Everything posted by தமிழ் சிறி
-
முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது !
பத்தரமுல்ல சீலரத்ன தேரரருக்கு... யாழ்ப்பாணத்து வாக்குகளும் வேணுமாம். 😂 பிற்குறிப்பு: பழைய படம். புதிய கருத்து. 🤣
-
87 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 6000 மணிநேர அந்தரங்க வீடியோவுடன் சிக்கிய டாக்டர்
இந்த 6000 மணித்தியால வீடியோவை, ஒரு நாளைக்கு 8 மணித்தியாலப்படி பார்த்தாலும்… முழுவதையும் பார்த்து முடிக்க, 750 நாள் எடுக்கும். 😂 கிட்டத்தட்ட…. இரண்டு வருசம் வீடியோ பார்க்கிறதிலேயே போயிடும். 🤣
-
கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
குடிகாரர், சைக்கிள் ஓடுவதற்கான வீதி. 😂- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
10 லட்சம் முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்று வந்த இந்த அரசாங்கம், முஸ்லீம்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை இப்போதே ஆரம்பித்துள்ளது.- புலிகளின் தலைவர் படம் மறைப்பு!
புலிகளின் தலைவர் படம் மறைப்பு! வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் போது அங்கு வந்த வல்வெட்டித்துறை காவல்துறையினா் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும், புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துங்கள் எனவும் அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் பதாகையில் இருந்த புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை மறைத்து விட்டு பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பாக கொண்டாடினார்கள். https://athavannews.com/2024/1410277- 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!
07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை! 2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இதன்படி, சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் உயர் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் தமது சட்டத்தரணி ஊடாக இது தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்த நிலையில் இவ்வாறு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1410249- உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி!
உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி! முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். கிய்வில் உள்ள எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மாத்திரமான உக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்த எரிசக்தி கட்டமைப்புக்கு எதிரான 11 ஆவது பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் இது நாடு தழுவிய மின் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனின் எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னேவின் மேற்குப் பகுதிகளில் பெரிய மின்தடை ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410246- டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
ஒராள்... குடை பிடித்துக் கொண்டு நிற்க, மாவை Football விளையாடுகிறார். எல்லாம்... விசர் முத்தின கூட்டங்கள். 😂 🤣- கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy- வடக்கு கிழக்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான செய்திகள்
மட்டக்களப்பில்... ஆற்றில், "ரிக் ரொக்" வீடியோ எடுக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி இறப்பு. 4 பேர் உயிருடன் மீட்பு.- எச்சரிக்கை; இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!
தாழமுக்கத்தின் தற்போதைய நிலைமை இது வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவிலே கரையைக் கடக்கும் இலங்கையில் மழையுடனான காநிலை நீடிக்கும் கரையை கடக்கும் வரை இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது. AB Amam- உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
அந்த மாணவர்களை பாடசாலையில் தங்க வைத்து, வெள்ளம் வடிந்த பின் அனுப்பி இருக்கலாம். நிலைமையின் தீவிரத்தை ஒருவரும் சரியாக கணிக்கவில்லைப் போலுள்ளது.- கருத்து படங்கள்
- இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர். ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷ கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மௌனம் சாதிக்கிறது. ராஜபக்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை. தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை புலிகளின் தலைவர் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும். இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410186- டக்ளஸ் கண்ணில் படும்வரை பகிரவும்
போகிற போக்கில்... அடுத்த தேர்தலிலும் யாழ். மாவட்ட ஆறு தொகுதிகளையும் அனுர கட்சி அள்ளும் போல் தெரிகின்றது. பாரம்பரிய தமிழ் கட்சித் தலைவர்கள், மழையில் நனைந்தால்... தடிமல், இருமல் பிடித்துவிடும் என்று யோசிக்காமல், தெருவில் இறங்கி... மக்களின் குறையை கேளுங்கப்பா.- பாகிஸ்தானில் தொடரும் மோதல் – 76 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் தொடரும் மோதல் – 76 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது. துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள். எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது. கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, வன்முறை சம்பவத்தினால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. https://athavannews.com/2024/1410212- உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
உழவு இயந்திரத்தின் சாரதியின் உடல் இன்று காலை கண்டு எடுக்கப்பட்டதாக முகநூலில் குறிப்பிட்டு இருந்தார்கள்.- கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
அடாது மழை பெய்தாலும் விடாது அஞ்சலி செலுத்திய மக்கள். தமக்காக மரணித்த மாவீரர்களை மறக்காது நெஞ்சில் ஏந்தும் அதிசயம் இது எப்படி ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது? இது மாவீரர்கள் நிகழ்த்தும் அற்புதம் இன்றி வேறு என்னவாக இருக்கும்? தோழர் பாலன்- இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லை. சுட்ட தோசையை... அந்தக் கதிரையில் இருந்துதான் சாப்பிடுறது. 😂- வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்துவிட்டார்கள் என்றவர்களுக்கு தெளிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது. இனியாவது இலங்கை இந்திய அரசுகள் இதனை புரிந்து கொள்ளுமா? தோழர் பாலன் அவர்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை மாறாக தமிழ் தேசிய வியாபாரிகளை தோற்கடித்துள்ளனர். Suganthan Karalasingam- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
வெட்கம் கெட்டவன், மானத்தை வாங்குகிறான். அக்கவுண்டனாக... கனடாவில் வேலை செய்து கொண்டு, இரட்டை குடியுரிமையும் வைத்துக் கொண்டு... பெண்ணின் கைப்பையை களவெடுக்க எவ்வளவு... பஞ்சப் பரதேசியாய் இருந்திருக்க வேண்டும். களவெடுத்த காசில்.. 9 விஸ்கிப் போத்திலும் வாங்கி இருக்குது இந்த எருமை. ஒரு ஆள்... சுங்கப் பகுதியால் இரண்டு போத்தில்தான் கொண்டு போகலாம் என்று நினைக்கின்றேன். இது 9 வாங்கி இருக்குது என்றால், இதன் நினைப்பு என்னவாக இருந்திருக்கும். நாயை... குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், நக்கித்தான் குடிக்குமாம். தரித்திரம் பிடித்தவனுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை ஒரு கேடு. த்தூ... 😡- இரசித்த.... புகைப்படங்கள்.
தோசை சுடும் கதிரை. 😂- இன்று மாவீரர் தினம்!
- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.