Everything posted by vasee
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் தற்போது இணைய வசதி முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டது, ATM இல பணம் எடுக்கமுடியாது, காசு மட்டுமே பயன்படுத்த வேண்டியநிலை உள்ளதாக கூறுகிறார்கள், ஈரானிய அரச தொலைக்காட்சியினை தகர்த்தன் மூலம் தகவல் தொடர்புகலை முற்றாக துண்டித்துள்ளது இஸ்ரேல், ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய நடவடிக்கையாக இதனை பார்க்கிறேன். மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடியில் உள்ளதாக கூறுகிறார்கள். ஈராக், லிபியாவில் கூட இதனையே செய்தார்கள், அரச தரப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியினை அதிகரிக்கும் முயற்சி இதுவாகும். போர் தொடங்கிய போது ஒரு அலையில் 60 விமானங்களை பயன்படுத்திய இஸ்ரேல் தற்போது ஒரு அலையில் 20 விமானங்களை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், அவர்களால் தொடர்ச்சியாக 50 விமானங்களை பாவிக்க முடியாது (60/40)ஆனால் தொடர்ச்சியாக ஈரான் மேல் தொடர் அழுத்தம் செலுத்தவேண்டும் என்பதற்காக ( நீண்ட காலத்திற்கு) இந்த குறைவான விமானங்கள் பாவிக்கின்றது இஸ்ரேல். அதன் உள்ளார்ந்த அர்த்தம் தொடர்ச்சியாக குழப்ப நிலையினை ஈரான் மேல் பிரயோகிக்க இஸ்ரேல் விரும்புகிறது, இஸ்ரேலின் அணுநிலைகள் மீதான தாக்குதல் பெரிய அனர்த்தம் எதனையும் விளைவிக்கவில்லை ஆனால் ஒரு தொடர் தாக்குதலை ஈரான் மேல் நிகழ்த்த இஸ்ரேல் விரும்புவதாக கருதுகிறேன். அனுநிலை மீது தாக்கவேண்டுமாயின் இஸ்ரேல் இவ்வாறான கால அவகாசத்தினை வழங்குமா தொடர்ச்சியாக? ஆட்சி மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைக்கு திசை திருப்பும் உத்தியாக அணுநிலைகள் மீதான தாக்குதல் என வரையறை செய்ய முயல்கிறதாக நான் கருதுகிறேன். சிங்கத்தின் மீளெழுச்சி என்பதே இந்த தாக்குதலுக்கான குறியீட்டு பெயர், சிங்கம் காட்டு ராஜா, மீள மன்னர் பரம்பரையினை ஆட்சிக்கு கொண்டுவருவதெற்கே இந்த பெயராக இருக்குமோ?🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானியர்கள் அந்த அடக்குமுறைக்கெதிராக போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள் ஆனால் கடும் அடக்குமுறை சட்டங்கள் அதனை வெளித்தெரியாதவாறு மறைக்கிறது என கருதுகிறேன். எனது அபிப்பிராயம் ஈரானின் அணுசக்தி மீதான தாக்குதல் என கூறிக்கொண்டு ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன், இரண்டு வாரமாக அணுநிலைகள் மீதா தொடர்ந்து தாக்குதல் செய்தார்கள்? ஆட்சியின் ஒவ்வொரு மட்டத்தலைமைகளை முடிப்பதிலேயே இஸ்ரேல் கவனம் செலுத்தியது போல இருக்கிறது அதே நேரம் அவர்களது கவனத்தினை அணுநிலைகளில் குவிக்கவைத்து மெதுவாக இரண்டுவார கால அவகாசம் கொடுத்து ஈரானியர்கள் அணுநிலைகளைன் முக்கியமானவற்றை இடமாற்றம் செய்வது என அதே விடயத்தில் கவனத்தினை திசை திருப்பும் முயற்சியாக இந்த அணுகுண்டு செய்திகளை கருதுகிறேன், ஆட்சி மாற்றத்திற்கு தேவையான படுகொலைகளை செய்து சதுரங்கத்தில் ஒவ்வொரு காயாக வெட்டி கடைசியாக அரசனுக்கு கெடுவைப்பார்கள் என கருதுகிறேன். ஈரானில் உறுதியான ஆட்சிமாற்றம் நிகழலாம் என கருதுகிறேன் அது பிசகினால் ஈரான் பேரழிவிற்குள்ளாகலாம். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
