Everything posted by தமிழ் சிறி
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
- பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது. வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துகள் தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் குறித்து வாக்குமூலமொன்றை பெற வேண்டுமென குற்றப்புலனாய் பிரிவு அழைத்திருந்தது. என்னிடம் உள்ள தகவல்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன். அமெரிக்காவில் எந்தவொரு பணியும் புரியாத பசில் ராஜபக்சவுக்கு எவ்வாறு அங்கு பாரிய அளவிலான சொத்துக்கள் இருக்க முடியும். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன. இந்த அரசாங்கம் உண்மையான ஊழல், மோசடியாளர்கள் குறித்து விசாரணைகள் செய்வதாக எமக்கு தெரியவில்லை. தற்போது பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர். அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதால் விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்க முடியும். இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை ஆரம்பித்தால் எம்மிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் அதனை வழங்க முடியும் என்றார். https://athavannews.com/2025/1415095- சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய – லடாக்கின் அதிகார வரம்புக்குட்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இதற்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பில் டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்தும் வழங்கப்பட மாட்டாது. 2 புதிய நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு ராஜதந்திர ரீதியாக சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்திய எல்லையையொட்டி, தமது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே ஒரு டிரில்லியன் யுவான் செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. எனினும் பிரம்ம புத்திரா நதிநீரைப் பயன்படுத்தும் உரிமை இந்தியாவுக்கும் உள்ளது. இதனால் சீனாவில் பாயும் அந்த நதியில் மிகப் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்தும் ராஜதந்திர ரீதியில் தங்களது கருத்துக்களையும் கவலைகளையும் சீனாவுக்கு வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1415130- தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா!
தப்பான தீர்மானத்தால் தலைகீழாக மாறிய தென்கொரியா! தென் கொரியாவின் ஒரு மாத கால அரசியல் நெருக்கடி, ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை (Yoon Suk Yeol) கைது செய்யத் தவறியதால் மற்றொரு திருப்பத்தை வெள்ளிக்கிழமை (03) கண்டது. கடந்த டிசம்பர் தொடக்கத்தில் யூனின் குறுகிய கால இராணுவ சட்ட அறிவிப்பு தொடர்பாக அவரை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர் – ஆனால் அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவுடன் மோதலில் பாதி நாள் செலவிட்டனர். இது முன்னோடியில்லாத சில வாரங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் யூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது, பின்னர் அவருக்குப் பிறகு செயல் ஜனாதிபதியாக பதவியேற்க வழிவகுத்தது. கைது செய்யப்பட்டதை எதிர்த்து நூற்றுக்கணக்கான யூன் ஆதரவாளர்கள் ஜனாதிபதி இல்லத்திற்கு வெளியே கூடினாலும், அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அதாவது, இராணுவச் சட்ட அறிவிப்பு மீதான குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாக அவரைக் கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவரது தலைவிதி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது, இது குற்றச்சாட்டு வாக்கெடுப்பை நிறைவேற்றுவதன் மூலம் அவரை பதவியில் இருந்து நீக்க வழி அமைக்கும். யூன் ஏன் இராணுவச் சட்டத்தை விதித்தார்? தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது டிசம்பர் 3 ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணி நேரம் ஆகும் – இது 1987 இல் நாடு ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து ஒருபோதும் நடக்காத விடயம். வட கொரியாவுக்கு அனுதாபம் காட்டும் “அரசுக்கு எதிரான” சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதாக யூன் கூறினார் – ஆனால் அவர் தனது சொந்த அரசியல் பிரச்சினைகளால் தூண்டப்பட்டார் என்பது விரைவில் தெளிவாகியது. 2022 மே மாதம் அவர் பதவியேற்றதிலிருந்து, யூன் ஊழல்கள் மற்றும் குறைந்த மதிப்பீடுகளை எதிர்கொண்டார். 