Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர் சிறையில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகள் வந்துள்ளன. அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரிகள், அவரைச் சந்திக்கக் கோரி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் – நோரீன், அலீமா மற்றும் உஸ்மா – அரசியல் தலைவர் அடியாலா சிறைக்குள் “கொடூரமாக தாக்கப்பட்டதாக” குற்றம் சாட்டினர், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்துள்ளனர். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2023 முதல் சிறையில் உள்ளார். Athavan Newsஇம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்- ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1453973- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
மேற்கு… என்றுதான் உண்மையை சொல்லியிருக்கு. இப்போது, எந்த ஊடகமும் நடுநிலையான செய்திகளை வெளியிடுவது இல்லை.- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
வளர்ப்பு அப்பிடி. தாய், தகப்பனுக்கு பாராட்டுக்கள். 😂 கு.சா. ஒரு கிழமைக்கு இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். 🤣- பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!
பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி! பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து, பின்னர் ஆன்லைன் நட்பை வளர்த்துக் கொண்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் நட்பு வளர்ந்த பின்னர், 24 வயதான இலங்கை மாணவி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான நம்பிக்கையை மாணவி பெற்றதால், அவர்கள் வீடியோ அழைப்புகள் மூலம் உரையாடலைத் தொடங்கினர். இந்த வீடியோ அழைப்புகளின் போது, தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர் தனது அனுமதியின்றி ரகசியமாக பதிவு செய்ததாக இலங்கை மாணவி தனது பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார். தனது தனிப்பட்ட வீடியோக்களை எடுத்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் டிஜிட்டல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு ஈடாக பணம் கோரியுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1453940- பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?
2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும், விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
- எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 ❤️- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
மீண்டும்... அகில இலங்கை தலைப்பு செய்தியாக, சாவகச்சேரியான்ஸ். @குமாரசாமி எங்கிருந்தாலும், உடனடியாக மேடைக்கு வரவும்.- காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது! சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே அந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1453908- கருத்து படங்கள்
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா….. 😂 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
கரட் சாப்பிட்டால், கண் தெரியும். முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரணிலுக்கு... ரவுசர் தைக்கின்ற, ரெய்லர்... யார் என்று அறிய ஆவல். 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
நான்கு வருடத்தை நெருங்குகின்ற இந்தப் போர்... ட்ரம்பின் பொதியுடன், முற்றுப் பெற்றால் மகிழ்ச்சி. 🙂- தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை! கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 21ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் என பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர். குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மக்களின் எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகையை நடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனை மீறி தொல்லியல்திணைக்களம் பெயர்பலகையினை நாட்டிச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மாலை பெயர்ப் பலகை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றியுள்ளனர். போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அதனை அகற்றியிருந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன. 22ஆம் திகதி இந்த செயற்பாடு மேற்கொள்ளும் போது இரவு நேரம் ஆனதை தொடர்ந்து பெயர்பலகைகள், அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றையதினம் அதாவது 23ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையிலேயே இந்த சம்பவம் இன்றைய நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் பேர்து பேசுபொருளாக விவாதிக்கப்பட்டிருந்தது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1453759- கருத்து படங்கள்
- இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்!
இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453670- பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்!
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் பதிலடி கொடுத்து, வளாகத்திற்குள் இருந்த மூன்று தாக்குதல்காரர்களை சுட்டுக் கொன்றனர். இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453698- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு! ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான அமெரிக்க முன்மொழிவைப் பற்றி விவாதித்த பின்னர் மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே அவர்கள் வழங்கினர். இந்த திட்டம் மொஸ்கோவிற்கு மிகவும் இணக்கமானதாக இருப்பதாக வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பலரிடையே கவலையைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மிகக் குறைந்த தகவல்களையே அவர் வழங்கினார். இந்தத் திட்டத்திற்கு உக்ரேன் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் குறைத்து மதிப்பிட்டார். அதிகாரிகள் விரைவில் மோலை நிறுத்தப்படுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும், அதிகாரிகள் திங்கள்கிழமை (24) மற்றும் அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் கூறினார். உயர் மட்ட அதிகாரிகள் இறுதியில் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் வரையப்பட்ட 28-புள்ளி திட்டம் உக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தனது நாடு தனது இறையாண்மை உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் அதற்குத் தேவையான அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு கடுமையான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர், தனது மக்கள் தங்கள் வீட்டை (நாட்டை) எப்போதும் பாதுகாப்பார்கள் என்றும் சபதம் செய்தார். ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக நிராகரித்த பல ரஷ்ய கோரிக்கைகளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்கிறது, இதில் பெரிய பகுதிகளை விட்டுக்கொடுப்பதும் அடங்கும். அதேநேரம், முன்னதாக, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு வியாழக்கிழமை காலக்கெடுவை ட்ரம்ப் நிர்ணயித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூபியோ அந்த காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினார். இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஜெலென்ஸ்கி இந்த வாரம் விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1453677- திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
தொண்டைமானுக்கு.... யாருடன் ஜாலியாக இருப்பது, யாரை திருமணம் செய்வது என்பதில்... கொஞ்சம் கவனமாகவே இருந்திருப்பார். ஏனென்றால்... அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். வரும் வாரிசையும் சிந்தித்து இருப்பார். 😂- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
செலென்ஸ்கி மைண்ட் வாய்ஸ்: "எப்பிடி இருந்த நான், இப்பிடியாயிட்டேன்". 🤣- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அருமையான கருத்தோவியம். வேறை லெவல். 😂 - இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.