-
உக்ரைனும் ரஷ்யாவும் சாத்தியமான அமைதி ஒப்பந்தத்தை நோக்கி நகர்கின்றன என ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லா வல்லரசுகளிடமும் ஏராளமான ஆயுதங்கள் கொட்டிக் கிடக்கு . ....... அதை எல்லாம் வைத்து என்ன குருவியா சுடப்போகினம் . ...... சும்மா இப்படி பரீட்ச்சித்துப் பார்க்க வேண்டியதுதான் . ....... விளாடிமிர் விளையாடப்போய் இப்ப திரிசங்கு சொர்க்கத்தில் நிக்கினம் . ....... இனியாவது போரை நிறுத்தி மக்களை நிம்மதியாய் வாழ விடட்டும்......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி .......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு நம்ம யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு அது மாயம் என்றாச்சு ஆண் : நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்ப வரும் பூவாசம் செல்லம்மா என்னம்மா சொல்லம்மா பெண் : அப்போ வந்து வாங்கித்தந்தே பூ சேல நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே அம்மன் சிலை இங்கேதான் ஆடித் தேரு அங்கேதான் இருந்தா கோயில் குளம் ஏனைய்யா செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா பெண் : மாடு மனை எல்லாம் உண்டு என்னோட என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோட உன்னத்தொட்டு நான் வாரேன் என்னவிட்டு ஏன் போறே நிழல்போல் கூட வந்தா ஆகாதோ செல்லைய்யா என்னைய்யா சொல்லைய்யா ஆண் : நான் ஒன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு ஆண் : நான் ஒன்ன நெனச்சேன் பெண் : நீ என்ன நெனச்சே பெண் : தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு ஆண் : நம்ம யாரு பிரிச்சா பெண் : ஒரு கோடு கிழிச்சா பெண் : ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு ஆண் : ஒன்னாலத்தானே பல வண்ணம் உண்டாச்சு பெண் : நீ இல்லாமத்தானே பெண் : அது மாயம் என்றாச்சு ஆண் : அது மாயம் என்றாச்சு........! ....... நான் ஒன்ன நெனச்சேன் ......
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
நல்லது ......... கோவிலுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் .........! 🙏- விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!
எல்லோருக்கும் எல்லாப் படமும் பிடிக்கும் என்றில்லை ...... இது 40 வயதுக்கு உட்படவர்களை (மனதளவிலும் கூட ) கவர்ந்திழுக்கும் படம் ......அங்கிள்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி கூப்பாடு போடுவது வாஸ்தவம் தான் .......! இதுல வரும் சண்டை காட்சிகள், இதை விட சூப்பரான காட்சிகள் கூட முன்பே பல தெலுங்குப் படங்களில் முக்கியமாக மகேஸ்பாபு படங்களில் பார்த்திருக்கிறோம் ...... அதனால் அதை விடலாம் . ..... விஜய் அரசியலில் ஆரம்பம் என்பதால் ஏனைய காட்சிகளை குறிப்பாக ஆளும்கட்சியை விமரிசிக்கிறார் ......விமர்சிக்கிறார் . ..... விமர்சிக்கிறார் ......அவ்வளவுதான் .......! இந்திய சினிமாக்காரர்களுக்கு ஒரு வசதி பாகிஸ்தான் பக்கத்தில் இருப்பது .......எல்லா படங்களிலும் தீவிரவாதி , பயங்கரவாதி என்று இவர்களை போட்டு தாளிக்க வேண்டியதுதான் . ..... ஆனால் இண்டைக்கு அவர்கள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மத்தியஸ்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்..... வேற லெவல் . .....இதுதான் யதார்த்தம் ....... இவர்கள் இன்னும் நித்திரையால எழும்பேல்ல......! இந்த லாஜிக் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுட்டு படத்தைப் பார்த்தால் எனக்குப் பிடித்திருக்கு ....... ஏனென்றால் எனக்கு 40 வயது .......மனதளவில் . ........