Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
  2. யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு! 23 February 2026 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார். மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். இதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Hiru Newsயாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத...யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!. Most visited website in Sri Lanka.
  3. மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை! adminFebruary 22, 2026 மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ இராணுவம் நடத்திய விசேட நடவடிக்கையில் Jalisco New Generation Cartel (CJNG) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆயுததாரிகள் நகரின் பல பகுதிகளையும் சர்வதேச விமான நிலையத்தையும் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பின்னர் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக Puerto Vallarta International Airport நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படைகள் கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. CJNG அமைப்பு, மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற போதைப்பொருள் கும்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கை, குறித்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் இருந்து சுற்றுலா பயணிகள் அமைதியாக இருக்குமாறு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் போது புதுப்பிக்கப்படும். https://globaltamilnews.net/2026/229597/
  4. பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் 23 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸிம்பாப்வே (X2) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3) ZIM எதிர் WI போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் AUS வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் AUS வீரப் பையன்26 AUS சுவி AUS கிருபன் AUS கோஷான் சே AUS அஹஸ்தியன் AUS கந்தப்பு AUS நியாயம் AUS எப்போதும் தமிழன் AUS ரசோதரன் AUS பிரபா AUS நிலாமதி AUS நந்தன் AUS அனைவரும் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
  5. Spy Tiger: The 05 File புத்தகத்தை அமேஸன் கிண்டிலில் வாங்கி அரைவாசிக்குப் மேல் வாசித்துவிட்டேன். சரியான சுத்துமாத்து ஆசாமி போல இருக்கிறார்! சத்யசாயி பாபா பக்தனாக இருந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். இந்த ஒப்பிலானைப் பற்றி @நன்னிச் சோழன் க்குத் தெரியுமா?
  6. குவாட்டர் அடிக்கும் அளவிற்கு ஆட்டம் ரசிக்கவில்லை! இன்று இரண்டு போட்டிகளையும் பார்த்தேன்.. ஆனால் நேரம் வேஸ்ட்!
  7. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, ஃபில் சோல்ற்ரின் அதிரடியான 62 (40 பந்துகள்) ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து சுமாரான 146 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் ஆடுதளத்தில் நிற்கமுடியாமல் வேகமாக ஆட்டமிழந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அணித்தலைவர் தசுன் ஷானக ஓரளவு நிலைத்தாடி 30 (24 பந்துகளின்) ஓட்டங்களை எடுத்தார். எனினும் விக்கெட்டுகள் தொடர்ச்சியாகக் சரிந்ததனால் 16.4 ஓவர்களில் 95 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை இத் தொடரில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது! முடிவு: இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தெரிவு செய்த @வீரப் பையன்26 க்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டேவிட் மில்லரின் அபாரமான 63 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் புயல்வேக 45 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் மின்னல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகமாக ஓட்டம் எடுக்கலாம் என அடித்தாடி வீரர்கள் விரைந்து வெளியேறினர். ஷிவம் டுபே மாத்திரம் 42 (37 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 18.5 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் @கந்தப்பு தனது நாற்காலியை மேலும் பலப்படுத்தியுள்ளார்!
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @தமிழ் சிறி ஐயா🎉🎂🎊🎈
  9. எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் வேண்டும்!
  10. எனக்கு கீழே உள்ள பதிவில் முழுமையாக ஒப்புதல் இல்லை. ஆனால் அரச உத்தியோகத்திற்காக மட்டும் கல்வி கற்பது வீண்வேலை. புதிய திறன்களயும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் அறியாது சமூகத்திற்கு உதவமுடியாது. — #கறுப்பு_அங்கியும், #கையில_சுருட்டின_பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய 'கௌரவ' பிச்சைக்காரர்கள்! இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்... ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே... இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச் சொல்லித்தான் ஆகோணும். எந்த ஸ்கில்லும் (Skill) இல்லாம, வெறுமனே மனப்பாடம் பண்ணி வாங்குன இந்தப் பட்டத்தை வைச்சுக்கொண்டு இனி என்னத்தைச் செய்யப் போறாங்கள்? கொஞ்சம் கமண்டில சொல்லுங்கோ போட்டு பொளப்பம்... #வரலாற்றுப்_பாடமும், #மாறாத_எங்கட_மோட்டுத்தனமும்! வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1970களில் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதற்கும், 1971 மற்றும் 1989களில் தெற்கில் ஜே.வி.பி (JVP) இளைஞர்கள் கிளர்ச்சி செய்ததற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று — இந்த வேலையில்லாப் பட்டதாரிப் பிரச்சனைதான்! வேணும் எண்டால் நிறைய தேடிப்படியுங்கோ ஓலப்பேயன்களே....!! பிரிட்டிஷ்காரன் விட்டுப்போன கிளார்க் (Clerk) வேலைக்கான கல்விமுறையை மாத்தாம, "பட்டம் படிச்சா அரச வேலை கிடைக்கும்" எண்ட மாயையில ஒரு சமூகத்தையே பலிகொடுத்ததுதான் அரசியல்வாதிகள் செஞ்ச மிகப் பெரிய துரோகம். கனவு அரசியல் பிச்சைக்காரர்களும் அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.... 50 வருசம் கடந்தும் நாங்க மாறினபாடா இல்ல! அதே மோட்டுத்தனமான முட்டுக்கொடுத்தல். "எங்கட கல்விதான் உலகத்திலயே சிறந்த கல்வி" எண்டு மார்தட்டிக்கொண்டு திரியவேண்டியது. ஆனா, படிக்கிற படிப்புக்கும் வெளியில இருக்கிற வேலைவாய்ப்புக்கும் சம்மந்தமே இருக்காது. இதை கேட்டால் கதைச்சால் என்னோட மல்லுக்கட்டுவாங்க.... நீ என்ன எஞ்சினியரோ எண்டு கேட்பானுகள், காமடிப்புன்னகைகள்... (எனக்கே தெரியாது நான் எஞ்சினியரா எண்டது வேற கதை) #ஏசி_ரூம்_மோகமும், #அந்தஸ்துப்_பம்மாத்தும். பட்டம் படிச்சா உடனே சுழல் கதிரையும், ஏ/சி (A/C) ரூமும் வேணும் எண்டு எதிர்பார்க்கிற மனநிலை. ஒரு அரச வேலைக்காக 5 வருசமோ 10 வருசமோ காத்திருந்து, மனித வளத்தை வீணாக்குகிற ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம். கடும் படிச்ச மோடுகள்... #ஆண்பிள்ளைகளின் அவலம். கேம்பஸ் முடிஞ்சவுடனே கல்யாணத்தைப் பேசலாம் எண்டு பெத்தவங்கள் நினைப்பாங்கள். ஆனா சமூகம் அவனுக்கு "வேலையில்லாப் பட்டதாரி" எண்டுற பட்டத்தைத்தான் சீதனமா குடுக்கும். யாழ்ப்பாணத்தில ஒரு மின்குமிழை (Bulb) மாத்தோணும் எண்டா 2,000 ரூவா சம்பளமும், வடிவான மதியச் சாப்பாடும் குடுக்க ஆக்கள் ரெடி. ஆனா, இந்தப் பட்டம் படிச்ச 'அறிவாளி' வருவாரா? வரமாட்டார்! ஏனெண்டா அது "கௌரவக் குறைச்சல்". வீட்டை இருந்து அப்பா அம்மாட பென்சன் காசில சாப்பிட்டாலும் சாப்பிடுவானே தவிர, இறங்கி வேலை செய்ய மாட்டான். #பெண்பிள்ளைகளின் நாடகம்: பொம்பிளைப் பிள்ளை எண்டா... எப்படியாவது லண்டன், கனடா, சுவிஸ் எண்டு ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பிடிச்சு கட்டிக் குடுத்திடலாம் எண்ட நப்பாசை. அங்க போய் இந்தம்மா என்ன வேலை செய்யும் எண்டு நினைக்கிறியள்? ஊரில செய்யக் கூச்சப்பட்ட அதே சின்னச் சின்ன வேலைகளைக் குளிருக்குள்ள கிடந்து கஸ்டப்பட்டுச் செய்யும். நாகரீகத்துக்காக சின்ன சின்ன வேலை எண்டானான் (வீட்டில கக்கூஸ் கழுவவே வாரத்துக்கு ஒருக்கா யாரையும் சம்பளத்துக்கு கூப்பிடுறவையள்) என்ன ஒரு பம்மாத்து கண்டியளோ! #கலைப்பிரிவும், #சித்த_மருத்துவமும். யாருடைய தவறு? சரி, அரச வேலை வேண்டாம், பிரைவேட் கம்பனிக்குப் (Private Sector) போவம் எண்டா... அங்க போய் சைவ சித்தாந்தமும், வரலாறும் படிச்சதை வைச்சு என்னத்தைச் செய்ய? ஒபீசில (Office) வாற பொங்கல், தீபாவளிக்குப் பாட்டுப் பாடி கலைநயத்தைக் கூட்டலாமே தவிர, வேற என்ன ஸ்கில்லோட வெளியில வந்திருக்கிறாங்கள்? இன்னொரு பக்கம் சித்த மருத்துவம். படிச்சு முடிச்சு 37 வயசாகுது, இன்னும் வேலை இல்ல. பிழையான கோர்ஸை (Course) நாலு அஞ்சு வருசம் படிச்சு தங்களின்ட வாழ்க்கையை வீணாக்கச் சொன்னது யார்? எந்த அழுத்தத்துக்காக இந்த மாணவர்களை உள்ளே எடுத்தாங்கள்? எனது நண்பி சித்தமருத்துவ பட்டதாரி இப்ப 38 வயசில கோறணமேந்து வேலை கிடைச்சிருக்கு ஆனால் வேலை சித்தமருத்துவர் இல்லை. 