Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 21 February 2026 ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் எங்கே ? அரசே பதில் சொல் , ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் , நீதி எங்கே ? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியுமே அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணானல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/448005/attention-grabbing-demonstration-in-jaffna
  2. காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை ? adminFebruary 20, 2026 ஊர்காவற்றுறை துறைமுகம் மற்றும் கப்பல் பழுது பார்க்கும் பகுதி ஆகிவற்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன் போது, காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைப்பது, துறைமுக அபிவிருத்தி, ஊர்காவற்றுறையில் இருந்து காரைநகர் கடற்கோட்டைக்கு பயணிகள் செல்வதற்கான வழிவகைகள், துறைமுகத்திற்கு அருகில் பாவிக்கப்படாது காணப்படும் காணிகளை மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தல் மற்றும் எதிர்கால சுற்றுலா வசதிகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்தப் பாலத்தை அமைப்பதற்கு ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி கணிசமான நிதி தேவைப்படும். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அல்லது நட்பு நாடுகளின் நீண்டகால சலுகைக்கடன் உதவியைப் பெறுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கான (Feasibility Study) நிதி ஒதுக்கப்படவுள்ளது. கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான நிதி, துறைமுக அதிகார சபையின் (SLPA) சொந்த நிதி மற்றும் அரசாங்கத்தின் “நீலப் பொருளாதார” (Blue Economy) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படவுள்ளது. அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் அறிவிப்பின்படி, பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும். சர்வதேச தரத்திலான கேள்வி மனுக்கள் கோரப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்படுவர்.பாலத்திற்கான அடிக்கல் நடும் விழா மற்றும் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் கடற்கோட்டைப் பகுதிகளை ஒரு விசேட சுற்றுலா வலயங்களாக பிரகடனப்படுத்த சுற்றுலா அமைச்சுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது.சுற்றுலாவைக் கருத்திற்கொண்டு காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை இடையே நவீன மின்சார படகுச் சேவைகளை (Electric Ferries) அறிமுகப்படுத்தவும் அமைச்சர்கள் குழு ஆர்வம் காட்டியுள்ளது. https://globaltamilnews.net/2026/229447/
  3. பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம். adminFebruary 21, 2026 மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர். தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர் மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/229476/
  4. சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது. பிரித்தானிய நேரப்படி நாளை சனி 21 பெப் முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் பாகிஸ்தான் (Y3) NZ எதிர் PAK 14 பேர் போட்டியில் உள்ள நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஏழு பேர் போட்டியில் உள்ள பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத ஆப்கானிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் NZ வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் NZ ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் NZ வாத்தியார் NZ கறுப்பி NZ வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா PAK நிலாமதி AFG நந்தன் PAK நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?
  5. மாற்றச் சொல்லிக் கேட்டு Jasprit Bumrah ஐ பதிலாகத் தந்தீர்கள். ஆனால் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பிருக்குமா?
  6. கேள்விகள் 50) இலிருந்து 52) வரைக்கான புள்ளிகள்: 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ SA AFG CAN UAE போட்டியாளர் செம்பாட்டான் NZ SA ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் NZ SA அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் NZ SA நியூ பலன்ஸ் NZ SA வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் NZ SA கந்தப்பு NZ SA நியாயம் NZ SA எப்போதும் தமிழன் NZ SA ரசோதரன் SA AFG பிரபா NZ SA நிலாமதி SA AFG நந்தன் NZ SA 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் SA NZ ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் SA NZ அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் SA NZ நியூ பலன்ஸ் SA NZ வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் SA NZ கந்தப்பு SA NZ நியாயம் NZ SA எப்போதும் தமிழன் SA NZ ரசோதரன் SA AFG பிரபா SA NZ நிலாமதி SA AFG நந்தன் NZ SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் UAE ஏராளன் CAN வசீ CAN புலவர் UAE சுவைப்பிரியன் UAE அல்வாயன் CAN ஈழப்பிரியன் CAN நியூ பலன்ஸ் CAN வாத்தியார் UAE கறுப்பி CAN வாதவூரான் CAN வீரப் பையன்26 UAE சுவி CAN கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் CAN கந்தப்பு CAN நியாயம் CAN எப்போதும் தமிழன் UAE ரசோதரன் CAN பிரபா UAE நிலாமதி CAN நந்தன் CAN முதல் சுற்றுப் போட்டிகளுக்கான 52 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் @கந்தப்பு மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நாற்காலியில் உறுதியாகத் தக்கவைத்துள்ளார். சுமைதாங்கி மீண்டும் @goshan_che இடம் வந்துள்ளது. ஆனால் அது அடிக்கடி கைமாறலாம்!
