Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம் AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் AKD இணையதளத்தில் தமக்கிருக்கும் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்வதற்கான AI Chat Bot உம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தளத்தின் விசேட அம்சமாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையமானது கொள்கை உருவாக்கத்திற்காக பிரஜைகளுக்கு பன்முக அணுகுமுறையை பெற்றுக்கொடுப்பதோடு, தேர்தல் அவதானிப்பு நிலையம் தேர்தல் செயன்முறைக்குள் இடம்பெறக்கூடிய அத்துமீறல்கள் தொடர்பாக முறையிடுவதற்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் பிரஜைகளுக்கு திறந்த களத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393821
  2. சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. https://athavannews.com/2024/1393818
  3. அப்படித்தான் இருக்கும். 😂 இல்லாட்டி... இவ்வளவு யதார்த்தமாக எவரும் காதல் கதைகளை எழுத மாட்டார்கள். 😍 🥰
  4. முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை இயற்கையாக நிகழுகின்றனவா அல்லது பின்னணியில் ஏதும் சதி நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை தருகின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் இவ் முன்னாள் போராளிகளின் மரணங்களுக்கு அரசே பொறுப்பு கூறவேண்டும். தோழர் பாலன்
  5. இந்த விசயத்திலை @suvy பெரிய அனுபவசாலி. கன காதலை பார்த்தவர். 😂 அவரின் அபிப்பிராயத்தையும் கேளுங்கோ ஏராளன். 🤣
  6. இதுக்கு மேல வயசுக்கு வந்தா என்ன, வராட்டிதான் என்ன..! 😂😂 இவ்வளவு காலமும், நீ உயிரோடை இருந்ததே... பெரிய விசயம். 🤣
  7. நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ஏராளன். வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல் விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂
  8. சர்வசன வாக்கெடுப்பு நடத்தும் அந்தத் துணிவு... ஒரு நாட்டிற்கும் இல்லை. சனம் வாக்குச் சீட்டாலையே.. இவர்களின் யோக்கியதையை முகத்தில் அடித்து காட்டி விடும். 😂
  9. காதலி இல்லாத ஆட்கள்.... எரிச்சலில் வாள் வெட்டு நடத்தியுள்ளார்கள் போலுள்ளது.
  10. நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு. யாழில் நாளை கறுப்பு ஜுலை நினைவேந்தலுக்கும், பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அருகில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மூன்று மணியளவில் நடைபெறவுள்ளது. உணர்வார்கள் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1393781
  11. உக்ரைனுக்கு... குடுத்து, குடுத்து... கஜானா காலி என்றால் என்ன செய்யிறது. 😂 சனங்களும் நெடுக தங்களின் வரிப்பணத்தை எவ்வளவு காலத்துக்கு கொடுக்க சம்மதிப்பார்கள். இப்பவே... பயங்கர கோபத்தில் இருக்கின்றார்கள். இந்த நிலையில்... களவெடுத்துதான் காசு குடுக்க வேணும். 🤣
  12. திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன். தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1393784
  13. உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ursula von der leyen நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,’ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க அந் நாட்டு பணத்தையே பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரெய்ன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக் கூறிவரும் உலக நாடுகள், உக்ரெய்னுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை செய்து வருகின்றன. ஆனால், சில உள்ளூர் பொருளாதார நிலைமைகளினால் அந்த நிதியை அளிப்பதில் சிரமம் ஏற்படவே, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரெய்னுக்கு வழங்கும்படி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறி வந்தனர். இந்த செயல்பாட்டுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, இந்த செயல்பாட்டினால் சொத்துக்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். இது அந்த நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393758
  14. தவறுகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை – இந்திய பிரதமர் மோடி! கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான முழுத் தகுதியுடன் இராணுவ வீரர்கள் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் தொடர்வதாகவும், கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை என்றும் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியிருந்தார். இதேவேளை, கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கார்கில் போரில் கிடைத்துள்ள வெற்றி என்பது, இந்திய வீரர்களின் துணிச்சலிலும் அசாதாரண வீரத்திலும் தங்கியுள்ளதாகவும், எனவே முழுதேசம் அவர்களுக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையடுத்து, இடம்பெற்ற போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை தனதாக்கியிருந்தது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393707
  15. அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா? பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது ஒலிம்பிக் விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393721 ############ ################# #################### #############
  16. சில தொழில்கள் எமது கையை விட்டு அந்நியரிடம் போய் விட்டது என்றால்... அதன் தொழில் நுணுக்கங்களையும், நெளிவு சுழிவுகளையும், சந்தைப் படுத்தலையும் எமது சமுதாயம் மட்டுமல்ல அடுத்த தலைமுறை கூட மீண்டும் கைப்பற்றுவது முடியாத காரியமாக இருக்கும். இதனைப் பற்றிய விழிப்புணர்வை அந்த மக்களுக்கு யார் ஏற்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. கட்டிடத் தொழில், தச்சு வேலை போன்ற நுணுக்கமான வேலைகளை சிங்களவர் எடுக்கின்றார்கள். வியாபார ஆக்கிரமிப்பை முஸ்லீம்கள் செய்வதாக அறிய முடிகின்றது.
  17. காசி தீர்த்தம் என்பது.... சிலரின் உணர்வு, மதத்துடன் சம்பந்தப் பட்டது. அது ஒரு அடையாளம்.. அதில் உள்ள சுகாதாரத்தைப் பற்றி, நீங்கள் கதைப்பது விசித்திரமானது. அதை சுகாதார திணைக்களம் பார்த்துக் கொள்ளும். உங்களுக்கு ஏன் வீண் கவலை. 😂 🤣
  18. உண்மைதான் நிழலி. முன்பு இருந்த சமூக அக்கறையும், உழைக்க வேண்டும் என்ற பிரயாசையும் பலரிடம் இல்லையாம். காரணம் வெளிநாட்டு பணமும், தாமும் எப்படியாவது வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற ஆசையினால்... எதிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பதால்.. சிங்கள / முஸ்லீம்கள் தமிழ் பகுதியில் உள்ள அந்த வெற்றிடத்தை பிடித்து வியாபாரம், சிறுதொழில் போன்றவற்றில் முன்னேறிக் கொண்டு போகின்றார்களாம். இது நமது நிலத்தையும், அடையாளத்தையும் நாமே... இழப்பதற்கு சமமானது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.