30-35 வயசுக்கு பிறகு வேலைக்கு புதிதாக இணைபவர்களிடம் இருந்து என்ன வேலை வாங்கேலும் எண்டு நினைக்கிறியள்?? வேற வழி தெரியாம, அரசியல்வாதிகளின்ட வாசல் படியில போய் ஏறி இறங்கி, கடைசியில "அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவர்கள் சங்கம்" எண்டு ஒரு போர்ட்டைத் (Board) தூக்கிக்கொண்டு நிக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. அரசியல்வாதிக்கு இதுதான் வேணும். அவனுக்கு இது ஒரு நிரந்தர வாக்கு வங்கி! பெற்றோருக்கும் இளைய சமுதாயத்துக்கும் ஒரு வார்த்தை... பெற்றோர்களே. தயவுசெய்து "என்ட பிள்ளை கேம்பஸ் போகுது" எண்ட வெட்டிப் பந்தாவுக்காக அவங்களை பலிகடா ஆக்காதேங்கோ. காலம் மாறிட்டுது. அரச வேலை எண்டது இனிமேல் கானல் நீர்தான். உங்கட பிள்ளைக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடிய திறன்களை (Skills) வளர்க்க உதவுங்கோ. அதுக்கு செலவு செய்யுங்கோ. சாமத்தியவீடு, கீபேத்டே, கலியானவீடு எண்டு வெட்டிப்பந்தா செலவுகளை குறைக்கலாம். இளைய சமுதாயமே. சுருட்டின பேப்பரை வைச்சுக்கொண்டு அரசியல்வாதிகளின்ட வாசல்ல நிக்கிறதை விடுங்கோ. உங்கட கோர்ஸில (Course) வேலை இல்லை எண்டா, உலகத்துக்கு என்ன தேவையோ அதைப் படிங்கோ. தொழில்நுட்பம், மொழியறிவு, செய்முறைத் திறன் (Practical skills) இத வளர்க்காம, "பட்டம் படிச்சிருக்கன்" எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சா, காலம் உங்களை இரக்கமில்லாம ஓரங்கட்டிப் போடும்! Practical skills அ வைச்சு வேலை எடுங்கோ சம்பாதீங்கோ, அதைவைச்சு எம் கலைகளை உலகறிய செய்யுங்கோ பணம் தானா உங்களை தேடிவரும்..... இந்த யதார்த்தத்தை உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து, அவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துங்கோ, போட்டு பொளந்து தள்ளுங்கோ.... தேடல் உள்ள சமூகமே வெல்லும். அல்லது, பட்டதாரிகள் மாற்று வழிகளில் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த நவீன வேலைவாய்ப்புத் திறன்கள் (Modern Skillsets) பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தேடுங்கோ எனக்கும் சொல்லுங்கோ கேப்பம். எனக்கு ஓலப்பேயர்களின் சமூகம் தேவையே இல்லை..... https://www.facebook.com/share/p/18VBrMJJdJ/?mibextid=wwXIfr
  11. எகிய ராஜ்யவும் இளங் கலைஞர் மன்றச் சந்திப்பும் - நிலாந்தன் அண்மை மாதங்களாக அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்று ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியைத் தொடங்கலாம் என்று கஜேந்திரக்குமார் எச்சரித்து வருகிறார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் அவ்வாறு உண்டு.ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்து செல்ல அரசாங்கம் முயற்சிக்கலாம் என்றும் கஜேந்திரகுமார் எச்சரிக்கின்றார். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்தில் நடந்த ஒரு சந்திப்பில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்திருந்தவர் அவ்வாறு எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படும் அந்த இடைக்கால வரைபை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதனால் புதிய யாப்புருவாக்க முயற்சி ஒன்றில் இந்த அரசாங்கம் ஈடுபடத் தேவையான பலம் அதற்கு உண்டு என்றும் அவர் நம்புகிறார். எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் ஆகும். ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும். எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வரைபு கூட்டமைப்பின் குழந்தையுந்தான். ஜேவிபியின் குழந்தையுந்தான். அதனால் அந்த வரைபை தமிழரசுக் கட்சியும் ஜேவிபியும் அதாவது அரசாங்கமும் இணைந்து முன்னெடுக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக கஜேந்திரக்குமார் சந்தேகிக்கிறார். பல வாரங்களுக்கு முன்பு அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நடந்த ஒரு சந்திப்பின் பின் சுமந்திரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் என்ன பதிந்தார் என்பதையும் கஜன் சுட்டிக்காட்டுகிறார். அந்தப் பதிவில் சுமந்திரன் எகிய ராஜ்ஜிய குறித்து ஆர்வமாக இருப்பது தெரிகிறது. இத்தகையதோர் பின்னணியில்தான் கஜேந்திரகுமார் எகிய ராஜ்ஜியவுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் எதிரானவைதான் என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. தமிழரசுக் கட்சியை தமிழ்மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் அங்கே உண்டு என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். இந்த முரண்பாடுகள், சந்தேகங்கள் என்பவற்றின் விளைவாகவே கடந்த 19ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தின் அனுசரணையோடு தமிழ்க் கட்சிகளை ஒரே மேசையில் இருத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆகப்பிந்திய முயற்சி அது. அந்த முயற்சி குழப்பப்பட்டமையானது இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாகச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறதா ? இந்த இடத்தில் மூன்று முக்கியமான விடையப் பரப்புகளில் தமிழ் மக்களுக்குத் தெளிவு அவசியம்.முதலாவதாக அரசாங்கம் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருமா? இந்த அரசாங்கம் எதிர்பாராமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற ஓர் அரசாங்கம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைகூட புரட்சிகரமானது அல்ல. கோத்தாபய பெற்ற அதே பெரும்பான்மை. எனவே இந்த வெற்றியை எப்படித் தக்கவைப்பது என்ற சவால் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. அண்மையில் ரில்வின் சில்வா சீனாவுக்குப் போனபோது அங்கே சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவருக்கு வழங்கிய ஆலோசனை தொடர்பாக சிங்கள ஊடகங்களில் வெளிவந்தது. குறைந்தது 15 ஆண்டுகள் ஆட்சி செய்தால்தான் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த ஆலோசனையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அதன் வாக்கு வங்கியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி வளர்த்தெடுப்பது என்றுதான் சிந்திக்கும். அப்படிச் சிந்தித்தால் இனப்பிரச்சினையில் கை வைக்கக்கூடாது. இதோ தீர்க்கப் போகிறோம் என்று ஒரு தோற்றத்தைக்கட்டியெழுப்பலாம். அதன்மூலம் காலத்தைக் கடத்தலாம். மேலும்,இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் விளைவு. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டு. அடுத்த தேர்தல்களில் கிடைக்கப் போகும் வெற்றியை அதுதான் பெருமளவுக்குத் தீர்மானிக்கும். எனவே இந்த அரசாங்கம் இனப்பிரச்சினையில் கையை வைத்து நிலைமைகளைக் குழப்புமா? ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலை நீக்குவதற்கே தயங்கும் அரசாங்கம்,யாப்புருவாக்கத்தில் இறங்குமா? இரண்டாவது விடயம், எகிய ராஜ்ஜிய பற்றிய வாதப்பிரதிவாதங்கள். சுமந்திரன் கூறுகிறார், அது ஒற்றை ஆட்சியைக் குறிக்காது என்று. மேலும் சுமந்திரன் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு இணைந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். கஜேந்திரகுமார் கூறுகிறார்,எகிய ராஜ்ஜிய என்பது ஒற்றை ஆட்சிதான் என்று. எகிய ராஜ்ஜிய தொடர்பாக யார் சொல்வது சரி என்பதை, அரசியலை ஓர் அறிவியலாகப் பயில்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். ஆனால் பொதுமக்கள் அதை எப்படி விளங்கிக் கொள்கிறார்கள்? இந்த விடயத்தில் வெளிப்படையான, தெளிவான,சாதாரண மக்கள் விளங்கக்கூடிய விவாதப் பரப்புகள் அவசியம். அவ்வாறான விவாத அரங்குகளை தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,அல்லது தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு போன்ற அமைப்புக்களோ திறக்க வேண்டும். அதன்மூலம் எகிய ராஜ்ஜியவைச் சூழ்ந்திருக்கும் மயக்கங்கள் தெளிவாகப்பட வேண்டும். மூன்றாவது,இது மிகவும் முக்கியமானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட தொடர் நடவடிக்கை. இதில் இறுதியிலும் இறுதியானதுதான் யாப்புருவாக்கம். அதுவே முதலாவதும் கடைசியும் ஆகாது. இனப் பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கவும் கூடாது. மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல்முயற்சியாக,மோதலில் ஈடுபட்ட தரப்புக்களுக்கு இடையிலான திறந்த உரையாடல் தேவை. அதன்மூலம் ஒரு சமாதான உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். தேசங்களை அங்கீகரிக்கும் அந்த உடன்படிக்கையில் இருந்துதான் இனப்பிரச்சனைக்கான தீர்வு எது என்பதனை அதன் சட்டச் சட்டத்துக்குள் வைத்துச் சிந்திக்கலாம். இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இனங்களுக்கு இடையே முதலில் ஒரு சமூக உடன்படிக்கை அல்லது அரசியல் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். உதாரணமாக 1988இல் பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் எடுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையான பெரிய வெள்ளி உடன்படிக்கை போல ஓர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடத் தொடங்க வேண்டும். அதன் இறுதிக் கட்டந்தான் புதிய யாப்பாகும். யாப்பிலிருந்து அதாவது கடைசிக்கட்டத்தில் இருந்து அதைத் தொடங்க முடியாது. தொடங்கவும் கூடாது. இங்கே விபத்து எங்கே நடந்தது என்றால்,2015 செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானத்தின் விளைவாகத்தான். பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. எனவே அந்தப் பொறுப்பின் நிமித்தம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு,அதன் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் உப குழுக்களும் உருவாக்கப்பட்டன. இந்த நடைமுறைகளின் விளைவுதான் எகிய ராஜ்ஜிய என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். 2018ல் அந்த இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலச் சூழலில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் கவிழ்த்தார். அதாவது நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் காட்டிக்கொடுத்தார். நிலைமாறுகால நீதி என்பது “ஒரு தோல்வியுற்ற பரிசோதனை” என்று சுமந்திரன் 2021ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்துக் கூறினார் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்கான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு சொன்னார். தோல்வியுற்ற ஒரு பரிசோதனை எப்படி வெற்றிகரமான ஒரு தீர்வு முன்மொழிவைப் பெற்றெடுத்தது ? நிலைமாறுகால நீதியின் தோல்விக்குக் காரணமே நிலை மாற்றம் நிகழாமல் அங்கே நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்க முற்பட்டமைதான். இலங்கைத் தீவைப் பொருத்தவரையிலும் அது வென்றவர்கள் தோற்றவர்களின் மீது திணித்த ஒரு நீதிதான். தென்னாபிரிக்காவைத் தவிர பெரும்பாலான நிலை மாறு கால நீதிக் களங்களில் நிலைமை அதுதான். நூரம்பேர்க் தீர்ப்பாயத்தில் தொடங்கி இலங்கை வரையிலும் நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் பெரும்பாலும் அவ்வாறுதான் காணப்படுகின்றன. வென்றவர்கள் தோற்றவர்களுக்கு வழங்கும் நீதி.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை யாப்புருவாக்கமாகக் குறுக்கக்கூடாது. மாறாக,அதை இனங்களுக்கு இடையிலான உடன்படிக்கையில் இருந்து தொடங்க வேண்டும். மிகக்குறிப்பாக அதற்கு மூன்றாவது தரப்பின் கண்காணிப்பும் மத்தியஸ்தமும் வேண்டும். அவ்வாறு மூன்றாவது தரப்புக்கள் தலையிடுவது என்று சொன்னால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ்மக்கள் நொதித்தால்தான் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை குழம்பும்.இலங்கைத் தீவின் அரசியல் வலுச்சமநிலை குலையும் போதுதான் மூன்றாவது தரப்புகள் அதில் தலையிடும்.இந்திய-இலங்கை உடன்படிக்கை,ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை இரண்டும் அவ்வாறு தமிழ்மக்கள் நொதித்தபடியால் கிடைத்தவைதான்.நிலைமாறு கால நீதிகூட மகிந்தவைத் தோற்கடிப்பதற்கான இந்திய மற்றும் அமெரிக்கத் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கான ஆட்சி மாற்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களையும் பங்காளிகள் ஆக்கிய வெளியரசுகள் இலங்கைத்தீவில் மறைமுகமாக ஐநாவுக்கடாக ஒரு தலையீட்டைச் செய்தன. எனவே தமிழ் மக்கள் நொதிக்கவில்லையென்றால் மூன்றாவது தரப்புகள் தலையிடாது.மூன்றாவது தரப்புகளின் கண்காணிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு ஊடாக ஒரு தீர்வைப் பெறமுடியாது. அப்படிப் பெற விளைந்தால் அது அனேகமாக,மைத்திரிபால சிறிசேன கூறியதுபோல “சிங்கள மக்களையும் பயமுறுத்தாத ;தமிழ் மக்களையும் பயமுறுத்தாத எதோ ஒரு “எகிய ராஜ்ய”வாகதான் இருக்கும்.வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது. நாடாளுமன்றத்துக்கூடாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வைப் பெற முடியாது என்பதுதான் கடந்த 75ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் ஆகும். போராடியதால்தான்,மூன்றாவது தரப்பின் தலையீடு காரணமாகத்தான் 13ஆவது திருத்தமாவது கிடைத்தது.அதையும் சிங்களபௌத்த அரசு கெட்டித்தனமாக ஒற்றையாட்சிக்குள் பெட்டி கட்டிவிட்டது. எனவே தமிழ்மக்கள் நொதிக்க வேண்டும்.போராட வேண்டும். போராடவில்லை என்றால் தீர்வு இல்லை. https://www.nillanthan.com/niche/time-line/அரசியற்-பத்தி/
  12. கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. இதை இங்கே ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால், கடந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகத்தான். முதலாவது விடயம்,கடந்த திங்கட்கிழமை நடந்த பிரித்தானிய அரசாங்கத்தின் துணைப் பிரதமருக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு. இரண்டாவது விடயம், சுவிஸ் தூதராகத்தால் கடந்த 19ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட அதே தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பு பற்றிய விடயம். பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தபோது அதில் கஜேந்திரகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் ஒரு கருத்துத் தொடர்பாக ஒரு தகவல் ஊடகம் ஒன்றில் வெளிவந்தது. ஆனால் கஜேந்திரகுமார் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தார். இதில் கஜேந்திரகுமார் அவ்வாறு கூறினாரா இல்லையா என்ற விவாதத்தை தனியாக வைத்துக் கொள்ளலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு தொடர்பாக செய்திகளைக் கசியவிடுவது பற்றியது. அதைவிட முக்கியமாக,கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டுக்குள் தூதரகங்களை இழுத்து விடுவது. இப்படித்தான் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு கடந்த 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்புத் தொடர்பாகவும் தகவல்கள் முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கசிந்தன. அதுதொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் சந்தோசமாக இல்லை என்றும் தெரிகிறது. இங்கேயும் ராஜதந்திர சமூகத்துடனான இடையூடாட்டங்கள் ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டிருக்கின்றன. இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்றா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவானாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தூதரங்கள் தொடர்பான செய்திகள் கசிய விடப்படுகின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒரு பகுதியினர் ஓர் அரசு போலவும் சிந்திக்கவில்லை; ஒரு தேசமாகவும் சிந்திக்கவில்லை; ஆகக்குறைந்தது ராஜீய உறவுகளில் பேணப்பட வேண்டிய நிதானத்தோடாவது சிந்திக்கவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. மேலும் ஒரு சம்பவம். இது வடமாகாண சபை இயங்கிக் கொண்டிருந்த பொழுது நடந்தது. அதில் வயதால் மூத்த தலைவர் ஒருவர் கனேடியத் தூதரகத்துடனான சந்திப்பு ஒன்றின் போது கூறப்பட்ட சில விடயங்களை சந்திப்பு முடிந்த கையோடு ஊடகங்களுக்கு அப்பாவித்தனமாக வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதுவும் அப்பொழுது தூதரக வட்டாரங்களில் அதிருப்தியோடு பார்க்கப்பட்டது. தமிழ்க் கட்சித் தலைவர்களில் ஒருபகுதியினர் ராஜதந்திர சமூகத்தைச் சந்திக்கும்போது ஓர் அரசைப்போல சிந்தித்து, ஓர் அரசைப் போல பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்பதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம் ஆகும். ஓர் அரசைப்போல சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் ஒரு தேசமாகக்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள் இல்லை என்பதைத்தான் அண்மைக்கால நடப்புகள் நமக்குக் காட்டுகின்றன. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசர் தமிழ் மக்களிடமிருந்த ஒரு ராஜ்ஜியத்தை தோற்கடித்தார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ் மக்கள் ஐந்து நூற்றாண்டுகளாக அரசற்ற தரப்பாகவே இருந்து வருகிறார்கள். இடையில் ஆயுதப் போராட்டம் 1985 வசந்த காலத்தில் தொடங்கி 2009 மே மாதம் வரையிலும் ஒரு கருநிலை அரசைக் கட்டி எழுப்பியது. அந்த கருநிலை அரசின் ஒரே ராஜதந்திரியாக அன்ரன் பாலசிங்கம் உலகம் முழுவதும் பிரகாசித்தார். அவர் துறைசார் ராஜதந்திரி அல்ல. முறைசாரா ராஜதந்திரிதான். ஆனாலும் ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றில் பாலசிங்கம் உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் ராஜதந்திர முகமாக மதிக்கப்பட்டார். லண்டனில் அவருடைய இறுதி நிகழ்வானது, வெளி நாட்டுப் பிரதிநிதிகள் அதிகம் கலந்துகொண்ட ஒரு தமிழ் நிகழ்வாகக் காணப்பட்டது. சுமார் நான்கு நூற்றாண்டுகளில் அதிக காலம் அரசு இல்லாத சமூகமாக இருந்த காரணத்தாலோ என்னவோ, தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அரசைப்போல சிந்திக்கும் மாண்பு அனேகமாக இல்லாமல் போய்விட்டது. ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாத மக்கள் ஓர் அரசைப்போல சிந்திப்பார்கள், செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினமானதுதான். ஆனால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் வெளி உலகத்தை அணுகும்போது ஓர் அரசைப் போல சிந்தித்து செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குள் தூதரகங்கள் இழுத்துவிடப்படும். நிறுவன மயப்படாத தனியோட்டங்களே அதிகரிக்கும் இந்த இடத்தில் மேலும் ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டலாம். சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளினால் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார்கள். அதன் பின்னணியில் ஒரு புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்துக்கு ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்களுக்கு இடையில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் சில கட்சித் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைப்பாட்டோடு காணப்பட்டார்கள். இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதனை அங்கிருந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொலைபேசியில் தொடர்பு எடுத்திருக்கிறார். தூதரகத்தின் இரண்டாம் நிலை அதிகாரியோடு நடந்த அந்த உரையாடலை அவர் எல்லாரும் கேட்கக்கூடியதாக கைபேசியின் ஒலிபெருக்கியில் விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்தத் தகவல் பின்னர் ஊடகங்களுக்கும் கசிய விடப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தூதரகத்துக்கு அப்படி ஒரு அனுபவம் அதற்கு முன் ஏற்பட்டிருக்குமோ தெரியாது. ஆனால் அப்படிப்பட்ட அனுபவங்களின் பின் ராஜதந்திரிகள் தமிழ்க் கட்சித் தலைவர்களை நம்பிக் கதைப்பார்களா? மூடிய அறைக்குள் நடக்கும் சந்திப்புகளில் கூறப்பட்ட விடயங்களை சரியாகவோ, பிழையாகவோ அல்லது கட்சி முரண்பாடுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலோ வெளியே கசியவிடும் அரசியல்வாதிகளை எந்தத் தூதரகமாவது நம்பிக் கதைக்குமா? நமது தமிழ் தலைவர்களில் எத்தனை பேர் அவ்வாறு நம்பி கதைக்கத்தக்க தலைவர்களாகக் காணப்படுகிறார்கள்? எனது நண்பர் ஒருவர் தென்னராட்சியைச் சேர்ந்தவர். அவர் ”கழண்ட கத்திகள்” என்ற ஒரு சொற்றொடரைப் பயன்படுத்துவார். அதன் பொருள் கத்தியின் பிடி கழண்டு விட்டது, அல்லது பிடி கத்தியோடு இறுக்கமாக இல்லை என்பதாகும். அவ்வாறு கழண்ட கத்தியால் எதையாவது வெட்டினால்,அது ஒழுங்காக வெட்டாது மட்டுமல்ல,வெட்டுகிறவரின் கையையும் நன்னி விடும் ;காயப்படுத்தி விடும். இப்பொழுதுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் அவ்வாறு கழண்ட கத்திகள்தானா? ராஜதந்திர சமூகம் அவர்களை நம்பி உறவாடி, ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளுமா?இந்தக் கழண்ட கத்திகளை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் எதைப் பெறப் போகிறார்கள்? https://www.nillanthan.com/8149/
  13. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் adminFebruary 22, 2026 நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது. அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன். கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று . அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் . https://globaltamilnews.net/2026/229559/
  14. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு adminFebruary 22, 2026 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2026/229553/
  15. இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை adminFebruary 22, 2026 இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது. இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் https://globaltamilnews.net/2026/229548/
  16. யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு adminFebruary 22, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்றைய தினத்துடன் நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு மொத்தம் 12 அமர்வுகளாக நான்கு நாட்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி அமர்வுடன் இனிதே நிறைவுற்றது. இம்முறை சாதனை அளவாகப் பெருமளவிலான மாணவர்கள் தங்களது கல்வித் தகமைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.மொத்தமாக 3,252 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனா். இதில் கலாநிதி (PhD), முதுகலை (Masters), இளங்கலை (Bachelor’s) பட்டங்கள் மற்றும் டிப்ளோமா தகமைச் சான்றிதழ்கள் உள்ளடங்குகின்றன. ஒவ்வொரு நாளும் பட்டதாரிகள் ஊர்வலமாக அழைத்து வரப்படும்போது, நாதஸ்வர மற்றும் மேள வாத்தியங்களுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த 40-ஆவது பட்டமளிப்பு விழா, கோவிட் காலத்திற்குப் பிந்தைய கல்விச் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இம்முறை விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களின் சாதனைகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/229562/
  17. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 22 பெப் இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் சிறிலங்கா (Y4) ENG எதிர் SL 15 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும், 7 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும், @வீரப் பையன்26 இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்! @வீரப் பையன்26 க்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் ENG வசீ ENG புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் ENG ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் SL கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 WI சுவி ENG கிருபன் SL கோஷான் சே SL அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் ENG ரசோதரன் SL பிரபா ENG நிலாமதி SL நந்தன் ENG இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா (X1) எதிர் தென்னாபிரிக்கா (X4) IND எதிர் SA அனைவரும் இந்தியா வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் IND வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் IND அல்வாயன் IND ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது தென்னாபிரிக்கா அணி முட்டைகளைப் பரிமாறுமா? @வீரப் பையன்26 🖕
  18. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் நடக்க இருந்தது. பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
