Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. 🏏 யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! 🏆 adminJanuary 23, 2026 இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த உலகக்கிண்ணம், வடபகுதி ரசிகர்களின் பார்வைக்காக யாழ்ப்பாணத்திற்கும் எடுத்துச் செல்லப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 📅 கடந்த 21-ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனவரி 21 முதல் 24-ஆம் திகதி வரை இலங்கையின் முக்கிய நகரங்களான கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளது. பெப்ரவரி 07, 2026 அன்று கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது. 🏟️ இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. • கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் (8 போட்டிகள்) • கொழும்பு SSC மைதானம் (5 போட்டிகள்) • கண்டி பல்லேகலை மைதானம் (7 போட்டிகள்) பாகிஸ்தான் அணி பங்கேற்கும் அனைத்து லீக் போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவு உள்ளதோடு, அவ்வணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியும் கொழும்பிலேயே நடைபெறும் என்பது விசேட அம்சமாகும். யாழ். மண்ணுக்கு செல்லும் உலகக்கிண்ணத்தை நேரில் கண்டு மகிழவும், அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும்! 😍🔥 https://globaltamilnews.net/2026/227228/
  2. பங்களாதேஷ் விளையாடுவது இன்னும் இழுபறியில் உள்ளது!
  3. வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி SONY DSC வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் கிவுல்ஒயா திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயம் என்று சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இந்த பிரதேசத்திற்கு மகாவலி நீரை கொண்டுவர முடியாது என்பதனால் ‘என்பிசி கெனல்’ ஊடாக மகாவலியை கொண்டு வருவதாகக் கூறி 2 இலட்சம் ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்போது அங்கு மக்கள் தொகை அதிகரித்து நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நீர்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 2011ஆம் ஆண்டில் இந்த கிவுல்ஓயா திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் 27,000 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்படுகின்றது. இதன்படி புதிதாக வயல் நிலங்களை உருவாக்கவும் இதன்போது இன்னும் மக்களை குடியேற்றவும் திட்டமிடப்படுகின்றது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது எமது பிரதேசத்திற்கு பாதிப்பாக அமையும். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேசத்திற்குள் இது வருகின்றது. இதற்காக 2021ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு மேலதிமாக 13,000 ஏக்கர் நிலத்தை வனபாதுகாப்பு திணைக்களம் இதற்காக வழங்குகின்றது. ஆனால் எமது மக்களின் பூர்விக நிலங்களை பயன்படுத்த வனபாதுகாப்பு திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் வவுனியா மற்றும் முல்லைதீவில் பூர்விகமாக வாழும் மக்களுக்கு நீரில்லை. இதனை கவனிக்க எவருமில்லை. கடந்த அரசாங்கத்தை போன்று சிறுபான்மையினவரின் வாழ்வுரிமையை பறிக்க நீங்களும் முயற்சிக்கின்றீர்களா? பாரிய நீர்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவதும், பெரும்பான்மை மக்கள் அங்கு குடியேற்றப்படுவதையும் தொடர விரும்புகின்றீர்களா? இனவாதம், மதவாதம் அற்ற அரசாங்கத்தை கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் வீணடிக்கப் போகின்றீர்களா? என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://akkinikkunchu.com/?p=356989
  4. காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி 22 Jan, 2026 | 12:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாத கால போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய காசாவின் நெட்சரிம் (Netzarim) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாமை படம்பிடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பாலஸ்தீனிய ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லப்பட்ட செய்தியாளர்கள் பொதுமக்களின் துயரங்களை ஆவணப்படுத்தும் மனிதாபிமான ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், இரண்டு 13 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு புரைஜ் (Bureij) அகதிகள் முகாமின் எல்லையில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுவன், அவனது தந்தை மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிழக்கு நகரமான பானி சுஹைலா (Bani Suheila) பகுதியில் சமையலுக்குத் தேவையான விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, 13 வயதான மொட்செம் அல்-ஷராபி என்ற சிறுவன் இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிறுவனின் உடலைப் பார்த்து அவனது தந்தை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் ஷாத் மற்றும் அனஸ் க்னீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அப்துல் ரவூப் ஷாத், ‘ஏஜென்ஸி பிரான்ஸ்-பிரஸ்’ (AFP) செய்தி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், எரிக்கப்பட்ட வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த காணொளிகள் இணையத்தில் பரவின. ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் எகிப்திய நிவாரணக் குழுவினுடையது என்றும், அது குறித்த தகவல்கள் முன்னரே இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில், மத்திய காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ட்ரோன் ஒன்றை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டதன் பின்னரே துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை காசாவில் குறைந்தது 29 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 220 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காசாவில் மட்டும் 466 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/236686
  5. தீர்மான செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்கும் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய 22 Jan, 2026 | 01:03 PM தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல; மாறாக, பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாக கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி World Woman House இல் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். “Women Leading the Changing Global Order” உயர்மட்ட அமர்வு “Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய பிரதமர், அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் போதிலும், அவர்களது உழைப்பு – குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா தொழில் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார். அரசியல் கண்ணோட்டத்தில், தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்குவது திட்டமிட்ட, கட்டமைப்பு ரீதியான செயற்பாடாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், தன்மைப் படுகொலை (Character Assassination), திட்டமிட்ட ஓரங்கட்டல்கள் போன்றவை, தலைமைத்துவத்திற்குத் தகுதியான பல பெண்களை அரசியலில் இருந்து விலகச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான செயல்கள் ஏற்கனவே நிலவி வரும் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த தடைகளை அகற்றுவது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல என வலியுறுத்திய பிரதமர், பெண்கள் தன்னம்பிக்கை, அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவம் வழங்கக்கூடிய சூழலை உருவாக்க, நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் அடிப்படையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார். மக்களின் மீண்டெழுதலுக்கான உந்துதலும் அரசியல் அர்ப்பணிப்பும் இணைந்தால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என பிரதமர் கூறினார். தற்போதைய அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதன் முக்கிய எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல; மாறாக, அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில், பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மட்டுமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/236688