2024 இல், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மகத்தான பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, அவர் பொம்மை ஜனாதிபதியானார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3 ஆம் திகதிக்கு சில நாட்களுக்கு முன்பு, யூனின் அரசாங்கம் முன்மொழிந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் குறைத்துள்ளன. மேலும் ஊழலில் சிக்கிய முதல் பெண்மணி கிம் கியோன் ஹீயை விசாரிக்கத் தவறியதற்காக அமைச்சரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யவும் எதிர்க்கட்சிகள் நகர்ந்தன. இந்த அரசியல் சவால்களுக்கு எதிராக, மூத்த உதவியாளர்களின் ஆலோசனையின் கீழ், யூன் இராணுவச் சட்டத்தை விதிக்க முடிவு செய்தார். ஆனால் இந்த முடிவு எதிர்ப்புகளையும் பொதுமக்களின் கோபத்தையும் தூண்டியது. இராணுவ சட்டம் விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரகடனத்தை நிராகரித்தனர். வேலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்து பலத்த பாதுகாப்பு கொண்ட தேசிய சட்டமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையவும் இது வழிவகுத்தது. அரசியல் வட்டாரங்கள் முழுவதும் உள்ள சட்டமியற்றுபவர்கள் இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் செய்தனர். அதேநேரம், பல்லாயிரக்கணக்கான மக்கள் யூனை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்து, பகல்-இரவு பாராது எதிர்ப்புக்களை வெளியிட்டனர். அடுத்து என்ன நடந்தது? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் யூனை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தனர் – அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. 300 இடங்களில் 192 இடங்கள் கைவசம் இருப்பதால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு இன்னும் எட்டு மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் யூனின் கட்சி உறுப்பினர்கள் அந்த முதல் வாக்கெடுப்பில் வரிசையாக நின்று, அதனை புறக்கணித்தனர். ஆனால் எதிர்க்கட்சியானது யூனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு வாரமும் ஒரு குற்றச்சாட்டுத் தீர்மானத்தை தாக்கல் செய்வதாக உறுதியளித்தது. அதன்படி, டிசம்பர் 14 அன்று அவர்களின் இரண்டாவது முயற்சி வெற்றியடைந்தது, யூனின் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு அமைவாக யூன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் இப்போது அவரின் எதிர்காலத்துக்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார், இது குற்றச்சாட்டு வாக்கெடுப்பில் ஆறு மாதங்களுக்குள் அரசியலமைப்பு நீதிமன்றினால் முடிவு செய்ய வேண்டும். எதிர்வரும் பெப்ரவரிக்குள் நீதிபதிகள் தீர்ப்பை வழங்குவார்கள் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். யூன் பதவி நீக்கப்பட்டால், நாடு அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும். தொடரும் அரசியல் நிச்சயமற்ற நிலை இதற்கிடையில், தென்கொரியாவில் அரசியல் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது. யூனினை அடுத்து செயல் ஜனாதிபதியாக வந்த பிரதமர் ஹான் டக்-சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார் – அவர் யூனின் பதவி நீக்க நடவடிக்கையை முடக்கியதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது. நிதியமைச்சர் சோய் சாங்-மோக் இப்போது தற்காலிக ஜனாதிபதி மற்றும் தற்காலிகப் பிரதமராக உள்ளார். பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் யூனின் ஜனாதிபதியின் உதவியாளர்கள் டிசம்பர் 3 அன்று நடந்த நிகழ்வுகளுக்காக இராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் சிலர் ஊழல் விசாரணை அலுவலகத்தால் (CIO) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இது யூன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் இராணுவச் சட்டத்தின் மூலம் கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும் விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூனும் அடங்குவார், அவர் யூனுக்கு இராணுவச் சட்ட அறிவிப்பை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. கிம் காவலில் இருந்தபோது தனது உயிரை மாய்த்துக் கொள்ளவும் முயன்றார். யூனைக் கைது செய்யும் முயற்சி தோல்வி தேசத் துரோகம் உள்ளிட்ட பல குற்றச்சட்டுகளை எதிர்கொள்ளும் யூனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பல அழைப்பாணைகள் அனுப்பப்பட்டது. எனினும், அந்த அழைப்பாணைகள் தொடர்பான யூனின் புறக்கணிப்பானது சியோல் நீதிமன்றினால் யூனுக்கு எதிரான பிடியாணை உத்தரவினை பிறப்பிக்க வழிவகுத்தது. ஜனவரி 3 அன்று, மத்திய சியோலில் உள்ள அவரது வீட்டில் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவிற்கு எதிராக சுமார் 100 பொலிஸார் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலக அதிகாரிகள் (CIO) சென்றனர். நூற்றுக் கணக்கான யூனின் ஆதரவாளர்களது எதிர்ப்பு மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு குழுவுடான மோதலின் பின்னர் இறுதியாக CIO, அதன் செயல்பாட்டை ஆறு மணி நேர முட்டுக்கட்டைக்குப் பிறகு நிறுத்திக் கொண்டது. பிடியாணை காலாவதியாகும் முன் அவரைக் கைது செய்ய ஜனவரி 6 ஆம் திகதி வரை புலனாய்வாளர்களுக்கு அவகாசம் உள்ளது – அதன் பிறகு அவர்கள் அவரைத் தடுத்து வைக்க மற்றொரு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனிடையே, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாக செயல் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார், ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அவரையும் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கலாம். தென் கொரியாவில் இது ஒரு முன்னோடியில்லாத குழப்ப நிலை ஆகும். கைது செய்யப்பட பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி யூன் ஆவார். இந்த திருப்பங்களுக்கு மத்தியில் தென்கொரிய நிதிச் சந்தைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மோசமாக எதிர்வினையாற்றியுள்ளன. தென் கொரியா உலகின் மிக முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றாகும் மற்றும் ஒரு முக்கியமான அமெரிக்க நட்பு நாடு – எனவே அதன் கொந்தளிப்பானது சர்வதேச ரீதியிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1415105- HMPV வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
HMPV வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் தொற்றுறுதியானவர்களுக்கு இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களே அதிகளவில் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. எச்.எம்.வி.பி என அறியப்படுகின்ற குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1415126- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பென்சில், பேனை, Safety pin, கோழி இறகு என்று எக்கச்சக்க ஆயுதங்கள் இருக்கு ஈழப்பிரியன். 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
திடீர் கோடீஸ்வர யோகம் தரும் சனி. அள்ளி கொடுக்கும் சனி. சுழற்றி அடிக்கப் போகும் சனி. முதல் சனியால் மாற்றம் முன்னேற்றம். ஜென்ம சனியால் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம். விஸ்வரூபம் எடுக்கும் சனி. 😂- புது வருட சிரிப்புகள்.
- கன்னியாகுமரியில் கடல் மீது இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது எப்படி?
நேற்று திறப்புவிழா. இன்று பராமரிப்பு பணி.- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது! கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டதின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன் போது போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1415074- சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
மீண்டும் சீனா வைரஸ் தொடர்பில் அவதானம்-இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம்! சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று இடம்பெறும் ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சீனாவில் HMPV (Human Metapneumo Virus) என்ற வைரஸால் சுவாச நோய் அங்கு வேகமாகப் பரவி வருவதோடு இது கொவிட்-19 அறிகுறிகளைப் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வைரஸானது 14 வயதுக்குட்பட்டவர்களை அதிகளவில் தாக்குவதாகக் கூறப்படுகிறதுட ன் இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது சீனாவில் உள்ள பல வைத்தியசாலைகள் இன்ஃப்ளூவன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொவிட் -19 நோயாளிகளால் நிரம்பியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1415049- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
- கருத்து படங்கள்
- இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!
இந்தியா சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்! திருகோணமலை முத்து நகர் விவசாயக் காணிகளை இந்திய சோலார் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் இரு போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குறித்த காணிகளை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணி என வர்த்தமாணியின் அடிப்படையில் கையகப்படுத்திய அரச இயந்திரம் தற்போது அதனை இந்தியா சோலார் திட்டத்திற்கு வளங்க திட்டமிட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷன் அக்மீமன மற்றும் சன்முகம் குகதாசன் ஆகியோரிடம் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415012- மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு!
மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு! மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார். கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 34, 35, 39, 41 மற்றும் 52 வயதுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, டீயெந்தர மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர். விபத்தின் போது, ஜி மற்றும் எஃப் விடுதிகளில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, காயமடைந்து சகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 07 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேநேரம், மேலும் மூன்று பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, தற்சமயம் எழுந்துள்ள இடவசதி நெருக்கடியால் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 55 கைதிகளை நேற்றிரவு இரவு அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414962- ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்!
ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. அவர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் – அவரது வெற்றிகரமான 2024 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான நன்கொடைகளை பில்லியனர் வழங்கினார். அது மாத்திரமல்லாது அவர் ட்ரம்பின் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் பணியையும் பெற்றுள்ளார். இதனிடையே லாஸ் வேகாஸில் நடந்த சம்பவம் ஒரு சாத்தியமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்படுவதாக மூன்று மூத்த அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், வெடிப்புக்கான காரணத்தை இதுவரை அதிகாரிகள் கண்டறியவில்லை. https://athavannews.com/2025/1414932- துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு!
துனிசியாவில் இரு புலம்பெயர்ந்த படகுகள் மூழ்கியதில் 27 பேர் உயிரிழப்பு! மத்திய தரைக்கடலை கடக்க முயற்சித்த இரு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 ஆப்பிரிக்க குடியேறியவர்களின் உடல்களை துனிசியாவின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (02) தெரிவித்தனர். ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடிக்கடி பயன்படுத்தும் புறப்படும் இடமான துனிஷியாவின் ஸ்ஃபாக்ஸ் (Sfax) நகருக்கு அப்பால் படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எனினும், இரண்டு படகுகளில் பயணித்த 87 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத இடப்பெயர்வு நெருக்கடியால் துனிசியா பாதிக்கப்பட்டுள்ளது. துனிசியர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழ விரும்பும் மக்களுக்கு இது இப்போது முக்கிய புறப்படும் இடமாக ஸ்ஃபாக்ஸ் மாறியுள்ளது. கடந்த மாதம், துனிசியாவின் கடலோரக் காவல்படை இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சுமார் 30 புலம்பெயர்ந்தோரின் உடல்களை மீட்டெடுத்தது. அவர்கள் ஐரோப்பாவை நோக்கிச் படகுகளில் பயணித்தவர்கள் ஆவர். https://athavannews.com/2025/1414955- தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்!
தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்! தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார். விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர். விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எட்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரம், விபத்தில் இருவர் உயிரிழந்ததாக புல்லர்டன் நகர பொலிஸார் உறுதிப்படுத்தினர். விபத்தில் காயமடைந்தவர்கள் விமானத்தில் இருந்தார்களா அல்லது தரையில் இருந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. நான்கு இருக்கைகள் கொண்ட ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்துக்குள்ளானதை விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்அவேர் குறிப்பிட்டது. புல்லர்டன் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் சுமார் 140,000 மக்கள் வசிக்கும் நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1414964- சிரிக்கலாம் வாங்க
நாய் கடித்து, இறந்த கோழியை... சமைத்து சாப்பிடலாமா? 😂 நாம தின்னுட்டு... மிச்சத்தை, நாய்க்கு போடுறப்போ... அதுகும் இப்பிடித்தானே நினைச்சிருக்கும். 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
மலையகத்தில்... தனியார் வாகனம் ஒன்றில் வந்த மீன் வியாபாரி, தனது கடையின் மீன் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி விட்டு செல்லும் போது, அந்த வாகனத்தை மறித்த சிலர் அக்கழிவுகளை அள்ளி அவரின் வாகனத்திற்குள் கொட்டி அனுப்பி வைத்துள்ளார்கள்.- புது வருட சிரிப்புகள்.
- உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு!
ரணில் ஆட்சியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த போது, சுமந்திரன்... தமிழரசு கட்சி தனியாக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, பிரிவை ஏற்படுத்தியவர்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.