  19. ரிஷிமூலம் ஆர். வி. “சகதேவன் பணயம்!” வழக்கம் போலவே சகுனி திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். அதே கனவுதான் என்றுதான் உணர வழக்கம் போலவே ஒரு நிமிஷம் ஆனது. அவரது இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பதின்மூன்று வருஷமாக ஒரே கனவைக் கண்டு விழித்துக் கொண்டாலும் அந்தக் கனவு தன் இதயத்தை இன்னும் கிழிப்பதை உணர்ந்ததும் அவரது இதழ்களில் வெறுப்பும் விரக்தியும் கலந்த ஒரு புன்னகை எழுந்தது. பக்கத்திலிருந்த விளக்கைத் தூண்டிவிட்டார். அருகிலிருந்த குடுவையிலிருந்து சிறிது நீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எத்தனை முயன்றாலும் இனி மேல் தூங்க முடியாது என்பது அவருக்குத் தெரிந்த விஷயம்தான். அருகிலிருந்த மணல் கடிகையை நோக்கினார். இன்று இரண்டாம் ஜாமம் கூட முடிந்திருக்கவில்லை. இன்னொரு குடுவையிலிருந்து ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் காந்தாரத்தின் கசப்பு நிறைந்த மதுவை சரித்துக் கொண்டார். அவரது கைகள் அனிச்சையாக அவரது கச்சையில் கட்டி இருந்த பகடைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. மதுவைப் பருகிக் கொண்டே தன் அறையை விட்டு வெளியே நடந்தார். அவரது கால்கள் தானாக உலூகனின் மகனும் தன் பன்னிரண்டு வயது பேரனும் ஆன துர்வசுவின் அறைக்குள் நுழைந்தன. உறங்கிக் கொண்டிருந்த துர்வசுவையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனது படுக்கையில் உட்கார்ந்தால் அவனது தூக்கம் கெட்டுவிடலாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சியால் நின்று கொண்டே இருந்தார். எத்தனைதான் ஓசை எழுப்பாமல் இருக்க முயற்சி செய்தாலும் அவர் அசையும்போதெல்லாம் பகடைகள் ஒன்றோடொன்று இடித்துக் கொள்ளும் ஒலி அந்த நிசப்தமான இரவில் கேட்கத்தான் செய்தது. துர்வசு முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தான். பகடைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வெளியேறினார். முன்கட்டில் இருந்த தன் அலுவல் அறைக்குள் நுழைந்தார். அவரது அந்தரங்க சேவகனான விப்ரசேனன் அங்கே உட்கார்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தான். கீழ் ஸ்தாயியில் சகுனி உறுமியதும் அவன் விழித்துக் கொண்டான். வேகமாகச் சென்று சில கோதுமை அப்பங்களையும் கொஞ்சம் பழச்சாறையும் கொண்டுவந்தான். அதற்குள் சகுனி ஒரு மஞ்சத்தில் அமர்ந்து ஓலைகளைப் புரட்டத் தொடங்கி இருந்தார். அவரது மனம் கண்ணன், கண்ணனின் தூது, கௌரவ பாண்டவர்கள் சார்பில் எந்தெந்த அரசர்கள் போராடுவார்கள், படை பலம், முக்கிய வீரர்கள், கர்ணனிடம் இருக்கும் சக்தி ஆயுதம் என்று பல நாட்களாகப் போட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளை மீண்டும் போடத் தொடங்கியது. பாஞ்சாலமும் யாதவர்களும் விராடனும் சல்யனும் தங்கள் முழு படை பலத்தையும் பாண்டவர்கள் சார்பில் இறக்குவார்கள் என்ற புள்ளியையே அவர் மனம் மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது. படைபலக் கணக்குகளில் நாழிகைகள் கழிவது தெரியாமல் மூழ்கிக் கிடந்தபோது கதவு மெலிதாகத் தட்டப்பட்டது. அதற்குள் சூர்யோதயமா என்று வியந்து கொண்டே சகுனி நிமிர்ந்தார். அருகே வந்த விப்ரசேனன் “தங்களைப் பார்க்க யாதவத் தலைவரும் பாண்டவத் தூதரும் ஆன…” என்று ஆரம்பித்தான். சகுனி “என்ன! என்ன! என்னை சந்திக்க கண்ணன் வந்திருக்கிறானா?” என்று பெரும் வியப்படைந்தார். “நேரம் என்ன?” என்று கேட்டார். “பிரம்ம முகூர்த்தத்தில் சில நிமிஷங்கள் கழிந்திருக்கின்றன” என்றான் விப்ரசேனன். “இத்தனை காலையில் எழுந்து கண்ணன் என்னைப் பார்க்க ஏன் வர வேண்டும்?” என்று கேட்டார் சகுனி. விப்ரசேனனிடம் அவர் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அறிந்திருந்ததால் அவன் மௌனமாகவே இருந்தான். குறிப்பறிந்து விப்ரசேனன் கொண்டு வந்திருந்த உத்தரீயத்தை அணிந்து கொண்ட சகுனி மேலே அவருக்குப் பிடித்த பழுப்பு நிற சால்வையையும் போர்த்திக் கொண்டார். வாசலை நோக்கி விரையும்போது அவரது கைகள் தன்னிச்சையாக அவரது கச்சையில் இருந்த பகடைகளைத் தொட்டுக் கொண்டன. அவரைக் கண்ட கண்ணன் எழுந்தான். அந்த அதிகாலையிலும் மாலை, மயிற்பீலி, வாசனை திரவியம் என்று கண்ணன் முழு அலங்காரத்தில் இருந்ததை சகுனியின் மனதில் ஒரு பகுதி குறித்துக் கொண்டது. கண்ணன் தன் எதிரி என்ற நினைவு அவர் மனதில் பூரணமாக இருந்தாலும் அவர் முகம் தானாக மலர்ந்தது. எதிரிகளையே இப்படி மனம் மலரச் செய்யும் கண்ணன் தன் நண்பர்களான பாண்டவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவான், அந்த மகிழ்ச்சி தனக்கும் கௌரவர்களுக்கும் கர்ணனுக்கும் இல்லாமல் போய்விட்டதே என்று சகுனி ஒரு நொடி மனதோடு நொந்து கொண்டார். மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும் சகுனி கண்ணனை நோக்கி விரைவது நிற்கவே இல்லை. கண்ணனின் அருகே சென்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார். “வர வேண்டும், வர வேண்டும்! கண்ணா, நீ இங்கே எதற்காக வந்திருந்தாலும் உன்னைப் பார்த்ததில் உண்மையாகவே பெருமகிழ்ச்சி!” என்றார். “எனக்கும், காந்தார மன்னரே!” என்று கண்ணன் புன்முறுவல் செய்தான். சகுனியின் முகத்திலும் ஒரு புன்முறுவல் எழுந்தது. “நான் காந்தார மன்னன் மட்டுமல்லவே கண்ணா! உன் மகன் சாம்பனின் மாமனாரின் மாமன், உனக்கும் மாமன் முறை அல்லவா!” “திருத்திக் கொண்டேன், மாமா!” “வா, உள்ளே சென்று பேசுவோம்!” என்று சகுனி கண்ணனை தன் அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார். மஞ்சத்தின் மீது சிதறிக் கிடந்த ஓலை நறுக்குகளை ஒரு பக்கம் தள்ளினார். கண்ணன் “ஜாக்கிரதை, மாமா! உங்கள் ரகசியங்கள் ஏதாவது உங்கள் எதிரிக்கு தெரிந்துவிடப் போகிறது!” என்று சிரித்தான். தன் கையாலேயே விப்ரசேனன் புதிதாகக் கொண்டு வந்திருந்த அப்பங்களை பரிமாறியபடி “உனக்குத் தெரியாத ரகசியம், நீ யூகிக்க முடியாத ரகசியம் ஏதும் உண்டா கண்ணா? என் மனம் எப்படி எல்லாம் சிந்திக்கும் என்று என்னை விட உனக்கு அதிகம் தெரியும் என்றுதான் எனக்கு சில சமயம் தோன்றுகிறது” என்று சகுனியும் நகைத்தார். “இல்லை மாமா, அப்படித் தெரிந்திருந்தால் திரௌபதியை மானபங்கம் அடைய விட்டிருப்பேனா என்ன?” என்று கண்ணன் பெருமூச்செறிந்தான். “கண்ணா, உன்னிடம் மனம் திறந்து உண்மையைச் சொல்கிறேன். பாண்டவர்களின் நாட்டைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை துவாரகைக்கோ பாஞ்சாலத்துக்கோ துரத்திவிடுவது மட்டும்தான் என் திட்டம். தம்பிகளையும் மனைவியையும் தன்னையுமே அந்த மூடன் பணயம் வைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு புறம் மூடன், மறுபுறம் மூர்க்கன். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. என்னை யாரும் நம்பப் போவதில்லை, நீ ஒருவனாவது…”. சகுனியின் குரல் அடைத்தது. அவர் மௌனமாக ஜன்னலை நோக்கினார். “நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கக் கூடும்தான் மாமா. எனக்கு விஷயம் தெரிந்தபோது பிதாமகரும் ஆசார்யரும் திருதராஷ்டிரரும் இருந்துமா இந்த அநியாயம் நடந்தது என்ற ஆதங்கத்தை விட கூர்மதியாளர் சகுனி கூடவா இதை தடுக்கவில்லையா, இனி போரை அவரால் கூடத் தவிர்க்க முடியாதே என்ற வியப்புதான் அதிகமாக இருந்தது. ஆனால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என்னால் உங்கள் வார்த்தைகளை முழுவதுமாக நம்ப முடியவில்லை” என்று கண்ணன் கையை விரித்தான். இருவரும் எங்கோ வெறித்தனர். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் சகுனி இன்னும் இரண்டு அப்பங்களை எடுத்து கண்ணனின் தட்டில் வைத்தார். “பாண்டவர்களோடு போரை நீங்கள் விரும்பவில்லை என்றால் ஐந்து கிராமங்களையாவது…” என்று கண்ணன் ஆரம்பித்தான். சகுனி அவன இடைமறித்தார். “தான் விரும்பாத அறிவுரைகளை துரியன் காது கொடுத்துக் கேட்பதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் சில காலமாகவே அவன் என்னிடம் துரியனாக அல்ல, ஹஸ்தினபுரி இளவரசனாகத்தான் நடந்து கொள்கிறான். பாண்டவர்களோடு போரிட வேண்டுமென்றால் பதிமூன்று வருஷங்களுக்கு முன்பே போரிட்டிருக்கலாமே கண்ணா! போரில் நாங்கள் வெல்வோம் என்பது நிச்சயமில்லை என்பது கூடவா எனக்குப் புரியாது? துரியனின் அகங்காரம், கர்ணன் மீது அவனுக்கு இருக்கும் முரட்டு நம்பிக்கை, அவன் கண்களை மறைக்கிறது. ஆனால் நான் என்ன கணக்கு போடுவேன் என்று நீ கூடவா யூகிக்கவில்லை?” கண்ணனின் உதட்டில் புன்முறுவல் அரும்பியது. “நாமிருவரும் எப்போதும் மற்றவர் போடும் கணக்கு என்ன என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம் இல்லையா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ருக்மணியை விட உங்களைப் பற்றி நினைக்கும் நேரம்தான் அதிகம்” என்று கண்ணன் மெதுவாக நகைத்தான். சகுனியின் உடலில் இருந்த