Everything posted by கிருபன்
-
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது 08 February 2026 ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/445276/sridelo-party-leader-p-udayarasa-arrested
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். இதில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமைகளுக்கான இயக்கம் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlaxmt2f0000356ng17zf1vu
-
டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா
டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmldqjgy6000d356ng4c71y94
-
மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?
மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா? adminFebruary 8, 2026 அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது குறித்து நெதன்யாகு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. காசாவில் அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ள இரண்டாம் கட்டத் திட்டங்கள் (Phase 2) குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அமெரிக்காவின் இராணுவ ஆதரவு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். கடந்த சில மாதங்களாகவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ________________________________________ வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த சந்திப்பு, ஈரான் மீதான ‘அதிகபட்ச அழுத்தம்’ (Maximum Pressure) கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஓமனில் நடைபெற்று வரும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் கவலைகளையும் உள்ளடக்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். https://globaltamilnews.net/2026/228657/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ரசோதரன் க்கு யோகம் அடிக்கப்போகின்றதா?😱
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
- IMG_5120.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறந்த தொடக்கத்துடன் ஆரம்பித்தாலும் நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களோடு இருந்தது. எனினும் சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 ஓட்டங்களுடன் இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் வேகமாகப் பின்தொடர முடியாததாலும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
**தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் : அவதூறுகளுக்கு எதிரான வரலாற்று விளக்கம்** கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி, தந்தை பெரியார் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில், தொல். திருமாவளவன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அந்த உரையின் 42ஆம் நிமிடத்திலிருந்து 46ஆம் நிமிடம் வரையான மூன்று நிமிடங்களுக்கு மேலான பகுதியில், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தான் நேரில் சந்தித்து உரையாடியதாக நினைவுகூர்ந்த திருமாவளவன், அந்த உரையாடலில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதிவதனி அம்மையாரை காதலித்ததையும், அதனால் எழுந்த சிக்கல்களையும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பல நிமிடங்கள் தன்னிடம் பேசினார் எனப் பதிவு செய்துள்ளார். அந்த உரையில் அவர், “மதிவதனியை நான் காதலித்ததால் அவரது தந்தையே எங்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை” என பிரபாகரன் கூறியதாகவும், மேலும், “இந்த காதலின் காரணமாக வல்வெட்டித்துறையில் 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்” என்று தன்னிடம் பிரபாகரன் தெரிவித்ததாகவும் மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், “மதிவதனி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் நான் அல்ல என்பதனால் இந்த மண்ணில் என்னைத் தலைவராக ஏற்கத் தயக்கம் இருந்தது; அது காலப்போக்கில் மாறிவிட்டது” என்றும் கூறியதாக, முற்றிலும் பொய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ⸻ அவதூறுக்கு எதிரான விளக்கம் திருமாவளவனின் இந்த அவதூறுகளுக்கு எதிராக, நான் ஏற்கனவே எனது கண்டனக் காணொளி மூலம் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து, வரலாறு அறியாத பலர் தேசியத் தலைவர் அவர்களின் திருமண வரலாற்றை உண்மையான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்தச் சம்பவங்களின் சுருக்கமான ஆனால் துல்லியமான வரலாற்றை இங்கே பதிவாக வழங்குகிறேன். ⸻ 1983–84 : மாணவர் போராட்டப் பின்னணி ஆயுதப் போராட்டம் மும்முரம் அடைந்த 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில், சிங்கள தேசமெங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதன் காரணமாக, தெற்கு இலங்கையில் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, தெற்கு பல்கலைக்கழகங்களில் பயின்ற தமிழ் மாணவர்கள், “தாம் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே கல்வியைத் தொடரும் வசதிகளை செய்து தர வேண்டும்” என்று சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அந்த வேண்டுகோளுக்கு சிங்கள அரசு செவிசாய்க்கவில்லை. ⸻ யாழ் பல்கலைக்கழக உண்ணாவிரதம் இதன் பின்னணியில், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராதனை (Peradeniya) மற்றும் கடுப்பொத்த (Katupotha) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் நான்கு மாணவிகளுமாக ஒன்பது பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். சிங்கள அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய நிலை உருவானது. அதோடு, உண்ணாவிரதத்தின் ஆறாம் நாளில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டினார். ⸻ இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு, அந்த மாணவ, மாணவிகளை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதுகாப்பாக அழைத்து இந்தியாவிற்கு கொண்டு சென்றனர். இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் முதலில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்களில் ஜனகன் மற்றும் படிகலிங்கம் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். மற்ற மாணவர்கள் தங்களது விருப்பப்படி வேறு வழிகளில் சென்றனர். ⸻ மாணவிகள் குறித்து பிரபாகரனின் முடிவு மாணவிகளை மதுரையிலேயே