Everything posted by தமிழ் சிறி
-
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451646
-
2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது!
2025 இல் இலங்கை சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனை விஞ்சியது! இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர வருவாய் இலக்கான ரூ. 2.115 டிரில்லியனை அடையும் பாதையில் உள்ளதாக அதன்படி பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட குறிப்பிட்டார். இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசுத் துறையால் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக உயர்ந்த வரி வருவாயாகும். மொத்த வருவாயில், மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 630 பில்லியன் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆண்டு இலக்கை சுமார் ரூ. 300 பில்லியன் தாண்டும் என்று இலங்கை சுங்கத்துறை நம்பிக்கை தெரிவித்தது. https://athavannews.com/2025/1451624
-
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்
இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல். ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார். இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சர் ஜெயதிஸ்ஸ, சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அந்த சந்திப்பின் போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். “இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய நமது விசேட மருத்துவர்களிடம், இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு நான் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்தேன். தற்போது நமது சுகாதார சேவையில் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது,” என்று அவர் கூறினார். அவர்கள் இலங்கையில் பணிக்குத் திரும்பினால், அவர்களின் முந்தைய அனைத்து சேவை சலுகைகளுடன் அதே பதவிகளில் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தாம் உறுதியளித்ததாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார். https://athavannews.com/2025/1451627
-
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை! பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது. அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு பொலித்தீன் பைகளை வழங்குவதை இடைநிறுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451637
-
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள அண்மைய பதட்டங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. https://athavannews.com/2025/1451640
-
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின்றனர். இது தொடர்பில் வியாழக்கிழமை (30) பிற்பகுதியில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆண்ட்ரூ தனது ரோயல் லோட்ஜ் என்ற மாளிகையை விட்டுக்கொடுக்க முறையான அறிவிப்பு தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்குச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்ட்ரூ இளவரசராக அல்லாமல் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாகும். மன்னர் சார்லஸின் இந்த முடிவினை அவரது குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேலும் பல கேள்விகளை எதிர்கொண்ட பிறகு, ஆண்ட்ரூ இந்த மாத தொடக்கத்தில் யார்க் டியூக் உட்பட தனது பிற அரச பட்டங்களை கைவிட்டார். ஆண்ட்ரூ ஒரு காலத்தில் ஒரு துணிச்சலான கடற்படை அதிகாரியாகக் கருதப்பட்டார் மற்றும் 1980களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவுடனான பால்க்லாந்து போரின் போது இராணுவத்தில் பணியாற்றினார். ஆனால் அவர் 2011 இல் இங்கிலாந்து வர்த்தக தூதர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019 இல் அனைத்து அரச கடமைகளையும் இராஜினாமா செய்தார், பின்னர் 2022 இல் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது இராணுவ தொடர்புகள் மற்றும் அரச ஆதரவுகள் பறிக்கப்பட்டன, அதை அவர் எப்போதும் மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451614
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குக்கு சிறைத்தண்டனை
ஊரிலைதான் உழுது கொண்டு திரியிறாங்கள் என்றால், போற இடத்திலாவது அதை சுருட்டி வைத்திருக்க மனம் வருகுதில்லை இவங்களுக்கு. மொத்தமாக 17 குற்றச்சாட்டுக்களின் தண்டனையையும் மறியலில் முடித்து வர 70 வயசு பிக்கு மேலை போயிடுவார். 😂
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஏற்கெனவே... "ஆசன வாயிலில்" வைத்து தங்கம் கடத்தும் கோஷ்டிகள் தானே இவர்கள். 😂
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
பைத்தியர்... பாராளுமனத்துக்குள் நுழையும் மட்டும், கொஞ்சம் ஒழுங்காக.. மக்கள் பிரச்சினை சம்பந்தமாக அதிரடியாக களத்தில் இறங்கி குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தவர். அது தொடரும் என்ற நம்பிக்கையில்... மக்கள் வாக்களித்து அனுப்பினார்கள் என கருதுகின்றேன். அவர்.... பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளே... எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து, அடாவடி பண்ணும் போதே... அவருக்கு ஏதோ சுகயீனம் இருக்கு என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள். 🤣 இனி ஒரு தேர்தலில்... இவர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும்... எங்களது மக்களை நம்பி, எதுவும் உறுதியாக கூற முடியாது. 😂
-
தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு!
வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் வெற்றிகரமான சந்திப்பை நடத்தப் போகிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார். பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் அமர்ந்தபோது, உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது இயல்பானது என்று ஜி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ட்ரம்பிடம் கூறினார். மேலும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார். சில நாட்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒருவருக்கொருவர் முதன்மை கசப்பான விடயங்களை நிவர்த்தி செய்வதில் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டினர். இந்த முன்னேற்றத்தினால், உலகளாவிய வணிகத்தை உலுக்கிய வர்த்தக பதட்டங்கள் தணியும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், டொலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயம் கிட்டத்தட்ட ஒரு வருட உச்சத்தை எட்டியது. வால் ஸ்ட்ரீட் முதல் டோக்கியோ வரையிலான உலக பங்குச் சந்தைகள் அண்மைய நாட்களில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டித் துறைகளில் கடுமையாக விளையாடத் தயாராக இருப்பதால், எந்தவொரு வர்த்தகத் தடையும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையான உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான அரிய-பூமி தாதுக்களின் ஏற்றுமதியில் பெய்ஜிங் வியத்தகு முறையில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த மாதம் வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியது. சீன ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 100% வரிகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க மென்பொருளைப் பயன்படுத்தி சீனாவுக்கான ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சபதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451575
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
எப்படிப் பட்ட கிறுக்கன்களை எல்லாம், யாழ் மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. பெருமையாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம்... இன்று பலரின் நகைப்புக்கு இடமாகி விட்டது. இது எங்கு போய் முடியப் போகுதோ.... 😭
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும். விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும். விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது. விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும். விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. நன்றி: கூகிள்.
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார். நம்ம யாழ்ப்பாணம் இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள். Ilango Mahendra
-
கருத்து படங்கள்
- இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1451563- ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!
கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா! கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29) ஜமைக்காவில் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. இது பிராந்தியத்தில் இதுவரை அளவிடப்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாகும். அங்கு குறைந்தது ஐந்து பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெயிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர், தற்போது இரண்டாம் வகை புயலாக இருக்கும் மெலிசா புயல் அந்தப் பகுதியைக் உருகுலைத்துள்ளது. ஜமைக்காவில், மக்கள் கூரைகள் கிளித்து ஏறியப்பட்ட வீடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாமல் தீவு நாடு முழுவதும் பேரழிவனை சந்தித்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் “80-90% கூரைகள் அழிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். ஜமைக்காவின் அரச தலைவரான மன்னர் சார்லஸ், ஜமைக்காவிலும் கரீபியன் முழுவதும் மெலிசாவால் ஏற்பட்ட சேதத்தில் “ஆழ்ந்த கவலை” மற்றும் “மிகவும் வருத்தம்” அடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புயல் மண் சரிவுகளையும் ஏற்படுத்திய ஜமைக்காவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பின்னர், மெலிசா வடக்கே கியூபாவிற்கு மூன்றாம் வகை புயலாக நகர்ந்து, மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது. புதன்கிழமை இரவு, புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல் (170 கிமீ) தொலைவில் இருந்தது, மேலும் இரவு முழுவதும் பஹாமாஸ் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மெலிசா சூறாவளி மணிக்கு 100 மைல் (155 கிமீ/மணி) வேகத்தில் காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது பெர்முடாவை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகரும் முன் அங்கு ஆபத்தான புயல் அலை எதிர்பார்க்கப்படுகிறது. டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மேலும் மெதுவாக நகரும் சூறாவளியின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமைக்காவில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாட்டின் முக்கால்வாசிப் பகுதி ஒரே இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெலிசா வட அமெரிக்காவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸை நெருங்கும்போது அது இன்னும் ஒரு வலிமையான வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும். சூறாவளியின் பின்னர் தேவையின் அளவை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா ஜமைக்காவிற்கு ஒரு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக கூறியுள்ளது. https://athavannews.com/2025/1451566- ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!
ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! 2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும். அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் மாத்திரம் பாதையை விட்டு விலகி அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவருடன் இணைந்த வகையில் நிறுத்தப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்து அலாரம் ஒலி கேக்க அங்கிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றனர். பொலிஸார் , தீயணைப்பு படையினர் என அந்த இடமே பரபரப்பானது. இதை அடுத்து நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்படி அங்கு என்ன நடந்தது? அது என்ன கட்டிடம்? ஏன் இந்த விடயம் உலகம் முழுவது இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது? உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பெறுமதியான பல பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்கட்சியம்தான் பிரான்ஸ் தலைநகர் பேரிசில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகம். கடந்த 19 ஆம் திகதி இங்கு ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்த செய்தி தீயாக உலகமெங்கும் பரவியது. லூவர் அருங்காட்சியகம் ஏன் இவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது, கி.பி 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் பிலிப் எனும் மன்னன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒரு மிகப்பெரிய கோட்டையை உருவாக்குக்கிறார். ஆனால் அவருக்கு பின்னர் வந்த மன்னர்கள் அந்த கோட்டையை இடித்து மிகப்பெரிய மாளிகையை அந்த இடத்தில் உருவாக்குகின்றனர். அரசர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்ட இந்த மாளிகை, சில ஆண்டுகளின் பின்னர் கைவிடப்பட்டு வெறுமையாக காணப்பட்டது. அதன் பின் பிரான்சிய புரட்சியின் பின்னர் இந்த மாளிகை மத்திய கலை அருங்காட்சியம் எனும் பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து இன்றுவரை உலகிலேயே மிகப்பெரிய அருங்கட்சியாகமாக லூவர் அருங்கட்சியகம் காணப்படுகிறது. இதனை ஒரு சிறிய கிராமம் என்றும் சொல்லலாம். காரணம், இங்கு காணப்படும் பொருட்களை பார்வையிட நமக்கு 100 நாட்களுக்கும் அதிகமான காலம் தேவைப்படும். அந்தளவுக்கு அதிகமான பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்கள் இங்கு காணப்படுகின்றன. இங்குதான் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் காணப்படுகிறது. அதுமட்டுமா? 9000 வருடங்கள் பழமையான மனித சிலை, அரசர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள் , உலகிலேயே மிக உயரமான ஒவியம் , வைர வைடூரியங்கள் இவ்வாறு விலைமதிப்பற்ற ஏராளமான பொருட்கள் இங்குதான் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு வளமிக்க அருங்கட்சியகத்தில் ஏற்கனவே மோனலிசா ஓவியம் களவாடப்பட்டு 2 வருடங்களின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு ஒரு பெரிய கொள்ளை சம்பவம் இடம்பெறுள்ளது. ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பார்வையாளர்களுக்காக லூவர் அருங்காட்சியத்தில் கதவுகள் திறக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் மெதுவாக உள்ளே நுழைகின்றனர். இதையடுத்து அரை மணிநேரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் அந்த அருங்காட்சியத்தில் டெனோன் பிங் எனும் பகுதியில் அந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்து மெதுவாக ஒரு மின் உயர்த்தி நான்கு நபர்களுடன் மேலே நகர்கிறது. அந்த நான்கு நபர்களும் கட்டிட வேலை செய்யும் நபர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அதன்பின்னர் முதலாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கிருந்த கண்ணாடிக்கதவினை வெட்டி மெதுவாக உள்ளே நுழைகின்றனர். மெதுமெதுவாக அடுத்தடுத்த கதவுகளை உடைத்து உள் நுழைய அங்கிருந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கிறது. அங்கிருந்த பாதுகாவலர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அலாரம் அடித்த அடுத்த நிமிடத்திலேயே அந்த பகுதிக்கு சென்ற பாதுகாவலர்கள் அங்கு கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அங்கு இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனையும் அவதானிக்கின்றனர். அதன்பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசரணைகள் நடைபெறும்போது அங்கிருந்த கொள்ளையர்களின் கனரக வாகனம் தீப்பிடித்து எறிகின்றது. என்னதான் நடந்தது என பார்ப்பதற்கு பொலிஸார் அங்கிருந்த cctv காட்சிகளை அவதானிக்கின்றனர். அருங்காட்சியகத்தில் ஏற்கனவே கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெறும் நிலையில் இதனை அறிந்துகொண்டு அவர்களைப்போலவே வந்த கொள்ளையர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அரசர்களின் விலையுயர்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பி செல்கின்றனர். அவர்கள் வந்த அந்த வாகனத்தை தீயில் எறிந்துவிட்டது, இவ்வாறிருக்க எவ்வாறு அவர்கள் தப்பி சென்றனர் என்ற கேள்வி எழுகிறது? ஆம், அவர்கள் வந்த அந்த வாகனத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு தமது ஆடைகளை