Everything posted by தமிழ் சிறி
-
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை இலங்கைக்கு வருகை
அய் …….. டாலர் வரப் போகுது. 😂 தமிழ்ப் பகுதியில் இன்னும்….. நாலு விகாரை கட்டுறம், பிரித் ஓதுறம், பால் சோறு தின்னுறம். 🤣
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
யாழ்ப்பாணம் - 57 % முல்லைத்தீவு - 61 % மன்னார் - 70 % வவுனியா - 60 % மட்டக்களப்பு - 61 % கிளிநொச்சி - 60 % திருகோணமலை - 67 % நன்றி: Vaanam.lk
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
வாக்களிப்பு நேரம் முடிந்த பின்… அவர்கள் பெட்டி மாற்ற காத்து இருக்கின்றார்களோ….
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
இவர்தான்... உண்மையான சந்தேக நபராக இருந்தால்... மூன்று மாதமாக... அரச அலுவலகத்தில் வேலை செய்துள்ளார். துணிவு தான்.- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
- Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
ஹீரோயிசம் காட்டாத சசிகுமார்.. அயோத்தியில் இருந்து டிராக்கை மாற்றிய ஃபேமிலி மேன் சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர், நடிகர், புரொடியூசர் என பல அவதாரங்கள் வைத்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், போராளி,கிடாரி போன்ற ஏழு படங்களை இதுவரை இவர் தயாரித்தும் உள்ளார். இவரது ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சசிகுமாரின் ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இவர் மூன்று படங்கள் நடித்துள்ளார், மூன்றுமே வழக்கத்திற்கு மாறாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்துள்ளது. அயோத்தி, கருடன், நந்தன் என வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படமாக தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் இப்படி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார். நாளை ரிலீஸ் ஆக உள்ள பேமிலி மேன் படம் இன்று பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேக காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. படம் நன்றாக இருக்கிறது என்று படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இலங்கையில் ஏற்படும் பொருளாதார பிரச்சனை காரணமாக விலைவாசி உயர்கிறது. இதனை சமாளிக்க முடியாமலும், பாதுகாப்பு கருதியும் இலங்கையை விட்டு குடும்பத்தோடு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார் சசிகுமார். அவர் இங்கு சந்திக்கும் பிரச்சனை தான் கதை. இவர்களுடன் ரமேஷ் திலக் பக்ஸ் போன்றவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களாக தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கே அவர்கள் பண்ணும் அட்ராசிட்டி தான் படம். முழுக்க முழுக்க காமெடியாக கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜிவினித். நாளை ரிலீசாக உள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரீடம் , நானா, எவிடன்ஸ், பகைவனுக்கும் அருள்வாக்கு என நான்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். Safi Congress- Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
டூரிஸ்ட் பேமிலி- விமர்சனம். சக மனிதர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் படைப்பு. வல்வெட்டித்துறையில் இருந்து டூரிஸ்ட் ஆக இல்லாமல் கிட்டத்தட்ட அகதி போல வந்திறங்கிறது சசிகுமார் குடும்பம். இந்தச் சூழலில் ராமேஸ்வரத்தில் நடக்கும் குண்டுவெடிப்பில் இந்தக் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகப்படுகிறது. வறுமை காரணமாக தாய்மண் விட்டு தமிழ்நாடு திரும்பிய இந்தக் குடும்பம் இந்தச் சூழலை எப்படிக் கடந்தது என்பதே படத்தின் கதை. கதாநாயகன் சசிகுமார் அக்கதையின் ஆழத்தை உணர்ந்து நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். சிம்ரன் படத்தின் கனம் உணர்ந்து அசத்தியுள்ளார். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி அநாசயமாக ஸ்கோர் செய்கிறார் கமலேஷ் ஜெகன். இவர் ராட்சசி படத்தில் ஜோதிகாவிடம் ப்ரபோஸ் செய்யும் சிறுவனாக நடித்தவர். யோகிபாபுவை விட சூழலுக்கேற்ப எதாவது பேசிவிடும் கமலேஷ் ஜெகன் தான் படத்தின் கலகலப்பிற்கு கியாரண்டி தருகிறார். ரமேஷ்திலக் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசை படத்தின் ஒரு கேரக்டராக ரோல்ப்ளே செய்துள்ளது. ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தியைக் கடைப்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங்,கலை இயக்கம் உள்பட அனைத்து அம்சங்களும் படத்தில் சிறப்பாக கைகூடியுள்ளது. ஒரு நல்ல கதையை எடுத்து, சிறப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை படத்தின் இறுதிவரை கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர். சிறுசிறு விசயங்கள் படத்தில் செயற்கையாக தெரிந்தாலும், படத்தின் முடிவு நமக்குள் ஒரு பாசிட்டிவிட்டியை ஏற்படுத்துவதால் இந்த விடுமுறையை நாம் டூரிஸ்ட் பேமிலியோடு கழிக்கலாம். -வெண்பா தமிழ்.- Thangam TV- உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 12.