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Sntoodrespu5651105uffagg0highfc1f4gma4ht24m0ga7fit l373cu171 · மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._ 1)- மதத்தலைவர் 2)- வழக்கறிஞர் 3)- இயற்பியலாளர் முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._ ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்._ மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்._ அடுத்ததாக வழக்கறிஞர், அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது. "நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார். மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்._ அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._ எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்._ உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது._ நீதி:- -------- சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்! தெரிந்த உண்மைகளையெல்லாம் உளரிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்! சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் புத்திசாலித்தனமானது! Voir la traduction......!- அதிசயக்குதிரை
· Suivre Sntoodrespuà6 1105uff 0g0hig:Hc1048ma4ht,rm0ga7fii8e373cu171 · ஒரு நபர் தனது குரங்குடன் படகில் பயணம் செய்தார். அந்த படகில் மற்ற பயணிகளுடன் ஒரு தத்துவஞானியும் இருந்தார். குரங்கு இதுவரை படகில் பயணம் செய்யாததால் அதற்கு வசதியாக இல்லை. யாரையும் நிம்மதியாக உட்கார விடாமல் மேலே ஏறி, கீழே இறங்கி அலப்பறை செய்தது. இதனால் அந்த மாலுமி, பயணிகளின் பீதியால் படகு மூழ்கிவிடுமோ என கவலைப்பட்டார் குரங்கு அமைதியடையவில்லை என்றால் படகை மூழ்கடித்துவிடும் என்று அந்த மனிதனும் வருத்தமடைந்தான். ஆனால் குரங்கை அமைதிப்படுத்த அவனுக்கு எந்த வழியும் தெரியவில்லை. அவன் சொல்வதையும் அந்த குரங்கு கேட்கவில்லை. அந்த தத்துவஞானி இதையெல்லாம் பார்த்து, உதவ முடிவு செய்தார். "நீங்கள் அனுமதித்தால் இந்த குரங்கை வீட்டுப் பூனை போல அமைதிப்படுத்த முடியும்" என்றார். அந்த மனிதர் உடனே ஒப்புக்கொண்டார். தத்துவஞானி இரண்டு பயணிகளின் உதவியுடன் குரங்கை எடுத்து ஆற்றில் வீசினார். குரங்கு நீச்சலடிக்க திணறியது. கஷ்டப்பட்டு நீந்தத் தொடங்கியது. அது இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, தத்துவஞானி குரங்கை மீண்டும் படகில் இழுத்தார். குரங்கு மௌனமாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது. அந்த மனிதனும், பயணிகளும் குரங்கின் மாறுப்பட்ட நடத்தையால் ஆச்சரியமடைந்தனர். அந்த மனிதன் தத்துவஞானியிடம் கேட்டான் "முதலில் அது மேலும் கீழும் துள்ளிக் குதித்தது இப்போது பூனை போல அமர்ந்திருக்கிறது. ஏன்?" தத்துவஞானி கூறினார்: "நான் இந்த குரங்கை தண்ணீரில் வீசியபோது, அது தண்ணீரின் சக்தியையும் படகின் பயனையும் புரிந்து கொண்டது. அதனால் அமைதியாகிவிட்டது". இந்தியாவில் மேலும் கீழும் குதிக்கும் சில குரங்குகளை (தேசத்திற்கு எதிராக பேசும் #தேசத்துரோகிகள்) வடகொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக் , பாகிஸ்தான் அல்லது சீனாவில் கூட 6 மாதங்களுக்கு தூக்கி எறிய வேண்டும், பின்னர் இந்தியாவுக்கு வந்தவுடன் செல்ல பூனை போல அமைதியாக இருப்பார்கள். மேலும் ஒரு மூலையில் கிடப்பார்கள். 'இந்தியாவை' தவறாக பயன்படுத்தும் அனைத்து #குரங்குகளுக்கும் சமர்ப்பணம். Voir la traduction......!- சிரிக்க மட்டும் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
rtnopeosSd0ici52af0m5h507un3h931m15fafihcamtmif9 4gl6cl3i35c · களமிறங்குனது ஒரு இளம் சிங்கம்! பேர் ஆயுஷ் மாத்திரே, ஆனா அடிச்சது எல்லாம் அணுகுண்டு அடி! 💣" அனுபவமுள்ள டெல்லி பந்துவீச்சாளர்களைப் பார்த்து அசராம, வந்த பந்தை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் வழி அனுப்பி வச்சாரு. வெறும் 27 பந்துல 50 ரன்களைக் கடந்து, சேப்பாக்கம் மைதானத்தையே தன் பேட் மூலமா மிரள வச்சாரு. ஒரு பக்கம் சஞ்சு சாம்சன் கிளாஸா விளையாட, மறுபக்கம் மாத்திரே மாஸா ஆடி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு டெல்லி பவுலர்களை நிலைகுலைய வச்சாரு. ஆயுஷ் மாத்திரேவின் இந்த தன்னலமற்ற ஆட்டம் மற்றும் வேகம், சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சஞ்சு சாம்சனின் அதிரடி ஒருபுறம் இருந்தாலும், மிடில் ஓவர்களில் மாத்திரே கொடுத்த வேகம் தான் சிஎஸ்கே 200 ரன்களைக் கடக்க முக்கியக் காரணமாக அமைந்தது. சிஎஸ்கே-வோட இந்த வருஷத்துக்கான 'Wonder Boy' ஆயுஷ் மாத்திரே தான் என்பதில் இனி சந்தேகமே இல்லை! விசில் போடு! 🥳" #AyushMhatre #CSK #WhistlePodu #IPL2026 #CSKvsDC ✍️" சின்னா Voir la traduction......!- குட்டிக் கதைகள்.
