Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. @alvayan , பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை மாற்றவேண்டும். 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ENG (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) @ஈழப்பிரியன் ஐயா, @Newbalance , @வாத்தியார் , பின்வரும் இரண்டு கேள்விகளுக்கு உங்கள் பதில்களைத் தாருங்கள்.. 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP @கறுப்பி பின்வரும் மூன்று கேள்விகளுக்கு உங்கள் பதில்களைத் தாருங்கள்.. 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP
  2. @ஏராளன் , மேலுள்ள கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள். @vasee , 7), 33), 47), 48) க்கான உங்கள் தெரிவுகளைக் குறிப்பிடுங்கள். @புலவர் ஐயா, 7), 33) க்கான உங்கள் பதில்களைக் குறிப்பிடுங்கள். 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP @சுவைப்பிரியன் , பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்களைக் குறிப்பிடுங்கள். 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ENG (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்)
  3. இன்னும் 7 நாட்களே உள்ளதால் யாழ் களப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பதில்களை விரைவில் பதியுங்கள். இறுதி நாளில் பதிந்தால் அவற்றினை தரவேற்ற எனக்கு நேரம் கிடைக்காது! கூகிள் ஷீற் மூலம் பதிந்தால் மெத்தப் பெரிய உபகாரமாக இருக்கும். போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1H2HazXerKgB9Ts372VbC-dq8hvn6F9BWuRdki4K_pQc/edit?usp=sharing பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து விளையாடுவதால் முன்னர் பதில்களைத் தந்தவர்களுக்கு பங்களாதேஷ் எனத் தெரிவு செய்த கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே மாற்ற சந்தர்ப்பம் முடிவு தேதிவரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பங்களாதேஷ் எல்லாம் ஸ்கொட்லாந்து என மாற்றப்படும்.
  4. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை சட்ட சதியினால் அப்பதவியை ஏற்கவிடாது தடுத்தவர்கள் தற்போது அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஸ்ரீதரனுக்கு எதிரான தமது ”பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிப்பது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவது”என்ற 3 சதிகளில் ஒன்றை சகுனித்தனமாக அரங்கேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் ஸ்ரீதரன் வாக்கெடுப்பு மூலம் பொதுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டாரோ அன்று அவருக்கு பிடித்த ”சனி” இன்றுவரை அவரை விடாது துரத்தி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையை சாட்டாக வைத்து ”ஸ்ரீதரன் கட்சிக்கு கட்டுப்படவில்லை, தலைமையின் முடிவுக்கு முரணாக செயற்படுகின்றார் ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்ற சதியை முன்னெடுத்தனர்.ஆனால் அது வெற்றிபெறவில்லை. அடுத்ததாக ஸ்ரீதரனை பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடித்து அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து அதன்மூலம் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டமிட்டு ”ஸ்ரீதரன் மதுபானசாலைக்கான அனுமதிகளை ரணில் அரசிடமிருந்து அரசியல் இலஞ்சமாக பெற்றுள்ளார்”என்ற குற்றச்சாட்டை பாராளுமன்றத்தேர்தலின்போது தீவிர பிரசாரமாக முன்னெடுத்தனர். ஆனால் ஸ்ரீதரனின் வெற்றியை தடுப்பதற்கு பதிலாக அவர்களே தேர்தலில் மண்கவ்வினர். சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக சற்று மாற்று யோசித்தவர்கள் ஸ்ரீதரனுக்கு எதிராக சிங்களவர்களை பயன்படுத்தத் தொடங்கினர். இவர்களின் பின்னணியில் ஸ்ரீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தனர் .அந்த முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு ஸ்ரீதரனும் வலியுறுத்தியபோதும் சில மாதங்கள் கடந்தும் அந்த முறைப்பாடு கிடப்பில்தான் கிடக்கின்றது. அதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவுள்ள ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக அரசு நியமிக்க ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை சிங்கள இனவாத எம்.பி.க்களான சாமர சம்பத் தசாநாயக்க ,தயாசிறி ஜயசேகர ஆகியோர் மூலமாக பாராளுமன்றத்தில் முன் வைக்க வைத்து அதனைப்பயன்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீதரனிடம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு விளக்கம் கோரியதுடன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து ஸ்ரீதரன் உடனடியாக விலக வேண்டுமெனவும் பணித்தது. ஆனால் ”அரசியலமைப்பு பேரவை ஒரு சுயாதீனமான பேரவை .இதில் எந்தவிதமான அரசிய தலையீடும் கட்சி செல்வாக்கும் இருக்க முடியாது. இதில் எனது கட்சியின் செல்வாக்குகளை நான் பிரயோகிக்க முடியாது இந்த சபை மூலம் கட்சி சார்பு அரசியலும் செய்ய முடியாது. செய்யக்கூடாது அரசியலமைப்பு பேரவையில் எனது பங்களிப்பும் வாக்களிப்பும் மனச் சாட்சியின் படியானவை. அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு நான் எனது கட்சியின் அரசியல் குழு அல்லது மத்திய செயற்குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எனது கட்சியின் அரசியல்குழுவிலுள்ள சிலரின் தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்காகவும் நிகழ்ச்சி நிரலுக்காகவும் நான் பதவி விலக முடியாது”என ஸ்ரீதரன் உறுதியாக கூறிவிட்டார் இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல் பேரவையிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தது. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள ஸ்ரீதரன் மறுத்ததன் காரணத்தினால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார்”என்பதாகவே உள்ளது.அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார். இதன் மூலம் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஸ்ரீதரன் செயற்பட்டு விட்டார் என்பதே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நியாயம் என்றால் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத் தளபதியாகவிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போரை வழிநடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததன் முக்கிய சூத்திரதாரியான ஜெனரல் சரத்பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்ததுடன் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசாரங்களும் மேற்கொண்டதுடன் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் எந்த வகையில் நியாயம்? அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் மூலம் சபைகளில் ஆட்சியமைக்க தமிழினத் துரோகி என தமிழ் மக்களினால் அடையாளப்படுத்தப்படும் இராணுவ துணைக்குழுவாக செயற்பட்ட, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் ,யுவதிகள் படுகொலை செய்யப்பட, காணாமல் போக காரணமாகவிருந்த,மனிதப் படு கொலையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிலுள்ள அலுவலகம் தேடிச்சென்று தமிழரசுக்கட்சியின் தலைமை,அதாவது பதில் தலைவரான சிவஞானம் ஈ,.