொலை நகல் (Fax)அல்லது மின் அஞ்சல்(E mail) மூலம் உடனுக்குடன் அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆணைக்கு தலைவர் அதனை பரிசீலித்த பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக மாவட்ட முடிவுகள் கொழும்பில் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள நேரடி ஊடக வாயிலாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். எனினும் மாவட்டத்தில் உள்ள வெற்றிபெற்ற கட்சி வேட்பாளர்கள் அதனை அறிந்து விடலாம். தபால்மூல முடிவுகள், தொகுதிரீதியான முடிவுகள், இரண்டும் அறிவித்த பின்னரே மாவட்ட ரீதியிலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்கில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இதுதான் தேர்தல் முடிவு அறிவிப்பு நடைமுறை.! விகிதாசாரத்தேர்தலில் ஆசனங்களை பெறும் கட்சிகளில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்கள்(வெற்றிபெற்றவர்கள்) என கருதினாலும் அந்த கட்சியில் தெரிவாகாமல் எஞ்சியிருக்கும் எட்டு வேட்பாளர்களில் தெரிவாகாத உறுப்பினர்களின் பங்களிப்பும் ஆதரவும் அந்த கட்சிக்கு இருந்தது என்ற அடிப்படையில் அவர்களை தோல்வியடைந்தவர்கள் என கருதமுடியாது. எஞ்சிய உறுப்பினர்களை தெரிவு செய்யப்படாதவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள். அதாவது கட்சி வெற்றிக்காக உழைத்தவர்கள் என்பதை புரிதல் வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் பலருக்கு இந்த விளக்கம் அறியாமல் அவர்களை தோல்வி அடைந்தவர்கள் என அழைத்தவர்களும் உண்டு இனியாவது இதனை கவனத்தில் எடுப்பது நல்லது. தோல்வியடைத்தவர்கள் யார்..,❓ விகிதாசார தேர்தலில் ஆசனம் எதுவுமே பெறாத கட்சிகளும், அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அனைவரும் தோல்வியடைந்தவர்கள் என அழைக்கப்படுவர். எந்த கட்சியிலும் ஒரு ஆசனத்தை பெறாதா கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், அதில் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தோல்வி கண்டவர்கள் என்பதே உண்மை. 🫵🏼மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14/11/2024, தேர்தல் முடிவுகள் எனது ஆய்வின்படி.. 27, சுயேட்சை குழுக்கள் எதுவுமே ஆசனங்களை பெற வாய்பில்லை.. அதுபோல் 22, அரசியல் கட்சிகளில் 18, அல்லது 19, கட்சிகளுக்கும் ஆசனங்கள் பெறவாய்பில்லை. 03, கட்சிகள் மட்டும் 05, ஆசனங்களுக்கு உரித்துடையதாக (வாக்கு அதிகம்) பெற சந்தர்ப்பம் உண்டு. மூன்று கட்சிகள் எனில் முதன்மையாக வாக்குகளை பெறும் கட்சிக்கு இரண்டு ஆசனத்துடன் மேலதிக (போனஸ்) ஆசனம் ஒன்றும் சேர்த்து 03, ஆசனங்களை அந்த கட்சி பெறும். மிகுதி இரண்டு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனங்கள் பெறும் சந்தர்ப்பம் உண்டு. சிலவேளை நான்கு கட்சிகளாவும் மாறலாம் அப்படி எனில் முதல் நிலை பெறும் கட்சி 02, ஆசனங்களும் ஏனைய 03, கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனமும் கிடைக்கலாம். கடந்த 1989, தொடக்கம் இறுதியாக இடம் பெற்ற 2020, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை மீட்டுப்பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளில் வரலாறுகளை எப்படி அமைந்தன என்பதை பார்போம். தமிழர் விடுதலை கூட்டணியும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும்(தமிழ் தேசிய கூட்டமைப்பு) மட்டுமே ஏனைய கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லா பொதுத்தேர்தல்களிலும் முன்னிலை பெற்றதை புள்ளிவிபரம் தெளிவாக காட்டுகிறது. 1. 1989, ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 55,141, வாக்குகளை பெற்று 03, ஆசனங்களும், 2. 1994,ம் ஆண்டு 76,516, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும், 3. 2000, ம் ஆண்டு 54,448, வாக்குகளைப்பெற்று 02,ஆசனங்களும், 4. 2001, ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் 86,284,ஆசனங்களைப்பெற்று 03, ஆசனங்களும், 5. 2004,ம் ஆண்டு 1,61,011, வாக்குகளை பெற்று 04, ஆசனங்களும், 6. 2010, ம் ஆண்டு 66,235,வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும் 7. 2015, ம் ஆண்டு 1,27,185, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும், 8. 2020, ம் ஆண்டு 79460, வாக்குகளை பெற்று 02, ஆசனங்களும் மட்டக்களப்பில் கடந்த எட்டு விகிதாசாரத்தேர்களிலும் கிடைத்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த எட்டு விகிதாசார பொதுத்தேர்தல்களிலும் தமிழர் விடுதலை கூட்டணிதமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி) முன்னிலை பெற்றுள்ளது. எந்த ஒரு தேர்தல்களிலும் 2,ம் நிலைக்கு செல்லவில்லை வேறு எந்த ஒரு கட்சிகளும் முதன்நிலையில் ஆசனங்களை பெறவில்லை, இம்முறை 2024, தேர்தலிலிலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிதான் முதல் நிலை பெறும் அதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை . இரண்டாம், முன்றாம், சிலவேளை நான்காம் நிலையில் எந்தெந்த கட்சிகள்வரும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதை தவிர்த்துள்ளேன். வடகிழக்கில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகளும் ஆசன எண்ணிக்கையும்.. த.வி.கூ 1.1989, ல் 188,594வாக்கு:10,பா.உ. 2.1994,ல் 132,461வாக்கு:05,பா.உ 3.2000,ல் 106,033வாக்கு:05,பா.உ த. தே.கூ. 1. 2001, ல் 348164, வாக்கு:15, பா.உ, 2. 2004,ல் 633654, வாக்கு:22,பா.உ, 3. 2010,ல் 233,190, வாக்கு:14,பா.உ, 4. 2015,ல் 515,963, வாக்கு:16,பா.உ, 5. 2020,ல் 327,168,வாக்கு:10,பா.உ. இருப்பது இன்னும் ஐந்து தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..! ✍️பா.அரியநேத்திரன். 09/11/2024 (அரியம் ஆய்வகம்)
  14. இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று October 29, 2024 பிரசாத் இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதில் இருந்து வியக்கத்தக்க முறையில் வலது பக்கம் திரும்பி இருக்கின்றது. அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் சுமாரான முற்போக்கான சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை . இது கூட முந்தைய ஆட்சிகள் செயல்படுத்திய நவ தாராளவாத நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சிக்கு ஆதரவாக விரைவாக கைவிடப்பட்டிருக்கின்றது. இந்த காட்டிக் கொடுப்பால் NPP க்குள் உள்ளக முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றது. அரசியலில் மாற்று என நிறுவுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து பிரபலமான தனி நபர்கள் மற்றும் குழுக்களை உள்ளிழுப்பத்தன் மூலம் அரசியலில் நாம் மாற்று சக்தி என்று காட்ட எடுத்த முயற்சி ஜேவிபியின் NPP கூட்டணிக்குள் இருந்த இடதுசாரி எதிர்ப்பு பிரிவுக்கு அதிகாரத்தை அளித்து இருக்கின்றது. சமூக ஜனநாயக அரசியலில் மட்டும் ஊறி கிடக்கும் – குட்டி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் பல பிரிவுகளின் ஆதரவால் உற்சாகமடைந்து இருக்கின்ற இந்தப் பிரிவு சோசிலிசம் அல்லது இடதுசாரிய அரசியல் என்ற தீவிர நிலைப்பாட்டில் இருந்து NPP யை மாற்றிவிட்டது. இது பல சாப்தங்களாக நாட்டை பாதித்த அதே முதலாளித்துவ கொள்கைகளை NPP இப்போது ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது தொழிலாளர் வர்க்கத்தின் நெருக்கடியை அதிகப்படுத்தி இருக்கின்றது. சீர்திருத்தவாதத்திலிருந்து புதிய தாராளமயம் வரை தேர்தலுக்கு