முன்னர் மன்னராட்சிக்காலத்தில் (அமெரிக்க மேற்கு ஆதரவினால் உருவாக்கப்பட்ட) கொடுங்கோல் ஆட்சியினாலேயே மக்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்பதனை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மக்கள் ஆட்சியினை வளங்களை சுரண்டும் மேற்கு கடந்த கால அனுபவ அறிவின் மூலம் அனுமதிகாது (மக்கள் தமது தேசியம் சார்பான விழிப்புணர்வு உள்ளதால்), தற்போது கூட அவர்கள் தெரிவாக மன்னர் சாவின் (ஈரானின் 🤣) வாரிசினையே ஆட்சிக்கு கொண்டு வர முனைகிறார்கள் என கூறப்படுகிறது, அதனால் ஈரானியர்களுக்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை, தற்போதுள்ள அரசாட்சியினை விட ஓரளவு நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்க வேண்டியதுதான், ஆனால் மக்கள் தற்போதுள்ள ஆட்சியில் வெறுப்புடன் இருக்கிறார்கள் என கருதுகிறேன் ( அங்கு நடைபெறும் சிறு சிறு போராட்டங்கள் அதனையே குறிக்கிறது)
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உலகம் ஒரு முரண்பாடானது, தற்போது உள்ள நிலையில் இரஸ்சியா போல ஒரு நீண்ட சாதாரண போரினை ஈரானுடன் நடத்துவதற்கு அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ பொருளாதார வளமும் அதற்கான போரிடும் ஆற்றலும் இல்லை ஆனால் ஒரு பேரழிவினை உண்டாக்கி (முறையற்ற போரின் மூலம்) போரினை முடிக்கும் திறன் மட்டுமே உண்டு என கருதுகிறேன். ஈரான் சமாதானமாக போவதே சிறப்பு, தேவையற்ற உயிரிழப்புக்களை தவிர்க்கலாம், சா மன்னரின் வாரிசு மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தினை (பொருண்மிய நலன் அடிப்படையில்) அமெரிக்கா விரும்புவதாக கூறுகிறார்கள், ஆனால் அதற்கு முன்னராக பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடும். செலன்ஸ்கி போல் வளங்களை கொடுத்தால் பிரச்சினை இருக்காது என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அங்கு இரஸ்சியாவினை எதிர்க்க ஆயுதம் கொடுத்தவர்கள், தற்போது மறுவளமாக இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுப்பதுடன் போரிலும் குதிக்க போகிறார்கள் என கூறுகிறார்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன். ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கா போரில் இற்ங்கும் கூறுகிறார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா? குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1954 மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கலைத்து சா மன்னராட்சியினை ஏற்படுத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் அதற்கான காரணமாக கூறப்பட்ட காரணம் எண்ணெய் வளத்தினை தேசியமயப்படுத்தல் என கூறப்படுகிறது, பின்னர் அந்த மன்னராட்சியினை கோமேனி கலைத்தார் அப்போது அந்த கோமேனிக்கு ஆதரவாக இருந்தவர் தற்போதுள்ள அலி கோமேனி, இவருடைய ஆட்சிக்கு இந்த ஆண்டு முடிவு வரலாம், அதனால் இதுவரை காலமும் அல்லலுறும் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் (நடக்காமலும் போகலாம்), ஆனால் ஈராக் போல 1 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுமா எனத்தெரியவில்லை ஆனால் பல இலட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என கருதுகிறேன். ஆனால்இதற்கு எண்ணெய் வளம் முக்கியமாக காரனமாக இருக்கலாம், 1975 இல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகளால் அவுஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார், அதற்கு வளங்களை தேசிய மயப்படுத்தல் மற்றும் அவுஸ்ரேலிய ஒரு குடியுரிமை கொண்ட சுதந்திர நாடாக அதன் விருப்பின் படி செயற்பட வேண்டும் என விரும்பியிருந்தார் என வேறு சில காரணங்கள் உள்ளடங்கலாக.