Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆஸ்திரேலியாவின் மிதக்கும் காடு: ஒரு தனித்துவமான இயற்கை அதிசயம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோம்புஷ் விரிகுடாவில், உலகின் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் ஒளிச்சேர்க்கை நிலப்பரப்புகளில் ஒன்று அமைந்துள்ளது: இயற்கையால் "மிதக்கும் காடாக" மாற்றப்பட்ட ஒரு பழைய நீராவி கப்பல் SS Ayrfield. 1911 இல் ஐக்கிய இராச்சியத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், 1912 இல் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக, இது ஒரு சரக்குக் கப்பலாகவும், இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பசிபிக் பகுதியில் உள்ள நேச நாட்டுப் படைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
  2. இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும். Anbu Raj @goshan_che 😂
  3. 2006 டிசம்பர் 15 இல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாகவே இன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் குழு 2006-2009 காலப்பகுதிகளில் அரசின் தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். திருகோணமலையில் வர்ஷா என்கிற 6 வயதுக் குழந்தையின் கொடூர மரணம் இன்னும் நினைவிருக்கிறது. 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கண்கள், வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகின்றார் இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பொலீசாரால் கொல்லப்படுகின்றார்கள், இவர்களின் பூரணமான விசாரனை நடத்தியிருந்தால் இதன் சூத்திரதாரியை அன்றே கைது செய்திருக்க முடியும். பிள்ளையானை இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இயக்கியது என்பதை சனல் 4 உறுதிப்படுத்தியது. பல கொலைகள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன. ஆனால் இவற்றை இயக்கிய இதன் பின்னணியில் இருந்த மஹிந்த தரப்பு இது தொடர்பாக விசாரிக்கப்படுமா? அதே போல் இன்று கைது செய்த குற்றம் இடம்பெறும் போது மஹிந்தவோடு JVP அரசில் அங்கம் வகித்தது. அதற்கான பொறுப்புக்கூறலை நேர்மையாக செய்ய முடியுமா ? எங்களால் என்றுமே மறக்க முடியாத வர்ஷாவின் உடல் கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் பார்த்த இடம் இதுவே. Malaravan Uthayaseelan
  4. ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் இருந்தபோதிலும், தவறான நிர்வாக முடிவுகளால் நட்டத்தைச் சந்திக்கும் முன்னணி அரச நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த அரசாங்கம் இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க எடுத்த தீர்மானத்தை மாற்றியமைத்து, தற்போதைய அரசாங்கம் அதை தேசிய விமான சேவையாக தொடர்ந்து செயற்படுத்தவும், புதிய நிர்வாகத்தின் கீழ் இலாபகரமான நிறுவனமாக மாற்றி, முன்னோக்கிக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளது. தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1427979
  5. சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கிய தகவல். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு 8 மணியளவில் அவரது கட்சி அலுவலத்திலேயே இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான மு. பால சுகுமாரை கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கடத்திய ஆயுதக் கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது. அதற்கமைய, உபவேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பில் இருந்து தமது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. உபவேந்தருக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு, தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்ததுடன், சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனினும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்த உபவேந்தர் காணமலாக்கப்பட்டிருந்தார். பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிள்ளையானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரினாலேயே குறித்த பேராசிரியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, தொடர்;ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே நேற்று இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்றிரவு பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1427995
  6. காற்று, சோலார் மின் உற்பத்தியில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா! கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு உலகின் 3வது பெரிய நாடாக மாறியது. புவி வெப்பமயமாதல் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்சார உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் கடந்த ஆண்டு அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டது. 2024ல் இந்தியா காற்று மற்றும் சூரிய சக்தி மூலமாக 215 (TWH) டெராவாட் ஹவர்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்த உற்பத்தித்திறன் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் தாமதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும் அதிவேகத்தில் மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில் முதல் இடத்தில் இருக்கும் சீனா 1826 (TWH டெராவாட் ஹவர்ஸ்யும், 2வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 757 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும் உற்பத்தி செய்துள்ளன.கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 22 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த எம்பர் எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குனர் மெக்டொனால்ட் கூறியதாவது: உலகளாவிய சூரிய மின் உற்பத்தி மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1427921
