Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14430
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பெருமாள்

  1. இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?
  2. புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில் இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது? முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள் கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் . இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு . கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் . இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு கடல் மீன்வள கொள்ளையை ஒப்புதல் வாக்கு மூலம் கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .
  4. இங்கு சுமத்தர் ரணிலுடன் விளயாட்ட பார்ப்பது பிரச்சனையல்ல முதலில் அவரின் சுயம் எது ? என்பதை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளனும் . தனக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று பொய்யான செய்தியை சொல்லி புனர்வாழ்வு அளிக்கபட்ட போரில் அங்கவீனர் ஆகிய முன்னாள் புலி போராளிகளை சிங்கள அரசிடம் சொல்லி சிறையில் இட்டு தனக்கு பாதுகாப்புக்கு அதிரடி படையை பெற்றுகொண்டார் அதே (இன்னமும் அவர்கள் சிறையில் தான் உள்ளார்கள் ) அதிரடி படையுடன் மாவீரர் நாளில் போராளி வீட்டுக்குள் சென்று மாவீரர் தினத்தை கடைபிடிப்பார். உலகிலே பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியவர் ஒரே ஒரு நாளில் நெல் விதைத்து அடுத்த சிலமணி நேரம்களில் வளர்ந்த நெல்லில் பொங்கல் செய்து காட்டியவர் இந்த பிழைப்புக்கு யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் துண்டை விரித்து பிச்சை எடுத்து இருக்கலாம் . சிங்களவர்களுடன் வாழ்வதே தனக்கு சந்தோசம் என்பவர் முறையான தேர்தலில் வராமல் பின்கதவால் தமிழர் அரசியலுக்குள் வந்து எண்ணற்ற இழப்புகளையும் இழந்து போயிருந்த தமிழருக்கு கிடைக்கவேண்டிய நியாமான தீர்வுகளை சர்வதேச விசாரணை முடிவுகளை குழப்பியடித்தவர் . இலங்கை தமிழர்களில் தனக்கு மட்டுமே ஆங்கிலமும் சிங்களமும் எழுத வாசிக்க கதைக்க தெரியும் என்று நம்புபவர் அதை தனது விசுவாசிகளுக்கும் சொல்லி வைத்திருப்பார் ஆனால் பொது மேடையில் இலங்கையின் சட்ட புத்தகம் படிக்க தெரியாமல் உளறுவார் . மேலே உள்ள வைக்கு எதிர் வாதம் செய்ய வருவோர் தயவு செய்து சுமத்திரன் தமிழர் அரசியலுக்கு வந்து கடந்த 14 வருடத்தில் தமிழர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நன்மையை சொல்லிய பின் கருத்துக்களை வைப்பது நல்லது . தமிழர் இன அழிப்பை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் நிம்மதியாக உறங்க செல்கிறார்கள் என்றால் காரணம் இவர் மட்டுமே .
  5. போதைபொருள் ஜாபர் செய்திகளில் இருந்து இனி விடைபெறுவார் அடுத்து கொஞ்ச நாளைக்கு ஜெயமோகன் தான் இரு மாநில செய்தி ஊடகங்களிலும் கிழித்து தொங்க விடபடுவார் .இனி என்ன ........................ஸ்டார்ட் மியுசிக் .😀
  6. இந்த pseudoephedrine பிடிபட்டது சரி அது எங்கிருந்து வந்தது ? தமிழ்நாட்டில் இருந்துதான் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் ? என்ற விபரங்களை இந்த மழைக்கு முளைத்த காளான் யுடிப்பர் கூட்டம் கூட ஏன் மறைக்கின்றனர்? தமிழ்நாட்டில் டெண்டர் விட்டார்கள் அதை யார் எடுத்தார்கள் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் தற்போது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்ல மறைக்கிறார்கள் ? ஜாபர் கைது பேருக்கு நாலு பேர் கைது அத்துடன் இந்த செய்தியை விட்டு வேறு செய்திக்கு மாறி விடுவார்கள் காரணம் இங்கு எழுதமுடியாது பல ரில்லியன் புழங்கும் அரசியல் சதுரங்கம் . கூகிளில் கிண்டுபவர்களால் உண்மையை கொண்டுவர முடியும் முடிந்தால் கிண்டுங்கள் .
  7. சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை நிமித்த முடியுமா ?
  8. டாலர் வந்தது வந்து கொண்டு இருக்குது வரப்போகுது டாலர் மழை இலங்கையில் கொட்டப்போகுது இப்படியே சொல்லி சொல்லி கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு கொடுக்கிறாரார்கள் .
  9. போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா 7 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024 உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு. ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார். படக்குறிப்பு, பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா பனாமா கால்வாய் குறைந்த வரத்து கொண்ட மழைநீரையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் அதன் வறண்ட ஆண்டுக்கு காரணமாக அமைந்துள்ளன. கடந்த அக்டோபர் தான் அதன் வரலாற்றில் முதல் வறண்ட மாதம். அப்போது இயல்பைவிட 41% குறைவாக மழை பொழிந்தது. இது அமெரிக்க - பசிபிக் வழித்தடம் வாயிலாக பயணிக்கும் 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இதற்காக கால்வாய் நிர்வாகம் ஒரு சில நீர்சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஒரு சில கப்பல்களே ஒரு நாளில் கால்வாயை கடக்க முடியும் என்று அது விதியை உருவாக்கியது. காரணம் கால்வாயை இயக்க ஏரியின் தண்ணீரே தேவை. இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24ஆக குறைக்கப்பட்டது. அதிலும் எடைக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு கப்பலும் குறைந்த அளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த தேக்கம் உலக வர்த்தகத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனாமா கால்வாய் என்ன சிக்கல் ஏற்படும்? பொதுவாக 5 சதவீத உலக கடல்சார் வர்த்தகம் மற்றும் 40% அமெரிக்க கண்டைனர்கள் அட்லாண்டிக் - பசிபிக் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வழித்தடம் வறண்டு விட்டால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழித்தடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை வரும். இது நேரச்செலவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பண விரயத்தையும் அதிகப்படுத்தும். மேலும் தண்ணீர் வறட்சி உலக வர்த்தகத்திற்கு மட்டும் பாதிப்பல்ல. பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, தொடர் தண்ணீர் வறட்சி இதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், தற்போதைக்கு கால்வாய் நிர்வாகம் இந்த தண்ணீர் இன்னும் ஒரு நூற்றாண்டு தாக்குபிடிப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரியான இலியா எஸ்பினோ டி மரோட்டா, கால்வாயின் பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரி இலியா எஸ்பினோ டி மரோட்டா பனாமா கால்வாய் சிக்கலுக்கு என்ன தீர்வு? இதுகுறித்து அவர் பேசுகையில், “இது ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போக்குவரத்து குறைப்பு அல்லது எடைக்குறைப்பு ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். இந்த நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிலையான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்த திட்டங்கள் இது போன்ற முக்கிய வழித்தடங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு பேசிய இலியா எஸ்பினோ டி மரோட்டா, “பனாமா மிக அதிக மழை பெய்யும் ஒரு நாடு. ஆனால், சமீபத்தில் பல இடங்களை போலவே இங்கும் மழைப் பொழிவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே நிச்சயமாக நாம் எதிர்காலத்தை நோக்கி தயாராக வேண்டும்” என்கிறார். அதில் முக்கியமான ஒன்று தண்ணீரை சேமிப்பது. கடல் மட்டத்திற்கு மேலே உள்ள வாயில்கள் வழியாக காதுன் ஏரி மற்றும் சிறிய அலாஜுவேலா ஏரியின் தண்ணீரின் மூலம் படகுகளை கொண்டு செல்வதே பனாமா கால்வாயின் பணியாகும். ஒவ்வொரு படகும் அதை கடப்பதற்கு 5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கால்வாயை புதிப்பித்த போது 60% தண்ணீரை சேமிக்கும் வகையிலான நியோ-பனாமாக்ஸ் பூட்டுகள் மாற்றப்பட்டன. ஆனாலும், பழைய பனாமாக்ஸ் பூட்டுகளும் செயற்பாட்டில் தான் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது பெரிய திட்டம். இதற்கிடையில், ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு அதே நீரை பயன்படுத்துவதற்கான குறுக்கு வழி ஒன்றையும் பனாமா கால்வாய் நிர்வாகம் கண்டுபிடித்தது. குறுக்கு வழியில் நீர் நிரப்பும் இந்த திட்டம் மூலம் தினசரி 6 கப்பல்கள் இந்த வழியை கடக்கும்போது பயன்படுத்தும் அளவிற்கான தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 2016இல் புதிய பூட்டுகள் மாற்றப்பட்டதில் இருந்து, நீர்தேக்கங்களை அமைப்பது குறித்து பனாமா கால்வாய் நிர்வாகம் சிந்தித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனாமா கால்வாயில் சிறிய கப்பல்கள் நிற்கும் காட்சி மழைப்பொழிவு மாதங்களில் அதிக நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கவும் அந்த நிர்வாகம் அருகில் உள்ள இந்தியோ நதியில் அணைக்கட்ட விரும்புகிறது. மேலும் காதுன் ஏரிக்கு பைப் வழியாக நன்னீரை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கப்பல் போக்குவரத்தை ஒரு நாளுக்கு 12 முதல் 15 வரை அதிகரிக்கும். இந்த திட்டத்தை முன்னெடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம் இந்த திட்டத்திற்கு இன்னும் காங்கிரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூட இதன் கட்டுமானம் முடிய சில ஆண்டுகள் ஆகும். இதில் மற்றுமொரு திட்டம் என்னவென்றால் உப்புநீக்கும் ஆலைகளை உருவாக்குவது. தொடர் மழையின்மை ஏரிகள் மற்றும் நதிகளை அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. அதே சமயம் இந்த திட்டம் விலை உயர்ந்தது மட்டுமின்றி கடல்நீரில் இருந்து உப்பை நீக்குவதற்கு அதிகளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது. இவர்களது திட்டப்பட்டியலில் செயற்கை மழையை வர வைப்பதும் கூட உள்ளது. மேகக்கூட்டங்களில் மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை தூவி மழை வருவிக்கும் மேக விதைப்பு முறையே இந்த செயற்கை மழை. இதை கேட்க அதிநவீன முறையாக தோன்றினாலும், இது 1940ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைதான். இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்துள்ள உலக வர்த்தகம், மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டுமானால், இதற்கு உடனே தீர்வு கண்டறிய வேண்டும். தற்போது பனாமா கால்வாய் வழியாக நடக்கும் வர்த்தகத்தின் அளவை அதன் உச்ச அளவோடு ஒப்பிட்டால், 49% குறைந்துள்ளது. இதனால் தங்களின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் . பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக ஜவுளிப் பொருட்களில் இருந்து உணவுகள் உள்ளிட்ட இரண்டு மில்லியன் டன் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வேறேதும் நல்ல குறுக்குவழிகள் இல்லாததே பிரச்சனை என்கிறார் அவர். படக்குறிப்பு, அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் பனாமா கால்வாய்க்கு மாற்று இருக்கிறதா? செங்கடல் பிரச்னை எழுவதற்கு முன்பு, ஆசியாவிலிருந்து சில சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன. அது பாதுகாப்பு குறைந்த தேர்வாக இருப்பதன் காரணமாக, பனாமா முழுவதும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கப்பல்களில் இருந்து ரயில்கள் மற்றும் வாகனங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கே அதிக செலவுகள் ஆவதாக கூறுகிறார் ஜோஸ் செர்வாண்டஸ். “அந்த செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர் மீதுதான் சுமத்தப்படுகிறது" என்றும் கூறுகிறார் அவர். எதிர்பார்த்தபடி மழை மே மாதத்தில் வந்தால், கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். ஆனால், அது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே. மழைபொழிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் பனாமா கால்வாயின் நீண்ட எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது. https://www.bbc.com/tamil/articles/cnl78krx8xgo
  10. மாலத்தீவு-சீனா உறவுகள் நெருக்கமாகி வரும் நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு நாளை மறுநாள் (மே 10-ஆம்) வெளியேற உள்ளனர். படிப்படியாக நிகழும் இந்த வெளியேற்றம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முழுமையடைய வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கருதப்படும் மாலத்தீவு அதிபர் முய்சு விதித்துள்ள மே மாதக் காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவர். மாலத்தீவில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மீட்பு மற்றும் உளவு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு சிறிய விமானத்தை பராமரிக்கவும், இயக்கவும் தனது ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இந்தியா பல ஆண்டுகளுக்கு முன் மாலத்தீவிற்கு நன்கொடையாக கொடுத்திருந்தது. இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து அகற்றும் நடவடிக்கை என்பது அதிபர் முய்சுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மாலத்தீவின் மீது இந்தியா நீண்டகாலமாக தனது செல்வாக்கை செலுத்தி வருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் முக்கியமான பகுதிகளை கண்காணிக்க அந்நாடு இந்தியப் படையினரை அனுமதித்தது. ஆனால், முய்சு பதிவியேற்விற்கு பின், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள வல்லரசுகள், இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த சந்தர்பத்தை, சீனா, சுரண்டுவதற்கான ஒரு இடைவெளியாகப் பார்க்கிறது. இருந்தபோதிலும், ராணுவத்தினரைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள சிவில் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட விமானத்தை இயக்க மாலத்தீவு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஒரு குழுவினர் மாலத்தீவு சென்றுள்ளனர். "விமானம் மாலத்தீவில் இருக்கும், அவற்றைப் பராமரிக்க இந்திய பணியாளர்கள் இருப்பார்கள். எனவே இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது," என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாம் சரண். மாலத்தீவில் உள்ள சிலர், ராணுவ வீரர்களுக்கு பதிலாக சிவிலியன்களை நியமிப்பதை முய்சுவின் 'இந்தியா வெளியேறு' பிரச்சாரத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு முக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறார்கள். இதுகுறித்து கேட்க முய்சுவை தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், முய்சுவின் அலுவலகம் பதிலளிக்கவில்லை. மாலத்தீவுக்கு சீனா என்ன உதவி செய்கிறது? பட மூலாதாரம்,REUTERS ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மாலத்தீவு, ஆசிய சக்திகளின் போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். சீனா பல ஆண்டுகளாக மாலத்தீவிற்கு நூறு கோடி டாலர்களுக்கு மேல் கடன் கொடுத்துள்ளது, பெரும்பாலும் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இந்தக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் மாலே ஆகிய இரு நாடுகளும் தங்கள் உறவுகளை ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு உயர்த்திக் கொண்டன. முந்தைய மாலத்தீவு தலைவர்களைப்போல அல்லாமல், முய்சு இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாகவே, சீனாவிற்கு அரசு முறைப்பயணமாகச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில், மாலத்தீவு அரசு, சீனாவுடன் ஒரு ராணுவ உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முன்னேற்றம், இந்தியாவை சற்று கவலையடையச் செய்தது. கூடுதல் விவரங்களை தர மறுத்த மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஒப்பந்தம் எந்தவிதப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் நடந்ததாக் கூறியது. ஆனால், செவ்வாய்கிழமை அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் முய்சு, சீனா மாலத்தீவு பாதுகாப்பு படைகளுக்கு உயிரைக்கொல்லாத ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கும் எனக் கூறினார். "இது முன்னோடியில்லாதது. ராணுவ உதவியை வழங்குவதற்காக மாலத்தீவு பெய்ஜிங்குடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இதுவே முதல் முறை," என்று மாலத்தீவு அரசியல் ஆய்வாளர் அசிம் ஜாஹிர் பிபிசியிடம் தெரிவித்தார். "முதலீடு மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் முய்சு சீனாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவார் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் இந்த அளவிற்கு செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்றும் அவர் கூறினார். ஆனால் பெய்ஜிங் மாலத்தீவில் நீண்டகால ராணுவத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று மறுக்கிறது. "இது இரு நாடுகளுக்கிடையேயான இயல்பான உறவு. இந்தியப் பெருங்கடலில் சீனா ராணுவப் இருப்பைக் கொண்டிருக்க விரும்பினால், அதற்காக மாலத்தீவுகளை விட அது சிறந்த தேர்வுகளைக் செய்திருக்கலாம்," என்கிறார் செங்டு இன்ஸ்டிடியூட் ஆப் வேர்ல்ட் அஃபர்ஸ் சிந்தனைக் குழுவின் தலைவர் லாங் சிங்சுன். சீனாவுடன் நெருங்கும் மாலத்தீவு பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா உறுதியளித்திருந்த போதிலும், பலரும் சீனா இந்த சந்தர்பத்தைத் தனக்குத் சாதகமாகப் பயன்படுத்துவதாக நம்புகின்றனர். ஏனெனில், இதற்கு முன்பு இருந்த அதிபர் இப்ராகிம் மொகமத் சோலிஹ் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, முய்சு, முந்தைய நிர்வாகம் டெல்லியுடனான மாலேயின் ஒப்பந்தங்களின் உண்மையை வெளியிடவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அதேபோன்ற விமர்சனம் அவர் மீதும் வைக்கப்படுகிறது. "பெய்ஜிங்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது அவர் கையெழுத்திட்ட பெரும்பாலான ஒப்பந்தங்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை. முய்சு அத்தகைய ஒப்பந்தங்களின் விவரங்களை வெளியிடாத போது முந்தைய அரசாங்கத்தை விட சிறந்தவர் அல்ல," என ஜாஹிர் கூறினார். கடந்த மாதம், டெல்லியின் எதிர்ப்பையும் மீறி, சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3, மாலேயில் நிறுத்த முய்சுவின் நிர்வாகம் அனுமதித்தது. ஆனால், சீன ராணுவம் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய தரவுகளை சேகரிக்கும் பணியாக இது இருக்கலாம் என்று அஞ்சும் சில இந்திய நிபுணர்களை இது நம்ப வைக்கவில்லை. உறவுகளில் தொடர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், டெல்லி மாலத்தீவுக்கு அருகாமையில் உள்ள இந்திய தீவுக்கூட்டமான லட்சத்தீவில் புதிய கடற்படை தளத்தை அமைத்துள்ளது. மினிகாய் தீவில் உள்ள ஐ.என்.எஸ் ஜடாயு 'மேற்கு அரபிக்கடலில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில்' தனது முயற்சிகளை மேம்படுத்தும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சிலர் இதை மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பும் செய்தியாகப் பலர் பார்த்தாலும், இது தற்போதைய பதட்டங்களுக்கான பதில் இல்லை என்று இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர். "இது புதிய விஷயமாக நான் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை, இது சில காலமாக செயல்பாட்டில் உள்ளது," என்று முன்னாள் இந்திய தூதர் சரண் கூறினார். முய்சுவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அவரது நாட்டில் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாலத்தீவு இந்தியாவையே சார்ந்துள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இந்தியா அனுப்பியது. ஆனால், பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி சில அதிகாரிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததை அடுத்து, மாலத்தீவை 'புறக்கணிக்க' இந்தியர்களுக்கு சமூக ஊடக அழைப்புக்கு வழிவகுத்த சமீபத்திய சர்ச்சைக்குப் பிறகு இது மாறிவிட்டது. முய்சு பெய்ஜிங்கில் இருந்தபோது சர்ச்சை வெடித்தது. தொற்றுநோய்க்கு முன்னர் இருந்ததுபோல மீண்டும் முதலிடத்தைப் பெற அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பத் தொடங்குமாறு சீன அதிகாரிகளை மாலத்தீவு அரசு கேட்டுக்கொண்டது. அப்போதிருந்து, சீன சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் செல்லத் தொடங்கினர். சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாலத்தீவுக்குச் சென்ற சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகளில் 13% பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அவையில் பெரும்பான்மை பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், முய்சுவின் நடவடிக்கை தீவிரமடையும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/ce9r017614ko
  11. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர் இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளிறேத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்றில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற பதவி விலகியிருந்தார் மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன பதவி விலகி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/parliment-mps-trying-to-move-aboroad-1709954375
  12. මනුස්සකම ගැන සිංහල බල්ලෝ දන්නවද? 2009 අපි කටු කටවල් වලට මැදිවෙලා මැරෙනකොට එයාලගේ ප්‍රධාන උන්වහන් ක්‍රිපාට් එක සහෝදර සිංහලයන්ට දීලා පිපිරුම් ගහලා සැමරුවා.දැන් කොහොමද?
  13. தென் மாநிலங்களின் வருவாயில் தான் வடமாநிலங்கள் தொங்கி கொண்டு இருக்கினம் இதையே தயாநிதி மாறன் இந்தி படித்தால் தமிழ் நாட்டில் கக்குஸ் தான் கழுவ வேண்டி வரும் என்று சொல்ல எழுந்த எதிர்ப்பு இருக்கே அப்பா சொல்லி மாளாது ............................
  14. அட இன்னும் இந்த திரி அனையவில்லையாக்கும் அப்ப பிளான் பண்ணியே நிறைய எலிகள் உள் வந்துள்ளன . குறை ஒன்றும் வேண்டாம் கள உறவு @ரசோதரன் திரிக்குள் போனபின் ஒரு பீலிங்
  15. இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தலைவிதி மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/danger-zone-in-srilanka-warrning-for-australiya-1709690905
  16. ஒரு இனத்தையே அழித்து விட்டு கூடவே இலங்கையில் இருந்து கிடைக்கும் இரட்டை ஜனாதிபதி பென்சனில் நடைபயிறசியின் பின் நிம்மதியாக லண்டன் தெருவில் காலார இருக்கிறா என்றால் ???????????????
  17. இதென்னமோ கதைக்க இவர் முருக்கம் மரமேரியா குரங்கு போல் (மட்டுக்கள் வேண்டாம் என்றால் வெட்டி விடுங்க )சம்பந்தமில்லா யாருக்கும் நாவலரை வம்புக்கு இழுக்கிறார் .
  18. கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொடுத்தும் வாங்கலாம். தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. பிட்காயின் அமைப்பின்படி மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கமுடியும். அதில் இதுவரை 1.9 கோடி பிட்காயின்கள் மைனிங் செய்யப்பட்டு, அவை பரிமாற்றத்தில் உள்ளன. ‘பிட்காயின் மைனிங்’ என்பது உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினி உதவியுடன் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் நடைமுறை ஆகும். உலகம் முழுவதும் இந்த பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ யார்? உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.1 கோடி பிட்காயின்களில், சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இந்த பிட்காயின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. அவ்வாறு அதிக பிட்காயின்களை வைத்து அதன்மூலம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று முதலீட்டாளர்கள் வர்ணிக்கின்றனர். உலகம் முழுவதும், அதிக பிட்காயினை வைத்துள்ளவர்கள் விவரத்தை பிப்ரவரி 29 வரை எடுத்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. கீழேயுள்ள புள்ளிவிவரங்கள், நேரடி ஆராய்ச்சி மற்றும் பொது தளத்தில் கிடைக்கும் தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும். 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? மொத்தமுள்ள பிட்காயின்களில் சில லட்சம் பிட்காயின் காணாமல் போய் விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அச்சிடப்பட்ட பணத்தை தொலைப்பது போல பிட்காயின்களை தொலைக்க முடியுமா? பிட்காயின்கள் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயங்கும் பணம் என்பதால் இதை பாதுகாக்க பல அடுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் கரன்சி பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் ஒரு பயனர், தனது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும்(பாஸ்வேர்டு) மறந்தால் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மீட்பது கடினம். பிட்காயின் பரிமாற்றத்தில், வாடிக்கையாளர் சேவை ஏதும் இல்லாத நிலையில், கணக்குகளை மறந்ததால் லட்சகணக்கான பிட்காயின்கள் உரிமை கோர ஆள இல்லாமல் நிரந்தரமாக காணாமல் போகின்றன. முப்பது முதல் அறுபது லட்சம் பிட்காயின்கள் இப்படி காணாமல் போய் இருக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தூக்கி எறிந்த தனது ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்ட வாலட் கணக்கால் 8000 பிட்காயின்களை இழந்தார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிட்காயின் பரிமாற்றமும் நாளடைவில் காணாமல் போகின்றன என்று கிரிப்டோ-புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எலிப்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளான செயல்பாடில்லாத நிலையில் 31.5 லட்சம் பிட்காயின்கள் இருக்கின்றன. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருக்கும் இந்த பிட்காயின்களால், நிரந்தரமாக காணாமல் போகும் பிட்காயின்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று செயின்லைஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளார்கள் கூறுகின்றனர். காணாமல் போன பிட்காயின் குறித்து இப்படி பலரும் ஒரு மதிப்பீட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் 11 லட்சம் பிட்காயின், அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்றும், அவர் தான் பிட்காயினை உருவாக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அப்படியெனில் 24 லட்சம், அதாவது மொத்த பிட்காயினில் 11% பங்கு சந்தையில் இருந்து நிரந்தரமாக காணாமல் போய்விட்டதாக மதிப்பிடப்படுகிறது. கிரிப்டோ பரிமாற்றம் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள், கிரிப்டோ-பயனர்களுக்கான வங்கிகளைப் போல செயல்படுகின்றன. இங்கு பிட்காயின் மற்றும் பிற டிஜிட்டல் கரன்சிக்கு பதிலாக டாலர், பவுண்டு, ரூபாய் போன்ற உங்களுக்கு விருப்பமான பணமாக மாற்றிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் சார்பாக சுமார் 23 லட்சம் பிட்காயின்கள் இப்படியான பரிமாற்ற மையங்களில் உள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள் பினான்ஸ் - 5,50,000 பிட்காயின்கள் பிட்பினெக்ஸ் - 4,03,000 பிட்காயின்கள் காயின்பேஸ் - 3,86,000 பிட்காயின்கள் ராபின்ஹூட் - 1,46,000 பிட்காயின்கள் OKX - 1,26,000 பிட்காயின்கள் அடையாளம் தெரியாத திமிங்கலங்கள் ‘பிட்காயின் திமிங்கலம்’ என்பது தங்கள் டிஜிட்டல் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்களை வைத்திருக்கும் நபர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல். பிரபல வலைத்தளமான Bitinfocharts, உலகின் டாப் 100 பிட்காயின் பணக்காரர்களின் பட்டியலை பொதுவெளியில் இருக்கும் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது. இந்த 100 பேர் பட்டியலில் 80 பேரின் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. அடையாளம் தெரியாத இந்த நபர்களின் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்கள் உள்ளன.இப்படி அடையாளம் தெரியாத திமிலங்களின் பிட்காயின் கையிருப்பை கணக்கிட்டால், மொத்த பிட்காயின்களில் அவை 8% வரை உள்ளன. இதுபோன்ற ஏதாவது ஒரு வாலட் உங்களுக்கு சொந்தமாக இருந்தால், இன்றைய சந்தை மதிப்பின்படி நீங்கள் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரராக இருப்பீர்கள். புழக்கத்திற்கு வராத பிட்காயின்கள் பிட்காயின்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் அதன் எண்ணிக்கை அதிகபட்சமாக 2.1 கோடியாக மட்டுமே இருக்கமுடியும். உலகெங்கிலும் உள்ள தன்னார்வ கணினிகளின் வலையமைப்பை பயன்படுத்தி ஒவ்வொரு நாணயமும் உருவாக்கப்பட வேண்டும். இதையே கிரிப்டோ வழக்காடு மொழியில், மைனிங் செயல்பாடு என்கின்றனர். சுரங்கத்தில் இருந்து கனிமங்களை வெட்டியெடுப்பது போல, இந்த வலையமைப்பில் இருந்து ஒவ்வொரு பிட்காயினாக எடுக்க வேண்டும். இந்த பணியில் பல்வேறு நிறுவனங்கள், தங்களின் கணினிகளை பயன்படுத்தி வேலை செய்து வருகின்றன. அப்படி மைனிங் செய்யப்படும் பிட்காயின்கள் சந்தையில் புழக்கத்திற்கு வரும். இதுவரை மொத்தமுள்ள பிட்காயின்களின் 93% கரன்சி சந்தையில் புழக்கத்தில் உள்ளன. மொத்தமாக உருவாக்கப்பட்ட 2.1 கோடி பிட்காயின்களில், வெறும் 7% பிட்காயின் மட்டுமே இன்னும் மைனிங் செய்யப்படாமல் உள்ளன. உலகின் கடைசி பிட்காயின் 2140ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சத்தோசி நகமுட்டோ - பிட்காயினை உருவாக்கியவர் பிட்காயின்கள் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்டன. இதை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபரிடம் 11 லட்சம் பிட்காயின்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அந்த நபரிடமுள்ள இந்த கிரிப்டோ கரன்சி எதுவும் இத்தனை ஆண்டுகளில் எந்த பரிமாற்றத்திலும் பங்குகொள்ளவில்லை. பிட்காயின்களை உருவாக்கிய அந்த அடையாளம் தெரியாத நபரின் பெயர் சத்தோசி நகமுட்டோ என்றும், அவர் ஜப்பானைச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த பெயருடைய நபர் ஆணா, பெண்ணா அல்லது உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எந்த தகவலும் தெரியாது. அவரிடம் உள்ள 11 லட்சம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இந்த நபர் உலகின் 22வது பணக்காரராக இருப்பார் என்று மதிப்பிடப்படுகிறது. பிட்காயின் மதிப்பு திடீர் உச்சம் ஏன்? கடந்த ஜனவரி மாதத்தில், அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக பிட்காயின்களுடன் இணைக்கப்பட்ட, ஸ்பாட் பிட்காயின் பத்திரங்களை விற்க அனுமதி வழங்கினர். இதன் மூலமாக இந்த முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான பிட்காயின்கள் வாங்கின. அதைக் கொண்டு வெளிச்சந்தையில் பிட்காயின் பத்திரங்களை விற்பனை செய்தன. இப்படியான பத்திரங்களை வாங்கிய எந்தவொரு நபரும், நிறுவனமும் பிட்காயின்களை சொந்தமாக வைத்திருக்கவில்லை. பிப்ரவரி 29ஆம் தேதி இந்த முதலீட்டு பத்திரங்களை மூலமாக 9 லட்சத்து 33 ஆயிரம் நாணயங்கள் பத்திரங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்த பிட்காயின் மதிப்பில் 4.5% கரன்சியை வைத்துள்ளனர். காவல்துறையிடம் எவ்வளவு உள்ளது? உலகெங்கிலும் உள்ள காவல் முகமைகள், தங்களது கைது நடவடிக்கையின் போது சட்டவிரோத செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிட்காயின்களை பறிமுதல் செய்கின்றன. இப்படி பறிமுதல் செய்யப்படும் பிட்காயின் ஏலத்தில் விடப்படுகின்றன. சந்தை வல்லுநர்களின் தரவுகளின்படி, அமெரிக்க காவல்துறை தொடர்புடைய பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிட்காயின்கள் பிடிபட்டுள்ளன. இதேபோல 2018ல் நடந்த பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக இங்கிலாந்தில் 60 ஆயிரம் பிட்காயினும், அண்மையில் ஜெர்மனி காவல்துறை 50 ஆயிரம் பிட்காயினையும் பறிமுதல் செய்தனர். பிட்காயினை வாங்க ஆர்வம் காட்டும் நபர் மென்பொருள் நிறுவன உரிமையாளரான மைக்கேல் சேலர், தனது நிறுவனம் மூலமாக பிட்காயின்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2020ஆம் ஆண்டு முதல், மைக்ரோஸ்ட்ரடேஜி என்ற தனது நிறுவனம் மூலமாக பல்லாயிரக்கணக்கான பிட்காயின்களை இவர் வாங்கி வருகிறார். ஒவ்வொரு முறை பிட்காயினை வாங்கும் போதும் அதை தனது சமூக ஊடகத்தில் மைக்கேல் பதிவிட்டு கொண்டாடுவார். மைக்கேல் தனது நிறுவனங்களின் வழியாக இதுவரை 1,93,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். இதன் மூலமாக உலகிலேயே அதிக பிட்காயின்களை வைத்து நிறுவனமாக இவரின் நிறுவனம் அறியப்படுகிறது. உலகின் முதல் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான மவுண்ட் காக்ஸ், 2011 ஆம் ஆண்டில் சுமார் 8,50,000 பிட்காயின்களை இழந்தது. இதைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள மார்க் ஹண்டர் கூறுகையில், “நாணயங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு இன்னும் குழப்பம் உள்ளது. ஆனால் காணாமல் போன பிட்காயின்களில் பெரும்பாலானவை திருடர்களால் விற்கப்பட்டு சந்தையில் புழக்கத்தில் உள்ளன.” என்றார். பிட்காயினை வைத்திருக்கும் நாடு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரின் அதிபருக்கு பிட்காயின் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. அதன் விளைவாக கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டின் பொதுப் பணத்தை பயன்படுத்தி பிட்காயினை இவர் வாங்கத் தொடங்கினார். அதிபரின் இந்த செயலுக்கு கடுமையாக எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நாட்டுக்கு சொந்தமாக 2,800 பிட்காயின்கள் இருப்பதாக கிரிப்டோகரன்சி வலைதள பதிவாளரும், டச்சு ஆய்வாளருமான எலியாஸ் கணிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக எல் சால்வடோர் நாட்டுக்கு சொந்தமாக எத்தனை பிட்காயின் உள்ளன என்ற விவரம் பொதுவெளியில் இல்லை. 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு வருவாயை டெஸ்லா நிறுவனம் வெளியிடும் போது அதில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக 9,700 பிட்காயின் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு, ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் 40,000 க்கும் மேற்பட்ட பிட்காயினை வாங்கியது. ஆனால் அண்மையில் அதில் பெரும்பாலானவற்றை அந்நிறுவனம் விற்றுவிட்டது. 1 கோடிக்கும் அதிகமான பிட்காயின்கள் பொதுமக்களிடம் உள்ளன என்று பால்பார்க் நிறுவனம் மதிப்பிடுகிறது. இதில் எத்தனை தனிப்பட்ட நபர்கள் பிட்காயின்களை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் கிரிப்டோ-டெக் நிறுவனமான ரிவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டது. அதன்படி 81.7 லட்சம் பிட்காயின் பயனாளர்கள் பரிமாற்றங்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது. அப்படியெனில் உலக மக்கள் தொகையில் 1% பேர் கிரிப்டோ பயனாளர்களாக இருக்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/c6pj4g5l33no
  19. ஒவ்வொரு முறையும் புது புது அவதாரில் வந்து கரித்து கொட்டுவதுதான் முழு நேர வேலையாக்கும் சாந்தன் 3௦ வருட போராட்டத்தின் கடைசி வித்துக்கள் இனி ஒரு ஆயுத போராட்டம் என்பது கிடையாது ஈழத்தில் இருக்கும் சின்ன குழந்தைக்கும் தெரியும் அந்த விடயம் .ஆனால் உணர்வுகள் செத்து விடவில்லை இதை அறிய இந்திய புலனாய் கூட்டம் வேணுமென்றே சாந்தனை கொலை செய்து அவரின் இறுதி ஊர்வலத்தை பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளது அவர்களின் கட்டளைக்கு பந்தம் பிடிப்பவர்களுக்கு இந்த செய்தி பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும்தானே ?😁 வணக்கம் கந்தப்பு 2022 ஒக்டோpar மாதம் காணாமல் போய் இன்றுதான் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி திரும்பி வந்ததில் சுகமாய் இருகிறீர்களா? முகமூடியில் நின்று வகுப்பு எடுப்பது எல்லோருக்கும் ஈசியானது .
  20. இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முதல்களை அழிப்பதற்கும் எதிராக வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (05.3.2024) யாழ் மாவட்டச் செயலகத்திலிருந்து ஆம்பமாகி உள்ளது. வீதித் தடைகள் போராட்டக்காரர்கள் இந்திய துணை தூதரகம் சென்று மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பொலிஸார் இந்திய துணை தூதரகத்திற்குள் போராட்டக்காரர்களை செல்ல விடாது வீதித் தடைகளையிட்டு மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/a-massive-demonstration-by-fishermen-in-jaffna-1709618132
  21. இலங்கையின் சனத்தொகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணங்களினாலயே சனத்தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி 2022 இல் 2,181,0000 ஆக இருந்த மக்கள் தொகை 2023இல் 2,037,0000 ஆகக் குறைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022இல் 361,800 இல் இருந்து கடந்த ஆண்டு 268,920 ஆகக் குறைந்துள்ளதோடு வருடாந்த இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2014 இல் 125,334 வீதமாகவிருந்த இறப்பு வீதம் 2023 இல் 196,000 ஆக உயர்ந்துள்ளது. 2022 இல் 85,572 ஆக இருந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2023 இல் 222,715 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/decline-in-sri-lanka-s-population-1709628328
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.