Everything posted by கிருபன்
-
உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் March 20, 2026 5:53 pm மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஈரானுடனான இஸ்ரேல்–அமெரிக்க போர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். அது உக்ரைனை பலவீனப்படுத்துவதோடு, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் வளங்களையும் வேறு திசைக்கு திருப்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “புடினுக்கு, ஈரானில் நீண்டகால போர் ஒரு நன்மை. இது எரிசக்தி விலைகளை பாதிப்பதோடு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பையும், வான்வழி பாதுகாப்பு உற்பத்தியையும் குறைக்கிறது. இதனால் நமக்கும் வளங்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது” என ஜெலன்ஸ்கி மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/ukraine-faces-missile-shortage/
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக.. மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். விரைந்து வந்த பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா எனத் தெரியவந்துள்ளது. நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, ரனுஜாவைத் தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார். அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmmyulqag0005356pepmf6lew
-
நயினாதீவில் மினி சூறாவளி
நயினாதீவில் மினி சூறாவளி adminMarch 20, 2026 நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால், இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால், பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை மழை பெய்தது. அதேநேரம், தீவகப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், தீவுகளுக்கான படகு சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும், நயினாதீவு பகுதியில் வீசிய பலத்த காற்றினால், இறங்குதுறை பகுதியில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்த நிழற்கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மீனவர்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த பகுதிகளில் விழுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள் மற்றும் தகரக் கூரைகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://globaltamilnews.net/2026/230703/
-
அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை
அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை adminMarch 20, 2026 அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணிவருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர், “ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் எமது நடுநிலைத் தன்மையை பாதுகாத்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230711/
-
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55670
-
நம்பிக்கையீனங்கள் உருவாதல்
நம்பிக்கையீனங்கள் உருவாதல் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடும் இருக்கிறது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான வழிகளைத் தேடுவதே இப்போதுள்ள நெருக்கடியாகிவிட்ட நிலைதான் காணப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகளால் அடிப்படையான பல விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது நினைவுக்குவராமல் போய்விடுகின்றன. இது வழமையானதே. அது காலங்கடத்தல்களுக்கே காரணமாகிப் போய்விடுகின்றன. அதில் ஒன்றுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம். இப் போராட்டம் ஆரம்பமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. தற்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கங்கள். ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது கோரிக்கைகளை தத்தமது வழிகளில் முன்வைப்பதிலேயே காலஙகடக்கிறது. அதேநேரத்தில் அச்சுறுத்தலான நெருக்கடிகளும் உருவாகாமலில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நான் சாகும் போதாவது என் சகோதரன் எனது தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி மரணமானார். 31 வருடங்களாக சிறையில் வாடும் கைதி ஒருவரின் குடும்பத்தின் நிலை அவ்வாறாக இருக்கிறது. அது போன்று பல கதைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சந்தேகங்களும், கவலைகளும் தினம் தினம் தமிழ் மக்களை ஆட்கொள்ளுகின்றன. அதே போன்று காணாமலாக்கப்பட்ட, இராணுவம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கேட்ட வண்ணமே பல உறவுகள் உயிரை விட்டவண்ணமிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்குஎதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ திரு;வு, நீதி வழங்கவோ முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்று வரை தோற்றுப்போயே இருக்கின்றன. மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயமே தமிழ் மக்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாற்றம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு சார் அச்சத்தினை கைவிட முடியாத நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதா என்ற கவலையையும் சேர்த்தே நகர வேண்டியும் உள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள், சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோரின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சருடைய இந்தக் கருத்தானது கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என நிராகரிக்கப்பட்ட, தற்போதைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு நடத்துவதற்கான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றனவற்றின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் காணப்படுகின்ற நிலையில் தான் அரசாங்கம் தமது இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பது இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிக்குக் கொண்டுவரப்பட்டாலும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், போன்றன முடிவுக்கு வரவில்லை. அத்துடன், தொடர்ச்சியாக பேசப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் போன்றவற்றிடம் தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்றவைகளாகவே இருந்தும் வருகின்றனர். இந்த நிலையில் இப்போதும் இவ்விவகாரங்களுக்கு சர்வதேச பொறிமுறையினால் எதுவும் நடைபெறாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுவதானது காலங்கடந்தும் ஞானம் கிடைக்காத தன்மையாகவே சொல்ல முடியும். அதே நேரத்தில், காணாமல் போனோர் விவகாரம் தனித்துவமானது. என்றும் அதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்த விடயங்களை தொடர்வதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதற்கப்பால் அவர்கள் கோருகின்ற சர்வதேச நீதி என்பதனை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது எனவும்கூறலாம். அதே நேரத்தில், நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது எனக் கூறும் அரசாங்கம் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்காமல் இருப்பதனை அவ்வாறே வைத்துக் கொண்டு நகர முயல்வதானது ஆபத்தான நிலைமையே. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து விட்டு அதனைவிட மோசமானதொரு சட்டத்தை உருவாக்குவதும், புதியட அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருத்து வெளியிடுவதும் பொருத்தப்பாடில்லாச் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன. இவையெல்லாம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை உணராமல் நகர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்புச் செயற்பாடு, வட கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தீர்வை வழங்காமல் காலத்தை வீணடித்தல் போன்றவைகள் நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தும் என்பதனைத் தவிர வேறொன்றில்லை. அந்தவகையில்தான், இலங்கையில் யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, இன அழிப்புகள் நடைபெற்றன, மனித குலத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றுக்கான பொறுப்புக்கூறல் அவசியம் தேவை என்பது தொக்குகிறது. அது மாத்திரமின்றி சர்வதேச வடிவமைப்புகளை மீறுவதாக ஒரு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புகுத்த நினைப்பதும் தவறானதாக இருக்கிறது. அவ்வேளையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை தண்டிக்கும் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதுடனேயே முடிவு கிடைக்கவே வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் நிச்சயம். இஸ்ரேல்- அமெரிக்காவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, ஈரான் நடத்தும் யுத்தம் முடியும் வரையில் காத்திருப்போம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையீனங்கள்-உருவாதல்/91-374144
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
உங்களுக்கு தெரியாத வட கொரியா உலகம் தொழில்நுட்பத்திலும் சுதந்திரத்திலும் உச்சத்தை தொட்டுள்ள இந்த யுகத்தில், இன்னும் ஒரேயொரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டு, வெளி உலகத்திலிருந்து முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடு தான் வட கொரியா. பெயரில் 'ஜனநாயகம்' என்று இருந்தாலும், அந்நாட்டு மக்கள் கிம் ஜொன் உன்-னின் கடுமையான ஆட்சியின் கீழ் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு கைதிகளை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 1. தெய்வமாக வணங்கப்படும் "கிம்" குடும்பம் வட கொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும், பாடசாலையிலும், அலுவலகத்திலும் முன்னாள் தலைவர்களான கிம் இல் சுங் மற்றும் கிம் ஜொன் இல் ஆகியோரின் புகைப்படங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படங்களின் தூசியை துடைப்பதற்கு கூட ஒரு விசேட துணி இருக்க வேண்டும். ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அந்தப் புகைப்படங்களே முதலில் காப்பாற்றப்பட வேண்டும். தற்போதைய தலைவர் கிம் ஜொன் உன் "உன்னதத் தலைவர்" என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் கூட, அது மரண தண்டனை அல்லது மூன்று தலைமுறைகள் சிறையிலிருக்க வேண்டிய பாரதூரமான குற்றமாக கருதப்படுகிறது. 2. சொங்புன் முறை: பிறப்பிலேயே தீர்மானிக்கப்படும் விதி வட கொரியாவில் ஒரு நபரின் மதிப்பு அவரது திறமையால் அல்ல, மாறாக அவரது குடும்பம் அரசாங்கத்திற்கு காட்டும் விசுவாசத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே 'சொங்புன்' முறை என அழைக்கப்படுகிறது. விசுவாசமான வகுப்பு: அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு தலைநகரமான பியாங்யாங்கில் வசிக்கவும், நல்ல கல்வி மற்றும் உணவை பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்ப்பு வகுப்பு: அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள். இவர்களுக்குக் சிரமமான பகுதிகளில் கூலி வேலைகளும், கடுமையான ஒடுக்குமுறைகளும் மட்டுமே மிஞ்சும். 