  7. கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்: 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI SCOT NEP ITA போட்டியாளர் செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 ENG WI சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG WI அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் ENG WI பிரபா ENG WI நிலாமதி ENG WI நந்தன் ENG WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 WI ENG சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG ITA அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் WI ENG பிரபா ENG WI நிலாமதி WI ENG நந்தன் ENG SCOT 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் ITA அல்வாயன் ITA ஈழப்பிரியன் NEP நியூ பலன்ஸ் ITA வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் SCOT வீரப் பையன்26 ITA சுவி NEP கிருபன் SCOT கோஷான் சே SCOT அஹஸ்தியன் ITA கந்தப்பு ITA நியாயம் ITA எப்போதும் தமிழன் ITA ரசோதரன் SCOT பிரபா ITA நிலாமதி SCOT நந்தன் ITA 49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயாவுக்கும் @goshan_che க்கும் இடையில் ஆடு-புலி ஆட்டம் தொடர்கின்றது!
  8. கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SL IRE ZIM OMA போட்டியாளர் செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி AUS SL வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் AUS SL கோஷான் சே AUS SL அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் AUS SL பிரபா AUS SL நிலாமதி AUS SL நந்தன் AUS SL 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி SL AUS வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் SL AUS கோஷான் சே SL AUS அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் SL AUS பிரபா AUS SL நிலாமதி SL AUS நந்தன் AUS IRE 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் OMA ஏராளன் OMA வசீ OMA புலவர் OMA சுவைப்பிரியன் OMA அல்வாயன் OMA ஈழப்பிரியன் OMA நியூ பலன்ஸ் OMA வாத்தியார் OMA கறுப்பி OMA வாதவூரான் OMA வீரப் பையன்26 OMA சுவி ZIM கிருபன் OMA கோஷான் சே ZIM அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA நியாயம் OMA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் OMA பிரபா OMA நிலாமதி OMA நந்தன் OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  9. கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK USA NED NAM போட்டியாளர் செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் IND PAK நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா IND PAK நிலாமதி IND PAK நந்தன் IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் PAK IND நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா PAK IND நிலாமதி IND PAK நந்தன் IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NAM ஏராளன் USA வசீ USA புலவர் NAM சுவைப்பிரியன் NAM அல்வாயன் USA ஈழப்பிரியன் NED நியூ பலன்ஸ் USA வாத்தியார் NAM கறுப்பி USA வாதவூரான் USA வீரப் பையன்26 NAM சுவி NAM கிருபன் NED கோஷான் சே NED அஹஸ்தியன் USA கந்தப்பு NAM நியாயம் NAM எப்போதும் தமிழன் USA ரசோதரன் NAM பிரபா NAM நிலாமதி NAM நந்தன் OMA 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!
