Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. எல்லோரும் கிளி ஜோய்ஸம்தான் பார்க்கின்றவர்கள்! T20 இல் ஒன்றிரண்டு பந்துகளே மட்சை மாற்றிவிடும்! எல்லா ரீமும் கப்படிக்கவே விளையாடுகின்றார்கள்! எனவே யானையைக் கீற முயற்சிப்பதில் பிரச்சினை வராது! நிறைய statistics எல்லாம் பாவித்து இந்தப் போட்டியில் வெல்லமுடியாது. பின்வாங்காமல் கலந்துகொள்ளுங்கள்!
  2. 50, 60, 70 வயது ஒன்றுகூடல்கள் எல்லாம் நமக்கு சரிவராது.. குடுகுடு கிழவன், கிழவிகளோடு கூத்தடிக்க ஏலாது! இது sight seeing ஹொலிடேயும் இல்லை! Relaxing ஹொலிடே!☺️
  3. 300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தடையின்றி பிரார்த்தனை செய்தனர். உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னிலையில், எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைகளும் ஏற்படாத வகையில் மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடுகள் செய்தனர். ‘தாஸ்’ குடும்பப்பெயர்களைக் கொண்ட தலித் குடும்பங்கள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கருதப்படும் கிதேஷ்வர் சிவன் கோயிலில் வழிபடுவதற்கான அடிப்படைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவின் போது பாரம்பரியத்தை மீறி கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டிருந்த குடும்பங்கள், “தாழ்ந்த சாதி”யைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் கோவில் வளாகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கோவிலில் வழிபடுவதற்கான தங்கள் உரிமைய நிறைவேற்ற உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, கிராமவாசிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்கொண்டனர். “கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்,” என்று கோவில் படிகளில் கால் வைக்க தடை விதிக்கப்பட்ட கிராமவாசி சந்தோஷ் தாஸ் கூறினார். “உள்ளூர் பொலிஸார் மற்றும் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது, அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்,” என்று மற்றொரு கிராமவாசி எக்கோரி தாஸ் மேலும் கூறினார். கிராமத்திலிருந்து பொருளாதார ரீதியாக விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையாக கடந்த சில நாட்களாக தாஸ் குடும்பங்களிலிருந்து பால் கொள்முதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை வரை அமலில் இருந்ததை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர். “எங்களுக்குச் சொந்தமான வளர்ப்பு கால்நடைகளிடமிருந்து பால் சேகரிக்கத் தொடங்குமாறு பால் கொள்முதல் மையங்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் சேகரிப்பு மீண்டும் தொடங்கவில்லை என்றால், நாங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்” என்று எக்கோரி தெரிவித்திருந்தார். “கித்கிராமில் உள்ள கோவிலில் வழிபாடு தொடர்பாக இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தஸ்பராவில் வசிப்பவர்களும் மற்றவர்களைப் போலவே பூஜை செய்ய முடியும். புதன்கிழமை முதல், அனைவரும் கோவிலில் பூஜை செய்வார்கள். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/300-years-of-caste-discrimination-ended-dalits-enter-temple-for-the-first-time/
  4. வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைவரங்கள் என்ன?; அறிந்துகொள்வதில் அமெரிக்கா ஆர்வம் தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கேட்டறிந்தார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் கரிசனை உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அமெரிக்கத்துடன் என்னுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். இதன்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நிலைவரங்கள், வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொருளாதார முன்னேற்றங்கள் போன்ற விடயங்களையும் கேட்டறிந்துகொண்டார். கட்சியின் புதிய செயலாளராக அவர் முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடியதால் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக உள்ளது. இதேவேளை இந்த சந்திப்புக்கு முன்னர் அவுஸ்திரெலிய தூதுவர், பிரதி தூதுவர் மற்றும் அரசியல் அதிகாரி ஆகியோருடனும் சந்திப்பும் இடம்பெற்றது என்றார். இதேவேளை சுமந்திரனுடான சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.சுமந்திரனை முதற்தடவையாக சந்தித்தேன். இந்த சந்திப்பில் அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையில் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=316159
  5. ‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்…. : புதின் விதித்த நிபந்தனைகள்…. March 14, 2025 “30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதினும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புதின். அப்போது அவர், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டிசில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உன்னத இலக்கு வெறுப்பை, உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தது போல் வெளித்தோற்றத்துக்கு புலப்படலாம். ஆனால் உண்மையில், உக்ரைன் தான் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க தரப்பிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரம் அவர்கள் அப்படிக் கோருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும். இது குறித்து அமெரிக்காவும், எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் போர் நிறுத்தம் என்பது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும். உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன்னதாக, அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது பிரச்சினையின் வேரை நாடி சிக்கலைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.” என்றார். https://www.ilakku.org/we-agree-to-a-ceasefire-but-putins-conditions/
  6. தமிழர் பகுதியில் இரு பெண்கள் - வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலங்களாக மீட்பு! Vhg மார்ச் 14, 2025 திருகோணமலை - மூதூர், தஹாநகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (14-03-2025) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை முன்னெடுப்பு சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.battinatham.com/2025/03/blog-post_244.html
  7. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இஸ்ரேலினால் முழுமையாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவின் சில பகுதிகளில் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hiru Newsஇஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள்...இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம். Most visited website in Sri Lanka.
  8. நான்கு சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய தமிழரசுக் கட்சி செய்திகள் வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சியானது வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதற்கான கட்டுப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். https://adaderanatamil.lk/news/cm88fl9ew002vnr5tx1r871dq
  9. அ’புரம் சம்பவம்: சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு 2025 மார்ச் 14 , பி.ப. 12:22 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு காவி உடை, தேரர்கள் வைத்திருக்கும் விசிறி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை பொலிஸார் கண்டுபிடித்தனர்.AN https://www.tamilmirror.lk/செய்திகள்/அ-புரம்-சம்பவம்-சந்தேக-நபர்-வீட்டிலிருந்து-கைக்குண்டு-மீட்பு/175-353735
  10. யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள தேசிய மக்கள் சக்தி! உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வருகைதந்திருந்தனர். https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கட்டுப்பணம்_செலுத்தியுள்ள__தேசிய_மக்கள்_சக்தி!