முன், NPP இன் மேடையில் IMF இன் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) மறுபேச்சு, அதானி குழுமத்துடனான ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்தல், மற்றும் தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கியமான துறைகளின் தனியார்மயமாக்கலை நிறுத்துதல் போன்ற திட்டங்கள் இருந்தன. இந்தக் கொள்கைகள், போதாவையாக இருந்தபோதிலும், குறைந்தபட்சம் கொள்கையளவிலாவது, நவதாராளவாத மரபுவழிக்கு ஒரு சாதாரண சவாலை அளித்தன. ஆனாலும், அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றவுடன், இந்த வாக்குறுதிகள் விரைவாக நிராகரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் அணுகுமுறை இப்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையே பிரதிபலிக்கிறது – இது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய நவதாராளவாதத்தின் முழுமையான மற்றும் விமர்சனமற்ற தொடர்ச்சியாகும். இந்த காட்டிக்கொடுப்பு NPPக்கு அப்பாலும் நீண்டுள்ளது. இலங்கையின் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தள்ளாடியுள்ளன. முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (NDMLP), மற்றும் சோசலிஸ்ட் மக்கள் முன்னணி (SPF) ஆகியவை “அரகலயா” இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து மக்கள் போராட்டக் கூட்டணியை (PSA) உருவாக்கின. எவ்வாறாயினும், இணக்கமான அரசியல் உடன்பாடு இல்லாமல்,பொதுமக்களுக்கு ஒரு தெளிவான மாற்றீட்டை முன்வைக்க இயலாது இந்த கூட்டணி முரண்பாடுகளால் நிறைந்துள்ளது, மேலும் தொழிலாள வர்க்கம் அல்லது பரந்த போராட்டங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இவர்களால் ஈடுபட முடியவில்லை. இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற ஒவ்வொரு பிரிவினரும் குறைதீமை வாதத்தின் அடிப்படையில் NPP உடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். தெளிவான மார்க்சிய வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் இந்தக் குழுக்களின் கூட்டுத் தோல்வியானது இலங்கையின் இடதுசாரி அரசியலுக்குள் ஆபத்தான அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடமானது, பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுக்கும் புதிய தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து திணிக்க வழி வகுத்துள்ளது. இதன் எதிரொலியாக ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.ஒப்பீட்டளவில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிறிய சோர்வு இருந்த போதிலும் இந்த இடைவெளியை உண்மையான மார்க்சிச மாற்றுடன் நிரப்புவது எங்கள் புரட்சிகர கடமை என்று நாங்கள் நம்புகிறோம். புதிய தாராளவாதத்தை சவால் செய்ய ஒரு மார்க்சிய திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையில் நடைமுறை, மார்க்சிய மாற்றீட்டை வழங்கும் ஒரே கட்சி USP ஆகும். நெருக்கடியின் வேர்களைத் தீர்க்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான தீர்வுகளை வழங்கும் பல முக்கிய தூண்களில் அடிப்படையில் எங்கள் தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1. கடன் திருப்பிச் செலுத்த செலுத்த மறுப்பு மற்றும் கடன் ரத்து எங்கள் திட்டத்தின் மையத்தில் அனைத்து கடன்களையும் செலுத்த மறுப்பது உள்ளது. வெறுக்கத்தக்க கடன், காலநிலை மாற்றத்துக்கான நீதி மற்றும் காலனித்துவ கொள்ளைக்கான இழப்பீடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில், உடனடியாக கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.இலங்கையின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 99.83% ஆக உள்ளது, இது கொள்ளையடிக்கப்பட்ட கடனின் விளைபொருளாகும். ஊழலற்ற தலைமைத்துவத்தையும், நாட்டின் நிதிநிலையின் நிலைத்தன்மையற்ற தன்மையையும் முழுமையாக அறிந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் பொறியை உருவாக்கின. இதன் விளைவு பேரழிவு. வாங்கப்பட்ட கடன்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சொகுசு வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நில மீட்புத் திட்டங்கள் போன்ற வீணான திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டன. இதற்கிடையில், சுகாதாரம், கல்வி மற்றும் பொது உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத் துறைகள் நிதியில்லாமல் திட்டவட்டமாக பட்டினி கிடக்கின்றன. இலங்கையின் COVID-19 பெருந்தொற்று இந்த தோல்விகளை எடுத்துக்காட்டியது. அடிப்படை மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி நிலையங்கள் வீழ்ச்சியடைந்தது,இதனால் மில்லியன் கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாமல் போகிறார்கள், மேலும் நமது பல்கலைக்கழகங்களால் உயர் கல்விக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்று, அதிக தினசரி வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிடத்தில் உள்ளது, மேலும் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது இளம் தொழிலாளருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கின்றது. எல்லா நேரங்களிலும், IMF இன்னும் சிக்கனத்தைக் கோருகிறது, இது இது பொது சேவைகளுக்கான நிதி குறைப்பு மற்றும் கடனின் தீய சுழற்சியை மட்டுமே நிலைநிறுத்துகிறது. இந்தப் போக்கை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். கடனைத் திருப்பிச் செலுத்தும் பாதை நெருக்கடியை மேலும் மோசமாக்கும். அதற்குப் பதிலாக, நாங்கள் கடன் நீதி மற்றும் ரத்துசெய்தலுக்கு ஆதரவாக நிற்கிறோம், இதேபோல் சர்வதேச நிதிச் சுரண்டலின் வலையில் சிக்கியுள்ள மற்ற தென் உலகநாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் எங்கள் போராட்டத்தை இணைக்கிறோம். 2. திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் முக்கிய வளங்களை தேசியமயமாக்குதல் இலங்கை மக்களை முதலாளித்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியடையச் செய்துள்ளது. எங்களின் மாற்றீடு திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும், இங்கு முக்கிய சமூக நலன் வளங்கள் வங்கிகள், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். இது தனியார் லாபத்துக்கான அரசவுடமை அல்ல. மாறாக இந்த முக்கிய துறைகள் பொது நலனுக்காக சேவை செய்வதை உறுதி செய்வதற்கான வழிமுறையாகும். “முதலீட்டாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் முதலாளிகள் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை வெளியேற்றுவதைத் தடுப்பதற்கு மூலதனக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த வணிக உயரடுக்குகள் வரி மானியங்கள் மற்றும் பிற தேசிய வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, சாமானிய மக்களை சுரண்டி தனது லாபத்தை அறுவடை செய்கின்றனர். ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் பொதுத்துறையை விரிவுபடுத்துவதற்கு உதவும்,இது பலவீனமான இலங்கை முதலாளித்துவ வர்க்கம் வழங்கத் தவறிய வேலைகளை உருவாக்குகிறது. மேலும், அரிசி, சினி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை முதலாளிகள் செயற்கையாக உயர்த்துவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் இயற்றப்பட வேண்டும். இலங்கையின் தன்னலக்குழுக்கள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி விலைகளை உயர்த்தி, நாட்டைப் பணயக்கைதியாக வைத்து இலாபம் ஈட்டும் திட்டங்களுக்குச் சென்றுள்ளனர். ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரமானது வளங்கள் சந்தையின் விருப்பத்துக்கு அல்லாமல், தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. 3. வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்க்க விரைவான நடவடிக்கை தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிபொதுமக்களின் கழுத்தை நெரிக்கிறது. உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான அணுகலை உறுதிசெய்து, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உடனடி ஆதரவை எங்கள் திட்டம் கோருகிறது. இலங்கையின் சனத்தொகையில் 24.8% க்கும் அதிகமானோர் தற்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். தொழிலாள வர்க்கம், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள், சுழலும் பணவீக்கத்தின் சுமையின் கீழ் உயிர்வாழ போராடி வருகின்றனர். இந்த நெருக்கடியை நேரடியான தலையீட்டின் மூலம் தணிக்க- யாரும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 4. IMF க்கு மறுப்பு – சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை கட்டி எழுப்புவோம் IMF மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். IMF என்பது உலக மூலதனத்தின் ஒரு கருவியாகும், இது இலாப வெறியர்களை வளப்படுத்த செல்வத்தை பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சுமத்துகின்ற நவதாராளவாத சீர்திருத்தங்கள் – சமூக சேவைகளை வெட்டுதல், அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குதல் மற்றும் ஊதியங்களைக் குறைத்தல் – ஆகியன சாதாரண மக்களின் நெருக்கடிகளை மேலும் ஆழமாக்குகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக தெற்குலக நாடுகளை பாதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் வரை, மாலைதீவு முதல் லெபனான் வரை, கடன் சார்ந்து ஏகாதிபத்திய சுரண்டலின் அதே வடிவங்கள் காணப்படுகின்றன. சர்வதேச சொலிடாரிட்டியை கட்டியெழுப்புவதில் எமது தீர்வு உள்ளது. கடன் ரத்து, இழப்பீடு மற்றும் புதிய, நியாயமான பொருளாதார ஒழுங்கைக் கோருவதற்கு இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்க நாங்கள் முன்மொழிகிறோம். 5. வளங்களைப் பகிர்தல் மற்றும் பொருளாதார நீதி முதலாளித்துவ வர்க்கம் பொதுமக்களைச் சுரண்டுவதன் மூலம் பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர்,பொதுச் சேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் வருமானத்தை எடுக்க, பணக்கார தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது வருடாந்திர செல்வ வரியை நாங்கள் முன்மொழிகிறோம். இது தொண்டு அல்ல; அது நீதி. மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் ஆழ்த்திய ஒரு அமைப்பிலிருந்து செல்வந்தர்கள் இலாபம் அடைந்துள்ளனர். இப்போது அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். கூடுதலாக, கடுமையான வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம், இது பெரிய நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் கடமைகளைத் தவிர்க்கும் வரிகளை மீட்டெடுப்பதை உறுதி செய்கிறது. அவசரகால பொருளாதார நடவடிக்கையாக வரி சீர்திருத்தம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம் என்றாலும், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளை இது மட்டும் தீர்க்காது. முதலாளித்துவத்தின் கோரமான பிடியில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்க, தொழிலாளர் சார்பு கொள்கைகளை, சோசலிச கொள்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் தலைமையிலான அரசு அமைப்பது அவசியம். தேசியக் கோரிக்கை இலங்கையின் தேசிய இன பிரச்சனையின் தீர்வாக மார்க்சிச நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ச்சியாக நிலை நிறுத்தி வருகின்றோம். அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் வாதிடுகிறோம். ஜே.வி.பி/என்.பி.பி தேசியப் பிரச்சினையை மறுக்கும் அதே வேளையில், ஒற்றையாட்சி அரசின் கீழ் சுயராஜ்யத்தை மட்டுமே PSA தெளிவற்ற முறையில் முன்மொழிகிறது, எங்கள் அணுகுமுறை தெளிவாக உள்ளது. ஐக்கிய வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். தேசிய உரிமைகள் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குவதை இலக்காகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களின் ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்துகிறோம். முடிவு: முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் புரட்சிக்கான தேவை இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது வெறும் நிதி நெருக்கடி மட்டுமல்ல; அது முதலாளித்துவத்தின் நெருக்கடி. பல தசாப்தங்களாக, தெற்குலகின் பெரும்பகுதியைப் போலவே, நாடும் கடனால் தூண்டப்பட்ட நவதாராளவாத சுரண்டல் அமைப்பில் சிக்கியுள்ளது. இதன் விளைவாக ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது, மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் ஆழமாக தள்ளப்பட்டனர், அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது. எங்களின் தீர்வு தெளிவானது: முதலாளித்துவ பேராசைக்கு மாற்றாக கடன் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தர்க்கத்தை நிராகரிக்கும் மார்க்சிச வேலைத்திட்டம்,இது மனித தேவையின் அடிப்படையிலான ஒரு சமூகத்தை கட்டமைக்கிறது. நாங்கள் நடத்தும் போராட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல, உலக முதலாளித்துவத்தின் மூலம் நசுக்கப்படும் உழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆகும். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் ஒன்றிணைந்து, சோசலிச இலங்கையையும், சோசலிச தெற்காசிய கூட்டமைப்பையும், சோசலிச உலகத்தையும் கட்டியெழுப்ப முடியும். https://ethir.org/?p=9002
  15. கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 26 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டி யிட்ட நிலையில் பொதுஜன பெரமுன 12 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இதில் பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தியில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் மரிக்கார்,முஜிபுர் ரஹ்மான் ,மனோ கணேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் அலை அடிப்பதனாலும் கொழும்பு மாவட்ட ஆசனங்கள் 1 ஆல் குறைக்கப்பட்டதாலும் கடந்த முறை 19 ஆசனங்களுக்கு 924 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இம்முறை 18 ஆசனங்களுக்கு 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதனாலும் வாக்குகள் பிரிந்து செல்ல தமிழ் பிரதிநிதித்துவமே பறிபோகக்கூடிய நிலைமை ஏற்படுள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களில் 1 குறைக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதுவரையான அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டுள்ள நிலையில் இம்முறை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவையும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளதுடன் மக்கள் செல்வாக்குள்ளவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு இதுவரை கிடைத்து வந்த தமிழர் பிரதிநிதித்துவம் இம்முறை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது எனவும் இந்த அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://akkinikkunchu.com/?p=298513