  6. சட்டவிரோத கரைவலைத் தொழிலுக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி வலியுறுத்து 22 Jan, 2026 | 12:59 PM சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை அவ்வாறு சட்டவிரோத கரைவலை முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மேலம் கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென இந்த அரசைக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/236687
  7. 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்! 22 Jan, 2026 | 11:10 AM அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசப் (Sabina Yusuf) என்ற பெண் பங்குபற்றவுள்ளார். இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சபீனா யூசப் என்ற பெண் நேற்று புதன்கிழமை (21) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமானார். 41வது திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் உலகில் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர். சபீனா யூசப் என்ற பெண் “திருமதி இலங்கை உலக அழகி 2025” பட்டத்தை முடிசூட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236674
  8. அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை! 22 January 2026 அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை. இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/442073/important-warning-for-sri-lankans-going-to-the-us-violation-of-visa-regulations-will-result-in-a-lifetime-ban
  9. புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (21) காலை 08.15 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20,023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13,168 குடும்பங்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15,260 பாடசாலை மாணவர்களுக்கு 15,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான இரண்டாம் செயலாளர் இராமன் செட்டியார், அரசியலுக்கான அலுவலர் ஃபாறா பிர்தௌஸ் உடனிருந்தார்கள். https://adaderanatamil.lk/news/cmkoyz5xr048vo29nio3ed8f4
  10. ஜே.வி.பியின் அரசியல் வித்தை லக்ஸ்மன் அரசியல் தலைவர்கள், கட்சிகள் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வர். சில வேளைகளில் தாமாகவும் சந்தர்ப்பங்கள் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் சாதக பாதகங்கள் இருந்து விடுகின்றன. ஈஸ்ட்ர் குண்டுத் தாக்குதல்கள், விவசாயத்தில் இயற்கை உரப் பாவனை போன்றவைகள் உருவாக்கிக் கொண்டவைகள். கொவிட் பெருந்தொற்று உலகளவில் தானாக ஏற்பட்டது. அவற்றினால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சாதக பாதகங்களை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தம்கூட சாதக பாதகங்களையே கொடுத்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால், அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையே. இதனை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக விளக்கத்துக்குட்படுத்துவர். தமிழர்கள், உழவர்கள் வாழும் நாடுகளில் கடந்த வாரம் தைப்பொங்கல் வாரம். இலங்கையைப் பொறுத்தவரையில் அந்த வாரம் பெரும் களேபரமான வாரமாகத்தான் கழிந்திருக்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் தித்வா சூறாவளியால் நாடு அல்லோல கல்லோலத்துக்குட்பட்டது. இன்னமும் மலையகத்தின் பல பகுதிகளில் சரியான அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களுக்கு பெரும் நெருக்கடிகள் காணப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய வருகை தரவுள்ளனர். உலகின் பல நாடுகளின் உதவிகள் இன்னமும் சரியாக வந்து சேரவில்லை. இவ்வாறிருக்கையில் அதற்குள் ஒரு அரசியலைச் செய்து கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடந்தேறியிருக்கின்றன. இதனை அரசியல் தெரிந்த, கலாசாரம் தெரிந்த, இலங்கை அரசாங்கத்தின் சம்பிரதாயம், வழமையான பாரம்பரியம் தெரிந்த, யாருமே மறுக்கமாட்டார்கள். தித்வா சூறாவளியினால் நாடு பட்ட துயரத்தின் வலியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்து பிறப்பு, நத்தார் ஒளி விழாக்களைக் கோலாகலமாக நடத்தவில்லை. புதுவருடப் பிறப்பினை களியாட்டமாகக் கொண்டாடவில்லை. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு உள்ளூராட்சி சபைகள் கூட அனுமதிகளை மறுத்திருந்தன. அதனால் உள்ளூராட்சி மன்றங்களின் முதல்வர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தனர். ஆனால், நாட்டில் தலைவர் தைப் பொங்கல் விழாவை தமக்கான, மக்கள் விடுதலை முன்னணிக்கான(ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்திக்கான அரசியல் நடத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்தார். (இது பொதுவான கருத்து) புத்தசாசன காலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக தேசிய தைப் பொங்கல் விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையில், வட மாகாண தைப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருக்கிறார். இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. தேசிய பொங்கல் விழாவில் பங்குபெறாமல் ஜனாதிபதி ஏன் வடக்கு சென்றார் என்பதில்தான் அரசியல் இருக்கிறது. ஆனால், வடக்கு விஜயத்திற்குரிய திட்டமிடல்கள் ஏற்கெனவே முடிந்திருக்கின்றன. வடமாகாணத் தைப் பொங்கல் விழாவுக்கு மறுநாள் முழு நாடுமே ஒன்றாகத் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையானது, அரச அதிகாரிகளாலும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டே வந்தது. ஆனால், தற்போது சற்று அதிகமாக மேற்கொள்ளப்படுவதையே இந்த தேசிய வேலைத் திட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காண்பிக்க முயற்சிக்கிறது என்கிற விமர்சனங்கள் உருவாகிவருகின்றது. அதே நேரத்தில், நாட்டில் இருக்கின்ற போதைப்பொருள் பிரச்சினைகளைத் தவிர, வேறு விடயங்கள் இல்லை போலும் என்ற மாயை ஒன்றும் உருவாக்கப்படுவதாகவும் உணரமுடிகிறது. இந்த மாயையானது மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சினைகளை மறைத்து மேலோட்டமாக மக்களை நகர்த்தி தங்களது அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள ஜே.வி.பி. முனைந்து வருவது தெரிகிறது. மற்றொன்று வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரஜா சக்தி செயற்பாடுகளுக்காக தமது கட்சியின் நேரடி உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற இந்த நடவடிக்கையானது, இவ்வருடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்கள் இலக்காக் காணப்படுகின்றன. மற்றைய கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் செயலாளர் அரசியலை மாத்திரம் மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. நீண்டகாலமாக மேற்கொண்டுவந்த தீவிர அரசியலை அரச அதிகாரத்துடன் தற்போது மேற்கொள்கின்றது என்றே சொல்லமுடிவதாக அரசியல்வாதிகள் கருத்துத் வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர். தங்களது கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ள பிரஜா சக்தியானது நாட்டின் பிரதேச செயலகங்களின் கீழுள்ள கிராம சேவகர்களே மேற்கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த கிராமத்திற்குத் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில் பிரஜா சக்தி மேற்கொள்ளும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட அரசியல் என்பது விமர்சனமாக இருக்கிறது. அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பாக பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் செயல்பாடாகவும் சொல்லப்படுகிறது. இந்த வகையில்தான் பிரஜா சக்தியை வடக்கு - கிழக்கில் அனுமதிக்க முடியாது என்கிற கோசம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அந்தவகையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சி பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ள சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது எனலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சீர் செய்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவுக்குமிடையில் சுனாமி கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வேளையில், ஜே.