வைத்திருக்கவும், பயிற்சி முகாம்களுக்கு அனுப்பவும் பிரபாகரன் அவர்கள் விரும்பவில்லை. எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த • மதிவதனி • வினோஜா • ஜெயா • லலிதா ஆகிய நான்கு மாணவிகளும், திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் தம்பதிகளின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். ⸻ மதிவதனி : பின்னணி பிரபாகரன் அனுப்பிய நான்கு பெண்களில், “மதி” என அழைக்கப்பட்ட மதிவதனி அம்மையார், ஒல்லியான உடல் அமைப்பும், வெளிர்ந்த நிறமும், இனிய முகமும், விளையாட்டுத் தன்மையும் கொண்டு அனைவரையும் ஈர்த்தார் என, “The Will to Freedom” என்ற நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மதிவதனி அம்மையார், புங்குடுதீவின் மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைப் பின்பற்றும், பக்தியுள்ள குடும்பத்தில் ஏரம்பு – சின்னம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர். அவரது தந்தை கிராமத்தில் “ஏரம்பு மாஸ்டர்” என அறியப்பட்ட ஆசிரியராக இருந்தார். இத்தகைய குடும்பச் சூழலில் வளர்ந்ததால், மதிவதனி அம்மையாருக்கு பக்தி, மென்மை, பரிவு, அறிவு இயல்பாகவே இருந்தது; அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். ⸻ கல்வி மற்றும் உண்ணாவிரதம் கால்நடை மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்றிருந்த அவர், குடும்பத்தின் விவசாயப் பின்னணியின் தாக்கத்தால் வேளாண்மை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலத்திலேயே தமிழ் மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தபோது, இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், வீட்டிற்கு திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்த நிலையில்தான் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மதிவதனி அம்மையார், மேலே குறிப்பிட்டபடி திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். ⸻ திருவான்மியூர் இல்லத்தின் சூழல் சமூக அழுத்தங்களுக்கிடையே, அந்த நான்கு பெண்களின் வருகையால் திருவான்மியூர் இல்லம் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த இடமாக மாறியது. சமையல் பொறுப்பை அந்த நால்வரும் ஏற்றுக்கொண்டனர். பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாண உணவுகளை ரசித்துச் சாப்பிட்டார். பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வருகை தரும் நாட்களில் சிறப்பான உணவுகளும் தயாரிக்கப்பட்டன. ⸻ காதல் உருவான தருணம் இயல்பாகவே சுறுசுறுப்பும் குறும்புத்தனமும் கொண்ட மதிவதனி அம்மையார், “ஹோலி பண்டிகை” நாளில் வீதியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர் வர்ணம் கலந்த நீரை ஊற்றுவதை கவனித்தார். அதே “ஹோலி பண்டிகை” நாளில், பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்தபோது, மதிவதனி அம்மையார் மஞ்சள் பொடியைக் கரைத்து வைத்திருந்த நீரை, வேறு ஒரு முக்கிய அலுவலுக்காகச் செல்லத் தயாராக வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்திருந்த பிரபாகரன் அவர்கள் கதவைத் திறந்தவுடன் அவர் மீது ஊற்றினார். இதனை எதிர்பாராத பிரபாகரன் அவர்கள், இவ்வாறான உரிமையை தன்னுடன் எவரும் எடுத்துக்கொண்டதில்லை என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தார். தனது சட்டையை பயன்படுத்த முடியாத கோபத்தில், மதிவதனியைத் திட்டிவிட்டார். இதனால், மதிவதனி அம்மையார் அழுதுகொண்டே ஓடினார். பின்னர், தானும் அவசரப்பட்டு பேசிவிட்டேன் என மனம் நெகிழ்ந்து, தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்திய அந்தக் கணத்தில்தான் காதல் பொறி பிறந்தது. மதிவதனி அம்மையாரின் காதலை பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தினார். ⸻ திருமணத்திற்கான முடிவு இந்தக் காதல், பிரபாகரனுக்கு அமைப்பிற்குள்ளும் வெளியிலும் சில சிக்கல்களை உருவாக்கியது. சில மூத்த உறுப்பினர்கள், இது ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதினர். அந்தக் கடினமான காலத்தில், பாலசிங்கம் – அடேல் தம்பதிகள் பிரபாகரனுக்குத் துணை நின்றனர். திருமணம் மனித உணர்வுகளுக்குத் தேவையான ஒன்று என்றும், விதிகளில் நெகிழ்வு இருக்க வேண்டும் என்றும் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். மேலும், திருமணம் ஒரு பொதுவிதியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். ⸻ பெற்றோர் சம்மதம் திருமண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் முன்னர், மதிவதனி அம்மையாரின் பெற்றோருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டது. ஆரம்பத்தில், “உன் வாழ்க்கை எப்போதும் அபாயத்தில் இருக்கும்” என்று தந்தை ஏரம்பு எச்சரித்தபோதும், “அவருக்காக உயிர் தியாகம் செய்யத் தயார்” என்று மதிவதனி அம்மையார் கூறியதை அடுத்து, அவரது தந்தை ஏரம்புவும் பூரண சம்மதம் தெரிவித்தார். ⸻ திருமணம் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில், மிக எளிமையான முறையில், மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, மதிவதனி – பிரபாகரன் திருமணம் நடைபெற்றது. இதுவே வரலாறு. ⸻ முடிவுரை இத்தகைய தெளிவான வரலாறு இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தேவைக்காக திருமாவளவன் பேசிய அவதூறுக் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. இந்தியாவின் தமிழ்நாட்டைப் போலவே, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குள் சாதியைச் சாட்டும் கௌரவக் கொலைகள் நிகழாத நிலையில், தமிழ்நாட்டில் கோலோச்சும் சாதிய விஷத்தை உலகத் தமிழர்களிடையே விதைப்பது மிகவும் தவறானது. மேலும், தமிழ் ஈழத்தில், விடுதலைப் புலிகளால் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக்காக போராடிய எந்த ஒரு இயக்கத்தினாலும் கூட சாதியக் கொலைகளோ, அதற்கான மரண தண்டனைகளோ ஒருபோதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே உறுதியாகத் தெரிவித்து, திருமாவளவனின் கருத்துக்கு ஈழத் தமிழனாக எனது கண்டனத்தைப் பதிவு செய்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையும் போராட்டமும் சாதி மதங்களைத் தாண்டிய ஈழத் தமிழ் மக்களின் விடுதலை அரசியலின் சாட்சி. அதை அபாண்டங்களால் மாசுபடுத்த முடியாது. கனடா ஈழமுரசு பதிரிகைக்காக சுவாமி சங்கரானந்தா🙏 https://www.facebook.com/share/1Ew2BqFC3G/?mibextid=wwXIfr
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!