  11. மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருகை தந்து பார்வையிடுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அ. மாற்கு 1933ஆம் ஆண்டு குரு நகரில் பிறந்தார். புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் சிற்பங்கள் செய்வதிலும் விருப்பம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப ஓவியப் பயிற்சியை ஓவியர் எஸ். பெனடிக்ற் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். பின்னர் 1 953 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் இணைந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றார். அங்கு அவரின் விரிவுரையாளராக இருந்த டேவிற் பெயின்ரர் இவரின் ஓவியங்களை பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் வந்தார். இவர் 1958-1967 வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஓவியர் எம்.எஸ் கந்தையாவினால் உருவாக்கப்பட்ட “விடுமுறைக்கால ஓவியக் கழகத்தில்” (Holiday Painter’s Group) இணைந்து இளையவர்களுக்கு ஓவியத்தை கற்றுக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்து கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். அத்துடன், 1960 களின் இறுதியில் இயங்காது போன “விடுமுறை ஓவியக் கழகத்தை” 1980 களின் மத்தியில் வீட்டில் உருவாக்கி இருந்த ஓவியக் கூடத்தில் ஆரம்பித்து, இடம்பெயர்ந்து வன்னியிலும் மன்னாரிலும் வாழ்ந்த காலங்களிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வர்களுக்கு ஆசானாக திகழ்ந்தார். இவர்களில் பலர் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஓவியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 1998இல் மன்னாருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர். உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக கை,கால்களில் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. கைகளுக்கு கொடுக்கப்பட்ட உடல் பயிற்சிகளின் மூலம் மீண்டும் கைகள் பலம் பெற, மீண்டும் ஓவியங்கள் படைக்க தொடங்கினார். போர் நடைபெற்றுக் கொண்டிருந் ததால் தொடர்புகளற்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த ஓவியங்கள் அனைத்தும் போரால் அழிந்திருக்கும் என்ற நினைப்பில் பழைய ஆக்கங்கள் பலவற்றை மீளவும் உருவாக்கினார். இறுதி வரை எப்போதும் போல் பத்திரிகை தாள்கள், சஞ்சிகைகள், பொருட்கள் வரும் மட்டைகள் என்பவற்றில் எண்ணெய் சுண்ணம், கரித்துண்டு, பேனைகள் எனக் கிடைப்பவற்றைக் கொண்டு ஓவியங்களை படைத்துக் கொண்டே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/213352/
  12. பெண் மருத்துவரின் வாக்குமூலம் பதிவானது editorenglishMarch 14, 2025 அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றன. குற்றவாளி நேற்று அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை காவல்துறையின நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். “நான் 10 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணி வரை தான் வேலை செய்ததாகவும் என் சேவையை முடித்துக்கொண்டு, ருவன்வெலிசேயவுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு மாலை 6:30 மணியளவில் முச்சக்கர வண்டியில் விடுதிக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. தனது அறைக்குள் நுழைய கதவைத் திறந்தபோது, தனக்குப் பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்ததாகவும், சாய்ந்து நின்ற ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து, மற்றொரு கையால் தனது வாயைப் பொத்தி, கத்த வேண்டாம் என்றும், கதவைத் திறக்கவும் சொன்னார், தான் பயந்து போய் கதவைத் திறந்ததும் அறைக்குள் தள்ளியதாக தெரிவித்துள்ளார். என் கைபேசியின் கடவுச்சொல்லை அகற்றச் சொன்ன நபர் அதில் இந்தி பாடல்களை ஒலிக்க செய்தார். அவர், ‘சத்தம் போடாதே, இல்லாவிட்டால் நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன்’ என்றார்.” “ஒரு கட்டத்தில், நான் அந்த நபரை அவர் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றேன். என் கை வெட்டப்பட்டது. நான் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, அந்த நபர் மிகவும் கோபமடைந்தார். பின்னர் நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன்.” “சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் , ‘நான் கைபேசியை எடுத்துட்டுப் போறேன். இனிமே இது கிடைக்காது. நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன். யாரிடமும் சொல்லாதே. சொன்னா, உனக்குதான் பிரச்சனைதான் வரும் மன்னிக்கவும்.” என்று கூறியதாக தெரிவித்தார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தனது முறைப்பாட்டின் மூலம் காவல்துறையினருக்கு இது குறித்து தெரிவித்ததாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரியவிடம் தெரிவித்தனர். வைத்தியர் காவல்துறையில் அளித்த முறைப்பாடு தொடர்பாக காவ்ல்துறையின‌ரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாலியல் வன்கொடுமைக்கு முன், சந்தேகநபர் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை ஔிரச் செய்து, சுற்றுப்புறங்களைச் சரிபார்த்து, பின்னர் குளியலறையில் மட்டும் விளக்குகளை ஔிரச் செய்துள்ளார். “நான் இராணுவத்திலிருந்து தப்பியுள்ளேன். காவல்துறை என்னைத் தேடுகிறது. கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் போயிடுவேன். உன்னை எதுவும் செய்ய மாட்டேன். சத்தம் போடாதே. நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுத்துடுவேன். அது எனக்குப் பெரிய பிரச்சனை இல்ல.” என குறித்த நபர் கூறியதாக வைத்தியர் தனது சுய வாக்குமூலத்தில் கூறியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின்னர் சந்தேக நபர் தன்னை, கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டுச் சென்றதாகவும், பின்னர் தானே முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று தான் பணிபுரிந்த வார்டில் உள்ள வைத்தியரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர், தனது தந்தைக்கும், வெளி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கும், குறித்த வைத்தியரின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றத்தைச் செய்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் அவர் காவல்துறையின‌ரிடம் கூறியுள்ளார். காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்து, பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் தலைமையக காவல்துறையின‌ருக்கு உத்தரவிட்டார். இந்தக் குற்றத்தின் பிரதான சந்தேக நபரான கல்னேவ புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். சந்தேக நபர் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, காவல்துறையின‌ரால் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக நீதவானிடம் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/213378/
  13. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி! தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர் என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த அடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது. உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை. அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இது தெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக இருக்கின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டுமென விசமத்தனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இந்தக் கட்சியே திகழ்ந்து வருகிறது. இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டு உள்ளது. இவ்வாறான நிலைமையில் ஐனநாயக தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய புதிய பெயர்களைச் சொல்லிக் கொள்கின்றனர். அவ்வாறாக தமிழரசை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல்லும் தேவைப்படுவது ஆச்சர்யமானது. ஆக மொத்தத்திலர தமிழரசை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. ஆனாலும் தெற்கத்தேயே சிங்கள நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உடைக்கும் முயற்சியை தொடர்ந்தும் செய்தாலும் இது பலனளிக்காது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம். மேலும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவராக நானும் பதில் செயலாளராக சுமந்திரனும் பதவிக்கு வருவதற்கு புதிதாக ஒன்றும் செய்யவில்லலை. யாப்பில் குளறுபடி செய்து இந்தப் பதவிகளுக்கு வரவில்லை. எமது கட்சியின் யாப்பிற்கமைய தான் இப்போது அந்தப் பதவிகளை எடுத்திருக்கிறோம். இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் மத்தியில் பிழையான தகவல்களைப் பரப்பி விசமத்தனமான பிரச்சாரங்களை சிலர் மேற்கொள்கின்றனர். அதுவும் இப்போது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இன்னும் அதிகளவில் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். எனவே தமிழரசை பிளவெபடுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக தமிழரசை இலக்கு வைத்து தமிழரசை உடைக்க முயற்சிகள் எடுத்தாலும் அதனூடாக விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம் முன்னேறுவோம். மாற்றான சிந்தனையில் பொறுப்பான அனுகுமுறையை பின்பற்றி அனேகமாக எல்லா இடங்களிலும் சபைகளை கைப்பற்றுவோம். ஆனாலும் aஆட்சியமைக்க தேவைப்படும் இடங்களில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் பேசுவோம் என்றார். https://www.samakalam.com/தமிழரசுக்-கட்சியை-இல்லாம/
  14. அப்படியாவது வாற கள்ளன் பாவம் பாத்து ஏதாவது எக்ஸ்பென்ஸிவான பொருட்களை கொண்டுவந்து வைப்பான் என்ற நப்பாசைதான்🤪 இது பெடியளோடு போகும் ஹொலிடே! https://vm.tiktok.com/ZNdewgWvX/
  15. அவர் ராதே ஜக்கி. சத்குருவுக்கும் அவர் மனைவி விஜி என்ற விஜயகுமாரிக்கும் 1990 இல் பிறந்த மகள். விஜி 1997இல் இறந்துவிட்டார். ஜக்கி தன் மனைவி ஒரு பெளர்ணமி நாளன்று உடலில் ஒரு காயமோ, தீங்கோ இல்லாமல் உடலைவிட்டு வெளியேறியதாகச் சொல்கின்றார். இது “மஹா சமாதி” என்று சொல்லுகின்றார். விஜியின் மர்ம மரணம் பற்றி பொலிசாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எல்லாம் மூடிமறைக்கப்பட்டு, பத்திரிகைகள்கூட மெளனமாக்கப்பட்டிருந்தன. சத்குரு அந்தளவுக்கு பவர்புல் ஆனவர்
  16. இந்த வார இறுதிக்குள் வரும் பதில்களைத்தான் தரவேற்றமுடியும். பின்னர் நான் ஆபிரிக்காவில் விடுமுறையில் நிற்பேன் என்பதால் 24 வரை எதுவும் செய்யமுடியாது! பலர் பங்குபற்றினால்தான் எனது நேரத்தைச் செலவிடமுடியும்!