மாறிவிட்ட அங்கிருந்த வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுள்ளனர். அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்த 8 நகைகளை மாத்திரமே கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அதில் மூன்றாம் நெப்போலியன் மனைவியின் முத்து கிரீடம், முதலாம் நெப்போலியனின் மரகத ஆபரங்கள் என சுமார் 100 மில்லையன் அமெரிக்க டொலர் பெறுமதியான நகைகளேயே அவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சுமார் 4 முதல் 7 நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வளவு பெரிய அருங்காட்சியகம் , ஆனால் அங்கு எவ்வாறு இப்படி ஒரு கொள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கும்? அருங்காட்சியத்தில் பார்வையாளர்கள் அதிமாக இருந்ததமையினாலும் பாதுகாவலர்கள் மிக குறைவாக இருந்தமையினாலுமே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த அருங்காட்சியக நிர்வாகம் கூறுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தை பார்க்கும் பொழுது இது மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்தும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டடுள்ளனர். இருப்பினும் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட மோனலிசாவின் ஓவியம் போல கொள்ளையிடப்பட்ட இந்த நகைகளும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். https://athavannews.com/2025/1451534- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
கொழும்பு தங்கச் சந்தையில் விலை சரிவு இலங்கையில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன, நேற்று (28) உடன் ஒப்பிடும்போது 22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் இரண்டும் ரூ. 2,000 குறைந்துள்ளன. கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் இன்று (29) காலை, 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு ரூ. 294,000க்கு விற்கப்பட்டது, இது நேற்று ரூ. 296,000 ஆக இருந்தது. இதற்கிடையில், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு ரூ. 320,000 லிருந்து ரூ. 318,000 ஆக குறைந்துள்ளது. https://www.dailynews.lk/2025/10/29/admin-catagories/breaking-news/885257/colombo-gold-market-records-price-decline/?fbclid=IwY2xjawNvEztleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR4-I-RaWPkCBLMp8COQtf26cdwsbOUrOP5VReENdtRvvHq71kN8OSkTAk2cjw_aem_yK57uEQYrJt5QcGI8z46cw- ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
இலங்கைத் திருநாட்டின் பெருமைகள். தங்கமகள் மற்றும் தங்கமகன் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று வந்த முஸ்லீம் பெண்ணும், கானா நாட்டில் 50 கிலோ தங்கம் வாங்க, இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை கொடுத்து ஏமாந்த முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹிஸ்புல்லாவும். Rooban Mahan- ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா! கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. Vaanam.lk- இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!
இந்தியாவில்... கைது செய்யப் படும் இலங்கைத் தமிழர் பலருக்கும் விடுதலைப் புலி முத்திரையை குத்துவது, இந்தியாவை... பிடித்த ஒரு வியாதி. அப்படி குத்தும் போதுதான்... விடுதலைப்புலிகளால் இன்னும் இந்தியாவிற்கு ஆபத்து என்று சர்வதேசத்திற்கு காட்டவும், விடுதலைப் புலிகளை மீதான தடையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவும் அவர்களுக்கு உதவும். இப்படி பலர்... புலி முத்திரை குத்தப் பட்டு தமது வாழ்க்கையை இழந்த ஈழத்தமிழர் ஏராளம். காந்தி வேசம் போட்டுக் கொண்டு... உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நேர்மை அற்ற சகுனி நாடுதான் இந்தியா. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டதாக கூறப் பட்டு... 30 வருடங்களுக்கு மேலாக இந்திய சிறையில் இருந்து மரணித்த சாந்தன் கூட... ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் படாத ஒருவர் தான். அந்நேரம் வெளிநாடு போக இந்தியாவிற்கு போனவரை ராஜீவ் கொலையில் முடிச்சுப் போட்டு சிறையில் அடைத்த நயவஞ்சகர்கள். சாந்தன் என்ற பெயரில் உள்ள வேறு ஒருவரை கைது செய்ய வேண்டிய இடத்தில், அப்பாவியான இவரை கைது செய்து... கேடு கெட்ட வேலை செய்த நாடு தான் இந்தியா. இந்த நாடு... எப்ப சுக்கு நூறாக உடையுதோ... அன்றுதான் ஈழத்தமிழனுக்கு நிம்மதி.- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி! கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சவுதி அரேபிய பயணியைத் தடுக்க முயற்சிக்கும் பதட்டமான சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால் குறித்த சவுதி நாட்டவர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதன் விளைவாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1451471- இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451489- பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1451511- கருத்து படங்கள்
- இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.