Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ட்றம்பின் உயிருக்கு ஆபத்தா? ஏனெனில்… சூடு விழுந்த இடம் ஆபத்தான இடமாக தெரிகின்றது.
  2. சம்பந்தனை யாழுக்கு கொண்டு வந்து அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம். சுமந்திரன் முன்னுக்கு நின்றால், ஒருத்தனும் வரமாட்டான் என்டது தெரிஞ்ச விசயம் தானே. Malaravan Uthayaseelan
  3. என்னுடைய நன்மைக்காக... பயத்தம் பணியாரத்தை ஏன் வெளியே எடுத்தார்? அப்பிடி... அதாலை, எனக்கு என்ன நன்மை வரப்போகுது. ச்ச்சீய்ய்.... கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போச்சே.... பயித்தம் பணியாரம் சாப்பிடாமல், பயித்தியம் பிடிக்கப் போகுதே...
  4. உண்மை விசுகர். ஈழப் போராட்டத்தின் போதும் பல தகவல்களை வலிய சிங்களவனுக்கு கொடுத்து உதவியது எமது சில ஊடகங்களே. சில விடயங்களில்... தேவையற்ற விசயங்களை தொடாமல் செய்தி எழுதுவதே... தரமான ஊடகமாக இருக்க முடியும். இப்போ ஊடகங்கள் பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். சமூக அக்கறை என்பது, பெரும்பாலானவர்களிடம் அறவே இல்லை.
  5. வெளிநாட்டவர்களுக்கான விசா விநியோகத்தில் சிக்கல் – ஹர்ஷ டி சில்வா! வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதால், விலைமனுக்கோரல் விடயத்தினை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அரச நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச நிதி தொடர்பான குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஆனால் அந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை. மாறாக ஜி.பி.எஸ் என்று கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு கூட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாக்கியமை தொடர்பில் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதாகவும், இவ்விடயம் குறித்து அரச நிதி தொடர்பான குழுவில் விசாரணைகளை மேற்கொண்ட போது பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் விசா கட்டணம் குறித்து பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாகவும், ஒரு இடத்தில் 18.5 டொலர் என்றும் பிறிதொரு இடத்தில் 7.2 டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், இந்த செயற்திட்டம் 200 மில்லியன் டொலர் முதலீடு என்று அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், முன்னெடுத்த விசாரணைகளில் 200 மில்லியன் டொலர் அல்ல 200 மில்லியன் ரூபா என்று கூட குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். தரவுக் கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு உண்டு என்றாலும், இரகசிய தரவுகள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1392078
  6. http://athavannews.com/wp-content/uploads/2024/07/vikatan_2023-02_e988d095-9de1-4cb2-92be-384b493128f7_Fn4rLbEaMAAGidW.avif தமிழகத்துக்கு தண்ணீா் இல்லை – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்! காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் திகதி வரை திறந்துவிட வேண்டும் எனவும், பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. எனினும், காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த அறிவிப்பிற்கு கர்நாடக விவசாய சங்கத்தினரும், கன்னட அமைப்பினரும் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். குறித்த கூட்டத்தில், துணை முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததுடன், காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. குறித்த கூட்டத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1392093
  7. பல்லி.... நோ சான்ஸ். 😃 ஏனென்றால் மூட்டைப் பூச்சி ஒளியிற இடத்துக்குள் பல்லி நுழைய முடியாது. 😂 மூட்டைப் பூச்சிக்கு இயற்கை சாவுதான் போலை கிடக்கு. 🤣
  8. மூக்கில் சவ்வு வளர்ந்து ஒரு அறுவைச் சிகிச்சை செய்தது. இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂
  9. 🛑1.சாவகச்சேரி ஆசுப்பத்திரியில் 400 மில்லியன் ரூபாவில் கட்டின building project இல் ஊழல் நடந்திருக்குமா? இல்லையா? நடந்திருக்கும்! நடந்திருக்கு எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑2.சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பிணத்தை வைச்சு JMOs காசு கறந்திருக்கிறாங்களா? இல்லையா? கறந்திருப்பாங்கள்! காசு கறந்தவங்கள் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑3.பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதா? இல்லையா? செய்யப்பட்டது! விற்கப்பட்டது , அதுக்கும் கேதீஸ்வரனுக்கும் சம்பந்தம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑4.அரச வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒரு சில வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருந்துகொண்டு, வராத நாளுக்கும் சம்பளம் எடுத்துக்கொண்டு அதே நாளில் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினமா? இல்லையா? செய்யினம்! 