Everything posted by தமிழ் சிறி
-
ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!
ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது. கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதேவேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1458633
-
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு! ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார். பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன. மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன. ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458630
-
அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!
அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா! கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார். இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது. இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார். இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார். மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது. இதேவேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458627
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
- கருத்து படங்கள்
- சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு! வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். https://athavannews.com/2026/1458531- வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை! வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458491- நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்! நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458518- திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி! தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (06) உறுதி செய்தது. நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 ஆவது நாளாக விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் உத்தரவில், அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – என்று தெரிவித்தனர். https://athavannews.com/2026/1458522- போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு! வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார். அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார். அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர். அவர் கணுக்கால்களில் விலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிற சிறைச்சாலை உடையுடன் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதிதான் என்று 63 வயதான மதுரோ ஒரு மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் வலியுறுத்தினார். விசாரணைகளின் பின்னர் வழக்கு மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கே சில மைல்கள் தொலைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அங்கு ஒரு டஜன் நாடுகள் அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு குற்றத்தை” கண்டித்தன. மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறினார். உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதம், சதி, கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். https://athavannews.com/2026/1458497- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
- கருத்து படங்கள்
- புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து!
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து! திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் , புதிய கல்வி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு இணையாக இந்த புதிய முறைக்கு மாணவர்களை பழக்கப்படுத்துவதற்கான திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பெற்றோர்களுக்கும் இது குறித்த அறிமுகத்தை வழங்குவதற்கான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடத்தெரிவுகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 7,181 பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஊடாக 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, புதிய பாடத் தொகுதிகளுடன் (Modules) தொடர்புடைய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு தற்போது பயிற்சிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக, இந்த புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1458331- ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை!
ரஷ்ய எண்ணெய் கொள்வனவு; இந்தியாவுக்கு ட்ரம்ப் சூசகமாக மீண்டும் எச்சரிக்கை! ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், அதன் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (04) ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அவர்கள் ( இந்தியா) எங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை நாங்கள் அதிகரிப்போம். இந்தியா எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மோடி அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவர்கள் வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம் – என்றார். கடந்த ஆண்டு, ட்ரம்ப் தனது வரி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீத அபராதத்தையும் விதித்தார். சில வகைகளில் மொத்த வரிகளை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த நடவடிக்கை புது டெல்லிக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் கூர்மையான