வி.பியினர் ஒப்பந்த உருவாக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன்மூலம் சுனாமி கட்டமைப்பு உருவாக்கத்தினை தடுத்திருந்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலைப் புலிகளை வடக்கு கிழக்கில் ஒரு அங்கீகாரத்துக்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிராக இருந்த ஜே.வி.பி. தற்போது வடக்கு மக்களிடம் தமது அரசியலைச் செய்ய முனைவது அவர்களது அரசியலுக்காக என்பதனைக்கூட புரிந்து கொள்ளமுடியாத நிலை காணப்படுவதானது தமிழ் மக்களின் அரசியல் வறட்சியையே காட்டுகிறது. இந்த இடத்தில்தான், 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடிய தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் புதைத்துவிட்டு நாட்டையே கைப்பற்றிக் கொள்வதற்காக ஆயுத ரீதியாக போராடிய ஜே.வி.பியினரின் ஏமாற்று அரசியலில் வீழ்ந்து ஒன்றுமில்லாதவர்களாக, நிலைப்பாடுகளை மறந்தவர்களாக, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட்டவர்களாகப் புதைந்து போன பின்னர் கவலையை மாத்திரம் மிகுதியாகப் பாதுகாக்கப்போகிறோமா என்பதே தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்காக தங்களது எதிர்கால அதிகாரத்துக்காக அரசியலைச் செய்வதொன்றும் புதிதல்ல என்ற வகையில் போதைப் பொருள் தடுப்பு என்றவகையில் நடைபெறும் முழு நாடும் ஒன்றாகத் தேசிய வேலைத்திட்டம், திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் வரவுள்ள இன்னும் பல வேலைத்திட்டங்களும் கண்டும் காணாமல் விடப்பட வேண்டியவைகளே. எவ்வாறானாலும், மக்களுக்காகக் கடந்த காலங்களில் சரியான அரசியலைச் செய்ய மறந்தவர்கள் தற்காலத்தில் கவலைகொள்வதும் எதிர்ப்பு வெளியிடுவதும் வழக்கு தாக்கல் செய்வதும் இயலாதவர்களின் செயற்பாடு என்ற மக்களின் எதிர்வினையால் ஜே.வி.பிக்கே சாதகமாக மாறிப்போகும் என்பதே வெளிப்படை. அந்தவகையில், எல்லோரும் சொல்லும் மக்களை ஏமாற்றும் வித்தையான அரசியலைக் கவனமாக செய்யும் ஜே.வி.பியைப் பாராட்டத்தான் வேண்டும். ஜே.வி.பியின் அரசியல் வித்தை தொடரட்டும். அதில் சிக்கும் அரசியல் கட்சிகளின் பாடுகளை நாம் பார்க்கலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜே-வி-பியின்-அரசியல்-வித்தை/91-371359
  11. இந்திய குடியரசு தின விழாவில்: பொதுஜன பெரமுனவினர் பங்கேற்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் குழு, இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனவரி 26 ஆம் திகதி இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியாவின் ஒடிசாவிற்கு பயணம் செய்ய உள்ளது. இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்ரல் பெர்னாண்டோ, சாமித்ரினி கிரியெல்ல, சதுரு கலப்பட்டி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோருடன், முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் சம்பத் அதுகோரல, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர். இந்த விஜயத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் இந்தக் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருட்களைப் பார்வையிடும் பயணமும் பயணத்திட்டத்தில் அடங்கும். இந்த விஜயம் தொடர்பான ஒரு சுமுகமான கலந்துரையாடல் இந்திய உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமீபத்தில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-குடியரசு-தின-விழாவில்-பொதுஜன-பெரமுனவினர்-பங்கேற்பு/175-371396
  12. 📢 வலி. வடக்கில் நீடிக்கும் நில ஆக்கிரமிப்பு: “சொந்த மண்ணில் வாழ 36 ஆண்டு கால ஏக்கம்!” தவிசாளர் சோ. சுகிர்தன் ஆதங்கம்! adminJanuary 22, 2026 வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் 36 வருடங்களாகத் தவிப்பதாக வலி. வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் கவலை வெளியிட்டுள்ளார். மயிலிட்டி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா குரும்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 📍 மயிலிட்டி நூலகம்: ஏனைய நூலகங்கள் சிறப்பாக இயங்கினாலும், மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூலகம் வசாவிளான் சந்தியில் இன்றும் ஆக்கிரமிப்பின் கீழேயே உள்ளது. வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி திறக்கப்பட்டாலும், பாடசாலை இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே முடக்கப்பட்டுள்ளது. தற்காலிக இடங்களில் இயங்கும் போதிலும், வசாவிளான் மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் வாசிப்புப் போட்டிகளில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ⚠️ தென்னிலங்கையினூடாகக் கொண்டு வரப்பட்டுள்ள “பிரஜாசக்தி” திட்டமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும் என தவிசாளர் இதன்போது எச்சரித்தார். “மக்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. உங்கள் தேவைகளுக்கு நேரடியாக பிரதேச சபையை அணுகி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2026/227099/
  13. சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம் adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற போது, உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எழுப்பினார். 2016-ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த ‘எக்கோ ரூறிசம்’ (Eco-tourism) திட்டம் உருவாக்கப்பட்டது. வேலணையின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். எனினும் முறையான பொறிமுறை இல்லாததால், சுற்றுலாப் பயணிகளுக்காக வாங்கப்பட்ட படகுகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்து கிடக்கின்றன. பல பொருட்கள் மர்மமான முறையில் சூறையாடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாத் தளம் என்ற பெயரில், தற்போது அது மதுபானம் அருந்தும் இடமாகவும், சமூகச் சீரழிவுக்கான களமாகவும் மாறி வருவதாக உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பலரும் இவ்வாறான செயல்களுக்காகவே இவ்விடத்தைத் தேர்வு செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் முறையாகக் கிடைக்காததுடன், இந்தத் திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வர்த்தக நோக்கில் இந்த மையத்தைப் பராமரிக்கும் தனியார் தரப்பினர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தினார். இந்தப் பிரதேசத்தின் மாண்பைக் காக்க, மண்டைதீவு சுற்றுலாத் தளத்தை மீண்டும் அதன் உண்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேலணை பிரதேச சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவில் சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் 2024 செப்டம்பரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (அன்றைய நிலையில்) அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்டன. சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் (மொத்தமாக 138 ஏக்கர் விளையாட்டு நகரமாக – Sports City) இந்த மைதானம் அமையவுள்ளது. 