பி. டி.பி.யின் காலடியில் மண்டியிட்டது குற்றமில்லையா? சில சபைகளில் அவரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது குற்றமில்லையா? 2017 ஜனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சிலரைக் கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், வாகனம் என அனைத்திலும் விசேட அதிரடிப்படையினரே நிறைந்திருந்தனர். சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த தொகுதிக்கு செல்லும்போதுகூட அதிரடிப்படையினர் புடைசூழவே சென்றார். ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு அதுவும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாத ஒருவருக்கு ஆதரவளித்தது குற்றமென்றால் சுமந்திரன் தமிழினப் படுகொலையாளிகளின் ஒரு தரப்பான விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வடக்கில் வலம் வந்தது குற்றமில்லையா? அது அரசாக வழங்கிய பாதுகாப்பு என்று கூறினாலும் அதனை வேண்டாம் என மறுக்கும் உரிமை சுமந்திரனுக்கு இருந்தது.ஏன் மறுக்கவில்லை ? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளினதும் தமிழ் பொது அமைப்புகளினதும் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளராக தமிழின உணர்வாளரும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான அரியநேத்திரன் களமிறங்கிய போது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அரிய நேத்திரனை தோற்கடித்தே தீருவோம்.சஜித் பிரேமதாசாவை வெற்றிபெற வைப்போம் என தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொது செயலாளர் பொது வெளியில் சூளுரைத்ததுடன் சொன்னதையும் செய்தார். தமிழ் தேசிய உணர்வாளரான அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் ,சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?தமிழ் தேசிய உணர்வாளருக்கு எதிராகவும் சிங்கள இனவாதி ஒருவருக்கு ஆதரவாகவும் தமிழரசுக்கட்சியின் தலைமை செயற்பட்டது குற்றமில்லையா? ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கான வாக்கெடுப்புக்கு பின்னர் வேறு ஒரு தெரிவுக்கான வாக்கெடுப்பு அரசியலைப்பு பேரவையில் நடந்தபோது அதில் ஸ்ரீதரன் வாக்களிக்கவில்லை. இதனையும் வாக்களிக்காது விட்டது மூலம் ஸ்ரீதரன் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார் என்று தமிழரசின் சில பிரகிருதிகள் ஸ்ரீதரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.அநுரகுமார அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி வாக்களிக்கவில்லை.அப்படியானால் அநுரகுமார அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழரசுக்கட்சி மறைமுகமாக ஆதரவளித்ததா? இது மட்டுமா ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக அரசிலமைப்பு பேரவையில் வாக்களித்து விட்டார் என்பதற்காக கொதித்தெழுந்து அவரது பாராளுமன்றகுழுத் தலைவர் பதவியை பறிப்பதில் முன்னின்ற இருவரில் ஒருவர் தனது மருமகளாகவும் சம்பந்தியாகவும் சிங்களக் குடும்பத்துடன் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தலைவராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரும் பின்னர் அங்கிருந்து மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவுக்கு தாவி தேர்தலில் போட்டியிட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்குள் பின்கதவால் நுழைந்தவருமான இன்னொருவரோ தனது வருங்கால மனைவியாக, தற்போதைய காதலியாக ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றதாக தகவல்கள் உள்ளபோதும் தற்போது அதனை வெளிக்காட்டாமல் இருக்கின்றார். இவர்கள்தான் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் வாக்களித்துவிட்டதாக ”தமிழ் தேசிய உணர்வோடு” குமுறுகின்றனர் எனவே தற்போது அரசியலமைப்பு பேரவையில் ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தமது உள்வீட்டு அரசியல் எதிரியான ஸ்ரீதரனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தப் பதவியைக் கைப்பற்றுவதுடன் தமிழரசுக்கட்சியிலிருந்து ஸ்ரீதரனை வெளியேற்றும் சதியே முன்னெடுக்கப்படுகின்றது. , 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழர் தரப்பில் போராட்டங்கள் வெடித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலேயே இப்போராட்டம் தீவிரமடைந்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ் தேசியப்பற்றை வெளிப்படுத்திய இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் தமிழ் மக்களின் பேராதரவுக்கும் பலமான அடித்தளமாக அமைந்து தமிழரசுக்கட்சியை தமிழ் தேசிய இனத்தின் தாய்க் கட்சியாக மாற்றியது . தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வெளியேற்றங்கள்,உறுப்புரிமை நீக்கங்கள், பழிவாங்கல்கள், பதவி பறிப்புக்கள்,சதிகள்.தமிழரசுக்கட்சியை மிகவும் பலவீனப்படுத்தி,தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு கட்சியாக மாற்றி வருகின்றது.இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக்கட்சி அடைந்த படுதோல்வியையும் அதன்பின்னர் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையையும் எடுத்துக் கொள்ளமுடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தைஆட்டம் காண வைப்பதுடன் , தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச மக்கள் பலத்தை அடியோடு இல்லாமல் செய்யும் என்பது மட்டும் உண்மை. https://uthayannews.ca/2026/01/29/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-2/
  5. “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்) January 26, 2026 (இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம், தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி, மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் அதிகாரம், ஆட்சிலிருக்கும் தேசியமக்கள் சக்தியின் செயற்பாடுகள், தமிழரசுக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எனப் பல விடயங்களையும் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.