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஈரானின் இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தமது நாட்டுக்கு மேலாக செல்வதாக கூறி தாக்கியழிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் நாட்டிற்கு மேலாக செல்லும் இஸ்ரேல் தாக்குதல் விமானங்களை எதுவும் செய்வதில்லை, சிரியாவின் ஒரு பரந்த வெளியின் மேலாக சில மீற்றர் உயரத்தில் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானம் பறந்து செல்கிற காணொளி ஒன்று இணையத்தில் பார்த்தேன். பக்கத்தில் உள்ள இஸ்லமிய நாடுகளே ஈரானுக்கு உதவவில்லை, ரஸ்சியாவினால் தற்போதய சூழ்நிலையில் ஆயுத உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை, சீனா ராடார் சாதனங்களை வழங்கியதாக செய்தி வந்திருந்தது, இந்த இரு நாடுகளும் ஈரானுடன் ஏதோ ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளன என கருதுகிறேன். தகவல் தொடர்பு உதவிகளை ஈரானால் பெறமுடிகிறது என கருதுகிறேன், இரண்டு காணொளிகளில் விமான எதிர்ப்பு ஏவுகனை பகுதியினை அண்டிய பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் நடந்ததை அக்காணொளியில் காண முடிகிறது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே சீனாவும் இரஸ்சியாவும் செய்யக்கூடும் என கருதுகிறேன். அத்துடன் இந்த போர் நீண்டகால அடிப்படையில் நிகழாது என கருதுகிறேன், இஸ்ரேல் தனது தாக்குதல் விமானங்களில் ஏறத்தாழ 50 விமானங்களை பயன்படுத்துகிறது, அதனடிப்படையில் மொத்தமாக உள்ள 280 விமானத்தில் 168 விமானங்களை பயன்படுத்துகிறது (40% ரிசர்வ் மற்றும் திருத்த மாற்றீடாக 112 விமானங்கள்) அதில் 50 விமானங்கள் எனும்போது 30% சுழற்சியினை பயன்படுத்துகிறது, இது இஸ்ரேல் ஈரான் தொடர்பான திட்டமிடல் மதிப்பீட்டினை காட்டுகிறது, அதாவது ஈரானின் பதில் தாக்குதல் அல்லது ஈரானை பலவீனம் பற்றிய முழுமையான புரிதல். இஸ்ரேல் தனது விமானப்படையில் 20 விமானங்களை இழந்தால் இஸ்ரேலின் தாக்குதல் அணியில் தாக்குதலை தொடரமுடியாமல் அழுத்தம் ஏற்படும், ஆனால் அவர்கள் ஈரானின் படை பலம் அல்லது அதற்கான மாற்றீட்டினை சரியாக கொண்டுள்ளதால் ஈரானால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் தாக்குதலை 2 - 3 கிழமைக்கு மேல் தொடர முடியாது என கருதுகிறேன், இந்த போர் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன் அல்லது அமெரிக்கா களமிறங்கினால் நிலமை மாறலாம்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
யார் இப்ப பூனைக்கு மணியைக்கட்டுவது (போட்டியினை நடத்துவது)?
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் ஏவுகனைத்தாக்குதல் எருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஈரானின் மேல் இஸ்ரேல் தங்குதடையின்றி நிகழ்த்தும் விமானத்தாக்குதலில் ஈரானின் ஏவுகணை செலுத்திகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது அதே சிலர் ஈரான் நீண்ட கால நோக்கில் எதிர்வரும் காலத்திற்காக தனது ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்காக ஏவுகணைதாக்குதலை மட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் முதலாவது காரணம் என கருதுகிறேன். இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டுகிறார்கள் இஸ்ரேலினால் தொடர்ச்சியாக விமானத்தாக்குதலை தொடரமுடியாது என அதற்கு காரணமாக மனித வலு கூறப்படுகிறது, பொதுவாக ஜெட் விமானிகளுக்கு போதுமான ஓய்வழிக்காவிட்டால் அது பேரழிவினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது அத்துடன் பராமரிப்பு அணியும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என கூறுகிறார்கள், குறிப்பாக நிமிற்ஸ் போர்க்கப்பல் எதிர் வரும் ஆண்டிலிருந்து பணி நீக்கம் பெறவுள்ள விமானந்தாங்கி கப்பலை போர் பகுதிக்கு அனுப்பியிருப்பதன் மூலம் ஒர் எதிர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாக இருக்கலாம். அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியில் கலந்து கொள்ள தயார், துணிச்சலிருந்தால் யாராவது இந்த போட்டியினை நடத்தலாம் (செம்பாட்டான்).🤣 போட்டியில் கலந்து கொண்டால் அனைவரும் ஆர்வமாக பார்ப்பார்கள், அதனால் போட்டியினை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும்.
