Everything posted by தமிழ் சிறி
-
எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு
வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411918
-
SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சகதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1411921
-
அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்!
அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் நட்டஈடாக பிரதிவாதிகள் 75,000 ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதிவாதிகளில் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர். ஆசாத் சாலி 2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்காக 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த பின்னர், 2021 டிசம்பர் 2 அன்று கொழும்பு மேல் நீதிமன்றினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். https://athavannews.com/2024/1411937
-
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்!
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்! ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் (Dausa) 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கும் மேலான அதிகாரிகளின் தொடர்ச்சியான மீட்பு பணிகளின் பின்னர், கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஆர்யன் என்ற சிறுவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலிகாட் கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். மீட்புப் பணி ஒரு மணி நேரம் கழித்து தொடங்கியது. ஜேசிபி வாகனங்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் ஒரு பைலிங் ரிக் ஆகியவை மூலம் சிறுவனை மீட்பதற்காக இணையான சுரங்கப்பாதை தோண்டப்பட்டன. அதேநேரத்தில் குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது மற்றும் சிசிடிவி கமராக்கள் மூலம் ஆர்யனின் நிலை கண்காணிக்கப்பட்டன. துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சுமார் 160 அடியாக மதிப்பிடப்பட்ட நீர்மட்டம் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் பல சவால்களை ஏற்படுத்தியிருந்தன. எனினும், நீண்ட நேர போராட்டத்தின் பின்னர், மீட்புப் பணியாளர்கள் சிறுவனை சுற்றி கயிறு கட்டி மயக்கமடைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர், மேம்பட்ட உயிர் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்ட ஆம்பியூலன்ஸில் ஆர்யன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1411868
-
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது! தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ரோந்துக் குழுவினர், செவ்வாய்க்கிழமை இரவு, தண்ணிரோட்டு கடற்கரைப் பகுதியில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பைகளுடன் நடந்துகொண்டதைக் கண்டறிந்து அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சசிகுமார் (28 வயது), கோகிலவாணி (44 வயது), வேலூரில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜ்மோகன் (39 வயது), சிதம்பரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68 வயது) என பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களுக்கு படகு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த உள்ளூர்வாசிகளை தேடும் பணி நடந்து வருகிறது. பொதுவாக இலங்கைப் பிரஜைகள் புகலிடம் கோரி இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாகவும், சட்டவிரோதமாக மீண்டும் நாட்டிற்குத் திரும்புவதற்கு அரிதாகவே முயற்சிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 2019 இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடங்கியதிலிருந்து, பல இலங்கை பிரஜைகள் தனுஷ்கோடிக்கு வருகிறார்கள். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையர்களின் புகலிட நிலை குறித்து மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளது. தற்போது மண்டபம் முகாமில் 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1411844
-
400 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தாண்டிய முதல் நபரானார் எலோன் மஸ்க்!
400 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தாண்டிய முதல் நபரானார் எலோன் மஸ்க்! ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கின் (Elon Musk) சொத்து மதிப்பானது 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், வரலாற்றில் முதற் தடவையாக 400 பில்லியன் சொத்து மதிப்பினை கடந்த முதல் நபர் ஒன்ற பெருமையை எலோன் மஸ்க் பெற்றுள்ளார். SpaceX இன் அண்மைய உள் பங்கு விற்பனையானது அவரின் நிகர சொத்து மதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது அவரது செல்வத்தில் தோராயமாக 50 பில்லியன் டொலர்களை சேர்த்ததுடன் SpaceX இன் மொத்த மதிப்பீட்டை சுமார் 350 பில்லியன் டொலர்களாக கொண்டு வந்தது. இந்த மதிப்பீடு உலகின் மிக மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக SpaceX இன் நிலையை உறுதிப்படுத்துகிறது. தற்சமயம் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பானது 447 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது SpaceX பங்கு விற்பனை மற்றும் டெஸ்லாவின் பங்கு விலையில் ஏற்பட்ட ஏற்றத்தால் உந்தப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்குப் பின்னர், டெஸ்லாவின் பங்குகள் ஏறக்குறைய 65% உயர்ந்து, எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பில் பில்லியன்களைச் சேர்த்தன. ஜனவரியில் பதவியேற்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் சாத்தியமான ஒழுங்குமுறை மாற்றங்களால் டெஸ்லா பயனடைவது குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் காட்டியுள்ளனர். சுய-ஓட்டுநர் கார்களுக்கான நெறிப்படுத்தப்பட்ட விதிமுறைகள், வரிக் கொள்கைகளில் சரிசெய்தல் பற்றிய ஊகங்கள் டெஸ்லாவின் பங்கு உயர்வை மேலும் தூண்டியது. எலோன் மஸ்க்கின் SpaceX மற்றும் Tesla மட்டும் அல்ல. அவரது செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் (xAI) மதிப்பீடு கடுமையாக உயர்ந்ததும் காரணமாகும். நிறுவனம் அதிநவீன AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் உலகளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எலோன் மஸ்க்கின் நிதி சாதனைகள் அசாதாரணமானவை என்றாலும், அவர் கடந்து வந்த பாதையில் பல சவால்களையும் எதிர்கொண்டுள்ளார். டெலவேர் நீதிமன்றம் அண்மையில் 100 பில்லியன் டொலருக்கும் அதிகம் பெறுமதியான டெஸ்லா ஊதியத் தொகுப்பை நிராகரித்தது. இந்த தீர்ப்பு எலோன் மஸ்க்கிற்கு ஒரு அரிய சட்ட பின்னடைவைக் கொண்டு வந்தது, ஆனால் அது உலகின் பணக்காரர் என்ற அவரது நிலையை கணிசமாக பாதிக்க வாய்ப்பில்லை. 2024 டிசம்பர் 10 நிலவரப்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் இரண்டாவது பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸை (Jeff Bezos) விட எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 140 பில்லியன் டொலர்கள் அதிகமாக உள்ளது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து, மஸ்க் தனது செல்வத்தில் தோராயமாக 136 பில்லியன் டொலர்களை சேர்த்துள்ளார். இது உலகளாவிய பில்லியனர் தரவரிசையில் அவரது ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. https://athavannews.com/2024/1411877
-
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்!