ஏ. சுமந்திரனுடன் உரையாடினோம். இலங்கை அரசியற்பரப்பிலும் தமிழர்களின் அரசியலிலும் சுமந்திரனின் அடையாளமும் குரலும் முதன்மையானது. என்பதால் அனைத்துத் தரப்பினரோடும் உரையாடக்கூடியவராகவும் அனைத்துத்தரப்பினரும் உரையாடும் ஒருவராகவும் சுமந்திரன் காணப்படுகிறார். இது அவரைக் குறித்த கவனத்தையும் அதேவேளை சில சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணல் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.) — கருணாகரன் — 1. இலங்கையில் மிகப் பெரிய பிரச்சினைகளாகத் தொடரும் இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வைக் காண்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு ஆட்சியாளர்களால் முடியாதிருப்பது ஏன்? எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், இந்தத் தீவில் சிங்கள பெளத்தர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் உலகிலும், ஏன் இந்தப்பிராந்தியத்திலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். எனவே அவர்களுக்கு இயல்பாகவே ஒரு பீதி – உளவியல் ரீதியான அச்சம் – இருக்கிறது. அரசியல் தீர்வு விடயத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் பௌத்தத்திற்கும் சிங்களத்திற்கும் முதலிடத்தைக் கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். பொருளாதார விடயங்களிலும் தங்களை மற்றவர்கள் விழுங்கி விடுவார்கள் என்ற பயம் உள்ளது, இது சுயாதீனமாக முடிவுகள் எடுப்பதைத் தடுக்கிறது. ஆட்சியாளர்கள், மக்களுக்கு அவர்களது பயம் நீங்கும்படியான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றமும் தீர்வும் முன்னேற்றமும் நிகழும். 2. மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் பாராளுமன்றத்திலும் ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது எதற்காக? ⁠முழுமையாக அப்படிப் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. ஒரு சில தருணங்களில் அதிகாரப் போதை காரணமாக மக்களது உணர்வுகளையும் தேவைகளையும் ஆட்சியாளர்கள் மறந்து விடுகிறார்கள். 3. அப்படிச் சொல்ல முடியாதே! மக்களுடைய உணர்வுகளும் தேவைகளும் புறக்கணிக்கப்பட்டதால்தானே நாட்டில் பிரச்சினைகள் மேலும் மேலும் கூடிச் சென்றிருக்கின்றன. புதிய பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அது உலக வழமை. பழைய – பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்வதற்குக் காரணம், மக்களுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டதனால்தானே? மக்களுடைய உணர்வுகள் மதிக்கப்படுவதால் மாத்திரம் பிரச்சனைகள் தீராது. பல சந்தர்ப்பங்களில் இவை இரண்டிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாறாக சில சமயங்களில் மக்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க நினைப்பதனாலேயே பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் இருக்கும். 4. பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமிழந்த ஒன்றாக மாறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதற்கும் காரணம் மக்கள்தான். அவர்கள் பொறுப்போடும் தூர நோக்கோடும் தங்களது தெரிவுகளை மேற்கொண்டால் பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மேலோங்குவதைக் காணலாம். குறுகிய நோக்கங்களுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்தால் பாராளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றதாக மாறி விடும். 5. மாற்றத்துக்கான ஆட்சி, System Change என்றெல்லாம் சொல்லி அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மெய்யாகவே மாற்றத்திற்கான வழியில்தான் பயணிக்கிறதா? ஓரளவு மாற்றம் தெரிகிறது. இது ஆரம்பம் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களது பல செயற்பாடுகள் மாற்றத்தை நோக்கினதாகவே தென்படவில்லை. இதுவும் பழைய குருடி கதவைத் திறடி என்றுதான் முடியும். 6. அவ்வாறில்லை என்றால், அதைச் சரியான திசையில் செலுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதில் எதிர்க்கட்சிகளின் திறனும் அர்ப்பணிப்பும் எப்படி உள்ளது? எப்படி அமைய வேண்டும்? எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான திறனோ அர்ப்பணிப்போ பிரதான எதிர்க் கட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 7. நாட்டின் தேவை, மக்களின் எதிர்பார்ப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ் பேசும் சமூகங்களின் நியாயமான உரிமைகளில் எல்லாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடும் செயற்பாடும் (நடைமுறைகள்) எப்படி உள்ளது? தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை இந்த அரசு நியாயமான முறையில் அணுகுவதாக தெரியவில்லை. அப்படி ஒரு தேசிய இனப்பிரச்சனை இருப்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எந்தச் செயற்பாடும் அதை ஒட்டியதாக இல்லை. 8. முன்னைய ஆட்சியாளர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன? ஒன்றுமைகள் என்ன? ⁠தீர்க்கப்படாத இனப்பிரச்சனை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடு முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. ஊழல் விவகாரங்கள் மிக குறைவாக காணப்படுவதுதான் வேற்றுமை. 9. ஒப்பீட்டளவில் ‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பரவாயில்லை. முன்னேற்றகரமானது’ என்ற அபிப்பிராயம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் உண்டு. இப்படியான சூழலில் இந்த அரசாங்கத்தோடு பல விடயங்களில் சேர்ந்து செயற்படும் வாய்ப்புள்ளது அல்லவா! ஆம். ஆனால் எவரையும் சேர்த்து செயற்படும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு அறவே கிடையாது. 10.அப்படியென்றால், இது கதவைச் சாத்திக் கொண்டு மூடப்பட்ட அறைக்குள் குடித்தனம் நடத்துவதைப்போன்ற ஒரு ஆட்சியா? அரசியல் சொல்லாடலில் இதை ஏகத்துவத்தின் சர்வாதிகார இயல்பு (The authoritarian nature of monotheism) என்று சொல்லலாமா? ஆம். நிச்சயமாக அப்படித்தான். 11. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி எத்தகைய அணுமுறையைப் பேண விரும்புகிறது? ஏனென்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேசிய மக்கள் சக்தியுடன் சிநேகபூர்வமானதொரு உறவு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்தது. அந்த உறவை ஆட்சியிலிருக்கும்போது மேலும் வளர்த்தெடுக்க முடியாமலிருப்பது ஏன்? தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களோடு தனிப்பட்ட சிநேகிதம் இருந்தது. ஆனால் ஆட்சியாளர்களான பின்பு அவர்களது அரசியல் நகர்வுகள் பலவற்றை நாம் பகிரங்கமாக எதிர்க்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. அதை நாம் செய்கிறபோது அவர்கள் அதனை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் உள்ளவர்களாகத் தெரியவில்லை. அந்தச் சூழலில் முன்னர் இருந்த சிநேகிதத்தைப் பேண முடியாதுள்ளது. 12. தமிழ் அரசியற் தரப்பினர் கோருகின்ற – எதிர்பார்க்கின்ற – வலியுறுத்துகின்ற அரசியல் அதிகாரத்தை(சமஸ்டி உள்ளடங்கலான தீர்வை) வழங்குவதற்கான அரசியல் உளநிலை ஆட்சியாளர்களிடத்திலும் இல்லை. ஆட்சிக்கு வெளியே உள்ள சிங்கள அரசியலாளர்களிடத்திலும் சிங்களச் சமூகத்திடமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றம், அரசியற் தீர்வு ஆகியவற்றை எட்டுவதாக இருந்தால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறான ஒரு சூழலில் எப்படித் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வைப் பெறுவது? எந்த அரசியல் தீர்விற்கும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அது இல்லாமல் எந்த தீர்வும் நீடித்து நிலைக்காது. அது முடியாத காரியமல்ல. ஆட்சியிலிருக்கும் கட்சியும் நாமும் கூட்டாக மக்கள் முன் சென்று தீர்வை விளக்கினால் இது இலகுவாக சாத்தியப்படும். 