Everything posted by கிருபன்
-
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை
மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை 08 Mar, 2026 | 02:13 PM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் கூறுகையில், இலங்கையின் கீழ் நாட்டு தேயிலை உற்பத்தியில் 150 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 10 முதல் 15 வீதமான உயர் ரக தேயிலை ஈரானுக்கு அனுப்பப்படுகின்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரான் தேயிலை கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்துகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடருமானால் வாராந்தம் முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும். இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 வீதமான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்துறை மூலமே வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். தேயிலை விற்பனை பாதிக்கப்படுவது இவர்களது வாழ்வாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் என்றார். மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு வான்வழிப் பயணங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் வழிப் போக்குவரத்துகளும் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதுடன் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பிப்பது கடினம். இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார சவால்களை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/240451
-
எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர்
எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர் இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்." https://adaderanatamil.lk/news/cmmhdu8tn000k356pk4n2bnxq
-
குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்
குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம் தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது. அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmhbem07000f356p4bcih8bt
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
டிக்கோயா விவகாரத்தில் அதிரடி திருப்பம்: 24 மணிநேரம் கெடு எஸ்.கிருஷ்ணா டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் உடலுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அவமதிப்பு மற்றும் துஷ்பிரயோக விவகாரம் மலையகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (08) அன்று முன்னெடுக்கப்படவிருந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா முக்கியஸ்தர்கள் நேரடியாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் 24 மணிநேரத்திற்குள் தெளிவான பதிலளிப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்துள்ளார். சுகாதார அமைச்சினால் முறையான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது." "குற்றச்சாட்டுக்கு உள்ளான மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆளுந்தரப்பு எம்.பி. கூறுகிறார். இது எந்த வகையில் நியாயம்? அவர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்." "இவ்வாறான ஒரு கொடூரமான சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் நடந்திருந்தால் அதன் தாக்கம் எப்படியிருந்திருக்கும்? ஜனாதிபதி இந்த விவகாரத்தில் நேரடியாகக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்." "இது தேர்தல் காலம் கிடையாது. அநீதிக்கு எதிராக உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு கேட்பது எப்படித் தவறாகும்? அமைதிவழிப் போராட்டத்திற்குத் தடை விதித்தது ஏன்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், திங்கட்கிழமை (09) வரை பொறுத்திருப்பதாகத் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மலையகம்/டிக்கோயா-விவகாரத்தில்-அதிரடி-திருப்பம்-24-மணிநேரம்-கெடு/76-373552
-
யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்!
யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்! adminMarch 7, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையினை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2026/230162/
-
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்! adminMarch 7, 2026 பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட “சிவகங்கை” பயணிகள் படகு, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பின்னர், 92 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான மக்கள்-to-மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முக்கியமான கடல் போக்குவரத்து இணைப்பாக இந்த சேவை கருதப்படுகிறது. சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணிகள் படகு சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த மற்ற 6 நாட்களிலும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வழி பயணத்திற்கான கட்டணம் 28,500 இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/230174/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி நடாத்துபவரின் விதிகளுக்கமைய போட்டியாளர்களுக்கு வாக்கெடுப்பு நடாத்தும் உரிமை கிடையாது! அத்தோடு விதி 240, துணை விதி 3034, உபவிதி 1003 இன்படி போட்டி நடாத்துபவரின் அதிகாரங்களுக்கு அமைய ஏற்கனவே குறிக்கப்பட்ட வகையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்🤪
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இன் இறுதிப் போட்டி நாளை மறுதினம் ஞாயிறு (08 மார்ச்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத் நியூஸிலாந்து அணி எதிர் இந்திய அணி NZ எதிர் IND ஒருவரும் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 14 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 09 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு வாய்க்குமா அல்லது எல்லோருக்கும் நியூஸிலாந்து அணி முட்டைகளைப் பரிமாறுமா? குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2026 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்! முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை. இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
- IMG_6082.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூஸிலாந்து கப் தூக்கினால் ஒருத்தருக்கும் புள்ளி இல்லை😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இன்று வெல்லும் 😀 ஆனால் இறுதிப் போட்டியில் சறுக்கும்🤪
-
முதலைகளின் தீப்பாடல் - நீலாவணை இந்திரா
முதலைகளின் தீப்பாடல் நீலாவணை இந்திரா ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை சாதாரண உலோகக்குண்டுகள் தான், ஆனாலும் அதிவேகத்தோடு அவை, எனது இதயத்தை துளைத்து முதுகினூடாக வெளியேறும் போது வெடிமருந்து நிறைந்த கைவண்டியில் நான் தவறி விழுந்தேன். எனது உடல் சுக்கல் சுக்கல்களாக வெடித்துச் சிதற, எனது தலை மட்டும் உடலை விட்டுப் பிரிந்து தனித்து விழுந்தது. இது எல்லாம் நடந்து முடிந்த பின்னரும், கொழும்பின் அடிமைத் தீவைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும் எனது ஆன்மாவிற்கு சொல்ல வேண்டிய கதையொன்று உள்ளது. அந்தக் கதையில் இந்த அடிமையானவன் செத்துப் போனான் என்ற முடிவை வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, என்பதற்காகவே நான் மரித்துவிட்ட செய்தியை ஏற்கனவே உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். நான் ஒரு தேர்ந்த கதைசொல்லியல்ல. ஆனாலும் இந்த துயர்நிறைந்த கதையை சொல்லியே தீரவேண்டும். முன்னும் பின்னுமாக எனக்குத் தெரிந்த உங்கள் மொழியில், இந்தக் கதையை எனது ஆன்மா உங்களுக்குச் சொல்ல விளைகிறது. அவைகளைக் கோர்த்து உங்களுக்குப் புரியும்படி கதையாக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்… இப்போது எனது கதை ஆரம்பமாகின்றது. 