10 மத்திய விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச தரத்திலான எல்லைக் கோடுகளைக் கொண்ட மைதானமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயல் மற்றும் கனமழை காரணமாகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 2026 ஜனவரியில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 2026-ல் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் T20 உலகக்கோப்பைக்குப் பிறகு, இங்கு முதலாவது முன்னோடிப் போட்டி (Trial Match) நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இந்த மைதானத் திட்டத்திற்கு எதிராகப் பல சூழலியல் அமைப்புகள் (குறிப்பாக WNPS) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. கடலோரப் பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) இன்றி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மண்டைதீவு ஒரு முக்கியமான சூழலியல் வலயமாகும். அங்குள்ள கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுவதால், இறால் மற்றும் நண்டுப் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதையும் என அஞ்சப்படுகிறது. மண்டைதீவு இயற்கையாகவே ஒரு தாழ்வான பிரதேசம். டிட்வா புயலின் போது மைதானம் அமையவுள்ள பகுதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்பியது. மறுபுறம், இலங்கை கடற்படையினர் மற்றும் யாழ். பல்கலைக்கழகத் தாவரவியற்றுறை இணைந்து மண்டைதீவுப் பகுதியில் ஆயிரக்கணக்கான கண்டல் தாவரக் கன்றுகளை நடும் (Mangrove Restoration) பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://globaltamilnews.net/2026/227089/
  14. குடத்தனை விபத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட மூவர் படுகாயம்! adminJanuary 22, 2026 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 22, 2026) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளர், அவருடன் பயணித்த பிரதேச செயலக சக உத்தியோகஸ்தர் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு நபர் ஆகிய மூவரே படுகாயமடைந்துள்ளனா். படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Base Hospital) அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி கிழக்கு வீதிகளில் அண்மைக்காலமாக அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குடத்தனை, மணற்காடு வீதிகள் புயலுக்குப் பின் சீரமைக்கப்பட்ட போதிலும், போதிய போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாதது ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. https://globaltamilnews.net/2026/227102/
  15. வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்! adminJanuary 22, 2026 வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தனது மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள JICA நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா (Kenji Kuronuma) அவர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு JICA வழங்கிய பங்களிப்புக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மாகாணத்தின் தற்போதைய பிரதான சவாலான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப உதவிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக JICA பிரதிநிதி தெரிவித்தார். அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. வடக்கின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கென்ஜி குரோனுமா இதன்போது உறுதி அளித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2026/227103/
  16. மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr
  17. விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr
  18. இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? January 20, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் “இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு தோற்றுவிக்கப்போகும் ‘பாரதூரமான ஆபத்துக்களை’ சுட்டிக் காட்டியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ கோட்பாடுகளை பேணிப்பாதுகாக்கவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் கூட்டாட்சி ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அத்தகையதொரு அணுகுமுறையை புதுடில்லி கடைப்பிடித்தால் அது பிராந்திய அமைதியை உத்தரவாதம் செய்யும் நாடு என்ற இந்தியாவின் வகிபாகத்தை கௌரவிப்பதாக மாத்திரமல்ல, கூட்டாட்சியையும் மொழி மற்றும் இனத்துவ சிறுபான்மையினங்களையும் பாதுகாக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைவானதாகவும் அமையும் என்று கூறியிருக்கும் ஸ்ராலின், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்ற போர்வையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்தியிருக்கின்றது என்றும் உத்தேச கட்டமைப்பு அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் அபிலாசைகளை அலட்சியம் செய்வதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்பட்டக்கூடிய அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ஒற்றையாட்சி முறையை (ஏக்கியராஜ்ய) வலுப்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவின் அனுசரணையுடன் 1985 ஓகஸ்டில் பூட்டானில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட ‘திம்புக் கோட்பாடுகள்’ தற்போதைய பின்புலத்தில் தொடர்ந்தும் பொருத்தமானவையாக இருப்பதாக தன்னைச் சந்தித்த தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியதை பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் அந்த கோட்பாடுகளில் அடங்கியிருக்கும் அம்சங்களை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் உறுதிப்பாடின்மையை தொடரச் செய்யும் என்பதுடன் மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதிக்கும் நீதிக்குமாக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் இந்த கடிதத்தை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாடு மூலமாக நெருக்குதலை பிரயோகிப்பதற்கு தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கிடைத்த முக்கியமான ஆரம்பக்கட்ட வெற்றியாக தமிழ் தேசிய பேரவை கருதுகிறது. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்கில் கஜேந்திரகுமார் நிகழ்த்திய உரை இதை தெளிவாக உணர்த்துகிறது. தங்களது தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அலையொன்று ஏற்படும் என்பதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார், இலங்கை தமிழரசு கட்சியையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரைக்கும் அந்த இரு கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறுவதில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. தனியொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக இத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றால், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செயற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சென்று அரசியல் கட்சிகளை சந்தித்த பிறகு இதைக் கூறுகின்ற கஜேந்திரகுமார், முன்கூட்டியே தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று தெரியவில்லை. தமிழ் தேசியவாத அணிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தாங்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு மற்றைய அணியினர் தங்களுடன் இணைந்துசெயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வழமையான நடைமுறையின் தொடர்ச்சியாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றென்றைக்குமே கானல் நீராகவே இருக்கும் போன்று தெரிகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கடிதத்தில் ‘ஏக்கியராஜ்ய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 2015 – 2019 காலப்பகுதியில் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் இலங்கை அரசின் தன்மை ‘ஏக்கியராஜ்ய’ வாக அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கைவிடப்பட்ட இடத்தில் இருந்து அந்த