3. தொழில்நுட்பம் மற்றும் தகவல் தடை நமக்கு இணையம் (Internet) இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஆனால், ஒரு சாதாரண வட கொரிய குடிமகனுக்கு இணையம் என்றால் என்னவென்றே தெரியாது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் "க்வான்ம்யோங்" (Kwangmyong) என்ற உள்நாட்டு வலையமைப்பு மட்டுமே அங்கு உண்டு. அதில் அரசாங்கத்தின் பிரச்சார செய்திகள் மட்டுமே இருக்கும். அவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்கு அழைக்க முடியாது. அனைத்து செய்திகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும். தென்கொரிய நாடகங்களையோ அல்லது ஹொலிவுட் திரைப்படங்களையோ பார்ப்பது ஒரு "புரட்சிக்கு எதிரான" குற்றமாகும். இதற்காக பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 4. குவான்லிசோ (Kwanliso): பூமியிலுள்ள நரகம் வட கொரியாவில் உள்ள அரசியல் சிறை முகாம்கள் உலகின் மிக கொடிய இடங்களாக கருதப்படுகின்றன. ஒருவர் தவறு செய்தால், அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட சிறையிலேயே பிறந்து சிறையிலேயே இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்களுக்கும் மேலான கடின உழைப்பு, பட்டினி மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் அங்கு சாதாரணமானவை. பெரும்பாலான கைதிகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலேயே உயிரிழக்கின்றனர். 5. இருளில் மூழ்கிய தேசமும் பஞ்சமும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, சீனாவும் தென்கொரியாவும் ஒளியால் பிரகாசிக்கின்றன, ஆனால் வட கொரியா ஒரு கருந்துளை (Black hole) போலத் தெரியும். தலைநகருக்கு வெளியே உள்ள பல பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். மேலும், 1990களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்றும் அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் முறையான ஊட்டச்சத்து இன்றி வாழ்கின்றனர். இருப்பினும், அரசாங்கம் தனது நிதியை அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கவே செலவிடுகிறது . 6. தப்பிச் செல்வதில் உள்ள ஆபத்து இந்தச் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வது என்பது மரணத்தை வரவேற்பதற்கு சமம். பலர் சீன எல்லை வழியாக தப்ப முயல்கின்றனர். ஆனால் சீனாவில் பிடிபட்டால், அவர்கள் மீண்டும் வட கொரியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை காத்திருக்கும். தென்கொரியாவை அடைய முடிந்த ஒரு சிலரே தாங்கள் அனுபவித்த அந்த துயர கதைகளை கூறுகின்றனர். சுதந்திரமாக சுவாசிப்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துகின்றனர். வட கொரியாவை பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் உரிமை, தகவல்களை அறியும் உரிமை மற்றும் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை ஆகியவை எவ்வளவு பெறுமதியானவை என்பது புரிகிறது. அரசியல் நிலைத்தன்மை என்ற பெயரில் மனித உரிமைகள் நசுக்கப்படும்போது, ஒரு நாடு எவ்வளவு பெரிய அதலபாதாளத்தில் விழும் என்பதற்கு வட கொரியாவே சிறந்த உதாரணம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உங்களுக்கு-தெரியாத-வட-கொரியா/91-374150
-
வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
சமூக வலைத்தள அவதூறு: மாணவன் மற்றும் தந்தை கைது – தாக்குதல் சம்பவம் பரபரப்பு adminMarch 17, 2026 பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு பரப்பிய மாணவனையும் காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூரிய ஆயுதங்களால் தாக்கிய மாணவனின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சாதாரண தர கணித பாடத்தில் சித்தி பெறாதமையால் , கணித பாடத்திற்கு தோற்றுவதற்காக சாதாரண தர கணித வகுப்பிற்காக தனியார் வகுப்பில் கல்வி கற்றுள்ளாா். அந்த கணித வகுப்பில் கற்கும் மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இரு மாணவிகளின் (profile) புகைப்படங்களை எடுத்து , மற்றுமொரு மாணவி தனது தாயாரின் தொலைபேசி இலக்கம் ஊடாகவே வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருந்தமையால் மாணவியின் தொலைபேசி இலக்கம் என மாணவியின் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து , இரு மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து , மாணவியின் தாயரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு , அந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போலி “ரிக் ரொக்” தளத்தில் பதிவிட்டுளளார். அதனால் மாணவியின் தாயாரின் இலக்கத்திற்கு பல தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான நோக்குடன் தொலைபேசி அழைப்புக்கள் வந்த நிலையில் , மாணவியின் மூத்த சகோதரன் அது தொடர்பில் விசாரித்த வேளை , ரிக் ரொக் தளம் ஒன்றில் இருந்தே இலக்கத்தை பெற்றதாகவும் , குறித்த தளத்தின் இணைப்பினையும் தொடர்பு கொண்டவர்கள் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் குறித்த ரிக் ரொக் தளம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அது தனது சகோதரியுடன் கணித வகுப்பில் கற்கும் மாணவனுடையது என்பதனையும் , மாணவன் வேலணை பகுதியை சேர்ந்தவர் என்பதனையும் கண்டறிந்து மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு சென்று மாணவனின் தகப்பனிடம் மாணவனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்து , மாணவனின் தொலைபேசியை பரிசீலித்த வேளை மாணவனே , அந்த ரிக் ரொக் தளத்தினை இயக்கி வருவதனை கண்டறிந்து தகப்பனிடம் காட்டி, மாணவனின் தொலைபேசியுடன் , காவல் நிலையத்திற்கு சென்று முறையிட போவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன் கூறிய வேளை , தந்தை அவர்களுடன் முரண்பட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கூட சென்றவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , ரிக் ரொக் தளத்தில் அவதூறு ஏற்படுத்திய மாணவனும் , தந்தையும் ஊர்காவற்துறை காவல் நிலையம் சென்று தனது மகனை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஊர்காவற்துறை காவல்துறையினா் மாணவனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவனை கைது செய்ததுடன் , ஏனையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையும் எடுத்து இருந்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றில் மாணவனின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் முற்படுத்தினர். அதனை அடுத்து இளைஞனை நீதிமன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மாணவிகள் தொடர்பில் ரிக் ரொக் தளத்தில் பரப்பப்பட்ட தகவல் தொடர்பில் நியாயம் கேட்க சென்ற வேளை வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு , இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , விளக்கமறியலில் உள்ள இளைஞனுக்கு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து , பிணையில் இளைஞன் விடுவிக்கப்பட்டார். அதேவேளை , மாணவிகளின் புகைப்படத்தினை பயன்படுத்தி , மாணவி ஒருவரின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட்டு , ரிக் ரொக் தளத்தில் தவறான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் ஏன் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊர்காவற்துறைகாவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரிய வேளை , முறைப்பாடு அளிக்க சென்ற தம்மை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் காவல் நிலையத்தில் காவல் காக்க வைத்திருந்தும் முறைப்பாட்டை காவல்துறையினா் ஏற்காது , தவறான தகவல்களை பரப்பிய மாணவனின் தந்தையின் முறைப்பாட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றில் தெரிவித்தனர். அது தொடர்பில் சத்திய கடதாசி முடித்து தருமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மன்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் , பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் முறைப்பாடு செய்ய சென்ற வேளை இது சைபர் க்ரைம் பிரிவில் முறையிட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவினர் “ரிக் ரொக்” தளம் தொடர்பில் தாம் முறைப்பாட்டை ஏற்க மாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெப்ரவரி மாதம் இறுதியில் முறைப்பாடு செய்த நிலையில் , காவல்துறையினா் சுமார் 20 நாட்களின் பின்னர் மாணவனையும் அவரது தந்தையும் கைது செய்து, தந்தையை மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் , மாணவனை சமூக ஊடகத்தில் அவதூறு ஏற்படுத்தினார் என குற்றச்சாட்டின் கீழும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கினை விசாரித்த மன்று தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவன் 18 வயதினை பூர்த்தி செய்யாதமையால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு திகதியிட்டது. மாணவிகளின் புகைப்படங்களை தவறான நோக்குடன் பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் அவதூறு தவறான தகவல்களை பகிர்ந்த மாணவனுக்கு எதிராகவும் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு நபர் ஒருவருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய மாணவனின் தந்தைக்கும் எதிராக முறைப்பாடு பதிவு செய்து சுமார் 20 நாட்களின் பின்னர் அவர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளமையும் சந்தேகநபர்கள் முன்னர் செய்த முறைப்பாட்டிற்கு உடனடியாக கைது நடவடிக்கையையும் மேற்கொண்டமை காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230611/
-
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ் adminMarch 18, 2026 கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவனாக இருந்தவன். போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது. மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது. ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து. இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும். இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன். ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால் அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230647/
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
வடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை adminMarch 19, 2026 வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாடசாலைகளுக்குள் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் நேரடியாகச் சென்று மத நூல்கள் விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பைபிள் வழங்க விரும்பும் அமைப்புகள், அதை நேரடியாக மாணவர்களுக்கு வழங்காமல் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர்: அந்த நூல்கள் கிறிஸ்தவ பாடம் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்வழங்கப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த நடவடிக்கை பள்ளி சூழலில் மத சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுடனும் சமநிலையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. https://globaltamilnews.net/2026/230657/