  16. இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆
  17. தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை என ஐனாதிபதி சட்டத்தரணியும் சுயேட்சைக்குழு 14 இன் வேட்பாளருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ 2009 வரை தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையிலே இருந்தது. அதன் பின்னரே இந்த மாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. கட்சிக்குள் எப்போதும், தன்னிச்சையாகவே முடிவெடுப்பார்கள், இதற்கு மாவை சேனாதிராஜாவின் பலவீனமும் ஒரு காரணம் எனலாம். நாடாளுமன்றத்திலுள்ள பதவிக்காக நான் போட்டியிடவில்லை, தமிழ் தேசியத்தை பாதுகாப்பதே எங்களது நோக்கம். அரசியல்வாதிகளால் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சரியானவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். தமிழரசுக்கட்சியிலியிருந்து விலகியதே அங்கு நடப்பதை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.” என்றார். https://newuthayan.com/article/தமிழ்_மக்கள்_வீட்டு_சின்னத்திற்கு_வாக்களிப்பார்களாக_இருந்தால்_அதை_விட_வரலாற்று_தவறு_ஒன்றுமில்லை
  18. சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….? November 8, 2024 — அழகு குணசீலன் — இலங்கை பாராளுமன்ற தேர்தல் களம், சமூக வேறுபாடுகளைக்கடந்து பாரம்பரிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள், போடுகாய்கள், வாக்கு சேகரிப்போர், வாக்குப்பிரிப்போர், பழையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட 8888 வேட்பாளர்களால் நிரம்பி வழிகின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் எப்படி விலக்காக இருக்கமுடியும்? இங்கும் அதே நிலைதான். பல தடவைகள் தோல்வி அடைந்த, அடுப்பங்கரையில் சூடுகண்ட பூனைகளும், அடுப்பங்கரையில் சட்டி, பானைகளில் கிடந்த எச்சசொச்சத்தில் ருசி கண்ட பூனைகளும் களத்தில் நிற்கின்றன. இவற்றில் சில யாரும் பார்க்கவில்லை என நினைத்து கண்களை மூடிக்கொண்டு பாலைக்குடித்தவை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் என்று இதுவரை பார்வையாளராக இருந்த மக்களுக்கு புள்ளடியினால் ‘குறிசுடும்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக்கள் எந்த வேட்பாளருக்கு, எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கப்போகிறது… ? யாரையெல்லாம் தோற்கடிக்கப்போகிறது….? மட்டக்களப்பு தேர்தல் கள நிலைமைகளின் படி ‘போனஸ் ‘ ஆசனத்திற்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக கொள்ள வேண்டி உள்ளது. இது தமக்கு தான் மூன்று அல்லது குறைந்தது இரண்டு கிடைக்கும் என்ற வீடு, படகு, சங்கு கட்சிகளின் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டது. போனஸ் என்பது மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அதி கூடிய வாக்குகளை பெறும் கட்சிக்கு/சுயேட்சை குழுவுக்கு உரிய மேலதிக ஆசனத்தை குறிக்கிறது. அதாவது ஐந்து ஆசனங்களில் முதல் இரண்டு ஆசனங்களையும் பெறும் கட்சி எந்தக் கட்சி என்பதாகும். இம்முறை கள நிலவரங்களின் படி போனஸ் ஆசனத்துடன் மூன்று ஆசனங்களை பெறும் வாய்ப்பு எந்தக் கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு கட்சி ஒன்று குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும். 1989 தேர்தலில் வெறும் 55, 131 வாக்குகளை பெற்று தமிழர் விடுதலைக்கைட்டணி மூன்று ஆசனங்களை பெற்ற அசாதாரண சூழ்நிலையோ அல்லது 46,413 வாக்குகளை பெற்ற ஈரோஸ் வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் பெற்ற நிலையோ இன்று இல்லை. கடந்த 2020 தேர்தலில் வாக்களிப்பு மட்டம் உயர்வாகவும், தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியும் இடம்பெற்றது. இதனால் வாக்களிப்பு வீதம் ஒப்பீட்டளவில் இம்முறையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதிகளவான கட்சிகளும், சுயேட்சைகளும் களத்தில் நிற்பது இதற்கு ஒரு காரணம். வழக்கம் போல் சோனக பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பிரதேசங்களை விடவும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருக்கும் போது மாவட்டத்தின் மொத்த வாக்களிப்பு வீதத்தை இது அதிகரிக்கச் செய்யும் . எல்லாத்தரப்பிலும் வாக்காளர் மத்தியில் கட்சிகள், அவற்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலவுகிறது. மட்டக்களப்பு தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வமாக இல்லை. சமூகம் சார்ந்த நோக்கில் இது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு பகுதியினர் எந்தக்கட்சியை, யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இருந்தும் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எண்பதைத்தொடும் என்றும், தமிழ்ப்பிரதேசங்களில் இது மட்டுமட்டாக வெறும் எழுபது வீதத்தையே எட்டிப்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிப்பு வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதற்கு தேவையான வாக்கு தொகையையும் அதிகரிக்கும். குறைந்தது கட்சி ஒன்று பிரதிநிதித்துவத்தைப்பெற குறைந்தது 35,000 – 40,000 ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (தமிழரசு,ரெலோ,புளட் +) ஒன்றாக இணைந்து 79,460 வாக்குகளை பெற்றும் இரண்டு ஆசனங்களையே பெறமுடிந்தது. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் தனித்தும், அதன் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்தும், வாக்காளர் ஒருவரைக் கூட சந்தித்து ஆதரவு கோரமுடியாத நிலையிலும் ரி.எம்.வி.பி 67, 692 வாக்குகளை பெற்றது. மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கும் பிள்ளையானுக்கு கிடைத்தது. வேட்பாளர்களை விடவும் தலைமை வேட்பாளருக்கும், கட்சிக்கும் வாக்களிக்கின்ற தேர்தல் தந்திரோபாயத்தின் பெறுபேறு இது. இதன்மூலம் செல்லுபடியற்றதாக கழிக்கப்படுகின்ற வாக்குகள் ரி.எம்.வி.பி. வாக்குகளில் குறைவாக இருக்கும். இந்த நடைமுறையை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது அவர்கள் எட்டு பேரும் தங்கள் தங்களை முதன்மைப்படுத்தி ஓடுகிறார்கள். இன்றைய நிலையில் பிள்ளையான் கடந்த முறை பெற்றளவு வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமாக மேய்ச்சல் தரை, நிலப்பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிள்ளையானின் போக்குவரத்து வீதி, பாலங்கள் உட்கட்டமைப்பு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், நிர்ப்பாசனம், கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு அப்பால் இந்த பிரச்சினைகள் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. அதேவேளை பட்டிருப்பில் இம்முறை பெறவுள்ள புதிய வாக்குகளின் மூலமும், கல்குடாவில் வியாழேந்திரனின் ஒரு பகுதி வாக்குகளையும் , தமிழ்த்தேசிய சிதறல் வாக்குகளையும் பெற்று இந்த வீழ்ச்சியை பிள்ளையானால் சரி செய்யமுடியுமா? இழந்த வாக்குகளை ஈடு செய்ய பெறப்படுகின்ற புதிய வாக்குகள் போதுமானவையா? என்ற கேள்விக்கு களத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் இரு பதில்கள் நோக்கர்களால் கூறப்படுகின்றன. நவம்பர் 15இல் இந்த கேள்விக்கான சரியான விடை தெரிந்துவிடும். கடந்த முறை ரி.எம்.வி.பி .