drotepsnSo4 1c7m9c6cgucl17a6ga919luf58f7lf0hh3g189l9c1563m3t · “உங்கள் கணவர் சிகரெட் பிடிப்பாராம்… அதற்கு நீங்கள் எதிர்ப்பு சொல்லவே இல்லையா?” என்று கேட்டபோது, “இல்லைங்க… அவர் வருடத்துக்கு இரண்டு மாதம் மட்டுமே சிகரெட் பிடிப்பார். மீதமுள்ள நாட்களில் அந்த பழக்கமே இருக்காது,” என்று அமைதியாக பதிலளிக்கிறார். “அது என்ன மாதிரியான பழக்கம்?” என்று ஆச்சரியமாக கேட்க, “அவருக்கு அப்படித்தான் பழக்கம்… குறிப்பிட்ட காலத்தில் மட்டும்,” எனச் சிரித்துக்கொண்டு சொல்கிறார். “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” “இரண்டு மகன்கள், ஒரு மகள். குடும்ப கட்டுப்பாட்டை நாங்கள் மிகவும் முன்னதாகவே பின்பற்றிவிட்டோம்,” என்று பெருமையாக கூறுகிறார். “அவர் எத்தனை மணிக்கு தூங்குவார்?” “அவருக்கு மனதில் எந்த கவலையும் இல்லை. நினைத்தவுடன் தூங்கிவிடுவார். நாமும் சந்தோஷமாக இருக்கணும், நம்மைச் சுற்றியவர்களும் சந்தோஷமாக இருக்கணும் என்பதுதான் அவருடைய எண்ணம். இவ்வளவு நல்ல மனசுக்காரருக்கு திரையில் வில்லன் வேடம் தான் கிடைக்கிறது என்பதுதான் எனக்கு கவலை. ஆனால் அவருக்கு அதைப் பற்றியும் கவலை இல்லை. ‘வேடம் எதுவாக இருந்தாலும் அது வேலையே’ என்பதே அவரின் எண்ணம்,” என்கிறார். “குழந்தைகளுடன் நேரம் செலவிடுவாரா?” “முன்பு அதிகம் செலவிட்டார். இப்போது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் கல்லூரி செல்கிறார்கள். நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில், நான் வேலை முடித்துவிட்டால் இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வோம். சில நேரங்களில் பாட்மின்ட்டன் விளையாடுவோம். அவருக்கு பூகோளத்தில் அதிக ஆர்வம் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறையச் சொல்வார். இரவு குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு திருப்தி,” என்று பகிர்கிறார். “சபரிமலைக்கு வருடந்தோறும் போவாராம்… இங்குள்ள கோயில்களுக்கு?” “அவ்வளவாக செல்லமாட்டார். வீட்டிலேயே பூஜை அறை இருக்கிறது. நான் பூஜை செய்யும் போது வந்து சாமி கும்பிட்டு செல்வார்,” என்கிறார். அதற்கு எம். என். நம்பியார் சொல்வது: “என் மனைவியிடம் ஆலோசிக்காமல் நான் எதையும் செய்வதில்லை. எனக்கு தேவையான எல்லா விஷயங்களையும் from சட்டை தேர்வு செய்வது முதல் வாழ்க்கை முடிவுகள் வரை அவள்தான் கவனிக்கிறாள். வீட்டையும், என்னையும் நடத்துவது அவள்தான். மனைவிக்குக் கீழ்ப்படியும் கணவன் நான்,” என்று புன்னகையுடன் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “நல்லவர்கள் எல்லோரும் தங்கள் மனைவியை இப்படித்தான் மதிப்பார்கள். என் வாழ்க்கையில் என் மனைவி ஒரு பெரிய செல்வம். ‘எனக்கு மனைவி தான் எல்லாமே’ என்று சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். இருவருக்குள்ள உள்ள புரிதல்தான் வாழ்க்கையை அழகாக்கும். என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்.” “இப்போது வெளிப்புற படப்பிடிப்புகளுக்குக் கூட என் மனைவியை அழைத்துச் செல்வேன். அவள் சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வெளியிலிருந்து சாப்பிடுவது விரும்புவதில்லை,” என்று அவர் சொல்ல, அருகில் இருந்த ருக்மணி சிரித்துக் கொண்டே அந்தப் பேச்சை ரசிக்கிறார். தமிழ்த் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த ஒரு மறக்கமுடியாத கலைஞர்.... Voir la traduction.....!- இனித்திடும் இனிய தமிழே....!