அரசியலமைப்புச் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறார் போலும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசநாயக்க பிறகு கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக பதிய அரசியலமைப்பு குறித்து எதையும் பேசவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதைப் பற்றி பெருமளவுக்கு மௌனத்தைச் சாதிக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலைமைப்பின் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனாலும், அவர் காலவரையறை எதையும் கூறவில்லை. இலங்கையில் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் செயன்முறைகள் துரிதப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதனால், இலங்கை அரசியல் நிலைவரம் தொடர்பான ஸ்ராலினின் புரிதல் குறித்து சந்தேகம் எழுகிறது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரயம் செய்கிறது என்ற அபிப்பிராயம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல்கொடுத்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதே பரந்தளவில் சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் முதல் வருடங்களே பாதுகாப்பான காலப் பகுதியாகும். அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரதிபலிப்பு வெளிப்படாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியான அல்லது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில் அது நகரத் தொடங்கியிருக்கிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே எதிரணியினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் முன்னணி அரசறிவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சி குறித்து அண்மையில் எழுதிய ஆய்வு ஒன்றில் இந்த அரசியலமைப்பு மாற்ற விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ; ” இலங்கையின் அரசியல் புதிய வருடத்திலும் அதற்கு பின்னரும் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிகிறது. முக்கியமான எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை தாமதிப்பது தேசிய மக்கள் சக்தியின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பாக, அதன் நம்பகத்தன்மைக்கு பாதகமானது. ” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதுடன் பாராளுமன்ற — அமைச்சரவை எதேச்சாதிகாரத்தை தடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி தவறுமானால், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு இன்னொரு மக்கள் கிளர்ச்சி தேவையாக இருக்கலாம்.” https://arangamnews.com/?p=12614
  19. வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு : சர்ச்சைகளும் சாதனைகளும் - அதிரடி காட்டிய டொனால்ட் ட்ரம்ப்! Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 10:17 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (ஜன 20) வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தினார். அதில், தனது ஓராண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு பெரிய கோப்பை (Binder) ட்ரம்ப் காண்பித்தார். அத்துமீறிய குடியேற்றத்தைக் குறைத்தது முதல் கழிப்பறைகள் மற்றும் ஷவர் ஹெட்களின் (shower heads) தரத்தை மேம்படுத்தியது வரை பல்வேறு சாதனைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த கோப்பின் க்ளிப் (binder clip) தனது விரலை காயப்படுத்தியிருக்கலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், "நான் வலியை வெளிப்படுத்தமாட்டேன்" என்றார். குடியேற்றம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் தனது உரையின் பெரும்பகுதியை குடியேற்றக் கொள்கைகள் குறித்துப் பேச ஒதுக்கினார்: மினசோட்டாவில் (Minnesota) ஐஸ் (ICE) அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்டவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, அவர்களை "குற்றவாளிகள்" என சாடினார். சோமாலிய குடியேற்ற வாசிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவர், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மினசோட்டா மற்றும் பிற ஜனநாயகக் கட்சி ஆளும் நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவதை ஆதரித்துப் பேசினார். "இராணுவ வீரர்கள் இருக்கும்போது நகரம் அழகாகத் தெரியும்" என அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் வழக்கமான பாணியில் ட்ரம்ப் பல ஆச்சரியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 'Gulf of Mexico' என்ற பெயரை 'Gulf of Trump' என மாற்றப்போவதாக கிண்டலாகத் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels) மோட்டார் சைக்கிள் குழுவான இவர்களைப் பாராட்டிய ட்ரம்ப், "அவர்கள் எனக்கு வாக்களித்தனர்" என்றார். தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், அதற்கு ஈடாக கிரீன்லாந்தை (Greenland) வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை என அவர் வாதிட்டார் (இருப்பினும் புள்ளிவிவரங்கள் விலைவாசி உயர்வையே காட்டுகின்றன). கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோற்கவில்லை எனவும், அந்தத் தேர்தல் திருடப்பட்டது எனவும் மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த ஊடகச் சந்திப்பைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்க ட்ரம்ப் புறப்பட்டுச் சென்றார். https://www.virakesari.lk/article/236572
  20. 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்! adminJanuary 21, 2026 மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும். இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும். இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை. சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம். எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2026/227001/
  21. இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி III) 11 Jan 2026, 6:00 PM முரண்படும் மாநிலங்கள் ருக்மிணி எஸ். பகுதி -2 உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம் மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். முதலாம் பகுதியில், தற்போதைய தருணத்தை விவரிக்கவும், ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல்போன அண்மைக்காலத்து முக்கியத் தரவுகளையும் தொகுத்து அளித்தோம். இரண்டாம் பகுதியில், பிறப்பு விகிதங்கள் குறைவது தொடர்பான தரவுகளை ஆராய்ந்தோம். இந்தியா உலகளாவிய போக்குக்குள் இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காவும் உள்ளது என்று சுட்டிக்காட்டும் ஆய்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். மூன்றாம் பகுதியில், இந்திய மாநிலங்களுக்கிடையே உள்ள மக்கள்தொகைப் புள்ளிவிவர வேறுபாடுகளையும் அவை தற்போதுள்ள சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதையும் பார்ப்போம். இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் பல வழிகளில் நாட்டிற்கான பொதுவான சவால்களாக உள்ளன. உழைக்கும் மக்களால் கிடைக்கும் பலன் உச்சத்தைத் தொடுதல், தொற்றுநோயியல் மாற்றத்தில் ஏற்படும் முன்னேற்றம், பிறப்பு விகிதங்களின் சீரான சரிவு, முதியோர் எண்ணிக்கை அதிகமாவது குறித்த கவலை ஆகியவையே அந்தச் சவால்கள். உயர்தரத் தரவுகளின் துல்லியமான வாசிப்பின் அடிப்படையில், கொள்கையும் அரசியலும் ஒன்றிணைந்து இந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், பல முக்கியப் பிரச்சினைகளில் நாட்டின் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் ஆழமான பிளவுகளைக் கொண்டுள்ளன. இது, மக்கள்தொகை விஷயத்தில் பிளவுபட்ட அரசியல் எதிர்வினைகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்தியா உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தப் பகுதியில், இந்தப் பிளவுகளையும் அவற்றின் தாக்கங்களையும் ஆராய்வோம். 