-
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.!
சமஷ்டி நூற்றாண்டும் தமிழரசுக்கட்சியும்.! February 6, 2026 — அழகு குணசீலன் — இலங்கை அரசியலில் சமஷ்டி சிந்தனை பிறந்து நூறாண்டுகளாகிறது. சிங்கள தேசியவாத, நாயக்க வம்ச ஆளுமை எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவ கட்டமைப்புக்கு சமஸ்டி- கூட்டாட்சி முறைமையே பொருத்தமானது என்று 1926 இல் கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார். அதற்கான அவசியத்தையும், நியாயத்தையும் முன்வைத்தார். இலங்கைத் தீவை கண்டி, கரையோரம், வடக்கு கிழக்கு என்று சுயாட்சி பிராந்தியங்களாக பிரித்து கூட்டாட்சி அரசியல் கட்டமைப்பை நிறுவுவது அவரது கருத்தாக இருந்தது. அப்போது சமஷ்டி முறைமையானது இன ஒற்றுமையை பாதிக்கும் வகையிலான ஒரு இனவாத கருத்தியல் என்று ஜேம்ஸ்.ரட்ணம் பண்டாரநாயக்காவின் கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் விவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிங்களவர் தமிழரை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரித்து இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்ததற்கு மட்டும் அன்றி அதை இனவாதம் என்று தமிழரே எதிர்த்ததற்கும் – தட்டிக்கழித்ததற்கும்- நிராகரித்ததற்குமான சமஷ்டி நூற்றாண்டு இந்த 2026. இந்த நூற்றாண்டு குறித்து நிலமும், புலமும் அறிந்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரை இலங்கை அரசியல் பரப்பில் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கலந்துரையாடல்களுக்கும், தமிழர் அரசியலில் மாற்று அணுகுமுறை தேவை என்ற கருத்தையும் இன்றைய தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது. 1949 இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி -சமஷ்டி கட்சி நிறுவப்ப்பட்டு இதே சமஷ்டிக்கோரிக்கையை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையாக முன் வைத்தது. அந்த தமிழ்த்தரப்பு சமஷ்டி கருத்தியலும் முக்கால் நூற்றாண்டை கடந்து விட்டது. தமிழரசுகட்சியானது தற்போது எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் சமஷ்டியின் தந்தை என்ற கோதாவில் அற்ப அரசியல் செய்வதுடன், பண்டா- செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததையே அரசியல் முதலீடாக கொண்டிருக்கிறது. சிங்கள, பௌத்தர்களின் எதிர்ப்பால் பண்டாரநாயக்கா 1957 யூலை 26 இல் ஒப்பமிடப்பட்ட, நகலை கிழித்தெறிந்ததை பிரச்சாரம் செய்யும் தமிழரசுக்கட்சி, முதலில் சமஷ்டி யோசனையை முன்வைத்தது ஒரு சிங்களத்தலைமை என்பதையும், அதை நிராகரித்தது தமிழர் தரப்பே என்பதையும் அடக்கி வாசிக்கிறது. அண்மைய செய்திகள், பதிவுகளின் படி சமஷ்டி கோரிக்கையை கொண்டு இழுக்க புதிய அரசியல் அணுகுமுறை – ஒரு மாற்று அரசியல் பாதை அவசியம் என்பதை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். “பண்டாரநாயக்காவின் சமஷ்டி நூற்றாண்டை மையமாகவைத்து அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சுமந்திரன். அவரது இந்த கருத்து அந்த வேலைத்திட்டம் குறித்து தெளிவாகவோ, ஆழமாகவோ பேசவில்லை. எப்படியாயினும் தமிழர் அரசியலில் ஒரு மாற்று அணுகுமுறை காலத்தின் கட்டாயம். எம்.ஏ.சுமந்திரனின் கருத்தில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ‘சமஷ்டி’ குறித்து நிலவும் ‘அச்சத்தை’ போக்குவதும், ‘தீர்வு’ ஒன்றை எட்டும் நிலையில் அதற்கான சர்வஜனவாக்கெடுப்பில், அரசாங்க தரப்புடன் இணைந்து மேடையேறும் போது சமஷ்டிக்கான, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல என்றும் அவர் கூற வருகிறார் என்றே கொள்ள வேண்டும். “சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில், மீளப்பெற முடியாத அதிகாரப்பகிர்வு முறையை அடையவேண்டும்.அதற்கு நிட்சயமாக எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும்”. “இந்தியா இந்தப்பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கி கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்கவேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது”. சுமந்திரன் பத்தியாளர் சிவராசா கருணாகரன் உடனான நேர்காணல் கூறிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை மட்டும் அன்றி பிராந்திய அரசியல் ஜதார்த்தம் கொண்டவை. ஆனால் இந்தியாவை பயன் படுத்தல் என்பதில் – அதன் வரையறையில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் பரப்புக்கு உள்ளேயும், வெளியேயும், புகலிடச் சூழலிலும் முரண்பாடான நிலைப்பாடுகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் சுமந்திரன் “இந்தியாவை பயன்படுத்தல்” என்ற கருத்தோடு தென்னிலங்கை தீவிர சிங்கள பௌத்த பேரினவாதத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான். சிங்கள மக்களுக்கு சமஷ்டி குறித்து இருக்கும் அச்சத்தை அகற்ற சுமந்திரனின் இந்தியாவை