1 மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவு நான் மரித்துப் போன அந்த ராத்திரியில் கொழும்பு முழுவதும் கடும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளும் அதன் வெளிப்புறமும் ஆளரவமற்ற சூழலுடன், மந்தமான அமைதி நிலவியது. அந்த நிமிடங்களில் கொலைவெறித் தாக்குதலொன்றை நிகழ்த்தி முடித்துவிட்டு, கீழே கிடந்த துருப்பிடித்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன். குள்ளச் சிப்பாயின் நசுக்கப்பட்ட தலையிலிருந்து வடிந்த குருதி பேர வாவியின் நீரோடு சங்கமித்த தருணத்தில் எனது முகத்தை துடைத்தபடி நிமிர, புயல் வீசுவதற்கான அறிகுறியாக அம்மயான அமைதி மாற்றமடைந்தது. உருக்குச் சட்டத்தினையும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு இருளோடு இருளாக மறைந்து நின்ற வேளையில் கூட லூக் ஹாவ்கின்ஸ் உடைய முகமே எனக்குள் தோன்றி மறைந்தது. கொடூரமான ஒரு வெள்ளையன் என்றால் அது அவனாகத்தான் இருக்க முடியும். ‘டோ’ வகைக் கப்பல்களின் கேப்டனாக அவன் இருந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்த அனைத்து அடிமைகளையும் ஸ்பானிய நாட்டிற்கும், தென் பிராந்திய நாடுகளுக்கும் கடத்தி பெரும் பணமீட்டிக் கொண்டிருந்தவன், கள்ளிக் கோட்டைத் துறைமுகத்தில் தங்கியிருந்த பறங்கியினருக்கும், கொழும்பில் கோட்டை புனரமைப்பில் ஈடுபட்டிருந்த சக வெள்ளையர்களுக்கும் அடிமைகளை விற்றுத் தீர்த்தான். அவன் வாங்கி வந்த மலாய் அடிமைகளையும், இங்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகள் கட்டும் பணிகளுக்காக விற்கத் தொடங்கினான். நெடுவலாக வளர்ந்திருக்கும் ஹாவ்கின்ஸ், கொஞ்சம் பருமனான உடலுடையவன். அவனது பகுதி சிதைந்த இடது கண்ணின் உருட்டலோடு அடிமைகளை கசக்கிப் பிழிந்து காரியம் சாதிப்பதில் வல்லவனாக இருந்தான். செம்பட்டை மயிர்களோடும், நீளமான உடைகளோடும் மிடுக்கான அதிகாரத் தோரணையுடன் நடந்து வரும் போது தனது வளைந்த தொப்பியினை கைகளுக்குள் திணித்துக் கொள்வான். சிறிய ரக இரும்புத் துப்பாக்கியொன்றை தனது இடுப்பில் எப்போதும் வைத்துக் கொள்பவன், அதை எந்த அடிமைகள் மீதும் பயன்படுத்தியதில்லை. அவனுக்கு ஒரு அடிமை செத்தாலும் அது மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமல் போய்விடும் என்பதால் எவ்வளவு சித்திரவதைகளைச் செய்கின்ற போதும், அவன் அடிமைகளுக்கு மரண தண்டனையை வழங்குவதில்லை. முள் கொண்ட சவுக்கினால் அடித்துச் சித்திரவதை செய்த பின்னர் கடல் நீரினை காயங்கள் மீது ஊற்றி, கதறித் துடிக்கும் அடிமைகளைப் பார்த்து ரசிக்கும் வெறி கொண்டவன். பின்னர் அடிமைகளின் கைகளையும் கால்களையும் சங்கிலியினால் பிணைத்து கப்பலின் அடித்தள இருட்டறைக்குள் அவர்களை வாரக்கணக்கில் அடைத்து வைத்து நத்தைகளை தின்ன விடுவான். இவன் செய்யும் சித்திரவதைகளுக்கு மரணமே பெரிது என்று நடுக்கடலில் குதித்துவிடும் அடிமைகளையும் சுறா மீன் தூண்டிலால் கொழுவி எடுத்து மீண்டும் கப்பலின் அடித்தளத்தில் போட்டு சித்திரவதை செய்வான். முக்காசாவையும் என்னையும் இப்படிச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியே இந்த தீவிற்கு அழைத்து வந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் துறைமுகத்திற்குக் கப்பல் கட்டும் பணிகளுக்காக எங்களை அழைத்து வந்த வெள்ளையன் மலிவான விலையில் எங்களை ஹாவ்கின்ஸிற்கு விற்றுவிட்டான். சங்கிலியில் பிணைக்கப்பட்ட நிலையிலேயே இந்த அடிமைத்தீவிற்குக் கொண்டு வரப்பட்டோம். அவர்கள் எங்களைச் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதற்குக் காரணமிருந்தது. எங்களைப் போன்றே அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள், கோட்டையின் காறை பெயர்ந்த மதிற் சுவர்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எங்கள் எஜமானர்களான வெள்ளையர்கள், அடிமைகளாக வந்தவர்களின் கைவிலங்குகளை அகற்றியே அவர்களை வேலை வாங்கினர். சந்தர்ப்பம் கிடைத்த நாளொன்றில் கோட்டைக்குள்ளிலிருந்து தப்பிய அடிமைகள், வெள்ளைப் பிரபுவின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தி துறைமுகத்தை நோக்கி ஓடிய வேளையில் பிடிபட்டனர். அதிலிருந்து அடிமைத்தீவிற்கு வெளியில் அவர்களை எப்போதும் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதே சட்டமாக்கப்பட்டது என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அடிமைத் தீவைச் சுற்றிப் பேர வாவி ஓடிக்கொண்டிருந்தது. ஆழமான அவ்வாவியினூடாக கொழும்பின் பிற பகுதிகளை அடைய முடியாது. வடக்குத் திசையில் கோட்டையும், வர்த்தகக் கட்டிடங்களும், கொழும்புத்துறைமுகமும் காணப்பட்டன. அதில் வெள்ளைப்பிரபுக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர். அவர்களது குடியிருப்புகளும் மாளிகையும் கூட கோட்டைக்குள் பாதுகாப்பான இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆழமான பேர வாவியைச் சூழ சிப்பாய்களுடன் கூடிய காவற் கோபுரங்கள் குறைவாகவே இருந்தன. அதற்கும் மேலாக வாவியினுள் உப்பு நீர் முதலைகள் அட்டகாசம் செய்து திரிந்தன. முதலைகள் என்றால் ஒன்று இரண்டு அல்ல, அதிகமானவை மிக அதிகமானவை. நீளமான உடலுடன் ஊத்தைப் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த முதுகுடன் அவை கோட்டையைக் காவல் செய்தன. அவைகளைப் பற்றி பின்னர் சொல்கிறேன். எங்களைப்பற்றி முதலில் சொல்லிவிடுகின்றேன். தினமும் காலையில் பேர வாவியைக் கடந்துவரும் வள்ளங்களில் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் வருவார்கள். நாங்கள் வரிசைகளில் நிற்போம். அங்கு கறுப்பு நிறத்திலும், பழுப்பு சேர் மஞ்சள் நிறத்திலும், பொதுவான கோப்பிக் கொட்டகையின் நிறத்திலும் அடிமைகள் காத்திருப்பர். ஒவ்வொருவராக சங்கிலியில் பிணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திற்கு, இதோ செத்து மிதக்கின்றானே அந்தக் குள்ளச் சிப்பாய் வருவான். அவன் ஒரு மலாய்க்காரன். டச்சுக்காரர்கள் காலத்திலிருந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக சிப்பாய்களாக இருக்கின்றனர். வலுவான தேகமுடையவன். பூவின் நறுமணம் வீசும் அத்தரினைத் தனது நீண்ட தாடியில் பூசிக்கொண்டு நாற்றம் பிடித்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டு அலைபவன். அடிமைகளைப் பின்னங்கால்களில் உதைத்து, கீழே தள்ளி, அவர்களில் தலையில் முஷ்டியால் பலமிக்க மட்டும் அவன் அடிக்கும் போது சர்வமும் மறைந்துவிடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் என்னில் பாதியளவு உயரமே இருக்கும் அவனிடம் எப்படி இவ்வளவு காட்டுயானையின் பலமிருக்கின்றது என்பதை நான் ஒவ்வொரு பொழுதிலும் யோசித்ததுண்டு. அவனைக் காட்டுயானை என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் கோடை நிலவும் போது, கொங்கோ காடுகளை அடைவதற்காக, நாடுகளைக் கடக்கும் யானைகள், வழியில் தென்படுகின்ற பெருங்காட்டை அடித்து, உடைத்து, நொறுக்கித் தனக்கான வழியை உருவாக்கிக் கொள்வது போலத்தான் இவனும் எங்களை நொறுக்கித்தள்ளி மூக்கை உடைத்துப்போடுவான். அவனது சித்திரவதைக்கு ஆளாகும் போதெல்லாம் முக்காசா, அக்கா…. என்று வீறிட்டு உடைந்து அழுவான். அந்தத் தருணங்களில், முடோனியின் ஞாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கும். அடிமைத்தீவின் குடிசைக்குள் உழலும் போதெல்லாம் நான் முடோனியை நினைக்காத நாட்களே இல்லை. அவளுக்கு நான் நினைத்ததைப் போன்றே ஆண் குழந்தை பிறந்திருக்கும். இங்கு வந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன என்று கூட ஞாபகமில்லை. எங்கள் நாடுகளில் தெரியும் வேட்டைக்காரன் நட்சத்திரத் தொகுதி இந்த அடிமைத்தீவின் வானத்திலும் தெரிந்தது. அந்த வானத்து வேட்டைக்காரன், ஹாவ்கின்ஸ் போல கைத்துப்பாக்கியோடு அல்லாமல் பெரும் வாளுடன் வானத்தில் நிற்கின்றான். அதன் தோற்றத்தையும், பெயர்வையும் எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டே வருடங்கள் ஓடுவதை நான் கணித்துக் கொண்டிருந்தேன். இந்த நாட்களிலெல்லாம் முடோனி, என் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டேயிருந்தாள். எங்களுக்கென்று சொந்தமாக ஒரு நிலமிருந்தது. அதில் எனது மகன் கருத்த சுருள் சுருள் தலைமயிருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவள் சோளம் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் பருத்திக் காடுகளில் இருந்து எமது ‘சாவோ’ மக்கள் பாடிய படியே குடிசைகளை நோக்கி வருகின்றனர். முடோனி பாடல் வருகின்ற திசையை நோக்கி ஓடோடிச் சென்று தன் நியதிடி இசைக்கருவியின் தந்திகளை அதிரச் செய்கிறாள். அது காற்றில் கரைந்து அடிமைத் தீவெங்கும் பரவுகின்றது, கூடவே குள்ளச்சிப்பாயும் ஓடி வந்து பின்னங்காலில் மிதித்துத் தலையில் ஓங்கி அடிக்கவே, விழிப்பு வந்துவிட குடிசையின் விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். கர்ப்பமான நிலையில் அவளை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனாலும் அடிமையாக இத்தீவில் உழலுவேன் என்று எப்போதும் நான் நினைத்ததேயில்லை. (மன்னிக்கவும் நான் சொல்ல வந்ததை மறந்து என்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டுவிட்டேன்.) ஹாவ்கின்ஸைக் கொல்லுமளவிற்கான கோபம் இந்த அடிமைக்கு ஏற்பட்டதற்கான காரணம், வலுவாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல அடிமைத் தீவில் இருந்த அத்தனை பேருக்கும் அவனை இன்று இராத்திரிக்குள்ளேயே கொன்று கிடத்த வேண்டும் என்கிற ஆத்திரம் மேலிட்டது. அவன் வவ்வேயின் வாழ்வையே சிதைத்து வீசிவிட்டான். எனது கண்பார்வையிலே வளர்ந்த அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி எவ்வளவு கொடுமையானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமல்ல, அவனது பழுப்பு நிற மனைவிக்கும் அது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும். அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இருக்கப் போவதில்லை. ஏன் அடிமைத் தீவில் இருக்கும் எவருக்கும் அந்த நாள் சந்தோஷகரமானதாக இருக்கப் போவதில்லை. இந்தப் பாழாய்ப் போன வெள்ளையனுக்கும், குள்ளச் சிப்பாய்க்கும் இப்படியொரு கொடூர மனம் இருந்திருக்கும் என்பதை நான் கனவிலும் நினைத்தில்லை. இந்தக் கொடூரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் வவ்வேயின் கதையிலிருந்தே அதை நான் கூறவேண்டும் என நினைக்கிறேன். 