1. மாற்றத்தின் காரணிகள் பிறப்புகள், இறப்புகள், இடப்பெயர்வு ஆகிய மூன்று பரந்த அளவிலான செயல்முறைகள் மக்கள்தொகை மாற்றங்களைத் தூண்டுகின்றன. இந்திய மாநிலங்களின் மக்கள்தொகையில் அவற்றின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்த மூன்று காரணிகளை முதலில் பார்ப்போம். கடந்த ஆண்டுகளுக்கான உலகளாவிய தரவுகளுக்கும், 2100ஆம் ஆண்டு வரையிலான கணிப்புகளுக்கும், நாங்கள் 2024ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உலக மக்கள்தொகைக் கண்ணோட்டங்களின் திருத்தப்பட்ட ஆவணத்தைப் (United Nations World Population Prospects, 2024 Revision) பயன்படுத்துகிறோம். இந்திய மாநிலங்களின் 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளுக்கு, இந்தியாவின் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். 2023ஆம் ஆண்டிற்குப் பிந்தைய தரவுகளுக்கும், 2036ஆம் ஆண்டுவரையிலான இந்திய மாநிலங்களுக்கான கணிப்புகளுக்கும், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (Registrar General of India) செய்த மக்கள்தொகைக் கணிப்புகளைப் பயன்படுத்துகிறோம். இந்தியா 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். i) கருவுறுதலில் வேறுபாடு கருவுறுதல் (Fertility) – ஒரு பகுதியில் ஒரு பெண் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை – தொடர்ந்து சரிவைக் கொண்டிருந்தாலும், இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் பார்த்ததுபோல, இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே இந்த விஷயத்தில் வேறுபட்ட விகிதங்கள் நிலவுகின்றன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வசதி படைத்தவை. இவை பெண்கள் கல்வி, பெண்கள் ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக, இந்த மாநிலங்களில், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள, ஏழ்மையான கிழக்கு, வடக்கு மாநிலங்களைவிட, கருவுறுதல் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மேலும், “பதிலீட்டுக் கருவுறுதல் விகிதத்தை” (Replacement Fertility) இந்த மாநிலங்கள் மிக விரைவாக அடைந்தன. மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாகப் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை. நாடுகளின் வளமை அதிகரிக்கும்போதும், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை பெண்களுக்குச் சிறந்த முறையில் கிடைக்கும்போதும் கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் நடைமுறை. ஒரு நாட்டின் TFR 2.1ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றிருந்தால், அந்த நாடு “பதிலீட்டுக் கருவுறுதல்” நிலையை அடைந்துவிட்டதாக மக்கள்தொகையியலாளர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், இரண்டு பெரியவர்களுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் பிறக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைகளில் சில குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான நிகழ்தகவுகளைக் கணக்கிட்டால், அந்தத் தம்பதியினர் தங்கள் வழ்நாளில் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்ற முறையில் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த நிலைக்குக் கீழே குறைந்தால், மக்கள்தொகை அதன் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கருவுறுதல் குறைந்திருந்தாலும், அவற்றின் போக்குகள் பல பதிற்றாண்டுகளாக வேறுபடுகின்றன. பதிலீட்டுக் கருவுறும் விகிதத்தை இன்னும் அடையாத நான்கு மாநிலங்களும் இந்தியாவின் பின்தங்கிய பகுதிகளான இந்தியாவின் மையத்திலும் வடக்கிலும் உள்ளன. உத்தரப் பிரதேசம் 2025இலும் மத்தியப் பிரதேசம் 2028இலும் இந்த மைல்கல்லை அடைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பதிலீட்டுக் கருவுறுதலை அடைய 2039வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரே மாநிலம் பிகார் மட்டுமே. (தரவு கிடைத்த மிகச் சமீபத்திய ஆண்டான 2023இற்குள் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான கணிப்புகள் 2022இல் அம்மாநிலம் இந்த மைல்கல்லை எட்டும் என்று மதிப்பிட்டிருந்தாலும், அது இன்னும் எட்டவில்லை). வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக பிறப்பு விகிதங்கள் அதிக ஆண்டுகளுக்கு நீடிப்பதுதான் இந்தக் கருவுறுதல் வேறுபாட்டின் உடனடித் தாக்கம். இந்தியாவில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒருவர் (14 வயதுக்குட்பட்டவர்கள்) பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாழ்கிறார்கள். பிகாரின் குழந்தைகளின் முழுமையான எண்ணிக்கை 2036வரை (நமக்குக் கிடைத்ததிலேயே மிகத் தொலைதூரக் கணிப்பு ஆண்டு) குறைய வாய்ப்பில்லை. அதேசமயம், அனைத்துத் தெற்கு மாநிலங்களிலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது. கருவுறுதலில் உள்ள இந்த வேறுபாடும் இந்த மாநிலங்களில் இது ஏற்படுத்தும் மக்கள்தொகைப் பெருக்கத்தின் தாக்கமும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களுக்கிடையே வளர்ந்துவரும் மோதலுக்குக் காரணமாக இருக்கிறது. ii) இறப்பு விகிதங்களில் மாற்றங்கள் இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் ஏழை மாநிலங்களைவிடச் சுகாதாரக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்த மாநிலங்களில் பிறப்பு விகிதங்கள் குறைவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வயதின் அமைப்பு காரணமாக அதிக இறப்பு விகிதங்களும் காணப்படுகின்றன. தொற்றும் நோய்கள், பிரசவத்தின்போதும் குழந்தைப் பருவத்திலும் உள்ள சூழ்நிலைகள் ஆகியவை இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் மரணங்கள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக உள்ளன. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது 5ஆகக் குறைந்துள்ளது (அதாவது, ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கும் 5 குழந்தைகள் இறப்பது). இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க நிலை. அதே சமயம், ஒப்பீட்டளவில் ஏழ்மையான மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் IMR 37 ஆக உள்ளது. இது சூடானுக்குச் சமமான நிலை. இருப்பினும், இந்த ஏழை மாநிலங்களின் மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், அவற்றின் ஒட்டுமொத்த இறப்பு விகிதங்கள் குறைவாகவே உள்ளன. வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் உள்ள கச்சா இறப்பு விகிதம் (Crude Death Rate) — ஒவ்வொரு 1,000 பேருக்கும் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கை — மத்தியப் பிரதேசத்தை விஞ்சிவிட்டது. அதற்குக் காரணம், அதன் மக்கள்தொகையில் முதியவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதுதான். ஒப்பீட்டளவிலான அதிக இறப்பு விகிதங்களும் குறைந்த பிறப்பு விகிதங்களும் இணைந்து, இந்தியாவின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மக்கள்தொகையைக் குறைக்க உதவுகின்றன. iii) மாநிலங்களுக்கிடையில் குறைந்த இடப்பெயர்வு கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றுடன், மக்களின் நடமாட்டமும் மக்கள்தொகையின் அளவைப் பாதிக்கும் காரணியாகும். வளர்ச்சியடைந்த இடங்களில் பிறப்பு விகிதங்கள் குறையும்போது, அங்கே உழைக்கும் வயதுடையவர்கள் குடியேறுகிறார்கள். வயதானவர்களால் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க இயலாது; இந்த இழப்பும், அவர்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவும் ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கத்தை ஈடுசெய்ய உதவும் முக்கியக் காரணியாக உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு உள்ளது. இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சர்வதேச இடம்பெயர்வு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இது மக்கள்தொகையைப் பாதிக்காது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு 1,000 பேரில் ஒருவரைவிடவும் குறைவானவர்களே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதேசமயம் அண்டை