  17. பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன் “பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன். ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வதை அப்படியே திருப்பிக் கேட்கின்ற நிலைமை வராது. பெரியார் சொல்லாத ஒருவிடயத்தை, அவர் சொன்னதாகச் சொல்வது அவதூறு. சீமான் அவ்வாறு சொல்லி, அது இந்தத் திகதியிட்ட பத்திரிகையிலும் வந்துள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அந்தத் திகதியிட்ட பத்திரிகையில் அப்படி இல்லை என்று கூறி ஆதாரத்தைக் கேட்கின்றார்கள், அதற்கு பெரியார் எழுத்துகளைப் பூட்டி வைத்துள்ளார்கள், நாட்டுடமை ஆக்கினால் ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார் சீமான். தான் வாசித்ததாகச் சொன்னவரிடம் எங்கே வாசித்தாய் என்று கேட்டால் சொல்லும் பதில் இதுவா? எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது என்பதே எனக்குத் தெரிந்து ஒக்ரோபர் புரட்சிக் காலத்தில் சில காலம் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்தது; மற்றும்படி தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. ஏதோ உலகம் முழுவதும் எழுத்துகளை நாட்டுடமையாக்குவது நடைமுறையாக இருக்கின்றது; பெரியாரின் எழுத்துகளை மட்டும் ஒழித்து வைத்துள்ளார்கள் என்பது போல சீமான் சொல்கின்ற, உள்நோக்கம் கொண்ட உளறலை அப்படியே நாமும் எதிரொலிப்பது அபத்தமானது அல்லவா? எழுத்துகளை நாட்டுடமை ஆக்குதல் என்றால் என்ன? தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளத்தில் நாட்டுடமை ஆக்குதல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வர வேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளைப் பொதுக்களத்திற்குக் (Public Domain) கொண்டு வருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதே இந்த நாட்டுடமையாக்கலின் நோக்கமாகும். எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படும்போது குறித்த எழுத்தாளரின் நூல்களுக்கான மரபுரிமை யாரிடம் இருக்கின்றதோ, அவருக்குப் பரிவுத் தொகையாக பணமும் வழங்கப்படும். இவ்வாறு முதலில் நாட்டுடமையாக்கப்பட்டவை பாரதியின் எழுத்துகளும் பாடல்களும்; இதனை இன்னொரு விதத்தில் பாரதியின் பாடல்கள் தனியார் சொத்தாகிவிடாமல் மீட்டெடுப்பதற்காகவே இந்த நாட்டுடமையாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாம். பாரதியாரின் குடும்பத்தினரிடம் இருந்த பாரதியின் பாடல்களுக்கான உரிமை பல்வேறு கைகள் மாறி, ஒரு கட்டத்தில் மெய்யப்பச் செட்டியார் 9500 ரூபாய் கொடுத்து பாரதியாரின் பாடல்களின் ஒலிப்பதிவாகப் பாவிக்கின்ற உரிமையை வாங்கி வைத்திருந்தார். பிரபல நாடகக் கலைஞரான அவ்வை டி.கே. சண்முகம் பாரதியாரின் “தூண்டில் புழுவினைப் போல” என்ற பாடலைத் தனது திரைப்படம் ஒன்றில் சேர்த்தபோது, மெய்யப்பச் செட்டியார், பாரதியின் பாடல்களுக்காக உரிமை தன்னிடம் உள்ளதால் அவ்வை. டி.கே. சண்முகம் தனக்கு 50,000 ரூபாய்கள் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களும், காப்புரிமை பற்றிய விழிப்புணர்வும். பாரதியாரின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி காட்டிய ஆதரவும் சேர்ந்து பாரதியாரின் முழு எழுத்துகளும் நாட்டுடமையாக்கப்பட்டன. இதுபற்றி “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” என்கிற ஆய்வு நூலொன்றினை ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ளார். இப்போது “பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம். பெரியாரின் எந்த எழுத்துகள் இன்று பொதுக்களத்தில் இல்லை?, எந்த எழுத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால்தானே இதற்குப் பதிலளிக்கலாம்? தான் சொன்ன அவதூறுக்குப் பதிலளிக்க முடியாமல் சீமான் உளறுவதை காவித் திரிந்தால் நாமும் அந்த மந்தைக் கூட்டத்தில் ஒருவராகி விடுவோமேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை. இதே சீமான் எதிர்வரும் காலத்தில் புலிகள் இயக்கம் பற்றியும் ஏதேனும் ஓர் அவதூறைக் கூறிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால், புலிகள் இயக்கத்தின் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவெளியில் பகிருங்கள் நான் ஆதாரம் தருவேன் என்று உளறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் சீமானை நம்புகின்ற ஈழத்தமிழர்கள் உணர வேண்டும். ஏனென்றால் சீமானின் வரலாறு அப்படித்தான் இருக்கின்றது. பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்துக் காலவரிசையில் வெளியிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மிக நீண்ட காலமாக பெரியாரியவாதிகளாலும் ஆய்வுத்துறை சார்ந்தோராலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1925 முதல் 1938 வரை குடியரசு ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள், பேச்சுகள் என்பவற்றை முழுமையாகத் திரட்டி கால வரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட உள்ளதாக பெரியார் திராவிடர் கழகம் 2008 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. ஆனால் பெரியாரின் எழுத்துகளுக்கான வாரிசுரிமை தனக்கே இருப்பதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி உரிமை கோரி வழக்குப் பதிவு செய்திருந்தார். பெரியாரின் பொதுவாழ்வின் தொடக்க காலத்திலிருந்து அவரது எழுத்துகள், பேச்சுகள், சிறுநூல்கள் என்பவற்றை வெளியிடுவதற்காக பெரியார் ஆரம்பித்ததுப் பின் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்” உரிமை கி. வீரமணிக்கு உண்டென்பதால் பெரியாரின் எழுத்துகளுக்கும் தனக்கே உரிமை உள்ளது என்பது அவரது வாதமாக இருந்தது. இதன்மூலம் பெரியாரின் எழுத்துகள் காலவரிசைப்படி வெளியிட முன்வந்த பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஒன்றினை வீரமணி இட்டிருந்தார். இக்காலப்பகுதியில் பெரியாரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், எஸ்.வி. ராஜதுரை, உள்ளிட்ட பெரியாரியவாதிகளும், பெரியாரிய ஆய்வறிஞர்களும் சட்டப் போராட்டத்தையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார்கள். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு ஜூலை 27, 2009 அன்று “பெரியாரின் எழுத்துகளுக்கும் பேச்சுகளுக்கும் பதிப்புரிமை கூறும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்குக் கிடையாது என்றும் பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கி விடவில்லை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி இருந்தார். 