சுமார் 12, 000 வாக்குகளால் ஒரு ஆசனத்தையும் , மேலும் சுமார் 70 வாக்குகளால் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் வாக்கு பிரிப்பாளர்கள், வாக்கு பொறுக்குபவர்களிடம் இழக்க வேண்டி ஏற்பட்டது. இந்த சைக்கிள் காரர்கள் தான் ருசிகண்ட பூனையாக கிழக்கில் அலைகிறார்கள். அதை அறிந்து மற்றைய பூனைகளும் சட்டி,பானைகளை உருட்டுகின்றன. எனினும் இன்று கடந்த தேர்தலில் நிலவிய அரசியல் சூழல் நிலவுகிறதா? என்றால் இல்லை. ரி.என்.ஏ வீடாகவும், சங்காகவும், மாம்பழமாகவும், மானாகவும் பிரிந்து நிற்கிறது. உதயசூரியனும் இன்னோரு பக்கம். வீட்டுக்குள்ளும், சங்கிலும் உட்கட்சி நிலவரங்கள் ஆரோக்கியமாக இல்லை. மட்டக்களப்பிலும் ‘சிறி ‘ எதிர்ப்பு பிரச்சாரம் யாழ்ப்பாணம் போன்று மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இது சிங்கள ‘சிறி’ க்கு தார்பூசிய கதையல்ல. தமிழ் ‘சிறி’க்கு’ முகத்தில் கரிபூசும் கதை. ஒரு வகையில் பொதுவேட்பாளரை சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆதரித்தமைக்கான பழிவாங்கல் கணக்குத்தீர்ப்பு. இதற்காகவே செஞ்சோற்று கடன் தீர்க்க அரியநேந்திரன் சிறிநேசனை ஆதரிக்கிறார். கடந்த தேர்தலில் தனது வேட்பாளர் நியமனத்தை சாணக்கியன் காகமும், நரியும் வடைக்கதை போன்று தட்டிப்பறித்தார் என்று ஜனாவை ஆதரித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜனாவும் இவரை ஆதரித்தபோதும் அந்த நன்றியை மறந்துவிட்டார். இவர்களில் கணக்கை மக்கள் யாருக்கு தீர்க்கப்போகிறார்கள் ? கடந்த பாராளுமன்ற காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சிதைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் மீது முழு வடக்கு கிழக்கிலும் மட்டும் அல்ல தென்னிலங்கை தமிழர்களாலும், புலம்பெயர்ந்த தமிழர்களாலும் முன் வைக்கப்படுகிறது. இவர்களில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ‘சிறி’ க்கு கரிபூசுகிறார்கள். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 38 கோடியை அபிவிருத்தி நிதியாக பெற்று, குருசாமிக்கு 8 கோடியை கொடுத்து விட்டு மற்றைய மாவட்டங்களுக்கு ஒரு சதமும் பங்கிட்டு ஒதுக்கவில்லை. வடக்கில் பூகம்பம் கக்குகிறது. விவகாரத்தை ஜனா சாம்பல் போட்டு மூடி மௌனம் சாதிக்கிறார். வடக்கு கட்சிகளில் போடுகாய் பதவி வகிக்கும் கிழக்காரின் பொதுநிலை இதுதான். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கி.துரைராசசிங்கம் பதவிதுறக்க வைக்கப்பட்டதும் இந்த பொதுநிலைதான். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன், சாணக்கியன் அணி சார்ந்து, அரியநேத்திரன், சிறிநேசனுக்கு எதிராகவும், சஜீத்பிரேமதாசவை ஆதரித்தும் தம்பிமாரே …! என்று விழித்து,தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்ற இறுதி நாளில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் துரைராசசிங்கம். இதன் மூலம் மற்றவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கின்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜனநாயக ஊடகதர்மத்தை கிடப்பில் போட்டார். இப்போது ‘சிறி’ க்கு கரி பூசும் வகையில் கல்குடாவில் இருந்து தனது உறவினர் ஒருவரை சுமந்திரனின், சாணக்கியன் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இணைத்து பிரச்சாரம் செய்கிறார். நல்லாட்சியில் மட்டும் அல்ல, தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் தீர்மானம் எடுக்கும் திறன் கடந்த பாராளுமன்ற காலத்திலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய அரசாங்கத்திலும் தமிழ் மக்கள் அதிகாரப்பகிர்வு கோரவில்லை, தமிழர் பிரச்சினை பொருளாதாரப்பிரச்சினை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படமாட்டாது, பாதுகாப்பு வலையங்கள், காணிகள் விடுவிக்கப்படமாட்டாது , புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமே இல்லை, தமிழரசை அரசாங்கத்தில் இணைக்கமாட்டோம், வேறு கட்சியினருக்கு- சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற என்.பி.பி.யின் தொடர்ச்சியான அறிவிப்புகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும், சிறப்பாக தமிழரசுக்கட்சிக்கும், அதன் தேர்தல் விஞ்ஞாபன முழக்கத்திற்கும் என்.பி.பி. ஆட்சியின் சாட்டையடி. இவை சுமந்திரனின் அரசியல் தந்திரோபாயம் மீதான கடும் தாக்குதலாக அமைகிறது. இந்த தோல்வியின் இடைவெளியில் மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகள் வாக்கு இலாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.பி.பி.யின் இந்த நிலைப்பாடு தமிழ்த்தேசிய பாராளுமன்ற போலி அரசியலில் தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்து மூளைச்சலவை செய்வதுடன், தென்னிலங்கையில் அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு வசதியாக உள்ளது. இது எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான சிவப்பு சிக்னல், அபாயச் சங்கூதல். சிக்னல் சிவப்பு என்றாலும், விசில் அடித்தாலும் சைக்கிளை நிறுத்தமாட்டோம் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதையாடல்வேறு.இவை அனைத்தையும் நிறுத்துப்பார்க்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களை அடைய முடியாத கோஷங்களை இலக்காகக் கூறி இன்று வரை ஏமாற்றி வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு என்.பி.பி. சுடச்சுட வழங்கும் பதில் ஒருவகையில் தமிழ்மக்கள் போலித்தமிழ்த்தேசியத்தில் இருந்து விழிப்படைய உதவியாக அமைகிறது. அதை வேளை சுயத்துவம், அபிவிருத்தி என்பன குறித்த எதிர்கால அரசியல் பயணத்திற்கான பாதையை தெரிவு செய்யவேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள்.அதற்காக திசைகாட்டி சரியான திசையை காட்டுகிறது என்று கொள்ள முடியாது. அது அபிவிருத்தி திசையை கூட சரியாக காட்டவில்லை. சீனவினால் வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்ட உதவியில் ஒரு வீடு கூட அநுரவின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்படவில்லை. சிங்கள மக்களுக்கு சமமான தனித்துவமான சுயத்துவத்தை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் கால உரையில் – அவரது பாஷையில் சொன்னால் “வெற்றுக் காசோலைக்ககு” வாக்களிக்க வேண்டாம் என்று சஜீத் பிரேமதாசவுக்கு எதிராக அவர் சொன்னதையே தமிழ்மக்கள் அவருக்கு பதிலாக திருப்பிக்கொடுக்க முடியும். மும்முனைப் போட்டியாளராகவுள்ள மூன்று முக்கிய கட்சிகளில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சி இரண்டு ஆசனங்களை பெறும் நிலையில் மற்றைய இரண்டும் ஒவ்வொரு ஆசனங்களையே பெறமுடியும். அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கான நான்கு ஆசனங்களும் பங்கிடப்பட்டுவிடும். ஐந்து ஆசனங்களில் எஞ்சியுள்ள ஆசனம் சோனகர்களுக்கு உரியது இதை முஸ்லீம் காங்கிரஸ் – ஹிஸ்புல்லா (?) வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனக வாக்குகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. இது அதிக வாக்காளர்களை கொண்ட காத்தான்குடிக்கே சாதகமாக அமைய வாய்ப்புண்டு. தேர்தல் முடிவுகள் குறித்த இந்த எதிர்வு கூறல் காட்சியை விடவும் வேறு பட்ட வகையில் வாக்களிப்பு மாதிரி அமையுமாயின் அதிகூடிய வாக்கை பெறும் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றால் ( சாத்தியம் மிக மிக குறைவு) எஞ்சிய ஒரு ஆசனம் மும்முனைப்போட்டியில் உள்ள மற்றைய இரண்டு கட்சிகளில் எதற்கு? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலையில் மூன்றில் ஏதாவது ஒரு கட்சி ஆசனமின்றி வெறும் கையோடு கச்சேரியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். மறுபக்கத்தில் வடக்கில் இருந்து வந்து தேர்தல் காலமழைக்கு வளர்ந்த காளான் விற்கும் கடைகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. சைக்கிள், வீணை, சூரியன் இவை மட்டக்களப்பாரின் வாக்குகளால் தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்க்க வந்தவை. கடந்த தேர்தலில் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சைக்கிள் கஜேந்திரன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதத்தைத்தானும் ஒதுக்கீடு செய்யவில்லை. தேசிய பட்டியல் எம்.பி. ஒருவருக்குதான் விரும்பிய மாவட்டத்திற்கு முழுமையாக அல்லது பகுதியாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கும் உரிமை உண்டு. மற்றைய எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் விசேட அனுமதி பெற்றே இதைச் செய்யமுடியும். இப்படி இருந்தும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் கிழக்கு மாகாணத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. செய்ததெல்லாம் இன பன்மைத்துவத்தை கொண்ட கிழக்கில் இன உறவை பாதிக்கும் வகையில் படையினரை வம்புக்கு இழுத்து படம்காட்டியதுதான். எனவே தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்ப்போர் குறித்து மட்டக்களப்பு மக்கள் கவனமாய் இருத்தல் அவசியம். இந்த விழிப்புணர்வு இன்மையால் கடந்த 2020 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணிக்கு 4,960, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,203, ஜே.வி.பி. 348, தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113, யூ.என்பி 833, ஈரோஸ் 331 போன்று வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சுமார் 15,000 வாக்குகள் மட்டக்களப்பு தமிழர்கள் வாக்குப்பெட்டிக்குள் போடுகிறோம் என்று நினைத்து குப்பைத்தொட்டிக்குள் போட்டவை என்பதையும் , தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு, அதிகரிப்பதற்கு எதிராக நமக்கு நாமே அளித்த வாக்குகள் என்பதையும் மட்டக்களப்பு தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மற்றொரு கோணத்தில் நோக்கினால் தென்னிலங்கை கட்சிகள் என்ற அடிப்படையில் மணிக்கூடு, காஸ் சிலிண்டர், திசைகாட்டி என்பவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. சோனகர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்திற்கு உரிமையுள்ளவர்கள். தமிழர்களுக்கு நான்கு பிரதிநிதித்துவம். இதில் தமிழ் வாக்காளர்கள், சோனகர் வாக்காளர்கள் விடுகின்ற தவறானது அவர்கள் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை குறைக்கவும், இல்லாமல் செய்யவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. தென்னிலங்கை கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு இரு சமூகங்களின் வாக்குகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் போது ஒரு சமூகத்தின் வாக்கு இன்னொரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமாக அமைவது கடந்த கால அனுபவம். அப்படியான நிலையில் திசைகாட்டி, மணிக்கூடு, காஸ் சிலிண்டர் வாக்குகள் இந்த முரண்பாட்டு நிலையை ஏற்படுத்துவதுடன் தமிழர் வாக்குகளால் சோனகசமூகத்தவர் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளன. தமிழ் பிரதிநிதித்துவம் திசைகாட்டியில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மட்டக்களப்பில் மிக மிக அரிது. சுயேட்சை குழு என்ற அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு குழுவாக பசு சின்னம் உள்ளது. கல்குடா தொகுதியின் வியாழேந்திரனின் வாக்குகள்,யோகேஸ்வரனின் வாக்குகள் இந்த சுயேட்சை குழுவுக்கு அளிக்கப்படலாம் என்ற கருத்து காணப்படுகிறது. அதேபோல் பட்டிருப்பில் திசைகாட்டி, மணிக்கூடு , சங்கு , உதயசூரியன், சைக்கிள், பசு என்பன சாணக்கியனுக்கு சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியவை. படகு, சங்கு, வீடு இவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டால் ஒருவர் புதியவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவர்தான் என்றால் வீட்டில் கல்குடாவில் இருந்து புதியவர் ஒருவர் தெரிவு செய்ரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி நடந்தால் கரிபூசியவரும், பூசப்பட்டவரும் அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். மற்றைய இரண்டிலும் பழையவரே புதியவர். நான்கு பிரதிநிதித்துவங்கள் வாக்கு விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்ட பின்னர் இறுதியான ஐந்தாவது இடம் கிடைப்பது லொத்தர் விழுந்த மாதிரியான ஒரு அதிஷ்டம். நான்கு பிரநிதித்துவ பங்கீட்டுக்குப் பின்னர் குறைந்த தொகையான வாக்காலும் ஐந்தாமவர் தெரிவு செய்யப்படலாம். அப்படியான ஒரு நிலையில் என்.பி.பி. எஸ்.ஜே.பி, சுயேட்சைக்குழு ஒன்றுக்கும் இடையே ஒரு போட்டி ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் இரண்டு சோனகபிரதிநிதித்துவம் (என்.பி.பி/ எஸ்.ஜே.பி) தெரிவாதற்கும் தமிழ் தரப்பில் ஒரு பிரதிநிதித்துவம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மும்முனைப் போட்டியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவ வாய்பை இழக்கப்போகின்ற கட்சி எது ? இது மாத்து நொடி……! https://arangamnews.com/?p=11422
  19. பொதுத் தேர்தல் களம் – 2024 November 8, 2024 — சின்னத்தம்பி குருபரன் — நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சார்பில் செல்வாக்குமிக்க மாக்கஸ் பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டிருந்தும் கரையோரச் சிங்களவர் என்ற காரணத்தினால் கண்டியச் சிங்களவர்களால் நிராகரிக்கப்பட்டு இராமநாதன் தெரிவானார். சட்ட சபைக்குச் சென்ற இராமநாதன் சிறுபான்மை மக்கள் பிரதிநிதியாகச் செய்ததையும்விட பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதயாகவே செயற்பட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் யாவரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பௌத்த, சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டமையே வரலாறாகும். சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்கதவால் பாராளுமன்றத்துக்குச் சென்று, காரசாரமாகப் பேசி, பின் கதவால் வெளியேறி அரசிடம் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வந்தனர். சிறுபான்மையினர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதற்கு நாதியற்றவர்களாக அறிக்கை விட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தி வந்தார்கள். தமக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி, ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றை நடத்தி், தமிழ் தேசியம், தனிநாடு, உரிமை, சமத்துவம், சமஷ்டி என்பறெல்லாம் வீரவசனம் பேசி, மக்களை உசுப்பிவிட்டுக் குளிர்காய்ந்த வரலாறு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ஏமாந்து, ‘இனிமேலும் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்’ என்று மாற்றத்தை விரும்பி நிற்கின்றனர். இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான முதலாவது கலவரம் 1915 இல் கம்பளையில் நடைபெற்றது. 