நாடான இலங்கையில் ஒவ்வொரு 1,000 பேரில் மூன்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்தியாவுக்குள் நடக்கும் உள்நாட்டு இடப்பெயர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது. பத்து இந்தியர்களில் மூன்று பேர், தாங்கள் வசித்த இடத்திலிருந்து வெளியேறிக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் வசிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவு, இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வின் 78ஆவது சுற்று “பன்முகக் குறிகாட்டிகள் கணக்கெடுப்பு” (Multi Indicator Survey – 2020-21) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனினும், அதிக அளவிலான இந்த இடப்பெயர்வு, உழைப்பாளர்களை ஈர்க்கும் இந்தியாவின் வளமான மாநிலங்களின் மக்கள்தொகையையோ மக்கள்தொகையின் அமைப்பையோ கணிசமாக மாற்றும் அளவு தாக்கத்தைச் செலுத்தவில்லை. இந்தியாவிற்குள் இடம்பெயர்வோரில் பெரும்பாலோர் தாங்கள் முன்பு இருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள் செல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது (இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இத்தகையவர்கள்). இடம்பெயர்ந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் அதே மாநிலத்தில் உள்ள மற்றொரு மாவட்டத்திற்குச் செல்பவர்கள். இடம்பெயர்ந்தவர்களில் மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்கள் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு இடையேயான இடப்பெயர்வுகளுக்குப் பெண்களே முக்கியக் காரணமாக உள்ளனர். இந்தியாவில் பெண்களின் பிறந்த இடங்களுக்கு வெளியே அவர்களுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் குடும்பத்துடன் வாழச் செல்வது போன்ற சமூக விதிமுறைகளின் விளைவாகப் பெண்களே இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோராக இருக்கிறார்கள். பத்து சதவீதத்துக்குச் சற்று அதிகமாக ஆண்கள் இடம்பெயர்கிறார்கள். இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் இடம்பெயர்கிறார்கள். பெண்கள் இடப்பெயர்வுக்கு மிகவும் பொதுவான காரணம் திருமணம். ஆண்களுக்கு வேலை தேடுவது. இந்த வகையிலான இடப்பெயர்வு, தரவுகள் கிடைத்த கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவாகவே வளர்ந்துள்ளது. 2007-08இல் 28.5 சதவிகித இந்தியர்கள் இடம்பெயர்ந்தார்கள். இது 2020-21இல் 29.1 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்தது. 2. இந்த நடை முறைகளின் தாக்கம் மக்கள்தொகையில் காணப்படும் இந்த மூன்று போக்குகளின் விளைவாக, இந்தியாவின் மாநிலங்கள் சற்றே மாறுபட்ட திசைகளில் நகர்கின்றன. இது வள ஒதுக்கீடு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பான மோதல்களைத் தூண்டுகிறது. இது, மக்கள்தொகையின் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் அளவுகள், இந்த மாநிலங்களின் மக்கள்தொகையில் உள்ள வயதின் விகிதங்கள் ஆகிய இரண்டு அம்சங்களைக் குறிப்பாகப் பாதிக்கிறது. i) மாநில மக்கள்தொகைகள் 1970கள்வரை இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. 1980கள்முதல் இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகின்றன. இதன் விளைவாக, 2011க்கும் 2036க்கும் இடைப்பட்ட இந்தியாவின் மொத்த மக்கள்தொகைப் பெருக்கத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே வந்திருக்கும். இதே காலகட்டத்தில் நாட்டின் மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். ராஜஸ்தான் 2017இலும், பிகார் 2023இலும் மகாராஷ்டிரத்தை விஞ்சி, உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியவில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தைவிடக் குறைவாக இருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மெதுவாக வளர்கிறது. அது மட்டுமல்ல; சில மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி முழுவதுமாக நின்றுவிடும். இந்தியாவின் மக்கள்தொகை 2060வரை தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடுத்த பத்தாண்டுகளில் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ii) இந்தியாவுக்குள் தலைமுறை இடைவெளி தெற்கு, மேற்கு மாநிலங்கள் மெதுவாக வளர்வது மட்டுமின்றி அவற்றுக்கு மிக விரைவாக வயதாகவும் செய்யும். ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதுடன், பாதுகாப்பான வாழ்வும் கிடைக்கும் நிலையில் ஒரு நாட்டிற்கு வயதாகத் தொடங்குகிறது. சராசரி இந்தியரின் வயது 28க்கும் அதிகமாக உள்ளது. உலகின் சராசரி வயது 30க்கும் அதிகமாக உள்ளது. 2050க்குள் சராசரி இந்தியரின் வயது 38க்கும் அதிகமாக இருக்கும். இந்தியாவுக்குள் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில மாநிலங்களுக்கிடையே பத்தாண்டுக் கால வேறுபாடு உள்ளது. இதில் கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவின் மிகவும் வயது முதிர்ந்த மாநிலங்களாகவும், பிகார் மிக இளைய மாநிலமாகவும் உள்ளன. கேரளத்தில் உள்ள மக்கள்தொகையில் முதியவர்களின் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பங்கு, பிகார் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம். 2030களின் நடுப்பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக வயது முதிர்ந்த மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான மாநிலங்களிலும் பிறப்பு விகிதங்களிலும் இறப்பு விகிதங்களிலும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கும். விரைவில் சராசரித் தமிழ் ஆண் சராசரி பிகாரி ஆணைவிட 12 வயதுக்கும் கூடுதலாக வயதானவராக இருப்பார். கருவுறுதல், இறப்பு, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் ஆகியவை குறித்த தரவுகளைப் பயன்படுத்தி, 2011-2036 காலப்பகுதிக்கான மக்கள்தொகை மதிப்பீடுகளை வழங்குவதற்காக, இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அடிப்படையில் அமைந்த தரவுகள் இவை. நாடுகள் அல்லது மாநிலங்கள் குழந்தைகள் அல்லது முதியவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும்போது — அதாவது அவை மிக இளமையாகவோ அல்லது மிக வயதானவையாகவோ இருக்கும்போது —அது அவற்றின் பொருளாதாரம் கட்டமைக்கப்படும் விதத்தைப் பாதிக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மக்கள்தொகையில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் உற்பத்திக்குப் பங்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதேசமயம், பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு — குழந்தைகளும் முதியவர்களும் — அவரவர் வீட்டிலிருந்தும் மாநிலத்திடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. 2031ஆம் ஆண்டுக்குள், பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு மக்கள்தொகையில் கால் பங்கிற்கும் அதிகமாகவும் கேரளத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கும். இந்த இரண்டு மாநிலங்களிலும் உழைக்கும் வயதுடையவர்களின் மொத்த எண்ணிக்கையும் குறையத் தொடங்கியிருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களிலோ, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை (15-59 வயது) இன்னும் வளர்ந்துவருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தெற்கு மாநிலங்களின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை சுருங்கும். அதேசமயம், மத்திய-வடக்கு மாநிலங்களில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளரும். மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் குறிப்பிட்ட இடத்தின் மக்கள்தொகையில் சார்பு விகிதம் என்னும் முக்கியக் காரணியைக் கண்காணித்துவருகிறார்கள். பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் உள்ள விகிதம்தான் சார்பு விகிதம். அதிக சார்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் அல்லது நாடுகளில், உழைக்கும் வயதுடைய மக்களின் மீதும் மாநில நிர்வாகத்தின் மீதும் நிதிச் சுமை அதிகமாக இருக்கும். வடக்கு, கிழக்கு மாநிலங்களின் பிறப்பு விகிதங்கள் இப்போது குறைந்துவருவதால் இவற்றில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவற்றின் சார்பு விகிதங்கள் இறங்குமுகத்தில் உள்ளன. உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்துவருவதால், சார்புடையவர்களை ஆதரிப்பதில் இம்மாநிலங்களின் திறன் அதிகரிக்கும். இருப்பினும், தெற்கு, மேற்கு மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, உழைப்பவர்கள் எண்ணிக்கை சுருங்குவதால், அவற்றின் சார்பு விகிதங்கள் சீராக உயர்ந்துவரும். 