1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை ஆதாரமாக வைத்து இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, எவற்றுக்கு எல்லாம் பதிப்புரிமையைக் கோர முடியாது என்பதனை விளக்கும் இந்தச் சட்டப்பிரிவின்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில் நாட்டின் நடப்புகள் குறித்துச் செய்தித்தாள்களிலும் இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால் அதற்கு பதிப்புரிமை கோர முடியாது என்றும், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் அதற்கான பதிப்புரிமையைக் கோரியிருக்க வேண்டும் என்றும் இந்த பிரிவு குறிப்பிடுகின்றது; பெரியார் திராவிடர் கழகத்தின் வக்கீல் வைத்த இந்த வாதம் வலிமையானது என்று சுட்டிக்காட்டி கி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும் பெரியாரின் எழுத்துக்களை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, பெரியாரின் எழுத்துகள் அறிவுசார் சொத்துரிமையாகக் கருதப்பட வேண்டும் என்ற கி வீரமணி தன் மனுவில் குறிப்பிட்டு இருந்ததற்கும், “அறிவுசார் சொத்துரிமை கோருவதற்கும் எழுத்துப்பூர்வமாக உரிமை தரப்பட்டிருக்க வேண்டும்; அப்படி எழுத்து மூலமாக பெரியார் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் பெரியார் எந்த உயிரும் எழுதி வைக்காமல் தான் இறந்துள்ளார்; இது எல்லோருக்கும் தெரியும் என்றும்” விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஊடாக பெரியார் வெளியிட்ட நூல்களுக்காக பதிப்புரிமையைப் பொறுத்தவரை, அந்த அறக்கட்டளை அமைக்கப்பட்ட போது இருந்த காப்புரிமை விதிகள் எழுத்தாளர் இறந்து 25 வருடங்களின் பின்னர் அவரது எழுத்துகள் பொதுக்களத்திற்கு வரும் என்றே இருந்ததால், அதன்படி அவையும் பெரியார் இறந்து 25 வருடங்களின் பின்னர், அதாவது 1998 இன் இறுதியில் பொதுக்களத்திற்கு வந்து விட்டன என்றும் இந்தத் தீர்ப்பு உறுதி செய்தது. இதன்படி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற தீர்ப்பின் வழியாக இனி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். எனவே பெரியாரின் எழுத்துகள் இப்போது பொதுக் களத்திற்கு (Public Domain) வந்து விட்டன. காப்புரிமை என்ற பெயரால் எவரிடமும் அவரது எழுத்துகளும் பேச்சும் பதுக்கிவைக்கப்படவில்லை. எழுத்துகளை நாட்டுடமையாக்கல் என்பதன் நோக்கமே, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளை பொதுக் களத்திற்குக் (Public Domain) கொண்டுவருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே. இன்னொரு விதத்தில் சொன்னால், ஒருவரின் எழுத்துகளுக்கான காப்புரிமை குறித்த ஒரு தரப்பிடம் இருப்பதன் காரணமாக அந்த எழுத்துகள் பரவலாகச் சென்றடைவது தடைப்படுகின்றது என்ற சூழலில், காப்புரிமையை வைத்திருப்பவருக்கு குறித்த தொகையைக் கொடுப்பதனால் அந்த எழுத்துகளை எவரும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்குவதே எழுத்துகளை நாட்டுடமையாக்குதல். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பொறுத்தவரை அது 2009 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புடன் நிறைவேறி விட்டது. காலவரிசைப்படியாக எழுத்துகள் தொகுக்கப்படுவதன் அவசியம் பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தவர்கள், அவை கால வரிசைப்படியான தொகுப்புகளாகத் தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்டுக் கொண்டனர். இது ஒரு முக்கியமான வேண்டுகோளாகும். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசையில் வைத்துப் பார்த்தாலே ஒட்டுமொத்த விடுதலைக்கான, சமூகநீதி நோக்கிய பயணத்துக்கான அவரது படிமுறை வளர்ச்சி தெரியும். தனிப்பட்ட முறையில், காலவரிசையில் தொகுக்கப்பட்ட பெரியாரின் குடியரசு எழுத்துகளையும் பேச்சுகளையும் வாசித்ததே எனக்குப் பெரியாரைப் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றியும் இங்கே குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கின்றேன். பெரியார் திராவிடர் கழகம் 1925 முதல் 1938வரையான குடியரசில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் மின்னூல்களாக வெளியிட்டிருந்தது. அவற்றினை முழுமையாக படிக்க ஆரம்பித்த எனக்கு பெரியாரின் எழுத்துநடையும், சமத்துவக்கான அவரது பயணம் எப்படி எப்படியெல்லாம் முகிழ்ந்து வந்தது என்கிற அந்தப் பரிணாம வளர்ச்சியும் மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தது. அவை அனைத்தையும் ப்ரிண்ட் பண்ணி கோப்புகளில் இட்டு வைத்து வாசித்து வந்தேன். ஈழப் பிரச்சனை, சாதியம், பெண்ணுரிமை, மதங்கள், அறிவியல் பார்வை, பகுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வப்போது வாசித்தவை தரவுகளாகவும் சம்பவங்களாகவும் செய்திகளாகவும் மூளைக்குள் தேங்கி குழப்பங்களும் துலக்கமற்ற பார்வையுமே அப்போது இருந்தது. பெரியாரை வாசிக்கத் தொடங்கிய பின்னர், அவரது அணுகுமுறையும் சிந்தனைமுறையும் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன. அந்த வகையில் பெரியாரின் எழுத்துகள், சமூக உறவுகளையும், அரசியலையும் புரிந்து கொள்வதற்கு உதவியதுடன் சமத்துவத்துக்காகச் செயற்பட வேண்டும் என்கிற உந்துதலையும் எனக்கு ஏற்படுத்தின. குறிப்பாக, மிக நீண்டகாலம் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெரியாரின் எழுத்துகளை அவற்றின் காலவரிசையில் வைத்துப் பார்க்கின்றபோதே அவரது எழுத்துகளின் முழுமையான அர்த்தமும், சிந்தனை வளார்ச்சியின் பரிணாமமும் தெரியும். உதாரணத்துக்கு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகுவதற்கு முன்னர் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்ன பெரியார் தான், மொழிவழி மாநிலங்கள் உருவான 1965 இற்குப் பின்னர் தமிழ் நாடு தமிழருக்கு என்பதையே தன் கடைசி மூச்சு வரை சொல்லி வந்தார். திருக்குறளை ஆரம்பத்தில் நிராகரித்தவர் பின்னர் திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதனைத் தமிழர்களின் அடையாளமாகச் சொல்ல வேண்டும் என்று பேசியவரும் அதே பெரியார் தான். காலவரிசையை பின்பற்றாமல் எழுத்துகள் தொகுக்கப்பட்டால் அரசியல் நிலைப்பாடுகளே திரிக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் வீரமணிக்கு இருந்திருக்கலாம். இன்று, வாசித்து, ஒவ்வோர் விடயத்தையும் கேள்வி கேட்டு சான்றாதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தேடித் துலங்கி உண்மையக் கண்டடையாமல் கேள்விச் செவியன்களாக பெரும்பான்மையானோர் மாறிப் போய்விட்ட "post-truth" காலத்தில் எல்லாத் திரித்தல்களுக்குமான வாய்ப்பும் இருக்கின்றது. ஆயினும் பெரியார் உள்ளிட்டோர் ஏற்றிய சமூகநீதிக்கான தீபத்தின் வெளிச்சத்தில் நாம் மானுட சமத்துவம் பேணுவோம் பின்குறிப்பு: குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடுவது தொடர்பாகவும் அவற்றுக்கான காப்புரிமை குறித்தும் நடந்த வழக்கு விபரங்களையும் வெவ்வேறு கட்டுரைகளையும் தொகுத்து குடிஅரசு வழக்கு என்ற பெயரில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ளது. - அருண்மொழிவர்மன் https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47925-2025-03-11-08-40-53