1918 இல் இரண்டாவது கலவரமும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கவாதிகளால் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாவது இனப் படுபொலை 1939 இல் கல்லோயாத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தமிழர், முஸ்லிங்களுக்கு எதிராகப் பல இனக் கலவரங்களும் படுகொலைகளும் ஆட்சியளர்களால் திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்டன. நடந்து முடிந்த இனக் கலவரங்கள், படுகொலைகளைக் கண்டித்துப் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் கண்டித்து அறிக்கை விட்டார்களே தவிர நியாயமான தீர்வினை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்கின்றனவே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமாகும். இத்தனை காலமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் தாருங்கள் எனத் தமிழரசுக் கட்சியினர் வாக்காளர்களிடம் கோருவது வேடிக்கையாக இருக்கிறது. இலங்கையில் கட்சி அரசியல் தோன்றிய காலத்தில் இருந்து ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர ஏனையோரிடையே வெட்டுக் கொத்துக்கள், குழி பறிப்புக்கள், துரோகம், ஒற்றுமையின்மை, பிரிந்து செல்லல், இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், பொய், புரட்டு, கொலை, கொள்ளை, களவு, கடத்தல் ஆகியன சர்வசாதாரணமாகிவிட்டன. வாக்குக் கேட்டுத் தாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வரை மக்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றம் சென்றுவிட்டால் மக்களை மறந்து சுகபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.. இது வாழையடி வாழையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகள் கொள்கையைத் தூக்கிச் சாக்கடையில் போட்டுவிட்டு வீரம் பேசி, அறிக்கைவிட்டு, மக்களை உசுப்பேத்தி, கட்சிதாவி, அரசாங்க சுகபோகங்களில் தொங்கிக் கொண்டு கொழும்பில் உல்லாச வாங்க்கை வாழ்ந்து வருகின்றனர். இடைக்கிடையே தமது தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சென்று நிகழ்வுகளில் பங்குபற்றி, காட்டாப்புக் காட்டி, எந்த மேடையில் எது பேசவேண்டுமோ அதைப் பேசாது, அரைத்த மாவை அரைத்து மேடை அதிர முழங்கோ முழங்கென்று முழங்கி, உப்புச் சப்பற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை உசுப்பேத்திவிட்டுக் களிப்புடன் கொழும்பு செல்வர். இதுவே வெட்கம்கெட்ட நாறிப்போன அரசியலாகிவிட்டது. இந்த நாறிப்போன அரசியலுக்கு மக்கள் 2022 அரகலயவுக்குப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த மாற்றம் மரபுசார்நத வலதுசாரி அரசியல்வாதிகளை வயிற்றில் புளியைக்கரைத்து கதிகலங்க வைத்துவிட்டது. அதனால் பல அரசியலில்வாதிகள் விழுந்தும் உடம்பில் மண் ஒட்டாததுபோல் அரசியலில் இருந்து கௌரமாக ஒதுங்கிவிட்டார்கள். இந்த மாற்றத்தினால் பல தசாப்தங்கள் கோலோச்சிய அரசியல் வாழ்க்கையும் குடும்ப அரசியலும் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. அரகலயப் போராட்டத்தில் மக்கள் கோரிய மாற்றத்தின் வெற்றி என்பது இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்த கேவலம் கெட்ட அரசியல்வாதிகளை இந்தப் பொதுத் தேர்தலின்மூலம் ஓரங்கட்டி வீட்டுக்கு அனுப்புவதில் தங்கி இருக்கிறது. உண்மையில் வாக்காளர்கள் வேடம் போட்டு அரசியலில் சித்து விழையாட்டுக்கள் செய்து நாடகமாடும் அரசியல் கோமாளிகள் எவரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகக் கூடாது. அதில் வாக்காளர்கள் உறுதியாக இருத்தல் வேண்டும். இந்த மாற்றத்தை நன்கு உணர்ந்து செயற்படுபவர்களாக வாக்காளர்கள் மாற வேண்டும். இதுவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் நன்மையாக அமையும். மக்கள் வாக்களிக்கும்போது நாட்டில் முறைமை மாற்றத்தை விரும்பி அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்ற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். அது அறுதிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் குறித்த கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருப்பான்மை பெறுவதற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது நாட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறு செய்வதாக அமைந்துவிடும். 1970, 1977, 2020 களில் நடந்த பொதுத் தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அதற்கு மேலும் ஆசனங்களைப் பெறுவதற்கு மக்கள் வாக்களித்தமையினால் ஆட்சியாளர்கள் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். 2010 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாவிட்டாலும் மகிந்த ராஜபக்ச ஆசைகாட்டி, அச்சுறுத்தி, கட்சிகளைப் பிரித்து, பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் சேர்த்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பல காரியங்களைச் சாதித்து விரும்பிய சட்டமூலங்களை நிறவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திவந்தார். இக்காலத்திலேயே நாட்டில் கேடுகெட்ட மசோதாக்கள் பல பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் ஒன்றாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித் தனிக் கட்சிகளைத் தோன்றுவித்தனர். 2002 இல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அக்கட்சிகளை ஒன்றிணைத்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். 2005 இல் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரித்துச் சென்றார். 2005 இன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரனைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டதில் இருந்து கூட்டமைப்பு ‘கழுதை தேய்ங்து கட்டெறும்பான’ கதை போல் கூட்டமைப்பு சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்டது. அதற்குப் பல ஊது குழல்களும் சுமந்திரனுக்குப் பக்கபலமாகச் செயற்பட்டனர். தற்போது அன்டனி ஜெகநாதன் பீற்றர்(முல்லைத்தீவு), கேசவன் சயந்தன்(சாவகச்சேரி) சாணக்கியன் போன்றோர் தீவிர ஊதுகுழல்களாகவும், ஏனையோர் பக்கப்பாட்டுப் பாடுபவர்களாகவும் உள்ளனர். அதிலும் சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் தமிழ் தேசியம், தமிழர் போராட்டம், யுத்தம், யுத்த இழப்புக்கள் பற்றிய தெளிவும் அக்கறையும் இல்லாதவர்களாகக் காணப்பட்டதோடு அவற்றில் ஒதுங்கியே இருந்தனர். இவர்கள் இருவரும் மறைமுகமாகச் சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் கைக்கூலிகளாகச் செயற்படுகிறார்களோ எனச் சில விமர்சனங்களும் எழுகின்றன. சுமந்திரனும் சாணக்கியனும் தமது விசுவாசிகளை பொதுத் தேர்தல் களத்தில் நிறுத்திக் குறைந்தபட்சம் தாங்கள் இருவரும் வென்றால் போதும் எனப் பரப்புரைகளை மறைமுகமாக முடுக்கி விட்டிருக்கின்றனர். 12 ஆசனங்களைக் கைப்பற்றும் கதை மறைந்து போய் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து இரு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே போதும் என நினைக்கின்றனர். இதுவும் விசுவாசத்திற்கு ஏமாந்து போகும் கேடுகெட்ட அரசியல் என யாழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர். இதேநிலை பெரும்பாலான தமிழ்க்கட்சிகளில் காணப்படுகின்றது. 