Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மகிந்த, கோத்தா, ரணில் ஆட்சியில்…. போதை கும்பல்களிடம் இருந்து கைப்பற்றிய கஞ்சாவை மீண்டும் சந்தையில் விற்பனைக்கு விடுவதும், வாள் வெட்டு கோஷ்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அதுகள் செய்யும் அட்டகாசங்களை கண்டு கொள்ளாமல் இருந்ததும் இந்த கேடு கெட்ட போலீஸ்தான்.
  2. கவலையான செய்தி. அநியாயமாக இறந்த 29 உயிர்கள். இப்பிடியான சன நெரிசல் மிகுந்த இடங்களுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்வதை தவிர்த்திருக்க வேண்டும். இறந்தவர்களுக்கு அஞ்சலிகள்.
  3. காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=819010344143838 👈 யூடியூப் சமையல் பரிதாபங்கள்😁🤣
  4. காகத்துக்கு... கனவிலையும், "பீ " தின்னுற நினைப்புதான். இந்தியனுக்கு.... நெடுகவும், விடுதலைப் புலிகள் நினைப்புதான். ஏனென்றால்.... அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய ராணுவத்துக்கு, விடுதலைப் புலிகள் கொடுத்த அடியை... ஜென்மத்துக்கும் மறக்க மாட்டாங்கள்.
  5. பாஞ்ச் அண்ணே..... உடலில் எவ்வளவு துர்நாற்றம் வீசினாலும், எல்லாவற்ரையும் ஒரே அமுக்காக அமுக்கி, நறுமணம் வீச செய்வது, Statement parfum. 😂 இந்தப் போத்தலை நீங்களும் வாங்கிப் பாவித்தால்... குளிக்கவே மனம் வராது. 🤣
  6. உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் இறுதி அஞ்சலி! குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த புதன்கிழமை நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் உயிரிழந்தனர். இதில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் உள்ளடங்குவதுடன் மேலும், சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இப்பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். https://athavannews.com/2025/1448715
  7. சாத்தான்... ஜேர்மனியில் தண்ணிப் பஞ்சம் வர சந்தர்ப்பமே இல்லை. பெரும்பாலான ஊரை சுற்றி, நதிகள் ஓடிக் கொண்டே இருக்கும். எனக்கு சோம்பேறித்தனம் என்றும் சொல்ல முடியாது. எப்பவும், ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். முக்கிய காரணம்.... அந்த சிவன் கோயில் சாத்திரியார்தான். அவர்தான்... என்னை பயப்பிடுத்தி வைத்திருக்கிறார். 😂
  8. மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்! மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் அங்கு ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. கழகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. https://athavannews.com/2025/1448699
  9. சுவைப்பிரியன்... மாங்காய் - மிளகாய்த்தூள் மிக்சிங் மருந்தை குரங்குகளுக்கு வைத்து.... எவ்வளவு வெற்றியளிக்குது என்று எமக்கும் அறியத் தாருங்கள்.
  10. @குமாரசாமி //மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄// வாற கிழமை... உங்களுடைய அந்த பொன்னான ஐடியாவை கேட்க ஆவலாக உள்ளேன். 🙂 ஏனென்றால்.... குரங்குகளின் தொல்லை பெருந் தொல்லையாக கிடக்கு. 🤥 ஒரு குரூப் வந்தால் காரியமில்லை. கருங்குரங்கு, செங்குரங்கு, மந்தி, ஒரங்குட்டான், கொரில்லா என்று... பன்றி போலை கூட்டமாக வருகுதுகள். அதுகளை பிடித்து.... யாழ்ப்பாண முறையில் நலம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று திட்டமும் இருக்கு. 😂
  11. இலங்கையில் நிற்கும் போது…. ஒரு உணவகத்தில் வெள்ளை குழல் புட்டும்…. வெங்காயம், நெத்தலி போட்டு பொரித்து எடுத்த பிரட்டல் கறியும் சாப்பிட்டேன். 👍🏽 ஆஹா…. அப்படி ஒரு சுவையான உணவாக இருந்தது. இதற்கு முன் அந்தச் சுவையில் நெத்தலியை சாப்பிட்டதே இல்லை. இப்ப நினைத்தாலும் அந்த வாசனையும், சுவையும் மறக்க முடியாதது. இதனை சாப்பிட என்றே… மீண்டும் ஒருக்கால், ஶ்ரீலங்காவுக்கு விமான ரிக்கற் போட்டு போக வேண்டும் போல் உள்ளது. 🙂
  12. அனுரா… புராணம் தூக்கலாக இருக்கு. 😂 உங்களுக்கு…. ஶ்ரீலங்காவிற்கு கொலிடே போற ஐடியா இருக்குப் போலை. 🤣 பிற் குறிப்பு: பகிடிக்கு எழுதியது. யாரும் இதனை சீரியசாக எடுக்க வேண்டாம். 😜
  13. இந்த முன்னாள் நீதிபதிப் பெண்மணி… தனது சட்டத்தரணி கணவரின் தவறான வழிகாட்டலில் வழங்கப் பட்ட நீதி தவறி ஒரு தலைப் பட்சமாக வழங்கிய தீர்ப்புகளுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இனி யார் நீதியை பெற்றுக் கொடுப்பது. அல்லது…. தலை விதியே என்று இருப்பதா. அரசே… முன் வந்து, அவர்களுக்கு தகுந்த நீதியை பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே பாதிக்கப் பட்டவர்கள் தமது தரப்பு சட்டத்தரணிக்கு பணம் கொடுத்து வாதாடியும்…. நீதிபதியின் கீழ்த்தரமான செய்கையால், நொந்து போய் உள்ளவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கவோ அல்லது மீண்டும் சட்டத்தரணி பிடித்து பணம் செலவழித்து வாதாடி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க விடுவது சரியல்ல.
  14. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்…. பெண் இருப்பாள். 🙂 ஒரு பெண்ணின் தோல்விக்குப் பின்…. ஆண் இருப்பான். 😂
  15. 5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்.. 1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும். 2. 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். --- 2. மசாலா நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். 2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும். 3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். 4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். --- 3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 கருவேப்பிலை – 1 கைப்பிடி மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும். 2. மீனை அதில் ஊறவைக்கவும். 3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும். 4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார். --- 4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy) பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – ஆழ்வறுக்க செய்முறை: 1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும். 2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும். 3. சூடாக சாப்பிட அருமை. --- 5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் கொத்தமல்லி இலை – ½ கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிதளவு பூண்டு – 4 பல் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். 2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். 4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  16. ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார். அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 👩‍❤️‍💋‍👨பேசும் கவிதைகள்💞 Tamil Kavithai ·
  17. ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார். https://athavannews.com/2025/1448672

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.