Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!
தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1453164- ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை!
ஜப்பானில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 கட்டிடங்கள் தீக்கிரை! தெற்கு ஜப்பானிய கடலோர நகரமான ஒரு பகுதியில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் எரிந்தும் இன்னும் முழுமையாக அணையவில்லை என்று தேசிய தீயணைப்பு நிறுவனம் புதன்கிழமை (19) தெரிவித்துள்ளது. டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 770 கிமீ (478 மைல்) தொலைவில் உள்ள ஒய்டா நகரின் சாகனோசெக்கி மாவட்டத்தில் சுமார் 175 குடியிருப்பாளர்கள், செவ்வாய்க்கிழமை மாலை 5:40 மணியளவில் (0840 GMT) தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரகால தங்குமிடத்திற்கு ஓடிவிட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453180- கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.- இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
நானும் எத்தனையோ டொல்பின் சம்பந்தப் பட்ட காணொளிகளை பார்த்துள்ளேன். எந்த ஒரு இடத்திலும் டொல்பின்கள் மனிதருடன் ஆக்ரோசமாக நடந்ததில்லை. மாறாக நன்றாக பழகிய நண்பன் மாதிரியே சுற்றிச் சுற்றி வரும். அவசியம் என்றால்… மனிதனுக்கு உதவியும் செய்யும். சரியான தகவலுக்கு நன்றி. 🙂- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
பிக்குகளுக்கும், சிங்களவனுக்கும்.... காணித் தகராறு. 😂 🤣 காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1161288572801711 👈 வெல்லவாய பிரதேசத்தில் பாலர் பாடசாலை நடத்தபடும் இடம், கிங்கினி ராஜ விகரைக்கு சொந்தமானது... அதை தாருங்கள் என உரிமை கோரி அங்கு வருகை தந்த பிக்குகள்!! இடத்தை தரமுடியாது என விவாதித்த பாலர் பாடசாலை உள்ள பிரதேசத்தை சேர்ந்த கிராமவாசிகள்!!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடன் பாக்கி வைக்காதீர். காரணம்.... 👆- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
திருமலையில் அடாத்தாக சிலை வைத்த பிக்குகளுடன் முன்னணியில் நின்ற இனவாதிக்கும், நாமலுக்கும்... 21 ஆம் திகதி நடக்கவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்கும் உள்ள தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது என்பதற்கான ஆதாரம். மட்டக்களப்பு மண்வாசம்- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
- இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
டொல்பின்னால்... பெண் கொல்லப் பட்டதை, இப்போதான் முதன் முதலாக கேள்விப் படுகின்றேன்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
பிரயோசனமான நல்ல ஒரு வேலை ஒன்றை செய்துள்ளீர்கள், நிழலி. 🙂 👍- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
பெடியன் ஹெல்மெட் போட்டுள்ள படியால்... அவரின் மோட்டார் சைக்கிளில், இவவின் ஆட்டோவை திரத்திக் கொண்டு வந்து வழி மறித்து இருக்கலாம். அந்த நேரம் இவ ஆட்டோவை நிறுத்தவும், அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இவவிற்கு கிட்ட வரும் நேரத்தில்... எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு வீடியோவை ஓட விட்டிருக்கலாம். பெடியனுக்கு அனுபவம் காணாது. வெள்ளைத் தோலை கண்டவுடன் சொக்கிப் போய் விட்டான். 🤣 காணொளி ஓடிக் கொண்டு இருக்கின்றது என்பதை, அவர் பொம்பிளை சுதியிலை, கவனிக்காமல் விட்டு விட்டார். அந்தக் கைத்தொலை பேசியை இவ தனது கையில் வைத்திருக்கவில்லைத்தானே. அது ஒரு மூலையில் சிவனே என்று, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தது. அதனை இவர் கவனிக்க சந்தர்ப்பம் குறைவாகவே இருந்திருக்கும். 😂- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