23 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இப்போது இரண்டு ஆசனங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையில்லை, வேட்பாளர்களுக்கிடையேயும் ஓற்றுமையில்லை, ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ முந்தியெனப் போட்டி போட்டுக் கொண்டு றேஸ் ஓடுகின்றனர். இறுதிக் கட்டத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமக்குள் ஒற்றுமையில்லை வாக்காளர்களை ஒற்றுமையாகச் சென்று தமது சின்னத்துக்கும் இலக்கத்துக்கும் புள்ளடி இடுமாறு கோருகின்றனர். “இதனைக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இனிமேலும் பாராளுமன்றக் கதிரையும் சுகபோக வாழ்க்கையும் தேவைப்படுகிறதோ” என வாக்காளர்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர். தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தாருங்கள், எமது பலத்தை நிரூபித்துப் புரையோடிப் போயிருக்கும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம் என வெட்கமின்றிவாக்குக் கேட்கின்றனர். ‘23, 18, 14, 10 ஆசனங்கள் தம்வசம் இருந்தபோது தீர்க்கமுடியாத பிரச்சினையை இனிமேலா தீர்க்கப் போகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த வாய்ப்பினையும் பயன்படுத்தத் தவறியவர்கள் இனிமேல் எப்படித் தீர்க்கப் போகின்றனர்’ எனவும் வாக்காளர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது. இதே கருத்தையே ஏனைய தமிழ், முஸ்லிம், மலையக வேட்பாளர்களில் பலர் தொடர்பாக வாக்காளர்கள் பேசிக் கொள்வதையும் அறியக்கூடியதாக உள்ளது. இன்று பல வேட்பாளர்கள் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்ற தெளிவுக்கு வந்திருப்பதையும் அறிய முடிகிறது. அதனால் பல வாக்காளர்கள் வாக்களிப்பில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். சிங்கள வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு தமிழ், முஸ்லிம் மலையக வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும். பாராளுமன்ற ஆசனங்களைச் சுத்திகரிக்கும் வகையில் முறைமை மாற்றத்தை விரும்பி, இலஞ்சம், ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகமற்ற, தாமாகவே முன்வந்து மக்களுக்குச் சேவை செய்த, சேவை செய்ய விரும்புகின்ற வேட்பாளர்களை இனங்கண்டு, கட்சி பேதம் பாராது வாக்களித்து அவர்களைத் தெரிவு செய்வதே சிறந்த முன்மாதிரியான மாற்றமுமாகும். முகம் தெரியாத, மக்களுக்குச் சேவை செய்யாத பிரபல்யமற்றவர்களையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களையும் தவிர்த்து புதிய முகங்களைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனமாகும். அதுவே சிறந்த தேர்வாகவும் அமையும். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியாளர்களை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது வடக்கு, கிழக்கு மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு அரச சார்பு அரசியல் சாணக்கியமே பொருத்தமானதாகும். தற்போது இருக்கும் சாதகமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சிறுபான்மையினர் யாவரும் முன்வர வேண்டும். அண்மையில் சமூக வலைத்தளங்களில் “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம். பொய் பொய்யாச் சொல்லி ஏமாற்றினது போதும்…” என்ற பாடல் முன்னாள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுவைரலாகிப் பிரபல்யம் பெற்றிருந்தது. அத்தகைய அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்கில் வாக்களிப்பதைத் தவிர்த்து மக்களுக்குச் சேவை சேய்யக்கூடிய அப்பழுக்கற்ற,அறிந்த, தெரிந்த புதியவர்களைத் தெரிவு செய்வோம். இந்தப் பொதுத் தேர்தலைச் சிறந்த முன்னுதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வோம். https://arangamnews.com/?p=11418
  20. ராசவன்னியன் ஐயாவின் மகன் திலீபனுக்கும் மருககள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்💐💐💐
  21. முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=298467
  22. தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும். https://akkinikkunchu.com/?p=298489
  23. சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது. தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன் தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர். நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள். அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார். அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=298483 மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம்; சிறீதரன் பொலிஸில் முறைப்பாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றையதினம் (08) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றைய தினம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன. அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள். என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன். இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை. அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம்தாழ்த்திக் கொள்ளாதீர்கள்“ என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=298446
  24. தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்! SelvamNov 08, 2024 09:27AM அ. குமரேசன் சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன. படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது. சொல்லப்படுவது என்ன என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே எனது அணுகுமுறை. அமர அரசியல் தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது. உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள். தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும். படத்தின் வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள். நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான். அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை. வீரமும் தியாகமும் மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன். “அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது. “ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும். திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது. அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார். ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார். புதிய தணிக்கை இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள். தேசப்பற்று ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது. அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன. அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன. அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்? எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள் என்று அரசாங்கம் சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.) ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத் தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் ஓவியத்தில் இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள் ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை. அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா? தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில், தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான். ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும். இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும். https://minnambalam.com/featured-article/amaran-movie-politics-patriotism-speacial-article-on-kumaresan/
  25. “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய் Minnambalam Login1Nov 08, 2024 11:58AM நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.