Everything posted by vasee
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
தோழர்கள் @குமாரசாமி , @goshan_che அன்பே சிவம் இதனை விளங்கநினைப்பவன் கவனத்திற்கு.🤣
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
மணிரத்தினத்திடம் 14 துணை இயக்குனர்கள் உள்ளார்களாம், அனைவரும் பெரிய வீட்டு பிள்ளைகளாம் (சிபாரிசில் வந்தவர்கள்).
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
கஸ்டமெல்லாம் படுவதில்லை வேலை முடித்து (இரவு) அப்படியே படத்திற்கு போவதால் நிம்மதியாக நித்திரை கொண்டுவிடுவதுண்டு.🤣 மேலை நாடுகளில் வயதான தாத்தா இயக்குனர்கள் கூட சிறப்பாக செயல்பட ஏன் தமிழ் திரை தாத்தா இயக்குனர்கள் சிரமப்படுகிறார்கள்?
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
விடுமுறை காப்புறுதி பொதுவாக வெளிநாடுகளில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம், தனியார் மருத்துவவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு கூட அவை காப்புறுதி அளிக்கின்றது, பொது வைத்தியசாலையில் போய் வரிசையில் நிற்காமல் தனியார் வைத்தியசாலையில் சிறந்த சிகிச்சையினை பெறலாம்.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
வைத்தியசாலை படுக்கைகள் ஒரு சுகாதாரத்துறையின் வளர்ச்சியின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எத்தனை வைத்திய்சாலை படுக்கைகள் உள்ளன என)
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
தகவலுக்கு நன்றி!
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
அது மனிதாபிமானமற்ற செயல், ஆனால் இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும் (மிக குறைந்த வளங்கள் உள்ள தற்போதய் நிலையில் அட்கு அவசியமாகிறது). புலம்பெயர் தமிழர்கள் உணவுச்சங்கிலியில் உயரத்தில் இருப்பவர்கள், தமது விளம்பர பொழுது போக்கிற்காக உதவி செய்வது (அனைவரும் அல்ல ஆனால் தாம் செய்த சிறிய செயல்களை கூட பொதுவெளியில் இணையம் போன்றவற்றினூடாக விளம்பரம் செய்பவர்களே இத்தகையானவர்கள்) பின்னர் அதனைவிட பலமடங்கு அனுகூலங்களை கொள்ளை அடிப்பவர்களாக மாறுகின்றனர் (அந்த மக்களை சுரண்டுபவர்கள்).
-
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்
எனக்கு இதன் பின்னணி தெரியவில்லை, பொதுவாக வேலைக்கு வருபவர்கள் வேலை செய்யும் எண்ணத்துடன் வருவதில்லை, இது ஆசிய இனத்தவர்களுக்குள் உள்ள விடயமா அல்லது இது ஒரு பிரபஞ்ச உண்மையா என தெரியவில்லை. மேலை நாடுகளில் கூட இந்தநிலை காணப்படுகிறது, தாம் ஊதியம் பெறுகிறோம் அதற்கு வேலை செய்ய வேண்டும் என பார்க்கமாட்டார்கள், மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேலை செய்தல் அல்லது வேலையினை தவிர்த்தல் புத்திசாலித்தனம் என நினைக்கின்றமை, நான் வேலையிடத்தில் பொதுவாக கூறும் நகைச்சுவை வேலை செய்ய கூடாது எனபதற்காக வெளிக்கிட்டு வேலைக்கு வருகிறார்கள் என🤣. முக்கியமான வேலைகளில் கூட எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விரும்பியமாதிரி வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர் குறித்த பிரிவினர் மேலை நாடுகளில் வந்து மிக சிரமமான நடைமுறைகளை கூட மனம் கோணாமல் செய்பவர்களாக இருக்கின்றார்கள். 9 - 4 ?