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. அதன்படி மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா – 30 % பதுளை – – 36 % மொனராகலை – 32 % அனுராதபுரம் – 30 % யாழ்ப்பாணம் – 18 % மன்னார் – 40 % வவுனியா – 39.5 % திகாமடுல்ல – 31% கம்பஹா – 20 % மாத்தறை – 42 % களுத்துறை 20 % பொலனறுவை – 34 % கொழும்பு – 28 % புத்தளம் – 36 % காலி – 35 % இரத்தினபுரி – 30 % அம்பாந்தோட்டை – 19 % கிளிநொச்சி – 22 % மாத்தளை – 25 % கேகாலை – 33 % கண்டி – 21 % மட்டக்களப்பு – 23 % குருநாகல் – 30 % திருகோணமலை – 36% ##################################################################################### உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 1 மணிவரையான தேர்தல் நிலவரம்! 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு பதுளை – 48% இரத்தினபுரி – 37% மட்டக்களப்பு – 38% கேகாலை – 40% திகாமடுல்ல – 41% புத்தளம் – 38% அநுராதபுரம் – 40% மொனராகலை – 43% கம்பஹா – 36 % ############################################################## உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 2 மணிவரையான தேர்தல் நிலவரம்! 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 2 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீதம் கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீதம் களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீதம் அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீதம் திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீதம் பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதம் பதுளை மாவட்டத்தில் 46 சதவீதம் மன்னார் மாவட்டத்தில் 54 சதவீதம் இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீதம் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீதம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீதம் மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீதம் https://athavannews.com/2025/1430808- 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
- 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
👉 https://www.facebook.com/reel/587160463776540 👈 இந்திய / பாகிஸ்தான் எல்லையில், "குறளி வித்தை" காட்டும் படையினர்.- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது! ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவரை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430799- 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை! இந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன. விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும் மின்தடை போன்ற சூழ்நிலைகளுக்கு முதல் பதிலளிப்பதற்கான பயிற்சியில் இந்த நடவடிக்கை முதன்மையாக கவனம் செலுத்தும். ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்படும் இதுபோன்ற முதல் பயிற்சி இதுவாகும். மே 7 ஆம் திகதி திட்டமிடப்பட்ட நாடு தழுவிய மாதிரிப் பயிற்சிக்கு முன்னதாக, நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் செவ்வாயன்று (06) உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஒரு முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 2010 இல் அறிவிக்கப்பட்ட 244 நியமிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. https://athavannews.com/2025/1430804- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் மூலம்.. சித்திரவதைகளை செய்த மாணவர்கள் கைது. யாழ்ப்பாணம்.com- தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
சர்ச்சைக்குரிய பிரசாரப் பாடல்-அரசாங்கத்தின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது. சுயாதீன கலைஞர்கள் குழுக்கள் சிலவற்றால் உருவாக்கப்பட்ட குறித்த பாடல்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கம் இணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடல் உருவாக்கம் மற்றும் பரப்புரைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார். குறித்த பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும் குறித்த பாடலுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430747- உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. அதன்படி காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! அதன்படி, வவுனியா – 37% திருகோணமலை – 28% இரத்தினபுரி – 20% கேகாலை – 25% மன்னார் – 26% அம்பாந்தோட்டை – 20% அனுராதபுரம் – 22% திகாமடுல்லா – 26% Vavuṉiyā – 37% https://athavannews.com/2025/1430778- பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
பகிடிவதை தொடர்பான விசாரணை; இதுவரை 10 மாணவர்கள் கைது! சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிஐடியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மரணம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1430787- விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!
ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏- இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்!
இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்! ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூடிய கதவு கூட்டம், எந்த அறிக்கையும், தீர்மானமும் அல்லது அதிகாரப்பூர்வ முடிவும் இல்லாமல் முடிந்தது. இந்த விவாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வெளிவரவில்லை. பல ஆண்டுகளில் நிலைமை மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு நடந்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி அசிம் இப்திகார் அகமட், இந்தியாவுக்கு எதிராக தவறான கூற்றுக்களைப் பரப்ப ஐ.நா. பாதுகாப்பு சபையின் தளத்தை மீண்டும் தவறாகப் பயன்படுத்தினார். 26 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில், பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியது. இந்தியா இராணுவக் குவிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் நிறுத்தி வைத்ததை “ஆக்கிரமிப்புச் செயல்” என்றும் அஹ்மத் குறிப்பிட்டார். இது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் இஸ்லாமாபாத்தின் பங்கிலிருந்து உலகளாவிய கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு வேண்டுமென்றே முயற்சியாக இந்தியா கருதுகிறது. 15 நாடுகளைக் கொண்ட சக்திவாய்ந்த பாதுகாப்பு சபையில் தற்போது நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ள பாகிஸ்தான், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மூடிய ஆலோசனைகளைக் கோரியது. மே மாதத்திற்கான சபையின் தலைவராக, கிரீஸ் மே 5 ஆம் திகதி மதியம் ஒரு மூடிய கதவு கூட்டத்தைத் திட்டமிட்டது. 2019 ஆகஸ்ட்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க சீனா ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூடிய ஆலோசனைகளைக் கோரியது. அந்தக் கூட்டம் 15 நாடுகளைக் கொண்ட சக்திவாய்ந்த ஐ.நா. அமைப்பிலிருந்து எந்த முடிவும் அல்லது அறிக்கையும் இல்லாமல் முடிவடைந்தது. இது பீஜிங்கின் ஆதரவுடன் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியது. சபையில் பெரும்பான்மையானவர்கள் புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான இருதரப்பு விடயம் என்று வலியுறுத்தினர். https://athavannews.com/2025/1430751- இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!
இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்! பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு புள்ளிவிவரங்களைக் குறைக்க முயற்சிப்பதால், குடியேற்ற திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவுக்குள் முக்கிய விசா வழிகளுக்கு விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன. தொழிலாளர், படிப்பு மற்றும் குடும்ப விசா பிரிவுகளில் விண்ணப்பங்கள் மார்ச் 2025 வரையிலான ஆண்டில் மொத்தம் 772,200 பேரை உள்ளடக்கியது. இது முந்தைய 12 மாதங்களில் கிட்டத்தட்ட 1.24 மில்லியனை விட 37% குறைவு என்று பிரித்தானிய உள்துறை அலுவலக தரவு தெரிவிக்கிறது. இந்த சரிவு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட இடம்பெயர்வு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும். இதில் வெளிநாட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வருவதற்கான தடை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பில் £38,700 ஆக கூர்மையான உயர்வு ஆகியவை அடங்கும். https://athavannews.com/2025/1430791- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.