Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்! ”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மாத்தளை மாவட்டத்தில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். குரங்குகளின் அதிகரிப்பால் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1366228
  2. கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம். கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன, மற்றவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பேரா குளம், மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி பல சட்டவிரோத கட்டுமான வீடுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1366203
  3. முருங்கக்காய் ஒரு கிலோ3000 ரூபாயாம்.
  4. தலைமுடியால் உலக சாதனை படைத்த திருச் செல்வம்! சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குறித்த சாதனை நிகழ்வில், 60 வயதான திருச்செல்வம் தனது தலைமுடியினைக் கொண்டு 19 நிமிடம் 45 செக்கன்களில் 1500 மீற்றர் தூரம் வரை வாகனத்தை இழுத்துச் சென்று குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சாந்தாதேவி, சமூகசேவகர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தென்மராட்சி அபிவிருத்திக்கழக தலைவர் கயிலாயபிள்ளை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். திருச்செல்வம், கடந்த வருடம் தனது தாடியைப் பயன்படுத்தி சுமார் 1500 கிலோ எடை கொண்ட வாகனத்தை 7 நிமிடங்களில் 400மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1366140
  5. தமிழ் மக்களிடமிருந்து…. சிங்களவர், முஸ்லீம்களிடம் பறி போய்க் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தில்… ஜல்லிக்கட்டு, பொங்கல் மூலம் இந்தியா ஒரு பிடியை வைத்திருக்க இதனை நடத்தி இருக்கலாம் என எண்ணுகின்றேன்.
  6. பாவங்கள்.... தமிழ் மக்களுக்கு உதவி செய்ய எவ்வளவு கஸ்ரப் படுகிறார்கள். 😂
  7. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடிய பொங்கல்.
  8. அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
  9. நாங்கள் கோவைக்காயை இரு முறைகளில் வெட்டி சமைத்துப் பார்த்தோம். நீளவாட்டில் வெட்டியதை விட, குறுக்கு வாட்டில் ஒரு சென்ரிமீற்றர் அளவில் வெட்டியது மிக சுவையாக இருந்தது. 👍 கோவைக்காயை இதுவரை சாப்பிடாமல், வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கி விட்டேன் என்று இப்போ கவலையாக உள்ளது. 🤣 ஆம். சென்ற சனிக்கிழமை சிலோன் தமிழ்க்கடையிலும் விற்பதை கண்டேன். 🙂
  10. ஈழப்பிரியன், இனி அந்தப் பக்கம்... தலை வைச்சும் படுக்காதேங்கோ.
  11. செய்தியை கேட்க பெருமையாக உள்ளது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  12. ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை! விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஈழத்தமிழர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்தியா தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார மீள்கட்டமைப்பிற்கான ஆயுதங்களையும் தமிழர் தாயகத்திற்கு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் தாம் தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் மேற்படி கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா மற்றும் தமிழகத்தின் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் தமது மக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகளைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதாரம் என்னும் ஆயுதம் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பினை வலுப்பெறச்செய்வதற்கான வழியமைத்துக்கொடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1365851
  13. இந்திய கடைகளில் விற்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் இதனை வாங்கி செல்வார்கள். சிலோன் தமிழருக்கு கோவைக்காயின் அருமை தெரியாது. அதை... பேய் தின்னுற காய் என்று... நக்கல் அடிப்பினம். 😂 உங்களுக்கு சீனி வருத்தம் இல்லையென்று சத்தியம் பண்ணி சொன்னால்தான் நாங்கள் நம்புவம். 🤣
  14. அண்மையில் தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தவர் வீட்டிற்கு வந்திருந்ந போது, கோவைக்காய் கறி செய்து கொண்டு வந்திருந்தார்கள். முதல் முறையாக அப்போதுதான் நாங்கள் கோவைக்காய் கறியை சாப்பிட்டோம். மிக நல்ல சுவையாக இருந்தது. அன்றிலிருந்து நாமும் கோவைக்காயை கடையில் கண்டால், வாங்கி சமைக்க ஆரம்பித்து விட்டோம். தமிழன்பன் இணைத்த பதிவை பார்த்த பின்... கோவைக்காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்ததும் அடிக்கடி அதனை சமைக்க யோசித்துள்ளோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.