2 வவ்வேயின் கதை இந்த அடிமைத்தீவிற்கு எவ்வாறு நாங்கள் கொண்டுவரப்பட்டோமோ அப்படியே வவ்வேயும் இன்னும் சிலரும் அழைத்துவரப்பட்டனர். அவன் சிறுவனாக இருக்கும் போதே இங்கு கொண்டு வரப்பட்டுவிட்டான். காவி படிந்த ஊத்தைப் பற்களுடன் சாம்பல் கம்பளியொன்றை உடலில் சுற்றியபடி இந்த அடிமைத் தீவிற்கு அவன் வந்திறங்கிய நாட்களை என்னால் மறக்க முடியாது. உடலெங்கும் தீக்காயங்களுடனும், சித்திரவதை செய்யப்பட்ட நிண உடலுடனும் அவன் வந்திருந்த போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. பாவம், அவனிடமும் வார்த்தைகளிலிருக்கவில்லை. முக்காசாவின் குடிசைக்குள் வவ்வேயைத் தள்ளிவிட்ட குள்ளச் சிப்பாய் இவனைக் கட்டிட வேலைகளுக்காகத் தயார்படுத்து எனும் உத்தரவினை ஏவினான். அன்று முழுவதும் வானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு, என்னிடம் சொல்ல ஏதாவது உள்ளதா என்று பார்த்தேன். ஆனால், அவன் யாருடனும் பேசுவதற்குத் தயாராயில்லை. பசிக்கிறது, தண்ணீர் வேண்டும் இப்படி எதையும் அவன் கேட்கவில்லை. முக்காசா அவனை அழைத்த போதும் கூட தூரத்தில் கடற்கரைக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த காகங்களையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். சற்று நேரத்தில், மீளவும் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவான். தினமும் காலையில் வள்ளங்களில் ஏறி கோட்டைக்குள் வேலைக்குச் செல்லும் முன்பு, அடிமைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது. ஆளுக்கு ஓர் உருண்டை குரக்கன் களியும், பச்சை மிளகாயொன்றும் வழங்கப்பட்டன. அதை வாங்கவும் வவ்வே வரவில்லை. நான் முக்காசாவின் குடிசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘வவ்… வா…. வா….வவ்வவ்வவ்…..’ ‘குட்டி நாயே யாரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறாய்… இது அடிமைத் தீவு, இங்கு வந்தவர்கள் எல்லோரும் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும்…. இப்படியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு நீ வரவில்லை எழும்பி நட…. குரக்கன் களி தருவார்கள் தின்றுவிட்டு வள்ளத்தில் ஏறு….’ எனச் சினந்தான் முக்காசா. வவ்வேயிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அடிமைத் தீவில் இருப்பவர்கள் எல்லோருக்குமே குள்ளச்சிப்பாயின் கொடூர முகம் தெரியும். அவன் ஒரு வேலையைத் தந்து யாரும் செய்யாமல் இருந்தாலோ அல்லது மறந்து போனாலோ கூட, அவர்களை அன்று இரவு முழுவதும் சித்திரவதை செய்தே சாகடிப்பான். இது எதையும் உணராதபடிக்கு அவன் இருந்து கொண்டிருந்தது முக்காசாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வவ்வேயை எட்டி முதுகிலேயே உதைத்தவன். ‘உன்னை நான் அழைத்தேனல்லவா கழுதையே… நேற்றிலிருந்து தின்னவுமில்லை, குடிக்கவுமில்லை…. வானத்தையே விக்கி விக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே… எங்களைப் போன்றவன் தானே நீ… நான் பேசும் பாஷை உனக்குப் புரியவில்லையா?.. இது அடிமைத் தீவு. இங்கு நீ வேலை செய்துதான் ஆக வேண்டும். குள்ளச் சிப்பாய் வந்தால் உன்னைக் கொன்று குழியிட்டுப் புதைப்பான்… எழும்பி நட குட்டி நாயே… என்று அவனை உலுப்பினான். குரக்கன் களி தின்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நான் ஓடிச்சென்று முக்காசாவைத் தடுத்தேன். கண்கள் இரண்டும் குளமாகி நிற்க ஈனஸ்வரத்தில் வவ்வே… வவ்வவ்வவ்…. வா….. என்று அழுதபடியே விரல்களால் தனது நாக்கையும் காதையும் அசைத்து வவ்வவ்வா… என்றான். ஆம், அவனுக்குப் பிறப்பிலிருந்தே பேசவும் முடியாது, காதும் கேளாது என்பதை நான் அக்கணம் புரிந்துகொண்டேன். அவனுக்கு, அவனது நிலையைப் புரிய வைப்பதற்கு, எனக்குச் சில காலம் எடுத்தது. தினமும் முக்காசாவுடன் வேலைக்குச் செல்வதும் அங்குள்ள எடுபிடி வேலைகளைச் செய்து மீண்டும் திரும்புவதுமாக இருந்தான். ஒரு கட்டத்தில் முக்காசாவும், அவனும் நல்ல கூட்டாளிகள் போன்று ஆயினர். இந்த அடிமைத்தீவிற்குப் பழங்குடியினரின் எதுவித அடையாளங்களுமற்ற ஒரு அடிமையாகவே அவன் வந்து சேர்ந்தான். அழுக்கான தேகமுடையவன் ஆனால், அவனது கண்கள் மட்டும் மின்னல் வீச்சை போன்று இருப்பதால் மின்னல், முழக்கத்தை, மழையுடன் சேர்த்துத் தருகின்ற கடவுளது பெயரை அவனுக்கு வைக்க நினைத்தேன். ஆனால், அவனோ, யார் எதைக் குறித்துக் கேட்டாலும் வவ்வவ்வே… என்று ஊமை பாஷை பேசியபடியே அலைந்ததால், அவனுக்கு வவ்வே என்ற பெயரே அடிமைத் தீவு முழுவதிலும் நிலைத்துவிட்டது. எடுபிடி வேலைகளைச் செய்யும் அடிமையாகவே இருந்த வவ்வேயிடம் இன்னுமொரு திறமையும் இருந்தது. பேர வாவிக்குள் இருக்கும் முதலைகளைப்பற்றிப் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேனல்லவா… அதைக்குறித்துச் சொல்கிறேன்… கேளுங்கள்… அடிமைத்தீவைச் சுற்றியோடும் பேர வாவிக்குள் திரிகின்ற நீண்ட முதலைகளை வேட்டையாடும் பழக்கம் ஹாவ்கின்ஸிற்கு இருந்தது. சுறா மீன் தூண்டில்களில் மீன்களைக் கட்டி, வாவிக்குள் வீச அதை நோக்கி வரும் முதலைகளை அப்படியே கொழுவி கரைக்கு இழுத்து விடுவான். முதலையின் இறைச்சி சுவையாக இருப்பதாகவும், அது கோழி இறைச்சியைப் போல் மிருதுவானவை என்றாலும் ருசி அதிகமானது என குள்ளச்சிப்பாய் அடிக்கடி கூறுவான். வெள்ளைப்பிரபுக்களின் விருந்தில் முதலைக்கறி பிரதான இடம் வகித்தது. சேற்று முதலைகளைப் போலவே இருக்கும் பேர வாவியின் முதலைகள் அங்கு தங்குகின்ற பறவைகளையும், மீன்களையும் தின்று தின்று நன்கு கொழுத்திருந்தன. அவை அதிகளவில் இருந்த போதிலும் அவற்றைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாயில்லை. அவை மாலை வேளைகளில் மட்டுமே பெரும்பாலும் கரைக்கு வரும். தங்களது பெரும் வாய்களை ஆவென்று திறந்தபடி சூரியனை நோக்கித் தவமிருக்கும். இதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களது ‘சாவோ’ மக்கள் தீப்பாடலைப் பாடுவதைப் போன்றே அது இருக்கும். வாவியைச்சூழ கரையேறும் முதலைகள் சூரிய வெப்பத்தையும் அதன் ஒளியையும் உடலில் வாங்கிக்கொண்டு பெரும் பற்கள் தெரியும் படி இருக்கும் காட்சி தூரத்தில் இருந்து பார்க்கும் எவருக்கும் அச்ச உணர்வையே ஏற்படுத்தும். கரையில் இருக்கும் முதலைகள் அவ்வெளியில் சிறு சலனத்தை உணர்ந்தாலும் மீண்டும் தாவிக்குதித்து வாவியின் ஆழத்திற்குச் சென்றுவிடும். இவ்வாறு தந்திரம் கொண்ட முதலைகளை வேட்டையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. வவ்வே இதற்கொரு வழியைக் கண்டுபிடித்து குள்ளச்சிப்பாயிடம் விளக்கினான். அன்றிலிருந்து அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. சூரியன் மறைவதற்கு முன்பே ஹாவ்கின்ஸ் துப்பாக்கியுடன் வந்தான். குள்ளச் சிப்பாயும், வவ்வேயும் முதலை வேட்டைக்காகத் தயாராகியிருந்தனர். தடிகளைக் குறுக்காகக் கட்டி அதில் கோழி இறைச்சியைத் தொங்கவிட்டனர். அதன் கீழே மீன்பிடி வலைகள் விரிக்கப்பட்டன. கோழி இறைச்சியின் ரத்தத்தை அந்தக் கரையெங்கும் தெளிக்க அந்த இரத்த வாடையின் வீச்சம் பேர வாவிக்குள் இருந்த முதலைகளை ஒவ்வொன்றாக வெளி நோக்கி ஈர்த்தது. தூரத்தில் மரத்தோடு இருக்கும் பாறையின் மேலே துப்பாக்கியோடு ஹாவ்கின்ஸ் தருணம் பார்த்து அமர்ந்திருந்தான். சிறியது, பெரியது என முதலைகள் கோழியின் இறைச்சியைத் தின்பதற்காக வெளியேறி வந்தபடியிருந்தன. பெரும் முதலையொன்று தனது கால்களால் வலையை மிதித்தபடி, கொழுவி