3. இந்திய ஒன்றியத்திற்கான தாக்கங்கள் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் வளர்ந்துவரும் இந்தப் பிளவு, இந்தியாவில் கொள்கை, அரசியல் ஆகியவற்றின் இரண்டு முக்கியப் பகுதிகளில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. வளங்களைப் பகிர்ந்தளித்தல், பிரதிநிதித்துவம் ஆகியவையே அந்த இரு பகுதிகள். தெற்கு மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தெற்கு மாநிலங்களிலிருந்து ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் வருவாயை எவ்வாறு மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பது என்பது குறித்த மோதலுக்கு இது வழிவகுத்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கும் ஏழ்மையான நிலையில் உள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் வருமானத்தில் அதிகமாகப் பங்குகள் கிடைக்கும். ஒன்றிய அரசு திரட்டும் வரி வருமானம் மாநிலங்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை இந்தியாவின் நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. இது வளப் பகிர்வுக்கான சூத்திரம் (devolution formula) எனப்படுகிறது. தாங்கள் முக்கிய வருவாய் பங்களிப்பாளர்களாக இருந்தபோதிலும் நிதி ஆணையத்தின் வளப் பகிர்வுக்கான சூத்திரம் தங்களுக்குத் தண்டனை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெற்கு மாநிலங்கள் வாதிடுகின்றன. குறிப்பாக 15ஆவது நிதி ஆணையத்தின் (2020-26) கீழ் தாங்கள் பாதிக்கப்படுவதாக அவை கூறுகின்றன. அதிக மக்கள்தொகையும் குறைந்த தனிநபர் வருமானமும் கொண்ட மாநிலங்கள் அதிகப் பங்கைப் பெறுவதால் தெற்கு மாநிலங்கள் குறைவான பங்கைப் பெறுகின்றன என்பது முக்கியமான புகார். 14ஆவது ஆணையத்தின் கீழ் ஐந்து தெற்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த பங்கு 18.6 சதவிகிதமாக இருந்தது. இது 15ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 15.8 சதவிகிதமாகக் குறைந்தது. மத்திய வரி வருவாயில் செஸ், சர்சார்ஜ் (cesses and surcharges) ஆகிய கூடுதல் வரிகளின் பங்கு வளர்ந்துவருகிறது. இது பிரச்சினைக்குரிய மற்றொரு புள்ளியாக அமைகிறது. ஒன்றிய அரசாங்கம் இந்தக் கட்டணங்களை (இது மொத்த வரி வசூல்களில் 10-15 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்) மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. தெற்கு மாநிலங்களின் தலைவர்கள், சரக்கு மற்றும் சேவை வரிக்கும் (ஜிஎஸ்டி) நேரடி வரிகளுக்கும் தாங்கள் பெரிய அளவில் பங்களித்தாலும், அதற்கு ஈடான மறுபகிர்வு நிதியைப் பெறுவதில்லை என்றும் இது தங்களுக்குப் பாதகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினையும் உள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பின் பிரிவு 81இன்படி, ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப விகிதாசாரமாக மக்களவையில் இடங்களைப் பெற வேண்டும்; மக்களவைத் தொகுதிகள் கிட்டத்தட்ட சம அளவில் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையையும் அரசியலமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. இது தற்போது 545ஆக உள்ளது. இந்த இடங்களை மாநிலங்களுக்கிடையில் விகிதாசாரமாகப் பிரிக்க வேண்டும். அரசியலமைப்பின் பிரிவு 82இன்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகும் புதுப்பிக்கப்பட்ட மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடங்களை மறுஒதுக்கீடு செய்ய வேண்டும். 1976இல் இந்தியாவில் அவசரகால நிலைமையின்போது குடிமைச் சுதந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது 42ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புவரை இடங்களை மாற்றியமைப்பது நிறுத்திவைக்கப்பட்டது. 2002இல் நாடாளுமன்றம் 84ஆவது திருத்தத்தை நிறைவேற்றி, இந்த முடக்கத்தை 2026ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அடுத்த பத்தாண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டித்தது. அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பிப்ரவரி 2027இல் நடத்தப்பட உள்ளது. அந்தக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை (delimitation) நடக்கும்போது வடக்கு மாநிலங்களின் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அவற்றுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும். தெற்கு மாநிலங்களுக்கான இடங்கள் அவற்றின் மக்கள்தொகைக்கு ஏற்ப அமையும்போது அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும். இந்த வகையான மறுசீரமைப்பிற்கான வலுவான எதிர்ப்புக் குரல்களைத் தென் மாநிலங்கள் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது தங்கள் வளர்ச்சிக்கும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கும் அளிக்கும் தண்டனை என்று அம்மாநிலங்கள் கூறிவருகின்றன. இந்திய ஒன்றியத்திற்கான இந்தச் சவால்களைத் தவிர, தெற்கு மாநிலங்கள் வளர்ந்துவரும் சார்பு விகிதங்களையும் இதனால் மாநில நிதி நிலைமையில் ஏற்படும் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதிர்காலத்தில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை தெற்கைக் காட்டிலும் வடக்கிலிருந்து அதிகமாக வர அதிக வாய்ப்புள்ளது என்பதால், தெற்கு மாநிலங்கள் மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்தவர்கள் குறித்த தங்கள் கடுமையான விமர்சனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். அதேசமயம், இந்தியாவின் வடக்கு மாநிலங்களின் தற்போதைய தொழிலாளர்களுக்கும் வருங்காலத் தொழிலாளர்களுக்கும் எதிர்கால வேலைத்தளங்களுக்குத் தேவையான திறன்களைச் சிறப்பாக வழங்குவதன் அவசியம் முன்னெப்போதையும்விட முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் முக்கியமான நேரத்தில் வந்துள்ளன. இனப்பெருக்க உரிமைகள், பெண்களின் உரிமைகள், எதிர்காலத் தொழிலாளர் சந்தைகள் குறித்த அடிப்படையான சிந்தனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இவை வழங்கக்கூடும். இவை நாடு முழுவதும் உள்ள குடிமக்களை உசுப்பிவிடக்கூடிய பொதுவான சவால்களாகும். ஆனால் இந்த மாபெரும் வேறுபாடுகளை அரசியல் லாபத்திற்காக இனரீதியான பிளவுகளை உருவாக்கவும் பயன்படுத்த முடியும். இந்தப் பிளவுகள் மேலும் அதிகரித்து, நீடித்த சேதத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அபாயகரமான அளவில் வெளிப்படையாக உள்ளது. இந்தியாவும் இந்தியர்களும் இந்த மக்கள்தொகைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது இந்திய ஜனநாயகத்தின் போக்கையும் தீர்மானிக்கும். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது. https://minnambalam.com/indias-demographic-dilemmas-part-3/
  22. நோபல் பரிசு வழங்காத நோர்வே: பழிவாங்க கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! 20 January 2026 கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், "எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்," என்று குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. "2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது" என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/441611/denmark-not-awarding-nobel-prize-trump-is-eager-to-take-over-greenland-as-revenge

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.