  10. இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவான அணிகள்: குழு A இந்தியா பாகிஸ்தான் குழு B ஸிம்பாப்வே சிறிலங்கா குழு C மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து குழு D தென்னாபிரிக்கா நியூஸிலாந்து
  11. இன்றைய இறுதியான முதல்சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. வாசிம் அலி மாத்திரம் நிதானமாக 32 (33 பந்துகளில்) ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்து, இறுதியில் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 104 ஓட்டங்களுடனும் சுருண்டுகொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் மார்ஷும், ட்ராவிஸ் ஹெட்டும் பந்துகளை நாலாபக்கமும் விளாசித் தள்ளி 6 ஓவர்களிலேயே 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் வேகமாக அடித்தாடியபோதும் ட்ராவிஸ் ஹெட் 32 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும் மிச்சல் மார்ஷ் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 64 (33 பந்துகளில்) ஓட்டங்கள் எடுத்து 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். முதல் சுற்றின் 40 போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  12. நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும் February 19, 2026 — கருணாகரன் — இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக்கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு பிரச்சினையையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் தீர்வு காண்பது என்றும் பேசுவதில்லை. அல்லது ஒவ்வொரு விடயத்தையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் முன்னெடுத்துச் செயற்படுத்துவது என்றும் கூறுவதில்லை. பதிலாக இவை தொடர்பாக பிரதி அமைச்சர்கள், NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் அங்கங்கே சில வார்த்தைகள் சொல்லப்படும். அதாவது அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளில் அக்கறையோடு செயற்படுகிறது. நிச்சயமாக மாற்றங்களை உருவாக்கும் என்று அவர்கள் அங்கங்கே சொல்லி, எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் அக்கறை அரசாங்கத்துக்குண்டு என்றவொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்தியின் ஆளும் நிலைப்பாட்டுக்கான உபாயமாகும். இந்த மாதிரியானதொரு உபாயத்தையே முன்பு ரணில் விக்கிரமசிங்கவும் கையாண்டு வந்தார். எதையும் உரத்த குரலிலோ, உறுதிபடவோ ரணில் சொல்வதில்லை. ஆனால், தந்திரமாகக் காய்களை நகர்த்துவார். ஐம்பது ஆண்டுக்கும் அதிகமான அரசியல் வரலாற்றைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஐந்து தடவைக்கு மேல் பிரதமராக இருந்திருக்கிறார். ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். அரசியல் வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும் இலங்கையின் எந்த நெருக்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்வைக் கண்டதேயில்லை. ஆனால், வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னுடைய அரசியற் காலத்தைக் கடத்திக் கொண்டார். ஏறக்குறைய அநுரகுமார திசநாயக்கவும் இத்தகையதொரு உபாயத்தை – தந்திரத்தைத்தான் கையாள்கிறார். ஆனால், தேசிய மக்கள் சக்தி, இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் – தீர்வை எட்டும் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு எதைப் பரிசாகக் கொடுப்பது என்று தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியும் அதற்குத் தலைமை தாங்கும் அநுரகுமார திசநாயக்கவும் சர்வரோக நிவாரணிகள். இதொரு முட்டாள்தனமான நம்பிக்கை. அடிப்படைகளற்ற எந்த நம்பிக்கையும் முட்டாள்தனமானதே. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் என்றவாறாக நடவடிக்கைகள் அமைந்துள்ளனவே தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியைக் காண்பதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ, திட்டமோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தெரியவில்லை. அப்படித்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் தீர்வுக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் பின்னடிக்கிறது. தேர்தல் நடக்கும் என்று NPP யின் ஒரு தரப்புச் சொல்கிறது. தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று NPP யின் இன்னொரு தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட ஏய்ப்பு அன்றி, வேறென்ன? அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என்று ஒரு தரப்புச் சொல்கிறது. அது இப்போதில்லை என்று இன்னொரு தரப்புக்கூறுகிறது. இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த மாதிரிச் செயற்பாடுகளுக்கு என்ன பெயர்? ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியவில்லை. கல்விக் கொள்கையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதையும் விட அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணியை எதிர்த்து முடக்குவதற்கே NPP க்குள்ளும் வெளியிலும் மும்முரமான முயற்சிகள் நடக்கின்றன. ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. அதாவது வெளியே சொல்லப்பட்ட – மக்களுக்கு உறுதி அளித்த அளவுக்கு முந்திய ஆட்சியாளர்களில் (ஊழல்வாதிகளில்) NPP கைவைக்கவில்லை. இதுவரையில் பிடித்து உள்ளே போடப்பட்டிருப்பவர்கள் ஓரத்தில் இருந்த சிறிய எறும்புகளே. என்பதால்தான் NPP யின்மீது கேள்விகளும் சந்தேகமும் வலுக்கிறது. இதேவேளை இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் NPP க்குப் பதிலாக – மாற்றாக வேறு தெரிவுகள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். NPP யைத் தவிர்த்தால், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கலாமா என்றால், சஜித்தான் கடந்த ஆட்சியில் 1000 விஹாரைகள் திட்டத்தை உருவாக்கிய நாயகனாக இருக்கிறார். இலங்கைக்குத் தேவை தொழிற்சாலைகளே தவிர, விஹாரைகளோ, தேவாலயங்களோ, கோயில்களோ, மசூதிகளோ இல்லை. உலகத்திடம் கையேந்தி, கடன்வாங்கி ஆட்சியை நடத்தும் அரசாங்கத்தின் நிதியில் மத நிறுவனங்களை வளர்ப்பது மூடத்தனத்தை வளர்ப்பதாகவே அமையும். அப்படியான ஒருவரை எப்படி நம்பி ஏற்றுக் கொள்வது? அடுத்தது பொதுஜன பெரமுன. இந்த நாட்டைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்ஸவினரை எந்த அடிப்படையில் மறுபடியும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவது? மட்டுமல்ல, அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எதிர்வளமாகச் சிந்திப்பவர்கள். ஆகவே அவர்களும் பொருத்தமான தெரிவல்ல. மிஞ்சுவது, சக்குப் பிடித்துப்போன ரணில் தரப்புத்தான். அவர்கள்தானே எதற்குமே பொருத்தமற்றவர்கள் என்று சனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றால், இனி எந்த அடிப்படையில் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது? இதுதான் மிகப் பெரிய துயரமும் அவலமுமாகும். இதுதான் NPP க்கும் வாய்ப்பாக உள்ளது. இந்த யதார்த்தப் பின்னணில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கின்றனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் விட்டாலும் பரவாயில்லை. புதிய அரசியலமைப்பு வந்தாலென்ன, விட்டாலென்ன? மாகாணசபைத் தேர்தல் நடந்தால் என்ன? நடக்காமல் போனாலென்ன? இனிமேல் ஊழலற்ற, பொருளாதார சுபீட்சத்தை நோக்கிய ஒரு ஆட்சி இருந்தால் போதும் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். இது பெருந்திரள் சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அவதானிப்பும் கருத்துமாகும். இதை உள ரீதியாக நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு அரசாங்கத்தின் எளிமையான நடவடிக்கைகளும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் தனிப்பட்ட – பகிரங்க நடமாட்டங்களும் அமைகின்றன. மிக எளிமையாக, தாங்கள் நெருங்கிப் பார்க்கக் கூடிய ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பது பெரும்பாலான மக்களுடைய எண்ணமாகும். ஆக, அநுரகுமார திசநாயக்க என்ற தங்கக் குதிரை உள்ளவரை தேசிய மக்கள் சக்தியின் கதிரைக்குப் பிரச்சினையில்லை. தமிழ்ச் சமூகத்தில் முக்கியமாக இரண்டு விதமான நோக்குநிலையைக் கொண்ட தரப்புகள் உண்டு. ஒன்று, தேசிய மக்கள் சக்தியை நம்பி, அந்த மாயக்குதிரைக்குப் பின்னால் மகிழ்ச்சியோடு செல்லும் – செல்ல விரும்பும் தரப்பு. மற்றது, NPP யை நம்ப முடியாது என்று வெளியே நிற்கும் தமிழ்த்தேசியவாதத் தரப்பு. இதற்குள் சிறிய – குட்டிக்குட்டி – அணிகள் உண்டு. அடிப்படையில் அவையெல்லாம் ஒரு தரப்பே. ஆனால், இரண்டு தரப்புகளும் இன்றைய நிலையில் அரசியல் வலுவற்றவையே. தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் தரப்பு, எந்த வகையிலும் அரசாங்கத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது. குறைந்த பட்சம், வடக்குக் கிழக்கில் உள்ள எந்தச் சிறிய – தனித்துவமான எத்தகைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாக இல்லை. இதற்கு இரண்டு எளிமையான உதாரணங்களைச் சொல்ல முடியும். 1. மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள். அது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்பார்ப்பும் அடிப்படைத் தேவையுமாகும் என்பதை NPP ஐ ஆதரிக்கும் தமிழ் பேசும் ஆதரவாளர்களும் சரி, NPP யில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்பேசும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என ஒரு பெரிய குழாத்தினர் இருக்கின்றபோதும் பேசுவதோ, அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அப்படி அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, NPP யும் இடமளிப்பதில்லை. 2. வடக்குக் கிழக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், ஆனையிறவு உப்பளம், கிழக்கில் பிற தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதையும் சீராக – முழுமையான அளவில் விரிவாக்கம் செய்து வளர்த்தெடுப்பதற்கு அரசாங்கத்தைக் கோரவோ, பொறுப்பெடுத்துச் செயற்படுத்தவோ முடியாதவர்களாகவே உள்ளனர். ஆக இந்தத் தரப்பு நானும் ரவுடிதான் என்று வலுக்கட்டாயமாக பொலிஸ் வண்டியில் அடம்பிடித்து ஏறும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியையே நினைவூட்டுகின்றனர். இவர்களுடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் நமக்குச் சிரிப்பூட்டுகின்றன. ஆனால், நாம் இதையெல்லாம் பார்த்து ரசிக்கும்படியாகவோ சிரிக்கும்படியாகவோதானா வாழ்கிறோம். ஒரு பெரிய போரினால் முற்றாகவே சிதைக்கப்பட்ட சமூகத்தின் மக்களல்லவா! அப்படியென்றால், இந்தக் குறைபாடுகளை நீக்கி, சிதைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக – அல்லது அவ்வாறு தம்மை அடையாளப்படுத்த முற்படும் தமிழ்த்தேசியவாத சக்திகள் இந்த இடத்தில் மிக விழிப்பாகவும் உறுதியாகவும் மிக நுட்பமாகவும் மிகத்தீவிரமாகவும் தொழிற்பட வேண்டும். ஆனால், அதை எந்தக் கட்சியும் செய்யவே இல்லை. தமிழ்த்தேசியவாத அரசியலை மென்நிலையிலும் தீவிர நிலையிலும் முன்னெடுக்கும் இரண்டு போக்குகள் உண்டு. ஒரு போக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் போன்றோர் பிரதிநிதித்துப்படுத்தும் தீவிர நிலைப்போக்கு. மற்றது சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர். இந்த இரண்டு தரப்பும் 2009 க்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இருந்தபோதும் எதையும் செய்யவில்லை. அதிலிருந்து முரண்பட்டுப் பிளவுபட்டுப் பிரிந்து நின்றும் சாதிக்கவில்லை. இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெலோ, தமிழரசுக்கட்சி, முன்னணி போன்றவை பிளவுபட்டுள்ளன. உள்முரண்பாடுகளால் தமிழரசுக்கட்சியும் ரெலோவும் நீதிமன்றம் வரை சென்று விட்டன. சனங்கள் இப்பொழுது இந்தக் கட்சிகளின் உள் வீட்டுப் பிரச்சினையைக் கண்டு கொதிப்போராகவும் ரசிப்போராகவும் மாறியுள்ளனர். ஆனால், எல்லோருக்கு மேலும் துயரச் சுமைகளும் அபாயக் கத்திகளுமே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. தெற்கில் பலமான எந்த அரசியற் சக்தியும் இல்லை. ரணில் – சஜித் அணிப்போட்டி முடிவுக்கு வரவில்லை. புதிதாக வேறெந்தக் கூட்டணியோ சக்தியோ உருவெடுக்கவும் இல்லை. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்தாக என்ன செய்வது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் NPP சத்தமில்லாமல் தன்னைப் பலப்படுத்துவதில் மிக நுட்பமாகச் செயற்படுகிறது. அரசியல் ரீதியாக சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என வல்லாதிக்கச் சக்திகளை அது திறமையாக – தனக்கு வாய்ப்பாகக் கையாள்கிறது. புலம்பெயர் சமூகத்தை அநுரகுமார திசநாயக்க, ஹரிணி, ரில்வின் போன்றோர் தனிப்பட வசப்படுத்தி வைத்துள்ளனர். உள்ளுரில் அபிவிருத்திக் குழுக்கள் என்ற பேரில் கிராமியக் கட்டமைப்புகளை விரிவாக்கி, விரைவுபடுத்தித்தன்னைப் பலப்படுத்துகிறது. வெளியே உள்ள எதிர்த்தரப்புகளின் பலவீனத்தையும் NPP தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள்? ஆம், மக்கள் எப்போதும் போல இருண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். https://arangamnews.com/?p=12688