வைக்கப்பட்ட கோழியைக் கவ்வத் தலையுயர்த்திய அக்கணத்தில் ஹாவ்கின்ஸ் அதன் அடித்தாடையில் தோட்டாவை இறக்கினான். ‘டமார்’ என்ற சத்தம் அந்த அடிமைத்தீவு முழுக்க எதிரொலிக்க புரள நினைத்த முதலை வலையோடு சிக்கிக் கொண்டது. பாறை மறைவிலிருந்த வவ்வேயும், குள்ளச் சிப்பாயும் வலையின் கயிறுகளை இழுத்துப்பிடிக்க இன்னுமொரு வெடி முதலையின் தலையில் விழ, அன்றிரவு கோட்டைக்குள் பெரும் முதலை விருந்து நடைபெற்றது. அன்றிலிருந்து முதலைத் தூண்டில் செய்து அதற்கு வலை விரிக்கும் வேட்டையாளனாகிப் போனான் வவ்வே. வேட்டை இல்லாத நாட்களிலெல்லாம் கட்டுமான வேலைகளுக்கு முக்காசாவுடன் கோட்டைக்குள் சென்று சுவரை வெண்மையாக்கும் சுண்ணாம்புக் கலவையைத் தயார் செய்து கொடுப்பான். நாளாக நாளாக இந்த அடிமைத்தீவு அவனுக்குப் பழக்கப்பட்டுப் போனது. இதிலிருந்து விடுதலை இல்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பின்னர், இளைஞனான வவ்வே, காதலிக்கவும் கற்றுக் கொண்டான். பழுப்பு நிற அடிமைப் பெண்ணொருத்தியை காதலிப்பதாகக் கூறினான். அடிமைகளுக்கு இரவு உணவாக வழங்கப்படும் கோதுமை மாவில் அவர்கள் ரொட்டி சுட்டுக் கொண்டார்கள். வாரம் ஒரு முறை பாதிப் பேணி அளவிற்குக் கொடுக்கப்படும் கோதுமை மாவில் ரொட்டியைச் சுட்டு தண்ணீரில் நனைத்து உண்டார்கள். முக்காசா தான் எனக்கும், வவ்வேக்குமான ரொட்டிகளைத் தயாரிப்பது வழக்கம், பழுப்பு நிறப் பெண் அவனுக்காக ரொட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்தே அவள், வவ்வேயைக் காதலிப்பதை முக்காசா உணர்ந்து கொண்டான். இருவரும் கோட்டைக்குள் தேவாலயம் கட்டும் பணிகளுக்காக வள்ளமேறிய நிலையில், அங்குள்ள பாதிரியார் அவர்களுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். பாதிரியாரின் ஆலோசனைக்கு அமைய உலோகத்தட்டுக்களை வைத்து அவர்களுக்கென்றொரு குடிலும் அடிமைத் தீவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. வவ்வே…. வவ்வ… வவ்வவ்…. என்று தனது சந்தோஷத்தை அடிமைத் தீவு முழுவதிலும் கூவித் திரிந்தான். அவர்கள் இருவரும் தங்களது முதலிரவை அடிமைத்தீவிலே கழித்தார்கள். முடோனியும் – நானும் இதுபோலத்தான் எங்களது இரவுகளையும் ஒன்றாகக் கழித்தோம். அவளது ஞாபகங்கள் என்னை அன்று பெரிதும் வாட்டின. குடிசைக்குள் இருந்து வெளியே வந்து வானத்திலிருந்த வேட்டைக்காரன் நட்சத்திரத்தைப் பார்த்தேன். அப்போது வவ்வேயின் பழுப்பு நிறக் காதலி முயக்கத்தில் வெகுவாக ஆலிங்கனம் செய்தாள். அது எனக்குள் இத்தனை காலமும் மறைந்திருந்த காமத்தையும், முடோனியின் முகத்தையும், அவளது உடலையும், எங்களது பருத்தித் காடுகளையும், ‘சாவோ’ மக்களையும் ஒரு கணம் உதிர்த்துவிட்டுப் போனது. 3 கோடை காலம் – கிழக்கு ஆப்பிரிக்காவின் பருத்திக் காடு முடோனி காட்டு விலங்கொன்றிலிருந்து பெறப்பட்ட நரம்புகளை வலிமையான தனது கைகளால் இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். தீப்பாடல் பாடப்படும் போது நியதிடி இசைக்கருவியை வாசிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தவள், முக்கோணச் சட்டமொன்றின் வளைவில் தந்திகளை இணைத்துச் சுருதி சேர்த்துக் கொண்டாள். குழு நடனத்தை ஆடவிருந்த ஆண்கள் அனைவரும் சிவப்பு ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார்கள். முதுகிழவியின் இறப்பு ‘சாவோ’ மக்களிடையே கனத்த மனத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், இறந்தவர்களை மகிழ்வோடு அனுப்பி வைப்பதே எங்களது வழக்கமாயிருந்தது. எனது நண்பனான முக்காசா உடலெங்கும் சாம்பலைக் குழைத்துப் பூசியபடி, நடுவே மூட்டப்பட்டிருந்த பெருந்தீ அருகே தோன்றினான். அவன் தனது தாயின் ஆன்மாவைக் கடவுளிடத்தில் சேர்ப்பிப்பதற்கான தீப்பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பித்த உடனேயே குடி மக்கள் யாவரும் கைப்பிடியளவு தானியத்தோடு அந்த இடத்தை நெருங்கி வந்தனர். சிவப்பு ஆடை அணிந்த ஆண்கள் யாவரும் அவனைச் சுற்றி வட்டமாகத் தோன்றினர். முக்காசா தீப்பாடலின் முதற்கோவையான அழைப்புப் பாடலை மீண்டும் ஒரு தடவை உரத்த குரலில் கூவிக் கூவிப் பாடினான். முடோனி தந்திகளை அதிர்வுறச் செய்தாள். அது காற்றில் ஏற்படுத்திய அலைவுகளில் எனது மேனி சிலிர்த்தடங்கியது. கூடவே சிவோட்டி இசைக்கருவியும் ஊதப்பட அது ஆந்தையின் அழுகுரலைப் போல ஒலியெழுப்பியது. வட்டமாக நின்றிருந்த ஆண்கள் யாவரும் கால்களைத் தூக்கி நிலத்தை மிதித்தனர். கைகளைக் காற்றில் மெதுவாக அசைத்தனர். அவன் அழைப்புப்பாடலை நிறுத்தி முதுகிழவியின் பரம்பரை குறித்துப் பாடத்தொடங்கினான். மெல்ல மெல்ல பாடல் உருக்கமாக மாறிய வேளையில் முடோனி தனது நரம்புக்கருவியின் சில தந்திகளை அருட்டி அதற்கு ஏற்றாற் போல இசையளித்தாள். ஆண்கள் காற்றில் கைகளை அசைத்துக் கொண்டே ஆட்டத்தின் அடவுகளை மாற்றிக் குதிக்கத் தொடங்க, வட்டமான ஆட்டமுறைக்குள் தீ கனன்று கொண்டிருந்தது. இப்போது இறுதியாக வேகமாகப் பாடும் தீப்பாடல் தொடங்கியது. ஆண்கள் மேலும் கீழும் குதிக்கத் தொடங்க, பருத்திக் காடெங்கும் தீப்பிடித்தது போல முக்காசா தீப்பாடலைப் பாடினான். பாடலின் வேகத்திற்கு இணையாக நியதிடியின் எட்டுத் தந்திகளையும் ஒருங்கே அசைத்து அவளும் அவனோடு சேர்ந்து வெறியாட்டத்தில் இறங்கினாள். இருவரும் தீயைச் சுற்றியாட, சிவப்புச் சட்டை ஆண்கள், அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தனர். தீயின் மினுமினுப்பில் முக்காசா மற்றும் முடோனியின் ஆட்டம் ஆக்ரோசமாக இருந்தது. சகோதரர்கள் இருவரும் தாயின் ஆன்மாவைக் கடவுளிடம் எத்தி வைத்த கணத்தில் நிலத்தில் கிடையாக விழ பழங்குடிகள் ஓவென்று கத்தியபடி தமது கைகளுக்குள்ளிருந்த தானியத்தைத் தீயில் வீசினர். நான் ஓடோடிச் சென்று முடோனியைத் தூக்கவும், ஆண்கள் முக்காசாவைத் தாங்கிப்பிடிக்கவும் ஆட்டம் நிறைவுற்றது. தீயின் கனதி குறையத் தொடங்க குடிகள் யாவரும் தமது குடிசைகளுக்குத் திரும்பினர். அன்றிரவு முடோனியும் நானும் உறவில் ஈடுபடத் தொடங்கினோம். இறந்தவர்களின் ஆன்மா அவர்களது குடும்பத்தை ஆசீர்வதிப்பதாகவும் அவர்களுக்குக் குழந்தைப் பேறை வழங்குவதாகவும் எமது குடிமக்கள் நம்பினர். அவர்கள் இறந்து அடுத்த பௌர்ணமிக்குள் கருவுறும் குழந்தை அவர்களது குணாம்சங்களைக் கொண்டே பிறப்பதாகவும் சொல்லிக் கொண்டனர். முதுகிழவியின் நீடித்த ஆயுளோடு ஒரு ஆண் குழந்தையை வேண்டி முடோனியும் நானும் முயங்கிக் கிடந்தோம். தரையில் கிடந்து என் மீது இயங்கத் தொடங்கியவள் தனது கால்களால் அருகிலிருந்த நீர்க் குவளையைத் தவறுதலாக உதைத்து விட பதறிக் கொண்டு எழுந்தாள். கோடை காலம் என்பதால் நீர் குறைவாகவே இருந்தது. அன்று வீட்டில் இருந்த கொஞ்சம் நீரையும் அவள் தட்டிவிட, பதற்றத்தில் காமத்தைத் தொலைத்த நாங்களிருவரும் நாவறண்ட படியே இரவைக் கழிக்க வேண்டியதாயிற்று. வெள்ளையர்கள் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர். தானியங்கள் விளைந்த நிலமெங்கும் பருத்தியை விதைத்திருந்தனர். அந்தத் தோட்டங்களிலே நாங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்கள் பதிலீடாக, சோளம் விதைகளையும், கடல் மீன்களையும் எங்களுக்கு வழங்கினர். அவ்வப்போது வெள்ளையர்கள் எங்களுக்குப் புகையிலைகளையும் தந்தனர். அவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும், வெள்ளையர்களின் பெரும் பெரும் கப்பல்கள் தொலைவில் கிழக்கேயுள்ள துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும் கதைகளை அப்போது நான் கேள்வியுற்றேன். துறைமுகப் பணிகளுக்காக அவர்களால் அழைத்துச் சென்றவர்கள் நன்கு செழித்திருந்தார்கள். பருத்திக் காட்டில் தானியங்களையும் விதைக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாங்கள் கடல் மீன்களுக்காகத் தொடர்ந்தும் பருத்தியின் நுனிகளைக் கிள்ளிக் கொண்டும், களைகளைப் பிடுங்கிக் கொண்டும், பஞ்சினை ஆய்ந்து சேகரிக்கவென்றும் விலங்குகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். சில நாட்களின் பின், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ‘நமது குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது என்று நினைக்கிறேன்…’ ‘ஏன் உனக்கு இரத்தம் படவில்லையா?!