Everything posted by பெருமாள்
-
Hindu priest 'raped and sexually assaulted vulnerable women and took £128k from one after telling them he was a God and knew black magic'
ஆரம்பத்தில் நிறைய பெண்கள் இவனுக்கு எதிராக புகார் கொடுத்து இருந்தார்கள் கள்ள சாமி பக்கம் இருந்து பவுன்சுகளை வீசி பலரை விலக வைத்து விட்டார்கள் . இதில் நம்ம சனமும் பாதிக்க பட்டு உள்ளார்கள் என்பது கொடுமையான செய்தி . இந்த செய்தியை தமிழ் ஊடகங்கள் பெரிது படுத்தவில்லை .
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
லண்டனில் 2௦1௦ பத்தில் முவாயிரம் பிரதி விலை போனது தற்போது இலவசமாய் கொடுத்தால் கூட வாங்க ஆள் இல்லை . ஆள் உள்ள தேனிர் கடையிலே விகடன் இல்லையாம் அவ்வளவுக்கு தமிழ்நாட்டு நிலை இவின்க்க வேற......
-
காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி
இந்த விகாரை பற்றி நம்ம தமிழ் அரசியல் வாதிகள் ஏன் வாயைபொத்திக்கொண்டு இருக்கினம் ?
-
கிளிநொச்சியில் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; இரத்தினசிங்கம் முரளிதரன்
ரணில் வந்தால்என்ன அனுரா வந்தால் என்ன அந்த அழகான தீவு நாசமாத்தான் போகும் போதாகுறைக்கு uk காரன் சவேந்திரசில்வாவைகீரோ ஆக்கி விட்டுள்ளான் அனுரா போனால் அடுத்த முகம் சவேன்திரதான் அவனுக்கும் புலம்பெயர் சிங்கள கூட்டம் பிளைட் பிடித்து ஒட்டு போடுங்கள் அவ்வளவுக்கு அங்கு தமிழ் மீது இனவெறி .
-
கிளிநொச்சியில் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; இரத்தினசிங்கம் முரளிதரன்
ஏதாவது விபத்தில் மிக விரைவில் பரலோகம் போக போகிறார் அல்லது அவரின் நெருங்கிய உறவினர் விபத்தில் இறப்பார்கள் .
-
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறும் – கடற்றொழில் அமைச்சர்
கொள்ளைகாரர்கள் உடன் எந்த மடையானவது பேச்சு வார்த்தைக்கு போவானா ? கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் காற்றுள்ள போதே தூற்றி கொள்வம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போல் உள்ளது பேச்சு வார்த்தை எனும் பெயரில் பெட்டிகள் கை மாற போகுது அதன் பின் டக்கியர் போல் பெயருக்கு நாலு அறிக்கை விட்டு விட்டு ac ஒபிசுக்குள் வெள்ளையும் சொள்ளையுமா இருக்க வேண்டியதுதான் .
-
Hindu priest 'raped and sexually assaulted vulnerable women and took £128k from one after telling them he was a God and knew black magic'
A Hindu priest revered by followers 'as a God’ raped and sexually assaulted two ‘vulnerable’ devotees, a court has heard. Born in the village of Sreekrishnapuram in Kerala, India, Muraleekrishnan Pulikkal is viewed by hundreds of followers worldwide as the ‘living incarnation’ of a Hindu god. The priest - an Indian national who is referred to by members of his congregation as ‘swami’ or ‘baba’ - runs regular prayer sessions from a temple in Barnet, north London, which is attended by his large number of devotees across the UK. But the 'divine-like figure’ now stands accused of five counts of serious sexual offences; one count of rape and one count of attempted rape against one woman, and three counts of sexual assault against another. Wood Green Crown Court heard Pulikkal had ‘taken advantage’ of the women, telling them he would ‘look after’ them ‘as a God’ and that they had been together in a 'previous life’. One of the alleged victims is also said to have made a ‘charitable donation’ of £128,000 to him over a period of three months – something the prosecution argue indicates ‘how vulnerable’ she was to the defendant. Both women, who were allegedly not known to each other, had met Pulikkal when they began attending his prayer sessions, the court was told. The offences are said to have taken place between the spring of 2022 and 2023. Pulikkal has denied all the charges and appeared in the dock every day this week dressed in a white and tan Hindu robe. +6 View gallery Pictured: Muraleekrishnan Pulikkal outside Wood Green Crown Court. The Hindu priest is accused of five counts of serious sexual offences +6 View gallery Pulikkal has denied all the charges and appeared in the dock every day this week dressed in a white and tan Hindu robe TRENDING Detailing the alleged offences, the court heard how Pulikkal would turn up to the homes of one of the women at night with ‘blessed’ food from the temple. It was on two such occasions that she claims he tried to force her to perform oral sex on him. The second woman alleges the priest had on three occasions sexually assaulted her by taking her hand during private prayer sessions at his home and placing them near his groin. Opening at Wood Green Crown Court, prosecutor Mr Christopher Amis said: ‘The defendant Muraleekrishnan Pulikkal, sometimes referred to by the name “swami” or indeed sometimes known as “baba”, was in 2021 the religious leader or priest at a Hindu temple in Barnet in north London. ‘The temple is known as Sri Kathirgaama Skanthan Temple, also referred to sometimes as the Om Sharavana Baba Multi-Faith Community Temple. ‘Both women came into contact with the defendant by virtue of his position as leader of this religious temple. ‘It is the prosecution’s case that he exploited his position to take advantage of these women who were both vulnerable for different reasons.’ He added that the defendant was ‘regarded in his temple by members of the congregation as a divine-like figure, who is vested with special healing powers and other black magic’. The prosecution told the court how the defendant would hold prayer sessions both in his shared home and at his temple. In February 2021, one of the alleged victims visited the priest at his home in Oakfield Road, Barnet, to ask him to ‘heal’ her troubled marriage, as her husband was seeking a divorce she did not want. The defendant allegedly told the woman this was not possible but went on to say that he would look after her ‘as a God’. The court heard that after this initial ‘consultation’, Pulikkal began bombarding the woman with phone calls where he would urge her to become a member of his congregation. +6 View gallery The court heard Pulikkal had ‘taken advantage’ of the women, telling them he would ‘look after’ them ‘as a God’ and that they had been together in a 'previous life’ +6 View gallery Pictured: Sharavana Baba Community Centre, in Barnet. The defendant is a priest at the temple +6 View gallery Pictured: Wood Green Crown Court, where the trial is taking place During the calls he began telling her ‘Don’t worry, I am here for you, I’m like your dad’, adding that he ‘liked’ her and that they were together in a past life. He then started asking the woman for her address, claiming it was to bring her religious food. She told police she initially refused, but he continued asking. Pulikkal then visited her home one day with three other people, bringing to her food from the temple. On this occasion, nothing untoward is said to have happened. The court heard he would then call her on WhatsApp video calls, asking her to show him her feet so that he could ‘heal’ her. She said that she felt ‘uneasy’, but he persisted several times, causing her to eventually reveal her feet, to which he commented that they are ‘very lovely’. The priest's behaviour caused the woman to fear that he would use black-magic against her if she didn't agree to his requests. In a police interview played in court, the alleged victim said he then came to her house one day with the driver. The three of them sat inside on the sofa for some time, before the defendant asked the driver to go outside. She told police: ‘He hugged and kissed me. I said “no I’m not comfortable”. He said “don’t worry I am like your previous husband.” ‘I said I am not comfortable, he said “you have to accept, I’m the powerful person, I’m the healing person.” ‘He said “God has given you a chance, don’t push.” She continued: ‘I was scared of him. He said he has black magic, “I can do anything to anyone”. ‘He told me I can make them sick, I can take the house, I can make them die.’ Following further requests to meet her at her address at night, the woman attempted to ignore his repeated calls, the court heard. When she eventually answered, he is alleged to have told her he would ‘destroy’ her and her children if she did not ‘continue’ with him. She said she reduced her visits to the temple after this but still attended occasionally out of fear. It was then on a date between May 1, 2022, and June 30, 2022, that the woman alleges Pulikkal attempted to orally rape her. The Hindu priest and his driver are said to have visited the woman at her home around midnight, when the trio shared food from the temple. After the meal, the priest sent the driver back to their car. The pair were in the kitchen when the defendant lifted up his robe, pushed the woman's head down, and asked her to give him oral sex, according to the woman. Speaking in court, the woman said: ‘He asked me to touch his penis. I couldn't do it because according to our culture I can only have sexual contact with (my husband). 'So I refused. ‘He was saying, “no it's good, it's good.” ‘I didn't like it. He forced me - I didn't open my mouth at all. He (was) trying, but I didn't do it. His penis touched my lips. ‘I was looking at him as a God, he was looking at me in a different way.’ He is said to have then become angry, telling her that she does not love him, and promptly left the house. The second incident, this time of rape, is alleged to have taken place about a month after the first incident, between June 2022 and July 2022. Pulikkal returned to the woman’s house with a large group of men at around 11pm. When the priest and the woman were alone, Pulikkal asked the woman if he could use the toilet. According to the woman, the downstairs toilet was not in ‘good condition’ and so she took him to the bathroom upstairs. When the priest came out of the bathroom, he pressured the woman into giving him oral sex, pushing her head down to the groin and leading the woman to put his penis in her mouth for roughly one minute, crying during the ordeal, the court heard. The prosecution said she was wary of making noise because her children had been sleeping next door. Defence barrister Ali Naseem Bajwa KC questioned whether the woman had been in love with the priest. Mr Bajwa said: ‘You said (during a police interview), he treated me like a girl-friend. You told him, I suggest, that you loved him.’ The woman said: ‘I didn't love him. My main concern was to join with my husband for my children.’ Mr Bajwa also questioned: ‘When the defendant came to your home around a month after what we're calling the first incident, you could have not let him in?’ The woman responded: ‘I had a fear that he would do something bad for me and my children, that is the reason I allow him to come.’ She said that during one video call, he showed her a religious metal arrow, called a trishul in Hinduism, and warned her not to talk about what happened between them to anyone and that he was able to 'kill' people who were against him. In April 2023, the woman sent Pulikkal a voice note saying: 'You're with me in a good way. 'Why do you talk bad things about me? Why do you ask people to talk about these stories? 'If you are only with me, if you only had an interest in me, if you would only stay with me, that would be a different matter. 'You were not only interested in me. But also interested in others as well.' The woman said the message was her questioning him about 'stories' she heard about him. She said: 'I was questioning are you doing the right thing, are you God?' In Autumn 2022, another woman visited the priest at his home in order to seek spiritual healing for an ongoing medical issue, the court heard. The woman had lost her husband two to three years earlier, and at the time of joining the temple had just spent a period in hospital and was 'anxious to get better'. She began visiting the priest at his house in September 2022, and says she believed he was 'divine' as he seemed to know facts about her and her family that she had never divulged to him. Pulikkal reassured the woman that he would look after her as a 'divine master' - but is alleged to have grabbed the woman's hand and placed it on his thigh near his groin during several private 'prayer' sessions. At the priest's direction, the woman is also said to have donated £128,000 to a charitable donation linked to the temple, as well as spending hundreds on special prayer sessions. Mr Amis told the court a basic prayer session would cost about £25, while a special blessing could cost up to £501. The women is said to have paid for several special blessings, paying about £2,000 within just a few weeks of joining the temple. In a police interview played to the court, the woman told an officer: 'The most I would spend is £1,000 a day.' The woman said that the priest would touch her hand and hair during group blessings at the temple. She said in the interview: 'I want to move away, don't touch my hair, I wanted to pull away. (I felt) very uncomfortable. In my head, he's divine - why is he standing so close to me? 'He was standing so close I could feel his leg moving. He doesn't just touch, he's sort of moving. Constantly.' But the court heard other women attending the temple would tell the woman 'you're so lucky' after she was touched by him during the mass blessings. She said: 'Every time you go to the house (his house) you have to pay £200 - just cash, no money transfer.' During one visit to the temple, the woman heard the priest announce that he needed 10 families to give £10,000 each for a special cause. She said: 'He said, "you must give £10,000". He said, "bring me cash, don't transfer it". 'I did it, I don't know why, but I did.' After she began attending the temple regularly, the priest would call her two to three times a day. She said: 'When he called me, he said, "I really like you, you're the one for me, unfortunately I'm a guru, it cannot go further." "Why are you call me so much", I said.' 'He said, "I need to call you because I cannot sleep, I cannot do anything without calling you." The woman said the priest would even place her hand on his groin during her visits to the temple. She said: 'When it comes to my turn, he will take my hand, put my hand on his groin, even in temple. He would do it and I didn't know why no-one would say anything.' The woman's first allegation of sexual assault took place on October 18, 2022. +6 View gallery A second woman accuses Pulikkal of sexually assaulting her on three occasions The court was told the woman and her teenage daughter attended a prayer session on this date at the priest's property. He is said to have offered group prayer sessions, followed by private sessions behind a curtain in his living room. During the group prayer session, the defendant appeared to turn into a 'snake' as part of a ritual, moving 'like a cobra on the floor', according to the woman. The woman told the court that in parts of the Hindu faith it is believed that priests can become possessed by snake spirits during certain rituals. 