  13. திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம் February 20, 2026 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள். இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. https://www.ilakku.org/trincomalee-illegal-restaurant-set-up-on-the-beach-removed/
  14. யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல் 20 Feb, 2026 | 10:21 AM யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த கட்டுமானப் பகுதி ஒரு தாழ்வான கடலோர சதுப்பு நிலமாக இருப்பதையும், அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெள்ளக் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வளப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த பகுதி கண்டல் காடுகள் (Mangroves), உவர் சதுப்பு நிலங்கள், கடற்புல் படுக்கைகள் மற்றும் இயற்கை நீரோட்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. இவை கடல் மட்ட உயர்வு, சூறாவளி அலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன. பாரிய அளவிலான நில நிரப்புதல், தாவர அழிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், இந்த இயற்கை சூழலமைப்புகள் நிரந்தர சேதமடையக்கூடும் என்றும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுமானத் திட்டம் பல்லுயிர் வாழ்விட இழப்பை ஏற்படுத்தி, கடலோர சூழலியல் சமநிலையை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கடிதத்தில், 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் Terms of Reference வழங்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறை முழுமையாக நிறைவேறாமல் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சட்டத்தின் ஆட்சி முறையை பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் ஆளுமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை இன்றி இத்தகைய பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளை புறக்கணிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ‘சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் அனுர சதரசிங்க’ என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை பொதுமக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புகள் (Public Trust Doctrine) என்றும் நினைவூட்டியுள்ளது. எனவே, முழுமையான சட்ட இணக்கப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வ பதில் வெளியாகும் வரை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் நிதானமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239125
  15. “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏ.ஐ. காணொலி, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர். சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வோட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-ஐ-அறிவை-ஆக்கப்பூர்வமாக-பயன்படுத்துவோம்/175-372768
  16. மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. யுரேனிய செறிவூட்டலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில், ஈரான் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், சில பிரச்சினைகளில் சிக்கல் நீடிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. 2003 இல் ஈராக்குக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா இப்பகுதியில் படைகளை குவித்தது. அதன் பிறகு தற்போது தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை வாரக்கணக்கில் விரிவடையும் என்றும் முழு அளவிலான போரைப் போன்று இருக்கும் என்றும் ஆக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதலாக இது இருக்கப் போகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய கிழக்கு நோக்கி தனது அதிநவீன F-35, F-22 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் ஏற்கனவே ஈரான் கடற்கரையின் எல்லைக்குள் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தால், அது ஈரான் ஆட்சிக்கும் அதன் பிராந்திய பிரதிநிதிகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தும். ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை குறிவைப்பதாக இந்த தாக்குதல் இருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மத்திய-கிழக்கில்-பதற்றம்-அமெரிக்க-படைகள்-குவிப்பு/50-372767

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.