13. ‘தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்‘ என்ற கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியமென்ன?தற்போது இந்த விடயத்தில் ஒரு இணக்க மனநிலை– ஐக்கியத்துக்கான சூழல் – தென்படுகிறது. அதேவேளை ‘இது நேர்மையான உறவாக இருக்கப்போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டு’ என்ற பேச்சுகளும் சமாந்தரமாக உள்ளது. மெய்யாகவே தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உருவாக்குவதற்கு உங்களுடைய உளப்பூர்வமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் என்ன? தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரு அணியில் சேர்ந்து இயங்குவது சாத்தியமான ஒரு விடயமே. தங்கள் கட்சிகளின் தனித்துவத்தை இழந்து விடாமல் அரசியல் தீர்வு விடயத்தில் இணங்கிச் செயற்படலாம். தேர்தல் கூட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீர்வு விடயத்தில் இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானதும் கூட. 14. தமிழரசுக் கட்சி, கட்சிக்கு உள்ளே (ஒழுக்காற்று நடவடிக்கைகளில்) இறுக்கமாகவும் வெளியே ஏனைய அரசியற் தரப்புகளோடு இணக்கமாகவும் செயற்படுகிறது. புதிய தலைமையில் ஒரு பண்பு மாற்றத்தை உணர முடிகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் குறித்து நிதானமாகச் சிந்திப்போரிடத்திலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலைப் பற்றி அக்கறைப்படுவோரிடத்திலும் இதற்கு எத்தகைய வரவேற்புண்டு? இதற்கு பாரிய வரவேற்பு உண்டு. இப்போதுதான் கட்சி கட்டுப்பாட்டோடு செயற்படுகிறது என்பது அனைவருடைய கருத்தாக உள்ளது. ஒற்றுமையில் பலம் உண்டு என்பதனால் மற்றைய கட்சிகளோடு இணக்கமாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது என்பதையும் அனேகமானோர் புரிந்து வைத்துள்ளார்கள். 15. பாராளுமன்றத்தினால் செய்ய முடியாத ஆட்சி மாற்றச் சூழல் ஒன்றை மக்கள் தமது ‘அரகலய’ (2022 Sri Lankan protests) போராட்டத்தின் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் . இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட முக்கியமான வேலைகளையும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதைத்தானே பிந்திய நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அப்படியென்றால் மக்கள் போராட்டத்தோடு நீங்களும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமல்லவா? அரகலயவில் நாமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அந்த வேளைகளில் நான் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆனால் அரசியலமைப்பு மாற்றம் இறுதியில் ஒரு சட்ட முறைமையினூடாகத் தான் செய்யப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மக்களோடு சேர்ந்து அறகல போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஒன்று. ஆனால் மற்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்பது வித்தியாசமானது. யாரோடு எதற்காக இணைவது என்பது முக்கியமானது. 16. தமிழ்த் தேசியவாத அரசியலில் புத்துணர்வற்ற – புதிய சிந்தனைகளற்ற சம்பிரதாயத்தன்மையே மேலோங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலக மாற்றங்களையும் பிராந்திய – உள்நாட்டு நிலவரங்களையும் உய்த்துணர்ந்து செயற்படக் கூடிய தன்மை போதாதென்றும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன? தமிழ்த் தேசியவாத அரசியல் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த போது ஜனநாயகப் போராட்டம் எப்படி இருந்ததோ, அதே பாணியில் போருக்குப் பின்னரான அரசியலையும் நகர்த்தியதே இதற்குக் காரணம். அதே பாணியில் பயணிப்பதற்கு வலுவான காரணங்கள் இருந்த போதும் 3 தசாப்த இடைவெளியை அனுசரித்து சில அணுகுமுறை மாற்றங்களை செய்திருக்க வேண்டும். 17. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகளோடு பேசிவரும் உங்களுடைய அனுபவத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் போன்றவற்றுக்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றனவா? ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்கு நிச்சியமாக அவர்கள் அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதை அடைவதற்கு போர்க்குற்ற விசாரணையை உபயோகிப்பார்கள். 18. பௌத்த விரிவாக்கம், சிங்கள மேலாதிக்கம் போன்றவற்றை நடைமுறையிலும்(ஆட்சிமுறையிலும்) அரசியலமைப்பில் முதன்மைப்படுத்தியும் வைத்திருப்பது பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் அல்லவா!இதைக்குறித்துத்தானே வெளியுலகச் சமூத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டும். அப்படித் தமிழ்த்தரப்பு எங்கேனும் செயலாற்றியுள்ளதா? ஆம். எல்லாத் தருணங்களிலும் இதை உதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறோம். 19. இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் அரசியமைப்பு மாற்றத்துக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் புத்திஜீவிகள், பல்கலைக்கழத்தின் அரசியல் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் துறையினரின் பரிந்துரைகள் எதையும் முன்வைப்பதில் அக்கறையற்றிருப்பது ஏன்? போர்ச் சூழலில் அப்படியானவர்கள் ஒதுங்கி இருக்கவே விரும்பினார்கள். இப்போதும் சமூக வலைத்தளங்களினூடாக செய்யப்படும் அவதூறுகள் காரணமாக பலர் இப்படியான பொது விடயங்களில் ஈடுபட விரும்புவதில்லை. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. 21. தமிழரசுக் கட்சி 75 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கிறது. ஆனாலும் அது முன்வைத்த அரசியல் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை. இடையில் பல தலைவர்களின் காலம் கடந்து விட்டது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வும் தமிழ்ப் பிரதேசங்களின் மேம்பாடும் உங்களுடைய தலைமைத்துவத்தில் எட்டப்படுமா? அதற்கான புதிய பொறிமுறைகளை வகுத்துள்ளீர்களா? ஆம். எமது கட்சியின் இலக்கு விரைவில் எட்டப்பட வேண்டும். அது இலங்கை மக்களின் பெரும்பான்மையவரின் இணக்கத்தோடு மட்டுமே அடையப்படலாம். அதிகாரப் பகிர்வு சகல மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளேன். இந்த வருடத்தோடு SWRD பண்டாரநாயகா இலங்கைக்கு சமஷ்டி என்ற எண்ணக் கருவை அறிமுகம் செய்து 100 ஆண்டுகள் நிறைவாகின்றது. அதை மையமாக வைத்து இந்தவேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், அது சிங்கள மக்கள் பலரது ஆதரவையும் பெற உதவும் என்பது எனது நம்பிக்கை. 20. ஆட்சியிலிருக்கும் தரப்பின் ஒத்துழைப்போடு தீர்வுக்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டாலும் எதிர்த்தரப்பிலுள்ள கட்சிகளின் ஆதரவின்றி இது சாத்தியமாகுமா? சமஸ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளக்கூடிய உளநிலை சிங்களத் தரப்பிடமுண்டா? சிங்களக் கட்சி எதுவும் சமஷ்டி என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்காமல் அர்த்தமுள்ள விதத்தில் மீளப் பெறப்பட முடியாத அதிகாரப் பகிர்வு முறையை அடைய வேண்டும். அதற்கு நிச்சயமாக எதிர்த் தரப்பு கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும். 