இறுக்கம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. அவரும் புன்முறுவல் புரிந்தார். “ஆம் கண்ணா! நான் அனிச்சையாக செய்யும் செயல்கள் இரண்டுதான் – ஒன்று பகடைகளை உருட்டுவது, இன்னொன்று கண்ணன், கண்ணன் என்று உன் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருப்பது! உண்மையைச் சொல்லப் போனால் நான்தான் உன் முதன்மை பக்தன்!” என்று சகுனியும் சிரித்தார். கண்ணன் ஒரு மஞ்சத்தில் அப்பத் தட்டை எடுத்துக் கொண்டு ஒரு மஞ்சத்தில் உட்கார்ந்தான். அப்பத்தை உடைத்தான். ஆனால் அப்பத்தை ஒரு விள்ளலுக்கு மேல் கண்ணன் உண்ணவில்லை. “இத்தனை காலையில் அப்பங்களை சாப்பிட முடிவதில்லை மாமா, வயதாகிறதே” என்று சொல்லிக் கொண்டே தட்டை ஒரு புறம் தள்ளினான். சகுனி “இந்தப் பழச்சாறையாவது கொஞ்சம் அருந்து கண்ணா” என்று ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் கொஞ்சம் பழச்சாறை ஊற்றினார். கிண்ணத்தை கையில் எடுத்துக்கொண்டு கண்ணன் சகுனியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். “பாண்டவர்கள் ஐவரும் முற்றிலும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா, மாமா?” என்று நேரடியாகக் கேட்டான். சகுனி கண்ணனின் கண்களைத் தவிர்த்தார். நிலத்தை நோக்கினார். “அர்ஜுனன், அர்ஜுனன் ஒரு வருஷ அஞ்ஞாதவாசம் முடிவதற்குள்ளேயே வெளிப்பட்டுவிட்டான், அவர்கள் மீண்டும் காட்டுக்குப் போவதுதான் நியாயம்” என்று மெதுவான குரலில் சொன்னார். கண்ணன் கடகடவென்று பெரிதாக நகைத்தான். “நியாயம்! நியாயம்! அரக்கு மாளிகை நியாயம்!” பின்னர் கொஞ்சம் இருமினான். பழச்சாறை மீண்டும் கொஞ்சம் பருகிக் கொண்டான். மீண்டும் சகுனியை புன்முறுவலோடு நோக்கினான். “இங்கே நாமிருவர் மட்டுமே இருக்கிறோம், வெளிப்படையாகவே பேசுவோமே!” என்றான். ஒரு நிமிஷம் இருவரும் மௌனமாக இருந்தனர். பிறகு கண்ணன் லேசாக செருமிக் கொண்டான். “இரவு அமைதியாகத் தூங்குகிறீர்களா? இன்னும் எத்தனை காலம் இப்படி அமைதி இழந்து மகிழ்ச்சி இழந்து இரவுகளைக் கழிக்கப் போகிறீர்கள்?” என்றான். “மாமா, இந்தப் போர் தவிர்க்க முடியாதது. பதின்மூன்று வருஷங்களுக்கு முன் சகதேவன் பணயமாக வைக்கப்பட்டபோதே போர் தொடங்கிவிட்டது. இப்போது பீஷ்ம துரோண பீமார்ஜுனர்கள் தங்கள் அம்புகள் மூலம் போராடப் போகிறார்கள், அவ்வளவுதான். ஆனால் போர் உங்கள் அறிவுக்கும் என் அறிவுக்கும் மத்தியில்தான். என்னால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும், ஆனால் அர்ஜுனனின் அழிவை எப்படித் தவிர்ப்பது என்று எனக்கே தெரியவில்லை.” அரக்கு மாளிகை என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கண்ணன் சொன்ன வேறு எதுவுமே சகுனியின் காதில் ஏறவில்லை. சாளரத்தின் வெளியே இன்னும் இருளாக இருந்த ராஜவீதியை பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணன் எதிரில் இருப்பதையே மறந்துவிட்டது போல இருந்தது. கண்ணனும் எதுவும் பேசாமல் அவர் நிகழ்காலத்துக்கு வருவது வரை காத்திருந்தான். அதற்கு சில நிமிஷங்கள் ஆயிற்று. கம்மிய குரலில் சகுனி சொன்னார் – “கண்ணா, ஒரு காலத்தில் சகதேவனும் உலூகனும் நெருங்கிய தோழர்கள், சகதேவன் இந்த மாளிகையில்தான் பாதி நேரத்தைக் கழிப்பான். ஏன் அவனுக்கு நிமித்தக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தந்தவனே நான்தான். இன்று அவன் என்னைத் தாண்டி வெகு தூரம் போய்விட்டான்” என்று பெருமூச்செறிந்தார். சகுனி தொடர்ந்தார் – “என் வாழ்வில் நான் செய்த தவறு என்பது அரக்கு மாளிகை விவகாரம்தான். பாண்டவர்கள் எரிந்து போனார்கள் என்று நம்பிய நாட்களில் இந்த மூர்க்கன் அரசனான பிறகு தற்கொலை செய்து கொள்வதாகவே முடிவெடுத்திருந்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிருஷ்டமோ பாண்டவர்கள் இறக்கவில்லை. நீ மஹா அறிவாளிதான், ஆனால் உனக்கும் தெரியாத ரகசியங்கள் உண்டு.” கண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான். சகுனி தன்னை மெதுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கண்ணன் சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். ஆனால் கண்ணன் எதிர்பார்த்தற்கு மாறாக சகுனி அவன் கண்களை நேராகப் பார்த்தார். “வாரணாவதம் முடிந்து போன கதை மாமா. இப்போது அர்ஜுனனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டும். உங்களால்தான் இதை செய்ய முடியும்.” சகுனியின் உடலில் சிறு நடுக்கம் இன்னும் இருந்தாலும் அவர் குரல் உறுதியாக இருந்தது. “பாண்டவர்களின் முதல் எதிரி துரியோதனன் அல்ல, நான்தான் என்பது நீ அறியாததா? உன் கணக்கு எனக்கே புரியவில்லையே!” “உங்களுக்குத் தெரியாததை நான் சொல்லிவிடப் போவதில்லை. பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும் அவர்கள் எல்லாரும் இறந்த மாதிரிதான். அதை உங்கள் ஆழ்மனதில் நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என்று கண்ணன் மெதுவான குரலில் முணுமுணுத்தான். சகுனியின் குரல் தழுதழுத்து மீண்டும் உறுதி கொண்டது. “துரியனின் மேலாண்மைக்காகத்தான், அவன் உண்மையிலேயே பாரதத்தின் சக்ரவர்த்தி ஆகும் நாளைப் பார்க்கத்தான், நான் உயிர் தரித்திருக்கிறேன். என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இந்த அரசியல் மற்றும் போரில் இடமில்லை கிருஷ்ணா!” என்றார். “எல்லா விதத்திலும் துரியோதனனுக்காக ஆடுங்கள். ஆனால் நான் அஞ்சும் அர்ஜுனன் அழிவை மட்டும் பத்து நாட்கள் தள்ளிப் போடுங்கள். மற்றவற்றை நான் சமாளித்துக் கொள்கிறேன்.” சகுனி இப்போது விட்டத்தை வெறித்தார். “கண்ணா, என்னால் பாண்டவர்களின் வீரத்த்துக்கு அணை போட முடியும். ஆனால் பாண்டவர்களோடு உன்னையும் சேர்த்து எதிர்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அர்ஜுனன் அழிந்தாலும் சுதர்சன சக்ரமும் சார்ங்க வில்லும் கௌரவர்களை அழித்துவிடும் என்றுதான் பயப்படுகிறேன் கிருஷ்ணா!” “உங்கள் ஆட்டத்தை என்னிடமே ஆரம்பித்துவிட்டீர்களா? நான் பாண்டவர்கள் பக்கம்தான். ஆனால் கௌரவர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான் மாமா! பிதாமகருக்கும் ஆசார்யருக்கும் ஏன் துரியோதனனுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்க எனக்கு விருப்பமில்லைதான். ஆனால் நான் எப்படி போராடாமல் இருக்க முடியும், என்ன காரணம் சொல்ல முடியும்?” சகுனி புன்முறுவலித்தார். கண்ணன் கொஞ்சம் திகைத்து அவரை மீண்டும் உற்று நோக்கினான். சில நொடிகளில் அவன் திகைப்பு அகன்றது. “வருகிறேன் மாமா! அடுத்த சந்திப்பு போர்க்களத்தில்தான். எனக்கு ஆசி அளியுங்கள்” என்றபடி சகுனியின் தாள் பணிந்தான். சகுனி அவனைத் தடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் வாய்க்குள்ளாகவே “அர்ஜுனன் மட்டுமல்ல, பாண்டவர்கள் ஐவருக்கும் கவசமாக இரு” என்று முணுமுணுத்தார். “இன்னும் கொஞ்ச நாளாவது நிம்மதியாக உறங்குங்கள் மாமா!” என்றபடியே கண்ணன் விடை பெற்றான். கண்ணனை வாசல் வரை வந்து வழியனுப்பிய சகுனி கடைசியாகச் சொன்னார் – “ஐந்து நாட்கள்!” கண்ணனை சந்தித்த பின்னர் சகுனி ஒரு புது மனிதராக மாறினார். உற்சாகம் அவரது ஒவ்வொரு செயலிலும் ததும்பியது. படை திரட்டும்போது துரியோதனனை துவாரகை சென்று கண்ணனிடம் உதவி கேட்குமாறு வற்புறுத்தியது அவர்தான். கர்ணன் நேரடியாகவே “மாமா, உங்களுக்கு மூளை கெட்டுவிட்டதா? தூது வந்த கிருஷ்ணனை நாம் கொல்லப் பார்த்தோம், அர்ஜுனனின் மைத்துனன் நமக்கெப்படி உதவுவான்?” என்று கேட்டான். சகுனி கண்ணன் மறுத்தால் நமக்கென்ன நஷ்டம் என்று திருப்பிக் கேட்டார். போர் என்று வந்தாகிவிட்டது, எந்த சிறு வாய்ப்பையும் நாம் விட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். அவரது வற்புறுத்தலால்தான் துரியோதனன் துவாரகை சென்று கண்ணனின் உதவியைக் கேட்டதும், யாதவ சேனையைப் பெற்றதும். அதே போல சல்லியனுக்கு விருந்தோம்பி அவனையும் கௌரவர்கள் பக்கம் திருப்பும் யோசனையும் அவர் மூளையில் உதித்ததுதான். இரு புறமும் ஒன்பது அக்ரோணி சேனை இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த கௌரவர்கள், இப்போது யாதவ சேனையும், சல்லியனின் சேனையும் தங்கள் பக்கம் சேர்ந்ததால் பதினோரு அக்ரோணி சேனையைக் கொண்டு ஏழு அக்ரோணி சேனையோடு போரிடும் மகிழ்ச்சியான நிலைக்குக் காரணம் சகுனிதான் என்பதை உணர்ந்திருந்தார்கள். கண்ணன் வெறும் தேரோட்டியாகத்தான் இருப்பான், போரிடமாட்டான் என்பதும் அவர்கள் மகிழ்ச்சியை அதிகரித்தது. சகுனியே தங்கள் பிரதம ஆலோசகர் என்று துரியோதனன் வெளிப்படையாக அறிவித்திருந்தான். தங்கள் சேனைக்கு கர்ணனை தலைவனாக நியமிக்க வேண்டும் என்று துரியோதனன் சொன்னபோது அவனை மறுத்துப் பேசியது சகுனி