'At the time I believed that he had transformed into a snake,' she said. After this, the woman and her daughter went behind a curtain for a private blessing. It was here the woman claims the self-titled spiritual leader took hold of her and her daughter's hands and began 'massaging' them. She said: 'My daughter was trying to pull her hand away and I didn't know it was wrong because he was a priest. She said, "no mummy, I don't like it". 'He said, "she's really cute...you're both so cute". It was on this occasion that the woman alleges the priest moved her hand on to his thighs, near his groin. On January 10, 2023, the woman visited the priest again at his property, when the priest told her, unprompted, to think of him 'like a father', as he kissed her hand before rubbing it against his face. In a police interview video played to the court, the woman said: 'In January I went to the house. This time he was rubbing my hand on his face and now it seems like he was getting some kind of pleasure from it.' At one point during the private 'blessing', the priest moved the woman's hand on to his lap near his groin, according to the woman. She said: 'He put his hand near his groin. I could feel his tummy on my thumb. 'I felt very uncomfortable, I didn't like it at all. 'I was there about 40 minutes. He was touching me and I can't get away. 'He repeated, "you must bring your daughter, you must bring your daughter". I said she doesn't believe in this and he got angry.' A similar assault is alleged to have taken place on February 13, 2022. The woman claims she attended another private prayer session and the priest once again took the woman's hand and placed it near his groin. The prosecution argues that 'all the circumstances suggest that this was a sexually motivated action', and was not something done as part of a religious ceremony. In the first three months of 2023, the woman donated £128k, with £80k given to the priest in cash - at his request, she alleges. During calls it is claimed the defendant would tell the woman she is 'so pretty' and asked her to 'come to India' and live with him. Towards the end of March, the woman claims that the priest began a video call without his shirt on. She said: 'I didn't like it because it's not normal for a divine master. I ended the call quickly. When he did that with his shirt off, I felt something's not right.' In a written statement submitted to police during his arrest, the defendant claimed there were no 'private' sessions and that the curtains were 'never fully closed'. Mr Bajwa questioned why the woman continued to attend the temple and donate tens of thousands of pounds after the assaults. The woman said: 'Maybe he did black magic on me.' Mr Bajwa also referenced several messages sent from the woman to the priest in March, including the woman thanking the priest for his advice and calling his prayer sessions 'amazing' with heart and flower emojis. The barrister suggested that these messages showed there was a 'friendly' relationship between the pair after the alleged incidents. The woman said: 'I was trying to forget what he did, I was trying to be normal. I'm going to be focused on praying, he won't do that, he won't do that.' The woman confirmed that on May 7 she messaged the priest asking for the money to returned as she needed it. Mr Bajwa suggested the aim of a refund was a factor in her decision to complain to the police 17 days later. The woman denied this. The trial continues. https://www.dailymail.co.uk/news/article-14542327/Hindu-priest-raped-sexually-assaulted-vulnerable-women-took-128k-one-telling-god-knew-black-magic.html?ito=native_share_article-nativemenubutton
-
”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்
அவர் கடந்த 14வருட காலமாய் முட்டை போட தெரியாத பெட்டை அடைகோழி வழக்கம் போல் கூட்டுக்குள் அடை கிடந்தது சிங்களவர்களுக்கு சேவகம் செய்ய காத்து கிடந்தார் ஆனால் இம்முறை தேர்தலில் தமிழ் சனம் இந்த பெட்டை கோழியை ஓட்டுக்கு மேலால் கொண்டு போய் எறிந்து விட்டுதுகள் அப்போதில் இருந்து கூரைக்கு மேலே இருந்து இந்த முட்டை போட தெரியாத பெட்டை கோழி கொக்கரித்து கொண்டே இருக்குது பழையபடி கூட்டுக்குள்ளும் செல்ல முடியாது தமிழ் சனம் அடித்தே கொன்று விடும் அவ்வளவு வெறியில் அதுகள் இருக்குதுகள் .