21. அரசியற் தீர்வில் முஸ்லிம்களின் பங்கேற்பும் ஆதரவும் வேண்டுமே? அதிகாரப் பகிர்வுக்குமுஸ்லிம்களின் ஆதரவுஎப்போதுமே இருந்திருக்கிறது. அலகு விடயத்தில் அவர்களுடன்ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தாகவேண்டும். 22. மாகாணசபைத் தேர்தல், மாகாணசபைகளின் இயங்குமுறை, அதற்கான அதிகாரம் என்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு என்ன? அதை எவ்வாறு எட்டுவது? தற்போது அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களை இழந்துவிடாமல் அவற்றையாவது நிறைவேற்றச் செய்ய வேண்டும். அந்த அடிப்படையிலிருந்துதான் அடுத்த நிலைக்குச் செல்லலாம். அதற்கு முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அது நடந்தால் மாகாண சபைகளை உபயோகித்து அரசியலமைப்பிலுள்ள முழு அதிகாரத்தையும் பெற வேண்டும். https://arangamnews.com/?p=12632
  6. இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் – அரசாங்கத்துக்கு இராஜதந்திர எச்சரிக்கையா? Nishanthan SubramaniyamJanuary 30, 2026 10:26 am 0 இலங்கை அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது. தென்னிலங்கை அரசியலை புரட்டிபோடும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு பிரிவான ‘ரோ’ கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. அத்தகையதொரு நகர்வை மீண்டும் புதுடில்லி எடுக்கும் ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்ளலாம் என புதுடில்லியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மிகப் பெரிய மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன், இணக்கமான போக்கையே இந்தியா விரும்புகிறது. அதன் பிரகாரமே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட ஒருவருடத்துக்கு முன்பே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பையும் இந்திய அளித்தது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல் இராஜதந்திர பயணத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார். இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றி 80களில் பேசிய ஜே.வி.பியும் அதன் தலைமைகளும் பூகோள அரசியல் போக்கை உணர்ந்துள்ளதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை மீள புதுப்பித்துள்ளனர். இந்தியாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு புதுபிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஓர் இணக்கப்பாட்டான சூழலுக்கு இன்னும் வரவில்லை என புதுடில்லி கருதுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ஒரு வருடத்தை கடந்துள்ள சூழலில் அந்தப் பயணத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் எதுவும் இன்னமும் இலங்கையில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக இருநாட்டுகளுக்கு இடையிலான கேபிள் குழாய் அமைப்பு, திகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படமை உட்பட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த நகர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்பதால் இந்தியா இலங்கைமீது சற்று அதிருப்தியில் உள்ளது. இணக்கப்பாட்டான சூழலை அரசாங்கத்துடன், விரும்புவதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே டித்வா புயல் ஏற்பட்ட தருணத்தில் பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. என்றாலும், இலங்கையில் நகர்வுகள் குறித்து ஓரளவு அதிருத்தியில் மோடி அரசாங்கம் இருப்பதால்தான் ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்டமான வரவேற்பை புதுடில்லி அளித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமல் ராஜபக்சவுக்கான வரவேற்பை சமகால அரசாங்கம் ஓர் எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பின் இராஜதந்திர செய்தியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமல் ராஜபக்சவுக்கு ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. https://oruvan.com/namals-odisha-visit-has-shaken-sri-lanka-is-it-a-diplomatic-warning-to-the-government/
  7. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்! Mano ShangarJanuary 30, 2026 1:15 pm 0 இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன. பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தரவுகளின்படி, 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் ஆகும். அதே நேரத்தில் மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவானது. அடுத்ததாக மிகவும் பொதுவானது தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகும். உலக சுகாதார நிறுவனம் 30-50% புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளதாக வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும். அதிகரித்த மரபணு மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு நீண்டகாலமாக வெளிப்படுதல் காரணமாக இலங்கையில் புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/
  8. முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை இடையூறுகளின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை January 30, 2026 நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அச்சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் சட்ட மாஅதிபரின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்ட மாஅதிபரின் பரிந்துரைகளுக்கு அமைய, உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி, அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இந்த நிலையில், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தாயகம் திரும்பும் இலங்கையர்களை எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், நாடு திரும்புவோர், போர்க்காலச் சூழலில் நாட்டிலிருந்து சென்று, தாம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் வசித்தமைக்கான சான்றுப்பத்திரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில், அந்த நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக, தாயகம் திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிலர், வானூர்தி நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலைப்பாட்டை ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான UNHCR உம் ஆட்சேபித்திருந்தது. இந்த பின்னணியிலேயே, குடிவரவு, குடியகல்வு சட்டத்திலுள்ள நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார். https://www.ilakku.org/steps-to-allow-those-who-have-illegally-traveled-abroad-to-enter-the-country-without-hindrance/