  18. அங்கீகார மறுப்பால் அகிலத்தை வென்ற இளையராஜா! -சாவித்திரி கண்ணன் உள்நாட்டில் மறுக்கப்பட்ட தனக்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் உருவாக்கிக் கொண்டார் இளையராஜா! இசைமேதை இளையராஜா இயல்பிலேயே ஒரு கலகக்காரர். சிம்பொனியும் கலகக்கார்களால் உருவாக்கப்பட்டதே! கர்நாடக இசை மேடைகளில் அங்கீகாரம் மறுக்கப்பட்ட இளையராஜா மேற்கத்திய இசை மேடைகளை வென்றதை பற்றிய ஒரு அலசல்; இளையராஜா மண்ணின் இசையையும், மக்கள் இசையையும் மரபு வழியாக உள்வாங்கி வளர்ந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இசை வாழ்வை தொடங்கிய அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை எந்த அமைப்பிற்கும் கட்டுப்பட்டதன்று! எனவே, அது, தன் கட்டற்ற சுதந்திர வெளியை தொடகத்திலேயே கண்டடைந்தது. தன்ராஜ் மாஸ்டருடன் இளையராஜா தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையை பயின்ற போதே மொசார்ட்டும், பீத்தோவனும் அவரது இதய சிம்மாசனத்தில் வந்தமர்ந்தனர். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் தன்ராஜ் மாஸ்டர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார். ஏனென்றால் ஒரு கலகக்காரனாலேயே இவர்களை கண்டடைய முடியும். மொழிகளின் ஆதிக்கத்தைக் கடந்த இசையின் மீதான அவரது ஆரம்பகால ஈர்ப்பாக வெளியானதே ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் போன்ற மொழிகளற்ற இசை ஆல்பங்கள்! உலகின் தலை சிறந்த இசை கலைஞர்களைக் கொண்ட ராயல் பிலார்மோனிக் இசைக் குழு லண்டன் மா நகரில் அவரது இசையை இசைக்கிறது. இன்னும் உலகின் 13 நாடுகளில் உலகப் பெரும் இசைக் கலைஞர்கள் அவரது இசை நோட்சை பார்த்து இசைக்க உள்ளனர். உலகத்தில் மதம் சார்ந்தும், மன்னர்களின் அதிகாரம் சார்ந்தும் உருவான இசைகள் காலப் போக்கில் காணாமல் போயின. ஆனால், தமிழகத்தில் மட்டும் மதம் சாதி ஆகியவற்றின் அதிகார பீடமாக அங்கீகாரம் பெற்ற கர்நாடக இசையை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் பிராமணர்கள் தங்கள் சாதிக்கான இசையாகவே வளர்த்து நிலை நிறுத்தி வருகின்றனர். இதில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் மாற்று சாதியினருக்கு பெரிய அங்கீகாரத்தை தரமாட்டார்கள்! அந்த வகையில் இங்கு தனக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தான் இளையராஜா உலக அரங்கில் பெற்றுள்ளார். மக்கள் உணர்வுகளில் இருந்து அவருக்கு எல்லா இசையுமே அத்துப்படி. சிம்பொனி ஒரு இனம் தன்னை தேசியமாக உணர ஆரம்பித்த பிறகான மாற்றங்களின் விளைவாய் கட்டற்று சுதந்திரமாக உணர்கிறது! அவ்வித உணர்வுகளின் வளர்ச்சி போக்கே சிம்பொனி இசையாய் உருக்கொண்டது.! ஒரு வகையில் கி.பி 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியோடு தொடர்புடையது சிம்பொனி இசை! பிரெஞ்சுப் புரட்சியில், கிறித்துவப் பாதிரிகளின் செல்வாக்கிற்கும் கிறிஸ்துவ மதக் குறீயீடான ’லத்தீன்’ மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான கூறுகள் வெளிப்பட்டன என்பதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை கட்டுப்படுத்தும் செல்வாக்கை கிறித்துவப் பாதிரிகள் பெற்றிருந்ததையும் எதிர்த்து மக்கள் புரட்சி வெடித்தது. தேவாலய இசை (Church music) ஆதிக்கத்திற்கு எதிராக உருவானதே பல இசைக் கருவிகளை பயன்படுத்தி உருவான சான்சன் (Chanson) இசை வடிவமாகும்! இதை உருவாக்கியவர், குயிலாம் துமாசாத் (Guillame de Machaut) என்ற பிரான்சின் இசை அறிஞராவார்! இதை இந்த மண்ணுக்கான மதச் சார்பற்ற இசை என அவர் பிரகடனப்படுத்தினார்! இதே போல இத்தாலி இசைக் கலைஞன் பிரான்சிஸ்கோ லன்தினி (Francesco Landini) என்ற கண் பார்வையற்ற அறிஞர் தன் தாய் மொழியில், அதன் நாட்டுப் புற இசை அம்சமான மாத்ரிகல் (madrigal) என்ற இசை வடிவதை அறிமுகப்படுத்தி, அதை மதச் சார்பற்ற இசை எனப் பிரகடனப்படுத்தினார். இப்படியாக பிரான்சும், இத்தாலியும் சேர்ந்து சிம்பொனி என்ற புதிய இசை தோற்றத்திற்கான மூலக் கூறுகளை வழங்கின…என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்! எதற்காக இதை சொல்கிறேன் என்றால், புறக்கணிக்கப்படும் தேசிய இனத்தின் மக்கள் தங்களுக்கான இசையை தாங்களே உருவாக்கிக் கொள்வர்! அப்படி ஒரு ஆதிக்க மொழிக்கும், மத ஆதிக்கத்திற்கும் எதிராக உருவானதே சிம்பொனியின் தோற்றத்திற்கான அடித்தளமாகும். தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்! ஆனால், இதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகள் நடந்த நிகழ்வுகள் இதற்கு முன்னோட்டமாயின. அது கத்தோலிக்க மதத்தில் இருந்து உருவான புரோடஸ்டண்ட் மதத்தின் தோற்றம், ஜெர்மனியில் நடந்த மதப்போர்கள், இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (Civil war) ஐரோப்பிய நாடுகளில் உருவான பொருளாதார விடுதலைக்கான குரல்கள் அகியவை மேற்கத்திய இசையில் தாக்கத்தை உருவாக்கி மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டன. அது ஹைடன் (Haydn), மொசார்ட் (Mozart) போன்ற இசை மேதைகள் சிம்பொனியை படைக்க காரணமாயிற்று! இசை மேதைகள் பித்தோவன், மொசார்ட் சிம்பொனியை அதற்கடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் புரட்சிகரமான சிந்தனையை கொண்டிருந்த பீத்தோவன் என்ற மாபெரும் இசைமேதையாகும். இந்த காலகட்டத்தில் அச்சு ஊடகம் வளர்ந்த நிலையில், இசைக் குறியீடுகளை அச்சிடத் துவங்கியதால் இசையின் வளர்ச்சி அனைவருக்குமானதானது. மொசார்ட், பீத்தோவன் ஆகிய இந்த இருவரும் தான் நம் இளையராஜாவின் இதய ராஜ்ஜியத்தில் பல்லாண்டுகளாக கோலோச்சுபவர்கள்! சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே நம் இளையராஜா இவர்களின் சமாதிகளை தேடிக் கண்டடைந்து கண்ணீர் உகுத்து அழுது வந்ததை எழுதி உள்ளார். மொழிகளின் ஆதிக்கத்தை கடந்த மனித சுதந்திரத்தின் முழு வெளிப்பாடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இசை வடிவம் இளையராஜாவை வசீகரித்தது. இதன் விளைவாக நம் இளையராஜா 1993 ஆம் ஆண்டே சிம்பொனியை படைத்தார்! ஆயினும் அந்த இசைக்கு பரிச்சியமல்லாத இந்திய இசைக் கருவிகளையும் அதில் இளையராஜா இணைத்து ஏற்படுத்தியதால் அது மேற்கத்திய இசை உலகின் முழு ஏற்பையும் பெற முடியாமல் போயிற்று! ஆனால், தற்போது முற்றிலும் மேற்கத்திய இசைக் கருவிகளுக்கு மட்டுமே இளையராஜா நோட்ஸ் எழுதி சிம்பொனியை அரங்கேற்றிவிட்டார்! மேஸ்ட்ரோ, ராகதேவன், இசை ஞானி..என பலவாறாக மக்களால் அழைக்கப்பட்டாலும் கர்நாடக இசை விற்பன்னர்கள் இளையராஜாவை கர்நாடக இசை கச்சேரி செய்ய சபா தருவார்களா? ஒரே ஒரு முறை வலிந்து அந்த வாய்ப்பை பெற்ற இளையராஜா வரவேற்பில்லாததால் நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருக்குள் அந்த ஆசை நிறைவேராத ஆசையாக தொடர்கிறது. இளையராஜா சாதிகளைக் கடந்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டார். எனினும், இங்கே தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீத வித்வான்கள் நம் இளையராஜாவை ஏற்பார்களா? அவரது நிறைவேறாத நீண்ட நாள் கனவான பெருமளவு பிராமணர்கள் மட்டுமே கோலோச்சும் டிசம்பர் மாத கர்நாடக சங்கீத கச்சேரிக்கு அவரை அழைப்பார்களா? திருவையாற்றில் ஆண்டுதோறும் நடக்கும் தியாகய்யர் ஆராதனைக்கு அழைப்பார்களா..? இசை மும்மூர்த்திகளின் வரிசையில் தன்னையும் நான்காவதாக சேர்க்க வேண்டும் என்ற அவரின் கனவை நினைவாக்குவார்களா? இவை எதுவும் நடக்காவிட்டாலும், இளையராஜா வேறு எவரையும் விட கோடானு கோடி மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு கொலுவிருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்த தொடர் மறுப்பே அவரை இன்னும், இன்னும் உயரப் பறந்து மறுத்தவர்களை அண்ணாந்து பார்க்க வைக்கும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20989/ilaiyaraja-symphony/