-
”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்
தமிழ் மக்கள் தன்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை விட்டவங்கள் இப்ப அரசியல் அறிக்கை தினமும் விட வேண்டிய நிலை .இப்படியொரு பிழைப்புக்கு பதிலா யாழ்ப்பான பஸ் ஸ்ராண்டில் பிச்சை எடுத்து பிழைக்கலாம் .
-
பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய உதவி செய்யும் பிரான்ஸ் பொலிசார்
புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோருக்கு உதவும் பிரான்ஸ் பொலிசார் வடபிரான்சிலுள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது. படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிசார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பினார்களாம். புறப்படும்போது, அந்த படகிலிருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்களாம் பிரெஞ்சு அதிகாரிகள். திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்ட புலம்பெயர்வோரில் ஒருவர் யேமன் நாட்டைச் சேர்ந்தவரான முகம்மது (Mohammed Al Adiroos, 24). சுமார் 100 பேர் அந்த சிறிய படகில் இருந்ததால், ஒருவேளை படகு கவிழ்ந்துவிடலாம் என்பதாலேயே படகிலிருந்து 24பேரை திருப்பி அழைத்துக்கொண்டார்கள் என்கிறார் முகம்மது. இதற்கிடையில், பிரான்ஸ் அதிகாரிகள் 24 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளமுடியம் என்றால், மொத்த புலம்பெயர்வோரையும் தங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளவேண்டியதுதானே என்கிறார் பிரித்தானிய அதிகாரி ஒருவர். ஆக, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் வெளிப்படையாகவே உதவுவதாக பிரான்ஸ் மீது பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
அலி சப்பிரி எவ்வள்ளவுக்கும் துள்ளட்டும் இவர் எதுவரை துல்லுகிறார் என்று பாருங்கள் .
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந்து இன்று தடை விதித்துள்ளது. உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட துணை இராணுவப் படையான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவைத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று இங்கிலாந்தால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் இதன்படி, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் போது செய்யப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவதையும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாசாரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமை இதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக இணைந்து பணியாற்ற இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளதுடன் தேசிய ஒற்றுமைக்கான இலங்கையின் உறுதிப்பாடுகளை வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டு போரின் போது சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான 4 நபர்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்திற்கான பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு போரின் போது நீதிக்கு புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன. வெளியுறவுச் செயலாளரின் கருத்து வெளியுறவு, பொதுநல மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி இது தொடர்பில் கூறியதாவது,''இலங்கையின் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது, பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்வேன் என்று நான் உறுதியளித்தேன். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதுடன், தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிப்பாடுகளை வரவேற்கிறது. ஜனவரி மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது , இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி., பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினார். சமூகங்கள் ஒன்றாக முன்னேற, கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதும், பொறுப்புக்கூறுவதும் அவசியம், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் பட்டியல்கள் இதை ஆதரிக்கும். இலங்கையின் அனைத்து சமூகங்களும் வளர்ந்து செழிக்க முடியும் என்று நாங்கள் விரும்புகிறோம். மனித உரிமைகள் மேம்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளது. எங்கள் மாற்றத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது நமது தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்பதை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது. இலங்கைக்கான ஆதரவு கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியாவை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கான முக்கிய குழுவில் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை இங்கிலாந்து நீண்ட காலமாக வழிநடத்தி வருகிறது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூலம் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை இங்கிலாந்து ஆதரித்துள்ளது, இலங்கையின் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக கடன் மறுசீரமைப்பை ஆதரித்துள்ளது மற்றும் இலங்கையின் உள்நாட்டு வருவாய் துறைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. இங்கிலாந்தும் இலங்கையும் வலுவான கலாசார, பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, அவற்றில் நமது கல்வி முறைகள் அடங்கும். நாடுகடந்த கல்வியில் பணியாற்றுவதன் மூலம் இலங்கையில் கல்வி அணுகலை இங்கிலாந்து விரிவுபடுத்தியுள்ளது.''என கூறியுள்ளார். Tamilwinசவேந்திர சில்வா உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவ த...இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந...
-
குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..