பயன்படுத்தல் எந்தளவுக்கு உதவப்போகிறது? அதுவும் இலங்கைக்கும் -இந்தியாவுக்குமான உறவானது முற்றிலும் பொருளாதார நலன் சார்ந்த உறவாக நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு அரசியல் அழுத்தம் இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கக்கூடியதா? இதை சிங்கள தேசம் குறிப்பாக தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் கூட இந்திய அழுத்தத்தை எப்படி நோக்கப் போகிறார்கள்? சுமந்திரனின் ‘இந்தியாவை பயன்படுத்தல்’ என்ற கருத்து சிங்கள மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி, சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் பக்கம் சிங்கள மக்களை அணிதிரட்டமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்தியாவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலம், இயற்கை அனர்த்த நிவாரண முகாமைத்துவ உதவிக்காலம், சர்வதேச நாணய நிதிக்கு இலங்கைக்கு சார்பாக பிணை நின்றகாலம்…. என்ற பல வாய்ப்புகள் இனப்பிரச்சினை குறித்து குறைந்த பட்சம் அர்த்தமுள்ள தீர்வு குறித்து பேச பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் வடக்கு,கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகள் கொழும்புக்கு படையெடுத்து இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்கும் போது தமிழ் தேசியத்தின் பலவீன அரசியல் பற்றியே அதிகம் அறிவுறுத்திய இருக்கிறது. இந்த பலவீனம் காரணமாகவும், கொழும்பின் பலம் காரணமாகவும் தான் டெல்லியிடம் ஈழத்தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதை இந்திய வெளியுறவுத்துறை புரிந்து இருக்கிறதா? கொழும்பினதும், தமிழ்தரப்பினதும் பலவீனங்களை இதுவரை இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியினால் மட்டுமே பயன்படுத்த முடிந்திருக்கிறது. அதையும் புலிகளும், புலிக்குபயந்த கட்சிகளும், அமைப்புக்களும், அவர்களை நியாயப்படுத்திய தாயக, புகலிட சக்திகளுமே கெடுத்தார்கள். பண்டாரநாயக்காவுக்கு ஒரு தமிழரான ஜேம்ஸ் இரட்ணம் போன்று ராஜீவ்காந்திக்கு ஒரு தமிழ் அமைப்பாக புலிகள் குறுக்கே நின்றார்கள். இதனால் சிங்களதேசமே அனைத்துப் பயன்களையும் அள்ளியது. இந்த புள்ளியில் சுமந்திரனின் ” அது தமிழ்மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது.” என்ற வார்த்தைகளை அழுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழ் மக்களுக்கு விளைவிக்கப்பட்ட கேட்டுக்கு புலிகளும், ஜே.வி.பி.யும் பங்குதாரர்கள். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு எதிரான தங்கள் நடவடிக்கையை ஜே.வி.பி. இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரானது என்றும், இனவாதம் இல்லை என்றும் நியாயப்படுத்துவது அரசியல் அபத்தம். இன்றைய பிராந்திய, உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்திரா – ராஜீவ்காந்தி காலங்கள் மீண்டும் உயிர்த்தெழப்போவதில்லை. அதுமட்டுமின்றி இந்திய பொருளாதார மேலாதிக்கத்தை தவிர்த்து ஓடுவதை அநுர அரசாங்கத்தினாலும் நினைத்துபார்க்க முடியாது. சிங்கள, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை பாதுகாக்க எந்த மேலாதிக்க சக்திகளோடும் கூட்டுச்சேர தயார் என்பதை நிரூபிக்க ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு சில மாதங்களே தேவைப்பட்டன. எம்.ஏ.சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால பாராளுமன்றமன்ற அரசியல் உட்கட்சி ஜனநாயகம் மட்டும் அன்றி வெளிப்படைத்தன்மையும் அற்றது. ” … அவர்கூறுகின்ற பெயர்ப் பலகையில் தொங்கிக்கொண்டிருக்காமல்….. என்கின்ற அந்த பலகைக்கு பின்னால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், மதியாபரணம் ஆபிரகாம் சுயந்திரனுக்கும் இடையிலான கருத்து மோதல் ஒழிந்து இருக்கிறது. இது ஒற்றையாட்சி – ஏக்கயராட்சிய வரைவிலக்கண அரசியல் வித்துவ செருக்கு. ஏக்கயராட்சியவுக்கு வேறு பெயர் சமஷ்டி என்று தமிழ்மக்களுக்கு காட்டும் அதேவேளை சிங்கள மக்களுக்கு அதை மறைக்கும் வெளிப்படைத்தன்மையற்ற அரசியல் ஏமாற்றே சுமந்திரன் கூறுகின்ற பலகை கதை. சிங்கள மக்களையும், அவர்களின் அரசியல் தலைமைகளையும் கூட்டாட்சிக்கு பதிலாக ஏக்கயராட்சிய என்ற வார்த்தையை பிரதியீடு செய்து ஏமாற்றலாம் என்று சுமந்திரன் நினைப்பது அரசியல் சிறுபிள்ளைத்தனம். இந்த ஒழித்து பிடித்து விளையாடும் அரசியலை விட்டு விட்டு சிங்கள மக்களின் நம்பிக்கையை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பெறவேண்டுமானால் அரசியல் நேர்மையுடன் தமிழரசுக்கட்சி / தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் சகல தமிழ் கட்சிகளும், தங்கள் பங்குக்கு செய்யவேண்டிய வேறு அரசியல் வேலைகள் நிறையவே உள்ளன. அதை அவர்கள் செய்யவேண்டும். 