Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. திருகோணமலையில்... அனுர கட்சி சார்பாக கேட்கும் தமிழர் ஒருவருக்கு அதிக ஆதரவு உள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால்... தமிழரசு கட்சி தனது பெயரை "ரிப்பேர்" பண்ணி வைத்திருக்கு. வேணுமென்றால்... ஒன்று கிடைக்கலாம். மற்றது அனுர கடசிக்குத்தான் என்பது எனது ஊகம். தமிழரசு கட்சி அந்த ஒன்றுக்கே... தலையால் தண்ணி குடிக்க வேண்டி வரும். 😂
  2. காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்கள் ஏன் இங்கு வருகை தந்தீர்கள் என்று கேட்கும் போது தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். அத்துடன் அழைப்பது நல்லது விடையம் என்றும் நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதற்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பொறுப்போடு பதில் வழங்கிவிட்டு வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1405507
  3. ஆசை, தோசை, அப்பளம், வடை.... நீங்கள் இரண்டு தொகுதிகளை பெற்று பாராளுமன்றம் என்ன செய்ய உத்தேசம். வழமை போல்.... கன்ரீன் சாப்பாடு சாப்பிட ஆசை விடுகுதில்லை. நீங்கள் செய்யிற வேலையாலை, திருகோணமலை இந்த முறை உங்களுக்கு இல்லை.
  4. விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405484
  5. வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், உண்மைகளை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இன்று தீர்ப்பளித்தது. அதேநேரம், அவரது வேட்பு மனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1405411
  6. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது . இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபரின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வசந்த கர்ணகொடவுக்கு எதிரான மூவரடங்கிய உயர் நீதிமன்றக் குழாம் முன்னிலையில் விசாரணை நடத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது. இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு தலைமை நீதிபதியினால் ஐந்து பேர் கொண்ட மேன்முறையீட்டு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405408
  7. தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரட்டன்! அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் வளைகுடா பகுதிக்கு செல்வத‍ை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் எடுத்துள்ளனர். அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அறுகம்பை வளைகுடா மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்யும் பிரபலமான இடங்கள் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக கிடைத்த தகவல்கள் அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார். கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே பொதுமக்கள் எத்தகைய அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1405367
  8. 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405370
  9. இலங்கையிலுள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை! அறுகம்பை வளை குடாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து, இலங்கையிலுள்ள ரஷ்ய பிரஜைகளை அவதானமாக இருக்குமாறும், அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதகரம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய இராச்சியம் அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்ட அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே ரஷ்ய தூதகரத்தின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannews.com/2024/1405373
  10. சும்முக்கு... மனித நேயமாவது, மண்ணாங்கட்டியாவது. 😎 சிங்களத்தின் அதிரடிப்படையுடன் ஊருக்குள் 32 பல்லையும் காட்டிக் கொண்டு வலம் வந்து பந்தா காட்டுவதற்காக, தன்னை கொல்ல சதி என்று.. ஊனமுற்ற முன்னாள் போராளிகளை மீண்டும் சிறையில் அடைக்க எந்த மனிதனாவது யோசிப்பானா? பெரும்பாலான கள்வர்கள்... சாகும் மட்டும் கள்ளக் குணத்துடனேயே இருப்பார்கள். 😂 அதுகள்... திருந்துறது எண்டால், கல்லில் நார் உரிக்கிறதுக்கு சமன். 🤣
  11. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1405377
  12. "கெடு குடி சொல் கேளாது." சுமந்திரனை... தமிழரசு கட்சியில் கொண்டு வந்து சேர்த்த, சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் கூட... சுமந்திரனால் அவமானப்பட்டு நொந்து போனதுதான் மிச்சம். அதிலை ஒருத்தர் செத்துப் போனார், இன்னொருத்தர் ஆஸ்பத்திரியிலை படுத்து கிடக்கிறார். யமனை... பச்சடி போட்ட ஆள்தான், சுத்துமாத்து சுமந்திரன்.
  13. பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்று வரை... இலங்கையின் கடவுச்சீட்டு மாறிய விதம்.
  14. பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்-அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு! அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது அத்துடன் அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1405325
  15. ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன! பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald’s Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று (22) தெரிவித்தனர். இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் தொடங்கியது – இதுவரை 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது. கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அயோவா, கன்சாஸ், மிசோரி, மொன்டானா, ஓரிகான், உட்டா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொற்று பரவலுக்கு காரணமான பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிய துரித உணவு உணவகம் புலனாய்வாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. எவ்வாறெனினும், செவ்வாய்கிழமை வெளியான செய்தியை அடுத்து நியூயோர்க் பங்குச் சந்தையில் மெக்டொனால்டின் பங்குகள் சுமார் 9% சரிந்தன. Escherichia coli Escherichia coli (E. coli) என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். ஈ. கோலையின் பெரும்பாலான திரிவுகள் பாதிப்பில்லாதவை மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன, சில தீவிரமான உணவுப்பழக்க நோயை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், செப்சிஸ், நிமோனியா மற்றும் பிற நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொண்ட பிறகு இந்த நோயால் பாதிக்கப்படலாம். அதாவது வேகவைக்கப்படாத மாட்டிறைச்சி, பச்சை பால், அன்பேஸ்சுரைஸ்டு (unpasteurized) ஜூஸ் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொண்ட அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் இந்த தொற்று அடிக்கடி ஏற்படுகிறது. https://athavannews.com/2024/1405344
  16. வீட்டிற்குள் விஷப் பாம்பு நுழைந்தால்... பெரிய கொட்டன் தடி எடுத்து... அடித்துக் கொன்று, மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த வேண்டும். 😂 மாறாக.... அதற்கு பால் ஊற்றி கொஞ்சிக் கொண்டு இருந்தால்... மற்ற ஆட்களையும் அந்த விஷப் பாம்பு கொத்தி, மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்தும். நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், விஷப் பாம்பை ஒழிக்க வேண்டும் ஆகவே, தாமதிக்காமல்... அந்தப் பாம்பை அடித்து விரட்டுங்கள். 🤣
  17. மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர். ஏராளன்... மீனுக்கு, முதல் கொடுத்த 5,000 பொற்காசுதான் மனம் மகிழ்ந்து கொடுக்கப் பட்டது. மிகுதி 10, 000 பொற்காசும், முதலில் போன 5,000 பொற்காசை திருப்பி எடுக்க மகாராணி போட்ட திட்டத்தால் இழந்தவை. 😂
  18. மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்தப் பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான். இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள். வாய் உள்ள பிள்ளை.. எங்கும், எப்படியும் பிழைத்துக் கொள்ளும். தென்றல் கவி , Creativity பிருந்தாவனம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.