குரங்குகளை தென்னையில் ஏறாமல் இருக்க தென்னையில் பாம்பு படம் வரைந்து விடுவார்கள் அதுகள் புத்தி சாலிகள் அசைவில்லாமல் படம் மட்டும் இருப்பதை புரிந்து கொண்டு விடும்கள் .
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணா.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நெடுக்ஸ் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.
-
குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..
குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாகுபடி நிலங்களில் தெளிப்பதன் மூலம், எலிகள் மற்றும் குரங்குகளின் வரவை குறைக்க முடியும் என்றும், இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும், வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க, வனத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான எல்லையில் நாய்களை நிறுத்துவது விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. https://madawalaenews.com/16778.html
-
தேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார். மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம் , பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார். தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார்.வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது. எமது கோரிக்கை நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது. மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது. மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம்.தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக்கடத்தலைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லையே? மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம். தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம். புதுக்கோட்டை நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை. https://thinakkural.lk/article/315964
-
தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!
Courtesy: I.V. Mahasenan கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது. ரணிலின் நேர்காணல் மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார். இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் போர் ‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார். இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது. எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன. அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை. குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை. இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார். ‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது. இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ரணில்-மைத்திரி 2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள். ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார். இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார். இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும். ஒற்றையாட்சி தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை. சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை. சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை. சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள். பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை. பட்டலந்த வதைமுகாம் சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை. கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது. நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர். எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும். எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை. இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும். https://tamilwin.com/
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
இவர் தமிழ்நாட்டில் ஸ்டாலினை 1௦௦௦ பேரில் கூட்டதோடு கூட்டமாய் நின்று செல்பி எடுத்து விட்டு இங்கு வந்து தமிழர் பிரச்சனையை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கதைத்தோம் என்று அடித்து விட்ட தமிழர்களை ஏமாற்றும் சோணகிரி . அங்கு அமெரிக்க அவுஸ் தூதரங்களில் டொய்லெட் அடைப்பு எடுத்து இருக்கும் இவர் விழுந்தடித்து நாலு பிளம்பருடன் போய் அடைப்பெடுத்து விட்டு விட்டு வெளியாலை வந்து சமகால தமிழர்களின் விடயம் பற்றி கதைத்தேன்என்று அடித்து விட்டுருப்பார் .
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
கடற்கரையில் இருந்து பார்க்கும் போது இந்த ரோலிங் வள்ளம்களில்ஆட்கள் நடமாட்டம் தெரியும் அளவுக்கு மிக கரையை நெருங்கி வருகிறார்கள் அப்படி பார்க்கும்போது கடல் எல்லை பிரச்சனை அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதை நம்புவது கஷ்ட்டமாக உள்ளது வாத்தியார் .
-
வெளிக்கிளம்பும் மறைக்கப்பட்ட இரகசியங்கள்: சிறையில் அடைக்கப்படுவாரா ரணில்..!