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
திரைப் பாடல்கள் இலக்கிய வகைக்குள் இல்லை என்பதையே புரியாமல் 😂🤣 ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள் அகழ் வைரமுத்து இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது. வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்மையாகக் கொண்ட அழகியல் அது. வானம்பாடி இதற்கு நேர்மாறானது. அது வெளிப்படையான கூற்றுகளையே தேர்கிறது. எனினும் அதற்கும் ஒரு வரலாற்று பொருத்தப்பாடு உண்டு. இடதுசாரி அரசியலின் பின்னனியில் அது உருப்பெற்றது. புரட்சிக்கான அறைக்கூவல் கொண்டிருந்தது. இன்னொருபுறம் பொது மனதின் அக ஏக்கத்துக்கான வடிகாலாக இருந்தது. இன்றைய சமூகச் சூழல் கடந்தகாலத்திலிருந்து வேறுபட்டது. எனவே அக்கவிதைகளுக்கான பொருத்தப்பாடும் ஏறத்தாழ இல்லாமல் ஆகிவிட்டது. வைரமுத்து வானம்பாடி மரபின் தொடர்ச்சியாக அடையாளம் காட்டப்பட்டாலும் அவ்வரிசையிலும் பொருட்படுத்தத்தக்க இடம் அவருக்கில்லை. பைரன் போன்ற புகழ்பெற்ற கற்பனாவாதிகளை நகலெடுக்கும்விதமாக இயற்கையை வருணிப்பது; கலையின் உன்னதத்தை சுட்டுவது. மறுமுனையில், சுயமுன்னேற்றத்துக்கான ஒழுக்க விதிகள். (அவருடைய அமைப்பின் பெயரே ‘வெற்றித் தமிழர் பேரவை’தான்). கொச்சையான காதல் வரிகள். அறிவியல் தகவல்களை வைத்து மேம்போக்காக சமூக விமர்சனம் செய்வது. மிகை நாடகீயம். இவையே அவர் எழுத்துக்களின் மையமாக இருந்துள்ளது. ஒருவகையில் அறிவியல் மயப்பட்ட நேருவிய சோஷியலிச யுகத்திற்கும் உலகமயமாதல் யுகத்திற்கும் நடுவே அவர் இருக்கிறார். இரண்டிலிருந்தும் சுய அடையாளத்தையும், லாபத்தையும் பெருக்கும்விதமாய் கருத்துக்களை எடுத்து, தேய்ந்த பழைய நடையில் எழுதுவதே அவர் பாணியாக உள்ளது. சங்க இலக்கியச் சான்றுகளும் வட்டார வழக்கும் ஊடாடுவது அவருடைய தனித்தன்மையாக கருதப்படுகிறது. இவை யாவுமே, சில ஆயிரம் பரிசுத் தொகையில் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டே வருடங்களில் நின்று போகிற விருதுகளுக்குக்கூட பெறுமதியானவை அல்ல. ஆனால் வைரமுத்து சாகித்திய அகாடெமி வாங்கிவிட்டார். இப்போது ஞானபீடத்தையும் வாங்கிவிட்டார். திரைப்பட பாடலாசிரியராக வைரமுத்துவை மதிப்பிடுவது இவ்விருதுக்கு வெளியே பேசுவதாகும். அத்துறையில் அவருடைய நிபுணத்துவம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கவிஞராக, புனைவாசிரியராக அவருக்கு நவீன இலக்கியத்தில் எந்த இடமும் இல்லை. இந்நிலையில் அவர் தேசிய அளவில் இத்தகைய உயரிய விருதை பெறுவது நவீன தமிழ் இலக்கிய இயக்கத்துக்கு நேர்கிற அவமரியாதை; தமிழ் மொழிக்கு நேர்கிற அவமரியாதை. (தமிழ் மொழியும், நவீன இலக்கிய இயக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்பதே பொதுச் சமூகத்தின் புரிதல். எனவே அது இந்த விருதை வரவேற்கவே செய்யும்). வைரமுத்துவின் அரசியல் செல்வாக்கு ரகசியமானதன்று. பல்வேறு மட்டங்களில் அவருடைய தொடர்பு வலை நீள்கிறது. மாநிலத்தின் முதலமைச்சர் வரை அவருக்கு நட்பு வட்டம் இருக்கிறது. அதை அடிக்கடி பிரகடனம் செய்யவும் அவர் தவறுவதில்லை. கவிஞன் எனும் அடையாளத்தை -குரலும் உடையும் பாவனையுமாக- ஒரு கேடயம் போல அவர் பயன்படுத்திக் கொள்கிறார். ஓர் இலக்கியவாதிக்குரிய லட்சணங்கள் அல்ல இவை. வைரமுத்து ஞானபீடம் விருதுக்கு நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார் என்பது செய்தி. பல ஆண்டுகளாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழுக்கு ஞானபீடம் வேண்டும் என்று முழங்கியிருக்கிறார். தனக்கு வேண்டும் என்று நேரடியாக கேட்க முடியாது என்பதால் தமிழுக்கு வேண்டும் என கேட்பது பலரும் பின்பற்றும் ஒரு வழிமுறை. (அந்தளவு நாகரீகம் மிச்சம் இருப்பதும் மெச்சத்தக்கதே). வைரமுத்து மீது பொதுவெளியில் சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளினாலேயே இவ்விருது அவருக்கு காலத் தாமதமாக கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. பரவலாக விவாதிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகள்கூட இவ்விருதுக்கு தடையாகவில்லை; அவருடைய அரசியல் சார்புகளும் தடையாகவில்லை. இவை எல்லாம் வைரமுத்துவின் செல்வாக்கையே காட்டுகின்றன. 2017லேயே எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் வைரமுத்து ஞானபீடத்தை வெல்லும் இடத்தில் இருப்பதாக எழுதினார். தன் எதிர்ப்பை தெரிவித்ததுடன் கரிசல் எழுத்தின் முன்னோடியான கி.ராஜநாராயணனுக்கு அவ்விருது வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார். ஆனால் கி.ராஜநாராயணன் அவ்விருதை பெறாமலேயே 2021ல் மறைந்துவிட்டார். இன்று வைரமுத்து அதை வாங்கிவிட்டார். நவீன தமிழ் இலக்கிய இயக்கம், மிகச் சிறிய வாசக வட்டத்தினுள் புழங்குவது. அமைப்புகளுடனும் அதிகார மட்டங்களுடனும் நெருக்கமான தொடர்பில்லாதது. தனித்து செயல்படுவது. சமீப ஆண்டுகளில்தான் சாகித்திய அகாடெமி விருதுகளே தகுதியான எழுத்தாளர்களை அடைகின்றன. அந்த இடத்துக்கே இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறோம். எனினும் சிறிய குழுவாக இயங்கினாலும் அதனுடைய தீவிரம் எந்த உலக இலக்கிய சூழலுக்கும் குறைவானதல்ல. இன்று, வைரமுத்து இவ்விருதுக்கு தகுதியானவர் அல்ல என்று ஓர் ஆரம்ப நிலை வாசகனால் கூட சொல்ல முடிகிறதென்றால் அது இந்த இயக்கத்தின் மதிப்பையே காட்டுகிறது. அந்த மதிப்பை தொடர்ந்து தக்க வைப்பதும், ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் கடத்துவதுமே நம்முடைய லட்சியங்கள். அதன் நிமித்தமாகவே இவ்விருதுக்கு அகழ் தன் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது. வைரமுத்துவுக்கு ஞானபீடம் அறிவித்திருப்பதன் வழியே பாரதிய ஞானபீட அமைப்பு தனக்கும் தமிழ் மொழிக்கும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இத்தகைய உயரிய விருதுகள் தொடர்ந்து ரகசியமான முறைகளிலேயே செயல்படுவதும் விமர்சனத்திற்குரியது. தேர்வுக் குழு, பரிந்துரை விவரம் இவை எல்லாம் பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல், ரகசியமாக விற்கப்படுவதினால்தானே இவ்விருதுகளை வாங்கவும் முடிகிறது. சுந்தர ராமசாமி இந்த நேரத்தில் முன்னோடி எழுத்தாளரான சுந்தர ராமசாமியினை நினைவுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தன் வாழ்நாள் முழுக்க சாகித்திய அகாடெமியின் தேர்வுகளுக்கு எதிராக அவர் பேசியும் எழுதியும் வந்தார். அவை ஒரு அடிப்படை வரையறையை நமக்கு அளித்தன. பலரும் பின்பற்றுவதற்கான மாதிரியாக அது மாறியது. அகிலன் ஞானபீடம் வாங்கியபோது அதை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரை – “போலி முகங்கள் சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு”- புகழ்பெற்றது. பல சூழ்நிலைகளிலும் அது தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகிறது. அகிலன் விருது பெற்றதை பத்திரிக்கைகள் கொண்டாடுவது பற்றி அவர் எழுதிய வரி -“ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது”- பழமொழி போலாகிவிட்டது. “எந்த இலக்கியப் பரிசும் ஒரு சமூகச் செயல்” என வகுத்து விருதுகளில் நிகழும் மோசடிகளை எதிர்கொள்வதற்கான மொழியை நமக்கு அது தந்தது. அதை நவீன தமிழ் இலக்கியச் சூழலின் அறிக்கை எனலாம். ஞானபீடம் பரிசுப் பெற்ற அகிலனின் “சித்திரப் பாவை” நூலைவிட சிறந்த நாவல்கள் ஐம்பதேனும் தமிழில் உண்டு என்று 1976ல் சுந்தர ராமசாமி எழுதுகிறார். இப்போது மேலும் ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் கூடுதலாக ஐம்பது நாவல்களை நம்மால் பட்டியல் போட முடியும் என்பது பெருமையளிக்கிறது. போலியான விருதும் புகழும் நீண்ட காலம் நிலைத்திருப்பவை அல்ல. ஆனால் தீவிர இலக்கிய நூல்கள் அழியாது நிலைக்கும். “சித்திரப் பாவை” பற்றி இப்போது யாரும் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி உத்தேசித்த ஐம்பது நாவல்களும் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. அவை உரையாடலில் உள்ளன. பெயர் சொல்லாமலேயே அவை என்னென்ன நூல்கள் என்பதை நம் எல்லோராலும் கிட்டத்தட்ட யூகித்துவிட முடியும். ஞானபீடம் விருதுக்கு எதிராக நியாயமான எதிர்ப்புகளும் கண்டனங்களும் பரவும் வேளையில் இதை எண்ணுவதும் அவசியமானதே. அகழ் ஆசிரியர் குழு https://akazhonline.com/?p=11611
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
நாம், நம் கனவுகள்! jeyamohanMarch 18, 2026 வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை. இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை. இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன. இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள். இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட. எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே. தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம். அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம். https://www.jeyamohan.in/230261/
-
நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம்
நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம் 17 Mar 2026, 4:12 PM நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார். அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார். https://minnambalam.com/admk-cv-shanmugam-apology-nayanthara-issue/
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