  9. வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி 30 Jan, 2026 | 12:07 PM அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே சுமார் ஆறு ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனம் வியாழக்கிழமை (ஜன 29 ) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஷான் டஃபி, 2019 முதல் நடைமுறையில் இருந்த விமானத் தடையை உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார். வெனிசுவேலலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என அவர் உறுதியளித்துள்ளார். 1987 முதல் வெனிசுவேலாவில் இயங்கி வந்த இந்த நிறுவனம், அரசு ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் தினசரி விமான சேவைகளை ஆரம்பிக்கும். இது வணிகம், சுற்றுலா மற்றும் மனிதாபிமானப் பயணங்களுக்கு உதவும். இந்த மாத தொடக்கத்தில் (ஜன 03), அமெரிக்க இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் உடனடியாகத் தொடங்காது. எஃப்.ஏ.ஏ (FAA) மற்றும் டி.எஸ்.ஏ (TSA) ஆகிய அமைப்புகள் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே விமானங்கள் இயக்கப்படும். இதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளின் வான்பரப்பில் பறக்க விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளையும் அமெரிக்கா தற்போது விலக்கியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், யுனைடெட் ஏர்லைன்ஸ் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. https://www.virakesari.lk/article/237395
  10. யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு! 30 Jan, 2026 | 11:53 AM யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியவேளை அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவு படுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும். அதே போல் காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வரும் அதே வேளை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டாலும் அதனுடைய அபிவிருத்தி பணிகளில் இடை நடுவில் விடப்பட்ட நிலையில் நாட்டினுடைய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்க அதனை மேற்கொள்வதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளார். அதேபோல யாழ் கொழும்புத் துறை இறங்கு துறை மற்றும் குறிக்காட்டுவான் துறை அபிவிருத்திகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும். எது அரசாங்கம் நாட்டில் வாழுகின்ற சகல இன மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அரசாங்கமாக ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்த விடயம். எமது அரசாங்கத்தின் பயணத்தை தடுத்த நிறுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள் காரணம் கடந்த காலங்களைப் போல திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக துடிக்கிறார்கள். இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவு பாதை இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள் அது அவர்களின் அரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலை மீண்டும் புத்துயிர் படுத்துவதற்கே. ஆகவே வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எமது அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளையும் தொடர்சியாக முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/237396
  11. திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு 30 January 2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்தார். இதற்கமைய, தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக தீர்ப்பு தயாராகும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 02) அதனை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதியரசர் தெரிவித்தார். திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியது தொடர்பான சர்ச்சையையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்தத் தேரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/443569/trincomalee-buddha-statue-issue-verdict-on-the-writ-petition-of-the-theras-postponed-until-next-month
  12. திருமதி அழகிப் போட்டியில் இலங்கை அழகிக்கு வெற்றி அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இப்போட்டி இலங்கை நேரப்படி வௌ்ளிக்கிழமை (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது. இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/திருமதி-அழகிப்-போட்டியில்-இலங்கை-அழகிக்கு-வெற்றி/175-371771
  13. ⚖️ கெஹெலிய பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! adminJanuary 30, 2026 இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜி.எம். நிஹால் சிசிர குமார எனப்படும் தொழிலதிபர் ஆவாா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 30 மில்லியன் ரூபாயை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றியதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக இவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த நிதி மோசடி விவகாரமும் அவர் மீதான பிடியை முறுக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிஹால் சிசிர குமார ஊடாக முன்னெடுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பரிமாற்றம் ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கருதுகிறது. இது போன்ற இன்னும் பல ‘நிழல்’ பரிமாற்றங்கள் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளதா என விசாரணை தீவிரமடைந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சர்வதேச காவல்துறையினாின் (Interpol) உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிரான ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த கால அமைச்சர்களின் பல நிதி விவகாரங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/227935/
  14. சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு 29 January 2026 2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 545 முறைப்பாடுகளும், பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து 231 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. அத்துடன் 38 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள், 3 கருக்கலைப்புகள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் தொடர்பாக 150 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 20 சிறுவர்கள் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் குறித்து 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுத் தாய்மார்கள் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hiru Newsசிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவ...சிறுவர் பாதுகாப்பில் நெருக்கடி: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு . Most visited website in Sri Lanka.