1. திம்புக்கோட்பாடு, வட்டுக்கோட்டை பிரகடனம் போன்றவை சிங்கள மக்களுக்கு தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய விடயங்கள். இவற்றை தமிழரசுக்கட்சி மீளப்பெற்று தமிழ்த்தரப்பு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் வாழவே விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு செயலாக இது அமையும். 2.வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பது போன்ற இனியும் சாத்தியமற்ற போலிக்கோரிக்கைகளை முன் வைப்பதை தவிர்த்தல், மற்றும் அங்கு வாழும் சகல இன மக்களுக்கும் அந்த உரிமையை பிரகடனம் செய்தல். இதில் முக்கியமானது வடக்கு கிழக்கு தமிழர்தாயகம், தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற வார்த்தையாடல்களையும் தவிர்த்துக்கொள்வதாகும். இது பாரம்பரியமாக வாழும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெறுவதற்கும் உதவும். 3. திம்புக்கோட்பாடு பேசுகின்ற மலையக மக்கள் குறித்த விடயங்களுக்கு ஆதரவாக செயற்படுவது வேறு அதை கையில் எடுத்து அரசியல் செய்வது வேறு. பதுளை மற்றும் வடமேற்கு கரையோரங்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை வாபஸ் பெறுவதுடன், மலையக மக்களின் அரசியல் தீர்மானங்களை அவர்களிடமே விட்டு விடல். 4. கொழும்பில் ஒரு தமிழரசுக்கட்சி கிளை பெயர்ப்பலகை இருக்கிறது. செயற்படுகிறது (?), ஆனால் கொழும்பு தமிழர்கள், “தமிழர்கள்” என்ற உணர்வோடு இருந்தாலும், அவர்களின் அரசியல் தென்னிலங்கை சார்ந்தது. இவர்களால் வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியாது என்பது கடந்த காலங்களில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தானே “கொழும்பார்கள்” வடக்கு கிழக்கில் அரசியல் செய்கிறார்கள். 5. தென்னிலங்கை சகல முற்போக்கு சக்திகளுடன் மட்டும் அன்றி அரசாங்கம், எதிர்கட்சி தரப்புகளுடன் தமிழ்தரப்பு நல்லெண்ணத்தை பேணவேண்டும். இதனை தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளான காணி, நிர்வாக, மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டு வாழ்வுரிமை, மனித உரிமைகளை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்தத்தேவையில்லை. 6. மாகாணங்களுக்கு பொலிஸ் நிர்வாக உரிமை கிடைக்குமாயின் அது விரும்பத்தக்கது. ஆனால் அது சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதற்கு மாற்றாக இன விகிதாரசாரத்தை பேணும் வகையில் பொலிஸ்சேவை ஆட்சேர்ப்பு இடம்பெறுமாயின் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். மேலும் முப்படைகளிலும் இதனை கோர முடியும். 7. ஜனாதிபதி அநுரகுமார தனது சுதந்திர தின உரையில் இந்த நாட்டில் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தமிழரசுக்கட்சி எதிரானது அல்லவே. ஆனால் சிறுபான்மை தேசிய இனம் ஒன்று தனது இருப்புக்காக பெரும்பான்மை அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுவதை இனவாதம் என்று அரசாங்கமும், சிங்கள தீவிரவாதிகளும் முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்க வேலைத்திட்டங்களை தமிழ்தரப்பு ஒட்டுமொத்தமாக இனவாதமாகவும் நோக்க கூடாது. 8. தமிழரசுக்கட்சியும் ஆதரித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியில் வட்டுக்கோட்டை பிரகடனம், சுயநிர்ணய உரிமை கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த வகையான அரசியல் சிங்கள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமே அன்றி நல்லிணக்கத்திற்கு உதவாது. காலாவதியான வட்டுக்கோட்டை தீர்மானத்தை மனப்பாடம் செய்து மீட்டல் செய்வதில் இனியும் அர்த்தம் இருக்கிறதா…? ஆக, எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ள சமஷ்டி நூற்றாண்டின் அவரது வேலைத்திட்டம் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகளை நிராகரித்து நடைமுறைச்சாத்தியமான , ஜதார்த்த அரசியலுடன் கூடிய காலத்திற்கு பொருத்தமான வேலைத்திட்டமாக அமையவேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/ என்.பி.பி அரசாங்கம் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற இலக்கை அவர்களின் முகவரி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை ஊடாக அடையமுடியாது. அனைத்து மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் இதயங்களில் “நாங்களும் இலங்கையர்” என்ற உணர்வு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டும். இல்லையேல் சமஷ்டிக்கு நூறுவயது என்பதற்கும், இந்த நாட்டில் இனிமேல் இனவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் இடமில்லை என்று ஒரு காலத்தில் இவை இரண்டையும் சுமந்து இருந்தவர்கள் கூறுவதில் எந்த ஒரு அரசியல் அர்த்தமும் இல்லை. https://arangamnews.com/?p=12657