Six killed in Swiss bus fire after man reportedly set himself alight Summarise March 11, 2026 - 15:32 Participants at the press conference in Kerzers on Wednesday, 11 March 2026. Keystone / Cyril Zingaro 6 minutes RTS / SRF + Get the most important news from Switzerland in your inbox According to initial investigation findings, a man boarded the bus in Düdingen, in canton Fribourg, at around 5:45pm on Tuesday and set fire to himself in Kerzers at about 6:25pm. The fire then spread rapidly through the entire vehicle. The suspected perpetrator is believed to be a Swiss national who was “isolated and psychologically unstable”, authorities said at a press conference in Kerzers on Wednesday afternoon. The man, allegedly in his sixties, had been reported missing by his family, according to a statement from Fribourg police. He is thought to have died in the incident. He was “known to the authorities for psychological instability” and lived in canton Bern. Deadly Swiss bus blaze: what we know so far Mar 11, 2026 Swiss police say the fire that killed six people on a bus in canton Fribourg may have been started deliberately. “As for the motive, there is absolutely no evidence to suggest this was a terrorist act,” Raphaël Bourquin, the Fribourg attorney general said at the press conference. Six killed and five injured in bus blaze in Kerzers Authorities have also confirmed that the death toll stands at six. No further details were given about the victims, except that their years of birth range from 1961 to 2009. Five people were injured: four passengers and a rescue worker. Three of them are in a serious condition. The charred shell of a Swiss PostBus after it caught fire in Kerzers on Tuesday. Keystone / Alessandro Della Valle According to Swiss public broadcaster SRF, one of the injured is being treated in the specialist burns intensive care unit at Zurich University Hospital. Two of the injured were treated at the scene, while the other two seriously hurt were taken to different hospitals. Witness accounts Swiss public broadcaster RTS interviewed a witness on Wednesday who said he was at the scene when the fire broke out. He said he had wanted to help but “there was no chance of doing anything”, as the bus went up in “flames very quickly, in less than a minute”. Responding to a journalist’s question at the press conference on Wednesday, the cantonal inspector explained that a large amount of fuel and oxygen had been present, which caused the flames to spread so quickly. A small tent has been set up at the scene for people to leave flowers and other messages of support. Keystone / Cyril Zingaro The eyewitness described seeing “giant flames” and “people burning on the side of the bus”. The clothes of a woman who tried to help passengers escape even caught fire, he said. “I tried to put it out with my hands, then I went to get the extinguisher from my shop. There was no way of putting the fire out, it was coming out from everywhere,” he added, saying he had also been burnt. On the other side of the road is Teke Zeynel’s food truck. On Tuesday evening, shortly before 6:30pm, he saw everything unfold. “The bus was already completely engulfed in flames. It stopped right in front of me,” Zeynel told RTS. He added that “the driver managed to open the doors. I saw three people burning. I managed to put out the flames on a woman with my hands. Someone else used their jacket to put out another person. Then I went to get a fire extinguisher and a blanket, but it was already too late.” ‘Everyone tried to help’ He said passers-by were using stones to smash the windows. Just a few metres from the scene, Mina Gendre witnessed the events from her chemist’s shop. “I saw someone come out completely engulfed in flames: it was very shocking. Seeing something like that with your own eyes, right in front of your workplace, is terrifying,” she said. “We were all worried and wanted to help, but in the end there’s not much you can do. What was heartening, though, is that everyone tried to help. In the moment, it’s incredibly difficult because you don’t know what to do, but everyone was there, trying to do whatever they could.” Investigations continue as psychological support is provided Psychological support has been organised for the victims and their families, as well as for others affected, including witnesses, volunteer rescue workers and anyone else who was at the scene, the authorities said. Fribourg police have issued an appeal for witnesses, asking anyone with information that could assist the investigation to contact them on 026 347 01 17. Raphaël Bourquin, Fribourg attorney general speaks at a press conference in Kerzers on Wednesday. Keystone / Cyril Zingaro Philippe Demierre, president of the Fribourg government said they are in the process of securing video footage from all cameras, including surveillance cameras. There are also many different videos circulating, he added, and these still need to be reviewed. “Investigations will be carried out on the bus to rule out any cause, even a partial one, of a technical nature,” Bourquin said. The School of Criminal Sciences has been commissioned to conduct the examination. EU delegation offers condolences to Switzerland The European Union’s representation in Switzerland offered its “sincere condolences”. “Our thoughts are with the victims and their families at this difficult time,” it wrote on X. In its message, the EU Delegation also wished those injured “a swift and full recovery”. The EU has maintained a diplomatic mission in Bern for Switzerland and Liechtenstein since 2007. Ecumenical ceremony on Wednesday evening The dioceses of Lausanne, Geneva and Fribourg, together with the Evangelical Reformed Church of Fribourg, have expressed their “immense sadness” and “deep solidarity” following the tragedy in Kerzers. A service of remembrance will be held on Wednesday evening at the Reformed Church in Kerzers at 7pm. https://www.swissinfo.ch/eng/various/six-killed-in-swiss-bus-fire-after-man-reportedly-set-himself-alight/91080096
-
உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா? — சின்னத்தம்பி குருபரன் —
உலக ஒழுங்கை மாற்ற முனைவதை வேடிக்கை பார்க்கலாமா? March 16, 2026 — சின்னத்தம்பி குருபரன் — அடிக்கடி குணமும் கொண்ட கொள்கையும் மாறும் அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்புக்குக் கடிவாளம் போட்டுத் தடுத்து நிறுத்தாது உலக வல்லரசுகள் இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதன் பலனை உலக மக்கள் அனைவரும் அனுபவித்து ஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். தற்பொழுது நடைபெறும் அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் யுத்தம் உலக ஒழுங்கை மாற்றி, மத்திய கிழக்கை அச்சுறுத்தி, அதனை நம்பி இருக்கின்ற உலக நாடுகள் அனைத்தையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கை அண்டிய பிரதேசங்களில் தரை, கடல், ஆகாய வழிப் போக்குவரத்துப் பாதைகள் அனைத்தையும் பாதித்திருக்கின்றன. அதனால் மசகு எண்ணெய், எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிகள் பாதிக்கப்பட்டதனால் மசகு எண்ணெங், எரிவாயு போன்றவற்றின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப், பெஞ்சமின் நெத்தன்யாகு ஆகியோரின் அடாவடித் தனங்களால் விளைந்த பலனை உலக மக்கள் யாவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘வரவு எட்டணா செலவு பத்தணா..’ என்பது போல் வாழ்க்கைச் செலவு அதிகரித்து மத்திய, கீழ்தட்டு மக்களைப் பெருவாரியாகப் பாதிக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு சுதந்திர நாட்டின் இறைமை தன்னாதிக்கம் ஒருமைப்பாடு, ஆள்புலம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் இணைந்து பல சட்டங்களை இயற்றி இருப்பதோடு பல உடன்படிக்கைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. நாடுகளின் இறைமை (Sovereignty), ஆள்புலம் (Territory) மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. 1648 வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தமே (Peace of Westphalia) நவீன சர்வதேச அரசியலின் தந்தை எனப்படுகிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்ற “அரசு இறைமை” (State Sovereignty) என்ற கொள்கை முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது. 1783 பாரிஸ் உடன்படிக்கை அமெரிக்காவின் இறைமை, ஆள்புல எல்லைகளைப் பிரித்தானியா அங்கீகரித்த பிரதானஒப்பந்தமாகும். 1815 வியன்னா மாநாடு (Congress of Vienna) நெப்போலியனின் ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை மறுசீரமைக்கவும், நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளை ஒழுங்குபடுத்தவும் இது வழிவகுத்தது. 1864 இல் முதலாவது ஜெனிவா உடன்படிக்கையின் மூலம் போர்க் காலங்களில் காயமடைந்த வீரர்களின் பாதுகாப்பு, மருத்துவப் பணியாளர்களின் மனிதாபிமான நடுநிலைத்தன்மை குறித்து முதன்முதலில் பேசப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது. 1899 இல் கூடிய ஹேக் மாநாட்டின் (Hague Summit) சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது, போர் விதிகளை (Laws of War) வரையறுப்பது இதன் நோக்கங்களாக அமைந்தன. வெர்சாய் ஒப்பந்தம் (1919, Treaty of Versailles) முதலாம் உலகப்போருக்குப் பின்னர் நாடுகளின் எல்லைகளை மாற்றியமைத்ததுடன், சர்வதேச சங்கத்தை (League of Nations) உருவாக்க வழிவகுத்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் நிறைவில் 1945 இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) நவீன உலகின் மிக முக்கியமான ஆவணமாக அமைந்தது. உறுப்புரை 2(4), ஒரு நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பிறிதொரு நாடு பலப் பிரயோகம் செய்வதைத் தடை செய்கிறது. உறுப்புரை 51, ஒரு நாடு தாக்கப்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் (Self-defence) உரிமையை வழங்குகிறது. 1949 இன் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தின்(NATO) மூலம் கூட்டுப் பாதுகாப்பு (Collective Defense) கொள்கையின் கீழ் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1961 இல் மேற்கொள்ளப்பட்ட ‘வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கை’ ஒரு நாட்டின் ஆள்புலத்திற்குள் இருக்கும் பிற நாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு உரிமைகளை அந்நாட்டுக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 1982 கடல் பாதுகாப்புச் சட்டத்திற்கான ஐநா உடன்படிக்கை (UNCLOS) ஒரு நாட்டின் கடல் எல்லை (Territorial Sea), பிரத்தியேகப் பொருளாதார வலயம் (EEZ) ஆகியவற்றின் இறைமையை வரையறுத்தது. இந்த நூற்றாண்டில் (2001) ‘பொறுப்புடன் பாதுகாத்தல்’(Responsibility to Protect – R2P) என்ற கொள்கைப் பிரகடனத்தின்படி இறைமை என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல, அது குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்புக்கூறல் என்ற கருத்தாக்கம் உருவானது. 