மட்டுமே. கர்ணனின் தலைமையில் பீஷ்மரும் துரோணரும் முழு மனதோடு போரிடமாட்டார்கள் என்று அவர் சொன்னதை ஏற்றுத்தான் பீஷ்மர் தலைமை சேனாபதியாக நியமிக்கப்பட்டார். பீஷ்மரை முழு மனதோடுதான் தலைமை சேனாபதியாக நியமித்திருக்கிறோம் என்று அவரும் நினைக்க வேண்டும், அதற்காக மன்னர்களையும் பெருவீரர்களையும் அவர் தலைமையில் அணிவகுத்து நிற்கச் செய்வோம், ஒவ்வொருவரையும் மரியாதை நிமித்தம் உனக்கு அறிமுகம் செய்யச் சொல்வோம் என்று அறிவுரை சொன்னதும் அவர்தான். ஆனால் அது ஒன்றுதான் தப்புக் கணக்காக முடிந்தது, கர்ணன் பீஷ்மரின் தலைமையில் போரிட மறுத்து வெளியேறினான். பீஷ்மருக்குப் பிறகு கர்ணனை தலைமை சேனாபதியாக ஆக்க வேண்டும் என்று சொன்னபோது துரோணரின் பேரை முன் வைத்ததும் சகுனிதான். துரோணரை யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்துத் தருவேன் என்று வாக்குத் தர வைத்ததும் அவர் சூழ்ச்சிதான். பதினோராம் நாள் போரில் கர்ணன் அர்ஜுனனை எதிர்ப்பேன் என்று சொன்னபோது சகுனி அதை மறுத்துப் பேசினார். அர்ஜுனனை கர்ணன் தன் சக்தி ஆயுதத்தால் கொன்றுவிட்டால் யுதிஷ்டிரனை உயிரோடு பிடித்தாலும் போர் நிற்காது என்று அவர் சுட்டிக் காட்டினார். யுதிஷ்டிரனைப் பிடிக்க முடியவில்லை என்றால்தான் கர்ணன் அர்ஜுனனை எதிர்க்க வேண்டும் என்று சொன்னபோது அவரது புத்தி கூர்மையை துரியோதனன் மிகவும் சிலாகித்தான். அதே காரணத்தால்தான் அர்ஜுனனுக்கு எதிராக சம்சப்தகனாக – அர்ஜுனனோ தானோ ஒருவர் இறக்கும் வரை போரிட – கர்ணன் போகவில்லை. பதினான்காம் நாள் போரிலோ பீமன் கர்ணனோடு போர் நீண்ட நேரம் நடந்ததால் கர்ணனுக்கு அர்ஜுனனோடு போரிடும் வாய்ப்பே இல்லாமல் போனது. அன்று இரவில் கர்ணனின் வெல்ல முடியாத சக்தி ஆயுதத்தால் கடோத்கஜன் வீழ்ந்தான். சகுனி பல வருஷங்களுக்குப் பிறகு அன்றுதான் நிம்மதியாக உறங்கினார். சகுனியின் மைந்தன் உலூகனும் சகதேவனும் சிறு வயதில் விளையாட்டுத் தோழர்கள். அதனால் பதினேழு நாட்களும் அவனைத் தவிர்த்தே வந்த சகதேவன் பதினெட்டாம் நாள் போரில் உலூகனோடு முதல் முறையாகப் போரிட்டான். சகதேவனுக்கு உலூகன் எந்த விதத்திலும் சமமான வீரனல்லன் என்று உணர்ந்திருந்த சகுனி இதைக் கேள்விப்பட்டு அங்கே விரைந்தார். அதற்குள் உலூகன் இறந்திருந்தான். ஆத்திரம் தலைக்கேறிய சகுனி “உன் தோழனடா!” என்று உறுமியபடியே தன் வில்லை எடுத்தார். ஆனால் ஓரிரு நிமிஷங்களில் அவரது வேகம் குறைந்தது. அவர் இறக்கும்போதும் அவர் முகம் மலர்ந்தே இருந்தது. சகதேவனே “சகுனி என்னுடன் போரிடவே இல்லை, என் கை மூலம் இறக்கவே விரும்பியது போல இருந்தது” என்று கண்ணனிடம் வியந்தான். கண்ணனின் புன்னகை வழக்கம் போலவே ஒரு விடுகதையாகவே இருந்தது. போர் முடிந்தபின் கர்ணனுக்கு நீத்தார் கடன் செலுத்துமாறு யுதிஷ்டிரனை குந்தி கேட்டது பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஹஸ்தினபுரத்துக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அண்ணனைக் கொன்றவன் அரியணை ஏறுவதா என்று ஹஸ்தினபுரத்தின் பல குலக்குழுத் தலைவர்கள் முணுமுணுத்தனர். அதனால்தானோ என்னவோ குந்தி நகுல சகதேவனிடம் சகுனிக்கு ரகசியமாகவே நீத்தார் கடன் செலுத்துமாறு ஆணை இட்டாள். ************ பின்குறிப்புகள்: விளக்கம் #1: ஒரு அக்ரோணி சேனை என்பது 21,870 ரதப்படை, 21,870 யானைப்படை, 65,610 குதிரைப்படை, மற்றும் 109,350 காலாட்படை கொண்டது. விளக்கம் #2: சம்சப்தகர்கள் எதிரிப் படையின் வீரன் ஒருவனுக்கு இறக்கும் வரை போரிட சவால் விடுபவர்கள். அர்ஜுனனோடு போரிடும் சம்சப்தக வீரர்கள் ஏறக்குறைய தற்கொலைப் படைதான். அர்ஜுன்னை போர்க்களத்திலிருந்து வெகு தூரம் பிரிக்க துரோணர் செய்த தந்திரம் இது. விளக்கம் #3: கர்ணனின் முதல் எதிரி அர்ஜுனன்தான் என்றாலும் கர்ணன் அர்ஜுனனோடு நேருக்கு நேராக நின்று போரிடுவது பதினாறாம் நாளில்தான். அதிலும் 12, 13 நாட்கள் போரில் அர்ஜுனனால் தவிர்க்க முடியாத சவாலை விடுத்து அவனோடு நேருக்கு நேர் நின்று போரிட துரோணரும் கௌரவப் படையும் சம்சப்தக வீரர்களைத் தேடும்போது கூட கர்ணன் முன்வருவதில்லை. பதினான்காம் நாள் போரில் அபிமன்யுவுக்காக பழி வாங்க அர்ஜுனன் கௌரவர்களின் வியூகத்திற்குள் ஊடுருவிச் சென்று ஜயத்ரதனைத் தேடும்போது கூட கர்ணன் முன்னின்று அர்ஜுனனினடம் போரிடவில்லை. அப்போது துரியோதனன் கூட அர்ஜுனனை தேடிச் சென்று போரிடுகிறான், ஆனால் கர்ணன் அர்ஜுனனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இத்தனைக்கும் கர்ணனிடம் யாரையும் கொல்லக் கூடிய சக்தி ஆயுதம் இருக்கிறது, அர்ஜுனன் இறந்தால் பாண்டவர்கள் தோற்பது உறுதி. கடோத்கஜன் கௌரவ சேனையை அழிக்கும்போது சக்தி ஆயுதத்தை பிரயோகிக்கும்படி சொல்லும் துரோணரும் துரியோதனனும் அதற்கு முன் அவனிடம் அப்படி வலியுறுத்துவதில்லை. ஏன்? கிருஷ்ணன் தன் மாயையால் கர்ணன் அர்ஜுனனோடு போரிடுவதைத் தவிர்த்தான், கடோத்கஜன் சக்தி ஆயுதத்தால் இறந்தபோது கடோத்கஜனை தியாகம் செய்து அர்ஜுனனைக் காப்பாற்றிவிட்டோம் என்று மகிழ்ந்தான் என்று சொல்வதுண்டு. இது என்னுடைய கற்பனைத் தீர்வு. https://tamilhindu.com/2015/03/ரிஷிமூலம்-சிறுகதை/
  20. சித்தாந்த வினா விடை- தொடர் 5 - அருணைவடிவேல் முதலியார் அளவைகளும் மதங்களும் 'காட்சி, கருதல், உரை' என்னும் மூவகை அளவைகளில், உலகாயதர் காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்வர். ஏனைய அளவைகளை ஏற்க மாட்டார்கள். மாணவன்: 'உலகாயதர்' எனப்படுவோர் யார்? ஆசிரியர்: 'உலகம் ஒன்றே உண்டு; ஏனைய உயிர், இறைவன் முதலிய பொருள்களுள் ஒன்றும் இல்லை' என்போரே உலகாயதர். முதன்மையான பொருள்களை, 'இல்லை' எனக் கூறுதலால், இவர் 'நாத்திகர்' எனப்படுவர். மாணவன்: உலகாயதர் உரையளவையேயன்றி அனுமான அளவையைத் தானும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், புகையைக் கண்டபோது, 'இங்கு நெருப்பு உண்டு' என்று, அதனைப் பாராமலே இவர் உணரமாட்டாரோ? ஆசிரியர்: உணர்வர், ஆயினும் அவ்வாறு உணர்வதையும் அவர், 'காட்சி' எனக் கொள்வர், 'அனுமானம்' எனக் கொள்வதில்லை. மாணவன்: அனுமானத்தை, அவர், 'காட்சி' என்பது எவ்வாறு? ஆசிரியர்: புகையுள்ள இடத்திலெல்லாம் நெருப்பு இருப்பது பல இடங்களில் காட்சியால் உணரப்பட்டதே, ஆகையால், ஓர் இடத்தில் நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு நெருப்பு உண்டு எனத் துணிதலும் காட்சி பற்றித் துணிதலே என்பர் அவர். மாணவன்: அப்படி கூறுதலில் தவறு என்ன? ஆசிரியர்: அதில் தவறு யாதும் இல்லையோ? ஓர் இடத்தில் நெருப்பைக் கண்ணாறகண்டு, 'இங்கு நெருப்பு உள்ளது' என உணர்வதும், நெருப்பைக் காணாது புகையை மட்டும் கண்டு இங்கும் நெருப்பு உள்ளது' என்று உணர்வதும் ஆகிய இரண்டும் ஒன்றுதானோ? 'ஒன்றுதான்” என்றால், விளக்கை ஓர் இடத்தில் அதன் ஒளியினால் மனங்கவரப்பட்டுத் தீண்டி, அது சுடுதலை மெய்யினால் உற்றறிந்த ஒருவன், பிறிதோர் இடத்தில் விளக்கைக் வெறும் கண்களால் மட்டும் கண்டு அதை பற்றித் தீண்டாது, அதன் முன் நின்றே இது சுடும் எனத் துணியுமிடத்தும் முன் தீண்டியது போல அந்தச் சூட்டினால் தாக்குண்டது போல அவன் தாக்குண்ணுதல் வேண்டும். அவ்வான்றி, 'தீண்டியறிந்ததும் வேறே; தீண்டாது கருதி அறிந்ததும் வேறே என்பது அவர்களுக்கு இரண்டும் ஒன்று தான் என்பது போல. ஆகவே, பொருள்களை நேரே காணாமல், ஓர் ஏதுவைக்கொண்டு கருதியுணரும் உணர்வையும் 'காட்சியுணர்வே' எனக் கூறுவது, கூற்றுப் போலியே என்பது தெளிவாகின்றதா? மாணவன்: ஆம்! ஆம்!! நன்கு தெளிவித்தருளினீர்கள்! கருதலளவையையும், 'காட்சியளவையே' எனக் கூறுதல் அறிவுடையோர்க்கு சிரிப்பு வரவழைப்பது என்பதை இப்போது நன்கு உணர்கின்றேன். ஆகவே, உலகாயதர் கருதலளவை பற்றி அறியாது, அதை ஏற்றுக்கொண்டு, 'யாம்' கருதலளவையை ஏற்பதில்லை' எனக் கூறுகின்றனர் என்பது விளங்குகின்றது. உரையளவையையும் இவ்வாறு தம்மை அறியாது அவர் ஏற்றுக்கொள்கின்றனரோ? ஆசிரியர்: 'ஆகமப் பிரமாணம்' எனப்படும் உரையளவையை உலகாயதர் இவ்வளவு தெளிவாக உடன்படவில்லை" ஆயினும், ஒருவாறு உடன்பட்டே வருகின்றனர். மாணவன்: அது எவ்வாறு? ஆசிரியர்: 'கடவுள் உண்டு; நல்வினை தீவினை உண்டு; சுவர்க்கம் நரகங்கள் உண்டு; மறுபிறப்பு உண்டு' என்பன போலக் கூறும் வாக்கியங்களை உலகாயதர் ஏற்றுக் கொள்ளாது இகழ்ந்தாலும், சோதிட நூல், மாந்திரீக நூல், மருத்துவ நூல் (வைத்திய சாத்திரம்) முதலியவற்றை ஓர் அளவிலேனும் உடன் படவேண்டியவராகின்றனர். ஏனெனில், அவற்றில் சொல்லப் பட்டவை பயன்தருதல் அவர்க்கும் சில சில சமயங்களில் அனுபவமாகின்றது. அப்பொருள்கள் 'காட்சி கருதல்களால் அறிய வராது' என்பதை அவரும் உணர்வர். ஆகவே, அனுபவத்தில் மெய்யாகக் காணப்படுவதை