…’ ‘இல்லை… இரண்டு மாதங்களாக இரத்தம் படவில்லை… ‘ நான் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். அது நிச்சயமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். முதுகிழவியின் அடையாளங்களோடு அவன் பிறப்பான். எங்கள் முதுகுலக் கடவுளான ‘என்காய்’ போல அவன் இருப்பான். என்காயிற்கு இரண்டு குணங்களுண்டு, குடிகளைக் காக்கும் போது நீல நிற உடலில் சாந்தமாகவும், போராடும் போது முதிர்ந்த காட்டுப்பருத்தியின் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் முதுகிழவி கூறுவாள். இவனும் அப்படித்தான் இருப்பான். ‘சாவோ’ குடிமக்களின் காப்பானாக இருப்பான். மீண்டும் பழையபடி எனது தந்தை போல, காட்டிற்கு வேட்டையாடச் செல்வான். நீண்ட தூரம் பயணித்துப் பெருங்கடலிலை அலைக்கழிக்கும் சுறாக்களைப் பிடித்து வருவான். முழுக்குடியினருக்கும் அதனைப் பகிர்ந்தளிப்பான். எனது தந்தை எப்படி ‘சாவோ’ மக்களைக் காப்பாற்றினாரோ அப்படியே அவன் இருப்பான். என்னைப்போல வெள்ளையர்களுக்கு ஊழியம் செய்து கொண்டு அவர்கள் தரும் சிறு உப்புமீன்களுக்காகத் தனது வியர்வையை இந்தப் பருத்திக் காடுகளில் சிந்தமாட்டான். உயர்ந்த மேட்டு நிலமொன்றில் என்னைப் புதைத்துவிட்டு எனக்கான தீப்பாடலையும் அவன் சகாக்களுடன் நடனமாடியபடியே அவன் பாடுவான் என்று நினைத்து நினைத்து மகிழ்வுற்றேன். முடோனியின் வயிறு மெல்ல மெல்ல வளருகையில் எனது மனதில் பயம் தொடர்ந்து கொண்டே போயிற்று. முழு நிலத்தையும் வெள்ளையர்கள் பருத்திக்காக உழுது விட்டிருந்தார்கள். வனத்தின் பெருமரங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. துறைமுகத்தில் வேலை செய்தால் மட்டுமே தானியங்களை விதைக்கக் கூடிய நிலத்தை வெள்ளையர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். எனவே கடினமான கப்பல் கட்டும் துறைமுக வேலைக்குச் செல்வதற்காக என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். விரைவில், நல்ல உணவுப் பொருட்களோடு பருத்தித் காட்டை மீண்டும் அடையும் எண்ணம் எனக்கிருந்தது. முக்காசாவும் என்னோடு பயணமாவதற்கு ஒத்துக் கொண்டான். ஆனால் முடோனியை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அவளுடனான நெடு நேரப் போராட்டத்திற்குப் பின் அவள் வயிற்றில் வளரும் எனது குழந்தை மீது சத்தியம் செய்துவிட்டு நானும், முக்காசாவும், மேலும் சிலரும் வெள்ளையர்களோடு துறைமுகத்தை நோக்கிப் பயணமானோம். இத்தனை நினைவுகளும் என்னில் ஓடி மறைந்த பின்னரும் வானத்தின் நடுவே வேட்டைக்காரன் இன்னும் தனது வாளுடன் அப்படியே நின்று கொண்டிருந்தான். 4 இறுதியாக, மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவும், கோட்டை தேவாலயமும். அன்றைய தினம், சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், வவ்வேயின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் தேவாலயத்தினுள் குழந்தை இயேசுவைத் தாங்கியபடி இருக்கும் மரியாள் சிலையினை ஸ்தாபிக்க நினைத்தோம். வெள்ளைக்காரக் கட்டிடக்கலை நிபுணர்கள் அந்த அழகிய சிலையின் பிரம்மாண்டத்தையும், மரியாளது சிலைகளுடன் இணைக்கப்படாதவாறு தனித்தனிருந்த குழந்தை யேசுவையும் அதன் வார்ப்பையும் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். வவ்வே உயிரற்று அங்கு நடக்கும் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். மரியாளது கைகளில் குழந்தை யேசுவின் சிலையைப் பொருத்தி அதன் இடுக்குகளில் சிறிது சாந்தினை மெழுகி அதனை உயரத்தூக்கி நிறுத்த வேண்டியது எங்களது வேலையாயிருந்தது. பலமிக்க மட்டும் சிலையை உயர்த்தினோம், இன்னும் மேலே, இன்னும் மேலே உயர்த்த அந்த தேவாலயத்தின் மையத்தில் தாயொருத்தியின் கனத்த மௌனம் நிலவிய அதேவேளை, பழுப்பு நிறப் பெண் வீறிட்ட சத்தத்துடன் அடிமைத்தீவில் முனகிக் கொண்டிருந்தாள். மெல்லிய உடலை உடைய முக்காசா சாளரத்தின் மீதேறி, பலகை வழியே நடந்து குழந்தை யேசுவைப் பொருத்த முயல, வவ்வே தனது கண்களை மூடிக் கடவுளே… என் குழந்தையைக் காப்பாற்றும் என வேண்டினான். யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை யேசுவின் சிலை முக்காசாவின் கைகளில் இருந்து கீழே விழுந்து உடைந்து, அதன் சில்லுகள் தேவாலயத்தின் பரப்புகளெங்கும் துண்டங்களாக வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குழந்தை இயேசுவின் சிலையின் கரங்கள் வவ்வேயின் பாதங்களைத் தொடவும், அவன் துணுக்குற்று விழி திறந்து தன் பாதங்களை நோக்க, அங்கே அடிமைத்தீவின் குடிசைக்குள் ஒரு ஆண் குழந்தை வவ்வே….. எனும் சத்தத்துடன் ஜனித்தது. தேவாலயமே களேபரமானது, எல்லோரும் எல்லாத் திசைகளிலும் ஓடினர், காவலர்கள் பலகை மீதிருந்த முக்காசாவைப் பிடித்துக் கீழிறக்கி தமது சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். அனைத்து அடிமைகளையும் ஒன்றாக்கி வந்த வேளையில், வவ்வே மட்டும் சிதறிக்கிடந்த ஒவ்வொரு துண்டங்களையும் சேகரிக்கத் தொடங்கினான். இதே நேரம், வவ்வேயின் குடிலுக்குள் புகுந்த குள்ளச் சிப்பாய், பழுப்பு நிறப் பெண்ணின் கைகளில் இரத்தம் தோய்ந்தபடியிருந்த குழந்தையைப் பறித்தெடுத்து, அடிமைத்தீவின் சாலைகளில் நடக்கத் தொடங்கினான். தீவில் இருந்தது சில பெண்கள் மட்டுமே. அவர்கள் அதனைத் தடுக்க முடியாமல் தள்ளாட, இரத்தத்தில் நனைந்த தனது கீழாடையுடன் வவ்வேயின் மனைவி, தனது குழந்தையை நோக்கி ஓட்டமெடுத்தாள். ஆனாலும் அவன் மிகவும் வேகமாகத் தெருவைக்கடந்து வெளியேறினான். அதே நேரம் ஹாவ்கின்ஸ் தனது துப்பாக்கியுடன் தயாராக இருந்தான். குள்ளச்சிப்பாய் குழந்தையைக் கைகளில் ஏந்தித் தலைகீழாகக் கவிழ்த்து கயிற்றில் இறுகக் கட்டினான். வவ்வேயின் குழந்தை சுவாசப்பை நிறைந்த காற்றில் வீறிட்டழுதது. பேர வாவியை நோக்கி நடந்த குள்ளச் சிப்பாய் முதலைத் தூண்டிலில் கோழியைக் கொழுவும் இடத்தில், வவ்வேயின் குழந்தையைக் கொழுவி வலையை விரித்தான். குழந்தையின் வீறிட்டழும் சத்தம் அடிமைத்தீவெங்கும் நிறைந்தது. ஹாவ்கின்ஸ் முதலையின் வரவுக்காகத் துப்பாக்கியோடு காத்திருந்தான். நேரம் கடக்க, பெரும் முதலையொன்று கரையேறியது. அது ஹாவ்கின்ஸின் துப்பாக்கிக் குறியில் இருந்து தவறி, அந்த ஆண்குழந்தையை ஒரு கடியாகக் கடித்து இழுத்துச் சென்ற வேளையில் எங்கள் வள்ளங்கள் அடிமைத்தீவை நோக்கிப் புறப்பட்டிருந்தன. அடிமைத்தீவில் ஆக்ரோசமாக இருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குள்ளச் சிப்பாயோடு சேர்ந்து கொண்ட வெள்ளையர்கள் குதிரைகளில் அமர்ந்திருந்தவாறே மக்களைத் தாக்கினர். எல்லோரும் தங்களது குடில்களை நோக்கிப் பதுங்கத் தொடங்கிய வேளையில், அடிமைத்தீவின் வாசலில் மயங்கிக் கிடந்த வவ்வேயின் மனைவி மீதும், வள்ளத்தில் வந்திறங்கிய வவ்வே மீதும் தாக்குதலை நிகழ்த்தத் தொடங்கினர். அவனது தலையில் ஓங்கியடித்துச் சிறைக்குள் இழுத்துச் சென்றான் குள்ளச்சிப்பாய். அவனது திறந்த கண்கள் என்னைப் பார்த்தபடியே மூட, அவன் மயக்க நிலையை அடைந்தான். இந்தத் துயர் நிறைந்த கதையைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல நினைத்தேன். இது அத்தனைக்கும் பிறகே எனது கொலைத்தாக்குதலுக்கான காரணம் பிறந்தது. இறுதியாக இன்னுமொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடுத்த நாள் இந்த அடிமையானவனின் தலை, பேர வாவியின் ஓரத்தில் தொங்கவிடப்பட்டது. அடிமைகள் எல்லோரும் அவ்விடத்தை நோக்கி வந்தனர். கைகால்கள் உடைக்கப்பட்ட நிலையில் வவ்வேயையும் அந்த இடத்திற்குத் தூக்கி வந்தனர். வவ்வே பெருங்குரலெடுத்துக் கதறி அழுதான். பொருமினான். விம்மி விம்மி அழுதான். தனது உடைந்த கால்களை நிமிர்த்தி மேலெழுந்தான். அவனது இடது கண்ணில் இருந்து ஒரு கண்ணீர்த்துளி தரையில் வீழ்ந்தது. வெம்மை மிகுந்த அவனது கண்ணீர் அடிமைத்தீவைச் சூடேற்றியது. அப்போது, அவன் வவ்வே… வவ்வவ்வவ்வவ்வே…. எனப் பெருங்குரலெடுத்துப் பாடினான். எனது ஆன்மாவிற்கு அவனது ஊமைப்பாஷையை மொழி பெயர்க்கத் தெரிந்திருந்தது. வவ்வே பாடினான் ஊமை பாஷையில்…. முதுகிழவியின் பேரன் நானே… முடோனியின் மகன் நானே… எனது தந்தையைப் போன்றவரே நீங்கள் எனக்காக இறந்தீரே…. https://thadari.com/the-fire-songs-of-the-alligators-nilavanai-intira/
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