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
ஏன் உங்களுங்கு என் மேல் இப்படி ஒரு கொலைவெறி? பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதில்லை எனும் ஒரு முடிவு வைத்துள்ளேன் (அதனால் இப்படியான கொலைவெறித்தாக்குதலில் தப்பிவிடுகிறேன்), படம் நல்ல படம் என அனைவரும் குறிப்பிட்டாலே பெரிய நடிகர்களின் படம் பார்ப்பதுண்டு(கமல், ரஜனி, அஜித், விஜய், சூரியா...........). ஆனால் குடும்பத்தினருக்காக சில பெரிய நடிகர்களின் படங்களை பார்க்க சென்று நித்திரை கொண்டு அதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு (அவர்களின் இரசனையினை இழிவுபடுத்துவது போல அவர்கள் கருதுகிறார்கள் என கருதுகிறேன்) தற்போது அதனையும் தவிர்ப்பதுண்டு. மணிரத்தினத்தினம், சங்கர் போன்ற கடந்த தலைமுறை இயக்குனர்களை பாராட்டியே ஆகவேண்டும், தாத்தா வயதில் கல்லூரிகளில் படித்து அல்லது படிப்பித்து, கல்லூரிக்காதல் என நடித்துகொண்டிருக்கும் தமிழ் திரையுலக தாத்தாக்களின் கொடுமைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க இந்த மாதிரியான இயக்குனர்களே தேவை.
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு வைத்தியசாலை படுக்கைகள் என கணிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடும் போது அங்கு மிக குறைவான அளவிலே காணப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அந்த குறைவான வசதிகளை பயன்படுத்துவது அங்குள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியினையே உருவாக்கும். புலம்பெயர் தமிழர்கள் மருத்துவ காப்புறுதி வைத்திருந்தால் அவர்கள் வாழும் நாட்டிலேயே மிக சிறப்பான சேவையினை பெறமுடியும், குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த வைத்தியசாலை இருக்கவேண்டும், அதனை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான் அங்குள்ளது, வைத்தியசாலைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டுதோறும் (இலவச) பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது அதனால் அரசு கூட அதனை செய்ய தயங்கும் நிலையில் ஒவ்வொரு துறைகளிலும் அங்குள்ள மக்களின் வசதி வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் புலம்பெயர் தமிழர்களை முதலில் அடித்து விரட்ட வேண்டும், அதனால் அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைசெய்ய முடியும் (ஒரு புலம்பெயர் தமிழர் அங்குள்ள பலரின் அடிப்படை வசதிகளை தனியாளாக உறிஞ்சும் அட்டை).
-
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்). சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது? எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கறுப்பு மண் ஆடுகளத்திற்குரிய பந்து அதிகம் சுழலாத நிலையில் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர்கள் கூட அதிகம் சாதகம் அற்ற நிலையில் வெறுமனே கிறீசினையும் பந்தினை காற்றில் வேகமாகவும் மெதுவாகவும் வீசி கட்டுக்கோப்பான அளவுகளில் வீசினார். பஞ்சாப் பந்து வீச்சாளர்களும் அளவுகுறைந்த பந்தினை மெதுவாக வீசி மிக கட்டுகோப்பாக வீசியிருந்தார்கள் ஆனால் குருணல் பந்து வீச்சு மிக சிறப்பு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜக்கம்மா நண்டுகளை கைவிட்டு விடார். இது நல்ல முடிவு, எனக்கு புள்ளிகள் அந்த கேள்விகளுக்கு வராது.🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜக்கம்மாவே நண்டுகள் பக்கம்தான், ரஜனிக்காந்த மொடியுலேசனில் வாசிக்கவும்.