Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
-
நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று!
நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. அதேநேரம், பொதுத் தேர்தல் தொடர்பான உத்தரவுகளை அமுல்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2024/1404283
-
அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்; 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு
இணையத்தில் நிதி மோசடி; மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது! இணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. 04 மலேசிய ஆண்களும், 03 எத்தியோப்பிய ஆண்களும் ஒரு பெண்ணும், ஒரு கென்யா பெண்ணும், ஒரு சீனா ஆணுமே இவ்வாறு கைதானவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1404290
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சீனாக்காரன்…. இந்திய எல்லைப் பகுதிகளில் புதிய குடியிருப்புக்களை அமைக்கின்றானாம். 😂 தனது கொல்லைப் புறத்தில் நடப்பதை தடுக்க வழி இல்லை, தாய்வான் பிரச்சினையில் அக்கறை செலுத்துது இந்தியா. 🤣
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
சுமந்திரனிடம் எந்த ஒரு நிரந்தர கொள்கையும் இல்லை. தனது பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேணும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டிருக்கும் மனோ வியாதி கொண்ட ஆள். அவர் இருக்க வேண்டிய இடம் அங்கோடை வைத்தியசாலை. 😂
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
நீங்கள்…. தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இந்தியாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லி, சுமந்திரனின் தான் தோன்றித்தனமான செய்கைகளை நியாயப் படுத்தப் படுத்துவது… உங்களை நீங்களே ஏமாற்றுவதற்கு சமனானது. பிரிந்தவர்கள் எல்லோரும் இந்திய விசுவாசிகள் அல்ல. சுமந்திரனின் கடந்த கால செய்கைகளே… அவரை பலரும் எதிர்க்க முக்கிய காரணம். போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் இருந்து அவரின் பல செய்கைகள் அரசை காப்பாற்றுவதாகவே இருந்துள்ளதை யாழ்.கள செய்திகளை தேடி வாசித்தீர்களானால் சுமந்திரன் எப்படிப் பட்ட வஞ்சகர் என்பது புரியும். சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வதை… பெருமையாக பீத்திக் கொண்டு திரிந்தவர் தமிழரசு கட்சியிலேயே இருக்க லாயக்கு இல்லாதவர்தான் சுமந்திரன். தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த தமிழரசு கட்சியின் அடிப்படை கொள்கைகளை சிதைக்காமல், சிங்கள கட்சியில் இருப்பதே சுமந்திரனின் கொள்கைக்கு நல்லது.
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
உண்மைதான் பாஞ்ச் அண்ணை. சீனாக்காரன் நோபல் பரிசு வென்றதாக நினைவு இல்லை. சில வேளை அவர்களின் வெளிப்படைத் தன்மையற்ற செயல்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நோபல் பரிசு கொடுப்பதிலும்… முகமன் பார்த்து கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. ஏனென்றால்…. பராக் ஒபாமா பதவிக்கு வந்து மூன்று மாதத்திற்குள் ஒன்றும் சாதிக்க முதலே, அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை கொடுத்து இருந்தார்கள்.
-
தற்போது தண்டனையே தரமுயர்த்தும் நாட்டை!
அனுர அரசில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையேல்… எந்த அரசிலும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. கவிதைக்கு நன்றி கோபி.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இவர்களின் கட்சி… உள்ளூர் பிரச்சினைகளில் மக்களோடு முன் நிற்பதால், அந்த ஆதரவு வாக்குகளாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகளையும் மறுக்க முடியாது நிழலி. இவர்களின் கட்சிக்கு ஓரு இடம் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
தமிழரசு கட்சி… வேட்பாளர் தெரிவில் கோட்டை விட்டு விட்டார்கள் போலுள்ளது. ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கியுள்ள இவர்கள், இதிலாவது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
நன்றி. அனைவரின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை மகிழ்ச்சி.- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இவர்களே… ஆறு இடத்தையும் எடுத்தால், தமிழரசு கட்சியை எரிக்கிறதா, புதைக்கிறதா… என்ற நிலைமை நெருங்கி விட்டது போலுள்ளது. 😂 இப்போது களத்தில் இறங்கியுள்ள அர்ச்சுனா போன்ற புதிய முகங்களும், தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களும்…. தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் இருந்தே தமது வாக்கை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, தமிழரசு கட்சி மரண அடி வாங்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அதில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பிலை. அத்துடன் அனுர அலையும்… வடக்கு, கிழக்கில்… புதிதாக கிளம்பியுள்ளதால், தமிழரசுக் கட்சி தூக்கி வீசப்படும். எல்லாவற்றுக்கும் அந்த உளறுவாயன் சுமந்திரனும், கொம்பு சீவி விட்ட அல்லக்கைகளும் தான் காரணம். 🤣- ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
தவளையும் தன் வாயால் கெடும். அதுகும் மூன்று நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி குறுகிய கால கெடுவை… அரசாங்கம் விதித்துள்ளது. மாட்டிக் கிட்டாரு மைனரு… 😂 🤣- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
ஆனால் என்ன செய்வது…. வெட்கம், சூடு, சுரணை, மானம், மரியாதை இல்லாததுகள்… பின் கதவாலைதான் பாராளுமன்றத்துக்குள்ளை போகப் பார்க்கும். இந்த முறையாவது திருந்தி இருக்கின்றார்களா என பார்ப்போம்.- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
சி. கிருஷ்ணவேணி என்பவர் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.- இரசித்த.... புகைப்படங்கள்.
சொக்லேட் ஐஸ்கிறீம். 😂- இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
நேற்று பிரான்ஸ் பாரிசில் உள்ள, ஈபிள் கோபுரத்துக்கு அருகில் உள்ள புல் வெளியில்... ஹிந்தி எழுத்துக்களுடன் உள்ள பான்பராக் பையும், சிவப்பாக எச்சில் துப்பியிருந்த படத்தையும் போட்டிருந்தார்கள். 😂 அகலக் கால் பதிக்கும் இந்தியா. 🤣- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
நான், "உமி" கொண்டு வாறன். நீங்கள், "அரிசி" கொண்டு வாங்கோ. இரண்டையும் ஒன்றாக கலந்து... ஊதி, ஊதித் தின்போம். - ஆபிரஹாம் சுமந்திரன்.-- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி" சாப்பிடுவனாம். உங்களுக்கு நான் "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே... - ஆபிரகாம் சுமந்திரன்.-- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
உங்கள் பேரன் நிலனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். "நிலன்" சுருக்கமான நல்ல தமிழ்ப் பெயராக உள்ளது. நீங்களா... அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுத்தீர்கள்.- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
சுமந்திரன்... முதலில் தமிழ் அரசியலில் இருந்து, விரட்டி அடிக்கப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 💪 வரும் தேர்தலுடன்... சுமந்திரனை, பல்லுப் புடுங்கின பாம்பாக... பெட்டிக்குள் சுருண்டு படுக்க விட வேணும். 😂- இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
இந்தியா வந்து கிட்டத்தடட, சுமந்திரன் மாதிரி.... 😂 🤣 ஒருவரையும் அனுசரித்து போகத் தெரியாது. சொல்லும், செயலும், சிந்தனையும்.... மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலேயே இருக்கும். 😎 - அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
Important Information
By using this site, you agree to our Terms of Use.