  15. சுண்ணக்கல் அகழ்வால் பரபரப்பான தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடக்கு யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்மராட்சி பிரதே செயலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் தலைமையில் நேற்று (28) குறித்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் இக்கூட்டத்தின் போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுதல், பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkz4tktf04klo29nmv4km5zg
  16. கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும் மொஹமட் பாதுஷா வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருகின்றனர். கிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகம், எண்ணெய்க் குதங்கள், சுற்றுலா சார் வளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் குறி மேலோங்கியிருப்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான். ஆனால் மக்கள் பெரிதாக இதில் அக்கறை கொண்டாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் வடக்கு போன்ற சில மாகாணங்களுக்கு கொடுக்கப்படுகின்ற அளவுக்கு முக்கியத்துவம் கிழக்கிற்குக் கொடுக்கப்படுகின்றதா என்பது ஒரு ஐயப்பாடாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஒப்பீட்டளவில் வட மாகாணத்திலேயே இந்த பாதிப்பு அதிகமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள்; வருடக் கணக்காக உரிமை பற்றியே பேசி வருகின்ற ஒரு பின்புலத்தில் வடக்கின் பல பகுதிகளில் வாழ்வாதார உதவிகள் தேவையான மக்கள் இன்றும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் சற்று முன்கூட்டி இடம்பெற்றமையால் மக்கள் வாழ்வில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் அபிவிருத்திகள், நலனோம்பு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இருக்கவே செய்கின்றார்கள். இந்த விடயத்தில், வடக்கையும் கிழக்கையும் விட மலையக தோட்டப்புற மக்கள்தான் அதிகமாகப் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு கிழக்கு மாகாணத்திற்குப் பல அபிவிருத்தித் திட்டங்கள் வந்தன. கிழக்கு விடுக்கப்பட்ட பிறகு அதாவது 2007ஆம் ஆண்டிலிருந்து இது இன்னுமொரு பரிமாணத்தை எடுத்தது. ஆனால், ஒப்பீட்டளவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகக் கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை. வீதிகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் நீண்டகால நோக்கிலான செயற்றிட்டங்கள், சமூகத்திற்குப் பரவலாகப் பயன்படக் கூடிய பாரிய முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறைவாகும். அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இதோ இந்தப் பிரதேசத்தை துணையாக, சிங்கப்பூராக மாற்றப் போகின்றோம் என்று வாயால் வடை சுட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களே தவிர, கிழக்கில் இரு முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தவிர, மற்ற யாருமே குறிப்பிடத்தக்க அபிவிருத்திகளைக் கொண்டு வரவில்லை. சமகாலத்தில், தமிழ் அரசியல்வாதிகள் வடக்கைப் போல, கிழக்கிலும் உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக முன்கொண்டு செல்வதற்குத் தவறி விட்டனர். அபிவிருத்தி திட்டங்களுக்கான அழுத்தங்களையாவது அவர்கள் கொடுக்காமல் விட்டதால் அவர்கள் ஊடாக அபிவிருத்திகள் பெரியளவில் கிழக்கிற்கு வந்து சேரவில்லை எனலாம். இப்போது, நிலைமைகள் சற்று மாறி வருகின்றது. புதிய அரசாங்கம் எல்லா மக்களுக்கும் அபிவிருத்தியை சமமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கின்றது. இருப்பினும், ஒரு காலத்தில் கிழக்கிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவதில்லையா என்ற சந்தேகம் எழவே செய்கின்றது. ஆனால், வேறு அரசியல் மற்றும் பரப்புரை சார் காரணங்களுக்காக வட மாகாணத்திற்கு இப்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதான ஒரு தோற்றப்பாடு, பிம்பம் கட்டியெழுப்பப்படுகின்றதா? என்றும் அந்த விடயத்தில் கிழக்கு இரண்டாம் பட்சமாக நோக்கப்படுகின்றதா? என்பதும் ஒரு சாதாரண பொது மகனுக்கு எழுகின்ற சந்தேகமாகும். தமிழ் மக்களை அரவணைக்க வேண்டிய தேவையும் அதனூடாக சர்வதேச சமூகத்தை ஆசுவாசப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் கடந்த அரசாங்கங்களுக்கு இருந்தது. 13ஆவது திருத்தம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு என்றெல்லாம் ஒரு படத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்கள். அந்த நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்திற்கும் ஏற்பட்டிருப்பது யதார்த்தமானதே. இந்தப் பின்னணியில் ஒரு அவதானிப்பு இருக்கின்றது. அதாவது, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதும், தற்போது, அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருக்கின்ற போதும், வடக்கிற்கான விஜயங்கள் கிழக்கிற்கான விஜயங்களைவ விட அதிகமாக இடம்பெற்றதை, இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அரசுக்கு எதிரான தமிழ்த் தரப்பின் அழுத்தத்தைக் குறைப்பது, இந்தியாவைக் கையாள்வது, தமிழ் மக்களை மனம் குளிரச் செய்வது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு மாகாணத்திற்கு முக்கியத்துவம், அந்த நிர்ப்பந்தம் இல்லாத மாகாணத்திற்கு வேறு ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றதா என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. வடக்கிற்கு அபிவிருத்தி செய்தால் எமக்கும் தர வேண்டும் என்று பொறாமைக் கண்ணுடன் கிழக்கு மக்கள் கேட்கின்றார்கள் என்று இதனைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் அதிக அபிவிருத்திகள் இடம்பெற்றபோது, நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்கள் எங்களுக்குத் தாருங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. கிழக்கில் அபிவிருத்திகள் பெருவீச்சில் இடம்பெற்றபோது, வடக்கு, மலையக மக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்களே தவிர, விமர்சிக்கவில்லை. எனவே, இப்போது வட மாகாணத்திற்கோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளுக்கோ அதிக கவனம் செலுத்தப்படுவது கிழக்கு போன்ற ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சந்தோசமான செய்திதான். ஆனால், அதே கவனம் தங்கள் மீது ஏன் செலுத்தப்படவில்லை என்று அவர்களது மனக் கிடக்கை நியாயமானதுதானே.?! வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவுக்கு வாழ்கின்றனர். அங்கு நடக்கின்ற விடயங்கள் சர்வதேச முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இதில் மக்கள் சேவைக்கு அப்பால் ஆளும் கட்சிக்கு ஒரு அரசியலும் இருக்கின்றது எனலாம். கிழக்கில் நிலைமைகள் வேறு மாதிரி உள்ளன. கிழக்கு மாகாணம் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமாகும். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிங்களவர்களும் கணிசமாக உள்ளனர். எனவே, வடக்கில் செய்கின்ற அரசியலைக் கிழக்கில் அதே பாணியில் செய்ய முடியாத ஒரு சிக்கல் கடந்த அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே என்.பி.