Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆசியாவில் 0.8 வீதம் என்று நாம் சந்தோசம் அடைய முடியாது. பல கொலைகள் வெளிச்சத்திற்கே வருவதில்லை. கள்ளிப்பால் கொலை, சீதன கொடுமையால் கொலைகளை.... இரண்டாம் பேருக்கு தெரியாமல் செய்து போட்டு, நல்ல பிள்ளை வேசம் போடுவார்கள். அதிக பெண், சிசுக் கொலைகள் ஆசியாவில்தான் நடந்து கொண்டு உள்ளது.
  2. நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அனுநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409944
  3. பலர் கூறும் குறைகளில் ஒன்று... இவர்களின் சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் போய் காசு எடுத்துக் கொண்டு வருவதற்குள், இவர்கள் அடுத்த தெருவுக்கு போய் விடுகின்றார்களாம். 😂
  4. சம்பந்தன்... ஒரு முறை, தமிழரசு கட்சி சார்பில்... "ஒரு தும்புக் கட்டையை" நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். தமிழ்மக்களின் வாக்குகாளால் தெரிவு செய்யப் பட்டு, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு... அந்த வார்த்தைகளை எவ்வளவு "திமிரில்" சொல்லி இருக்க வேண்டும். அதுக்குத்தான்... இப்போ மக்கள் இந்தத் தண்டனையை தந்து இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகமும், அறிக்கைகளும், செயல்களும்... மக்களை உங்களிடம் இருந்து ஆயிரக் கணக்கில் விலகிச் சென்று விடும். மக்கள் உங்களுக்கு தண்டனை தர வருடக் கணக்கில் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு... ஞாபக மறதி என்று நீங்கள் நினைக்காதீர்கள். வருகின்ற தேர்தலில்... இன்னும், மரண அடி வாங்க முதல்... உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
  5. இலங்கையின் நடமாடும் பேக்கரி.
  6. வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் இளைஞர்கள்! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக முகவர் குறிப்பட்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லையில் போருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 280க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் ரஷ்ய படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது. அவ்வாறு இணைந்துள்ள இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவரை உக்ரேன் இராணுவம் உயிருடன் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காணொளி ஒன்றும் கடந்த 21ஆம் திகதி வெளியாகியிருந்தது. இலங்கையில் உள்ள ரஷ்ய மாஃபியாக்கள், மூலமாக ரஷ்ய ராணுவத்திற்கு ஆட்கள் திரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே 6 தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரஸ்ய படைகளில் இணைக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1409819
  7. மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்! வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409858
  8. அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பித்தார். https://athavannews.com/2024/1409898
  9. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை! புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அது நிறைவேற்றப்படவில்லை. https://athavannews.com/2024/1409911
  10. வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1409886
  11. பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தினர். எனினும், பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பதை லண்டனோ அல்லது தெஹ்ரானோ வெளிப்படுத்தவில்லை. https://athavannews.com/2024/1409784
  12. சீச்சீ…. நான் அதை பெரிது படுத்தவில்லை. 😂 ஆனால்…. அடுத்த தேர்தல் மட்டும், “புஸ்பா புருசன்” என்ற மாதிரி… பையனிடம் தோற்றவர் என பெயர் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 🤣
  13. டக்ளசுக்கு உள்ள கெட்டித்தனம்…. பிள்ளையானிடம் இல்லை. 😂 இப்ப நாங்கள், பிரதேசவாதம் கதைக்கின்றோம் என்று ஒரு குரூப் வரும். எஸ்கேப்பு. 🤣
  14. 60 கேள்விகளுடன்... போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவிற்கும், பல சிக்கலான, கணிக்க சிரமமான.. கேள்விகளாக இருந்தும், துணிவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அந்த 26 உறவுகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். 🙏 எனக்கு... @goshan_cheஐ @வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣
  15. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன். கழுதை தேய்ந்து, கட்டெறும்பான கதை. ஆபிரகாம் சுமந்திரன் 2015´ம் ஆண்டில் இருந்து பெற்ற வாக்குகள் 50% இறங்கு முகத்தில். ஒவ்வொரு தேர்தலிலும் 50 வீத வாக்குகள் குறைந்து கொண்டு போயுள்ளது. 2015´ம் ஆண்டு - 58,043 வாக்குகள். 2020´ம் ஆண்டு - 27,834 வாக்குகள். 2024´ம் ஆண்டு - 15,039 வாக்குகள்.
  16. மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு அமைச்சர் சந்திரசேகரனை மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால் அர்த்தம் மாறு பட்டிருக்கலாம். அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது ஏற்புடையது அல்ல. இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான புரிதலால்.... @colomban னுக்கு ஏற்பட்ட மனவருத்தத்துக்கு... உண்மையிலே மிகவும் மனம் வருந்துகின்றேன். 🙏
  17. அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும். அத்துடன் அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை. எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” இவ்வாறு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409743
  18. வரலாறு படைத்த மேக சூரியாராச்சி! வியட்நாமில் அண்மையில் இடம்பெற்ற ‘Mr World 2024′ போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேக சூரியாராச்சி (Megha Sooriyaarachchi) மக்களின் விருப்பத் தேர்வு விருதினை வென்றுள்ளார். இலங்கையின் கலாசாரத்தை பெருமையுடனும், அழகுடனும் வெளிப்படுத்தியமைக்காக ‘தேசிய ஆடைக்கான மக்கள் தெரிவு’ விருதினையும் அவர் வென்றுள்ளார். இதேவேளை இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக சூரியாராச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409750
  19. கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர். திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது. விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர். மேலும், பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், கட்டமைப்பின் ஒரு முனையில் தடுப்புகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர். https://athavannews.com/2024/1409765
  20. சுயேச்சை குழு - 17 அர்ச்சுனா - 20,487 வாக்குகள். கௌசல்யா - 15,789 வாக்குகள். தமிழரசு கட்சி. சிவஞானம் சிறிதரன் - 32,833 வாக்குகள். ஆபிரகாம் சுமந்திரன் - 15,039 வாக்குகள்.
  21. முதல் நாள்... பாராளுமன்ற அமர்வின் அமளியின் பின், அர்ச்சுனா அமைதியாக இருக்கின்றார் போலுள்ளது. புலி... பதுங்குவது, பாய்வதற்காகவோ. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.