2014 புடாபெஸ்ட் குறிப்பாணை தொடர்பான விவாதங்கள் நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றிய சர்வதேச சட்ட விவாதங்கள் தீவிரமடைந்தன. சட்ட ஏற்பாடுகளாக (Uti Possidetis Juris) ஒரு நாடு சுதந்திரம் அடையும் போது, அதன் முந்தைய நிர்வாக எல்லைகளே அந்த நாட்டின் ஆள்புல எல்லைகளாகக் கருதப்படும் என்பதும், Non-Intervention என்ற ஏற்பாடுகளின்படி ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றைவிட பிராந்திய ரீதியிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்புக் கூட்டு உடன்படிக்கைகள் எத்தனையோ செய்யப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. இப்போது மக்களின் கேள்வி என்னவென்றால் “இத்தனையும் இருந்தும் என்ன பயன்” என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை எதற்கு?, பிராந்திய, சர்வதேச ஒப்பந்தங்கள், சட்ட ஏற்பாடுகள் எதற்கு? எனப் பலரும் கேட்கின்றனர. அமெரிக்கா என்ற சட்டம்பிக்குப் பயந்த நிலையா?, அப்படியாயின் ஏன்? எதற்குப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள். இராணுவப் புரட்சி ஏற்பட்டு இராணுவம் நாட்டைக் கைப்பற்றுகிறது. தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றுகின்றனர். இறைமை கொண்ட ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படை எடுக்கிறது. அமெரிக்கப் படை வெனிசுவெலா நாட்டின் ஆள்புல எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரின் மனைவியையும் கைது செய்து நியூயோர்க் சிறையில் வைத்திருக்கின்றனர். அமெரிக்க சனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் தாம் நினைத்த மாத்திரத்தில் பொருளாதாரத் தடைகளையும் வரி விதிப்புக்களையும் மேற்கொள்கின்றார். யுத்தப் பிரகடனம் செய்கின்றார். படையை நகர்த்துகின்றர். பிற நாடுகளின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து மக்களையும் உடமைகளையும் அழித்து அரசியல்வாதிகளையும் கொலை செய்கின்றார். அவரின் அடாவடித்தனம் நீண்டு கொண்டே செல்கின்றன. தனது நாட்டின் சட்ட திட்டங்களையா, சர்வதேச சட்டங்களையோ, ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, அமெரிக்கக் காங்கிரசினதோ, செனற் சபையினதோ, நேட்டோ அமைப்பினதோ எந்தவொரு அனுமதியும் பெறப்படாமல் அத்தனை சட்டங்கள் ஒப்பந்தங்களையும் மீறி ஈரானின் மீது யுத்தப் பிரகடனம் செய்து ஈரானின் 6000 இலக்குகள்மீது இஸ்ரேலுடன் இணைந்து குண்டு வீசித் தாக்கியதாக மார்தட்டி அறிக்கை விடுகின்றார். அங்கு வீசப்பட்ட குண்டுகளில் பெரும்பாலானவை அப்பாவி மக்களின் தலைகளிலும் உடமைகளிலும்தான் விழுந்திருக்கின்றன. வீசப்பட்ட குண்டுகள் குறித்த இலக்கை மாத்திரம் தாக்குவதற்கு அவற்றுக்குக் கண்கள்தான் உண்டா?. அப்படியாயின் ஈரானிய ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு 40 அதிசக்திவாய்ந்த குண்டுவீச்சு விமாங்கள் எதற்கு? குறிபார்த்து வீசப்பட்ட குண்டு ஆன்மீகத் தலைவரைக் கொல்வதற்கு ஒரு ஓரிரு விமானங்கள்போதுமே. சர்வதேசச்சட்டங்கள் கடதாசியில் இருக்கத்தக்கதாக இறைமை கொண்ட ஒரு நாட்டின் ஆள்புல எல்லைக்குள் புகுந்து ஆன்மீகத் தலைவர் தாக்கப்பட்டதை உலகம் வேடிக்கை பார்ர்த்துக் கொண்டிருக்கின்றதா? இஸ்ரேல் காசாவில் வீசிய குண்டுகளும் ஏவுகணைகளும் பல வைத்தியசாலைகளையும் பாடசாலைகளையும் பதம் பார்த்தன. அண்மையில் அமெரிக்க விமானப் படை வீசிய குண்டு ஈரானிலுள்ள பாடசாலையில் விழுந்ததனால் 300 க்கு மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறுதான் இலங்கை உள்நாட்டு யுத்த காலத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள்மீதும் குண்டுமாரி பொழிந்ததனால் மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டத்தின்படி ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆதரவற்றோர் இல்லங்கள, மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடங்கள் மீது குண்டு வீசித் தாக்குவது சர்வதேச யுத்த மீறலாகும். என்பதிருக்க அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்சியா போன்ற நாடுகள் இவற்றின்மீது குண்டு வீசிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவில்லை என்பதே மக்களின் அங்கலாய்ப்பு. ரஷ்சியா 1984 க்கு முன்னர் தமது ஆள்புல எல்லைக்குள் இருந்து சுதந்திரம் பெற்றுச் சென்ற உக்ரெயின் மீது சில காரணங்களை முன்வைத்துத் தாக்குகிறது. இதுவும் போர்க் குற்றமே. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வாறல்ல. அமெரிக்கா உகண்டா, ஈராக், லிபியா, வெனிசுவெலா போன்ற நாடுகளின் அரசுத் தலைவர்களை வெளியேற்றியும், சிறைப்படுத்தித் தூக்குத் தண்டனை விதித்தும் ஈரான் பிரதமர், ஆன்மீகத் தலைவரைத் தாக்கிக் கொலை செய்தும் அட்டகாசம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதேபோல், தனக்கு விசுவாசமாக இல்லாத பல நாடுகளின் ஆட்சியைக் கவிழத்தும் இருக்கின்றன. வியட்னாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நாடுகளிலிருந்து விலகிச் சென்றனர். அமெரிக்கா உலக பொலிஸ்காரன்போல் ஏனைய நாடுகளின் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகியன தனக்குச் சாதகமாக இல்லாதபோது தட்டிக் கேட்பதும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதும் குறித்த நாடுளை அச்சுறுத்தி அடிபணியச் செய்வதும், போர்ப் பிரகடனம் செய்து குண்டுவீசித் தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டன. இதனைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லாமல் ஐக்கிய நாடுகள் சபை, ஏனைய அமைப்புக்கள், நாடுகள் மௌனம் சாதிப்பது ரொனால்ட் ட்ரம்பை மேலும் உருவேற்றிக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தம் அப்பிராந்தியத்தை மட்டுமன்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சகல நாடுகளையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகப் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சர்வதேச சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், வெள்ளைக் கந்தகக் குண்டுகள், இரசாயனம், அமிலம் கலந்த குண்டுகள் வீசப்படுகின்றன. பெரும்பாலான யுத்த மீறல்கள், சட்ட மீறல்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சர்வசாதாரணமாக மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா தங்களைத் தாக்குகிறது அதனால் நாங்கள் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் படைத் தளங்களைத் தாக்குகிறோம் என ஈரான் நியாயம் கற்பிக்கிறது. அத்தோடு உலகுக்கு 20 வீதமான மசகு எண்ணெய்களைக் கப்பல்கள் செல்லும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஷ் நீரிணை மூடப்பட்டதனால் மசகு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டிவிட்டது. யுத்தம் நீடித்தால் 150 டொலரையும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகள் எரிபொருளின் விலையைக் கண்டபடி ஏற்றிஇருக்கின்றன. அதனால், ஏற்றி, இறக்கல் செலவு அதிகரித்துச்சகல நாட்டு மக்களினதும் வாழ்க்கைச் செலவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா (5,117), இரசியா (5,459), சீனா (600), பிரித்தானியா (225), பிரான்ஸ் (290), இந்தியா (180), பாகிஸ்தான் (170), இஸ்ரயேல் (90), வடகொரியா (50), ஈரான்(35) ஆகிய நாடுகள் அணுவாயுதப் பரவல் தடை (NPT) ஒப்பந்தத்தையும் மீறி அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இதில் ரஷ்சியாவும், அமெரிக்காவும் 85 வீதமான அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா நேட்டோ நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கத் தளங்கள் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் அணுவாயுதங்களை வைத்திருக்கின்றன. இது உலக நாடுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்தியாவின் விசாகப் பட்டிணத்தில் போர்ப் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய ஈரானியப் போர்க் கப்பல் இந்து சமுத்திரப் பிராந்திய கடல் எல்லைக்குள், காலித் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பிராந்திளத்தின் கடல் பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கி இருக்கின்றன. இச்சம்பவத்தால் இலங்கை பயந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க, ரஷ்சியாவின் எண்ணெய்க் கப்பல்கள் இந்தியாவுக்குச் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புத் தேவை என்பதனால் இந்திய மோடி அரசு ‘தனக்குப் பல் போனாலும் பரவாயில்லை. எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் தனது நாட்டுக்கு வரவேண்டும்’ என்பதற்காக மௌனித்து நிற்கிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைச் சுரண்டுவதற்கும் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்மூஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கின்ற ஈரானின் ஆட்சி அதிகாரத்தைஅகற்றித் தனக்கு ஏற்ற தலையாட்டிப் பொம்மைகளை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஈரானுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா நடத்துகிறது. இது தன்னுடைய சுயநலனுக்காக என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. இதற்கு அமெரிக்கா எடுத்து வைத்திருக்கும் துருப்புச் சீட்டுத்தான் ஈரான் மேற்கொள்ளும் யுரேனியம் செறிவாக்கல் முயற்சிகளும், அணுவாயுதங்களும் உலகுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதுதான். ரஷ்சியாவும் அமெரிக்காவும் திருப்பதி லட்டுக்கள் போல் அணுவாயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கின்றனவே, அது அச்சுறுத்தல் இல்லையா?. லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை ஆட்சிகள் வெற்றி அளித்தனவா?. ஈராக்கின் 30 வீதத்தக்கு மேற்பட்ட நிலப்பரப்புப் பூரணமாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது எண்ணெய் வள உற்பத்தியில் மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கும் ஈரான், வெனிசுவெலா ஆகிய நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் உலக ணெணெய் வளத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்குச் சமமாகிவிடும் என அமெரிக்கா நினைப்பது. இதற்காகவே ட்ரம்ப் நடத்தும் யுத்தம். இந்த யுத்தத்தால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்காக நாடுகளின் ஒத்துழைப்பைக் கோரி, யுத்தக் கப்பல்களைப் பாதுகாப்புக்கு அனுப்பமாறும் கேட்டிருக்கின்றமை. பெஞ்சமின் நெத்தன்னியாகுவின் யுத்த நோக்கம் வேறானது. மத்திய கிழக்கின் பலம்வாய்ந்த ஏக சக்தியாக இருப்பதற்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதும், ஹமாஸ், ஹிஸபுல்லாஹ், ஹவுதி தீவிரவாத அமைப்புக்களுக்கு ஈரான் படைக்கல உதவியும் நிதி உதவியும் வழங்கிப் பாதுகாத்து வருவதனால் ஈரானைப் பூண்டோடு அழித்து விடுவது என இஸ்ரேல் கங்கணம் கட்டிக் கொண்டு யுத்த்ததில் இருப்பது தோல்வியில் முடியப் போகின்றது. அமெரிக்கா, ரஷ்சியா, சீனா, இந்தியா, இஸ்ரேல், ஈரான் (அயதொல்லா அலி கமெய்னி) ஆகிய நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். தம்மை அதியுச்ச சக்தியாக (Supreme Power) வைத்துக் கொண்டிருக்க நினைப்பவர்கள். அதிலும் ட்ரம்ப் அடாவடித் தனங்கள் நிறைந்த அரசியல் கோமாளி போன்றவர். ட்ரம்ப், புட்டின், நெத்தன்னியாகு மூவரும் குற்றவாளிகள். புட்டின் 2036 வரையும் ஆட்சியில் இருப்பதற்கு ஏற்றவாறு அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு சுகமாக