மெய்யல்ல என்று கூறினால், அவர்கள் உண்மைகள் பலவற்றை இழப்பர். இனி, பௌத்தர் மூன்று அளவைகளையும் உடன்பட்டே, உரையளவை வேறு அளவையன்று, அனுமானமே' என்பர். ஆகவே, அவர் 'காட்சி, கருதல் என அளவை இரண்டே' எனக் கொள்வர். மாணவன்: உரையளவையாகிய ஆகமப் பிரமாணத்தை அவர் அனுமானப் பிரமாணம் என்பது எவ்வாறு? ஆசிரியர்: அதாவது, நாம் 'மரம் பூத்தது' என்ற சொற்கள் மூலம் இயல்பு ஏதுவைக் கொண்டு, அப்பொருளைக் காணாமலே உணர்வதை அனுமானம் எனக் கூறியதுபோல, பௌத்தர்கள், 'நூலை, ஏதுவாகக் கொண்டு நூற்பொருளை உணர்தலும் அனுமானமே' என்பர். மாணவன்: அவர் கூற்றுப் பொருந்தாதவாறு இருப்பது எப்படி? ஆசிரியர்: அனுமானமாவது, துணியப்படும் பொருளோடு அதனைத் துணிதற்கு ஏதுவாய் உள்ளபொருள் எவ்விடத்தும் விட்டு நீங்காது உடன் நிகழ்தலை உணர்ந்த பின் நிகழ்வது. ஆனால், காட்சி என்பது கருதல்களால் அறியப்படாது. உரையளவையினாலே அறியப்படுவனவாகிய மேலுலகம் கீழுலகம் முதலிய வற்றோடு, நூலாகிய ஏதுப்பொருள் உடன் நிகழ்தலை நாம் நூலையுணர்தற்கு முன்னர் உணருமாறில்லை; நூலால் அவற்றை உணர்ந்து, உணர்ந்தவாறே துணிகின்றோம்; ஆகையால், நூல் ஏதுவும், அதிற்சொல்லப்படும் பொருள் துணிபொருளும் ஆகாது. ஆகவே, உரையளவை அனுமான அளவை இல்லை. இனி, மரம் முதலிய பொருள்களையும், அவை 'மரம்' முதலிய பெயர்களாலேயே குறிக்கப்படுவன என்பதையும் முன்னர் உணர்ந்து, அதன்பின்னே, 'மரம்' முதலிய சொற்களை பொருளாகக் கொண்டு அப்பொருள்களை உணர்தலால், அது அனுமானமாம். எனவே, 'காட்சி, கருதல், உரை என்னும் மூன்றளவைகளும் இன்றிமையாத அளவைகளாகும். உலகாயதரும், பௌத்தரும் தவிர ஏனையோர் அனைவரும் எல்லா அளவைகளையும் உடன்படுவர். இங்கு மற்றொன்றை உணர்தல் வேண்டும். அதாவது, பௌத்தர் ஆகமப்பிரமாணத்தையும் அனுமானம் என்பர். அதுபோலத் தார்க்கிகர், மரம் முதலிய சொற்கள் பற்றி மரம் முதலிய பொருள்களை உணர்தலாகிய அனுமானத்தையும் உரையளவை; அஃதாவது 'சத்தப் பிரமாணம்' என்பர். காட்சியளவையினாலும், கருதலளவையினாலும் அறிய முடியாத பொருள்களை அறிவிப்பதே உரையளவை ஆகையால், மரம் முதலியன காட்சி முதலியவற்றால் அறியப்படுவனவாய் இருந்தாலும், மரம் முதலிய பொருள்களை மரம் முதலிய சொற்களைச் கொண்டு உணர்தல் உரையளவையாகாது; அனுமான அளவையாகும். மாணவன்: அளவைகள் பற்றி அறியவேண்டியது இவ்வளவுதானா? அளக்கப்படும் பொருளியல்பு ஆசிரியர்: இல்லை, இன்னும் சில உள்ளன; இதுவரை அளவைகள் பற்றிச் சில கூறினோம்; இனி அளக்கப்படும் பொருள்களது (பிரமேயங்களது) இயல்பு பற்றிச் சில கூறுதல் வேண்டும். மாணவன்: அவை இன்றியமையாதனவாயின், அவைகளையும் தெரிவித்தருளல் வேண்டும். ஆசிரியர்: மேற்கூறிய அளவைகளைக்கொண்டு பொருள்களை அறியுமிடத்து அப்பொருள்கள் இருவகையில் அறியப்படும். அவை, 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பன. மாணவன்: பொதுவியல்பு, சிறப்பியல்பு என்பன யாவை? ஆசிரியர்: பொருள்களின் இனம், 'தன்னினம்' வேற்றினம்' என இரண்டு உண்டு. எடுத்துக்காட்டாக 'மாமரம்' என்னும் பொருளுக்கு, 'பலா, புளி' முதலிய மரங்கள் யாவும் தன்னினம்; விலங்கு, பறவை, மக்கள் முதலிய பொருள்கள் யாவும் வேற்றினம். இவற்றுள், வேற்றினத்தில் இல்லாது தன் இனம் முழுவதிலும் உள்ள தன்மை பொதுவியல்பு; வேற்றினத்திலும் இல்லாது, தன் இனத்திலும் இல்லாது தன்னிடத்தில் மட்டும் உள்ள தன்மை சிறப்பியல்பு. எடுத்துக்காட்டாக:- 'மாமரம்' என்னும் பொருளில் 'மா' என்னும் தன்மையும், 'மரம்' என்னும் தன்மையும் ஆக இரு தன்மைகள் உள்ளன: அவற்றுள் 'மரம்' என்னும் தன்மை விலங்கு, பறவை, முதலிய வேற்றினங்களில் இல்லாது 'பலா, புளி' முதலிய தன் இனம் எல்லாவற்றிலும் இருப்பதால், அது பொதுவியல்பு. 'மா' என்னும் தன்மை, 'விலங்கு, பறவை' முதலிய வேற்றினத்திலும் இல்லாது, 'பலா புளி' முதலிய தன் இனத்திலும் இல்லாது, தன்னிடத்தில் மட்டும் இருத்தலால், அது சிறப்பியல்பு. ஆகவே, 'மாமரம்' என்னும் பொருளை நாம் அறியுமிடத்து முதற்கண் 'மரம்' என்னும் பொதுத்தன்மையும், பின்னர் 'மா, என்னும் சிறப்புத் தன்மையும் ஆகிய இருவகையில் அறிகின்றோம். இதையே சிறப்பியல்பு, தன்னியல்பு' என்று சொல்லப்படும். இவ்வாறு, ஒரு பொருளை, பொதுவியல்பு வகையிலும், சிறப்பியல்பு வகையிலும் அறியும் அறிவே பிரமாணமாகும். இவ்விரண்டு வகையிலும் அன்றி 'மாமரத்தை' 'மனிதன்' முதலியன போல, வேற்றியல்பு வகையில் ஒருவனது அறிவு அறியுமாயின் அவ்வறிவு சிறிதும் பிரமாணமாகாது, முற்றிலும் "அப்பிரமாணமேயாம்". மாமரத்தை 'புளியமரம்' என்பதுபோலப் பொது வியல்பை உள்ளவாறு அறிந்து, சிறப்பியல்பைப் பிறழ அறியுமாயின், அவ்வறிவு, ஒரு வகையில் (பொதுவியல்பில்) பிரமாணமாயும், ஒரு வகையில் (சிறப்பியல்பில்) பிரமாணம் அன்றியும் இருக்கும். மாணவன்: ஒருவன் தனது அறிவினால் ஒரு பொருளை அறியுமிடத்து, அவ்வறிவைத் தவிர அவனுக்கு வேறு கருவி இல்லாமையால், அவ்வறிவு அப்பொருளை உள்ளவாறு அறிகின்றது அல்லது தவறாக அறிகின்றது என்பதை அறிவது எப்படி? ஆசிரியர்: இது அளவை இயலில் ஒரு முதன்மையான வினா. இதற்குத் தார்க்கிகர் முதலியோர், 'ஒருவனது அறிவு பொருள்களை அறியுமிடத்து, அது உண்மையறிவு அல்லது பொய்யறிவு என்பது, அவ்வறிவின் வழியே முயன்று, குறித்த பயனை அடைதல் அல்லது அடையாமையால் பின்னர் அறியப்படும்' என்பர். அப்படிக் கூறின், 'அப்பயன்தானும் உண்மை அல்லது பொய் என்பது எவ்வாறறியப்படும்?' என்னும் வினா எழும். அங்ஙனம் எழும் வினாவிற்கு, 'அதுவும் வேறொரு வகையாலே அறியப்படும்' என விடை கூற வேண்டிவரும்; அவ்வாறு கூறின், மேலும் அவ்வினா நிகழ, இப்படி வரம்பின்றி வினா எழுந்து கொண்டே இருக்கும். ஆதலால், ஓர் அறிவு, தான் பிரமாணம் என்பதைத் தானே அறியும்; பிரமாணம் இல்லையென்பதை மட்டும் வேறொன்றால் அறியும் என்பதே சித்தாந்தமாகும். 'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பன பொருள்களை நுனித்து நோக்கும் வகைக்கேற்ப வேறு வேறாய் நுணுகிச் செல்லும். எடுத்துக்காட்டாக, 'இது மாமரம்; அது பலாமரம்' என உணருமிடத்து, மரத்தன்மை பொதுவியல்பு; மாத் தன்மையும் பலாத் தன்மையும் சிறப்பியல்பு. 'இது தேமாமரம், அது புளிமா மரம்' என உணருமிடத்து; மாமரத் தன்மை பொது வியல்பு; தேத் தன்மையும் புளித் தன்மையும் சிறப்பியல்பு. 'இத்தேமா மரம் நன்று; அத்தே மாமரம் தீது' மிடத்து தேமாமரம் முழுவதும் பொதுவியல்பு; 'இது அது எனச் சுட்டுதற்கு ஏதுவாய் நின்ற தன்மை சிறப்பியல்பு. தார்க்கிகர், பொதுவியல்பை, 'சாமானியம் அல்லது சாதி' என்றும், சிறப்பியல்பை, 'விசேடம் அல்லது இலக்கணம்' என்றும் கூறுவர். இவ்விடத்தில் ஒன்றை இன்றியமையாது உணர்தல் வேண்டும். அளவை நூல் முறைப்படி கூறப்படும் 'பொதுவியல்பு சிறப்பியல்பு' என்பது வேறு! சைவசித்தாந்தம் தனது நெறியிலே தான் கூறும் 'பொதுவியல்பு, சிறப்பியல்பு' என்பது வேறு; அவற்றுள் அளவை நூல் முறைப்படி சொல்லப்படும் பொதுவியல்பு சிறப்பியல்புகளே இங்குச் சொல்லப்பட்டன; சைவசித்தாந்தம் கூறும் பொதுவியல்பு சிறப்பியல்புகளைப் பின்னர்க் கூறுவோம். https://www.siddhantham.in/2025/09/5_16.html
  21. மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்.! Vhg பிப்ரவரி 21, 2026 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20.02.2026) உயிரிழந்துள்ளார் . மட்டக்களப்பு வைத்தியசாலையில் திறமையான ஒரு மருத்துவர் அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவர் ஆவார். இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். https://www.battinatham.com/2026/02/blog-post_115.html
  22. "மஹிந்த ராஜபக்ஷ கொலையாளி அல்ல": பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 21 Feb, 2026 | 04:19 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார். நாம் யுத்தம் செய்தது தமிழ் மக்களுடன் அல்ல, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுடனேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். புலம்பெயர் அமைப்புகளும் ஜே.வி.பி அரசாங்கமும் கூறுவது போல மஹிந்த ராஜபக்ஷ இரத்த தாகம் கொண்டவர் அல்ல என்பதை பொன்சேகா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர். அதேபோல், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை 'ராஜபக்ஷ நிக்காய' (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது. பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும். மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்" என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239238

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.