ஆமென்! sudumanalMarch 4, 2026 மத்திய கிழக்கு போர்க் குறிப்பு கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப்ஸ்ரைன் வக்கிரமாளிகைக்குள் நடத்தப்பட்டது வரையான கொடூரமான செயல்களெல்லாம் மேற்குலக ஜனநாயகத்தின் பண்பை தோலுரித்துக் காட்டுபவை. அவர்களின் ஜனநாயகக் கட்டமைப்புக் கூட காலனிய நவகாலனிய சுரண்டல்களால் பெறப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார அடித்தளத்தைக் கொண்டவை. சலுகைபெற்ற மக்களாக (நாம் உட்பட) மேற்குலக நாடுகளில் வாழ இதுவே காரணம். இதை இந்த மக்கள் இழக்கத் தயாராக இல்லை. எத்தனையோ மனிதாபிமானப் போராட்டங்களையும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் கண்ட மேற்குலக வீதிகள் காலனிய/நவ காலனிய வளச் சுரண்டலுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தைத் தன்னும் கண்டதாக வரலாறு இல்லை. மேற்குலகம் வலியுறுத்தும் இந்த ஜனநாயக அளவுகோலை சர்வ உலகத்துக்குமான பொதுமையாக பிரதியெடுத்து சிந்திக்கும் அறிவுநிலையில் எம்மை நிலைநிறுத்தினால், மனிதஜீவியின் மேற்சொன்ன அடங்க மறுக்கும் இயல்பை விளங்கிக்கொள்ள முடியாது. அதுவே நூற்றாண்டு கால பல்வகைப் பண்பாட்டுத் தொடர்ச்சிகொண்ட மனித இன நாகரிகங்களின் பன்முக வளர்ச்சிப் பாதைகளை தேர்வு செய்கின்றது. நாகரிகம் என்பது மேற்குலகப் பண்பாட்டை அச்சும் அசலுமாக பிரதிபலிப்பதல்ல. அது ஒற்றைப் படித்தானதுமல்ல. அதை மற்றவர்கள் மீது மேற்குலகம் திணிப்பது வெள்ளை மேலாதிக்கம் கொண்ட காலனிய மனநிலையிலிருந்து பிறந்தது. அது ஐரோப்பிய மையவாத தன்மை கொண்டது. அவர்கள் வலியுறுத்துகிற இந்த கருத்தமைவை அப்படியே ஏற்றுக் கொள்வதானது காலனிய சிந்தனைமுறைக்குள் அகப்பட்டு வெளியேற முடியாத நிலையின் வெளிப்பாடு ஆகும். எனவே நூற்றாண்டு கால இஸ்லாமியப் பண்பாட்டை நீக்கம் செய்து ஈரானை புரிந்துகொள்ள முடியாது. ஈரானில் மதத் தலைவர் இருக்கிற அதே நேரம் ஈரானில் பாராளுமன்ற (ஜனநாயகக் கட்டமைப்பு) முறைமையும் செயல்வடிவத்தில் உள்ளது. இஸ்லாமியப் பண்பாட்டை வைத்து இப்போதும் மன்னராட்சி செய்கிற நிலையோடு ஒப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக ஈரானை பார்க்க முடியும். அதன் ஜனநாயகப் பண்பானது மதப் பண்பாட்டிலிருந்து உருவானதாக இருக்கிறது. இந்தப் பாரம்பரிய பண்பாட்டை மறுதலிப்பதோ ஏற்றுக்கொள்வதோ ஈரான் மக்களினது தேர்வுக்கு உரியது. காலம்-வெளி உடனான உலக இயங்குநிலையில் இத் தேர்வு மாற்றமடையவும் கூடும். (என்னளவில் அரசை மத நீக்கம் செய்ய வேண்டும் என்பது ஈரானுக்கும் பொருந்தும் என நம்புகிறபோதும், ஈரான் மக்களது தேர்வை நான் புரிந்துகொள்ளவே செய்கிறேன்). ஈரானின் அரசுக் கட்டமைப்பினுள் வைத்தே அதன் ஜனநாயக மறுப்புக்கு எதிராக வீதியில் மக்கள் இறங்கினார்கள். (அதற்குள் மொசாட் புகுந்துவிளையாடி சேறாடியது வேறு கதை). அவர்கள் மதப் பண்பாட்டை புறக்கணித்துவிட்டு, அரசுக்கு எதிராக இறங்கவில்லை. அதனாலேயே மதத் தலைவர் கமெய்னியின் கொலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்னும் சொல்வதானால் ஈரானிய மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிவாங்க வேண்டும் என அவர்கள் -அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சுக்கு நடுவிலும்- வீதியில் இறங்கி ஊர்வலம் போனார்கள். மற்றைய நாடுகள் மீது கமெய்னி பயங்கரவாதச் செயல்களை செய்தார் என்பதற்கும், ஈரான் செய்தது என்பதற்கும் என்ன ஆதாரங்களை அமெரிக்கா முன்வைக்கிறது. உலகம் முழுவதும் பல ஆயிரம் பேரைக் கொன்றார்கள் என சொல்கிறது. அது எங்கு நிகழ்ந்தது என அவர்களால் முன்வைக்க துப்பில்லை. (ஈரான்-ஈராக் இடையிலான போரை எட்டு வருடங்களாக நிகழ்த்தியதில் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பங்குதான் இருக்கிறது). வியட்நாமிலிருந்து வெனிசுவேலா வரை மில்லியன் கணக்கான மக்களை கொன்ற அமெரிக்காவும், பலஸ்தீன மக்களை நக்பா படுகொலையிலிருந்து காஸா படுகொலை வரையான தொடரும் இரத்தக்கறை வரலாற்றையும் கொண்ட இஸ்ரேலும் இதைச் சொல்வது வேடிக்கையானது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் மேற்கொள்வதற்கான காரணம் இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஆகும். இதில் கொல்லப்படும் பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் குறித்து இஸ்ரேலிய அரசுக்கு எந்தக் கவலையுமில்லை. அமெரிக்கா என்ற ஏகாதிபத்தியம் தனது உளவுப்படை மூலம் தான் விரும்பாத ஆட்சிகளை திரைமறைவில் நின்று கவிழ்த்திய அல்லது அத் தலைவர்களைக் கொல்கிற வேலையை நீண்ட காலமாகவே செய்துவந்தது. கம்யூனிச எதிர்ப்பை வைத்து வியட்நாமுடன், நிக்கரகுவாவுடன் போர் புரிந்தது. சோவியத் ஆதரவு ஆப்பானிஸ்தானுடன் போரிட அல்கைடா என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதனூடாக போரிட்டது. பின் அதே அல்கைடா அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியது இன்னொரு கதை. சோவியத் இன் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மறைமுகமாக அன்றி, நேரடியாகவே நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியது. தனது நலனுக்கு குறுக்கே நின்ற அரசுகளை அச்சுறுத்தியது. இதன் தொடர்ச்சி இன்று ஈரான் வரை வந்து நிற்கின்றது. இதற்குமுன்னர் வெனிசுவேலாவுக்குள் புகுந்து அதன் அதிபர் மடுரோ அவர்களை கடத்தியது அமெரிக்கா. உலகம் மௌனமாக செயலற்று பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவகை உலக சட்டவிதிகளுக்கோ, தார்மீக அறத்துக்கோ உட்படாத இந்தச் செயலை அமெரிக்கா செய்து காட்டியபோதும், ஐநா கூட செயலற்றே இருந்தது. இதே வகைப்பட்ட அணுகுமுறையை ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும். ஈரானின் இன்றைய அரசை விரும்பாத ஈரானிய மக்கள்கூட மீண்டும் ஒரு முடியாட்சியை விரும்பப் போவதில்லை. ஈரானிய அரசோடு தீர்த்துக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இந்த மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதற்காக வீதிக்கு இறங்கிப் போராடவும் செய்தார்கள். அதற்குள் ஊடுருவி மொசாட் ரெஹ்ரான் கிளர்ச்சியை (2014 உக்ரைன்) மைடான் கிளர்ச்சி போன்று மாற்ற எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அதில் ஈரான் அரசு நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம். அந்தக் கணக்கை ஈரானிய மக்களே அரசுடன் சுயமாகத் தீர்த்துக் கொள்வார்கள். அல்லது ஒரு சுயபரிசீலனையினூடாக அரசு தன்னை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் பணியை அமெரிக்காவோ இஸ்ரேலோ மேற்குலகோ காலனிய மனப்பான்மையுடன் அணுகி தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தவகை தலையீடுகளான ஆட்சி மாற்ற சதிகள், தலைவர்களை கடத்துவது, கொலைசெய்வது என்ற சர்வாதிகார செயல்களை அடையாளம் கண்டு முதன்மையில் வைத்து எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்குப் பலியாகும் நாடுகளை குற்றப்படுத்துவது அல்லது பலியாக்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. (அது ஒடுக்கும் எந்த அரசையும் நியாயப்படுத்துவது என பொருள் கொள்வதாகாது). அத்தோடு அமெரிக்கத் தலையீட்டைக்; கோருவது அல்லது அதை நியாயப்படுத்துவது ஒரு தேர்ந்த அரசியல் பார்வையும் அல்ல. உண்மையில் அது ஆபத்தானது. அதிகாரமற்ற மெலிந்த நாடுகளின்; கதவுகளையும் இந்தப் பிசாசு எதிர்காலத்தில் தட்டவும் கூடும். அதற்கு பலியாவது உங்கள் நாடாகவும்கூட இருக்க முடியும் என்ற புரிதலாவது தேவை. இப்படியாக அமெரிக்கா கதவுகளை உடைத்துத் திறந்து ஜனநாயகத்தை மலரச் செய்துகாட்டிய ஒரு நாட்டையாவது உதாரணமாகக் காட்ட முடியாது. 1979 இல் ஏற்பட்ட ஈரானியப் புரட்சியின் பின் தமக்கு ஒவ்வாத அரசு என்ற ஒரேயொரு காரணத்துக்காக மேற்குலகு பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்தப் புற அழுத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்து அதன்மூலம் மக்களின் வாழ்நிலையை நெருக்கடிக்கு உள்ளாக்கி, மக்கள்; அரசுக்கு எதிராக கிளர்ந்து எழப் பண்ணுகிற கேடுகெட்ட உத்தி; அது. இந்த அணுகுமுறை வெனிசுவேலாவுக்கு எதிராகவும் செயற்படுத்தப்பட்டது. உச்சபட்சமாக, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிசத்துக்கு எதிரான வெறித்தனத்தோடு கியூபாவுக்கு எதிராக இன்றுவரை செயற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடு கியூபா. இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையேயும் மத்தியகிழக்கில் அதிகளவு கல்வியறிவு படைத்தவர்களாகவும், விஞ்ஞானம் உட்பட பல துறைகளில் முன்னேறியவர்களாகவும், பாராளுமன்றத்தில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறான ஓர் ஆட்சிமுறைமையை சர்வாதிகாரம் என்ற எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்வது சாத்தியமா?. அதன் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசுவது என்பதற்குப் பதிலாக, சர்வாதிகாரம் என்ற ஒற்றைச் சொல்லால் போகிற போக்கில் உச்சரித்துவிட்டு கடந்து செல்வது ஒரு அரசியல் பார்வையே அல்ல. ஈரான் மீதான போர் என்பது இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது அமெரிக்காவின் நலன்களோடும் சம்பந்தப்பட்டது. வளங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டது. ஜி-7 இனை மேவியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின்; பொருளாதார வளர்ச்சியை அடித்து வீழ்த்துவதோடு சம்பந்தப்பட்டது. ஒற்றைத் துருவ அதிகாரத்தை தக்கவைப்பதோடு சம்பந்தப்பட்டது. பெட்ரோ டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டது. மத்திய கிழக்கை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது. இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் பலஸ்தீனத்தை மறுத்து (அதாவது இரு அரசுத் தீர்வை மறுத்து), அதை சிதைத்து இஸ்ரேல் என்ற ஓர் அரசுத் தீர்வை நிலைநாட்டுவது. அத்தோடு அகண்ட இஸ்ரேலை -அயல் நாடுகளுக்குள் எல்லைகளை அரக்கி- உருவாக்குவது. அதற்குத் தடையாக அல்லது சவாலாக இருக்கும் ஈரானை பலமிழக்கச் செய்வது அல்லது ஈரானில் எடுபிடி அரசை நிறுவுவது. ஈரானின் உதவியோடு பலஸ்தீன மக்களுக்காக நிற்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை பலமிழக்கச் செய்வது. மத்திய கிழக்கில் ஈரான் இஸ்ரேலைவிட மிதப்பான அதிகார சக்தியாக நிற்பதை தடுப்பது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நிகழ்த்தப்பட்டதுதான் ஈராக் மீதான அமெரிக்காவின் போரும்கூட. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிக்க முடியாத சக்திகளாக பிணைந்து உள்ளன என்பது உலகறிந்த விடயம். சதாம் குசைனை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என அப்போ நேரடியாகவே நெத்தன்யாகு பேசியிருந்தார். இப்போ ஈரானை அதன் தலைமையை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகிலேயே அமைதி நிலவும் என கூறுகிறார். இதையெல்லாம் சாத்தியப்படுத்தவும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் பலதையும் தனது தொங்குதசையாக மாற்றியது. அந்த நாடுகளின் பாதுகாப்பை தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து படைத்தளங்களை நிறுவியது. அது இன்று அந்த நாடுகளுக்கே அழிவை தேடிக் கொடுத்துள்ளது. அந்த நாடுகளின் மன்னராட்சி முறைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் ஒருபோதுமே ஜனநாயகம் மசிர் மட்டை என அளவுகோல்களை நீட்டியது கிடையாது. பெண்விடுதலை என குமுறியது கிடையாது. ஆப்கானில் பயங்கரவாதத்தை எதிர்த்த போராக பிரகடனம் செய்தது. பின் பெண்விடுதலையை எடுத்துக் கொடுக்கப் போகிறோம் என உப பிரகடனத்தையும் செய்து கிழிச்சுக் காட்டிய அமெரிக்கா இந்த தொங்குதசை நாடுகளின் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலை உயர்த்தியதே இல்லை. ஆக மத்திய கிழக்கை தனது இழுவைப் படகு அரசாக வைத்திருக்கிற அமெரிக்காவுக்கு ஈரான் ஒரு தலையிடி. பலஸ்தீன மக்களை கொன்று குவித்து நிலத்தை அபகரித்து அதை மீண்டும் மீண்டுமாய் அகண்ட இஸ்ரேலாக மாற்றும் சியோனிஸ்டுகளுக்கு ஈரான் ஒரு தலையிடி. இரண்டுபேரும் இந்தப் புள்ளியில் இணைகிறார்கள். அமெரிக்காவின் சியோனிஸ லொபியும், பெரும் மூலதனமும், அதுக்கு வெளியே செயற்பட முடியாத அமெரிக்க அரசியலும், அரசியல் தலைவர்களும்,; காங்கிரசும், உளவுப்படையும் என அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கிற பிணைப்பு வலுவானது. பலஸ்தீன போராட்டத்தையும் மண்ணையும் நேசிப்பதோடு, அவர்கள் மீதான படுகொலைகளையும் ஒடுக்குமுறையையும் சகித்துக் கொள்ளாத ஒரு நாடு ஈரான். இதன்விளைவாக உருவாகிய ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் உதவியும் செய்தது. இவர்களை பயங்கரவாத அமைப்பு என சுட்ட இஸ்லாமிய எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்கிறது. அவர்களது தாக்குதல்கள் பலஸ்தீன மக்கள் சார்ந்து இஸ்ரேலுக்கு வெளியில் நிகழ்ந்ததில்லை. இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதல்கள் குறித்த அரசியல் விமர்சனங்கள் என்பது அவர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்க போதுமானதல்ல. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ், பொக்கோகராம் போன்ற அமைப்புகள் உலகு தழுவிய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியவை. அமெரிக்க நலனுக்கு ஏற்ப இப்போதும் அவர்கள் நண்பர்களாகவும் எதிரிகளாகவும்தான் மாறி மாறி பாத்திரம் வகிக்கிறார்கள். அசல் உதாரணம் இன்றைய சிரிய அதிபர். அல்கைடா, ஐஎஸ் என களமாடிய அவர் பெரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இப்போ ட்றம்ப்புக்கு அவர் ஒரு ஸ்மார்ட் மனிதர். வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்யக் கூடிய சிரிய அரசுத் தலைவர். ஆப்கானின் புரட்சியாளராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பின்லாடன், பின்னர் உலகப் பயங்கரவாதி என அதே அமெரிக்காவால் வரையறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். மத்திய கிழக்கில் அணுகுண்டை வைத்திருக்கிற ஒரே நாடான இஸ்ரேலை பாதுகாக்கும் கள்ள நோக்கில் அமெரிக்கா மூன்று கோரிக்கைகளை மேசையில் வைத்த அதேநேரம், ஈரானிய மக்களின் விடுதலைக்கான போரை தொடங்கியுள்ளதாக குரலெடுத்து ட்றம்ப் மீட்பராகவும் மாறினார். “எனது அன்புக்குரிய ஈரானிய மக்களே உங்களுக்கு உதவிசெய்ய இதோ விரைந்து வருகிறேன். உங்கள் விடுதலையை நீங்கள் பெறும் காலம் வந்துவிட்டது. ஆயத்தமாக இருங்கள். இதோ வருகிறேன்” என ட்றம்ப்பு அழைப்பு விடுக்கிறார். ஆமென்! ravindran pa 03032026 https://sudumanal.com/2026/03/04/ஆமென்/
-
அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம்
அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வந்துவிடுமோ என நெதன்யாகு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பைத் தொடர்புகொண்டு, போரை நிறுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmd1mxla0004356picrn04zb
-
சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி
சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி எம்.எஸ்.எம். ஐயூப் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெருமளவில் அது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ள போதிலும் அவை எதுவும் நடுநிலையாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாக தெரியவில்லை. எல்லோரும் தத்தமது அரசியல் கண்ணோட்த்திலேயே பிரச்சினையை அணுகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் இறுதியில் சட்ட நடவடிக்கையாகவே தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதன் பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிவதால் பலர் அதனை அரசியல் கண்கொண்டு பார்ப்பதை குறைகூறவும் முடியாது. ஆனால் அதற்காக நடப்பவை எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு நியாயப்படுத்தவோ எதிர்க்கவோ முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆதரவாளர்களே இந்தக் கைதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் சலே கோட்டாபயவின் நெருங்கிய நன்பராவார். அதேவேளை இந்த கைது கோட்டாவுக்கும் ஆபத்தானதாகுமென பலர் கருதுகின்றனர். புலிகளுக்கு எதிரான போரின் போது உளவுத்துறை அதிகாரியாக சலே பெரும் பணியாற்றியுள்ளார் என்றும் புலிகளின் பேச்சாளராக இருந்த தமிழ்செல்வனை விமானப் படையினர் சலேயின் வழிகாட்டலிலேயே கொன்றனர் என்றும் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமையை ஏற்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை 2009 ஆம் ஆண்டு ஓகஸ்;ட் மாதம் மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு அழைத்து வரும் திட்டத்தையும் சலேயே வகுத்தார் என்றும் எனவே அவரை கைது செய்தமை அநீதியாகும் என்றும் கோட்டாபயவின் சட்டத்தரணியும் அவரது அரசாங்கத்தின் அமைச்சருமான அலி சப்ரி கூறியிருந்தார். புலம் பெயர் தமிழர்களின் (தமிழ் டயஸ்போராவின்) தூண்டுதலிலேயே அரசாங்கம் சலேயை கைது செய்துள்ளதாக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற முன்னாள் ராஜபக்ஷ அதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்காக கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களை குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இந்த கைதை குறை கூறி வந்தாலும் அவர்கள் அதற்காக வேறு வாதங்களையே முன்வைக்கின்றனர். நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்துக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுக்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நாடகம் இடம்பெற்றுள்ளதாக ஐமச தலைவர்கள் கூறுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதியே இடம்பெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஏப்ரல் 21 அம் திகதியும் தாக்குதலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்துமாறு கத்தோலிக்க திருச் சபையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் வற்புறுத்தி வருகின்றனர். எனவே இவ்வருடம் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த