Everything posted by தமிழ் சிறி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்னும்... தமிழ்ப் பகுதி வாக்குகள் வரவில்லையா. ஏதோ... நடக்கக் கூடாதது நடக்கப் போகுது என்று சந்தேகமாக இருக்குது. 😂 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி பையா. இப்ப கவனமாக இருக்காவிடில்... அடுத்த ஐந்து வருடத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கும். இந்த சுமந்திரன், சாரைப் பாம்பு மாதிரி.. நைசாக யாழ். மத்திய கல்லுரிக்குள் போய் விடும். உங்கடை பெடியளை... நித்திரை முழிச்சு, காவல் இருக்க சொல்லுங்கோ.
-
கொடூரன் பிள்ளையான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே குடும்பம் ஒட்டுக்குழு பிள்ளையானை பயன்படுத்தி கோரமான பல்வேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது . அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர். பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார். முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும் ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான். இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர் மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான் இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில் கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன 6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு தெரிந்தே நடந்தது 2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது. கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக பிள்ளையானையே பயன்படுத்தினார்கள் அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான் தக்க வைத்து இருக்கின்றான் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை. அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன் மற்றும் கண்ணன் ஆகியோர் சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும் 35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து இருந்தனர். இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை. அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர். மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை. அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார். மேற்படி சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும் வரிந்து கட்டி கொண்டு ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள். இனமொன்றின் குரல்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
விசுகர்... இவர்களுக்காக தரித்து நின்ற பஸ்ஸை... ஏண்டாப்பில் தவற விட்டு விட்டார்கள். இனி கைகாட்டி பிரயோசனம் இல்லை. அடுத்த ஐந்து வருடத்துக்குள்.... இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப, ஆரோக்கியமான புது முகங்களை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்னப்பா.... இன்னும் தமிழ்ப் பகுதி, தபால் வாக்குகள் இன்னும் எண்ணி வரவில்லையா? யாழ். மத்திய கல்லுரியில் வாக்கு எண்ணுகிறார்களா, நித்திரை கொள்ளுகிறார்களா. சுமந்திரனை யாழ். மத்திய கல்லுரி வளவுக்குள் கால் வைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆளை... உள்ளுக்கு விட்டால், போனமுறை மாதிரி சுத்துமாத்து பண்ணிப் போடும். கவனம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவர் என்ன வழக்கு என்றாலும்... காசு விஷயத்தில் கறாராக இருப்பார் என்று சொல்கிறார்கள். ஆரம்பத்தில், மாவை சேனாதிராசாவுக்காக வாதாடிய பொது நல வழக்கு ஒன்றில் "லம்பாக" கறந்து போட்டுத்தான் விட்டாரம். ஆன படியால்... நீங்கள் வேறை லோயரை பிடிக்கிறது நல்லது அல்வாயான். 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன்... தனது பழைய தொழிலுக்கு போக... இப்பவே வக்கீல் உடையை தூசிதட்டி, அயன் பண்ணி வைக்கிறது நல்லது. 😂 அவரின் பாராளுமன்ற கனவு... இம்முறை நக்கிக் கொண்டு போகப் போகுது. 😂
-
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு! ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறமுடியாது. எனவே, அரசாங்கம் அப்படியொரு தீர்மானத்தை அறிவிக்குமென்றால் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போமென்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1408532
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மகிந்த & Co. திருடர்களை பாதுகாத்ததற்காக, ரணிலின் தோல்வி ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்ட ஒன்று. தமது வயிற்றில் அடித்தவர்கள் மீது சிங்களவர் அவ்வளவு வெறுப்பில் இருந்திருக்கின்றார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆசை… தோசை…. அப்பளம்…. வடை. 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1)அனுர, 2)சஜித், 3) ரணில், 4)மகிந்த கட்சிகள் முன்பே எதிர் பார்த்த அளவில் வரிசைக் கிரமமாக வந்து கொண்டு இருக்கின்றது. மிகுதி எப்படி இருக்கும் என பார்ப்போம்.
-
சிரிக்கலாம் வாங்க
- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன். அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா... கள்ளா..." என கோசம் போட்டார்கள். 😂 அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது. 🤣- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
- பொதுஜன பெரமுனவுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என நம்புகின்றோம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
பொதுஜன பெரமுனவுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்றால்.... நீங்கள் ஏன், தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒழித்தனீர்கள்.- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408514 ############## ########### ############# ஆதவனின் செய்திப்படி... 59.65 வீதமாம். ஆதவன் சும்மாவே... தடுமாறும். தேர்தல் நேரம் சொல்லத் தேவையில்லை. 😂- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
யாழின் தேர்தல் நிலவரம்! யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1408514- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
நீங்கள் எழுதுங்கள் பாஸ். அப்ப தானே... எங்களுக்கும் பொழுது போகும். 😂- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
மாதிரி வாக்குச் சீட்டு அடிப்பது குற்றம் என நினைக்கின்றேன். 👇 கீழே உள்ள செய்தியில் "32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின" என்று உள்ளது.- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
கொழும்பான்... மத்திய கிழக்கில் உள்ள ஒரு நாட்டில் வேலை செய்வதாக முன்பு சொன்னவர். நீங்கள் நுணாவிலானையும், வாதவூரானையும் இலங்கையில் வசிக்கின்றார்கள் என்று சொல்வீர்கள் போலுள்ளது. சரியான வில்லங்கம் பிடித்த ஆளப்பா. 🤣- கருத்து படங்கள்
- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.