ஆட்சியில் இருக்கப் போகின்றார். டரம்பும் நெத்தன்னியாகுவுக்கும் சந்தர்ப்பமே கிடையாது. இவர்கள் இருவரையும் தெரிவு செய்தமைக்கான பலனை இருநாட்டு மக்களும் ஆனுபவிக்கின்றனர். அனுபவிக்கப் போகின்றனர். இவர்களின் பிடிவாதமும் அடாவடித் தனங்களும் அவர்களின நாட்டோடு மாத்திரம்தானே இருக்க வேண்டும். ஏன் ஏனைய நாடுகள் பாதிப்படைய வேண்டும். ஈரான் மத்திய கிழக்கில் ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களைத் தாக்கி தரை, ஆகாய, கடல்வழிப்போக்குவரத்தைத் தடை செய்திருக்கிறது. இது இஸ்ரேலைப் பாதுகாக்கவும், எண்ணெய் வளங்களைச் சுரண்டவும் அமெரிக்கா செய்த சதி. அமெரிக்காவின் சதி வேலை மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கும் இறைமை, ஆள்புலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. இதிலும் ஒரு வினைப்பயன் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல் செய்யும் அடாவடித் தனங்களைத் தட்டிக் கேட்காமல் இருப்பது நற்செயல் அல்லவே. அதனால்தான் மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தின் விளைவுகளை உலக நாடுகள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப் நெத்தன்யாகு ஆகிய இருவருக்கும் கடிவாளம் போடவில்லையாயின் லிபியா, ஈராக், வெனுசுவெலாவில் நடந்தது போலும் காஸா, ஈரான், லெபனான் போன்ற நாடுகளில் நடப்பது போல் தமது நாடுகளிலும் அவ்வாறு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. கனடா, மெக்சிக்கோ, கியூபா, வெனிசுவெலா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, கிறீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக எச்சரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார். இன்று ஒரு பேச்சு, இன்று இரவு இன்னொரு அறிக்கை, நாளை ஒரு காரசாரமான எச்சரிக்கை என்றவாறு அரசியல் கோமாளி அடாவடித் தனத்தை தினமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இலாப, நட்டங்களைக் கணக்குப் பார்த்துத் திட்டம் போடும் வியாபாரி ஒருவர் இப்படித்தான் இருப்பார். ட்ரம்பும் ஒரு வியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கதுது. ஒரு நாட்டின் ஆள்புல அதிகார எல்லைக்குள் (வெனிசுவெலா) அத்துமீறி நுழைந்து அந்நாட்டின் சனாதிபதியையும் அவர் மனைவியையும் சிறைப்பிடித்தமை, ஈரானின் ஆதியுச்ச ஆன்மீகத் தலைவர், பிரதமர் (திட்டமிட்ட விமான விபத்து) கொலை செய்தமை, நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமை, நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள்மீது கண்டபடி வரி விதிக்கின்றமை, பொருளாதாரத் தடைகள் விதிக்கின்றமை, ஈரான், பலஸ்தீனம் (காஸா), லெபனான், யெமன், கட்டார், துபாய், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள்மீது விமானம், ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்துகின்றமை, இந்து சமுத்திர தெற்காசியப் பிராந்திய ஆள்புல எல்லைக்குள் நுழைந்து ஈரானியக் கடற்படைப் போர்க் கப்பலைத் தாக்கியமை, போர்க் கப்பல்களைக் கொண்டுபொய் நிறுத்தி நாடுகளை அச்சுறுத்தியமை, சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளை மீறியமை இன்னோரன்ன செயற்பாடுகள் உலக ஒழுங்கை மாற்றி, சர்வதேச அமைதியைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை உலக நாடுகள் மறந்விடக்கூடாது. இன்று அவருக்கு நாளை நமக்கும் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதனைத் தடுத்துச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபை, பாதுகாப்புச் சபை, சர்வதேச நீதிமன்றம், மனித உரிமை அமைப்புக்கள், பிராந்திய நாடுகளின் கூட்டமைப்புக்கள், உடன்படிக்கைகள், சட்டங்கள், பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஆகியன இருந்தென்ன பயன் எனப்பலரும் கேட்கும் நிலை உருவாகிவிட்டது. உண்மையும் அதுதான். சிறிய நாடுகள், கிளர்ச்சிக் குழுக்களைக்கூட இவற்றையெல்லாம் மதிக்காது செயற்படும் சூழல் எப்பவோ உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் மீறுவதற்கு வழிகாட்டி விட்டவை வீட்டொ அதிகாரம் கொண்ட நாடுகள் என்பதும் மறுப்பதற்கில்லை. இனிமேலும் தாமதிக்காது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், ரஷ்சியா, உக்கிரேன் ஆகிய நாடுகளைச் சமாதான வழிக்குத் திருப்பி உடன்படிக்கைக்குள் கொண்டுவராது விட்டால் விளைவு பாரதூரமாக அமைந்துவிடும் என்ன்பதையும் மறந்துவிடலாகாது. அமெரிக்கா, ரஷ்சியா, இஸ்ரேல், சீனா, வடகொரியா போன்ற நாடுகளுக்குக் கடிவாளம் போடத் தாமதிப்பதும் மூன்றாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாகிவிடும். இதற்கு ஏனைய வல்லரசு நாடுகளும், பிராந்திய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். தமக்குள் பலமான அணியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். https://arangamnews.com/?p=12737
-
ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன? — கருணாகரன் —
ஈழ ஆதரவு அரசியல் என்றால் என்ன? March 11, 2026 — கருணாகரன் — தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் விவகாரம் அவ்வப்போது பேசப்படுவதுண்டு. (“நாங்கள் அப்படியல்ல. தொடர்ச்சியாகவே ஈழத் தமிழர்களுடைய விடுதலையைப் பற்றிப் பேசி வருகிறோம்” என்று பழ நெடுமாறன், வை.கோ, கொளத்தூர் மணி போன்ற சிலர் சொல்லக்கூடும். இதைக்குறித்துப் பின்னர் பார்க்கலாம்). தேர்தல் காலமென்றால், இன்னும் சற்று உரத்த தொனியில் இந்தப் பேச்சுக்குரல் கேட்கும். இப்போதும் அப்படித்தான், தமிழ்நாட்டு அரசியல் மேடைகளிலும் அரங்குகளிலும் ஈழத்தமிழர் அரசியலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனின் பெயரும் பேசப்படுகின்றன. இதில் சீமான் சற்றுச் சத்தமாக முழங்குகிறார். இப்படிப் பேசப்படுவதால் ஈழத்தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது; கிடைக்கிறது; எதிர்காலத்தில் எத்தகைய நன்மைகள் கிட்டும் என்பதைப் பற்றியெல்லாம் எவருக்கும் கவலை இல்லை. அதைப்பற்றிப் பரிசீலனை செய்வது கூட இல்லை. மூன்று வகை இதில் நாம் மூன்று வகையினரைப் பார்க்கலாம். ஒரு தரப்பு மெய்யாகவே ஈழ விடுதலை கிடைக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற வேண்டும் என்று நியாயமாகவே விரும்புகிறது. ஆனால், இந்தத் தரப்புக்கு இலங்கை இனப்பிரச்சினையின் சிக்கலான தன்மையைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் நிலைமை இன்னும் சிக்கலடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரப்பு சரியாக அறிந்து கொள்ளவில்லை. அதைப் புரிந்து கொண்டால்தான் ஈழவிடுதலைக்கான அல்லது ஈழத்தமிழரின் உரிமைக்கான சாத்தியப்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க முடியும். குறிப்பாக இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் தனித்துவம், அவர்களுக்குரிய இடம், இந்தப் பிரச்சினையில் அவர்களுடைய வகிபாகம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழவிடுதலையை அல்லது இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினையைப் பற்றிப் புதிய வாசிப்புச் செய்ய வேண்டும். அதற்கான உழைப்பும் உணர்திறனும் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஆனாலும் இந்தத் தரப்பினரிடத்தில் நியாயமான உணர்வு உண்டு. அடுத்த தரப்பு, ஈழப்போராட்டத்தைத் தன்னுடைய அரசியற் தேவைக்காக எடுத்தாள்கிறது. இது வெற்றுப் பிரகடனங்களிலும் தீவிர உணர்ச்சி நிலையிலும் இந்த விசயத்தை எடுத்தாள்கிறது. நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களைச் சிங்களர்கள் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். சிங்கள அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்கிறது என்ற அடிப்படையில் நோக்கிக் கொதிப்படைகிறது. இந்தத் தரப்பில் ஊடகங்களும் இலக்கிய அமைப்புகள், வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் போன்றனவும் அடங்கும். இதொரு அயல் நாட்டின் அரசியற் பிரச்சினை. ஆகவே அதற்குரிய வரன்முறைகளும் எல்லைகளும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் கொதிப்பதாலும் பொங்குவதாலும் எந்தப் பயனுமில்லை. இந்தத் தரப்பு பிரச்சினையை மேலும் சிக்கலடைய வைக்கிறது. இவர்களுடைய குரல் உயர உயர, ஈழத்தில் நெருக்கடி அதிகரிக்கிறது. மூன்றாவது தரப்பு, ஈழப்போராட்டத்தை விடுதலைப்புலிகளோடு மட்டுப்படுத்திப் பார்ப்பது. மறுபக்கத்தில் இனவாதச் சிங்கள அரசைக் கடுமையாக எதிர்ப்பது. அதை அழித்தொழிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்வது. இப்பொழுது சீமான் இதில் முன்னணி வகிக்கிறார். இது சாத்தியமே இல்லாத கனவுலகப் பிரகடனங்களைச் செய்து காலத்தையும் சக்தியையும் வீணடிக்கிறது. மட்டுமல்ல, ஈழ அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அதைத் தலைகீழாக்க முயற்சிக்கிறது. இந்தத் தரப்பினால் ஒரு சல்லிப் பணத்துக்குப் பிரயோசனமில்லை. இதையெல்லாம் பார்த்தால், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசியற் கட்சிகளும் அரசியல் அறிவே இல்லாதவர்களா? என்று கேட்கத் தோன்றும். அப்படிச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். உண்மையைத் துணிந்து சொல்வதென்றால், ஈழத்தமிழர்களுடைய அரசியலை உரத்த தொனியில் பேசுவதால் ஈழத்தமிழர்களின் அரசியல் மேலும் சிக்கலடைந்து கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுடைய அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து 1800 களில் இலங்கைக்குப் பெயர்க்கப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் உள்ள மக்களின் (இந்திய வம்சாவழியினரின்) அரசியலும் நெருக்கடிக்குள்ளாகிறது. அதாவது இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மொத்தத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பாதிக்கப்படுகிறது. காரணம், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விவகாரத்தை – விடுதலையை – உரிமைகளைப் பற்றிப் பேசுவதையும் தமிழ் நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் சிங்கள மக்கள் வேறுவிதமாகவே – எதிராகவே – பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் அல்லது புரிதலில் ‘இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கு (தமிழ் பேசும் தரப்பினருக்கு) இந்தியா பேராதரவை வழங்குகிறது. சிங்களவர்களுக்கு இந்தியா எப்போதும் எதிராகவே உள்ளது’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இப்படிச் சிந்திப்பதால், மேலும் தமிழ்பேசும் மக்களை சிங்கள அரசாங்கம் ஒடுக்குகிறது. இது அச்சத்தினால் உருவாகும் உளவியலின் விளைவாகும். தமிழ்நாட்டை இந்தியா என்றே பெரும்பான்மையான சிங்களவர்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே ‘தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்நாடு ஆதரவாக இருக்கிறது என்பதை இந்தியா ஆதரவாக இருக்கிறது என்றே பார்க்கிறார்கள். ஆக,தமக்குத்தான் எவருடைய ஆதரவும் இல்லை. இந்த உலகத்தில் தாம் (சிங்களவர்) ஒரு சிறிய இனம். இலங்கையில் பெரும்பான்மையினராக இருந்தாலும் உலகத்தில் தனித்து விடப்பட்ட, சின்னஞ்சிறிய இனம். இரண்டு பில்லியன் மக்கள் மட்டுமுள்ள இனம். அதுவும் இலங்கைத்தீவில் மட்டுமே