கைதின் மூலம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்ற முயல்கிறது என்பது அவர்களின் மற்றொரு வாதமாகும். ராஜபக்ஷ அதரவாளர்களும் இந்த வாதங்களை முன்வைக்கின்றனர். கடந்த வருடமும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குலின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவதாக அதற்கு அண்மித்த ஒரு நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேNயு ஜனாதிபதி எங்கும் எப்போதும் சூத்திரதாரியை அம்பலப்படுத்தவுதாக கூறியதில்லை. ஆனால் ஏபரல் 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய புதிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என நம்புவதாக அவர் கடந்த வருடம் மார்ச் 30 ஆம் திகதி மாத்தறை தெய்யந்தரவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார். அதைத் தான் எதிர்க் கட்சியினர் திரிபுபடுத்தி கூறுகின்றனர். இந்த வாதங்களில் சில ஒன்றோடு ஒன்று மோதுவதாகவம் தெரிகிறது. புலம் பெயர் தமிழர்களின் தூண்டதலைப் பற்றியும் நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதைப் பற்றியும் ஒரே நபர் கூறும் போது அது பொருத்தமற்றதாகவே தெரிகிறது. அதேவேளை புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலிலா அரசாங்கம் கிறிஸ்தவ மக்களை ஏமாற்றப் போகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் இந்த வாதங்களை மறுத்துள்ளார். தமிழ்செல்வன் கொல்லப்பட்ட காலத்திலோ அல்லது கே.பி கைது செய்யப்பட்ட காலத்திலோ சலே இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளரராக இருக்கவில்லை என்றும் எனவே இந்த சம்பவங்களை பாவித்து சலேயை ஊதிப் பெருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை கே.பியை கைது செய்தமை பெரிய விடயமாக காட்;ட முயலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் இலங்கைக்கு கொண்டவரப்பட்ட கேபிக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிடுவதில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அப்போதிருந்த தேசிய பாதுகாப்பு தொடர்டபான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன ஹ_லுகல்ல கூறினார். கேபிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 2015 ஆம் ஆண்டு அதாவது மைத்திரி-ரனில் அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்தார். ஆனால் அவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் தெரிவித்ததை அடுத்து 2017 அம் ஆண்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கேபியைப் பற்றிக் குறிப்பிட்டு சலேவுக்கு பெரும்பான்மை மக்களின் மத்தியில் பெருமை தேடிக்கொடுக்க முற்படும் பொதுஜன முன்னணி கேபியை எவ்வாறு நடத்தியது என்பது இதன் மூலம் தெரிகிறது. அது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விடயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு நியாயம் வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்தவிடயத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் மேலே குறிப்பிடப்பட்டதைப் போல் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதலோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய தகவல்;களை அம்பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுர குமார கடந்த வருடம் கூறியிருந்தார். பின்னர் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை இரகசிய பொலிசார் கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி கைது செய்தனர். நேரடியாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலோடு சம்பந்தப்படாக விடயம் ஒன்றுக்காக அவர் கைது செய்யப்பட்ட போதிலும்; அத்தாக்குதலைப் பற்றி முன்னரே அவர் அறிந்திருந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூறினார். ஒக்டொபர் மாதம் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜேபால பிளளையானுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். அமைச்சர் விஜேபாலவுக்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிள்ளையானின் முன்னாள் இணைப்புச் செயலாளர் ஹன்சீர் ஆசாத் மௌலானா இது போன்றதோர் தொடர்பைப் பற்றி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கூறியிருந்தார். ஜோசப் பரரஜசிங்கம் கொலை தொடர்பாக பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் சைனியும் 2017 ஆம் ஆண்டு வன்முறை சம்பவவம் ஒன்று தொடர்பாக அதே சிறையில் அடைக்கப்டடதாகவும் அப்போது பிள்ளையானுக்கும் சைனிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாகவும் மௌலானா அந்நிகழ்ச்சியல் கூறினார். இந்தத் தொடர்பை அடுத்து பிள்ளையானின் ஆலோசனைப் படி தாம் சலேக்கும் சஹ்ரானுக்கும் இடையில் சந்திப்பொன்றை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புத்தளம் கரடிப்பூவலில் ஏற்பாடு செய்ததாகவும் அச்சந்திப்பை முடித்துக்கொண்ட சலே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு நாட்டில் பதற்ற நிலைமை உருவாக வேண்டும் என்று தம்மிடம் கூறியதாகவும் அவர் அந்நகழ்ச்சியல் மேலும் கூறினார். மௌலானாவின் கூற்றுக்களைப் பற்றி விசாரிக்க 2023 ஆம் ஆண்டு ரனில் விக்ரமசிங்க நியமித்த இமாம் குழு அக்கூற்றுக்களை நிராகரித்தது. இந்தப் பின்னணியில் தான் அநுர குமார 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியானார். அவர் உடனடியாக அரம்பித்த விசாரணைகளின் படி அதே ஆண்டு பிள்ளையான் விசாரிக்கப்பட்டடார். பின்னர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். அவர் பேராசிரயர் ரவீந்திரனாத் விவகாரத்துக்காக கைது செய்யப்பட்ட போதும் தெற்கில் சில அரசியல்வாதிகள் அப்போது பதற்றமடைந்தனர். ரனில் அவரோடு பேச அனுமதி கேட்;டார். கம்மன்பில தாமாகவே முன்வந்து அவரது சட்டத்தரணியானார். இவற்றையெல்லாம் பார்க்கும் மௌலானா கூறியதைப் போல் ஏதும் நடந்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுரேஷ்-சலேயின்-கைதின்-பின்னணி/91-373396
-
மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு
மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது. ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/மற்றுமொரு-ஈரானிய-கப்பலால்-சலசலப்பு/175-373430
-
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை
யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை adminMarch 4, 2026 யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , இன்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது. இந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லிட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளாா் Global Tamil Newsயாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்க...யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 5…
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடாததால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களில் நின்றது. எனினும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் நிதானமான 34 (27 பந்துகள்) ஓட்டங்களுடன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். ஃபின் அலென்னின் அபாரமான மரண அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த செஞ்சுரியான 100 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், டிம் செய்ஃபேர்ட்டின் புயல்வேக 58 (33 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் எவரும் நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வெல்லும் எனக் கணிக்காததால், ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! முதலாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது போலிருக்கு🙂 SA (12.2/20 ov) 85/5 NZ New Zealand chose to field. CRR: 6.89 • Last 5 ov (RR): 32/3 (6.40)
-
அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி! Published By: Vishnu 04 Mar, 2026 | 03:24 AM அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகங்களும் இருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்போது உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஈரானுடனான தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240100
-
ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு
ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு 04 Mar, 2026 | 09:27 AM கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240103