  7. சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது. பெப்ரவரி 19 அன்று அதன் மிக அண்மைய உச்சத்தை விட குறியீட்டெண் இப்போது 18.9% குறைவாக உள்ளது. கடந்த புதன்கிழமை ட்ரம்பின் கட்டண அறிவிப்பிலிருந்து S&P 500 நிறுவனங்கள் பங்குச் சந்தை மதிப்பில் 5.8 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்தித்துள்ளன. இது 1950 களில் அளவுகோல் உருவாக்கப்பட்டதிலிருந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட மிக ஆழமான இழப்பாகும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைச் சுற்றி ட்ரம்ப் அமைத்து வரும் நாடு மற்றும் தயாரிப்பு சார்ந்த வர்த்தகத் தடைகளை பேச்சுவார்த்தை மூலம் குறைக்கத் தயாராக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் உலகளாவிய சந்தைகள் முன்பு இலாபத்தைப் பதிவு செய்தன. மேலும், வரிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே புதன்கிழமை (09) காலை ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை பரந்த அளவில் விற்பனையைக் கண்டது. மேலும் பிற ஆசிய சந்தைகள் சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருந்தன. நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார். திட்டமிட்டபடி, நாடுகள் சார்ந்த 50% வரையிலான கட்டணங்கள் கிழக்கு நேரப்படி (0401 GMT) நள்ளிரவு 12:01 மணிக்கு அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது. கடந்த வாரம் பீஜிங் அறிவித்த எதிர் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் அதன் இறக்குமதிகள் மீதான வரிகளை 104% ஆக உயர்த்தியுள்ளதால், அந்த வரிகள் சீனாவிற்கு மிகவும் கடுமையாக இருக்கும். அதேநேரம் சீனா, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, இறுதிவரை போராடுவதாக சபதம் செய்துள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டோம் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1427982
  8. கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427955
  9. அனுர திசநாயகக்க… ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, கிழக்கு மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில்… பிள்ளையானிடம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் முன்பே கடுமையான தொனியில் கூறி இருந்தார். அந்தச் செய்தி யாழ். களத்திலும் வந்திருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்ற பின்…. பிள்ளையான் தலைமறைவாகி இருந்தமையும், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும்… சில செய்திகள் வந்திருந்தது. பின் பிள்ளையான் அசட்டு துணிச்சலில் வெளியே தலை காட்ட ஆரம்பித்து, அண்மையில் “கிழக்கு மாகாண தமிழ் கூட்டமைப்பு” என்ற கட்சி ஒன்றை… கருணா, வியாழேந்திரன் ஆகியோருடன் ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப் பட்டுள்ளார். வியாழேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் உள்ளார். தொடர்ச்சியாக கருணாவும் கைது செய்யப்படலாம். இப்போ… பிள்ளையானுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
  10. அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார். தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.
  11. ஒரு அதிகாரியின் தவறான செயலால், பல ஏழை விவசாயிகள் பாதிக்கப் பட்டமை பெரும் சோகம்.
  12. தேஷபந்து தென்னகோன் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! ”கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென” முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமர்ப்பித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427961 ################### #################### ######################## Update :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்! தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. Athavan NewsUpdate :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான...தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
  13. சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது! தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1427973
  14. தவிடும், புண்ணாக்கும் கொண்டு போய் கொடுக்கலாம். பசு… சந்தோசப் படும். 😂 🤣 இலங்கையிலேயே மூன்று கன்று ஈன்ற… தமிழ்ப் பசுவிற்கு வாழ்த்துக்கள். 👍🏼 🐄 🥰
  15. வியாழேந்திரனுக்கு… சனி மாற்றம் போட்டு, சிப்பிலி ஆட்டுது போலை. 😂 கையுக்கு எட்டினது, வாய்க்கு எட்டவில்லை. பிள்ளையான், கருணாவுடன் கூட்டுச் சேர்ந்த நேரம் சரியில்லை. 🤣
  16. புத்தன்… சரியாக சொன்னீர்கள். எந்த விடயத்தையும் சூட்டோடு செய்யாமல் ஆறப் போட்டதால் வந்த வினை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.