அண்மையில் இடம்பெற்ற அல்ஜசீரா நேர்காணலிற்கு பின்னர், படலந்த வதைமுகாம் தொடர்பான விடயங்கள் சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில், குறித்த வதைமுகாமுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த தொடர்புகள் குறித்த பல்வேறு உண்மைகளும் சாட்சியங்களும், வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் பலதரப்புகளில் இருந்து எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், படலந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு துணையாக நின்று, நடவடிக்கைகளை முன்னெடுத்த முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குட்டி இங்கிலாந்து லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்ட இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, படலந்த வதைமுகாமை தேர்தலுக்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தான் அக்காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இளம் ஊடகவியலாளர் சங்க செயலாளர் பசீர் குறிப்பிட்டுள்ளார். படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான ஆதாரங்களும் சாட்சியங்களும் ஏராளமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் இருக்கக் கூடிய படலந்த சித்திரவதை முகாமானது, அதாவது யூரியா உர தொழிற்சாலையாக இருந்த குறித்த பகுதி அக்காலப்பகுதியில் 'குட்டி இங்கிலாந்து' என அழைக்கப்பட்டிருக்கின்றது. சிறப்பு பொலிஸ் பிரிவு காரணம், அந்த உர தொழிற்சாலையின் இயங்குநிலையை பராமரிப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டார்கள். எனவே, அவர்களுக்காக மிகவும் சொகுசு வாய்ந்த குடியிருப்பு தொகுதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. 1988 - 1989களில், அதாவது ஜேவிபி குழப்பம் என சொல்லப்படும் அந்த காலப்பகுதியில், இலங்கை முழுவதும் 'புரட்சிகர காவற்படையை அடக்குவதற்கான பிரிவு' என்ற ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவு, ஐக்கிய தேசியகட்சி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பேலியகொட வலையத்தின் குறித்த சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு தலைமை தாங்கிய முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ், இந்த படலந்த வதைமுகாமின் முக்கிய சாட்சியாளர் அல்லது சந்தேகநபராக இருக்கலாம் என்று இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் படலந்த வதை முகாம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அனைத்து விடயங்கள் மற்றும் அங்கு கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார். யூரியா கைத்தொழிற்சாலை ரணில் விக்ரமசிங்க, அவரின் முந்தைய ஆட்சிக்காலத்தில், குறித்த யூரியா கைத்தொழிற்சாலை பகுதிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான சாட்சியங்கள் ஏராளமாக இருப்பதாக தெரிவித்த பசீர், இக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு அப்பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளே பல்வேறு சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. படலந்த சித்திரவதை முகாமில் பொலிஸாரின் இரகசிய பகுதி மற்றும் இராணுவத்தின் முகாம் என்பன மூலம் நடத்தப்பட்ட முக்கிய சித்திரவதைகள் தொடர்பான அனைத்து சாட்சியங்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக இருப்பது அனைவரும் அறிந்ததே. உதவி பொலிஸ் அத்தியட்சகர் இருப்பினும், குறித்த அறிக்கையையும் தாண்டி ஒரு முக்கிய சாட்சியமாகவே முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி உள்ளதாக பசீர் குறிப்பிட்டார். அதாவது, படலந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு துணையாக நின்று, முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதன்காரணமாக, சந்திரிக்கா ஜனாதிபதியான காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க, முக்கிய சாட்சியான டக்ளஸ் பீரிஸை நாட்டை விட்டு தப்பியோட செய்துள்ளார். இருப்பினும், முன்னதாக ரணில் அவரின் முக்கிய சாட்சியங்களை இல்லாது செய்தமை அனைத்தையும் அறிந்த டக்ளஸ் பீரிஸ், அவருக்கு பயந்து இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார். இருப்பினும், இலங்கையில் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் சிக்கியதையடுத்து குற்றபுலனாய்வு பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்துவதாக கம்பஹா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். முக்கிய சாட்சியங்கள் இதனை தொடர்ந்து நீதிமன்றின் அனுமதியுடன், அவர் குறித்த சத்தியக்கடதாசியை வழங்கியதாகவும், இதன் காரணமாக விசாரணைகளை மேற்கொள்வதில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ரணிலின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ, ஆணையகத்தில் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர், மர்மமான முறையில் இறந்தார். இது மாத்திரமன்றி, இவ்விடயம் தொடர்பில் சாட்சியங்கள் தெரிந்த வேறு சிலரும் உயிரிழந்ததாகவும், உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது. அந்தவகையில், தற்போது வெளிவந்த அல்ஜசீரா நேர்காணலிற்கு பின்னர், குறித்த படலந்த வதைமுகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிண்ணனியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக திரும்பியுள்ள படலந்த விவகாரம் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமா என்பதுடன் அது குறித்த உண்மைகள் அரசாங்கத்தால் வெளிக்கொணரப்படுமா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
-
ரணில் பதிலளிக்காமல் திணறியது ஏன்..! நேர்காணல் முழுவதும் தமிழில்
சர்வதேச ஊடகமான அல்ஜசீரா நடத்திய ஹெட் டூ ஹெட் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) முன்வைத்திருந்த கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. இதில் இலங்கையில் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பப்பட்டன. இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கு அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்திருந்தார். அத்தோடு சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருந்தார். இலங்கை அரசியலை பொறுத்தவரை சிறந்த அரசியல் புலமைவாய்ந்தவராக எல்லோராலும் பார்க்கப்பட் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திணறியதும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. பட்டலந்த முகாம் பற்றி அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் தற்போது இலங்கையில் மிகவும் பேசுபொருளாகியுள்ளதுடன் உண்மைகள் பற்றி ஆராய்ச்சிகள் தீவிரமாகியுள்ளன. எனவே குறித்த நேர்காணலை லங்காசிறி தமிழில் மொழிபெயர்த்துள்ளது. அதனை கீழுள்ள காணொளியில் காணலாம்... https://tamilwin.com/
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
தெரிந்தே வடகிழக்கு கடல் வளத்தை நாசம் பண்ணுகிறார்கள் .