🤣 அடுத்து உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் உள்ளது ஆனால் இது போல இழுபடாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் அணி பலமான அணிதான் ஆனால் அவர்கள் இறுதி போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக மட்டும் விளையாடவில்லை யாழ்கள ஒட்டு மொத்த நண்டுகளுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரீஸ ஒரே ஒரு மட்சில விளையாட வைத்து சொந்த செலவில சூனியம் வைச்சிட்டாங்கள். பையன் வந்தா ராஜாவாத்தான் (முதல்வன்) வருவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோற்றுப்போன மும்பாய் அணியினை தேர்வு செய்தவர்களை விட்டு விட்டு நண்டுகள் குலாமிற்கு அந்த 3 புள்ளிகலை வழங்கலாம்தானே🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பும்ரா 18 வது ஓவரில் போட்டது நல்ல முடிவுதான், அந்த ஓவரில் ஒரு விக்கெட் விழுந்திருந்தால் நிலமை சில வேளை பம்பாயிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம், 19 ஓவர் மிக தாமதமகிவிடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாண்டியா, சான்ட்னருக்கு 2 + 2 ஓவர்கள் இருந்துள்ளது, அளவு குறைந்த மெதுவான பந்து விளையாட சிரமாக காணப்பட்ட போதும் இறுதி ஓவர்களில் புல் லெந்தில் போட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள், ஆனாலும் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது. பெங்களூர் அணிக்கு இறுதி போட்டி இலகுவாக இருக்கபோவதில்லை, பஞ்சாப் மிக சிறந்த அணியாக உள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பாயினை முடிச்சுவிட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆனால் 1, 2, 3 என்பது விளங்கும், இன்று இந்த மூவருக்கும் பஞ்சாப்பின் பரிசாக இந்த பாட்டு இப்படிக்கு நண்டுகள் குலாம்🤣- ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே. ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும். ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.- ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இந்தியாவுக்கு ஏன் அவசியம்? அதன் தயாரிப்பு எந்த கட்டத்தில் உள்ளது?
இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விமானங்கள் உபகரணங்கள் முற்று முழுதான பயன்பாட்டு தன்மை கொண்டவையாக இருக்காது, அவற்றிற்கு பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளடலங்கலாக அவை மேற்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கடந்தகாலத்தில் போர் காலத்தில் இராணுவ அளவு கொண்ட ஜிபிஎஸ் மட்டுமல்ல சாதாரண ஜிபிஎஸ் இனை பயன்படுத்த முடியாதவாறான நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்திருகின்றது. தற்போது வாங்கும் மேற்கு நாடுகளின் விமானங்கள் அதன் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கை மட்டுமல்ல சாதாரண உபயோகத்திற்கு முன்னரான இயங்குநிலை சரிபார்க்கும் நடவடிக்கை (Start up checklist - sys login, upload mission data, sys health check) முடிக்கும் போது அது தயாரிப்பாளருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பிவிடும். இது ஒரு வகையில் சரியான விடயமாகவே உள்ளதாக தற்போது கருதுகிறேன், ஏனெனில் இந்தியா ஒரு ஆபத்தான சக்தியாக தெற்காசிய பிராந்தியத்தில் உருவெடுத்துள்ளது, இதற்கு உதாரணமாக அண்மைய பாகிஸ்தான் போரில் இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கினை தகர்த்தாகவும் அதனால் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தியர்கள் பெருமை பேசுகிறார்கள். பாகிஸ்தான் மக்களையோ அல்லது இராணுவத்தினையோ தாக்கவில்லை வெறும் பயங்கரவாதிகளை மட்டும் தாக்குவதாக கூறிக்கொண்டு ஆரம்பித்த இந்தியாவின் நடவடிக்கை உலக அழிவின் விழிம்புவரை செல்லும் பைத்தியக்கார மனநிலைக்கு சென்றுள்ளார்கள், சாமானிய இந்தியர்கள் அதனை ஒரு தவறாக பார்க்காமல் அதனை ஒரு வெற்றியாக கருதும் முட்டாள்களாக உள்ளார்கள் (இந்த அழிவினால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்). இந்தியா ஒரு தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசாக வருகிறதோ தெரியவில்லை ஆனால் நிச்சயமாக ஒரு நாசகார சக்தியாக உருவெடுத்துள்ளது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.