சரிவுக்கு வழிவகுத்தது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய சில வாரங்களுக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய அச்சுறுத்தல் வந்துள்ளது. இந்த உரையாடலின்போது, இரு தலைவர்களும் தொடர்ச்சியான வரி பதட்டங்கள் இருந்தபோதிலும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தங்கள் பகிரப்பட்ட முயற்சிகளில் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இரு நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் வரி முட்டுக்கட்டையைத் தீர்க்கும் நோக்கில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தையைத் தொடங்கிய அதே நாளில் அவர்களின் உரையாடல் நடந்தது. வரி முட்டுக்கட்டையைத் தீர்க்க இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன, அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீதான அதிக இறக்குமதி வரிகளைத் தடுக்க வொஷிங்டன் கடுமையாக அழுத்தம் கொடுக்கிறது. எனினும், நாட்டின் விவசாயம் மற்றும் பால் துறைகளைப் பாதுகாப்பதில் புது டெல்லி உறுதியாக உள்ளது. https://athavannews.com/2026/1458370- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை (Nicolás Maduro) அமெரிக்கா கைது செய்ததன் பின்னர், புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்ததால் வாரத்தின் முதல் நாளான திங்கள் (05) வர்த்தகத்தில் தங்கத்தின் விலைகள் உயர்ந்தன. திங்கள் GMT 05.08 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1.8% உயர்ந்து 4,406.77 அமெரிக்க டொலர்களாக இருந்தது. பெப்ரவரி விநியோகத்துக்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 1.9% அதிகரித்து 4,413.40 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. வெனிசுலாவில் நடந்த நிகழ்வுகள் பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவையை மீண்டும் தூண்டிவிட்டுள்ளன, முதலீட்டாளர்கள் புவிசார் அரசியல் அபாயங்களிலிருந்து பாதுகாக்க முயற்சிப்பதால் பயனாளிகளிடையே தங்கம் மற்றும் வெள்ளி அதிகரித்துள்ளது என்று KCM வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டரர் கூறியுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் 2025 ஆம் ஆண்டில் சாதனை உச்சத்தை எட்டின, பின்னர் ஆண்டின் கடைசி சில நாட்களில் விலைகள் குறைந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா மதுரோவைக் கைது செய்தது – இது 37 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா படையெடுப்பிற்குப் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் வொஷிங்டனின் மிகவும் சர்ச்சைக்குரிய தலையீடாகும். துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வொனிசுலாவின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். எனினும், மதுரோ தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பார் என்றும் அவர் கூறினார். புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதக் குறைப்புக்கள், வலுவான மத்திய வங்கி கொள்முதல்கள் மற்றும் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளுக்கான முதலீடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, கடந்த ஆண்டு தங்கத்தின் 64% ஆதாயங்களுக்கு பங்களித்தன. இது 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வருடாந்திர ஆதாயமாகும். இது 2025 டிசம்பர் 26 அன்று $4,549.71 என்ற சாதனை அளவை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (05) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 359,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 332,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1458397- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 32 கியூபர்கள்! ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது. கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது. மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. 63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர். https://athavannews.com/2026/1458356- ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு!
ஈரானில் வலுக்கும் போராட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு! ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதேவேளை,நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை இராஜினாமா செய்தார். ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். https://athavannews.com/2026/1458369- தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள் கூட்டத்துக்குள் பல்வேறு தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு உடையவர்களும் இருப்பார்கள்,அரசியல் விழிப்பு இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் அதிகம் போவான்? இறுதிக்கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தது 3 லட்சத்துக்கும் குறையாத ஒரு சனத் தொகை. மொத்த ஈழத் தமிழ் ஜனத் தொகையில் அது ஒரு சிறிய விகிதம்.ஆனாலும் முழு இனத்துக்குமான போராட்டத்தின் சிலுவையை ஒப்பிட்டுளவில் அதிகமாக சுமந்தது அந்த சிறிய சனத் தொகைதான்.அதேசமயம் ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த தமிழர்கள் அந்த காலகட்டங்களில் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்ந்தார்கள்.