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம் சனி, 07 பெப்ரவரி 2026 11:26 AM தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில் தலைவரின் திருமண வாழ்கை தொடர்பான விடயத்தில் 14 பேரை தான் சுட்டுக்கொன்றதாக தன்னிடம் தெரிவித்தார் என திருமாவளவன் கூறியமை எமது மக்கள் கூட்டத்தினரை பற்றி என்ன கருதுகிறார் என சினக்க வைக்கிறது. அவ்வாறயின் 14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்? மேலும் நாட்டுப் பேச்சாளர் என்று ஒருவருக்கு மதிப்பளிக்கும் போது அவரது போராட்ட பங்களிப்பு சமூகத்துடனான உறவாடல் போன்ற விடயங்கள் மிக ஆழமாக பரிசீலித்த பின்னே அறிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு பட்டதாரி ஆவாள் என்ற கனவுடன் இருந்த மதிப்புக்குரிய ஏரம்பு ஐயாவுக்கு அது கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆனால் பாலச்சந்திரன் என்ற தனது மகன் மாவீரர் என்ற நிலையை அடைந்த பின்பும் எந்தெந்த வழிகளில் எமது இனத்திற்கு உதவலாம் என மாவீரர் விடயங்களில் திருமண ஏற்பாடுகள் உட்பட எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். தமிழக அரசியலில் எவ்வாறான நிலைப்பாடுகள் இருந்தாலும் எவரையும் பகைக்காத போக்கே பொதுவாக இருந்து வந்துள்ளது தன்னை எல்லோரையும் விட மேலாக கருதி சில அந்தரங்கங்களை பகிர்ந்து கொண்டார் தலைவர் என கற்பனையாகவோ தவறாக விளங்கியோ கூறுவது இதுவரை இவர் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களை மனம் நோக வைத்துள்ளது. அந்தவகையில் இத்தகைய தவறான தமது கருத்துக்களை திருமாவளவன் மீளப் பெற வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/54835
-
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டமென்று நடைபெற்றது. கட்சியின் 8 எம்.பிக்களில் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பே இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் என்ற முறையில் எஸ்.குகதாசன் இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார் எனத் தெரிகின்றது. நாடாளுமன்றக் குழு இதற்கு முன்னர் இதேபோன்று தமது குழுவின் ஒரு சக உறுப்பினரான சிறீதரனுடன் இத்தகைய சந்திப்பு ஒன்றை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தார் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை. அடுத்த கட்டக் கூட்டமே நேற்றுமுன்தினம் நடைபெற்றிருக்கின்றது. கட்சிக்குள் நிலவும் இழுபறி நிலைகள், குழப்பங்கள் குறித்து இரு தரப்புகளுடன் பேசி சுமுகநிலையை ஏற்படுத்தும் ஒரு திட்டம் என்ற பெயரிலேயே இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் சிறீதரனுடனும், பின்னர் சுமந்திரனுடனும் கலந்தாலோசனை நடத்த நாடாளுமன்றக் குழு தீர்மானித்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகக் கூறப்படுகின்றது. கட்சிக்குள் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகியவை பற்றி எல்லாம் இந்தச் சந்திப்பில் விலாவாரியாகப் பேசப்பட்டதாக அறியவந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி விடயங்களில் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் சுமந்திரன் விளங்கப்படுத்தினார் எனத் தெரியவந்தது. இந்தச் சந்திப்பின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரன் முரண்பட்டுக் கருத்து மோதல் பட்டார் எனத் தெரிகின்றது. எனினும் கட்சியின் நிலைமை என்ன, சிறீதரன் ஆற்றிய செயற்பாடு யாது என்பவை பற்றி மிகத் தெளிவாகச் சுமந்திரன் விளக்கம் அளித்துள்ளார் எனக் கூட்டத்தில் பங்குபற்றிய எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/358888/
-
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப்
மார்ச் மாதத்திற்குள் போர் நிறுத்தம்? - யுக்ரைன் விவகாரத்தில் வேகம் காட்டும் ட்ரம்ப் 07 February 2026 யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுக்ரைன் விவகாரத்தில் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக இருப்பதாகவும், இதன் மூலம் விரைவில் "ஏதாவது ஒரு நல்ல விடயம் நடக்கலாம்" என்றும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக, யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 314 போர்க்கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது. எனினும், யுக்ரைனின் நிலப்பரப்பு தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் யுக்ரைன் மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்றும், அதனுடன் இணைந்து அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க மற்றும் யுக்ரைன் தரப்பு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உயர்மட்ட இராணுவத் தொடர்புகளை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளும் இணங்கியுள்ளன. தமது இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்த ட்ரம்ப், தற்போது அதற்கான இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/445114/ceasefire-by-march-trump-shows-momentum-on-ukraine-issue
-
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்!
தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்! ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 8 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 4 மற்றும் 9 ஆம் தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் தரம் 9 வரையிலான முழுமையான பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் இணைந்துள்ளதாகவும், முதலாம் தரத்திற்கான சீர்திருத்தங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், 6 ஆம் தரத்திற்கான பாடத்திட்ட மாற்றங்கள் மாத்திரம் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதே இந்தச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlbz0812000k356np5y299h9
-
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து – சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது! adminFebruary 7, 2026 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்)” சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை, 06) நாடாளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் கீழ் இந்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக இல்லாத காரணத்தினால், இதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை (Simple Majority) மூலம் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த முழுமையான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் (Hansard) பதிவிடுமாறு சபாநாயகர் கட்டளையிட்டார். இந்த தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்ற ஓய்வூதிய நீக்கச் சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சட்ட ரீதியான தடைகள் நீங்கியுள்ளன. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு! adminFebruary 7, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம், போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அதே நாளில் ( 24மணித்தியாலங்களுக்குள் ) வீடு திரும்புவதைக் குறிக்கும். இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்று அழைப்பார்கள். இதனால் நோயாளிகளுக்கு தங்குமிடம் தேவையில்லை நோயாளி இரவு முழுவதும் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுப்பதால் மனதளவில் விரைவாகக் குணமடைய முடிகிறது. மருத்துவமனையில் தங்கும் கட்டணங்கள் இல்லாததால் இது சிக்கனமான முறையாகும். பொதுவாக நுண்துளை அறுவை சிகிச்சை (Laparoscopy) போன்ற நவீன முறைகள் மூலம் இது செய்யப்படுகிறது. மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்கியிருக்காததால், பிற நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது போன்ற நிலையங்கள் (JDSC போன்றவை) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறுவை சிகிச்சைகளை மிக வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றன இது வெறும் ஆரம்பம் மட்டுமே! எதிர்காலத்தில் மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மற்றும் விரிவான சிகிச்சை முறைகளை நோக்கி எமது வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2026/228569/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களையே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அதிரடியான துவக்கத்துடன் ஓட்டங்களை எடுத்திருந்தாலும் விக்கெட்டுகள் சரிய இறுதி இரு ஓவர்களில் 29 ஓட்டங்கள் எடுக்கும் நிலையில் இருந்தது. 19 வது ஓவரில் ஃவகீம் மூன்று சிக்ஸர்களுடன் 24 ஓட்டங்களை எடுத்ததால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய இருவருக்கும் புள்ளிகள் இல்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் வெல்லுது. 19 வது ஓவரில் 24 ரண்ஸ்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக்கிண்ணப் போட்டிகள் GMT நேரப்படி 07 பெப் 05:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை சனி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 21 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் இருவர் மாத்திரம் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து கறுப்பி சுவி முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI மூன்று பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் 20 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி கோஷான் சே நந்தன் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 23 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் @நந்தன் இறுதியாக வரும் அணிகளுக்கு பதில்கள் தரவில்லை எனினும் அவரின் தரவுகள் கூகுள் ஷீற்றில் இருந்தமையால் அவற்றை பிரதிசெய்துள்ளேன். இந்த முறை 🦀க்கு வெற்றி கிட்டுமா?🤪 முதலாவதாக வந்தாலும் ஆச்சரியமில்லை😄! அநேகமாக எல்லோரும் இந்தியா மீது பந்தயம் கட்டி உள்ளனர். சறுக்கச் சான்ஸ் அதிகம்.😁
-
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும் Veeragathy Thanabalasingham on February 6, 2026 Photo, THE PARLIAMENT OF SRI LANKA முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு ‘தற்கொலைத் தாக்குதலை’ நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை அவரது முன்னாள் தோழர்களின் அரசாங்கம் ஜனவரி 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அது குறித்து அரசியல் அரங்கில் ஒரு விவாதம் மூண்டிருக்கும் வேளையில், குணதிலக உயிருடன் இல்லை. குறுகியகால சுகவீனத்துக்குப் பிறகு ஜனவரி 18ஆம் திகதி அவர் காலமானார். தனது வாழ்வின் இறுதியில் மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் அரச செலவில் அனுபவித்து வந்த ஆடம்பரமான வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்த சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை ஆட்சேபித்து பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இல்லாமல் செய்வதாக 2024 தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கத் தலைவர்கள் கூறுகிறார்கள். சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட அன்றைய தினமே தற்போது ஓய்வூதியத்தை பெறுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற செலவினங்கள் பற்றிய விபரங்களை அரசாங்க உறுப்பினர் காமினி இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமே சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நாடாளுன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை 1976ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மூத்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கலாநிதி என்.எம். பெரேரா அப்போது நிதியமைச்சராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. காமினி இரத்நாயக்க வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் தற்போது 330 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார்கள். இதற்கு மேலதிகமாக, மரணமடைந்த 182 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதவை மனைவிமாரும் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கியிருந்த ஏழு பேர் அரச கொடுப்பனவுகளைப் பெறுகின்றார்கள். ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தம் 23,541,645 ரூபாவும் விதவைகளுக்காக 11,025,216 ரூபாவும் தங்கியிருந்தவர்களுக்காக 420,121 ரூபாவும். அரசுக்கு செலவாகுவதாக அவர் சபையில் கூறினார். ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை இம்மாத இறுதியளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஓய்வுதிய ஒழிப்பு திட்டம் தொடர்பில் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்றுடன் ஆராய்ந்து சட்டமூலத்துக்கு ஒரு மனிதாபிமான பரிமாணத்தை கொடுக்கக்கூடிய திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவிடம் கேட்டிருக்கிறார். ஜெயசூரியவை போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி படைத்த வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல. ஓய்வூதியத்தை சமூக சேவைக்கு தன்னால் செலவிடக்கூடியதாக இருப்பதை போன்று பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்யமுடியாது என்றும் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் இடர்பாட்டுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் பதில் தலைவராக இருக்கும் ஜெயசூரிய ஜனாதிபதிக்கு கடந்த வாரம் எழுதிய கடிதம் ஒன்றில் ஊழல்வாதிகள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அரசியல்வாதிகள் சார்பில் தான் பேசவில்லை என்பதை குறிப்பிடத்தவறவில்லை. பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளாகவே மக்கள் நோக்குகிற அளவுக்கு இலங்கையின் அரசியல் ஊழல்மயமாகியிருக்கிறது என்பதால் ஜனாதிபதியிடம் தன்னால் முன்வைக்கப்படும் கோரிக்கை மக்களினால் எவ்வாறு நோக்கப்படும் என்பதில் ஜெயசூரிய கொண்டிருக்கும் கரிசனை கடிதத்தில் தெளிவாக பிரதிபலித்தது. “சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊழல்வாதிகள் என்று அழைப்பது நியாயமானதல்ல. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜே.வி.பியின் 30 முன்னாள் உறுப்பினர்கள் உட்பட மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்ற நேர்மையான இடதுசாரி அரசியல்வாதிகள் பலரும் அடங்குகிறார்கள். “எதிர்கால ஓய்வூதியத்தை பற்றி அக்கறைப்படாமல் வாழ்க்கையின் சிறந்த பருவத்தில் அரசாங்க சேவையில் இருந்து விலகி அரசியலுக்கு வந்த பலர் இருக்கிறார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்தால் அவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களும் எதிர்காலத்தில் அதே கஷ்டத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். “நாடு சுதந்திரமடைந்த நேரத்தில் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள் மற்றும் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்களும் அரசியலில் முதன்மை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமூக மாற்றம் அந்த நிலைவரத்தை பெருமளவுக்கு மாற்றியமைத்து சாதாரண மக்களும் அரசியல் வாய்ப்புக்களில் நியாயமான பங்கைப் பெறுவதற்கு வழிசமைத்தது. “நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இல்லாமல் செய்தால் முறைகேடாக சொத்தைக் குவிக்கும் முதலாளித்துவவாதிகளும் பெரும் வர்த்தகர்கள் மற்றும் ஊழல்வாதிகளும் மீண்டும் அரசியல் களத்தை ஆக்கிரமிக்கும் சூழ்நிலை உருவாகும். சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” என்று முன்னாள் சபாநாயகர் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பிலான விவாதம் நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. பொதுமக்கள் பாதூரமான பொருளாதார இடர்பாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றுமில்லாத பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான வரிகள் உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின் விளைவான நெருக்குதல்களினால் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அரசியல்வாதிகள் வரப்பிரசாதங்களை அனுபவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரச சேவை ஊழியர்கள் தங்களது 60 வயதுவரை 25 – 30 வருடங்கள் பணியாற்றிய பிறகு பெறுகின்ற ஓய்வூதியங்களை விடவும் பெருமளவுக்கு அதிகமான ஓய்வூதியத்தை அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு ஐந்து வருடங்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு வாழ்நாள் பூராவும் பெறுவதை மக்கள் ஒரு முறைகேடாகவே நோக்குகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு முன்னர் பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இருந்த சொத்துக்களையும் பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பிறகு அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அரசியலை அவர்கள் மக்கள் சேவையாக அன்றி செல்வத்தைக் குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உலகின் பல நாடுகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். முதல் ஐந்து வருடங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் அவர்கள் அங்கம் வகித்த ஒவ்வொரு வருடத்துக்கும் 2 ஆயிரம் ரூபா மேலதிகமாக வழங்கப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. அதேவேளை, தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான கிழக்கு திமோரில் அரச அதிகாரிகள் அனுபவிக்கும் ஆடம்பரமான சலுகைகளுக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டம் கடந்த செப்டெம்பரில் நிறைவேற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு தங்களுக்குள் கருத்தொருமித்துச் செயற்படமுடியாத அரசியல்வாதிகள் தங்களுக்கான வரப்பிரசாதங்களை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு சட்டங்களை நிறைவேற்றிய பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் எதிராக இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத 2022 மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கரு ஜெயசூரிய போன்ற தலைவர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கும் கோரிக்கையை நாட்டு மக்கள் சாதகமான முறையில் நோக்க முடியாத அளவுக்கு இலங்கையின் அரசியல் வர்க்கம் ஊழல் நிறைந்ததாக இருந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக தவிர்க்க முடியாத வகையில் நேர்மையான அரசியல்வாதிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காலஞ்சென்ற சாம் விஜேசிங்க தனது இறுதிக்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய ஒரு கதையை இச்சந்தர்ப்பத்தில் நினைவுமீட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக ஏற்பாடுசெய்யப்படும் பயிற்சிப் பட்டறைகளில் விரிவுரை நிகழ்த்துவதற்கு விஜேசிங்க அழைக்கப்படுவது வழமை. ஒரு பயிற்சிப் பட்டறையில் புதிய உறுப்பினர்களிடம் நாடாளுமன்றத்துக்கு வந்த நோக்கம் குறித்து அவர் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறினார்களாம். அப்போது விஜேசிங்க, ‘இல்லை, நீங்கள் குறுகிய காலத்திறகுள் பணம் குவிப்பதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறீர்கள்’ என்று நேரடியாகவே கூறிவிட்டாராம். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12579
-
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம் February 5, 2026 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ilakku.orgதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின்