Everything posted by தமிழ் சிறி
-
மாணவியின் வீட்டுக்குச் சென்ற அதிபர், ஆசிரியர் மீது சகோதரன் வாள்வெட்டு!
அட கறுமமே... வில்லங்கம் எந்த ரூபத்தில் வருகின்றது. மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்துவதும், ஆசிரியர்களுக்கு ஆபத்துப் போல் தெரிகின்றது. பாடசாலையின் பெயரைப் பார்க்க தமிழ் ஆசிரியர், அதிபர், மாணவி, வாள்வெட்டுக்காரர் போலுள்ளது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சைவ உணவுகள் மட்டும் பரிமாறப் படும் என... அறிவிக்க வைத்த, வேலன் சுவாமி ஜீ... அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். முட்டையும் அசைவம் என்ற படியால்.... இனி அந்த உணவகத்தில் இருந்து, முட்டை பொரிக்கின்ற வாசம் கூட... வெளியே வரப்படாது. வந்தால்.... மீண்டும் போராட்டம் வெடிக்கும். ஆமா.... 😂 நல்லூர் கந்தனுக்கு அரோகரா.... என்று கும்மி அடியுங்க. 😂 வேல்... வேல்... வெற்றி வேல்.
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
நாதம்ஸ் வீட்டிற்குப் பக்கத்தில்தான்... ரம்பா, இந்திரனின் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. ஆளை கன நாள் இங்காலைப் பக்கம் காணாத படியால், ஆள்... அங்கு புரொபசர் வேலை பார்க்கிறாரோ தெரியவில்லை. 😂
-
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
உண்மை. இது புரியாமல், ட்றம்ப் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கொண்டு நிற்கிறார். இங்கு இருந்த பல தொழிற்சாலைகள்…. தொழிலாளர் சம்பளம், வரி போன்றவை அதிகம் என்று வேறு நாடுகளுக்கு போய் விட்டார்கள்.
-
கருத்து படங்கள்
- பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்! இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) உயிழந்துள்ளார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதுடன் ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433029- பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது!
பல்வேறு போதைப்பொருட்களுடன் காத்தான்குடியில் 42பேர் கைது! ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று(24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1433057- புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
கோவில் நிர்வாக சபையில் இருந்த முன்னாள் உறுப்பினர் ஒருவர், பணத்தை ஆட்டையை போட்டு கையும் களவுமாக பிடிபட்டு விட்டாராம், அவர் அம்பிட்டால்... மேலும் பல கூட்டுக் களவுகள் வரும் என்பதால்... அவரை தற்போதைய நிர்வாக சபை காப்பாற்ற முனைகின்றது என்று... முகநூலில் ஒரு செய்தி ஓடிக் கொண்டு உள்ளது. அதன் உண்மைத் தன்மை பற்றி தெரியவில்லை.- அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
ஆம்..... தூஷண பிக்கருக்கு, "நாதம்ஸ்" பல்கலைக்கழகத்திருந்துதான் இந்தப் பட்டம் வழங்கப் பட்டது. 😂 ரூம் போட்டு யோசித்திருப்பார் போலுள்ளது. 🤣- பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது!
பல்கலைக்கழகத்தில் பகிடிவதை வேண்டாம் என்ற மாணவியை தாக்கிய சக மாணவன் கைது! புதிதாக பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை நேற்று இரவு(24) பொலிசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1433060- துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் 08 பேர் கைது!
துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் 08 பேர் கைது! துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்துள்ளனர். இதன்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்ததுடன் முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதேவேளை, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளதுடன் குறித்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் விசாரணைமூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், துபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு , மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Athavan Newsதுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமை...துபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடல் வழியாக போதைப்பொருள் தொகையை க...- புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்! புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த போராடம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எனத் தெரிவித்திருந்ததோடு, கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆலய நிருவக சபையினர் மற்றும் இன்று போராட்டத்தை முன்னெடுத்த மக்களையும் அழைத்து இது தெடர்பில் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1433005- ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை! ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது எனவும் இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 50% வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார். https://athavannews.com/2025/1433051- ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்! ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஹம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர்களில் மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் தாக்கிய நபரை அங்கிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1433018- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது... கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது. சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்... பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்.... இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை. கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்... "அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது அண்மையில் வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டது. Shritharan Sivagnanam- அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
தூசணப் பிக்கர் இவர்தான். 😂- சிரிக்கலாம் வாங்க
- எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்.