பி. அரசாங்கமும் இருப்பதாக கருதுவதற்கு இடமுள்ளது. எது எப்படியாயினும், நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக பகிரப்படப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் வடக்கும், கிழக்கும் இரு கண்கள் போன்று பார்க்கப்பட வேண்டும். கிழக்கிற்கும் அபிவிருத்திகள், அரச அலுவலகங்கள் வர வேண்டும். பாரிய செயற்றிட்டங்கள், முதலீடுகள் கொண்டு வரப்பட வேண்டும். வடக்கைப் போல, கிழக்கிற்கும் அரச தலைவர்கள், அமைச்சர்கள் அடிக்கடி விஜயம் செய்து மக்களைச் சந்திக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வருடங்களாக அபிவிருத்தியில் பாரிய தேக்க நிலை ஒன்று உருவாகியுள்ளது. மக்களின் காணி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடக்கிற்குக் கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்திற்குக் கொடுக்கப்படுவதாக ஆறுதல் கொள்ள முடியாத நிலைமைகளே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் சுமார் 75,000 ஏக்கர் காணிகளின் பிரச்சினைகள் உள்ளன. அவ்வாறே தமிழ், சிங்கள மக்களுக்கும் காணிப் பிணக்குகள் உள்ளன. கிழக்கைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். பல நூறுபேர் ஒவ்வொரு வாரமும் கடவுச்சீட்டு எடுப்பதற்காக நெடுந்தூரம் செய்கின்றனர். அப்படியிருந்தும் ஏன் கிழக்கில் ஒரு அலுவலகமாவது இதுவரை திறக்கப்படவில்லை? கிழக்கு மாகாணத்திலும் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம் நிறுவப்படுவதுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களும் தொழில்பேட்டைகளும் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பெரிய கனவுகளோடும் பெரும் பொருட்செலவிலும் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பலனில் கால்வாசியைக் கூட பெற்றுத் தரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றுக்கும் உதவாத ஒரு செயற்றிட்டமாக மாறிக் கொண்டிருக்கின்றது. எனவே, ஏனைய துறைமுகங்களை மேம்படுத்துவது போல, அனுர அரசாங்கம் ஒலுவில் துறைமுகத்தையும் கண்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. திருகோணமலை துறைமுகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்தியா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கை அதிகரிக்க விடாமல் தடுப்பதுடன், நமது மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் இத்துறைமுகமும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். வாழைச்சேனை காகித ஆலை, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை, ஹிங்குரான சீனித் தொழிற்சாலை மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என கிழக்கில் பல தொழிற்சாலைகள் ஒன்றில் மூடப்பட்டுள்ளன அல்லது தூர்ந்து போயுள்ளன. இவற்றை மறுசீரமைக்கவும் இதுபோன்ற திட்டங்களைக் கிழக்கிலும் அமுல்படுத்தவும் வேண்டிய கடப்பாட்டைச் சமத்துவம் பேசும் என்.பி.பி. அரசு கொண்டுள்ளது. கிழக்கிற்கான புகையிரத பாதையை பொத்துவில் வரைக்கும் விஸ்தரிப்பதற்கான செயற்றிட்டத்தை அனுர அரசு மேற்கொள்ளுமாயின், அம்பாறை மாவட்ட மக்கள் அளித்த வாக்கின் பலனை அடுத்த தலைமுறையிலும் உணர்வார்கள். இன்று நாட்டில் எத்தனையோ அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றைக் கணிசமான வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டம் முடிவடைந்து விட்டது. ஆனால், பெயருக்காவது கிழக்கு நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் என்ற ஒன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தவில்லை. எனவே கிழக்கில் உள்ள மக்கள் சுமார் 200 கிலோ மீற்றர் பயணித்தே குருணாகல் அல்லது மாத்தறை நெடுஞ்சாலையில் ஏற வேண்டியிருக்கின்றது. கிழக்கு மக்களுக்கும் இதன் தேவைப்பாடு உள்ளது என்பதை இந்த அரசாங்கமாவது உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனக் கிழக்கு மக்கள் கருதுவது நியாயமில்லை என்று எந்த நியாயவாதியாவது கூற முடியுமா? https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கும்-கவனிக்கப்பட-வேண்டும்/91-371643
  17. ’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீதான-தாக்குதலுக்கு-துணைபோக-மாட்டோம்/50-371716
  18. அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது adminJanuary 29, 2026 அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. அதனால் அவர்களை கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டு , அதனை குழுக்கள் கூடாக கண்காணிக்கின்றோம் என தெரிவித்தார். குறித்த உறுப்பினரால் சபையில் கடுமையான அமளி ஏற்பட்டு , குறித்த உறுப்பினரின் கருத்துக்கு தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தமது கண்டனங்களை சபையில் பதிவு செய்தனர். பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் 20 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அந்நிலையில் , பிரஜாசக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227802/
  19. அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு கண்டனம். adminJanuary 29, 2026 மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது. பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும். பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும். அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது . பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன் தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/227804/
  20. எனக்கு இப்படியான பொறுக்கி நண்பர்கள் இல்லை என்பதால் வீடியோ ஒன்றும் வரவில்லை! மேலும் பிரித்தானியா age verification ஐ கட்டாயம் என ஆக்கியுள்ளதால் சில பிரபலமான/பிரபலமற்ற பலான தளங்கள் எல்லாம் பார்க்கமுடியாது!🙁 👆🏿
  21. தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு செவ்வாய், 27 ஜனவரி 2026 09:10 AM தொண்டமானாறு - துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அந்நிகழ்வில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , பருத்தித்துறை பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், கிராமசேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://jaffnazone.com/news/54588
  22. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா.! Vhg ஜனவரி 26, 2026 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (25.01.2026) ஆம் திகதி திகதி நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.battinatham.com/2026/01/blog-post_791.html
  23. ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு 27 Jan, 2026 | 12:47 PM ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் பல இடங்களில் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பகுதிகளில் இந்த மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன. நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, ஈரான் மத்திய வங்கியின் ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள், அதிகரித்த பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெற்ரோல் விலை மாற்றம் ஆகியவையே தற்போதைய நெருக்கடிக்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் ஈரானில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல பகுதிகளில் இணைய சேவையையும் துண்டித்துள்ளது. இதனிடையே, ஈரானில் ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இதுவரை 6,126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். நிலைமை சீரடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், ஈரானின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனம் செலுத்தி வருகின்றன. https://www.virakesari.lk/article/237133
  24. இந்தியாவின் 77வது குடியரசு தின நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ உரை! 27 Jan, 2026 | 02:20 PM இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் (KIIT) நடைபெற்ற இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உரையாற்றியுள்ளார். இதன்போது, நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும், 'டிட்வா' சூறாவளி பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இருந்து இந்தியாவின் முன்னேற்றங்களை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இதன்போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே நிலவும் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கலாசாரத் தொடர்புகளையும் நாமல் நினைவு கூர்ந்தார். விளையாட்டுத் துறையில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது பதவி அல்ல; அது ஒரு பொறுப்பு. பொதுவான இலக்குகளை அடைவதற்காக மற்றவர்களை ஊக்குவிக்கும் ஒரு செயல்முறை என மாணவர்களிடையே நாமல் கூறினார். https://www.virakesari.lk/article/237145
  25. கிளிநொச்சியில் ரயில் விபத்தில் முதியவர் பலி! 27 Jan, 2026 | 02:49 PM கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237150#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.