  19. இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல் ‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, ” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் மலையக கல்வித் துறை சார்ந்து அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் சமூக எழுச்சி வேலைத்திட்டத்தை முன்வைக்காது , அவர்களை புறந்தள்ளி மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது. தற்போது இந்தியாவில் இயங்கும் அதி தீவிரவாத சமய இயக்கமான சிவசேனா போன்ற அமைப்புகள் பல்வேறு முகங்களோடு மலையகத்தில் தமது கூடாரங்களை அமைத்து பலப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மலையகத்தில் ஆசிரியர் நியமனம் கொடுக்க வேண்டும் என்பது மறைமுக இந்திய அரசியல் நலன்கள் இருந்த கோரிக்கையாகவே சிந்திக்க வேண்டும். மலையகத்தில் ஏற்கனவே அடிப்படைவாத கிறிஸ்தவ சமய கட்டமைப்போடு பல இறக்குமதி செய்யப்பட்ட சமய அமைப்புகள் மலையகத்தின் பாரம்பரிய சமய பண்பாட்டு கலாச்சாரத்தை அழிக்கவும் சிதைக்கவும் பல்வேறு பலமான வேலை திட்டங்களோடு களமிறங்கியிருக்கையில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகத்தில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கொடுக்க ஆலோசனை முன்வைப்பது மலையக மக்களின் கல்வியை மையப்படுத்தி அங்கு சமய மற்றும் கலாச்சார ரீதியில் இன அழிப்பினை துரிதப்படுத்தும் மாற்றுத் திட்டமாகவும் இருக்கலாம். மலையக மக்கள் இந்நாட்டின் இன்னும் ஒரு தேசிய இனமாக வரத்துள்ளதோடு இந்திய வம்சாவளியினர் என தம்மை அடையாளப்படுத்தாது மலையத் தமிழ் என்றே அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை அரசியல் வலுப்பெற்றுள்ளது. இதனை விரும்பாத இந்திய அடிவருடி அரசியல்வாதிகளும் அவர்களின் கை கூலிகளும் மலையகத்தில் இயங்கி வரும் சுழல் நிலையில் இந்திய ஆசிரியர் நியமன கோரிக்கை என்பது மலை மக்களின் அரசியல் சிந்தனையை அழிக்கும் வேலை திட்டம்களில் ஒன்றாகவும், இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகவுமே பார்க்க வேண்டி உள்ளது. மலையக மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் தமக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு 1977 தொடர்ந்து கிடைத்தது. 1977-2024 இடையிலான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கும் தாங்கள் கட்சியையும் அதனோடு ஒட்டிய தொழிற்சங்கத் தையும் வளர்க்க எடுத்த பல்வேறு முயற்சிகளை சிந்திக்கும்போது மலையக கல்வியின் எதிர்காலம் திட்ட நலன் கருதி என்னவாக கட்சிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னால் சிறந்தது வரலாறு தங்களுடைய அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக் கொள்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சியோடு ஒப்பிடுகையில் மலையக கல்வி தொடர்பான இவர்களுடைய செயற்பாடு மிக மந்த கதியிலேயே நிகழ்ந்தது என்பதற்கு தற்போது முன் வைத்திருக்கின்ற இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதற்கான கோரிக்கை நல்ல உதாரணமாகும். அரச பாடத்திட்டத்திற்கு ஏற்ப அந்தந்த துறைகளில் நிறைவான அறிவு சார்ந்த ஆசிரியர்கள் மலையகத்தின் இல்லையாயின் அரச கல்வி கொள்கை மலையகத்தில் அமுலாக்கத்தில் பிழை உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மலையக பிள்ளைகள் கல்வியிலிருந்து தூர விலகி செல்கின்றார்கள். அல்லது கல்வியில் தேர்ச்சி அடையாதிருக்கின்றார்கள் என்று கூறுவதும் மலையக மக்களின் வாழ்வு கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பிழையான திட்டம் உட்புகுத்தபபட்டுள்ளது என்றே பொருள் கோடல் வேண்டும் . இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வர வேண்டும் என்பது அரசியல் அறம் இன்மையின் வெளிப்பாடு எனலாம். மலையக கல்வியை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் மலையக படித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவும்; மேலதிகா ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனங்களை உரித்தாக்கவும் அவசர வேலை திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபினர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசுக்கு முன்மொழிதல் நலமாகும்.” – என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=315936
  20. யாழ் சென்ற அமெரிக்க தூதுவர் adminMarch 12, 2025 வடக்குக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பயணம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர். அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தனர். துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் கலந்து கொண்டனர். கடந்த 11 ஆம் திகதி முதல் நாளை 13 ஆம் திகதி வரை வடக்குக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதரகக் குழுவினர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் மற்றும் இலங்கைக் கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகளுடனும், மன்னாரில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சின் காற்றாலை மின்னுற்பத்தி செயற்றிட்ட அதிகாரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://globaltamilnews.net/2025/213291/
  21. தேசிய மக்கள் சக்தி மன்னாாில் கட்டுப்பணம் செலுத்தியது. adminMarch 12, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) இன்றைய தினம் புதன் கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/213298/
  22. வேறு ஒருத்தரையும் இந்தப் பக்கம் காணோம்🤔
  23. பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்று முன்தினம் (10) இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார். குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார். வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேக நபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cm85hf2ob001j10a6ddznnod5
  24. கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை editorenglishMarch 12, 2025 கச்சதீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் செல்ல விழா கமிட்டியிடம் பதிவு செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மீன்துறை அதிகாரிகள் நேற்று கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பதிவு செய்யப்பட்டு, ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஏறி படகின் உறுதித்தன்மை, நீளம், அகலம் படகிற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதேபோல் திருவிழாவுக்கு செல்ல பதிவு செய்து, பாம்பன் கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தனர். திருவிழாவிற்கு செல்ல பெயர் பதிவு செய்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்கள் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மீன் துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கச்சதீவு திருவிழானையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. https://globaltamilnews.net/2025/213216/