எரிமலையால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள். ஓரிடத்தில் எரிமலை வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 1815-ல் ஜாவா கடற்கரை பகுதியில் உள்ள 'டோம்போரோ' தீவிலிருந்த எரிமலை வெடித்த பொது, உலகமே கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை உருவாக்கியது. அப்போது 80 ஆயிரம் பேர் இறந்தார்கள். எண்ணற்ற பறவைகளும், விலங்குகளும் கொல்லப்பட்டன. எரிமலைகள் உருவாக்கும் அழிவைவிட பூகம்பங்கள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. பூகம்பம் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக ஒரு பெரிய நகரத்திலிருக்கும் கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து விடுகின்றன. இந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். அதேபோல் அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டுகள் பல மடங்கு அதிக அழிவை உருவாக்குகின்றன. எரிமலை வெடிக்கும்போது, ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சக்தி வாய்ந்த பல ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தால் வெளிப்படும் அழிவு சக்தியைவிட, அதிக அழிவு சக்தியை அது வெளிபடுத்துகிறது. அப்படி எரிமலை வெடிக்கும்போது, பல டன் எடை கொண்ட கற்கள் பல மைல் தூரத்திற்கு தூக்கி எறியப்படுவதை உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் சில எரிமலைகள் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென்று வெடித்து, மக்கள் தப்பித்துகூட ஓட சந்தர்ப்பம் தராமல் நிறைய உயிர்களை அழித்திருக்கின்றன. எரிமலை வெடிக்கும்போது டன் கணக்கில் எடையுள்ள பெரிய எரிகற்கள் ஆகாயத்தை நோக்கி வீசப்படுகின்றன. சில எரிமலைகள் பல டன் எடை கொண்ட விஷ வாயுக்களைக் கொண்ட மேக மூட்டத்தை உருவாக்கி, மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் போன்ற அனைத்து உயிரினங்களையும் அழித்து விடுகின்றன. பல எரிமலைகள் ரத்தச் சிவப்பாக காட்சி தரும் எரிமலைக் குழம்பை வெளியேற்றுகிறது. அதிக வெப்பத்தினால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்த தீக்குழம்ப்பு சுற்றி இருக்கும் எல்லா இடங்களுக்கும் பரவி அனைத்தையும் எரித்துவிடுகிறது. இப்படி அழிக்கும் எரிமலைகளும் மனிதனுக்கு சில நன்மைகளை செய்கிறது. பூமிக்கு வெகு அழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் மலைகள் மீதும் சமவெளிகள் மீதும் மிகப் பெரிய அளவில் கொண்டுவந்து சேர்ப்பது எரிமலை வெடிப்பால்தான் நடக்கிறது. இது விவசாயத்தை பெருக்க உதவுகிறது. உலகின் பல இடங்களில் எரிமலை வெளிப்படுத்தும் குழம்பை பயன்படுத்தி நீரை அதிக அழுத்தம் கொண்ட நீராவியாக மாற்றி, அந்த நீராவியை கொண்டு விசையாழிகளை சூழ வைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். பூமிக்கு வெகு ஆழத்திலிருக்கும் பல தாதுப்பொருள்கள் வெளியே தூக்கி எறியப்படுவதால், பல தொழிலகங்களின் உற்பத்திக்கு இவை மூலப்பொருட்களாக பயன் படுகின்றன. எரிமலையின் உதவி இல்லாமல், வெகு ஆழத்தில் இருக்கும் இந்த தாது பொருட்களை மனிதனால் வெளியே எடுத்து வரவே முடியாது. இவையெல்லாம் எரிமலையால் ஏற்படும் பெரும் நன்மைகள். - உங்களில் ஒருவன். -- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- 7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
- சிரிக்கலாம் வாங்க
- கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் சற்று முதல் கைது! Vaanam.lk- வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு உரித்தான 5000, ஏக்கர் காணி சுவீகரிப்பு வர்த்தமானி தொடர்பாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் எம்பியின் கோரிக்கையை அடுத்து பிரதமர் தலைமையில் தற்போது விசேட கூட்டம் நடைபெற்று வருகிறது... Kunalan Karunagaran - பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.