opdseroStnff421 he82m0rl tlcvi39ac0h1f gl7ulàgic210:0L741c3 · இப்போது நான் பெற்றான் சாம்பான் பற்றிக் கூறப்போகிறேன் அநேகமாகப் பலருக்கு திருநாளைப்போவார் எனும் நந்தனாரைப்பற்றித் தெரியும் . ஆனால் பெற்றான் சாம்பான் பற்றிஅதிகம் தெரியாது . உமாபதி சிவம், தாழ்த்தப்பட்ட குலத்தி்ல் தோன்றிய பெற்றான் சாம்பான் என்பவருக்கு முத்தியளித்தார். பெற்றான் சாம்பான் நாள்தோறும் தில்லைத திருக்கோயிலுக்குன் திருவமுத்துக்கு சமையலுக்கு வேண்டிய விறகு வெட்டி்க்கொண்டு வந்து சேர்க்கும்பணியை சிவத்தொண்டாகக்கருதி செய்துவந்தார் . அவரின் இந்தத்தொண்டு ஒரு அர்ப்பணிப்பு மனோநிலையில் ஒரு தவமாக நடைபெற்றது இவரின் திருப்பணிகண்டு மகிழ்ந்த தில்லைக்கூத்தன், பெற்றான் சாம்பான் கனவில்தோன்றி, தில்லைவாழ் அந்தணர்களால் தீண்டத்தகாதவர் போல் ஒதுக்கிவைக்கப்பெற்ற உமாபதிசிவத்திற்கும் கொற்றவன் குடிக்கு விறகு கொண்டுபோய்க் கொடுக்கும்பணியினைச் செய்யும்படி கூறினார். அவரும் அவ்வாறே உமாபதி சிவத்தின் மடத்திற்கும் விறகுகொண்டுவந்து கொடுத்துவந்தார். ஆனால், உமாபதிசிவத்திற்கு இது தெரியாது இவ்வாறு நிகழ்ந்துவரும் நாளில், ஒருநாள் கடும்மழை காரணமாக விறகு கொண்டுவரத் தடைஏற்பட்டது. அன்று விறகு வந்துசேரவில்லை. எனவே, மடத்தில் உணவுசமைக்கக் காலதாமதம் ஆனது. அதற்குக்காரணம் என்ன என உமாபதி வினவ, மடத்திற்கு நாளும் விறகு கொண்டுவரும் சாம்பான் வரவில்லை என்றனர். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட உமாபதிசிவம், அவர் வந்ததும் தமக்குத் தெரிவிக்கும்படி கூறினார். மறுநாள் சாம்பன் மடத்திற்கு விறகு கொண்டுவந்தார். அவர் மடத்திற்கு வரும்முன் தில்லைக்கூத்தன் ஒரு பெரியவர் வடிவில் அவன்முன்தோன்றி, ஒருசீட்டினைச் சாம்பானிடம் கொடுத்து அதனை உமாபதிசிவத்திடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் அச்சீட்டை, விறகு கட்டுடன் கொண்டுவந்தார். அவர் வந்ததை அறிந்த சீடர்கள் இச்செய்தியை உமாபதிசிவத்திடம் கூறினர். அவரைக் கண்டு மகிழ்ந்த உமாபதிசிவத்திடம் சாம்பான், பெரியவர் கொடுத்த ஓலையைக் கொடுத்தார். அதனைப்பெற்ற உமாபதிசிவம், அவ்வோலையில் இருந்த செய்தியைக் கண்டு திகைப்படைந்து பேரானந்தம் அடைந்தார். இறைவனே எழுதி அனுப்பிய ஓலை அது. அந்தச்சீட்டில் இருந்த செய்தி: “அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்துமுத்தி கொடுக்க முறை” என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது. இதன்பொருள்அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. , இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்கைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம். இதன்படி பெற்றான் சாம்பானுக்கு உமாபதிசிவம் ஞானதீக்கை தொடங்கினார். அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், பலன்கருதாது தொண்டுப்பணியால் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார். அவருக்கு முறையாக