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்! தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கானி தனது அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இவர், ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் தலிபானின் சக்திவாய்ந்த பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார். இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு பொறுப்பேற்றது. அதேநேரம், ஹக்கானி ஐஎஸ் அமைப்பின் தாக்குதலால் கொல்லப்பட்டதை தலிபான் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கலீல் ஹக்கானியின் சகோதரர் ஜலாலுதீன் 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் படையினருடன் போரிட்ட புகழ்பெற்ற கெரில்லா தலைவர் ஆவார். மேலும் தலிபான்களின் 20 ஆண்டுகால கிளர்ச்சியின் போது பல தாக்குதல்களுக்குப் பின்னால் ஹக்கானி வலையமைப்பை நிறுவினார். 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டதன் மூலம் தலிபான்கள் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் பல குண்டுவெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமையும் குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1411900
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸
-
இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து - 191 பேருடன் டச் மார்ட்டின் எயார் விழுந்து நொருங்கி ஐம்பது வருடங்கள்
இந்த விமான விபத்து நடந்த போது… வந்த செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகள் எழுதியதை, தேடி வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு. அப்போ… தொலைக்காட்சி இல்லை. வானொலியும், பத்திரிகையும் மட்டுமே. பத்திரிகையில் வரும் படங்கள் மட்டுமே… நிலைமையின் தீவிரத்தை கண் முன்னே கொண்டு வரும்.
-
இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்த படகு - மூன்று நாட்கள் கடலில் தத்தளித்த 11 வயது சிறுமி மீட்பு
இந்தச் சிறுமி, உயிர் பிழைத்தது பெரும் அதிசயம். இங்கு இப்போ குளிர் ஆரம்பித்து விட்டது. இரவில் -5 பாகைக்கு மேல் கூட காலநிலை செல்லும். அதிலும்…. தண்ணீரில், பெரும் அலைகளுக்கு மத்தியில் மூன்று நாட்களுக்கு மேல் தத்தளித்து உயிருடன் தப்பியமை அவருக்கு கிடைத்த இரண்டாவது பிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ❤️ 👍🏽
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
இந்தியா, இவற்றை கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அர்த்தம் உள்ள கருத்தோவியம்.
-
சிரிக்கலாம் வாங்க
"மூ.தேவி விலாஸ்" இட்லி கடை. எண் சாத்திரம் பார்த்து, பெயர் வைத்திருப்பாரோ. 😂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கைத்தொலைபேசி வந்த பின் தான்... இந்த மாற்றம், நிலாமதி அக்கா. சென்ற தலைமுறையின்... பாட்டி - பேரன் / பேத்தி உறவு மிகவும் உணர்வு பூர்வமானது. ❤️
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
காற்றில் பறக்கும்... கராத்தே பிக்கு.- மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம்
மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1411834- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
சபாநாயகர் பதவி... சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அவராகவே... பதவி விலகினால், கௌரவமாக இருக்கும். "ஜவ்வு" மாதிரி இழுத்துக் கொண்டு இருந்தால்.. அனுர அரசு இந்தப் பிரச்சினையிலேயே, மல்லுக்கட்ட நேரம் சரியாக இருக்கும். ஏற்கெனவே... அரிசி, தேங்காய், உணவுப் பொருட்கள் என்று... விலைவாசி உயர்ந்து மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போதாக்குறைக்கு... இதுவும் சேர்ந்தால், ரணில் பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஜப்பானிய பல்கலைகழகம் வெளியிட்டுள்ள தகவல். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல (Ashoka ranwala), ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது. இந்நிலையில், அசோக சபுமல் ரன்வால என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/speaker-ashoka-sapumal-ranwala-s-doctorate-issue-1733840862?itm_source=parsely-api- கருத்து படங்கள்
- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
- சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
இன்னுமா... இந்த உலகம், நம்மள நம்புது... ? ? ? 😂 அது... அவங்க விதி. 🤣- சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்! சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது. அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது. எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், அவரது கலாநிதி பட்டம் குறித்து விவாதம் உருவானது. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411726- கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்!
கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்! இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம் செவ்வாயன்று (10) அறிவித்துள்ளது. அதேநேரம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் (CWIT) திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமானது நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும். யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DFC) யிடமிருந்து நிதியுதவிக்கான எங்கள் கோரிக்கையை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம் என்றும் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் DFC நிறுவனம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் CWIT இன் அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் இயக்கத்திற்கு உதவியாக 553 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இத் திட்டம் 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கொள்கலன் முனையமாக இருக்கும் என்பதுடன் 1,400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டதாக அமையும். கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாகும், மேலும் இது 2021 முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான சுறுசுறுப்பான பயன்பாட்டில் இயங்கி வருகிறது. புதிய முனையம் வங்காள விரிகுடாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை பூர்த்தி செய்யும், முக்கிய கப்பல் வழித்தடங்களில் கப்பல்கள் இலங்கையின் பிரதான துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ளும். இந்த புதிய முனையத்தின் ஆண்டு பொருட்கள் கையாளும் திறன் 3.2 மில்லியன் டொலரை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411743 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.