எனவே இறுதிக்கட்டப் போரின் போதும் தமிழ் ஜனத்தொகையில் பெரும் பகுதி போராட்டக்களத்துக்கு வெளியேதான் இருந்தது. அது தன்னுடைய வழமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தது. இது ஒரு சமூக யதார்த்தம். நோலிமிட்டுக்கு போனவர்களை தையிட்டிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுடையது;ஊடகங்களுடையது; கருத்துருவாக்கிகள்,புத்திஜீவிகள்,மதத்தலைவர்கள்,செயற்பாட்டாளர்களுடையது. தையிட்டியில் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கவனயீர்ப்பு போராட்ட வகைப்பட்டவை.அங்கே பெருந் திரள் மக்களை பெரும்பாலும் காண முடிவதில்லை.இதுதொடர்பாக முன்னணியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.எனினும் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தையிட்டி விவகாரத்தை தொடர்ச்சியாக ஏரியும் நிலையில் வைத்திருந்ததும் அந்த நெருப்பை தணியவிடாது பேணியதும் முன்னணிதான். அதேசமயம் ஏனைய தமிழ் கட்சிகளும் அந்த போராட்டத்தில் இணையும்போது அந்தப் போராட்டத்தில் அதிகரித்த மக்கள் பங்களிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. கடந்த 30 மாதங்களுக்கு மேலான காலப்பகுதியில் அவ்வாறு சில நாட்களில் அதிகரித்த தொகை மக்களை அங்கே காண முடிந்தது. அவ்வாறான நாட்களில் அது அனைத்துக் கட்சிப் போராட்டமாக,மக்கள் அமைப்புக்கள்,செயற்பாட்டாளர்கள் இணைந்த போராட்டமாக,பலமான எதிர்ப்பாகக் காணப்படுவதுண்டு. அப்படி ஒரு எதிர்ப்புத்தான் கடந்த மாத இறுதியில் கட்டப்பட்டது.அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தது விகாரை அமைந்திருக்கும் பிரதேசத்துக்குரிய உள்ளூராட்சி சபையாகும்.அந்த உள்ளூராட்சி மன்றம் அந்த விகாரைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி,அதற்காக போராட அழைப்பு விடுத்தது. அந்தப் போராட்டம் ஒரு விதத்தில் அனைத்துக் கட்சி போராட்டம்தான். வழமையாக அங்கே போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இந்தியாவில் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால், அக்கட்சியின் அடுத்தடுத்த நிலைத் தலைவர்கள்,தொண்டர்கள் அங்கே காணப்பட்டார்கள். சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் யாரும் அங்கே இருக்கவில்லை. அதுவும் தையிட்டியில் ஒப்பீட்டளவில் அதிகம் பேர் திரண்ட ஒரு போராட்டம். அப்படித்தான் நேற்று நடந்த போராட்டமும். அங்கேயும் வழமையை விட அதிக தொகையினர் வந்திருந்தார்கள். எல்லாக் கட்சிகளும் இணைந்தால், மக்கள் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்தால்,அப்படிப் பெரிய அளவில் போராட முடியும் என்பதற்கு அது ஓர் ஆகப்பிந்திய உதாரணம். இந்த உதாரணத்தைப் பின்பற்றி போராட்டத்தை மேலும் மக்கள் மயப்படுத்தினால் அதிக சனத்தொகையை கொண்டு வர முடியும். கடந்த மாத இறுதியில் நடந்த போராட்டத்தை அரசாங்கம் பலப் பிரயோகத்தின் மூலம் அடக்க முற்பட்டது. அதன் விளைவாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.அது பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியது.போராட்டம் அடக்கு முறையை வேகப்படுத்தும்.அடக்குமுறை போராடத்தைப் பலப்படுத்தும்;மக்கள் மயப்படுத்ததும். அப்படிப்பட்டதோர் பின்னணியில், நேற்றைய பௌர்ணமி நாளில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அது அதற்கு முதல் நடந்த போராட்டத்தை விடப் பெரியதாக அமையலாம் என்று அரசாங்கம் ஊகித்திருக்க முடியும். அவ்வாறு பெரிய அளவு போராட்டம் வெடித்தெழுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் தன்னுடைய முகவர்களின் ஊடாக சமூக வலைத்தளச் சூழலைப் பயன்படுத்தியது என்று காணி உரிமையாளர்களில் ஒருவராகிய பெண் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நேற்று நடந்த போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு யாழ் அரச அதிபர் காணி உரிமையாளர்களை சந்தித்தார் என்ற தொனிப்படவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.மிகத் தெளிவாகப் பேசும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம். ஏனென்றால் கடந்த 15 மாதங்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. இந்த15 மாத கால பகுதிக்குள்ளும் அந்த விகாரை தொடர்பான நிர்ணயகரமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தையிட்டி விடயத்தில் ஒரு தீர்வைத் தரும் என்று தமிழ்மக்கள் நம்பக்கூடிய விதத்தில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக முக்கிய விகாரைகளில் ஒன்று ஆகிய நைனா தீவு விகாரையின் அதிபதி போராடும் மக்களுக்குச் சாதகமாக கருத்துத் தெரிவிக்கின்றார்.சக்தி மிக்க மகாநாயக்கர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களைக் கூறுகிறார். அவருக்கும் தையிட்டி விகாரையின் அதிபதிக்கும் இடையில் ஏதோ முரண்பாடு உள்ளது என்பது ஏற்கனவே அவதானிக்கப்பட்ட ஒரு விடயம். எனினும் தமிழ்ப் பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்துக் கதைப்பது மிக அரிதான ஒரு புறநடை. “டாண்” தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் சக்தி மிக்க பௌத்த மகா நாயக்கர்களை விமர்சிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதேசமயம் அந்த நேர்காணலின் ஊடாக தெரியவந்த மற்றொரு விடயம் என்னவென்றால்,நைனாதீவு விகாராதிபதியைப் போன்றவர்களின் கருத்துக்களை பலமான மகா சங்கங்கள் பொருட்படுத்தாது என்பதுதான். இவ்வாறு பெரும்பான்மைக்குள் காணப்படும் மிகச்சிறிய சிறுபான்மை எப்பொழுதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கும். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படும் பொழுது பெரும்பான்மையின் உணர்வுகள்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த அடிப்படையில் தையிட்டி விகாரையை அகற்றும் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்காது. அப்படி எடுத்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அது வாக்குறுதி அளித்த உண்மையான மாற்றத்தை தொடக்கி வைக்கிறது என்று பொருள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.