  25. ‘நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு’- சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா ? March 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளக் கூடிய வலுவுடன் இல்லை என்ற போதிலும், போட்டியிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் அவற்றுக்கு இருக்கிறது. தெற்கில் உள்ள பழைய கட்சிகளையும் வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளையும் பொறுத்தவரை, இரு தேசிய தேர்தல்களுக்கு பின்னரான புதிய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அதனால் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் அவை இறங்கியிருக்கின்றன. நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) க்கு இருந்த மக்கள் ஆதரவைக்கூட தற்போது கொண்டிருக்கவில்லை. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வேகத்தில் மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே வேகத்தில் அதிகாரத்தையும் ஆதரவையும் இழந்து நிற்கிறது. குறைந்தளவு மக்கள் ஆதரவுடன் என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு இணக்கப்பாடுக்கு வந்து உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்றே முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுவதற்கு விரும்புகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தன்னகம்பாவப் போட்டி இதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதனால், இரு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. அதேவேளை, ஆளும் கட்சியான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை, அதன் கடந்த ஐந்து மாதகால ஆட்சி மீதான ஒரு வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமையப்போகின்றன. பழைய அரசியல் கட்சிகளை நிராகரித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்த போதிலும், பொருளாதார இடர்பாடுகளில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க தணிவையும் காணமுடியாமல் இருப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல், இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. ஆனால், அதற்காக எதிர்க்கட்சிகளை உள்ளூராட்சி தேர்தல்களில் பெருமளவில் ஆதரிக்கக்கூடிய அளவுக்கு மக்களின் மனங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்று கூறிவிட முடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகையை விடவும் பாராளுன்ற தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகை மிகவும் அதிகமானதாகும். ஒரு ஏழு மாதகால இடைவெளியில் மூன்று தேர்தல்களைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப்படுவதாலும் தாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த அரசாங்கம் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாததாக இருப்பதாலும் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் பின்னடைவைக் கண்ட தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மீண்டும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெருமளவில் பெற்று இரு மாகாணங்களிலும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய தனியான கட்சியாக விளங்குவதற்கு காரணம் தங்களது கடந்த கால செயற்பாடுகளே என்பதை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுவரையில் முழுமையாகப் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியை, எதிர்காலத் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு அல்லாமல், வேறு காரணத்துக்காக முன்னெடுப்பதாக முதலில் கூறியவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொனானம்பலம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதை நோக்கமாகக்கொண்டதே தனது முயற்சி என்று அவர் அறிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பொன்னம்பலம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பொன்னம்பலம் ஒத்துழைப்பைக் கோரி கடிதம் ஒன்றையும் கையளித்தார். ஆனால், தமிழரசு கட்சி அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை அவருக்கு அறிவித்ததை அடுத்து அவரது முயற்சி தடங்கலுக்கு உள்ளானது. அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு பின்னரே புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்திருப்பதால், அந்த விவகாரத்தில் தற்போது அவசரப்பட வேண்டியதில்லை என்ற தொனியில் தமிழரசு கட்சியின் பதில் அமைந்திருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவிதமான அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனையும் முன்வைக்கப்படாத நிலையில் தமிழ்க் கட்சிகள் அது தொடர்பில் ஆராய்வதற்கு எதுவுமில்லை என்பதே தமிழரசு கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. முதலில் பொன்னம்பலத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டிய சிறீதரன் தனது கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த ஒத்துழைப்பை தொடர்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலான சகல தீர்மானங்களையும் மேற்கொள்ளும் மத்திய செயற்குழுவில் சிறீதரன் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒரு நிலை தற்போது காணப்படுகிறது. அவரை எதிர்த்து கடந்த வருடம் ஜனவரியில் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனே இன்று அந்த கட்சியை வழிநடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அவர் இப்போது கட்சியின் பதில் பொதுச் செயலாளராவும் இருக்கிறார். அதனால் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடு சுமந்திரனின் அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டுவந்த சிறீதரன் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் பொன்னம்பலத்துடன் சேர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை தொடருவதில் ஏன் நாட்டம் காட்டவில்லை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து யோசனைகளைச் சமர்ப்பிப்பதை நோக்கிய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல் இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழமைக்கு மாறாக, பொன்னம்பலம் தமிழரசு கட்சியுடன் (குறிப்பாக சிறீதரனை தலைவராகக் கொண்ட அதன் பாராளுமன்றக் குழுவுடன் ) ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தமிழரசு கட்சி இன்றியமையாதது என்றும் அது பாராளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயக விரோதமானது என்றும் பொன்னம்பலம் வெளிப்படையாக கருத்து வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருநதது. புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையின்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பில் மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏழுபேரைக் கொண்ட குழுவொன்றை ஜனவரியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு நியமித்தது. அந்த குழுவில் சிறீதரனும் ஒரு உறுப்பினர் என்ற போதிலும், தமிழரசு கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவர் பொன்னம்பலத்தின் முயற்சிகளில் தன்னிச்சையாக பங்கேற்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருந்திருக்காது. இத்தகையதொரு பின்புலத்தில், தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சிவஞானம் செயலிழந்துபோன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு முயற்சியில் அண்மையில் இறங்கினார். இந்த நோக்கத்துக்காக அவர் கூட்டமைப்பின் முன்னைய பங்காளிக் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆகியவற்றின் தலைவர்களை அணுகினார். அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பினார். மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதில் நாட்டம் இருப்பது போன்று கருத்துக்களைக் கூறி சிவஞானத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த முன்று கட்சிகளின் தலைவர்களும் மறுநாள் ஒன்றுகூடி தங்களது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் வேறு ஆறு தமிழ்க் குழுக்களையும் சேர்த்துக் கொண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான ஒரு கூட்டை அமைத்துக் கொண்டனர். இதனால் அதிருப்தியுற்ற தமிழரசு கட்சியின் தலைவர் அதை ஆட்சேபித்து கடிதம் எழுதினார். அதற்கு புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு பதிலையும் அனுப்பினார். மீண்டும் கூட்டமைப்பை அமைக்கவேண்டிய தேவையில்லை என்பதும் ஏற்கெனவே தாங்கள் அமைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து செயற்படதமிழரசு கட்சி முன்வருவதே பொருத்தமானது என்பதுமே அந்த கூட்டணியின் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த வருட முற்பகுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு சீறீதரனும் சகல தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார். புதிதாக கூட்டமைப்பு எதுவும் தேவையில்லை என்று கூறிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒன்றிணைந்து செயற்படுவதில் அக்கறை இருந்தால் தமிழரசு கட்சி தங்களது கூட்டணியில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கூட்டணியில் இணைவதற்கு தமிழரசு கட்சி ஒன்றும் சிறிய கட்சி அல்ல, அது இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் இயக்கம் என்று சிவஞானம் கடந்த வாரம் பதிலளித்திருந்தார். தமிழரசு கட்சி பெரும்பாலும் உள்ளூராட்சி தேர்தல்களை தனியாகவே சந்திக்கப் போகிறது. பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியும் கூட தனித்தனியாகவே போட்டியிடப்போகின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்தனியாக தமிழ்க்கட்சிகள் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றிய பிறகு சபைகளின் நிருவாகத்தை அமைப்பதற்கு கூட்டுச்சேருவதே சிறந்த தந்திரோபாயம் என்ற தனது பழைய நிலைப்பாட்டையே சுமந்திரன் இந்த தடவையும் வலியுறுத்துகிறார். கடந்த வருட முற்பகுதியில் அந்த நிலைப்பாட்டை தமிழரசு கட்சி எடுத்ததையடுத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் எஞ்சியிருந்த புளொட்டும் ரெலோவும் வெளியேறி (ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தங்களது தேர்தல் இயக்கமாக அறிவித்தன. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்டைவைச் சந்தித்ததைப் போன்ற சூழ்நிலையே உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டும் உருவாகிறது. அது மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானதாக அமையக்கூடிய சாத்தியமே இருக்கிறது. கடந்த ஐந்து மாதகால ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பழைய சிந்தனையில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை என்பதை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்து பாராளுமன்ற தேர்தலில் வழங்கியதைப் போன்ற ஆதரவை உள்ளூராட்சி தேர்தல்களில் வழங்காமல் விடுவார்களா? இந்த கேள்விக்கு உருப்படியான பதிலை அளிப்பதற்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்றுவழி என்ன? கடந்த வாரம் வடமராட்சியில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய சுமந்திரன் ‘ நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு ‘ என்ற ஒரு சுலோகத்தை முன்வைத்தார். ” அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியதிகாரத்தில் இருக்கப்போகிறது. அதற்காக சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளூராட்சி விவகாரங்களை கையாளுவதையும் அவர்களிடமே விட்டுவிடக்கூடாது ” என்று அவர் கூறினார். அவரது சுலோகம் எந்தளவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை பார்ப்பதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்கத் நேவையில்லை. பாராளுமன்ற தேர்தலில் பெரும் பி்ன்னடைவைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிட்டால் கூட தமிழ் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாகவே இருக்கிறது. கடந்த வருடம் வடக்கில் தமிழ் மக்கள் தங்களை நிராகரித்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் சுயபரிசோதனையை நடத்தியிருப்பதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியையும் காணமுடியவில்லை. ஒன்றிணைந்து போட்டியிடாத காரணத்தினால் மாத்திரம் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு மக்கள் தங்களை நிராகரித்ததாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நினைப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தவறு செய்வதாகவே அமையும். தற்போதைய நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாமல் தேசியவாத அரசியலை சுலோகங்களை தேவாரம் போன்று பாடிக்கொண்டிருந்தால் தமிழ் மக்களிடமிருந்து தமிழ்க்கட்சிகள் மேலும் தனிமைப்படவேண்டியிருக்கும். தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக நீண்டகால அரசியல் அபிலாசைகளை பற்றி ஓயாது பேசுவதில் நாட்டம் காட்டி வந்திருக்கிறார்கள். மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நீண்டகால அபிலாசையைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கலாம்.ஆனால், உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் விரைவாகவே பயனுறுதியுடைய விளைவுகளை காண்பிக்க வேண்டியிருக்கும். இது தமிழ் அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் காணப்படும் பெரியதொரு குறைபாடு. அர்ச்சுனாவின் குறும்புகளுக்கு ஒரு கூட்டம் ஆரவாரம் செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கும் இந்த குறைபாடும் ஒரு முக்கிய காரணம். https://arangamnews.com/?p=11884

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.