-
பட்டலந்த ஆணைக்குழுவில் நடந்தவற்றை வெளிப்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி
1995, செப்டம்பர் 21,அன்று, பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம் நிறுவப்பட்டதும், அது தொடர்பான சில விடயங்களையும் ஊடகம் ஓன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, 1988/90 காலகட்டத்தில் பட்டலந்த வீட்டு வளாகத்தில் இயங்கிய சித்திரவதை அறை பற்றிய பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் ஆணையகத்தின் முன், தாம் தவறாக நடத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டனர். இந்த விபரங்கள் ஆணையகத்தின் அறிக்கையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள 2/2 இலக்க வீடு, 1983 முதல் 1989 ஏப்ரல் வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு சுற்றுலா பங்களாவாக ரணில் விக்ரமசிங்கவால் பயன்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1989 முதல் 1994 வரை, தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, விக்ரமசிங்க அதே வீட்டை தனது அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். மர்மமான முறையில் உயிரிழப்பு விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக 2/1 வீடு ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் 2/3 வீடு அவரது கீழ் உள்ள அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டது. விக்ரமசிங்கவின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ, ஆணையகத்தின் முன் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர்,மர்மமான முறையில் இறந்தார். ரணில் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் முன், சாட்சியமளித்த, சில நாட்களுக்கு முன்னரே, அவர் மர்மமான முறையில் இறந்தார். சித்திரவதையிலிருந்து தப்பிய ஒருவர் ஆணையகத்திடம், இந்த வீட்டை அடையாளம் காட்டினார். வீடு B1 விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது, மேலும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான சுதத் சந்திரசேகர B7 வீட்டை பயன்படுத்தினார். அருகில் அமைந்துள்ள வீடு B8, பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. என்ன நடந்தது இந்த நிலையில், B8 வீட்டிலேயே, தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக ஏர்ல் சுகி பெரேரா ஆணையகத்தின் முன் சாட்சியமளித்தார். முன்னர்,ஒரு ஊடக சந்திப்பில், முன்னாள் இராணுவ அதிகாரி இந்திராநந்த டி சில்வா பட்டலந்தவில் நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை வெளியிட்டார். "நான் இராணுவப் பொலிஸின் புகைப்படக் கலைஞராக இருந்தேன். சித்திரவதை அறைகளைப் புகைப்படம் எடுத்து, கொல்லப்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்களை தொகுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. பலர் கொல்லப்படுவதற்கு முதல் நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர். சிலர் கொடூரமான சித்திரவதைகளைப் பார்த்து மகிழ்ந்து பிரனாடியை உட்கொண்டனர். அத்தகையவர்கள் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதிகளானார்கள். பட்டலந்த சித்திரவதை அறை பற்றி அனைத்தையும் வெளிப்படுத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அது தற்கொலை அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். டக்ளஸ் பீரிஸ் விஷயங்களை மறைக்க முயன்றபோது என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய விஜயதாச லியனாராச்சி, தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஸ்எஸ்பியின் வீட்டில் வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்டார். ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள், நீதிமன்றத்தைப் புறக்கணித்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். எனினும் அதே நாளில் லியனாராச்சியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. பின்னர் அவர் மரணமானார். அவரது பிரேத பரிசோதனையில் 19 உடைந்த விலா எலும்புகள் மற்றும் 307 காயங்கள் இருப்பது தெரியவந்தது. ஏழைகளுக்காகப் போராடிய விஜயதாச லியனாராச்சி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில், அல் ஜசீரா நேர்காணலின் போது, பட்டலந்த அறிக்கை குறித்து, ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது இந்த அறிக்கை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
- பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
Important Information
By using this site, you agree to our Terms of Use.