8மணித்தியாலம் ஒரு சில வைத்தியர்கள் வேலை செய்வதில்லை. களவா போய் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑5.ஒரு சில வைத்தியர்களுக்கும் pharmacy கடைகளுக்கும் தொடர்பு இருக்கு.சட்டவிரோதமாக Commission வாங்குகினமா? இல்லையா? வாங்குகினம்! வாங்குகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑6.ஒரு சில அரசியல்வாதிகள் பிழையாக நடக்கும் அரச வைத்தியர்களை தங்கள் அரசியல் செல்வாக்கால் காப்பாத்துகிறார்களா? இல்லையா? காப்பாத்துகினம்! ஒரு சில அரசியல்வாதிகள் தவறுசெய்த டாகுத்தர்மாரிடம் லஞ்சம் பெறுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑7.அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அபிவிருத்தி நிதியை ஒழுங்கா கையாளத்தெரியாமல் பல மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப்படுகிறதா? இல்லையா? அனுப்பப்படுகிறது! ஒழுங்கான திட்டமிடலும் project management உம் இல்லை எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑8.medical marfia வடக்கில் தலைவிரித்தாடுகிறதா? இல்லையா? ஆடுது! Medical Marfia வை ஒழிக்கவேணும் எண்டால் முதல்ல அடிப்படையில் ஆசுப்பத்திரியில் இருந்து ஆரம்பிப்பம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑9.நோயாளர்களை தகாத வார்த்தைகளால் சில வைத்தியர்கள் ஏசுகிறார்களா? இல்லையா? ஏசுகினம்! முறைப்பாடு செய்தால் courts case எண்டு அலையவேண்டி வரும் என சனத்தை ஒரு சில வைத்தியர்கள் வெருட்டுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑10. கடைசியா ஒரு கேள்வி... டாக்குத்தர் சத்தியமூர்த்தி, டாக்குத்தர் கேதீஸ்வரன், சாவகச்சேரி மரண விசாரணை வைத்திய அதிகாரி,Jaffna JMO சேர் பிரணவன் உட்பட இன்னும் சில ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிப்பாட்டி நீதியான விசாரணை செய்யோணுமா? இல்லையா? செய்யோணும்! நீதியான விசாரணைக்குழு ஒண்டு அமைச்சு எல்லா ஊழல்களும் விசாரணை செய்யவேணும் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை ஊழல்களை பாத்துக்கொண்டிருக்கிற நாங்கள் லூசா? #தமிழ்ப்பொடியன்#
  10. நோர்வே வெள்ளைப்புலி... எரிக் சோல்கைமே போர் முடிந்து 15 வருசமாகியும் இங்கு நிற்கும் போது... இந்த மனிசியும் நிற்கத்தான் பார்க்கும். 😂 சிங்களவன் அந்தளவுக்கு.. குழையடிச்சு வைத்திருக்கின்றான். எங்களுக்கு ரெக்னிக் சுட்டுப் போட்டாலும் வராது.
  11. ஹி...ஹி... ஹீ.... இது, திராவிடியன்சுக்கு கிடைத்த வெற்றி. 😂 🤣
  12. உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார். ஒஸ்ட்ரியாவுக்கு (AUSTRIA) விஜயம் செய்திருந்த போது , அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதனை தொடர்ந்து ஓஸ்திரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். அப்போது, “பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது” என்று மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391849
  13. ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் – நிறுவனத்துக்கு சீல் ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு பொலிஸார் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதலில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1391626
  14. உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அதிகளவான வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், உக்ரேனுக்கு முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, இந்த போரில் உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்த போரில் ரஷ்யா தோல்வியடைந்து வருவதாகவும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விளாடிமர் புட்டினின் இந்த விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உக்ரேன் – ரஷ்ய போரில் 3½ இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது எனவும், உக்ரைனே வெற்றி பெறும் எனவும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1391843
  15. டுபாயில் புதிய கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஆரம்பம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள். மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் தடுபாயில் இருக்கின்றன. அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை டுபாய் முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் அமைக்கப்படவுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களான தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1391856
  16. அட... இது வேறை நடந்திருக்கா. அப்ப ஆளுக்கு... முத்தீட்டுது போலை இருக்கு. ஹ்ம்ம்... பதவி ஆசை படுத்துற பாடு, வெட்கம் அறியாதது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.