தையிட்டி போராட்டம் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. அது தனியாக ஒரு காணிப் பிரச்சினை மட்டுமல்ல. சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல. அவற்றை விட ஆழமான பொருளில் அது நிலப்பறிப்பு பற்றிய பிரச்சினை. அது அதன் இறுதி அர்த்தத்தில் ஓர் அரசியல் பிரச்சினை.எனவே அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு.அந்தத் தீர்வை முன்வைக்கத் தேவையான அரசியல் திட சித்தம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டா? தமிழ்த் தரப்பில்,அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள், அந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் எரியும் நிலையில் வைத்திருந்த அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களும் இணைந்து ஒரு கட்டமைப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். நில மீட்புப்புக்கான அந்தக் கட்டமைப்புத்தான் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.தனியே காணிச் சொந்தக்காரர்கள் அரச உயர் அதிகாரிகளோடு பேசுவதனால் அதைத் தீர்க்க முடியாது மட்டுமல்ல, அதனை வெறுமனே ஒரு காணிப் பிரச்சினையாகக் குறுக்குவதில் முடிந்து விடும். அது காணிப் பிரச்சினை அல்ல.அது இனப்பிரச்சினை.அது ஓர் அரசியல் பிரச்சினை.தனிய சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும்.இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 15 மாதங்களாக தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறியிருக்கிறது. இனப்பிரச்சினை இல்லை,இனவாதம் இல்லை என்று திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,சட்டம் சகலருக்கும் சமம் என்று கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,தமிழ் மக்களுக்கு எங்கே துலக்கமான விதங்களில் மாற்றத்தைக் காட்டியிருந்திருக்க வேண்டுமோ அங்கே அந்த மாற்றத்தைக் காட்டத் தவறியிருக்கிறது. https://athavannews.com/2026/1458301- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
நயினாதீவு விகாராதிபதி – யாழ்ப்பாண மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு! நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்றைய தினம் (04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலரிடம் தெரிவித்தார். இதேவேளை, தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு சொந்தமானவை எனவும் , அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியை தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் , தற்போதுள்ள தையிட்டி விகாரையை தன்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைந்து 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்கு தனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458296- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!
தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை! தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது. மேலும் இன்று யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458192- மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இங்குள்ள இந்துார், கடந்த ஏழு ஆண்டுகளாக துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பகிரத்புரா பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. குழாயில் கசிவு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. . பகிரத்புராவில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதும், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அதனுடன் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, அப்பகுதிகளில் அரசு சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. பிற குழாய்களில் வரும் குடிநீரை காய்ச்சி பருகவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணமான குடிநீர், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குடிநீருடன் கழிவுநீர் கலந்திருந்தது உறுதியானது. அதில், குடலில் நோய்த்தொற்று உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும், ‘விப்ரியோ காலரே, ஷிகெல்லா, இ.கோலி’ பாக்டீரியாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித் துறை மண்டல பொறுப்பாளரும், இரண்டு உதவி பொறியாளர்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக இந்த பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை மேற்கோள்காட்டி, இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458213- சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான்இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. மேலும், தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் சீனா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். தாய்வானை சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும் அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதிய ஆண்டில் அறிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். https://athavannews.com/2026/1458169- வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலாவில் பாரிய வெடிப்பு சம்பவம்- பொதுமக்கள் அச்சம்! வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (0 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. https://athavannews.com/2026/1458227 - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.