அருள்பூசைகள் செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்; அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார். செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது. சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள். அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான். அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாசாரியரின் நயன தீக்ஷையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர். அரசன் பெரிதும் வியப்புற்றான்.தானே நேராக கொற்றங்குடிக்கு வருகை செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான். சிவாசாரியரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால் தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார். அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.அரசன் இதைப் பார்த்து பிரமித்தான். இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன். அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.சிவாசாரியரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் சாம்பானின் மனைவிக்கு தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை. இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் (Letters From Ramanasramam) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம். மேலும் சில இணையதளத்திலும் விரிவாக இந்த செய்திகள் கிடைக்கிறது கொள்ளிடக்கரையில் ஆதனூரில் பிறந்த ,வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்புங்கூர் ல் நந்தி விலக நசிவனைத்தரிசித்த நந்தனார் தில்லையில் வந்து முக்தி அடைந்த கதை மிக பரவலாக தமிழ் மக்களால் அறியப்பட்டுள்ளது . நந்தனாரின் பெயரால் ஒரு தங்குமிட வசதியுடன் கூடிய உயர்நிலை பள்ளியும் சிதம்பரத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது . ஆனால் ஏனோ பெற்றான் சாம்பானுக்கு மக்களிடையே அதிக அறிமுகம் கிடைக்கவில்லை நான் இந்த உமாபதி சிவம் பெற்றான் சாம்பான் வரலாறுகளைக்கூற க்காரணம் நம்மிடம் நிலவும் சில வரலாறுகளை பலரும் அறி யச் செய்வதற்க்கு தான் .சில ஆண்டுகளுக்கு முன் நந்தனார் தில்லையில் புகுந்த தெற்கு வாசல் கோபுரம் அண்மையில் உள்ள தற்போது ஓமக்குளம் என்று வழங்கப்படும் அப்போது ஹோமம் நடந்ததாகக்கூறப்படும் அந்தக்குளத்தில் அகழ்வாயவு முனைவர்சத்தியமூர்த்திஅவ ர்களால் நடத்தப்பெற்று சில சான்றுகளும் அங்கே கிடைத்ததாக படித்தேன் . தில்லையில் திருஅண்ணாமலையிலும் அமைந்துள்ள மடங்களையும் சத்திரங்களில் பல தொன்மை வரலாறுகள் காத்திருக்கின்றன . நான் திருபு வாதி அல்ல ஆனால் தமிழ் பற்றும் ,இறைப்பற்றும் ஒருங்கே உள்ளவன் . சித்தர்களால் வளர்ந்த மொழி இது நமது தமிழ் தெய்வத்தமிழ்! .இறையுடன் இணைந்தது .சேர்ந்தே வளர்ந்தது .! அண்ணாமலை சுகுமாரன் 29/4/2021Repost 3/4/2026 படம் நன்றி தினமணி Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
இதைச் சொல்லலாம் ஆனால் தன்னடக்கம் தடுக்குது சாத்தான் .......! 🙂- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- தமிழர் பகுதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஏலமிடப்பட்ட மாம்பழம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.