உள்ள இனம். இந்த நிலையில் அயலில் உள்ள தமிழ்நாடும் இந்தியாவும் தமிழர்களோடு சேர்ந்து தம்மை நெருக்கடிக்குள்ளாக்கப் பார்க்கிறது’ என்றே சிங்களத் தரப்பினால் கருதப்படுகிறது. இதற்கு வலுவானதொரு வரலாற்றுக் காரணமும் சிங்களத் தரப்பிடமுண்டு. வரலாற்றுக் காலம் தொட்டு, இலங்கையின் மீது தென்னிந்தியப் படையெடுப்புகளும் ஆக்கிரமிப்பும் நிகழ்ந்திருக்கிறது. சோழர்காலம் இதில் மேலும் உச்சமடைந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உங்கள் நினைவுக்கு வரலாம். இலங்கையின் மிகப் புகழ் மிக்க ஆட்சி மையங்களாக இருந்த அநுராதபுர ராஜ்ஜியத்தையும் பொலநறுவை ராஜ்ஜியத்தையும் சோழப்படையெடுப்புகளே வீழ்ச்சியடையச் செய்தன. இப்படித் தென்னிந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் சிங்களச் சமூகத்தின் ஆழுள்ளத்தில் நீங்காத வெறுப்பாகவும் வரலாற்றுக் காயமாகவும் வளர்ந்துள்ளது. தமது ஆட்சியையும் தாம் உருவாக்கிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட சிறப்பான கட்டமைப்புகளையும் தென்னிந்தியர்கள் (தமிழர்கள்) படையெடுத்து வந்து ஆக்கிரமித்தனர் என்ற வரலாற்றுக் கோபம் சிங்கள மக்களிடத்தில் உண்டு. இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு கிமு 5ஆம் நூற்றாண்டு முதல் (பாண்டுகாபய மன்னன் காலம்) தொடங்கும் மிக நீண்ட மற்றும் மேம்பட்ட பொறியியல் பாரம்பரியத்தைக் கொண்டது. உலர் வலய விவசாயத்திற்காக குளங்கள் (ஏரிகள் – Wewa) மற்றும் கால்வாய் அமைப்புகளை உருவாக்கி, ” குளங்களின் சங்கிலித் தொடர்” (Tank Cascade System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மன்னர்கள் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தனர். பொலன்னறுவை காலத்தில் பராக்கிரம சமுத்திரம் போன்ற பிரம்மாண்டமான ஏரிகள் கட்டப்பட்டன. பிசோகொட்டுவ (Biso Kotuwa – Valve Pit) எனப்படும் கசிவுத் தடுப்பு மற்றும் நீர் கட்டுப்பாட்டு கோபுரம் கி.பி. 03 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இதை உருவாக்கிய பிரதான மன்னர்கள், வசபன் (பெரிய குளங்கள்), தாதுசேனன் (கலாவேவ), முதலாம் பராக்கிரமபாகு (பராக்கிரம சமுத்திரம்) ஆகியோர் நீர்ப்பாசனத் துறையில் முக்கிய பங்காற்றினர். இலங்கையின் இந்த நீர்ப்பாசன கலாச்சாரம், சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான விவசாயத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக இருந்து வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயப்பொருளாதாரத்தையும் கடலில் முத்துக் குளிப்பதையும் இரத்தினக்கல் மற்றும் ஏலம், கராம்பு, கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் கொண்ட பெரு வணிகத்தையும் சோழர் தமதாக்கிக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்புத் தன்மை இன்றைய இந்த யுகத்திலும் ஏதோ ஒரு விதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ஈழத் தமிழரின் அரசியலை – உரிமைப் பிரச்சினையைச் சாட்டாகவும் சாதகமாகவும் வைத்துக் கொண்டு இந்தியாவும் தமிழ்நாடும் விளையாடுகின்றன என்றே சிங்களர் கருதுகிறார்கள். இதை நாம் மேலும் புரிந்து கொள்ள சிங்களவர்களின் வரலாற்று(?) நூலாகக் கருதப்படும் மஹாவம்சத்தைப் படித்தறியலாம். மஹாவம்சத்தில் இந்திய எதிர்ப்புவாதமும் தமிழ்கள் மீதான வெறுப்பும் தாராளமாகவே பதியப்பட்டுள்ளன. இந்தப் பதிவுக்கு வயது 2000 க்கு மேல். மட்டுமல்ல, இன்றைய நாளும் கூட அதனோடு பதிவு செய்யப்படுகிறது. அதாவது, மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக அதனுடைய வரலாறு பதியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கிய சம்பவமும் வரலாறாகப் பதிவு பெறுகிறது. ஆகவே இந்தப் பின்னணியில், இந்தியா தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்கள் பற்றியும் எதிர்மறை எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள சிங்களத் தரப்பு, எப்படி எச்சரிக்கையாகவும் தீவிர நிலையிலும் பழிதீர்க்கும் முனைப்போடும் இயங்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், சிங்களத் தரப்பு கருதுவதைப்போல உண்மையான நிலவரம் இல்லை. முக்கியமாக, இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்குச் சாதகமாக இல்லை. அப்படி இருந்திருக்குமாக இருந்தால், இலங்கையில் இந்தளவு பெரிய இனப் படுகொலைகளும் ஒடுக்குமுறையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்த விதமான அரசியல் தீர்வையும் வழங்காமல் இலங்கை இழுத்தடிக்கவும் முடியாது. இலங்கையும் இந்தியாவும் இணைந்து செய்து கொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள மாகாணசபை ஆட்சியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருக்கும். குறைந்த பட்சம் அதற்கு ஒழுங்காகத் தேர்தலையாவது நடத்தும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அது எதனைக் குறிக்கிறது அதனுடைய அரசியல் சேதி என்ன? மறுபக்கத்தில் தமிழ்நாட்டு அரசும் மக்களும் முழுமையான ஆதரவை ஈழப்போராட்டத்துக்குத் தருவதாகச் சொன்னாலும் அதனால் எந்த பயனும் கிடைத்ததில்லை. கிடைக்கப்போவதுமில்லை. இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு உவப்பானதொரு தீர்மானத்தை எடுக்காத வரையில் தமிழ்நாட்டினால் எதையும் செய்யவே முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையைப் பற்றி இந்திய மத்திய அரசு பேசத் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்ற பேரில் ஆயுதப்போராட்டத்துக்கு மறைமுகமான முறையில் மத்திய– மாநில அரசுகள் தாராளமான – ஏராளமான உதவிகளைச் செய்தன என்பது உண்மையே. மட்டுமல்ல, இந்திய அரசின் மத்தியஸ்தத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடந்ததும் உண்மை. உச்சக்கட்டமாக 1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையே செய்யப்பட்டது. ஆனாலும் விளைவுகள் எதுவும் நல்லனவாக அமையவில்லை. முக்கியமாக ஈழப்போரின்போதும் சரி, ஈழப்போரின் இறுதிக்காலத்திலும் சரி தமிழ்நாட்டின் கொந்தளிப்பு அரசியல் நல்விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை. காரணம், அதனுடைய அதிகார எல்லை மட்டுப்படுத்தப்பட்டது. இது எதைக் காட்டுகிறது? இந்திய மத்திய அரசை மீறித் தமிழ்நாடு எதையும் செய்ய முடியாது என்பதைத்தானே! அந்த நாட்களில் நெருக்கடிக்குள்ளாகிய ஈழத் தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினராலும் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் கூட இலங்கையில் தமிழ் மக்களுடைய பகுதிக்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான ஏற்பாட்டையும் அனுமதியையும் இந்திய மத்திய அரசே செய்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, தார்மீக உணர்வு அடிப்படையில் மட்டும்தான் ஆதரவுக் குரலைக் கொடுக்க முடியும். கியூபாவுக்கு ஆதரவாக, குர்திஸ்க்கு ஆதரவாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப்போல. அல்லது இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் நிவாரணப் பொருட்களை மட்டு அனுப்பி வைக்க முடியும். அவ்வளவுதான். அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் அது இந்திய மத்திய அரசுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். இந்திய மத்திய அரசின் முடிவுகள் – தீர்மானங்கள்- இந்திய வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நிலவரம், இந்தியப் பாதுகாப்பு, இந்திய நலன் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த அடிப்படையை மனதிற்கொண்டே மத்திய அரசின் தீர்மானங்கள் அமையும். இதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இதை மீறி மத்திய அரசு தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை. பா.ஜ.க மட்டுமல்ல எந்தத் தரப்பு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும். இதுதான் நிலவரம். இதெல்லாம் தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கும் அறிவுபூர்வமாக அரசியல் பகுப்பாய்வைச் செய்வோருக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் தெரியாது என்றில்லை. பலரும் இதைத் தெரிந்து கொண்டே விளையாடுகிறார்கள். சிலர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்கின்ற உண்மைக்கு மதிப்பில்லை. பொய்யை, கற்பனையை நம்புகின்ற மக்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் இதுதான் நிலவரம். ஈழத்திலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டுகளுக்கு ஈழத்தமிழர்களே விலையைக் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுகிறார்கள். ஆகவே இது ஒரு அபாய விளையாட்டு. அரசியல் தவறு. அநீதியான செயல். கண்டனத்துக்குரிய விடயம். ஆனால், ஒரு காலம் ஈழப்போராட்டத்துக்கும் ஈழப்போராளிகளுக்கும் தமிழ்நாடு முழு மனதோடு உதவியது; ஆதரவு நல்கியது. 1970 களின் பிற்பகுதியிலிருந்து1980 கள் வரையில். அந்தக் காலத்தில் மாநில அரசு, அதனுடைய காவல்துறை தொடக்கம், தமிழகத்தின் அரசியற் கட்சிகள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள், வணிகர்கள், வண்டி ஓட்டுநர்கள், தெருவோர உணவுக் கடைக்காரர்கள், கிராமங்களில் விவசாயிகள், பண்ணைகள் வைத்திருப்போர், மீனவர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் எனச் சகலரும் ஈழப்போராட்டத்தையும் ஈழப்போராளிகளையும் ஆதரித்தனர். இந்த ஆதரவைச் சரியான முறையில் பேணி, போராட்டத்துக்கு ஏற்றவாறு வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக அதைப் பழாக்கிச் சிதைத்ததில் பெருந்தவறை ஈழப்போராளிகளும் போராட்ட இயக்கங்களும் நிறைவேற்றியது துயரம். பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு, சூளைமேடு கொலை என்று தொடங்கிய ஆயுத நடவடிக்கை, முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை வரையில் நீண்டது. இந்தத் தவறுக்கு தமிழ்நாடு பெரிய விலையைத் தானும் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று இந்தக் கசப்பான வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொண்டு புதிய தடத்தில் காலடி வைக்க வேண்டும். அது யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். சில ஈழ அரசியல் பார்வையாளர்கள் கருதுவதைப்போல, தமிழகத்தின் மூலமாக இந்திய மத்திய அரசைப் பயன்படுத்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது மிகக் கடினமானது. ஆனால், அவர்கள் ‘சென்னை ஒரு திறவு கோலாக இந்தப் பிரச்சினையில் இருக்கும்’ என்று ஆழமாக நம்புகிறார்கள். அவர்களுடைய பார்வை எப்படியென்றால், ஈழத்தமிழர்களுக்குச் சாதமாக – ஆதரவாக சென்னையில் (தமிழ அரசு) எடுக்கின்ற தீர்மானங்களும் கொடுக்கின்ற அழுத்தங்களும் இந்திய மத்திய அரசை இலங்கையை நோக்கித் திரும்ப வைக்கும். இலங்கையின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வைக்கும் என்பதாக. இதைப் படிக்கும்போது சிரிப்பு வருகிறது அல்லவா! சென்னையில் இருக்கும் ஆளுநர் ரவியோடு தினமும் தமிழ்நாடு மோதவேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் அதிகாரத்தையே பிடுங்க அல்லது அதில் தலையீடு செய்வதற்கு மத்தி முயற்சிக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படி அது மத்தியை ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் சாய்க்க முடியும்? குறைந்த பட்சம் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை என்ற வகையில் ஈழத்தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் தினமும் மோதிக்கொள்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளைக் கடலில் வைத்துப் பறிமுதல் செய்கிறது இலங்கைக் கடற்படை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இதைக் கூட இந்திய – இலங்கை அரசுகள் பேசி ஒரு தீர்வுக்கு வரவில்லை. தமிழக அரசு இதில் ஒரு சரியான தீர்வை எட்டமுடியாமலிருக்கிறது. இந்தப் பிரச்சினையை ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் தமிழகத்தோடும் இந்தியாவோடும் பேசி ஒழுங்குக் கொண்டு வர முடியாமலிருக்கின்றன. இந்த நிலையில் 75 ஆண்டுக்கு மேலான இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு சென்னையைத் திறவு கோலாக்குவதென்றால்! இங்கே நாம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியற் கட்சிகளும் தமிழகத்தையும் இந்தியாவையும் அளவுக்கு அதிகமாக நம்புகின்றன; எதிர்பார்க்கின்றன. அல்லது அப்படி நடிக்கின்றன. இலங்கையின் மீது இந்தியா அரசியல் அழுத்த்ததை(இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையிலேனும்) கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால், அதற்கப்பால் சில அரசியல்வாதிகளும் சில அரசியற் கட்சிகளும் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலரோடு நெருக்கம் கொள்வதாக காட்டிக் கொள்வதும் தமிழகத்தின் ஆதரவு தமக்கு உண்டென்று கூறுவதும் தேர்தல் அரசியல் ஆதாயங்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களினதும் தமிழ்நாட்டு அரசினதும் ஆதரவைப் பெறுவது நல்லது. ஆனால் அது தார்மீக அடிப்படையிலானது மட்டுமே. தமிழகம் தொழில்துறைகளில் முதலீட்டை ஈழத்தில் – தமிழ்ப்பகுதிகளில் – செய்வதாக இருந்தாலும் இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு ஆகியவற்றின் ஆதரவும் உடன்பாடும் வேண்டும். இந்த நிலையில் எப்படி ஈழ விடுதலை அரசியலில் தமிழ்நாடு முழுமுனைப்போடு செயற்பட முடியும்? தமிழ்நாடு சட்டமன்றில் ஒரு தீர்மானம் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டால், அதனைக் கண்டு சீற்றமடைகின்றது சிங்களத் தரப்பு. சிங்களத் தரப்பின் அந்தச் சீற்றம் ஒடுக்குமுறையாக ஈழத்தமிழர்களின் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்த ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்தும் வலுவோ, சட்ட ஆற்றலோ தமிழ் நாட்டுக்கு இல்லை. உதாரணமாக ஈழ யுத்தத்திற்குப் பிறகு (2009) தமிழ்ப்பகுதிகளில் (வடக்குக் கிழக்கு மாகாணங்களில்) பௌத்தமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது?தமிழ்நாட்டினால் அல்லது இந்திய மத்திய அரசினால் என்ன செய்ய முடிந்திருக்கிறது? அல்லது என்ன செய்ய முடியும்? விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 16 ஆண்டுகாலத்தில் ஏன் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியவில்லை? அதற்கான அழுத்தத்தை ஏன் கொடுக்க முடியாதிருக்கிறது? எந்த அரசியல் நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வது அரசியல் அல்ல. அதற்கு விடுதலை அரசியல் என்று பெயரைச் சூட்டுவது கேவலத்திலும் கேவலம். https://arangamnews.com/?p=12725
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை.. திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது. பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது. குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என மேலும் தெரிவித்தனர் https://jaffnazone.com/news/55614
-
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!
மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்! Vhg மார்ச் 17, 2026 குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. https://www.battinatham.com/2026/03/blog-post_499.html
-
கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப்
கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் - ட்ரம்ப் 17 Mar, 2026 | 11:34 AM கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது. அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது” என ட்ரம்ப் தெரிவித்தார். கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது. இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார் https://www.virakesari.lk/article/241174
-
மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை
மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை 17 March 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கெலவல்ல தற்போது ஒரு கிலோகிராம் சுமார் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். https://hirunews.lk/tm/453648/middle-east-crisis-sri-lankas-fish-exports-freeze-domestic-fish-prices-fall
-
இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு
இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு பூ.லின்ரன் இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர். தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். "உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர். குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-நிறுவனங்களால்-300-க்கும்-மேற்பட்ட-கேபிள்-டிவி-உரிமையாளர்கள்-பாதிப்பு/175-374039
-
குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை
குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை செ.தி.பெருமாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்' விடுதியை வந்தடைந்தனர். இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது https://www.tamilmirror.lk/மலையகம்/குருந்தூர்-மலையிலிருந்து-சிவனொளிபாத-மலைக்கு-நடைப்பயண-யாத்திரை/76-374042
-
யாழில் வீதி விபத்து: அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் துயர விபத்து – சகோதரர்கள் உயிரிழப்பு adminMarch 16, 2026 யாழ்ப்பாண பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து கொழும்புத்துறை பகுதியை அண்மித்த இடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மணியந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (24) மற்றும் அவரது சகோதரி டிலக்ஸி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறை தகவலின்படி, இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பவுசர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/2026/230561/
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து! ஜெயமோகன் jeyamohanMarch 16, 2026 இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும். இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. “தமிழில் நவீன இலக்கியம் உண்டா?” என்று என்னிடம் பல மற்றமொழிக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள். அகிலனில் இருந்து தொடங்கி இந்திய மொழி அறிஞர்கள் நம் நவீன இலக்கியம் பற்றிய ஆழ்ந்த முன்முடிவுக்குள் சென்றுவிட்டனர். நம் நவீன இலக்கியத்தை உலகம் அறிந்தால்தான் இந்தியாவில் மதிப்பு என முடிவுசெய்தோம். இன்று அதை கொண்டுசெல்ல வாழும்தமிழ் இலக்கிய மாநாடு வழியாக பெருமுயற்சி எடுக்கிறோம். இன்று எந்த சர்வதேச இலக்கிய இதழ் ஓர் இந்திய இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டாலும் அதில் நம் படைப்பு உள்ளது. இந்தியா அதை திகைப்புடன் பார்க்கிறது. அந்த முயற்சிகள் அனைத்தையும் சீரழிப்பது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஞானபீடப் பரிசு. தமிழிலக்கியத்தை நோக்கிக் காறித்துப்பியிருக்கிறார்கள். இதற்குமேல் உனக்கு மதிப்பில்லை என்கிறார்கள். இந்த அளவே உன்னை அளவிடுவோம் என குனிந்து நோக்கிச் சொல்கிறார்கள். அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். கேந்திர சாகித்ய அக்காதமி அரங்கில் வைரமுத்து அரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார், தாகூரை விட அதிகம் என அசோக் வாஜ்பாய் என்பவர் சொல்ல அரங்கே சிரித்தது. அந்தச் சிரிப்பின் பொருள் தெரிந்து நான் கூசிச் சிறுத்து அமர்ந்திருந்தேன். அந்த சிரிப்பு, அந்த இளக்காரம், அந்த போலிப்பெருந்தன்மை கொண்ட தட்டிக்கொடுத்தல், வேண்டுமென்றே நம்மில் சிறியவர்களை அங்கீகரித்து பிறரை அவரைவிடக் கீழ் என நிறுவும் சூழ்ச்சி– இது நூறாண்டுகளாக தமிழுக்கு எதிராக நிகழ்கிறது. இப்போதும் நிகழ்ந்துள்ளது. இவர்கள் யார் நம்மை மதிக்க? இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்? இத்தனை சூழ்ச்சிகள் செய்து இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம்? எண்ணக்கூசுகிறது. இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை. இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்) இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும். https://www.jeyamohan.in/230197/
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
தமிழுக்கு அவமானம் - ஜெயமோகன் jeyamohanMarch 15, 2026 சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள்(பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார். இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது. இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம். இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும். தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார். https://www.jeyamohan.in/230180/ பழைய கட்டுரை (2017 ஆம் ஆண்டில் இருந்து) வைரமுத்துவுக்கு ஞானபீடமா? jeyamohanDecember 29, 2017 உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள் ,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியே வாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது. இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும். இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும். இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும். ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே. உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு ‘எதற்கு வம்பு’ என்பதே. வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம். இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும். ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை. ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும். தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி. இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது. சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார் கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள். என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும் அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம். https://www.jeyamohan.in/105208/