-
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)
கலை என்ற தமிழ் சொல் சமஸ்கிரதத்தில் உள்ள கலா எனும் சொல்லில் இருந்து தோன்றியதாக கூறுவார்கள், கலா என்பதற்கு வளர்ச்சி எனும் பொருள்படலாவதாலேயே கலை எனும் சொல் வந்ததாக கேள்விப்பட்டேன், பாரதியார் வளர்கலை என இரண்டையும் வேறுபடுத்தியுள்ளார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னிக்கவும் முன்னர் கூறியது போல குட்டிப்பையன் 64 கிலோ. குண்டு மனிதன் 6.2 கிலோ எடை என கூறப்படுகிறது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தவறான கருத்தினை பதிந்து விட்டேன் கீரோசீமாவில் வீசப்பட்ட அணுகுண்டு 15 கிலோ 350000 மக்களை சனத்தொகை கொண்ட நகரில் இக்குண்டு வீசப்பட்ட போது 200000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். நாகசாகாவில் வீசப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியம் வகையினை சேர்ந்த குண்டு பையந்தான் 64 கிலோ எடை கொண்டது 240000 சனத்தொகை கொண்ட இந்த நகரத்தில் 140000 இற்கும் அதிகமான உயிரழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இராணுவ மற்றும் அரச உயர்பீடங்கள் இருந்த போதும் இந்த இரு நகரங்களும் தேர்வு செய்யப்பட்டமைக்கான காரணமாக கூறப்படுவதற்கான காரணம் குறித்த ஆண்டில் இரண்டு நாளில் டோக்கியோவில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதலில் டோக்கியோ பெரும் சேதத்திற்குள்ளாகி இருந்தது அத்துடன் 100000 மக்களும் கொல்லப்பட்டிருந்தனர், இந்த நிலையில் ஏற்கனவே பாதிப்பில்லாத நகரில் இரு வேறுபட்ட இரக குண்டுகளை சோதனை முயற்சியாக இந்த அணுகுண்டு தாக்குதல் 3 நாள்கள் இடைவெளியில் நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் படி பார்த்தால் யுரேனிய அணுகுண்டு அதிக அழிவு ஏற்படுத்தும் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மை எனவே கூறப்படுகிறது, IAEA கருத்தின்படி ஈரானிடம் கிட்டத்தட்ட 400 கிலோ 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது இதனடிப்படையில் சில மாதங்களுக்குள்ளாகவே அணுவாயுதத்தினை தயாரிக்க முடியும் (ஈரானிடம் அதற்கான வசதிகள் மற்றும் தொழில்னுட்பம் இருந்தால்) என கருதுகிறேன். இது கீரோசீமாவில் வீசப்பட்ட குட்டிப்பையனை போன்ற 6 - 7 அணுகுண்டுகளை தயாரிக்கலாம் என கருதுகிறேன்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மேல் அணுஆயுத தாக்குதல் நடைபெறலாம் என பரவலாக கூறுகிறார்கள், ஆனால் அது ஈரானின் எண்ணெய் வளத்தினை பாதிக்கும் என்பதால் அணுவாயுத தாக்குதல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. அணு ஆயுதத்தினை எடுத்து சென்று தாக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு கலமாக இதனை கூறுகிறார்கள்.
-
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை
நியுசிலாந்து அரசிடமிருந்தே 2 மில்லியனை ஆட்டையபோட்டவர்கள்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மொசாட் ஈரானின் ராடார் செயற்பாட்டினை முற்றாக அழித்த பின்னர் இஸ்ரேல் தற்போது இஸ்ரேல் வான் மேலாதிக்கத்தினை கொண்டுள்ள நிலையில் சீனா ஈரானிற்கு ராடர் சாதனங்களை வழங்குவதாக தமிழ் பொக்கிசம் விக்கி ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இந்தியாவிற்கு கார்கில் போரில் ஆயுத அழித்ததாகவும் அந்த காணொளியில் குறிப்பிடுகிறார், இந்த போரில் இந்தியா இஸ்ரேலும் ஈரானும் சமாதானமாக பேச்சு மூலம் தீர்க்க வலியுறுத்துவதாக கூறுகிறார் ஆனால் இந்த போரில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுப்பதற்கே வாய்ப்புண்டு அண்மைய இந்திய பாகிஸ்தான் போரில் சீன ஆயுத உதவி இந்தியாவிற்கெதிராக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இந்தியா தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுக்க அதிக வாய்ப்புண்டு. இந்த போர் ஏற்கன்வே பொருளாதார நெருக்கடியில் உள்ள உலக நாடுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இந்த போர் ஒரு அவசியமான ஒன்றாக இருப்பதால் இந்த போர் மேலும் தீவிரமாகலாம்.
-
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!
எப்படி இருந்த அம்மையார்! முன்னர் கார்ட்டூன் வையும் மதன் என்பவர் ஒரு சித்திரத்தில் ராஜீவ் காந்தி முகத்தினை இந்திய வரைபடத்தில் போட்டு அதனில் உள்ள ஒவ்வொரு மானிலங்களை வெடிப்பு போல கோடுகளால் காட்டி ராஜீவ் தோற்றால் இந்தியா துண்டு துண்டாகிவிடும் என்பது போல போட்டிருந்தார். இப்போது காங்கிரஸை விட அதிக தேசியம் பேசும் தீவிர மதவாத வலதுசாரி கட்சியான பி ஜெ பி அந்த இடத்தினை எடுத்துவிட்டது. நலம்பெற்று மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவேண்டும்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
தரம் குறைந்த காணொளிகளின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினரை பாதிக்கும், மக்களும் ஊடகங்களும் முழுமையான விசாரணை முடியுமட்டும் பொறுமை காக்கவேண்டும்.