நாடே தேடிய சந்தேகநபரை பிடிக்க உதவிய இறக்குவானையின் புதல்வி! பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து இறக்குவானையில் கல்வி பயின்று இறக்குவானையின் புதல்வி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் பொலிஸ் அதிகாரியான விது. அவரது சேவை குறித்து, பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடக அறிவித்துள்ளார். சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுத்தது எமது இறக்குவானை புதல்வி விதுஷாஞ்ஜனி (விது). இது எமது இறக்குவானை மண்ணுக்கு பெருமை. முருகானந்தம், Suguna Suguna ஆகியோரின் அன்பு மகளே விதுஷாஞ்ஜனி (விது). பதிவு - சிரேஷ்ட ஊடகவியலாளர் Ranjan Arun Prasadh Malayaga Kuruvi- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 அவர் ஓடிக் கொண்டு இருக்கும் ஆட்டோவின் வலது பக்க மேல் மூலையில், Navigation, Google Map போன்றவை பார்ப்பதற்காக பொருத்திய கைத்தொலைபேசியில்... சந்தேகத்துக்கு இடமான ஒருவர் வழி மறிக்கும் போது, உசாராகி வீடியோவை ஓட விட்டிருக்கலாம். மொத்தத்தில் இப்படியான இடங்களில் தனியே சுற்றுபவர்கள்... உசார் பேர்வழிகளாக இருப்பார்கள்.- யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி. 🙏- இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.- யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா” நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453092- இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
வெள்ளைக்காரிக்கு... அந்தரங்க உறுப்பை காட்டியவர், மொட்டை அடித்து... தனது முக அடையாளத்தை மாற்றியும் பயனில்லை!! கண்டு பிடித்து விட்டார்கள். 😂 குட் லக், நெக்ஸ்ட் ரைம்.- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
இது பங்களாதேஷில் இல்லை...! நேற்று இரவு ஜனாதிபதி அனுர திசாநாயக்கவால் ஆனந்த விஜேபால மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆரிய பௌத்த மகன்கள்.. சீக்கிரம் குணமடையுங்கள் முதலாளி! Dulara Gunathilake திருகோணமலையில்... முதல் நாள், பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப் பட்ட போது... ஏற்பட்ட தள்ளுமுள்ளில், தமக்கு பொலிஸார் அடித்து விட்டதாக கூறி... இரண்டு புத்த பிக்குகள் வைத்தியசாலையில் தாமாகவே போய் படுத்துக் கொண்டார்கள். அதற்கு, மேலுள்ள சிங்களவரும் வேறு சிங்களவர்களும் இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்துக்களை பகிர்ந்து வருவதில் ஒன்று உதாரணத்துக்கு மேலே உள்ளது.- கருத்து படங்கள்
- திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
- திருக்கோவில் வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
- பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!
பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில சங்கங்கள் விவாதங்களில் ஈடுபடாமல் புறக்கணித்தன என்றும் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சுச் செயலாளர் நளக்க கலுவெவ கூறுகையில், அனைத்துச் சங்கங்களையும் பலமுறை அழைத்தும் சில பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்காமல் விலகிச் சென்றதாகவும், இது தங்கள் தரப்பில் உள்ள குறைபாடு அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், 200,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் தனித்தனியாக விவாதிப்பது சாத்தியமில்லை என்ற போதிலும், மாகாண மற்றும் வலய மட்டங்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தில் ஆசிரியர்களுடன் இந்தச் சீர்திருத்தங்கள் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். https://athavannews.com/2025/1453080- இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!
இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளின் தலைவர்கள் வரவு செலவு திட்டம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களைத் தயார் செய்துவருக்கின்றனர். குறிப்பாக, வரவிருக்கும் வரவு செலவு திட்டம் வருமான வரி விலக்குகளை முடக்குவது குறித்து பற்றி ஒரு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுக்க உள்ளார். https://athavannews.com/2025/1453088 - தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.